நனவான கனவு உலகம்

11 views
Skip to first unread message

செல்வன்

unread,
Nov 9, 2012, 8:08:43 PM11/9/12
to mintamil, vallamai, தமிழமுதம், தமிழ் சிறகுகள்
1961ல் ட்ரிஸ்டன் ட கந்கா தீவுகளில் எரிமலை வெடிக்கும் அபாயம் இருந்ததால் அந்த தீவில் இருந்த சுமார் 200 பேரை ப்ரிட்டிஷ் அரசு லண்டன் கொண்டுவந்தது. அப்போதுதான் ப்ரிட்டிஷார் பலரும் அப்படி ஒரு தீவு ப்ரிட்டிஷ் சாம்ராஜ்ஜ்யத்தில் இருப்பதையே அறிந்தனர். ட்ரிஸ்டன் மக்களை பற்றி பத்திரிக்கைகள் பத்தி பத்தியாக எழுதின.
 
 
Inline image 1
 
 
ட்ரிஸ்டன் தீவுகள்
 
 

ட்ரிஸ்டன் மக்கள் அதுநாள்வரை கார்களை பார்த்தது இல்லை, தொலைகாட்சியை பார்த்தது இல்லை. ரேடியோ அங்கே வேலை செய்யாது.நாளிதழ் இல்லை. விமானம் இல்லை, படகு மூலம் அங்கே போகமுடியாது. மனித நடமாட்டம் வேண்டுமெனில் அந்த தீவிலிருந்து 2000 மைல் தள்ளி இருக்கும் தென்னாபிரிக்காவின் கேப்டவுனுக்கு தான் போகவேண்டும்.

"லண்டன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என தீவு பெண் ஒருவரிடம் கேட்டதற்கு "லண்டன் நல்ல ஊர். ஆனால் ட்ரிஸ்டன் மாதிரி வராது" என்றார். "இங்கே எதற்கு எடுத்தாலும் பணம் தேவைபடுது. அங்கே எங்களுக்கு எது வேண்டுமோ அது பூமியிலேயே கிடைக்குது"

ட்ரிஸ்டன் பணமே தேவைபடாத ஊர். ஸ்டெர்லிங் பவுன்டு தான் அங்கும் கரன்சி. ப்ரிட்டிஷ் அரசி தான் அதற்கும் அரசி. ஆனால் அந்த ஊரில் அரசியலும் தேவையில்லை, பணமும் தேவையில்லை. தேவைபடும் உணவை அவர்களே விளைவிக்கிறார்கள். கோழிகளும், மாடுகளும் வளர்க்கிறார்கள். கடலில் மீன் கிடைக்கிறது. வீடு கட்டவேண்டுமெனில் ஒட்டுமொத்த தீவும் திரண்டு வந்து கட்டிகொடுக்கிறது.பிக்னிக்/சுற்றுலா போகவேண்டுமெனில் தீவு முழுக்க அழகிய கடற்கரைகளில் பிக்னிக் போகலாம். அப்புறம் எதுக்கு பணம்?

அங்கே யாரிடமும் திருட எதுவும் இல்லாததால் கதவுகளுக்கு பூட்டு என்ற கான்செப்டே இல்லை.
 

200 ஆண்டுகளாக அந்த தீவுகளுக்கு தலைவர், கவர்னர் மாதிரி யாரும் இல்லை. ப்ரிட்டிஷ் அரசு பல வருடங்களாக "கவர்னர், ட்ரிஸ்டன் ட கந்கா" என்ற முகவரிக்கு அஞ்சல்களை அனுப்பி வந்தது. பல வருடங்களாக பதில் இல்லை. என்ன,ஏது என விசாரித்ததில் அந்த கடிதங்களை யாரும் பிரிக்க கூட இல்லை என தெரிந்தது. "இங்கே கவர்னர் என யாரும் இல்லை. புதுசா கவர்னர் என யாராவது வருவார்களோ என நினைத்து பிரிக்கலை" என அப்பாவிகளாக பதில் சொன்னார்கள்.

எந்த தலைமையும் இல்லாமல் தீவு நிர்வாகம் எப்படி நடக்கிறது? நிர்வாகம் என ஒன்று அங்கே இல்லை. அங்கே 200 ஆன்டுகளில் சன்டை, வெட்டு,குத்து என எதுவும் நடந்தது இல்லை.

ஆரோக்கியம்? யாருக்காவது உடல் நலம் சரியில்லை எனில் என்ன செய்வது?

தீவில் அடிப்ப்டை சிகிச்சைகளை அளிக்க பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். ஆனால் ஹார்ட் அட்டாக் மாதிரி வியாதி வந்தால் கப்பல் எதாவது ஒன்று அந்த வழியே வந்தால் அதில் ஏறி கேப்டவுன் போகணும்.அதுக்கு எத்தனை மாதம் வேண்டுமனாலும் ஆகலாம். ஆனால் அம்மாதிரி வியாதிகள் யாருக்கும் வருவது இல்லை. தீவில் சர்வசாதாரணமாக நூறு ஆண்டு வாழ்பவர்கள் அதிகம்.

ட்ரிஸ்டன் தீவுவாசிகளின் ஆரோக்கியம் மருத்துவர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 200 ஆண்டுகளாக 100, 200 பேர் மட்டுமே அங்கே குடியிருக்கின்ரனர். அவர்களுக்குளேயே திருமணம் செய்துகொண்டு இன்ப்ரீடிங் எனப்படும் உறவுமுறைக்குள் நடக்கும் திருமணங்கள் தான் அங்கே அதிகம்.அங்கே இருக்கும் எந்த இரன்டுபேரும் குறைந்தது பத்து தலைமுறையாக ஐம்பது வழிகளில் உறவினர்களாக இருப்பார்கள். ஜெனெடிக் குறைபாடால் தீவில் பலருக்கும் ஆஸ்துமா. ஆனால் இதனால் எல்லாம் யார் ஆரோகியமும் கெடுவது இல்லை.

தீவுவாசிகள் பல் விளக்குவது பற்றி கேட்டதுக்கு அவர்களுக்கு அப்படி என்றால் என்ன என்ரே தெரியவில்லை. அப்புறம் பிரஷ்ஷை வைத்து பல் விளக்குவதை நடித்து காட்டியபோது அவர்களுக்கு ஒரே சிரிப்பு.அவர்கள் பல்துலக்குவதே கிடையாதாம். பல்லை சோதித்ததில் துளி சொத்தை இன்றி அத்தனை ஆரோக்கியமாக இருந்தது. அதற்கு காரணம் நவீன பதப்படுத்தபட்ட உணவை உண்ணாமல் அங்கே இயற்கையாக கிடைப்பதை உண்டு அங்கே பெருமளவில் விளையும் பாலையும், பால்பொருட்களையும் உண்பதே என கண்டுபிடித்தார்கள்.

ட்ரிஸ்டன் ட கந்கா என்பது ஆபிரிக்காவுக்கும், தென்னமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் தீவு. 1000 மைல் தள்ளி உள்ள செயின்ட் ஹெலினா தீவில் நெப்போலியன் சிறைவைக்கபட்டபோது அவர் தப்பி அருகில் உள்ள தீவுகளில் பதுங்கலாம் என்ற அச்சத்தில் ப்ரிட்டிஷ் அரசு ட்ரிஸ்டன் தீவில் ஒரு காவல்படையை நிறுத்தியது. அவர்களில் க்ரீன் என்பவர் பின்னாளில் தான் அங்கேயே தங்குவதாக வேன்ட அரசு அனுமதித்தது.அப்படி துவங்கியதுதான் ட்ரிஸ்டன் வாழ்க்கை.

ட்ரிஸ்டன்வாசிகளை லண்டனில் குடியேற்ற ப்ரிட்டிஷ் அரசு பல முயர்சிகளை எடுத்தது. பெண்களுக்கு பணம் எண்ணும் வேலை தரப்பட்டது.அவர்களுக்கு அதை எப்படி செய்வது,மக்களோடு எப்படி கலந்து பழகுவது என்பது கூட தெரியவில்லை. இறுதியில் எரிமலை அபாயம் முடிந்தபின் ட்ரிஸ்டன் தீவுவாசிகள் அனைவரும் சொந்த ஊர் திரும்பிவிட்டனர்.லண்டன்வாசிகள் இருவரை காதலித்தா இரு பெண்களை தவிர வேறு யாரும் லண்டனில் வசிக்க விரும்பவில்லை.

ட்ரிஸ்டனில் 19ம் நூற்ரான்டில் வாழ்க்கை எப்படி இருந்ததோ இப்போதும் அபப்டிதான் வாழ்க்கை உள்ளது. உலகின் மிக தொலைவான குடியிருப்பு. டூரிஸ்டுகளை அவ்வப்போது அனுமதிக்கிறார்கள்.

--
செல்வன்


rajam

unread,
Nov 9, 2012, 8:27:47 PM11/9/12
to mint...@googlegroups.com
200 ஆண்டுகளாக மக்கள் தொகை எப்படி 100, 200 பேர்களாக இருக்கிறது? பிறப்புக்குமேல் இறப்பா? என்ன கணக்கு? 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

sk natarajan

unread,
Nov 9, 2012, 8:31:13 PM11/9/12
to vall...@googlegroups.com, mintamil, தமிழமுதம், தமிழ் சிறகுகள்
ஆச்சரியமாக இருக்கின்றது
பணம் , அரசியல் இல்லை என்றால் மக்கள் எவ்வளவு சுகமாக இருக்கலாம் என்பதற்கு இவர்களின் வாழ்க்கையே ஒரு எடுத்துக் காட்டு
அருமையான பதிவிற்கு நன்றி செல்வன் ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/11/10 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Nov 9, 2012, 9:26:18 PM11/9/12
to mint...@googlegroups.com


2012/11/9 rajam <ra...@earthlink.net>

200 ஆண்டுகளாக மக்கள் தொகை எப்படி 100, 200 பேர்களாக இருக்கிறது? பிறப்புக்குமேல் இறப்பா? என்ன கணக்கு? 



அதாவது எட்டு குடும்பங்கள் அதில் 19ம் நூற்றாண்டின் இறுதியில் குடியேறின. ஜனதொகை 100 ஆக அதிகரித்தது. 20ம் நூற்றான்டில் ஒரு கட்டத்தில் 250, 260 தொட்டது. அதுதான் பீக். நடுவே 15 பேர் விபத்தில் இறந்தது, ஆண்கள் இல்லாமல் பெண்கள் சிலர் கேப்டவுன் குடியேறியது மாதிரி நிகழ்வுகள் நிகழ்ந்தன.

செல்வன்

unread,
Nov 9, 2012, 9:26:42 PM11/9/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil, தமிழமுதம்

2012/11/9 sk natarajan <sknatar...@gmail.com>

ஆச்சரியமாக இருக்கின்றது
பணம் , அரசியல் இல்லை என்றால் மக்கள் எவ்வளவு சுகமாக இருக்கலாம் என்பதற்கு இவர்களின் வாழ்க்கையே ஒரு எடுத்துக் காட்டு
அருமையான பதிவிற்கு நன்றி செல்வன் ஐயா 

 
நன்றி எஸ்கே ஐயா

--
செல்வன்

Subashini Tremmel

unread,
Nov 10, 2012, 2:38:53 AM11/10/12
to மின்தமிழ், Subashini Tremmel
படத்தில் பசுமையைப் பார்ர்க்கும் போது லா பல்மா, கொமேரா தீவுகளை நினைவு படுத்துவது போல உள்ளது. இயற்கையாக வாழ்ந்து வந்த அம்மக்கள் மிகுந்த வேறுபாடு கொண்ட லண்டனில் வாழ்வதை சிறை வாழ்க்கையாகத்தான் நினைத்திருப்பார்கள். இங்கிலாந்தின் ஆட்சிக்குக் கீழ் இருக்கும் இங்கே பள்ளிக்கூடங்களோ, ஏனைய அரசாங்க விஷயங்களோ பின்னர் நடைமுறை படுத்தப்படவில்லையா?
பிரிட்டிஷார் ஆட்சியிலிருக்கும் ஜிப்ரால்டாவில் (ஆப்பிரிக்காவுக்கு மேல் ஸ்பெயினுக்கு கீழ்) அதிவேக முன்னேற்றம் நடந்துள்ளது. மக்கள் போக்குவரத்து மிக அதிகமாக இருந்ததும் கூடைதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

சுபா


2012/11/10 செல்வன் <hol...@gmail.com>
1961ல் ட்ரிஸ்டன் ட கந்கா தீவுகளில் எரிமலை வெடிக்கும் அபாயம் இருந்ததால் அந்த தீவில் இருந்த சுமார் 200 பேரை ப்ரிட்டிஷ் அரசு லண்டன் கொண்டுவந்தது. அப்போதுதான் ப்ரிட்டிஷார் பலரும் அப்படி ஒரு தீவு ப்ரிட்டிஷ் சாம்ராஜ்ஜ்யத்தில் இருப்பதையே அறிந்தனர். ட்ரிஸ்டன் மக்களை பற்றி பத்திரிக்கைகள் பத்தி பத்தியாக எழுதின.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

செல்வன்

unread,
Nov 12, 2012, 11:27:34 AM11/12/12
to mint...@googlegroups.com


2012/11/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

படத்தில் பசுமையைப் பார்ர்க்கும் போது லா பல்மா, கொமேரா தீவுகளை நினைவு படுத்துவது போல உள்ளது. இயற்கையாக வாழ்ந்து வந்த அம்மக்கள் மிகுந்த வேறுபாடு கொண்ட லண்டனில் வாழ்வதை சிறை வாழ்க்கையாகத்தான் நினைத்திருப்பார்கள். இங்கிலாந்தின் ஆட்சிக்குக் கீழ் இருக்கும் இங்கே பள்ளிக்கூடங்களோ, ஏனைய அரசாங்க விஷயங்களோ பின்னர் நடைமுறை படுத்தப்படவில்லையா?


பள்ளிகூடம் முன்பிருந்தே உள்ளது. 1907ம் ஆன்டு எழுதப்பட்ட "த்ரீ இயர்ஸ் இன் ட்ரிஸ்டன் ட கன்கா" எனும் நூலை நேற்று படித்து கொண்டிருந்தேன். மூன்று வருடம் அங்கே ஆசிரியராக இருந்த ஒரு அம்மையார் எழுதிய நூல். அவர் தான் அனைத்து வகுப்புகளுக்கும் ஆசிரியர் மற்றும் சர்ச்சில் இசைகருவிகள் வாசிப்பவர்.அவருக்கான சம்பளம் என்பது மூன்று வேளை உணவு மற்றும் வீடு தான்.

அமெச்சூர் நடையில் எழுதபட்டிருந்தாலும் நூலில் பல சுவாரசியமான சம்பவங்கள்.ஒவ்வொரு கப்பல் அந்த வழியே போகும்போதும் படகில் தீவுவாசிகள் அங்கே சென்று தீவில் விளையும் உருளைகிழங்கு, செம்மறி ஆடு,கோழி ஆகியவற்றை கொடுத்து மாவு, தேயிலை,சர்க்கரை மாதிரி பொருட்களை வாங்கி வருவார்களாம். சில கப்பல் கேப்டன்கள் பரந்த மனதுடன் பேரம் பேசாமல் கேட்டதை கொடுப்பார்களாம். ஒரு தரம் ஒரு கப்பல் கேப்டன் 17 செம்மறி ஆடுகளை வாங்கிகொண்டு 120 கிலோ மாவை மட்டும் கொடுத்ததாக எழுதியுள்ளார்.

அனைத்து கப்பல்களும் இவர்களுக்கு செய்யும் இலவச சேவை என்பது கடிதங்களை வாங்கிகொண்டு போய் எதாவது துறைமுகத்தில் இருந்து போஸ்ட் செய்துவிடுவது.  ப்ரிட்டிஷ் சாம்ராஜ்ஜ்யத்தின் எந்த நாட்டில் இருந்து போஸ்ட் செய்தாலும் ட்ரிஸ்டனில் இருந்து அனுப்பபடும் கடிதங்களுக்கு ஸ்டாம்பு வேன்டியதில்லை. அப்புறம் இன்னொரு சேவை பழைய செய்திதாள்களை கொடுப்பது. அதன்மூலம் தான் இவர்களுக்கு பல ஆன்டுகளுக்கு முன்பு நடந்த செய்திகள் தெரியவருமாம். 1906ல் இத்தாலியில் நடந்த வெசூவியஸ் எரிமலை வெடிப்பு இவர்களுக்கு 1907ல் தான் தெரிய வந்தது.

இதுபோக நூலில் விவரிக்கபடும் ஒரு நகைச்சுவை சம்பவம் ஒன்று. ஒருதரம் பிரெஞ்சு கப்பல் ஒன்று மூழ்கும் நிலையில் இருக்க அந்த கப்பலை சேர்ந்தவர்களுக்கு இவர்கள் அடைக்கலம் கொடுத்து உதவினர். விடைபெறுகையில் அவர்கள் "உங்களுக்கு என்ன வேன்டும்? அடுத்த தரம் கொண்டு வருகிறோம்" என சொல்ல இவர்கள் "சோப்பு வேண்டும்" என சொல்ல ஆங்கிலம் தெரியாத பிரெஞ்சுகாரர்கள் சோப்பை சூப்பு என புரிந்துகொன்டு அடுத்த தரம் பெட்டி பெட்டியாக சூப்பை கொன்டு வந்து இறக்கியதாகவும் சூப்புக்கு பஞ்சமே இல்லாத தீவில் அதை கன்டு இவர்கள் வெறுத்து போனதாகவும் எழுதி உள்ளார்.


இரன்டாம் உலகபோரால் தீவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. உலகபோரில் ப்ரிட்டிஷ் படை இந்த தீவை ரகசிய கண்காணிப்பு நிலையமாக மாற்றியது. அதில் அனைத்து தீவுவாசிகளுக்கும் நல்ல வருமானம் கிடைத்தது (வருமானம் என்பது தானியம், சர்க்கரை மாதிரிதான். பணம் அல்ல).அதன்பின் ப்ரிட்டிஷார் "Tristan times' எனும் செய்திதாளை தீவில் தொடங்கினர். அதன்பின் மெதுவாக தீவில் நான்கு ஜெனெரேட்டர்கள் வைக்கபட்டு மின்சாரம் எடுக்கபட்டு இனையம் எல்லாம் வந்துவிட்டது. தீவில் இரண்டு டிவி பெட்டிகள் இயங்குகின்றன.

டிரிஸ்டன் டைம்ஸ் இணையதளம்

http://tristantimes.com/

செல்வன்

unread,
Nov 12, 2012, 11:33:42 AM11/12/12
to mint...@googlegroups.com
இன்னொரு வியப்பான சம்பவம்.

நான் சொன்ன நூலில் ஒரு குழந்தையின் பிறப்பு 1906ல் விவரிக்கபட்டது

அந்த குழந்தை வளர்ந்து பெரியவராகி அவர் தன் 100வது வயதில் 2006ம் ஆன்டு மரனம் அடைந்துள்ளார்.அந்த செய்தி டிர்ஸ்டன் டைம்ஸில் பிரசுரம் ஆகியுள்ளது.

2006ம் ஆன்டுக்கு பிறகு இதுவரை தீவில் மரணங்கள் நிகழவில்லை (touch wood)

http://www.tristantimes.com/art_2508_32_10.html

Annie Gertrude Ellen - Born 14th September 1906, died on the 19th January 2006.
Know as Aunty Gertie, she was married to Percy Larvarello and had four children, two sons and two daughters, she leaves behind a son and two daughters and many grandchildren, and great grandchildren.


This coming spring some of her grandchildren overseas were hoping to visit on the SA Agulhas in September to celebrate her 100th, sadly this was not to be as she died in the early hours on the 19th January, which also happen to be on her son's birthday.
Despite being a rainy day St Mary's Church was full of Tristanians paying their last respects.

Reply all
Reply to author
Forward
0 new messages