வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA): ஊதடா சங்கு!

3 views
Skip to first unread message

பழமைபேசி

unread,
Nov 23, 2009, 11:36:05 AM11/23/09
to tamizh...@googlegroups.com, முத்தமிழ், மின்தமிழ், tamil_...@googlegroups.com, ezhil, kalac...@googlegroups.com, tamil...@googlegroups.com, ilakkiy...@yahoogroups.com

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA): ஊதடா சங்கு!

ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!
தமிழ்ப் பேரவை விழா வருகுது
தமிழரெல்லாம் கூடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

சாதி இனமத பேதம் இல்லாம
நாமெல்லாந் தமிழராய்க் கூடி
பஞ்சு போல ஒற்றி ஒற்றி
நட்பாலே துயர் துடைப்போமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

நெகிழ்ந்து நெகிழ்ந்து நெக்குருகி
உறவுகளைக் கண்டு நாங்கள்
இலக்கியம் காணுவோம், கூடவே
பள்ளும்பாடி பாணர் ஆகிடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

நிலாச்சோறும் ஊட்டுவோம், நின்று
எங்கள் கிராமியத்தை நெனைச்சிடுவோம்
நேசங்கள் கண்டு நாங்க மகிழ்ந்திடுவோம்
உறவுகளைக் கண்டு நெகிழ்ந்திடுமே நம்நெஞ்சம்
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

உழுது பயிரிடாம உணவுகள் கிடைச்சிடுமா?
உழைப்புகளைப்பு இன்றி வந்திடுமா குதூகலம்??
அன்னைத் தமிழ்மனங் குளிர கண்விழித்துக்
காரியமா ற்றிடுவோமே பெருமைசீர் மக்கா
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!
தமிழ்ப் பேரவை விழா வருகுது
தமிழரெல்லாம் கூடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!



மக்களே, வணக்கம்! என்னதான் வனத்துல போய் மேய்ஞ்சாலும், கடைசில இனத்தோடதான வந்து, அடைஞ்சி ஆகணும்? எனக்கு என்னோட கனடிய அனுபவம்தான் நினைவுக்கு வருது. பன்னாட்டு கலை, இலக்கிய, கலாசாரத்தை ஆதரிச்சு அனுபவிக்கிறதுல கனடாவை மிஞ்சுவதற்கு யாரும் கிடையாது. அதுவும், டொரோண்டோ மாநகர், சொல்லிக்கவே வேண்டாம்.

இப்ப, அமெரிக்காவிலயும் அதே மனப்பாங்கு ஓங்கி வருது. என்ன காரணம்? அவரவர்கள், அவரவர் பின்புலத்தோட இயங்கும் போது வெளிப்படும் திறமையும், சமூக அக்கறையும் அந்நாட்டை மேம்படுத்துகிறது. மாற்றங்கள் கூடிய தரவுகள், பலதரப்பட்ட இரசனையை நுகர்வோருக்கு அளிக்க வல்லது. கூடவே, புரிந்துணர்வின் மூலமாக சமூகச் சீர்கேடுகள் குறைகிறது.

அப்படி, பின்புலத்தோடு ஒட்டி வாழாத பட்சத்தில் என்ன நடக்கும்? எதோ ஒரு கட்டத்தில் தனிமையின் தாக்கம், கூடவே மனவழுத்தம் போன்றவை ஓங்கி, உரசல்களும் உளைச்சல்களும் ஓங்கும். ஒவ்வாமை தலை தூக்கும். இதெல்லாம் இப்ப அனைவருக்கும் கண்கூடாகத் தெரிகிற விசயம். இதை மறுக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், அரசாளும் வல்லுனர்களுக்கு உண்மை தெரியாமலில்லை. எனவேதான் பன்னாட்டுக் கலை, இலக்கியம் மற்றும் கலாசார விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க விழைகிறார்கள்.

இந்தப் புரிந்துணர்வோடு, நமது தமிழ்ச் சங்கப் பேரவையைக் கண்ணுறுவோம். கலை, இலக்கியம், கலாசாரம், மொழி மற்றும் பண்பாடு முதலானவற்றைச் சமச்சீரோடு முன் வைத்தே செயல்படுகிறது நமது பேரவை. சென்ற ஆண்டு நிகழ்வே அதற்கு சான்று. பேரவையின் வலைதளம் மற்றும் எமது வலைப்பூ ஆகிவற்றில் நீங்கள் இப்போதும் அந்த நிகழ்ச்சியின் காணொளியைக் கண்ணுற்று அதனைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழனாக, தமிழ்ப் பேரவைக்குப் பங்களிப்புச் செய்வது நம் கடமை; உரிமையும் கூட. ஒருவர் முன்வந்து பங்களிப்புச் செய்யும் போது யாரும் அதைத் தடுத்துவிட முடியாது. ஆனால், நாம் முன்வருகிறோமா என்பதுதான், நம்மை நாமே வினவிக் கொள்ள வேண்டிய வினா. அதைவிடுத்து, நிகழ்ச்சிகள் நடைபெறும் போது விமர்சனம் செய்வோர் மட்டுமே இருப்பார்கள்; இருக்கட்டும், தவறில்லை!

பங்களிப்புச் செய்து, பின் உடனிருந்து கண்டபின் விமர்சனம் செய்தால், விமர்சனமும் மெருகேறும்; தமிழன் என்ற வகையிலே கடமையைச் செய்தது போலவும் ஆகுமன்றோ? எனவேதான், இந்த ஊதடா சங்கு! வீழ்ச்சிக்கு ஊதுகிற சங்கு அல்ல இது, எழுச்சிக்கு ஊதப்படுகிற சங்கு மக்களே, எழுச்சிக்கு ஊதப்படுகிற சங்கு!!

ஆம், வருகிற 2010ம் ஆண்டின் தமிழ்விழா எழுச்சிக்கான சங்கு ஊதப்படும் நாள் டிச-12. அந்நிகழ்வின் போது கலைவாணர் N.S.கிருஷ்ணன் ஐயா அவர்களின் புதல்வர் நல்லதம்பி அவர்கள் கலந்து கொண்டு நகைச்சுவையின் நினைவோடையை நமக்கெல்லாம் பாய்ச்ச இருக்கிறார். கலந்து கொள்வோம், இனிமை பெறுவோம், எழுச்சியைப் பெருக்குவோம்!!


December 12 th, 2009
4.30 p.m
Bombay Grill [Address: 2333 Main St, Glastonbury, CT 06033, same as old 'Ambassador of India', now under new management]

CTVOC updates followed by a performance by Thiru Nallathambi, son of Late NS Krishnan and Tmt TA Mathuram

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

Admission: Free for donors, $ 20 per head for non-donors*

RSVP: by Dec 5th 2009, by email [N Kuppuraj, nkup...@gmail.com]

தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்!
தமிழன் இதயம் செழுமையின் பிறப்பிடம்!!

பணிவுடன், பழமைபேசி.

NilaRaseegan

unread,
Nov 23, 2009, 11:48:14 AM11/23/09
to mutht...@googlegroups.com, tamizh...@googlegroups.com, மின்தமிழ்
தலைப்பை பார்த்து பயந்துட்டேன். பகிர்வுக்கு நன்றி ஐயா :)

2009/11/23 பழமைபேசி <pazam...@gmail.com>



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
கவிதைகள் --> http://www.nilaraseeganonline.com/
Best site [Register and explore it] : http://indusladies.com/partners/go.php?url_id=270&partner_id=116

விஜயராகவன்

unread,
Nov 24, 2009, 5:38:43 AM11/24/09
to மின்தமிழ்
On 23 Nov, 16:36, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA): ஊதடா
> சங்கு!<http://maniyinpakkam.blogspot.com/2009/11/fetna.html>
>  *ஊதடா சங்கு! ஊதடா சங்கு!! *


Is this call meant for men only? Why not include women also by saying
'oothadi' ?

Vijayaraghavan

பழமைபேசி

unread,
Nov 24, 2009, 12:56:08 PM11/24/09
to மின்தமிழ்
மாத்திடுவோம்... இஃகி!

N. Ganesan

unread,
Nov 24, 2009, 6:54:15 PM11/24/09
to மின்தமிழ்

On Nov 23, 10:48 am, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
> தலைப்பை பார்த்து பயந்துட்டேன். பகிர்வுக்கு நன்றி ஐயா :)...
>

கவிஞரே,

:)

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

Reply all
Reply to author
Forward
0 new messages