வடமொழி தென்மொழி போட்டியும் தமிழ் வென்றதும்... நண்பர் பதிவு.

330 views
Skip to first unread message

Karuannam Annam

unread,
Aug 1, 2012, 11:27:57 AM8/1/12
to mintamil

திரு கண்ணன், திரு வகொவி அவர்களின் ஒப்பியல்இழையில் கீழ்க்கண்ட பதிவுகள் தூண்டலால் இந்த இழை.

1. உண்மையாக இந்த வடமொழி, தென்மொழி போட்டி என்பது எப்படி ஆரம்பித்தது என்றால்? எல்லோரும் நம்புவது போல் அரசியல், இன, மொழி போட்டாபோட்டியால் அல்ல.
எம்மொழி தன் திறத்தால் எங்கும் நிறை பரம்பிரம்மத்தைப் புரிந்து கொள்ள
உதவுகிறது என்பதுதான் போட்டிக்குக் காரணம். ஆழ்வார்கள் வந்த பின் தமிழ்
வென்றது. இதுதான் உண்மை.
நா.கண்ணன்

 

2.போட்டி போடுவது மொழிகள் இல்லை , மனிதர்கள் . பணம் , அந்தஸ்து, பதவிவசதிகள் இதற்காக மனிதர்கள் போட்டி போடுகின்றனர். 
மனிதர்களின் போட்டியில் மொழி ஒரு உபாயம்தான் - போட்டியில் மொழியின் முக்கிய உபயோகம் மற்றவர்களை ஏமாற்றுவது.
வகொவி 

 

வடமொழி, தென்மொழி பரப்பிரம்மத்தைப் புரிந்து கொள்ள உதவின. ஆழ்வார்கள் வந்து தமிழில் பாடி பரப்பிரமத்தைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவியதால் தமிழ் கொண்டாடப்பட்டது, வென்றது என்பது கண்ணன் அவர்களின் கருத்து எனப் பதிவு மூலம் தெரியவருகிறது.

 

ஆனால் காலத்தால் முற்பட்ட மூவர் தேவாரமும் எங்கும் நிறை பரப்பிரத்தைப் புரிந்து கொள்ள உதவிபுரிந்துதானே இருக்க வேண்டும்?

பல்லாயிரம் பாடல்கள் ஊர் ஊராகப் பாடியுள்ளனர். தேவாரப்பாடல்களில் உள்ள இறைவனின் தமிழ்ப் பெயர்கள் எல்லாம் தேவார காலத்திற்குப்பின் வடமொழிக்கு மாற்றப்பட்டுள்ளன. நான் அண்மையில் சென்ற கற்றவ்ர் ஏற்றும் குற்றமில் செந்தமிழ் என்று குறித்துச் சம்பந்தப்பெருமான் பாடியுள்ள திருவலம் வல்லநாதர் வில்வனாதீஸ்வரர் ஆகியுள்ளார். குற்றமில் செந்தமிழ் என்று அதில் உருகி அந்த ஊரில் நின்று பாடிய இறைப் பெயரே மாற்றம் பெற்றிருக்கிறது.

 

ஆழ்வார்கள் வந்த பின் தமிழ் வென்றதா என்பதையும் பரப்பிரமத்தைப் புரிந்து கொள்வதில் வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவதைப் பேசிய தேவாரத்தின் பங்கு முதலியவையும் இறைவன் பெயர்கள் வடமொழிக்கு மாறிய காலம் பற்றியும் ஆய்வு அறிஞர்கள் சொல்ல வேண்டும். 

ஆனால் பெரியோர்களால் காத்து நமக்களிக்கப்பட்ட தேவாரமும் திருவாசகமும் திருமுறைகளும் ஆழ்வார்கள் அமுத மொழியும் உணர்வால், இலக்கியத்தால் இன்று தமிழ் மகுடமாக ஒளிர்கிறன.

 

அன்புடன்

சொ.வினைதீர்த்தான். 

N. Kannan

unread,
Aug 1, 2012, 11:48:30 AM8/1/12
to mint...@googlegroups.com
2012/8/1 Karuannam Annam <karu...@gmail.com>:

> ஆழ்வார்கள் வந்த பின் தமிழ் வென்றதா என்பதையும் பரப்பிரமத்தைப் புரிந்து
> கொள்வதில் வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவதைப் பேசிய தேவாரத்தின் பங்கு
> முதலியவையும் இறைவன் பெயர்கள் வடமொழிக்கு மாறிய காலம் பற்றியும் ஆய்வு
> அறிஞர்கள் சொல்ல வேண்டும்.
>


:-)

That was one perspective!

ஸ்ரீவைஷ்ணவத்தில் உள்ள அளவு வேதாந்த விசாரங்கள் சைவத்தில் இல்லை. அது
குறையில்லை. சைவம் வைணவத்தைச் சார்ந்தே (சிற்றம்பலம், பேரம்பலம்)
இருந்துள்ளது. சைவ சித்தாந்தம், சித்தர் வழி என்பவையெல்லாம் பொது வேத-ஆகம
நீரோட்டத்தில் வாராது. ஆதி சங்கரர், ஸ்ரீஇராமனுஜர், ஸ்ரீமாத்வர் வழியில்
வரும் வேதாந்த வழக்கை முழுவதும் பின்பற்றி ஆழ்வார்களின் உயர்வை தமிழ்
மண்ணில் நிலை நாட்டியது ஸ்ரீவைஷ்ணவம். இதைத்தான் கம்பனும் சடகோபர்
அந்தாதியில் காட்டுகிறான்.

மற்றபடி இது சைவ-வைணவப் பிணக்கிற்கு இட்டுச் சென்றால் நான்
இவ்விழையிலிருந்து விலகுகிறேன்.

நா.கண்ணன்

Subashini Tremmel

unread,
Aug 1, 2012, 12:17:15 PM8/1/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/8/1 N. Kannan <navan...@gmail.com>
2012/8/1 Karuannam Annam <karu...@gmail.com>:
..
ஸ்ரீவைஷ்ணவத்தில் உள்ள அளவு வேதாந்த விசாரங்கள் சைவத்தில் இல்லை. அது
குறையில்லை. சைவம் வைணவத்தைச் சார்ந்தே (சிற்றம்பலம், பேரம்பலம்)
இருந்துள்ளது.
எதன் அடிப்படையில் இதனைச் சொல்கின்றீர்கள் கண்ணன்? சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், திருமந்திரம் அனைத்தும் படித்தாகி விட்டதா..?:-)
 
சைவ சித்தாந்தம், சித்தர் வழி என்பவையெல்லாம் பொது வேத-ஆகம
நீரோட்டத்தில் வாராது.
பொது வேத-ஆகம் நீரோட்டமெ ந்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்? கொஞ்சம் விவரிக்கலாமே!.

சுபா
 
ஆதி சங்கரர், ஸ்ரீஇராமனுஜர், ஸ்ரீமாத்வர் வழியில்
வரும் வேதாந்த வழக்கை முழுவதும் பின்பற்றி ஆழ்வார்களின் உயர்வை தமிழ்
மண்ணில் நிலை நாட்டியது ஸ்ரீவைஷ்ணவம். இதைத்தான் கம்பனும் சடகோபர்
அந்தாதியில் காட்டுகிறான்.

மற்றபடி இது சைவ-வைணவப் பிணக்கிற்கு இட்டுச் சென்றால் நான்
இவ்விழையிலிருந்து விலகுகிறேன்.

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

N. Kannan

unread,
Aug 1, 2012, 3:45:06 PM8/1/12
to mint...@googlegroups.com
சுபா:

இது சைவ-வைணவ ஒப்பு நோக்கு அல்ல. நாம் வரையறுப்பது வடமொழி-தென்மொழி ஒப்பு
நோக்கு. திருமந்திரம், தேவாரம் இங்கு வரவே இல்லை.

பல நூற்றாண்டுகளாக வேதாந்த வழியில் வேத விசாரத்தையும், திராவிட வேதமென
பின்னால் பிரகடணப்படுத்தப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீசூக்திகளையும் ஒப்பு
நோக்கி தமிழ் கிரந்தம் உயர்வுடையது எனச் சதுர்வேதிகள் தீர்மானித்தனர்.
அதைத்தான் சொல்ல வந்தேன்.

இப்படிச் சொல்வதால் திருமந்திரம், தேவாரம் விளக்கவில்லை என்று
பொருளில்லை. வடமொழி-தென்மொழி ஒப்புமை என்பது காலம் காலமாக
ஸ்ரீவைஷ்ணப்பெரிவர்கள் செய்து வருகின்றனர். இதனாலேயே அவர்கள் உபய
வேதாந்திகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இது நம் பொதுப்பாரம்பரியம். இங்கு சைவ-வைணவ பேதம் காணாமல் மகிழ்வுற
வேண்டும். நான் எதையும் தூக்கிப்பிடிகவில்லை. நடந்த உண்மையைச் சொன்னேன்.
அவ்வளவே!

புரியும்படி சொல்கிறேனா எனத்தெரியவில்லை. தேவ், ரங்கன் உதவிக்கு வரலாம்.

நா.கண்ணன்

2012/8/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

> எதன் அடிப்படையில் இதனைச் சொல்கின்றீர்கள் கண்ணன்? சைவ சித்தாந்த சாஸ்திரங்கள்,
> திருமந்திரம் அனைத்தும் படித்தாகி விட்டதா..?:-)
>

seshadri sridharan

unread,
Aug 2, 2012, 1:49:52 AM8/2/12
to mint...@googlegroups.com

உண்மையில் பௌத்த சமண பேரலையால் தந்திரம் மக்களிடத்து பரவாமல் போனது. ஒருகால் பௌத்த சமணர் போல் தொல் த்ந்திரர்களும் ஓர் இயக்கமாக செயல்பட்டிருந்தால், அதை மக்களிடம் பரப்பி இருந்தால் தந்திரம் நிலைத்து இருந்திருக்கும். வேதாந்தம் என்ற வெற்று ஆர்ப்பரிப்பு எழ இடம் இருந்திருக்காது. 

வேதாந்தம் எல்லாமே ஒரே இறைவனில் இருந்து வந்தது: அதுவே நாம் என்கின்றது என்று வேதாந்த விளக்கிகள் சொன்னார்கள். ஆனால் அதை மெய்ப்பித்துக் காட்டும் நடைமுறை வழியை உணர்ந்திடும் வழியை மட்டும் மக்களுக்கு எடுத்தியம்பாமல் வேதமே முதல் எல்லாம் வேத்த்தில் இருந்தே வந்தது என்று திரித்தார்கள். இதனால் புரிந்தால் சித்தாந்தம்  புரியாமல் போனாலே வேதாந்தம் என்ற வழக்கையும் ஊன்றுவித்தார்கள். வேதாந்தக் கருத்து என்று இவர்கள் சொல்வதெல்லாம் தந்திரக் கருத்துகளே. தந்திரக்கருத்துகளாலேயே வேதாந்தம் மதிப்படைந்தது. வெறும் ஓமமும் வேள்வியும் எந்த ஆன்மீக முன்னேற்றத்தையும், வீடுபேற்றையும் தராது. அந்த வகை சடங்கு பொருள் செலவையும், சூழல் கேட்டையுமே ஏற்படுத்தும். சிலரது வயிற்றை நிரப்பும். அதனால் இம்மி அளவு ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படாது. தந்திரத்தின் ஊழ்கப் (தியானம்) பயிற்சியே இல்லாமல் வெறும் வேள்வி மட்டுமே இயற்றி சித்துகள் அடைந்தவர் இன்னாளில் எவரேனும் உண்டா? காட்ட முடியுமா?

சேசாத்திரி



2012/8/1 N. Kannan <navan...@gmail.com>

DEV RAJ

unread,
Aug 2, 2012, 2:18:55 AM8/2/12
to மின்தமிழ்
On Aug 1, 12:45 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>>> வடமொழி-தென்மொழி ஒப்புமை என்பது காலம் காலமாக
ஸ்ரீவைஷ்ணப்பெரிவர்கள் செய்து வருகின்றனர்.<<<

>>> தமிழ் கிரந்தம் உயர்வுடையது எனச் சதுர்வேதிகள் தீர்மானித்தனர்<<<

அவர்களுக்கு மொழியியல் முக்கியமாக இருந்ததில்லை;
தத்துவத் தெளிவுக்கே முதன்மை.

த்ராவிட வேதங்கள் அக்குறை தீர்த்தன.
அதனால் சந்தஸை அவர்கள் புறம் தள்ளவுமில்லை.
அருளிச் செயல்களுக்கு, செய்ய மறைகளோடும்
சேர்த்துப் பல்லாண்டு பாடினார்கள் -

ஆழ்வார்கள் வாழி, அருளிச் செயல் வாழி,
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
*செய்யமறை* தன்னுடனே சேர்ந்து .


*செய்ய தமிழ் மாலைகள்* தெளிய ஓதிய ஸ்வாமி தேசிகன்
தெளியாத மறை நிலங்களின் பொருளை அவை
உணரச் செய்த காரணத்தால் அவற்றை
நன்றிப்பெருக்குடன் போற்றுகிறார்.

வைணவர் ‘செய்ய’ அடைமொழியை த்ராவிட வேதத்துக்கும்,
வடமொழி வேதத்துக்கும் ஒருசேரப் பொருத்தியுள்ளது
காண்க .

நாலாயிர அநுஸந்தாநத்தையே நற்போதுபோக்காகக் கொண்டிருந்த
உடையவர் ஸ்ரீபாஷ்ய ப்ரவசநத்தை வைணவனின்
முதல் கடமையாக்கியுள்ளதையும் காண்க.

நலங்களாய அந்த நற்கலைகளை ஆழ்வார்கள்
பல ஸந்தர்பங்களில் போற்றியுள்ளனர்.

தற்போது தமிழர் காட்டும் வேகம் வேறு திசையில்
உள்ளது. முனைவர் கண்ணன் ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக்
குழப்பாமல் இருப்பது நல்லது.

தேவ்

On Aug 1, 12:45 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> சுபா:
>
> இது சைவ-வைணவ ஒப்பு நோக்கு அல்ல. நாம் வரையறுப்பது வடமொழி-தென்மொழி ஒப்பு
> நோக்கு. திருமந்திரம், தேவாரம் இங்கு வரவே இல்லை.
>
> பல நூற்றாண்டுகளாக வேதாந்த வழியில் வேத விசாரத்தையும், திராவிட வேதமென
> பின்னால் பிரகடணப்படுத்தப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீசூக்திகளையும் ஒப்பு
> நோக்கி தமிழ் கிரந்தம் உயர்வுடையது எனச் சதுர்வேதிகள் தீர்மானித்தனர்.
> அதைத்தான் சொல்ல வந்தேன்.
>
> இப்படிச் சொல்வதால் திருமந்திரம், தேவாரம் விளக்கவில்லை என்று
> பொருளில்லை. வடமொழி-தென்மொழி ஒப்புமை என்பது காலம் காலமாக
> ஸ்ரீவைஷ்ணப்பெரிவர்கள் செய்து வருகின்றனர். இதனாலேயே அவர்கள் உபய
> வேதாந்திகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
>
> இது நம் பொதுப்பாரம்பரியம். இங்கு சைவ-வைணவ பேதம் காணாமல் மகிழ்வுற
> வேண்டும். நான் எதையும் தூக்கிப்பிடிகவில்லை. நடந்த உண்மையைச் சொன்னேன்.
> அவ்வளவே!
>
> புரியும்படி சொல்கிறேனா எனத்தெரியவில்லை. தேவ், ரங்கன் உதவிக்கு வரலாம்.
>
> நா.கண்ணன்
>

> 2012/8/1 Subashini Tremmel <ksubash...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 2, 2012, 3:12:17 AM8/2/12
to mint...@googlegroups.com
2012/8/2 DEV RAJ <rde...@gmail.com>

> அவர்களுக்கு மொழியியல் முக்கியமாக இருந்ததில்லை;
> தத்துவத் தெளிவுக்கே முதன்மை.
>

> தற்போது தமிழர் காட்டும் வேகம் வேறு திசையில்
> உள்ளது. முனைவர் கண்ணன் ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக்
> குழப்பாமல் இருப்பது நல்லது.
>
>

இங்கு எதையுமே ஆழமாகப் புரிந்து கொள்ளும் ஆர்வமில்லை. எல்லாவற்றிற்கும்
ஓர் எதிர்வாதமுள்ளது. ஒரு அரிய பெரிய பாரம்பரியம் உள்ளதைச்
சுட்டிக்காட்டினேன். மொழியியல் அடிப்படையில் அவர்கள் ஆயவில்லை என்பதை
நான் தெளிவாகச் சொல்லியுள்ளேன். தத்துவங்களை விளக்க எம்மொழி சிறந்தது
எனும் ஆரோக்கியமான போட்டியில் தமிழ் வென்றுள்ளது உண்மை.
ஸ்ரீவைஷ்ணவர்கள்தான் இருமொழிகளில் மிதத்தெளிவான புலமை பெற்று ஒப்பு
நோக்கி இருக்கிறார்கள். அது பல தலைமுறைகளாக நடந்துள்ளதைக் காணமுடிகிறது.
இறைவன் திருவருளால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது இம்மன்றத்தில்
ஒருநாள் தெளிய உலா வரும்.

நா.கண்ணன்

DEV RAJ

unread,
Aug 2, 2012, 4:50:14 AM8/2/12
to மின்தமிழ்
On Aug 2, 12:12 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>>> தத்துவங்களை விளக்க எம்மொழி சிறந்தது எனும் ஆரோக்கியமான
போட்டியில் தமிழ் வென்றுள்ளது உண்மை.<<<


’காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த’
வள்ளல் நாதமுனிகளின் திருப்பேரர்
ஸ்வாமி யாமுநாசார்யர் ஸ்ரீ விஷ்ணு புராணம்
பரவ வேண்டும் என்று ஏன் விரும்பினார் ?

வடமொழியில் ’ஸ்தோத்ர ரத்நம்’ எதற்காக ?
பூருவர்கள் அனைவருமே தமிழ் வல்லோர்கள்.

மேலும் வினாக்கள் உள்ளன, ஐயா.
தெளிவு படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.
வாது செய்யும் நோக்கம் இல்லை.

தமிழர் அனைவரும் நாலாயிரம் கற்று இன்புற்றுக் கலி
கேடுற்றால் மகிழாதவர் யார் இருக்க முடியும் ?


தேவ்

N. Kannan

unread,
Aug 2, 2012, 5:10:16 AM8/2/12
to mint...@googlegroups.com
2012/8/2 DEV RAJ <rde...@gmail.com>:

> வடமொழியில் ’ஸ்தோத்ர ரத்நம்’ எதற்காக ?
> பூருவர்கள் அனைவருமே தமிழ் வல்லோர்கள்.
>
> மேலும் வினாக்கள் உள்ளன, ஐயா.
> தெளிவு படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.
> வாது செய்யும் நோக்கம் இல்லை.
>

வாது செய்து என்ன ஆகப்போகிறது. சில நேரம் ஏண்டா பேசிக்கொண்டு இருக்கிறோம்
என்றிருக்கிறது! :-(

உபயவேதாந்திகளுக்கு வட - தென் மொழிகள் இரு கண்கள் போல. அதில்
பேதமிருப்பதில்லை. ஆயினும் கலாச்சார மேம்படுத்தல் எனும் கோதாவில்
வைணவர்கள் தமிழை உயர்த்திப்பிடித்தது என்னவோ உண்மை. இப்படியெல்லாம்
குதறல் வரும் என்றறிந்து அன்று பெருமாளைத் தமிழின் பின் போக வைத்தனர்
அன்றே! எம்பெருமானார் திருநாடு எய்தி ஆயிரம் ஆண்டுகள் ஆகப்பொகிறது!
தமிழைக் கருவறைக்குள் ஓத வைத்தனர். இன்றளவும் சிவன் கோயில்களில் அதை
நடைமுறைப்படுத்தமுடியவில்லையே! இங்கு, இங்கிலாந்தில் ஈழத்துக்
கோயில்களில் வடமொழிக்கு அடுத்ததுதான் தென்மொழி. ஆயின் வைணவத்தில் அப்படி
இல்லையே ஐயா!

சரி..இனிப்பேசிப் பிரயோசனமில்லை. நிற்கிறேன்.

நா.கண்ணன்

> தமிழர் அனைவரும் நாலாயிரம் கற்று இன்புற்றுக் கலி


> கேடுற்றால் மகிழாதவர் யார் இருக்க முடியும் ?
>
>
> தேவ்
>
> On Aug 2, 12:12 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>> 2012/8/2 DEV RAJ <rde...@gmail.com>
>>
>> > அவர்களுக்கு மொழியியல் முக்கியமாக இருந்ததில்லை;
>> > தத்துவத் தெளிவுக்கே முதன்மை.
>>
>> > தற்போது தமிழர் காட்டும் வேகம் வேறு திசையில்
>> > உள்ளது. முனைவர் கண்ணன் ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக்
>> > குழப்பாமல் இருப்பது நல்லது.
>>
>> இங்கு எதையுமே ஆழமாகப் புரிந்து கொள்ளும் ஆர்வமில்லை. எல்லாவற்றிற்கும்
>> ஓர் எதிர்வாதமுள்ளது. ஒரு அரிய பெரிய பாரம்பரியம் உள்ளதைச்
>> சுட்டிக்காட்டினேன். மொழியியல் அடிப்படையில் அவர்கள் ஆயவில்லை என்பதை
>> நான் தெளிவாகச் சொல்லியுள்ளேன். தத்துவங்களை விளக்க எம்மொழி சிறந்தது
>> எனும் ஆரோக்கியமான போட்டியில் தமிழ் வென்றுள்ளது உண்மை.
>> ஸ்ரீவைஷ்ணவர்கள்தான் இருமொழிகளில் மிதத்தெளிவான புலமை பெற்று ஒப்பு
>> நோக்கி இருக்கிறார்கள். அது பல தலைமுறைகளாக நடந்துள்ளதைக் காணமுடிகிறது.
>> இறைவன் திருவருளால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது இம்மன்றத்தில்
>> ஒருநாள் தெளிய உலா வரும்.
>>
>> நா.கண்ணன்
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Dhivakar

unread,
Aug 2, 2012, 6:03:37 AM8/2/12
to mint...@googlegroups.com
>>சரி..இனிப்பேசிப் பிரயோசனமில்லை. நிற்கிறேன்<<.

நன்றாக பிரயோசனம் உண்டு கண்ணன். நிறைய எழுதுங்கள். ஆனால் எழுதுமுன்பு சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு.. இது நிச்சயம் உங்களுக்கு உதவுவதற்காக எழுதப்படுபவை என்ற பார்வையில் நோக்கவும். ஒருநோக்குப் பார்வையில் பார்த்தால் எல்லாமே தவறாகத் தெரிய வாய்ப்புகள் அதிகம்.

1. பொதுவாக சிவன் கோயிலிலும் சரி, பெருமாள் கோயிலிலும் சரி, முருகன் ஆலயங்கள், பிள்ளையார் ஆலயங்கள், ஆஞ்சநேயர் ஆலயங்கள் இங்கெல்லாம் பூசனை மொழி வடமொழியே.. இதில் அந்த நாளிலிருந்து இந்த நாள் வரி எந்த மாற்றமும் இல்லை.  அம்மன் (அமர்ந்த நிலையில்) ஆலயத்தில் மட்டுமே தமிழில் பூசை உண்டு. எங்கள் குலதெய்வத்துக்கு (சிறுவாச்சூர்) தமிழில்தான் பூசை, திருமஞ்சனம், வழிபாடு எல்லாம்.

2. ஆகமங்களை முன்வைத்து, அந்த ஆகமங்களின் பெயரில் கட்டப்பட்ட எந்தக் கோயிலும் அந்த ஆகமவழிபாடு முறையைத் தான் பின்பற்றும். ஆகையினால் இதில் சைவ-வைணவ பேதங்கள், மொழி பேதங்களோ குறிக்கிடாது.

3. தேவாரம் ஏன் சிவாலயங்களில் முறைப்படுத்தவில்லை - இது நியாயமான கேள்விதான். ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்குமும் தேவாரத் திருமுறைகளை மேலோட்டமாகவாவது அறிந்திருக்கவேண்டும். தேவாரப்பாடல்கள் எல்லாமே வேத கோஷத்தைப் போற்றிப் பாடப்பட்டவைதான். ஆலயங்களில் அந்தணர் வேதம் போற்ற வழிபாடு செய்யும்போது ஆனந்தக் கண்ணீரோடு வரப்பெற்ற தேவாரப் பாடல்கள் பல உண்டு. அதே சமயத்தில் இப்பேர்ப்பட்ட தமிழ்ப்பதிகங்களை ஏன் பூசையோடு கலந்து ஆண்டவனை வழிபாடு செய்யக்கூடாது என்று கேட்கலாம். இதைத்தான் அரசர்கள், அதிலும் குறிப்பாக சோழ அரசர்கள் செய்து வந்தார்கள். ஆகம முறைப்படிப் பூசை முடிந்தபின், திருமுறை ஓதுவதற்கு ஏராளமாக மான்யங்கள் வழங்கப்பட்ட கல்வெட்டு பற்றி சமீபத்தில்தான் என்னுடைய வலைப்பதிவில் எழுதினேன். ( http://www.vamsadhara.blogspot.in/ ) 

இப்போதும், மறுபடியும் சொல்கிறேன், இப்போதும் எல்லா சிவாலயங்களிலும் - தில்லை உட்பட - திருமுறை கண்டிப்பாகப் பாடியே ஆகவேண்டும். அப்படி திருமுறை பாடாவிட்டால் அந்த பூசை முற்றுப்பெறாது.

இன்னொரு முக்கியமான விஷயம் - சைவாகமப் பள்ளிகளில் பூசை ஆகம விதிகள் இன்றளவும் கற்றுத் தரப்பட்டு வருகின்றது. இப்பூசை விதானத்தில் திருமுறை கண்டிப்பாக ஐயர் கற்றுக்கொள்ளவேண்டும். இதுபற்றி நீங்கள் மதுரை வந்தால், திருப்பரங்குன்ற சைவ வேதாகமப் பாடசாலையில் தெரிந்துகொள்ளலாம். இந்தப் பாடசாலை புகழ்பெற்றது. இதன் அடிப்படையிலே மற்ற வேதாகமப்பாடசலைகள் இயங்குவதாகக் கேள்வி.

பொதுவாக வைணவத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு. தென்கலை தமிழ்வேதத்துக்குக் காட்டும் ஆர்வம் வடகலைப் பிரிவினருக்கு இல்லை என்பது பொதுவான வருத்தம். ஆனால் வைணவம் அதுவும், உடையவரின் வைணவம் தமிழுக்கு மிக அதிக சேவை செய்துள்ளது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் உடையவர் காலத்தில் ஏற்படமுடியாத (ஆலயங்களில் ஆழ்வார்கள் பாடல்கள் ஆகம்விதி பூசைகள் முடிந்தவுடன் பாடப்படுவது) விதி, ஆச்சாரியர் மணவாள மாமுனிவர் காலத்தில்தான் நடைமுறைப் படுத்தப்பட்டது. வைணவம் ஆலயங்களில் தமிழை சற்று தாமதமாகத்தான் (13ஆம் நூற்றாண்டில்) சேர்த்தார்கள்.

நீங்கள் ஆச்சாரியர்களின் தமிழ்ஞானத்தைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். எல்லாம் ஆழ்வார்கள் கொடுத்தது. நம் ஆச்சாரியார்களின் திருவெண்ணம் தங்கள் ஞானத்தை அகிலமெங்கும் பகிர்ந்து கொள்வது. அப்படி அகிலமெங்கும் (பாரத தேசமெங்கும் எனக் கொள்க) பகிர்ந்து கொள்ள வடமொழி ஞானம் மிக அவசியம். அதே சமயத்தில் ஆழ்வார்களின் தமிழ் அவர்களின் ஞானத்தை மிகப் பிரபலமாக்கியது என்பது உண்மைதானே.

நான் இங்கே கொடுப்பதெல்லாம் குறிப்புகள் மட்டுமே.

2012/8/2 N. Kannan <navan...@gmail.com>:

vnagarajan

unread,
Aug 2, 2012, 6:37:11 AM8/2/12
to mint...@googlegroups.com
ஆழ்வார்கள் வரலாறு பற்றிய சில வரலாற்றுச் செய்திகள் நம்பகத்தன்மை குறைந்தவை.  அதற்கு அடிப்படைக் காரணமாக வரலாற்று ஆசிரியர்கள் கூறும் காரணங்கள்

1.வைணவப் பற்றாளார்கள் மத நம்பிக்கை உயர்வு நவிற்சி அடிப்படையில் அமைந்த வரலாற்று நியதிகளுக்கு மாறான தகவல்களைத் தொகுத்தது

2. அச்சமயம் தமிழகத்தில் பெருமளவுக்க்ப் பரவியிருந்த சைவ சமயத்துக்கு ஆதரவான நிலையை ஐரோப்பிய திறனாய்வாளர்கள் எடுத்து வைணவத்தின் உண்மையை மக்கள் அறிந்து போற்ற வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கியது

இந்தப் பணியில் ஐரோப்பிய அறிஞர்களில் முதன்மையாகச் சுட்டிக்காட்டப்படுபவர் டாக்டர்.கால்டுவெல்.  தமிழகச் சிந்தனை ஓட்டத்தில் பெரும் தாக்கத்தை  ஏற்படுத்திய கால்டுவெல் அவர்களின் எழுத்து அவர் சார்ந்த மிஷன் கொள்கைகளை உள்ளடக்கி தமிழகத்தின் சமுதாய சமய இயக்கங்களை முழுமையாக அறியாமல் வெளிப்படுத்திய கருத்துக்கள் பல சமயங்கள் நிலவிய சமூகத்தில் ஒருதலைப்பாடான நிலையை நிலையுறுத்த உதவினார் என்ற குற்றச் சாட்டு உண்டு

சமயம் சார்ந்த சிந்தனைகளைக் கடந்து வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மட்டும் நோக்கினால்
1. இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் விஷ்ணு வழிபாடு பல்வேறு வடிவங்களில் வழக்கில் இருந்தாலும் ராமர் கிருஷ்ணர் என்ற இரு அவதார வடிவங்கள் பரவலாக இருந்தது
2.  வடபுலம் இருந்து அலை அலையாக தென்புலம் வந்த ஆரியர் ஆரியக்கடவுளான விஷ்ணுவைத் தென்புலத்தில் அறிமுகப்படுத்தி சமுதாயத்தில் நிலைக்க வைத்தனர்
3. விஷ்ணுவழிபாடு தொன்மையானது.  வேதகாலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது
4. விஷ்ணு வழிபாட்டுச் சிந்தனைகள் வேத புராணப் படிநிலைகளைக் கடந்து ஒரு பொதுநிலைக் கருத்தாக வடபுலத்தில் உருவாகியிருந்தது
5. வேதகாலத்தில் வருணன்,அக்னி, மாருதி போன்ற இறைவடிவங்களுக்குப் பூசையும் ஆராதனையும் நடந்தது
6. அக்காலகட்டத்தில் விஷ்ணு சூரிய மண்டலத்தைச் சார்ந்து இந்திரனுடன் தொடர்புடைய கடவுளாகக் கருதப்பட்டது
7. அடுத்தகட்டத்தில் பெளத்தம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது
8. வேதக்கடவுளராக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற வரிசைப்படி பரம்பொருளின் மூன்று வடிவங்கள் வணங்கப்பட்டன
9. முக்கடவுளரையும் மக்கள் முன்னிறுத்த 18 புரானங்கள் மூன்றுபிரிவாக உருவாக்கம் பெற்றது
10. இக்கடவுளருக்கான வணங்கும் முறை, வழிபாடு, திருவிழா. புன்னிய யாத்திரை என்று பல செயல்முறைகளை உருவாக்கினர்
11. இக்கால கட்டத்தில் தென்புலத்தில் வாழ்ந்த வீரம்மிக்க சமுதாயம் முன்னோர் வழிபாடு வீரக்கல் வணக்கம்  என்று பழங்குடியினர் வழிபாட்டுமுறைகளைப் பின்பற்றிவந்தனர்
12.  கிராமங்களில் கிராம தேவதைகள் காவல் தெய்வங்கள் என்று வழிபாட்டுமுறைகள் வழக்கில் இருந்தது
13. அவர்கள் வணங்கிய கடவுளர் அவர்கள் வாழ்ந்த நிலம் அல்லது திணை அடிப்படையில் அமைந்திருந்தது
14.மருதத்துக்கு இந்திரன், குறிஞ்சிக்கு முருகன், பாலைக்கு துர்க்கை,  வாசுதேவர் முல்லைக்கு, வருணன் நெய்தலுக்கு என்று நில அடிப்படையில் வழிபாடு அமைந்திருந்தது
15. குறிஞ்சிக் கடவுளான முருகன் தென்புலக் கடவுள் என்றும் இந்திரனும் வருணனும் வேதக் கடவுளர் என்றும் கருதப்பட்டது
16. ஆரியர் வருகையால் தமிழ்ச் சமூகச் சமய இறை வழிபாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை என சஙக இலக்கிய ஆதாரங்கள் விளக்கும்
17. திருவள்ளுவர் சமணர் என்றும் சைவர் என்றும்  இரு சமய நிலைகளில் அறியப்படுவார்.  கபிலர் அந்தணர் என்றும் அவர் திருமால், பலதேவர், முருகன், சிவன் என்று பல கடவுளர் மீது பாடல்கள்  இயற்றினார் என்றும் குறிப்புகள் உள்ளன
18. நக்கீரர் அவர் வாழ்ந்த காலத்தில்  சிவன், விஷ்ணு, பலராமர், முருகன் என்ற நால்வகை ஆரியக்கடவுளர் வழிபாடு வழக்கில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்
19. ஆரியக் கடவுளரில் இந்த நால்வரைத் தவிர இந்திரன், எமன், வருணன், சோமன், ஆதித்யன், ருத்ரன், வாசு, மாருதி போன்ற ஆரியக் கடவுளரும் வணங்கப்பட்டனர்
20. நக்கீரர் முதல் நால்வரை நாற்பெருந் தெய்வம் என்றும் மீதமுள்ள கடவுளரை ஆதியன் -12, ருத்ரன்- 11, வாசு-8, மருதி-2 என முப்பத்துமூன்று கடவுளகப் பிரிக்கப்பட்டனர் என்றும் குறிப்பிடுகிறார்
21. அந்தணர்களும் அரசர்களும் ஆரியக்கடவுளருக்கான வழிபாடுகளைத் தொடர்ந்தனர் என்றும் அரசர்கள் ஆரியக் கடவுள் வழிபாடு தொடர ஆவன செய்தனர் என்றும் அறியப்படுகிறது
22. சங்க காலத்தில் சமுதாயத்தில் இருந்த இறைவழிபாட்டுமுறைகள் ஆரியக்கடவுளரும் தமிழ்க்கடவுளரும் கலந்திருந்த சூழலைச் சுட்டிக்காட்டுகிறது
23. சங்ககாலத்திலிருந்து 5-ஆம் நூற்றாண்டுவரை அரசர்கள் ஆரியக் கடவுளருக்குக் கோவில் கட்டுவதையும் வழிபாடு நடப்பதையும் மேற்கொண்டனர்
24. சிவன் விஷ்ணு வழிபாடுகள் முன்னிருத்தப்பட்டு பிரம்மாவின் வழிபாடு பின் தள்ளப்பட்டிருந்தது
25.ஆறாம் நூற்றாண்டுவரை இக்கடவுளருக்கான கோவில்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தது. விஷ்ணுவுக்கான வழிபடு தலங்களாக ஸ்ரீரங்கம், திருப்பதி, திருமால் குன்றம் விளங்கியது. காஞ்சி வரதராஜஸ்வாமி கோவில் காலத்தால் பிற்பட்டது என்று கருதி இப்பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை
26. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 7-ஆம் நூற்றாண்டிலும் பெருங்கோவில்கள் கட்டப்பட்டன. சிவன், விஷ்ணு, சமண பெளத்த வழிபாடுகள் சமயப்பொறையுடன் நடந்தது. இக்கால கட்டத்தில் பெளத்தம் தளர்ச்சியடைய ஆரம்பித்தது
27. மன்னர்கள் முக்கடவுளருக்கு முன்னுரிமை கொடுத்து தானம் கொடை வழங்கி அக்கடவுளர் வழிபாடு தழைத்தோங்க வழி செய்தனர்
28. வைணவ இயக்கம் வளர்ச்சியடைய ஆழ்வார்கள் பெரும்பங்காற்றினர்.  அவர்களே விஷ்ணு வழிபாடு வளர முழுமுதற்காரணமாக இருந்தனர்
29. இறைமறைக் கருத்துக்களை ராம கிருஷ்ண அவதாரங்களை ராமாயணம், மஹாபாரதம் பாகவத, விஷ்ணு புராணங்களில் இருந்து இறை மறைக் கருத்துக்களைப் பாடல்களாகப் பாடினர்
30. பத்தாம் நூற்றாண்டளவில் நம்மாழ்வாரின் நால்வகைப் பிரபந்தங்களும் திருமங்கையாழ்வாரின் அறுவகைப் படைப்புகளும் நான்குமறைகளுக்கும் ஆறு வேதாங்கங்களுக்கும் இணையாகக் கருதப்பட்டது. திராவிட வேதங்கள் என்றழைக்கப்பட்டு சமஸ்கிரித வளங்களுக்கு இணையான தமிழ்ப்படைப்பு என்று கருதப்பட்டது
31.சங்ககால்த்திலும் அதற்குப்பின் ஐந்தாம் நூற்றாண்டு வரையிலும் மக்கள் எவ்வித காழ்ப்பும் இன்றி பல மதங்களைப் பின்பற்றி வாழ்ந்தனர்.  ஒரு காலத்தில் சமனராக இருந்தவர் பின் சைவராகவும், சைவர் வைணவராகவும் மாறி வாழ்ந்தனர் தமிழக மக்கள் சமயப்பொறையுடன் ஆரிய திராவிட வேறுபாடின்றி தங்களுக்குகந்த சமயத்தைத் தழுவி வாழ்ந்தனர்
33. ஆரியரல்லாத தமிழ்ச் சைவர்களால் படைக்கப்பட்ட தேவாரம் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஸ்மார்த்த பிராமணர்களால் உயர்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை
34. தமிழ்ச் சமுதாயத்தில் சைவம் எல்லா வகுப்பினரையும் வேறுபடுத்தாது தங்கள்  சமயத்துகு ஈர்த்துக்கொண்டதால் தமிழகத்தில் அதிகம் சைவர்களே இருந்த நிலையில் வைணவம் தமிழ் மக்களிடையே பரவ பல முயற்சிகளை மேற்கொண்டது
35.சைவமும் வைணவமும் தங்கள் சமயக் கருத்துக்களை மக்களிடையே பரப்ப ஒன்றுக்கொன்று போட்டியிட வேண்டிய சூழல் உருவானது
36. வைணவ ஆழ்வார்களும் சைவ நாயன்மார்கள் போல் இறைத்தூதர்களாகக் கருதப்பட்டு வைணவக்கோவில்களில் அவர்களின் சிலைகள் நிறுவப்பட்டன
37. ஆவ்வார்கள் பன்னிருவராயினும்ம் ஆண்டாள் மற்றும் மதுர கவியை விலக்கிப் பத்து ஆழ்வார்களே இறைத் தூதர்களாகக் கருதப்பட்டனர்
38. வைணவர்களின் சமயப்பரப்பு வடக்கே பல்லவ நாட்டில் தொடங்கி தென்னாட்டுக்குப் பரவியது
39. திருமழிடையார், திருமங்கை மன்னன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகியோர் சைவத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள். 
40.கி.பி 550-ல் இருந்து கி.பி 950 வரை வைணவம் தமிழ் மன்னர்கள் ஆரியக் கடவுளௌக்கென்று பல கோவில்களைக் கட்டிய காலத்தில் பெருவளர்ச்சியடைந்தது
நாகராசன்

vnagarajan

unread,
Aug 2, 2012, 6:39:12 AM8/2/12
to mint...@googlegroups.com, mintamil

Dhivakar

unread,
Aug 2, 2012, 6:41:38 AM8/2/12
to mint...@googlegroups.com
>>திருமழிடையார், திருமங்கை மன்னன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகியோர் சைவத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள்<<.   

இது வேண்டுமென்றே சாட்டப்படும் குற்றச்சாட்டு.

சைவம் கற்றோம் சாக்கியம் கற்றோம் என்று ஒரு பாட்டு பாடினால் அது சைவ எதிர்ப்பா?

திருமங்கையின் சைவ எதிர்ப்பாக ஒரு பாடலைப் போடுங்கள் பார்ப்போம்..

சார்.. காண்ட்ரோவர்சி யாக எழுதாமல் சமய ஒற்றுமைக்காக எழுதலாமே..

2012/8/2 vnagarajan <radius.co...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

DEV RAJ

unread,
Aug 2, 2012, 6:41:39 AM8/2/12
to மின்தமிழ்
On Aug 2, 3:03 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>>> வைணவம் ஆலயங்களில் தமிழை சற்று தாமதமாகத்தான் (13ஆம்
நூற்றாண்டில்) சேர்த்தார்கள்.<<<


தமிழ் நடைமுறையில் இருந்ததால்தானே
திருக்குடந்தை ஆலயத்தில் ‘ ஆராவமுதே’ பதிகத்தை
நாதமுனிகளால் கேட்க முடிந்தது ?
அது எந்த நூற்றாண்டில் ?

அரையர் அநந்தபுர வைபவம் பாடி அபிநயிக்க
அதைக் கண்ணுற்ற ஆளவந்தார் சடக்கென எழுந்து
அரங்கனிடம் விடை கொண்டது எந்த நூற்றாண்டில் ?


கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்தபுரம்
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக்கு அறியச் சொன்னோம்

தேவ்

> கற்றுத் தரப்பட்டு வருகின்றது. இப்பூசை விதானத்தில் *திருமுறை* கண்டிப்பாக


> ஐயர் கற்றுக்கொள்ளவேண்டும். இதுபற்றி நீங்கள் மதுரை வந்தால், திருப்பரங்குன்ற
> சைவ வேதாகமப் பாடசாலையில் தெரிந்துகொள்ளலாம். இந்தப் பாடசாலை புகழ்பெற்றது.
> இதன் அடிப்படையிலே மற்ற வேதாகமப்பாடசலைகள் இயங்குவதாகக் கேள்வி.
>
> பொதுவாக வைணவத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு. தென்கலை தமிழ்வேதத்துக்குக்
> காட்டும் ஆர்வம் வடகலைப் பிரிவினருக்கு இல்லை என்பது பொதுவான வருத்தம். ஆனால்
> வைணவம் அதுவும், உடையவரின் வைணவம் தமிழுக்கு மிக அதிக சேவை செய்துள்ளது
> என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் உடையவர் காலத்தில்
> ஏற்படமுடியாத (ஆலயங்களில் ஆழ்வார்கள் பாடல்கள் ஆகம்விதி பூசைகள் முடிந்தவுடன்
> பாடப்படுவது) விதி, ஆச்சாரியர் மணவாள மாமுனிவர் காலத்தில்தான் நடைமுறைப்
> படுத்தப்பட்டது. வைணவம் ஆலயங்களில் தமிழை சற்று தாமதமாகத்தான் (13ஆம்
> நூற்றாண்டில்) சேர்த்தார்கள்.
>
> நீங்கள் ஆச்சாரியர்களின் தமிழ்ஞானத்தைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். எல்லாம்
> ஆழ்வார்கள் கொடுத்தது. நம் ஆச்சாரியார்களின் திருவெண்ணம் தங்கள் ஞானத்தை
> அகிலமெங்கும் பகிர்ந்து கொள்வது. அப்படி அகிலமெங்கும் (பாரத தேசமெங்கும் எனக்
> கொள்க) பகிர்ந்து கொள்ள வடமொழி ஞானம் மிக அவசியம். அதே சமயத்தில் ஆழ்வார்களின்
> தமிழ் அவர்களின் ஞானத்தை மிகப் பிரபலமாக்கியது என்பது உண்மைதானே.
>
> நான் இங்கே கொடுப்பதெல்லாம் குறிப்புகள் மட்டுமே.
>

> 2012/8/2 N. Kannan <navannak...@gmail.com>:


>
>
>
>
>
>
>
> > 2012/8/2 DEV RAJ <rde...@gmail.com>:
>
> >> வடமொழியில் ’ஸ்தோத்ர ரத்நம்’ எதற்காக ?
> >> பூருவர்கள் அனைவருமே தமிழ் வல்லோர்கள்.
>
> >> மேலும் வினாக்கள் உள்ளன, ஐயா.
> >> தெளிவு  படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.
> >> வாது செய்யும் நோக்கம் இல்லை.
>
> > வாது செய்து என்ன ஆகப்போகிறது. சில நேரம் ஏண்டா பேசிக்கொண்டு இருக்கிறோம்
> > என்றிருக்கிறது! :-(
>
> > உபயவேதாந்திகளுக்கு வட - தென் மொழிகள் இரு கண்கள் போல. அதில்
> > பேதமிருப்பதில்லை. ஆயினும் கலாச்சார மேம்படுத்தல் எனும் கோதாவில்
> > வைணவர்கள் தமிழை உயர்த்திப்பிடித்தது என்னவோ உண்மை. இப்படியெல்லாம்
> > குதறல் வரும் என்றறிந்து அன்று பெருமாளைத் தமிழின் பின் போக வைத்தனர்
> > அன்றே! எம்பெருமானார் திருநாடு எய்தி ஆயிரம் ஆண்டுகள் ஆகப்பொகிறது!
> > தமிழைக் கருவறைக்குள் ஓத வைத்தனர். இன்றளவும் சிவன்
>

> ...
>
> read more »

Dhivakar

unread,
Aug 2, 2012, 7:13:49 AM8/2/12
to mint...@googlegroups.com
அன்புள்ள வினைதீர்த்தான் அவர்கட்கு,

ஆலயங்களில் வடமொழியும் தென்மொழியும் பற்றிய சில வார்த்தைகள் (உங்கள் சந்தேகம் தீர்க்க)

பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ்தான் ஆலயமெங்கும் செங்கோல்  ஓச்சிக்கொண்டிருந்தன. எல்லாம் இந்த விஜயநகரத்து அரசர்களாலும் மராத்திய அரசர்களாலும் வந்த வினை இது. 

அதாவது இந்து தர்மம் மாலிக்காபுரால் வெகுவாக சீரழிக்கப்பட்ட கால கட்டம். தில்லி சுல்தான்களின் கோரமான படையெடுப்பால் தென்னகமே மதமாற்றத்தால் சிக்கித் தவித்த காலகட்டம். முதலில் வாரங்கல்  காகதிய்யரில் ஆரம்பித்த இந்த மதமாற்றம் கன்னட அரசர்களையும் பிடித்துக்கொண்டது. ஒரு அரசன் இதனை ஏற்க மறுத்து சண்டை போட்டு உயிரிழந்தான். அவன் ஏழு மனைவியரும் தற்கொலை செய்துகொண்டிருந்தனர். அவர்கள் சவம் முன்பே அந்த குழந்தைகள் மதமாற்றப்பட்டு வளர்க்கப்பட்ட கொடுமை கர்நாடகத்தில் ஆரம்பித்தது (கி.பி.1308). இவர்கள்தான் பின் வம்சங்களில் பாமினி சுல்தான்களாக மேலும் தம் முன்னோர் மதத்தையே அழிக்க ஆரம்பித்தனர். இந்தச் சமயத்தில் இந்து மதத்தைக் காக்க எழுந்ததுதான் விஜயநகர சாம்ராஜ்யம் (1365-1585/1670). 

ஒன்று வேண்டுமெனில் இன்னொன்றை இழக்கவேண்டும் என்பது விதியோ என்னவோ.. தென்னகத்தைக் காக்க வந்த தெலுங்கர் (விஜயநகர ராஜாக்களின் வலது கைகள்) இந்துக் கோயில்களையும் வெகு நேர்த்தியாகக் காத்தனர். இவர்கள் ஆட்சி ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் தமிழ்கத்தில் இருந்தது. இந்த ஆண்டுகளில் எத்தனையோ கோயில்கள் புனருத்தாரணம் பெற்றன. இவர்கள் புதுக்கோயில்களை எழுப்பியதைக் காட்டிலும் பழைய கோயில்களை புதுப்பித்த முறை வியத்தகு விஷ்யமாகும். இன்றைக்கும் இந்தக் கோயில்கள் வெகுவாக அழகாக பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றால் விஜயநகரப் பேரரசே காரணம். மதுரை, திருவண்ணாமலை, திருவரங்கம், (எங்கள் திருவாலி திருநகரி கோயில் உட்பட) எத்தனையோ கோயில்கள் புனர்வாழ்வு பெற்றன.

ஆனால் இந்த புனர்வாழ்வில் தமிழ் சற்று சேதப்பட்டதையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். அவர்கள் வாயில் நாம் அழகான பெயரில் கொடுத்திருக்கும் நல்ல தமிழ் வார்த்தைகள் வரவில்லை. ஆகையினால் சுவாமிக்கும் அம்பிகைக்கும் வடமொழி மாற்றம் ஏற்பட்டது. 

இதுதான் காரணம். ஏறத்தாழ தெலுங்கு 200 வருடங்களுக்கு தென்னகத்தில் ஆட்சி மொழி என்பதை மறக்க வேண்டாம். பிறகு வந்த மராத்தியரும் இந்த வடமொழியையே பின்பற்றி வந்ததால் இறைவன் பெயர் அப்படியே உச்சரிக்கப்பட்டு வந்துவிட்டது.

உண்ணமுலை அம்மையும் மட்டுவார் குழலி அம்மையும் நம் நாவுக்கு இனிமை. ஆனால் தமிழறியாத வேற்று மொழியாளருக்கு அதை பலுக்குவதே சிரமம்தானே..

ஆனால் இப்போதும் நான் தனிப்பட்ட முறையில் தமிழ்பெயர் வைத்தே வணங்குகிறேன். தமிழென்றால் இறைவனுக்கும் இனிக்கும். 

அன்புடன்
திவாகர்

2012/8/2 Dhivakar <venkdh...@gmail.com>

vnagarajan

unread,
Aug 2, 2012, 7:55:11 AM8/2/12
to mint...@googlegroups.com

vnagarajan

unread,
Aug 2, 2012, 8:08:39 AM8/2/12
to mint...@googlegroups.com


//சார்.. காண்ட்ரோவர்சி யாக எழுதாமல் சமய ஒற்றுமைக்காக எழுதலாமே..//

ஆய்வென்றாலே மாற்றுக்கருத்துக்களும் அதைத் தரவுகள் ஆவணங்கள் மூலம் தகவில என்ற அனுமானத்துடன் உற்று நோக்குவதும்தானே

1914-ல் எம்.சீனுவாசங்கய்யார் எழுதிய Tamil Studies என்ற நூலில் எழுதப்பட்ட கருத்துக்களை அடியொற்றியே நான் எழுதியிருந்தேன்






நான் சமயவாதி அல்ல.  அரை நுற்றாண்டுகள் ஆய்வுமுறை ஆய்வுநெறிபற்றித் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவன்.  கற்பிப்பவன்.  ஒரு கருத்துக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அதை வெளிக்கொணருவதுதானே ஆராய்ச்சியாளன் வேலை.  என்னை விஷ நாக்கு என்றும் விதண்டா வாதி என்றும் பொய்மை நிறைந்த சிந்தையின் வெளிப்பாடாக எழுதுகிறேன் என்றும் இக்குழுமத்தில் எவ்வளவு நாட்கள் குற்றம் சாட்டுவிர்கள்
எழுத வேண்டாம் என்றால் குழுவிலிருந்து வெளியேற்றிவிடுங்கள்.  சமதளம் என்று பேசிக்கொண்டு மாற்றுக்கருத்து வெளிப்படாமல் தடுப்பது சரியா என்று சிந்தித்துப் பாருங்கள்
நாகராசன்

s.bala subramani B+ve

unread,
Aug 2, 2012, 8:11:56 AM8/2/12
to mint...@googlegroups.com
பேராசிரியர் தொடர்ச்சியாக எழுதட்டும்
 
என் போன்றவர்களுக்கு அவரின் எழுத்தில் இருந்து தேடலுக்குரிய தொடர்ச்சி இணைப்பு  கிடைக்கிறது
 கோப பட வைப்பது ,சில நேரங்களில் உதவும்
 

 
2012/8/2 vnagarajan <radius.co...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Karuannam Annam

unread,
Aug 2, 2012, 9:08:54 AM8/2/12
to mint...@googlegroups.com


2012/8/2 Dhivakar <venkdh...@gmail.com>

ஆலயங்களில் வடமொழியும் தென்மொழியும் பற்றிய சில வார்த்தைகள் 

பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ்தான் ஆலயமெங்கும் செங்கோல்  ஓச்சிக்கொண்டிருந்தன. எல்லாம் இந்த விஜயநகரத்து அரசர்களாலும் மராத்திய அரசர்களாலும் வந்த வினை இது. 

 அவர்கள் வாயில் நாம் அழகான பெயரில் கொடுத்திருக்கும் நல்ல தமிழ் வார்த்தைகள் வரவில்லை. ஆகையினால் சுவாமிக்கும் அம்பிகைக்கும் வடமொழி மாற்றம் ஏற்பட்டது. 

இதுதான் காரணம். ஏறத்தாழ தெலுங்கு 200 வருடங்களுக்கு தென்னகத்தில் ஆட்சி மொழி என்பதை மறக்க வேண்டாம். பிறகு வந்த மராத்தியரும் இந்த வடமொழியையே பின்பற்றி வந்ததால் இறைவன் பெயர் அப்படியே உச்சரிக்கப்பட்டு வந்துவிட்டது.

உண்ணமுலை அம்மையும் மட்டுவார் குழலி அம்மையும் நம் நாவுக்கு இனிமை. ஆனால் தமிழறியாத வேற்று மொழியாளருக்கு அதை பலுக்குவதே சிரமம்தானே..

ஆனால் இப்போதும் நான் தனிப்பட்ட முறையில் தமிழ்பெயர் வைத்தே வணங்குகிறேன். தமிழென்றால் இறைவனுக்கும் இனிக்கும். 

 நன்றி திரு திவாகர். வடமொழிப் பெயர் மாற்றத்திற்கான அரசியல் காரணத்தைப் புரிந்தகொள்ளத் தந்தீர்கள். பெயர் மாறுதல் நடந்த காலம் பற்றி ஆய்வுகள் வரும்போது காரணங்களும் தெளிவாகின்றன. மேலும் தங்கள் ஆய்ந்து உணர்ந்தை எழுதுங்கள்.
 
   பெயர் மாறுதல் புராணங்களையும் உருவாக்குகிறது. திருக்கொள்ளிக்காடு தலத்தில் சம்மந்தர் வாக்கு கொள்ளிக்காடர்.. பஞ்சின் மெல்லடியாள். பஞ்சின் மெல்லடியாள் பெயர் இனிக்கிறது. இன்று அக்னீஸ்வரர்... மிருதுபாத நாயகி. அத்தோடு அக்னி வந்து அக்னித் தீர்த்தத்தில் நீராடி அக்னீஸ்வரரை வழிபட்டார் என்று தல் புராணமும் எழுதிப்பட்டுள்ளது. ”பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும் மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும் வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.” 
 பெயர்மாற்றங்கள் வடமொழியின் பிடியை இறுக்கியுள்ளன.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 

Dhivakar

unread,
Aug 2, 2012, 10:59:36 AM8/2/12
to mint...@googlegroups.com
>>>>என்னை விஷ நாக்கு என்றும் விதண்டா வாதி என்றும் பொய்மை நிறைந்த சிந்தையின் வெளிப்பாடாக எழுதுகிறேன் என்றும் இக்குழுமத்தில் எவ்வளவு நாட்கள் குற்றம் சாட்டுவிர்கள்
எழுத வேண்டாம் என்றால் குழுவிலிருந்து வெளியேற்றிவிடுங்கள். <<<

Dear Professor: I am shocked by your allegation

who said as mentioned above? I have very diplomatically said 'சார்.. காண்ட்ரோவர்சி யாக எழுதாமல் சமய ஒற்றுமைக்காக எழுதலாமே.; What is the wrong in this?

Is this the way a scholar like you to respond?

If you feel you are uncomfortable, it is your wish. whether to stay or not to stay. Kindly do not attack emotionally like this. 

I am absolutely not responsible for your exit, if at all that happened!!





2012/8/2 vnagarajan <radius.co...@gmail.com>


////
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Aug 2, 2012, 11:40:14 AM8/2/12
to மின்தமிழ்
On Aug 2, 4:59 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> ...
>
> read more »>>>>என்னை விஷ நாக்கு என்றும் விதண்டா வாதி என்றும் பொய்மை நிறைந்த சிந்தையின்

>
> வெளிப்பாடாக எழுதுகிறேன் என்றும் இக்குழுமத்தில் எவ்வளவு நாட்கள் குற்றம்
> சாட்டுவிர்கள்
> எழுத வேண்டாம் என்றால் குழுவிலிருந்து வெளியேற்றிவிடுங்கள். <<<
>
> Dear Professor: I am shocked by your allegation
>
> who said as mentioned above? I have very diplomatically said 'சார்..
> காண்ட்ரோவர்சி யாக எழுதாமல் சமய ஒற்றுமைக்காக எழுதலாமே.; What is the wrong in
> this?

திவாகர் அவர்களே

உங்களுக்கு நாகராசனின் பதில் அதீதமாகத்தான் படுகிரது. அதே சமயம், நாம்
ஏன் மற்றவர்களுக்கு “சமய ஒற்றுமை”க்காக எழுதுங்கள் என கேட்க வேண்டும்.
நாகராசன் அவருக்கு உண்மை என எது தோன்றியதோ அதைத்தான் எழுதினார் .
கார்ட்ரோவெர்சியலாக இருந்து விட்டு போகட்டுமே. காண்ட்ரோவெர்சிகள்தான்
வாழ்கையின் - அல்லது மின் உலகத்தின் - ஊறுகாய். அதையெல்லாம் எழுத்துலகம்
பொருட்படுத்த வேண்டாம். அவர் யாரையும், அல்லது எந்த குழுவையும் இனம்,
பால், ஜாதி முறைகளில் தாக்கி எழுதவில்லை.

என்னை பொருத்த அவரை அவர் எழுதியது அப்படி ஒன்றும் ”புரட்டிப்போடும்படி”
இல்லை , காண்ட்ரோவெர்சியலாக இல்லை.

வகொவி

Dhivakar

unread,
Aug 2, 2012, 11:45:10 AM8/2/12
to mint...@googlegroups.com
ellaam sari sir,
but why he should blame like that when I have not used those arrogant letters? You feel it is right? I don't even dream to call like that.

2012/8/2 விஜயராகவன் <vij...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Aug 2, 2012, 12:08:43 PM8/2/12
to மின்தமிழ்
On Aug 2, 5:45 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> ellaam sari sir,
> but why he should blame like that when I have *not* used
> those arrogant letters? You feel it is right? I don't even dream to call
> like that.
>

That I agree and sympathise with you.


vcv

K R A Narasiah

unread,
Aug 2, 2012, 12:13:40 PM8/2/12
to mint...@googlegroups.com
Divakar did not accuse; only passed a passive remark. Pl take it easy. Divakar does not hurt anybody.
Yes Muthuswamy Srinivasa Iyengar is often quoted author and even Zvelabil pays tributes for the scholarly writing of Iyengar. 
But we have to see anything in its entirety and not in parts. Sometime they may mean differrently. 
research is never ending. Opinions differ.
Creating space for all is necessary.
Narasiah

2012/8/2 Dhivakar <venkdh...@gmail.com>

Hari Krishnan

unread,
Aug 2, 2012, 12:31:20 PM8/2/12
to mint...@googlegroups.com


2012/8/2 DEV RAJ <rde...@gmail.com>

அவர்களுக்கு மொழியியல் முக்கியமாக இருந்ததில்லை;
தத்துவத் தெளிவுக்கே முதன்மை.

த்ராவிட வேதங்கள் அக்குறை தீர்த்தன.
அதனால் சந்தஸை அவர்கள் புறம் தள்ளவுமில்லை.
அருளிச் செயல்களுக்கு, செய்ய மறைகளோடும்
சேர்த்துப் பல்லாண்டு பாடினார்கள்

தேவ் சொல்வதை, இணைப்பிலுள்ள ஒலிக்கோப்பு விளக்குகிறது.  எதற்கு முதன்மை என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறார்.

முழுச் சொற்பொழிவு இங்கே:

http://www.youtube.com/watch?v=tI_56sYDBKM&playnext=1&list=PLC7A8B067ED43DD74&feature=results_video

கோப்பிலிருப்பது 43ம் நிமிடத்திலிருந்து 44ம் நிமிடம் வரை.


--
அன்புடன்,
ஹரிகி.
Sangath Thamiz.mp2

DEV RAJ

unread,
Aug 2, 2012, 1:21:01 PM8/2/12
to மின்தமிழ்
நன்றி, ஹரிகி சார்

அறியக்கற்றுவல்ல வேளுக்குடி ஸ்வாமி
கூறியதற்கு மேல் ஒன்றும் சொல்ல
இல்லை.

இறையியலில் மொழியியலைக் கலப்பது,
அருமையாகப் போற்ற வேண்டிய
தொன்மொழிகளிடையே போட்டியைக் கற்பிப்பது
போன்றவற்றைப் பண்பட்டோர் இனியாவது
தவிர்க்க வேண்டும்


தேவ்

On Aug 2, 9:31 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/8/2 DEV RAJ <rde...@gmail.com>
>
> > அவர்களுக்கு மொழியியல் முக்கியமாக இருந்ததில்லை;
> > தத்துவத் தெளிவுக்கே முதன்மை.
>
> > த்ராவிட வேதங்கள் அக்குறை தீர்த்தன.
> > அதனால் சந்தஸை அவர்கள் புறம் தள்ளவுமில்லை.
> > அருளிச் செயல்களுக்கு, செய்ய மறைகளோடும்
> > சேர்த்துப் பல்லாண்டு பாடினார்கள்
>
> தேவ் சொல்வதை, இணைப்பிலுள்ள ஒலிக்கோப்பு விளக்குகிறது.  எதற்கு முதன்மை
> என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறார்.
>
> முழுச் சொற்பொழிவு இங்கே:
>

> http://www.youtube.com/watch?v=tI_56sYDBKM&playnext=1&list=PLC7A8B067...


>
> கோப்பிலிருப்பது 43ம் நிமிடத்திலிருந்து 44ம் நிமிடம் வரை.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>

>  Sangath Thamiz.mp2
> 1869KViewDownload

MANICKAM POOPATHI

unread,
Aug 2, 2012, 4:34:22 PM8/2/12
to mint...@googlegroups.com
குறிப்பினுக்கு நன்றி..!

பல நேரங்களில் உதவும்.. உதவ வைப்போம்...

இனிப்  பொறுத்திருந்து பாருங்கள்..!  :-)

அன்புடன்.../பூபதி


2012/8/2 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

DEV RAJ

unread,
Aug 3, 2012, 1:13:40 AM8/3/12
to மின்தமிழ்
On Aug 2, 3:37 am, vnagarajan <radius.consulta...@gmail.com> wrote:
>>> .ஆறாம் நூற்றாண்டுவரை இக்கடவுளருக்கான கோவில்கள் எண்ணிக்கையில் குறைவாகவே
இருந்தது. விஷ்ணுவுக்கான வழிபடு தலங்களாக ஸ்ரீரங்கம், திருப்பதி,
திருமால்
குன்றம் விளங்கியது <<<


தொண்டைமான் இளந்திரையன் காலத்தில்
விண்ணகரம் இருந்துள்ளது. காஞ்சியின்
வெஃகாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


கடியலூர் உருத்திரங் கண்ணனார் காஞ்சியின்
வெஃகாவைக் குறிப்பிட்டுள்ளார்.
பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை –

”........................................... நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
*பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்* ஆங்கண்
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குறுகின் புன்புற வரிப்பூ,
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழைசூழ் வட்டம் பால் கலந்தவைபோல்
நிழல் தாழ் வார் மணல் நீர்முகத்து உறைப்ப,
புனல்கால் கழீஇய பொழில்தொலும், திரள்கால்
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன ....”


தேவ்

> > 2012/8/1 Karuannam Annam <karuan...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Aug 3, 2012, 4:07:46 AM8/3/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்புள்ள கண்ணன்,

இப்பதிலுக்கு உடன் பதிலளிக்க முடியவில்லை. நேற்று நள்ளிரவில் மட்ரிட்டிலிருந்து வீடு திரும்பி இப்போது தான் பார்க்க வாசிக்க பதிலளிக்க வாய்ப்பு அமைந்தது. நான் அதிகமாக விவரிக்க விரும்பவில்லை. 

பொதுவாகவே சமயம் என்ற விஷயத்தை விவாதிக்க நான் விரும்புவதில்லை. அதனை நான் வேறு வகையில் பார்ப்பதால். சமயம் பக்தி என்பது அனுபவிக்கப்பட வேண்டியது. அது விளக்கப்பட வேண்டியதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பக்தி உணர்வுகளை ஒரு மனம் அனுபவிக்கும் நிலையை சரியாக எழுத்தில் கொண்டுவர யாராலுமே முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. எல்லா பக்திப்பனுவல்களுமே, அது யூதமோ, சாக்கியமோ, சைவமோ வைஷ்ணவமோ அது அவரவர் மன நிலையில் அவ்வப்போது சொற்களில் கலந்து வெளிவந்த ஒரு விஷயம். படித்து ரசிக்கலாம். அதற்குள் நுழைந்து ஆராயலாம். இப்படி சொல்லியிருக்கலாம், அப்படி சொல்லியிருக்கலாம், என்று கூறிக் கொள்ளலாம். இந்த சமய பனுவல்கள்தான் மாற்றத்தைக் கொண்டு வந்தன, மற்றவை இல்லை என்றும் சொல்லிக் கொள்ளலாம். இந்த சமய விளக்கத்தினால் தான் மானுடம் நிலைத்தது, மற்றதனால் அல்ல என்று விவாதிக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவையெல்லாம் பக்தியை அனுபவிக்கும் வழியல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. பக்தி அனுபவிக்கபப்ட வேண்டியது மட்டுமே.

உலகின் வழக்கத்தில் இருந்த / உள்ள பல்வேறு சமயங்களை, சமூகங்களை, மொழிகளை, மக்கள் வாழ்வியல் பண்புகளை நோக்கினால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சில/பல நண்மைகளையும் சில/பல தீமைகளையும் செய்தே இருக்கின்றன. எப்போது பற்று என்ற ஒன்றினை  மனதில் பிடித்துக் கொண்டிருக்கின்றோமோ அது வரை என்னுடையதும், எனக்குப் பிடித்ததும், நான் சார்ந்ததும் என்றுமே ”எனக்குச்”  சிறந்தவையே என்பதைஎல்லோரும் செய்து கொண்டிருக்கின்றோம். :-)



2012/8/1 N. Kannan <navan...@gmail.com>

சுபா:

இது சைவ-வைணவ ஒப்பு நோக்கு அல்ல. நாம் வரையறுப்பது வடமொழி-தென்மொழி ஒப்பு
நோக்கு. திருமந்திரம், தேவாரம் இங்கு வரவே இல்லை.

ஒப்பு நோக்கு அல்ல என்று சொல்வது புரியவில்லை. ”ஸ்ரீவைஷ்ணவத்தில் உள்ள அளவு வேதாந்த விசாரங்கள் சைவத்தில் இல்லை” என்று குறிப்பிடுகின்றீர்கள். இங்கேயே ஒப்பு நோக்கு வந்து விடுகின்றதே.


 

புரியும்படி சொல்கிறேனா எனத்தெரியவில்லை. தேவ், ரங்கன் உதவிக்கு வரலாம்.

வாசித்தேன். புரியும்படி உங்கள் விளக்கம் அமைய சொல்ல வில்லை என்றே கருட்துகின்றேன்.

குறிப்பாக இதைவிட இது பெரியது என்ற விஷயத்தையே நாம் தவிர்க்கலாமே. இல்லை ஒப்பாய்வு என்ற பெயரில் நேரடியாக ஒப்பாய்வைத் தொடங்கலாமே. 

மனதில் தோன்றியதை குறிப்பிட்டேன் அவ்வளவே. புதிய கருத்து மோதலை உருவாக்க அல்ல என்பது உங்களுக்குத் தெ ரியும் என்று நம்புகின்றேன்.:-)

சுபா


நா.கண்ணன்

2012/8/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

> எதன் அடிப்படையில் இதனைச் சொல்கின்றீர்கள் கண்ணன்? சைவ சித்தாந்த சாஸ்திரங்கள்,
> திருமந்திரம் அனைத்தும் படித்தாகி விட்டதா..?:-)
>
> பொது வேத-ஆகம் நீரோட்டமெ ந்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்? கொஞ்சம்
> விவரிக்கலாமே!.
>
> சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Geetha Sambasivam

unread,
Aug 3, 2012, 4:32:38 AM8/3/12
to mint...@googlegroups.com
அருமையான விவாதம்.  சுபாவின் அணுகுமுறை சிறப்பு.  உண்மையே.  பக்தி உணர்வை விவரிக்க வார்த்தைகள் இல்லை தான். 


2012/8/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அன்புள்ள கண்ணன்,

இப்பதிலுக்கு உடன் பதிலளிக்க முடியவில்லை. நேற்று நள்ளிரவில் மட்ரிட்டிலிருந்து வீடு திரும்பி இப்போது தான் பார்க்க வாசிக்க பதிலளிக்க வாய்ப்பு அமைந்தது. நான் அதிகமாக விவரிக்க விரும்பவில்லை. 

பொதுவாகவே சமயம் என்ற விஷயத்தை விவாதிக்க நான் விரும்புவதில்லை. அதனை நான் வேறு வகையில் பார்ப்பதால். சமயம் பக்தி என்பது அனுபவிக்கப்பட வேண்டியது. அது விளக்கப்பட வேண்டியதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பக்தி உணர்வுகளை ஒரு மனம் அனுபவிக்கும் நிலையை சரியாக எழுத்தில் கொண்டுவர யாராலுமே முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. எல்லா பக்திப்பனுவல்களுமே, அது யூதமோ, சாக்கியமோ, சைவமோ வைஷ்ணவமோ அது அவரவர் மன நிலையில் அவ்வப்போது சொற்களில் கலந்து வெளிவந்த ஒரு விஷயம். படித்து ரசிக்கலாம். அதற்குள் நுழைந்து ஆராயலாம். இப்படி சொல்லியிருக்கலாம், அப்படி சொல்லியிருக்கலாம், என்று கூறிக் கொள்ளலாம். இந்த சமய பனுவல்கள்தான் மாற்றத்தைக் கொண்டு வந்தன, மற்றவை இல்லை என்றும் சொல்லிக் கொள்ளலாம். இந்த சமய விளக்கத்தினால் தான் மானுடம் நிலைத்தது, மற்றதனால் அல்ல என்று விவாதிக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவையெல்லாம் பக்தியை அனுபவிக்கும் வழியல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. பக்தி அனுபவிக்கபப்ட வேண்டியது மட்டுமே.

உலகின் வழக்கத்தில் இருந்த / உள்ள பல்வேறு சமயங்களை, சமூகங்களை, மொழிகளை, மக்கள் வாழ்வியல் பண்புகளை நோக்கினால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சில/பல நண்மைகளையும் சில/பல தீமைகளையும் செய்தே இருக்கின்றன. எப்போது பற்று என்ற ஒன்றினை  மனதில் பிடித்துக் கொண்டிருக்கின்றோமோ அது வரை என்னுடையதும், எனக்குப் பிடித்ததும், நான் சார்ந்ததும் என்றுமே ”எனக்குச்”  சிறந்தவையே என்பதைஎல்லோரும் செய்து கொண்டிருக்கின்றோம். :-)




N. Kannan

unread,
Aug 3, 2012, 5:40:41 AM8/3/12
to mint...@googlegroups.com
சுபா:

இதுவொரு வழுக்கு மரம். தெரிந்தோ தெரியாமலோ அவ்வார்த்தை விழுந்துவிட்டது.
வருந்துகிறேன். பொது தமிழ்ப்பாரம்பரியம் எனும் பீடு இருப்பதைவிட நமக்கு
சைவ சமயப்பீடு, வைணவ சமயப்பீடு என்று அமைகிறது. அப்படித்தான் நமது வரலாறு
அமைந்துள்ளது. என்னால் ஒன்றும் செய்யவியலாது.

நான் சொல்ல வந்தது, இதுதான். வடமொழி, தென்மொழி லடாய் என்பது சங்கம்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு மொழி, இன, அரசியல் காரணங்களே
வலுவாய் அலசப்படுகின்றன. ஆனால் உண்மையில் இவ்விருமொழி பற்றிய தமிழனின்
நோக்கு ஆங்கிலேயர் வருகை முன்வரை ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறது.
லண்டனின் இருந்த போது, கைலாச நாத குருக்களின் ‘வடமொழி இலக்கிய வரலாறு
(வைதீக இலக்கியம்) வாசிக்க முடிந்தது. அதில் மிகத்தெளிவாகவே முன்னுரை
தந்த ஈழத்துச் சான்றொர் இந்த ஆரோக்கியநிலை ஈழத்திலும் அவ்வாறே இருந்தது
என்று சான்று பகர்கின்றனர். எனவே நிச்சயமாக இப்பிரிவினைப் பார்வையை இந்த
அளவிற்கு வளர்த்துவிட்டதில் ஆங்கிலேயரும், கழகம் சார்ந்த சிந்தனை மரபும்
முக்கிய பங்கு வகிப்பதைக் காணமுடிகிறது. இந்த நூலின் இரண்டாம்
பதிப்பிற்கு வாழ்த்துசொல்லும் ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் ஒரு புதிய
கருத்தைச் சொல்கிறார். ஏன் தமிழகத்தில் வடமொழி இலக்கிய வரலாறு என்பது
விரிவாக எழுதப்படவில்லை? என்று நோக்கின் அம்மொழி அறிவு என்பது
பரந்துபட்டு வாழ்ந்து வந்ததால் அதற்கொரு தேவை ஏற்படவில்லை என்றும்
சொல்லலாம் என்கிறார். இது சிந்திக்க வேண்டியது. இந்தப் பின்னணியில்தான்
தமிழ்-சமிஸ்கிருத மாநாடு பற்றிய அறிவித்தலை மின்தமிழில் இட்டேன். இந்த
மாநாடு தமிழ் சரிதத்தில் முக்கியமாக் எனக்குப் படுகிறது. முதலில் ஆரியம்
பற்றிய மாயையைக் களைய வேண்டும் எனும் மாநாட்டு நோக்கமே
பாராட்டிற்குரியது. அடுத்த சிறப்பு இது பிராமணர்கள் முன்னடத்தும் மாநாடு
அல்ல. தலித்துகள் இம்மாநாட்டை நடத்துகின்றனர். நான் முன்பே பலமுறை
பகிர்ந்து கொண்ட கருத்து வடமொழி என்பது பிராமணமொழி அல்ல. பிராமணர்கள்
அறிந்தது வைதீக மொழி மட்டுமே. ஆனால் வடமொழியின் வாழ்வு அது எப்படித்தன்னை
பிற இந்திய மொழிகளில் ஊடுருவி இணைத்துக்கொண்டது என்பதில்தான் இருக்கிறது.
நல்ல உதாரணம் மலையாளமொழி. அதிலுள்ள சமிஸ்கிருதக்கலப்பு என்பது
மிகப்பெரியது. ஆயினும் அம்மொழியை தலித்திலிருந்து நம்பூதிரிவரை எல்லோரும்
பேசுகின்றனர். எனவே சமிஸ்கிருதம் என்பது பிராமணமொழி அல்ல. எல்லோரும்
பேசக்கூடிய மொழி. இவ்வகையில் இம்மாநாடு சிறப்புப் பெருகிறது.

சரி, நான் ஏன் ஆழ்வார்களை சிறப்பித்துச் சொன்னேன்? ஆழ்வார்கள் பன்னெடும்
காலமாக மண்ணில் வேரூன்றிய வேத, ஆகமக் கருத்துக்களை உட்செறித்து பனுவல்கள்
இயற்றினர். அவை வெறும் பக்திப்பனுவல்கள் மட்டுமல்ல, ஆயின் வேதாகம உயர்
கருத்துக்களை விளக்க வந்த ஞானநூல்கள் என்று பின்னால் வந்த பிராமண
ஆச்சாரியர்கள் விளக்கிச்சொல்லினர். இப்படி வடமொழி, தென்மொழி ஆய்வு என்பது
ஏறக்குறைய 500 வருடங்களுக்கும் மேல் தமிழ் மண்ணில் நடந்திருக்கிறது.
வடமொழியின் உயர்வு ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் இந்த ஆய்விற்கான தேவை
என்ன? என்று யோசிக்க வேண்டும். பிராமணர்கள் தமிழ் ஆராய்ச்சி பண்ண வேண்டிய
அவசியமே இல்லாத காலக்கட்டம். ஆயினும் தமிழ் மொழியின் உயர்வு கருதி,
நாலாயிரத்தின் ஆழம் கருதி இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இதன்
உச்சகட்ட வெளிப்பாடுதான் தமிழ் பின் செல்லும் பெருமாள் எனும் வழக்கு. இது
குறித்து கம்பன் பேசுகிறான். கம்பனை 9ம் நூற்றாண்டில் போட்டால் இவ்வழக்கு
காலத்தால் முந்தியது என அறியலாம். இல்லை பின்னால் போட்டால் திவாகர்
சொல்வது போல் மணவாளமாமுனிகள் காலம் என்று சொல்லலாம். திருமால்
கோயில்களில் தமிழ்ப்பாசுரங்கள் ஓதும் வழக்கு நாதமுனிகள் காலத்திற்கு
முந்தியது. கோயில் ஒழுங்கு செய்தது உடையவர் காலத்தில். இவையெல்லாம் நாம்
பெருமைப்பட வேண்டிய தமிழ் மரபுகள். இங்கும் நம் சிறுமனது ஊடாடி சைவம்,
வைணவம் எனப்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. நான் தமிழ் மண்ணில்
நடந்த ஓர் உண்மையைச் சொன்னேன். அவ்வளவே.

நான் ஆன்மீகம் பற்றியோ, சைவ-வைணவ உயர்வு பற்றியோ பேசவில்லை. பக்தி
என்றால் என்னவென்றே இன்னும் எனக்குத்தெரியவில்லை. நான் எப்படி பக்தி
பற்றிப்பேசமுடியும்?

தமிழ் எழுத்தை, மொழியை எவ்வகையிலும் புரிந்து கொள்ளமுடியும். அவரவர் மனதே சாட்சி.

நன்றி.

நா.கண்ணன்

2012/8/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

DEV RAJ

unread,
Aug 3, 2012, 7:43:00 AM8/3/12
to மின்தமிழ்
On Aug 3, 2:40 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>>> கைலாச நாத குருக்களின் ‘வடமொழி இலக்கிய வரலாறு
(வைதீக இலக்கியம்) வாசிக்க முடிந்தது<<<

>>>> வடமொழி என்பது பிராமணமொழி அல்ல.<<<<

>>> பிராமணர்கள் அறிந்தது வைதீக மொழி மட்டுமே.<<<

வழக்கம்போல் முரண்கள்

”வைதீக” மொழி :))

அதோடு நின்று விடுவதில்லை.
சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ்,
ஜ்யோதிஷம், நிருக்தம், கல்பம்
என மறைகளின் அங்கங்கள்
மேலும் விரிகின்றன; அடுத்த நிலையில்
இதிஹாஸ , புராண , ஆகமங்களும் வருகின்றன.
இதற்கெல்லாம் ஒரு செந்தரப்பட்ட மொழியின்
தேவை உள்ளது. அதுவே ஸம்ஸ்க்ருதம்.
இது இந்தியச் சிந்தனை மரபுக்கு காலம் காலமாக
வளம் சேர்த்து வந்துள்ளது.


‘குதறல்’ என்று கொள்ளற்க; உண்மைதானா
என்று கேட்டறிந்து உறுதி செய்து கொள்ளலாம்.


பிற துறைகளை அலசுவதற்குத் தேவையான புரிதலும்,
பொறுப்புணர்வும் ஆன்மிகத்துக்கும் தேவை.


‘நால்வேதம் ஆறங்கமானான் கண்டாய்’

தேவ்

> 2012/8/3 Subashini Tremmel <ksubash...@gmail.com>:


>
>
>
>
>
>
>
> > அன்புள்ள கண்ணன்,
>
> > இப்பதிலுக்கு உடன் பதிலளிக்க முடியவில்லை. நேற்று நள்ளிரவில் மட்ரிட்டிலிருந்து
> > வீடு
>

> ...
>
> read more »

N. Kannan

unread,
Aug 3, 2012, 9:12:06 AM8/3/12
to mint...@googlegroups.com
2012/8/3 DEV RAJ <rde...@gmail.com>:

> ‘குதறல்’ என்று கொள்ளற்க; உண்மைதானா
> என்று கேட்டறிந்து உறுதி செய்து கொள்ளலாம்.

> பிற துறைகளை அலசுவதற்குத் தேவையான புரிதலும்,
> பொறுப்புணர்வும் ஆன்மிகத்துக்கும் தேவை.
>
> ‘நால்வேதம் ஆறங்கமானான் கண்டாய்’
>

இதற்கேன் இவ்வளவு கோபம்?

நான் சொல்லவருவது சமிஸ்கிருதம் அவர்கள் பேச்சுமொழி அல்ல என்று. வைதீக
மொழி என்று நான் சொல்வது வைதீக காரியங்கள் என்று வரும் போது மட்டும்
புழங்கும் மொழியென்று. நானறிந்தவரை தமிழ்ப்பிராமணர்கள் சமிஸ்கிருதத்தில்
உரையாடிப்பார்த்ததில்லை. தமிழ் மொழியே அவர்கள் தாய்மொழி, வீட்டு மொழி!

அவ்வளவுதான்.

நா.கண்ணன்

Karuannam Annam

unread,
Aug 3, 2012, 11:36:41 AM8/3/12
to mint...@googlegroups.com


2012/8/3 N. Kannan <navan...@gmail.com>

நான் சொல்லவருவது சமிஸ்கிருதம் அவர்கள் பேச்சுமொழி அல்ல என்று. வைதீகமொழி என்று நான் சொல்வது வைதீக காரியங்கள் என்று வரும் போது மட்டும் புழங்கும் மொழியென்று. நானறிந்தவரை தமிழ்ப்பிராமணர்கள் சமிஸ்கிருதத்தில் உரையாடிப்பார்த்ததில்லை. தமிழ் மொழியே அவர்கள் தாய்மொழி, வீட்டு மொழி!

என்னோடு பழகும் நண்பர்களைக்கொண்டு நானும் இதனை உணர்ந்துள்ளேன். கோவிலில் அர்ச்சனைகளும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் காயத்ரி போன்றவையும் தமிழில் எழுதிவைத்துப் படிக்கிறார்கள். பெரும்பாலும் ஒலிப் பிழையிருக்கிறது என்று நண்பர் சொன்னார். சமஸ்கிரத எழுத்துத் தெரிந்த அவரும் விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதை போற்றி, ஸ்ரீருத்ரம் முதலியவையே படிக்கக் கண்டுள்ளேன். கீதையில் சில சுலோகங்கள் சொல்லுவார். வால்மீகி, காளிதாசன் மற்ற இலக்கியங்கள் பற்றிக் கேட்டேன். நேரம் இருந்ததில்லை என்றார். சமஸ்கிரத நூல்கள் பற்றி எழுதுகிறவர்களும் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலமே பெரும்பாலும் எழுதுகிறார்கள் என்றார்.
அர்ச்சனை மொழிகள் ஒருபோதும் தமிழைப் பாதிக்காது என அறியாமலும் மொழி பற்றித் தெரியாமலும் தான் பாதித்துவிடும் என்ற பயத்தில்   வன்மம் வளர்ந்து காணப்படுகிறது.

Nagarajan Vadivel

unread,
Aug 3, 2012, 12:32:25 PM8/3/12
to mint...@googlegroups.com
The philological study of Sanskrit and Tamil for comparative analysis
showed clearly that Tamil and Sanskrit belong to two entirely
different language families.
As shown below Sanskrit stated to have more perfect structure attained
the fourth and highest level where as the phonological structure is
defective and attained only the second level

http://www.answers.com/topic/proto-indo-european-language

Indo-European studies began with Sir William Jones making and
propagating the observation that Sanskrit bore a certain resemblance
to classical Greek and Latin. In The Sanscrit Language (1786) he
suggested that all three languages had a common root, and that indeed
they might further all be related, in turn, to Gothic and the Celtic
languages, as well as to Persian.

His third annual discourse before the Asiatic Society on the history
and culture of the Hindus (delivered on 2 February 1786 and published
in 1788) with the famed "philologer" passage is often cited as the
beginning of comparative linguistics and Indo-European studies. This
is Jones' most quoted passage, establishing his tremendous find in the
history of linguistics:

The Sanscrit language, whatever be its antiquity, is of a
wonderful structure; more perfect than the Greek, more copious than
the Latin, and more exquisitely refined than either, yet bearing to
both of them a stronger affinity, both in the roots of verbs and the
forms of grammar, than could possibly have been produced by accident;
so strong indeed, that no philologer could examine them all three,
without believing them to have sprung from some common source, which,
perhaps, no longer exists; there is a similar reason, though not quite
so forcible, for supposing that both the Gothic and the Celtic, though
blended with a very different idiom, had the same origin with the
Sanscrit; and the old Persian might be added to the same family.

This common source came to be known as Proto-Indo-European.

Read more: http://www.answers.com/topic/proto-indo-european-language#ixzz22Uu1cXeM

the Dravidian Language

http://www.answers.com/topic/dravidian-languages

Nagarajan

qq

2012/8/3 N. Kannan <navan...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 3, 2012, 12:36:14 PM8/3/12
to mint...@googlegroups.com
2012/8/3 Karuannam Annam <karu...@gmail.com>:

>> நான் சொல்லவருவது சமிஸ்கிருதம் அவர்கள் பேச்சுமொழி அல்ல என்று. வைதீகமொழி
>> என்று நான் சொல்வது வைதீக காரியங்கள் என்று வரும் போது மட்டும் புழங்கும்
>> மொழியென்று. நானறிந்தவரை தமிழ்ப்பிராமணர்கள் சமிஸ்கிருதத்தில்
>> உரையாடிப்பார்த்ததில்லை. தமிழ் மொழியே அவர்கள் தாய்மொழி, வீட்டு மொழி!
>>
> என்னோடு பழகும் நண்பர்களைக்கொண்டு நானும் இதனை உணர்ந்துள்ளேன்.


இதில் இன்னொரு மிக முக்கிய கருத்தை முன் வைக்கிறேன். தமிழ்ப்
பிராமணர்களுக்கு சமிஸ்கிருதம் சோறு போட்டது. ஆயினும் அவர்கள் தங்களை
ஆரியர்களாகக் கண்டு நடைமுறையில் சமிஸ்கிருதத்தில் உரையாடியதில்லை.
இயல்பாக தமிழிலேயே தம் வாழ்க்கையை ஓட்டினர். சங்க காலத்திலும் அதன்
பின்னாலும் தமிழகத்தில் தமிழ் மொழியே முதன்மொழியாக இருந்தது (இராஜவம்சம்,
பின்னால் வந்த குடியேறிகளை தவிர்த்து). அந்த அளவு தெளிவு ஆங்கிலேயர்
வரும்வரை தமிழ் மண்ணில் இருந்தது.

ஆனால் ஆங்கிலம் எல்லோரையும் தலைகீழாய்ப் போட்டுவிட்டது. ஆங்கிலப்
பேராசியர்களால் ஆங்கிலத்தில் சகஜமாக உரையாட முடிந்தது. ஒரு நிலையில்
தமிழன் ‘பழுப்பு துரை’ (ப்ரௌன் சாகிப்) என்றளவில் முற்றும் முழுவதும்
மாறிப்போனான். பின் எங்கள் காலத்தில் ஆங்கில வழி உயர் கல்வி வந்த பின்
மாணவர்களாலும் ஆங்கிலத்தில் உரையாட முடிந்தது.

சமகாலத்தமிழகத்தில்தான் தமிழே தெரியாத தமிழன் தமிழ் மண்ணில் வாழ்கிறான்.
இவ்வளவும் தமிழைச் சொல்லி ஆட்சியைப் பிடித்த கழகங்கள் வந்த பிறகு
நடந்திருக்கிறது. பெரியவர்கள் வீட்டுக்குழந்தைகள் எல்லாம் சரளமாக
ஆங்கிலமும், ஹிந்தியும் பேசுகின்றன. தமிழ் பேசும் போதுதான் தடுமாற்றம்.

இப்படி நிலமை இருக்கும் போது வருந்தி, வருந்தி பார்ப்பனரும் ஆரியமொழியும்
ஒன்று என்று சொல்வது எவ்வளவு பேதமை. கற்ற மொழியை கட்டுக்குள்
வைத்திருந்தனர் அன்றைய பார்ப்பனர். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்குப்பின்
தமிழ்ச் சமூகம் ஒட்டு மொத்தமும் கற்ற மொழிக்கு அடிமையாகி அம்மொழியிலேயே
வாழ்க்கையை நடந்துவதுதான் நடந்திருக்கிறது. மீண்டும், மீண்டும்
ஆரியம்-திராவிடம் என்று பேசுவது வயிற்றைப் புரட்டுகிறது.

நா.கண்ணன்

Prakash Sugumaran

unread,
Aug 3, 2012, 5:11:13 PM8/3/12
to mint...@googlegroups.com
எங்கேயோ தொடங்கி எங்கோ வந்து முடிவடைய பார்க்கிறது.. விவாதம் :) சோறு போட உதவியதால் பேச்சு மொழி அல்லாத சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டவை எல்லாம் எல்லாருக்கும் பொதுவான வேத, வேதாந்தங்களாகி விட்டதோ. சைவமோ, வைணவமோ எதை தூக்கிப் பிடித்தாலும் இருக்கும் அத்தனை நாயன்மார்களும், ஆழ்வார்களும் தென்புலத்தை சேர்ந்தவர்களாக இருக்கையில் இங்கு குறிப்பிட்டுள்ளபடி பேச்சு வழக்கில் இல்லாத வேத மொழியின் தேவைக்கான காரணம் என்னவாக இருக்கும் ?? சில, பல காரணங்களுக்காக புரியாத வேதாந்தங்களை உருவாக்கி புதிய கலாச்சாரத்தை வளர்க்க முயன்று இருக்கும் வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது.
2012/8/3 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

N. Kannan

unread,
Aug 3, 2012, 5:28:56 PM8/3/12
to mint...@googlegroups.com
புரிதலில் குறைபாடு தெரிகிறது (இல்லை! மாறமாட்டேன்! எனும் தொணியும் கூடவே ;-)

ஒரு மொழி பேச்சு மொழி இல்லை என்பதால் அம்மொழியில் எழுதப்பட்ட சிறப்பான
விஷயங்களை எப்படிப் புறம் தள்ளமுடியும்? [சமிஸ்கிருதம் தன்னை எப்படிப்
பல்வேறு மொழிகளில் தக்க வைத்துள்ளது என்று நான் சுட்டியதை
மறந்துவிட்டீர்கள்! மேலும் பௌத்த, ஜீன ஞானங்கள் அம்மொழியிலேயே
எழுதப்பட்டு பயிற்சியில் இருந்தன என்று அறிஞர்கள் சொன்ன மொழியையும்
வேண்டுமென்றே மறைக்கிறீர்கள் ;-) சுவாரசியமான ஒரு விஷயம் தமிழகத்தில்
ராஜூக்கள் எனும் சமூகம் இன்றளவும் சமிஸ்கிருதத்தில் உறையாடுவதாகச்
சொல்கிறார்கள். ஒருமுறை ராஜபாளையம் போய் வாருங்கள்! தமிழகப்
பிராமணர்களுக்கு அது தாய் மொழி இல்லை என்றுதான் நான் சொல்ல வந்தேன்)

நம்ம ஊர் முல்லா அரபியில் பேசுவதில்லை. ஆனால் குரான் அரபியில் உள்ளதே! என்ன செய்ய?

கிறிஸ்தவ வேதாகமம் இலத்தீன் மொழியில் உள்ளதே! இந்த ஊர் பாதிரிகளுக்கு
கிரேக்கம் சொல்லித்தர தமிழ் கற்ற ஒரு பெருந்தகை பற்றிய இடுகை கண்ணில்
படவில்லையோ?

க.>

அடேங்கப்பா! என் பிரதிக்கு எத்தனை வாசிப்புகள் இங்கே :-))))))

2012/8/3 Prakash Sugumaran <praka...@gmail.com>:

Prakash Sugumaran

unread,
Aug 3, 2012, 5:48:20 PM8/3/12
to mint...@googlegroups.com
:)) புறம் தள்ளத் தேவை இல்லை. தாய் மொழி அல்லாத பட்சத்தில் அதற்கான தேவை என்ன என்பதே கேள்வி. குறிப்பாக தொடர்புடைய அனைவரும் தென்புலத்தை சேர்ந்தவர்களாக இருக்கையில்.. கிருத்துவமும், இசுலாமும் இந்த மண்ணில் உதித்தவை அல்ல. தழுவியவர்களுக்கு அதை புரிந்து கொள்ள அம்மொழியில் வேதங்களை படிப்பதை தவிர வேறு வழியில்லை. அதை ஒட்டியேதான் //புதிய கலாச்சாரத்தை வளர்க்க முயன்று இருக்கும் வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது// என குறிப்பிட்டேன்.
 
ராஜூக்கள் கன்னட ( தெலுங்கும் கலந்து ) மொழி பேசுகின்றனர். தவிர சிறப்பான தகவல்கள் நிறைந்த இழை தடம் மாற காரணமாக இருக்கக் கூடாது என்பதால் ஒதுங்கிக் கொள்கிறேன் :)

2012/8/4 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Aug 3, 2012, 11:53:20 PM8/3/12
to mint...@googlegroups.com


2012/8/3 N. Kannan <navan...@gmail.com>

நான் சொல்லவருவது சமிஸ்கிருதம்

மிஸ்கிருதம் என்றால் என்ன?

DEV RAJ

unread,
Aug 3, 2012, 11:57:32 PM8/3/12
to மின்தமிழ்
On Aug 3, 2:11 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>>> சில, பல காரணங்களுக்காக புரியாத வேதாந்தங்களை உருவாக்கி புதிய கலாச்சாரத்தை வளர்க்க
முயன்று இருக்கும் வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது. <<<


புதிய கலாச்ச்ச்ச்ச்சாரம் இல்லை;

”நூலே கரகம் முக்கோல் மணையே” [தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71],

“சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்” [ திருமழிசை
ஆழ்வார்]

“செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்” [நாச்சியார்]

தொல்காப்பியர் காலத்திலிருந்து முக்கோல் பகவர்களால் தமிழகத்தில்
வழிவழியே ஆதரிக்கப்பட்டு வந்துள்ள இறையியல் பண்பாடு இது ; தற்போது
விரிவாக விவாதிக்கப்படுவதால் புதியதாகத் தோன்றலாம்

தேவ்

On Aug 3, 2:11 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> எங்கேயோ தொடங்கி எங்கோ வந்து முடிவடைய பார்க்கிறது.. விவாதம் :) சோறு போட
> உதவியதால் பேச்சு மொழி அல்லாத சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டவை எல்லாம்
> எல்லாருக்கும் பொதுவான வேத, வேதாந்தங்களாகி விட்டதோ. சைவமோ, வைணவமோ எதை
> தூக்கிப் பிடித்தாலும் இருக்கும் அத்தனை நாயன்மார்களும், ஆழ்வார்களும்
> தென்புலத்தை சேர்ந்தவர்களாக இருக்கையில் இங்கு குறிப்பிட்டுள்ளபடி பேச்சு
> வழக்கில் இல்லாத வேத மொழியின் தேவைக்கான காரணம் என்னவாக இருக்கும் ?? சில, பல
> காரணங்களுக்காக புரியாத வேதாந்தங்களை உருவாக்கி புதிய கலாச்சாரத்தை வளர்க்க
> முயன்று இருக்கும் வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது.

> 2012/8/3 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/8/3 Karuannam Annam <karuan...@gmail.com>:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 4, 2012, 12:12:07 AM8/4/12
to mint...@googlegroups.com
நாகராஜன் ஐயா

ஒரு சிறு ஐயம்.

நீங்கள் பெரும்பாலும் யாரோ சொன்னதைத் தான் முன்வைக்கிறீர்கள். சான்றுக்கு இப்போது நீங்கள் கொடுத்துள்ளது.

இக் கருத்து பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் தெரிவிப்பது நலம் என்று கருதுகிறேன்.

அன்புடன்,

தி.பொ.ச.
--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Karuannam Annam

unread,
Aug 4, 2012, 12:14:42 AM8/4/12
to mint...@googlegroups.com


2012/8/4 DEV RAJ <rde...@gmail.com>


”நூலே கரகம் முக்கோல் மணையே”  [தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71],

“சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்” [ திருமழிசை
ஆழ்வார்]

“செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்” [நாச்சியார்]

தொல்காப்பியர் காலத்திலிருந்து முக்கோல் பகவர்களால்  தமிழகத்தில் வழிவழியே ஆதரிக்கப்பட்டு வந்துள்ள இறையியல் பண்பாடு இது ; 

 இறையியலில் வடமொழி,தென்மொழி இரண்டின் பயன்பாடும் எந்தக் காலகட்டங்களில் எவ்வாறு கலப்பு, ஊடுருவல்கள் ஏற்பட்டு ஒன்றால் ஒன்றுக்கு ஏற்பட்ட வளங்கள், பாதிப்புக்கள் முதலியவற்றையும் இன்றையச் சூழலில் மொழிகளின் கூட்டுறவால் விளையக்கூடிய நன்மையையும் அதற்குச் செய்ய வேண்டுவனவற்றையும் அறிஞர்கள் ஆய்வாளர்கள் கூற வேண்டும்.

DEV RAJ

unread,
Aug 4, 2012, 3:11:56 AM8/4/12
to மின்தமிழ்
On Aug 3, 2:28 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>>>> சுவாரசியமான ஒரு விஷயம் தமிழகத்தில் ராஜூக்கள்
எனும் சமூகம் இன்றளவும் சமிஸ்கிருதத்தில் உறையாடுவதாகச்
சொல்கிறார்கள். <<<<


தெலுங்கில்தான் பேசுகிறார்கள்; வடமொழி அறிந்தவரும் உண்டு.
பன்மொழிப்புலவர் ஜகன்னாத ராஜா குறிப்பிடத்தக்கவர்.
சங்கதத்தின் பேச்சு வடிவமே பாகதம் எனும் கருத்தை
வலியுறுத்தியவர்

Rajapalayam gets its name from the name of the community that is
dominant here - Rajas or Rajus
a Telugu speaking community that had migrated from Andhra Pradesh
centuries ago.

http://www.kshatriyarajusuae.com/?page_id=108

தேவ்

On Aug 3, 2:28 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> புரிதலில் குறைபாடு தெரிகிறது (இல்லை! மாறமாட்டேன்! எனும் தொணியும் கூடவே ;-)
>
> ஒரு மொழி பேச்சு மொழி இல்லை என்பதால் அம்மொழியில் எழுதப்பட்ட சிறப்பான
> விஷயங்களை எப்படிப் புறம் தள்ளமுடியும்? [சமிஸ்கிருதம் தன்னை எப்படிப்
> பல்வேறு மொழிகளில் தக்க வைத்துள்ளது என்று நான் சுட்டியதை
> மறந்துவிட்டீர்கள்! மேலும் பௌத்த, ஜீன ஞானங்கள் அம்மொழியிலேயே
> எழுதப்பட்டு பயிற்சியில் இருந்தன என்று அறிஞர்கள் சொன்ன மொழியையும்
> வேண்டுமென்றே மறைக்கிறீர்கள் ;-) சுவாரசியமான ஒரு விஷயம் தமிழகத்தில்
> ராஜூக்கள் எனும் சமூகம் இன்றளவும் சமிஸ்கிருதத்தில் உறையாடுவதாகச்
> சொல்கிறார்கள். ஒருமுறை ராஜபாளையம் போய் வாருங்கள்! தமிழகப்
> பிராமணர்களுக்கு அது தாய் மொழி இல்லை என்றுதான் நான் சொல்ல வந்தேன்)
>
> நம்ம ஊர் முல்லா அரபியில் பேசுவதில்லை. ஆனால் குரான் அரபியில் உள்ளதே! என்ன செய்ய?
>
> கிறிஸ்தவ வேதாகமம் இலத்தீன் மொழியில் உள்ளதே! இந்த ஊர் பாதிரிகளுக்கு
> கிரேக்கம் சொல்லித்தர தமிழ் கற்ற ஒரு பெருந்தகை பற்றிய இடுகை கண்ணில்
> படவில்லையோ?
>
> க.>
>
> அடேங்கப்பா! என் பிரதிக்கு எத்தனை வாசிப்புகள் இங்கே :-))))))
>

> 2012/8/3 Prakash Sugumaran <prakash...@gmail.com>:


>
>
>
>
>
>
>
> > எங்கேயோ தொடங்கி எங்கோ வந்து முடிவடைய பார்க்கிறது.. விவாதம் :) சோறு போட
> > உதவியதால் பேச்சு மொழி அல்லாத சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டவை எல்லாம்
> > எல்லாருக்கும் பொதுவான வேத, வேதாந்தங்களாகி விட்டதோ. சைவமோ, வைணவமோ எதை
> > தூக்கிப் பிடித்தாலும் இருக்கும் அத்தனை நாயன்மார்களும், ஆழ்வார்களும்
> > தென்புலத்தை சேர்ந்தவர்களாக இருக்கையில் இங்கு குறிப்பிட்டுள்ளபடி பேச்சு
> > வழக்கில் இல்லாத வேத மொழியின் தேவைக்கான காரணம் என்னவாக இருக்கும் ?? சில, பல
> > காரணங்களுக்காக புரியாத வேதாந்தங்களை உருவாக்கி புதிய கலாச்சாரத்தை வளர்க்க
> > முயன்று இருக்கும் வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது.

> > 2012/8/3 N. Kannan <navannak...@gmail.com>

Subashini Tremmel

unread,
Aug 4, 2012, 4:50:24 AM8/4/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/8/4 DEV RAJ <rde...@gmail.com>

On Aug 3, 2:28 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>>>> சுவாரசியமான ஒரு விஷயம் தமிழகத்தில் ராஜூக்கள்
எனும் சமூகம் இன்றளவும் சமிஸ்கிருதத்தில் உறையாடுவதாகச்
சொல்கிறார்கள். <<<<


தெலுங்கில்தான் பேசுகிறார்கள்; வடமொழி அறிந்தவரும் உண்டு.

இப்படித்தான் நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.தெலுங்கு ப்ரதானம். தமிழும் இப்போது முக முக்கியமாக பேசுகின்றனர். உதாரணம் எழுத்தாளர் மதுமிதா, அவர் தந்தையார் (ராஜூக்கள் சங்கத் தலைவர் - ராஜபாளையம்) போன்றோர் இதற்கு உதாரணம்.

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Prakash Sugumaran

unread,
Aug 4, 2012, 5:40:22 AM8/4/12
to mint...@googlegroups.com
என்னுடன் பணியாற்றிய உதவி கேமராமேன் ஒருவர் ராஜு இனத்தவர். தன் வீட்டில் உள்ளவர்களோடு அவர் பேசுகையில் அதில் கன்னடம், தெலுங்கு மொழிகள் கலந்திருப்பதை கவனித்து கேட்டபோது, தான் பிறந்தது கர்நாடகம், வளர்ந்தது தமிழகம் என்றும் எனவே எழுதுவது கன்னட மொழி ஆனால் பேச்சு மொழியில் தெலுங்கு, தமிழ், கன்னடம் கலந்து இருப்பதாக  தெரிவித்தார். அவரது திருமணம் முழுக்க முழுக்க ராஜபுதன முறையில் நடைபெற்றது. அவரது தந்தையிடம் பேசுகையில் தனது முன்னோர் மத்திய பிரதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்ததாக தெரிவித்தார். 

2012/8/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--

Prakash Sugumaran

unread,
Aug 4, 2012, 5:48:16 AM8/4/12
to mint...@googlegroups.com
சமிஸ்கிருதம் என்றால் என்ன?//
சம்ஸ்க்ரதம்  - சமஸ்கிரதம் ; சம்சி( ஸி ) க்கிறது எனில் மலையாளத்தில் பேசுவது. கிரந்தம் பேச்சு வழக்கில் கிரதமாகி,  கிருதமாகி இருக்கலாம். எனில் சம்ஸ்க்ரதம் என்பதை பேச்சும் - எழுத்தும் என பொருள் கொள்ள முடிகிறது.

2012/8/4 Prakash Sugumaran <praka...@gmail.com>

N. Kannan

unread,
Aug 4, 2012, 6:12:02 AM8/4/12
to mint...@googlegroups.com
2012/8/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

>> தெலுங்கில்தான் பேசுகிறார்கள்; வடமொழி அறிந்தவரும் உண்டு.
>

சுபா!

கவிஞர் மதுமிதாவை என் புத்தக வெளியீட்டின் போது சென்னையில் சந்தித்தபோது
அங்கு சமிஸ்கிருதத்தில் பேசும் கிராமமொன்று இருப்பதாகச் சொன்னார். அறியாத
தமிழகம் என்று எண்ணிக்கொண்டேன்.

ஜெகந்நாதராஜா போன்ற பன்மொழிப் புலவர்களால் வளம் கண்ட பூமியது. ‘அகரம்’
பதிப்பகத்தில் மீராவுடன் இணையிருந்த ருத்ரதுளசிதாஸ் எனும் ‘இளையபாரதி’
தெலுங்கு-தமிழ் மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். அவரது
தம்பி என் நண்பர்.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Aug 4, 2012, 6:34:09 AM8/4/12
to mint...@googlegroups.com
> On Aug 3, 2:11 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>>>> சில, பல காரணங்களுக்காக புரியாத வேதாந்தங்களை உருவாக்கி புதிய கலாச்சாரத்தை வளர்க்க முயன்று இருக்கும் வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது. <<<


இவ்விழையில் சேச்சா அவர்களும் வேதாந்தத்தைப் போட்டுத்தாக்கியிருந்தார்.
எனக்கு வருத்தமாக இருந்தது. தமிழர்கள் எவ்வளவு சொம்பேறிகளாகிவிட்டோம்?
வேதாந்தம் புரியாது என்று நம்புகிறோமே?

தாங்கள் வியாக்கியான, காலட்சேப மரபு பற்றி கொஞ்சமேனும் அறிந்து கொண்டால்
எவ்வளவு அறிவுபூர்வமான அணுகுமுறை வேதாந்தம் என்று புரியும். நக்கீரன்
மட்டும்தான் இறைவனைக் கேள்வி கேட்டான் என்றில்லை. வேதாந்தம் எனும்
methodology யே இக்கேள்வியில் இயங்கும் முறை. ஸ்ரீரங்கம் பெருமாளிடம்
இடுப்புப்பிடி கேள்விகள் என்று ஒன்றுண்டாம். மடியில் இருக்கும்
வேஷ்டியில் கைவைத்தால் எவ்வளவு தர்ம சங்கடம் என்று பாருங்கள்.
பெருமாளுடன் விளையாடிய ஒரு பாரம்பரியம் நம் பாரம்பரியம். நம் மரபு பற்றி
நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளது என்பது தெரிகிறது.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களின் ’அறிவும் நம்பிக்கையும்
சந்திக்குமிடத்தில்’ எனும் நூலை வாசிக்கவும்.

அடுத்து, இஸ்லாம், கிறிஸ்தவம் வேத மரபு இவை ஒன்று போல் தொணிக்கும் வண்ணம்
அந்நியப்படுத்தும் ஒரு கேள்வியும் இங்கு வைக்கப்பட்டது. வேதமரபு
இம்மண்ணின் மரபுதான். இந்தியா என்பது சிறுநாடு அல்ல. ஒரு உபகண்டம். 18
மொழிகள் (பல, ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னம் பிறந்தவை) 800க்கும் மேற்பட்ட
கிளைமொழிகள் (வட்டார வழக்குகள்) கொண்ட பெரும்பரப்பில் இறையியலை
முன்னெடுத்துச் செல்ல ஒரு பொதுமொழி மிக அவசியம். ‘செய்யப்பட்ட மொழி’
என்று சில நேரம் விளங்கிக்கொள்ளப்படும் சமிஸ்கிருதம் இப்பொதுமொழியாகியது.
எனவேதான் இம்மொழி வளத்தில் தமிழர்களின் பங்கு கணிசமாக உள்ளது.
இந்தியாவின் ஆகச்சிறந்த மூன்று வேதாந்திகள் தென்னகத்தில் பிறந்தவர்கள்.
அவர்கள் சமிஸ்கிருதத்தை அந்நியமொழியாகக் கருதவில்லை. இதற்கு சமகால
உதாரணம் தர வேண்டுமெனில் ஆங்கிலத்தைச் சொல்லலாம். உண்மையில் ஐரோப்பிய
கூட்டமைப்பில் இங்கிலாந்து கிடையாது, ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பல
ஆங்கிலத்தில் உரையாடவே விரும்புகின்றன. இவ்வளவிற்கும் ஆங்கிலம் அவர்கள்
தாய்மொழியன்று. இது போன்ற நிலமைதான் ஒரு காலத்தில் இந்தியாவில்
இருந்திருக்கிறது. சமிஸ்கிருதத்தைப் பழிப்பதன் மூலம் நாம்
இந்தியப்பொதுமையைக் கேள்விக்குள்ளாக்குகிறோம். அது பலருக்கு
விருப்பம்தான் எனினும், பூபதி சுட்டிக்காட்டிய வண்ணம் தமிழ்-சங்கதம்
இவ்விரு மொழிகளிலேயே நம் பண்பாட்டு செழுமை அடங்கியுள்ளது. இவைகளைப்
புறக்கணிப்பது கிளையில் அமர்ந்து கொண்டு அதன் மரத்தொடுப்பை அறுப்பது
போன்றது. இது ஏன் தேவை என்று இங்கு பலர் எண்ணுகின்றனர் என்பது புரியவே
இல்லை. தமிழனின் பாரம்பரியம்தான் அதுவும்.

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Aug 4, 2012, 6:38:05 AM8/4/12
to mint...@googlegroups.com
//”நூலே கரகம் முக்கோல் மணையே”  [தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71],

 “செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்” [நாச்சியார்]
தொல்காப்பியர் காலத்திலிருந்து முக்கோல் பகவர்களால்  தமிழகத்தில் வழிவழியே ஆதரிக்கப்பட்டு வந்துள்ள இறையியல் பண்பாடு இது ; தற்போது விரிவாக விவாதிக்கப்படுவதால் புதியதாகத் தோன்றலாம் - தேவ்//

கையில் தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் இதழ் (ஆகஸ்டு 1 - 15)  அதில் (பக்கம் 19) இல் இரா. நாகசாமியின்  mirror  of   tamil  and sanskrit என்ற நூல் குறித்து பேரா. க. நெடுஞ்செழியனிடம் ஒரு நேர்காணல் - கேள்வி:  வேதங்கள் கூறும் நால் வருணப் பாகுபாட்டை அப்படியே ஏற்று மரபியலில் தொல்காப்பியர் கூறியுள்ளார் என நாகசாமி கூறுகிறார் இது பற்றி உங்கள் கருத்தென்ன? 
க.நெ. விடை:     ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் இது. மரபியலில் நால்வகை வருணம் இடம் பெற்றிருப்பது இடைச்செருகல் ஆகும். தொல்காப்பியர் எழுதியதில்லை அது. அச் செய்திகளில் கூறப்படும் இடம், சூழல் ஆகியவற்றை காணும் போது அது இடைச் செருகல் எனத் தெற்றெனத் தெரியும்.

தொல்காப்பியம் பொருளதிகார மரபியல் தமிழரின் அறிவியல், உயிரியல், தருக்கவியல், ஆகிய துறைகளின் மூல ஊற்று. உயிரினங்களை, அவற்றின் பெயர்களை விளக்கிக் கொண்டு வரும் போது 71 ஆவது நூற்பாவாக  வருணம்  பற்றிய செய்தி வருகிறது. அதிலிருந்து 85 ஆவது நூற்பா வரையிலும் அது தொடர்பான செய்திகளே கூறப்படுகின்றன. 86 ஆவது  நூற்பா, விடுபட்டுப் போன மரபியலின் தொடர்ச்சியாக 'புறக் காழனவே புல்லெனப்படுமே'  என விளங்குகிறது. அறிவியல் செய்திகளுக்கு ஊடாக சமூகவியல் கொள்கை இடம் பெற்றிருப்பது முற்றிலும் பொருத்தமாக இல்லை.

தொல்காப்பியர் காலத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் சமூகச் செல்வாக்கு பெற்ற ஒரு பிரிவாக இல்லவே இல்லை. எனவே தொல்காப்பியர் நால் வருணம் பற்றி பேச வாய்ப்பில்லை. அது பிறரால் திணிக்கப்பட்ட இடைச் செருகலே!                  





Nagarajan Vadivel

unread,
Aug 4, 2012, 6:44:43 AM8/4/12
to mint...@googlegroups.com
கணினி மென்பொருளில் வரைபடத்துறையின் பன்னாட்டு வணிக வாய்ப்பு 2005 அளவில்
அதிகமானபோது ஃப்ளாஷ் போட்டோஷாப் பயிற்சி பெற்றவர்கள் அதிக அளவில் தேவை
இருந்தது. அப்போது என்னுடன் வணிகத்தொடர்பில் இருந்தவர் தன்னிடம் 75 பேர்
இருப்பதாகச் சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தினார். அவர்கள் அனைவரும் ஐ.டி.ஐ
முடித்தவர்கள் என்றும் அவர்கள் எல்லாம் ராஜ பாளையத்தைச் சேர்ந்தவர்கள்
என்றும் வரைகலை அவர்கள் மரபணுவிலேயே இருக்கக் கூடும் ஏனெனில் அவர்கள்
மிக எளிதாக மென்பொருள் நுணுக்கங்களைக்கற்று அரிய வரைபடங்களை
வடிக்கிறார்கள் என்று குறீப்பிட்டார்.

ராஜுக்கள் கவின்கலையில் கைதேர்ந்தவர்கள் என்றும் ராஜா ரவி வர்மாவுக்கு
இணையாக சித்திரங்கள் வரைய வல்லவர்கள் பலர் ராஜுக்களில் உண்டு என்றும்
குறிப்பாகக் கொண்டையா ராஜூ கடவுளர் படம் காலண்டர்களிலும் பூஜை அறைகளிலும்
நீக்கமறப் பரவக் காரணமாக இருந்தார் என்று கூறினார்

ராஜா ரவி வர்மாவின் தாய் மாமன் ராஜ ராஜ வர்மா ரவிவர்மாவுக்குக் குருவாக
இருந்ததுபோல் ராஜுக்கள் வழிமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் குருவாக
இருந்தார் என்ற குறிப்பு உள்ளது. விஜய நகர மன்னர் காலத்தில் கோவில்
முகப்பு கோபுரம் சுவர் வாஹனம் தேரின் முகப்பு என்று பல பகுதிகளிலும்
கடவுளர் படங்களைஅவர்கள் வரந்தனர் என்றும் தஞ்சையில் அவர்கள் வரைந்த
ஓவியங்கள் தனிச் சிறப்பு மிக்கது என்று கூறுவர்.

அவர்களின் தாய் மொழி தெலுங்கு. மற்றவர்களுடன் தமிழில் பேசினர்.
இறைவடிவங்களைப் படைக்க அவர்கள் வடமொழிப் புலமை உள்ளவர்களாகவோ அல்லது
கிரந்தத் தமிழ் மூலமாக வேதப்பொருளை விளக்கும் கவின்கலை தொடர்பான
வளங்களைக் கற்றிருக்க வேண்டும்

19-20 ஆம் நூற்றாண்டுகளில் கோவில் உள்ளே இருந்த இறை வடிவங்கள் மக்கள்
கலையாக அச்சு ஊடகத்தின் மூலம் வண்ணப் படங்களாகத் த்மிழகமெங்கும் பரவ
கோவிபட்டி - ராஜபாளையம் ராஜுக்கள் அரும்பணி ஆற்றினர்
தற்கால வரைபட இயக்கம் ராஜுக்களின் தாக்கத்தாலும் ஊக்கத்தாலுமே உயர்நிலை அடைந்தது
நாகராசன்


2012/8/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

DEV RAJ

unread,
Aug 4, 2012, 10:15:13 AM8/4/12
to மின்தமிழ்
On Aug 3, 9:14 pm, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
>>> இறையியலில் வடமொழி,தென்மொழி இரண்டின் பயன்பாடும் எந்தக் காலகட்டங்களில்
எவ்வாறு கலப்பு, ஊடுருவல்கள் ஏற்பட்டு ஒன்றால் ஒன்றுக்கு ஏற்பட்ட
வளங்கள்,
பாதிப்புக்கள் முதலியவற்றையும் இன்றையச் சூழலில் மொழிகளின் கூட்டுறவால்
விளையக்கூடிய நன்மையையும் அதற்குச் செய்ய வேண்டுவனவற்றையும் அறிஞர்கள்
ஆய்வாளர்கள் கூற வேண்டும்.<<<


வினைதீர்த்தான் அவர்களின் விருப்பம் நியாயமானதே.

வடபுலம், தென்னகம் இரண்டிலும் வாழ்ந்த பெரிய தலைகளின்
கால நிர்ணயம் மிகக் கடினமான பணி; இன்னும் பல விஷயங்களில்
ஒத்திசைவு ஏற்படவில்லை. வையாபுரியார் சங்கப் பாடல்களுக்குச்
செய்ததுபோல் இந்தியாவின் பேரிலக்கியங்களுக்காவது
அகச் சான்றுகளின் அடிப்படையில் கால வரிசையிலான
ஒரு வரலாறு உருவானால் நல்லது


தேவ்

Prakash Sugumaran

unread,
Aug 4, 2012, 3:39:57 PM8/4/12
to mint...@googlegroups.com
தமிழர்கள் சோம்பேறிகளாகி விடவில்லை.. இருக்கும் பிரசினைகளை சுற்றி சுற்றி வந்து வெளியேற முடியாத செக்கு மாடுகளாகி விட்டோம். புரியாத வேதாந்தம் என ஒன்றுமல்ல.. அதை புரியாத மொழியில் உச்சரிப்பதை பெருமையாக கருதிக் கொண்டதால் தொடங்கிய எதிர்வினை இன்னும் தொடர்கிறது.. காதலோ, காமமோ.. இல்லறமோ, துறவோ.. வீரமோ, துரோகமோ.. பாசமோ, உறவோ, பண்போ.. எதுவானாலும் நேரடியாக, இயற்கையாக பழகியவற்றை செயற்கையான கிரந்தங்களில் எழுதி, அதை மனனம் செய்தவர்கள், பிறருக்கு கொடுத்த நெருக்கடியின் பலன்.
ஹரியும் சிவனும் ஒன்னு அதை அறியாதவர் வாயில மண்ணு.. இப்படியான ஒரு பொதுமொழி வேறு எங்கேனும், எந்த மொழியிலேனும் கேள்விப்பட்டதுண்டா ??
//வேதமரபு இம்மண்ணின் மரபுதான்//
மாற்றமே இல்லாத கருத்து. இங்கு உருவான சைவ, வைணவ சிந்தாந்தங்களின் மாற்று உருவே கிருத்துவம், பௌத்தத்தை உள்வாங்கி சில மாற்றங்களை பெற்று உருவானதே இசுலாம் எனவும் நிச்சயம் நிறுவ முடியும். ஆனால் இருக்கும் அரசியல் சூழ்நிலையும், சமூக அமைப்பும் ஒப்புகொள்ளாது.
//இந்தியா என்பது சிறுநாடு அல்ல. ஒரு உபகண்டம். 18 மொழிகள் (பல, ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னம் பிறந்தவை) 800க்கும் மேற்பட்ட கிளைமொழிகள் (வட்டார வழக்குகள்) கொண்ட பெரும்பரப்பில் இறையியலை முன்னெடுத்துச் செல்ல ஒரு பொதுமொழி மிக அவசியம். ‘செய்யப்பட்ட மொழி’ என்று சில நேரம் விளங்கிக் கொள்ளப்படும் சமிஸ்கிருதம் இப்பொதுமொழியாகியது//
இப்பொதுமொழியாகியது.. என்பதை பொது மொழிக்கான தேவை உருவானது என விளங்கிக் கொள்கிறேன். அப்படி உருவான அல்லது உருவாக்கப்பட்ட மொழியில் மிகைப் படுத்தல், உருவகம் அதிகமானதாலும், ( மொழிரீதியான மதங்கள் உருவாகி ) அதை அறிந்தவர் அல்லது உருவாக்கியவர்கள் மிகை படுத்தப்பட்டதாலும் வேறு கண்டங்களை சேர்ந்த மதரீதியான மொழிகள் உள் நுழையும் வாய்ப்பு உருவானது.
//எனவேதான் இம்மொழி வளத்தில் தமிழர்களின் பங்கு கணிசமாக உள்ளது. இந்தியாவின் ஆகச்சிறந்த மூன்று வேதாந்திகள் தென்னகத்தில் பிறந்தவர்கள். அவர்கள் சமிஸ்கிருதத்தை அந்நியமொழியாகக் கருதவில்லை.//
ஏற்கனவே சொன்னது போல அத்தனை ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழர்களே. வேறு எவராவது புகுத்தி இருந்தால் தமிழர்களின் பங்கு எத்தனை சதவீதம் என கணக்கிடலாம். தேசிய தேவைக்காக உருவாக்கப்பட்டதும் இங்குதான். தேசிய தொல்லையாக மாறிய பிறகு எதிருப்பு கிளம்புவதும் இங்குதான்.
//இது போன்ற நிலமைதான் ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்திருக்கிறது. சமிஸ்கிருதத்தைப் பழிப்பதன் மூலம் நாம் இந்தியப்பொதுமையைக் கேள்விக்குள்ளாக்குகிறோம். தமிழனின் பாரம்பரியம்தான் அதுவும்//
உலக அரங்கின் miniature தான் இந்திய உபகண்டம். சமஸ்கிரதத்தை யாரும் பழிக்கவில்லை. அதை அறிந்தவர் மட்டுமே பெரியோர் என எண்ணிக் கொள்வோரின் ஆளுமை மட்டுமே பழிக்கப்படுகிறது. தவிர ஒரு சாதாரண மொழியை பழித்து எதுவும் ஆகப் போவதுமில்லை, அதனால் இந்திய பொதுத்தன்மை கேள்விக்குள்ளாகிறது எனும் பரப்புரையை யாரும் நம்பவும் போவதில்லை. ( அப்படி நம்பினால் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் செய்வோர் பட்டியலில் இடம் பெற வேண்டியிருக்கும் :) இப்போதைக்கு அப்படியான சந்தேக பட்டியலில் இடம்பெற்றுள்ளது தமிழ்.. காரணம் தமிழ் தேசியம்..  :) ) ஏனெனில் அம்மொழியை பேசும் மக்கள் நிறைந்த மாநிலம் என ஒன்று இங்கு இல்லை. இப்படி சொல்வதால் தி.க., பெ.தி.க., தி.மு.க. ஆதரவாளன் என்றோ ஆரிய எதிரி என்றோ எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் நானும் ஆரியம் என அறியப்பட்ட ஒரு இனத்தை பின்பற்றிய திராவிடனே.

2012/8/4 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook

N. Kannan

unread,
Aug 4, 2012, 4:36:01 PM8/4/12
to mint...@googlegroups.com
2012/8/4 Prakash Sugumaran <praka...@gmail.com>:

> தமிழர்கள் சோம்பேறிகளாகி விடவில்லை.. இருக்கும் பிரசினைகளை சுற்றி சுற்றி வந்து
> வெளியேற முடியாத செக்கு மாடுகளாகி விட்டோம். புரியாத வேதாந்தம் என ஒன்றுமல்ல..
> அதை புரியாத மொழியில் உச்சரிப்பதை பெருமையாக கருதிக் கொண்டதால் தொடங்கிய
> எதிர்வினை இன்னும் தொடர்கிறது.. காதலோ, காமமோ.. இல்லறமோ, துறவோ.. வீரமோ,
> துரோகமோ.. பாசமோ, உறவோ, பண்போ.. எதுவானாலும் நேரடியாக, இயற்கையாக பழகியவற்றை
> செயற்கையான கிரந்தங்களில் எழுதி, அதை மனனம் செய்தவர்கள், பிறருக்கு கொடுத்த
> நெருக்கடியின் பலன்.
> ஹரியும் சிவனும் ஒன்னு அதை அறியாதவர் வாயில மண்ணு.. இப்படியான ஒரு பொதுமொழி
> வேறு எங்கேனும், எந்த மொழியிலேனும் கேள்விப்பட்டதுண்டா ??

ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து. வேதாந்தம் பொதுமொழியான சங்கதத்தில்
எழுதப்பட்டிருந்தாலும் அதன் ஆழமான புரிதல்கள் பாமரன்வரை பரவி இருப்பதும்
இந்திய மண்ணில்தான். அதை அவரவர் தாய் மொழியில் செய்துள்ளனர். எனவே இன்று
சங்கதத்தைப் பழிப்பதில் எப்பொருளுமில்லை. வேதாந்தம் படிக்க வேண்டுமென
ஆர்வமிருந்தால் போதும். வழியுண்டு.


> உலக அரங்கின் miniature தான் இந்திய உபகண்டம். சமஸ்கிரதத்தை யாரும்
> பழிக்கவில்லை. அதை அறிந்தவர் மட்டுமே பெரியோர் என எண்ணிக் கொள்வோரின் ஆளுமை
> மட்டுமே பழிக்கப்படுகிறது.

இதுவும் இப்போது புளித்த பாலாகிவிட்டது! வடமொழி அறிந்தோரை எண்ணுவதே
கடினமாகிவருகிறது. அவர்கள் தங்களைப் பெரியோர் என்று சொல்லிக்கொள்வதில்லை.

நான் சேச்சா போன்றோருக்கு நினைவுறுத்துவது இதுதான். முடிந்து போன ஒரு
கதைக்கு மீட்டுருவாக்கம் கொடுத்து நிழல் யுத்தம் செய்வதை விட்டுவிடுங்கள்
என்று. சிறுபான்மையாகிப்போய் ஒண்ட இடமில்லாமல் இருக்கும் இவர்களைக் கண்டு
குமுகம் அனுதாபப்பட வேண்டும். அவர்களின் பாரம்பரிய வளங்களை இணைந்து
பகிர்ந்து வளர வேண்டும். இந்தியாவின் செயல்திறன் இன்மைக்கு இன்னொரு
எடுத்துக்காட்டு இந்த புதிய ஒதுக்கீடு! (நான் மூன்றாம் மனிதனாக, ஒரு
ஜெர்மன் குடிமகனாகப் பேசுகிறேன். இந்தியக் குடிவாரி வழியில்
சொல்லவில்லை).

நா. கண்ணன்

Prakash Sugumaran

unread,
Aug 4, 2012, 6:49:06 PM8/4/12
to mint...@googlegroups.com
இதுவும் இப்போது புளித்த பாலாகிவிட்டது! வடமொழி அறிந்தோரை எண்ணுவதே
கடினமாகிவருகிறது. அவர்கள் தங்களைப் பெரியோர் என்று சொல்லிக்கொள்வதில்லை//
 
இந்த இழைக்கு தொடர்பில்லாவிட்டாலும் 'இன்னும் புளிக்காத பால்' என்பதை காட்ட சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறேன். ஆங்கிலேயருக்கு முந்தைய பாரத நாட்டின் அரசியல் கட்டமைப்பு வேறு. சிறு நிலக்கிழார், பெரு நிலக்கிழார், கிளை, கொத்து, தலை கட்டு, கிராம பஞ்சாயத்து, குறு நில மன்னர், மன்னர், மாமன்னர், சக்கரவர்த்தி.. இப்படியானது. புரியும்படி சொல்வதானால் ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்களில் இன்றும் பிரபலமாக உள்ள மனிதவள மேம்பாட்டு முறையான ( HR ) கசொகு அமைப்பு. அந்தந்த பிரிவுக்கான விதிகளை அந்தந்த பிரிவின் தலைவரே முடிவு செய்து கொள்ள முடியும். அதற்கு ஏற்பவே சட்டதிட்டங்கள் பயன்பாட்டில் இருக்கும். உதாரணமாக கிளை, கொத்து பிரிவுகளுக்கு இடையில் சச்சரவு வந்தால் தலைக்கட்டு எடுப்பதே இறுதி முடிவு. அந்தந்த வாழ்வியல், வாழ்வாதார அடிப்படையிலேயே சட்ட,திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கும்.
 
எடுத்துக்காட்டு : கோடி தண்ணி கடைமடை காரனுக்குச் சொந்தம்.
இதன் அர்த்தம் என்னவெனில், கோடி என்பது ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வழி. ஏரியின் குறைந்தபட்ச நீர்மட்டம் நிறைந்து கோடி வழியாக வெளியேறும் நீர் ஏரியை ஒட்டியுள்ள நிலத்துக்கும், அதன் உரிமையாளருக்கும் சொந்தமில்லை. கோடியிலிருந்து வெளியேறும் நீர் வாய்க்கால் வழியாக பாய்ந்து *கடைசி நிலத்தின் வரப்பில் உள்ள (கடை)மடை வழியாக முதலில் பாயவேண்டும். கடைசி நிலம் நிறைந்து மடை மூடிய பிறகு அதன் முன் உள்ள நிலத்தின் மடை திறக்க வேண்டும்.  முதல் மற்றும் இடையில் உள்ள நிலங்களின் வரப்புகளில் உள்ள மடைகள் அதுவரை திறக்கப்படக் கூடாது. ( காவிரி உற்பத்தி ஆகும் இடத்திலிருந்து வரும் நீர் கடலில் போய் சேரும் இடத்தை சேர்ந்தவர்களுக்கே முதல் சொந்தம் ) இது போன்ற காரணங்களுக்காக எழும் பூசலே மன்னர்களுக்கு இடையிலான போர்கள்.
 
இதில் மொழி மாறுபாடும் சேர்ந்து மன்னர்களுக்கு இடையே அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் குழப்பம் ஏற்பட்டதால் அவர்களுக்குள் பொதுக் கருத்தை ஏற்படுத்த உருவானதே சமஸ்கிரதம். தென்புலத்தில் சமஸ்கிரதம் போல வட புலத்தில் பாலி, கிரந்தம்.. எனவே இதிலிருந்து சொல்ல வரும் முதல் கருத்து.. சமஸ்கிரதம் வடமொழியல்ல.. தென்னவர்கள் உருவாக்கிய பொது மொழி. அதை பயன்படுத்தியவர்கள் ஆட்சியாளர்களின் சார்பாக பிற மொழி பேசும் மக்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்த நீதித் துறை சார்ந்த அதிகார வர்க்கம் அல்லது அவர்களின் சார்பில் ஆதிக்கம் செலுத்திய பிரதிநிதிகள். ஒரு ஒப்புமைக்கு சொல்வதானால் இப்போதைய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் போல. அந்த அதிகார வட்டம் தன் இடத்தை தக்க வைக்கவும், தன் சந்ததியினரை மேம்படுத்தவும் பிற மக்களை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்தனர். இப்போது அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் பிறருக்கு ஒரு சட்டம், தனக்கு ஒரு சட்டம் என செய்து தன்னையும், தன் இனத்தையும் பெருக்கிக் கொள்வதை போலவே.
 
//நிழல் யுத்தம் செய்வதை விட்டுவிடுங்கள் என்று. சிறுபான்மையாகிப்போய் ஒண்ட இடமில்லாமல் இருக்கும் இவர்களைக் கண்டு குமுகம் அனுதாபப்பட வேண்டும். அவர்களின் பாரம்பரிய வளங்களை இணைந்து பகிர்ந்து வளர வேண்டும். இந்தியாவின் செயல்திறன் இன்மைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு இந்த புதிய ஒதுக்கீடு! (நான் மூன்றாம் மனிதனாக, ஒரு ஜெர்மன் குடிமகனாகப் பேசுகிறேன். இந்தியக் குடிவாரி வழியில் சொல்லவில்லை)//
ஒடுக்கப் பட்ட சமூகத்தின் வேகம் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்போதைக்கு மறைத்து, அழித்து வைத்தாலும் அதை நிரந்தரமாக தவிர்க்கவே முடியாது. அரசியல், அதிகாரரீதியாக பாத்தால் மட்டுமே அது நிழல் யுத்தம். மற்றபடி இது ஒன்றை ஒன்று விஞ்ச முயலும் சாதாரண விலங்குப் போட்டியே (rat race). இன்று தமிழகத்தில் சட்டப் படிப்பை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு ( அது நியாயமானதாகவே இருந்தாலும் கூட ) எதிர்ப்பு கிளம்பக் காரணம், இதற்கு முன்பாக ஒண்டிக் கிடப்பதாக சொல்லப்படும், உண்மையில் உயிர்ப்புள்ள அதே சமூகம் அனைவருக்கும் சமச்சீர் கல்வி என்பதை ஒழிக்க முயன்று, முடியாத கோபத்தில் தமிழக வரலாறுகளை யாரும் அறிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், வெளியில் தெரிந்தது ஒன்றுதான், ஆனால் கிராமம் தோறும் பலாயிரம் நூலகங்களை மூடி விட்டது.

2012/8/5 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Aug 4, 2012, 11:04:33 PM8/4/12
to mint...@googlegroups.com


2012/8/5 Prakash Sugumaran <praka...@gmail.com>


சமிஸ்கிருதத்தைப் பழிப்பதன் மூலம் நாம் இந்தியப்பொதுமையைக் கேள்விக்குள்ளாக்குகிறோம். தமிழனின் பாரம்பரியம்தான் அதுவும்//
 
இப்போதைக்கு அப்படியான சந்தேக பட்டியலில் இடம்பெற்றுள்ளது தமிழ்.. காரணம் தமிழ் தேசியம்..  :) )
 //ஏனெனில் அம்மொழியை பேசும் மக்கள் நிறைந்த மாநிலம் என ஒன்று இங்கு இல்லை. இப்படி சொல்வதால் தி.க., பெ.தி.க., தி.மு.க. ஆதரவாளன் என்றோ ஆரிய எதிரி என்றோ எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் நானும் ஆரியம் என அறியப்பட்ட ஒரு இனத்தை பின்பற்றிய திராவிடனே.//

அம்மொழியை என்று நீங்கள் குறிப்பது சமற்கிருத்த்தையா? ஏனெனில் தமிழ்த் தேசியம் என்பதற்கு அடுத்து இதை சொன்னதால் தமிழைத் தான் சொல்லினீரோ என்று ஐயம் ஏற்பட்டுவிட்டது. தமிழகம் தமிழரின் மரபு வழித் தாயகம். 83% மக்கள் தமிழைத் தாய்மொழியாக்க் கொண்டவர்

சேசாத்திரி


DEV RAJ

unread,
Aug 5, 2012, 1:22:16 AM8/5/12
to மின்தமிழ்
On Aug 4, 3:38 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>>> அது பிறரால் திணிக்கப்பட்ட இடைச் செருகலே! <<<


சேச்சா போகிறபோக்கில் பாலைக்கலியே
இடைச்செருகல் என்று அறிவித்து விடுவார்.


"எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவல்அசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்"

தேவ்

Prakash Sugumaran

unread,
Aug 5, 2012, 1:49:05 AM8/5/12
to mint...@googlegroups.com
அம்மொழியை என்று நீங்கள் குறிப்பது சமற்கிருத்த்தையா?//
தமிழ் தேசியத்தை அடைப்பு குறிக்குள் இட்டிருக்கிறேனே !!

2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook

DEV RAJ

unread,
Aug 5, 2012, 1:53:37 AM8/5/12
to மின்தமிழ்
On Aug 4, 1:36 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>>> வேதாந்தம் பொதுமொழியான சங்கதத்தில் எழுதப்பட்டிருந்தாலும்
அதன் ஆழமான புரிதல்கள் பாமரன்வரை பரவி இருப்பதும்
இந்திய மண்ணில்தான். அதை அவரவர் தாய் மொழியில் செய்துள்ளனர்.<<<


எத்தனை எழுதினாலும் பிடிவாதம் விலகாது,
கண்ணன் சார்.

உண்மையான தேடல் உணர்வு
மனத்தில் பதிந்திருக்க வேண்டும்.
சில மேற்கத்திய நண்பர்களிடம்
இந்த நற்பண்பைப் பார்த்துள்ளேன்.

”வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்,
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே”
போன்ற அருமையான பகுதிகள் தமிழில் உள்ளன.

எடுத்துக் காட்டினாலும் இடைச்செருகல்
என ஒதுக்கி விடுவர்.

அந்தணரின் உபாகர்ம சங்கல்பத்தின் ஒரு பகுதியைக்
கம்ப நாட்டாழ்வார் பாடலாகவே யாத்துள்ளார்.

சாயமேற்றிய கண்ணாடியை ஒருநாளும் கழற்ற மாட்டேன்
எனும் பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது

தேவ்

On Aug 4, 1:36 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/8/4 Prakash Sugumaran <prakash...@gmail.com>:

Prakash Sugumaran

unread,
Aug 5, 2012, 2:39:05 AM8/5/12
to mint...@googlegroups.com
அந்தணரின் உபாகர்ம சங்கல்பத்தின் ஒரு பகுதியை// உண்மையான தேடல் உணர்வு
மனத்தில் பதிந்திருக்க வேண்டும். சில மேற்கத்திய நண்பர்களிடம் இந்த நற்பண்பைப் பார்த்துள்ளேன்// எத்தனை எழுதினாலும் பிடிவாதம் விலகாது// சாயமேற்றிய கண்ணாடியை ஒருநாளும் கழற்ற மாட்டேன் எனும் பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது//
 
இந்த கருத்துக்கள் குறித்து தனி மடலில் விவாதிக்க விருப்பம்.




 
2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Mohanarangan V Srirangam

unread,
Aug 5, 2012, 2:45:12 AM8/5/12
to mint...@googlegroups.com
அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
(புறம் - 335, மாங்குடிக் கிழார், மூதின்முல்லை)

இந்தப் பாட்டில் மாங்குடிக்கிழார் பூக்கள் நான்குதான், உணாவும் நான்குதான், குடிகளும் நான்குதான், கடவுளும் ஒன்றுதான் என்கிறார்.

நான்கு பூக்கள் என்ன என்ன?

முதல் இரண்டு பாடம் பிரதியில் இல்லை போலும். மிச்சம் - குருந்தம், முல்லை

நான்கு உணா -- வரகு, தினை, கொள், அவரை

நான்கு குடி - துடியன், பாணன், பறையன், கடம்பன்

கடவுள் -- போரில் இறந்த வீரனின் நடுகல்.

இது முல்லைநிலப் பண்பாடு என்கிறார் மாங்குடி கிழார்.

அப்பொழுது அனைத்து நிலப் பொதுப் பண்பாடுகள் என்ன? யோசிக்கணும்.

***




2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Aug 5, 2012, 2:56:14 AM8/5/12
to மின்தமிழ்
நிலக்கூறுகளைக் கடந்து மெய்வருந்த நடந்துவரும்
இளம் தலைவியிடம் குளிர்சோலைக் காஞ்சியின்
விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாவைச்
சுட்டிக்காட்டும் பாடல் ஒன்று.

புணர்ந்து உடன் போன தலைமகன், நடந்து இளைத்த தலைவியைக் குறித்து
இடந்தலைப்பெய்தமை கூறிய பாசுரம் -

நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை கடந்தபொன்னே!
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலதுஎப் பாலைக்கும் சேமத்ததே

N. Kannan

unread,
Aug 5, 2012, 3:30:26 AM8/5/12
to mint...@googlegroups.com
2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>:


> நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,
> வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை கடந்தபொன்னே!
> கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
> தேனிளஞ் சோலையப் பாலதுஎப் பாலைக்கும் சேமத்ததே
>

அடடா! விடியலுக்கு விதை நெல்லாய் விழும் பாடல்! சங்கம் மருவிய காலத்தே விண்ணோர் தொழும் தெய்வம் கண்ணன் (நாரணன் கூட இல்லை! கண்ணன் ;-) என்பது தெளிவாய் இருக்கும் போது 1000 ஆண்டுகளுக்குப் பின் வரும் சடகோபனின் பனுவலில் அதே கருத்து வருவது காலம் கடந்த ஒரு தொடர்ச்சியைக் காட்டுவதை ஏன் காணக் கண் கூசுகிறது தமிழர்களுக்கு?

உயர்வற உயர்நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன்? அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர்அறு சுடரடி தொழுதுஎழு என் மனனே!


‘எங்கும் உளன் கண்ணன்...எனும் சடகோபன் சொல் புதிய பொருள் கொள்கிறது. அது இன்னொரு சமயம்....

நா.கண்ணன்

N. Kannan

unread,
Aug 5, 2012, 3:49:42 AM8/5/12
to mint...@googlegroups.com
அடிப்படையாக நீங்கள் சொல்லவரும் சமூக நீதி என்பதை யார்தான்
ஏற்றுக்கொள்ளவில்லை? அதை 1000 ஆண்டுகளுக்கு முன்னமே உடையவர் செய்து
இருக்கிறாரே? பொதுவாக தமிழகத்தில் இன்றும் நிலவும் ஜாதீய முரண்பாடுகளின்
முழுப்பொறுப்பும் ஒரு சிறுபான்மையினர் தலையில் கட்டுவதை என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. கண்ணில் தெரியும் கனி கல்லடிபடும்
என்பதற்கிணங்க இவர்களை நோக்கி கல்லடித்துவிட்டு உயர் ஜாதி இந்து சமூகம்
ஒளிந்து கொள்வதை இன்னும் எத்தனை காலம் அறிவுடை சமூகம் ஏற்றுக்கொள்ளும்?

சமிஸ்கிருதம் தென்னகத்தில் தோன்றியது எனுமோர் கருத்து சுவாரசியமாக
உள்ளது. ஆனால் அது எதிர் நீச்சல். ஒன்று தெளிவு சங்க காலத்திலேயே
இந்தியப் பொதுமை எண்ணம் தமிழன் மனதில் வேறூன்றி இருந்திருக்கிறது.
ஒருநிலையில் அதையும் தாண்டி, ’உலகெலாம் உறவு’ எனும் கோட்பாடும்
வளர்ந்திருக்கிறது. தமிழனின் கடல்வழி வணிகம் இக்கண்ணோட்டத்தை
அளித்திருக்கலாம். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதியாக 21ம்
நூற்றாண்டுத்தமிழன் இப்படி xenophobic ஆக மாறி நிறவாதம் பேசுவதும்,
குறுகிய நிலப்பரப்பிற்கு சொந்தம் கொண்டாடுவதும் காலமுரணாகப்படுகிறது!

நா.கண்ணன்

2012/8/5 Prakash Sugumaran <praka...@gmail.com>

Karuannam Annam

unread,
Aug 5, 2012, 4:07:20 AM8/5/12
to mint...@googlegroups.com


2012/8/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
(புறம் - 335, மாங்குடிக் கிழார், மூதின்முல்லை)

இந்தப் பாட்டில் மாங்குடிக்கிழார் பூக்கள் நான்குதான், உணாவும் நான்குதான், குடிகளும் நான்குதான், கடவுளும் ஒன்றுதான் என்கிறார்.
 
கடவுள் -- போரில் இறந்த வீரனின் நடுகல்.

இது முல்லைநிலப் பண்பாடு என்கிறார் மாங்குடி கிழார்.

அப்பொழுது அனைத்து நிலப் பொதுப் பண்பாடுகள் என்ன? யோசிக்கணும்.

***
நினைந்து எழுதுங்கள். தெளிவுறுவோம். 
அன்புடன்
சொ.வி. 
  





N. Kannan

unread,
Aug 5, 2012, 5:01:58 AM8/5/12
to mint...@googlegroups.com
2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>:

> On Aug 4, 3:38 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>>>> அது பிறரால் திணிக்கப்பட்ட இடைச் செருகலே! <<<
>
>
> சேச்சா போகிறபோக்கில் பாலைக்கலியே
> இடைச்செருகல் என்று அறிவித்து விடுவார்.
>

இப்படி தன் கருத்திற்கு ஒத்துவரவில்லை எனும் சான்றுகளையெல்லாம்
இடைசெறுகல் என்பது முறையான ஆய்வு முறையாகாது. பின் எதை நம்புவது? எதை
விடுவது? என்று தெரியாமல் போய்விடும். ஒன்றை இடைச்செறுகல் என்று சொல்வோர்
உடனே தம் முடிவுகளுக்கான மாற்றுச் சான்றுகளை முறையாக முன்மொழிதல்
வேண்டும். இதுவரை, தமிழக ஆய்வுகள் இலக்கியச் சன்றுகளை மட்டுமே நம்பி
காலத்தைத் தள்ளிக்கொண்டுள்ளது. மேலை நாட்டு மானுடவியல் மிக அரிதாகவே
இலக்கியச் சான்றுகளை அணுகுகின்றன. எனவே சமூவியல் பேசும் நண்பர்கள்
இலக்கியத்தை மொழித்துறைக்கு விட்டு விலகிவிட வேண்டும். இல்லை
இடைச்செறுகல் என்று சொல்லாமலேனும் இருக்கலாம். தமிழக ஆய்வு என்பது
செருப்பிற்கு ஏற்ற வகையில் காலை நறுக்குவேன் என்று இருப்பது நகை.

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Aug 5, 2012, 6:26:02 AM8/5/12
to mint...@googlegroups.com
ஐயா அறிவியலில் குமுகவியல் எப்படி வரும் என்று கேள்வி எழுப்புகின்றனர் தமிழ் அறிஞர். அதிலும் 86 ஆம் காடல் மீண்டும் விட்டது தொடர்வது போல் உள்ளது என்று ஞாயமான கருத்தை முன் வைக்கின்றனர். இதற்கு உங்கள் விடை என்ன.

சேசாத்திரி

2012/8/5 N. Kannan <navan...@gmail.com>
2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>:
> On Aug 4, 3:38 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>>>> அது பிறரால் திணிக்கப்பட்ட இடைச் செருகலே! <<<
>


இப்படி தன் கருத்திற்கு ஒத்துவரவில்லை எனும் சான்றுகளையெல்லாம்
இடைசெறுகல் என்பது முறையான ஆய்வு முறையாகாது. பின் எதை நம்புவது? எதை
விடுவது? என்று தெரியாமல் போய்விடும். ஒன்றை இடைச்செறுகல் என்று சொல்வோர்
உடனே தம் முடிவுகளுக்கான மாற்றுச் சான்றுகளை முறையாக முன்மொழிதல்
வேண்டும். இதுவரை, தமிழக ஆய்வுகள் இலக்கியச் சன்றுகளை மட்டுமே நம்பி
காலத்தைத் தள்ளிக்கொண்டுள்ளது. மேலை நாட்டு மானுடவியல் மிக அரிதாகவே
இலக்கியச் சான்றுகளை அணுகுகின்றன. எனவே சமூவியல் பேசும் நண்பர்கள்
இலக்கியத்தை மொழித்துறைக்கு விட்டு விலகிவிட வேண்டும். இல்லை
இடைச்செறுகல் என்று சொல்லாமலேனும் இருக்கலாம். தமிழக ஆய்வு என்பது
செருப்பிற்கு ஏற்ற வகையில் காலை நறுக்குவேன் என்று இருப்பது நகை.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Aug 5, 2012, 11:08:16 AM8/5/12
to mint...@googlegroups.com
2012/8/5 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> ஐயா அறிவியலில் குமுகவியல் எப்படி வரும் என்று கேள்வி எழுப்புகின்றனர் தமிழ்
> அறிஞர். அதிலும் 86 ஆம் காடல் மீண்டும் விட்டது தொடர்வது போல் உள்ளது என்று
> ஞாயமான கருத்தை முன் வைக்கின்றனர். இதற்கு உங்கள் விடை என்ன.
>

சேசாத்திரியாரே:

இந்த ஒரு பாடலை மட்டும் வைத்துக்கொண்டா சங்ககாலம் வேதவழியில் சென்ற காலம்
எனும் முடிவிற்கு வருகிறோம்? நம் ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் எத்தனை அருமையான
கட்டுரைகள் எழுதியுள்ளார் (அதுவும் மதுரையில் வேத ஒலி விண்ணதிர
ஒலித்ததைப் பதிவு செய்யும் பாடல்கள்..).

எனவே, தொல்காப்பியர் நிச்சயம் இந்த வாழ்வியலைப் பதிவு செய்திருப்பார்.

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Aug 5, 2012, 11:23:42 AM8/5/12
to mint...@googlegroups.com
ஐயா, 

தொல்காப்பியர் காலத்தில் பிராமணர் தொகை குறிப்பிடும்படி இல்லை என்கிறார் பேரா.க.நெடுஞ்செழியன். அவருடைய காலம் கி.மு. 7 முதல் 14 வரை கொண்டு செல்கிறார். இதற்கு பரதரின் நாட்டிய சாத்திரத்தை மொழிபெயர்த்த சிருங்கட்டூர் நடாதூர் எஸ்.என்.ஸ்ரீ இராமதேசிகன்  என்பவர் கருத்தை அவர் முன்மொழிகிறார்.   

சேசாத்திரி 

2012/8/5 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Aug 5, 2012, 12:21:54 PM8/5/12
to mint...@googlegroups.com
2012/8/5 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> ஐயா,
>
> தொல்காப்பியர் காலத்தில் பிராமணர் தொகை குறிப்பிடும்படி இல்லை என்கிறார்
> பேரா.க.நெடுஞ்செழியன்.

இது உங்களுக்கே டூ மச்சாத் தெரியலையா?

21ம் நூற்றாண்டிலேயே மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது குதிரைக் கொம்பாய்
இருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் பிராமணர் தொகை குறைவு என்று ஒருவர்
அனுமானிக்கிறார். அதை நீங்களும் நம்புகிறீர்கள் ;-)

நா.கண்ணன்

DEV RAJ

unread,
Aug 5, 2012, 1:02:17 PM8/5/12
to mint...@googlegroups.com
On Sunday, 5 August 2012 03:26:02 UTC-7, seshadri sridharan wrote:
>>> அறிவியலில் குமுகவியல் எப்படி வரும் .....<<<

>>> மீண்டும் விட்டது தொடர்வது போல் உள்ளது என்று ஞாயமான கருத்தை முன் வைக்கின்றனர்.<<<


பிறப்பியலின் இப்பகுதியும் இடைச்செருகலா ?

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
                 (பிறப்பியல் – 20)




தேவ்
2012/8/5 N. Kannan <navan...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

Karuannam Annam

unread,
Aug 5, 2012, 1:16:23 PM8/5/12
to mint...@googlegroups.com


2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>
On Sunday, 5 August 2012 03:26:02 UTC-7, seshadri sridharan wrote:

>>> அறிவியலில் குமுகவியல் எப்படி வரும் .....<<<



பிறப்பியலின் இப்பகுதியும் இடைச்செருகலா ?

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
                 (பிறப்பியல் – 20)
பொருள் விளக்கமும் சிறு பகுதியாகக் கொடுத்தால் வசதியாக இருக்கும் திரு தேவ்
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Prakash Sugumaran

unread,
Aug 5, 2012, 1:30:50 PM8/5/12
to mint...@googlegroups.com
சிறுபான்மையாகிப்போய் ஒண்ட இடமில்லாமல் இருக்கும் இவர்களைக் கண்டு குமுகம் அனுதாபப்பட வேண்டும்// அப்படி எதுவும் நடந்து விடவில்லை என்பதற்கு இந்த இழையே உதாரணமாகி விட்டது. தனி மடலில் என கேட்க என நான் குறிப்பிட்டபிறகும் :))
தனி மடலில் கேட்க விரும்பிய முதல் கேள்வி: அந்தணர், பிராம்மணர், பார்ப்பனர், புரோகிதர், வேதியர் - இவர்கள் எந்த நிலையில் வேறுபடுகின்றனர்.. எங்கு ஒத்து போகின்றனர் ?
சமிஸ்கிருதம் தென்னகத்தில் தோன்றியது எனுமோர் கருத்து சுவாரசியமாக உள்ளது. ஆனால் அது எதிர் நீச்சல்// எதிர் நீச்சல் அடிக்க தெரியாத நிலையிலா அம்மொழிப் புரவலர் உள்ளனர் ?? உபாகர்மா எந்த அளவில் உண்மையாக நடைபெறுகிறது ?? 
 
 


 
2012/8/5 Karuannam Annam <karu...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

DEV RAJ

unread,
Aug 5, 2012, 2:19:38 PM8/5/12
to mint...@googlegroups.com
On Sunday, 5 August 2012 10:16:23 UTC-7, S.Vinaitheerthan wrote:
>>> பொருள் விளக்கமும் சிறு பகுதியாகக் கொடுத்தால்.....<<<


கொடுத்து விடுகிறேன், மன்னா !


எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி

அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே

   
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து,
சொல்லிய பள்ளி வளியின்  எழுதரும் எல்லா  எழுத்தும் -
மூவகை  இடங்களில் இருந்தும்  [பரா, பச்யந்தி, மத்யமா] ஓசைக்   காற்றினால்   எழும்
எழுத்துக்கள் அனைத்தும்,

பிறப்பொடு விடுவழி  - ஐவகை உறுப்புக்களினிடமாகக்   கிளந்து அவ்வவற்றின்    பிறப்பியல்புகளோடு செவிப்புலனாக   வெளிப்படுத்துமிடத்து, 

அகத்தெழு  வளியிசை  உறழ்ச்சி வாரத்து  - உந்தியினிடமாக   அகத்தெழும்  வளியிசை   ஒன்றற்கொன்று
முரண்பட்டு வருதலை,

அரில்தபநாடி - குற்றமற ஆராய்ந்து, 

அளபிற்கோடல் அந்தணர்   மறைத்தே  -  மாத்திரையால்    அளவிட்டு    மேற்கோடல்
நிறைமொழி மாந்தராகிய அந்தணர்தம் மறையின் கண் உள்ளது 

தொல்காப்பியர் மறையின்கண்  காணப்படும்
ஒலிகளை விளக்குவது தம் நோக்கமாக இல்லாத
நிலையிலும் மறைவழி முறையை வலிந்து சுட்டிக்காட்டி,
முடிவில் ”அது தமது நோக்கமன்று; புறத்தே  செவிப்புலனாக 
எழுந்து  தம் உருவம் தோன்ற இசைக்கும் எழுத்தோசைகளின்
அளவைகளையே யான் கூறியுள்ளேன்” என்கிறார் -

”எழுந்து புறத்திசைக்கும் மெய்தெரி
 வளியிசை அளபு நுவன்றிசினே”

நன்றி : TVU

யாரிடமோ உள்ள ஆத்திரத்தைப் பழந்தமிழ் நூல்களிடம்
காட்டும் போக்கு முடிவில் மொழிக்கே தீங்கு விளைவிக்கும்



தேவ்

DEV RAJ

unread,
Aug 5, 2012, 2:24:22 PM8/5/12
to mint...@googlegroups.com
திரு பிரகாஷ் சுகுமாரன் அவர்கள் இத்தகைய வினாக்களைத்
தனி இழையாகத் தொடங்கினால் அது ஒரு காரசாரமான விவாதமாக
வளரும்; பலரும் பங்கு கொள்வர்


தேவ்


On Sunday, 5 August 2012 10:30:50 UTC-7, Prakash Sugumaran wrote:
சிறுபான்மையாகிப்போய் ஒண்ட இடமில்லாமல் இருக்கும் இவர்களைக் கண்டு குமுகம் அனுதாபப்பட வேண்டும்// அப்படி எதுவும் நடந்து விடவில்லை என்பதற்கு இந்த இழையே உதாரணமாகி விட்டது. தனி மடலில் என கேட்க என நான் குறிப்பிட்டபிறகும் :))
தனி மடலில் கேட்க விரும்பிய முதல் கேள்வி: அந்தணர், பிராம்மணர், பார்ப்பனர், புரோகிதர், வேதியர் - இவர்கள் எந்த நிலையில் வேறுபடுகின்றனர்.. எங்கு ஒத்து போகின்றனர் ?
சமிஸ்கிருதம் தென்னகத்தில் தோன்றியது எனுமோர் கருத்து சுவாரசியமாக உள்ளது. ஆனால் அது எதிர் நீச்சல்// எதிர் நீச்சல் அடிக்க தெரியாத நிலையிலா அம்மொழிப் புரவலர் உள்ளனர் ?? உபாகர்மா எந்த அளவில் உண்மையாக நடைபெறுகிறது ?? 
 
 


 
2012/8/5 Karuannam Annam <karu...@gmail.com>


2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>
On Sunday, 5 August 2012 03:26:02 UTC-7, seshadri sridharan wrote:
>>> அறிவியலில் குமுகவியல் எப்படி வரும் .....<<<



பிறப்பியலின் இப்பகுதியும் இடைச்செருகலா ?

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
                 (பிறப்பியல் – 20)
பொருள் விளக்கமும் சிறு பகுதியாகக் கொடுத்தால் வசதியாக இருக்கும் திரு தேவ்
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Prakash Sugumaran

unread,
Aug 5, 2012, 2:27:26 PM8/5/12
to mint...@googlegroups.com
அப்படியே ஆகட்டும் :)

2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Mohanarangan V Srirangam

unread,
Aug 5, 2012, 2:40:17 PM8/5/12
to mint...@googlegroups.com


2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>
On Sunday, 5 August 2012 10:16:23 UTC-7, S.Vinaitheerthan wrote:

>>> பொருள் விளக்கமும் சிறு பகுதியாகக் கொடுத்தால்.....<<<


கொடுத்து விடுகிறேன், மன்னா !

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே

   
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து,
சொல்லிய பள்ளி வளியின்  எழுதரும் எல்லா  எழுத்தும் -
மூவகை  இடங்களில் இருந்தும்  [பரா, பச்யந்தி, மத்யமா] ஓசைக்   காற்றினால்   எழும்
எழுத்துக்கள் அனைத்தும்,


முதன் மந்திரியாரே! இந்தச் சாதாரண வீரனின் ஓர் எளிய சந்தேகத்தைப் பொறுத்தருள வேண்டும்.

சொல்லிய பள்ளி -- என்பதற்குத் தாங்கள் எடுத்து இட்டிருக்கும் பொருள் பரா பசயந்தி மத்யமா என்பது நூற்பாக்களின் போக்கிற்கு ஒட்டிவரவில்லை. பிறப்பியல் தொடங்கி 19 நூற்பாக்களில் எழுத்துகள் எட்டு இடங்களில் பிறக்கின்றன என்று காட்டியிருக்கிறார் தொல்காப்பியர். அந்த பிறப்பிடங்களாகிய பள்ளிகளை ஈண்டு குறிக்கின்றார் என்று நச்சினார்க்கினியர் இவண் உரை வரைகின்றார். தாங்கள் காட்டியுள்ளது TVU எனச் சுட்டியுள்ளீர்கள். ஆயினும் பரா பசயந்தி மத்யமா என்பன வாக்கின் வடிவங்களாக அந்தணர் மறை கூறாநிற்க இவண் எழுத்துக்களின் பிறப்பிடமாகக் கூறப்புகுவது யாங்ஙனம் பொருந்தும்? என்பது சந்தேகம்.

முனியற்க பெரியோய்.

முனிந்தால் நான் ஜூட்டாமி :-))


***
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Aug 5, 2012, 2:40:18 PM8/5/12
to mint...@googlegroups.com
ஆஹா! ஒரு தாழ்மையான விண்ணப்பம். ஆதாரம் உள்ள விஷயங்கள் மட்டும் பேசுங்கள். மூலமும், உசாத்துணையும் கொடுங்கள். பொத்தாம்பொது வி(தண்டா)வாதங்கள் வேண்டா.
சொந்த கருத்தை தெளிவாக கூறுக.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 5, 2012

2012/8/5 Prakash Sugumaran <praka...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Aug 5, 2012, 2:46:43 PM8/5/12
to mint...@googlegroups.com
அதனினும் தாழ்மையான ஒரு விண்ணப்பம். உண்மையிலேயே அக்கறை உள்ளவ்ர்கள் மட்டும் பங்கேற்று நின்று பொருமையாகப் பதில் சொல்லுங்கள். சும்மா ஆறு தூங்குகிறதா என்று கல் எறிந்து விட்டுத் தள்ளிப் போய் நின்று பார்க்கும் கனவான்கள் சற்றே கருணை வையுங்கள். ஏனெனில் ஆறு நிஜமாகவே தூங்கும். :-)))


***


2012/8/6 Innamburan Innamburan <innam...@gmail.com>

DEV RAJ

unread,
Aug 5, 2012, 3:16:50 PM8/5/12
to mint...@googlegroups.com
பாட்டெழுதிப் பெயரெடுக்கும் புலவர்கள் உள்ளனர்;
தவறு கண்டுபிடித்தே பெயர் பெறும் புலவர்களும்
உள்ளனர். இதில்  தாங்கள் எந்த ரகம் என்று
தங்களுக்கே .......... :))



On Sunday, 5 August 2012 11:40:17 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
>>> பிறப்பியல் தொடங்கி 19 நூற்பாக்களில் எழுத்துகள் எட்டு
இடங்களில் பிறக்கின்றன என்று காட்டியிருக்கிறார் தொல்காப்பியர் <<<



என் போன்றோருக்கும் புரியும்படி
எளிய மொழியில் விளக்கினால் நல்லது



தேவ்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

Mohanarangan V Srirangam

unread,
Aug 5, 2012, 3:19:49 PM8/5/12
to mint...@googlegroups.com


2012/8/6 DEV RAJ <rde...@gmail.com>

பாட்டெழுதிப் பெயரெடுக்கும் புலவர்கள் உள்ளனர்;
தவறு கண்டுபிடித்தே பெயர் பெறும் புலவர்களும்
உள்ளனர். இதில்  தாங்கள் எந்த ரகம் என்று
தங்களுக்கே .......... :))


ஹாஹாஹாஅஹா டைம்லி :-))

 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Mohanarangan V Srirangam

unread,
Aug 5, 2012, 4:06:54 PM8/5/12
to mint...@googlegroups.com
என் போன்றோருக்கும் புரியும்படி
எளிய மொழியில் விளக்கினால் நல்லது



தேவ்


http://www.tamilvu.org/slet/l0100/l0100uri.jsp?song_no=83&book_id=1&head_id=1

83.

உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்
பல்லு மிதழு நாவு மூக்கு
மண்ணமு முளப்பட வெண்முறை நிலையா
னுறுப்புற் றமைய நெறிப்பட நாடி
யெல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான.
 
என்பது  சூத்திரம். இவ்வோத்து  எழுத்துக்களினது பிறப்பு உணர்த்துதலிற்
பிறப்பியலென்னும்  பெயர்த்தாயிற்று.    சார்பிற்   றோற்றத்து   எழுத்துந்
தனிமெய்யும்  மொழியினன்றி   உணர்த்தலாகாமையின்  அவை  பிறக்கும்
மொழியை மொழி மரபிடை  உணர்த்திப் பிறப்பு  உணர்த்த வேண்டுதலின்
நூன்மரபின் பின்னர் வையாது இதனை மொழிமரபின் பின்னர் வைத்தார்.
 

இச் சூத்திரம் எழுத்துக்களினது பொதுப்பிறவி இத்துணை நிலைக்களத்து
நின்று புலப்படுமென்கின்றது.
 

இதன் பொருள். எல்லா எழுத்தும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லுங்காலை
- தமிழெழுத்து   எல்லாவற்றிற்கும்    ஆசிரியன்    கூறிய   பிறப்பினது
தோற்றரவை யாங் கூறுமிடத்து,  உந்தி  முதலாத்  தோன்றி  முந்து வளி -
கொப்பூழடியாகத்  தோன்றி    முந்துகின்ற    உதானனென்னுங்   காற்று,
தலையினும்  மிடற்றினும்   நெஞ்சினும்    நிலைஇ -   தலையின்கண்ணும்
மிடற்றின்கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலைபெற்று, பல்லும் இதழும் நாவும்
மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்று
- பல்லும்
இதழும் நாவும் மூக்கும்  அண்ணமுமென்ற  ஐந்துடனே  அக்காற்று, நின்று
தலையும்  மிடறும்    நெஞ்சுங்   கூட   எட்டாகிய  முறைமையையுடைய
தன்மையோடு  கூடிய  உறுப்புக்களோடு  ஒன்றுற்று,  அமைய - இங்ஙனம்
அமைதலானே, வேறுவேறு   இயல - அவ்   வெழுத்துக்களது  தோற்றரவு
வேறுவேறு  புலப்பட  வழங்குதலையுடைய, காட்சியான  நாடி நெறிப்பட -
அதனை  அறிவான் ஆராய்ந்து  அவற்றின் வழியிலே மனம்பட, திறப்படத்
தெரியும்  -  அப்   பிறப்பு   வேறுபாடுகளெல்லாங்  கூறுபட  விளங்கும்
என்றவாறு.
 

1சொல்லுங்காலை  வளி   நிலைபெற்று   உறுப்புக்களுற்று   இங்ஙனம்
அமைதலானே அவை வழங்குதலையுடைய; அவற்றின் வழக்கம்  அவற்றின்
வழியிலே  மனந்   திறப்படத்  தெரியுமெனக்  கூட்டி  உரைத்துக்கொள்க.
இ்ங்ஙனம் கூறவே 2முயற்சியும் முயலுங் கருத்தாவும் உண்மைபெற்றாம்.

(நச்சினார்க்கினியம்)
*

இனி இதை முடிந்த மட்டும் எளிமையாக விளக்குகிறேன் --

உதானன் என்னும் காற்று கொப்பூழ் அடியாகத் தோன்றி மூன்று இடங்கள், ஐந்து உறுப்புகள் ஆகிய சொல் பிறக்கும் பள்ளிகளை அடைகிறதாம்.

மூன்று இடங்கள் என்ன? -- தலை, மிடறு, நெஞ்சு

ஐந்து உறுப்புகள் -- பல், இதழ், நா, மூக்கு, அண்ணம்

ஆனால் அந்தணர் மறையில் சிறப்பான இரு கருத்துகள் உரைக்கப் படுகின்றன. என்ன?

உந்தியில் தோன்றும் காற்றுக்கு மாத்திரை கூட்டிக் கோடல் என்பது ஒரு கருத்து.

அடுத்து காற்றின் உதிக்கும் இடம் கொப்பூழாகக் கொள்ளாமல் ‘அகத்தெழு வளி’ என்னும் மூலாதாரத்தில் எழுவதாய்க் கொள்வது இரண்டாவது கருத்து.

இந்த இரு கருத்துகளும் அந்தணர் மறைக்கென்றே ப்ரத்யேகமான கருத்துகள். அவை இங்கு வெளிப்படத் தோன்றும் எழுத்துகளின் பிறப்பு பற்றிக் கூறப் பயன்படாது என்பதால் அவற்றை விடுத்து ‘எழுந்து புறத்திசைக்கும் மெய்தெரி வளி இசை அளவு’ கூறுகின்றேன் என்று சொல்கிறார் தொல்காப்பியர். இஃது நச்சினார்க்கினியர் தரும் விளக்கத்தின் சாரம்.

***



(இது தானய்யா.... இனிமேல் மன்னர் அளிக்கும் பரிசை வாங்கிக் கொள்ளலாம் அல்லவா....? சொக்கா...அதுக்கும் போட்டியா...? :-))  )




 

Hari Krishnan

unread,
Aug 5, 2012, 10:40:07 PM8/5/12
to mint...@googlegroups.com


2012/8/5 seshadri sridharan <ssesh...@gmail.com>

ஐயா, 

தொல்காப்பியர் காலத்தில் பிராமணர் தொகை குறிப்பிடும்படி இல்லை என்கிறார் பேரா.க.நெடுஞ்செழியன்.

தொல்காப்பியர் காலத்து சென்சஸ் குறிப்புகளை வைத்திருப்பீர்களே.  அவற்றையும் வெளியிடுங்கள்.  கூடவே எந்த அரசன் எடுத்த சென்சஸ், எந்தக் கல்வெட்டில் காணப்படுகிறது, அந்தக் கல்வெட்டை எந்தப் பாப்பான் பதுக்கிவைத்துவிட்டான் என்று எல்லா உண்மைகளையும் வெளியிடுமாறு தேவரீரை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

Nagarajan Vadivel

unread,
Aug 5, 2012, 11:39:27 PM8/5/12
to mint...@googlegroups.com
//(இது தானய்யா.... இனிமேல் மன்னர் அளிக்கும் பரிசை வாங்கிக் கொள்ளலாம்
அல்லவா....? சொக்கா...அதுக்கும் போட்டியா...? :-)) )//

மன்னா இந்தக் கருத்து பரிசில் பெறத் தகுதியானதல்ல. பார்க்க நக்கீரர்
போல் இருக்கிறார் என்று பயந்துவிட வேண்டாம். அவர் தருமிதான் மாறு
வேடத்தில் வந்திருக்கிறார்

தொல்காப்பிய விதிப்படி தமிழில் மொத்தம் 31 எழுத்துக்கள் ஆயினும் ஒலியனகள்
33 ஆகும். ஒலியியல் அடிப்படையில் தமிழுக்கும் சமஸ்கிரிதத்துக்கும்
வேறுபாடுண்டு. தமிழ் எழுத்துக்களை ஒலிப்பதில் குறைகள் உண்டு.
சமஸ்கிரிதம் ஒலியன் அடிப்படையாக இயங்குவது
தமிழ் எழுத்தின் அடிப்படையில் இயங்குவது
புஸ் .. புஸ் என்று வெறும் காற்று விடும் நாக பாம்பே என்று மிரட்டல்
சத்தம் காதைப் பிளக்கிறது
இப்போதைக்கு புற்றுக்குள் இருப்பதே நல்லது
நாகராசன்

2012/8/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to

> minTamil-u...@googlegroups.com

DEV RAJ

unread,
Aug 6, 2012, 1:30:08 AM8/6/12
to mint...@googlegroups.com
On Sunday, 5 August 2012 13:06:54 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
>>>> உதானன் என்னும் காற்று கொப்பூழ் அடியாகத் தோன்றி மூன்று இடங்கள், ஐந்து
உறுப்புகள் ஆகிய சொல் பிறக்கும் பள்ளிகளை அடைகிறதாம்.

மூன்று இடங்கள் என்ன? -- தலை, மிடறு, நெஞ்சு
ஐந்து உறுப்புகள் -- பல், இதழ், நா, மூக்கு, அண்ணம்

ஆனால் அந்தணர் மறையில் சிறப்பான இரு கருத்துகள் உரைக்கப் படுகின்றன. என்ன?

உந்தியில் தோன்றும் காற்றுக்கு மாத்திரை கூட்டிக் கோடல் என்பது ஒரு கருத்து.

அடுத்து காற்றின் உதிக்கும் இடம் கொப்பூழாகக் கொள்ளாமல் ‘அகத்தெழு வளி’
என்னும் மூலாதாரத்தில் எழுவதாய்க் கொள்வது இரண்டாவது கருத்து. <<<<

தெளிவான விளக்கத்துக்கு நன்றி;  தமிழ் விக்கியில்
பதிவிடலாம். பலரும் பயன் பெறுவர்




On Sunday, 5 August 2012 20:39:27 UTC-7, vnagarajan wrote:
>>> தொல்காப்பிய விதிப்படி தமிழில் மொத்தம் 31 எழுத்துக்கள் ஆயினும் ஒலியனகள்
33 ஆகும்.  ஒலியியல் அடிப்படையில் தமிழுக்கும் சமஸ்கிரிதத்துக்கும்
வேறுபாடுண்டு.  தமிழ் எழுத்துக்களை ஒலிப்பதில் குறைகள் உண்டு.
சமஸ்கிரிதம் ஒலியன் அடிப்படையாக இயங்குவது
தமிழ் எழுத்தின் அடிப்படையில் இயங்குவது <<<<


பேராசிரியர் சொல்லும் கருத்தையும் அறிஞர்கள்
ஆராய வேண்டும்; ஒலியன், எழுத்து எனும்
வரையறைகள் தமிழ் இலக்கணத்தில்
உள்ளனவா ? phoneme புதிய கருத்தியலா ?


மன்னர் வினைதீர்த்தான் அவர்களுக்குப் பொறுப்புக்
கூடுகிறது; புலவர்களின் வரிசை பெரிதாகிறது.
ஒருவர் ஆசிரியப்பா பாடினால், மற்றொருவர்
பேராசியப்பா பாடுகிறார் :))



தேவ்

> minTamil-unsubscribe@googlegroups.com

Karuannam Annam

unread,
Aug 6, 2012, 3:39:19 AM8/6/12
to mint...@googlegroups.com


2012/8/6 DEV RAJ <rde...@gmail.com>

தெளிவான விளக்கத்துக்கு நன்றி; 
பேராசிரியர் சொல்லும் கருத்தையும் அறிஞர்கள்
ஆராய வேண்டும்; ஒலியன், எழுத்து எனும்
வரையறைகள் தமிழ் இலக்கணத்தில்
உள்ளனவா ? phoneme புதிய கருத்தியலா ?


மன்னர் வினைதீர்த்தான் அவர்களுக்குப் பொறுப்புக்
கூடுகிறது; புலவர்களின் வரிசை பெரிதாகிறது.

புலவர் வரிசை விரிவது மகிழ்ச்சிக்குரியது.
   மன்னர் என்பது மட்டும் இடிக்கிறது. வீட்டிலேயே அவர்கள் ஆச்சிதான்!
   கவனமாகத்தான் பதிவிடுவேன். பதிவை மீண்டும் பார்த்தேன். ஆணை
   தொனிக்கவில்லையே. பாடல் என்ன சொல்கிறது என்று தெரியாததால் விளக்கம் இருந்தால் புரிந்து கொள்ள வசதி என்று கேட்டிருந்தேன்.
நன்றி திரு தேவ்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


Mohanarangan V Srirangam

unread,
Aug 6, 2012, 3:42:57 AM8/6/12
to mint...@googlegroups.com


2012/8/6 Karuannam Annam <karu...@gmail.com>
’அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...’
:-)))



Reply all
Reply to author
Forward
0 new messages