மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள்... part 3

3,993 views
Skip to first unread message

rajam

unread,
Dec 10, 2010, 12:26:47 AM12/10/10
to மின்தமிழ், Subashini Tremmel, Narayanan Kannan, kalairajan krishnan
போன பகுதியில் மணிமேகலை எப்படி மணிபல்லவத்தீவுக்கு வந்தாள் என்றும் கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரன் கையிலிருந்து இடப்பட்ட அமுதசுரபி மணிமேகலைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பது பற்றியும் பார்த்தோம்.
இந்தப் பகுதியில் அமுதசுரபி  எப்படி மணிமேகலை கைக்கு வருகிறது என்று பார்ப்போம்.
இது கொஞ்சம் "அடர்த்தியான பகுதி." பல கதை மாந்தர்களும் பல இடங்களும் பல நிகழ்ச்சிகளும் கலந்தது. மணிமேகலையின் மன மாற்றத்தின் முதல் படியைக் காட்டுகிறது.

கூடியவரை எளிமைப்படுத்திச் சொல்லப் பார்த்திருக்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மணிமேகலை: மணிபல்லவத்தில் மணிமேகலை -- பகுதி 3
-----------------------------------------------------------------

காவிரிப்பூம்பட்டினத்தில் மலர் பறிப்பதற்காக மலர்வனம் போன மணிமேகலையை மணிமேகலாதெய்வம் எடுத்து வந்து மணிபல்லவத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டது!

இந்தப் பகுதியில் மணிமேகலை மணிபல்லவத்தீவில் என்ன செய்கிறாள், அமுதசுரபி எப்படி அவள் கைக்கு வருகிறது என்று பார்ப்போம்.

***********************************************
மணிமேகலாதெய்வம் என்ன செய்தாள்?
---------------------------------------------
மணிமேகலையை மணிபல்லவத்தில் வைத்துவிட்டு மணிமேகலாதெய்வம் நேரே உதயகுமரனிடம் போகிறாள். 

உதயகுமரனுக்கோ ... மணிமேகலை நினைப்பு! மணிமேகலையை மலர்வனத்தில் பார்த்துவிட்டு அவளை அடைய முடியாததால் உறக்கம் வராமல் மிகவும் வருந்திக்கொண்டிருக்கிறான்.

மணிமேகலாதெய்வம் உதயகுமரனுக்கு அறிவுரை சொல்கிறாள்:

"கோன் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்-ஆள்-வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும்"

[சுருக்கமான பொருள்: மன்னன் தன் நிலையில் மாறுபட்டால் கோள்கள் ("கிரகங்கள்") தங்கள் நிலையில் மாறுபடும். கோள்கள் தங்கள் நிலையில் மாறுபட்டால் நாட்டில் மழையில்லாமல் வறட்சி உண்டாகும். வறட்சி உண்டானால் உலகத்தில் உயிர்கள் வாழமுடியாது. உலக உயிர்கள் எல்லாம் மன்னனின் உயிர் என்ற தகுதி இல்லாமல் போகும்.]

"தவ-த்-திறம் பூண்டோள்-தன்-மேல் வைத்த
அவ-த்-திறம் ஒழிக ..."

[சுருக்கமான பொருள்: தவ வழியில் போகிற மணிமேகலையின்மேல் நீ வைத்திருக்கிற கீழான எண்ணத்தை விட்டுவிடு.]

இப்படி உதயகுமரனிடம் சொல்லிவிட்டு மலர்வனத்திற்குப் போகிறாள் மணிமேகலாதெய்வம். சுதமதிக்கோ இன்னும் உறக்கம். மணிமேகலாதெய்வம் சுதமதியை எழுப்பித் தான் யார் என்பதைத் தெரிவித்துவிட்டுப் ... பிறகு நடந்ததைச் சொல்கிறாள். 

மணிமேகலைக்குத் தவ வழியில் போகும் நல்ல நேரம் வந்தது; அதனால் அவளை எடுத்துக்கொண்டுபோய் மணிபல்லவத் தீவில் வைத்ததாகச் சொல்லுகிறாள். மணிமேகலை தன் முற்பிறப்பை அறிந்துகொண்டு இன்னும் ஏழு நாட்களில் திரும்பி வருவாள் என்கிறாள். மணிமேகலை வேறு வடிவங்களில் வந்தாலும் உன் கண்ணுக்குப் புலப்படுவாள் என்று உறுதி சொல்கிறாள். மாதவியிடம் போய்த் தான் (மணிமேகலாதெய்வம்) வந்ததையும்  மணிமேகலை நற்கதி செல்லும் காலம் அமைந்ததையும் தெரிவிக்கச் சொல்கிறாள். பிறகு "அந்தரத்தில் எழுந்து" போய்விடுகிறாள்.

இதையெல்லாம் கேட்ட சுதமதிக்கு மணிமேகலையைப் பிரிந்த வருத்தம். மாதவர் பள்ளிக்குத் திரும்பிப் போவதற்கு மணிமேகலாதெய்வம் குறித்த வழியிலேயே போகிறாள். வழியில் சக்கரவாளக் கோட்டத்தை அடைகிறாள். 

சுதமதி தன் முற்பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
---------------------------------------------------------------
சக்கரவாளக் கோட்டத்தில் பலரும் புகும்படியாகத் திறந்த வாயிலை உடைய பொது மன்றம் ஒன்று இருக்கிறது. அங்கே தூணில் இருந்த ஒரு பாவை மூலம் சுதமதி தன் முற்பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்கிறாள்.

முற்பிறப்பில் இரவிவன்மன் என்றவனுக்கு மூன்று பெண்கள்: தாரை, வீரை, இலக்குமி. அவர்கள் இந்தப் பிறவியில் மாதவியாகவும் சுதமதியாகவும் மணிமேகலையாகவும் பிறக்கிறார்கள். தாரை == மாதவி; வீரை == சுதமதி; இலக்குமி == மணிமேகலை.

இந்த முற்பிறவிச் செய்தியைத் தெரிந்துகொண்ட சுதமதிக்குத் திகைப்பு! மாதவர் [பௌத்த] பள்ளியை நோக்கிப் போகிறாள்.

இதற்கு முந்திய நாளில்தான் தூய மலர் பறித்துக் கொண்டுவருவதற்காக மகள் மணிமேகலையை மலர்வனத்துக்கு அனுப்பியிருந்தாள் தாய் மாதவி. அந்த மகள் இன்னும் திரும்பி வரவில்லை. தாய்க்குத் துடிப்பு. 

மாதவியிடம் தனியாகப் போய்ச் சேர்ந்த சுதமதி சொன்ன தகவலோ மாதவிக்கு இன்னும் கலக்கம் தந்தது. மாணிக்கத்தை இழந்த நாகம் போல வருந்துகிறாள். மணிமேகலை திரும்பிவருவதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்திலேயே காத்திருக்கிறாள்.

மணிமேகலை ... மணிபல்லவத்தீவில்
-----------------------------------------
மணிபல்லவத்தில் இருள் நீங்குகிறது. காலை மலர்கிறது. கடல் புறம், மணல் பரப்பு. மணிமேகலைக்குத் தூக்கம் கலைகிறது. புதிய இடம். தெரிந்தவர் யாரும் தென்படவில்லை. ஒரே கலக்கம். தவிக்கிறாள்.

"சுதமதி ஒளித்தாய்; துயரம் செய்தனை;
நனவோ கனவோ என்பதை அறியேன்;
மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்!
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்; 
மெல்வளை வாராய்! விட்டு அகன்றனையோ"

[சுருக்கமான பொருள்: சுதமதி! ஒளிந்துகொண்டிருக்கிறாயே. இது என் கனவா? நனவா? தெரியவில்லையே. மனது நடுங்குகிறது. ஏதாவது பதில் சொல்லு. இருட்டு நீங்கிவிட்டது. மாதவி குழம்பிப்போவாள். மென்மையான வளையணிந்தவளே, வா. என்னை விட்டுப் போனாயோ?]

"விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்;
ஒரு தனி அஞ்சுவேன்; திருவே வா!"

[சுருக்கமான பொருள்: வித்தையினால் நமக்கு முன்னால் வந்த அந்தப் பெண் ("மணிமேகலாதெய்வம்") ஏதாவது வஞ்சனை செய்துவிட்டாளா? தெரியவில்லையே. தனியே இருக்க அஞ்சுகிறேன். திருவே, வா!]

மணிமேகலைக்கு என்ன தவிப்பு, பாவம்! மலர்வனத்துக்கு மலர் பறிக்கப் போனவளுக்கு இப்படி ஒரு திருப்பமா?

மணிபல்லவத்தில் எல்லா இடங்களிலும் சுற்றி அலைகிறாள்; அவளுக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை; அலைந்த அலைச்சலில் ... கட்டி முடித்திருந்த கூந்தல் குலைந்து பின்புறம் தாழுகிறது. அரற்றுகிறாள், கூவி அழுகிறாள்; ஏங்குகிறாள். கண்ணகியுடன் வேற்று நாடு போய்க் கொலைப்பட்ட தந்தை கோவலனை நினைத்து "ஐயாவோ" என்று கதறுகிறாள்.

அப்போது ... அவள் முன்னால் நிகழ்கிறது ஓர் அற்புதம்!

நிலத்திலிருந்து மூன்று முழ உயரத்தில் தோன்றுகிறது தரும பீடிகை! 

அந்தத் தரும பீடிகை தரமான பளிங்கினால் செய்யப்பட்டது. "பதும சதுரத்தின்" மேல் அறவோனுக்காக ["புத்த தேவனுக்காக"] அமைந்த ஆசனம். அதன் மேல் நல்ல நறுமணம் உடைய மலர்கள் மட்டுமே விழும். அதன் பக்கத்தில் பறவைகள் சென்று சிறகுகளை அடித்து ஒலி செய்யமாட்டா. அது தேவர்கோன் அங்கே வைத்த மணிப்பீடிகை; அதைப் பார்ப்பவர்களுடைய பிறப்பைப் பற்றித் தெரிவிக்கும். கீழ்த் திசையில் நாகநாட்டு மன்னர்கள் இரண்டுபேர் அது தன்னது என்று எடுத்துக்கொள்ளப் பார்த்துத் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள். அப்போது "பெருந்தவ முனிவன்" ["புத்த தேவன்"] தோன்றி, சண்டை போட வேண்டாம்; "இது எமது" என்று சொல்லி அதில் இருந்து அறம் உரைத்தான். அப்படிப் பட்ட பெருமை உடையது அந்தத் தரும பீடிகை.

அந்தத் தரும பீடிகை இப்போது மணிமேகலை முன் தோன்றுகிறது.

தரும பீடிகையைப் பார்த்ததும் மணிமேகலை தன்னையறியாமல், அவள் கைகள் தாமாகவே தலைமேல் குவிகின்றன. கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. இடமிருந்து வலமாக மூன்று முறை அந்தப் பீடிகையை வலம் வருகிறாள். நிலத்தில் விழுந்து வணங்கி எழுகிறாள்.

அப்படி எழுகிறவளுக்கு அவளுடைய பழைய பிறப்புப் பற்றித் தெரிகிறது.

பழைய பிறவியில் ... இலக்குமி
-----------------------------------
காந்தார நாட்டில் பூருவ தேசத்தில் அத்திபதி என்னும் அரசனுக்கு இடவயம் என்பது தலைநகரம். அந்த அரசனுக்கு மைத்துனன் பிரமதருமன். பிரமதருமன் அரசனுக்குத் தரும உபதேசம் செய்யும்போது "இந்த நாவலந்தீவில் இன்றைக்கு ஏழாம் நாளில் நிலநடுக்கம் உண்டாகும். அப்போது இந்த நகரமும் நாக நாட்டில் 400 யோசனைப் பரப்பும் பாதலத்தில் வீழ்ந்து கெடும். ஆதலால் நீ இந்த நகரத்தை விட்டு வேறு இடத்துக்குப் போ" என்று சொல்கிறார். அரசனும் அந்த நகரத்தாரும் வடக்கே உள்ள அவந்தி என்ற ஊருக்குப் புறப்படுகிறார்கள். வழியில் காயங்கரை என்ற நதிக்கரையை அவர்கள் அடைந்த போது நில நடுக்கம் ஏற்பட்டு இடவயம் என்ற நகரம் அழிந்தது. அதைத் தெரிந்து கொண்ட அரசனும் அவன் மக்களும் பிரமதருமனைச் சரண் அடைந்து நின்றார்கள். 

அசோதர நகரத்து அரசனாகிய இரவிவன்மன் என்பவனுடைய தேவி அமுதபதி என்பவளுக்கு இலக்குமி பிறக்கிறாள். அத்திபதி அரசனுக்கு நீலபதி என்பவளிடம் பிறந்த இராகுலனை இலக்குமி மணந்துகொள்கிறாள். கணவனோடு பிரமதருமனிடம் வந்து தருமம் கேட்கிறாள். பிரமதருமன் சொல்கிறார்: "இராகுலன் இன்றைக்கு 16-ஆம் நாள் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்டி இறப்பான். அவனுடன் நீயும் தீயில் புகுந்து உயிர் விடுவாய். பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் பிறப்பாய். அங்கே உனக்கு ஒரு துன்பம் வரும். அப்போது மணிமேகலா தெய்வம் உன்னை எடுத்துத் தென் பக்கம் இருக்கும் ஒரு தீவில் வைப்பாள். அங்கே இருக்கும் புத்த பீடிகையைத் தரிசித்துத் தொழுது முற்பிறப்பைப் பற்றி அறிந்துகொள்வாய்."

இராகுலன் யாராகப் பிறப்பான் என்று இலக்குமி  கேட்கிறாள். "உன்னை மணிபல்லவத்தில் விட்டுச் செல்லும் தெய்வமே மீண்டும் வந்து உனக்கு அந்த உண்மையைப் புலப்படுத்தும்" என்று பிரமதருமன் சொல்கிறார்.

இந்தப் பிறவியில் -- மணிமேகலை
---------------------------------------
இப்படி... புத்த பீடிகை முன் நின்று தன் பழம் பிறப்புப் பற்றித் தெரிந்துகொண்டு அதைச் சொல்லி அழுகிறாள் மணிமேகலை. "அந்தத் தெய்வம் ["மணிமேகலா தெய்வம்"] இப்போது வாராதோ" என்று புலம்புகிறாள்.  

மணிமேகலா தெய்வமும் "இவள் பழைய பிறப்பு உணர்ந்துவிட்டாள்" என்று தெரிந்து, வானிலிருந்து ஒரு பூங்கொடி நிலத்திற்கு வந்தது போலத் திரும்பி வருகிறாள்.

புத்தபீடிகையை வலம்வந்து தொழுகிறாள். அவள் முன்னர் மணிமேகலை நிலத்தில் விழுகிறாள். "என் பெரும் கணவன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்கிறாள். 

"இலக்குமி கேள்!" என்று தொடங்கிய மணிமேகலா தெய்வம் இன்னும் சில பழம்பிறப்புச் செய்திகளை அவளுக்குச் சொல்லி "உதயகுமரன் உன் இராகுலன்" என்று தெரிவிக்கிறாள்.

"ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்கும் உண்டு"

[சுருக்கமான பொருள்: அவனுக்கு உன்மேல் ஈடுபாடு உண்டு. உனக்கும் அவன்மேல் ஈடுபாடு உண்டு.]

அது ...

"கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெண் களர் வீழ்வது போன்ம் என"

[சுருக்கமான பொருள்: அது கந்தசாலி என்ற நெல்லின் மிகச் சிறந்த விதை ஒன்று வேகும் வெண்மைக் களர் நிலத்தில் விழுந்தது போல் ஆகிவிடும்.]

ஆனால் நீயோ "அறத்தின் வித்து." உன்மனம் ஒரு நல்ல வழியில் செல்வதற்கு ஏதுவாகச் செய்தேன்.

இது சொல்லிய மணிமேகலா தெய்வம் மேலும் "இலக்குமி கேள். தாரையும் வீரையும் உனக்குத் தவ்வையர் ["மூத்தவர்"]. இருவரும் கச்சய மன்னன் துச்சயனுக்கு மனைவியர். மனைவியருடன் துச்சயன் மலைவளம் கண்டு பின் கங்கையாற்றங்கரையில் இருந்தபோது அறவண அடிகள் அங்கே போனார். அவரைப் பார்த்ததும் துச்சயன் வணங்கி அவரை யார் என்ற விவரம் கேட்டான். "ஆதி முதல்வனும் அறவாழி ஆள்வோனும் ஆகிய புத்த தேவனின் பாதத் தாமரை இருக்கும் பாதபங்கய மலையைக் கண்டு தொழுது வலம் கொள்ள வந்தேன். நீங்களும் தொழுங்கள்" என்று அறவண அடிகள் சொன்னார். அவர் சொல்லியபடியே துச்சயனும் அவன் மனைவியரும் செய்தார்கள். அப்படித் தொழுததின் பயனே அந்தப் பெண்கள் (தாரையும் வீரையும்) பிறகு மாதவியாகவும் சுதமதியாகவும் பிறந்தார்கள்" என்று விளக்குகிறாள்.

தொடர்ந்து ... மணிமேகலைக்கு இனி வரப்போகும் நிகழ்ச்சிகளை மணிமேகலா தெய்வம் கூறுகிறாள். 

"நீ உன் பிறப்பை உணர்ந்தாய். இனி, பல வேறு சமயங்களின் பொய்க் கூற்றுக்களைக் கேட்பாய். அப்போது இவள் இளையவள்; வளையோள் என்று உனக்கு யாரும் தம் சமயங்களின் பொருள்களை விளக்கிச் சொல்லமாட்டார்கள். [அதனால்] இந்த மந்திரங்களைப் பெற்றுக் கொள்" என்று சொல்லி மாற்று வடிவம் கொள்ளவும், அந்தரத்தில் திரியவும், கடும் பசியை நீக்கவும் ஆகும் 3 மந்திரங்களைக் கொடுக்கிறாள்.

பிறகு அந்தரத்தில் எழுந்து போய்விடுகிறாள்.

மணிமேகலா தெய்வம் போனபின் மணிமேகலை மணிபல்லவத்தில் 
-------------------------------------------------------------------------
"வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
தண் மலர்ப் பொய்கையும்" இறங்கிப் பார்க்கிறாள் மணிமேகலை. 

இப்படி ஒரு காவதம் திரிகிறாள்.

அப்போது...

தீவதிலகை தோன்றுகிறாள். மணிமேகலையை "யார்" என்று கேட்கிறாள். 

மணிமேகலையோ ...

"எப் பிறப்பு அகத்துள் யார் நீ என்றது?
... 
போய பிறவியில் பூமியங்கிழவன்
இராகுலன் மனை யான்; இலக்குமி என் பேர்" 

[சுருக்கமான பொருள்: எந்தப் பிறப்பில் நான் யார் என்று கேட்கிறாய்? போன பிறவியில் பூமி ஆளும் உரிமை பெற்ற இராகுலனுக்கு மனைவி; இலக்குமி என்பது என் பெயர்.]

"ஆய பிறவியில் ஆடல்-அம்-கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான்"

[சுருக்கமான பொருள்: இப்போது ஆகிய பிறவியில், ஆடல் கணிகை மாதவி பெற்ற மகள் மணிமேகலை.]

... என்று சொல்கிறாள்.

பிறகு மணிமேகலா தெய்வம் தன்னை அங்கே கொண்டுவந்தது பற்றிச் சொல்லி, "நீ யார்?" என்று கேட்கிறாள்.

தீவதிலகை தான் அந்தத் தீவுக்கு வந்த வகையைத் தெரிவிக்கிறாள். அங்கே புத்த பீடிகையைக் காவல் செய்வதையும் சொல்லிப் புத்த பீடிகையின் சிறப்பை விவரிக்கிறாள்.

"ஈங்கு இதன் அயலது இரத்தின தீவத்து 
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங்கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குளது ஆதலின்
தொழுது வலம்கொண்டு வந்தேன்"

[சுருக்கமான பொருள்: இந்தத் தீவுக்கு அருகில் உள்ளது இரத்தின தீவம். அங்கே சமந்த மலையின் மேல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் புத்தனது பாதங்கள் உண்டு. அப் பாதங்களைத் தொழுது வலம் செய்து விட்டு இங்கே வந்தேன்.]

" ... ஈங்குப்
பழுது-இல்-காட்சி இந் நல் மணிப் பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர்"

[சுருக்கமான பொருள்: இங்கே குற்றமற்ற காட்சி தரும் இந்த நல்ல மணிப்பீடிகையைக் காவல் காக்கும்படித் தேவர்களின் தலைவன் எனக்குக் கட்டளை இட்டான். அது போல இதைக் காவல் செய்கிறேன். என் பெயர் தீவதிலகை.]

"தரும தலைவன் தலைமையின் உரைத்த 
பெருமை சால் நல்லறம் பிறழா நோன்பினர்
கண்டு கை தொழுவோர் கண்டதன் பின்னர்-ப்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; பைந்தொடி
அரியர் உலகத்து; ஆங்கு அவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலையாக"

[சுருக்கமான பொருள்: தரும தலைவன் சொன்ன பெருமை நிறைந்த நல்ல அறத்திலிருந்து தவறாத நோன்பு மேற்கொண்டவர்களே இந்தப் பீடிகையைக் கண்டுகொண்டு கைதொழுது வணங்குவார்கள். அவர்கள் தங்கள் பழம் பிறப்பை உணர்வார்கள். அவர்களைப் போன்றவர்கள் உலகத்தில் அரிதாகவே உள்ளார்கள். அப்படிப் பட்டவர்களுக்கே இந்த உலகத்தில் அறமொழி உறுதியாக உரியது.]

இப்படி ... புத்த பீடிகையின் சிறப்பையும் தான் அந்தப் பீடிகையைக் காவல் செய்து வருவதையும் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துச் சொல்கிறாள். 

"ஆங்கனம் ஆகிய அணியிழை, இது கேள்"

[சுருக்கமான பொருள்: அப்படி அரியவளாக அமைந்தவளே, இதைக் கேள்.]

தொடர்ந்து ... கோமுகிப் பொய்கை பற்றியும் அதில் மணிமேகலைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அமுதசுரபி பற்றியும் சொல்கிறாள்.

மணிமேகலை கையில் அமுதசுரபி ...
-----------------------------------------
தீவதிலகை மணிமேகலைக்குக் கோமுகிப் பொய்கை பற்றிச் சொல்கிறாள்.

"ஈங்கு இப் பெரும் பெயர்-ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி"

[சுருக்கமான பொருள்: இந்தப் பெயர் பெற்ற பீடிகைக்கு முன் இருப்பது கோமுகி என்ற நீர் வளம் மிகுந்த பொய்கை.]

"இருது இளவேனில் எரி கதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையில்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன்கை அமுத சுரபி எனும்
மா-பெரும் பாத்திரம் ... 
அந்நாள் இந்நாள்; அப்பொழுது இப்பொழுது;
நின்னாங்கு வருவது போலும்"

[இளவேனில் பருவத்தில், வெயில் எரிக்கும் இடப ராசிக் காலத்தில், முதல் 13 மீன்கள் ("நட்சத்திரங்கள்") கழிந்தபின் விசாக நாளில் போதித் தலைவன் பிறந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பாத்திரம் தோன்றும். இன்றுதான் அந்த நாள். அந்தக் குறிப்பிட்ட பொழுது இப்பொழுது. உன்னிடம் அது வரும் போலத் தெரிகிறது.]

இப்படி ... தீவதிலகை கோமுகிப் பொய்கையிலிருந்து அமுதசுரபி வெளிவரும் நாளும் பொழுதும் நெருங்கியதை மணிமேகலைக்குத் தெரிவித்து, அந்தப் பாத்திரத்தின் சிறப்பை அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு சொல்கிறாள்.

மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம் வந்து தொழுது வணங்கித் தன் எண்ணத்தை ஒருமுகப்படுத்தி நிற்கிறாள்.

அப்படித் தொழுத இளம்பெண் மணிமேகலையின் செம்மையான கைகளில் அமுதசுரபி புகுகிறது.

பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் தயங்காமல் மனம் மகிழ்வு எய்தி, புத்த தேவனைப் போற்றத்தொடங்குகிறாள்.

"மாரனை வெல்லும் வீர நின்னடி!
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் நின்னடி!
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின்னடி!
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி!
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின்னடி!
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்னடி!
தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்னடி!
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி!
நரகர் துயர் கெட நடப்போய் நின்னடி!
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி!
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவுக்கு அடங்காது"

[சுருக்கமான பொருள்: மாரனை வென்றவனே, தீய வழிகளைக் கடிந்தவனே, பிறருக்கு அறவழி காட்டுபவனே, துறக்கம் விரும்பாதவனே, எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனே, பிறருக்குக் கண் அளிக்கும் கண் ஆனவனே, தீய மொழிகளை கேட்காதவனே, சிறந்த சொற்களைச் சொல்பவனே, நரகர்களின் துயரத்தைத் துடைப்பவனே, உரகர்களின் ("நாகர்களின்") துன்பம் துடைப்பவனே, உன்னை வணங்குதல் தவிர வாழ்த்துதல் என் நாவிற்கு அப்பாற்பட்டது.]

தீவதிலகை மணிமேகலைக்குப் பசிப்பிணியின் கொடுமையைச் சொல்லி, நாட்டில் மழை வளம் இல்லாமல் விசுவாமித்திரனாகிய அந்தண அரசன்கூட நாயின் புலாலைத் தின்ன நேர்ந்த நிலை வந்ததையும் சொல்லி, உலகில் எப்படிப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.

"ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை;
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"

[சுருக்கமான பொருள்: வலிமை உடைய மக்களுக்கு உணவு கொடுப்பவர் அறத்துக்கு விலை பேசுபவர்கள். இயலாதவர்களின் கொடிய பசியை நீக்குபவர்கள் வாழும் வாழ்க்கையே உண்மையான மெய்ந்நெறி வாழ்க்கை. எனவே ... உலகத்தில் வாழ்பவருக்கு உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களே.]

தீவதிலகையின் கூற்றைக் கேட்ட மணிமேகலை முற்பிறப்பில் தான் இலக்குமியாய் இருந்து கணவன் இராகுலன் இறந்தபோது தான் தீப்புகுந்ததைச் சொல்லி அந்த நேரத்தில் சாதுசக்கரன் என்ற அறவோனுக்கு உணவு ஊட்டியதைக் கனவு போலக் கண்டதன் பயனே இங்கே இன்றைக்கு இப்போது அமுதசுரபி தன் கையில் வந்தது என்று விளக்கம் கொடுக்கிறாள். 

பிறகு அமுதசுரபியை வைத்துத் தான் என்ன செய்ய விரும்புகிறாள் என்றும் சொல்கிறாள்.

"நாவலந்தீவில் பசியினால் வறுமையில் வாடிக் கந்தைத் துணி உடுத்திப் பிறர் வீடுகளில் பிச்சை கேட்டு உண்ணும் நிலையில் மக்கள் இருப்பதனால் அவர்களால் அறவழியில் செல்ல முடியவில்லை; தான் பெற்ற குழந்தை முகத்தைப் பார்த்தவுடன் தாய்க்குப் பால் சுரப்பதைப் போல்... அவர்களின் முகத்தைப் பார்த்தவுடன் இந்தப் பாத்திரத்திலும் உணவு சுரப்பதைக் காண விரும்புகிறேன்." 

அதைக் கேட்ட தீவதிலகைக்கு மகிழ்ச்சி. 

"மறந்தேன் அதன் திறம்; நீ எடுத்து உரைத்தனை
அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை; அதன் பயன் அறிந்தனை
ஈங்கு நின்று எழுவாய்"

[சுருக்கமான பொருள்: இந்தப் பாத்திரத்தின் வரலாற்றை மறந்திருந்தேன். எடுத்துச் சொன்னாய்! அறத்தின் அடிப்படையில், அருளொடு உணவு கொடுக்கும் இயல்பு உடையவர்கள் தவிர மற்றவருக்காக இந்தப் பாத்திரம் சுரக்காது. உனக்கு அந்த நல்ல திறம் இருக்கிறது. இதன் பயனையும் நன்கு அறிந்திருக்கிறாய். இனி, இங்கேயிருந்து எழுந்து செல்வாய்.]

தீவதிலகை விடை கொடுக்கிறாள். மணிமேகலை தீவதிலகையின் அடிகளை வணங்குகிறாள். அமுதசுரபியுடன் மணிபல்லவத்தை விட்டு நீங்கி, வான வழியில் செல்கிறாள்.

காவிரிப் பூம்பட்டினத்தில் ...
--------------------------------
மலர்வனத்துக்கு மகளை அனுப்பிவிட்டு அவளைத் திரும்பக் காணாமல் 7 நாட்களாகத் தவித்துக் கொண்டிருக்கிறாள் தாய் மாதவி.

மாதவி முன் தோன்றுகிறாள் மணிமேகலை.

7 நாட்கள் முன்னால் ... தாய், தந்தையரின் துன்பம் கேட்டுத் துயர்க் கண்ணீர் விட்டதனால் மலர்களின் தூய்மை சிதைந்தது; அதனால்தானே புதிய தூய மலர்கள் பறித்துக் கொண்டுவருவதற்காக அவள் மலர்வனத்துக்கு அனுப்பப்பட்டாள்! அதே மணிமேகலை ... இப்போது தாயைத் தாய் என்று கூடக் குறிக்கவில்லை!

பேச்சின் தொடக்கமே அவர்களின் முற்பிறப்பின் உறவு முறையின் அடிப்படையில் அமைகிறது!

"இரவி வன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
அமுதபதி வயிற்றில் அரிதில் தோன்றி-த்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர்; நும் அடி தொழுதேன்"

[சுருக்கமான பொருள்: இரவிவன்மனின் மகளே! துச்சயனுக்கு மனைவி! அமுதபதிக்கு மக்களாக, தாரை வீரை என்ற பெயரில் எனக்குத் தவ்வையர் ("மூத்தவர்") ஆக இருந்தீர். (இப்போது) எனக்கு நீங்கள் அவ்வையர் ("அம்மையர்"). உங்கள் அடிகளை வனங்குகிறேன்.]

எத்தகைய மாற்றம், ஏழே நாட்களில்!

தொடர்ந்து வாழ்த்துகிறாள் மாதவியையும் சுதமதியையும்.

அறவண அடிகளிடம் போய் அவர்களுடைய பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளும்படிச் சொல்கிறாள்.

அமுதசுரபியைப் பற்றிச் சுருக்கமாக "இது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் மிகச் சிறந்த பாத்திரம். இதை நீங்களும் தொழுங்கள்" என்று அவள் சொல்லியபடியே மாதவியும் சுதமதியும் தொழுகிறார்கள்.

பிறகு மூவரும் அறவண அடிகள் எங்கே இருக்கிறார் என்று தேடிச் செல்கிறார்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



  
 














மணிமேகலை: மணிபல்லவத்தில் மணிமேகலை -- பகுதி 3
------------------------------------------- 

காவிரிப்பூம்பட்டினத்தில் மலர் பறிப்பதற்காக மலர்வனம் போன மணிமேகலையை மணிமேகலாதெய்வம் எடுத்து வந்து மணிபல்லவத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டது!

இந்தப் பகுதியில் மணிமேகலை மணிபல்லவத்தீவில் என்ன செய்கிறாள், எப்படி அமுதசுரபி அவள் கைக்கு வந்தது என்று பார்ப்போம்.

**************************** 
மணிமேகலாதெய்வம் என்ன செய்தாள்?
---------------------------- 

மணிமேகலையை மணிபல்லவத்தில் வைத்துவிட்டு மணிமேகலாதெய்வம் நேரே உதயகுமரனிடம் போகிறாள். 

உதயகுமரனுக்கோ ... மணிமேகலை நினைப்பு! மணிமேகலையை மலர்வனத்தில் பார்த்துவிட்டு அவளை அடைய முடியாததால் உறக்கம் வராமல் மிகவும் வருந்திக்கொண்டிருக்கிறான்.

மணிமேகலாதெய்வம் உதயகுமரனுக்கு அறிவுரை சொல்கிறாள்:

"கோன் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்-ஆள்-வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும்"

[சுருக்கமான பொருள்: மன்னன் தன் நிலையில் மாறுபட்டால் கோள்கள் ("கிரகங்கள்") தங்கள் நிலையில் மாறுபடும். கோள்கள் தங்கள் நிலையில் மாறுபட்டால் நாட்டில் மழையில்லாமல் வறட்சி உண்டாகும். வறட்சி உண்டானால் உலகத்தில் உயிர்கள் வாழமுடியாது. உலக உயிர்கள் எல்லாம் மன்னனின் உயிர் என்ற தகுதி இல்லாமல் போகும்.]

"தவ-த்-திறம் பூண்டோள்-தன்-மேல் வைத்த
அவ-த்-திறம் ஒழிக ..."

[சுருக்கமான பொருள்: தவ வழியில் போகிற மணிமேகலையின்மேல் வைத்த கீழான எண்ணத்தை விட்டுவிடு.]

இப்படி உதயகுமரனிடம் சொல்லிவிட்டு மலர்வனத்திற்குப் போகிறாள் மணிமேகலாதெய்வம். சுதமதிக்கோ இன்னும் உறக்கம். மணிமேகலாதெய்வம் சுதமதியை எழுப்பித் தான் யார் என்பதைத் தெரிவித்துவிட்டுப் ... பிறகு நடந்ததைச் சொல்கிறாள். 

மணிமேகலைக்குத் தவ வழியில் போகும் நல்ல நேரம் வந்தது; அதனால் அவளை எடுத்துக்கொண்டுபோய் மணிபல்லவத் தீவில் வைத்ததாகச் சொல்லுகிறாள். மணிமேகலை தன் முற்பிறப்பை அறிந்துகொண்டு இன்னும் ஏழு நாட்களில் திரும்பி வருவாள் என்கிறாள். மணிமேகலை வேறு வடிவங்களில் வந்தாலும் உன் கண்ணுக்குப் புலப்படுவாள் என்று உறுதி சொல்கிறாள். மாதவியிடம் போய்த் தான் (மணிமேகலாதெய்வம்) வந்ததையும்  மணிமேகலை நற்கதி செல்லும் காலம் அமைந்ததையும் தெரிவிக்கச் சொல்கிறாள். பிறகு "அந்தரத்தில் எழுந்து" போய்விடுகிறாள்.

இதையெல்லாம் கேட்ட சுதமதிக்கு மணிமேகலையைப் பிரிந்த வருத்தம். மாதவர் பள்ளிக்குத் திரும்பிப் போவதற்கு மணிமேகலாதெய்வம் குறித்த வழியிலேயே போகிறாள். வழியில் சக்கரவாளக் கோட்டத்தை அடைகிறாள். 

சுதமதி தன் முற்பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
---------------------------------------
சக்கரவாளக் கோட்டத்தில் பலரும் புகும்படியாகத் திறந்த வாயிலை உடைய பொது மன்றம் ஒன்று இருக்கிறது. அங்கே தூணில் இருந்த ஒரு பாவை மூலம் சுதமதி தன் முற்பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்கிறாள்.

முற்பிறப்பில் இரவிவன்மன் என்றவனுக்கு மூன்று பெண்கள்: தாரை, வீரை, இலக்குமி. அவர்கள் இந்தப் பிறவியில் மாதவியாகவும் சுதமதியாகவும் மணிமேகலையாகவும் பிறக்கிறார்கள். தாரை == மாதவி; வீரை == சுதமதி; இலக்குமி == மணிமேகலை.

இந்த முற்பிறவிச் செய்தியைத் தெரிந்துகொண்ட சுதமதிக்குத் திகைப்பு! மாதவர் [பௌத்த] பள்ளி நோக்கிப் போகிறாள்.

இதற்கு முந்திய நாளில்தான் தூய மலர் பறித்துக் கொண்டுவருவதற்காக மகள் மணிமேகலையை மலர்வனத்துக்கு அனுப்பியிருந்தாள் தாய் மாதவி. அந்த மகள் இன்னும் திரும்பி வரவில்லை. தாய்க்குத் துடிப்பு. 

மாதவியிடம் தனியாகப் போய்ச் சேர்ந்த சுதமதி சொன்ன தகவலோ மாதவிக்கு இன்னும் கலக்கம் தந்தது. மாணிக்கத்தை இழந்த நாகம் போல வருந்துகிறாள். மணிமேகலை திரும்பிவருவதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்திலேயே காத்திருக்கிறாள்.

மணிமேகலை ... மணிபல்லவத்தீவில்
---------------------------
மணிபல்லவத்தில் இருள் நீங்குகிறது. காலை மலர்கிறது. கடல் புறம், மணல் பரப்பு. மணிமேகலைக்குத் தூக்கம் கலைகிறது. புதிய இடம். தெரிந்தவர் யாரும் தென்படவில்லை. ஒரே கலக்கம். தவிக்கிறாள்.

"சுதமதி ஒளித்தாய்; துயரம் செய்தனை
நனவோ கனவோ என்பதை அறியேன்
மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் 
மெல்வளை வாராய்; விட்டு அகன்றனையோ"

[சுருக்கமான பொருள்: சுதமதி! ஒளிந்துகொண்டிருக்கிறாயே. இது என் கனவா? நனவா? தெரியவில்லையே. மனது நடுங்குகிறது. ஏதாவது பதில் சொல்லு. இருட்டு நீங்கிவிட்டது. மாதவி குழம்பிப்போவாள். மென்மையான வளையணிந்தவளே, வா. என்னை விட்டுப் போனாயோ?]

"விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்;
ஒரு தனி அஞ்சுவேன்; திருவே வா!"

[சுருக்கமான பொருள்: வித்தையினால் நமக்கு முன்னால் வந்த அந்தப் பெண் ("மணிமேகலாதெய்வம்") ஏதாவது வஞ்சனை செய்துவிட்டாளா? தெரியவில்லையே. தனியே இருக்க அஞ்சுகிறேன். திருவே, வா!]

மணிமேகலைக்கு என்ன தவிப்பு, பாவம்! மலர்வனத்துக்கு மலர் கொய்யப் போனவளுக்கு இப்படி ஒரு திருப்பமா?

மணிபல்லவத்தில் எல்லா இடங்களிலும் சுற்றி அலைகிறாள்; அவளுக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை; அலைந்த அலைச்சலில் ... கட்டி முடித்திருந்த கூந்தல் குலைந்து பின்புறம் தாழுகிறது. அரற்றுகிறாள், கூவி அழுகிறாள்; ஏங்குகிறாள். கண்ணகியுடன் வேற்று நாடு போய்க் கொலைப்பட்ட தந்தை கோவலனை நினைத்து "ஐயாவோ" என்று கதறுகிறாள்.

அப்போது ... அவள் முன்னால் நிகழ்கிறது ஓர் அற்புதம்!

நிலத்திலிருந்து மூன்று முழ உயரத்தில் தோன்றுகிறது தரும பீடிகை! 

அந்தத் தரும பீடிகை தரமான பளிங்கினால் செய்யப்பட்டது. "பதும சதுரத்தின்" மேல் அறவோனுக்காக ["புத்த தேவனுக்காக"] அமைந்த ஆசனம். அதன் மேல் நல்ல நறுமணம் உடைய மலர்கள் மட்டுமே விழும். அதன் பக்கத்தில் பறவைகள் சென்று சிறகுகளை அடித்து ஒலி செய்யமாட்டா. அது தேவர்கோன் அங்கே வைத்த மணிப்பீடிகை; அதைப் பார்ப்பவர்களுடைய பிறப்பைப் பற்றித் தெரிவிக்கும். கீழ்த் திசையில் நாகநாட்டு மன்னர்கள் இரண்டுபேர் அது தன்னது என்று எடுத்துக்கொள்ளப் பார்த்துத் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள். அப்போது "பெருந்தவ முனிவன்" ["புத்த தேவன்"] தோன்றி, சண்டை போட வேண்டாம்; "இது எமது" என்று சொல்லி அதில் இருந்து அறம் உரைத்தான். அப்படிப் பட்ட பெருமை உடையது அந்தத் தரும பீடிகை.

அந்தத் தரும பீடிகை இப்போது மணிமேகலை முன் தோன்றுகிறது.

தரும பீடிகையைப் பார்த்ததும் மணிமேகலை தன்னையறியாமல் போகிறாள்; தாமாகவே அவள் கைகள் தலைமேல் குவிகின்றன. கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. இடமிருந்து வலமாக மூன்று முறை அந்தப் பீடிகையை வலம் வருகிறாள். நிலத்தில் விழுந்து வணங்கி எழுகிறாள்.

அப்படி எழுகிறவளுக்கு அவளுடைய பழைய பிறப்புப் பற்றித் தெரிகிறது.

பழைய பிறவியில் ... இலக்குமி
------------------------
காந்தார நாட்டில் பூருவ தேசத்தில் அத்திபதி என்னும் அரசனுக்கு இடவயம் என்பது தலைநகரம். அந்த அரசனுக்கு மைத்துனன் பிரமதருமன். பிரமதருமன் அரசனுக்குத் தரும உபதேசம் செய்யும்போது "இந்த நாவலந்தீவில் இன்றைக்கு ஏழாம் நாளில் நிலநடுக்கம் உண்டாகும். அப்போது இந்த நகரமும் நாக நாட்டில் 400 யோசனைப் பரப்பும் பாதலத்தில் வீழ்ந்து கெடும். ஆதலால் நீ இந்த நகரத்தை விட்டு வேறு இடத்துக்குப் போ" என்று சொல்கிறார். அரசனும் அந்த நகரத்தாரும் வடக்கே உள்ள அவந்தி என்ற ஊருக்குப் புறப்படுகிறார்கள். வழியில் காயங்கரை என்ற நதிக்கரையை அவர்கள் அடைந்த போது நில நடுக்கம் ஏற்பட்டு இடவயம் என்ற நகரம் அழிந்தது. அதைத் தெரிந்து கொண்ட அரசனும் அவன் மக்களும் பிரமதருமனைச் சரண் அடைந்து நின்றார்கள். 

அசோதர நகரத்து அரசனாகிய இரவிவன்மன் என்பவனுடைய தேவி அமுதபதி என்பவளுக்கு இலக்குமி பிறக்கிறாள். அத்திபதி அரசனுக்கு நீலபதி என்பவளிடம் பிறந்த இராகுலனை இலக்குமி மணந்துகொள்கிறாள். கணவனோடு பிரமதருமனிடம் வந்து தருமம் கேட்கிறாள். பிரமதருமன் சொல்கிறார்: "இராகுலன் இன்றைக்கு 16-ஆம் நாள் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்டி இறப்பான். அவனுடன் நீயும் தீயில் புகுந்து உயிர் விடுவாய். பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் பிறப்பாய். அங்கே உனக்கு ஒரு துன்பம் வரும். அப்போது மணிமேகலா தெய்வம் உன்னை எடுத்துத் தென் பக்கம் இருக்கும் ஒரு தீவில் வைப்பாள். அங்கே இருக்கும் புத்த பீடிகையைத் தரிசித்துத் தொழுது முற்பிறப்பைப் பற்றி அறிந்துகொள்வாய்."

இராகுலன் யாராகப் பிறப்பான் என்று இலக்குமி  கேட்கிறாள். "உன்னை மணிபல்லவத்தில் விட்டுச் செல்லும் தெய்வமே மீண்டும் வந்து உனக்கு அந்த உண்மையைப் புலப்படுத்தும்" என்று பிரமதருமன் சொல்கிறார்.

இந்தப் பிறவியில் -- மணிமேகலை
--------------------------
இப்படி... புத்த பீடிகை முன் நின்று தன் பழம் பிறப்புப் பற்றித் தெரிந்துகொண்டு அதைச் சொல்லி அழுகிறாள் மணிமேகலை. "அந்தத் தெய்வம் ["மணிமேகலா தெய்வம்"] இப்போது வாராதோ" என்று புலம்புகிறாள்.  

மணிமேகலா தெய்வமும் "இவள் பழைய பிறப்பு உணர்ந்துவிட்டாள்" என்று வானிலிருந்து ஒரு பூங்கொடி நிலத்திற்கு வந்தது போலத் திரும்பி வருகிறாள்.

புத்தபீடிகையை வலம்வந்து தொழுகிறாள். அவள் முன்னர் மணிமேகலை நிலத்தில் விழுகிறாள். "என் பெரும் கணவன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்கிறாள். 

"இலக்குமி கேள்!" என்று தொடங்கிய மணிமேகலா தெய்வம் இன்னும் சில பழம்பிறப்புச் செய்திகளை அவளுக்குச் சொல்லி "உதயகுமரன் உன் இராகுலன்" என்று தெரிவிக்கிறாள்.

"ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்கும் உண்டு"

[சுருக்கமான பொருள்: அவனுக்கு உன்மேல் ஈடுபாடு உண்டு. உனக்கும் அவன்மேல் ஈடுபாடு உண்டு.]

அது ...

"கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெண் களர் வீழ்வது போன்ம் என"

[சுருக்கமான பொருள்: அது கந்தசாலி என்ற நெல்லின் மிகச் சிறந்த விதை ஒன்று வேகும் வெண்மைக் களர் நிலத்தில் விழுந்தது போல் ஆகிவிடும்.]

ஆனால் நீயோ "அறத்தின் வித்து." உன்மனம் ஒரு நல்ல வழியில் செல்வதற்கு ஏதுவாகச் செய்தேன்.

இது சொல்லிய மணிமேகலா தெய்வம் மேலும் "இலக்குமி கேள். தாரையும் வீரையும் உனக்குத் தவ்வையர் ["மூத்தவர்"]. இருவரும் கச்சய மன்னன் துச்சயனுக்கு மனைவியர். மனவியருடன் துச்சயன் மலைவளம் கண்டு பின் கங்கையாற்றங்கரையில் இருந்தபோது அறவண அடிகள் அங்கே போனார். அவரைப் பார்த்ததும் துச்சயன் வணங்கி அவரை யார் என்ற விவரம் கேட்டான். "ஆதி முதல்வனும் அறவாழி ஆள்வோனும் ஆகிய புத்த தேவனின் பாதத் தாமரை இருக்கும் பாதபங்கய மலையைக் கண்டு தொழுது வலம் கொள்ள வந்தேன். நீங்களும் தொழுங்கள்" என்று அறவண அடிகள் சொன்னார். அவர் சொல்லியபடியே துச்சயனும் அவன் மனைவியரும் செய்தார்கள். அப்படித் தொழுததின் பயனே அந்தப் பெண்கள் (தாரையும் வீரையும்) பிறகு மாதவியாகவும் சுதமதியாகவும் பிறந்தார்கள்" என்று விளக்குகிறாள்.

தொடர்ந்து ... மணிமேகலைக்கு இனி வரப்போகும் நிகழ்ச்சிகளை மணிமேகலா தெய்வம் கூறுகிறாள். 

"நீ உன் பிறப்பை உணர்ந்தாய். இனி, பல வேறு சமயங்களின் பொய்க் கூற்றுக்களைக் கேட்பாய். அப்போது இவள் இளையவள்; வளையோள் என்று உனக்கு யாரும் தம் சமயங்களின் பொருள்களை விளக்கிச் சொல்லமாட்டார்கள். [அதனால்] இந்த மந்திரங்களைப் பெற்றுக் கொள்" என்று சொல்லி மாற்று வடிவம் கொள்ளவும், அந்தரத்தில் திரியவும், கடும் பசியை நீக்கவும் ஆகும் 3 மந்திரங்களைக் கொடுக்கிறாள்.

பிறகு அந்தரத்தில் எழுந்து போய்விடுகிறாள்.

மணிமேகலா தெய்வம் போனபின் மணிமேகலை மணிபல்லவத்தில் 
----------------------------------------------
"வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
தண் மலர்ப் பொய்கையும்" இறங்கிப் பார்க்கிறாள் மணிமேகலை. 

இப்படி ஒரு காவதம் திரிகிறாள்.

அப்போது...

தீவதிலகை தோன்றுகிறாள். மணிமேகலையை "யார்" என்று கேட்கிறாள். 

மணிமேகலையோ ...

"எப் பிறப்பு அகத்துள் யார் நீ என்றது?
... 
போய பிறவியில் பூமியங்கிழவன்
இராகுலன் மனை யான்; இலக்குமி என் பேர்" 

[சுருக்கமான பொருள்: எந்தப் பிறப்பில் நான் யார் என்று கேட்கிறாய்? போன பிறவியில் பூமி ஆளும் உரிமை பெற்ற இராகுலனுக்கு மனைவி; இலக்குமி என்பது என் பெயர்.]

"ஆய பிறவியில் ஆடல்-அம்-கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான்"

[சுருக்கமான பொருள்: இப்போது ஆகிய பிறவியில், ஆடல் கணிகை மாதவி பெற்ற மகள் மணிமேகலை.]

... என்று சொல்கிறாள்.

பிறகு மணிமேகலா தெய்வம் தன்னை அங்கே கொண்டுவந்தது பற்றிச் சொல்லி, "நீ யார்?" என்று கேட்கிறாள்.

தீவதிலகை தான் அந்தத் தீவுக்கு வந்த வகையைத் தெரிவிக்கிறாள். அங்கே புத்த பீடிகையைக் காவல் செய்வதையும் சொல்லிப் புத்த பீடிகையின் சிறப்பை விவரிக்கிறாள்.

"ஈங்கு இதன் அயலது இரத்தின தீவத்து 
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங்கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குளது ஆதலின்
தொழுது வலம்கொண்டு வந்தேன்"

[சுருக்கமான பொருள்: இந்தத் தீவுக்கு அருகில் உள்ளது இரத்தின தீவம். அங்கே சமந்த மலையின் மேல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் புத்தனது பாதங்கள் உண்டு. அப் பாதங்களைத் தொழுது வலம் செய்து விட்டு இங்கே வந்தேன்.]

" ... ஈங்குப்
பழுது-இல்-காட்சி இந் நல் மணிப் பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர்"

[சுருக்கமான பொருள்: இங்கே குற்றமற்ற காட்சி தரும் இந்த நல்ல மணிப்பீடிகையைக் காவல் காக்கும்படித் தேவர்களின் தலைவன் எனக்குக் கட்டளை இட்டான். அது போல இதைக் காவல் செய்கிறேன். என் பெயர் தீவதிலகை.]

"தரும தலைவன் தலைமையின் உரைத்த 
பெருமை சால் நல்லறம் பிறழா நோன்பினர்
கண்டு கை தொழுவோர் கண்டதன் பின்னர்-ப்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; பைந்தொடி
அரியர் உலகத்து; ஆங்கு அவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலையாக"

[சுருக்கமான பொருள்: தரும தலைவன் சொன்ன பெருமை நிறைந்த நல்ல அறத்திலிருந்து தவறாத நோன்பு மேற்கொண்டவர்களே இந்தப் பீடிகையைக் கண்டுகொண்டு கைதொழுது வணங்குவார்கள். அவர்கள் தங்கள் பழம் பிறப்பை உணர்வார்கள். அவர்களைப் போன்றவர்கள் உலகத்தில் அரிதாகவே உள்ளார்கள். அப்படிப் பட்டவர்களுக்கே இந்த உலகத்தில் உறுதியாக அறமொழி உரியது.]

இப்படி ... புத்த பீடிகையின் சிறப்பையும் தான் அந்தப் பீடிகையைக் காவல் செய்து வருவதையும் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துச் சொல்கிறாள். 

"ஆங்கனம் ஆகிய அணியிழை, இது கேள்"

[சுருக்கமான பொருள்: அப்படி அரியவளாக அமைந்தவளே, இதைக் கேள்.]

தொடர்ந்து ... கோமுகிப் பொய்கை பற்றியும் அதில் மணிமேகலைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அமுதசுரபி பற்றியும் சொல்கிறாள்.

மணிமேகலை கையில் அமுதசுரபி ...
--------------------------
தீவதிலகை மணிமேகலைக்குக் கோமுகிப் பொய்கை பற்றிச் சொல்கிறாள்.

"ஈங்கு இப் பெரும் பெயர்-ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி"

[சுருக்கமான பொருள்: இந்தப் பெயர் பெற்ற பீடிகைக்கு முன் இருப்பது கோமுகி என்ற நீர் வளம் மிகுந்த பொய்கை.]

"இருது இளவேனில் எரி கதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையில்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன்கை அமுத சுரபி எனும்
மா-பெரும் பாத்திரம் ... 
அந்நாள் இந்நாள்; அப்பொழுது இப்பொழுது;
நின்னாங்கு வருவது போலும்"

[இளவேனில் பருவத்தில், வெயில் எரிக்கும் இடப ராசிக் காலத்தில், முதல் 13 மீன்கள் ("நட்சத்திரங்கள்") கழிந்தபின் விசாக நாளில் போதித் தலைவன் பிறந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பாத்திரம் தோன்றும். இன்றுதான் அந்த நாள். அந்தக் குறிப்பிட்ட பொழுது இப்பொழுது. உன்னிடம் அது வரும் போலத் தெரிகிறது.]

இப்படி ... தீவதிலகை கோமுகிப் பொய்கையிலிருந்து அமுதசுரபி வெளிவரும் நாளும் பொழுதும் நெருங்கியதை மணிமேகலைக்குத் தெரிவித்து, அந்தப் பாத்திரத்தின் சிறப்பை அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு சொல்கிறாள்.

மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம் வந்து தொழுது வணங்கி எண்ணத்தை ஒருமுகப்படுத்தி நிற்கிறாள்.

அப்படித் தொழுத இளம்பெண் மணிமேகலையின் செம்மையான கைகளில் அமுதசுரபி புகுகிறது.

பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் தயங்காமல் மனம் மகிழ்வு எய்தி, புத்த தேவனைப் போற்றத்தொடங்குகிறாள்.

"மாரனை வெல்லும் வீர நின்னடி!
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் நின்னடி!
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின்னடி!
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி!
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின்னடி!
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்னடி!
தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்னடி!
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி!
நரகர் துயர் கெட நடப்போய் நின்னடி!
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி!
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவுக்கு அடங்காது"

[சுருக்கமான பொருள்: மாரனை வென்றவனே, தீய வழிகளைக் கடிந்தவனே, பிறருக்கு அறவழி காட்டுபவனே, துறக்கம் விரும்பாதவனே, எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனே, பிறருக்குக் கண் அளிக்கும் கண் ஆனவனே, தீய மொழிகளை கேட்காதவனே, சிறந்த சொற்களைச் சொல்பவனே, நரகர்களின் துயரத்தைத் துடைப்பவனே, உரகர்களின் ("நாகர்களின்") துன்பம் துடைப்பவனே, உன்னை வணங்குதல் தவிர வாழ்த்துதல் என் நாவிற்கு அப்பாற்பட்டது.]

தீவதிலகை மணிமேகலைக்குப் பசிப்பிணியின் கொடுமையைச் சொல்லி, நாட்டில் மழை வளம் இல்லாமல் விசுவாமித்திரனாகிய அந்தண அரசன்கூட நாயின் புலாலைத் தின்ன நேர்ந்த நிலை வந்ததையும் சொல்லி, உலகில் யாருக்கு உணவு அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.

"ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை;
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"

[சுருக்கமான பொருள்: வலிமை உடைய மக்களுக்கு உணவு கொடுப்பவர் அறத்துக்கு விலை பேசுபவர்கள். இயலாதவர்களின் கொடிய பசியை நீக்குபவர்கள் வாழும் வாழ்க்கையே உண்மையான மெய்ந்நெறி வாழ்க்கை. எனவே ... உலகத்தில் வாழ்பவருக்கு உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களே.]

தீவதிலகையின் கூற்றைக் கேட்ட மணிமேகலை தான் தன் முற்பிறப்பில் இலக்குமியாய் இருந்து கணவன் இராகுலன் இறந்தபோது தான் தீப்புகுந்ததைச் சொல்லி அந்த நேரத்தில் சாதுசக்கரன் என்ற அறவோனுக்கு உணவு ஊட்டியதைக் கனவு போலக் கண்டதன் பயனே இங்கே இன்றைக்கு இப்போது அமுதசுரபி தன் கையில் வந்தது என்று விளக்கம் கொடுக்கிறாள். 

பிறகு அமுதசுரபியை வைத்துத் தான் என்ன செய்ய விரும்புகிறாள் என்றும் சொல்கிறாள்.

"நாவலந்தீவில் பசியினால் வறுமையில் வாடிக் கந்தைத் துணி உடுத்திப் பிறர் வீடுகளில் பிச்சை கேட்டு உண்ணும் நிலையில் மக்கள் இருப்பதனால் அவர்களால் அறவழியில் செல்ல முடியவில்லை; தான் பெற்ற குழந்தை முகத்தைப் பார்த்தவுடன் தாய்க்குப் பால் சுரப்பதைப் போல்... அவர்களின் முகத்தைப் பார்த்தவுடன் இந்தப் பாத்திரத்திலும் உணவு சுரப்பதைக் காண விரும்புகிறேன்." 

அதைக் கேட்ட தீவதிலகைக்கு மகிழ்ச்சி. 

"மறந்தேன் அதன் திறம்; நீ எடுத்து உரைத்தனை
அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை; அதன் பயன் அறிந்தனை
ஈங்கு நின்று எழுவாய்"

[சுருக்கமான பொருள்: இந்தப் பாத்திரத்தின் வரலாற்றை மறந்திருந்தேன். எடுத்துச் சொன்னாய்! அறத்தின் அடிப்படையில், அருளொடு உணவு கொடுக்கும் இயல்பு உடையவர்கள் தவிர மற்றவருக்காக இந்தப் பாத்திரம் சுரக்காது. உனக்கு அந்த நல்ல திறம் இருக்கிறது. இதன் பயனையும் நன்கு அறிந்திருக்கிறாய். இனி, இங்கேயிருந்து எழுந்து செல்வாய்.]

தீவதிலகை விடை கொடுக்கிறாள். மணிமேகலை தீவதிலகையின் அடிகளை வணங்குகிறாள். அமுதசுரபியுடன் மணிபல்லவத்தை விட்டு நீங்கி, வான வழியில் செல்கிறாள்.

காவிரிப் பூம்பட்டினத்தில் ...
--------------------- 
மலர்வனத்துக்கு மகளை அனுப்பிவிட்டு அவளைத் திரும்பக் காணாமல் 7 நாட்களாகத் தவித்துக் கொண்டிருக்கிறாள் மாதவி.

மாதவி முன் தோன்றுகிறாள் மணிமேகலை.

7 நாட்கள் முன்னால் ... தாய், தந்தையரின் துன்பம் கேட்டுத் துயர்க் கண்ணீர் விட்டதனால் மலர்களின் தூய்மை சிதைந்து; அதனால்தானே புதிய தூய மலர்கள் பறித்துக் கொண்டுவருவதற்காக அவள் மலர்வனத்துக்கு அனுப்பப்பட்டாள்! அதே மணிமேகலை ... இப்போது தாயைத் தாய் என்று கூடக் குறிக்கவில்லை!

பேச்சின் தொடக்கமே அவர்களின் முற்பிறப்பின் உறவு முறையின் அடிப்படையில் அமைகிறது!

"இரவி வன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
அமுதபதி வயிற்றில் அரிதில் தோன்றி-த்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர்; நும் அடி தொழுதேன்"

[சுருக்கமான பொருள்: இரவிவன்மனின் மகளே! துச்சயனுக்கு மனைவி! அமுதபதிக்கு மக்களாக, தாரை வீரை என்ற பெயரில் எனக்குத் தவ்வையர் ஆக இருந்தீர். (இப்போது) எனக்கு நீங்கள் அவ்வையர். உங்கள் அடிகளை வனங்குகிறேன்.]

எத்தகைய மாற்றம், ஏழே நாட்களில்!

தொடர்ந்து வாழ்த்துகிறாள் மாதவியையும் சுதமதியையும்.

அறவண அடிகளிடம் போய் அவர்களுடைய பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளும்படிச் சொல்கிறாள்.

அமுதசுரபியைப் பற்றிச் சுருக்கமாக "இது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் மிகச் சிறந்த பாத்திரம். இதை நீங்களும் தொழுங்கள்" என்று அவள் சொல்லியபடியே மாதவியும் சுதமதியும் தொழுகிறார்கள்.

பிறகு மூவரும் அறவண அடிகள் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கொண்டு செல்கிறார்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
ராஜம்


  
 














Dhivakar

unread,
Dec 10, 2010, 1:39:55 AM12/10/10
to mint...@googlegroups.com
உண்டு கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே - கதை எத்தனை முறை படித்திருந்தாலும் நீங்கள் எழுதுவதைப் படிக்கும் நன்றாக உரைக்கின்றது. நன்றி.

ஆசிரியைக்கு ஒரு கேள்வி..

>>"இருது இளவேனில் எரி கதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையில்<<

விசாக நாள் இப்படி வரும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். விசாகை என்றால் என்ன பொருளில் வரும் என்று சொல்லமுடியுமா.. விசாகதத்தா என்றொரு பெண்பிட்சு பெயர் கூட உள்ளது.

தருமபீடிகை பற்றியும் ஒரு சிறு கேள்வி. இந்த பீடிகை என்ற சொல்லுக்கு என்ன பொருள். தற்காலத்தில் வேறு விதமாக பொருள் கொள்கிறார்கள் அல்லவா..

வணக்கத்துடன்
திவாகர்


2010/12/10 rajam <ra...@earthlink.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Nagarajan Vadivel

unread,
Dec 10, 2010, 1:46:17 AM12/10/10
to mint...@googlegroups.com
அன்புடை ராஜம் அம்மா
நீங்கள் குறிப்பிட்ட கதைச் சாரத்தில் புத்த காதையின் கருத்துக்கு ஒத்த கருத்துக்கள்

எத்தகைய மாற்றம், ஏழே நாட்களில்!
புத்தர் ஞானம் பெற்றதும் ஏழு நாட்கள் ஏழு நாட்கள் என்று ஏழுமுறை.  ஐந்தாம் முறையே அவர் காம-மாரனை வென்றது

"மாரனை வெல்லும் வீர நின்னடி!
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் நின்னடி!
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின்னடி!
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி!
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின்னடி!
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்னடி!
தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்னடி!
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி!
நரகர் துயர் கெட நடப்போய் நின்னடி!
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி!
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவுக்கு அடங்காது"
மாரனை வெல்லும் வீர நின்னடி
ஏழு நாட்கள் ஏழு நாட்கள் என்று ஏழுமுறை.  ஐந்தாம் முறையே அவர் காம-மாரனை வென்றது

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி
இதன் பொருள் என்ன?

பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் புத்தனது பாதங்கள் உண்டு. அப் பாதங்களைத் தொழுது வலம் செய்து விட்டு இங்கே வந்தேன்
காம-மாரப் போர் பற்றிய அமராவதிச் சிற்பம் அவ்ர் இருக்கையில் இல்லை என்பதைக் காட்டும்.  புத்தனது பாதங்கள் மட்டுமே வணக்கத்துக்குரியதாக இருந்தது.  புத்தனது பாதங்கள் புத்தம் பரவிய பல நாடுகளில் உண்டு.  புத்தர் உருவம் என்பதும் அவர் தவ வடிவில் அமர்ந்திருப்பதாகவும் நின்றிருப்பதாகவும் (நான் மனிலாவில் நினைவுக்காக சிரிக்கும் புத்தரை வாங்கியுள்ளேன்) ஆசனமிட்டு அமர்ந்திருப்பதாகவும் காட்டும் குறிப்பு ஏதேனும் மணிமேகலையில் உள்ளதா
நாகராசன்

2010/12/10 rajam <ra...@earthlink.net>

coral shree

unread,
Dec 10, 2010, 2:24:02 AM12/10/10
to mint...@googlegroups.com
அருமை அம்மா....ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.......எளிமையாக நன்கு புரியும்படி அளித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் அம்மா.

2010/12/10 rajam <ra...@earthlink.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

Narayanan Kannan

unread,
Dec 10, 2010, 4:20:48 AM12/10/10
to rajam, மின்தமிழ், Subashini Tremmel, kalairajan krishnan
அப்பாடா!

என்ன கதை! எப்படி அழகாகச் சொல்கிறீர்கள். என் அக்கா உங்களிடம் பாடம்
கேட்கவில்லையே என்று அன்று வருந்தி உரைத்தாள். நான் இன்று தன்யன் ஆனேன்.
வாழ்வின் பெரும் பேரு இது! நன்றி, நன்றி. எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?
உங்கள் அன்பிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இக்கதையின் வருணனையிலிருந்து மணிபல்லவம் சாவகத்தீவிற்கு அருகில் இருக்க
வேண்டுமென்று தோன்றுகிறது. சுமத்திரா என்றழைக்கப்படும் தீவு இவர்கள்
பேசும் ‘இரத்தினத்தீவாக’ இருக்குமோ? பொராபடூர் புத்த கோவில் எப்போது
உருவானது?

மணிப்பீடிகை வருணனை போல் இங்கு ஒன்று உள்ளது. படம் அனுப்புகிறேன்.

அற்புதமான கதை. புத்தன் மெல்ல, மெல்ல மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு
வந்துவிட்ட காலமென்று தோன்றுகிறது. நம்மவர் தேவபுத்திரன் என்றெல்லாம்
சுத்தி வளைப்பதில்லை, நேரடியாக அவதாரம் என்று கொண்டு விடுகின்றனர்.
அதுவும் வசதியே!

க.>

devoo

unread,
Dec 10, 2010, 4:54:37 AM12/10/10
to மின்தமிழ்
>> தருமபீடிகை பற்றியும் ஒரு சிறு கேள்வி. இந்த பீடிகை என்ற சொல்லுக்கு என்ன பொருள். தற்காலத்தில் வேறு விதமாக பொருள் கொள்கிறார்கள் அல்லவா.. <<


பெருந்தவ முனிவன் இருந்தற முரைக்கும்
பொருவறு சிறப்பிற் புரையோ ரேத்தும்
*தரும பீடிகை* தோன்றிய தாங்கென

மாமணிப் பீடிகை, அறத்தகையாசனம் -> தரும பீடிகை

பீடம் -> பீடிகை -> இருக்கை (எ கா) தீபம் -> தீபிகை

பூர்வ பீடிகை -> முன்னுரை மாதிரியான பேச்சு (தற்கால வழக்கு)

பணிவுடன்
தேவ்


On Dec 10, 12:39 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> உண்டு கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே - கதை எத்தனை முறை படித்திருந்தாலும்
> நீங்கள் எழுதுவதைப் படிக்கும் நன்றாக உரைக்கின்றது. நன்றி.
>
> ஆசிரியைக்கு ஒரு கேள்வி..>>"இருது இளவேனில் எரி கதிர் இடபத்து
>
> ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
> மீனத்து இடைநிலை மீனத்து அகவையில்<<
>
> விசாக நாள் இப்படி வரும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். விசாகை என்றால் என்ன
> பொருளில் வரும் என்று சொல்லமுடியுமா.. விசாகதத்தா என்றொரு பெண்பிட்சு பெயர் கூட
> உள்ளது.
>
> தருமபீடிகை பற்றியும் ஒரு சிறு கேள்வி. இந்த பீடிகை என்ற சொல்லுக்கு என்ன
> பொருள். தற்காலத்தில் வேறு விதமாக பொருள் கொள்கிறார்கள் அல்லவா..
>
> வணக்கத்துடன்
> திவாகர்
>
> 2010/12/10 rajam <ra...@earthlink.net>
>
> >     போன பகுதியில் மணிமேகலை எப்படி மணிபல்லவத்தீவுக்கு வந்தாள் என்றும்
> > கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரன் கையிலிருந்து இடப்பட்ட அமுதசுரபி
> > மணிமேகலைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பது பற்றியும் பார்த்தோம்.

> > *இந்தப் பகுதியில் அமுதசுரபி  எப்படி மணிமேகலை கைக்கு வருகிறது என்று
> > பார்ப்போம்.*
> > இது கொஞ்சம் "*அடர்த்தியான* *பகுதி*."* பல கதை மாந்தர்களும் பல இடங்களும் பல


> > நிகழ்ச்சிகளும் கலந்தது. மணிமேகலையின் மன மாற்றத்தின் முதல் படியைக்

> > காட்டுகிறது.*


>
> > கூடியவரை எளிமைப்படுத்திச் சொல்லப் பார்த்திருக்கிறேன்.
> > +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
> > மணிமேகலை: மணிபல்லவத்தில் மணிமேகலை -- பகுதி 3
> > -----------------------------------------------------------------
>
> > காவிரிப்பூம்பட்டினத்தில் மலர் பறிப்பதற்காக மலர்வனம் போன மணிமேகலையை
> > மணிமேகலாதெய்வம் எடுத்து வந்து மணிபல்லவத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டது!
>

> > *இந்தப் பகுதியில் மணிமேகலை மணிபல்லவத்தீவில் என்ன செய்கிறாள்,
> > அமுதசுரபி எப்படி அவள் கைக்கு வருகிறது என்று பார்ப்போம்*.

> ...
>
> read more »

Innamburan Innamburan

unread,
Dec 10, 2010, 8:11:56 AM12/10/10
to mint...@googlegroups.com
திரும்பி, திரும்பி பல முறை படித்ததால், உடனே நன்றி சொல்லமுடியவில்லை.
சொல்வதற்கு கருத்து ஒன்றுமில்லை. கேட்க கேள்விகள் ஒன்றுமில்லை. ஒரு
அனுபவம். 'மணிமேகலை' என்ற சொல்லே மனநிலையை பலபடிகள் உயர்த்துவது
என்றென்றும் தவறாமல் நடக்கிறது. எத்தனையோ இலக்கியங்கள், பல மொழிகளிடம்
படிக்கிறோம். ஆனால், தூக்கத்திலிருந்து எழுப்பி, தரும பீடிகை அறம்
கூறுவதை கேட்கிறேன்.
இன்னம்பூரான்

Nagarajan Vadivel

unread,
Dec 10, 2010, 8:53:43 AM12/10/10
to mint...@googlegroups.com
கண்ணன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
நீங்கள் தமிழ் பெளத்தம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?  எதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?  பெயர்க்காரணம் பற்றி ஆயும் டாபோனிமி இந்திய வரலாறு பண்பாடுபற்றிய தரவு-தவல் அளிக்க வல்லது.
நீங்கள் சாவகத்தீவு என்று சொல்லி சுமத்திராவைக் குறிக்கிறீர்கள் எனக்குத் தெரிந்து அது இன்றைய ஜாவாவைக் குறிப்படுவதாகவே கருதுகிறேன்.  சுமத்திராவில் தென் இந்திய வணிகர் சங்கம் இருந்ததாக் குறிப்ப்பிருக்கிறது.  சீனரின் பட்டுவழி மாலக்கா வழியாகப் போனதால் அது பன்னாட்டு வணிகத்தில் இன்றியமையாத இடம் பெற்றதும் தமிழர்கள் பன்னாட்டு வணிகம் செய்ய ஏதுவாக அப்பகுதியில் மன்னர்கள் போரிட்டதாகவும் தெரிகிறது.  வணிகக் கப்பலில் பிக்குகள் பயணம் செறதும் குறிப்பில் உள்ளது
நீங்கள் தமிழக பெளத்தம் என்று கூறுவது எதை? தமிழர் நாகார்ஜூனர் போன்ற மத்தியமிக ஆகவும் இல்லாமல் இலங்கையின் பாளியில் வழங்கிய தேரவாதமும் இல்லாமல் புத்தரின் கருத்துக்கென அவர்கள் தனிப்பாதை வகுத்துக் கொண்டனரா என்று ஆய்வுசெய்ய விரும்புகிறீர்களா? 
மணிமேகலை கி.பி. 7ஆம் நூற்றாண்டு என்று காலவரை செய்தாலும் அதில் குறிப்பிட்டுள்ள பெளத்தக் கருத்துக்கள் புத்தரைச் சிலை வடிவில் குறிக்காமல் புத்தரின் காலடியைக் குறிப்பதால் தமிழ் பெளத்தம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம் என்ற அனுமானத்துக்கு வருகிறீர்களா? சயாம் ஆண்ட பூமியில் புத்தரின் திருவடிக் கமலங்களை வணங்க பின்னாளில் இலங்கையில் இருந்த்து பிக்குகள் பயணித்திருப்பதற்குக் குறிப்பு உள்ளது
சூன்யம் என்ற கருத்துரு இந்தியாவில் தோன்றி கணினி பிறக்க அடிப்படையாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.  சூன்ய நிலையை அறிவதே அறிந்து சூன்யமாகிப்போவதே அவ்வாறான மனநிலை உள்ள அக்கரை செல்லத் தான் கூறும் கருத்துக்கள் ஒரு படகாக உதவும் என்ற அவரைத் தமிழக பெளத்தம் இறைநிலையில் வைத்து அமர் நிலையில் துறவு நிலையில்  பார்த்ததற்கு மணிமேகலையில் சான்று உள்ளதா என்று ராஜம் அம்மா சொன்னால் நல்லது
சூன்யத்தில் இருந்து உலகை இறைவன் படைத்தான் என்பது விவிலியம்.  சூன்யத்திற்கு வடிவம் கொடுத்தது சூன்யத்தை அலகிட்டு சூன்யத்தை அறிந்து சூன்யனாவது என்பதை ஒரு தத்துவமாகச் சொல்ல மணிமேகலையில் குறிப்பு உள்ளதா?
இதுவரை ராஜம் அம்மா குறிப்பிட்ட கதைகளில் நின்னடி என்று மட்டும் வருவதன்றி உருவம் பற்றிய குறிப்பை அவர்கள் குறிப்பிடவில்லை.  அதுபோன்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளதா
அருள்கூர்ந்து கைப்புள்ளயின் சந்தேகங்களைத் திர்த்து வையுங்கள்.  இங்க லாஜிக் உத வாங்குதா இல்ல நான் உத வாங்குறனான்னு ஒரே கொளப்பமா இருக்கு.  கொஞ்சம் மனசு வைங்க.  கைப்புள்ளயப் பாத்துக்குவேன்னு நீங்கதானெ சொன்னீங்க
நாகராசன்


2010/12/10 Narayanan Kannan <nka...@gmail.com>

N. Kannan

unread,
Dec 10, 2010, 9:35:43 AM12/10/10
to mint...@googlegroups.com
அண்ணாச்சி வணக்கம்:

நீங்க ரொம்பக் குழப்பிக்கிறீங்க!

ஜாவாதான் சீவகம் என்று நானும் உணர்கிறேன். மணிமேகலை காப்பியத்தில் வரும்
மணிபல்லவம் எது எனக் கண்டுபிடிக்கும் யூகங்களில் ஒன்று அவள் மணிபீடிகை
பற்றிப்பேசும் போது வரும் இரத்தினத்தீவு. அங்கொரு பௌத்த விகாரம்
இருப்பதாகச் சொல்கிறாள். சுமத்திரா தீவில் பல பௌத்த/இந்து கோவில்கள்
உள்ளன. பொரபடூர் அங்குதானா? என்று கேட்டு இருக்கிறேன்.

சரி தமிழ்ப் பௌத்தம் என்று நான் பேசுவதெல்லாம் தத்துவத்துள் அடங்காத
நாட்டார் வழக்குக் கதைகள் போன்றவை பற்றி. மணிமேகலை சரியாகப்
பொருந்துகிறது. கிமு 46-ல் இந்திய இளவரசி கொரியாவில் போய் கொரியப்பேரரசு
உருவாக கரு படைக்கிறாள். அவள் பற்றிய கதையாடல் நமது தமிழ் பௌத்த வழக்கில்
உள்ளதா? என்று கண்டறிய ஆசை. அடுத்து பௌத்தம் மலேசியா, இந்தோனீசியா,
தாய்லாந்து, கம்போடியா, சீனா, வியட்நாம், கொரியா, ஜப்பான் வரை போய் தன்னை
ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறது. அது பற்றி ஒரு பேச்சு நம்மிடம் இல்லை? ஏன்
இல்லை? என்பதே என் ஆழமான கேள்வி.

அதற்கு விடை கிடைத்தால் போதும். மற்றபடி நான் பௌத்த தத்துவத்துள் நுழைய
ஆசைப்படவில்லை. நேரமில்லை. ஒரு பௌத்த மடலாடற்குழு என்னை விரட்டி,
விரட்டிப் பிடிக்க முயன்றது. என் குறிக்கோள் எல்லாம் கீழை நாடுகளுடன்
இந்தியா (குறிப்பாக தமிழகம்) கொண்டிருந்த உறவை புதுப்பிப்பதே!

சமணத்தின் தமிழ் வேர்களை உலகிற்கு காட்டவும் ஆசை. வட இந்தியர்களுக்கே
நமக்கொரு செழுமையான சமண மரபு இருப்பது தெரிவதில்லை.

அவ்வளவுதான் என் அஜண்டா!

குட் நைட்!

க.>

2010/12/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Dec 10, 2010, 10:16:59 AM12/10/10
to mint...@googlegroups.com
கோன் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்-ஆள்-வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும்"//

அன்று மட்டுமல்ல, இன்றும், என்றும் நினைவு கொள்ளவேண்டிய வரிகள். அருமையான விளக்கம் அம்மா. 



2010/12/10 rajam <ra...@earthlink.net>


Nagarajan Vadivel

unread,
Dec 10, 2010, 11:49:42 AM12/10/10
to mint...@googlegroups.com
ஆஹா இப்புடி ஒரு ரூட்டு இருக்கறத சொல்லவே இல்லியே. இது தெரியாமக் கிருத்துவம் பிடிச்சுத் தத்துவமெல்லாம் பேசி......இதெல்லாம் இந்த வயசுல தேவயா.  பெருசு மாதிரியா வாயைத் திறக்காம அப்பிடியே ஒதுங்கி ஓடிப்போயிடறேன் கரீட்டா சொல்லிப்புட்டீக.  சரி இனிமேல புத்தரு பத்தி வம்புதும்பே வேண்டாம்.  நா என்வேலயப பாக்குறேன்.  அவுரப்பத்தி வெவரம் தெரிஞ்சவக பேசிக்கட்டும் வரட்டா
நாகராசன்


2010/12/10 N. Kannan <navan...@gmail.com>

rajam

unread,
Dec 10, 2010, 12:09:41 PM12/10/10
to மின்தமிழ், Narayanan Kannan, Nagarajan Vadivel
இந்தப் பகுதியைப் படித்து ... பாராட்டும் வாழ்த்தும் கருத்தும் சொல்லி ஊக்கமளித்த எல்லார்க்கும் மிக மிக நன்றி! கண்ணன், பேராசிரியர், திவாகர், தேவ், கீதா, பவளஸ்ரீ, 'இ' சார் மடல்கள் பார்த்தேன். சிலர் அனுப்பிய தனிமடல்களும் பார்த்தேன். பெருமிதம் அடைந்தேன் என்று கூச்சமில்லாமல் சொல்லிக்கொள்கிறேன்! :-)
நல்ல நல்ல கேள்விகள்! எனக்குத் தெரிந்த விடையைச் சொல்கிறேன்; என் தனிப்பட்ட கருத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். எனக்கு வினோத் போன்றவர்களின் உதவியும் தேவை.
இன்னிக்கு ... நம்ம Consulate-காரங்க கேட்ட பத்திரங்களெயெல்லாம் ஒரு மூட்டையாச் சேத்து அனுப்ப வேண்டிய வேலை இருக்கு. அதெப் பாத்துட்டு வரேன். நாளாயிட்டே போயிட்டிருக்கு. ஊருக்கு வர முடியாமெ இருக்கு. எல்லாக் கடவுள்கிட்டயும் எனக்காக ஒரு சின்ன அப்ளிகேஷன் போட்டு வைங்க!
அப்றமாப் பாப்போம், சரியா!
அன்புடன்,
ராஜம்




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

?????? ?????

unread,
Dec 10, 2010, 3:22:39 PM12/10/10
to mint...@googlegroups.com, Subashini Tremmel, Narayanan Kannan, kalairajan krishnan
// கீழ்த் திசையில் நாகநாட்டு மன்னர்கள் இரண்டுபேர் அது தன்னது என்று எடுத்துக்கொள்ளப் பார்த்துத் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள். அப்போது "பெருந்தவ முனிவன்" ["புத்த தேவன்"] தோன்றி, சண்டை போட வேண்டாம்; "இது எமது" என்று சொல்லி அதில் இருந்து அறம் உரைத்தான். அப்படிப் பட்ட பெருமை உடையது அந்தத் தரும பீடிகை//

முந்தைய இழையில் கூறினாற் போல், இதே போன்றதொரு கதை சிங்களர்களின் மஹாவம்சத்தில் (இலங்கையில் உள்ள ? ) நாகத்வீபத்தில் நடப்பதாக வருகிறது.


http://www.tipitaka.org/taml/ (பாளி - தமிழ் லிபியில்)

இங்கே அன்ய -> வம்சகந்தோ சங்கஹ -> மஹாவம்சம் -> பதம பரிச்சேத என்றுவாறு சென்றால் மஹாவம்சத்தை பாளியில் தமிழ் லிபியில் படிக்க இயலும்.

Now the most compassionate Teacher, the Conqueror, rejoicing in the salvation of the whole world, when dwelling at Jetavana in the fifth year of his buddhahood, saw that a war, caused by a gem-set throne, was like to come to pass between the nagas Mahodara and Culodara, uncle and nephew, and their followers; and he, the Sambuddha, on the uposathaday of the dark half of the month Citta, in the early morning, took his sacred alms-bowl and his robes, and, from compassion for the nagas, sought the Nagadipa

That same naga Mahodara was then a king, gifted with miraculous power, in a naga-kingdom in the ocean, that covered half a thousand yojanas. His younger sister had been given (in marriage) to the naga-king on the Kannavaddhamana mountain; her son was Culodara. His mother’s father had given to his mother a splendid throne of jewels, then the naga had died and therefore this war of nephew with uncle was threatening; and also the nagas of the mountains were armed with miraculous power.

[...]

Hovering there in mid-air above the battlefield the Master, who drives away (spiritual) darkness, called forth dread darkness over the nagas. Then comforting those who were distressed by terror he once again spread light abroad. When they saw the Blessed One they joyfully did reverence to the Master’s feet. Then preadied the Vanquisher to them the doctrine that begets concord, and both [nagas] gladly gave up the throne to the Sage.  When the Master, having alighted on the earth, had taken his place on a seat there, and had been refreshed with celestial food and drink by the naga-kings, he, the Lord, established in the (three) refugesand in the moral precepts eighty kotis of snake-spirits, dwellers in the ocean and on the mainland.

மஹாவாம்சம் சொல்லும் நாகத்தீவும். மணிமேகலையின் மணிபல்லவமும் ஒன்றா ? தமிழகத்தில் இருந்து இலங்கை 30 யோஜனை தூரமா என்ன ? 

புத்தர் நாகத்தீவுக்கு வருவதை மஹாவம்சம் இவ்வாறு விவரிக்கிறது:  (ஆங்கில மொழிப்பெயர்ப்பின் முதல் பத்திக்கு உரித்தான பாளி செய்யுள்கள்)

மஹாகாருணிகோ ஸத்தா², ஸப்³ப³லோகஹிதே ரதோ;

போ³தி⁴தோ பஞ்சமே வஸ்ஸே, வஸம் ஜேதவனே ஜினோ.

.

மஹோத³ரஸ்ஸ நாக³ஸ்ஸ, ததா² சூளோத³ரஸ்ஸ ச;

மாதுலபா⁴கி³னெய்யானம், மணிபல்லங்கஹேதுகம்.

.

தி³ஸ்வா ஸபாரிஸஜ்ஜானம், ஸங்கா³மம் பச்சுபட்டி²தங்;

ஸம்பு³த்³தோ⁴ சித்தமாஸஸ்ஸ, காளபக்கே² உபோஸதே².

.

பாதோயேவ ஸமாதா³ய, பவரம் பத்தசீவரம்;

அனுகம்பாய நாகா³னம், நாக³தீ³பமுபாக³மி


[ பாளி அறியாமல் போனாலும்  ஓரளவுக்கு சமஸ்கிருதத்துக்கு பேக்-டிரான்ஸ்லேஷன் செய்ய மெனக்கெட்டால் கொஞ்சம் புரியும். [ எ.டு திஸ்வா < திருஷ்ட்வா (?) (பார்த்தப்பிறகு)  -ஸ்ஸ < -ஸ்ய ; மஹோதரஸ்ய நாகஸ்ய சூளோதரஸ்ய நாகஸ்ய ச. சங்காமம் < சங்கிராமம் (போர்) ]

இங்கே மணியால் ஆன ஆசனத்தை ”மணிபல்லங்கம்” (பல்லங்கம் - ஆசனம்) என்ற சொல்லால் மஹாவம்சம் குறிப்பிடுகிறது.

மணிமேகலை தீவின் பெயராக “மனிபல்லவம்” என்று குறிப்பிடுகிறது.

ஒரு வேளை மணிபல்லவம் என்பது மணிபல்லங்கம் என்பதன் மரூஉவாக இருக்குமோ ?

இந்த ரீதியில் ஏதேனும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா ?

இன்னொன்றும் இங்கே கவனிக்க வேண்டியது,

தீவுத்திலகை (த்வீப-திலகா) கூறுவதை இங்கே கவனிக்க வேண்டும். அவள் புத்த பகவானுடைய பாதங்களை வணங்கிவிட்டு மணிபல்லவத்தீவுக்கு வருவதாக குறிப்பிடுகிறாள்.

இதே மஹாவம்சத்தில், புத்தர் இலங்கையின் ஸ்ரீபாத மலையில் தன்னுடைய பாதச்சுவடுகளை விட்டுச்சென்ற கதையும் உள்ளது.

அதே ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இருந்து:

In the third year after this, the naga-king Maniakkhika sought out the Sambuddha and invited him, together with the brotherhood. In the eighth year after he had attained to buddhahood, when the Vanquisher was dwelling in Jetavana, the Master, set forth surrounded by five hundred bhikkhus, on the second day of the beautiful month of Vesäkha, at the fullmoon, and when the hour of the meal was announced the Vanquisher, prince of the wise, forthwith putting on his robe and taking his alms-bowl went to the Kalyani country, the habitation of Maniakkhika. Under a canopy decked with gems, raised upon the spot where (afterwards) the Kalyani cetiya was built, he took his place, together with the brotherhood of bhikkhus, upon a precious throne-seat. And, greatly rejoicing, the naga-king with his following served celestial food, both hard and soft, to the king of truth, the Conqueror, with his followers.

When the Teacher, compassionate to the whole world, had preached the doctrine there, he rose, the Master, and left the traces of his footsteps plain to sight on Sumanakuta And after he had spent the day as it pleased him at the foot of this mountain, with the brotherhood, be set forth for Dighavapi.

மேலே உள்ள பத்தியின் பாளி மூலம்:

தத்த² த⁴ம்மம் தே³ஸயித்வா, ஸத்தா² லோனுகம்பகோ;

உக்³க³ந்த்வா ஸுமனே கூடே, பத³ம் த³ஸ்ஸேஸி நாயகோ

தஸ்மிம் பப்³ப³தபாத³ம்ஹி, ஸஹஸங்கோ⁴ யதா²ஸுக²ம்;

தி³வா விஹாரம் கத்வான, தீ³க⁴வாபி முபாக³மி

(தஸ்மிம் < தஸ்மின் ; பப்பத < பர்வத )

சுமனகூடம் என்ற இடத்தில் நாயகர் பாதச்சுவடிகளை விட்டுச்சென்றதாக மஹாவம்சம் குறிப்பிடுகிறது. மணிமேகலை, தீவுத்திலகை பகவானின் பாதங்களை வணங்கிய இடமாக “சமந்த” மலை என்று தெரிவிக்கிறது.

ஒரு கால் மணிமேகலை கூறும் அனைத்து இடங்களும் இலங்கையை சுற்றி உள்ள தீவுகளோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

V

?????? ?????

unread,
Dec 10, 2010, 3:30:48 PM12/10/10
to mint...@googlegroups.com, Narayanan Kannan, Nagarajan Vadivel
ராஜம், 

தொடர் மிகவும் நன்றாக உள்ளது :-) தொடர்ந்து இவ்வாறே எழுதுங்கள். 

ஒரு சில கேள்விகள் :-)

இதில் மணிமேகலையின் வயது என்ன ? சுதமதி, மாதவி ஆகியோர்களின் வயது என்ன ?

துணைக்கேள்வி: 

கோவலன் கொல்லப்படும்போது கோவலன் மற்றும் கண்ணகியின் அகவைகள் என்ன ?

V

N. Kannan

unread,
Dec 10, 2010, 8:38:16 PM12/10/10
to mint...@googlegroups.com
கீதா!
 
இன்று உலகில் அடிக்கும் சூறாவளிகள், பனிமழைகள், சுநாமிகள், நில நடுக்கங்கள் இவையெல்லாம் ஊழல் அரசுகளின் பலாபலன்கள் என்று கொள்ளலாமா? :-)
 
மன்னுயிர் எல்லாம் மண்-ஆள்-வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும்
 
க.>

2010/12/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Kannan

unread,
Dec 10, 2010, 8:52:24 PM12/10/10
to mint...@googlegroups.com
அண்ணாச்சி:
 
என் ஆதங்கத்தை இன்னொரு விதமாகச் சொல்கிறேன்.
 
ஒரு இத்தாலியன் ஆசியா வந்தான், சீனாவில் போய் நூடுல்ஸ் செய்வதைப் பார்த்தான். இத்தாலிக்கு வந்து ஸ்பெகட்டி செய்யச் சொன்னான் என்று சரித்திரம் படிக்கிறோம் என்றால் நமக்கு முதலில் தோன்றுவது என்ன? இத்தாலி போய் யார் ஐயா! அந்த ஆள் என்று கேட்கத்தானே தோன்றும். மார்க்கோபோலோ வாழ்ந்த ஊரில் அவர் எழுதிய பயணக்குறிப்புகள் இன்றும் கிடைக்கின்றன.
 
சீனாவிலிருந்து யுவான் சுவாங் இந்தியா வந்தார் என்று படிக்கிறோம். சீனாவிற்குப் போனால் யுவான் சுவாங் பயணக்குறிப்புகள் சீன மொழியில் கிடைக்கின்றன.
 
கிறிஸ்தவம் பரவுவதற்கு ஐரோப்பிய அரசுகள் துணை போயின. வாஸ்கோடகாமா காலத்திலிருந்து டச்சு ஈஸ்ட் இந்தியா கம்பெனிவரை அந்தந்த நாடுகளுக்குப் போனால் நிறைய ஆவணங்கள் கிடைக்கின்றன.
 
இந்தியாவிலிருந்து பௌத்தம் ஆசியாவிற்குப் போகிறது. இங்கு என்ன சான்றுகள் உள்ளன? ஒரு குறிப்பு கூட இல்லையே? சும்மா ‘புரூடா’ விட்ட கதை கூட இல்லையே? ஏன்?
 
பௌத்தம் போவதற்கு முன் சநாதன தர்மம் போகிறது. இந்திய அரசுகளின் ஆதரவு இல்லாமலா நடந்திருக்கும்? அது பற்றிய சரித்திர ஆதாரங்கள்? Chronicles எங்கே?
 
இப்போதிற்கு மணிமேகலை நம் பசிக்கு சோறு போடுகிறது. அதை நெடுந்தீவு, ஸ்வர்ண தீபம் என்று முடக்கிவிடாமல், at least இந்தோனீசியா வரையிலாவது எடுத்துச் செல்ல முடியுமா பார்ப்போம். மணிமேகலை காலத்தில் இலங்கை தீவாகக்கூட இருந்திருக்காது. யார் கண்டது? யானைகள் கடல் தாண்டும் பிராணிகள் கிடையாது. இராமேஸ்வரம், தலைமன்னார் இடையில் இன்று கூட கடல் மட்டம் 10 மீக்கும் குறைவு.
 
எனவே, மணிமேகலை பேசும் தீவுகள், நாகத்தீபம் போன்றவை கொஞ்சமேனும் கிழக்கே இருப்பதாகக் கொண்டு ஆராய முயலலாம்.
 
என் ஆதங்கம் சொல்லிவிட்டேன். நீங்க ஐன்ஸ்டைனுடன் படித்தவர். புதிய சூத்திரங்களுடன் வந்து இந்த puzzle க்கு விடை தரவும்.
 
ஜில், ஜில் ஜிகிர்தண்டா தயார் பண்ண ஆரம்பித்துவிட்டேன் :-))
 
க.>
 


 
2010/12/11 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 11, 2010, 6:39:54 AM12/11/10
to mint...@googlegroups.com

இந்த இயற்கைப் பேரழிவுக்கும், அதைத் தொடர்ந்த கூட்டுச் சாவுகளுக்கும் காரணத்தை ஆராய்ந்தால், நாமே தான் காரணம் என்று தெரிந்து கொள்வோம். முதலில் வாயு கெட்டுப் போகிறது. வாயு கெட்டால் அதைத் தொடர்ந்த நீர், நிலம், தேசம், பயிர், பச்சைகள் என அனைத்துமே கெட்டுப் போய் இயற்கை மாறுபட்ட விதத்தில் பருவங்களைக் காட்டுகிறது. பருவங்கள் மாறிவிடுகின்றன. வாயுவில் கலக்கும் விஷப் பொருட்களே அனைத்துக்கும் காரணம். இந்த விஷப் பொருட்களை நம்மை அறியாமல் நாம் வாயுவில் கலந்து கொண்டிருக்கிறோம். இதையே சுற்றுச் சூழல் மாசு என்று சொல்லிக் கொள்கின்றோம். இதன் அடிப்படையிலேயே அனைத்தும் கெட்டுப் போய்விடுகிறது. அப்புறம் காலத்தில் வரவேண்டிய பருவங்கள் பொய்த்துப் போய் மாறுபட்ட பருவங்கள் வரும்போது இயற்கைப் பேரழிவு, விபத்துகள் போன்றவை நேரிட்டுக் கூட்டுச் சாவுகள் ஏற்படுகின்றன. மேலும் அந்தக் கூட்டுச் சாவில் இடம் பெற்றிருக்கிறவர்களில் யாராவது ஒருத்தர் இரண்டு பேருக்காவது அல்பாயுசாகவும் இருக்கலாம் என ஜோதிடம் கூறுகிறது. அல்பாயுசு உள்ளவனோடு சேர்ந்தால், நீரில் விழுந்தவன் தன்னைக் காக்க வருபவர்களையும் தன்னையும் அறியாமல் எவ்விதம் மூழ்க அடித்துவிடுகிறானோ அவ்விதம் அல்பாயுசுக் காரனோடு சேர்ந்தவர்களும் இறக்கின்றனர்.

 

எப்போவோ தொலைக்காட்சியில் சொன்னதைக் குறிச்சு வைச்சேன், இப்போத் தேடி எடுத்துப் போடுகிறேன்,.  ஏற்கெனவே எல்லாரும் க்ளோபல் வார்மிங் பத்தி எச்சரிக்கை கொடுக்கறாங்க இல்லையா?? இது ஒரு வேதங்களை நன்கு கற்றுணர்ந்த பெரியவர் ஒருவர் கூறியது.  ஆங்கிலப் படிப்பும் உண்டு அவருக்கு!



2010/12/11 N. Kannan <navan...@gmail.com>
கீதா!
 
இன்று உலகில் அடிக்கும் சூறாவளிகள், பனிமழைகள், சுநாமிகள், நில நடுக்கங்கள் இவையெல்லாம் ஊழல் அரசுகளின் பலாபலன்கள் என்று கொள்ளலாமா? :-)
 
மன்னுயிர் எல்லாம் மண்-ஆள்-வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும்
 
க.>

Geetha Sambasivam

unread,
Dec 11, 2010, 6:41:12 AM12/11/10
to mint...@googlegroups.com
பிரார்த்திக்கிறோம் அம்மா. உங்கள் வேலைகளை முடிச்சுட்டு வாங்க.

2010/12/10 rajam <ra...@earthlink.net>

coral shree

unread,
Dec 11, 2010, 11:17:23 AM12/11/10
to mint...@googlegroups.com
அம்மா கட்டாயமாக உங்களுக்கு இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் விசா வந்துவிடும். கவலை வேண்டாம் அம்மா. நாங்கள் அனைவரும் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் அம்மா.

2010/12/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

devoo

unread,
Dec 11, 2010, 11:54:04 AM12/11/10
to மின்தமிழ்
>>>இங்கே மணியால் ஆன ஆசனத்தை ”மணிபல்லங்கம்” (பல்லங்கம் - ஆசனம்) என்ற சொல்லால் மஹாவம்சம் குறிப்பிடுகிறது. மணிமேகலை தீவின் பெயராக “மனிபல்லவம்” என்று குறிப்பிடுகிறது. ஒரு வேளை மணிபல்லவம் என்பது மணிபல்லங்கம் என்பதன்
மரூஉவாக இருக்குமோ ? <<<

*(பல்லங்கம் -
ஆசனம்)*

பர்யங்கம் -> பல்யங்கம் -> பலங் (ஹிந்தி) இவை கட்டிலைக் குறிக்கும்
சொற்கள்; பல்லங்கம் இவ்வகை சேர்ந்தது.

இது ஆஸநத்தை - இருக்கையைக் குறிக்கும் சொல்லாக முடியுமா ?
பல்லவம் - பல்லங்கம் ஒப்பீடு சரியா ?


தேவ்

On Dec 10, 2:22 pm, "?????? ?????" <vinodh.vin...@gmail.com> wrote:
> // கீழ்த் திசையில் நாகநாட்டு மன்னர்கள் இரண்டுபேர் அது தன்னது என்று எடுத்துக்கொள்ளப்
> பார்த்துத் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள். அப்போது "பெருந்தவ முனிவன்" ["புத்த
> தேவன்"] தோன்றி, சண்டை போட வேண்டாம்; "இது எமது" என்று சொல்லி அதில் இருந்து அறம்
> உரைத்தான். அப்படிப் பட்ட பெருமை உடையது அந்தத் தரும பீடிகை//
>
> முந்தைய இழையில் கூறினாற் போல், இதே போன்றதொரு கதை சிங்களர்களின் மஹாவம்சத்தில்
> (இலங்கையில் உள்ள ? ) நாகத்வீபத்தில் நடப்பதாக வருகிறது.
>
> http://www.vipassana.com/resources/mahavamsa/mhv01.php(ஆங்கிலம்)
>

> http://www.tipitaka.org/taml/(பாளி - தமிழ் லிபியில்)

N. Ganesan

unread,
Dec 11, 2010, 12:04:50 PM12/11/10
to மின்தமிழ்

On Dec 11, 10:54 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>>இங்கே மணியால் ஆன ஆசனத்தை ”மணிபல்லங்கம்” (பல்லங்கம் - ஆசனம்) என்ற சொல்லால் மஹாவம்சம்   குறிப்பிடுகிறது.  மணிமேகலை தீவின் பெயராக “மனிபல்லவம்” என்று குறிப்பிடுகிறது.  ஒரு வேளை மணிபல்லவம் என்பது மணிபல்லங்கம் என்பதன்
>
> மரூஉவாக இருக்குமோ ? <<<
>
>                                                    *(பல்லங்கம் -
> ஆசனம்)*
>
> பர்யங்கம் -> பல்யங்கம் -> பலங் (ஹிந்தி)  இவை கட்டிலைக் குறிக்கும்
> சொற்கள்; பல்லங்கம் இவ்வகை சேர்ந்தது.
>
> இது ஆஸநத்தை - இருக்கையைக் குறிக்கும் சொல்லாக  முடியுமா ?
> பல்லவம் - பல்லங்கம்  ஒப்பீடு   சரியா ?
>
> தேவ்

பல்லவம் புதிதான மொக்கு.
பழைய மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர். சோழ இளவரசி
- இளந்திரையன் வம்சத்துப் பல்லவர்கள். தொண்டைப்பூ அவர்கள்
குலமலர்.

சிலோன் இரத்தினங்களுக்கு பேர்போனது. மணி-பல்லவம்,
பல்லவர்கள் சிங்கள புத்தர்களுக்கு கலை, எழுத்து கொடுத்தோர்.
பல்லவர்கள் மொழியான தமிழ் பேசும் சிலோனின் வடக்கு
ராஜ்யம் மணி+பல்லவம் = சிலோன் பல்லவம் எனப்பட்டதோ?
மேலும் நாகத்தீவு (நயினாதீவு, அல்லது யாழ்குடநாடு) சிலோன் வரைபடத்தில்
மொக்கு போல இருப்பதாலும் பல்லவம்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.

கவர்னர் கோல்ப்ரூக் என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில்
கிடைத்த (அமராவதி ஸ்கூல்) பெரிய புத்தர் சிலை
(நின்ற நிலை, சீரை அணிந்திருப்பார், அபய ஹஸ்த முத்திரை)
பாங்க்காக்குக்கு கப்பலில் கொண்டுசென்றார். புத்தருக்கு
பதில் விஷ்ணு பிரதிட்டை இப்போது.

பிற பின்,
நா. கணேசன்

> > be set- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

N. Ganesan

unread,
Dec 11, 2010, 12:07:13 PM12/11/10
to மின்தமிழ்

Interestingly,
NaagabhuushaNi is the local goddess name of Nayinathiivu island
(Nagathivu?).

> > read more »- Hide quoted text -

rajam

unread,
Dec 12, 2010, 12:39:25 AM12/12/10
to mint...@googlegroups.com, coral shree, Geetha Sambasivam
அன்பார்ந்த பிரார்த்தனைகளுக்கு நன்றி, கீதா, பவளஸ்ரீ!
3~4 மாதங்களுக்கு மேல் போராட்டம் -- நம் இந்திய வேண்டுதலுக்கும் இங்கே என் அமெரிக்க இருப்புக்கும் இடையில் ... அவர்கள் கேட்ட பத்திரங்கள், இவர்கள் எடுத்துக்கொண்ட பத்திரங்கள் ... அப்படி இப்படி ...
முதல் முறை என் விண்ணப்பத்தைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள், அது வேண்டும் இது வேண்டும் என்று!
ஒரு வழியாக, நேற்று, இரண்டாம் தடவையாக, என்னால் முடிந்த / தெரிந்த அளவு எல்லாப் பத்திரங்களையும் அனுப்பிவைத்தேன். பார்ப்போம் என்ன ஆகிறது என்று! 
முதலில் மதுரை வந்து, மருத்துவர் "காலைப் பிடித்து" என் "காலைக் காட்டிக் கொண்டு" சரி செய்து ... ஊர் ஊராய்ச் சுற்ற வேண்டும் -- தல யாத்திரை செய்வது போல!
ஏற்கனவே EFEO பாண்டிச்சேரி அன்பர்களின் வேண்டுகோளை நிறைவேற்றாத தவிப்பு.
பார்ப்போம் -- மதுரை மீனாட்சி துணையுடன்!
அன்புடன்,
ராஜம்


Subashini Tremmel

unread,
Dec 12, 2010, 2:13:46 AM12/12/10
to மின்தமிழ், Subashini Kanagasundaram
எளிமையான தமிழில் விளக்கியிருக்கின்றீர்கள். வாசித்து மகிழ்ந்தேன் ராஜம் அம்மா. 
இந்தக் கட்டுரை இன்று மணிமேகலை தொகுப்பில் மரபு விக்கியில் இங்கே இணைத்திருக்கின்றேன்.
 
அன்புடன்
சுபா

2010/12/10 rajam <ra...@earthlink.net>

Subashini Tremmel

unread,
Dec 12, 2010, 2:22:25 AM12/12/10
to mint...@googlegroups.com


2010/12/10 N. Kannan <navan...@gmail.com>
..ஜாவாதான் சீவகம் என்று நானும் உணர்கிறேன். மணிமேகலை காப்பியத்தில் வரும்

மணிபல்லவம் எது எனக் கண்டுபிடிக்கும் யூகங்களில் ஒன்று அவள் மணிபீடிகை
பற்றிப்பேசும் போது வரும் இரத்தினத்தீவு. அங்கொரு பௌத்த விகாரம்
இருப்பதாகச் சொல்கிறாள். சுமத்திரா தீவில் பல பௌத்த/இந்து கோவில்கள்
உள்ளன. பொரபடூர் அங்குதானா? என்று கேட்டு இருக்கிறேன்.

பொராபூடூர் ஆலயம் ஜாவா தீவில். இன்னொரு இழையில் வரைபடம் இணைத்திருந்தேன் கண்ணன். தேடி அனுப்புகின்றேன்.
மேலும் ஒரு செய்தி. இந்த ஜாவா தீவின் அருகிலேயே, அதாவது கிழக்குப் பகுதியில் மதுரா என்ற பெயரிலும் ஒரு தீவு இருக்கின்றது.
-சுபா

Nagarajan Vadivel

unread,
Dec 12, 2010, 3:12:27 AM12/12/10
to mint...@googlegroups.com
javasumatra.jpg

சுமத்திரா தீவு தமிழர்களின் கடல் வணிகத்துக்கும் பெளத்தம் பரவுபதற்கும் பயன்பட்ட முக்கியமான இடம்.  தமிழ் வணிகர் சங்கம் சுமத்திரவில் இருந்ததாகவும் மலாக்க கடல் சந்தி முக்கியமான பாதை எனவும் ராஜா ராஜ ராஜேந்திரர் போரிட்டு கடலாதிக்கம்  செலுத்தினர் எனவும் மெதான் என்ற இடத்தில் அயோத்திதாச பண்டிதர் புத்தமதம் பற்றிப் போதித்தகாவும் குறிப்பு இருக்கிறது.  சுபா சொல்லுவதுபோல் மதுரா என்பது ஜாவாவில் இருக்கிற்து.  அங்கு வாழ்ந்த மக்கள் பற்றி நிறையக் கர்ண பரம்பரைக்கதைகள் உண்டு. ஜாவா சுமத்திரா கிழக்குக் களிமந்தான் பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன்.  நிறையயச் செய்திகள் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்
சென்ற மாதம் காஞ்சி பல்கலை ஜாவவில் உள்ள இந்துக் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு செய்துகொண்டுள்ளது.  இனி அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்று நம்பலாம்
நாகராசன்

2010/12/12 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
javasumatra.jpg
javasumatra.jpg

N. Kannan

unread,
Dec 12, 2010, 3:57:44 AM12/12/10
to mint...@googlegroups.com
அதனால்தான் சொல்கிறேன், மணிபல்லவம் என்பதை நமக்கு இன்று மிகப்பரிட்சயமாக
உள்ள இலங்கையுடன் பொறுத்தி நிறுத்திக்கொள்ள வேண்டாமென்று. இப்படி நாம்
செய்வதற்கு உளவியல் பூர்வமான காரணம் அந்தக்காலத்திலேயே இவ்வளவு தூரம்
எங்கே போயிருக்கப்போறாங்க எனும் நம் நினைப்பு.

அது தவறு. ஏனெனில் ஜாவா தீவின் அருகிலுள்ள பாலித்தீவு முழுக்க, முழுக்க
ஹிந்து மக்கள் வாழும் தீவு. கீழுள்ள விழியம் சொல்லும் கதைகள் நூறு!

http://video-thf.blogspot.com/2008/06/blog-post_07.html

முற்காலத்தில், அதுவும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ஜப்பான் வரை நம்
கப்பல்கள் போய் வந்துள்ளன. ஒரிசா பாலு அதைத்தான் கண்டுபிடிக்க முயன்று
கொண்டு இருக்கிறார். எனவே நம் கற்பனையை கட்டுப்படுத்தாமல்,
சரித்திரத்தையும் பார்த்து சில தைர்யமான ஊகங்களை முன் வைக்கலாம். அதில்
தவறில்லை. Hypothesis இல்லாமல் ஆய்வு செய்ய முடியாது!

க.>


2010/12/12 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>


--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Nagarajan Vadivel

unread,
Dec 12, 2010, 4:52:20 AM12/12/10
to mint...@googlegroups.com
அனுமானம் (hypothesis) ஆய்வுக்குத்தேவை.  ஆயினும் அவை முந்தைய ஆவணனகளில் ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஊகம்.  அது தக்கதா தகவில்லாததா என்பதைத் தரவுகள் தகுதரம் மிக்க தகவல் பகுப்பாய்வு மூலம் ஏற்பதும் மறுப்பதும் நிகழ வேண்டும்
நான் அனுமானத்துக்கு அடிப்படையாக இடப் பெயர் ஆய்வு உதவும் என்று நம்புகிறேன்
மணி பல்லவம் என்பது ஒரு இடத்தின் பெயர்.  முதலில் அது இலங்கை அருகிலா அல்லது தொலைதூர சாவகமா என்று ஆய்வு செய்யும் முன் செய்யவேண்டிய பணி
இந்த இடப் பெயரில் மணி பல்லவம் என்று இரு பெயர்கள்
மணி என்பது பவளத்திக் குறிக்கிறதா அல்லது முத்தைக் குறிக்கிறதா. 
பல்லவம் என்ற பெயர் எப்படி உருவானது
இதுபற்றிய இலக்கிய கல்வெட்டுத் தகவல் தேவை
மணிமேகலையில் குறிப்பிடப்படும் மணிபல்லவம் பற்றிய அனுமானத்துக்கு மிகவும் முக்கியம் அது கிழக்குத் திசையில் எங்கிருந்து முப்பது யோசனை தூரம்.  கருமணல் கொண்ட கடற்கரை எங்குள்ளது.  யோசனை என்ற அளவீட்டு அலகு என்ன பொருள் தரும்
என்ற கேள்வுகளுக்கு விடை அளிக்க வேண்டும்.  பின்னரே அந்த அனுமானம் ஆய்வுக்கு ஏற்றதாக அமையும்
நாகராசன்

2010/12/12 N. Kannan <navan...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 12, 2010, 4:57:05 AM12/12/10
to mint...@googlegroups.com
உண்மை கண்ணன்.
 
கிழக்காசிய வரலாறு இதனை உறுதி படுத்துகின்றதே. புத்த மதம் இந்த எல்லா நாடுகளிலும் மிகச் சிறப்பாக பரவலாக வளர்ந்துள்ளது. இஸ்லாமிய மத மாற்றத்திற்குப் பின்னர் (13, 14ம் நூற்றாண்டு தொடங்கி)  இந்தோனிசியாவில் இம்மதத்திற்கான முக்கியத்துவம் குறைந்த்து என்பதும் உண்மை. 
 
ஆக நாம் பழம் இலக்கியங்களின்  வழி எவ்வாறு புத்தமதம் பரவியது என்று நிச்சயமாக ஆய்வு செய்ய வேண்டும். ராஜம் அம்மா வழங்கும் மணிமேகலை கதைகள் பெண் துறவியரும் பயணம் செய்து புத்த மத வளர்ச்சியில் பங்கு கொண்டுள்ளனர் என்பதை காட்டுவதாக உள்ளது. இவைகளைக் கதைகள் என்று காணாமல் வரலாற்று செய்திகளின் பதிவுகள் என்ற நோக்கில் நாம் ஆராய வேண்டியுள்ளது.   எவ்வகையான கடல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன, எத்தனை நாட்கள் இவ்வகை பயணங்கள் நீடித்தன போன்ற தகவல்களும் நமது வாசிப்பிற்கு உதவும்.
 
பல நூல்களை ஆராய வேண்டியதும் அவசியமாகின்றது. பெரிய பணி இது. நமது மின் தமிழ் நண்பர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சான்று நூல்களை வாசித்து இது தொடர்பாக தகவல் சேகரிக்கத் தொடங்க வேண்டும்.  பல கல்லூரிகளிலும் இது தொடர்பான ஆய்வுகள் நிகழ்ந்து வந்தால் நாம் அது பற்ரிய செய்திகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல பாலி தீவு இன்றளவும் ஹிந்து வழிபாட்டை முக்கியமாகக் கொண்டதே. இங்கு ஒவ்வொரு நாள் மாலையும் ஆண்களும் பெண்கள் குளித்து நீராடி ஆலயத்திற்கு பூக்கள் எடுத்துச் சென்ரு வழிபடுவது தொடர்ந்து வழக்கில் இருந்து வருகின்றது. கூகளில் தேடினால்  ஆலயங்களின்  பல படங்களை காணலாம்.  மகாமேருவை பிரதிபலிப்பதாக கட்டப்பட்ட Taman Ayun Temple in Mengwi ஆலயம் ஒரு சான்று.
 
உதாரணத்திற்கு சில.. (இணையத்தில் கிடைத்தவை)
 
 
2250385690_e5271dd1d6.jpg?v=0
 
 
f_2724196664dm_283ce57.jpg
 
 
Gunung_Kawi_temple.jpg
 

 
-சுபா

2010/12/12 N. Kannan <navan...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 12, 2010, 5:18:12 AM12/12/10
to mint...@googlegroups.com
சங்கமித்தா என்ற பெண்பிக்கு நாகபட்டினம் அருகே உள்ள புத்த விஹாரத்தில் இருந்து இலங்காஇக்குச் செஎறதாக வரலாற்றுக் குறிப்புள்ளது.  இலங்கையில் இருந்து பிக்குகள் நாவாய் மூலம் சயாம் சென்றதற்கும் அசோக மன்னன் தன் மகள் இலங்கை செல்ல வழியனுப்பியதாகவும் அவர் கடல் வழி தமிழகம் வந்து இலங்கை சென்றதாகவும் குறிப்புள்ளது அந்நாளில் இலங்கை என்பது தாமிரபானித் தீவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது
தரை வழியாக சிங்கப்பூரில் இருந்து சென்னை வரமுடியும் என்பதைத்தாங்கள் அறிவீர்கள்.  எனவே கிழக்கிந்திய இந்தியா வழி சயாம் சாவகம் செல்லப் பாதி இருந்ததா என்று அறியவேண்டும்.  இந்தொனேசியாவில் மட்டும் 13000கு மேற்பட்ட தீவுகள்.  அவற்றுள் எது மணிபல்லவம் என்று உறுதி செய்வது கடினமான பணி.  ஆனால் இன்றியமையாதது. நீங்கள் பாலித்தீவு என்று சொல்லுகிறீர்கள் அந்தப் பெயரையும் ஆய்வு செய்தல் அவசியம்

Nagarajan Vadivel

unread,
Dec 12, 2010, 9:45:53 AM12/12/10
to mint...@googlegroups.com
யோசனை தூரம் என்பது 9 மைல் என்ற குறிப்பு கீழே
Everybody knows the speed of light is 186,000 miles which is actually
discovered in 1675 by ROMAR. But the hymn 1.50 of the Rigveda on the
Sun, says
you who traverse 2,202 yojanas in half a nimesa.The usual meaning of
yojana is about 9 miles as in the Artha?saastra and for nimisha.
The measures of time are thus defined in the Puranas:
15 nimesa = 1 kastha
30kastha= 1 kala
30 kala = 1 muhurta
30 muhurta = 1 day-and-night
இதை வைத்து தூரம் கணக்கில் வந்துவிட்டது என்று கொண்டாலும் எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?  காலிரிப்பூம் பட்டினத்திலா/
நாகராசன்


2010/12/12 N. Kannan <navan...@gmail.com>
அதனால்தான் சொல்கிறேன், மணிபல்லவம் என்பதை நமக்கு இன்று மிகப்பரிட்சயமாக

N. Kannan

unread,
Dec 12, 2010, 10:37:25 PM12/12/10
to mint...@googlegroups.com
சார்:

ஹரிகி சார் வேறொரு கணக்கு சொல்லுவார். கம்பன் வாய்ப்பாட்டை வைத்து ஹனுமன்
பறந்தது ஆப்பிரிக்காவிற்கு என்று. அனுமன் போனது மேற்கே. மணிமேகலை போனது
கிழக்கே என்று கொண்டால் இந்தோனீசியா இல்லை கொரியா வரும் ;-)

க.>

2010/12/12 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

karuannam annam

unread,
Dec 13, 2010, 5:57:23 AM12/13/10
to mint...@googlegroups.com
அருமையான நடையில் தெளிவாகத் தக்க பாடல்கள் மேற்கோளுடன் எழுதியுள்ளீர்கள் ராஜம் அம்மா
நூலைப் படிக்கத் தூண்டும் பதிவு. தொடர்க.

"வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவுக்கு அடங்காது"

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Nagarajan Vadivel

unread,
Dec 13, 2010, 6:06:17 AM12/13/10
to mint...@googlegroups.com
ஐயா எப்புடிக் கணக்குபோட்டாத்தான் என்ன.  எல்லாம் தண்ணி மேல மெதக்குறதப் பத்தித்தனுங்களே.  கணக்குக் கொஞ்சம் தடுமாறனாலும் அப்புடியே ஸ்டெடியா நின்னு மணிபல்லவத்தீவைக் கண்டிபிடுச்சிடலாம்.  எப்பப் பாத்தாலும் கொரியாவப்பத்திப் சொல்றிங்களே அங்க பகக்த்துல எதுனாச்சும் மெதக்குற எடம் இருக்குங்களா?
நாகராசன்

2010/12/13 N. Kannan <navan...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 13, 2010, 6:40:16 AM12/13/10
to mint...@googlegroups.com


2010/12/13 N. Kannan <navan...@gmail.com>

சார்:

ஹரிகி சார் வேறொரு கணக்கு சொல்லுவார். கம்பன் வாய்ப்பாட்டை வைத்து ஹனுமன்
பறந்தது ஆப்பிரிக்காவிற்கு என்று. அனுமன் போனது மேற்கே. மணிமேகலை போனது
கிழக்கே என்று கொண்டால் இந்தோனீசியா இல்லை கொரியா வரும் ;-)

கண்ணன்,

சூரியனுடைய கதிர்கள் அரை நிமிஷத்துக்கு 2202 யோசனை வேகத்தில் பயணிப்பதாகவே வைத்துக் கொள்வோம்.  அப்படியானால் முதலில் நிமிஷம் என்பதற்கு என்ன டெஃபனிஷன் என்பதைத் தீர்மானித்த பிறகு, இன்றைய கால, தூர அலகுகளை அன்றைய அலகுகளோடு பொருத்திப் பார்க்க முயலவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி என்ற லலிதா ஸஹஸ்ரநாமம் ‘நீ உன் கண்களை ஒரு நிமிஷம் மூடிக் கொள்கையில் புவனங்கள் அழிந்து (மீன்டும் தோன்றுகின்றன’ என்ற பொருளைத் தருகிறது  சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில் என்று அருணகிரி பாடுகிறார்.

இவர்கள் சொல்லும் நிமிஷத்துக்கு அறுபது வினாடிகள், முப்பது வினாடிகள் என்று பொருள் கொள்ள முடியுமா?

சொல்லப்போனால், பாரதி காலம் வரையில்கூட நிமிஷம் என்பதற்கு 60 வினாடி என்ற டெஃபனிஷன் வந்தபாடில்லை.  வினாடி, நொடி, நிமிஷம், அறுபது நொடிகள் கொண்டது ஒரு நிமிஷம் என்ற வரையறையெல்லாம் மிகமிகப் பிற்பட்ட காலத்தில், (ஒருவேளை ஐம்பதுகளுக்குப் பிறகு இருக்கலாம்.  ஏனெனில் இந்த வரையறையை நான் மூன்றாம் வகுப்பில் படித்த நினைவிருக்கிறது.) 

பாரதி, திசை என்ற கவிதையில் பாடுகிறான்: 

ஒருநொடிப் பொழுதி லோர்பத் தொன்பதா யிரமாங் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக் கதிரென வகுப்ப ரான்றோர்
கருதவு மரிய தம்ம! கதிருடை விரைவு மஃது 
பருதியி னின்றோ ரெட்டு விநாடியிற் பரவு மீங்கே.

சூரியனுடைய கதிர்கள் ஒரு நொடிப் பொழுதில் பத்தென்பது ஆயிரம் காதம் (அதாவது ஏறக்குறைய 186000 மைல்) பரவும் என்றும், சூரியனுடைய கதிர்கள் பூமியை வந்தடைய எட்டு விநாடிகள் ஆகின்றன என்றும் பாடுகிறான் என்றால் அதற்கு என்ன பொருள்?  நிமிஷம், நொடி, வினாடி எல்லாமே கண் இமைக்கும் நேரத்தை மட்டுமே குறிக்கப் பயன்பட்ட சொற்கள்; அவற்றில் வினாடியென்றும் நொடியென்றும் புதிய அளவைகளை உருவாக்க பாரதி முயன்றிருக்கிறான் என்பதும் வெளிப்படை.

ஆகவே, பாரதியின் காலம் வரையில் கூட நிமிஷம் என்பது கண் இமைக்கும் நேரத்தைதான் குறித்தது.  அரைநிமிஷ நேரமட்டில் என்று அருணகிரி பாடும்போது, அதில் பாதி நேரம்கூட என்ற பொருள் தொனிப்பதையும், உன்மேஷ நிமிஷோத்பன்ன என்ற லலிதா ஸஹஸ்ரநாமத்தில், கண் இமைக்கும் போது என்ற பொருள் உள்ளதையும் கவனித்தால்,

ரிக் வேதத்தில் நிமிஷத்துக்கு அறுபது வினாடி என்று ஹைபோதீஸிஸ் வைத்துக் கொள்வது எவ்வளவு பொருத்தமானது, அல்லது அறிவுக்கு ஏற்புடையது?

நல்ல ஆராய்ச்சி!  என்ன வழிமுறையை மேற்கொண்டாலும் அதன் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு சொல்லுக்கும், வரையறைக்கும் அந்தந்தக் காலகட்டத்துப் பொருள் என்ன, வரையறை என்ற என்பதையும் புரிந்துகொள்ளவேண்டுமல்லவா?  

நான் ஏதாவது சொல்லப் போக, ஜாதிச் சண்டைக்கு விதை விழுந்து தொலைக்கும்.  நான் விடைபெற்றுக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.  நன்றி.

--
அன்புடன்,
ஹரிகி.

Nagarajan Vadivel

unread,
Dec 13, 2010, 7:10:23 AM12/13/10
to mint...@googlegroups.com
கண்ணன் ஐயா
பல ஆண்டுகளுக்குமுன்னால இணையதளத்துல கெடச்ச குறிப்பக் குடுத்தேன்.  இங்க நைஸா ஹரிசார் வேறமாதிரிச் சொன்னாரேன்னு நைஸாக் கலவரத்த உண்டுபன்றீங்களே நாயமா. ஏதோ நான் அணீல் பளா மாதிரி கிடச்சத இங்க கொண்டுவந்து போட்டேன்.  அந்த சொடுக்கி ஒரு இணப்பைக் குடுக்குது ஆனா அது வேலை செய்யல


http://www.sriramakrishnamath.org/magazine/vk/2001/7-5-1.asp

ரிக் வேதத்தில் நிமிஷத்துக்கு அறுபது வினாடி என்று ஹைபோதீஸிஸ் வைத்துக் கொள்வது எவ்வளவு பொருத்தமானது, அல்லது அறிவுக்கு ஏற்புடையது?
நிமிஷத்துக்கு 69 வினாடியான்னதுக்கு பதில் கீழே
A nimesa is therefore equal to 16/75 seconds


15 nimesa = 1 kastha
30kastha= 1 kala
30 kala = 1 muhurta
30 muhurta = 1 day-and-night
A nimesa is therefore equal to 16/75 seconds. It does come very close to
the correct figure of 186,000 miles per second.
Attached is a translation of Hymn 1.50 in praise of Surya by Ralph Griffith,
which I personally found to be quite near the original text... As far as I can
tell, my reading today of both the sanskrit and the trasliterated or
translated text of the Rg Veda did not reveal "the 2200 yojananas in 1/2
nimisa" reference ascribed above...
இணையதளத்துல கிடைச்ச மத்த செய்திகளயும் இங்க கொடுக்கறேன்
The reference that Mr. Ramanathan alludes to is probably contained in
the commentary on the Rg Veda by a person called Sayana. This is
referred to in the website link that Mr. Ramanathan has attached.

Surya.
1 HIS bright rays bear him up aloft, the God who knoweth all that lives,
Surya, that all may look on him.
2 The constellations pass away, like thieves, together with their beams,
Before the all-beholding Sun.
3 His herald rays are seen afar refulgent o'er the world of men,
Like flames of fire that burn and blaze.
4 Swift and all beautiful art thou, O Surya, maker of the light,
Illuming all the radiant realm.
5 Thou goest to the hosts of Gods, thou comest hither to mankind,
Hither all light to be beheld.
6 With that same eye of thine wherewith thou lookest brilliant Varuna,
Upon the busy race of men,
7 Traversing sky and wide mid-air, thou metest with thy beams our days,
Sun, seeing all things that have birth.
8 Seven Bay Steeds harnessed to thy car bear thee, O thou farseeing
One,
God, Surya, with the radiant hair.
9 Surya hath yoked the pure bright Seven, the daughters of the car; with
these,
His own dear team, he goeth forth.
10 Looking upon the loftier light above the darkness we have come
To Surya, God among the Gods, the light that is most excellent.
11 Rising this day, O rich in friends, ascending to the loftier heaven,
Surya remove my heart's disease, take from me this my yellow hue.
12 To parrots and to starlings let us give away my yellowness,
Or this my yellowness let us transfer to Haritala trees.
13 With all his conquering vigour this Aditya hath gone up on high,
Giving my foe into mine hand: let me not be my foeman's prey.

இதுக்கப்புறமும்
நான் ஏதாவது சொல்லப் போக, ஜாதிச் சண்டைக்கு விதை விழுந்து தொலைக்கும்
கைப்புளாக்கி கோழிச்சண்டை தெரியும் ஜாதிச் சண்டை தெரியாதுங்க.  நம்புங்க
வேத சாஸ்டாங்கம் எல்லாம் ஒங்களுக்குத்தானே தெரியும்.  கைப்புள்ளக்கா தெரியும்.  மணிபல்லவத்துக்கு வழி தேடிக்கிட்டிருக்குற கைப்புள்ள அது பத்துன ஒருசேதி சொன்னா தப்புங்களா.  கண்ணன் ஐயா அந்தக் காலத்துல இருந்து இந்தக்காலம் வரைக்கும் பாலிடிக்ஸ் பண்ணிக்கிட்டிருக்கீகளே. இப்ப கைப்புள்ளகிட்டயுமா?
நாகராசன்
2010/12/13 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

N. Kannan

unread,
Dec 13, 2010, 7:23:28 AM12/13/10
to mint...@googlegroups.com
அன்பின் நாகராஜன்:

தயவுசெய்து நாம் இடைவெளி மறப்போம். தாங்களும் உங்கள் தரவுகள் கொண்டு
உண்மை அறிய விரும்புகிறீர்கள். ஹரிகி ஐயாவும் தன் தரவுகள் மூலம் அதையே
செய்கிறார்.

இங்கு வித்தியாசம் என்னவெனில். நமக்கு சமிஸ்கிருதம் தெரியாது. மூல நூல்
பாண்டித்தியம் கிடையாது. எதாவது வெள்ளைக்காரன் படிச்சத வைத்து மொழி
பெயர்த்ததைத்தான் நீங்களும், நானும் சான்றாக எடுத்துக் கொள்ளமுடியும்.
நீங்கள் சரியாகச் சொன்னபடி, ஹரிகி, தேவ். ரங்கன், எல்.என்.எஸ் இன்னும்
சிலருக்கு மூலபாடம் லெகுவாக வருகிறது. அவர்கள் சொல்வதைக் கணிக்கில்
கொள்ளுதல் நலம். ஏனெனில் இது நேரடியாக `குதிரைமுக`ப்பாடம் (ஹயக்ரீவர்
கிட்டேயிருந்து வருதுன்னு சொல்லறேன். சரஸ்வதி நிலை கூட அடுத்த
படிக்கட்டுதான் :-)

அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

இன்று இன்னொன்றும் தோன்றியது.

ராஜம் அவர்கள் சொன்ன கதையில் ஆபுத்திரன் சாவக (ஜாவா)த்தீவில் மறுபிறப்பு
பெற்றவுடன் அங்கு தமிழில் உரையாடுகிறான். ஒரு காலத்தில் சாவகம்,
சுமத்திரா, கெமிர் ராஜ்யம் போன்ற இடங்களில் தமிழ் புழங்கி இருக்க
வாய்ப்புண்டு. கெமிர் அரச பரம்பரை அனைத்தும் அச்சாக பல்லவ/சேர
குடும்பப்பெயர்களை வைத்துள்ளனர். மேலும் சியாம்ரீப் விமான நிலையத்திலுள்ள
ஒரு கல்வெட்டு நகலில் அச்சாக தமிழ் எழுத்துக்கள் உள்ளதை நான் இங்கு
ஆவணப்படுத்தியுள்ளேன்.

எனவே சாவகம் என்பது பண்டைத் தமிழருக்கு அதிக தூரமில்லை என்று தெரிகிறது.

கொரியா தீப கற்பம் என்றாலும், நான் இருக்கும் கோஜே ஒரு தீவு. நம் இந்திய
ராணி (செம்பவளம்) வந்திறங்கிய கிம்ஹே பகுதி அடுத்த கரை. ஜேஜு என்பது
பெரிய தீவு (எங்கள் தீவு சிங்கப்பூர் அளவு. ஜேஜூ அதைவிடப்பெரிது).

கண்ணன்.

2010/12/13 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
> கண்ணன் ஐயா

N. Kannan

unread,
Dec 13, 2010, 7:25:00 AM12/13/10
to mint...@googlegroups.com
ஹரிகி:

தாங்கள் அப்படியெல்லாம் ஏதும் எண்ணுதல் கூடாது.
உங்கள் தரவுகள் இங்கு மிக முக்கியம்.
உங்களை எக்காலத்திலும் மின்தமிழ் உயர்வான பீடத்தில் வைத்தே
அணுகியிருக்கிறது. உங்கள் புலமைக்கு என்றும் இக்குழு ஆட்பட்டு உள்ளது
என்பது தாங்கள் அறியாததா?
தாங்கள் உங்கள் புரிதலை எங்களுக்குச் சொல்லவும்.
பேராசிரியர் மிகவும் நல்லவர். நீங்கள் நேரில் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

க>.

2010/12/13 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Dec 13, 2010, 7:40:42 AM12/13/10
to mint...@googlegroups.com
கண்ணன் அவர்களே
நான் அடிப்படையில் ஒரு ஆய்வாளன் என் கருத்து நிற்கும் என்று நம்பினால் நான் ஆய்வாலனே அல்ல.  நோக்கம் ஒன்று பாதைகள் பல.  நான் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்வதில் நாட்டம் உள்ளவன்.  வீஆகிக் கிடக்குதண்ணே வேரிற் பழுத்த பலா என்ற கொள்கையில் என் அனுமானம் மணி பல்லவம் என்பது தமிழகத்தின் கிழக்குக் கரையில் மாமல்லைப் பட்டிணம் (மாமல்லபுரம் அன்று) என்று கருதி அது தொடர்பான தரவு/தகவல் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறேன்.  இங்கு வெளியிடுவதன் நோக்கம் என் அனுமானம் தவுடைத்தா என்று அறிந்துகொள்ளவே
ராஜம் அம்மா அவர்கள் அங்கு வளரும் செடிகள் மரங்கள் குளம் பொய்கை என்றெல்லாம் குறிப்ப்டும் தகவல் என்னிடல் உள்ள தரவுகளுடன் ஒத்துப்போகிறதா என்று பார்ப்பதே நோக்கம். 
http://picasaweb.google.com/trshash84/Kattupalli#5191381357717544418
இந்த இடத்துக்கு தொன்மையான வரலாறு உண்டு
http://holyindia.org/temple/thirupalaivanam/thirupalaivanam_map
மற்றபடி எனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.  இது அறிவுப்பூர்வமான ஆய்வு. எனக்குள்ள ஆய்வுத் திறனில் நம்பிக்கை வைத்து முயற்சி செய்கிறேன்.
நாகராசன்
2010/12/13 N. Kannan <navan...@gmail.com>
அன்பின் நாகராஜன்:

rajam

unread,
Dec 13, 2010, 12:38:58 PM12/13/10
to mint...@googlegroups.com

நல்ல ஆராய்ச்சி!  என்ன வழிமுறையை மேற்கொண்டாலும் அதன் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு சொல்லுக்கும், வரையறைக்கும் அந்தந்தக் காலகட்டத்துப் பொருள் என்ன, வரையறை என்ற என்பதையும் புரிந்துகொள்ளவேண்டுமல்லவா?  
இது எனக்கு மிகவும் பிடித்த கருத்து! (ஒரு காலத்தில் நான் "அணங்கு" என்ற சொல் பற்றிக் கட்டுரை எழுதியதற்கு இந்தக் கருத்துத் தான் என்னை உந்தியது. ஆமாம், திரு அன்பு மணியைத் தொல்லை செய்து ... தேடு பொறி மென்பொருள் வாங்கும் முயற்சி என்ன ஆச்சு?)
நிற்க. இங்கே ஒரு கொசுறுச் செய்தி...

மனிமேகலைக் கதையை உரைப்படுத்தி எழுதியபோது ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பற்றிச் சொல்ல நினைத்துப் பிறது தவிர்த்துவிட்டேன். அதை இங்கே சொல்கிறேன்.
 
கோமுகிப் பொய்கையிலிருந்து ஆபுத்திரனின் பிச்சைப் பாத்திரம் மணிமேகலை கைக்குள் புகுகிறது.
"Instantly" என்பார்களே அது போல ... "பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்" ஆகிய மணிமேகலை என்ன செய்கிறாள் என்பதைச் சாத்தனார் சொற்களில் இதோ:

"மாத்திரை இன்றி மன மகிழ்வு எய்தி
மாரனை வெல்லும் வீர நின்னடி
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் நின்னடி
... ... ..."
என்று வணங்குகிறாள்.
இதில் "மாத்திரை" என்பதை எப்படி விளக்க முயன்றாலும் முடியாமல் போகிற மாதிரித் தோன்றுகிறது. காலம் என்பது கழியவில்லை என்ற நுணுக்கமான கருத்தை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்!
தொல்காப்பியத்தில் ...
"கண்ணிமை, நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே"
என்று படித்த நினைவு.
"கண் இமைக்கும் அளவு நேரம் கூடத் தயங்காமல்" அல்லது "கை விரல் நொடிக்கும் அளவு நேரம் கூடத் தயங்காமல்" மணிமேகலைக்கு மன மகிழ்வு பொங்குகிறது என்று சொல்லலாமா என்று பார்த்தேன். மனதுக்கு நிறைவில்லை. "மாத்திரை" என்ற சொல்லையே வைத்துக்கொள்ளலாம்; அதை இழந்துவிடக்கூடாது என்று தோன்றியது. பேசாமல் இருந்துவிட்டேன்.
அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Dec 13, 2010, 12:41:13 PM12/13/10
to mint...@googlegroups.com
நல்ல சொல்லுக்கும் ஊக்கம் தந்தமைக்கும் மிகவும் நன்றி, திரு சொ. வி. ஐயா!
மணிமேகலை கட்டாயம் படிக்கப்படவேண்டியது.  என்னால் முடிந்த வரை செய்கிறேன். 
அன்புடன்,
ராஜம்
Reply all
Reply to author
Forward
0 new messages