மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - சுதமதி

2,278 views
Skip to first unread message

rajam

unread,
Nov 21, 2011, 10:12:02 PM11/21/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram, N. Kannan, Dhivakar V, Vinodh Rajan
சுதமதி
-----------

சுதமதி யார் என்று கேட்டால் ... சுதமதி என்பவள் மணிமேகலையின் தோழி என்றுதான் சட்டென்று சொல்ல வரும். அப்படி இருக்கத் தேவையில்லை. 

சுதமதியும் மணிமேகலை போலவே இளமையானவள் என்று நினைக்கவும் தோன்றும். அப்படி இருக்கத் தேவையில்லை.

விவரம் என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுதமதி அறிமுகம்
-----------------------

மதுரையில் கோவலன் கொலைக்குப் பிறகு பூம்புகாரில் நடந்த இந்திர விழாவிற்கு மாதவி தன் மகள் மணிமேகலையுடன் வரவில்லை. அது பற்றிப் பூம்புகார் நகரத்து மக்கள் பேசுகிறார்கள். மக்களின் பேச்சைப் பற்றி மாதவியின் தாய் சித்திராபதிக்கு வருத்தம். மக்கள் சொல்வதை மாதவிக்குத் தெரிவிக்க வேண்டி, தாய் சித்திராபதி மாதவியின் தோழி வயந்தமாலை என்பவளை மாதவி இப்போது தங்கி இருக்கும் இடத்திற்கு அனுப்புகிறாள். 

மாதவி இப்போது இருக்கும் இடம் ஒரு "மாதவர் உறைவிடம்." அதாவது அறவண அடிகள் போன்ற தவசிகள் இருக்கும் இடம்.

வயந்தமாலை மாதவியிடம் பேசும்போது .. அங்கே மலர் தொடுத்துக்கொண்டிருக்கும் மணிமேகலைக்கு ... கோவலன், கண்ணகி, மாதவி இவர்களைப் பற்றிய பழைய கதை தெரியவருகிறது.

மணிமேகலையின் கண்களில் பெருகும் வருத்தக்கண்ணீர் அவள் தொடுத்துக்கொண்டிருந்த மலர்களின் தூய்மையைக் கெடுக்கிறது.

பெற்ற தாய் ஆகிய மாதவி, மகள் மணிமேகலையின் கண்ணீரைத் தன் அழகிய செங்கையால் துடைத்து ... தூய்மை இழந்துபோன இந்த மலர்களுக்கு நிகரான தூய மலர்களை நீயே பறித்துக் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறாள்.

அந்த நேரத்தில்தான் ... மணிமேகலையுடன் மலர் தொடுத்துக்கொண்டிருந்த சுதமதி முன்வந்து பேசுகிறாள். 

"மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்
சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும் ..."

என்ன சொல்கிறாள் சுதமதி?


"மணிமேகலையின் கண்களில் வடியும் கண்ணீரைக் கண்டால் காமனும் நடுங்குவான். இவளைக் கண்டால் ஆடவர் அகன்று போவார்களோ? தங்கள் இயற்கைத் தன்மையிலிருந்து மாறி, இவளை விரும்பாமல் அவர்கள் நின்றால் அவர்கள் பேடிகள், இல்லையா?"


சுதமதி ஏன் இப்படிச் சொல்லுகிறாள்? அவளுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்குக் காரணம்.


சண்பை (== சீர்காழி) என்ற ஊரில் கௌசிகன் என்ற அந்தணனின் மகளாகப் பிறந்தவள் சுதமதி. தனியாக எங்கும் போய்வருவதில் அச்சமில்லாமல் ஒரு முறை ஒரு மலர்வனத்தில் ("ஆராமத்தில்") மலர் பறிக்கப் போனாள். இந்திரவிழாவைக் காண வந்த விஞ்சையன் ஒருவன் அங்கே வந்து சுதமதியைக் கவர்ந்துகொண்டு வான்வழியே போனபோது அவள் அவனுக்கு இணங்கினாள். பிறகு அந்த மாருதவேகன் சுதமதியை இந்தப் புகார் நகரில் விட்டுவிட்டுப் போய்விட்டான். அந்த நாளிலிருந்து சுதமதி இங்கே இருக்கிறாள்.

(அவள் கதை இன்னும் இருக்கிறது. அதைச் சுதமதியே பிறகு சொல்லுவாள்.)


இப்படித் தன் கதையை ஓரளவு சொன்ன சுதமதி அழகிய மணிமேகலை தனியாக எங்கும் போகக்கூடாது என்ற கருத்துடன் இருப்பதில் வியப்பில்லை.

அதனால் ... மணிமேகலையே போய்ப் புதுமலர் பறித்துக் கொண்டுவரவேண்டும் என்று மாதவி சொன்னதும் சுதமதி அஞ்சுகிறாள். மணிமேகலை தனியாக மலர் பறிக்கப் போகக்கூடாது என்று சொல்கிறாள்.

பிறகு, அந்தப் பூம்புகார் நகரத்தின் பல இடங்களைப் பற்றி விளக்குகிறாள். இலவந்திகையின் எயிற்புறம், உய்யானம், சம்பாதிவனம், கவேரவனம் ... இப்படிப் பல இடங்களில் உள்ள கடுமைகளை விளக்குகிறாள். பிறகு, பகவனது ஆணையால் பல மலர்கள் பூக்கும் உவவனம் என்ற இடத்திற்கு மட்டுமே மணிமேகலை போகலாம் என்றும் மணிமேகலையுடன் தானும் (துணைக்குப்) போவதாகவும் சொல்கிறாள்.

மலர்வனத்தில் சுதமதியும் மணிமேகலையும்
-------------------------------------------------------- 

சுதமதி மணிமேகலையை உவவனத்துக்கு அழைத்துக்கொண்டு போகும்போது ஊரார் மணிமேகலையைச் சுற்றி வந்து பார்த்து அவளைக் கடுமையான தவவழியில் செலுத்தியதற்காக மாதவியைக் கடிந்து பேசுகிறார்கள். 

இதையெல்லாம் கடந்து, சுதமதி மணிமேகலையைக் கூட்டிக்கொண்டு போய் மலர்வனத்தின் ஒவ்வோர் இடத்தையும் சிறு குழந்தைக்குச் சொல்வதுபோல விளக்கிக் காட்டுகிறாள்.


அப்போது உதயகுமரன் மணிமேகலையைத் தேடி அங்கே வருகிறான். அவனுடைய தேர் வரும் ஒலி கேட்டு மணிமேகலை பதறுகிறாள். சுதமதியிடம் சொல்லுகிறாள்: 

"சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என்மேல் வைத்த உள்ளத்தான் என
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆயிழை
ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு-என"

[சுருக்கமான பொருள்: சித்திராபதியோடு சேர்ந்து நினைத்து, உதயகுமரன் என்மேல் உள்ளம் வைத்திருக்கிறான் என்று வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் சொன்னதைக் கேட்டேன். அதனால் அவன் இப்போது இங்கே (என்னைத் தேடி) வருகிறான்போல. அவனுடைய தேர் வருவதுபோல ஒலி கேட்கிறதே, நான் என்ன செய்ய?]


முதல் முறையாக ... காப்பியத் தலைவி மணிமேகலை பேசிய இடம் இது! பெற்ற தாய் மாதவியிடம்கூட அவள் பேசியதில்லை. சுதமதியிடம் வாய் திறந்து பேசுகிறாள்.


மணிமேகலையின் அச்சம் மிகுந்த உரை கேட்ட சுதமதி ஒரு நடுங்கிய மயிலுக்குப் புகலிடம் கொடுப்பதுபோல மணிமேகலையை அங்கே இருக்கும் பளிங்கு மண்டபத்திற்குள் போகவைத்து, அந்த அறையைப் பூட்டி, வெளியே தள்ளி நிற்கிறாள். 

"சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல் 
பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள் அகத்து இரீஇ
ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை
நீங்காது நின்ற நேரிழை ..."

[சுருக்கமான பொருள்: மணிமேகலை சொன்னதைக் கேட்ட சுதமதி நடுங்கும் மயில் ஒரு புகலிடம் தேடிப் புகுவதைப் போல ... பளிங்கு மண்டபத்துக்குள் போ என்று மணிமேகலையை அங்கே போகவைத்து, அந்த மண்டபத்தின் அறைக் கதவைத் தாழிட்டு, அந்த மண்டபத்திலிருந்து ஐந்து வில் கிடக்கும் அளவிற்கு விலகி அங்கேயிருந்து வேறு எங்கும் போகாமல் நின்ற நேரிழை ...]

சுதமதிக்கு எவ்வளவு பாதுகாப்பு உணர்வு, பாருங்கள்! முதலில், மணிமேகலைக்கு உதயகுமரனைப் பற்றிய அச்சத்தைப் புரிந்துகொள்கிறாள். உடனே ஒரு பாதுகாப்பான இடத்தில் அந்த இளம்பெண்ணை இருக்கவைக்கிறாள். அதன்பின் ... முறைப்படி அந்த இடத்தைவிட்டு விலகியும் நிற்கிறாள். அப்படி அவள் விலகி நிற்பதுதான் முறை என்பதோடு நுண்ணிய அறிவு என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

உதயகுமரன் அதற்குச் சற்று முன்புதான் "காலவேகம்" என்ற மதயானையை அடக்கிவிட்டு வரும்வழியில் அவனுடைய நண்பன் எட்டிகுமரன் மூலம் மணிமேகலை உவவனத்துக்குப் போனதைக் கேள்விப்பட்டிருக்கிறான்.


சுதமதி - உதயகுமரன் உரையாடல்
--------------------------------------------- 

மணிமேகலையைத் தேடி அங்கே வந்த உதயகுமரன் சுதமதியைப் பார்க்கிறான்; அவளிடம் மணிமேகலையைப் பற்றிக் கேட்கிறான். 

"... யாருமில் ஒரு சிறை
ஒரு தனி நின்றாய், உன் திறம் அறிந்தேன்"

[சுருக்கமான பொருள்: யாரும் இல்லாத இந்த இடத்தில் நீ தனியாக நிற்கிறாய். உன்னைப்பற்றி எனக்குத் தெரியும்.]

(குறிப்பு: மாருதவேகனையும் சுதமதியையும் பற்றி உதயகுமரனுக்குத் தெரிந்திருக்கிறது. அதைப் பிறகு சொல்லுவான். சுதமதியைப் பற்றி ஒரு தாழ்வான எண்ணம் அவனுக்கு இருந்திருக்கலாம்.)

ஆனால், மணிமேகலை ஏன் இங்கு வந்தாள் என்பது அவனுக்குத் தெரியவேண்டும். மணிமேகலை தக்க பருவம் அடைந்துவிட்டாளா? துறவிகள் இருக்கும் இடத்தை விட்டு இங்கே ஏன் அவள் தனியாக வந்தாள்? என்பது அவனுடைய அடிப்படைக் கேள்வி.

மணிமேகலையின் உடல் உறுப்புக்களைக் குறித்துப் பேசி, அவன் இப்படிக் கேட்டது சுதமதியை வருத்துகிறது. வெளியேறுவதற்குத் திறப்பிடம் எதுவும் இல்லாத ஓர் அறையில் அடைக்கப்பட்டதுபோன்று தவிக்கிறாள். 

ஆயினும், கேட்டவன் அரச குமரன் அல்லவா? அவனிடம் தகுந்த மரியாதையோடு பேசவேண்டுமே.

சோழ அரசரின் பரம்பரையைப் புகழ்கிறாள். அந்தப் பரம்பரையில் வந்தவனே என்று தொடங்கி ... அவன் நினைப்பை ஆட்கொண்டிருக்கும் மனித உடம்பின் உண்மைத் தன்மையை எடுத்துச் சொல்லுகிறாள்.

"வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது;
புனைவன நீங்கின் புலால் புறத்து இடுவது;
மூப்பு விளிவு உடையது; தீப்பிணி இருக்கை;
பற்றின் பற்றிடம்; குற்றக் கொள்கலம்;
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை;
அவலக் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இது, என உணர்ந்து,
மிக்கோய், இதைப் புறமறிப் பாராய்!"

[சுருக்கமான பொருள்: மனித உடம்பு என்பது முன் செய்த வினைப் பயனால் உருவாகி வந்தது. அதுவே மீண்டும் பிற வினைகளுக்கும் இடம் ஆகிறது. மேலே புனைந்துகொண்டிருக்கும் பொருள்களை நீக்கிவிட்டால் வெளியே தெரிவது புலால்.  மூத்துப் போவதையும் முடிந்துபோவதையும் தன்மையாக உடையது இந்த உடம்பு. கொடிய பிணிகளுக்கு இருப்பிடம் இது. ஆசைகள் தங்கும் இடம் இது. இது குற்றங்களைச் சேர்த்துவைக்கும் கலம். புற்றுக்குள் அடங்கி ஒடுங்கும் பாம்பு போல அழிவை உண்டாக்கும் சீற்றம் சேர்ந்த இடம் இது. இது, தாழவைக்கும் கவலை, தனிமை, அழுங்கிப்போதல் ... இந்த உணர்வுகள் நீங்காத உள்ளத்தைத் தன்னுள்ளே கொண்டது. இதுதான் மக்கள் உடம்பின் தன்மை என்று இதை நன்றாக உணர்ந்து பார், சிறந்தவனே! இதை உணர்ந்து ... இதை (== மனித உடலை) இதனுடைய உட்புறம் வெளியே காணும்படி மாற்றிப் போட்டுப் பார்.]


அடடா! மதயானையை அடக்கி வென்ற கையோடு, காம எழுச்சியோடு மணிமேகலையைத் தேடிவந்து, அவள் தக்க பருவம் அடைந்துவிட்டாளா, தனக்குக் கிடைப்பாளா என்று தெரிந்துகொள்ளத் துடித்த உதயகுமரனின் தவிப்புக்குக் கொடுக்கும் பரிசா இது! 

ஆனாலும், நாட்டை ஆளும் அரசனின் மகனுக்கு இப்படி அறவுரை சொல்லும் துணிவு யாருக்கு இருக்கும்? துணிவு நிறைந்த அந்த உரிமையைச் சுதமதி, மணிமேகலை ஆகிய இருவரைத் தவிர வேறு யாருக்கும் காப்பிய ஆசிரியர் தரவில்லை!

மணிமேகலைக் காப்பியத்தில் சோழ இளவரசன் உதயகுமரனுடன் உரையாடுகிறவர்கள் மிகச் சிலரே -- அவனுடைய நண்பன் எட்டிகுமரன், சுதமதி, சித்திராபதி, மணிமேகலா தெய்வம், மணிமேகலை. அவனுடைய பெற்றோர் ஆகிய சோழ அரசனும் அரசியும்கூட அவனுடன் உரையாடவில்லை.

சரி. 

சுதமதி இப்படி மனித உடலின் உண்மைத் தன்மையை விளக்கிச் சொன்ன சொற்கள் இளங்கோனின் மனதில் போய்ப் படிவதற்குமுன் ... பளிக்கறையின் உட்புறத்திலிருந்து பவளப் பாவை ஒன்று வெளியே தெரிவதுபோல மணிமேகலையின் உருவம் தெரிகிறது!

உதயகுமரன் அந்த உருவம் ஓர் ஓவியம் என்று முதலில் நினைக்கிறான்; பிறகு அது மணிமேகலை என்று உணர்கிறான். அந்தப் பளிங்கு மண்டபத்தைத் தடவிப் பார்க்கிறான். உள்ளே போக முடியவில்லை. சுதமதியிடம் கேட்கிறான்: "இவள் எப்படிப்பட்டவள்?"

சுதமதி சொல்கிறாள்.

"குருகு பெயர்க் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாளாயின் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள்; சாப சரத்தி;
காமற்கடந்த வாய்மையள் ..."

[சுருக்கமான பொருள்: குருகு (== 'கிரௌஞ்சம்') என்ற பெயருடைய மலையைப் பிளந்த முருகன் போன்ற உன் இளமையழகைத் தன் கண்ணால் இவள் பருகவில்லையென்றால் ... அரும்பிக்கொண்டிருக்கும் தவசி இவள்; சாபக் கணை தொடுக்க வல்லவள்; காமனைக் கடந்த நிலையில் உள்ளவள்.]

அதற்கு உதயகுமரன் சொல்லும் மறுமொழியைப் பாருங்கள்.

"சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆகென"

[சுருக்கமான பொருள்: "வெள்ளம் மிகுந்தால் அதைத் தடுக்கும் அணை உண்டோ? காமம் ஆழ்ந்து திண்மைப்பட்டால் அதை நிறுத்த முடியுமோ? அவள் தகுந்த நிலையை (== 'பருவத்தை') அடைந்திருந்தால் எனக்குத் தகுந்தவள் ஆகட்டும்.]

இப்படிச் சொல்லிவிட்டு, குமுறும் நெஞ்சத்தோடு அங்கேயிருந்து புறப்படுகிறவன் நின்று சுதமதியிடம் கேட்கிறான்: "அராந்தாணத்தில் (== 'அருகன் பள்ளி'யில்) ஒரு விஞ்சையனால் விடப்பட்டவள் என்று உன்னைப் பற்றி இந்த ஊரில் பலரும் பேசுகிறார்களே. அங்கேயிருந்து இங்கே இவளோடு நீ வந்தது ஏன்?"

சுதமதியும் மணிமேகலையும் வந்த மலர்வனம் புத்த பீடிகை உள்ள இடம். அதனால் உதயகுமரனுக்குச் சுதமதியைப் பற்றி வியப்பு.

அப்போதுதான் சுதமதி தன் முழுக் கதையையும் சொல்கிறாள்.


சுதமதியும் அவள் தந்தையும்
------------------------------------- 

சுதமதியின் வயது முதிர்ந்த பார்ப்பனத் தந்தை அவளுடைய அன்னை இறந்த பிறகு, குமரித் துறையில் நீராடப் போகிறவர்களோடு சுதமதியைத் தேடிப்போகிறான். காவிரித் துறையில் நீராடிவரும்போது சுதமதியைப் பார்க்கிறான்.

"பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய
எற்கெடுத்து இரங்கித் தன் தகவு உடைமையின்
குரங்குசெய் கடற்குமரியம் பெருந்துறைப்
பரந்துசெல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெரும் துறைக் காவிரி ஆடிய
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ..."

[சுருக்கமான பொருள்: பழவினையின் பயனால் பிழையான மணம் அமைந்த நான் காணாமல் போனதற்காக இரக்கப்பட்டு, தன் சிறப்பின் காரணமாக, குமரிக் கடலில் நீராடச் செல்லும் பல மக்களோடு சேர்ந்து என்னைத் தேடி வந்து, காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் நீராடிவரும் வடமொழியாளர்களோடு வருகிறவன் (என்னைக்) கண்டு ...]

காவிரியில் நீராடி வந்த தந்தை சுதமதி எப்படி அங்கே வந்துசேர்ந்தாள் என்று கேட்டுத் தெரிந்துகொள்கிறான். அவள் இனிமேல் அந்தணருக்கு ஏற்றவள் இல்லை என்று தெரிந்தும், அன்புடைய தந்தை ஆதலால் அவளைக் கைவிடாமல் பிச்சையெடுத்து அவளைக் காப்பாற்றுகிறான்.

"ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடல் ஈயான்;
இரந்தூண் தலைக்கொண்டு இந்நகர் மருங்கில்
பரந்துபடு மனைதொறும் திரிவோன்"

[சுருக்கமான பொருள்: மறை ஓதும் அந்தணர்களுக்கு நான் ஏற்றவள் இல்லை என்று ஆனபிறகும், அன்புடையவன் ஆதலால் என்னைக் கைவிடவில்லை. இரந்து உண்ணுவதை மேற்கொண்டு இந்த நகரத்தில் எல்லா வீடுகளுக்கும் போய் வந்துகொண்டிருந்தான்.]

ஒரு நாள், அப்போதுதான் ஈன்ற பசு ஒன்று அவனைக் குத்திவிட, அவன் பெருங்குடல் வெளியேற, அதைக் கையில் ஏந்திக்கொண்டு, சுதமதி முன்பு இருந்த இடம் என்ற நம்பிக்கையில் சமணர்களின் இடத்துக்கு வருகிறான்.

" ... ஒரு நாள்
புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்,
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிண நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி,
என்மகள் இருந்த இடம் என்று எண்ணி,
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர் காணும் சரண்"

[சுருக்கமான பொருள்: ஒரு நாள் ஈன்ற பசு பாய்ந்ததால் அவன் வயிறு புண்ணாக, கணவிர மலர் மாலைபோல அவன் பெருங்குடல் வெளியே வர, அதைக் கையில் பிடித்தவாறே, தாங்கமுடியாத துன்பத்துடன், தன் மகள் (== சுதமதி) முன்பு இருந்த இடம் என்றதனால் சமணர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து, "சமணர்களே, சரண் அடைகிறேன்" என்று அடைக்கலம் கேட்க ...]

சமணர்கள் மறுத்துவிடுகிறார்கள். சுதமதியின்மேல் கோபம் கொண்டு, இங்கே இருக்க உங்களுக்குத் தகுதியில்லை என்று சொல்லிக் கையை உதறிவிடுகிறார்கள்.

கண்ணீருடன் சுதமதியும் அவள் தந்தையும் தெருக்களில் திரிந்து "அறவோர் இருக்கிறீர்களா? எங்களுக்கு வேறு யாரும் இல்லை" என்று வீடுதோறும் போய்க்கேட்டுப் புலம்புகிறார்கள்.

நல்ல வெயில் நேரம். அப்போது, கையில் பிச்சைப் பாத்திரம், குளிர்ந்த நிலவு போன்ற முகம், பொன்னிற ஆடை ... இவற்றோடு ஒருவன் அவர்களை நோக்கி வருகிறான்.

அவன் யார்? அவன் பெயர் சங்க தருமன்.

அந்தச் சங்க தருமன், சுதமதியையும் அவள் தந்தையையும் பார்த்து, "என்ன ஆயிற்று" என்று கேட்டு, தன் கையிலிருந்த பாத்திரத்தைச் சுதமதியிடம் கொடுத்துவிட்டு, அவள் தந்தையைத் தலைமேல் தூக்கி எடுத்துக்கொண்டு, இரண்டுபேரையும் மாதவர் உறைவிடத்துக்கு அழைத்துப்போகிறான். போய், புத்த தேவனின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறான்.

அந்த மாதவர் உறைவிடத்தில்தான் சுதமதி இன்றும் இருக்கிறாள். மாதவியும் மணிமேகலையும் அங்கேதான் இருக்கிறார்கள்.

அங்கே போனதிலிருந்து சுதமதி புத்த தேவனைத் தவிர வேறு யாரையும் புகழுவதில்லை.

"எங்கோன் இயல்குணன் ஏதம்-இல் குணப்பொருள்
உலக நோன்பில் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதைக்கு எய்த
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
அறக்கதிராழி திறப்பட உருட்டி,
காமற் கடந்த வாமன் பாதம்
தகை பாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன்; வேந்தே வாழ்க!"

[சுருக்கமான பொருள்: எமக்குத் தலைவன்; இயல்பாக அமைந்த குணங்களை உடையவன்; குற்றம் இல்லாத குணம் உடையவன்; உலக வாழ்வில் பல நிலைகளை உணர்ந்ததால் தனக்கு என்று வாழாமல் பிறர்க்காக இருப்பவன்; மன்பதைக்கு இன்பம் உண்டாகவேண்டி, அருளாகிய அறம் பூண்டு, அறத்தைப் பரப்பி வருகிறவன்; காமனைக் கடந்த அந்த வாமனுடைய அடிகளின் பண்புகளைப் பாராட்டுவதைத் தவிர வேறு எதையும் சொல்வதில்லை. வேந்தனே, வாழ்க!]

உதயகுமரனுக்கு இப்படித் தன் கதையைச் சுதமதி சொல்ல, உதயகுமரன் மலர்வனத்தைவிட்டுப் புறப்படுகிறான். ஆனால், போகுமுன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.

"அஞ்சொல் ஆயிழை, நின் திறம் அறிந்தேன்
வஞ்சி நுண்ணிடை மணிமேகலைதனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு"

[சுருக்கமான பொருள்: அழகிய சொற்களைப் பேசுபவளே! உன்னைப் பற்றித் தெரிந்துகொண்டேன். வஞ்சிக்கொடிபோன்ற மெல்லிய இடையை உடைய அந்த மணிமேகலையைச் சித்திராபதி மூலமாக நான் சேர முடியும்.]

பாவம், எவ்வளவு தவிப்பும் அதே நேரத்தில் திண்ணமான மன உறுதியும் ... அந்த உதயகுமரனுக்கு!


உதயகுமரன் பற்றி மணிமேகலையின் உணர்வு
----------------------------------------------------------- 

உதயகுமரன் அந்த இடத்தைவிட்டுப் போனது தெரிந்து மணிமேகலை பளிக்கறையிலிருந்து வெளியே வருகிறாள்.

வந்தவள் சுதமதியிடம் மனம் திறந்து தன் உணர்ச்சிகளைக் கொட்டுகிறாள்! உதயகுமரன்மேல் தன் மனம் போனது என்று வெளிப்படையாகச் சொல்கிறாள்.

"கற்புத்தான் இலள்; நற்றவ உணர்விலள்;
வருணக் காப்பு இலள்; பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்;
இதுவோ அன்னாய், காமத்து இயற்கை?
இதுவே ஆயின் கெடுக தன் திறம்"

[சுருக்கமான பொருள்: 'கற்பு இல்லாதவள், நல்ல தவ உணர்ச்சி இல்லாதவள், வருணம் தரும் காப்பு இல்லாதவள், பொருளுக்கு விலைகொடுத்து வாங்கக்கூடியவள்' என்றெல்லாம் என்னைத் தாழ்வாக நினைத்து விரும்பினான் அவன். அந்தத் தாழ்வை நினைத்துப் பார்க்காமல் எனக்கு அறிமுகமில்லாத அவன்பின்னால் என் நெஞ்சம் போனதே! அன்னையே, இதுதான் காமத்தின் இயற்கையா? அப்படியானால் ... இந்தக் காமத்தின் வலிமை கெட்டுப்போகட்டும்.]

தன்னைப் பெற்றவளாகிய மாதவியிடம்கூட மணிமேகலை பேசியதில்லை. சுதமதியிடம்தான், அதுவும் ... தன் இளமை உணர்ச்சியை மறைக்காமல் இப்படி வெளிப்படுத்துகிறாள். மணிமேகலையின் அந்த உணர்ச்சி வெளிப்பாட்டை அறிந்துகொள்ளும் வாய்ப்பு சுதமதிக்கு மட்டுமே அமைகிறது.

அப்போது அங்கே மணிமேகலாதெய்வம் வருகிறாள். சுதமதியும் மணிமேகலையும் ஏன் அங்கே இருக்கிறார்கள் என்று கேட்டு விவரம் தெரிந்துகொண்டு, அவர்கள் எப்படி அந்த இடத்தைவிட்டு மீண்டும் அவர்கள் இருப்பிடத்துக்குப் (== மாதவர் உறைவிடத்துக்குப்) போகவேண்டும் என்று சொல்கிறாள். 

அப்படி மணிமேகலாதெய்வம் அவர்கள் போகவேண்டிய வழியில் இருக்கும் சக்கரவாளக் கோட்டம் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுதமதி தூங்கிவழிகிறாள்! அதுதான் சமயம் (!) என்று மணிமேகலாதெய்வம் மணிமேகலையை எடுத்துக்கொண்டு வான்வழியே போய் மணிபல்லவத்தீவில் வைத்துவிட்டுத் திரும்பிவந்து சுதமதியை எழுப்பி நடந்ததைச் சொல்லி மாதவியிடம்போய் அவள் மகள் இன்னும் ஏழு நாட்களில் திரும்புவாள் என்று தெரிவிக்கச் சொல்கிறாள். சுதமதியும் அவ்வாறே செய்கிறாள்.


சுதமதியின் கதை முடிவு
-------------------------------

இந்த மலர்வன நிகழ்ச்சிக்குப் பிறகு சுதமதி பின்னிலையில் அமைகிறாள். அறவண அடிகள் போகும் இடத்துக்கெல்லாம் மாதவியுடன் சேர்ந்து தானும் போய்வருகிறாள். 

சுதமதி வாழ்வு எப்படி முடிகிறது?

பிற்காலத்தில் இவள், மாதவி, மணிமேகலை மூவரும் "ஓங்குயர் போதி உரவோன் திருந்தடி தொழுது வலம் கொண்டு தொடர்வினை நீங்கி நன்னெறிப் படர்குவர்" என்று அறவண அடிகள் மூலம் தெரிகிறது.

++++++++++++++++++++++++++++++++++++++++ 

இந்தக் காப்பியத்தில், மணிமேகலையைப் பெற்ற தாய் மாதவிக்கும் இல்லாத பங்கு சுதமதிக்குத் தரப்பட்டிருக்கிறது. 

பெற்ற தாயாகிய மாதவி தன் மகள் மணிமேகலையைக் கணிகையர் கூட்டத்திலிருந்து விலக்கி, தன்னுடன் அறவோர் பள்ளியில் தங்கவைத்துக்கொண்டாள். ஆனால், மேற்கொண்டு, மணிமேகலையை அறவழியில் நடத்த, சுதமதிதான் ஒரு கருவியாக அமைகிறாள். 

அறவோர் பள்ளியிலிருந்து மலர்வனத்தை நோக்கிப் புறப்பட்ட மணிமேகலைக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் காத்திருப்பது யாருக்கும் தெரியாது.

மணிமேகலையின் இளமைக்காலக் காம உணர்ச்சி வெளிப்படுவது சில நொடிகளே. அதை அவள் வாய்திறந்து சொல்ல ஒரு வாயிலாக அமைந்தவள் சுதமதி.

மணிமேகலையை நகரத்துத் தெருக்களின்வழியே மக்கள் கூட்டத்துக்கு நடுவே அழைத்துப்போய், மலர்வனத்தின் அழகை விளக்கிக் காட்டி, உதயகுமரனிடமிருந்து அவளைக் காப்பாற்றி, மணிமேகலா தெய்வம் அங்கே வந்து சேரும்வரை சுதமதி விழிப்புடன் நடந்துகொள்கிறாள். மணிமேகலா தெய்வம் வந்தவுடன் மணிமேகலையைப் பற்றிய பொறுப்பு சுதமதிக்கு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. 

சண்பையிலிருந்து மாருதவேகனால் கவர்ந்து வந்து புகாரில் விடப்பட்ட சுதமதி அந்த ஊர் முழுவதும் அலைந்திருக்கிறாள் என்று தெரிகிறது.

சுதமதி கதையின் மூலம் அந்தக் கால இடங்கள், வேத, சமண, பவுத்த சமயத்தவர் நிலை இன்ன பிறவும் தெரிகின்றன. 

ஆராமம் என்பது உவவனம், அராந்தாணம் என்பது அருகன் பள்ளி, சம்பாதி இருந்ததால் ஓரிடம் சம்பாதிவனம் என்ற பெயர் பெற்றது, காவிரியின் தந்தையாகிய கவேரன் இருந்ததால் ஓரிடம் கவேர வனம் என்ற பெயர் பெற்றது, உவவனத்தில் புத்த பகவனது ஆணையால் பல மலர்கள் மலர்வது, அங்கே தாமரைப் பீடிகை இருந்தது, ஒரு தெய்வத்தை நினைத்துக்கொண்டு அந்தப் பீடிகையில் மலரை இட்டால் அந்தத் தெய்வத்துக்கு அந்த மலர் போய்ச் சேரும் என்ற நம்பிக்கை, பழவினையால் தனக்குப் பிழைமணம் ஏற்பட்டதாகச் சுதமதி நினைத்தல், சங்கதருமனின் அமைதியான முகப் பொலிவு, அவனுடைய பொன்னிற ஆடை, குமரிக்கு மக்கள் நீராடப் போதல், வடமொழியாளர் காவிரியாடல், ... இன்ன பிற.

குறிப்பாக ஒன்றை நோக்கவேண்டும் -- விஞ்சையன் ஒருவனுடன் தொடர்பு ஏற்பட்டதால் சுதமதி வேத சமயத்தவருக்கு ("ஓதல் அந்தணர்க்கு") ஏற்றவளாக இல்லாமல் போதல், சமண சமயத்தவரும் அவளைக் கைவிடல், பவுத்த சமய சங்க தருமன் அவளையும் அவளுடைய தந்தையையும் ஏற்றுக்கொள்ளுதல்.  

மாதவி கதையையும் சுதமதி கதையையும் பார்க்கும்போது இன்னொன்று புலனாகிறது. அந்தக் காலத்தில் ... பிறர் ஆதரவு இல்லாத, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குப் பவுத்த துறவோர் இருந்த இடம் புகலிடம் கொடுத்திருக்கிறது. கணிகை குலத்தவள் என்று மாதவியைப் புறக்கணிக்கவில்லை, அந்தண குலத்தில் பிறந்து ஒரு விஞ்சையன் வசப்பட்டவள் என்று சுதமதியைப் புறக்கணிக்கவில்லை. இது மிகவும் பாராட்டத்தக்கதே!


+++++++++++++++++++++++++++++++++ 

அன்புடன்,
ராஜம்



Vinodh Rajan

unread,
Nov 22, 2011, 12:18:17 PM11/22/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram, N. Kannan, Dhivakar V
2011/11/22 rajam <ra...@earthlink.net>

பிறர் ஆதரவு இல்லாத, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குப் பவுத்த துறவோர் இருந்த இடம் புகலிடம் கொடுத்திருக்கிறது. கணிகை குலத்தவள் என்று மாதவியைப் புறக்கணிக்கவில்லை, அந்தண குலத்தில் பிறந்து ஒரு விஞ்சையன் வசப்பட்டவள் என்று சுதமதியைப் புறக்கணிக்கவில்லை. இது மிகவும் பாராட்டத்தக்கதே!

புத்த சங்கம் பிற்காலத்தில் சீரழிந்ததிற்கும் இதுவே காரணம் :-/

பல வடமொழி நாடகங்கள், புத்த விஹாரைகளை திருடர்களின், சோம்பேறிகளின் புகலிடமாக வசைபாடுபவதை எங்கோ படித்த நினைவு.

Innamburan Innamburan

unread,
Nov 22, 2011, 1:17:17 PM11/22/11
to mint...@googlegroups.com


ராஜம்:


பிறர் ஆதரவு இல்லாத, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குப் பவுத்த துறவோர் இருந்த இடம் புகலிடம் கொடுத்திருக்கிறது. கணிகை குலத்தவள் என்று மாதவியைப் புறக்கணிக்கவில்லை, அந்தண குலத்தில் பிறந்து ஒரு விஞ்சையன் வசப்பட்டவள் என்று சுதமதியைப் புறக்கணிக்கவில்லை. இது மிகவும் பாராட்டத்தக்கதே!


வினோத் ராஜன்:

புத்த சங்கம் பிற்காலத்தில் சீரழிந்ததிற்கும் இதுவே காரணம் :-/

இன்னம்பூரான்:

வினோத் ராஜன் பேசுவது விநோதமாக இருக்கிறது. காளமேகப்புலவர் நிந்தித்த தென்னாட்டு சோம்பேறி மடங்களை விட பெளத்த விகாரங்கள் மோசமானவை என்பதும், ‘வக்கு’ அற்றவர்களை பரிபாலிப்பது குற்றம்/இழிவு/ஒழிவுக்கு பின்னணி என்பதெல்லாம் விந்தை வாதம். சமுதாய ஆளுமை உள்ளவர்களுக்கு வாழ்வு, அற்றவர்களுக்குத் தாழ்வு என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? மாதவியையும், சுதமதியையும் நசுக்கப்பட்டவர்களின் உருவகமாக வைத்துப் பார்த்தால், அவர்களை புறக்கணிப்பதின் அதர்மம் எந்த சமயத்தின் அடிப்படையாக இருக்கமுடியாது/இருக்கலாகாது. தற்கால ஹிந்து மதத்தின் க்ஷீணத்திற்கு காரணமே, ‘சொன்னதை செய்வதில்லை’ செய்ததை சொல்வதில்லை’ என்ற அதர்ம மார்க்கம். All said and done, being judgmental is the path to ruination.


rajam

unread,
Nov 22, 2011, 2:38:14 PM11/22/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

On Nov 22, 2011, at 10:17 AM, Innamburan Innamburan wrote:



ராஜம்:

பிறர் ஆதரவு இல்லாத, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குப் பவுத்த துறவோர் இருந்த இடம் புகலிடம் கொடுத்திருக்கிறது. கணிகை குலத்தவள் என்று மாதவியைப் புறக்கணிக்கவில்லை, அந்தண குலத்தில் பிறந்து ஒரு விஞ்சையன் வசப்பட்டவள் என்று சுதமதியைப் புறக்கணிக்கவில்லை. இது மிகவும் பாராட்டத்தக்கதே!

வினோத் ராஜன்:
புத்த சங்கம் பிற்காலத்தில் சீரழிந்ததிற்கும் இதுவே காரணம் :-/
இன்னம்பூரான்:
வினோத் ராஜன் பேசுவது விநோதமாக இருக்கிறது.

எனக்கும் அவர் சொன்னது புரியவில்லை. அவரே மேல் விளக்கம் தந்தால் நல்லது; என்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.


காளமேகப்புலவர் நிந்தித்த தென்னாட்டு சோம்பேறி மடங்களை விட பெளத்த விகாரங்கள் மோசமானவை என்பதும், ‘வக்கு’ அற்றவர்களை பரிபாலிப்பது குற்றம்/இழிவு/ஒழிவுக்கு பின்னணி என்பதெல்லாம் விந்தை வாதம். சமுதாய ஆளுமை உள்ளவர்களுக்கு வாழ்வு, அற்றவர்களுக்குத் தாழ்வு என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? மாதவியையும், சுதமதியையும் நசுக்கப்பட்டவர்களின் உருவகமாக வைத்துப் பார்த்தால், அவர்களை புறக்கணிப்பதின் அதர்மம் எந்த சமயத்தின் அடிப்படையாக இருக்கமுடியாது/இருக்கலாகாது. தற்கால ஹிந்து மதத்தின் க்ஷீணத்திற்கு காரணமே, ‘சொன்னதை செய்வதில்லை’ செய்ததை சொல்வதில்லை’ என்ற அதர்ம மார்க்கம். All said and done, being judgmental is the path to ruination.
ஆமாம், ஆமாம்! நூறாயிரம் கோடி முறைக்கும் மேலே இதைச் சொல்லி நினைவுபடுத்தலாம்!
நன்றியுடன்,
ராஜம் 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Nov 22, 2011, 9:24:35 PM11/22/11
to mint...@googlegroups.com
வினோத்,

தர்மம் செய்வது தப்பா? :-) :-) :-)

சிரமண மதங்கள் சீரழிய மடாதிபதிகளும் முனிவர்களும் அரசியலில் இறங்கியது தான். ஆட்சி மாறியவுடன் கோலங்களும் மாறிவிட்டன. பக்கத்து நாடான சிங்களத்தில் நடப்பதே மிகப்பெரும் எடுத்துக்காட்டு. அரசியலை கலக்கும் போது அது ஆன்மீகமாக இல்லாமல் ஆக்கிரமிப்புக்கு கருவியாக மாறிவிடுகிறது.

மேலும் அந்நிய படையெடுப்புகள் மிச்சம் மீதி இருந்த விகாரைகளையும் பிக்குகளையும் கொன்றே ஒழித்தார்கள்.

துறவிக்கு வேந்தனும் துரும்பு என்பதே இங்கு வழக்கம். துறவிகள் அதை துறக்கும்போதே பிரச்சினைகள் வருகின்றன. மற்றபடிக்கு நீங்கள் சொல்வது போல் இல்லை.

ராஜசங்கர்



2011/11/22 Vinodh Rajan <vinodh...@gmail.com>

annamalai sugumaran

unread,
Nov 23, 2011, 12:47:59 AM11/23/11
to mint...@googlegroups.com

புத்தத் துறவிகளைப்பற்றி ஏழாம்  நூற்றாண்டில் நகைச்சுவையாக மகேந்திர வர்மானால் எழுதப்பட்ட நாடகம் குறித்த தகவல் .

சுகுமாரன் 

http://en.wikipedia.org/wiki/Mattavilasa_Prahasana

Mattavilasa Prahasana

From Wikipedia, the free encyclopedia
Mattavilasaprahasana in ancient Sanskrit theatre traditionKutiyattam performed at Temples of Northern Kerala: Artist:Mani Damodara Chakyar as Kapali.

MattavilasaPrahasana(Devanagari:मत्तविलासप्रहसन), (English: A Farce of Drunken Sport) is a short one-act Sanskritplay. It is one of the two great one act plays written by scholar King Mahendravarman I (571– 630CE) in the beginning of the seventh century.[1]

Mattavilasa Prahasana is a satire that pokes fun at the peculiar aspects of the Kapalika and PasupataSaivite sects, Buddhists and Jainism. The setting of the play is Kanchipuram, the capital city of the Pallava kingdom in the seventh century. The play revolves around the drunken antics of a Kapalikamendicant, Satyasoma, his woman, Devasoma, and the loss and recovery of their skull-bowl. The cast of characters consists of Kapali or Satysoma, an unorthodox Saivite mendicant,Devasoma, Satysoma’s female partner, Buddhist Monk, whose name is Nagasena, Pasupata, a member of another unorthodox Saivite order andMadman. The act describes a dispute between a drunken Kapali and the Buddhist monk. The inebriated Kapali suspects the Buddhist monk of stealing his begging bowl made from a skull, but after drawn-out argument it is found to have been taken away by a dog.

Contents

  [hide

2011/11/23 Raja sankar <errajasa...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Vinodh Rajan

unread,
Nov 23, 2011, 12:53:44 AM11/23/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram, N. Kannan, Dhivakar V
I wanted to quote Mattavilasa Prahasana & Bhagavad Ajjuka (and perhaps other Sanskrit Dramas)
 
Though, they were written intentionally to parody the Buddhist Monks they do certainly contain a grain of truth.
 
I don't want to go tangential to the main topic this thread. It can be discussed later in a separate thread :)
 
V

annamalai sugumaran

unread,
Nov 23, 2011, 1:07:16 AM11/23/11
to mint...@googlegroups.com
thank you Vinoth,
பல வடமொழி நாடகங்கள், புத்த விஹாரைகளை திருடர்களின், சோம்பேறிகளின் புகலிடமாக வசைபாடுபவதை எங்கோ படித்த நினைவு.//

my reply is in response to your  quote ,not to  divert this thread ,
I just wanted to add some more information about your reply 
regards,
sugumaran
2011/11/23 Vinodh Rajan <vinodh...@gmail.com>
 
V

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
Nov 24, 2011, 4:49:43 AM11/24/11
to rajam, மின்தமிழ்
>>மணிமேகலையின் கண்களில் பெருகும் வருத்தக்கண்ணீர் அவள் தொடுத்துக்கொண்டிருந்த மலர்களின் தூய்மையைக் கெடுக்கிறது. பெற்ற தாய் ஆகிய மாதவி, மகள் மணிமேகலையின் கண்ணீரைத் தன் அழகிய செங்கையால் துடைத்து ... தூய்மை இழந்துபோன இந்த மலர்களுக்கு நிகரான தூய மலர்களை நீயே பறித்துக் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறாள்.<<

இந்த மலர் பறிக்கும் வேலை மிகக் கொடியதாக உள்ளது போலக் காண்பிக்கப்படுகிறதே.. ஏன்? அதுவும் இளம்பெண்கள் விரும்பும் சோலைகளுக்கு அவர்கள் செல்வதால் (இந்தக் கதைப் பகுதியில் மட்டும்தான்) ஏன் கேடு விளைவது போல ஆசிரியர் எழுதவேண்டும்? சுதமதிக்கும் மலர்ச் சோலையில்தான் கேடு வந்தது, அதே போல மணிமேகலைக்கும் உதயகுமாரன் வடிவில்.. 

இன்பமயமான பூங்காவை இப்படி பூச்சாண்டி காட்டும் வகையில் ஆசிரியர் ஏன் எழுதியுள்ளார்?

2.ஆராமம் என்றால் ஓய்வெடுக்கும் இடம் என்று பொருள் கொள்ளலாமா அல்லது விடுதியா அல்லது ஆசிரமமா?

ஆந்திராவில் பஞ்ச ஆராமம் எனப்படும் ஐந்து இடங்களில் சிவன் கோயில் கொண்டுள்ளார். இங்கு ஆண்டவன் உறையும் இடம் எனும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்ச ஆராமங்கள் - குமாரராமம் (சாமல்கோட்), திராக்‌ஷாராமம்(கிழக்கு கோதாவரி மாவட்டம்), க்‌ஷீராராமம், பீமாராமம் (மேற்கு கோதாவரி மாவட்டம்) அமரராமம்(அமராவதி, குண்டூர் மாவட்டம்). இவை ஐந்தும் இங்கு மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்கள். முருகன் கேட்டுக்கொண்டதால் சிவன் இங்கு வந்து அமர்ந்தார் அல்லது சிவன் உறையும் இடமாக அமைந்தது என்பதால் ஆராமம் என்று வந்ததாகச் சொல்வர்.


3 >>இந்திரவிழாவைக் காண வந்த விஞ்சையன் ஒருவன் அங்கே வந்து சுதமதியைக் கவர்ந்துகொண்டு வான்வழியே போனபோது அவள் அவனுக்கு இணங்கினாள்.<<

இந்த விஞ்சையன் மானிடப் பிறவி அல்ல என்பது சரிதானா?.. அப்படி மானிடப்பிறவி இல்லையென்றால் எந்தவிதமான பிறவியாக இவன் உருவகப்படுத்தப்பட்டுள்ளான்? இப்படி வேறு ஏதேனும் நிகழ்ச்சி மணிமேகலையில் சொல்லப்பட்டுள்ளதா? சீவக சிந்தாமணியில் நாயொன்று வேதியர்களின் அவியை உண்ணும்போது அதைத் துரத்திக் கொண்டு வந்த அந்தணர்களை சீவகன் காப்பதாகவும், பிறகு அந்த நாய் உரு மாறி தன் சுயரூபமான வானவர் பிறவியில் தரிசனம் தந்து வரம் தருவதாகவும் படித்த ஞாபகம் உள்ளது.
இப்படி ஏதாவது மானிடரைத் தவிர்த்த வேறு பிறவிகள் வருகின்றனரா? (மணிமேகலா தெய்வம் என்பது தேவதை என்றே எடுத்துக்கொள்வோம்)

அன்புடன்
திவாகர்




2011/11/22 rajam <ra...@earthlink.net>



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Dhivakar

unread,
Nov 24, 2011, 4:52:22 AM11/24/11
to rajam, மின்தமிழ்
ஒரு சின்ன திருத்தம்
சீவகன் அந்தணர்களைக் காப்பதாகவும் என வந்துவிட்டது, சீவகன் அந்தணர்களிடமிருந்து நாயைக் காப்பதாக எனப் படிக்கவும். 

2011/11/24 Dhivakar <venkdh...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 24, 2011, 7:41:33 AM11/24/11
to mint...@googlegroups.com, rajam
ஆராமம் என்றால் ஓய்வெடுக்கும் இடம் //
हिंदी आराम ????  ஹிந்தியிலே ஆராம் என்றால் ஓய்வெடுப்பது என்று தானே பொருள் வரும்!
 
 
பஞ்ச ஆராமங்கள் - குமாரராமம் (சாமல்கோட்), திராக்‌ஷாராமம்(கிழக்கு கோதாவரி மாவட்டம்), க்‌ஷீராராமம், பீமாராமம் (மேற்கு கோதாவரி மாவட்டம்) அமரராமம்(அமராவதி, குண்டூர் மாவட்டம்). இவை ஐந்தும் இங்கு மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்கள்//
 
இவை புதிய செய்தி.  ஶ்ரீராமருக்குத்தான் ஐந்து தலங்கள் ஆந்திராவில் இருப்பதாய்க் கேள்விப் பட்டிருந்தேன்.  நன்றி தகவலுக்கு.

2011/11/24 Dhivakar venkdh...@gmail.com


2.ஆராமம் என்றால் ஓய்வெடுக்கும் இடம் என்று பொருள் கொள்ளலாமா அல்லது விடுதியா அல்லது ஆசிரமமா?

ஆந்திராவில் பஞ்ச ஆராமம் எனப்படும் ஐந்து இடங்களில் சிவன் கோயில் கொண்டுள்ளார். இங்கு ஆண்டவன் உறையும் இடம் எனும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்ச ஆராமங்கள் - குமாரராமம் (சாமல்கோட்), திராக்‌ஷாராமம்(கிழக்கு கோதாவரி மாவட்டம்), க்‌ஷீராராமம், பீமாராமம் (மேற்கு கோதாவரி மாவட்டம்) அமரராமம்(அமராவதி, குண்டூர் மாவட்டம்). இவை ஐந்தும் இங்கு மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்கள். முருகன் கேட்டுக்கொண்டதால் சிவன் இங்கு வந்து அமர்ந்தார் அல்லது சிவன் உறையும் இடமாக அமைந்தது என்பதால் ஆராமம் என்று வந்ததாகச் சொல்வர்.


அன்புடன்
திவாகர்-
360.gif

rajam

unread,
Nov 24, 2011, 11:38:30 AM11/24/11
to mint...@googlegroups.com, Dhivakar V
மிக நல்ல கேள்விகள், திவாகர்! எல்லாரையும் சிந்திக்கவைக்கும் கேள்விகள்! நன்றி! நானும் யோசித்துப் பதில் சொல்கிறேன். இன்னிக்கி மடச்சி வேலை! என்ன சமெக்க-னு இன்னும் தெரியலெ. :-) :-) :-)

Subashini Tremmel

unread,
Nov 25, 2011, 3:26:24 PM11/25/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, rajam

 
2011/11/24 rajam <ra...@earthlink.net>

மிக நல்ல கேள்விகள், திவாகர்! எல்லாரையும் சிந்திக்கவைக்கும் கேள்விகள்! நன்றி! நானும் யோசித்துப் பதில் சொல்கிறேன். இன்னிக்கி மடச்சி வேலை! என்ன சமெக்க-னு இன்னும் தெரியலெ. :-) :-) :-)
 
என் அலுவலக பயணம் முடிந்து வீடு திரும்பியதும் 4 நாள் தமிழ்ச்சாப்பாடு இல்லாத ஏக்கத்தில் ப்ரிட்ஜில் இருந்த கேரட்டைப் போட்டு ஒரு திடீர் பாசிப்பருப்பு சாம்பார் செய்தேன். ஊருகாய் தொட்டுக் கொள்ள.. இம் பிரமாதம்.
 
ஐடியா கொடுத்துட்டேன். கேரட் சாப்பிடுவீங்க இல்லையா?
சுபா
 

 

Innamburan Innamburan

unread,
Nov 25, 2011, 3:30:01 PM11/25/11
to mint...@googlegroups.com
'அன்றொரு நாளில்' காரெட் கதையும் வரும்.


2011/11/25 Subashini Tremmel <ksuba...@gmail.com>

 
ஐடியா கொடுத்துட்டேன். கேரட் சாப்பிடுவீங்க இல்லையா?
சுபா
 

 

--

Subashini Tremmel

unread,
Nov 25, 2011, 3:31:13 PM11/25/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
இன்றைய விளக்கத்திற்கு நன்றி ராஜம் அம்மா. எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் செல்கிறது விளக்கம்.
 
சுபா

2011/11/22 rajam <ra...@earthlink.net>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Nov 25, 2011, 3:36:45 PM11/25/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/11/24 Dhivakar <venkdh...@gmail.com>

>>மணிமேகலையின் கண்களில் பெருகும் வருத்தக்கண்ணீர் அவள் தொடுத்துக்கொண்டிருந்த மலர்களின் தூய்மையைக் கெடுக்கிறது. பெற்ற தாய் ஆகிய மாதவி, மகள் மணிமேகலையின் கண்ணீரைத் தன் அழகிய செங்கையால் துடைத்து ... தூய்மை இழந்துபோன இந்த மலர்களுக்கு நிகரான தூய மலர்களை நீயே பறித்துக் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறாள்.<<

இந்த மலர் பறிக்கும் வேலை மிகக் கொடியதாக உள்ளது போலக் காண்பிக்கப்படுகிறதே.. ஏன்? அதுவும் இளம்பெண்கள் விரும்பும் சோலைகளுக்கு அவர்கள் செல்வதால் (இந்தக் கதைப் பகுதியில் மட்டும்தான்) ஏன் கேடு விளைவது போல ஆசிரியர் எழுதவேண்டும்? சுதமதிக்கும் மலர்ச் சோலையில்தான் கேடு வந்தது, அதே போல மணிமேகலைக்கும் உதயகுமாரன் வடிவில்.. 

இன்பமயமான பூங்காவை இப்படி பூச்சாண்டி காட்டும் வகையில் ஆசிரியர் ஏன் எழுதியுள்ளார்?
 
அக்காலகட்டத்தில் பெண்கள் அதிக பட்சம் செல்வது குளக்கரை, பூங்கா கோயில் போன்ற இடங்கள் என்பதால் அங்கே தானே பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கின்றார்கள். .அதனை மனதில் கொண்டும் ஆசிரியர் இப்படி குறிப்பிட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.  
 
சுபா
 

rajam

unread,
Nov 25, 2011, 4:06:05 PM11/25/11
to மின்தமிழ், Dhivakar V
இந்தப் பதிவு திவாகர் எழுப்பிய கேள்விகளைப் பற்றிச் சிந்திப்பதற்காக ...
1. "மலர் பறிக்கும் வேலை" பற்றி ... 

இந்த மலர் பறிக்கும் வேலை மிகக் கொடியதாக உள்ளது போலக் காண்பிக்கப்படுகிறதே.. ஏன்? அதுவும் இளம்பெண்கள் விரும்பும் சோலைகளுக்கு அவர்கள் செல்வதால் (இந்தக் கதைப் பகுதியில் மட்டும்தான்) ஏன் கேடு விளைவது போல ஆசிரியர் எழுதவேண்டும்? சுதமதிக்கும் மலர்ச் சோலையில்தான் கேடு வந்தது, அதே போல மணிமேகலைக்கும் உதயகுமாரன் வடிவில்.. 

 
"மலர் பறிக்கும் வேலை"யைக் காப்பிய ஆசிரியர் "மிகக் கொடியதாக"க் காட்டியதாக எனக்குத் தோன்றவில்லை.
மாதவி, சுதமதி இருவரும்  முற்பிறப்பில் தாரை, வீரை என்று இருந்தவர்கள். "ஆதி முதல்வ"னின் (== புத்த தேவனின்) அடிகளைப் பாத பங்கய மலையில் வணங்கினார்கள்; அதனால், இந்தப் பிறவியில் அவர்கள் இருவரும் அறவண அடிகளைத் தொடர்ந்து புத்தரின் பாதையில் போகவேண்டும். இந்தப் பிறவியில் இருவரும் வேறு வேறு இடங்களில், வேறு வேறு குலங்களில் பிறக்கிறார்கள். தாரை காவிரிப்பூம்பட்டினத்தில் கணிகைக் குலத்தில் மாதவியாக; வீரை சண்பையில் அந்தண குலத்தில் சுதமதியாக. அந்த இருவரையும் இப்போது ஒன்று சேர்க்க வேண்டும்.  மாதவி தானாகவே தேர்ந்து எடுத்து ஒரு பவுத்த துறவோர் தங்குமிடம் சேர்கிறாள். சுதமதியை அங்கே கொண்டு சேர்க்க மாருதவேகன் என்ற விஞ்சையனின் செயல் ஒரு கருவியாக அமைகிறது.
ஒரு நோக்கில் பார்த்தால் ... சுதமதி, மணிமேகலை இருவருக்குமே மலர்வனத்தில்  "கேடு" வரவில்லை. அவர்களை அறவழியில் நடத்த ஏற்படும் நிகழ்ச்சிகள் அங்கே நடந்தன என்றே கொள்ளலாம். "ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது" என்று சாத்தனாரே சொல்லுவார். 


இன்பமயமான பூங்காவை இப்படி பூச்சாண்டி காட்டும் வகையில் ஆசிரியர் ஏன் எழுதியுள்ளார்?

1.a. மலர்வனம் என்பது ... 

மலர்வனம் என்பது "பூச்சாண்டி" காட்டும் வகையில் அமைந்ததாக எனக்குத் தோன்றவில்லை. இப்படிப் பாருங்களேன்: மலர், பெண் :: வண்டு, ஆண். பின்னொரு நாளில்,  மணிமேகலை ஊர் அம்பலத்தில் எல்லாருக்கும் அமுதசுரபியிலிருந்து அமுது கொடுத்துக்கொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட சித்திராபதி உதயகுமரனிடம் போய்ச் சொல்கிறாள்: "... காமர் செவ்விக் கடி மலர் அவிழ்ந்தது; உதைய குமரன் எனும் ஒரு ஒரு வண்டு உணீஇய விரைவொடு வந்தேன்."
சுதமதி மணிமேகலையை அந்தக் குறிப்பிட்ட மலர்வனத்துக்குக் கூட்டிப்போனதுக்குக்காரணம் ... ஊரில் இருந்த பிற இடங்களைவிடப் பாதுகாப்பான இடம் அது; அறவோர் இடம்; பகவன் ஆணையால் மலர்கள் பூக்கும் இடம்; அங்கே பீடிகை உண்டு; அதில் இட்ட மலர்கள் விரும்பிய தெய்வத்திடம் போய்ச் சேரும், ... அந்த மாதிரிப் பல காரணங்கள் உண்டு.
சுதமதி/மணிமேகலைக்கு மலர்வனம் மட்டுமில்லை, காவிரித்துறையில் மருதிக்குத் தொல்லை; நடுத் தெருவில் விசாகைக்குத் தொல்லை. இப்படி ... கயவர்கள் எங்கும் எப்போதும் இருந்தார்கள் என்றுதான் நான் புரிந்துகொள்கிறேன்.

2.ஆராமம் என்றால் ஓய்வெடுக்கும் இடம் என்று பொருள் கொள்ளலாமா அல்லது விடுதியா அல்லது ஆசிரமமா?
உரையாசிரியர் கருத்துப்படி "ஆராமம்" என்பது "உபவனம்." சுதமதி சொல்லுவது: "ஆராமத்திடை அலர் கொய்வேன்."  பிற விளக்கம் இல்லாததால், இது நமக்குச் சிக்கல். "ஆராமம்" என்பதை (as a verbal noun) "ஓய்வு நிலை" என்று கொள்ளவும் இடம் உண்டு; "ஆராமம்" என்பது ஒரு மலர்ப் பொழில் (noun) என்று கொள்ளவும் இடம் உண்டு.  

3. "விஞ்சையன் மானிடப் பிறவியா?" 

இந்த விஞ்சையன் மானிடப் பிறவி அல்ல என்பது சரிதானா?.. அப்படி மானிடப்பிறவி இல்லையென்றால் எந்தவிதமான பிறவியாக இவன் உருவகப்படுத்தப்பட்டுள்ளான்?
மாருதவேகனின் தோற்ற விளக்கம்:
"மாருத வேகன் என்பான் ஓர் விஞ்சையன்
... ... ... 
தாரன், மாலையன், தமனியப் பூணினன் ;
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்"
இதைத் தவிர வேறு விளக்கம் இல்லை.
"விஞ்சையன்" என்பவன் மனிதப் பிறவியா இல்லையா என்றால் ... மனிதப் பிறவி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காயசண்டிகையின் கணவன் காஞ்சனனும் ஒரு விஞ்சையனே. அவன் மனிதனாக வந்துதானே உதயகுமரனைக் கொன்றான்.
மணிமேகலா தெய்வம் ஒரு பெண் வடிவில் வருகிறாள். சுதமதி, மணிமேகலை இருவரையும் பார்க்கிறாள், மணிமேகலையை மணிபல்லவத் தீவுக்கு எடுத்துப் போய்விடுகிறாள். அங்கே தனித்து விடப்பட்ட மணிமேகலை தவிக்கும்போது சொல்வது என்ன? "விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் வஞ்சம் செய்தனள்கொல்லோ, அறியேன்."
எனவே ... மனித வடிவில் தோன்றிய மணிமேகலாதெய்வமும் ஒரு "விஞ்சை"ப் பிறவியாகவே விவரிக்கப்பட்டிருக்கிறாள்.
"விஞ்சை" என்பதற்கு "வித்தை" என்று உரையாசிரியர் பொருள் தருகிறார். அதனால் ... ஒருவருக்குப் புரியாத வகையில் அவரை வயப்படுத்தியவர்கள் "விஞ்சையர்"கள் என்று கருதப்பட்டிருக்கலாம். 


On Nov 24, 2011, at 1:52 AM, Dhivakar wrote:

rajam

unread,
Nov 25, 2011, 4:07:24 PM11/25/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
கேரட் ரொம்பப் பிடிக்குமே, சுபா! ஐடியா பிரமாதம்! நன்றி! இன்னிக்குக் கேரட் சாம்பார் சமைக்கப் பார்க்கிறேன்! ப்ரிட்ஜில் இருக்கு-னு நெனெக்கிறேன். 
நேற்று (Thanksgiving Day) இங்கெ வேற என்னெல்லாமோ சமெச்சேன் -- அதெ அப்புறம் சொல்றேன். 
:-) :-) :-)

Jean-Luc Chevillard

unread,
Nov 25, 2011, 4:36:10 PM11/25/11
to mint...@googlegroups.com, rajam, Dhivakar
Dear VSR,

concerning the point:

<QUOTE>

3. "விஞ்சையன் மானிடப் பிறவியா?" 

இந்த விஞ்சையன் மானிடப் பிறவி அல்ல என்பது சரிதானா?.. அப்படி மானிடப்பிறவி இல்லையென்றால் எந்தவிதமான பிறவியாக இவன் உருவகப்படுத்தப்பட்டுள்ளான்?
மாருதவேகனின் தோற்ற விளக்கம்:
"மாருத வேகன் என்பான் ஓர் விஞ்சையன்
... ... ... 
தாரன், மாலையன், தமனியப் பூணினன் ;
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்"
இதைத் தவிர வேறு விளக்கம் இல்லை.
"விஞ்சையன்" என்பவன் மனிதப் பிறவியா இல்லையா என்றால் ... மனிதப் பிறவி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காயசண்டிகையின் கணவன் காஞ்சனனும் ஒரு விஞ்சையனே. அவன் மனிதனாக வந்துதானே உதயகுமரனைக் கொன்றான்.
மணிமேகலா தெய்வம் ஒரு பெண் வடிவில் வருகிறாள். சுதமதி, மணிமேகலை இருவரையும் பார்க்கிறாள், மணிமேகலையை மணிபல்லவத் தீவுக்கு எடுத்துப் போய்விடுகிறாள். அங்கே தனித்து விடப்பட்ட மணிமேகலை தவிக்கும்போது சொல்வது என்ன? "விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் வஞ்சம் செய்தனள்கொல்லோ, அறியேன்."
எனவே ... மனித வடிவில் தோன்றிய மணிமேகலாதெய்வமும் ஒரு "விஞ்சை"ப் பிறவியாகவே விவரிக்கப்பட்டிருக்கிறாள்.
"விஞ்சை" என்பதற்கு "வித்தை" என்று உரையாசிரியர் பொருள் தருகிறார். அதனால் ... ஒருவருக்குப் புரியாத வகையில் அவரை வயப்படுத்தியவர்கள் "விஞ்சையர்"கள் என்று கருதப்பட்டிருக்கலாம். 

</QUOTE>

I was under the impression that those characters,
also called வித்தியாதரர்
live in a different world
and are not human
(they are one of the பதினெண்கணம்

On page 180 in my UVS edition (ஏழாம் பதிப்பு, 1981)

the commentary on line 21 in Canto 17
"[மாசில் வாலொளி வடதிசைச் சேடிக்"
says
வாலொளி -- வெள்ளிய ொளி,
சேடி -- வித்தியாதரருலகு.
சேடி வெள்ளிமலைக்கண் உள்ளதாதலின், அதற்கு வாலொளி கூறப்பட்டது;
"வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடி" (சிலப். 6:1)

Therefore,
I don't think they fall under Human birth

Don't you think so?

அன்புடன்

-- jlc (Paris)

rajam

unread,
Nov 25, 2011, 6:48:31 PM11/25/11
to mint...@googlegroups.com
Dear JLC,

I understand what you mean. I too have been given to understand that these characters are from "another world."

However, the more I read these texts, I'm beginning to feel that at least some types of these characters must have had a "human existence"; that fact and fiction may have been confused over time; and that interpretations have been impacted. I'm not sure, though. That's why I said "மனிதப் பிறவி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காயசண்டிகையின் கணவன் காஞ்சனனும் ஒரு விஞ்சையனே. அவன் மனிதனாக வந்துதானே உதயகுமரனைக் கொன்றான்." Certainly, kāñcaṉaṉ must have appeared in a human form when he killed utayakumaraṉ. 

Geetha Sambasivam

unread,
Nov 25, 2011, 7:10:01 PM11/25/11
to mint...@googlegroups.com
அருமையாய் இருக்கும் காரட் சாம்பார்.  அதோடு (இருந்தால்) குடை மிளகாயும் சேர்த்துக்கலாம்.
2011/11/25 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--

rajam

unread,
Nov 25, 2011, 9:25:26 PM11/25/11
to mint...@googlegroups.com
வச்சாச்சு! ஏற்கனவே பல காய்கள் போட்டு வைத்திருந்த சாம்பாரில் இன்று கேரட்டும் சேர்ந்துகொண்டது! நான் சாதாரணமா கேரட்டைப் பச்சையாகவே சாப்பிடுவேன். ஆனா, இன்னிக்கு ... சுபா, கீதா சொன்னதுனாலெ ஒரு ஸ்பெஷல்! :-) :-) :-)

Vinodh Rajan

unread,
Nov 25, 2011, 11:38:34 PM11/25/11
to mint...@googlegroups.com
//That's why I said "மனிதப் பிறவி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காயசண்டிகையின் கணவன் காஞ்சனனும் ஒரு விஞ்சையனே. அவன் மனிதனாக வந்துதானே உதயகுமரனைக் கொன்றான்." Certainly, kāñcaṉaṉ must have appeared in a human form when he killed utayakumaraṉ. 
//

மேலுலகத்தில் வாழ்பவர்கள், மனிதர்களிடத்தில் தோன்றும் போது, உருமாறி தான் தோன்ற வேண்டும் என்று ஏதோ விதி உள்ளது. Supposedly, they have to increase their *gross* nature of their *subtle* bodies to be visible to the human eye. இல்லையெனில், நம் கண்களால் அவர்களை காணுதல் இயலாதாம்.

It certainly makes to sense for them to appear *like* humans in the human world :) .

வி

Jean-Luc Chevillard

unread,
Nov 26, 2011, 1:13:49 AM11/26/11
to mint...@googlegroups.com, Vinodh Rajan, rajam, Dhivakar
In the fifth chapter of the திவாகரம் (called "இடப் பெயர்த் தொகுதி"),
the first and second சூத்திரம் are:

845. தெய்வலோகத்தின் பெயர்

846. விஞ்சையருலகத்தின் பெயர்

Those read:

845:
தானம், துறக்கம், பொன்னுலகு, உம்பர்,
வானகம், அமருலகு, உயர்நிலை, புத்தேள்,
(வியன்) உலகு, விசும்பு, விண்ணுலகு, நாகம்,
பவனம், (மா) சுவர்க்கம், தெய்வலோகப் பெயரே.

846:
சேணியும், சேடியும், விஞ்சையர் சேர்விடம்.

What would be the Sanskrit or Prakrit equivalent?

And what are the words used for the vidyādhara-s in Telugu?

-- JLC (Paris)

Dhivakar

unread,
Nov 26, 2011, 1:33:13 AM11/26/11
to Jean-Luc Chevillard, மின்தமிழ், rajam
>>And what are the words used for the vidyādhara-s in Telugu?<<

In general Gandharvas - the telugus call them.

There is an interesting pauranic story in Thiruvenkata Saritham.

During early centuries, when Venkatava was standing alone and not
having an enclosure (this was mentioned in Cilappathikaram too) a
tribal group leader started constructing a wall enclosure for
Venkatava. This was going on for several days. One fine day, the
Gandharvas from other world visited the temple where this tribal man
sees one Kandharva sthree and both fell in love and were liking for
each other and stayed together forgetting the sacred work of
constructing a small enclosure. Understanding his devotee, Venkatava
asked him to take another berth and this time he became the King of
Thondai Mandalam, when the king was going on hunting spree in seven
hills area, he saw a half built enclosure for Thiruvenkatava. He
immediately took responsible to finish the construction properly thus
the today's temple came. Telugu Composer Annamayya mentioned
Thondaiman name in his songs, as he only constructed the temple.

Dhivakar

2011/11/26 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:


> In the fifth chapter of the திவாகரம் (called "இடப் பெயர்த் தொகுதி"),
> the first and second சூத்திரம் are:
>
> 845. தெய்வலோகத்தின் பெயர்
>
> 846. விஞ்சையருலகத்தின் பெயர்
>
> Those read:
>
> 845:
> தானம், துறக்கம், பொன்னுலகு, உம்பர்,
> வானகம், அமருலகு, உயர்நிலை, புத்தேள்,
> (வியன்) உலகு, விசும்பு, விண்ணுலகு, நாகம்,
> பவனம், (மா) சுவர்க்கம், தெய்வலோகப் பெயரே.
>
> 846:
> சேணியும், சேடியும், விஞ்சையர் சேர்விடம்.
>
> What would be the Sanskrit or Prakrit equivalent?
>
>
>

> -- JLC (Paris)
>
>
>
>
> On 26/11/2011 05:38, Vinodh Rajan wrote:
>>
>> //That's why I said "மனிதப் பிறவி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
>> காயசண்டிகையின் கணவன் காஞ்சனனும் ஒரு விஞ்சையனே. அவன் மனிதனாக வந்துதானே
>> உதயகுமரனைக் கொன்றான்." Certainly, kāñcaṉaṉ must have appeared in a human
>> form when he killed utayakumaraṉ.
>> //
>>
>> மேலுலகத்தில் வாழ்பவர்கள், மனிதர்களிடத்தில் தோன்றும் போது, உருமாறி தான்
>> தோன்ற வேண்டும் என்று ஏதோ விதி உள்ளது. Supposedly, they have to increase
>> their *gross* nature of their *subtle* bodies to be visible to the human
>> eye. இல்லையெனில், நம் கண்களால் அவர்களை காணுதல் இயலாதாம்.
>>
>> It certainly makes to sense for them to appear *like* humans in the human
>> world :) .
>>
>> வி
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
>

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Jean-Luc Chevillard

unread,
Nov 26, 2011, 1:42:09 AM11/26/11
to mint...@googlegroups.com, Vinodh Rajan, rajam, Dhivakar
Post-Scriptum,

in the தேவாரம்,

விஞ்சையர்
appear a number of time

*********************************
viñcai: 2

3-049_(10) viñcai _aṇṭarkaḷ vēṇṭa, _amutucey
7-068_(4) viñcai vāṉavar, tāṉavar, kūṭik

viñcaiyar: 3

4-066_(7) viñcaiyar _iriya _aṉṟu vēlaivāy vantu _eḻunta
3-017_(10) viñcaiyar toḻutu _eḻu vicayamaṅkaiyē
2-069_(2) viṉaippakai_āyiṉa tīrkkum viṇṇavar; viñcaiyar; neñcil

viñcaiyarum: 1

2-033_(4) pukku, _aravar viñcaiyarum viṇṇavarum naṇṇi

viñcaiyārkaḷ: 1

5-098_(3) veḷḷattār viñcaiyārkaḷ virumpavē

*********************************

See notably Tēvāram, 2-33 (4):

கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச்
செக்கர்அவர், சேரும் இடம் என்பர்---தடம் மூழ்கிப்
புக்கு, அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி,
நக்கர்அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே.

"Naḷḷāṟu where the residents of the serpent world, the viñcayar, and the
tēvar take a dip in the tank (naḷatīrttam) and enter into the temple
fixing their minds on the names of the naked god.
people say that it is the place where Civaṉ who wears crane's feather, a
cobra, a curved crescent, who is angry, and has a body as red as the
evening sky, dwells." (English rending by VMS)

How was this translated into Telugu?


-- jlc (Paris)


*********************************

In the fifth chapter of the திவாகரம் (called "இடப் பெயர்த் தொகுதி"),
the first and second சூத்திரம் are:

845. தெய்வலோகத்தின் பெயர்

846. விஞ்சையருலகத்தின் பெயர்

Those read:

845:
தானம், துறக்கம், பொன்னுலகு, உம்பர்,
வானகம், அமருலகு, உயர்நிலை, புத்தேள்,
(வியன்) உலகு, விசும்பு, விண்ணுலகு, நாகம்,
பவனம், (மா) சுவர்க்கம், தெய்வலோகப் பெயரே.

846:
சேணியும், சேடியும், விஞ்சையர் சேர்விடம்.

What would be the Sanskrit or Prakrit equivalent?

And what are the words used for the vidyādhara-s in Telugu?

-- JLC (Paris)


On 26/11/2011 05:38, Vinodh Rajan wrote:

Dhivakar

unread,
Nov 26, 2011, 1:43:17 AM11/26/11
to rajam, மின்தமிழ்
ராஜம் அம்மா!

>>பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்"<<

இந்த வரிகள் விஞ்சையனை மனிதப் பிறவிக்கு மேலாக இருக்கவைக்குமா?
அசாதாரண நிகழ்ச்சிகள் தமிழின் முதல் மூன்று காவியங்களிலுமே வருகின்றன
அல்லவா.. எப்படி அது என்ற ஆவலால்தான் கேட்கிறேன்.

உங்கள் ஆழமான பதில்கள் மேலும் சிந்திக்க வைக்கின்றன என்பதை மட்டும்
சொல்லி விடுகிறேன்.

மிகக் கொடியது, பூச்சாண்டி போன்ற பெரிய வார்த்தைகள் போட்டது தவறுதான்..
அந்தப் பெண்கள் மேல் உள்ள பாசத்தினால் அப்படி என் கை எழுதியிருக்க (டைப்
அடித்திருக்க) வேண்டும்..(((

அன்புடன் திவாகர்

2011/11/26 rajam <ra...@earthlink.net>:

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Jean-Luc Chevillard

unread,
Nov 26, 2011, 1:58:54 AM11/26/11
to மின்தமிழ், Dhivakar, rajam, Vinodh Rajan
Dear Dhivakar,

That is quite an interesting story!

in the 2450th சூத்திரம் of திவாகரம்,
(which is called தேவர் பதினெண்கணம்),
the காந்தருவர் (8th item)
and the விஞ்சையர் (10th item)
are distinct.

See the list:

2450.
அமரர் (1), சித்தர் (2), அசுரர் (3), சாரணர் (4),
கருடர் (5), கின்னரர் (6), கிம்புருடர் (7), காந்தருவர் (8),
இயக்கர் (9), விஞ்சையர் (10), இராக்கதர் (11), பூதர் (12),
பசாசு (13), தாரகை (14), முனிவர் (15), உரகர் (16),
நாகர் (17), போக பூமியர் (18) என்னப்
பாகுப்பட்டது பதினெண் கணமே.

I suppose it took quite some time
to have a stabilized doctrine about all those beings ;-)

அன்புடன்

-- Jean-Luc Chevillard (Paris)

Dhivakar

unread,
Nov 26, 2011, 2:07:02 AM11/26/11
to Jean-Luc Chevillard, மின்தமிழ், rajam
Dear Jean!

The 18 Kana's were differently told by different authors in different works.

Though the no. of 18 is correct, Manickavasakar in Sivapuranam, says
that 'Kanangalaay, Munivaraay, thevaraay, asurararaay
(செல்லாஅ நின்ற இச் சாகர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து..)

தேவர் அசுரர் முனிவர் என்ற பிறப்புகள் கணங்களிடமிருந்து வேறுபடுகிறது இங்கே..

Dhivakar

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Jean-Luc Chevillard

unread,
Nov 26, 2011, 2:50:04 AM11/26/11
to Dhivakar, மின்தமிழ், rajam, Vinodh Rajan, N Kannan
Dear Dhivakar,

yes, Māṇikkavācakar's vocabulary also must be explored
(and it might be helpful for chronological studies [or datings])
[he does not seem to use the word விஞ்சை
but only விச்சை (for vidyā)].

My current impression is that the Gandharva-s (who are important for MUSIC)
were introduced in Tamil literature earlier than the Vidyādhara-s
(who are important for MAGIC)

See the first cūttiram in Tolkāppiyam, Kaḷaviyal (i.e. TP89i)

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே.

There is a reference to Gandharva-s
(in துறை அமை நல் யாழ்த் துணைமையோர்).

But the interest in Vidyādhara-s
becomes visible only at the time of the Cilappatikāram and the Maṇimēkalai
(there is no earlier occurrence of the words derived from விஞ்சை,
(according to the வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி,
released by சாந்தி சாதனா)

Interaction between Southern and Northern musical systems
may have taken place earlier
than interaction between systems of magical beliefs.

Best wishes

-- Jean-Luc Chevillard (Paris)

Vinodh Rajan

unread,
Nov 26, 2011, 2:52:28 AM11/26/11
to Jean-Luc Chevillard, மின்தமிழ், Dhivakar, rajam
Dear JLC,

In Pali, Vidyaadhara-s are called Vijjaadhara-s. [Holders of Vidyaa; Vidyaa as in Magical Charms ]

Vijjaa விஜ்ஜா could have become விச்சை in Tamil. then got nasalized to விஞ்சை,

Then add the -அர்/அன் suffix you have விஞ்சையர் :D

Just speculating.. Ignore :)

BTW I suppose Gandharva-s are a separate classe of beings from Vidyaadhara-s.

Vidyaadhara-s are in essence used in two ways : Celestial Vidyaadhara-s and Human Vidyaadhara-s [who can use Magical Charms]. But in most cases, it usually refers to the former.

V

2011/11/26 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
2011/11/26 Jean-Luc Chevillard<jeanluc.chevillard@gmail.com>:

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
Nov 26, 2011, 2:56:04 AM11/26/11
to Jean-Luc Chevillard, மின்தமிழ், rajam
>>Interaction between Southern and Northern musical systemsmay have taken place earlierthan interaction between systems of magical beliefs.<<

Dr. C. Kamaliah, Professor of Layola college written one article which
I am having, dealt in length about these. He argued Tamils have taught
gandharva geetham to Northern people and even set right the Sama
Vedham. Very Interesting article.

Meanwhile I must thank you lot of bringing out lot such details.
Kindly continue providing these.

Warm Regards,

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Vinodh Rajan

unread,
Nov 26, 2011, 3:16:03 AM11/26/11
to Jean-Luc Chevillard, மின்தமிழ், Dhivakar, rajam
A search in Tipitaka, shows the term "Vijjaadhara" appears more in the Commentaries [Attakatha] and later pali texts.

The are two places they appear as Buddha Vacana:

One instance is in Khuddaka Nikaya: [Again Khuddaka Nikaya is sorta of a Miscellaneous category] 

Vijjādharo tadā āsiṃ, antalikkhacaro ahaṃ;
Tisūlaṃ sukataṃ gayha, gacchāmi ambare tadā

probably, back translates to Sanskrit as :

Vidyādharo tadā āsam antarikṣacaro'ham
Triśūlaṁ sukṛtaṁ gṛhya gacchāmi ambare tadā  

I was once a Vidyadhara, roaming [cara] the Skies [Antariksha]. Holding [Grihya] the well made [Sukrta] Trident [Trishuula] am going [Gacchaami] in the Skies [Ambara] likewise.

This should give some context on the nature of Vidyadharas. (I Hope :P). They seem to invariably be depicted as Sky Travelers :-) .

V

2011/11/26 Vinodh Rajan <vinodh...@gmail.com>

Jean-Luc Chevillard

unread,
Nov 26, 2011, 3:50:52 AM11/26/11
to மின்தமிழ், Vinodh Rajan, Dhivakar, rajam
Dear Vinodh,

many thanks for this!

It really changes perspectives
when one goes from monolingual to multilingual
in this kind of exploration!

"Classical" languages, such as Pali, Ancient Tamil, Sanskrit, Ardha Magadhi,  etc.
should not be studied in isolation.

An important element in the flying technique of Vidyādhara-s
seems to be the use of a Mantra.

Did the Buddha make use of a mantra
in that earlier incarnation of his?

See the lines 52-55 in Canto 17 of Maṇimēkalai
(and especially line 55 "வானூ டெழுகென மந்திர மறந்தேன்")

....
விலகொளி விஞ்சையன் விழுமமோ டெய்தி
ஆரணங் காகிய வருந்தவன் றன்னாற்
காரண மின்றியுங் கடுநோ யுழந்தனை
வானூ டெழுகென மந்திர மறந்தேன்
...........................

BTW,
there is an interesting occurrence of அணங்கு in line 53 (of Canto 17)
(it applies not to a woman but to an ascetic)

Best wishes

-- Jean-Luc (Paris)

2011/11/26 Vinodh Rajan <vinodh...@gmail.com>

2011/11/26 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
2011/11/26 Jean-Luc Chevillard<jeanluc.c...@gmail.com>:

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

Vinodh Rajan

unread,
Nov 26, 2011, 4:25:38 AM11/26/11
to Jean-Luc Chevillard, மின்தமிழ், Dhivakar, rajam
It really changes perspectives
when one goes from monolingual to multilingual
in this kind of exploration!

"Classical" languages, such as Pali, Ancient Tamil, Sanskrit, Ardha Magadhi,  etc.
should not be studied in isolation.

True.

But people often don't do that.

When they learn Sanskrit/Prakrit, most people eve forget that Regional languages existed along them.

Again, in the case of Tamil, they don't even wanna think about Sanskrit/Prakrit which had been skin-to-skin along with Tamil.

[May be I am wrong] But I don't think Buddhist studies focus on Indian Regional Language Literature as compared to Praktrit/Sanskrit texts.

All those inter-relations are so unique, beautiful. People just don't wanna think about it :)

In one of the Mahayana Sutras  the Buddha utters *Tamil Mantras* [Draamida Mantrapadaani]. There are those instances, where I wish I could comprehend Sanskrit much much better :-). [Hey I am 23, still got lotssssssssss of years more to learn :D . FYI I am taking my Samskrit Bharati Level 1 Exam this Jan :P]

//Did the Buddha make use of a mantra
in that earlier incarnation of his?

That's not explicitly given. Implicitly, Perhaps yes.

I think there is a specific Sutra when the Buddha speaks about the various Vidya-s & Siddhis used to do super natural acts. I just can't recollect the exact instance :(

V

Jean-Luc Chevillard

unread,
Nov 26, 2011, 4:45:09 AM11/26/11
to Vinodh Rajan, மின்தமிழ், Dhivakar, rajam, N Kannan
Dear Vinodh,

you might want to read the article (by Lokesh Chandra)
which is attached to this message.

It appeared in the ijdl in 1980.

It discusses the topic of the presence of South Indian words in dhāraṇi-s

I hope this is useful


Best wishes

-- Jean-Luc (Paris)

P.S. how many levels exist in Sanskrit examinations?
Lokesh_Chandra_ijdl_9-1_.pdf

Vinodh Rajan

unread,
Nov 26, 2011, 5:17:34 AM11/26/11
to mint...@googlegroups.com, Vinodh Rajan, மின்தமிழ், Dhivakar, rajam, N Kannan
//
P.S. how many levels exist in Sanskrit examinations?//

4

Pravesha
Parichaya
Siksha
Kovida

V

Vinodh Rajan

unread,
Nov 26, 2011, 6:09:59 AM11/26/11
to mint...@googlegroups.com, Vinodh Rajan, மின்தமிழ், Dhivakar, rajam, N Kannan
//you might want to read the article (by Lokesh Chandra)
which is attached to this message.//

Dear JLC,

Thanks for the attachment.

Never thought Kanchi could be the legendary Oddiyana.

I was (and am) under the impression that Oddiya was Orissa..  Conflating it with Kanchi seems to be a bit far too much.

V


Geetha Sambasivam

unread,
Nov 26, 2011, 6:13:04 AM11/26/11
to mint...@googlegroups.com
புதிய செய்திப் பகிர்வுக்கு நன்றி திவாகர்.

2011/11/26 Dhivakar <venkdh...@gmail.com>
>>And what are the words used for the vidyādhara-s in Telugu?<<

In general Gandharvas - the telugus call them.

N. Ganesan

unread,
Nov 26, 2011, 6:35:23 AM11/26/11
to மின்தமிழ்

On Nov 26, 1:52 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> Dear JLC,
>
> In Pali, Vidyaadhara-s are called Vijjaadhara-s. [Holders of Vidyaa; Vidyaa
> as in Magical Charms ]
>
> Vijjaa விஜ்ஜா could have become விச்சை in Tamil. then got nasalized to
> விஞ்சை,
>

I doubt this is the way viccai was formed in Tamil.
vidyA can directly become viccai.

Note that VidyAdhara is written as விச்சாதரன் in Tamil.

N. Ganesan

> Then add the -அர்/அன் suffix you have விஞ்சையர் :D
>
> Just speculating.. Ignore :)
>
> BTW I suppose Gandharva-s are a separate classe of beings from
> Vidyaadhara-s.
>
> Vidyaadhara-s are in essence used in two ways : Celestial Vidyaadhara-s and
> Human Vidyaadhara-s [who can use Magical Charms]. But in most cases, it
> usually refers to the former.
>
> V
>

> 2011/11/26 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>

> >> 2011/11/26 Jean-Luc Chevillard<jeanluc.chevillard@**gmail.com<jeanluc.chevill...@gmail.com>

> >>>>http://www.tamilheritage.org/**how2contribute.html<http://www.tamilheritage.org/how2contribute.html>To post to this group, send


> >>>> email to minT...@googlegroups.com
> >>>> To unsubscribe from this group, send email to

> >>>> minTamil-unsubscribe@**googlegroups.com<minTamil-unsubscribe@googlegroups.c om>


> >>>> For more options, visit this group at

> >>>>http://groups.google.com/**group/minTamil<http://groups.google.com/group/minTamil>
>
> --http://www.virtualvinodh.com

Raja sankar

unread,
Nov 26, 2011, 7:00:41 AM11/26/11
to mint...@googlegroups.com
வித்தியாதரர் எனும் பதமும் கந்தர்வர் எனும் பதமும் வானில் செல்லும் பாடகர்கள். போரிடும் குணம் உடையவர்கள் எனும் பதத்தில் உபயோகிப்படுகிறது. கான கந்தர்வன் என பாடகர்களை பாரட்டி சொல்லும் வழக்கம் உண்டு. சில இடங்களில் வித்தியாதரர் என்போர் சிவ கணங்கள் என உள்ளது.

வாண வித்தியாதரன் எனவும் ஒரு அரசன் இருந்ததாக தெரிகிறது
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60610266&format=print&edition_id=20061026


ஆனால் சில இடங்களில் இருவரும் வேறு வேறு எனவும் உள்ளது

அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ
இந்திர னானையும் தானும்வந் திவனோ எம்பெரு மானுன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.

http://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1291

கீதையில் பல இடங்களிலும் கந்தவர் மட்டும் கூறப்படுகிறார்கள். வித்தியாதரர் இல்லை. ஸ்ரீமத் பாகவத்தில் சிவன் பார்வதியை மடியில் வைத்திருப்பதை கண்டு வானில் விமானத்தில் சென்ற ஒரு கந்தர்வன் தன்னுடைய மனைவியிடம் சிவன் அறிஞர்கள் கூடிய சபையில் மனைவியை மடியில் வைத்திருக்கலாமா என்று சொல்லி பார்வதியால் சாபம் பெற்றதாக கதை உண்டு.

ராஜசங்கர்



2011/11/26 Vinodh Rajan <vinodh...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Jean-Luc Chevillard

unread,
Nov 26, 2011, 8:53:23 AM11/26/11
to mint...@googlegroups.com, N. Ganesan, Vinodh Rajan
I would make the hypothesis that

*(A)*
in the earlier period, Tamil was borrowing words from Pali or Prakrit
and "விஞ்சை" (which has nowadays a voiced prenasalized stop between two
vowelsm
and probably already had)
was the closest approximation which could be had for Vijjā விஜ்ஜா.

*(B)*
at a later period, Tamil started to borrow also from Sanskrit
and took the word vidyā
and then "விச்சை" [or விச்சா-] appeared as a better approximation.

Of course, that hypothesis would need a demonstration,
or a refutal, but that may be done later ;-)

Cheers

-- jlc

rajam

unread,
Nov 27, 2011, 12:50:35 PM11/27/11
to mint...@googlegroups.com, Dhivakar V
இந்தப் பதிவு திவாகர் எழுப்பிய கேள்விகளைப் பற்றிச் சிந்திப்பதற்காக ...
3. "விஞ்சையன் மானிடப் பிறவியா?"
 

இந்த வரிகள் விஞ்சையனை மனிதப் பிறவிக்கு மேலாக இருக்கவைக்குமா?
அசாதாரண நிகழ்ச்சிகள் தமிழின் முதல் மூன்று காவியங்களிலுமே வருகின்றன
அல்லவா.. எப்படி அது என்ற ஆவலால்தான் கேட்கிறேன்.
அது எப்படி என்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லையே, திவாகர்! பல நேரங்களில்/இடங்களில், பல சமயத்தினரும் பலவகை மக்களும் கலந்து உறவாடியபோது ஏற்பட்ட கருத்துத் தாக்கமாக இருக்கலாம் (?). வெறும் speculation செய்வது என்னால் முடியாதே! :-) அதனால் இலக்கிய அகச்சான்றின் துணைகொண்டுமட்டும் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன், சரியா?  
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்"<<
1. இந்த வரிக்கு ... "இந்த நிலத்தவர் யாரும் பார்த்திராத, ஆனால் பலரும் தொழுகின்ற ஒரு வடிவத்தை உடையவன்" என்றுதான் பொருள் கொள்ளத் தோன்றுகிறது. இந்த வரியினால் மட்டுமே அவனுடைய உண்மையான நிலையை/பிறவியைப் பற்றி -- இந்த உலகத்தவனா, அந்த உலகத்தவனா என்று -- சொல்ல முடிகிறதா, பாருங்களேன்.

2. மணிமேகலா தெய்வம் இந்திரவிழாவைக் காண்பதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு வருவதைப் பற்றிச் சொல்லும்போது காப்பியம் சொல்வது: "பதியகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி ..." வந்தாள் என்று. பிறகு இதே தெய்வத்தைக் குறித்து, மணிமேகலை மணிபல்லத்தீவில் குறிக்கிறாள்: "விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் வஞ்சம் செய்தனள்கொல்லோ அறியேன்."

3. காயசண்டிகையும் காஞ்சனனும் விஞ்சையர் என்றே காப்பியம் குறிப்பிடுகிறது.அவர்கள் இருவருமே மனித உருவில் காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்தவர்கள். காயசண்டிகை அங்கே நெடுநாள் அலைந்து திரிந்தவள். 

4. மணிமேகலை "மாய விஞ்சை மந்திரம் ஓதி" காயசண்டிகை வடிவு எடுப்பதாக அறிகிறோம். அவளே தன்னை "விஞ்சை மகள்" என்று சோழ மன்னனிடம் அறிமுகப்படுத்திக்கொள்கிறாள்.
5. உதயகுமரன் மணிமேகலையைப் பற்றிச் சொல்கிறான்: "வளைசேர் மணிமேகலையே காயசண்டிகையாய்க் கடிஞை ஏந்தி, மாய விஞ்சையின் மன(ம்) மயக்குறுத்தனள்"

******************** 
 
6. உரைகளும், அகராதிகளும் "விஞ்சையன்" என்பதற்கு எத்தனைப் பொருள் கொடுத்தாலும் ... எங்கேயாவது யாராவது அந்த "விஞ்சைய"ப் பிறவியைக் கண்ணால் பார்த்து அதன் தன்மையை விளக்கியிருக்கிறார்களா, இல்லை எல்லாமே நம்பிக்கை/கற்பனைதானா? யாரால் உறுதியாகச் சொல்லமுடியும்?
அன்புடன்,
ராஜம்
 

On Nov 25, 2011, at 10:43 PM, Dhivakar wrote:

ராஜம் அம்மா!

பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்"<<

இந்த வரிகள் விஞ்சையனை மனிதப் பிறவிக்கு மேலாக இருக்கவைக்குமா?
அசாதாரண நிகழ்ச்சிகள் தமிழின் முதல் மூன்று காவியங்களிலுமே வருகின்றன
அல்லவா.. எப்படி அது என்ற ஆவலால்தான் கேட்கிறேன்.

உங்கள் ஆழமான பதில்கள் மேலும் சிந்திக்க வைக்கின்றன என்பதை மட்டும்
சொல்லி விடுகிறேன்.

மிகக் கொடியது, பூச்சாண்டி போன்ற பெரிய வார்த்தைகள் போட்டது தவறுதான்..
அந்தப் பெண்கள் மேல் உள்ள பாசத்தினால் அப்படி என் கை எழுதியிருக்க (டைப்
அடித்திருக்க) வேண்டும்..(((

அன்புடன் திவாகர்

2011/11/26 rajam <ra...@earthlink.net>:
இந்தப் பதிவு திவாகர் எழுப்பிய கேள்விகளைப் பற்றிச் சிந்திப்பதற்காக ...

DEV RAJ

unread,
Dec 2, 2011, 8:23:50 AM12/2/11
to மின்தமிழ்
பெருங்கதையின் பொருளடக்கத்தில் கூறும்போது விஞ்சையம் பெருமலை, வெள்ளிமலை
என்பன வித்தியாதரர்களிருத்தற்குரிய இடம்; இவ்வித்தியாதரர்களைக்
குறிக்கும் போது
இசைக்குரியர்களாக கூறுவர். ஜைன மதத்தில் வித்தியாதரர் உருவங்கள்
காட்டப்படுவதுண்டு.

புறநானூற்று வாழ்துறை பாடலில் வரி 10 ல்

பதினென்கண மேத்தவும் படுமே' - என்றும்

பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படையின் அடி 168 ல்

"நால்வே றியற்கைப் பதினொரு மூவரொ
டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீ இயர்"

- என்று இந்நூலில் பதினெண் கணங்களைக் குறிப்பிடுகின்றார்கள்.

இதில் புறநானூற்றில் வித்தியாதரர் கூறப்படுகிறார்கள்.
பத்துப்பாட்டில் விஞ்சையர்கள் கூறப்படுகின்றார்கள்.

இதை நோக்கும்போது வித்தியாதரரும் விஞ்சையரும் ஒரே குழுவினராவர் எனத்
தெளிவாகிறது.


http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60610266&edition_id=20061026&format=html


On Nov 26, 1:16 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> A search in Tipitaka, shows the term "Vijjaadhara" appears more in the
> Commentaries [Attakatha] and later pali texts.
>
> The are two places they appear as Buddha Vacana:
>
> One instance is in Khuddaka Nikaya: [Again Khuddaka Nikaya is sorta of
> a Miscellaneous category]
>

> *Vijjādharo tadā āsiṃ, antalikkhacaro ahaṃ;*
> *Tisūlaṃ sukataṃ gayha, gacchāmi ambare tadā*


>
> probably, back translates to Sanskrit as :
>

> *Vidyādharo tadā āsam antarikṣacaro'ham*
> *Triśūlaṁ sukṛtaṁ gṛhya gacchāmi ambare tadā  *


>
> I was once a Vidyadhara, roaming [cara] the Skies [Antariksha]. Holding
> [Grihya] the well made [Sukrta] Trident [Trishuula] am going [Gacchaami] in
> the Skies [Ambara] likewise.
>
> This should give some context on the nature of Vidyadharas. (I Hope :P).
> They seem to invariably be depicted as Sky Travelers :-) .
>
> V
>

> 2011/11/26 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > Dear JLC,
>
> > In Pali, Vidyaadhara-s are called Vijjaadhara-s. [Holders of Vidyaa;
> > Vidyaa as in Magical Charms ]
>
> > Vijjaa விஜ்ஜா could have become விச்சை in Tamil. then got nasalized to
> > விஞ்சை,
>
> > Then add the -அர்/அன் suffix you have விஞ்சையர் :D
>
> > Just speculating.. Ignore :)
>
> > BTW I suppose Gandharva-s are a separate classe of beings from
> > Vidyaadhara-s.
>
> > Vidyaadhara-s are in essence used in two ways : Celestial Vidyaadhara-s
> > and Human Vidyaadhara-s [who can use Magical Charms]. But in most cases, it
> > usually refers to the former.
>
> > V
>

> > 2011/11/26 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>

> >>> 2011/11/26 Jean-Luc Chevillard<jeanluc.chevillard@**gmail.com<jeanluc.chevill...@gmail.com>

> >>>>>http://www.tamilheritage.org/**how2contribute.html<http://www.tamilheritage.org/how2contribute.html>To post to this group, send


> >>>>> email to minT...@googlegroups.com
> >>>>> To unsubscribe from this group, send email to

> >>>>> minTamil-unsubscribe@**googlegroups.com<minTamil-u...@googlegroups.com>


> >>>>> For more options, visit this group at

> >>>>>http://groups.google.com/**group/minTamil<http://groups.google.com/group/minTamil>

Reply all
Reply to author
Forward
0 new messages