இலக்கிய வரலாற்று நூல்களும் சில நெருடல்களும் - கட்டுரை

816 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Jun 26, 2011, 10:33:16 AM6/26/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
வணக்கம் நண்பர்களே,

இன்று ஒரு கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இக்கட்டுரையை நமக்காகத் தட்டச்சு செய்து வழங்கியவர் திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள் அவருக்கு நமது நன்றி. இக்கட்டுரையை வாசித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே!

அன்புடன்
சுபா

நன்றி:அரிமா நோக்கு அக்டோபர் 2009


இலக்கிய வரலாற்று நூல்களும் சில நெருடல்களும் 
ந. முருகேசன்
 
தமிழில் இலக்கிய வரலாற்று நூல்கள் மிகுதியாக வந்துள்ளன.  இன்னமும் பலர் புதிதாக இலக்கிய வரலாற்று நூல்களை எழுதுகின்றனர்.  பட்டப்படிப்புப் பயிலும் மாணவர்கட்கும், புலவர் வகுப்பில் பயிலும் மாணவர்கட்கும் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு பாடமாக இருப்பதால் இலக்கிய வரலாற்று நூல்கள் அதிகமாக வருகின்றன.  ஈராயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட நம் மொழியின் இலக்கிய வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் தான்.  அங்ஙனம் அறிந்து கொள்வது சரியாக இருக்க வேண்டும்.
 
பெரும்பாலும் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம் என்றவாறு பகுக்கப்பட்டு, அவ்வக்காலங்களில் தோன்றிய நூல்களைப் பட்டியலிட்டு, நயம்பட எழுதுவதையே இலக்கிய வரலாற்று நூல்களில் பார்க்கிறோம்.  வித்தியாசமான சில இலக்கிய நூல்கள் வகைமை நோக்கிலும், புதிய நோக்கிலும் வந்துள்ளன.
 
இலக்கிய வரலாறு என்பது சங்க காலம், சங்கம் மருவிய காலம் என்றவாறு பகுக்கப்பட்டு, அவ்வக்காலங்களில் தோன்றிய நூல்களைப் பட்டியலிட்டு, நயம்படக் கூறுவதோடு முடிவதன்று.  இலக்கியப் படைப்புகள் தோன்றிய சூழல், காரணங்கள், படைப்புகள் மூலம் உணர்ந்து கொள்ளப்படும் செய்திகள், சமுதாய நிலை முதலியவற்றையெல்லாம் சற்றே கோடிட்டுக் காட்டிச் சென்றால்தான் இலக்கிய வரலாறு முழுமை பெறும்.  இவ்வகையில் இலக்கிய வரலாற்றை நோக்கினால் சில நெருடல்கள் ஏற்படுகின்றன.
 
சங்க காலத்தைப் பொற்காலம் என்றும், சங்கம் மருவிய காலத்தை இருண்ட காலம் என்றும் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகின்றனர்.  பல்கலைக்கழகத் தேர்வுகளிலும், “சங்க காலம் பொற்காலம் நிறுவுக” என்றும் “சங்கம் மருவிய காலம் இருண்ட காலம் என்பதை விளக்குக” என்றும் வினாக்கள் கேட்கப் படுகின்றன.  இவையெல்லாம் மனத்தை உறுத்துகின்றன.  என் நெருடல்களையும், உறுத்தல்களையும் எடுத்து வைக்கிறேன்.  தமிழ் கற்றோர் சிந்திக்க வேண்டும்.
 
பொற்காலம் என்பது எப்படி இருக்கும்?  உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் எல்லோர்க்கும் கிடைக்க வேண்டும்.  வஞ்சனையும் கொடுமையும் வக்கிரமும் இல்லாமல் இருக்க வேண்டும்.  அமைதி மிக்கதாக, உயர்வு தாழ்வு இல்லாததாக இருக்க வேண்டும்.  அப்படியொரு காலம் இந்நாள் வரை இருந்து உள்ளதா?  நிச்சயமாக இல்லை.  சில காரணங்களை மட்டும் கூறி ஒரு குறிப்பிட்ட காலத்தைப் பொற்காலம் என்று கூறுவது பொருத்தமாகுமா?  பொருத்தமில்லை எனக்கூறும் நெஞ்ச நெருடல்கள் பல.
 
ரோமாபுரியோடும், கிரேக்கத்தோடும் வணிகத் தொடர்பு இருந்தது;  வளம் கொழித்தது என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் சங்க காலத் தமிழகத்தில் தான் வறுமையும், பட்டினியும் வேதனையும் அங்கிங்கெனாதபடி இருந்தன;  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (புறம் 18) என்று உரத்த குரல் கொடுத்தனர்.  புறநானூற்றுப் பாக்களைப் படிக்கிறபோது உள்ளம் சங்கடப்படுகிறது.  பெரும்புலவனே வறுமைத்துயரால் என் வீட்டில் உண்பதற்குச் சோறில்லை.  உணவில்லாத காரணத்தால், பாலற்றுப் போன என வாழ்க்கைத் துணைவியின் தனத்தைச் சுவைத்துப் பால் பெறாத  என் புதல்வன், சோற்றுப்பானையைத் திறந்து, அங்கும் ஏதும் இல்லாத காரணத்தால் அழுதான்; என் மனைவி புலியைக் காட்டி அச்சுறுத்தியும், நிலவைக் காட்டியும், அவன் தணியாது போக, அவன், உன் தந்தையை நீ எங்ஙனம் வெறுப்பாய்; காட்டுக என்றாள்.  அவன் முகம் சுளித்துக் காட்ட வேதனை மிகக் கொண்டாள் என்று தன் வறுமையையும், சோகத்தையும் பதிவு செய்துள்ளான்.  இத்தகு பதிவுகள் நிறைய உள்ளன புறநானூற்றில்.
 
வீரம் பற்றிப் புகழ்ந்து பேசப்படும் அக்காலத்தில், தாவிப் படர வழியின்றி வாடிய முல்லைக்கொடிக்குத் தேரீந்து, ஏங்கித் தவித்த ஏழை எளியவர்க்குப் பொன்னும், பொருளும் தந்த வள்ளல் பாரியை வஞ்சனையாலே கொன்றார்கள்.
வஞ்சனையால் கொன்றதால் தான்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.
 
என்று பாரிமகளிர் பாடினார்கள்.  இவ்வரிகட்குக் குறிப்புரை எழுதிய ஒளவை துரைசாமிப்பிள்ளை ஒருவனை மூவேந்தரும், முற்றியிருந்தும், வஞ்சித்துக் கொன்றமையின், வென்றெறி முரசின் வேந்தர் என்றது, ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பு என்று எழுதுவது நினைவிற் கொள்ள வேண்டும்.
 
மூவேந்தரின் வஞ்சனையால் பாரி இறந்தபின், அவன் பெற்றெடுத்த மகளிரைத் திருமணம் செய்து வைக்கக் கபிலர் விச்சிக்கோன், இருங்கோவேள் போன்ற மன்னர்களைப் பாடிப்பாடி முயன்றும், எந்த மன்னனும், மணம் செய்து கொள்ளவில்லை.  மனம் வெதும்பி அந்தணர்களிடம் அவர்களை அடைக்கலப் படுத்தி முடிவில் கபிலர் இறந்தே போனார்.
 
மறத்துறையிலும் அறமே நிகழும் என்று போற்றப் படும் சங்க காலத்தில், பகைவனாய் இருந்த மன்னன் திருமுடிக்காரி இறந்தான் என்றதும், சிறுவர்களாய் இருந்த அவன் பிள்ளைகளைக் கொண்டு வந்து, யானையால் இடற வைத்துக் கொல்ல முயற்சி செய்தான் வக்ர உணர்வோடு கிள்ளி வளவன் என்ற  சோழ மன்னன் (புறம். 46) இதனைக் கோவூர்க்கிழார் தடுத்துவிட்டார் என்பது வேறு விஷயம்.
 
தன் ஆணையைக் கேட்கவில்லை என்பதற்காக எழினி என்னும் மன்னனைக் கொல்ல, மத்தி என்பவனை ஒரு சோழன் ஏவ, அவன் எழினியோடு போரிட்டுக் கொன்று, அவன் பல்லைக் குரூர உணர்வோடு பெயர்த்தெடுத்து வந்து, வெண்மணி வாயில் கோட்டையில் பதித்து வைத்ததை
 
…எழினி பல்லெறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்
என்று அகநானூற்றில் மாமூலனார் பாடியுள்ளார்.
 
தன் தோட்டத்து மாங்காய் ஆற்றிலே போக, அதனை எடுத்துத் தின்றாள் என்பதற்காக ஒரு பெண் என்றும் பாராது, கொன்றான் நன்னன் என்ற கொடியவன்.
 
தம் நிலத்தில் மாடொன்று மேய்ந்தது என்பதற்காக, அம்மாட்டின் உரிமையாளரைப் பிடித்துக் கண்களைப் போக்கினார்கள் கோசர்கள் என்ற மரபினர்.
 
இளங்குமணன் என்னும் கொடியவன் அண்ணன் குமணனிடமிருந்து, அரசாட்சியைக் கைப்பற்றியதோடு, உடன் பிறந்த அண்ணன் என்றும் கருதாமல், அவனைக் காட்டிற்கும் விரட்டிவிட்டு, அவன் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பரிசளிக்கப் படும் என்று கூறியதும் சங்க காலத்தில்தான்! நல்லவேளையாக அங்ஙனம் நிகழவில்லை.
 
கொடுமையிலும், பெரிய கொடுமையாகச் சமுதாயத்தில் சிலரை இழிவானவர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள்; தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள்.
 
இழிசினன் (புறம். 289)
இழிபிறப்பாளன் (புறம். 170)
புலையன் (நற்றிணை. 375)
என்ற சங்க இலக்கியத் தொடர்கள் எவ்வளவு மோசமானவை.
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலபுறத்(து) என்மனார் புலவர்.
என்ற தொல்காப்பிய நூற்பா, காதல் வாழ்வாகிய அகன் ஐந்திணைக்கு, குற்றேவல் புரிவாரும் பிறர் ஏவித் தொழில் புரிவோரும் உரியர் அல்லர் என்று கூறுகின்றது.
 
இவ்வளவுக்கும் பிறகு, சங்க காலத்தைப் பொற்காலம் என்று தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவது பொருத்தமா?  சிந்திக்க வேண்டும்.
 
சங்கம் மருவிய காலத்தை இருண்ட காலம் என்று கூறுவதும் பொருத்தமற்றது.  தமிழர்கள் அல்லாத களப்பிரர் ஆட்சி புரிந்தனர்;  அவர்கள் சமண சமயத்தையே வளர்த்துச் சைவ சமயத்துக்கு எதிர்ப்பாக இருந்தனர் என்று கூறிச் சங்கம் மருவிய காலத்தை “இருண்ட காலம்” என்கின்றனர்.  தமிழிலக்கிய வளர்ச்சி இல்லை என்பதும், ஒரு குற்றச் சாட்டு.  ஆனால் சமய உலகில் களப்பிரர்கள் எதனை எதிர்த்தார்கள் என்பதையும் அவர்கள் கால இலக்கிய, இலக்கண வளர்ச்சியையும் கூறிச் சங்கம் மருவிய காலம் இருண்ட காலம் அன்று என, மயிலை சீனி. வேங்கடசாமி, க.ப.அறவாணன், பொ.வேல்சாமி முதலியோர் விளக்கி உள்ளனர்.
 
மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலும், க.ப.அறவாணன் எழுதிய சைனரின் தமிழ் இலக்கண நன்கொடை என்ற நூலும், பொ.வேல்சாமி எழுதிய பொற்காலங்களும் இருண்டகாலங்களும் தேவை; ஒரு தலை கீழ் பார்வை என்ற கட்டுரையும், குறிப்பிடத் தக்கவை.  அவசரப் படாமல் ஆழ்ந்து சிந்தித்து எழுதியுள்ளார்கள்.  உயிர்ப்பலியாகம் செய்த வைதீகத்தை எதிர்த்தமையாலேயே களப்பிரர்கள் நிந்தனைக்கு ஆளானார்கள் என்பதைப் புலப்படுத்தி, அவர்கள் காலத்திலும் தமிழிலக்கிய வளர்ச்சியும் இருந்தது என்பதையும் தெளிவுறுத்தியுள்ளார்கள்.
 
சங்கம் மருவிய காலத்தில்தான் பதினெண்கீழ்க்கணக்கில் பல நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்கள், பதினோராம் திருமுறையில் பல நூல்கள், குறிப்பாகக் காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, திருவரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகிய படைப்புகள், தமிழர்களின் தத்துவச்  சொத்து என்று கூறப்படும் திருமந்திரம், முத்தொள்ளாயிரம், முதலிய இலக்கியங்கள் தோன்றின. சில இலக்கண நூல்களும் தோன்றின.  புதிய யாப்பு வடிவங்கள் தோன்றின.  கட்டளைக் கலித்துறை குறிப்பிடத் தக்கது.
 
காவிய உலகில் சிலப்பதிகாரமும், அந்தாதி உலகில் அற்புதத் திருவந்தாதியும், பதிக உலகில் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களும் தத்துவ உலகில் திருமந்திரமும் முதலில் பாடப்பட்டவை என்பதும், அவைகள் வழிகாட்டிகள் என்பதும் குறிப்பிடத் தக்கவை.
 
களப்பிரர் ஆட்சிக்காலத்தில் நுண்கலைகளும் வளர்ந்தன என்று கூறும் மயிலை சீனி.வேங்கடசாமி ‘கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்து திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், தங்களுடைய தேவாரப் பதிகங்களில் கூறுகிற கோயில் கட்டட வகைகளான கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், பெருங்கோயில், இளங்கோயில், மாடக்கோயில், தூங்கானை மாடம், மணிக்கோயில் முதலான கட்டட வகைகள் களப்பிரர் காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும்.  ஏனென்றால் இந்தக் கட்டட வகைகள் எல்லாம் திடீரென்று 7ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்க முடியாது’ என்பார்.
 
இவ்வளவுக்கும் பிறகும் சங்கம் மருவிய காலத்தை இருண்ட காலம் என்று கூறலாமா?
 
தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் பேராசிரியர்கள் ‘பொற்காலம்’ ‘இருண்ட காலம்’ போன்ற புனைந்துரைகளை அல்லது சொல்லாடல்களைத் தவிர்த்து விட்டுச் ‘சங்க காலம்’ ‘சங்கம் மருவிய காலம்’ முதலிய காலப் பிரிவுகளைக் குறிப்பிட்டு, அவ்வக்காலப் படைப்புகளை, அவை குறிப்பிடும் செய்திகளோடும், சமூகப் பின்னணியோடும் தோன்றிய காரணங்களோடும் விளக்கிக் கூறி எழுதுவது நலம்.
 


coral shree

unread,
Jun 26, 2011, 10:47:42 AM6/26/11
to mint...@googlegroups.com
நல்ல கட்டுரை. பகிர்விற்கு நன்றி. தட்டச்சு செய்த கீதாவிற்கும் நன்றி. நன்னன் வரலாறு தான் பொள்ளாச்சி, ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் வரலாற்றின் அடிப்படைத் தத்துவம்.

2011/6/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Innamburan Innamburan

unread,
Jun 26, 2011, 10:47:59 AM6/26/11
to mint...@googlegroups.com

நன்றி, ஸுபாஷிணி. சிந்திக்க வேண்டிய கட்டுரை. இலக்கிய வரலாறு வேறு. இலக்கியத்தின் வரலாறு வேறு. வரலாற்றில் இலக்கியம் வேறு. ஆங்கிலத்தில் இந்த நிலைகளை பார்க்க முடிகிறது. தமிழில், மு.வ. அவர்களின் 'இலக்கிய வரலாறு' போல் கண்ணும், கருத்துமாக எழுதப்பட்டவை குறைவு. திரு.முருகேசன் மாதிரி சிந்திக்க வேண்டியது அவசியம்.
நன்றி,
இன்னம்பூரான்
26 06 2011

Mohanarangan V Srirangam

unread,
Jun 26, 2011, 10:53:04 AM6/26/11
to mint...@googlegroups.com
அடடா! விஷயம் எங்கயோ போய் லாக்காவுதே! 

அப்படிப் போடுங்க. திருமதி பவள சங்கரி சொல்றதைப் பார்த்தா 

‘பாடாது ஒழிக நன்னனை’ என்ற கதை மாசாணியம்மன் கோவில் வரலாறும் சந்திக்குதா? 

அப்ப மாசாணியம்மன் கோவில் கதை கண்டிப்பா அம்மையார் போட்டே ஆகணுமே. 

சுபாஷினியார் பரிந்துரைப்பாராக. 
*

2011/6/26 coral shree <cor...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jun 26, 2011, 11:07:19 AM6/26/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மாசாணியம்மன் கதை இதோ..இங்கே..

முன்னர் பவளா வழங்கியிருக்கின்றார்.

-சுபா

2011/6/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

seethaalakshmi subramanian

unread,
Jun 26, 2011, 11:10:59 AM6/26/11
to mint...@googlegroups.com
உண்மை ஒலிக்கின்றது.
அரிய கட்டுரை
சீதாம்மா


2011/6/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அடடா! விஷயம் எங்கயோ போய் லாக்காவுதே! 

Mohanarangan V Srirangam

unread,
Jun 26, 2011, 11:17:13 AM6/26/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அப்படியா? நான் தான் கவனிக்காம இருந்துட்டேனா? 
சாரி பவள சங்கரி மேடம். 

நன்றி 

*

2011/6/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Jun 26, 2011, 11:18:09 AM6/26/11
to mint...@googlegroups.com


2011/6/26 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

உண்மை ஒலிக்கின்றது.
அரிய கட்டுரை
சீதாம்மா



அதில் உண்மைக்குக் கொஞ்சம் தொண்டை கட்டியிருக்கிறது. சரியாக ஒலிக்கவில்லை. 

:-)) 

Subashini Tremmel

unread,
Jun 26, 2011, 11:19:24 AM6/26/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram


2011/6/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
...
 
சங்கம் மருவிய காலத்தை இருண்ட காலம் என்று கூறுவதும் பொருத்தமற்றது.  தமிழர்கள் அல்லாத களப்பிரர் ஆட்சி புரிந்தனர்;  அவர்கள் சமண சமயத்தையே வளர்த்துச் சைவ சமயத்துக்கு எதிர்ப்பாக இருந்தனர் என்று கூறிச் சங்கம் மருவிய காலத்தை “இருண்ட காலம்” என்கின்றனர்.  தமிழிலக்கிய வளர்ச்சி இல்லை என்பதும், ஒரு குற்றச் சாட்டு.  ஆனால் சமய உலகில் களப்பிரர்கள் எதனை எதிர்த்தார்கள் என்பதையும் அவர்கள் கால இலக்கிய, இலக்கண வளர்ச்சியையும் கூறிச் சங்கம் மருவிய காலம் இருண்ட காலம் அன்று என, மயிலை சீனி. வேங்கடசாமி, க.ப.அறவாணன், பொ.வேல்சாமி முதலியோர் விளக்கி உள்ளனர்.
 
மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலும், க.ப.அறவாணன் எழுதிய சைனரின் தமிழ் இலக்கண நன்கொடை என்ற நூலும், பொ.வேல்சாமி எழுதிய பொற்காலங்களும் இருண்டகாலங்களும் தேவை; ஒரு தலை கீழ் பார்வை என்ற கட்டுரையும், குறிப்பிடத் தக்கவை.  அவசரப் படாமல் ஆழ்ந்து சிந்தித்து எழுதியுள்ளார்கள்.  உயிர்ப்பலியாகம் செய்த வைதீகத்தை எதிர்த்தமையாலேயே களப்பிரர்கள் நிந்தனைக்கு ஆளானார்கள் என்பதைப் புலப்படுத்தி, அவர்கள் காலத்திலும் தமிழிலக்கிய வளர்ச்சியும் இருந்தது என்பதையும் தெளிவுறுத்தியுள்ளார்கள்.
 
சங்கம் மருவிய காலத்தில்தான் பதினெண்கீழ்க்கணக்கில் பல நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்கள், பதினோராம் திருமுறையில் பல நூல்கள், குறிப்பாகக் காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, திருவரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகிய படைப்புகள், தமிழர்களின் தத்துவச்  சொத்து என்று கூறப்படும் திருமந்திரம், முத்தொள்ளாயிரம், முதலிய இலக்கியங்கள் தோன்றின. சில இலக்கண நூல்களும் தோன்றின.  புதிய யாப்பு வடிவங்கள் தோன்றின.  கட்டளைக் கலித்துறை குறிப்பிடத் தக்கது.
 
இதே வகையில் களப்பிறர் காலம் இருண்ட காலம் அல்ல என்ற வகையில் தொல்லியல் அறிஞர் டாக்டர் பத்மாவதி அவர்கள் அண்மையில் ஒரு ஆய்வு நூல் வெளியிட்டுள்ளார். அதனைப் பற்றிய தகவல்களையும் பெற்று இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். 

-சுபா


 
காவிய உலகில் சிலப்பதிகாரமும், அந்தாதி உலகில் அற்புதத் திருவந்தாதியும், பதிக உலகில் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களும் தத்துவ உலகில் திருமந்திரமும் முதலில் பாடப்பட்டவை என்பதும், அவைகள் வழிகாட்டிகள் என்பதும் குறிப்பிடத் தக்கவை.
 
களப்பிரர் ஆட்சிக்காலத்தில் நுண்கலைகளும் வளர்ந்தன என்று கூறும் மயிலை சீனி.வேங்கடசாமி ‘கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்து திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், தங்களுடைய தேவாரப் பதிகங்களில் கூறுகிற கோயில் கட்டட வகைகளான கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், பெருங்கோயில், இளங்கோயில், மாடக்கோயில், தூங்கானை மாடம், மணிக்கோயில் முதலான கட்டட வகைகள் களப்பிரர் காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும்.  ஏனென்றால் இந்தக் கட்டட வகைகள் எல்லாம் திடீரென்று 7ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்க முடியாது’ என்பார்.
 
இவ்வளவுக்கும் பிறகும் சங்கம் மருவிய காலத்தை இருண்ட காலம் என்று கூறலாமா?
 
தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் பேராசிரியர்கள் ‘பொற்காலம்’ ‘இருண்ட காலம்’ போன்ற புனைந்துரைகளை அல்லது சொல்லாடல்களைத் தவிர்த்து விட்டுச் ‘சங்க காலம்’ ‘சங்கம் மருவிய காலம்’ முதலிய காலப் பிரிவுகளைக் குறிப்பிட்டு, அவ்வக்காலப் படைப்புகளை, அவை குறிப்பிடும் செய்திகளோடும், சமூகப் பின்னணியோடும் தோன்றிய காரணங்களோடும் விளக்கிக் கூறி எழுதுவது நலம்.
 


Tthamizth Tthenee

unread,
Jun 26, 2011, 5:54:22 PM6/26/11
to mint...@googlegroups.com
"அதில் உண்மைக்குக் கொஞ்சம் தொண்டை கட்டியிருக்கிறது. சரியாக ஒலிக்கவில்லை.
:-)) "
 
 
சரியாக ஒலிக்காத இடங்களை  ஒலிக்கச் செய்யுங்கள்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


- Show quoted text -

N. Kannan

unread,
Jun 27, 2011, 9:27:45 AM6/27/11
to mint...@googlegroups.com
நல்ல பங்களிப்பு சுபா.

நான் வேறொரு நோக்கில் தமிழ் இலக்கிய போக்குகள் பற்றி எழுதி வருகிறேன்.
அது சிங்கப்பூர் கருத்தரங்கிற்கு.

எரிந்த கட்சி எரியாத கட்சி பொற்காலம், பொற்காத காலம் என்பதெல்லாம் வெறும்
கற்பனை. நான் பல காலமாகக் கேட்டுவரும் கேள்விதான். சங்க காலத்தில் எத்தனை
தமிழர் இருந்திருப்பர்? அவ்வளவு குறைவாக இருந்த போதே வள்ளுவன்
பட்டினிச்சாவு கண்டு இறைவனுக்குச் சாபம் போட வேண்டிய அவசியமென்ன?
பொற்காலம் என்பது நாம் காணும் இன்றைய இலக்கியச் செழுமைக்கு விதை நெல்
அன்று எப்படித்தோன்றியது, வளர்ந்தது என்பதை வைத்துச் சொல்வது.
அதையெல்லாம் அரங்கனார் இம்மன்றத்தில் விளக்கிய வண்ணம்தான் உள்ளார்.
அன்றும் இன்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வு இலக்கியமானால் பட்டினியும்,
அடுக்குமுறையும் இருக்கத்தான் செய்யும். அரசர்கள், அதிகாரம் இவை
அராஜகத்தை வளர்க்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? இராஜராஜன் தேவதாசிகளின்
உணவில் விஷத்தை வைத்து விளையாடுவானாம். இ.பா எழுதுகிறார். அது அரச
விளையாட்டு.

நான் நிரம்ப எதிர்பாத்தேன் இக்கட்டுரையில்.

நா.கண்ணன்

2011/6/26 Innamburan Innamburan <innam...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Jun 27, 2011, 9:30:08 AM6/27/11
to mint...@googlegroups.com
நான் நிரம்ப எதிர்பாத்தேன் இக்கட்டுரையில்.//

உண்மை, கட்டுரை திடீரென முடிந்தாற்போல் தான் எனக்கும் தோன்றியது.  ஆனால் அவ்வளவு தான் கட்டுரை. :(


2011/6/27 N. Kannan <navan...@gmail.com>

விளையாட்டு.

நான் நிரம்ப எதிர்பாத்தேன் இக்கட்டுரையில்.

நா.கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages