மனு தர்மம் பற்றி

1,863 views
Skip to first unread message

Suba

unread,
Nov 15, 2016, 5:12:36 PM11/15/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
 
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள், 
மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
மனு தர்மம் இந்து சமய நூலா?

மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன். 

என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?
ஆம் என்றால் எந்த வகையில்?

நன்றி

சுபா

தேனீ

unread,
Nov 15, 2016, 7:47:53 PM11/15/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

வணக்கம் முனைவர் சுபா. 

மனு தர்மம் வேதநெறிக்குச் சிம்மிருதி நூல். அது வைதிக பண்பாட்டு நெறிகளை விளக்குவன. வைதிகர்களின் வாழ்வியல் நெறிக்காக மானுடரால் இயற்றப்பட்டது. அருளாளரால் இயற்றப் பட்டதன்று. அதனை அவ்வாரே நோக்குவதே சரி. அதனை இந்து மதம் என்ற ஒரு பொது பெயரில் வைத்து அனைவருக்கும் உரிய பண்பாட்டு நெறி என்பது போல் சமயவாதிகள் செய்த சூழ்ச்சி மலையேறி விட்டது. இனி அவ்வாழ்வியல் கோட்பாடுகள் பொதுசன அமைப்புக்கும் இன்றைய சிவில் சட்ட நியதிகளுக்கும்  ஏற்புடையதல்லதாகி விட்டது. ஆதலின், மனு தர்மத்தை 'இந்து சமய' நூல் என்பது தவறு என்பது அடியேனின் கருத்து. சிவசிவ. 

தேனீ.

Malarvizhi Mangay

unread,
Nov 16, 2016, 12:40:48 AM11/16/16
to mint...@googlegroups.com

வர்ணாசிரமம் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தைப்
பதிவுசெய்த சமூக இலக்கியம்.எல்லாக்காலத்திலும் அதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.தற்போது யாரும்
அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால்
அது தனித்த எண்ணமே தவிர சமூகக்
கடப்பாட்டினை அதுசாராது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 16, 2016, 1:16:17 AM11/16/16
to mintamil, thiruppuvanam, Kalai Email

வணக்கம்.

மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

சில குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து  தப்பிக்க அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருகின்றனர்.

சிலர் தங்களது முன்னோரின் உயர் பண்புகளை, பெருமைகளைத் தக்கவைத்துக் கொள்ள அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அது தனித்த எண்ணமே தவிர சமூகக் கடப்பாட்டினை அதுசாராது.

அன்பன்
கி. காளைராசன்

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Nov 16, 2016, 1:28:14 AM11/16/16
to மின்தமிழ்
முஸ்லிம்களுக்கு Sharia law இருப்பது போல், இந்துக்களுக்கு மநு ஸ்மிருதி எனச் சொல்லலாமா? மநு நீதியை உயர்த்திப் பிடித்திருக்கிறதே தமிழகம்! மநு நீதிச் சோழன் என்றே ஓர் அரசன் இருந்திருக்கிறானே!

நா.கண்ணன்

Jaisankar Jaganathan

unread,
Nov 16, 2016, 1:36:37 AM11/16/16
to mint...@googlegroups.com
மனு தர்மம் இல்லை அது

மனு அதர்மம். அந்த நூலை படிச்சதால் தெரியும்

தேமொழி

unread,
Nov 16, 2016, 1:37:13 AM11/16/16
to மின்தமிழ்


On Tuesday, November 15, 2016 at 10:28:14 PM UTC-8, N. Kannan wrote:
முஸ்லிம்களுக்கு Sharia law இருப்பது போல், இந்துக்களுக்கு மநு ஸ்மிருதி எனச் சொல்லலாமா? மநு நீதியை உயர்த்திப் பிடித்திருக்கிறதே தமிழகம்! மநு நீதிச் சோழன் என்றே ஓர் அரசன் இருந்திருக்கிறானே!


On Tuesday, November 15, 2016 at 2:12:36 PM UTC-8, Suba.T. wrote:
 
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள், 
மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
மனு தர்மம் இந்து சமய நூலா?

இது மனிதர் அனைவரையும் சமமாக மதிக்காத ஒரு நூல்.
சட்டத்திற்கு முன் முன் அனைவரும் சமமல்ல என்றக் கருத்தை வலியுறுத்திய நூல் .
அடுத்து  முன்னர் வல்லமையில் வெளியான ஓர் ஆய்வறிக்கை; 
இதை வெளியிட்டவர் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறை முனைவர்  எஸ்.சாந்தினிபீ

இக்குழுமத்தின் உறுப்பினர்களும் கருத்து  தெரிவித்திருந்தனர்.



..... தேமொழி  

தேமொழி

unread,
Nov 16, 2016, 1:39:42 AM11/16/16
to மின்தமிழ்
நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=35706

சோழர்களின் ஆட்சியில் பிராமணர்களின் குற்றங்கள் மற்றும் தண்டனைகள்

டாக்டர்.எஸ். சாந்தினிபீ ஒரு அறிமுகம்



சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருமதி. எஸ்.சாந்தினிபீ, தமிழகத்தைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்டு முதல் உ.பி.யிலுள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் உயர் ஆராய்ச்சி வரலாற்று துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 1984-ல் வன்னியர் வரலாற்றை தினமலரில் தொடராக எழுதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான இவர் வட இந்தியாவில் பணியாற்றும் தமிழ் பத்திரிகையாளர் ஆர்.ஷபி முன்னா என்பவரின் மனைவி.

கடந்த 15 ஆண்டுகளாக சோழர் காலம் பற்றிய ஆய்வைத் தொடர்ந்து வரும் இவரது கட்டுரைகள் தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்வேடுகளில் வெளியாகி உள்ளன. இவரது பேட்டி மற்றும் கட்டுரைகள் ஜுனியர் விகடன், அவள் விகடன், குமுதம், தினமணி, புதிய பார்வை, Indian Express, News today, Rising sun உட்பட பல தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.

எட்டு வருடங்களுக்கு முன் இவர் எழுதிய பாண்டிச்சேரியின் தொல்லியல் வரலாறு குறித்த ஆங்கில நூலும், தமிழில் எழுதிய அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் நிறுவனர் சர் சையது அகமதுகான் வாழ்க்கை வரலாறும் மிக பிரபலமானவை. தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிக்கும் வட இந்திய வரலாற்றாளர்களுக்கிடையே தமிழகத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவரும் திருமதி. சாந்தினிபீயின் பல கட்டுரைகளில் ஒன்றுதான் இது.

ஆங்கில மூலம் – முனைவர் சாந்தினி பீ

தமிழாக்கம் – பவள சங்கரி

சோழர் காலத்தில்தான் மனுவின் ஆதிக்கம் தமிழகத்தில் ஆணித்தரமாக வேரூன்றி வளர்ந்தது எனும் எண்ணம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.மனுவும் நீதியும் தமிழக மக்களால் பிரித்துப் பார்க்க இயலவில்லை.சோழர் ஆட்சியில் தமிழ்நாட்டில், மனு ஸ்மிரிதியின் பங்கை சோதிக்கக்கூடிய நேர்மையான முயற்சிதான் இது.

ஒரு குறிப்பிட்ட சாதியின் அடிப்படையில் இக்கட்டுரை அமைந்திருப்பது ஏன் என்ற ஆச்சரியம் ஒருவருக்கு எழலாம். சகிப்புத்தன்மையும், பொறுமையும் இல்லாததோர் நிலை வளர்ந்து வரும் இந்நாட்களில், இத்தலைப்பு மற்றும் ஆய்விற்கான நோக்கம் குறித்த சிறிய விளக்கம் தேவைப்படுகிறது. குறிப்பாக அந்த சட்டப் புத்தகம், சட்டத்திற்கு சாதிப்பற்றை ஊட்டுவதால் தற்போதைய ஆய்வும் அதையே பின்பற்றுகிறது

இந்த ஆய்வறிக்கையில், சோழர் காலத்தில் பிராமணர்களால் இழைக்கப்பட்ட பல்வேறு குற்றங்களை, அக்காலத்திய கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வாளர், வகை குற்றத்திற்கு,ஒரு கல்வெட்டை ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளார். அதே சமயம், அனைத்து கல்வெட்டுகளும் பயன்படுத்தப்பட்டு எதுவும் விடுபட்டுப் போகவில்லை என்பதையும் உறுதியாகக் கூற முடியாது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

குற்றங்கள் அனைத்தும், ஆலயங்கள் சம்பந்தப்பட்டவை, மற்றவை என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலில் ஆலயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விளக்கப்படும்.

1. முதலாம் ராஜராஜனின் ( கி.பி. 985 – 1014 ) அரசாங்க அதிகாரி, பிரபலமான மதுராந்தகன் க ந்த ராதித்தன், திருவல்லத்தின் (வட ஆற்காடு) ஆலயமான பில்வநாதேஷ்வராரை தரிசிக்க சென்றிருக்கிறான். அந்தக் கோவிலின் விளக்குகள் மங்கிப்போய், பிரகாசமாக எரியாததால் கோவிலின் சொத்து மற்றும் நன்கொடைகள் பற்றிய விவரங்களைக் கேட்டான். அது இரவு நேரமாக இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, அவருடைய கண்டுபிடிப்பில் ஆலயத்தின் மேலாளர்களான சிவபிராமணர்கள் அந்தக் கோவில் சொத்தை அபகரித்துக் கொண்டதை கண்டுபிடித்தார். அந்தப் பூசாரிகள் அதற்கு ஈடாக 74 களஞ்சு பொன்னை ஆலய கருவூலத்திற்கு வழங்க வேண்டும் என்று தண்டனை அளிக்கப் பட்டது .

2. திருப்பனந்தாளில் உள்ள ஓர் குறிப்பிட்ட கோவிலில், கி.பி. 1070, 1078 மற்றும் 1091க்கு இடைப்பட்ட இருபத்தியொரு ஆண்டுகளில் மூன்று முறை கணக்குகள் கண்காணிக்கப்பட்டன. முதல் சோதனை ராஜராஜ மூவேந்த வேளார் (கி.பி.1070) என்ற அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இரண்டாவதாக சேனாபதி பல்லவராஜா (கி.பி.1078) என்ற அதிகாரி விசாரணையை மேற்கொண்டார். மூன்றாவது அதிகாரியாக சேனாபதி நந்தியராஜா (கி.பி.1091) என்பவர் கணக்குகளைச் சோதித்தார்.

இந்த மூன்று காலங்களிலும் கோவில் பூசாரிகள் கோவில் சொத்துகளை அபகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் இரண்டு நிகழ்வுகளில் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடியாவிட்டாலும், அந்த மூன்றாவது நிகழ்வில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், அந்தக் கல்வெட்டுகள் அது பற்றி சொல்லாதலால் அதன் தன்மை அறியப்படவில்லை. ஆனால், தவறிழைத்து தண்டனை பெற்ற பூசாரிகள் அரசரிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்கள்.

ஆனால் அரசர் அவர்களின் வேண்டுதலை மறுத்து, தண்டனையும் வழங்கினார். அரசரின் ஆணைப்படி, சூறையாடப்பட்ட சொத்தின் மதிப்புத் தொகையான 540 காசுகள் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்டது. இப்படித்தான் முதலாம் குலோத்துங்க அரசனின் ஆணை இருந்தது. இந்த அரசாணைக்குப் பிறகும் குற்றமிழைத்த பூசாரிகளில் ஒருவரான, பட்டன் குமாரசாமி என்பவர், ஆலயத்தின் மகேசுவரரிடம், கடவுளுக்கு பூசிக்கும் உரிமையை விற்று தனக்கான தண்டனை தொகையை வசூலிக்கும்படி கேட்டுக்கொண்டான். அதுவும் தவணை முறை மீட்பாக, மாதத்தில் நான்கரை நாட்கள் மட்டும் வேலை செய்யும் உரிமையை விற்குமாறு வேண்டினார். மகேசுவரர்கள் அரசு ஆணைகளில் தலையிட்டு மாற்றங்கள் செய்யக்கூடுமா? அரசு ஆணையில் தலையிட்டு மாற்றங்கள் ஏற்படுத்துவது இயலாத காரியம் என்பது எவராலும் உணர முடியும். சில உயரதிகாரிகளின் மூலமாக குறிப்பிட்ட பூசாரிகளின் இந்த வேண்டுதல்களை மகேசுவரர்கள் முன்னெடுத்துச் சென்றிருக்கக்கூடும்; இத்தகைய செயல் நன்கொடைகளின் புதிய மற்றும் விரிவாக்கங்களில் பொதுவாக காணக்கூடியதே. தண்டனைப் பணம் எவ்வகையிலேனும் மீட்கப்பட்டது என்பதுதான் இக்கல்வெட்டின் செய்தி.

3. ஸ்ரீரங்கத்திலுள்ள பிரபலமான வைஷ்ணவக் கோவிலின் கல்வெட்டு, ஒரு அரசு அதிகாரியான, ராஜேந்திர சோழ மூவேந்த வேளார், சம்பந்தப்பட்ட அபராத நிலுவைத் தொகையான 940 காசுகள், ஸ்ரீ கிருஷ்ண ஆழ்வான் பண்டாரம் என்பவருக்கு ஏதோ காரணத்திற்காக தண்டனையாக கோவில் கருவூலத்திற்குக் கட்டுவதற்கான விசாரணைக்காக அனுப்பப்பட்டதாகச் சொல்கிறது.

இந்தப் பிரச்சனை எவ்வாறு கையாளப்பட்டது என்பதை நம்மால் அறிய முடியாவிட்டாலும், முழுமையற்ற மற்றும் பழுதடைந்த கல்வெட்டுக்களில் உள்ள ஆச்சரியமான செய்தி, தொகையைச் செலுத்த வேண்டிய ஒரு குறிப்பிட்ட நபர் ஏற்கனவே ஒரு முறை சிறைத்தண்டனை பெற்றதுதான். இந்த கல்வெட்டும் முதலாம் குலோத்துங்கனின் காலத்தைச் சார்ந்தது. அதனால் சோழ அரசர்கள் பிராமணர்கள் குற்றமிழைத்தபோது சிறைப்படுத்தத் தயங்கவில்லை என்பது தெளிவாகிறது.

4. கி.பி. 1152இல் இரண்டாம் ராஜராஜா ஆட்சியின்போது ஒரு ஆலயத்தின் சிவபிராமணர்கள் தெயவத்திற்கு ஆபரணம் செய்யும் பொருட்டு கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதியை களவாடிவிட்டனர். அதற்கு தண்டனையாக அவர்கள் ஆலயத் திருப்பணி செய்யும் உரிமையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு அது மற்றவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இப்படியாக வாழ்வாதாரமாக இருந்த சக்தி வாய்ந்த மற்றும் கௌரவமான தொழிலை அவர்கள் இழக்க வேண்டிவந்தது. இவ்வாறு முடிவெடுக்கப்பட்டு அந்த தண்டனைத் தொகையான 180 காசுகள் கோவிலுக்கு வழங்கப்பட்டது. இந்த தண்டனையையும் கடந்து, அவர்களும் மற்றும் அவர்தம் சந்ததியினரும் இந்த குறிப்பிட்ட ஆலயத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதோடு விக்ரம சோழவர்முடையார் மற்றும் குலோத்துங்க சோழேசுவரமுடையார் என்ற தெய்வங்கள் இருந்த சன்னதிகளுக்கும் செல்ல தடை விதித்தனர். குற்றம் செய்தவர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தாரும் மற்றும் வருங்காலச் சந்ததியினரும்கூட அவர்களுடைய குற்றம் காரணமாக தங்கள் சொந்த மண்ணில் தங்கள் முன்னோர்களின் ஆன்மீகச் சேவைகளை தொடர்வதற்குத் தடை செய்யும் அளவிற்கு அந்தத் தண்டனை அதீதமாக இருந்ததை எளிதாக உணர முடிகிறது.

5. கி.பி. 1213ல் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலான மற்றொரு சம்பவம்; திருக்கழுக்குன்றத்தில் உள்ள கோவிலின், மடைவிளாகத்தில் நமிநந்தி அடிகள் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு அவருடைய மகனின் தவறுக்காக பறிமுதல் செய்து, விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த நமிநந்தியின் மகன் திருக்கழுக்குன்றம் உடையார் ஆலயத்தின் ஒரு தெய்வ சிற்பத்தின் முன் நெற்றியில் உள்ள தங்கத் தகட்டை திருடிவிட்டான். அரசாணையின்படி அந்தக் குற்றவாளி மட்டும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டபொழுது ஏனைய குடும்ப உறுப்பினர்கள் அதே கிராமத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கோவில் சம்பந்தப்பட்டவைகள் மட்டுமல்லாது ஏனைய குற்றங்களிலும் பிராமணர்கள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்ததே நமது இரண்டாவது அலசல்

கி.பி. 988இல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தின் இரண்டாம் ஆண்டில், உடையர்குடியிலிருந்து ஒரு கல்வெட்டு, சோமன்…., ரவிதாசன் என்கிற பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரன் என்கிற இருமுடிச் சோழ பிரேமாதிராஜன் ஆகியோர்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரர் ஆதித்ய கரிகாலனைக் கொலை செய்த குற்றத்தை விளம்புகிறது. அதன்படி ராஜராஜன் இந்தக் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஆணையிட்டிருந்தான். அரசனின் அந்த ஆணையின்படி குற்றத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபர்களின் சொத்தைத் தவிர அவருடைய சகோதரர்களின் மகன்களோ, அவர்களின் மனைவியரோ, அவர்களின் தந்தையின் மூத்த சகோதரன் மற்றும் அவருடைய குழந்தைகள் , அவர்களுடைய தாய்வழி சகோதரர்களின் மாமன்மார்களின் மாமனார், அவர்களுடைய சகோதரிகளை மணந்தவர்கள் மற்றும் அவர்களின் மருமகன்கள் போன்ற எல்லோருடையதும் பறிமுதல் செய்யப்படவேண்டும். இந்த ஆணையை நிறைவேற்றும் வகையில் மலையமுரன் என்கிற ரவிதாச கிரமபட்டன், அவருடைய மகன் மற்றும் அவருடைய தாய் பெரியநங்கைச்சானி ஆகியோர் இந்த பிரேமதேயம் வீரநாராயண சதுர்வேதி மங்களம் கிராமத்தில் வைத்திருந்த சில வீடுகளையும் மற்றும் வீட்டு மனைகளையும் அந்த கிராமச்சபை மூலம் பறிமுதல் செய்தனர். இப்பொழுது இந்த சொத்துக்களெல்லாம் அரையன் பரதன் என்கிற வியலகஜமல்லா பல்லவராயன் என்பவரால் வாங்கப்பட்டு அதே கிராமத்தின் அனந்தேசுவர சுவாமி கோவிலுக்காக விடப்பட்டது. இந்த நன்கொடை மூலம் ஐந்து சிவயோகிகள் உட்பட 16 பிராமணர்கள் தினந்தோறும் உணவு அளிக்கப் பெற்றார்கள். அந்த மண்டபத்திற்கும், தண்ணீர் பந்தலுக்கும் தண்ணீர் பட்டுவாடா செய்த அந்த 16 பிராமணர்களில் ஒருவருக்கும் தினமும் ஒரு அளவு நெல்லும் மற்றும் வருடத்திற்கு ஒரு காசும் வழங்கப்பட வேண்டும். (அந்த தண்ணீர் பந்தல் அந்த நன்கொடையாளரால் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது)

மிகப் பெரிய இராஜ துரோகமான பட்டத்து இளவரசனைக் கொல்வது போன்றவற்றிற்கு, அந்தக் குற்றவாளிகள் மற்றும் மற்ற அனைத்து உறவினர்களின் மொத்த அசையாச் சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில் தண்டிக்கப்பட்டார்கள்.

காமக்கன்னி சோமாசி என்ற பிராமணர் ஒரு பெரிய இராஜ துரோகக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருடைய நிலங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டாலும், அவைகளனைத்தும் மற்றொருவரால் வாங்கப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது முதலாம் ராஜாதிராஜன் ஆட்சிக் காலமான கி.பி. 1024இல்.

சில குற்றங்களுக்காக அபராதம் பெற்ற பலர் துணிச்சலாக தப்பித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அதனால் முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 – 1120) இது போன்ற குற்றவாளிகளின் சொத்துகள் எந்த விலைக்கேனும் விற்று அந்தப் பணத்திற்கு இரசீது பெற்றுக்கொண்டு கச்சிப்பேடில் (இன்றைய காஞ்சீபுரம்) உள்ள கருவூலத்தில் வரவு வைக்க வேண்டும். அதன்படி, திருநாராயணச் சேரியில் இருந்த சில பிராமணர்கள், கிட்டக்கில் என்ற உத்திரமேரூரின் ஒரு குக்கிராமத்தில் வசித்த அவனிப் பட்டன் தன்னுடைய தான நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, அந்த நிலம் அரசாணைப்படி மகாசாஸ்தா (ஜைன) கோவிலுக்கு விற்கப்பட்டது. ஒரு பிராமணர் (அவருடைய அரைகுறை பெயர் பரதய்யன் திரு ) சில பதிவிடப்படாத குற்றத்திற்காக சிறைத்தண்டனையும், அபராதமும் பெற்றிருக்கிறார்.

இங்கு, “ஒரு சிறந்த அரசன்,கொலைக்குற்றத்தைச் (பெரிய குற்றம்) செய்த குற்றவாளியின் சொத்தை தனக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுபோன்ற அபராதத்தை வருண பகவானுக்கு அர்ப்பணிக்கும் விதமாக நீரில் எரிந்து விடுவானாக அல்லது பண்டிதரான ஒரு சிறந்த பிராமணனுக்கு அளிக்க வேண்டியது” என்ற மனுவின் சொற்களை கவனம் கொள்ளும் போது சாலப்பொருத்தமாகிறது.

“பேராசையால் கடவுளின் சொத்தையோ அல்லது பிராமணனின் சொத்தையோ கைப்பற்றும் அந்த பாவப்பட்ட மனிதன் மறு உலகில் இராஜாளியின் எச்சத்தை உண்பான்”

பிராமணர்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக தலைக் குடுமி வைக்க விதிக்கப்பட்டது, ஆனால் வேற்று சாதி ஆண்கள் மரண தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒரு பிராமணன் எத்துனை குற்றமிழைத்தாலும் அந்த அரசன் அவனை ஒருக்காலும் கொல்லாமல் விட்டு அவனுடைய சொத்து மற்றும் உடலும் பாதிக்கப்படாது அவனை நாடு மட்டுமே கடத்தலாம் என்பதே பிராமணர்களுக்கு மனு அளித்த தண்டனை.

எனவே சோழ ஆட்சியாளர்கள் மனு ஸ்மிரிதியின் சட்டப் புத்தகத்தின் விதிகளை முழுமையாகப் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. உண்மையில் சோழர் ஆட்சியில் பிராமணச் சமூகம் மனு நிர்ணயித்த முழு சலுகைகளையும் பெற முடியவில்லை. அவர்கள் சமுதாயத்தின் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களைத் தண்டிக்கும் முன்பு அரசர்கள் இரண்டாம் முறை யோசிக்கவில்லை என்றே தெரிகிறது. அவர்களும் மற்ற சாதாரண மனிதர்களைப் போன்றே தங்கள் குற்றங்களுக்கு ஏற்றவாரு தண்டிக்கப்பட்டார்கள். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, பறிமுதல், பொது ஏலம், புனிதத் தொழில் உரிமை நீக்கம், தொழில்முறை உரிமைகள் விற்பனை மற்றும் நில ஒதுக்கீடு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்யப்பட்டது. இதைத் தவிர, குற்றவாளிகளை ஒதுக்கிவைத்தல், சில நேரங்களில் எதிர்கால சந்ததியினர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். குற்றவாளிகளை குறிப்பிட்ட ஆலயம் மற்றும் சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆலயங்களிலிருந்தும் விலக்கி வைப்பதும் நடைமுறையில் இருந்தது. அந்த பிராமணர்கள் சிறைத்தண்டனையும் பெற்றதை கல்வெட்டு ஆய்வுகளிலிருந்து அறிய முடிகிறது. கடவுட் பணிகளில் சம்பந்தப்பட்டிருந்த இந்த குறிப்பிட்ட சமூகத்தினர் கடவுள் பயமற்றவர்களாக இருந்திருப்பதும் அனுமானிக்க முடிகிறது. எல்லோருக்கும் கடவுள், மதம் பூசை நல்லவை கெட்டவை குற்றம் தண்டனை பரிகாரம் என பலவற்றையும் போதித்த இவர்கள் தங்களின் போதனைகளை தானே நம்பவில்லை . உபதேசம் ஊருக்கு மட்டும் தான் .

சோழ நிர்வாகத்தின் பல துறைகளிலும் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொண்டால் தமிழகத்தில் மனுவின் ஆதிக்கத்திற்கு சோழர்கள் ஆட்சி எந்த அளவிற்கு காரணம் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிய முடியும்

[ பிப்ரவரி 15, 16, 17 , (2013) ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடந்த தென் இந்திய வரலாற்று சபையின் 33 வது ஆண்டு கூட்டத்தில் சமர்ப்பித்த ஆய்வறிக்கை]

தேமொழி

unread,
Nov 16, 2016, 1:41:18 AM11/16/16
to மின்தமிழ்

6 Comments on “சோழர்களின் ஆட்சியில் பிராமணர்களின் குற்றங்கள் மற்றும் தண்டனைகள்”

  • தேவ் wrote on 1 June, 2013, 23:26

    மனு நீதி :

    பிராமணருக்கான குறைந்த பட்ச தண்டனை அளவு
    பிறரைக் காட்டிலும் 64 மடங்கு அதிகம் இருக்க வேண்டும்;
    அதிக அளவு தண்டனை பிறருக்கு அளிப்பதைக் காட்டிலும்
    128 மடங்கு வரை அதிகம் இருக்கலாம்.
    [மநு 8.337-338]

    சோழர் காலத்தில் இம்முறை பின்பற்றப்பட்டதா ?

    தேவ்

  • தேமொழி wrote on 2 June, 2013, 1:46

    சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்கள் என இருவகைகளுக்கும் ஒரே போன்று சொத்துக்களை மட்டுமே பறிமுதல் செய்வது அல்லது நாடு கடத்துவது என தீர்ப்பளிக்கப்பட்டதில் இருந்து மனு நீதியின் மீது கொண்டிருந்த மதிப்பு குறைவதைத் தவிர்க்க இயலவில்லை. 

    இழந்த உயிருக்கு நியாயம் இழைப்பதில் பாகுபாடு, மரணதண்டனை அளிப்பதில் பாரபட்சம்…. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதப் படவில்லை என்பது இக்கட்டுரையின் வாயிலாகத் தெள்ளத் தெளிவாகிறது.  அன்றே சட்டம் ஒரு இருட்டறைதான் போலும். 

    …… தேமொழி 

  • இன்னம்பூரான் wrote on 4 June, 2013, 0:05

    மனு நீதி வேறு. மனு என்று மற்ற மனிதர்கள் செறுகியது வேறு. முன்பு ஒரு முறை வல்லமையில் இது பற்றிய பேச்சு எழுந்தபோது அந்த கட்டுரையாளர் வேறு யாரோ எழுதியதை தான் வழி மொழிந்ததாகச் சொன்னார்.
    திரு தேவ் [மநு 8.337-338] ஐ ஆதாரமாக சுட்டியுள்ளார். அதர்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.

  • சாந்தினி wrote on 4 June, 2013, 19:37

    கட்டுரையின் தேடல் மனு சொல்லியது சரியா தவறா என்பது அல்ல  மனுவின் நீதி சோழர் காலத்தில் பின்பற்றப்பட்டதா இல்லையா என்பதே மனுவின் கூற்றை சோழ மன்னர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக தங்களின் நீதியின் படியே நடந்துக்கொண்டார்கள். மண்ணின் சட்டங்களையே சோழர்கள் பெரிதும் மதித்தனர்.எனவே நீதித்துறை பொறுத்த மட்டிலும் தமிழகத்தில் மனு காலூன்ற  சோழ மன்னர்கள் காரணமல்ல 
    என்பது தான் என் ஆய்வின் கண்டுபிடிப்பு. மற்ற துறைகள் நிலையை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் 

  • Alasiam G wrote on 10 June, 2013, 7:48

    சரி… கல்வெட்டில் கண்ட காட்சியை கட்டுரையாக்கி இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்.

    மனிதன் என்கிற ரீதியில் லோக ஆசா பாஷங்களில் சிக்கி அதனால் தவறு செய்து அரசநாளோ, ஆண்டவனாளோ தண்டனை பெற்று திருந்திய, அவதியுற்ற அழிந்த மனிதர்களின் வரலாற்றை, வரலாறு அல்ல, கல்வட்டு அல்ல அதற்கு முந்திய புராண இதிகாசங்களும் கூறு கின்றன. இதிலே பிராமணர்களும் விதி விலக்கல்ல. 

    அப்படி தவறுக்கு உள்ளானவர்கள் பிராமண குடும்பத்தில் பிறந்த மனிதர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் (ராவனணனும் பிராமணனே என்கிறதை வால்மீகியும் குறிப்பிடுகிறார்). 

    அப்படி பார்க்கையில் ராஜ குடும்பத்தில் பிறந்த எத்தனை ராஜாக்கள் நீதி வழுவாது இருந்தார்கள் என்றும் கேட்கலாம். அப்படியே ஒவ்வொரு குலத்தையும் பேசிக் கொண்டு போவோமானால்…. 

    ஒரு குலத்தில் பிறந்தவனின் தனிப்பட்ட தவறான செயல்பாடு அது அந்த குலத்தின் குற்றம் என்று கூற முடியாது. அப்படி கூறி இருப்பதாகவே கட்டுரை முடிவில் உணர்கிறேன்.

    தண்டிக்கப்பட்டவர்கள் பிறப்பால் பிராமணர்களாக இருந்தாலும் தவறு செய்யும் போதே அந்த குல மக்களின் லட்சணமாக (இலக்கணமாக) வரையறுக்கப் பட்ட ஒரு ஒழுங்கில் இருந்து தடம் புரண்டபோதே அவர்கள் பிராமணர்கள் அல்ல என்ற மற்ற விதிக்கும் தானாகவே ஆட்படுகிறார்கள். எந்த குலமானாலும் அவன் அக்குடியில் பிறந்ததனால் அப்படி ஆகி விடுவதில்லை. அவனுக்கு லட்சணமாக சொன்ன வாழ்வியல் நடை முறைகளை பின் பற்றி வாழ்வதால் தான் அவன் அந்த குலத்தை சார்ந்த சிறந்த மனிதனாகப் பார்க்கப் படுகிறான் / பார்க்கவும் பட்டும்  இருக்கிறான். இன்றைய நவீன விஞ்ஞான உலகில் ஒருவன் வகிக்கும் பதவியை இதற்கு ஒப்பிடலாம்.

    தாங்கள் கூறுவது போல் கல்வெட்டு ஆராய்ச்சியே கட்டுரையின் நோக்கம் என்றாலும்!!!..

    அப்படி இருக்க 
    “கடவுட் பணிகளில் சம்பந்தப்பட்டிருந்த இந்த குறிப்பிட்ட சமூகத்தினர் கடவுள் பயமற்றவர்களாக இருந்திருப்பதும் அனுமானிக்க முடிகிறது. எல்லோருக்கும் கடவுள், மதம் பூசை நல்லவை கெட்டவை குற்றம் தண்டனை பரிகாரம் என பலவற்றையும் போதித்த இவர்கள் தங்களின் போதனைகளை தானே நம்பவில்லை . உபதேசம் ஊருக்கு மட்டும் தான் .”

    இப்படி ஒரு இறுதி வாசகம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது வீசப் படும் சகதியாகவே நான் உணர்கிறேன். இந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் பிறந்த சிலர் என்று கூறி இருக்க வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இப்படி இழிவான ஒரு வாசகத்தை கடைசியில் நிறுத்தியது. இன துவேசமாக கொள்ள நேரிடுகிறது. 

    உபதேசம் ஊருக்கு மாத்திரமா? ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் துறவிகளாகக் கொண்டாலும்…. சோழர்கள் காலத்தே வாழ்ந்த நாயன்மார்களும் இதில் அடக்கமா? சகோதரி!

  • தஞ்சை வெ. கோபாலன்
    தஞ்சை வெ.கோபாலன் wrote on 10 June, 2013, 9:27

    கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளைக் கொண்டு பிராமண சமூகம் அன்று ஆலயங்களில் கையாடல், திருட்டு போன்றவற்றில் ஈடுபட்ட செய்திகளையும், அதற்காக அவர்கள் சோழ மன்னர்களால் தண்டிக்கப்பட்டதையும் குறிப்பிட்டு அந்த தண்டனைகள் கடுமையானவைகள் அல்ல என்பது போலவும் கூறப்பட்டிருக்கிறது. இதில் மனுநீதியையும் கொண்டு வந்து இணைத்தது ஏன் என்று தெரியவில்லை. சோழ மன்னர்கள் மனுநீதிப்படி ஆட்சி புரிந்தார்கள் என்பதை நிறுவ வேண்டுமானால், பிராமணர்களுக்கு ஏனைய பிரிவினருக்குத் தரப்படும் தண்டனையைக் காட்டிலும் அதிக அளவில் தந்திருக்க வேண்டும். மற்றொரு செய்தியை நாம் கவனிக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் ஜாதிப் பிரிவினை என்பதும், பிராமண எதிர்ப்பு என்பது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் தமிழகத்தில் வேரோடிவிட்ட நிலையில் இன்றைய கண் கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை, அன்றைய ஜாதிப் பிரிவுகளை, அதில் குறிப்பிட்ட ஜாதியார் செய்த குற்றங்களைக் காட்டி விவாதிக்க முடியாது. ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பாண்டிய நாட்டு பிராமணர்கள், அவர்களுடைய மன்னன் மீது வைத்திருந்த பற்றின் காரணமாக பாண்டியன் தலையைக் கொய்த சோழ இளவரசனை பழிவாங்கினார்கள் என்பது காட்டுமன்னார்குடி கல்வெட்டு கூறுகிறது. அது தேசபக்தியின் விளைவாக செய்த குற்றம். அப்படிச் செய்தவர்கள், சொந்தக்காரர்கள் அனைவரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு டிரஸ்ட் உருவாக்கி வைத்திருந்தார்கள். சில கிராமங்களுக்கு நீர்நிலைகள், பொதுக் காரியங்கள் செய்ய நிலம் தேவைப்பட்ட போது இந்த டிரஸ்டிலிருந்து நிலம் கொடுத்ததற்கான கல்வெட்டுச் செய்திகளும் இருப்பதாக குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கிறார். ஆக இதுபோன்ற செய்திகளில், ஒரு ஜாதியினரைக் குறிப்பிடும் செய்தி இன்றைய காலகட்டத்தை மனதில் கொண்டு செய்யப்படும் செயல். அந்த நாளில் மற்ற ஜாதியினர் செய்த குற்றங்கள் பற்றியும் அதற்காக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் பற்றியும் இந்தப் பேராசிரியர் விரிவாக எழுதுவதுதான் நேர்மையான செயலாக இருக்கும்.
    நான் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு போலீஸ் அதிகாரியிடம் சிறைக் கைதிகளில் பிராமணர்கள் எத்தனை சதவீதம் இருப்பார்கள் என்று கேட்டேன். முதிர்ந்த அனுபவமுள்ள் அவர் சொன்னார், சுமார் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் இருந்தால் அதிகம் என்றார். அதிலும் அந்த  சதவீதத்தினரும் 420 ஐ.பி.சி.யின் கீழ் குற்றம் புரிந்தவர்களாக இருப்பர், அதாவது கையாடல், ஏமாற்று போன்ற குற்றங்கள். கையாடல் என்பது காலம் காலமாக இருந்து வரும் குற்றங்கள். ஆர்.எம்.வீரப்பன் அமைச்சராக இருந்த காலத்தில் கிராம அதிகாரிகளாக கணக்குப்பிள்ளை, பட்டாமணியம் போன்ற பதவிகள் பரம்பரை பதவியாக இருந்ததை நீக்கிவிட்டு நேரடியாக வெளியிலிருந்து கிராம அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.. சம்பளம் ரூ.7க்கும் குறைவாக இருந்த காலத்தில் எத்தனை பேர் லஞ்சம் வாங்கி கைதானார்கள். இன்று நேரடியாக கிராம அதிகாரிகளாக நியமிக்கப்படுவோரில் எத்தனை பேர் இதுவரை லஞ்சம் வாங்கி கைதானார்கள் என்ற கணக்கையும் எடுத்துப் பார்க்கலாமே!

Thenee MK

unread,
Nov 16, 2016, 3:00:50 AM11/16/16
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

தமிழக மனு நீதிச் சோழனுக்கும் மனு தர்மத்தை வரைந்த மனுவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தமிழக மனு நீதிச் சோழன் திருக்குறள் வேண்டிய அறத்தைப் பேணினார். மனு தர்மத்தை வரைந்த மனு, வர்ணாசிரம தர்மத்தைக் கடைப்பிடிப்பதே வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டார்.

இது மட்டுமல்ல. மனு தர்மம். வேள்வி நெறியைக் கடைப் பிடிக்க வேண்டுவது. இன்றைய இந்து மதத்தின் அடையாளம் கோயில். அதற்கு மனு தர்மத்தில் இடமில்லை. மனு தர்மம் வைதிக பண்பாட்டைப் பின்பற்றுபவர்க்குரிய நூல் என்பதில் எவ்வித தடையும்மில்லை. அதுவே இந்துக்கள் அனைவருக்கும் விதி என்று கூறுவது இன்று பொருந்தாது.

முஸ்லிம்களுடைய சமயம் ஒரு நிருவாகக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அதில் இருக்கும் சங்கடங்களை ஆராய்ந்தால் நாம் அதனை கனவிலும் நினைவிலும் நினைக்க மாட்டோம். அது போலவே மனு தர்மமும் வைதிக நெறியில் நிற்காதவர்க்கு. 

தேனீ.    

2016-11-16 14:28 GMT+08:00 N. Kannan <navan...@gmail.com>:
முஸ்லிம்களுக்கு Sharia law இருப்பது போல், இந்துக்களுக்கு மநு ஸ்மிருதி எனச் சொல்லலாமா? மநு நீதியை உயர்த்திப் பிடித்திருக்கிறதே தமிழகம்! மநு நீதிச் சோழன் என்றே ஓர் அரசன் இருந்திருக்கிறானே!

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Kannan

unread,
Nov 16, 2016, 5:40:10 AM11/16/16
to மின்தமிழ்
2016-11-16 13:30 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
வணக்கம் ஐயா,

தமிழக மனு நீதிச் சோழனுக்கும் மனு தர்மத்தை வரைந்த மனுவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தமிழக மனு நீதிச் சோழன் திருக்குறள் வேண்டிய அறத்தைப் பேணினார். மனு தர்மத்தை வரைந்த மனு, வர்ணாசிரம தர்மத்தைக் கடைப்பிடிப்பதே வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டார்.
​//

​குறள் நெறிச் சோழர் என்றே சொல்லியிருக்கலாமே! 

நா.கண்ணன்​

Suba

unread,
Nov 16, 2016, 6:01:34 AM11/16/16
to மின்தமிழ், Narayanan Kannan
2016-11-16 7:28 GMT+01:00 N. Kannan <navan...@gmail.com>:
முஸ்லிம்களுக்கு Sharia law இருப்பது போல், இந்துக்களுக்கு மநு ஸ்மிருதி எனச் சொல்லலாமா? மநு நீதியை உயர்த்திப் பிடித்திருக்கிறதே தமிழகம்! மநு நீதிச் சோழன் என்றே ஓர் அரசன் இருந்திருக்கிறானே!

​இந்துக்களில் மனுதர்மத்தை சமய நூலாக சைவர்கள் ஏற்பதில்லை. நான் நேரில் பேரூர், குன்றக்குடி அடிகளார் இருவரிடமும் இதனைக் கேட்டிருக்கின்றேன். வைஷ்ணவர்கள் மனு தர்மத்தைத் தமது நூலாக ஏற்கின்றனரா என்பது எனக்குத் தெரியாது.
அந்த வகையில் ஸ்மார்த்தர்கள் மனு தர்மத்தை ஏற்கின்றனர் எனக் கருதுகின்றன்றேன். இதனை நான் நினைப்பதற்குக் காரணம் தெய்வத்தின் குரலில்  பெரியவர் மனு தர்மத்தைச் சமய நூல் என சேர்த்துக் கொள்ளும் சில பகுதிகளை வாசித்திருப்பதால்.
சாக்தம் கௌமாரம் போன்ற பிரிவுகள் மனுதர்மத்தை ஏற்பனவா என்பது தெரியவில்லை.
குலதெய்வம், இயற்கை வழிபாடு எனச்சொல்லும் பண்டைய தமிழ் வழிபாட்டு மரபில் மனு தர்மத்திற்கு இடமில்லை.

​ஆக இந்துக்களுக்கான ஒரு நீதி நூல் என சொல்வது பொருந்தாது என நான் கருதுகின்றேன் கண்ணன்.
வேண்டுமென்றால், 
இந்து = ஸ்மார்த்தப்பிரிவு எனச் சொன்னால் ஒரு வகையில் பொருந்தலாம். ஆனால் இது உண்மையில்லையல்லவா?

இன்றும் இலங்கையில் தமிழ் மக்கள் தம்மை சைவர் எனவே அடையாளப்படுத்துகின்றனரே தவிர இந்து என்றல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

சுபா

 

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba

unread,
Nov 16, 2016, 6:02:01 AM11/16/16
to தேனீ, மின்தமிழ்
தங்கள் கருத்துக்கு நன்றி தேனீ ஐயா

Suba

unread,
Nov 16, 2016, 6:02:33 AM11/16/16
to மின்தமிழ், Narayanan Kannan
​உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன் மலர்விழி.​
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Nov 16, 2016, 6:03:24 AM11/16/16
to மின்தமிழ்
2016-11-16 7:16 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.
On 16-Nov-2016 12:10 PM, "Malarvizhi Mangay" <malarm...@gmail.com> wrote:
>
> வர்ணாசிரமம் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தைப்
> பதிவுசெய்த சமூக இலக்கியம்.எல்லாக்காலத்திலும் அதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.தற்போது யாரும்
> அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால்
> அது தனித்த எண்ணமே தவிர சமூகக்
> கடப்பாட்டினை அதுசாராது.
>
மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

சில குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து  தப்பிக்க அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருகின்றனர்.

சிலர் தங்களது முன்னோரின் உயர் பண்புகளை, பெருமைகளைத் தக்கவைத்துக் கொள்ள அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அது தனித்த எண்ணமே தவிர சமூகக் கடப்பாட்டினை அதுசாராது.


​எனக்கும் ஏற்புடைய கருத்தாகவே கருதுகின்றேன்.
சுபா​

அன்பன்
கி. காளைராசன்

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Nov 16, 2016, 6:04:29 AM11/16/16
to மின்தமிழ், Narayanan Kannan
2016-11-16 7:37 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Tuesday, November 15, 2016 at 10:28:14 PM UTC-8, N. Kannan wrote:
முஸ்லிம்களுக்கு Sharia law இருப்பது போல், இந்துக்களுக்கு மநு ஸ்மிருதி எனச் சொல்லலாமா? மநு நீதியை உயர்த்திப் பிடித்திருக்கிறதே தமிழகம்! மநு நீதிச் சோழன் என்றே ஓர் அரசன் இருந்திருக்கிறானே!


On Tuesday, November 15, 2016 at 2:12:36 PM UTC-8, Suba.T. wrote:
 
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள், 
மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
மனு தர்மம் இந்து சமய நூலா?

இது மனிதர் அனைவரையும் சமமாக மதிக்காத ஒரு நூல்.
சட்டத்திற்கு முன் முன் அனைவரும் சமமல்ல என்றக் கருத்தை வலியுறுத்திய நூல் .

​எனது என்ணமும் இதுவே.
 
அடுத்து  முன்னர் வல்லமையில் வெளியான ஓர் ஆய்வறிக்கை; 
இதை வெளியிட்டவர் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறை முனைவர்  எஸ்.சாந்தினிபீ

இக்குழுமத்தின் உறுப்பினர்களும் கருத்து  தெரிவித்திருந்தனர்.

​சரி வாசிக்கின்றேன். நன்றி.

சுபா
 


Suba

unread,
Nov 16, 2016, 6:07:24 AM11/16/16
to மின்தமிழ், Narayanan Kannan
​யார் இந்தக் கதைகளையெல்லாம் பரப்பினர் என்றும் ஆராயவேண்டியது அவசியம் கண்ணன். ஏனெனில் குரளுக்கு இன்றைய காலகட்டத்தில் இருக்கும் மதிப்பு இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்ததா என்பது கேள்வி.
 
​அடுத்து இந்த சோழ மன்னனின் உண்மை பெயர், எதற்காக மனு நீதி என்ற அடைமொழி யாரால் எந்தப் பண்டிதரால் அவருக்கு வழங்கப்பட்டது என்பதையும் நாம் ஆராய்தல் தேவை என நினைக்கின்றேன்.

சுபா

Malarvizhi Mangay

unread,
Nov 16, 2016, 6:54:02 AM11/16/16
to mint...@googlegroups.com

மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு குற்றத்திற்கு
என்னதீர்வு என ஆராய்கிறபோது அமைச்சர்கள்
பலரும் பலஉபாயம் சொல்கின்றனர்.அவையணைத்தும் ஆராய்ச்சி
மணிஅடித்து நீதிகேட்ட பசுவின் உணர்வுக்குநியாயமாக
இல்லை என்பதே சோழமன்னன் (அநபாயச்சோழனா?) எண்ணம்.பின்பு மனுநீதியில் அதேதண்டனை (கன்றை இளவரசன் தேர்க்காலில் இட்டுக் கொன்றதுபோலவே மன்னனும் இளவரசனைத்
தேர்க்காலில் இட்டுக்கொல்லுதல்) பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக அமைச்சர் சொல்ல அதனை நிறைவேற்றினான் மன்னன்.
மனுவின் வழியில் பசுவிற்கு நீதிவழங்கியதால்
மனுநீதிச் சோழனான்.புனைப்பெயரேயன்றி அது அவன் இயற்பெயரன்று.

K R A Narasiah

unread,
Nov 16, 2016, 6:57:46 AM11/16/16
to mintamil
Manu Dharma is NOT a religious work. It was based on the social conditions as of then. 
It is more of a social system manual.
N

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Nov 16, 2016, 7:00:01 AM11/16/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram

--

​கூடுதல் தகவலுக்கு நன்றி மலர்விழி.
அண்மையில் சவுதியில் ஒரு மனிதரைக்கொன்றதற்காக இளவரசருக்கு சவுதி அரசு மரண தண்டனைய நிறைவேற்றிய செய்தியை பதிந்திருந்தேன். அது ஞாபகம் வருகின்றது.

செய்தி இங்கே..


Saudi Arabia executes prince in a rare royal death sentence

RIYADH, Saudi Arabia — Saudi Arabia says it has executed a prince who fatally shot another man in a melee, a rare death sentence carried out against a member of the kingdom’s extensive royal family.

The Interior Ministry said late on Tuesday it had executed Prince Turki bin Saud bin Turki bin Saud al-Kabeer in Riyadh. It did not describe how the sentence was carried out, though the Sunni-ruled kingdom often beheads the condemned in public.

A ministry statement carried on the state-run Saudi Press Agency warned “whoever dares to commit such a crime that the Shariah penalty is awaiting.”

Saudi Arabia is among the world’s top executioners.

Such royal executions are rare, but have happened before. In 1975, the kingdom beheaded Faisal bin Musaid bin Abdulaziz Al Saud for assassinating King Faisal.


மாயோன்

unread,
Nov 16, 2016, 8:36:10 AM11/16/16
to mintamil
இந்த இழையில் எனக்கிருக்கும் சில ஐயங்கள்/கேள்விகள் .
  1. மனு தர்மம்/மனு சுமிருதி -எப்பொழுது, யாரால் எழுதப்பட்டது? மூல நூல் இணையத்தில் கிடைக்குமா?
  2. மனு நீதிச் சோழன் எப்பொழுது வாழ்ந்தவர்?இவருக்கு இருக்கும் சான்றுகள் என்ன?
  3. மனு சுமிருதியை தமிழில் மொழிப்பெயர்த்தது எப்பொழுது?

16 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:29 அன்று, Suba <ksuba...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 16, 2016, 9:17:22 AM11/16/16
to mint...@googlegroups.com
தென்னாடுடைய வைதிகச் சைவர் மனு தர்மத்தின் வருணாசிரம கோட்பாட்டை ஏற்பார். இவர்களில் வைதிகச் சைவ பிராமணரும், ஸ்மார்த்தரும் அடங்குவர். ஆனால், ஆதி சைவ அந்தணரில் இவ்வருணாசிரமம் சற்று தள்ளியே நிற்கின்றது. அப்படி இருந்தும், காமிக ஆகமத்தின் சரியை, கிரியை பாதத்தில் வருணாசிரம கோட்பாடுகள் அடங்கிய சில வாழ்வியல் பண்பாட்டு நெறிகள் பிற்கால சேர்க்கையாக கலந்துள்ளன. 

தென்புல வைணவர் தங்களை வைதிக நெறியுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டனர். அதனால் அவரும் வருணாசிரமத்தைப் பின்பற்றுவர். அதுபோலவே தட்சிணாசாரமெனும் வைதிக சாக்த வழிபாட்டை பின்பற்றும் காஞ்சி மடத்தாரும் வருணாசிரமத்தைப் பின்பற்றுவர். இவ்வகையோருக்கு மனு தர்மம் சமய நெறிகளில் ஒரு பகுதி.  

மேற்கூறிய அனைவரும் மனு தர்மத்தை ஏற்பர். அவ்வாறு ஏற்கமாட்டாதோர் தான் ஒழுகும் வைதிக வழிபாட்டுக்குத் தகுதியற்றோராகி விடுவர். அது அவர்தம் நிலை. வைதிகர்களின் பண்பாட்டுக் கூறுகளை பிறர் மீது அவர் திணிக்க முயலாத வரை சங்கடமில்லை. ஆனால் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல் அவர்தம் வருணாசிரம பண்பாட்டையும் வைதிக இறை கோட்பாட்டையும் பிறர் மீது காலா காலமாக  திணித்துள்ளதை சமய வரலாறு அறிந்தோர் அறிவர்.

சித்தாந்த சைவத்தில் சிவபெருமான் வேண்டும் வேண்டாமை இலான். அவன் அன்பையே உருவாகக் கொண்டவன், கருணையுள்ளம் கொண்டவன். அவனிடமிருந்து பேதமை எப்படி வரும்? ஆகையால் தென்னாடுடைய சித்தாந்த சைவ  நெறியை அறிந்து அதனைப் பின்பற்றுவோர் வருணாசிரம பேதத்திற்கு இடம் தரார். இதனை கடந்த 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல சைவத் தமிழ் அறிஞர் எடுத்துரைத்துள்ளனர். அதுபோலவே இலங்கையைச் சார்ந்த பல சைவத் தமிழ் அறிஞரும் எடுத்தியம்பியுள்ளனர். தென்னாடுடைய தமிழர் கடந்த கால திராவிட இந்து எதிர்ப்பு மாயையில் மயங்கி தமிழர் கொண்டிருந்த அறிவார்ந்த சித்தாந்த சைவ சமய நெறியை கை விட்டனர். இன்று அது வைதிகச் சைவர் கையில் அகப்பட்டுக் கொண்டது. வல்லான் வகுத்ததே வாய்க்காலாகி விட்டது. சிவசிவ.
   
தேனீ. . 
   

  



     








You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 16, 2016, 9:28:44 AM11/16/16
to mint...@googlegroups.com
14-ம் நூற்றாண்டில் வாழ்ந்து நல்வழி நூல்களைப் படைத்த பிற்கால ஔவையார் காலம் வரை திருக்குறளுக்கு  நன்மதிப்பு இருந்து வந்துள்ளது. அதன் பிறகு தென்னாடுடைய சைவம் தளர்ந்தது. திருக்குறளின் நன்மதிப்பும் ஓரங்கட்டப் பட்டது. அதனை மீண்டும் தமிழரின் அற வாழ்க்கை நூலாக முன்னெடுத்து நிறுத்தியவர் 20-ம் நூற்றாண்டு முதல் தமிழ் மொழி புரட்சி ஏற்படுத்திய தென்னாடுடைய தமிழ் அறிஞர் என்றால் மிகையாகாது.

தேனீ.    

Thenee MK

unread,
Nov 16, 2016, 9:42:40 AM11/16/16
to mint...@googlegroups.com
மனு தர்மத்தின் காலத்தைக் கணக்கிட்டுச் சொல்வதற்கில்லை. காலத்தின் ஆரூடங்கள் பல இருக்கலாம்.

வடநூற்கள் தமிழில் மொழிபெயர்ப்பு என்பது உரை சுருக்கமே. அவ்வாறு சுருக்க உரையாக தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட  நூல் பல உண்டு. இதிலும் தமிழர் பண்பாட்டுக்கு ஏற்றவாறு வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை விட்டு மொழிபெயர்ப்பது நம்மவர் வழக்கம். மனு தர்மம் ஆங்கிலத்தில் தக்காரால் மொழிபெயர்க்கப் பட்டிருந்தால் அதனைப் படித்துத் தெளிவடையுங்கள். தமிழில் அரைகுறையாக மொழிபெயர்த்துத் தருவது பயன்பபடாது.    

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Nov 16, 2016, 9:49:34 AM11/16/16
to mintamil, Mohanarangan V Srirangam, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-11-16 16:31 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:

​இந்துக்களில் மனுதர்மத்தை சமய நூலாக சைவர்கள் ஏற்பதில்லை. நான் நேரில் பேரூர், குன்றக்குடி அடிகளார் இருவரிடமும் இதனைக் கேட்டிருக்கின்றேன். வைஷ்ணவர்கள் மனு தர்மத்தைத் தமது நூலாக ஏற்கின்றனரா என்பது எனக்குத் தெரியாது.
அந்த வகையில் ஸ்மார்த்தர்கள் மனு தர்மத்தை ஏற்கின்றனர் எனக் கருதுகின்றன்றேன். இதனை நான் நினைப்பதற்குக் காரணம் தெய்வத்தின் குரலில்  பெரியவர் மனு தர்மத்தைச் சமய நூல் என சேர்த்துக் கொள்ளும் சில பகுதிகளை வாசித்திருப்பதால்.
சாக்தம் கௌமாரம் போன்ற பிரிவுகள் மனுதர்மத்தை ஏற்பனவா என்பது தெரியவில்லை.
குலதெய்வம், இயற்கை வழிபாடு எனச்சொல்லும் பண்டைய தமிழ் வழிபாட்டு மரபில் மனு தர்மத்திற்கு இடமில்லை.

கற்றவர்கள் தாம் மனுதர்மமெல்லாம்  கற்றிருக்கிறோம் என்று பகட்டாய் காட்டும் மேற்கோள் நூலேயன்றி . நடைமுறையில் அது பயிலப்படுவது கிடையாது. ஏனெனில் மனு சிமிருதி போல் பல மிருதிகள் உள. 

அத்ரி சிமிருதி,  நாரத சிமிருதி, யாகியவல்கிய சிமிருதி. பராசர சிமிருதி, விஷ்ணு சிமிருதி, வேத வியாச  சிமிருதி.

இவை கல்வி கற்ற அறிஞர்கள் பிதற்றியவை.  இவர்களது கருத்துக்கு யார் மதிப்பு தந்தார்கள். இப்படி எழுத இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தார்கள். எல்லாம் அவர்களுடைய அறிவுச் செருக்கு தான் என்பது என் கருத்து சுபா.

ஆரோதன்     

N. Kannan

unread,
Nov 16, 2016, 10:09:58 AM11/16/16
to மின்தமிழ்
2016-11-16 16:31 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
​ஆக இந்துக்களுக்கான ஒரு நீதி நூல் என சொல்வது பொருந்தாது என நான் கருதுகின்றேன் கண்ணன்.

​அது வெறும் கேள்விதான். என் கருத்து என்று ஏதுமில்லை.​

வேண்டுமென்றால், 
இந்து = ஸ்மார்த்தப்பிரிவு எனச் சொன்னால் ஒரு வகையில் பொருந்தலாம். ஆனால் இது உண்மையில்லையல்லவா?

​தெரியாது!

இன்றும் இலங்கையில் தமிழ் மக்கள் தம்மை சைவர் எனவே அடையாளப்படுத்துகின்றனரே தவிர இந்து என்றல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

​ஆனால் தமிழகச் சைவம் என்பது ஓர் கலப்பு. அவை இந்து சமய நீரோட்டத்திலேயே உள்ளன. சமகால சைவப்பிரக்ஞை அறிவுத்தெளிவால் ஏற்பட்டதா? இல்லை கேள்விக்குப் ப்யந்து ஏற்பட்டதா?​ இலங்கையில் சாதீயம் ஆழ வேரூன்றியே உள்ளது. அவர்கள் இந்துக்கள் வழிபடும் எல்லா தெய்வத்தையும்தான் வழிபடுகின்றனர். சிவனீயம் என்பது புதிய escapism ;-)

N.Kannan



 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Nov 16, 2016, 10:14:23 AM11/16/16
to மின்தமிழ்
2016-11-16 16:32 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
2016-11-16 6:40 GMT+01:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

வர்ணாசிரமம் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தைப்
பதிவுசெய்த சமூக இலக்கியம்.எல்லாக்காலத்திலும் அதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.தற்போது யாரும்
அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால்
அது தனித்த எண்ணமே தவிர சமூகக்
கடப்பாட்டினை அதுசாராது.


​உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன் மலர்விழி.​
 

​​சுபா: இந்தக் கேள்விக்கே இடமில்லை. இந்தியாவின் சிவில் கோடு சட்டப்படி எல்லோரும் ஓர் நிரை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்.

கேள்வி என்னவெனில் மனுஸ்மிருதி என்றால் என்ன? மநுநீதி என்றால் என்ன? அது யாரால் எக்காலத்தில் பயன்பட்டது? அது உண்மையில் ஓர் சட்டமா? இல்லை சமயப் ப்னுவலா? சீனாவின் கன்பூசியனிசம் போல் சமூக ஒழுங்கமைப்பு தத்துவமா?

இப்போது இத்தலைப்பிற்கான காரணமென்ன? ;-)

நா.கண்ணன்

Parvathy ramanathan

unread,
Nov 16, 2016, 10:22:27 AM11/16/16
to mint...@googlegroups.com
திரு தேனீ அய்யா,
வணக்கம்

 தென்னாடுடைய சித்தாந்த சைவ  நெறியை அறிந்து அதனைப் பின்பற்றுவோர் வருணாசிரம பேதத்திற்கு இடம் தரார். என்னும் உங்கள் கூற்று ஒப்புக்கொள்ளமுடியாதது.


வருணாச்ரமம் என்றால் தீண்டாமை என்றபொருளில் தான் அதை அனைவரும் புரிந்துகொண்டிருக்கிண்றனர்,

சைவர்களில் பல பி ரிவுகள் உண்டு. தமிழ்னாட்டில் இவர்கள் பிள்ளைமார் எண்ற  பொதுப்பெயருக்குள் அடங்க்குவர். தீவிர தீண்டாமயை இன்றும் கடைப்பிடிப்பவர்கள்தான் இவர்களும்.

சைவர் என்று கூறும் போதே உன்களைத்தனித்து  உயர்த்திக் காட்ட முயல்கிறீர்கள் என்று தெரிகிறது.

நன்றி
பார்வதி



.

16 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:17 அன்று, Thenee MK <ipohs...@gmail.com> எழுதியது:

Thenee MK

unread,
Nov 16, 2016, 10:23:25 AM11/16/16
to mint...@googlegroups.com
சிவனீயம் என்பது புதிய escapism?

சைவம் இன்று நேற்று தளைத்தது அல்ல. தொன்றுதொட்டு உள்ளது. தென்னாடுடைய சித்தாந்த சைவம் தனித்துவம் வாய்ந்தது என்பதை அதன் நெறியை அறிந்தோர் அறிவர். 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Kannan

unread,
Nov 16, 2016, 10:26:00 AM11/16/16
to மின்தமிழ்
2016-11-16 16:37 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
 ஏனெனில் குறளுக்கு இன்றைய காலகட்டத்தில் இருக்கும் மதிப்பு இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்ததா என்பது கேள்வி.

நல்ல கேள்வி சுபா.

ஆங்கிலேயர் வந்த பின் தான் தமிழர்களுக்கு குறளை ஓர் secular text என்று பார்க்கும் பார்வை வந்தது. அதுவரை அது காலம், காலமாக சமண   நூலாகவே கருதப்பட்டு வந்தது. ஆயினும், அறிஞர்கள் குறளை அதன் ஆழம் கருதி பாராட்டியே வந்திருக்கின்றனர். சைவம் அதைத் தன் வயப்படுத்த முயன்று தோற்றிருக்கிறது என்பதே உண்மை.

குறள் ஒரு காலத்தின் பிரதிபலிப்பு. நன்றாக ஊன்றி வாசித்தால் பண்டைய வாழ்வியல் புரியும். அதில் வைதீக தர்மமும் உள்ளது. மனு தர்மம் உள்ளதா? எனத்தெரியவில்லை. ஆய்வு செய்திருப்பர்!

நா.கண்ணன்

N. Kannan

unread,
Nov 16, 2016, 10:28:00 AM11/16/16
to மின்தமிழ்
2016-11-16 20:53 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
சிவனீயம் என்பது புதிய escapism?

சைவம் இன்று நேற்று தளைத்தது அல்ல. தொன்றுதொட்டு உள்ளது. தென்னாடுடைய சித்தாந்த சைவம் தனித்துவம் வாய்ந்தது என்பதை அதன் நெறியை அறிந்தோர் அறிவர். 

​You make statements but never substantiate it! Then it is escapism. ;-)

N.Kannan​

Thenee MK

unread,
Nov 16, 2016, 10:28:47 AM11/16/16
to mint...@googlegroups.com
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையம்மா. சமய நெறியை கற்றுத் தெளிந்து அதன் வழி நிற்போர் ஒரு சாரர். சமய நெறியை 'Data collection' போல் கற்று அதன் வழி நில்லாதோர் ஒரு புறம். தாங்கள் குறிப்பிட்டது சமய நெறியை கற்று அதனை உதட்டளவே பேசுவோர். உள்ளளவு சைவத்தை உணர்ந்தோர் தீண்டாமையை வேண்டார். 

N. Kannan

unread,
Nov 16, 2016, 10:30:42 AM11/16/16
to மின்தமிழ்
2016-11-16 20:58 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையம்மா. சமய நெறியை கற்றுத் தெளிந்து அதன் வழி நிற்போர் ஒரு சாரர். சமய நெறியை 'Data collection' போல் கற்று அதன் வழி நில்லாதோர் ஒரு புறம். தாங்கள் குறிப்பிட்டது சமய நெறியை கற்று அதனை உதட்டளவே பேசுவோர். உள்ளளவு சைவத்தை உணர்ந்தோர் தீண்டாமையை வேண்டார். 
​//

​இது எல்லா சமயங்களுக்கும் பொருந்தும். அறிவுத்தெளிவு பெற்றோர் என்பது தனி. பொதுவாய் சாடுவது எதற்கும் உதவாது!

நா.கண்ணன்​

Thenee MK

unread,
Nov 16, 2016, 10:52:55 AM11/16/16
to mint...@googlegroups.com
"வடமொழியில் வழங்கும் நீதி நூல்களுக்கும் வள்ளுவர் நீதி நூலுக்கும் பெரிதும் வேற்றுமை காணப்படுகின்றது. வடமொழி நீதி நூல்கள் பெரும்பாலும் சாதி வேற்றுமையை அடிப்படையாக கொண்டு, வழக்கு, தண்டம் முதலிய துறைகளில் ஒரு சாதிக்கொரு நீதியாகவும், ஒரு குலத்துக்கொரு நீதியாகவும் அமைத்துக் கூறுகின்றன. அறங்கூறவையத் தலைவனான் நீதியாளன், குற்றம் செய்தான் ஒருவனது குலத்தை அறிந்தே அதற்கேற்ற தண்டனை விதிக்க வேண்டும். ஒரு குற்றத்தை உயர்குலத்தானொருவன் செய்தால் எளிய தண்டனையும், தாழ்குலத்தானொருவன் செய்தால் கடிய தண்டனையும் விதிக்கப் பட்டிருத்தலை மநுநீதி முதலாய நீதி நூற்களிற் காணலாம். ஆனால் திருவள்ளுவர் நீதி நூலில் சமன் செய்து சீர்துக்கும் கோல்போன்று நடுநிலை வழுவாத பொது நீதியே போற்றப்பட்டுள்ளது."

"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி"

                      - டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை - திருவள்ளுவர் நூல்நயம்"
      

--

Thenee MK

unread,
Nov 16, 2016, 10:54:46 AM11/16/16
to mint...@googlegroups.com
உள்ளங்கை நெல்லிக்கணிக்கு ஆதாரம் வேண்டுமா? ஐயா! 

--

Suba

unread,
Nov 16, 2016, 11:26:25 AM11/16/16
to மின்தமிழ், Narayanan Kannan
2016-11-16 16:25 GMT+01:00 N. Kannan <navan...@gmail.com>:


குறள் ஒரு காலத்தின் பிரதிபலிப்பு. நன்றாக ஊன்றி வாசித்தால் பண்டைய வாழ்வியல் புரியும். அதில் வைதீக தர்மமும் உள்ளது. மனு தர்மம் உள்ளதா? எனத்தெரியவில்லை. ஆய்வு செய்திருப்பர்!
​குறளை முழுமையாக மனன செய்யவில்லை என்ற போதிலும் முழுமையையும் விளக்கத்துடன் வாசித்துள்ளேன்.
என்னிடம் உள்ள மனு நீதி நூலையும் வாசித்துள்ளேன்​. 

மனு தர்ம நூல் குறலிலிருந்து வேறுபாடானது.

ஒரு தனி இழை தொடங்கி அதனை கலந்து  ஆராய முற்பட விருப்பம் உள்ளது., நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்.

சுபா

Malarvizhi Mangay

unread,
Nov 16, 2016, 11:40:13 AM11/16/16
to mint...@googlegroups.com

கண்ணன் அவர்களே! எங்கள் கல்லூரியில் ஒருவர் மனுதர்மம் _திருக்குறள் இரண்டையும்
ஆய்வு செய்து Ph.D.பட்டம் பெற்றார்.(தமிழில்)


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Kannan

unread,
Nov 16, 2016, 10:09:30 PM11/16/16
to mint...@googlegroups.com

முதலிலேயே சொல்லிவிட வேண்டும். எனக்கு மனுதர்மம் என்றால் என்னவென்று தெரியாது. கொஞ்சம் கன்பூசியனிசம் தெரியும். 8 வருடம் கொரியாவில் வாழ்ந்ததால். இது வெறும் பொறுப்புத் துறப்பு ;-)

சரி வள்ளுவருக்கு வருவோம். வள்ளுவரை ஒரேயடியாக 21ம் நூற்றாண்டிற்குக் கடத்த முற்படுகின்றனர். ஒரு சீரழிந்த சமுதாயத்தை தாங்கும் வல்லமை குறளுக்கு உண்டா என்று தெரியவில்லை. வள்ளுவரும் ஒரு தமிழர்தான். அவர் வாழ்ந்த காலத்தின் நியதியைச் சொல்வது குறள். I don't want to judge based on my current values. அவர் குடிமை என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். குடி என்பது ஜாதிதான். குடி கெட்டுப் போகக்கூடாது என்று பலவாறு சொல்கிறார்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து (மடியின்மை - 61/603)

குடிமை கெட்டுவிடக் கூடாது என்பதில் வள்ளுவர் கவனமாக உள்ளார். அந்தக் காலம் அப்படி. ஏன் இப்போதும் தமிழர்களின் பெரிய பிரச்சனையே அதுதானே!

குடி என்பது ஜாதிதான் என்பதை ஒரு சங்கப்பாடல் சொல்லும்:

புறநானூறு 335, பாடியவர்: மாங்குடி கிழார்,திணை: வாகை, துறை: மூதின் முல்லை –பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை
அடலருந் துப்பின் .. .. .. ..
… குரவே தளவே குருந்தே முல்லை யென்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறு கொடிக் கொள்ளே பொறி கிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை
*துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந் நான்கல்லது குடியும் இல்லை*
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

, துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான் கல்லது குடியும் இல்லை –

எனவே வள்ளுவத்தில் மனுதர்மக் கூறுகள் இருக்க வாய்ப்புண்டு.

இப்படிச் சொல்வதால் வள்ளுவத்திற்கு இழுக்கு என்று பொருள் அல்ல. அவர் ஒரு சமுதாயக் கண்ணாடி. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி அவ்வளவுதான்.

நா.கண்ணன்

Thenee MK

unread,
Nov 16, 2016, 11:06:37 PM11/16/16
to mint...@googlegroups.com
ஆதாரமும் தகுந்த ஆய்வும் இல்லாமல் திருக்குறளுக்கு மனு நீதியை கற்பிப்பது தகாது. பரிமேலழகரைத் தவிர உயர்ந்த உரையாசிரியர் எவரும் வருணாசிரம் அடிப்படையில் அக்குறளுக்கு உரை வரைந்ததை இதுவரை கண்டதில்லை. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் நிலைப்பாடு பல இடங்களில் அவர்தம் வைணவ பண்பாட்டு வழி வந்தது என்பது பலரும் அறிந்து வியாக்கினப்படுத்தியதுதான்.

இதற்கு மணக்குடவர் சொல்வதென்ன?

"ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தானாம்,"

"உயர் குலத்தான்" என்பது ஒழுக்கமுடன் வாழ்வோன் என்பதே வள்ளுவர் உணர்த்தியது.அதற்கு எதிர்பதம் சொல்லாமலே விளங்கும். அதற்கு சாதியம் பூசுவது வள்ளுவர் முகத்தில் கரியைப் பூசுவதர்க்கு ஒப்பாகும். திருவள்ளுவர் மனதை அறிந்து கலந்துரையாடுவோம். நம் மனதிற்கு ஏற்றவாறு திருவள்ளுவரின் கற்புக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம். 


தேனீ  


  

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Kannan

unread,
Nov 17, 2016, 12:33:44 AM11/17/16
to mint...@googlegroups.com

Nov 17, 2016 9:36 AM, "Thenee MK" <ipohs...@gmail.com> wrote:
>
> "உயர் குலத்தான்" என்பது ஒழுக்கமுடன் வாழ்வோன் என்பதே வள்ளுவர் உணர்த்தியது.அதற்கு எதிர்பதம் சொல்லாமலே விளங்கும். அதற்கு சாதியம் பூசுவது வள்ளுவர் முகத்தில் கரியைப் பூசுவதர்க்கு ஒப்பாகும். திருவள்ளுவர் மனதை அறிந்து கலந்துரையாடுவோம். நம் மனதிற்கு ஏற்றவாறு திருவள்ளுவரின் கற்புக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்//

முதலில் வள்ளுவரைப் புனிதப்படுத்துவதை நிறுத்த வேண்டும். வள்ளுவம் ஒரு காலத்தின் கண்ணாடி அவ்வளவுதான். தமிழனின் மாண்பும், அவனது சமூக நிலைப்பாடும் குறளில் தெரிகிறது. தமிழகக் குமுகாயத்தில் குறை இருந்தால், அதற்கு வள்ளுவர் என்ன செய்வார்?

உங்கள் பதில்கள் எல்லாவற்றிலும் பிரச்சனையிலிருந்து தப்பித்து ஓடும் மனோபாவமே தெரிகிறது. நமது பிரச்சனை என்ன? அது எத்தனை காலம் நம்மிடம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது எனத் தெரிந்தால்தான் பிரச்சனையிலிருந்து மீள முடியும்.

வள்ளுவரைத் தெய்வம் ஆக்குவதாலோ, ஆரியன் சொல்லி நாங்கள் சாதீயம் கடைப்பிடிக்கிறோம் என்பதெல்லாம் 'தப்பிப்பது'. தீதும் நன்றும் பிறர் தர வாரா! என்பதும் தமிழ்முறைதான்.

சரி, மணக்குடவருக்கே வருவோம் அவர் 'குலம்' உண்டு என்றுதானே சொல்கிறார். இல்லை என்று உரை எழுதவில்லையே :-)

வள்ளுவருக்கு "கற்பு"!! :-)
ஆணுக்கு கற்பு உண்டு என்று வள்ளுவர் சொல்லும் குறள்களைத் தாருங்கள்!! ;-)

> இதற்கு மணக்குடவர் சொல்வதென்ன?
>
> "ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தானாம்,"
>

இழிந்த குலம் என்றால் என்ன? வள்ளுவர் காலத்தில் எவை, எவை இழிந்த குலங்கள்?

> "உயர் குலத்தான்" என்பது ஒழுக்கமுடன் வாழ்வோன் என்பதே வள்ளுவர் உணர்த்தியது.அதற்கு எதிர்பதம் சொல்லாமலே விளங்கும். அதற்கு சாதியம் பூசுவது வள்ளுவர் முகத்தில் கரியைப் பூசுவதர்க்கு ஒப்பாகும். திருவள்ளுவர் மனதை அறிந்து கலந்துரையாடுவோம். நம் மனதிற்கு ஏற்றவாறு திருவள்ளுவரின் கற்புக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம். 
>

தனிமனித ஒழுக்கம் என்பது வேறு. குலம் எனும் குமுகாய அலகு என்பது வேறு. தற்கால தமிழ்க் குமுகாயத்தில் மணக்குடவர் சொல்லும் உயர் குலம் எது? உணர்ச்சி வசப்படாமல் யோசித்துச் சொல்லவும்.

அடுத்து குறளும், மனுதர்மமும் எனும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் சேதி. அது யார் முகத்திலும் கரியைப் பூசுவது ஆகாது.

அது சரி, உங்கள் பூர்வீகம் என்ன? ஏன் தேனீக்குள் ஒளிந்து கொண்டு உரையாடுகிறீர்கள் :-))

நா.கண்ணன்

Malarvizhi Mangay

unread,
Nov 17, 2016, 12:34:33 AM11/17/16
to mint...@googlegroups.com

கண்ணன்  ஐயா! நானும் உங்கள் கருத்தை
ஏற்கிறேன்.திருக்குறளில் வர்ணாசிரமக் கருத்துகள் உண்டு.ஆனால் அதை வள்ளுவன்
மிக விவரமாகப் பதிவுசெய்வான்.
"நினைக்கப்படும் "".
"சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை "
என்று ஏற்றத்தாழ்வுகளைப் பதிவு செய்துவிட்டுத் தான்பட்டுக்கொள்ளாமல்
விலகி அடுத்த வேளை பார்க்கப் போய்விடுவான் (வேற குறள் எழுதத்தான்)

தேமொழி

unread,
Nov 17, 2016, 1:15:04 AM11/17/16
to மின்தமிழ்
குலம்  என்பது குடும்பம்
எப்பேர்ப்பட்ட குடும்பத்தின் பேரைக் கெடுக்க இப்படி ஒரு பிள்ளை பிறந்திருக்க வேண்டாம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டதில்லையா?
இதுதான் அந்தக் குலம், குடிப்பிறப்பு என்பதெல்லாம். 


வாழும் முறையில் உயர்வு தாழ்வு உலகெங்குமே உண்டு.
இதனைக் கர்மம் முற்பிறப்பு என்ற கொள்கையை நம்புபவர் ஏற்றுக் கொள்வதுண்டு.


போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ இந்தப் பிறவியில் அல்லாடுகிறேன் என்று நொந்து கொள்வது பரவலான வழக்கம்
அது போலவே நிறைந்த வாழ்வை வாழ்பவர்களை, எல்லாம் பொன் பிறவியில் அவர் செய்த புண்ணியம் என்று சொல்வதும் வழக்கம்.
இதில் சாதி வேற்றுமைகளை நுழைத்துச் சொல்ல விரும்புவது சாதியில் ஆழ்ந்த பற்றுள்ளவர், அதனால் ஆதாயம் பெறுபவர் கோணமாக இருந்து வந்துள்ளது.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. #0037

அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
- சாலமன் பாப்பையா

இதனை எப்படி சாதி அடிப்படையில் பார்ப்பது? வள்ளுவர் அவ்வாறா சொல்லியுள்ளார்.



..... தேமொழி



Innamburan S.Soundararajan

unread,
Nov 17, 2016, 1:21:20 AM11/17/16
to mintamil
மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன். 
-ஸுபாஷிணி

முஸ்லிம்களுக்கு Sharia law இருப்பது போல், இந்துக்களுக்கு மநு ஸ்மிருதி எனச் சொல்லலாமா? மநு நீதியை உயர்த்திப் பிடித்திருக்கிறதே தமிழகம்! மநு நீதிச் சோழன் என்றே ஓர் அரசன் இருந்திருக்கிறானே!
நா, கண்ணன்

ஒரு சமயம் சோழனின் மனு ஸ்மிருதி பிரசுரமும், சுபாஷிணி வைத்திருக்கும் பதிவும் வேறு வேறோ?

இன்னம்பூரான்

Gowthama Sanna

unread,
Nov 17, 2016, 1:28:10 AM11/17/16
to மின்தமிழ்
மனுவும் மனுநீதியும்.. மனுஸ்மிருதி...?

மனு தர்மம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. மனு ஸ்மிருதி எனும் நூல் வடமொழியில் இருக்கிறது, அதை எழுதியவர் சுமதி பார்க்கவா என்னும் வைசியர், அதாவது மூன்றாம் வர்ணத்தை சேர்ந்தவர். இந்தத் தகவலை முதன்முதலில் வெளியிட்டவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். இத்தனைக்கும் சுமதி பார்க்கவா மனுஸ்மிருதியை தொகுத்தவர்தான், அது புஷ்யமித்திர சுங்கன் காலத்திலோ அல்லது அதற்குப் பின்போ எழுதப்பட்டிருக்கலாம் என்பது அவரது கணிப்பு. சுங்கர்கள்தான் இந்தியாவின் முதல் பார்ப்பன மன்னர்கள். பார்ப்பனர்கள் அரசாளக்கூடாது என்கிற வர்ண தர்மத்தை மீறி முதல் அரசை அமைத்தார்கள், அதை நியாயப்படுத்தும் விதமாகவே மனுஸ்மிருதி அமைந்திருக்கும். அது முழுக்க சமூக மற்றும் அரச சட்டங்களை தொகுப்பாக கொண்டது.

இந்த மனுவுக்கும் மனுநீதி சோழனுக்கும் என்ன தொடர்பு. சோழர்களில் புராணகால சோழ பரம்பரையைச் சேர்ந்தவர் மனுநீதி சோழன்,அது கற்பனையாகக்கூட இருக்கலாம். ஏனென்றால் எல்லா அரச பரம்பரையினரும் தமது கால எல்லையை நீட்டித்துக் கொள்ள பல புராண மன்னர்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை கரந்தை செப்பேட்டுத் தொகுதிகளைப் பார்த்தால் புரிந்துக் கொள்ள முடியும்.

எனினும் மனு தர்மத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள மனுஸ்மிருதியை படியுங்கள். என்னிடமிருந்த நேரடி அசல் மொழிபெயர்ப்பு மனுஸ்மிருதி வேறிடத்தில் இருக்கிறது. 130 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்டது. அது என் கையில் வரும்போது இங்கே பதிவேற்றுகிறேன்.

அன்புடன்
கௌதம சன்னா

Thenee MK

unread,
Nov 17, 2016, 1:33:15 AM11/17/16
to mint...@googlegroups.com
கற்பு என்பதற்கு 'கல்வி' என்ற பொருளும் உண்டு. அவ்வகையில் பாருங்கள் பொருள் புரியும்.



--

Thenee MK

unread,
Nov 17, 2016, 1:36:18 AM11/17/16
to mint...@googlegroups.com
வான்புகழ் வள்ளுவன் கொடுத்த கல்வியை புனிதமாகப் பார்க்காமல் போவது தமிழர் பண்பு அல்ல. அவர் கொடுத்த கல்வி புனிதம் என்றால் அவரும் புனிதமானவரே.



--

Thenee MK

unread,
Nov 17, 2016, 1:38:15 AM11/17/16
to mint...@googlegroups.com
திருக்குறள் முக்கால கண்ணாடி. நேற்று இன்று நாளையென்று எக்காலத்திற்கும் மனிதனை மனிதனாக வாழ வைக்கும் தன்மை பொருந்திய நூல். 

--

Thenee MK

unread,
Nov 17, 2016, 1:45:05 AM11/17/16
to mint...@googlegroups.com
இந்து மதம் ஒன்று இருக்கின்றது என்பதை நம்புவோர் அம்மதம் ஆன்ம பக்குவம் ஏற்படுத்த வழி வகுக்க வேண்டுமல்லவா? அப்படியாகின் சாதியம் போற்றுவது இந்து மதத்திற்கு புறம்பு என்று அறிவித்து இந்துக்களுக்கு ஆன்ம பக்குவத்தை ஏற்படுத்தலாம் அல்லவா? இதுநாள் வரை இந்துக்களுக்கு தலைமை வகிப்போர் அதைச் செய்யாமல் இருப்பதற்கு காரணம் சாதிய ஒழிப்பு என்பது வருணாசிரம ஒழிப்புக்கும் வித்திடும் என்பதால். அதனால் வருணாசிரம் போற்றும் வரை இந்துக்கள் என்பாருக்கு சாதியம் ஒழியப் போவதில்லை. மூலம் வருணசிரமம். அம்பு எய்தவனை விட்டுட்டு அம்பை நோவானேன்.    

--

Thenee MK

unread,
Nov 17, 2016, 1:47:11 AM11/17/16
to mint...@googlegroups.com
குலம் என்பது ஒன்றுக்கு மேற்பட்டோர் கொண்ட குடும்பமாகும் என்று ஏன் சிந்திக்க முடியவில்லை? குலம் என்பது அவரும் அவரைச் சார்ந்த முன்னோரையும் குறிக்கும்.



--

Thenee MK

unread,
Nov 17, 2016, 1:48:53 AM11/17/16
to mint...@googlegroups.com
ஒழுக்கமற்றவர் அனைவருமே இழிகுலத்தான் என்பது வள்ளுவர் வாக்கு. இதில் சீனர், இந்தியர், மலாய்க்காரர் என்ற பாகுபாடு காட்ட முடியுமா? 



--

Thenee MK

unread,
Nov 17, 2016, 1:50:55 AM11/17/16
to mint...@googlegroups.com
எமக்கு பூர்வீகமென்று ஒன்றும் இல்லை சாமி.

எமக்கும் தாயும் தந்தையும் ஈரிலாத ஒருவனே. அப்புறம் எமக்கு எதற்கு ஒரு நாமம்? 


--

Thenee MK

unread,
Nov 17, 2016, 1:55:08 AM11/17/16
to mint...@googlegroups.com
வருணாசிரம் எனும் சொற்றொடர் எதனைக் குறிகின்றது என்பதற்கு பொருள் விளங்காமல் அது திருக்குறளில் உள்ளது என்றால் என்ன செய்வது? வைதிக பண்பாட்டில் வந்த நால்வர்ண பேதம்தான் வருணாசிரம். அதனை வள்ளுவர் கூறினார் என்றால் கடந்த 20-ம் நூற்றாண்டில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் ஆய்ந்து எழுதிய அத்தனை தமிழ் மூதறிஞரையும் முட்டாளாக்குவதற்கு ஒப்பாகாதா அம்மையே? 
  

Thenee MK

unread,
Nov 17, 2016, 1:57:29 AM11/17/16
to mint...@googlegroups.com
அரங்கத்தின் தலைப்பு 'மனு தர்மம் இந்து சமய நூலா?' என்பது. நமது கலந்துரையாடலை தலைப்புக்கு ஒட்டியவாறு வைத்துக் கொள்வோம்.

நன்றி

தேனீ.


 

தேமொழி

unread,
Nov 17, 2016, 2:02:14 AM11/17/16
to மின்தமிழ்


On Wednesday, November 16, 2016 at 3:54:02 AM UTC-8, malarmangay64 wrote:

மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு குற்றத்திற்கு
என்னதீர்வு என ஆராய்கிறபோது அமைச்சர்கள்
பலரும் பலஉபாயம் சொல்கின்றனர்.அவையணைத்தும் ஆராய்ச்சி
மணிஅடித்து நீதிகேட்ட பசுவின் உணர்வுக்குநியாயமாக
இல்லை என்பதே சோழமன்னன் (அநபாயச்சோழனா?) எண்ணம்.பின்பு மனுநீதியில் அதேதண்டனை (கன்றை இளவரசன் தேர்க்காலில் இட்டுக் கொன்றதுபோலவே மன்னனும் இளவரசனைத்
தேர்க்காலில் இட்டுக்கொல்லுதல்) பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக அமைச்சர் சொல்ல அதனை நிறைவேற்றினான் மன்னன்.
மனுவின் வழியில் பசுவிற்கு நீதிவழங்கியதால்
மனுநீதிச் சோழனான்.புனைப்பெயரேயன்றி அது அவன் இயற்பெயரன்று.

 

On Wednesday, November 16, 2016 at 10:28:10 PM UTC-8, Gowthama Sanna wrote:
மனுவும் மனுநீதியும்.. மனுஸ்மிருதி...?

இந்த மனுவுக்கும் மனுநீதி சோழனுக்கும் என்ன தொடர்பு. சோழர்களில் புராணகால சோழ பரம்பரையைச் சேர்ந்தவர் மனுநீதி சோழன்,அது கற்பனையாகக்கூட இருக்கலாம். ஏனென்றால் எல்லா அரச பரம்பரையினரும் தமது கால எல்லையை நீட்டித்துக் கொள்ள பல புராண மன்னர்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை கரந்தை செப்பேட்டுத் தொகுதிகளைப் பார்த்தால் புரிந்துக் கொள்ள முடியும்.


மனுநீதிச் சோழன் என்ற புனைபெயர் கொடுக்கப்பட்டவன் பொ. ஆ. மு. இலங்கையை ஆண்ட ஒரு சோழர் குல வழித்தோன்றல் எனலாம்.  அவன் பெயர் எல்லாளன்.
அவனே நேர்மை தவறாது, உயிர்கள் அனைத்தயும் ஒன்றென மதித்து தனது மகனை தேர்காலில் இட்டு நீதி வழங்கியவன் என்பதை இலங்கை மகாவம்சம் நூலின் மூலம் பெறலாம். 

மேலும் இங்கு விக்கியில்  படிக்கலாம்.

எல்லாளன் பற்றி மகாவம்சம்


மேலும் இது பிற்காலத்தில் இணைக்கப்பட்டது 
காலவரிசைப்படி 
சோழ குல எல்லாளன்  வாழ்ந்த காலம்   கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை 
புஷ்ய மித்ர சுங்கன் முதல் சுங்க வம்சம் (கிமு 185- கிபி 73) 

..... தேமொழி

Suba

unread,
Nov 17, 2016, 2:29:05 AM11/17/16
to mint...@googlegroups.com

நல்ல தகவலை வழங்கியிருக்கின்றீர்கள் திரு.சன்னா.
என்னிடம் உள்ள தமிழ் மொழிபெயர்ப்பின் பதிப்பை இன்று மாலை பார்க்கிறேன். இதில் கூட சில தகவல்களை எடிட் செய்திருப்பார்களோ என்ற ஐயம் உள்ளது.

நீங்கள் குறிப்பிடும் அந்த 130 ஆண்டு தமிழ் அச்சுப்பதிப்பு நமது த.ம.அ சேகரத்துக்கு நல்ல சேர்க்கையாக அமையும்.  மின்னாக்கம் செய்து தாருங்கள். மிக்க  நன்றி

சுபா

Suba

unread,
Nov 17, 2016, 2:40:24 AM11/17/16
to mint...@googlegroups.com

குழப்பம் உண்டாக்கும் வாக்கியம் திரு இன்னம்பூரான். இழயை மனு நீதி சோழன் பக்கம் திருப்புவது இழையின் மைய கேள்விக்கான விடைகாணலில் தொய்வினை ஏற்படுத்தும்.

கண்ணன் பெயர் ஒற்றுமையை மட்டும் வைத்து இரண்டிற்கும் தொடர்பு என கொண்டு சென்று விட்டார்.  அதில் ஒரு சில விசயங்களை தொட்டு சில கருத்துக்கள் வந்தன. அவை போதும் என நினைக்கிறேன்.

இழையின் மைய கேள்விக்கு மீண்டும் வருவது உதவும்.

சுபா

Suba

unread,
Nov 17, 2016, 2:42:23 AM11/17/16
to mint...@googlegroups.com

அன்புள்ள கண்ணன்,

தாங்கள் ஒரு முறை முழுதாக மனு தர்மம் நூலை வாசித்து விடுங்கள்.

சுபா

N. Kannan

unread,
Nov 17, 2016, 5:07:40 AM11/17/16
to மின்தமிழ்
2016-11-17 12:20 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
எமக்கு பூர்வீகமென்று ஒன்றும் இல்லை சாமி.

எமக்கும் தாயும் தந்தையும் ஈரிலாத ஒருவனே. அப்புறம் எமக்கு எதற்கு ஒரு நாமம்? 

​The greatest escapist :-))

Kannan​

N. Kannan

unread,
Nov 17, 2016, 5:13:17 AM11/17/16
to மின்தமிழ்
2016-11-17 11:58 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
மனுவும் மனுநீதியும்.. மனுஸ்மிருதி...?

மனு தர்மம்
​:​
 அதை எழுதியவர் சுமதி பார்க்கவா என்னும் வைசியர், அதாவது மூன்றாம் வர்ணத்தை சேர்ந்தவர். இந்தத் தகவலை முதன்முதலில் வெளியிட்டவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். இத்தனைக்கும் சுமதி பார்க்கவா மனுஸ்மிருதியை தொகுத்தவர்தான், அது புஷ்யமித்திர சுங்கன் காலத்திலோ அல்லது அதற்குப் பின்போ எழுதப்பட்டிருக்கலாம் என்பது அவரது கணிப்பு. சுங்கர்கள்தான் இந்தியாவின் முதல் பார்ப்பன மன்னர்கள். பார்ப்பனர்கள் அரசாளக்கூடாது என்கிற வர்ண தர்மத்தை மீறி முதல் அரசை அமைத்தார்கள், அதை நியாயப்படுத்தும் விதமாகவே மனுஸ்மிருதி அமைந்திருக்கும். அது முழுக்க சமூக மற்றும் அரச சட்டங்களை தொகுப்பாக கொண்டது.

​நல்ல விளக்கம் திரு.சன்னா. இது எல்லாவற்றையும் விளக்கிவிடுகிறது. மேலும் பேச என்னவுள்ளது?

இங்கு இந்து மதம் என்று எதைச் சொல்கிறோம்? அதுவே ஒரு குழப்பான subject! :-)

நா.கண்ணன்​

Thenee MK

unread,
Nov 17, 2016, 5:49:15 AM11/17/16
to mint...@googlegroups.com
"அது முழுக்க சமூக மற்றும் அரச சட்டங்களை தொகுப்பாக கொண்டது"


இது மனு தர்மத்தை முழுமையாக விளக்கவில்லை. ஒவ்வொரு வர்ணத்தினரும் கொள்ள வேண்டிய; கொள்ளக் கூடாத விதிகளை விளக்குவதே மனு தர்மம். அதில் சமூக  மற்றும் வாழ்வியல் நெறி ஒரு பகுதியே. அதில் உள்ள ஏற்ற தாழ்வைக் கொட்ட நேரம் வரும்பொழுது கொட்டுவோம். 

மீதத்தையும் இங்கே கொட்டி ஆய்ந்து அலசி ஒரு முடிவுக்கு வருவோம்.  அப்பொழுதுதான் மனு தர்மம் அனைவருக்கும் உரியதா அல்லது வைதிக பண்பாட்டைப் பின்பற்றுவோருக்கு மட்டுமே உரியதா என்பது இதுவரை அதனைப் புரிந்து வாழாதோருக்குப் புரியும். . 

கடையை விரித்தோம் கொள்வாரில்லை வாரிக் கொண்டோம் என்று கதவை மூடினால் கண்ணாமூச்சி விளையாட்டாகி விடும் இந்து மதம்.

தேனீ.
 
 

--

Seshadri Sridharan

unread,
Nov 17, 2016, 7:50:48 AM11/17/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-11-17 12:14 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
இந்து மதம் ஒன்று இருக்கின்றது என்பதை நம்புவோர் அம்மதம் ஆன்ம பக்குவம் ஏற்படுத்த வழி வகுக்க வேண்டுமல்லவா? அப்படியாகின் சாதியம் போற்றுவது இந்து மதத்திற்கு புறம்பு என்று அறிவித்து இந்துக்களுக்கு ஆன்ம பக்குவத்தை ஏற்படுத்தலாம் அல்லவா? இதுநாள் வரை இந்துக்களுக்கு தலைமை வகிப்போர் அதைச் செய்யாமல் இருப்பதற்கு காரணம் சாதிய ஒழிப்பு என்பது வருணாசிரம ஒழிப்புக்கும் வித்திடும் என்பதால். அதனால் வருணாசிரம் போற்றும் வரை இந்துக்கள் என்பாருக்கு சாதியம் ஒழியப் போவதில்லை. மூலம் வருணசிரமம். அம்பு எய்தவனை விட்டுட்டு அம்பை நோவானேன்.    



Brátyastvaḿ Práńaeka rśiratta vishvasya satpatih
Vayamádyasya dátárah pitátvaḿ mátarishvanah.


The word, “Brátya,” means “fallen”. According to the social code if a Brahmin does not follow the principles worthy of a Brahmin, he/she will fall into the category of the Brátya. Similarly if a Kśatriya or a Vaeshya does not act according to his Varńa (color), he will be categorized as Brátya. The question of being Brátya or fallen does not arise in the case of a shúdra, for all apostates are known as Shudras. Brátya Brahmin, Brátya Kśatriya and Brátya Vaeshya, due to their acts being inconsistent with their respective Varńas, are regarded as meaner than the Shúdras who belong to the Varńáshrama (Institution of social order). Here Brahma has been called Brátya, for He is above all the Saḿskáras or prejudices of this social system, Varńáshrama. No Saḿskára can bind Him. All Saḿskára-bound powers bow to His Glory. The Ajiṋána Bodhinii Tantra also says, –

Varńáshramábhimánena shruti dásye bhavennarah;
Varńáshramavihiinashca vartate shruti múrdhańi.

So long as there are Varńa prejudices (caste-disparity, financial disparity, regional disparity, educational or other disparities) in human beings they can never realize or feel the non-distinctive, incessant flow of the Cosmic Essence, the integral Brahma – never, never can they do so. As long as they keep this caste-vanity as the trademarks, they will keep themselves enslaved to scriptural injunctions, because they regard one or the other Varńa as the chief prop or mainstay of their mind. When a person through this spiritual and mental development or through their merger in the Supreme Being, identifies himself with Brahma who is above the Varńas, they attain a position above scriptural injunctions whereupon to be bereft of Varńa or color is the real Sádhaná.

Thenee MK

unread,
Nov 17, 2016, 9:51:59 AM11/17/16
to mint...@googlegroups.com
பெண்ணியத்திற்கு மனு தர்மம் சொல்லும் நியதியைப் படித்து அறிந்து கொள்ள விரும்புவோர் அதன் 9-ம் மற்றும் 10-ம் அத்தியாத்தில் படித்துப் பொருள் அறிந்து கொள்ளலாம். இது மனு தர்மத்தின் சமூக நியதியை விளக்கும் ஒரு பகுதி.  

ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம் - மனு 9.18

ஆங்கில மொழிபெயர்ப்பு:

"For women no (sacramental) rite (is performed) with sacred texts, thus the law is settled; women (who are) destitute of strength and destitute of (the knowledge of) Vedic texts, (are as impure as) falsehood (itself), that is a fixed rule"

சங்க இலக்கியத்தின் மணிமேகலையும் பார்ப்பணர்  மனைவிக்கு அவர்தம் நம்பிக்கையின்படி ஒரு விளக்கம் கொடுக்கும். அதனை இங்கே பதிவு செய்து பெண்ணினத்திற்கு களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இப்படி ஒன்று இருந்தால் அதனை மறுக்க வேறு ஒன்றை அவர் ஆதாரமாகக் காட்டுவார்.  

மேற்கூறிய அத்தியாயங்களையும் மனுவின் பிற நீதி நியாயங்களையும் முழுமையாகப் படித்து விட்டு ஆறஅமர பதில் எழுதலாம்.

மனுவில் இந்து மதத்திற்காக கூறும் வர்ணாசிரம நீதி நியாயத்தையும்  பிறர் படித்தறிந்தவாறே எழுதலாம். அதன்பிறகு அத்தர்மம் அனைவருக்கும் உடையதா அல்லது வைதிக பண்பாட்டைக் கொண்டோருக்கு மட்டுமே உரியதா என்பதை அலசிப் பார்த்துக் கொள்ளலாம்.

அதன் பிறகே அது இந்து சமய நூலா என்று தீர்மாணிக்க இயலும்.

கருத்துக் களத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி.
  
தேனீ. 






 

Oru Arizonan

unread,
Nov 17, 2016, 12:02:20 PM11/17/16
to mintamil
முதலில் இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
  • மனுதர்மம், மனுநீதி, மனுஸ்ம்ருதி அப்படியே [verbatim] இக்காலத்திற்கு ஏற்புடையதல்ல.
  • இதை பராசர ஸ்ம்ருதியே சொல்லி, அதற்கான காரணத்தையும் விளக்குகிறது.
  • முதலில் தர்மம், நீதி, ஸ்ம்ருதி என்ற சொற்களுக்கான விளக்கத்தக்க காண்போம்.
  • தர்மம் என்றால் வாழும் நெறி:  சான்றாக, இந்தியாவில் இடப்புறம் வண்டியைச் செலுத்தவேண்டும்;  அமெரிக்காவில் வலப்புறம் வண்டியைச் செலுத்தவேண்டும்.  இவை அந்தந்த நாட்டிற்கான வாழும் நெறி, வழிமுறை.  இது தவறு, சரி என்று சொல்ல இயலாது.  இந்தியாவில் வலப்புறம் வண்டியைச் செலுத்தினாலும், அமெரிக்காவில் வலப்புறம் வண்டியைச் செலுத்தினாலும் அது விபத்தையே விளைவிக்கும்.  தர்மம் என்பது இயல்பையும் குறிக்கும்.  மற்ற உயிரத்தை அடித்துண்பது புலியின் இயல்பு, வாழும் நெறி, இயல்பு -- அதேசமயம் அப்படிச்செய்வது மாடு, ஆடு இவைகளின் வாழும் நெறி, இயல்பல்ல.  எனவே புலியின் தர்மம், ஆடு,மாடுகளின் தர்மம் அல்ல.  இதற்காக மனிதர்கள் பொங்கியெழுவதில்லை.  ஆனால், வேள்வியில் மிருகபலி வேண்டாம் என்று மனிதரிற் சிறந்தவர்களே பொங்கியெழுந்தார்கள்.
  • அடுத்ததாக: நீதி என்பது அறமுறை.  அறங்கள் எப்படிப் பின்பற்றப்படவேண்டும் என்பதை அறநூல்கள் கூறுகின்றன.  ஒரு சமயத்திற்கான அறநூல் சொல்வதை இன்னொரு சமய அறநூல் ஏற்றுக்கொள்ளாது.  மேலும், ஒரு சமய அறநூல், காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் -- ஏனெனில் காலத்திற்கொவ்வாத கருத்துக்கள் அதில் இருப்பதனால்.  இதுவே மனு தர்மம்/நீதி/ஸ்ம்ருத்திக்கு ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவுக்கு இருக்கும் அறமுறை இந்தியாவில் இல்லை.  அமெரிக்காவில் அனைவருக்கும் ஒரே அறமுறைதான்.  ஆனால், இந்தியாவில் சமயத்திற்குத் தகுந்தவாறு இந்திய அறமுறை [constitution of India] மாறுபடுகிறது.
  • ஸ்ம்ருதி:  இது நினைவுகூறப்பட்டதனைக் குறிக்கிறது.  பழங்காலத்தில் எழுத்துமுறை இல்லை.  முன்னோர்கள் கூறியதை, அதைக்கேட்டவர்கள், மற்றவர்கள்களுக்குக் கூறினார்கள்.  இப்படி வழிவழியாகச் செவிவழியாகக் கேட்டு நினைவுகூறப்பட்டவையே ஸ்ம்ருதி என்பவை. இவை எழுத்தறிவு வந்தவுடன் எழுதிவைக்கப்பட்டன.  நினைவுகூறப்ப்பட்டவையாக இருந்தாலும், சொல்பவர் தன்னையுமறியாமல் சில சொல்மாற்றங்கள் செய்யவும் வழியிருக்கிறது.  சொற்களின் பொருளும் காலத்திற்கேற்ப மாறுபடும்.  [சான்று:  அல்வா கொடுத்தல்]. 
  • மனுநீதி/தர்மம்/ஸ்ம்ருதி என்று குறிப்பிடப்படுவது ஒன்றே.  அது ஒருகாலத்தில் வாழும் முறையாக, அறநெறியாக, நினைவில் கொல்லப்பட்டதாக இருந்தது.  அதுவும் காலப்போக்கில் மாறுதல் செய்யப்பட்டது.
  • அது நூறு விழுக்காடு தள்ளத்தக்கதா என்றால், இல்லையென்றே சொல்லலாம்.  அது எத்தனை விழுக்காடு இக்காலத்திற்கு ஏற்புடையது என்பதை அதை விருப்பு-வெறுப்பின்றி ஆராய்பவர்களே எடுத்துக்கூறவியலும்.
  • மனுநீதி/தர்மம்/ஸ்ம்ருதியைப்போலவே நாம் அனைவரும் போற்றும் திருக்குறளிலும் இக்காலத்திற்கு ஏற்புடையதாக இல்லாதவையும் உள்ளன. மின்தமிழர்களே திருக்குறளிலிருந்து அப்படிப்பட்ட குறள்களை நீக்கவேண்டும் என்று முன்பு எழுதியுள்ளதும் மறுக்கவியலாது ஒன்று.
  • மனுநீதி/தர்மம்/ஸ்ம்ருதி சொல்லப்பட்டபோதோ, எழுதப்பட்டபோதோ --  அதைக்குரியவர் சொன்ன சொற்கள் துல்லியமாக எதைக்குறித்தன என்பதை இக்கால வாழும்முறை/அறநெறி/நினைவில் கொண்டவற்றால் ஒருக்காலும் துல்லியமாக அலகிடவியலாது.  சான்றாக, திருவள்ளுவர் குலம் என்று குறித்தது எதைப்பற்றி என்பதே இங்கு விவாதப்பொருளாகி நிற்கிறது.  இக்காலத்தில் வாழும் நம்மாலே இந்த ஒரு சொல்லுக்கு -- திருவள்ளுவர் எதைக்குறித்தார் என்ற முடிவுக்கு வரவியலாதபோது, எப்படி மனுநீதி/தர்மம்/ஸ்ம்ருதியில் இருக்கும் அனைத்துச் சொற்களுக்கும் [நம்மால் ஒன்றுசேர்ந்து முடிவெடுக்கவியலாத] பலசொற்களைப்பற்றி முடிவெடுக்க இயலும்?
  • இறுதியாக, இழையைத் துவங்கிய உயர்திரு சுபா அவர்கள்  எழுப்பிய வினாவக்களுக்கு வருவோம்:

//மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன்
  • உயர்திரு சுபா அவர்கள் தனது பதிவில் இரண்டாவதாக இதை எழுதியிருந்தாலும், கருத்துக் சொல்பவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றும் விரும்புவதாகவே யூகிக்க முடிகிறது.  மனுநீதி/தர்மம்/ஸ்ம்ருதியைப் பற்றி அறியாதவர்கள் கதைக்காதீர்கள் என்று உயர்திரு சுபா அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.
//மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
மனு தர்மம் இந்து சமய நூலா?//

//என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?//

  • மனுநீதி/தர்மம்/ஸ்ம்ருதி துவங்கும்போதே ஒரு கேள்வி/விண்ணப்பத்துடன் எழுகிறது.  அதை மனுவுக்கு பல முனிவர்கள் வைக்கிறார்கள்.  அவர்கள் நான்கு வர்ணங்களுக்கும், அவற்றிற்கு இடைப்பட்டவைக்கும் உள்ள புனிதமான சட்டங்களை/அறநெறிகள்/வாழும்முறையை விளங்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். 
  • மேலும், ஆன்மாவைப்பற்றிய அறிவும், அறியவொண்ணாத, ஆழங்காணவியலாத தான்தோன்றி[ஸ்வயம்பூ]யின் சட்டதிட்டங்களையும், அதன் உட்கருத்தையும் மனுதான்  அறிந்துகூறவல்லவர் என்றும் வேண்டிக்கொள்கிறார்கள்.
  • உடனே, மனு இவ்வண்டம் அத் தான்தோன்றியின் உள்ளத்தால்  படைக்கப்பட்டதிலிருந்து துவங்கி, [அதில் சொல்லப்படும் கருத்துக்கள் சில பெருவெடிப்புக் கொள்கைக்கும் ஏற்புடையதாக இருக்கிறது] மனிதன் படைக்கப்பட்டதையும்,அம்மனிதர்களில் நான்கு வண்ணத்தைச் சேர்ந்தவர்களையும் தன்  உடலைப் பிரித்துப்படைத்தார் என்றும் விளக்க ஆரம்பிக்கிறார்.
  • பல தெய்வங்களையும் [தேவர்களையும்] அத்தான்தோன்றியே படைத்தார் என்றும் மனு சொல்கிறார்.  
  • இந்து/வேதமதம்/சனாதன தர்மத்தில் அறியப்படும் பல கடவுள்களைப்பற்றியும், ரிஷிகளைப்பற்றியும் சொல்கிறார்.
  • எனவே, இது வேதமதம்/இந்துசமயம்சனாதன தர்மம் --  எப்படிப் பெயர்கொடுத்தாலும்--  தொடர்புள்ளது என்று எண்ணலாம்.  
  • ஆகையால், மனுநீதி/தர்மம்/ஸ்ம்ருதி இந்துசமய நூலாகவே அறியப்படுகிறது -- அரியப்பாடவேண்டும்.
உயர்திரு சுபா அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எனது கருத்தைப் பதிந்திருக்கிறேன்.  

இதன்றி, இக்கேள்விகளுக்குத் தொடர்பினரு  வைக்கப்படும் எக்கருத்தும் மனுநீதி/தர்மம்/ஸ்ம்ருதி முழுவதும்/பகுதியாக ஏற்புடையதா, ஏற்றுக்கொள்ளாத தக்கதா, இல்லையா என்பதுபற்றியே.  
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Nov 17, 2016, 12:11:33 PM11/17/16
to mintamil
கீழ்க்கண்ட தட்டச்சுப்பிழைகளைத் திருத்திப்படித்துக்கொள்ளவேண்டுகிறேன்.
 
மற்ற உயிரத்தை அடித்துண்பது புலியின் இயல்பு, ==> மற்ற உயிரினத்தை அடித்துண்பது புலியின் இயல்பு, 

நினைவில் கொல்லப்பட்டதாக இருந்தது  ==>   நினைவில் கொள்ளப்பட்டதாக  இருந்தது.

மனுநீதி/தர்மம்/ஸ்ம்ருதி சொல்லப்பட்டபோதோ, எழுதப்பட்டபோதோ --  அதைக்குரியவர் சொன்ன சொற்கள்  ==>  மனுநீதி/தர்மம்/ஸ்ம்ருதி சொல்லப்பட்டபோதோ, எழுதப்பட்டபோதோ -- அதற்குரியவர் சொன்ன சொற்கள்

 உயர்திரு சுபா அவர்கள்  எழுப்பிய வினாவக்களுக்கு வருவோம்:==>  உயர்திரு சுபா அவர்கள்  எழுப்பிய வினாக்களுக்கு வருவோம்:

இக்கேள்விகளுக்குத் தொடர்பினரு  வைக்கப்படும் ==>  இக்கேள்விகளுக்குத் தொடர்பின்றி வைக்கப்படும்

தட்டச்சுப்பிழைகளுக்கு வருந்துகிறேன்.
ஒரு அரிசோனன் 
============

Gowthama Sanna

unread,
Nov 17, 2016, 1:41:22 PM11/17/16
to மின்தமிழ்
ஐயா 
Seshadri Sridharan
 தவறாக எண்ண வேண்டாம். நான் எழுதியது உங்களுக்கான தனிப்பட்ட பதிலோ அல்லது குறிப்போ அல்ல. பொதுவாக எழுதினேன். முகவரி தவறாக பதிந்துவிட்டது. வருந்துகிறேன்

அன்புடன்
சன்னா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

rajam

unread,
Nov 17, 2016, 1:53:05 PM11/17/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
இரண்டு நாட்களாக மனுதர்மம் பற்றிய தனிமடல்கள் வந்தமையால் இன்று இங்கே வந்து என்னதான் நடக்கிறது என்று எட்டிப்பார்த்தேன்! ஆகா, இவ்வளவு விசயம் இருக்கா என்ற மலைப்பு.

எப்பவும்போல் இழையின் நோக்கம், இழையின் தலைப்பு எல்லாம் திசைமாறிப் போகிற மாதிரித் தெரிந்தது. பழைய கண்ணாடிக்கோளாறோ என்னவோ!

நிற்க. 

எல்லாப்பதிவுகளையும் மேலோட்டமாகப் பார்த்தேன். நிறைய நிறையப் பேசவேண்டும் என்று தோன்றியது. வீண்வம்பு வேணாம் என்று அடங்கினேன். 

++++++++++

இப்போதைக்கு இது போதும்.

1. ப்யூலர் (Buehler) என்ற ஜெர்மானியரின் மொழிபெயர்ப்பை 2009-இல் பார்க்க நேர்ந்தது. படித்து அதிர்ச்சியடைந்தேன்.

1a. அந்த மொழிபெயர்ப்பின் பிடிஎஃப் கோப்பினை இணைக்க முயன்றேன் முடியவில்லை. எப்படிச்செய்யலாம் என்று சொல்லுங்கள் செய்துபார்க்கிறேன்.  

2. மிக முக்கியமாக ... கண்ணையும் கருத்தையும் நெருடியது கண்ணன் அவர்களின் பதிவு, குடி=சாதி என்ற கருதுகோள்.

எங்கேயிருந்து இந்தக் கருத்தை அவர் பிடித்துக்கொண்டார் என்று தெரிந்தால் மேற்கொண்டு சொல்ல விருப்பம்.

மற்றபடி, சுபா தொடங்கிக் கேட்ட கேள்விக்கு மட்டுமே இந்த இழையில் பதிவிட்டால் நல்லது.


On Tuesday, November 15, 2016 at 2:12:36 PM UTC-8, Suba.T. wrote:
 
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள், 
மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
மனு தர்மம் இந்து சமய நூலா?

மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன். 

என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?
ஆம் என்றால் எந்த வகையில்?

நன்றி

சுபா

தேமொழி

unread,
Nov 17, 2016, 2:40:53 PM11/17/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com, ra...@earthlink.net


On Thursday, November 17, 2016 at 10:53:05 AM UTC-8, rajam wrote:

1. ப்யூலர் (Buehler) என்ற ஜெர்மானியரின் மொழிபெயர்ப்பை 2009-இல் பார்க்க நேர்ந்தது. படித்து அதிர்ச்சியடைந்தேன்.

1a. அந்த மொழிபெயர்ப்பின் பிடிஎஃப் கோப்பினை இணைக்க முயன்றேன் முடியவில்லை. எப்படிச்செய்யலாம் என்று சொல்லுங்கள் செய்துபார்க்கிறேன்.  


அம்மா இந்த மொழிபெயர்ப்பு இணையத்திலேயே  கிடைக்கிறது.  


The Laws of Manu
George Bühler, translator

(Sacred Books of the East, Volume 25)



இந்த 12 அதிகாரங்கள் சுட்டிகளைச் சொடுக்கியும்  படிக்கலாம்.

..... தேமொழி 

rajam

unread,
Nov 17, 2016, 2:48:07 PM11/17/16
to தேமொழி, மின்தமிழ், ksuba...@gmail.com
ஓ! மிக்க நன்றி தேமொழி!

rajam

unread,
Nov 17, 2016, 10:27:49 PM11/17/16
to mint...@googlegroups.com, தேமொழி, ksuba...@gmail.com
இதே பதிப்புத்தான் என்னிடமும் இருக்கிற மாதிரித் தெரிகிறது, தேமொழி. நன்றி.

பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் படிக்கத்தொடங்கினேன்; மகாப் பொறுமை வேண்டும்! இதற்குப் பதிலாக அசுவதித் திருநாள் இராமவர்மாவின் இசையில் மூழ்கினால் மனதுக்கு நல்லது.

தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம் … போன்ற இலக்கண நூல்களில் காணப்படும் கருத்தொழுங்கு இல்லாததால் முனைப்பாகப் படிக்க முடியவில்லை.

இந்த அற்புதப்பிறவி மனுதானே … சூத்திரர்கள் வேதம் ஓதுதலைக் கேட்டாலும் படித்தாலும் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று சொன்னவர்???

மனுஸ்ம்ருதியில் தேர்ந்தவர்கள் விளக்கவும். நன்றி!


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba

unread,
Nov 18, 2016, 12:58:40 AM11/18/16
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-11-18 4:27 GMT+01:00 rajam <ra...@earthlink.net>:
​​


இந்த அற்புதப்பிறவி மனுதானே … சூத்திரர்கள் வேதம் ஓதுதலைக் கேட்டாலும் படித்தாலும் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று சொன்னவர்???
​இது மட்டுமா.. இன்னும் இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமே... 
ஒரு முறை தமிழகத்திலிருந்து  வந்த ஒரு இளைஞர் என் புத்தக அலமாரியில் இந்த நூலை எடுத்து வாசித்து நான் கோடிட்டிருக்கும் பகுதிகளை வாசித்து விட்டுக்கேட்டார்.. இப்படியெல்லாம் கூட சிந்திக்க இவர்களுக்கு முடிந்ததா?  இது தெரியாமல் போய்விட்டதே என அதிர்ச்சியோடு ..

பலர் வாசிக்காமலேயே  மனு தர்மம். .ஒரு சமூக தர்ம நூல் என எண்ணிக் கொண்டு அதனை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உயர்த்திப் பிடிக்க முயற்சிக்கின்றனர். 


மனுஸ்ம்ருதியில் தேர்ந்தவர்கள் விளக்கவும். நன்றி!

​சிலர் இதற்கும் கூட ஒரு வகை விளக்கத்தைத் தருவார்கள்.. இதுதான் தர்மம் என்று. :-)

சுபா
 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.




--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Seshadri Sridharan

unread,
Nov 18, 2016, 6:29:13 AM11/18/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
//இதில் நான் அடிக்கடி நினைத்துச் சிரித்துக் கொள்ளுவது ஐயங்கார் பேக்கரிகளைத்தான். இனிப்புகளை விற்கும் ஐயங்கார் எப்படி பிராமணராக மனுஸ்மிருதிபடி இருக்க முடியும், அவர் சூத்திரர்தானே. இதை யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் நான் குறிப்பிடவில்லை. விதியை நினைத்துச் சொன்னேன்  - சன்னா//


பெங்களூரில் கன்னட ஐயங்கார்கள் அடுமனை நடத்தி புகழ் பெற்றார்கள்.  அவர்களை அடியொற்றி தமிழகத்தில் அடுமனைகள் திறக்கப்பட்டன ஆனால அவை ஐயங்கார்களுக்கு சொந்தமானவை அல்ல. பெங்களூர் ஐயங்கார்களை போன்றதே எம்முடையதும் என்ற கருத்தில் இவ்வாறு ஐயங்கார் அடுமனை என்று பெயர் வைக்கப்பட்டன. ஏனென்றால் பிராமணர்கள் பொதுவாக வணிகத்தில் ஈடுபடுவது கிடையாது.  


ஆரோதன் 


On Thu, Nov 17, 2016 at 10:13 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
நான் மனு அறத்தை ஏற்பவனும் இல்லை ஆதரிப்பவனும் இல்லை. 

On Thu, Nov 17, 2016 at 10:05 PM, Gowthama Sanna <g.sa...@gmail.com> wrote:
மனு தர்மத்தில் எதைப் பின்பற்றுவது..? 

வட மொழியில் பல ஸ்மிருதிகள் உள்ளன, மனு ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி என பல.. இதில் மனுஸ்மிருதியில் நீங்கள் எதைப் பின்பற்ற விரும்பினாலும் முதலில் வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் முதல்விதி. அந்த விதியை பின்பற்றுபவர்கள் என யாரையும் உலகில் உள்ள ஒரு இந்துக்களில் உங்களால் காட்ட முடியாது. 


இழையின் தலைப்பு   மனு தர்மம் என உள்ளது. இத்தனை சிமிரிதிகள் இருக்கும் போது  ஏன் மனு சிமிரிதி மட்டும் தனிப்படப் பேசப்படுகிறது.  ஏன் மனு சிமிரிதி மட்டும் அரசியல் ஆக்கப்பட்டது? ஆக்கியவர்கள் யார்? 

அம்பேத்துகரும், பெரியாருமே மனு சிமிரிதியை அரசியல் ஆக்கியவர்கள். அம்பேத்துக்கர்  பிணம் கையாளும் சண்டாளரை பற்றிய மனு சிமிரிதியின் குறிப்பை எல்லா தலித்து மக்களையும் குறிப்பதாக தவறான பரப்புரை செய்தார். அம்பேத்துக்கர் கருத்தை சற்றும் ஆராயாமல் அப்படியே தன் எழுத்திலும், பேச்சிலும் பயன்படுத்தி தமிழ் மக்களை குழம்பினார் ஈரோடு இராமசாமி.    

1, உண்மையில், காஞ்சி மடத்து தலைவர் மேற்கோள் காட்டிவிட்டார் என்பதற்காக இத்தனை சிமிரிதிகள் இருக்கும் போது மனு சிமிரிதி மட்டும் குறிப்பாக நடைமுறைப் படுத்தப்பட்டிருக்குமா? என்று ஆராய வேண்டும். 

2. பிராமணர்களின் பிணக்கை தீர்க்க, குற்றங்களுக்கு தண்டனை வழங்க அவர்களுக்கு என்று தனி அமைப்பே இருந்தது.  மேலும் பிராமணரல்லாத பிறருக்கு என்று தனியே பிராமணர் அல்லாத தீர்ப்பாளர் தனியே இருக்கும் போது சமற்கிருதம் அறியாத அவர் மனு சிமிரிதியில் உள்ள படி எப்படி தீர்ப்பு வழங்கி இருப்பார்? என்று எண்ண வேண்டும்.

பல சிமிரிதிகள் இருந்தன எனும்போதே மனு சிமிரிதியின் வீரியம் மிகக் குறைவானது என்ற ஆகிவிட்டது. இனி அதை பேசி என்ன பயன். அரசியல்  எழுத்திலும் மேடைப்பேச்சிலும் அதை கண்டபடி எழுதியம் பேசியும் ஒரு சார் மக்கள் மீது அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியது  குறைந்து விடவா போகிறது? அது ஒரு வகை குமுக அநீதி அல்லவா?

ஆரோதன் 


உதாரணத்திற்கு நீங்கள் பிராமணராக இருக்க விரும்பினால் அவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு பல கட்டுப்பாடுகளை மனுஸ்மிருதி விதிக்கிறது. அவற்றை ஒரு பிராமணன் கடைபிடிக்கத் தவறினால் அவன் சூத்திரனாக வர்ணம் இறக்கப்படுவான். 

அதில் உங்களுக்குப் புரியம்படி இரண்டு விதிகளை கூற முடியும். கடல் கடந்து ஒரு பிராணன் போகக்கூடாது, இனிப்பு விற்கக்கூடாது, என்பன போன்ற விதிகள். இவற்றை செய்தால் அவன் உடனே சூத்திரனாகி விடுவான். அவற்றிற்கு நிவாரணம் இந்த ஜென்மத்திலேயும், அடுத்து வரும் அவனது தலைமுறைகளிலும் உண்டு. சிலவற்றிற்கு விதி விலக்குகளே கிடையாது.

இப்போது கடல் கடந்து வாழும் பிராமணர்கள் மனுஸ்மிருதி விதிபடி சூத்திரர்களே. எனவே மனுஸ்மிருதியை கடைபிடிக்க வேண்டும் என விரும்பினால் இதுபோன்ற அம்சங்களை பார்க்க முடியுமா என்று யோசியுங்கள். அதற்கு மனுஸ்மிருதியை படியுங்கள்.

அன்புடன்
சன்னா

On 17 November 2016 at 21:52, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
n Thu, Nov 17, 2016 at 2:43 PM, Thenee MK <ipohs...@gmail.com> wrote:
Could you please explain the practical value of the said verse.

 the non-Aryans, following the precepts of Tantra, did not recognize any distinction among people. The identity of everyone was the same: all belonged to the same family, the family of Shiva

The verse has been reproduced from a tantra. Could you please explain the Ajinanan Bodhinii Tantra belongs which one of the religion in Hinduism.

 Here it is necessary to remember that Tantra is not a religion, but a way of life, a system of sádhaná. The fundamental goal of this sádhaná is to awaken the dormant jiivashakti [unit force], known as kulakuńd́alinii, and, after elevating it stage by stage, to merge it in Brahmabháva [Cosmic Consciousness]. Tantra is a science of spiritual meditation or sádhaná which is equally applicable to anyone no matter what their religious affiliation might be. Tantra is certainly older than the Vedas. Just as the shlokas or mantras of the Vedas were handed down from guru to disciple in a genealogical tradition, the Tantra sádhaná of the Mongolo-Dravidian society was handed down from guru to disciple hereditarily. The Vedas are theoretical – full of ritualistic ceremonies and formalisms. It would be incorrect to regard Tantra as a more recent version of those Vedic rituals: Tantra’s esoteric practices had long been known in the society of sádhakas. Its theoretical portion was not as elaborate as that of the Vedas, which took years and years to memorize.

Can you also explain at the same time whether above verse is in accordance with Manu Smrithi or Manu Smrithi departs from the above stated value.



Thanking in advance.

தேனீ  

The savikalpa samádhi [trance of determinate absorption – or vacuity] of the Hindu Tantras is the prabhásvara shúnyatá [luminous vacuity] of the Buddhists. The Hindus’ nirvikalpa [trance of objectless or indeterminate absorption – or vacuity] is the Buddhists’ vajra shúnyatá [complete vacuity]. And the goddess of vajra shúnyatá, of the unmanifest Prakrti, is Vajraváráhii, D́ombii, Naerátma Devii or Naerámańi in the language of the Buddhists. The different stages of savikalpa samádhi related to the upward movement of the kulakuńd́alinii are called sálokya [within the same loka], sámiipya [closest proximity], sárupya [identity], sarśt́hi [the stage between savikalpa and nirvikalpa], etc., in the Hindu Tantras; and in the Buddhist Tantras, viśáyánanda [objective bliss] in the nirmáńa cakra, paramánanda [supreme bliss] in the dharma cakra, virámánanda [intermittent bliss] in the sambhoga cakra and sahajánanda [absolute bliss] in the mahásukha cakra. In this mahásukha cakra, Naerátma Devii is Bhagavatii Prajiṋá Sarveshvarii, an embodiment of sahajánanda [bliss]. This sahajánanda is the Brahmánanda [absolute bliss] of the Hindu Tantras.
  

Thevan

unread,
Nov 18, 2016, 6:29:49 AM11/18/16
to mint...@googlegroups.com
மனு ஸ்மிருதியையும் அர்த்த சாஸ்திரத்தையும் ஒப்பிட்டு எழுதினால் நன்றாக
இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் இரண்டையும் முழுவதுமாக வாசிக்கவில்லை என்பதால் என்னால் எழுத இயலாது.
ஆனால் இரண்டிலும் ஒரே தன்மை தெரிவதாக காண்கிறேன்.

Gowthama Sanna

unread,
Nov 18, 2016, 11:41:54 AM11/18/16
to மின்தமிழ்
சேஷாத்திரி அவர்கள் 

அம்பேத்துகரும், பெரியாருமே மனு சிமிரிதியை அரசியல் ஆக்கியவர்கள். அம்பேத்துக்கர்  பிணம் கையாளும் சண்டாளரை பற்றிய மனு சிமிரிதியின் குறிப்பை எல்லா தலித்து மக்களையும் குறிப்பதாக தவறான பரப்புரை செய்தார். அம்பேத்துக்கர் கருத்தை சற்றும் ஆராயாமல் அப்படியே தன் எழுத்திலும், பேச்சிலும் பயன்படுத்தி தமிழ் மக்களை குழம்பினார் ஈரோடு இராமசாமி.    

இதைப் பற்றி என்ன சொல்வது. அம்பேத்கர் எங்கே அப்படி சொன்னார் என்று காட்டினால் நன்றாக இருக்கும். தலித்துகளைப் பற்றி அம்பேத்கர் சொன்ன கருத்திற்கும் பெரியார் சொன்ன கருத்திற்கும் தொடர்பே கிடையாது. தயவு செய்து அம்பேத்கரை படித்துவிட்டு விமர்ச்சனம் செய்தால் நன்று. அவர் விமர்ச்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. உங்களின் ஆக்கப்பூர்வமான விமர்ச்சனம் எம்மை போன்றவர்களுக்கு ஒளியாக இருக்கட்டும்.

சன்னா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

rajam

unread,
Nov 18, 2016, 2:53:22 PM11/18/16
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
ஆமாம், ஆமாம். இந்த ‘மனுதர்ம' அணுக்கத்தொண்டர்கள் எல்லாரையும் என் அம்மா அடிக்கடிப் புலம்பியதைப் போல … ஒரு தண்ணியில்லாக் காட்டுலெ தன்னந்தனியா, பெண் துணையில்லாமல், தவிக்க விடணும்! அப்போ வெளிப்படும் அவர்களின் உண்மையான ஃபிலாசஃபி!

எனக்குப் புரிந்த அளவில் … ஒரு வைதிகப் பிராமண ஆடவனுக்கு வசதியாகச் சொல்லப்பட்டதே மனுஸ்ம்ருதி. பெண், பசு, பிற மக்கள் எல்லாரும் அவனுக்குக் கீழ்நிலையில்

என்ன அழகான கற்பனை … தான்தோன்றியாக உருவான ஒரு பிம்பத்தின் முகத்தில் ஒரு குலமும், தோளில் ஒரு குலமும், தொடையில் ஒரு குலமும், பாதங்களில் ஒரு குலமும் தோன்றியதாம்!!!  இதைப் பற்றிய ஒரு படத்தைப் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆசிரியரின் அறையில் பார்த்தபோது திடுக்கிட்டேன். அது ஏதோ புருஷசூக்தம் என்றோ என்னவோ சொன்னார், புரியவில்லை. வாந்தி வந்தது. 

++++++++++

நல்லவேளை, என் இரண்டு தாத்தாக்களும் இந்தச் சகதியில் விழவில்லை. ஒரு தாத்தா காந்திவழி நின்று அவர் ஊரில் “ஆலயப்பிரவேசம்” நடத்தினார். இன்னொரு தாத்தா தன் மகனுக்குக்கூடச் சிராத்தம் செய்யாமல் விரக்தியுடன் வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டார். என் உறவுகளிலோ பலவகைக் கலப்பு.  

++++++++++

புரந்தரதாசர் என்ற கன்னடப் பாடகரின் ஒரு பாடலை இளங்கோ இராமவர்மா விளக்கும்போது சொல்கிறார்: 'ஹிண்டு‘ என்றால் ‘சங்கம்’ என்று. இதோ இந்த விழியத்தில் கேட்கலாம் (1:59 நொடியிலிருந்து): https://www.youtube.com/watch?v=E1fFWHObI-E 

++++++++++

சுபாவின் அடிப்படைக் கேள்வி:
///என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?
ஆம் என்றால் எந்த வகையில்? ///

இதற்குச் சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். 


To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Kannan

unread,
Nov 18, 2016, 7:58:14 PM11/18/16
to mint...@googlegroups.com

On Nov 18, 2016 12:23 AM, "rajam" <ra...@earthlink.net> wrote:
>
2. மிக முக்கியமாக ... கண்ணையும் கருத்தையும் நெருடியது கண்ணன் அவர்களின் பதிவு, குடி=சாதி என்ற கருதுகோள்.
>
> எங்கேயிருந்து இந்தக் கருத்தை அவர் பிடித்துக்கொண்டார் என்று தெரிந்தால் மேற்கொண்டு சொல்ல விருப்பம்.
>

அதுவொரு புரிதலுக்காக இட்டது. உங்கள் கவனம் பெறும் என்று தெரியும். குடிமை, ஒழுக்கம் என்று பேசும் போதெல்லாம் வள்ளுவன் தமிழ்க் குமுகாயக் குடிமை கெட்டுவிடக்கூடாது என்கிறான். குறிப்பாக பார்ப்பனர் ஒழுக்கம் பற்றி அக்கறை கொள்கிறான். இதுவரை பார்ப்பான் என்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. அன்றையப் பார்ப்பான்தான் இன்றையப் பார்ப்பானும்.

மேலும், சங்கம் பேசும் ஆய்குடி ,ஆவிகுடி,எவ்விகுடி,பாரிகுடி,மலையன் குடி ,உதியன் குடி ,இரும்பொறை குடி ,திரையர்குடி ,மறவர்குடி,மழவர் குடி,கொங்கர் குடி ,மள்ளர் குடி ,பாணர்குடி ,பொருநர் குடி , குறவர் குடி ,எயினர் குடி என்று பல்வேறு குடிகள் என்பவைதான் தமிழகம் காணும் இன்றைய ஜாதிகளாக இருக்கின்றன என்பது தெளிவு.

இல்லையெனில் பள்ளர்,பறையர்,கோனார்,குறும்பர்,நாடார், கவுண்டர்,உடையார் ,மூப்பனார் ,வன்னியர், செட்டியார்,வெள்ளாளர் ,முத்தரையர்,கள்ளர்,மறவர்,அகமுடையார் இவர்களின் தோற்றம் என்ன? சமீபத்திய இராஜராஜ சோழன் இழையைக் கவனிக்கவும். ஒவ்வொரு ஜாதியும் தம் தொன்மை பற்றிப் பேசுகின்றன. நான் என் இடுகையில் நான்கு குடிகள் பற்றிய மேற்கோள் காட்டியுள்ளேன்.

நான் ஏற்றத்தாழ்வு பற்றி இங்கு பேசவில்லை. வள்ளுவன் கண்ட தமிழ்க் குமுகாயம் அதன் அமைப்பில் இப்போது காணும் தமிழ்ச் சமுதாயத்தை விட வெகுவாக மாறுபட்டதா?

தமிழின் சீரிளிமைத் திறம் பற்றி வியக்கிறோம். மொழி மாறவில்லை தமிழன் மாறிவிட்டான் என எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.

விளக்கினால் புரிந்து கொள்ள முயல்வேன்.

நா.கண்ணன்

rajam

unread,
Nov 18, 2016, 9:52:40 PM11/18/16
to mint...@googlegroups.com
ஹ்ம்ம்ம் … சுருக்கமாகச் சொல்லப்பார்க்கிறேன்.

///மேலும், சங்கம் பேசும் ஆய்குடி ,ஆவிகுடி,எவ்விகுடி,பாரிகுடி,மலையன் குடி ,உதியன் குடி ,இரும்பொறை குடி ,திரையர்குடி ,மறவர்குடி,மழவர் குடி,கொங்கர் குடி ,மள்ளர் குடி ,பாணர்குடி ,பொருநர் குடி , குறவர் குடி ,எயினர் குடி என்று பல்வேறு குடிகள் என்பவைதான் தமிழகம் காணும் இன்றைய ஜாதிகளாக இருக்கின்றன என்பது தெளிவு.///

என்ன கண்ணன், சரமாரியாகப் பொழிகிறீர்களே! எங்கேயிருந்தோ ஒத்தி ஒட்டிப் போட்டமாதிரியாகத் தெரிகிறதே???

சங்க இலக்கியத்தில் பொருநர் குடியா? பாரி குடியா? திரையர் குடியா? இவ்வளவுநாள் எனக்குத் தெரியாமல் போச்சே ச்சே ச்சே என்று அலமந்துபோனேன்!

கூகிலில் “இரும்பொறை குடி” என்று தேடியபோது … "Paari Saalan - தமிழ்ச்சாதியே! நீ அழியத்தான் …” என்ற தொடுப்புக்குக் கீழே இதே வரிகள் (ஆய்குடி ,ஆவிகுடி,எவ்விகுடி,பாரிகுடி, மலையன் குடி ,உதியன் குடி ,இரும்பொறை குடி,திரையர்குடி ,மறவர்குடி,மழவர் குடி, கொங்கர் குடி …) காணுகின்றன! 

ஆகவே, இது கண்ணனின் சொந்த அறிவின் தேட்டம் என்று நான் நம்பவில்லை.

எனக்கு முகநூல் பழக்கமில்லை.

++++++++++

சரி, மின்தமிழில் இந்த இழை “மனு தர்மம் பற்றி” சுபா தொடங்கியது. ஆகவே இங்கே தமிழகச் “சாதி” பற்றிய அலசல் பொருந்தாது. அதற்கெனத் தனியிழை ஒன்றை நானே கூடிய விரைவில் தொடங்குகிறேன்.

[இன்னும் சில நாளைக்கு இணையப்பக்கம் வர இடையீடு இருக்கும். எங்கள் ஊரில் "நன்றி தெரிவிக்கும் நாள்” வரப்போகிறது. 40+ அகவையான, முப்புரிநூல் போடாத, ஒரு பிரம்மச்சாரியோடு என் பொழுது இனிதாகக் கழியும். ஆம், நாங்கள் மனுதர்மத்துக்கு அப்பாற்பட்டுக் கடல்கடந்த பிராமணர்கள். அண்மையில் இந்தாலஜிக்குழுமத்திலிருந்து அறிந்துகொண்டேன். கடல் கடந்த பிராமணனுக்குத் தனிச்சுட்டுப்பெயர் உண்டு என்று. என் மகனுக்கு நாங்கள் முப்புரிநூல் சடங்கு செய்யவில்லை. ஆகவே அவன் மனுதர்ம விதிப்படிப் 'பிராமணனா’ என்று எனக்குத் தெரியாது!!! ;-) ]

"கண்ணா நீயுமா?” என்று நான் அலறும் வகையில் தயவுசெய்து secondary sources இலிருந்து எதையும் ஒத்தி ஒட்டிப் போடவேண்டாம். போட்டால் யார் சொன்னது என்று தெளிவாகச் சொல்லவும். நன்றி!

நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு “*குடி”க்கும் இலக்கியச் சான்று தரவேண்டும்! முகநூலை நம்பினால் என்னோடு உரையாட முடியாது! ;-)

++++++++++

இழையில் சற்றே குறுக்கிட்டதுக்கு மன்னிக்கவும் நண்பர்களே.

நன்றியுடன்,
ராஜம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.

Seshadri Sridharan

unread,
Nov 19, 2016, 3:48:33 AM11/19/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-11-18 22:11 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
சேஷாத்திரி அவர்கள் 

அம்பேத்துகரும், பெரியாருமே மனு சிமிரிதியை அரசியல் ஆக்கியவர்கள். அம்பேத்துக்கர்  பிணம் கையாளும் சண்டாளரை பற்றிய மனு சிமிரிதியின் குறிப்பை எல்லா தலித்து மக்களையும் குறிப்பதாக தவறான பரப்புரை செய்தார். அம்பேத்துக்கர் கருத்தை சற்றும் ஆராயாமல் அப்படியே தன் எழுத்திலும், பேச்சிலும் பயன்படுத்தி தமிழ் மக்களை குழம்பினார் ஈரோடு இராமசாமி.    

இதைப் பற்றி என்ன சொல்வது. அம்பேத்கர் எங்கே அப்படி சொன்னார் என்று காட்டினால் நன்றாக இருக்கும். தலித்துகளைப் பற்றி அம்பேத்கர் சொன்ன கருத்திற்கும் பெரியார் சொன்ன கருத்திற்கும் தொடர்பே கிடையாது. தயவு செய்து அம்பேத்கரை படித்துவிட்டு விமர்ச்சனம் செய்தால் நன்று. அவர் விமர்ச்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. உங்களின் ஆக்கப்பூர்வமான விமர்ச்சனம் எம்மை போன்றவர்களுக்கு ஒளியாக இருக்கட்டும். - சன்னா


நீங்கள் முன்னம் கொடுத்த ஒரு அம்பேத்துகரின் தொடுப்பில் இருந்து எடுத்தது சன்னா. இது பிணம்  கையாளுவோரை  குறிப்பாக சொல்லுகிறது. அப்படி இருந்தும் தலித்து மக்கள் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டதற்கு இதை மேற்கோளாக  அம்பேத்துக்கர் காட்டியது ஒரு பெரும் மோசடி.  

 Manu says: Near well-known trees and burial-grounds, on mountains and in groves, let these (tribes) dwell, known (by certain marks), and subsisting by their peculiar occupations. "X. 51. But the dwellings of the Chandalas and the Shvapakas shall be outside the village, they must be made Apapatras and their wealth (shall be) dogs and donkeys. X. 52. Their dress (shall be) the garments of the dead, (they shall eat) their food from broken dishes, black iron (shall be) their ornaments and they must always wander from place to place. X. 53. A man who fulfils a religious duty, shall not seek intercourse with them; their transactions (shall be) among themselves and their marriages with their equals. X. 54. Their food shall be given to them by others (than an Aryan giver) in a broken dish; at night they shall not walk about in village and in towns. X. 55. By day they may go about for the purpose of their work, distinguished by marks at king's command, and they shall carry out the corpses (of persons) who have no relatives; that is a settled rule. X. 56. By the King's order they shall always execute the criminals, in accordance with the law, and they shall take for themselves the clothes, the beds, and the ornaments of (such) criminals.

X  50 குறிப்பை எடுத்துவிட்டதால் இது பிணம் கையாள்வோரை பற்றியது என்பது படிப்பவருக்கு தெரியவராது 

ஆரோதன் 

பித்துக்குளி

unread,
Nov 19, 2016, 5:07:10 AM11/19/16
to மின்தமிழ்

Roman Catholics accepted Manusmriti as their code. The Catholic priest Constantine Beski, called as Veeramamunivar(1680-1747) the contemporary of Zieganbalg was a Christian Brahmin who lived like a Hintholic Saint (Hindu + Catholic = Hintholic). Robert D’ Nobly who served in Madurai Diocese of the Catholic Church in 1606 was a Hintholic person who vigorously followed Hindu Varna dharma and untouchability. He worked against Dalit people and there was a criminal case on him accusing him of the murder of a Dalit Sexton. The case was filed at Thanjavur. This reference was made by Prof. Gajendhiran Ayyathurai (Dept of Anthropology, Columbia University), who is doing his research in Columbia University. This issue has been debated widely now. Many walked out from Roman Catholic order refusing to adhere to this saint’s caste discrimination and joined Protestant churches. Later, with Rajanaickan’s initiative many came out to the Protestant church and one among them is Sathyanathan. He served as Ubadhesigar of Tharangambadi church. Prof. Lawrence accuse Veeramamunivar who was known as father of Tamil format for not translating the Holy Bible in Tamil as he believed the Manu Dharma that says, Sudhras should not read Vedas. He also quotes Zieganbalg’s accusation in one of his letters about Veeramamunivar for his misinterpretation of Tamil language in Palm scripts. The reasons for quoting all these references are – 

  1. In the name of serving Tamil, the Brahmins and modern Brahmin of Vellalars Sanskritised the Holy Bible.
  2. With concepts like school on phial, funding and the like, the modern Brahmin of Vellalars and Pillaimars inculcated caste feelings and caste domination in the Church’s mission and administration.
  3. The Protestant Mission slowly got into the Brahminical order as the German missionaries were not able to understand the complexity or Confusion of a caste based social order of Indian society. 
​அம்பேத்காரும் பெரியாரும் ஐயோ பாவம்
அவங்களுக்கு முன்னரே மனு அரசியல் தொடங்கிவிட்டது
சைபர் சுப்புடு

Gowthama Sanna

unread,
Nov 19, 2016, 6:52:11 AM11/19/16
to மின்தமிழ்
கொத்திப் பொறுக்குதல் தகாது..

கொத்திப் பொறுக்கும் ஆய்வு ((Chicken Picking) என்ற ஒரு முறை உள்ளது. தனக்கு தெரிந்த அல்லது நம்பும் செய்திக்கு ஏற்றார்போல் தகவல்களை மட்டும் எடுத்துப் போட்டு தம்மை நிறுவ முயல்வது. ஒரு முழுமையான பார்வைக்கு போக முடியாதவர்களின் முயற்சியது. 

அப்படித்தான் திரு.சேஷாத்திரி உள்ளிட்ட சிலரின் வாதம்.
தலித்துகள் என்றாலே பிணமும் சுடுகாடும் மட்டுமே அவருக்கு நினைவுக்கு வருகிறது. இது என்னவகையான மனமோ தெரியவில்லை. அம்பேத்கரின் புத்தகத்தைப் படிப்பதற்கு அவ்வளவு ஒவ்வாமை இருந்தால் அவர் காட்டும் மேற்கோள்களை மட்டும் படிப்பது ஏனோ. 

சண்டாளருக்கும் தலித்துகளுக்கும் என்ன தொடர்பு.. அம்பேத்கரை ஓரளவு படித்தால்தான் அதையும் புரிந்துக்கொள்ள முடியும். முன்சாய்வு இருப்பவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் இப்படிப்பட்ட கொத்திப் பொறுக்கி கோர்க்கும் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் என்னிடத்தில் இல்லை.

சன்னா

rajam

unread,
Nov 19, 2016, 4:25:55 PM11/19/16
to mint...@googlegroups.com, G Sannah, Suba
அன்புள்ள திரு சன்னா, வணக்கம். 

எனக்குள்ள சில மடமையான கேள்விகளுக்கு நீங்கள்தான் துல்லியமான விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

1. நான் தமிழகத்தில் இருந்தவரை (1975) ‘தலித்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதில்லை. இந்தச்சொல்லின் பொருள் என்ன? இது எப்போது ஏன் தமிழகத்தில் புகுந்தது? என் கேள்வி இழையின் தலைப்பிற்குத் தடையானால் தனிமடலில் பதில் அனுப்பவும். நன்றி.

2. இந்த மகா அற்புதப்பிறவி மனுவும் ஒருநாள் செத்திருக்கவேண்டும், இல்லையா? இல்லை, ஓர் ‘அமானுஷ்யப்’ பிறவியாக, தான்தோன்றியாக உலவும் வரம் பெற்று உலவுகிறாரா? 

2a. அந்த மனுவின் உடல் செத்தபின் … இடுகாட்டுக்கோ சுடுகாட்டுக்கோ அதை எடுத்துச்சென்று அந்தப் பிணத்தைக் கையாண்டவர் எந்தச் “சாதி”யினர் என்று தெரியவருகிறதா? அந்தப் பரமபுருஷணின் எந்தப் பகுதியிலிருந்து கிளைத்த ‘குலம்/சாதி’ மனுவின் செத்த உடலைப் புதைத்தது/எரித்தது என்று தெரியவருகிறதா?

நன்றியுடன்,
ராஜம்



To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Gowthama Sanna

unread,
Nov 20, 2016, 2:10:40 AM11/20/16
to rajam, மின்தமிழ், Subashini kanagasundaram
அன்புள்ள ராஜம்அம்மையாருக்கு வணக்கம்.

உங்களது கேள்விகளுக்கு என்னால் முடிந்த அளவில் விடையளிக்க முனைகிறேன்.

1. தலித் என்கிற வார்த்தை 1940களிலேயே மராட்டியத்தில் புழக்கத்திலிருந்த வார்த்தை. தலித் சமிதி என்கிற இயக்கம் அன்றைக்கு இருந்தது. ஆனால் அது எவ்வளவு வீச்சாக செயல்பட்டது என்பது குறித்த விவரங்கள் என்னிடம் இல்லை. சில வேளை அம்பேத்கரின் இயக்கத்தைக்கூட அது எதிர்த்து செயல்பட்டது. ஆயினும் 1972ம் ஆண்டு தலித் என்கிற சொல் திரும்ப வரலாற்றில் தோன்றிது. அமெரிக்காவில் கருஞ்சிறுத்தைகள் இயக்கம் (Black Panthers) ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியும், அது நிறவெறியை எதிர்த்து தீவிரமாக போராடியது, அந்த இயக்கத்தின் தாக்கத்தினால் மகாராட்டிரத்தில் 1972ஆம் ஆண்டு  தோன்றியது தலித் பாந்த்தர்ஸ் இயக்கம் (தலித் சிறுத்தைகள்). அதை முன்னெடுத்தவர்கள் மராட்டியத்தில் இடது சாரி மற்றும் அம்பேத்கரின் சிந்தனைகளால் உந்தப்பட்ட அறிவுஜீவிகள், பேராசிரியர்கள் மற்றும் போராட்ட குணமுள்ள இயக்கவாதிகள். இவர்கள் பெரும்பாலும் பட்டியல் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவர்களில்  இடதுசாரி சிந்தனைக் கொண்ட பார்ப்பனர்கள் மற்றும் இடைச்சாதியினர் சிலர் இருந்தனர். தலித் என்கிற சொல்லுக்கு அவர்கள் கொடுத்த பொருள்.. மண்ணின் மைந்தர்கள், மண்ணில் தோன்றியர்கள், வீழ்த்தப்பட்டவர்கள் என்கிற பொருளில் அதை கையாண்டனர். இந்த இயக்கம் தீவிரமாக வளர்ந்து ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் இயக்கமாக மாறியது. பெண்கள் அதன் பின் திரண்டனர். அந்த இயக்கத்தின் தீவிரத்தினால் தலித் என்கிற சொல் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்குப் பரவியது. தொடக்கத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சொல்லாக இருந்த தலித் எனும் அரசியல் சொல்லாட்சி, நாளடைவில் குறிப்பிட்ட சாதிக்கான சொல்லாக குறுக்கப்பட்டது. அதன் பின் நீண்ட வரலாற்று கீழறுப்புகள் இருக்கின்ற. அவற்றை பின்னொரு நாளில் பார்த்துக் கொள்ளலாம். எனவே தலித் பற்றின இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்.

2, இனி மனுவுக்கு வருவோம்... இங்கே குறிப்பிடும் குறிப்புகள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்குமாயின் மற்றவர்களுக்கு உதவும் என நினைக்கிறேன். எனவே தவறாக எண்ண வேண்டாம்.

- என்னுடைய பதில்களை படித்த சிலரிடத்தில் ஒருவித மூட நம்பிக்கை இருப்பதைப் பார்க்கிறேன். சமஸ்கிருத இலக்கியங்கள் அத்தனையும் பார்ப்பனர்களின் படைப்பு போல நம்புகிறார்கள், அதானால் மதி திருகி மோதுகிறார்கள்.

-  இந்தோ ஆர்ய இலக்கியங்கள் எனப்படும் வேதம், ஸ்மிருதி உள்ளிட்ட அடிப்படை இலக்கியங்களில் பார்ப்பனர்களின் பங்களிப்பு இல்லை. உபநிடதங்களில் மட்டுமே அவர்களின் பங்களிப்பு தொடங்குகிறது. அதாவது பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதத் தொடங்கியதை கொண்டு இந்த மூட நம்பிக்கைக்கு வந்திருக்கிறார்கள்.

-  பண்டைய இந்திய சமூகத்தில் நாகர்கள் மற்றும் ஆரியர்கள் என இரு பெரும் பண்பாட்டு சமூக பிரிவுகள் இருந்தன. ஆரியர்களில் ரிக் வேத ஆரியர்கள், அதர்வண வேத ஆரியர்கள் (பசுவை போற்றுபவர்கள்) என இருபிரிவுகள். இவர்கள் எப்போதும் மோதிக்கொண்டிருந்தார்கள்.

- இந்த ஆர்யர்களில் முதலில்  மூன்று வர்ண அமைப்புகள் இருந்தன அதன்படி பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர். பிற்காலத்தில் சத்திரியர்களிலிருந்து நான்காம் வர்ணமான சூத்திரர் தோன்றினர். இவர்களை வர்ணாஸ் என்று அழைத்தனர் அதாவது வர்ணாஸ்ரமம். இவற்றிற்கு வெளியே இருப்பவர்கள் அவர்ணாஸ். இந்த அவர்ணர்களும் வர்ண அமைப்பில் திரிந்த அல்லது கலப்பு வர்ணத்தவர்களால் உருவானவர்கள். இந்த அமைப்பைப் பற்றின குறிப்பு ரிக் வேதம் புருஷ சுக்தத்தில் முதன் முதலில் காணப்படுகிறது. ஆனால் அந்த புருஷ சுக்தம் இடைச்செறுகல் என பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

-  எனவே வர்ணத் தோற்றம் பற்றி மனு விளக்கியதையே அனைவரும் பேசத் தொடங்கினர். மனுவின் உண்மையான பெயர் சுமதி பார்க்கவா. இவர் ஒரு வைசியர். கிமு 185ல் புஷியமித்திர சுங்கன் மௌரிய அரசாட்யை ஒழித்து தமது தலைமையில் சுங்கர் வம்சத்தை நிறுவினான். இந்தியாவின் முதல் பிராமணர்களின் அரசு அது. இது சமூக குழப்பத்திற்கு வித்திட்டதால் அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது, அதன் அடிப்படையில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் உச்சமாக சுமதி பார்க்கவா மனு ஸ்மிருதியை எழுதினார் அல்லது தொகுத்தார். அது கிபி 100 முதல் கிபி 200க்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கலாம்.

- ஏன் மனு கண்டிக்கப்படுகிறார். தமது தொகுப்பில் அவர் இந்தோ ஆர்ய சமூகத்தின் பிராமணர்களுக்கு சமூகத்தின் உச்ச நிலையை உறுதிப்படுத்த ஏராளமான விதிகளை அதில் சேர்த்தார். அதே நேரத்தில் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் ஏராளமான தடைகளை விதித்தார். இதுதான் அடிப்படைக் காரணம். இதற்கு காரணம் இருக்கிறது. மனு ஒரு வைசியர் அதாவது வியாபாரி வர்ணத்தவர். வியாபர வர்க்கம் எப்போதும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருக்கிறதல்லவா அதுதான் அங்கேயும் நிகழ்ந்தது. ரிக் வேதத்தில் பெண்களுக்கு இருந்த பல உரிமைகளையும் மனு குழிதோண்டிப் புதைத்தார்.

- சரி இந்த இழையில் கேட்கப்படும் கேள்விக்கு வருவோம்.

தீண்டாமை பற்றி - மனு கருத்து என்று ஏதுமில்லை. அவர் தீட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார். ஏனென்றால் அவர் காலத்தில் தீண்டாமை என்கிற கருத்தாக்கமே உருவாகவில்லை.

• சண்டாளர்களுக்கும் தலித்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படியானால் சண்டாளர்கள் யார்..?
‘இது பற்றி மனு தரும் விளக்கம்.. சூத்திர தந்தைக்கும் பிராமணத் தாய்க்கும் பிறந்தவன் சண்டாளனாகிறான். இந்த கலப்பு மணம் வர்ண அமைப்பினை சிதைத்துவிட்டதால் இவர்களுக்கு பிறந்த மகன்/மகளுக்கு தனித்த ஏற்பாடு அவசியமாகிறது. அதை அனுமதித்தால் அது வழக்கமாகி வர்ண அமைப்பு முற்றிலும் சிதைந்துப் போகும் எனவேதான், சண்டாளர்களை வர்ண அமைப்பிலிருந்து தள்ளி வைப்பதுடன் அவர்களை கீழான நிலையில் வைப்பதை மனு விரும்பினார். எனவே சண்டாளர்கள் சுடுகாட்டின் ஓரம் வசிக்க வேண்டும். உடைந்த பானையில் உண்ண வேண்டும். நாயால் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியை சாப்பிடலாம் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்தார்.

• எனவே மனு செத்துப்போனவர்தான். அவர் இறந்திருந்தால் அவரது பிணத்தை சண்டாளர்தான் எரித்திருக்க வேண்டும் என்பது உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் சண்டாளர்கள் பிணத்தை எரிக்க வேண்டும் என்பது மனுவின் விருப்பமாக இருந்தாலும், எல்ல நேர்வுகளிலும் அப்படி நடக்கவில்லை. பல சண்டாளர்கள் மிகச்சிறந்த மேதைககளாக, குறுநில மன்னர்களாக இருந்திருக்கின்றனர். சண்டாளர் பெண்கள் பேரழகிகளாக இருந்திருக்கிறார்கள். அதனால் அவர்களை மணம் புரிந்துக் கொள்ள மன்னர்களும் விரும்பினார்கள் என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. சண்டாளர்கள் ஆர்ய பண்பாட்டினைச் சேர்ந்தவர்கள் என்பது இதன் மூலம் விளங்கும்.

• மனுவின் பிணத்தை ஏன் எரித்திருக்க வேண்டும் ஏ னென்றால் இந்தோ ஆர்ய சமூகம் புதைக்கும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை. அது நாகர்களின் பழக்கம்.

• மனு குறிப்பிடும் பிராமணருக்கும் தற்கால பிராமணருக்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியும் என்று நம்புவது எப்படியோ, அப்படியே, சண்டாளருக்கும் தலித்துகளுக்கும் உள்ள தொடர்பு இருக்கும் என நம்புவதும் ஓர் அறியாமை.

எனவே.. மேற்கண்ட விளக்கங்கள் சிறு ஒளிக்கீற்றை வழங்கும் என நம்புகிறேன். இந்த மனுவுக்கும் மனு நீதி சோழனின் மனுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  தங்களை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்ளும் சிலர் இந்தோ ஆர்ய பண்பாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொள்வது ஒரு நகைச்சுவை.

அன்புடன் 
கௌதம சன்னா

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Gowthama Sanna

unread,
Nov 20, 2016, 2:20:19 AM11/20/16
to rajam, மின்தமிழ், Subashini kanagasundaram
ஒரு சிறு இணைப்பு.. தலித்துகள்..

அப்படியானால் இன்றைக்கு தலித் என்று அழைக்கப்படுபவர்கள் யார்...

நான் முன்பே சொன்னதுபோல பண்டைய சமூகத்தில் நாகர்கள் மற்றும் ஆரியர்கள் என இரண்டு பிரிவுகள் சேர்ந்தல்லவா.. அதில் நாகர் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைய தலித்துகள். ஆர்ய பண்பாட்டை ஏற்றுக்கொண்டவர்களும் இருந்தார்கள். அவரகளில் முக்கியமானவர் வியாசரும் வால்மீகியும். இவர்கள் இருவரும் இன்றைய சாதி அடிப்படையில் தீண்டத்தகாதவர்களே. அதாவது தலித்துகளே..

அன்புடன்
கௌதம சன்னா

Jayabalan Mavanna

unread,
Nov 20, 2016, 2:52:58 AM11/20/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
  
வணக்கம். 
துரதிஷ்டவசமாக மனு தர்மம் இந்திய திருமணச் சட்டத்தில் அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஒரு சார்பினருக்குச் சாதகமாக வடிவமைக்கப் பட்டது என்பதில் ஐயமில்லை.

 Manu, Marx and Gandhi என்ற நூலைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

எம்.டி. ஜெயபாலன்

On Wednesday, November 16, 2016 at 3:42:36 AM UTC+5:30, Suba.T. wrote:
 
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள், 
மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
மனு தர்மம் இந்து சமய நூலா?

மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன். 

என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?

Gowthama Sanna

unread,
Nov 20, 2016, 3:32:06 AM11/20/16
to மின்தமிழ்
இந்து திருமணச் சட்டம் என்பது இந்து சட்ட மசோதாவின் (Hindu code bill) ஒரு பகுதியே.. 
எனவே இந்து சட்ட மசோதா விவாதங்களைப் படியுங்கள். இந்திய திருமணச் சட்டத்திற்கு மனு ஸ்மிருதி மட்டும் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது தெரியும்.

அன்புடன்
சன்னா

--

Suba

unread,
Nov 20, 2016, 5:17:16 AM11/20/16
to Jayabalan Mavanna, மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-11-20 8:52 GMT+01:00 Jayabalan Mavanna <jayabalan...@gmail.com>:
  
வணக்கம். 
​..

 Manu, Marx and Gandhi என்ற நூலைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

​இந்த நூலை மின்னாக்கம் செய்து தர இயலுமா?

Suba

unread,
Nov 20, 2016, 5:45:12 AM11/20/16
to Gowthama Sanna, rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
அன்புள்ள திரு.சன்னா,

டாக்டர்.ராஜம் அவர்களுக்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் மிக விரிவான விளக்கமாக எனக்குத் தோன்றுகின்றது. பல ஐயங்களை இது விளக்குகின்றது.  இதனை ஒரு சிறு பதிவாக இணைத்து மின்தமிழ் மேடையில் வைக்க வேண்டும் எனக் கருதுகின்றேன். பரிந்துரைக்கின்றேன்.

சுபா

N. Ganesan

unread,
Nov 20, 2016, 9:26:19 AM11/20/16
to மின்தமிழ், vallamai


On Wednesday, November 16, 2016 at 2:40:10 AM UTC-8, N. Kannan wrote:
2016-11-16 13:30 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
வணக்கம் ஐயா,

தமிழக மனு நீதிச் சோழனுக்கும் மனு தர்மத்தை வரைந்த மனுவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தமிழக மனு நீதிச் சோழன் திருக்குறள் வேண்டிய அறத்தைப் பேணினார். மனு தர்மத்தை வரைந்த மனு, வர்ணாசிரம தர்மத்தைக் கடைப்பிடிப்பதே வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டார்.
​//

​குறள் நெறிச் சோழர் என்றே சொல்லியிருக்கலாமே! 


மனுநீதி என்பது ஹிந்துக்களின்  தர்ம ஶாஸ்திரம். இதன் வழி ஒழுகினோர் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்.
அதனால் பெற்ற பெயர்: மனுநீதி சோழன். இவன் கதை சிங்கள நாட்டின் பௌத்த நூல்களிலும் உண்டு.

மனு ஆறு பெருக, மனு ஆறு தழைக்க, ... என மனு தர்ம ஶாஸ்திரம் தமிழ்ப் பேரரசர்களின் கல்வெட்டுகளில்
அடிக்கடி வரும்.  பெ. சுந்தரம் பிள்ளையவர்கள் பாடல் கிறித்துவப் பாதிரிமார்கள் (உ-ம்: கால்ட்வெல்)
செய்த திருப்பணிகளால் தமிழர் தங்கள் வரலாற்றை உணரச் செய்கிற முதல் முயற்சிகளில் ஒன்று.

அதற்கும், தமிழர் மநுவைக் கொண்டாடியதற்கும் தொடர்பில்லை. சங்க இலக்கியத்தில் பாண்டியன்
நெடுஞ்செழியன் நான்கு வர்ணங்களைப் பாடியிருக்கிறான். சங்க காலத்திற்கு பிற்பட்ட சிலம்பில் 
ஆரியர்களின் வர்ணாஶ்ரம தர்மம்விரிவாகப் பாடப்பெற்றுள்ளது. அதனால் பெரியார் சிலம்பைச் சாடினார்.
அபத்தமான கதை என்று. அதற்கு, ம.பொ.சி. ஏப்ரல் 1951-ல் எழுதிய எதிர்வினையை நேற்று
சி. இலக்குவனார் பற்றிய இழையில் தந்துள்ளேன்.

நா. கணேசன்
 
நா.கண்ணன்​

N. Ganesan

unread,
Nov 20, 2016, 9:32:37 AM11/20/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vallamai
On Saturday, November 19, 2016 at 11:52:58 PM UTC-8, Jayabalan Mavanna wrote:
  
வணக்கம். 
துரதிஷ்டவசமாக மனு தர்மம் இந்திய திருமணச் சட்டத்தில் அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஒரு சார்பினருக்குச் சாதகமாக வடிவமைக்கப் பட்டது என்பதில் ஐயமில்லை.

 Manu, Marx and Gandhi என்ற நூலைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

ஹிந்து லா என்னும் சட்டங்கள் அமைய இந்தியாவில் பயன்பட்ட தர்ம  ஶாஸ்திரங்களில் முக்கியமானது மனுதர்ம ஶாஸ்திரம்.
ஆயிரக்கணக்கான நூல்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.
 

எம்.டி. ஜெயபாலன்

On Wednesday, November 16, 2016 at 3:42:36 AM UTC+5:30, Suba.T. wrote:
 
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள், 
மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
மனு தர்மம் இந்து சமய நூலா?

மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன். 

என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?
ஆம் என்றால் எந்த வகையில்?


ஹிந்து சட்ட நூல்களில் ஒன்றாக மனு அமைகிறது. சுமார் 20 தர்ம ஶாஸ்திரங்கள் ஸம்ஸ்கிருதத்தில் உள்ளன.
வாழ்க்கையின் எல்லாக் கூறுகளுக்கும் இதன் வழியே சட்டம் உண்டு. இதனால், பெரிதும் வளர்க்கப்படுவது
வர்ணாசிரமம் ஆகும். இதில் மாற்றங்கள் மாடெர்னிட்டி வழியாக வருகின்றன.

நா. கணேசன்
 
நன்றி

சுபா

N. Ganesan

unread,
Nov 20, 2016, 9:58:15 AM11/20/16
to மின்தமிழ், vallamai


On Wednesday, November 16, 2016 at 7:09:30 PM UTC-8, N. Kannan wrote:

முதலிலேயே சொல்லிவிட வேண்டும். எனக்கு மனுதர்மம் என்றால் என்னவென்று தெரியாது. கொஞ்சம் கன்பூசியனிசம் தெரியும். 8 வருடம் கொரியாவில் வாழ்ந்ததால். இது வெறும் பொறுப்புத் துறப்பு ;-)

சரி வள்ளுவருக்கு வருவோம். வள்ளுவரை ஒரேயடியாக 21ம் நூற்றாண்டிற்குக் கடத்த முற்படுகின்றனர். ஒரு சீரழிந்த சமுதாயத்தை தாங்கும் வல்லமை குறளுக்கு உண்டா என்று தெரியவில்லை. வள்ளுவரும் ஒரு தமிழர்தான். அவர் வாழ்ந்த காலத்தின் நியதியைச் சொல்வது குறள். I don't want to judge based on my current values. அவர் குடிமை என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். குடி என்பது ஜாதிதான். குடி கெட்டுப் போகக்கூடாது என்று பலவாறு சொல்கிறார்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து (மடியின்மை - 61/603)

குடிமை கெட்டுவிடக் கூடாது என்பதில் வள்ளுவர் கவனமாக உள்ளார். அந்தக் காலம் அப்படி. ஏன் இப்போதும் தமிழர்களின் பெரிய பிரச்சனையே அதுதானே!


ஜாதி என்பதற்கு நேரடி மொழிபெயர்ப்பாக ‘பிறப்பு’ என்ற சொல்லை சமணர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தொல்காப்பியர் சொல்கிறார்: ”பிறப்பே குடிமை”.

 பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வொடு திருவென

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே

 
1. பிறப்பாவது : குலப்பிறப்பு. அஃதாவது ஒழுக்க நிலையான்  அமைந்த
அந்தணர்   முதலிய   நாற்குலம்.  "நலத்தின்கண்  நாரின்மை  தோன்றின்
அவனைக் குலத்தின்கண் ஐயப்  படும்" என்பதனான் ஒழுக்கம், குலம் பற்றி
விளங்குதல் புலனாகும்.

----------------------

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் - திருவள்ளுவர் (< ஸ்ரீவல்லபர்)


தொல்காப்பியர் போலவே, வள்ளுவரும் ஜாதி எனும் வடசொல்லை “பிறப்பு” என மொழிபெயர்த்தமை காண்க.

வேதத்தையே மறந்தாலும் படித்துக்கொள்ளலாம். பார்ப்பனர் ஜாதி ஒழுக்கம் பிறழாமல் நடக்கவேண்டும்

என்கிறார் செந்நாப்போதார். 


ஆசாரங்களில் பாகுபாடு : குறள் தீர்ப்பு - காஞ்சி மாமுனிவர்

http://www.kamakoti.org/tamil/3dk127.htm?PHPSESSID=66d7227d6ad0a09ad17bede42ae33823

ஜெமோ: http://www.jeyamohan.in/20607#.WDG2T9IrKUk


இந்தியாவின் சமூக அமைப்பாகிய ஜாதி மூவாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.

இப்பொழுது தலித் எனக் குறிப்பிடும் சொல்லுக்கு உபநிஷதங்களிலே சண்டாளர்

என்ற சொல் வழங்கியது. சண்டாளர் த்ராவிடபாஷை தந்த சொல் என்பர் வேத நிபுணர்கள் (விட்சல்), ...

இந்தியாவின் இரண்டு செம்மொழிகளிலும் ஆதி இலக்கியங்களிலே ஜாதி பற்றி

விரிவாகப் பேசப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளாக அம்மொழிகளின் பேராசிரியர்கள் நன்கு

விளக்கியுள்ளார்கள். ஜாதிக்கு அடிப்படையான சொல்களிலே ஒன்று: புலை. 

இது சங்க கால இலக்கியத்துக்கு 1000 வருஷம் முன்னரே ஏற்பட்ட சொல். திராவிட பாஷைகள்

பிரியுமுன்னரே வழக்கில் வந்துவிட்டசொல். த்ராவிட மொழிகளை ஒப்பிட்டால் 

புலை- இதனடியாகப் பிறக்கும் சொற்கள் சங்க இலக்கியத்திலே பயிலும் பொருளை உணரமுடியும்.


உபனிஷதங்களிலே சண்டாளர் எனும் பிரயோகம்: மோனியர்-வில்லியம்ஸ்

caṇḍāla

(H1) caṇḍāla [p= 383,3][L=71049]m. (= cāṇḍālá) an outcast , man of the lowest and most despised of the mixed tribes (born from a śūdra father and a Brahman mother) S3a1n3khGr2. ii , vi ChUp. Mn. &c (ifc. " a very low representative of. " Ka1d. )
(H1B) caṇḍālā [L=71050]f. a caṇḍāla woman Mn. xi , 176
(H1B) caṇḍālī [L=71051]f. (g. śārṅgaravā*diid. (one of the 8 kinds of women attending on kaula worship) Kula7rn2. vii
(H1B) caṇḍālī [L=71052]f. N. of a plant L.

இன்று சிந்து சமவெளி நாகரீகம் த்ராவிடரினது எனப் பேசுகிறோம். இந்திய மொழிகள் வடக்கே த்ராவிட பாஷைகள்
அழிந்து ஆரியமாக உருவெடுத்தன எனக் காண்கிறோம். உதாஹரணமாகப் பல சொற்கள்: நீர்: நீலம் இந்தியா
முழுக்க ‘ப்ளு’ கலருக்கு தமிழின் நீலம் தான் உண்டு. செக்கர்வாகம் > சக்கரவாகம் என்றானது என்பதும் எழுதியுள்ளேன்.

தீய முறை என்று சொல்லும் ஜாதி உருவாக்கம், அதன் பழமையில் மட்டும் தமிழர்/த்ராவிட ஜனங்களுக்கு தொடர்பில்லையா?
சிந்திப்போம்.

நா. கணேசன்

குடி என்பது ஜாதிதான் என்பதை ஒரு சங்கப்பாடல் சொல்லும்:

புறநானூறு 335, பாடியவர்: மாங்குடி கிழார்,திணை: வாகை, துறை: மூதின் முல்லை –பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை
அடலருந் துப்பின் .. .. .. ..
… குரவே தளவே குருந்தே முல்லை யென்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறு கொடிக் கொள்ளே பொறி கிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை
*துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந் நான்கல்லது குடியும் இல்லை*
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

, துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான் கல்லது குடியும் இல்லை –

எனவே வள்ளுவத்தில் மனுதர்மக் கூறுகள் இருக்க வாய்ப்புண்டு.

இப்படிச் சொல்வதால் வள்ளுவத்திற்கு இழுக்கு என்று பொருள் அல்ல. அவர் ஒரு சமுதாயக் கண்ணாடி. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி அவ்வளவுதான்.

நா.கண்ணன்


On Nov 16, 2016 10:10 PM, "Malarvizhi Mangay" <malarm...@gmail.com> wrote:

கண்ணன் அவர்களே! எங்கள் கல்லூரியில் ஒருவர் மனுதர்மம் _திருக்குறள் இரண்டையும்
ஆய்வு செய்து Ph.D.பட்டம் பெற்றார்.(தமிழில்)


On 16-Nov-2016 9:56 pm, "Suba" <ksuba...@gmail.com> wrote:


2016-11-16 16:25 GMT+01:00 N. Kannan <navan...@gmail.com>:


குறள் ஒரு காலத்தின் பிரதிபலிப்பு. நன்றாக ஊன்றி வாசித்தால் பண்டைய வாழ்வியல் புரியும். அதில் வைதீக தர்மமும் உள்ளது. மனு தர்மம் உள்ளதா? எனத்தெரியவில்லை. ஆய்வு செய்திருப்பர்!
​குறளை முழுமையாக மனன செய்யவில்லை என்ற போதிலும் முழுமையையும் விளக்கத்துடன் வாசித்துள்ளேன்.
என்னிடம் உள்ள மனு நீதி நூலையும் வாசித்துள்ளேன்​. 

மனு தர்ம நூல் குறலிலிருந்து வேறுபாடானது.

ஒரு தனி இழை தொடங்கி அதனை கலந்து  ஆராய முற்பட விருப்பம் உள்ளது., நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Nov 20, 2016, 11:47:01 AM11/20/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-11-19 17:22 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
கொத்திப் பொறுக்குதல் தகாது..

சன்னன் எனக்கு அம்பேத்துகரின் ஒவ்வொரு சொல்லையும் மதிப்பீடு செய்யவேண்டும் என்று தான் ஆசை ஆனால் என் ஆசையில் அவர் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்.

நீங்கள் தந்த தொடுப்பில் அம்பேத்துக்கரின் கூற்றை கவனித்தால் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்.

 The present attempt to explain the origin of Untouchability is not the same as writing history from texts which speak with certainty. It is a case of reconstructing history where there are no texts, and if there are, they have no direct bearing on the question - pg  3756  

ஆக அம்பேத்துகர் அடிப்படைச் சான்று இல்லாமலேயே கற்பனையில் நூல்களை எழுதியுள்ளார் என்பதை தாமாக முன்வந்து ஒப்புக்கொள்கிறார். ஆனால் இதன் விளைவை தீங்கை அவர் உணரவில்லை.

The origin of Untouchability lies buried in a dead past which nobody knows. To make it alive is like an attempt to reclaim to history a city which has been dead since ages past and present it as it was in its original condition. It cannot but be that imagination and hypothesis should pay a large part in such a work. But that in itself cannot be a ground for the condemnation of the thesis. For without trained imagination no scientific inquiry can be fruitful and hypothesis is the very soul of science. - pg  3757 

இதில் அம்பேத்துகர் தமது கருத்து கற்பனையே என்பதை ஒப்புக்கொள்கிறார். 


The new approach in the search for the origin of Untouchability has brought to the surface two sources of the origin of Untouchability. One is the general atmosphere of scorn and contempt spread by the Brahmins against those who were Buddhists and the second is the habit of beefeating kept on by the Broken Men. - pg  3822

தலித்துகளிடத்தில் எந்த பௌத்த நெறியும்இல்லை, அறமும் இல்லை. பௌத்தர்கள் கிராமங்களை விட்டு வெளியே துரத்தப்பட்டனர் என்ற அயோத்திதாசர் கருத்து தவறு. பாகியான்,  யுவான் சுவாங்கு அப்படி எந்த செய்தியையும் விட்டுச் செல்லவில்லை. 

 
கொத்திப் பொறுக்கும் ஆய்வு ((Chicken Picking) என்ற ஒரு முறை உள்ளது. தனக்கு தெரிந்த அல்லது நம்பும் செய்திக்கு ஏற்றார்போல் தகவல்களை மட்டும் எடுத்துப் போட்டு தம்மை நிறுவ முயல்வது. ஒரு முழுமையான பார்வைக்கு போக முடியாதவர்களின் முயற்சியது. 

கற்பனை கலந்த ஒரு நூலில், அதிலும் மேலை அறிஞர்களின் broken men கருத்தை அப்படியே எடுத்துக் போட்டு பக்கங்களை அதிகப்படுத்தி நூல் வெளியிட்டவர் அம்பேத்துகர். பழைய நாகரிக கொண்ட இந்திய துணைக்கண்டத்தில் அப்படி broken men என்று எவரும் இருந்ததில்லை. 

இந்த நிலையில் நீங்கள் கொடுத்த இணைப்பில் தீண்டாமை > கிராமத்திற்கு வெளியே குடியிருப்பு என்ற தலைப்பில் அம்பேத்துகர் இந்த மனு சிமிரிதியை எடுகோளாக காட்டி தலித்துகள் ஏன் ஊருக்கு வெளியே தள்ளிவைக்கப் பட்டார்கள் என்பதற்கு கீழே உள்ள வரிகளை காட்டிவிட்டார். அதில் சண்டாளர், நாயை சமைக்கும் சுவபாகர் என்ற இரு சாதிகள் மட்டுமே குறிக்கப்படுகின்றன 

Manu says:க்ஸ். 50.  Near well-known trees and burial-grounds, on mountains and in groves, let these (tribes) dwell, known (by certain marks), and subsisting by their peculiar occupations. "X. 51. But the dwellings of the Chandalas and the Shvapakas shall be outside the village, they must be made Apapatras and their wealth (shall be) dogs and donkeys. X. 52. Their dress (shall be) the garments of the dead, (they shall eat) their food from broken dishes, black iron (shall be) their ornaments and they must always wander from place to place. X. 53. A man who fulfils a religious duty, shall not seek intercourse with them; their transactions (shall be) among themselves and their marriages with their equals. X. 54. Their food shall be given to them by others (than an Aryan giver) in a broken dish; at night they shall not walk about in village and in towns. X. 55. By day they may go about for the purpose of their work, distinguished by marks at king's command, and they shall carry out the corpses (of persons) who have no relatives; that is a settled rule. X. 56. By the King's order they shall always execute the criminals, in accordance with the law, and they shall take for themselves the clothes, the beds, and the ornaments of (such) criminals. (தூக்கில் இட்டால்  அங்கே குற்றவாளிகளின் பிணம் விழும்) 



அப்படித்தான் திரு.சேஷாத்திரி உள்ளிட்ட சிலரின் வாதம்.தலித்துகள் என்றாலே பிணமும் சுடுகாடும் மட்டுமே அவருக்கு நினைவுக்கு வருகிறது. இது என்னவகையான மனமோ தெரியவில்லை.


தலித்துகள் பிணம் கையாள்வோர் அல்லர் ஆனால் மோசடியாக பிணம் கையாள்வோர் (சண்டாளர் - வெட்டியான்) பற்றிய குறிப்புகளை தலித்துகளையும் பற்றி  கூறுவதாக அம்பேத்துக்கர் பொய் சொல்லியுள்ளார் என்று தான் அம்பேத்துக்கரின் தவற்றினை சுட்டிக்காட்டியுள்ளேன். நீங்கள் நான் சொல்லுவதாக தட்டை (plate) மாற்றுகிறீர்கள். 


அம்பேத்கரின் புத்தகத்தைப் படிப்பதற்கு அவ்வளவு ஒவ்வாமை இருந்தால் அவர் காட்டும் மேற்கோள்களை மட்டும் படிப்பது ஏனோ. 
 
நீங்கள் கொடுத்த சுட்டியை தான் படித்தேன் அது மேற்கோளாக இருந்தது என் குறை அல்ல. எனக்கு அம்பேத்துகர் நூல்களைப் படிப்பத்தில் எந்த ஒவ்வாமையும் இல்லை.

 
சண்டாளருக்கும் தலித்துகளுக்கும் என்ன தொடர்பு.. அம்பேத்கரை ஓரளவு படித்தால்தான் அதையும் புரிந்துக்கொள்ள முடியும். முன்சாய்வு இருப்பவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் இப்படிப்பட்ட கொத்திப் பொறுக்கி கோர்க்கும் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் என்னிடத்தில் இல்லை. - சன்னா


எனக்கு சாய்க்கால் ஏதும் இல்லை.  பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதனம் என்பார்களே அதைத் தான் நான் செய்தேன்.



ஆரோதன் 

2016-11-19 15:37 GMT+05:30 பித்துக்குளி <radius.co...@gmail.com>:

Roman Catholics accepted Manusmriti as their code. The Catholic priest Constantine Beski, called as Veeramamunivar(1680-1747) the contemporary of Zieganbalg was a Christian Brahmin who lived like a Hintholic Saint (Hindu + Catholic = Hintholic). Robert D’ Nobly who served in Madurai Diocese of the Catholic Church in 1606 was a Hintholic person who vigorously followed Hindu Varna dharma and untouchability. He worked against Dalit people and there was a criminal case on him accusing him of the murder of a Dalit Sexton. The case was filed at Thanjavur. This reference was made by Prof. Gajendhiran Ayyathurai (Dept of Anthropology, Columbia University), who is doing his research in Columbia University. This issue has been debated widely now. Many walked out from Roman Catholic order refusing to adhere to this saint’s caste discrimination and joined Protestant churches. Later, with Rajanaickan’s initiative many came out to the Protestant church and one among them is Sathyanathan. He served as Ubadhesigar of Tharangambadi church. Prof. Lawrence accuse Veeramamunivar who was known as father of Tamil format for not translating the Holy Bible in Tamil as he believed the Manu Dharma that says, Sudhras should not read Vedas. He also quotes Zieganbalg’s accusation in one of his letters about Veeramamunivar for his misinterpretation of Tamil language in Palm scripts. The reasons for quoting all these references are – 

  1. In the name of serving Tamil, the Brahmins and modern Brahmin of Vellalars Sanskritised the Holy Bible.
  2. With concepts like school on phial, funding and the like, the modern Brahmin of Vellalars and Pillaimars inculcated caste feelings and caste domination in the Church’s mission and administration.
  3. The Protestant Mission slowly got into the Brahminical order as the German missionaries were not able to understand the complexity or Confusion of a caste based social order of Indian society. 
​அம்பேத்காரும் பெரியாரும் ஐயோ பாவம்
அவங்களுக்கு முன்னரே மனு அரசியல் தொடங்கிவிட்டது - 
சைபர் சுப்புடு


Prof. Gajendhiran Ayyathurai மனு சிமிரிதி என்று தன் சொந்த கற்பனையை எழுதியுள்ளார் அல்லது வலிந்து எழுதியுள்ளார். மனுஸ்மிருதி தான் என்பதை டைரி குறிப்பை வைத்தா சொல்லினார் ? அதை அந்த கால பிராமண வெள்ளாளர் வாழ்க்கை நடைமுறை என்று சொல்லியிருக்கலாம்.

ஆரோதன் 

Seshadri Sridharan

unread,
Nov 20, 2016, 11:47:05 AM11/20/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-11-20 12:40 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
அன்புள்ள ராஜம்அம்மையாருக்கு வணக்கம்.
மனுவின் உண்மையான பெயர் சுமதி பார்க்கவா. இவர் ஒரு வைசியர். கிமு 185ல் புஷியமித்திர சுங்கன் மௌரிய அரசாட்யை ஒழித்து தமது தலைமையில் சுங்கர் வம்சத்தை நிறுவினான். இந்தியாவின் முதல் பிராமணர்களின் அரசு அது. இது சமூக குழப்பத்திற்கு வித்திட்டதால் அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது, அதன் அடிப்படையில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் உச்சமாக சுமதி பார்க்கவா மனு ஸ்மிருதியை எழுதினார் அல்லது தொகுத்தார். அது கிபி 100 முதல் கிபி 200க்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கலாம்.

திராவிடக்குறும்புகள் இதையும் மாற்றியே சொல்லுகிறார்கள். 

தி.க.வின் திராவிடத் தலைவர் கீரமணி மனுவை பிராமணனுக்கு பிறந்தவன் என்று தான் முழங்குகிறார். நீங்களோ சுமதி பார்க்கவா ஒரு செட்டியார் என்கிறீர். ஆக திராவிடம் பொய்மையை கொண்டு தான் ஒரு சார் மக்கள் மீது வெறுப்பை வளர்த்து வந்துள்ளது.

அம்பேத்துக்கரும் தமிழ் நாட்டார் எழுதிய நூல்களை மொழிபெயர்த்துக்கொண்டு மூலநூல் ஆசிரியர் பெயரை  குறிக்கவில்லை என்று குற்றம்சாற்றுகின்றனரே. அம்பேத்துகரிடமும் பொய்மையா?  

ஆரோதன்     
 

பறையர்களிடம் இருந்து அம்பேட்கர் காப்பி பேஸ்ட் பண்ண இரண்டு புத்தகங்கள்:
==============================

தந்தை ராவ்பகதூர் எம்சி ராஜா எழுதிய ஒடுக்கப்பட்ட இந்துக்கள் (1927) எனும் பட்டியல் ஜாதிகளுக்கான வரலாறு. அதை அடிப்படியாக வைத்து அம்பேத்கர் எழுதிய “தீண்டத்தகாத்தவர்”(1942)

பட்டியல் ஜாதி மக்களைப்பற்றிய வரலாறை யாருமே எழுதவில்லை, என்றெல்லாம் நீலிக்கண்ணீர் விட்டு இருப்பர். ஆனா புத்தகம் முழுக்க ஒரு இடத்தில கூட எம்சிராஜா புக்கை படித்தேன் என்று கூட சொல்லயிருக்க மாட்டார். அம்பேத்கர் புத்தகம் எழுதுவதற்கு 15 வருடங்களுக்கு முன்னர் தந்தை ராக்வபகதூர் எம்சி ராஜா ஒடுக்கப்பட்ட இந்துக்கள் (1927) எனும் புத்தகத்தை எழுதினார். அது அன்றைய பன்னாட்டு அறிஞர்களுக்கு இந்திய பட்டியல் ஜாதிகளைப்பற்றிய புரிதலுக்கு பயன் பட்ட நூல்.

2. பண்டிதர் அயோத்திதாசர் எழுதிய “ஆதி வேதம்”. புத்தரும் அவரது ஆதி வேதமும் என்று பண்டிதர் எழுதியதை அப்படியே உல்டா பண்ணி 50 வருடங்களுக்கு “புத்தரும் அவரது தம்மமும்” எனும் நூலை அம்பேத்கர் எழுதினார். அந்த புத்தகத்திலும் எங்கேயும் இந்த புத்தகம் பண்டிதரிடம் இருந்து காப்பி பேஸ்ட் பண்ணது என்று சொல்லியிருக்க மாட்டார்.

ஒரு ஆய்வாளர் காப்பி பேஸ்ட் செய்வது தப்பு இல்லை. Research என்றாலே “Re” + “search” (திருப்பி தேடுதல்). ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயத்தை மீண்டும் தேடி அதன் அடிப்படையில் புதிய கருத்துக்களை சொல்லுவது. ஆனால் நாம் எங்கே இருந்து மூலத்தை எடுத்து பயன் படுத்துகிறோம் என்று உண்மையையே சொல்வது திறனாய்வு அறம்.

அவர் திட்டமிட்டெல்லாம் மறைக்கவில்லை! அவர் ரொம்ப நல்லவர் வல்லவர் என்று வக்காலத்து வாங்க வேண்டாம். இது என் கருத்து. தனக்கு முன்னோடிகளாக அகில இந்திய அரிசியலிலும், புத்த மறுமலர்ச்சி பேசுவதிலும் பறையர்கள் இருந்தார்கள் என்ற உண்மையை சொல்லும் மனோ நிலை ஒரு மகாருக்கு இருக்க வேண்டும் என்று நானும் எதிர்ப்பார்க்க வில்லை.

rajam

unread,
Nov 20, 2016, 11:48:04 AM11/20/16
to mint...@googlegroups.com, Subashini kanagasundaram, G Sannah
நேரம் ஒதுக்கிப் பொறுமையாக என் வினாக்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி, திரு. சன்னா!

பலவற்றைப் புதிதாகத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி! 

மனுவின் பிணத்தை யார் எரித்திருந்தாலும் அவர்களுக்கு அந்தத் “தீட்டு” இருந்திருக்கவேண்டும்! அதை நினைத்துப்பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட குழுவினர்மேல் மட்டும் அந்தத் தீட்டை ஒட்டுவது நேரியதன்று. ஆனாலும் அந்த மனுசர் சண்டாளர்களுக்கு இவ்வளவு கொடுமையான கட்டுப்பாட்டை விதித்திருக்கவேண்டாம். :-( 

தான் செய்ய அருவருக்கும் ஒரு செயலைச் செய்தவர்களுக்கு நன்றிசொல்லாமல் கீழ்நிலைப்படுத்தி வைத்த அவலத்தை என்னவென்று நோவது? 

++++++++++

மருத்துவப் படிப்பில் புகுந்த எல்லாருமே பிணத்தைத் தீண்டாமலா படிப்பை முடித்திருப்பார்கள்? அவர்களுக்குத் “தீட்டு” இல்லையாம்! ஆனால், இயற்கையின் அவலத்தால் மாதவிலக்குப் பெறும் பெண்களுக்குத் தீட்டாம்! காஞ்சிப் பெரியவர் பெண்கள் கல்லூரிக்குள் நுழையவே தயங்கி, மாட்டையும் கன்றையும் முதலில் போகவைத்து அந்த இடங்களைத் “தூய்மையாக்கி” அங்கே நடந்தாராம். சிருங்கேரி மடத்து ஆச்சாரியர் எங்கள் கொள்ளுப்பாட்டியின் வீட்டிற்கு வந்தபோது (விதவையான) என் பெரியபாட்டியை ஆச்சாரியர் கண்களில் படாமல் மாடிக்கு அனுப்பிவைத்தார்கள்! இத்தனைக்கும் … மாளிகை மாதிரி இருந்த அந்தப் பெரிய வீட்டில் “பாதபூஜை”க்காகச் செலவழித்த பணத்தில் அந்தப் பாட்டியின் பங்கும் இருந்தது! கைம்பெண்ணைப் பார்த்தாலே “தீட்டு” ஒட்டிக்கொண்டுவிடுமோ?
கொடுமை.

மனு செத்தாலும் “மனுதர்மம்" சாகவில்லை, சாகாது என்றே தோன்றுகிறது. 

அன்புடன்,
ராஜம்


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba

unread,
Nov 20, 2016, 11:53:35 AM11/20/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-11-20 8:04 GMT+01:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2016-11-19 17:22 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
கொத்திப் பொறுக்குதல் தகாது..

சன்னன்

​முதலில் ஒரு விசயம் சேசாத்ரி.
நீங்கள் ​உங்கள் பெயரை வாரத்துக்கு ஒன்று என்று மாற்றிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். மின்தமிழி`ல் உள்ள மற்றொரு உறுப்பினரின் பெயரை மாற்ற உங்களுக்கு உரிமை இல்லை. திரு சன்னா தன்னை சன்னன் என்று எங்கும் அழைத்துக் கொண்டதில்லை. இனி இத்தகைய காரியத்தைச் செய்ய வேண்டாம்.

 
எனக்கு அம்பேத்துகரின் ஒவ்வொரு சொல்லையும் மதிப்பீடு செய்யவேண்டும் என்று தான் ஆசை ஆனால் என் ஆசையில் அவர் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்.

​உங்களுக்கு முழுதும் வாசித்து தெரிந்து கொள்ள விருப்பமில்லை. இது prejudice  என்று சொல்வோமே.. அந்த நிலை.  அவர் மண்ணை அள்ளிப்போட்டாரா அல்லது நீங்கள் தள்ளி நின்று  வேண்டுமானவற்றை எடுத்துக் கொண்டு குறைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றீர்களா என்பது உங்களுக்குத்தான் தெரியும்.

முழுதாக திரு.சன்னா சொன்ன நூலை வாசித்து விட்டு வந்து எதிர் கருத்து சொன்னால்  அதற்கு அர்த்தமுண்டு-. இப்படி சேசாத்ரியின் அறை குறை பிதற்றலுக்கு கருத்துச் சொல்வதே னேர விரயம் என்பது என் கருத்து.

சுபா

Suba

unread,
Nov 20, 2016, 11:56:58 AM11/20/16
to Seshadri Sridharan, மின்தமிழ், Subashini Kanagasundaram
​சேசாத்ரி,

உங்களின் இந்த பதிவில் காழ்ப்புணர்ச்சி என்ற ஒன்று மட்டும் மிகத் தூக்கலாகத் தெரிகின்றது . இனி இத்தகைய பதிவுகள் வேண்டாம்.​

​திரு.வீரமணியை பிடிக்கவில்லையென்றால் அவர் பெயரை இங்கே மாற்றி எழுத உங்களுக்கு உரிமை இல்லை. 

உங்கள் பதிவுகளை இனி முழுதுமாக தடை செய்வதைப் பற்றி நான் மட்டுறுத்தல் குழுவில் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கும். பார்த்து எழுதுங்கள்.

சுபா



​ 

Suba

unread,
Nov 20, 2016, 12:07:06 PM11/20/16
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-11-20 17:47 GMT+01:00 rajam <ra...@earthlink.net>:
நேரம் ஒதுக்கிப் பொறுமையாக என் வினாக்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி, திரு. சன்னா!

பலவற்றைப் புதிதாகத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி! 

மனுவின் பிணத்தை யார் எரித்திருந்தாலும் அவர்களுக்கு அந்தத் “தீட்டு” இருந்திருக்கவேண்டும்! அதை நினைத்துப்பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட குழுவினர்மேல் மட்டும் அந்தத் தீட்டை ஒட்டுவது நேரியதன்று. ஆனாலும் அந்த மனுசர் சண்டாளர்களுக்கு இவ்வளவு கொடுமையான கட்டுப்பாட்டை விதித்திருக்கவேண்டாம். :-(  

தான் செய்ய அருவருக்கும் ஒரு செயலைச் செய்தவர்களுக்கு நன்றிசொல்லாமல் கீழ்நிலைப்படுத்தி வைத்த அவலத்தை என்னவென்று நோவது? 

++++++++++

மருத்துவப் படிப்பில் புகுந்த எல்லாருமே பிணத்தைத் தீண்டாமலா படிப்பை முடித்திருப்பார்கள்? அவர்களுக்குத் “தீட்டு” இல்லையாம்! ஆனால், இயற்கையின் அவலத்தால் மாதவிலக்குப் பெறும் பெண்களுக்குத் தீட்டாம்! காஞ்சிப் பெரியவர் பெண்கள் கல்லூரிக்குள் நுழையவே தயங்கி, மாட்டையும் கன்றையும் முதலில் போகவைத்து அந்த இடங்களைத் “தூய்மையாக்கி” அங்கே நடந்தாராம். சிருங்கேரி மடத்து ஆச்சாரியர் எங்கள் கொள்ளுப்பாட்டியின் வீட்டிற்கு வந்தபோது (விதவையான) என் பெரியபாட்டியை ஆச்சாரியர் கண்களில் படாமல் மாடிக்கு அனுப்பிவைத்தார்கள்! இத்தனைக்கும் … மாளிகை மாதிரி இருந்த அந்தப் பெரிய வீட்டில் “பாதபூஜை”க்காகச் செலவழித்த பணத்தில் அந்தப் பாட்டியின் பங்கும் இருந்தது! கைம்பெண்ணைப் பார்த்தாலே “தீட்டு” ஒட்டிக்கொண்டுவிடுமோ?
கொடுமை.

மனு செத்தாலும் “மனுதர்மம்" சாகவில்லை, சாகாது என்றே தோன்றுகிறது. 

மிகுந்த வேதனை தரும் வார்த்தைகள். 
ஏறக்குறைய 2000 வருடங்களாக மனு தர்மம் தமிழ்ச்சமூகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விட்டுச் சென்றிருக்கும் பாதிப்பு மிக மிக அதிகம். அதனை  இன்றும் உயர்த்திப் பிடித்து அக்கொள்கைகளைப் பிரச்ச்சாரம் செய்பவர்களை தெளிய வைக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு என் நினைக்கின்றேன்.  
மனு தர்மத்தை வாசிக்காததால் பலரும் இதனை இந்து சமய நூல் என்றே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.   பலர் வாசிக்காமல் பிறர் சொல்வதை கிளிப்பிள்ளைகள் போல ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  தமிழ்  மக்கள் தங்கள் பண்டைய வழிபாடு என்ன என்பதனை உணர்ந்தால் இதற்கெல்லாம் பெரிய தெளிவு ஏற்படும்.

அன்புடன்
சுபா




--

N. Ganesan

unread,
Nov 20, 2016, 12:28:26 PM11/20/16
to மின்தமிழ், vallamai


On Sunday, November 20, 2016 at 8:47:05 AM UTC-8, ஆரோதன் wrote:
2016-11-20 12:40 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
அன்புள்ள ராஜம்அம்மையாருக்கு வணக்கம்.
மனுவின் உண்மையான பெயர் சுமதி பார்க்கவா. இவர் ஒரு வைசியர். கிமு 185ல் புஷியமித்திர சுங்கன் மௌரிய அரசாட்யை ஒழித்து தமது தலைமையில் சுங்கர் வம்சத்தை நிறுவினான். இந்தியாவின் முதல் பிராமணர்களின் அரசு அது. இது சமூக குழப்பத்திற்கு வித்திட்டதால் அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது, அதன் அடிப்படையில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் உச்சமாக சுமதி பார்க்கவா மனு ஸ்மிருதியை எழுதினார் அல்லது தொகுத்தார். அது கிபி 100 முதல் கிபி 200க்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கலாம்.

திராவிடக்குறும்புகள் இதையும் மாற்றியே சொல்லுகிறார்கள். 

தி.க.வின் திராவிடத் தலைவர் கீரமணி மனுவை பிராமணனுக்கு பிறந்தவன் என்று தான் முழங்குகிறார். நீங்களோ சுமதி பார்க்கவா ஒரு செட்டியார் என்கிறீர். ஆக திராவிடம் பொய்மையை கொண்டு தான் ஒரு சார் மக்கள் மீது வெறுப்பை வளர்த்து வந்துள்ளது.

அம்பேத்துக்கரும் தமிழ் நாட்டார் எழுதிய நூல்களை மொழிபெயர்த்துக்கொண்டு மூலநூல் ஆசிரியர் பெயரை  குறிக்கவில்லை என்று குற்றம்சாற்றுகின்றனரே. அம்பேத்துகரிடமும் பொய்மையா?  

ஆரோதன்     
 

மனு ஒரு செட்டியார் என்பதற்கெல்லாம் ஒரு ஆதாரமும் இல்லை. தமிழில் மாடர்னிட்டி - இந்திய செம்மொழிகள் காட்டும் ஜாதி ஸிஸ்டம் மாற்றுவதற்கு - பல வழிகளில் வந்துகொண்டுள்ளன. அவற்றில் பெரியார் ஈவேரா வழி ஒன்று. இசுலாமியர், கிறித்துவர், பலவகை மதங்கள், ஹிந்து சமயங்களில் குருமார்கள், டிவி, அயல்நாட்டார் செயல்கள், ஆராய்ச்சிகள், நிதிக்கொடை, .... எனப் பலவழிகள் ஒரு பெரும் சமுதாயமாக இருக்கும் தமிழகத்துக்கு வருதல் இயற்கை.  பேரா. சி. இலக்குவனார் பாரதி, பெரியார், அண்ணா புரட்சிகளைப் பாடியுள்ளார்:

செந்தமிழ்ப் பாரதியும் சீர்சால் பெரியாரும்

நந்தமிழ் காக்கின்ற நல்லறிஞர் அண்ணாவும்

செய்த புரட்சிகளைச் சீர்த்தூக்கிப் போற்றுமின்

எய்துமின் இன்பமெலாம் இங்கு.


எந்த மதம் என்றாலும், மொழியினர் என்றாலும் தமிழர்கள் அவற்றில் உள்ள நல்லனவற்றை ஏற்றுக்கொள்வது நம் மரபு, வரலாறு.


நா. கணேசன்

Suba

unread,
Nov 20, 2016, 1:27:04 PM11/20/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-11-20 18:28 GMT+01:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Sunday, November 20, 2016 at 8:47:05 AM UTC-8, ஆரோதன் wrote:
2016-11-20 12:40 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
அன்புள்ள ராஜம்அம்மையாருக்கு வணக்கம்.
மனுவின் உண்மையான பெயர் சுமதி பார்க்கவா. இவர் ஒரு வைசியர். கிமு 185ல் புஷியமித்திர சுங்கன் மௌரிய அரசாட்யை ஒழித்து தமது தலைமையில் சுங்கர் வம்சத்தை நிறுவினான். இந்தியாவின் முதல் பிராமணர்களின் அரசு அது. இது சமூக குழப்பத்திற்கு வித்திட்டதால் அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது, அதன் அடிப்படையில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் உச்சமாக சுமதி பார்க்கவா மனு ஸ்மிருதியை எழுதினார் அல்லது தொகுத்தார். அது கிபி 100 முதல் கிபி 200க்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கலாம்.

திராவிடக்குறும்புகள் இதையும் மாற்றியே சொல்லுகிறார்கள். 

தி.க.வின் திராவிடத் தலைவர் கீரமணி மனுவை பிராமணனுக்கு பிறந்தவன் என்று தான் முழங்குகிறார். நீங்களோ சுமதி பார்க்கவா ஒரு செட்டியார் என்கிறீர். ஆக திராவிடம் பொய்மையை கொண்டு தான் ஒரு சார் மக்கள் மீது வெறுப்பை வளர்த்து வந்துள்ளது.

அம்பேத்துக்கரும் தமிழ் நாட்டார் எழுதிய நூல்களை மொழிபெயர்த்துக்கொண்டு மூலநூல் ஆசிரியர் பெயரை  குறிக்கவில்லை என்று குற்றம்சாற்றுகின்றனரே. அம்பேத்துகரிடமும் பொய்மையா?  

ஆரோதன்     
 

மனு ஒரு செட்டியார் என்பதற்கெல்லாம் ஒரு ஆதாரமும் இல்லை.

​தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதை பலர் நடைமுறையாகக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் நொந்து போகின்றேன்.

திரு சன்னா தனது குறிப்பில் மனு வைசியர் வ​ர்ணத்தைச் சார்ந்தவர் எனக்குறிப்பிடுகின்றார். செட்டியார் சமூகம் என குறிப்பிட்டதை நான் காணவில்லை.
சேசாத்ரி அதனை தான் விரும்பும் வகையில் திரித்து செட்டியார் என சொல்கின்றார். இப்போது  திரு.கணேசன் வந்து  மனு செட்டியார் என்பதற்கு ஆதாரமில்லை என்கின்றார்.  ஒருவர் கொடுத்திருக்கும் குறிப்பை அதே நிலையில் பயன்படுத்திக் கொண்டு கருத்தாடல் செய்வது அவசியம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

சுபா





 
தமிழில் மாடர்னிட்டி - இந்திய செம்மொழிகள் காட்டும் ஜாதி ஸிஸ்டம் மாற்றுவதற்கு - பல வழிகளில் வந்துகொண்டுள்ளன. அவற்றில் பெரியார் ஈவேரா வழி ஒன்று. இசுலாமியர், கிறித்துவர், பலவகை மதங்கள், ஹிந்து சமயங்களில் குருமார்கள், டிவி, அயல்நாட்டார் செயல்கள், ஆராய்ச்சிகள், நிதிக்கொடை, .... எனப் பலவழிகள் ஒரு பெரும் சமுதாயமாக இருக்கும் தமிழகத்துக்கு வருதல் இயற்கை.  பேரா. சி. இலக்குவனார் பாரதி, பெரியார், அண்ணா புரட்சிகளைப் பாடியுள்ளார்:

செந்தமிழ்ப் பாரதியும் சீர்சால் பெரியாரும்

நந்தமிழ் காக்கின்ற நல்லறிஞர் அண்ணாவும்

செய்த புரட்சிகளைச் சீர்த்தூக்கிப் போற்றுமின்

எய்துமின் இன்பமெலாம் இங்கு.


எந்த மதம் என்றாலும், மொழியினர் என்றாலும் தமிழர்கள் அவற்றில் உள்ள நல்லனவற்றை ஏற்றுக்கொள்வது நம் மரபு, வரலாறு.


நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

rajam

unread,
Nov 20, 2016, 3:36:04 PM11/20/16
to Gowthama Sanna, மின்தமிழ், Subashini kanagasundaram
நாகர்கள் பற்றி நீங்கள் சொன்ன குறிப்பு எனக்குள் நெடுநாளாக உறுத்திக்கொண்டிருந்த ஒரு கருத்தை உறுதி செய்தது, திரு. சன்னா! மிக்க நன்றி!

நாகர்களைப்பற்றி நீங்கள் தனியாக ஒரு பதிவாகவோ கட்டுரையாகவோ எழுதினால் பலருக்கும் தெளிவு பிறக்கும்.

பொதுவாக … நாகலோகம் என்றால் “பாதாள உலகம்” என்றே பொருள் சொல்லிவந்திருக்கிறார்கள். 

பீமனோ அர்ஜுனனோ … அவன்கூட நாகலோகத்திலிருந்து ஒரு பெண்ணை மணம் செய்துகொண்டானாமே? நான் புராணப்படிப்பில் ரொம்பவே மட்டம் (weak)! 

நாகநாடு (சிலப்பதிகாரத்தில் வழங்குகிறது), நாகலோகம், நாகர்வாழ் மலை (மணிமேகலையில் வருவது) இதெல்லாம் கண்காணாத பாதாளலோகம் இல்லை என்பது என் கருத்து. 

எனக்கு இன்னும் பல கேள்விகள் உள. போகப்போகப் பார்ப்போம். இந்த இழையில் மனுதர்மத்தை ஆய்வோம்.

நன்றியுடன்,
ராஜம்


திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 20, 2016, 11:40:32 PM11/20/16
to mintamil

2016-11-20 12:40 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர். பிற்காலத்தில் சத்திரியர்களிலிருந்து நான்காம் வர்ணமான சூத்திரர் தோன்றினர். இவர்களை வர்ணாஸ் என்று அழைத்தனர் அதாவது வர்ணாஸ்ரமம். இவற்றிற்கு வெளியே இருப்பவர்கள் அவர்ணாஸ். இந்த அவர்ணர்களும் வர்ண அமைப்பில் திரிந்த அல்லது கலப்பு வர்ணத்தவர்களால் உருவானவர்கள்.

இந்த அவர்ணர்களுக்கும் தமிழ் இலக்கியங்கள் கூறும் அவுணர்களுக்கும் தொடர்பிருக்குமோ?


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Gowthama Sanna

unread,
Nov 20, 2016, 11:51:35 PM11/20/16
to rajam, மின்தமிழ், Subashini kanagasundaram
ராஜம் அம்மையாருக்கு வணக்கம்.

உங்களின் பதிலுக்கு நன்றி. நாகர்கள் பற்றின ஆய்வு தமிழுலகிற்கு மிகவும் அவசியமான ஒன்று, உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறேன்.

மேலும் மனுவின் மீது ஏன் கடும் வெறுப்பு உருவானது என்பதை புரிந்துக் கொள்வது கடினமல்ல. அவர் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் அவர்ணர்களுக்கும் விதித்த கடும் கட்டுப்பாடுகள், தண்டனைகள் கொடுமையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதை பிராமணர்களுக்கான அனுகூலமாக அதை மேற்கொண்டார் என்பதில்தான் வெறுப்பு உருவாகிறது. ஆனால் அந்த அனுகூலங்களை அனுபவித்தவர்கள் மனுவை வரிந்துக் கட்டிக்கொண்டு ஆதரிக்கலாம், பாதிக்கப்பட்டவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும். குறிப்பாக இந்தோ ஆர்ய பண்பாட்டு பெண்களுக்கு அவர் இழைத்த மூன்று கொடுமைகளைப் பார்க்கலாம்.

பெண்களுக்கு பூணுல் உரிமையை மறுத்து அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பை தடுத்தது.
குழந்தை திருமணத்தை நியாயப்படுத்தியது.
விதவைகள் உடன் கட்டை ஏறவேண்டும் என்று அதற்கு மத அங்கீகாரம் கொடுத்தது.

இந்த மூன்றும் பெண்களுக்கு எதிராக மனு மேற்கொண்ட பண்பாட்டு போர் என்றே பார்க்கிறேன். பல நூற்றாண்டுகளாக பெண்கள் அனுபவித்த பல கொடுமைகளுக்கு இவையே அடிப்படையாக இருந்தன என்பது மிகையல்ல என நினைக்கிறேன்.

மேலும், மனுவின் ஆதரவாளகள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருக்கிறார்கள் என்பது ஏன் என்பது புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் நினைத்தால்கூட மனுவை முழுமையாக பின்பற்ற முடியாது.

மாட்டுக்கறியை பிராமணர்கள் எப்படி சாப்பிட வேண்டும், அதன் வகைகள் எத்தனை, குறிப்பாக பசு மாட்டுக்கறியை பிராமணர்கள் தானம் பெற்று அதை எப்படி தமது குழுவிற்குள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். சடங்குகளில், யாகங்களில் கொழுத்த பசுவினைக் கொன்று அதை எப்படி யாகம் வளர்ப்பவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஏராளமாக சலுகைகளை பிராமணர்களுக்கு அளித்தார். மனுவை போற்றும் அவரது பக்தர்கள் இதைப் பேசினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

பெண்கள், நாகர்கள் மிலேச்சர்கள், அவர்ணர்கள், தஸ்யூக்கள் ஆகியோர் மீது மனு காட்டிய வெறுப்பு.. எல்லாம் வரலாறாக இருக்கிறது. சுய சாதிப் பற்றோ, பிறசாதி வெறுப்போ ஆய்வுக்கு உதவாது என்பதை இழையில் உள்ளவர்கள் உணர்வார்கள் என நினைக்கிறேன்.

மற்றபடி மனுவின் அறிவாற்றலை நான் மதிக்கிறேன். ஆனால் அவரது கொள்கைகளை வெறுக்கிறேன்.

நாகர்கள் பற்றின ஆய்வினை விரைவில் தொடங்க முயற்சிக்கிறேன்.

நன்றி 
அன்புடன்
கௌதம சன்னா 

2016-11-21 10:20 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
ராஜம் அம்மையாருக்கு வணக்கம்.

உங்களின் பதிலுக்கு நன்றி. நாகர்கள் பற்றின ஆய்வு தமிழுலகிற்கு மிகவும் அவசியமான ஒன்று, உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறேன்.

மேலும் மனுவின் மீது ஏன் கடும் வெறுப்பு உருவானது என்பதை புரிந்துக் கொள்வது கடினமல்ல. அவர் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் அவர்ணர்களுக்கும் விதித்த கடும் கட்டுப்பாடுகள், தண்டனைகள் கொடுமையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதை பிராமணர்களுக்கான அனுகூலமாக அதை மேற்கொண்டார் என்பதில்தான் வெறுப்பு உருவாகிறது. ஆனால் அந்த அனுகூலங்களை அனுபவித்தவர்கள் மனுவை வரிந்துக் கட்டிக்கொண்டு ஆதரிக்கலாம், பாதிக்கப்பட்டவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும். குறிப்பாக இந்தோ ஆர்ய பண்பாட்டு பெண்களுக்கு அவர் இழைத்த மூன்று கொடுமைகளைப் பார்க்கலாம்.

பெண்களுக்கு பூணுல் உரிமையை மறுத்து அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பை தடுத்தது.
குழந்தை திருமணத்தை நியாயப்படுத்தியது.
விதவைகள் உடன் கட்டை ஏறவேண்டும் என்று அதற்கு மத அங்கீகாரம் கொடுத்தது.

இந்த மூன்றும் பெண்களுக்கு எதிராக மனு மேற்கொண்ட பண்பாட்டு போர் என்றே பார்க்கிறேன். பல நூற்றாண்டுகளாக பெண்கள் அனுபவித்த பல கொடுமைகளுக்கு இவையே அடிப்படையாக இருந்தன என்பது மிகையல்ல என நினைக்கிறேன்.

மேலும், மனுவின் ஆதரவாளகள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருக்கிறார்கள் என்பது ஏன் என்பது புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் நினைத்தால்கூட மனுவை முழுமையாக பின்பற்ற முடியாது.

மாட்டுக்கறியை பிராமணர்கள் எப்படி சாப்பிட வேண்டும், அதன் வகைகள் எத்தனை, குறிப்பாக பசு மாட்டுக்கறியை பிராமணர்கள் தானம் பெற்று அதை எப்படி தமது குழுவிற்குள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். சடங்குகளில், யாகங்களில் கொழுத்த பசுவினைக் கொன்று அதை எப்படி யாகம் வளர்ப்பவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஏராளமாக சலுகைகளை பிராமணர்களுக்கு அளித்தார். மனுவை போற்றும் அவரது பக்தர்கள் இதைப் பேசினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

பெண்கள், நாகர்கள் மிலேச்சர்கள், அவர்ணர்கள், தஸ்யூக்கள் ஆகியோர் மீது மனு காட்டிய வெறுப்பு.. எல்லாம் வரலாறாக இருக்கிறது. சுய சாதிப் பற்றோ, பிறசாதி வெறுப்போ ஆய்வுக்கு உதவாது என்பதை இழையில் உள்ளவர்கள் உணர்வார்கள் என நினைக்கிறேன்.

மற்றபடி மனுவின் அறிவாற்றலை நான் மதிக்கிறேன். ஆனால் அவரது கொள்கைகளை வெறுக்கிறேன்.

நாகர்கள் பற்றின ஆய்வினை விரைவில் தொடங்க முயற்சிக்கிறேன்.

நன்றி 
அன்புடன்
கௌதம சன்னா 








It is loading more messages.
0 new messages