![]() | |
| நூலின்பெயர்: கொன்றைப்பூ வெளியானஆண்டு: ஜூன் 1972 பதிப்பகம்: பாப்பா பதிப்பகம் குறிப்புகள்: 'அத்திப்பூ' நாடகம் 11- ஆம் வகுப்பு துணைப்பாடநூலில் இடம் பெற்றது(1978) |
![]() |
| நூலின்பெயர்: அறுசுவை வெளியானஆண்டு: ஆகஸ்டு1979 பதிப்பகம்: சேகர் பதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: ஏழுநாள் வெளியானஆண்டு: ஆகஸ்டு1978 பதிப்பகம்: சேகர் பதிப்பகம் |
![]() | |||
| நூலின்பெயர்: எல்லாம்இன்பமயம் வெளியானஆண்டு: டிசம்பர்1984 பதிப்பகம்: பராசக்திபதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: உயர்ந்தஉள்ளம் வெளியானஆண்டு: டிசம்பர் 1984 பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: கனவுக்கண்கள் வெளியானஆண்டு: டிசம்பர்1985 பதிப்பகம்: பராசக்திபதிப்பகம் குறிப்புகள்: அமுதசுரபி, மாலைமுரசு, மன்றம், குயில், காதல், போர்வாள், மல்லி ஆகிய இதழ்களில் இக்கதைகள் வெளிவந்துள்ளன |
![]() |
| நூலின்பெயர்: நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் வெளியானஆண்டு: டிசம்பர்1985 பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: சங்கமித்திரை வெளியானஆண்டு: ஆகஸ்டு1982 பதிப்பகம்: விசாலாட்சி பதிப்பகம் குறிப்புகள்: தமிழகஅரசின்பரிசுபெற்றது(1984) |
![]() |
| நூலின்பெயர்: கிள்ளிவளவன் வெளியானஆண்டு: 1960 பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் குறிப்புகள்: ‘கொடைவள்ளல் குமணன்’ நாடகம் 12-ஆம் வகுப்பு சிறப்புத் தமிழில் இடம் பெற்றது |
![]() |
| நூலின்பெயர்: வெண்ணிலா வெளியானஆண்டு: ஜனவரி 1963 பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் |
![]() |
| நூலின்பெயர்: அலெக்ஸாண்டர் வெளியானஆண்டு: ஏப்ரல் 1963 பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் |
![]() | |
| நூலின்பெயர்: மருதுபாண்டியர் வெளியானஆண்டு: பிப்ரவரி 1963 பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் |
![]() |
| நூலின்பெயர்: சாணக்கியன் வெளியானஆண்டு: டிசம்பர் 1992 பதிப்பகம்: திருமேனி நிலையம் |
![]() |
| நூலின்பெயர்: கைவிளக்கு வெளியானஆண்டு: நவம்பர்1979 பதிப்பகம்: இலக்குமி நிலையம் |
![]() |
| நூலின்பெயர்: பேசும்ஊமைகள் வெளியானஆண்டு: டிசம்பர் 1984 பதிப்பகம்: மணியம் பதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: நல்லநாள் வெளியானஆண்டு: டிசம்பர்1984 பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: நல்லூர் முல்லை வெளியானஆண்டு: டிசம்பர்1985 பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் குறிப்புகள்: கன்னடம், இந்தி, தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது |
![]() |
| நூலின்பெயர்: வளையாபதி வெளியானஆண்டு: டிசம்பர்1985 பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: இரகசியம் வெளியானஆண்டு: நவம்பர்1991 பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: பள்ளிக்கூடம் வெளியானஆண்டு: ஏப்ரல் 1989 பதிப்பகம்: திருமேனி நிலையம் |
![]() |
| நூலின்பெயர்: தங்கத்தாமரை வெளியானஆண்டு: ஆகஸ்டு1962 பதிப்பகம்: வள்ளுவர் பண்ணை |
![]() |
| நூலின்பெயர்: மூன்றாவதுதுருவம் வெளியானஆண்டு: நவம்பர் 1970 பதிப்பகம்: ஸ்டார் பிரசுரம் |
![]() |
| நூலின்பெயர்: நெஞ்சின் ஆழம் வெளியானஆண்டு: மார்ச் 1979 பதிப்பகம்: மருதமலையான் |
![]() |
| நூலின்பெயர்: பன்னீர்சிந்தும்பனிமலர் வெளியானஆண்டு: அக்டோபர் 1983 பதிப்பகம்: நறுமலர்ப் பதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: நெஞ்சத்தில் நீ வெளியானஆண்டு: டிசம்பர் 1987 பதிப்பகம்: பராசக்திபதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: அவள்காத்திருக்கிறாள் வெளியானஆண்டு: டிசம்பர் 1982 பதிப்பகம்: பூவழகிப் பதிப்பகம் குறிப்புகள்: கன்னடமொழியில் மொழிப் பெயர்க்கப்பட்டது |
![]() |
| நூலின்பெயர்: வரலாற்றுக்கருவூலம் வெளியானஆண்டு: டிசம்பர் 1984 பதிப்பகம்: சேகர் பதிப்பகம் குறிப்புகள்: தமிழகஅரசின்பரிசுபெற்றது (1985) |
![]() |
| நூலின்பெயர்: வரலாறுகூறும்திருத்தலங்கள் வெளியானஆண்டு: ஏப்ரல் 2006 பதிப்பகம்: மூவேந்தர் பதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: ஆட்சீசுவரர்திருக்கோயில் வெளியானஆண்டு: ஏப்ரல் 1975 பதிப்பகம்: கோயில் விழாக்குழு |
![]() |
| நூலின்பெயர்: கருணைக்கடல் வெளியானஆண்டு: ஜூலை1963 பதிப்பகம்: சுகுணா பப்ளிஷர்ஸ் |
![]() |
| நூலின்பெயர்: திருநாவுக்கரசர் வெளியானஆண்டு: ஜனவரி 1964 பதிப்பகம்: அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் |
![]() |
| நூலின்பெயர்: ஒருமனிதன்தெய்வமாகிறான் வெளியானஆண்டு: டிசம்பர் 1984 பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |
![]() |
| நூலின்பெயர்: கருமாரிப்பட்டிசுவாமி வெளியானஆண்டு: ஜனவரி 1987 பதிப்பகம்: ராதா ஆப்செட் பிரஸ் |
![]() |
| நூலின்பெயர்: சம்புவரையர் வெளியானஆண்டு: 1989 பதிப்பகம்: பராசக்தி பதிப்பகம் |

இதுவும் பெரியார் எழுதிய புத்தகம் தான். எந்த வித ஆதிக்கத்தையும் எதிர்த்தவர் அவர். அவர் பேசியது சமத்துவம் மட்டும் தானே தவிர ஆதிக்க பரிமாற்றம் அல்ல. அது புரிந்ததால் தான் பெரும்பாலான நேரங்களில் பெண்களாக இருந்தாலும் கேள்வி கேட்டாக வேண்டியிருக்கிறது.
இதில் பெரும்பாலும் அழகு ஆபரணம் என்று பெண்கள் தன்னை அலங்கரித்து கொள்வதை கேள்விக்குள்ளாக்கி இருப்பார். உடையை பற்றியும் தான். ஆனால் இன்று பெரியாரின் பெண்ணியம் என்று பேசி கொண்டிருக்கும் பல பெண்கள் அலங்கரிப்பில் அதிக கவனம் செலுத்துவதை காண முடிகிறது. அது தவறென்றோ சரியென்றோ சொல்லவில்லை. அழகை குறித்தான பெரியாரின் பார்வை வேறு என்பதை தான் சொல்ல வருகிறேன்.
அழகு என்பது தான் பெண்களை அடிமைப்படுத்தும் பெரும் ஆயுதம். அதை விடுத்து முடி வெட்டி கொண்டு ஆண்கள் உடைகள் போல தங்களுக்கு இலகுவான உடைகளையே அணிய வேண்டும் என்று பல விசயங்களை பேசியிருப்பார்.
பெண்கள் பெரும்பாலும் எந்த பிரச்சினை என்றாலும் தான் ஒரு பெண் என்ற நிலையில் இருந்தே ஒரு பிரச்சினையை அணுகுவார்கள். அதனாலேயே தான் பெண்களே தவறு செய்திருந்தாலும் அவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஒரு ஆண் தவறு செய்யும் போது மற்றொரு ஆண் பெரும்பாலும் அவன் ஆண் என்பதற்காக அவனுக்கு ஆதரவு நிலை எடுப்பதில்லை. ஆனால் பெரும்பாலான பெண்கள் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவளுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்ற அளவில் தான் அவர்களின் சமத்துவ போக்கு இங்கே இருக்கிறது.
அவர் ஆண்கள் சார்பாகவும் பேசவில்லை. பெண்கள் சார்பாகவும் பேசவில்லை. எது சரியோ எது சமத்துவமோ அதை மட்டுமே அவர் பேசினார். அதனால் மட்டுமே அவரின் எழுத்துகளும் பேச்சுகளும் இன்றளவும் ஏற்றுக்கொள்ளத்தக்க வண்ணம் இருக்கின்றன. பெரியாரை உணர்ந்து கொள்ள புரிந்து கொள்ள ஆண் பெண் இருபாலருக்கும் அடிப்படை தேவை இந்த சமத்துவ நோக்கை நோக்கி நகர்வதே.
A thrilling story of espionage and cartography against the backdrop of imperial ambitions of two powers, Britain and Russia
In the 19th century, when the rivalry between Imperial Russia and Great Britain was at its peak, both powers tried to survey, explore and expand regions under their rule, particularly the Indian subcontinent and its neighbours. Several writers including Peter Hopkirk (The Great Game) and John Keay (The Great Arc: The Dramatic Tale of how India was Mapped and Everest was Named) recounted this rivalry as also the story of the two men who undertook the measurement of the Himalayas and the mapping of the Indian subcontinent. Riaz Dean’s Mapping the Great Game is a thrilling story of espionage and cartography played out against the backdrop of imperial ambitions of powerful players.
Ground report
Dean travelled much of the area described in the book, including the two halves of Turkestan (western or Russian Turkestan and eastern or Chinese Turkestan), and to the roof of the world. Set in four parts and arranged chronologically, with five informative maps, the first part deals with political intrigues and the roles played by some adventurous young people like William Moorcroft, a veterinary surgeon, in securing details of regions considered strategically important. Appointed Superintendent of the Stud for the East India Company’s large horse-breeding farm in Patna in 1808, Moorcroft soon realised he would need to travel beyond the subcontinent’s borders in the north and west to get better breeding stock, and that is how his exploration began.
With more twists and turns in the political system of Europe, and Napoleon’s defeat, Britain was worried about the Tsar’s intentions. The author introduces important players in this game like Arthur Conolly, the British intelligence officer sent to get more information. Among the others sent to explore and spy was Lieutenant Alexander Burnes, an enthusiastic young officer and a brilliant linguist. The ultimate prize of this Great Game was India; the target was the northern neighbours as they offered the gateway.
A name for Everest
In the second part, Dean describes the survey work in detail, undertaken by William Lambton and his cartographers. Lambton laid the baseline, which stretched across 12 km between St. Thomas Mount in Madras and another hillock and measured the length of a degree of latitude along a longitude in peninsular India. This alone took 42 days to measure, indicating the hard task ahead. By 1810, Lambton could produce a map of the southern peninsula. The entire team looked upon him as a father figure of the survey and when he died near Nagpur on January 20, 1823, George Everest took over the job of measuring the length of the subcontinent, from peninsular India to the Himalayas. For his hard work, Everest was known as ‘Neverest’ but he was recalled before he could finish the task due to failing health. In 1844, he recorded all his findings in two volumes.
‘Pundits’ at work
When the highest peak was measured and found to be 29,030 feet (8,848 metres) above sea level, the surveyors knew it by its various local names, prompting the surveyor-general Andrew Waugh to call it Mount Everest, after his predecessor George Everest.
Part three is dedicated to the Pundits, “an obscure group of natives,” who were the pillars of the Great Trigonometrical Survey and its exploration and mapping programme. They travelled entirely on foot and with meagre resources. Captain Thomas George Montgomerie, who followed Waugh, used the Pundits to the best of their abilities. He produced the first accurate map of the Jammu and Kashmir region. The fourth part deals with Tibet, and Russia and Britain’s tussle over this important location and its consequences. The book is remarkable for packing in so many details between its covers.
Mapping the Great Game: Explorers, Spies & Maps in Nineteenth Century Asia; Riaz Dean; Viking/ Penguin; ₹599.
The writer is an author and historian.
Why you should pay for quality journalism - Click to know more
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/14cfc68a-51b8-491a-832e-1c8137c64beb%40googlegroups.com.
புதிய பதிப்பு
=============================
மெக்கன்சி சுவடிகள் தமிழகப் பழங்குடிமக்கள்
ம. இராசேந்திரன்
================================
பாறையிலும் பிற பொருள்களிலும் எழுதிவந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கியது தொழிற்நுட்பம் மிக்க ஒரு கலையின் காலம். அவ்வாறு எழுதப்பட்டவை எழுத்தோலைகள் அல்லது சுவடிகள் என அழைக்கப்படுகின்றன.
***
ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய இராணுவ அதிகாரி காலின் மெக்கன்சி. தொல்பொருள் சேகரிப்பிலும் கீழ்த்திசை ஆய்விலும் ஆர்வம் மிக்கவர். அவருடைய திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள இன்றியமையாத சான்றுகளாகத் திகழ்கின்றன. மெக்கன்சியின் முயற்சியால் தொகுக்கப்பட்ட சுவடிகளில் 1534 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இவற்றில் இலக்கியம், வரலாறு, பண்பாடு, வாழ்க்கைமுறை எனப் பல்வேறு செய்திகள் இடம்பெறுகின்றன.
இந்த நூலில் ம. ராசேந்திரன் மெக்கன்சியின் வாழ்க்கை வரலாற்றில் தொடங்கி அவர் சேகரித்த ஆவணங்களின் வகைதொகையுடன் பழங்குடி மக்கள் பற்றிய ஆய்வை, தமிழகப் பழங்குடி மக்கள் வரலாற்றுடன் விவரிக்கிறார். அத்துடன் மெக்கன்சி தொகுத்தவற்றுள் 16 சுவடிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் குறும்பர், வேடர், இருளர், ஏனாதியர், குறவர், வில்லியர், கரையர், பட்டணவர், லம்பாடியர், மலையரசர், குண்ணுவர் போன்ற தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த செய்திகளையும், இவற்றைக் கொண்டு கள ஆய்வு மூலம் சேகரித்த விவரங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
குறிப்பாக, குறும்பர்களின் வரலாற்றுப் பின்னணி, தொழில், திருமண முறை, சடங்குகள், வழிபாடுகள், மொழி என அவர்களின் இன்றைய நிலை, வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய செய்திகளை விவரித்துச் செல்வது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றன. நூலின் இறுதியில் சுவடிகளின் சுருக்கமும் இடம்பெறுகிறது. இதன்மூலம் இந்த நூல் சுவடிகளில் பழங்குடி மக்கள் குறித்த பதிவுகளைக் கவனப்படுத்தும் முதலாவது நூல் மட்டுமல்ல, அவர்களை ஆராய்வதற்கான பல்வேறு ஆய்வுக் களத்தையும் அறிவதற்கு உதவுகிறது. அத்துடன் திராவிடர் குறித்த கருத்தாக்கத்தை வரலாற்று ரீதியாக அணுகுவதற்கும் வழிவகைச் செய்கிறது.
மானிடவியல், பழங்குடிமக்கள், திராவிடம் குறித்து ஆர்வமுள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
--------------------------------------------------------------------
நூலளவு: டெமி; பக்கம் 240; விலை ரூ.180
தொடர்புக்கு: 9444 77 2686, 04332 273444
இன்று கடந்த டிசம்பர் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை 2 ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய ஸ்டுட்கார்ட் நகரில் அமைந்திருக்கும் லிண்டன் அருங்காட்சியகம் சென்றிருந்தேன். அருங்காட்சியக ஆசியவியல் துறை இயக்குனர் புதிதாக தங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்த பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது நூல் ஜெர்மானிய மொழி பெயர்ப்பு நூல்களை எனக்குக் காட்டினார். இதில் ஒரு நூல் ஜெர்மனியிலுள்ள கெல்ன் நகரில் அமைந்திருக்கும் கெல்ன் பல்கலைக்கழகத்தின் ஆசியவியல் இணைப்பேராசிரியர் ஸ்வென் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு அனைத்துலக பெரியார் மாநாட்டினை நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-----
அமிலத்தையும் ஆயுதமாக்கும் ஆண்கள், அதை எதிர்கொண்டு வாழும் பெண் சமூகம்
ஆவணப்படுத்தி அமெரிக்கா வரை கொண்டு சென்றவர்
பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வுப்பதிவு,
ஆண்களின் வன்மத்திற்கு இரையாகிய பெண்கள்
மீண்டும் எழுந்து பெண்ணாக நிற்கும் தன்னம்பிக்கை பெண்கள்
அனைத்து ஆண்களும் பெண்களும் நல்லவர்களே பழகும் விதத்திலும் பழகிய விதத்திலும்
ஆனால் ஒரு சில ஆண்கள் தனக்கு அந்தப் பெண் கிடைக்கவில்லை என்ற மன உணர்ச்சியின் அடிப்படையில் ஏதேனும் தீங்கு செய்ய நினைக்கும்போது அவன் கண்முன் மற்ற இடத்தில் நடந்த நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து அதையே தானும் செய்யத் துடிக்கிறான்.
அமில வீச்சில் ஈடுபடும் ஆண்கள் அனைவரும் பதினைந்து வயதிற்கும் மேல் 20 அல்லது 25 வயதிற்கு உட்பட்ட மாணவர்களே,
இந்த வயதில் இவர்களின் கோபம் உடல் தோல் இன்ப நுகர்ச்சியைத் தவிர வேறென்னவாக இருக்கும்.
இதனால் அந்தப்பெண்ணும்,
அந்தப்பெண்ணின் குடும்பம் வதைபடும் நிகழ்வுகள் வாழ்நாள் முழுமைக்கும்.
இறந்து போய்விட்டால் அதே நினைவுகளுடன் அந்தத்தாயும் இறப்பதும்.
அந்தக் குடும்பம் சோகத்துடன் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நொடியும் இறந்து இறந்து வாழ்வதும் யாருக்குத் தெரியும்.
ஆம்
இதனையெல்லாம் இந்தியா முழுமைக்கும் கடந்த ஆறு ஆண்டுகாலத்திற்கும் மேலாக அலைந்து, திரிந்து ஆவணப்படுத்தியுள்ளார் நமது உடுமலை மண்ணில் பிறந்த முனைவர் ப.கற்பகவள்ளி,
யாருக்கும் தோன்றாத சிந்தனை,
யாருக்கும் வராத செயல் இவருக்கும் மட்டும் எப்படி வந்தது?
இதற்கு உந்து சக்தியாகவும், ஆக்கபூர்வமாகமாகவும் இருந்திட்ட இவரது தாயும் அவரது துணைவர்
திரு. மனோகரன் அவர்களும்
இவரது “திராவகம் சிதைத்த வாழ்வு ” எனும் நூல் கருஞ்சட்டைப்பதிப்பகத்தில் வெளியிடப்பட்டு;ள்ளது.
இது 26 பக்கங்கள் கொண்ட குறுநூலே என்றாலும் இதன் வலிகளோ, வேதளைகளோ எழுதவியலா.
முனைவர் ப.கற்பகவள்ளி இந்தியா முழுமைக்கும் ஆவணப்படுத்திய இந்த ஆய்வை இந்தியாவின் முழுமைக்கும் வந்த ஆய்வுகளில் சிறந்த ஆய்வாகவும், ஆய்வாளராகவும் சிறந்த கட்டுரையாளராகவும் தேர்வு செய்யப்பட்ட இருவரில் ஒருவராக அமெரிக்கா ஓர்லாண்டா புளோரிடா அகாடமி ஆவ் கிரிமினல் ஜஸ்டிஸ் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் இவரது கட்டுரை வாசிக்கப்பட்டது.
இவரின் இந்த ஆய்வுக்காக உலகமெங்கும் இருந்து வருகை தந்த 150 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள். ஆராய்ச்சி அறிஞர்கள் நடுவில் அனைத்து ஆய்வறிஞர்களுக்கும் வழங்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக 10 நிமிடங்கள் கொடுத்து இவரை உற்சாகப்படுத்தியது அந்த பன்னாட்டு நிறுவனம்.
என்னதான் வெளிநாட்டு நிறுவனங்களும், உலக நாடுகள் அங்கீகரித்தாலும் இங்கிருக்கும் குறுகிய எண்ணம் கொண்ட் உணர்ச்சி வயப்பட்ட இளைஞர்கள் மத்தியில் சிறிய சிறிய இன்பங்களுக்காக சிக்குண்டு சிதறுண்டு ஆட்பட்டு அவதிப்படும் பெண்களுக்காகத் தான் இந்தப்ப பதிவு
தன் பெற்றோர்கள் மட்டுமல்லாது இதைக் கண்ணுறும் அனைத்து நல்லுள்ளங்களும் தம்மிடமிருந்து ஒரு விழிப்புணர்வைத் தொடங்குவோம்.
ஆயிரக்கணக்கான அமில வீச்சில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆவணப்படுத்திய
திராவிடம் சிதைந்த வாழ்வு நூலை வாங்கிப்படியுங்கள்.
மற்றவர்களுக்கு சொல்லும் முன் தம்மிடமிருந்து
ஒரு நல்ல விழிப்புணர்வுத் தொடக்கத்தைத் தொடங்குங்கள்.
நாம் அனைவரும் அறிந்த ரத்ததானம், கண்தானம், உடல்தானம் ஆகியவற்றை அறிந்த நாம்
தோல் தானத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இறந்து போனவர்களின் உடலிலிருந்து சிறிதளவுதோலைத் தானமாகக் கொடுத்தால்
அவரின் முகச்சிதைவுகள் சீர்படவும் வாய்ப்புள்ளதாக தனது தீர்வை அருமையுhகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளார் முனைவர் ப. கற்பகவள்ளி
வாழ்த்துவோம் பாராட்டுவோம்.
ஆசிரியப்பணி . . . . . அறப்பணி . . .
[12:09 AM, 2/20/2020, #whatsapp] வே.கி. சிவகுமார்
----
திராவகம் சிதைத்த வாழ்வு....நூலை முன்வைத்து.....
—— மஞ்சுளா தேவி
இந்த சிறந்த நூலை எழுதிய முனைவர்.கற்பகவள்ளிக்கும்,வெளியிட்ட,கருஞ்சட்டைப் பதிப்பகத்திற்கும் என் பாராட்டுக்கள்...
இருபத்திஆறு பக்கங்களை உடைய இச் சிறு நூல் ஆண் சமூகத்தில் நிகழ வேண்டிய மனமாற்றத்தைக் கோருகிறது .
இந்நூல்,இன்றைய நவீன காலத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினையான திராவக வீச்சைப் பற்றி நுணுக்கமாகப் பேசுகிறது.
சில நூல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போதே பக்கங்களைக் கடக்க முடியாமல் மனம் கனத்துப் போகும் ...என்பதை நம்பாதவர்கள்
இந்நூலைப் படிக்கும்போது உணர்வார்கள்...இதயநோய் உள்ளவர்கள்,கர்ப்பிணிப்பெண்கள்,அனைவரும் இந்த நூலைப் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன்.அப்போதுதான் தெரியும் ,நாம் வாழும் இந்த பூமி இவ்வளவு கயமை நிறைந்தது என்று.....
ஆண்குழந்தைகளை வளர்க்கும் முறையை இச்சமுகம் எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று...
இதில் சொல்லப்படுகிற புள்ளி விவரங்கள் நம்மைப் பதற வைக்கின்றன.உதாரணத்துக்கு ஒன்று..1901 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,1 வயதிற்கும் குறைந்த விதவைகளின் எண்ணிக்கை 900 க்கும் மேற்பட்டிருந்தது...
திராவகவீச்சிற்கு எழுபது சதக் காரணம் காதலை ஏற்க மறுப்பது...திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட ஓர் ஆணைக் கூட நாம் சந்தித்ததில்லை என்பது எவ்வளவு பெரிய சமூக முரண்....பெண் என்றால் அழகு...என்ற சமூக பிம்பத்தை இந்நூல் காட்டுகிறது.
இந்நூல் ஆசிரியர்,இந்தியா முழுவதும் பயணித்து பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்திருக்கிறார் என்பது இந்நூலின் பெரும் பலம் .
அனுமுகர்ஜி என்ற பாதிக்கப்பட்ட பெண்ணைப்பற்றி ஆசிரியர் கூறுகிறார்...அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது ஆனால் அந்தக் கண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று தெரியாத அளவிற்குத் திராவகம் அவர் முகத்தை சிதைத்துள்ளது....படிப்போரை உலுக்கும் வரிகள்...
சாய்னா என்ற பாதிக்கப்பட்ட பெண், திராவகம் வீசியவனுக்கு 7 வருடச் சிறை தண்டனை தந்தபோது கூறுகிறார்... 7 வருடச்சிறை தண்டனை ஒரு பெரிய வலி இல்லை...அவனுடைய சுண்டுவிரலை மட்டுமாவது திராவகத்தில் முக்கி எடுங்கள்...சுண்டுவிரலின் வலியை வைத்து என்னுடைய வலி எவ்வளவு பெரியது என அவன் புரிந்து கொள்ள வேண்டும்..இந்த ஆதங்கத்தின் பின் உள்ள வலி நம் கற்பனை தாண்டியதுதானே.
இவர்களுக்கு தோல்தானம் உதவும் அது பரவலாக வேண்டும் என்கிறது இந்நூல்.
நினைத்ததும் அடையமுடியாவிட்டால் சிதைப்பதற்கு பெண் உயிரற்ற பொருள் அல்ல...ஊனும் உயிரும்,வலியும் உள்ள சக உயிரி..என்பதை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது.

___________________________________________
At a time when Hindutva and pan-Tamil social media have been rivalling each other in propagating the relative antiquity of the culture and scientific temper of their forebears without challenging each other, R. Balakrishnan keeps it academic, strengthening internal evidence to establish the ‘Dravidian heritage’ of the Indus Valley Civilisation (IVC).
Balakrishnan, honorary consultant at the Indus Research Centre (IRC) of Chennai’s Roja Muthiah Research Library, has stayed away from controversy, relying instead on scholarship, analytical facts and extensive reading of previous Indus and other archaeological and socio-anthropological studies to establish onomastic linkages, based on common place and people names, between IVC and ancient Dravidian/Tamil culture and civilisation.
It is likely that such a detailed comparison of names of places and persons in present-day Pakistan, Afghanistan on the one hand and ‘Dravidian’ Tamil Nadu on the other would not have been possible without computer software. The linkages that the author has established between the ‘KVT commonality’ of place names (Korkai, Vanchi and Thondi), among others, in ancient Tamil Nadu and present-day Pakistan linked to IVC studies is fascinating.
The reference to the southern Tamil Nadu river Vaigai in the title relates to the ongoing archaeological research at the Keeladi neighbourhood. Balakrishnan, like many predecessors, has accepted a north-south migration as ‘Indus to Vaigai’ suggests, though the reverse might have been equally true, given that both civilisations were seafarers of repute and were trading, hence migrating. Alternatively, the two might have co-existed, and one might have outlived the other, about which independent studies may have to be undertaken.
Balakrishnan has gone further to peel off layers of IVC-Dravidian linkages through a closer study of ‘Dravidian Gujarat’ and ‘Dravidian Maharashtra’ in the north and IVC ‘vestiges’ of the Kongu and Nagarathar communities in present-day Tamil Nadu. In particular, his substantial references to IVC-era excavations at Adhichanallur on the banks of the Tamirabarani and later-day works at Keeladi (Keezhadi) on the Vaigai, make the study more relevant.
Recent studies by the Tamil Nadu archaeology department and of the ASI in Keeladi, respectively, in 2003-05 and 2018-19, add value and validation. Dating of the Keeladi excavations has since put ‘Dravidian antiquity’ and the related Tamil-Brahmi script older by 300 years or so, at 600 BCE. Against this, IVC is commonly dated at 3000-1300 BCE and by some at 5000 BCE. The antiquity of the Vedic Age is put at 1500-1100 BCE.
In contextualising the ‘Dravidian hypothesis’ of the IVC, Balakrishnan readily concedes that a clearer picture could emerge if and only if the ‘Indus Code’ is deciphered, and a bilingual format found to fix the gaps in the current understanding of IVC. In doing so, he stops with establishing name-based connectivity between the two and has stuck to well-accepted ‘migration’ theories, indicating it is the Indus peoples who had moved down south—taking names and place names with them.
Yet, most meanings and explanations that he offers to the words flow from the Sangam literature or other Tamil sources. Considering that Sanskrit and Tamil have varying antiquities, though one might have borrowed words and phrases from the other, most of the person and place-names that the author has identified as common to ancient Tamil Nadu and IVC do not find a place in Vedic literature. As he has established, more literary linkages have remained between IVC and ancient Tamil Nadu, rather than between IVC and Vedic north, whichever preceded the other.
Balakrishnan has dedicated his work to the late Indus researcher Iravatham Mahadevan, who is acclaimed for his work on the ‘Tamil Brahmi’ script. Journey of a Civilisation is a must-read for students of archaeology and socio-anthropology. The publishers should try to take it to a larger audience, through a condensed version, but using commonly-spelt names (Silappadikaram instead of Cilapaticaram) for the non-academic reader to relate to and identify with.
(The writer is head, Chennai Initiative, Observer Research Foundation)
The master mrdangam maker Parlandu (on the right) with mrdangam maestro Palghat Mani Iyer.
The book will be launched by Rajmohan Gandhi and Thol Thirumavalavan on February 2, 2020, at Kalakshetra, Chennai
------
As performers seated themselves on the dias of the Asian College of Journalism in Chennai, percussion players took centre-stage even as vocalists were settled down by the wings, all ready to render a scintillating performance. Leading this performance, on Sunday, were not the singers but Mridangam players who had the audience enraptured with the beat of their fingers.
This arrangement, in essence, made the priority of the evening clear to the audience. The event in question was the release of Carnatic musician TM Krishna's book 'Sebastian & Sons', which outlines a brief history of Mridangam makers. What would have been just another book launch, drew more eyeballs after Kalakshetra Foundation, a Chennai-based arts and culture academy, withdrew permission for the event at its premises, citing fears of ‘political, cultural and social disharmony.’ The decision followed the publication of an excerpt of the book titled ‘Keeping the cow and brahmin apart’ in The Hindu on Tuesday. The chapter touched upon how the world of Carnatic music is dominated by Brahmins but mridangam makers are primarily from Dalit communities. It addresses a dichotomy in the Brahmin culture where the community insists on cow worship and restrict consumption of the animal's meat but still uses the mridangam made of cow skin. Specifically, it refers to the reluctance of celebrated Brahmin artistes in acknowledging that the mridangam meant needing the skin of the cow.
And in the presence of close to 50 mridangam creators (who were featured in the book), all present at the venue, two chief guests - VCK founder Thol Thirumavalavan and writer Rajmohan Gandhi reiterated that Kalakshetra's refusal proved how deep rooted the caste system is in the state.
"This entire controversy shows that Manu dharma still exists in our society," said Thol Thirumalavan. "As soon as I heard the event is cancelled, my first thought was that, it was because I was called. They probably also thought why should 'he' come for this event (Thirumavalavan is a Dalit leader). But I think the cancellation just gave the event more publicity and made it more successful," he added.
Thirumavalavan further reflected on his conversation with a mridangam maker who alleged that they received no recognition from the government, how they were ignored in award functions and why a pension could help the cause.
"It got me thinking, if this was the situation of the mridangam makers, then imagine those who make the parai, " he pointed out. "It was continuously looked down upon because it was used by the working classes. It cannot be played in temples like the mridangam," he added, drawing parallels to communities, as he described the instrument.
The VCK chief further mused, "I (a Dalit) make the mridangam holding it between my feet, but the instrument is allowed into your puja room, and I am not."
Raj Mohan Gandhi meanwhile pointed out the cancellation of the event in Kalakshetra, only reflected on the larger politics attempting to grip the nation.
"Today, thanks to some people I should not name - Gandhi, Tagore, Ambedkar, Periyar, Subash Chandra Bose and Nehru, I see something common in all of them. Because of the drive to foist on our social hierarchy, our legal and constitutional hierarchy, of one religious group on top and others well below. It is because of this drive today, that we see all these figures as one. Secular Indians and devout Hindus are banding together to resist this legal and constitutional hierarchy, this bid to alter the constitutional design that is made Indian democracy a proud feature," he said.
He further termed the book pathbreaking and credited it with having brought those kept in darkness, to the light.
"The top layer (in society) needs the bottom layer. In the relationship, there is mutual need for each other. There is also ignorance and contempt at one side and silent indignation on the other side. Krishna has captured the relationship,” said the writer.
In a panel discussion that followed however, TM Krishna himself admitted that he was unsure about how this book would change the lives of the mridangam makers.
"Will this change anything? I don't know," said TM Krishna. "People will engage with these makers with more seriousness but beyond that, change will require political will. What we need is a combination of literature, social consciousness and political will," he added.
Krishna further acknowledged his own caste privilege and admitted that he had faced criticism for taking up the subject.
"No matter how much I speak about caste, I don't lose my privilege. I have privilege in terms of my gender, my caste and my ability to converse in English. I am in a catch 22 situation. A lot of people said I have taken the discourse from the Dalits. Why do I get to be the bridge? I am still conflicted about this," he told the audience.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/70c11541-cfee-4dfc-9041-4abe99f7688a%40googlegroups.com.
'Project Madura"- இல் அரிச்சந்திர புராணம் - காணக் கிடைக்கவில்லை
On Wed, Jan 15, 2020 at 5:29 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
அண்மையில் மதுரை திட்டம் வெள்ளுரையாக வெளியிட்ட நூல்கள்--#691.
கோடுகளும் கோலங்களும்
(சமூக நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0691.html
#692.
உத்தரகாண்டம் (சமூக நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0692.html
#693.
ஞானக் குறவஞ்சி
பதிப்பாசிரியர் : வீ. சொக்கலிங்கம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0693.html
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அரிச்சந்திர வெண்பா இருக்கிறது.
On Tuesday, February 25, 2020 at 2:13:25 AM UTC-8, சத்திவேல் கந்தன் சாமி wrote:
'Project Madura"- இல் அரிச்சந்திர புராணம் - காணக் கிடைக்கவில்லை
On Wed, Jan 15, 2020 at 5:29 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
அண்மையில் மதுரை திட்டம் வெள்ளுரையாக வெளியிட்ட நூல்கள்--#691.
கோடுகளும் கோலங்களும்
(சமூக நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0691.html
#692.
உத்தரகாண்டம் (சமூக நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0692.html
#693.
ஞானக் குறவஞ்சி
பதிப்பாசிரியர் : வீ. சொக்கலிங்கம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0693.html
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/70c11541-cfee-4dfc-9041-4abe99f7688a%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/85f4808e-c9f5-4779-9ebc-95164fb60eed%40googlegroups.com.
நீண்டநாள்களாகப் படிக்கவேண்டும் என்று நினைத்திருந்த ஆதிபாஷா என்ற மலையாள நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதைப் பற்றி முன்பே எடுத்துவைத்திருந்த மதிப்புரை ஒன்றை இப்போதைக்கு இங்கே தருகிறேன்.
------
ஆதிமொழி நூல் திறனாய்வு - சோ. பிலிப் சுதாகர்
-----------------------------------------------------------------------
ஆதிமொழி (தொல்காப்பியம்-பாணினீயம் - ஒப்பீட்டு ஆய்வு).
மலையாள மூலம் - ஆதிபாஷா.
ஆசிரியர் - சட்டம்பி சுவாமிகள். தமிழாக்கம் - இரா.மதிவாணன்.
-------
முகவரி: சிறீ வித்தியாதிராச தரும சபை, எண் F - 13, BBC Westend,
9A, கே. கே. சாலை, சாலிக்கிராமம், சென்னை - 600 093.
அலைபேசி: 98414 28004 (வாசுகுட்டன்). விலை ரூ. 180/-
--------
பதிப்புரையில் சி.கெ.வாசுக்குட்டன் அவர்கள் தமிழிலிருந்து உருவான பிராகிருதத்தின் உருமாற்றமே சமஸ்கிருதம் என்பதை நூல் வலியுறுத்துவதாகக் கூறுகிறார். ஒளவை நடராசன் அவர்கள் திருக்குறளின் முப்பாலைப் போல தொல்காப்பியம் எழுத்து-சொல்- பொருள் என்று முத்திற இலக்கணம் பெற்றது என்பார். இந்த நூல் இரு மொழிகளையும் நுணுகி ஆராய்ந்து தமிழே தொல்மூலமொழி என்பதை நிறுவுகிறது என்கிறார். பேரா. க. அன்பழகன் தமிழ் தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பின் தமிழ் நெடுங்கணக்கு-எழுத்து வரிசை முறை அறிந்து வடமொழி எழுத்துகள் வடிவமைக்கப்பட்டன என்கிறார். பேரா. ப. மருதநாயகம் தனது தகவுரையில் தமிழின் தொன்மை இருட்டடிப்புச் செய்யப்படுகிறது என்கிறார்.
பிராகிருதம், சமஸ்கிருதமயமாக்கப்படாத தனக்கே உரிய முந்து எழுத்து வடிவங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதால் சமஸ்கிருதத்தை விட அது காலத்தால் முந்தையது.
சமஸ்கிருத மொழியில் உள்ள கனத்த ஒலிப்புகளும் ரு-ளு-ஷ முதலிய சிறப்பெழுத்துகளும் க்த-ஷ்ண முதலிய இனமல்லாக் கூட்டெழுத்துகளும் பிராகிருதத்தில் இல்லை.
தமிழில் உள்ளது போல ஒருமை – பன்மை என்னும் இரண்டே எண்களும் ங்க-ந்த-ட்ட முதலிய இனச் சர்புள்ள வேற்றுநிலை உடன்நிலை மெய்ம்மயக்கங்களும் பிராகிருத மொழியில் உள்ளன.
இதிலிருந்து தமிழுக்குப் பின்னும் சமஸ்கிருதத்துக்கு முன்னும் பிராகிருதம் தோன்றியிருக்க வேண்டும்.
புணரியல் தமிழ் சமஸ்கிரும் ஆகிய இரு மொழிகளிலும் மிகவும் வேறுபடுகின்றன. உயிரீற்றுப் புணர்ச்சி விதிகளை ஆராயும்போது தமிழ் இலக்கணம் சமஸ்கிருத இலக்கணத்தைப் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. உலக மொழிகளில் இல்லாத சொற்புணர்ச்சி (சந்தி) இலக்கணம் தமிழ் சமஸ்கிருதம் இருமொழிகளில் மட்டும் காணப்படுகின்றன.
வடமொழியில் எல்லாச் சொற்களும் தாதுக்கள் என்னும்; சொல்லடியில் தோன்றினாலும்
அந்த வடிவத்தில் வினைச் சொற்கள் ஆவதில்லை. அவற்றோடு முன்னொட்டுகளும் பின்னொட்டுகளும் சேர்ந்தால்தான் அவை வினை வடிவம் பெறும். தமிழில் வினைவடிவங்கள் இயல்பாகத் தனித்து வழங்குபவை.
சமஸ்கிருதத்தில் பெயர்ச் சொற்களில் சர்வநாமம் என்ற ஒரு பிரிவு உண்டு. சுட்டு-வினா-தன்மை –முன்னிலை-படர்க்கை (மூவிடப் பெயர்) போன்ற பொதுப் பெயர்கள் இப் பிரிவில் அடங்கும். இவற்றைச் சர்வநாமம் எனும் பொதுப் பெயரில் அடக்காமல் தனித்தனியாக வகைப்படுத்திக் காட்டுவது தமிழ் இலக்கணத்தின் தனிப்பாங்காக உள்ளது.
சமஸ்கிருதத்தில் உள்ள பால்வேறுபாடுகள் குழப்பமும் பிழைகளும் மலிந்தவை. தமிழில் உள்ள உயர்திணை – அஃறிணைப் பிரிவுகள் வடமொழியில் இல்லை.
சமஸ்கிருதத்தில் வேறுபாட்டு அணிநயங்கள் இல்லை.
தமிழில் விளி வேற்றுமை எட்டாம் வேற்றுமை எனத் தனியாக உள்ளது. தமிழில் உள்ள நிலம்-பழம் முதலிய அஃறிணைச் சொற்களில் உள்ள அம் ஈறு வடமொழியிலுள்ள வனம் -
பலம் முதலிய சொற்களுக்குச் சென்றுள்ளது.
தொல்காப்பியம் ஐந்திர இலக்கண மரபைச் சேர்ந்தது என்று கூறிய ஏ.சி.பர்னல் என்ற ஜெர்மானிய அறிஞர் பாணிணீயத்தினும் தொல்காப்பியம் பழைமையானது என்கிறார். தமிழ் எழுத்துகள் வடமொழி எழுத்துகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டவை என்பதை ஏற்கிறார்.
விட்னி-எட்கிரன் என்ற இரு அறிஞர்கள் பாணினி குறிப்பிடும் தாது பாட வேர்களில் பாதிக்கு மேல் எந்தக் காலத்திய வடமொழி நூலிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார்.
காய்ரே என்ற பேரறிஞர் ‘சமஸ்கிருத வேர்ச் சொற்கள் எனக் கூறப்படுவன சொற்களுக்குப் பொருத்தமாகக் கற்பிக்கப்பட்டவையே, சொல்லின் மெய்யான அல்லது கற்பனை செய்த பொருளுக்கு ஏற்ப அந்த வேர்களுக்குப் பொருள் கற்பித்தனர். அவ்வாறுதான் சூர்யா என்னும் சொல்லிற்கு சு அசைவு – சூ ஊக்குவி என்று இரண்டு பொருள்களைக் கற்பித்தனர்’ என்பார்.
எமனோ-பரோ போன்றோர் காலத்தில் ஒரு சில தமிழ்ச் சொற்களே வடமொழிக்குச் சென்றதாக நம்பப்பட்டது. ஆனால் தற்போது மேலை மொழியியல் வல்லுநர்கள் வேதகாலததிற்கு முன்னமேயே தமிழ்ச் சொற்கள் வடமொழியில் இடம் பெறத் தொடங்கிவிட்டன எனபதற்கு
எடுத்துக்காட்;டாக
அணு-காலம்-முகம்-பூ-மாத்திரை ஆத்மன்(தான்) போன்ற தமிழ்ச் சொற்களைக் குறிப்பிடுகின்றனர்.
நடுநிலை ஆய்வென இந்நூலை மருதநாயகம் போற்றுகிறார்.
பேரா.கருணானந்தன் தனது பாராட்டுரையில் இந்நூல் மாபெரும் மேதையின் மலையாள நூல் என்கிறார்.
மலையாளம் தமிழ் சமஸ்கிருதம் பிராகிருதம் ஆகிய மொழிகளின் ஒப்பீடு என்கிறார். பரசுராமன் என்ற பிராமணன் மழு எறிந்து கடலைப் பின்னுக்குத் தள்ளி புதிய பூமியை உண்டாக்கிப் பிராமணர்க்குத் தந்ததாகக் கூறப்படும் தொன்மம் ஒரு பிராமணிய சூழ்ச்சி.
நம்பூதிரிகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்து வந்த மண்ணின் மக்களை இழிவுபடுத்த இதைக் கருவியாக்கினர். தமிழ் செம்மொழி மட்டுமல்ல. ஆதிமொழி.
பாதசுவாமிகள் தனது வாழ்த்துரையில் ஹரப்பா மொகஞ்சதாரோ ஆய்வுகளுக்கு முந்தைய நூல் இது என்கிறார். தொன்மொழி தமிழ் உலக மொழிகளின் தாய் என்பதை நூலாசிரியர் நிறுவுகிறார். தமிழின் அகரவரிசை எழுத்துமுறையை வடமொழி எடுத்துக் கொண்டது என்கிறார்.
சட்டம்பி சுவாமிகள் 1853 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ம் நாள் திருவனந்தபுரம் கொலூரில் நங்கம்மப் பிள்ளைக்கும் வாசுதேவ சர்ம்ம நாயருக்கும் பிறந்தவர். சிறுவயதில் வறுமையில் வாடினார். கல்வி மறுக்கப்பட்ட நிலையில் ஓராண்டு சாஸ்திரிகள் கற்றுத் தருவதை ஒளிந்திருந்து கற்றார். கல்வியில் உயர்நிலைடைந்ததால் சட்டம் பிள்ளையானார். நொய்யாற்றின் கர என்ற இடத்தில் ஆவணதாரம் எழுதும் தொழில் செய்தார். தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்தவர் காவிஉடையும் கமண்டலமும் இல்லாத சட்டம்பி சுவாமிகளாகத் திரும்பினார். அணியூரில் நாராயண குருவைச் சந்தித்தார். சாதி மத ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து ‘வேதாதிகாரநிரூபணம்’ என்ற நூலைஎழுதினார். 1915ல் இந்தநூல் எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் பிறமொழிச் சேர்க்கையில்லாத கன்னித் தமிழ். உயர் இலக்கணம் உடைய செந்தமிழ். தொடர்ச்சியான மரபுடையதால் செம்மொழி. சமஸ்கிருதத்திற்கு முந்தையதால் ஆதிமொழி என்றார். அனைத்துயிர்களையும் நேசித்த இவர் 1924 மே 5 ம் நாள் அன்று மகாசமாதி அடைந்தார்.
நூலின் சிறப்பம்சங்கள்:
1. மாந்தர் ஓரிடத்தில் தோன்றி பல இடங்களுக்கும் பயணப்பட்டனர். மொழியும் அவ்வாறே. முதல் ஆதிமொழியிலிருந்து பல்வேறு மொழிகள் தோன்றின.
2. மொழியின் மூலம் இலக்கணம். தமிழ் எழுத்துகள் வாயிலாக ஒலிக்க முடியாத ஒலிப்புகளுக்கு மட்டுமே சமஸ்கிருதத்தில் வேறு எழுத்துக்கள் படைக்கப்பட்டுள்ளன. ர்ரு – ல்;ரு ஆகிய எழுத்துகளுக்குக் குறில் நெடில் எழுத்துக்கள் தமிழில்
இல்லை. இதனால் த்ருதம் - க்லுக்தம்-க்ருதம் போன்ற வடமொழிச் சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியாது. வடமொழி உயிர் எழுத்;துக்கள் எல்லாம் ‘ஊகாலோஜ் த்தர ஸ்வதீர்க்க ப்லுத’ என்னும் நூற்பாவின்படி இவை மூன்று மாத்திரை நேரம் வரை ஒலிப்பனவாக உள்ளன. ஆனால் தமிழில் ‘மூவளபு இசைத்தால் ஓரெழுத்து இன்றே’ என்னும் நூற்பாவில் தமிழில் எழுத்து மூன்று மாத்திரை அளவு உச்சரிக்கப்படுவதில்லை என்பார் தொல்காப்பியர்.
உயிரெழுத்து வேறுபாடுகள் தமிழில் இல்லை. ஒவ்வொரு வல்லெழுத்துக்கும் அய்ந்து வர்க்க எழுத்துகள் உண்டு. வடமொழியில் ஸ-ஷ-ஹ போன்ற எழுத்துகள் உள்ளன.
ச் - ச- ஸ-ஷ ஆகிய நான்கு எழுத்துகளுக்கு மாற்றாகத் தமிழில் சகரம் மட்டுமே உண்டு. தமிழில் ‘ட லறள என்னும் புள்ளி முன்னர் க ச ப வென்னும் மூவெழுத்து உரிய’ என்பார் தொல்காப்பியர். இன்னின்ன எழுத்துகளின் முன்பு இன்னின்ன எழுத்துகள்தான் வரும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வரையறை வடமொழியில் இல்லை.
3. சங்க நூல்களில் தொல்காப்பியக் கூறுகள் காணப்படுவதால் சங்க இலக்கியத்திற்கு முந்தையது தொல்காப்பியம். புத்தமதக் குறிப்புகள் இல்லாததால் தொல்காப்பியம் புத்தமதத்திற்கும் முந்தையது. தொல்காப்பியம் என்ற நூலை நிலம்தருதிருவில் பாண்டியன் சபையில் தொல்காப்பியர் வெளியிட்டார். அங்கிருந்த அதங்கோட்டாசான் கேள்விகளுக்குத் தொல்காப்பியர் சரியான பதில் அளித்தார் என்பதைக் காப்பியரின் சகமாணவரான பனம்பாரணார் தனது தொல்காப்பிய பாயிரத்தில் எழுதியிருக்கிறார்.
4. பாணினீயம் சமஸ்கிருத இலக்கண நூல். கி.பி. 5-7 நூற்றாண்டுக் காலம். மனுசுமிருதி இதில் இருப்பதால் பாணினி மனுவுக்குப் பின் வாழ்ந்தவர். பாணினியின் குருக்கள் வர்ஷன்-ஜைமினி-பர்த்ருஹரி. இவரின் சகமாணவர் வரருசி.
5. உலக மொழிகள் யாவற்றிலும் அகரமே முதன்மையிடம் பெற்றுள்ளது. அ-க-ங எனத் தொடங்கி இயற்கையாகத் தோன்றிய மொழியியல்புக்குச் சான்றாக அம்மா-அப்பா எனும் எளிய சொல்லாட்சிகள் அமைகின்றன. அ என்ற எழுத்தும் சிவலிங்க வடிவமும் ஒன்றாக உள்ளன. மூலதிராவிடத்தில் அகரம் இரு கூறுகள் உடையது. மேல் பங்கு சபூரம். கீழ்ப்பங்கு அலிப்பால். உயிரினத் தோற்றத்திற்குரிய போதிய வெப்பநிலை உள்ள நிலப்பகுதியாக இருப்பது இலங்கையின் மேற்குப் பகுதி. அடுத்தடுத்துள்ள நிலப்பகுதிகள் இன்னும் திராவிட மொழிகளின் ஊற்றிடங்கள். தமிழே பழந்திராவிட முதல் தாய்மொழி. அ ஆ இ ஈ க கா என்று வெறும் எழுத்துகளை மட்டும்; குறிப்பிடாமல் அ அன ஆ ஆவன்னா இ இன ஈ ஈயன்னா க கன கா காவன்னா என்று ஓசையோடு கூறுவது தமிழின் சிறப்பு.
6. உபநிடதங்களுக்கு வேராக விளங்குவது மாகேசுவர சூத்திரம் என்ற இலக்கணம். இதனை அடிப்படையாகக் கொண்ட பாணினியின் இலக்கண நூலிலும் அ இ உ என்பது முதல் நூற்பா. இம் மூன்று உயிரெழுத்துகளின் திரிபாக மற்ற உயிரெழுத்துகள் தோன்றின. குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. அழுகையில் அ என்ற உயிரெழுத்து வெளிப்படுகிறது. பிறகு மற்றவரைப் பார்த்துச் சிரிக்கும்போது இ தோன்றுகிறது. அச்சசத்தின் போது உ பிறக்கிறது. மனஅமைதி அல்லது ஓய்வின் வெளிப்பாடாக ஒள பிறக்கிறது. குழந்தை உதடு பிரியாமல் அழும்போது ம் என்ற ஒலியும் உதடு பிரியும்போது மா வும் தோன்றி மிக இயல்பாக அம்மா என்ற சொல் பிறக்கிறது. சற்று வளர்ந்த பின் அப்பா என்ற சொல்லவும் குழந்தை கற்றுக் கொள்கிறது. அ வுடன் ந த ண ட ஞ ச ஞ க எனும் எழுத்துகளையும் குழந்தை உச்சரிக்கக் கற்றுக் கொள்கிறபோது அந்தை அத்தை அண்ணன் அச்சன் அக்கா என்ற சொற்களைப் படிப்படியாகக் கற்கிறது. ம் என்றால் மோனம் அல்லது மௌனம். ம் எனும் மௌனம் ஒழித்ததே மொழி.
தமிழர்கள் தங்கள் வாழ்வின் அடித்தளமாகக் கொள்ள வேண்டிய தமிழின் சிறப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவ விடுகின்றனர். தமிழ் நாட்டிற்கு வெளியில் மற்ற மொழி பேசுகிறவர்கள் தமிழின் சிறப்பை உணர்கின்றனர். மேலை நாட்டினரும் தமிழின் தொன்மையை உணர்கின்றனர். ஆய்வு செய்கின்றனர். தமிழர்கள் மெத்தனமாய் உள்ளனர். இந்த நூல் நமது அறிவுக் கண்களைத் திறக்க வேண்டும். மொழியை இழந்தால் இனம் அழியும் என்ற எச்சரிக்கையை நாம் உணர வேண்டும்.
முனைவர். சோ. பிலிப் சுதாகர்
(Kaala Subramaniam அவர்களின் முகநூல் பதிவு)
----
கோமாளிகள்
கலை உலகின் பிரிக்க முடியாத சக்தி
-இரா. தங்கப்பாண்டியன்
கோமாளி எனப்படுகின்ற நகைச்சுவைக் கலைஞன்இடம்பெறாத பொழுதுபோக்கு அம்சமே இல்லை என்ற நிலைஏற்பட்டுள்ளது. "சனங்கள் எல்லாம் தட்டடியிலும் முத்தவெளியிலும் படுத்துறங்கும் கோடைகாலம். இப்படிப்பட்ட சமயங்களில் பாவைக்கூத்து வந்துவிட்டால் எல்லாருமே அங்கே போய் அந்தத்திறந்த வெளியில் உட்கார்ந்து விடுவார்கள். நானும் அங்கே விரும்பிப்போவது ராமாயணக் கதைக்காகஇல்லை. அதில் வருகிற மொட்டையன், டபேதார், கோமாளி முதலிய பாவைகளை ஆட்டுகிறவன், பாவைக்கூத்துக்காரன் சொந்தமாக விடுகிற கதைகளையும் வாய் மொழிப்பாடல்களையும் கேட்பதற்காகத் தான். இவர்களிடம் பாடலோடு கூடியநாடோடிக் கதைகள் நிறைய உண்டு.இடைவெளியின் போதெல்லாம் வேடிக்கையான வாய்மொழிப் பாடல்களைப் பாடி மகிழ்ச்சியூட்டு வார்கள் " என்கிறார் பிரபல கரிசல்இலக்கியவாதி கி . ராஜநாராயணன். கோமாளி என்பவன் தனது மதிநுட்பத்தால் ஒரு சம்பவத்தை சொந்தநடையில் மாற்றி நகைச்சுவை கலந்துதருபவன். அவன் சொல்கின்ற விஷயங்களில் நகைச் சுவையோடு கூடிய ஆபாசம் இருக்கும். பெரும்பாலும் கோமாளி சொல்லும் கருத்துஎல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கும். கோமாளி என்றால் பொதுவாக நகைச்சுவை ஏற்படுத்து கிறவனைக் குறிக்கும் . கூத்துக்கோமாளி நகைச்சுவை உணர்வைத்தூண்டுகிறவனாகவும் நாட்டு நடப்பைசொல்கிறவனாகவும் இயங்குகிறான். "ஐசாலங்கடி பாட்டுக்காரன் பைசா அகலப் பாட்டுக்காரன் ஒலகம் பூரா சுத்திவாரான் ஊரு கதையச் சொல்லப் போறான் " இந்தக் கூத்துக் கோமாளி பாடலில் முதல் இரண்டு வரிகள்கிண்டல் தொனியைக் கொண்டுள்ளன. கடைசி இரண்டு வரிகள் ஊர்நடப்பைச் சொல்லப் போறேன் என்றுகறாராகவும் பொறுப்போடும் அறி விக்கின்றன " என்ற முகிலின் கருத்தில் உண்மை உள்ளது. கூத்தை வடிவமைக்கும் கருத்தாளர்கள் தங்களது சொந்தக் கருத்தைப் பெரும்பாலும் கோமாளியின் மூலமாகவே சமூகத்திற்கு சொல்வார்கள்.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நாட கங்களிலும், அதைத்தொடர்ந்து திரைப்படங்களிலும் தனது சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களால் பிரபலமானவர். இவர் வாழ்ந்த காலத்தில்கடைசி வரையில் தன்னை நவீனக்கோமாளி என்றே கூறிக்கொண்டவர்.
அதனால்தான் இவர் தனது படம் ஒன்றில் "நாட்டுக்கு சேவை செய்யநாகரீகக் கோமாளி வந்தேனய்யா பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி நாட்டு நடப்புகளைசொல்றேன ய்யா”என்று பாடினார் .கூத்துகளில் நகைச்சுவையாளர்களாய் வரும் பலருக்கும் முன்னோடியாய் இன்றும்விளங்குகிறார். "புராண காலத்துல கிருஷ்ணன் கோமாளியா ஆடினாரு.நடப்புக் காலத்துல என்.எஸ்.கிருஷ்ணன் தான் கோமாளிப்பாத்திரங்களுக்கே ஒரு திருப்புமுனையாய் இருந்தாரு. அந்தக் கிருஷ்ணன் ஆடுனத வாய்வழித் தகவலாத்தான் நம்மாலகேக்க முடியுது. இந்தக் கிருஷ்ணன் ஆடுனதையும் பாடுனதையும் நாம இப்பக் கண்கூடாகப் பார்க்க முடியுது. ஆக, கோமாளிகளின் முன்னோடிஎப்பவும் என்.எஸ்.கே. தான் " என்கிறார் ஓம் முத்துமாரி.ஒரு கலைஞன் தனது காலத்திற்குப் பிறகும் பேசப்படவேண்டும். நாகரீகக் கோமாளி என அறி யப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன்தான் இன்றும் பலருக்கும் ஞானகுருவாக விளங்குகிறார். கூத்துக்களின் முதல் கோமாளி யார் என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கலை உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய முப்பெரும் துறைகளானதெருக்கூத்து, நாடகம், திரைப்படம்ஆகிய துறைகளில் அரிதாரம் பூசும்எல்லா நவீன கலைஞர்களுக்கும் முதல் கோமாளியாய் என். எஸ்.கிருஷ்ணன் விளங்குகிறார் என்பதில்சந்தேகமில்லை.சங்கரதாஸ் சுவாமிகளின் வள்ளி திருமண நாடகத்தில் நாரதரோடு தர்க்கம் பண்ணுவதில் தொடங்கி வள்ளியோடு சண்டை போடுவது வரையிலும் கோமாளியின் தாக்கம் கூடிக்கொண்டே செல்கிறது. " இன்றும் பல ஊர்களில் வள்ளி திருமண நாடகத்தைக் காண வருபவர்கள் கோமாளியின் ரசிகர் களாகவே உள்ளனர். கோமாளி வரும்காட்சிகள் முடிந்ததும் ஒருகூட்டம் எழுந்து சென்று விடுவதைக் காண முடிகிறது " என்கிறார் பாண்டியன் என்ற மேடைக் கலைஞர்.
மக்கள் மத்தியில் நேரடியாகத் தோன்றி தங்களது நடிப்பின் மூலம் உடனடியாக அவர்களிடமிருந்து பாராட்டுதலைப் பெறும் வாய்ப்பு கிராமியக் கலைஞர்களுக்கே உள்ளது. அதிலும் கோமாளி வேடம்கட்டும் நபருக்கு மற்ற கலைஞர்களை விடவும் கூடுதலாக வாய்ப்புக் கிடைக்கிறது. பார்வையாளர்களிடம் வெற்றிலை வாங்குவது, பொடி வாங்கிப் போடுவது, தண்ணீர்கேட்டுக் குடிப்பது, மேளக்காரர் களை உறவு சொல்லி அழைப்பது எனஇவருக்கு மட்டும் மிகச் சுதந்திர மான களம் தானாகவே ஏற்பட்டு விடுகிறது. இவர் தடையில்லாத கலை ஞன். இவரது நாவில் தோன்றும் அனைத்துமே இலக்கியம். இவரது ஒவ்வொரு அசைவுமே நடிப்புதான். இவரது எல்லாப் பிரவேசங்களும் எதிர்பார்ப்புகளோடு தொடங்கி எதிர்பார்ப்புகளோடே முடிகின்றன. கோமாளிக்கு அப்பள மாலையும், வடை மாலையும், வாழைப்பழ மாலையும் அணிவித்து அவரை கவுரவப்படுத்தும் வழக்கம் இன்னும் பல கிராமங்களில் உள்ளது.உழைக்கும் மக்களின் நோய் தீர்க்கும் மருத்துவர்கள் பலர் இருந்தாலும், அவர்களது மன உளைச்சலை,கவலையை தீர்க்கும் மருந்தாய் கோமாளிகள் இன்றும் விளங்கு கிறார்கள். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற பழமொழிக்கு உயிர் கொடுப்பவர்கள் கோமாளிகள்தான். மக்களோடுபழகி அவர்களில் ஒருவராகப் பிறந்து, வாழ்ந்து, கூத்துக் காலம் தவிர்த்து பிற காலங்களிலெல்லாம் கலைஞன் என்ற கர்வமின்றி மக்களோடே பணி செய்து, திருவிழாக்காலங்களில் அவர்களைச் சிரிக்கவைத்து, அழவைத்து, அவர்கள்சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளையெல்லாம் மேடைக்குக்கொண்டு வந்து, அடுத்தஆண்டு திருவிழா வரும் வரையில் அந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டே இருக்கச் செய்யும் சக்திகோமாளிகளுக்கு உள்ளது. எனவேகோமாளிகள் கிராமியக்கலை வடிவங்களின் எல்லா நிகழ்வுகளுக்கும் தவிர்க்க முடியாத சக்தியாய் விளங்குகிறார்கள்.
( கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் என்ற நூலில் இருந்து )
அகநி வெளியீடு
நன்றி தீக்கதீர்
என்னுடைய முதல் நூலான ’பன்மணிக்கோவை’யைச் சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சுநூலாக (Print Book) வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து, ’அறிவோம் அறிஞர்களை – தொகுதி 1' என்ற பெயரில் என்னுடைய இரண்டாவது நூலை, அமேசான் கிண்டிலில், மகளிர் தினத்தையொட்டி, மின்னூலாக
(E-Book) வெளியிடுவதில் மகிழ்கின்றேன். 😍
இந்திய மற்றும் உலகின் பிறநாட்டு அறிஞர்கள் குறித்த அரிய செய்திகளையும், அவர்களின் சாதனைகளையும் உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு இது! (மேலும் சில தொகுதிகளும் இதே தலைப்பில் வருங்காலத்தில் வரவுள்ளன.) 😀
நண்பர்கள் நூலைப் படித்துத் தங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 🙏
https://www.amazon.in/dp/B085DNRVZX
இன்று இந்த புத்தகம் அமேசான் கிண்டிலில் வாசிக்கலாம். நண்பர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நண்பர்கள் உங்கள் மேலான கருத்துக்களை சொன்னால் மகிழ்வேன்.
அச்சுக்கு வந்திருக்கும் அகராதிச் சுவடிகள்
காலனிய காலகட்டத்தின் கிழக்குக் கடற்கரையோர சமூக, பொருளாதார, அறிவியல் வரலாறு குறித்து குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்களை எழுதியவர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன். கி.பி.16, 17-ம் நூற்றாண்டுகளில் போர்ச்சுக்கீசிய மதபோதகர்களால் தங்களது பயன்பாட்டுக்காகத் தொகுக்கப்பட்ட போர்ச்சுக்கீசு-தமிழ் அகராதிகளைத் தொகுத்து சீர்செய்து தற்போது வெளியிட்டிருக்கிறார்.

பனாசியில் உள்ள கோவா மத்திய நூலகம், லிஸ்பனில் உள்ள புவியியல் சங்க நூலகம், ரோம் மத்திய தேசிய நூலகம், பாரீஸ் தேசிய நூலகம் ஆகியவற்றில் பாதுகாக்கப்பட்டுவரும் சுவடிகளைப் படியெடுத்து, அவற்றின் அடிப்படையில் இந்த அகராதியை உருவாக்கியிருக்கிறார். போர்ச்சுக்கீசு மொழியிலும் தமிழிலும் ஏற்பட்டிருக்கும் எழுத்துச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது இந்தப் புதிய அகராதி. தமிழ்ச் சொற்களில் மட்டும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழுப்பு வாசனை.
- புவி
அகராதி: போர்ச்சுக்கீசு-தமிழ்
தொகுப்பாசிரியர்:
எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
இந்திய ஐரோப்பியவியல் ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி- 605009
விலை: ரூ.800
தொடர்புக்கு:

Book One of Karunamirtha Sagaram contains 4 Volumes. This Volume is Part1 of the Book One in English Language. The same Volumes are available in Tamil Language also. You can download them from other links provided in this site.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/6bd39463-4526-451d-8406-969e0aa3b955%40googlegroups.com.
ஏ.கே. செட்டியார், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், நெ.து. சுந்தரவடிவேலு, மணியன் உள்ளிட்டோர் தமிழ்ப் பயண இலக்கியத் துறையில் கவனம் செலுத்திய முதல் தலைமுறையினராகத் திகழ்ந்தனர். இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர் சோமலெ.
ஏ.கே. செட்டியார் எழுதிய பயண நூல்களால் உத்வேகம் பெற்று, பயண நூல்களைப் படைக்கத் தொடங்கியவர் அவர். சோம.லெட்சுமணன் என்ற தன்னுடைய பெயரின் முதலெழுத்துகளையே, புனைப்பெயராகப் பயன்படுத்திப் பிரபலமடைந்தார். சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் 1921 பிப்ரவரி 11 அன்று பிறந்த அவருடைய நூற்றாண்டு கடந்த மாதம் தொடங்கியது. சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் சோமலெ நூற்றாண்டு விழா தேசியக் கருத்தரங்கம் சமீபத்தில் நடைபெற்றது.
எழுத்தாளராகத் திரும்பினேன்
சோமலெ, இளங்கலைப் பொருளியலும் மும்பை ஹாரிமன் இதழியல் கல்லூரியில் இதழியலும் படித்திருந்தார். பிற்காலத்தில் குடும்பத் தொழிலான ஏற்றுமதி-இறக்குமதியில் ஈடுபட்டார். இதற்காக உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. தொழில் தேவைக்காக ஆயிரக்கணக்கான கி.மீ. பயணம்செய்த அதேநேரம், அந்த அனுபவங்களை மற்றவர்களுக்கும் பயன்தரும் வகையில் எழுதத் தொடங்கினார். ‘வணிகனாகப் போனேன், எழுத்தாளராகத் திரும்பினேன்’ என்று அவரே இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
‘அமுதசுரபி’ இதழில் அவருடைய முதல் கட்டுரை வெளியானது; ‘நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்’ அவருடைய முதல் நூல். அமெரிக்கா, கனடா, ஸ்வீடன், ஃபிரான்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளைப் பற்றித் தனித்தனிப் பயண நூல்களை எழுதியுள்ளார். அந்தக் காலத்தில் அதிகக் கவனம் பெறாத எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, கானா, நைஜீரியா, சூடானும் காங்கோவும் உள்ளிட்ட 12 நூல்களை ஆப்பிரிக்க நாடுகள் வரிசையில் எழுதியுள்ளார்.
பயண நூல்களில் அந்தந்த நாட்டு மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம் போன்றவற்றுடன் தொழில், கல்வி, வேளாண்மை, உணவு, இதழியல், வங்கித் துறை சார்ந்த தகவல்களையும் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். வெளிநாடுகளில் தங்கள் நாட்டு மரபுப் பெருமைகளைப் பாதுகாக்கப் பெரும் தொகையைச் செலவிடுதையும் நம் நாட்டில் அதுபோல் செய்யப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவட்டக் களஞ்சியங்கள்
எந்த ஊர், எந்த நாடாக இருந்தாலும் அவருடைய கவனமெல்லாம் அந்நாட்டு மக்கள் மீதுதான் இருந்தது. வெளிநாடுகளுக்கு இணையாகத் தமிழகம் பற்றியும் எழுதியுள்ளார். 1960-களிலேயே அன்றைய பிரிக்கப்படாத தமிழக மாவட்டங்களான சேலம், கோவை, குமரி, தஞ்சை, வடஆர்க்காடு, தென்னார்க்காடு, நெல்லை, செங்கல்பட்டு, ராமநாதபுரம், மதுரை ஆகியவற்றைப் பற்றி விரிவான நூல்களை (பாரி நிலையம் வெளியீடு) எழுதியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த புகழ்பெற்ற ஆளுமைகளான தமிழறிஞர் தெ.பொ.மீ., மு.வரதராசன், சி.சுப்ரமணியம், மன்னர் சேதுபதி உள்ளிட்டோரிடம் அணிந்துரை பெற்று வெளியிட்டது சோமலெயின் தனிமுத்திரை.
இன்றைக்கு இணையத்தைத் திறந்தால் தகவல் கொட்டுகிறது. 60 ஆண்டுகளுக்குமுன் ஒரு மாவட்டத்தை மையப்படுத்தித் தகவல்களைத் திரட்ட சோமலெ கடுமையான சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய நூல்கள் 50களின் பிற்பாதியில் தொடங்கி, அதற்கடுத்த 20 ஆண்டுகளில் எழுதப்பட்டவை என்பதைக் கணக்கில் கொண்டால், அவருடைய எழுத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். தமிழில் பயணம் அடிப்படையிலான 42 நூல்களையும், ஆங்கிலத்தில் 6 நூல்களையும் எழுதியுள்ளார்.

மலைக்கவைக்கும் எழுத்து
‘இமயம் முதல் குமரி வரை’ என்ற நூலை எழுதியுள்ள சோமலெ, தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காக வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தார். மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், டெல்லி ஆகிய வட மாநிலங்களில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை, சமூகம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ‘வட மாநிலங்களில் தமிழர்’ என்ற நூலாக அது பிற்பாடு வெளியானது.
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ‘தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்’ நூல், கல்விப்புல மானிடவியல் அடிப்படையில் அமைந்திருக்காவிட்டாலும், பண்பாடு சார்ந்த அடிப்படைத் தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ள குறிப்பிடத்தக்க நூல். இந்த நூல் ஆங்கிலத்திலும் (Folklore of Tamilnadu) மற்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சோமலெயின் முயற்சியால்தான் பல்கலைக்கழகம், பதிவாளர் போன்ற தமிழ்ச் சொற்கள் புழக்கத்துக்கு வந்தன. அத்துடன் வங்கி (Bank), உணவுப் பட்டியல் (Menu), தொலைக்காட்சி (TV) உள்ளிட்ட பல புதிய தமிழ்ச் சொற்களை சோமலெயே அறிமுகப்படுத்தியும் உள்ளார். 1986 நவம்பர் 4-ல் மறையும்வரை அவர் மேற்கொண்ட எழுத்துப் பணியை, இன்றைக்குப் பார்க்கும்போது மலைப்பாகத்தான் இருக்கிறது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: vallia...@hindutamil.co.in

“இப்பொழுதெல்லாம் எந்த மாதிரியான புத்தகங்கள் அதிகமாக விற்கின்றன?” என்று புத்தகக் கண்காட்சியில் எதிர்ப்படுகிற எந்தப் பதிப்பாளரிடம் கேட்டாலும் சொல்லும் பதில் ‘சமையல் புத்தகம்’ என்பதுதான்.
“பெருநகரமா, சிற்றூரா என்ற வேறுபாடின்றி எந்த ஊர் புத்தகக் கண்காட்சிக்குப் போய் கடைபோட்டாலும் நான்கு சமையல் புத்தகமும், இரண்டு ஜோதிடப் புத்தகமும், ராமாயணம், மகாபாரதத்தில் ஓரிரு புத்தகங்களும் இருந்தால் போதும் கைநட்டப்படாமல் தப்பித்து வந்துவிடலாம்” என்பது பதிப்பாள நண்பர் ஒருவரின் கூற்று. அதனால்தான் சமையலைப் பற்றிய புத்தகங்களை பதிப்பகங்கள் விதவிதமாக வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.
உணவு மற்றும் சமையலின் வரலாற்றை, பண்பாட்டை, அரசியலைப் பற்றிப் பேசும் புத்தகங்கள் அவ்வப்போது வருகின்றன. சே.நமசிவாயம் எழுதிய ‘தமிழர் உணவு’, பக்தவச்சல பாரதி தொகுத்தளித்த ‘தமிழர் உணவு’, ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ போன்ற முக்கியமான புத்தகங்களும் வந்துள்ளன. ஆனால், இவை சமையலைப் பற்றிய புத்தகங்கள்தானே தவிர, சமையலுக்கான புத்தகங்கள் இல்லை. எனவே, இந்தப் புத்தகங்களின் விற்பனை மற்ற நல்ல புத்தகங்களுக்கு நேரும் கதியில்தான் நிகழ்கிறது. இவ்வகையில் சற்றே மாறுபட்ட மிக நல்ல முயற்சி மருத்துவர் கு.சிவராமனின் ‘ஆறாம் திணை’யும், ‘ஏழாம் சுவை’யும்.
சமையல் புத்தகங்கள் எல்லாம் எப்போதிருந்து தமிழில் எழுதப்படுகின்றன? எல்லா காலங்களிலும் அவை இப்படித்தான் விற்றுத்தீர்ந்தனவா?
சுமார், 15 ஆண்டுகளுக்கு முன் மதுரையிலிருந்து பெங்களூருக்கு இடம்பெயர்ந்த மூத்த தோழர் சிதம்பரம், தனது அப்பாவின் சேகரிப்பான புத்தகங்களை மூன்று பெரும் மர பீரோவில் அப்படியே என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார். 1940-களில் வில்லிபுத்தூரில் ஆசிரியர் வேலைபார்த்து ஓய்வுபெற்ற சேதுராமையரின் அழகிய கையெழுத்துடன் கூடிய அந்தப் புத்தகங்கள் என்னிடமுள்ள பெரும்சொத்து. அவற்றில் பெரும்பாலும் இலக்கிய நூல்கள்தான் இருந்தன. அவற்றுக்கு இடையில் சமையலைப் பற்றிய புத்தகம் ஒன்றும் இருந்தது. ஒருநாள் தற்செயலாக அதனைப் புரட்ட ஆரம்பித்த எனக்கு பலவிதமான ஆச்சர்யங்கள் காத்திருந்தன.
இராமச்சந்திர ராயரால் எழுதப்பட்ட ‘இந்து பாகசாஸ்திரம்’ என்கிற அந்தப் புத்தகம் 400 பக்கங்களைக் கொண்டது. 1891-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. பக்க அளவும், வெளியிடப்பட்ட ஆண்டுமே நமக்கு வியப்பை உண்டுபண்ணுபவை. ஆனால், பெரும் ஆச்சரியம் இரண்டு ரூபாய் விலைகொண்ட அந்தப் புத்தகம் அந்தக் காலத்திலேயே 2,000 பிரதிகள் அச்சடிக்கப் பட்டு சில ஆண்டுகளிலே விற்றுத்தீர்ந்து, மறுபதிப்பு போடப்பட்டுள்ளது என்பதுதான்.
2,000 பிரதிகள் விற்றுத்தீர்ந்த முதல் தமிழ் புத்தகம் இதுவாகவே இருக்கக்கூடும். அதுவும் இரண்டு ரூபாய் விலைக்கு. விலை, விற்பனை இதுவெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். 400 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிடும் துணிவு ஒருவருக்கு வந்துள்ளதே, அதுவே நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது.
தமிழில் நவீன இலக்கியம் எழுதத் துவங்கிய காலத்திலேயே சமையல் புத்தகங்களும் எழுதப்பட்டுவிட்டன. சமையல் புத்தகத்தின் விற்பனை ஆரம்பம் முதலே கொடிகட்டித்தான் பறந்திருக்கிறது. இராமச்சந்திர ராயர்தான் அந்தக் கொடியைப் பிடித்துக்கொண்டு முதலில் மைதானத்தை வலம் வந்திருக்கிறார்.
இந்தப் புத்தகம் “பீடிகாவிதிகள், பலவகை போஜனபதார்த்தங்கள், பலவகை பக்ஷணங்கள்” என்று மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு அதன் கீழ் 49 உபதலைப்புகள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில், 298 வகையான பதார்த்தங்கள் செய்யும் முறையும், 104 பக்ஷணங்கள் செய்யும் முறைபற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளன.
சுவை மிகுந்த உணவு எல்லா காலங்களிலும் சமைக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், எப்படிச் சமைக்கப்படுகிறது என்பதற்கான பதிவுகள் மிகமிகக் குறைவு. பெரும்பாலான சமையல் புத்தகங்கள் சமையலுக்கான சேர்மானங்களைத்தான் பேசுகின்றன. ஆனால், அதனைத் தாண்டி சமையலோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் பற்றிய குறிப்புகளோடு ஒரு புத்தகம் எழுதப்பட்டால், அது சுவாரஸ்யம் மிகுந்த முக்கியத்து வத்தைப் பெறுகிறது. இராமச்சந்திர ராயர் எழுதியுள்ள புத்தகம் அப்படிப்பட்டது. இன்றிலிருந்து 125 ஆண்டுகளுக்கு முந்தைய அடுப்பங்கரை எப்படி இருந்தது, சமையல் சம்பந்தப்பட்ட பொருட்கள், உபகரணங்கள், என்னென்ன இருந்தன, அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய மிகத் துல்லியமான பதிவு இது.
இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு முழுவதும் விற்றுத்தீர்ந்த பிறகு இரண்டாம் பதிப்பு வெளியிடுவதற்குள்ளான இடைப்பட்ட காலத்தில் (1890 -1900) நாட்டில் புதிதாக அலுமினியப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. தொடக்கக் காலத்தில் சமையலுக்கு மண்பாத்திரங்களைப் பயன்படுத்திவந்த மக்கள், பின்னர் செம்பு, பித்தளைப் பாத்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இப்போது அலுமினியம். எனவே, இரண்டாம் பதிப்பில் அலுமினியப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தி, அதனைப் பற்றி நன்கு அறிந்த ஒருவரின் குறிப்புகளை வாங்கி இணைத்துள்ளார்.
செம்பு, பித்தளைப் பாத்திரங்களை உபயோகிக்கும்பொழுது அடிக்கடி கலாயம் பூச வேண்டும். அப்படிப் பூசவில்லை என்றால், அவற்றில் வைக்கும் புளி முதலியவை கலந்து உணவுப்பொருட்களில் ரசாயன மாற்றம் உண்டாகி உணவே நஞ்சாக மாறிவிடும் ஆபத்து உண்டு. இதனால், சில்லறை வியாதிகள் உருவாகின்றன என்பதைப் பற்றி விரிவாக விளக்கிவிட்டு, “சுத்தமான அலுமினியப் பாத்திரம் புளி முதலியவற்றால் களிம்பு பிடிப்பதில்லை. கனமின்றி மிக லேசாக இருப்பதால், பிரயாணங்களுக்கு உபயோகமாக இருக்கும். (‘லேசாக’ என்ற சொல் அப்பொழுதே பொதுப் புழக்கத்தில் இருந்துள்ளதைக் கவனிக்க). மற்ற பாத்திரங்களைவிட அதிசீக்கிரமாக சூடுகொள்வதினால், அதிக விறகு செலவில்லை” எனப் புதிய அறிமுகமான அலுமினியப் பாத்திரங்கள் சிறப்புகள் குறித்துக் கூறுகிறது இந்நூல்.
“பசியடங்கல், பிணிதீர்த்தல், பலத்தைக் கொடுத்தல், நல்லறிவை விளைவித்தல்” என்று ஆகாரத்தின் நற்குணங்களைப் பட்டியலிடும் ராயர், வைத்தியசாஸ்திரம், யோகசாஸ்திரம் முதலிய பல சாஸ்திரங்களின் அடிப்படையில் உணவுக்கு அடிப்படையான 267 வகையான பொருட்களின் குணங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
அதன் பின் சமையலுக்கான சமாசாரங் களுக்குள் நுழைகிறார். இன்றைக்கு சமையலுக்குத் தேவையான எல்லா பொருட்களும் தனித்தனி பாக்கெட்டுகளில் சந்தையில் கிடைக்கின்றன. அவை நமது அடுப்படி அலமாரிகளில் நிரம்பி இருக்க, என்ன சமைக்கப் போகிறோம் என்பதில் இருந்தே சமையலுக்கான குறிப்புகள் துவங்கும். ஆனால், நூற்றாண்டுகளுக்கு முந்தைய நிலைமை அப்படி அல்ல.
இராமச்சந்திர ராயர் தனது சமையல் குறிப்புகளை களத்துமேட்டில் இருந்துதான் துவக்குகிறார். “நன்றாய் முதிர்ந்து பழுத்த எந்தச் சாதி நெல்லாகிலும் அறுக்கப்பட்டு, அதிலுள்ள சாவி அதாவது பதரானது தூற்றல், புடைத்தல் முதலியவற்றால் போக்கப்பட்டு, களத்திலிருந்து வீடு வந்து சேர்ந்தபின், அதை நன்றாய் வெயிலில் உலர்த்தி, அச்சூடு ஆறிய பின் களஞ்சியம் அல்லது குதிரில் கொட்டிக் கொஞ்சம் பழகியபின் அதாவது பழையதான பின் அரிசியாக்க விரும்பும் தருணத்தில், அதை மறுபடியும் கொஞ்சம் வெயிலில் உலாத்தி, அதில் கொஞ்சம் உள்ளங்கையில் கொண்டு கசக்க, அந்த நெல்லின் அரிசியும் உமியும் வேறுபடுவதைப் பார்த்து, அத்தருணத்தில் வெயிலை விட்டு அப்புறப்படுத்தி, மற்றொரு தடவை கல், மண், பதர் முதலியவை இல்லாமல் புடைத்த பின் ஒருநாள் ஆறவைத்திருந்து, மறுநாள் அடியிற்கூறுமாறு அரிசியாக்கிக்கொள்ள வேண்டும்.

கல்லுரலின் குழியை ஒப்பக் குழியையுடைய கற்றரை அல்லது கடினமான தரையில் அக்குழியானது மையமாய் இருக்கும்படி, அதன் பேரில் கல், மண், மரம் இவை ஏதாவதொன்றினால் செய்யப்பட்ட குந்தாணியை வைத்து, அதில் அந்தக் குந்தாணியின் முக்கால் பாகம் நிறையும்படியாக நெல்லைக் கொட்டி, இரண்டு அல்லது மூன்று பேர்கள் உலக்கைகளைக் கொண்டு குத்துக்குப் பின் குத்தாக மாற்றிமாற்றிக் குத்திக்கொண்டேயிருந்து அந்த நெல்லின் பெரும்பான்மையான உமி, அரிசி இவை பிரிபட்டவுடனே, அதைக் கிளறி இப்பால் எடுத்துவைத்துக் கொண்டு, மறுபடியும் அந்தக் குந்தாணியில் மீதி நெல்லையும் கொட்டி, இவ்வாறே குத்திய பின் அவற்றை எல்லாம் நன்றாகக் கலந்து, உமி நீங்கும்படியாக முறம், சுளகு இவற்றால் நன்றாகப் புடைத்து உமியைப் போக்கிவிட்டு, அரிசி, நெல், இவை கலப்பாயிருப்பதை மற்றொரு தடவை குத்தி எடுத்துக்கொள்ள வேண்டியது. முதலில் குத்தியதற்கு ‘குத்தல்’ என்றும், இரண்டாந்தரம் குத்தியதற்கு ‘மழுக்கல்’ என்றும் சொல்லப்படுகிறது.”
இவ்வாறாக நெல்லைக் குத்தி அரிசியாக்கும் முறையைச் சொல்லிச் செல்லும் இராமச்சந்திர ராயர், இதே போன்று காய்ந்த தானியங்களைப் பருப்பாக்கல், கோதுமையை மாவாக்கல், நெல்லைக் குத்தி அவலாக்கல், பாலைத் தயிராக்கல் என்று அனைத்தையும் பற்றி விரிவாகப் பதிவுசெய்கிறார். நவீன இயந்திரம் எதுவும் இல்லாமல் (அரிசி அரைக்கும் ரைஸ்மில்கூட இல்லாத காலத்தில்) சமையலுக்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களும் விளைந்த தானியங்களில் இருந்து மனித உழைப்பினால் எப்படி உருமாற்றப்படுகின்றன என்பதனைப் பற்றிய ஒரு நேரடி வர்ணனை இது.
சமையலுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைத் தயார் செய்வதைப் பற்றிச் சொல்லிவிட்டு அடுத்து சமையலுக்குத் தேவையான பாத்திரங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறார்.
இந்தப் புத்தகத்தில் இருக்கும் பெரும் வியப்பே, சமையல் செய்ய அன்றைய தினம் பயன்பாட்டில் இருந்த சுமார் 100 பாத்திரங்களைப் படத்தோடு விளக்கியுள்ளதுதான். இவற்றில் பெரும் பான்மையானவை இன்று வழக்கொழிந்து விட்டன. அதன் காலம் முடிந்துவிட்டது. ஒரு காலத்தில் வீட்டின் அலமாரிகளில் இருந்த தேக்கரண்டியும், பித்தளைச் சவலையும். சருகச்சட்டியும், வெண் கலப்பானையும் இன்று இல்லை. அவை எல்லாம் எப்படி மறைந்தன என்ற நினைவுகள்கூட நம்மைவிட்டுப் போய்விட்டன. ஆனால், இவை எல்லாம் எப்படி, என்ன வடிவத்தில் இருந்தன என்பது துல்லியமாக வரையப்பட்டுள்ளது. இந்தப் படங்களை வரைந்த ஓவியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. படங்களோடு அதன் செயல்முறை விளக்கமும் தரப்பட்டுள்ள இந்நூலினை நூற்றாண்டுக்கு முந்தைய அடுப்பங்கரை ஆவணம் என்றே சொல்லலாம்.
வேகவைப்பதற்குச் சிறந்த பாத்திரங்கள் எவை? வறுப்பதற்கான பாத்திரங்கள் எவை? பொரிப்பது மற்றும் சுடுவதற்கான பாத்திரங்கள் எவை எவை என்று தனித்தனியாகப் பட்டியலிட்டுள்ளார். இந்தப் பாத்திரங்கள் எல்லாம் கடந்த கால நினைவுகளை எல்லோருக்குள்ளும் கிளறக்கூடியவை. சில பாத்திரங்கள் மட்டும் வடிவங்கள் மாறிப் பயன்பாட்டில் இருக்கின்றன. இன்றும் பெரும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பாத்திரம், இட்லிப் பானை. ஆனால், அது ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குள் தனது வடிவத்தை முழுமுற்றாக மாற்றிக் கொண்டுள்ளது என்பதனை இவர் வரைந்துள்ள படத்திலிருந்து நாம் அறிய முடிகிறது.
அடுத்தபடியாக அடுப்புகளைப் பற்றிய விபரங்களைக் கொடுக்கிறார். ஒரு பாத்திரம் மட்டும் வைக்கக்கூடிய ஒற்றை அடுப்பு, தேவையான இடங்களுக்குக் கையில் எடுத்துப்போகக்கூடிய கட்டியடுப்பு, இரண்டு பாத்திரங்களை வைக்கக்கூடிய கொடியடுப்பு, ஒரே நேரத்தில் மூன்று பாத்திரங்களை வைக்கக்கூடிய இரட்டைக் கொடியடுப்பு, மிட்டாய்க்கடைக்காரர், பொரிகடலைக்காரர் வைத்திருக்கக்கூடிய குண்டடுப்பு, கல்யாணம் முதலிய விசேஷ நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டத்திற்கு சமைக்கக்கூடிய கால்வாய் அடுப்பு. ரொட்டி முதலியவை சுடக்கூடிய கூண்டடுப்பு மற்றும் போன அடுப்பு என எட்டு வகையான அடுப்புகளை படம் போட்டு விளக்குகிறார். இதில், முதல் ஐந்து வகையான அடுப்புகளின் மேல் அரைப்படி அரிசி முதல் ஐந்து படி அரிசி வரையிலான பானைகளை வைக்கலாம் என்றும், இந்த அடுப்புகளை நமது பெண்கள் களிமண் முதலியவற்றால் தாங்களே செய்து கொள்வதும் உண்டு என்றும் கூறுகிறார். தினசரி அடுப்புகளை சாணம், மண் முதலியவை கொண்டு மெழுக வேண்டும் இல்லையென்றால், உவர் மண் சுவரைப் போல இவ்வடுப்பும் சீக்கிரத்திலேயே உதிர்ந்துவிடும் என எச்சரிக்கிறார்.
அடுப்பில் எரிப்பதற்கான எரிகட்டைகள் பற்றிய குறிப்புகளையும் அடுத்து தருகிறார். இவ்வளவு நேரம் அவரது எழுத்துகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாகத்தான் இருந்தன. ஆனால், எரிகட்டைகளைப் பற்றிய அவரது குறிப்புகள் சற்றே நெஞ்சு வலியை வரவைப்பதாக இருந்தன.
அவர் சொல்கிறார், “அடுப்பெரிக்க வேம்பு, சந்தனம், தேவதாரு, தேக்கு இவ்வகைக் கட்டைகளை உபயோகிக்கக் கூடாது. உபயோகித்தால், இக்கட்டைகளின் எரிச்சலால் பக்குவமான பதார்த்தங்கள் கசப்பாகிவிடும், அல்லாமலும் பாத்திரத்தின் மேல்புறத்தில் அதிகக் கருப்பாய் மசி ஒட்டிக்கொண்டு சீக்கிரத்தில் போகாது. அதைப் போக்குவதற்காக, மணல், மண் முதலியவற்றைக் கொண்டு அப்பாத்திரங்களைத் தேய்ப்பதால், அவற்றுக்கும் சீக்கிரத்தில் கெடுதிகள் உண்டாகின்றன” என்கிறார்.
சந்தனக் கட்டைக்கும் தேக்குக் கட்டைக்கும் கவலைப்படாமல், உணவின் கசப்பிற்கும், சட்டியில் ஒட்டும் கரிக்கும் கவலைப்பட்டுள்ள இவனல்லவோ உண்மையான சமையல் கலை நிபுணன் என்று சத்தம்போட்டுக் கூவ வேண்டும் போல் தோன்றுகிறது. சந்தனக்கட்டையும் தேக்குக் கட்டையும் அடுப்பெரிக்கப் பயன்படுத்திய புண்ணியவாளர்கள் வாழ்ந்த பூமியில்தான் நாமும் வாழ்கிறோம் என்ற வரலாற்றைப் பதிவு செய்ததற்காக இராமச்சந்திர ராயரை வாழ்த்த வேண்டும். அதிர்ச்சிதரக்கூடிய எரி கட்டைகளைப் பற்றிய விபரங்களைக் கொடுக்கும் ராயர், கருவேலன், கருங்காலி, புரசு, புளியன் என எரிப்பதற்குத் தகுந்த மரக்கட்டைகளின் பட்டியலையும் மறவாமல் கொடுக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய நீரைப் பற்றிய குறிப்பு வருகிறது, “வெயில், நிலவு, காற்று இவை படாததும் சேறு, சதுப்பு நிலம் இவற்றில் பாய்ந்தோடுகிறதும், கட்டுக்கிடையாய் நிற்கிறதும், உதிர்ந்த செத்தைச் சருகுகளை உடையதும், வண்டலாயும், அதிகக் கனமாயும், உவப்பாயுமிருப்பதும், இரைக்கப்படாத கிணறு, குளங்களில் இருப்பதுமான நீரைக் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்தக் கூடாது.” என்று பட்டியலிடும் இவர், “செவல், கரிசல், களிமண், மணல், பாறைகளையுடைய நிலங்களில் வேகமாயும் தெளிவாயும் பாய்ந்தோடும் ஆறு, ஏரி, கால்வாய், ஓடை, சுத்தமாகவும் லேசாகவும், ஊற்றும் இறைப்புமுடைய குளம், கிணறு இவற்றின் நீரைப் பயன்படுத்தலாம். ஆனால், வடிகட்டி உபயோகிப்பது நலம் என்கிறார். இப்படியாக, சமையலுக்கான முன்தயாரிப்புகளை எல்லாம் முடித்துக்கொண்டு பதார்த் தங்களுக்குள்ளும், பக்ஷணங்களுக்குள்ளும் நுழைந்து வெளுத்துக் கட்டுகிறார்.
இயற்கையாய் விளைந்த அல்லது விளையவைத்த பொருட்கள் நேரடியான மனித உழைப்பால் நிகழும் மாற்றங்களின் வழியே சமையல்கட்டுக்கு வந்து சேர்கின்றன. அங்கும் நவீனக் கருவிகள் என்று சொல்லப்படும் எந்த ஒரு கருவியும் இல்லாமல் பாரம்பரிய அறிவுச் சேகரத்திலிருந்து அவை சமைத்த உணவாக மாற்றப் படுவது பற்றி இந்தப் பகுதி பேசுகிறது.
களி கிண்டும் துடுப்பானது பாலை மற்றும் இலந்தை மரத்தினால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதில் துவங்கி, புளிச்சாதத்தைப் பாக்குப்பாளையில் கட்டிவைத்தால், 10 அல்லது 15 நாட்களுக்குக் கெடாமலிருக்கும் என்பது வரை மரபார்ந்த அறிவின் தொகுப்பாகப் பல தகவல்கள் இதில் ஊடாடிக்கிடக்கின்றன.
சமைக்கும் முறையைப் பற்றி சுமார் 300 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளன. சமையலுக்கான எடையின் அளவாக ரூபாய் எடை, குன்றிமணி எடை என்கிற கணக்கில் துவங்கி நெய்யில் வறுக்கப் பயன்படும் துடைப்பத்தின் ஒவ்வொரு ஈக்கியும் கட்டையாக இருக்காமல் கூராயிருக்க வேண்டும் என்பதோடு முடிகிறது.
402 வகையான உணவைச் சமைத்து முடித்த பின் அவை எப்படி பரிமாறப்பட வேண்டும் என்று கூறத் தொடங்குகிறார். “ஆங்கிலேயர்களுக்குள்ளும் விசேஷமாய் கவனிக்கப்பட்டு (Dinner table arrangement) ‘டின்னர் டேபிள் அரேஞ்ச்மென்ட்’ எனும் பரிமாறும் முறையில் தேர்ந்தவர்களுக்குத் தகுந்த வெகுமதிகளையும் கணகாஷி சபையில் கொடுத்துவருகிறார்கள். ஆகையால் நமது ஆகாரத்துக்குரிய போஜன பதார்த்தங்களை பாகம் செய்பவர்கள் அதைப் பரிமாறும் நியமங்களைப் பற்றியும் அறிந்திருப்பது அவசியமாதலால் அதைப் பின்வருமாறு அறியவேண்டியது” என்று முன்விளக்கம் கொடுத்துவிட்டு அப்பகுதியை விளக்கிச் செல்கிறார்.
உணவு பரிமாற ஏற்றது வாழை இலை. அது கிடைக்காதபொழுது ஆல், பலா, மந்தாரம் முதலிய இலைகளைத் தைத்துப் பயன்படுத்தலாம். வாழை இலையில் உண்ணுகையில் இலையின் நுனி உண்பவரின் இடப்பக்கமும், அடி வலப்பக்கமுமாய் இருக்கும்படி போடவேண்டும். ஆனால் கஞ்சம், கிருஷ்ணா, கோதாவரி முதலிய தெலுங்கு நாட்டாரும், கோலாபூர், ஸோலாபூர், புனா, பம்பாய் முதலிய மஹாராஷ்டர தேசத்தவரும் இலையின் நுனி மேலும் அடி கீழும் இருக்கும்படி போடுகின்றனர். இதில் நமது வழக்கமே உத்தமம் என்கிறார்.
வாழை இலையை நுனி இடப் பக்கமும் அடி வலப் பக்கமுமாக இருக்கும்படி போட்ட பின், சமைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் அதில் எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதனைக் மேற்கண்டவாறு வரைந்து விளக்கியுள்ளார்.

1. பொடி செய்த உப்பு 2. தொகையல் (சட்ணி) 3. ஊறுகாய் 4. கோசுமபரி, பச்சடி 5. கறி, உப்பேறி, பொடி
6. பருப்பு (அ) ஊறின ஆமவடை 7. சித்திரான்னங்கள் 8. அப்பளம் (அ) ஆமவடை (அ) வடாம்
9. கூட்டு, குளம்பு, இளக்கமான பதார்த்தங்கள் 10. இட்லி, கொழுக்கட்டை, போளி, லாடு 11. பாயஸம்
12. ஆசாரத்திற்குரிய முக்கியப் பதார்த்தம் அனைத்தும் 13. நெய்
சாப்பிட்ட பின் கொடுக்க வேண்டிய தாம்பூலம், காபி, டீ, கோகோ ஆகியவை பற்றி பல பக்கங்கள் எழுதப்படுகின்றன. இறுதியாக, இரண்டு பேர் முதல் பத்துப்பேர் வரையில் அடங்கிய ஒவ்வொரு சம்சாரத்துக்கும் ஆகும் மாதாந்திரச் செலவு எனப் பட்டியல் கொடுக்கிறார். அது அன்றைய சந்தை நிலையில், பொருட்களின் மதிப்பை அறிய உதவும் ஓர் அரிய அட்டவணை மட்டுமல்ல, ஆண் மையக் குடும்பத்தில் கொண்டுவந்து பூட்டப்பட்ட சம்சார பந்தத்தின் கூட்டல் தொகையையும் அது குறிக்கிறது.
இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்வதற்கு இருக்கிறது. அதில் முக்கியமானது இதன் தலைப்பு, ‘இந்து பாகசாஸ்திரம்’ என்று தலைப்பிட்ட நூலில் மாமிச உணவு வகைகளைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. மரக்கறி உணவைச் சாப்பிடுகிறவர்கள் மட்டுமே இந்துக்கள் மற்றவர்கள் எல்லாம் இந்து அல்லாதவர்கள் என்ற சரித்திரத்துக்கு இந்த நூல் சமையல்பூர்வமான சான்றினை வழங்குகிறது.
பிராமணப் பேச்சுமொழியில், புள்ளி வைக்காத எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்நூலின் முன்னுரையில் ஆசிரியர் இதனை எழுதுவதற்கான நோக்கத்தைப் பற்றிக் கூறுகிறார்.
‘பெண்கல்வி இடைவிடாது விருத்தி யடைவதும், கூடுமானவிடங்களிலெல்லாம் ஸ்திரிகளே பெண் பயிற்சியை நடத்தி வருகிறார் என்பதும் சந்தோஷப்படத்தக்க விஷயங்களே, ஆனபோதிலும் நம்முடைய இராஜதானியின் பெண் பயிற்சி ஏற்பாட்டில் ஒரு பெரிய குறையிருக்கிறது. அது என்னவெனில், நமது பெண்கள் பெரியவளாகும்போது தங்களுடைய கணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு உபயோகமான விசயங்களில் யாதொரு முயற்சியும் செய்யப்படவில்லை என்பதேயாம். அவர்களுக்குப் பாட சாலையில் வாசிப்பு, எழுத்து, கணிதம், சரித்திரம், பூகோளம், சுகாதார விளக்கம், தையல்வேலை முதலிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனாலும் பெண்பிள்ளைகளுக்கு மேற்கூறிய விஷயங்களைக்காட்டிலும் அதிக அவசியமும் முக்கியமுமான சமையல் தொழில், நாடோடி வைத்தியம் ஆகிய விஷயங்களில் தேர்ச்சியுண்டாக்க இதுவரை யாதொரு முயற்சியும் செய்யப்படவில்லை’ அக்குறையைத் தீர்ப்பதே இந்நூலின் நோக்கம் என்பதை முன்னுரை தெளிவுபடுத்துகிறது.
அடுப்பங்கரையை விட்டு பாடசாலையை நோக்கிச் சற்றே நகரத் துவங்கிய பெண்களை நோக்கி இப்புத்தகம் வீசியெறியப் பட்டிருக்கிறது. நவீனக் கல்வியை நோக்கிப் பதற்றமடைந்த ஆணின் குரல்தான் இப்புத்தகம். கணிதத்தையும், பெளதீகத்தையும்விட கடமைதான் (சமையல்) முக்கியம் என்று கர்ஜிக்கும் பழைமையின் ஆவேசம் இது. பெண்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிய, அனுப்ப நினைத்த எல்லோரும் இந்தப் புத்தகத்தை அவசர அவசரமாக வாங்கித் தீர்த்திருப் பார்கள். பெண்ணிடமிருந்து சமையலைப் பிரிக்க சிறு நூலளவு முயற்சி நடந்தாலும், 400 பக்க தடிமனான நூல் அளவு எதிர்வினை நிகழும். அதன் வரலாற்றுச் சான்றுதான் ‘இந்து பாகசாஸ்திரம்’.
அன்றிலிருந்து இன்று வரை வெளியிடப்பட்டு, விற்றுத்தீரும் எண்ணிலடங்கா சமையல் புத்தகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த நோக்கத்தையே நிறைவேற்றுகின்றன.
ஆனாலும், இராமச்சந்திர ராயர் எழுதியுள்ள புத்தகம், சமையல் புத்தகம் என்பதனைத் தாண்டிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அது நவீனக் கருவிகளற்ற ஒரு காலத்தில், சமைப்பதற்கான பாரம்பரிய அறிவை மொத்தமாக உருத்திரட்டி வைத்திருக்கிறது. இயற்கைக்கும் மனிதனுக்குமான பட்டு இழையால் நெய்யப்பட்ட ஒரு முடிச்சு அவிழ்க்கப் படுவதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசிப் புகைப்படம் போன்றது. இந்த அரிய சேகரிப்பு இதுநாள் வரை வேறு எந்த ஒரு வடிவிலும் நமக்குக் கிடைக்காதது.
இது வெறும் சமையல் குறிப்பு பற்றிய புத்தகம் அல்ல, ஒரு பண்பாட்டுச் சான்றாவணம். நூற்றாண்டுக்கு முந்தைய சமையலின் சரித்திரமென்றே இதனைச் சொல்லலாம்.
https://www.facebook.com/savithri.kannan.7/posts/4184699684880892
’’அடப்பாவிகளா?’’ என்று படிக்கும் யாரையும் உலுக்கி எடுத்து நிம்மதி இழக்க வைக்கும் பதிவே இந்நூல்!
உலுக்கி எடுக்கும் என்றால்,காந்தியை படுகொலை செய்ததற்கு மட்டுமல்ல! அந்தக் கொலையில் தெள்ளென வெளிப்பட்ட உண்மைகளை எவ்வளவு கவனமாக மறைத்தனர் – அதுவும் அவரது பிரதான சீடர்களாக அறியப்பட்ட பெரிய மனிதர்களும்! முக்கிய பத்திரிகைகளும்! என்பதைத்தான் இந்த பதிவுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன…!
காந்தி இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்டார்! ஆனால்,அவர் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை இந்து வெறியர்களும்,அவர்கள் சார்ந்த அமைப்புகளும் தொடர்ந்து சொல்லி வந்தன என்பது மட்டுமல்ல,அந்த காரணத்திற்காக அவர் மீது துவேஷபிரச்சாரங்களையும் செய்து வந்தனர்! ஆக,இதன் தொடர்ச்சியாக வரை கொலை செய்ய பலமுறை முயன்று,அதில் வெற்றியும் பெற்றனர் என்பது தானே வரலாறு!
ஆனால், காந்தியின் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்து தலையங்கமும்,கட்டுரைகளும் எழுதிய மிக முக்கிய பத்திரிகைகள்- குறிப்பாக தி இந்து,ஆனந்தவிகடன்,கல்கி…உள்ளிட்ட பிரபல பத்திரிகைகள் காந்தியின் பெருமைகளை,அவர் உலக அளவில் மதிக்கப்படுவதை,அவருக்கு மக்களிடம் உள்ள அபரிதமான செல்வாக்குகளை வியந்தும்,போற்றியும்,உருகி,உருகியும் எழுதினவேயன்றி,காந்தியைக் கொன்றவனின் நிலைபாட்டை கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்பது மாத்திரமல்ல,கனத்த மவுனம் சாதித்தன என்பதை அந்த பதிவுகளை படிப்பவர் எவரும் உண்ரமுடியும்!
அத்துடன்,காந்தியைக் கொன்றது ஒரு இந்து வெறியன்,ஆர்.எஸ்,எஸ் இயக்கம் மற்றும் இந்து மகாசபையில் நீண்ட காலம் செயல்பட்டும்.பேசியும்,எழுதியும் வந்தவன் என்பதையும் எந்த பத்திரிகையும் சுட்டிக் காட்டாமல் கவனமாக தவிர்த்து, மாறாக காந்தியை கடவுளுக்கு நிகராக புகழ்ந்து விஷயத்தை திசைதிருப்பும் வகையில் ஆன மட்டும் தங்கள் எழுத்தாற்றலை பயன்படுத்தியுள்ளதையும் இந்த பதிவுகள் அம்பலப்படுத்துகின்றன!
அதாவது காந்திக்கு எதிராக வன்மமாக தொடர்ந்து,பேசியும்,எழுதியும் வந்தவர்களின் தவறுகளை கண்டிக்க மனமில்லாவிட்டாலும்,அதை மறுக்ககூட மனமின்றி அழகாக ’எஸ்கேப்’ ஆகி,காந்தி பஜனை பாடுகிறார்கள் என்பதை தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாரதி இருந்தால்,இந்த அநீதிகளை எதிர்த்து எப்படி பொங்கி இருப்பான்?
ஆனால்,ராஜாஜியும்,கல்கியும்,எஸ்.எஸ்.வாசனும்,இந்து கஸ்த்தூரி அய்யங்காரும் ஏன் மவுனித்தனர் என்பதிலுள்ள ’உள் அரசியலை’ புரிந்து கொள்ள முடிந்தால்,இன்று மதவாத அரசியல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து ஆட்சியை பிடிப்பதற்கான நிலையின் பின்புலத்தில்,அன்று மவுனசாட்சியாக அடித்தளம் போட்டுக் கொடுத்த பின்புலத்தை உணரமுடியும்!
காந்தியை கோட்சே கொல்வதற்கு பத்து நாட்கள் முன்பாக கொலை செய்யமுயன்று குறி தப்பி கைதான மதன்லால், சிறையில் என்னை வந்து சந்தித்த என் சகாக்கள்,இன்னும் பத்து தினங்களில் காந்தி மரணமடைவார் என்று சொல்லிவிட்டுச் சென்றனர் என்று சொல்லியிருப்பதில் இருந்து,சிறைக்குள் வந்து உறுதியளித்து செல்லக்கூடிய அளவுக்கு காந்தியின் கொலை திட்டமிட்டு,வெளிப்படையாக நடந்துள்ளது என தெரிய வருகிறது.
எந்த அளவுக்கு பட்டேலின் கீழ் இருந்த உள்துறை அமைச்சகம் காந்திக்கான ஆபத்தை கையாண்டுள்ளது என்பதும் விளங்குகிறது.
இந்தச் சூழலில் பெரியாரின் குடியரசு,அண்ணாவின் திராவிட நாடு உள்ளிட்ட ஒரு சில இதழ்களே காந்தி கொலையின் பின் இருந்த மதவெறியையும்,அவை சார்ந்த அமைப்புகளையும்,துணிந்து வன்மையாக கண்டித்து தலையங்கமும்,கட்டுரைகளும் தீட்டியுள்ளன என்பதையும் காணமுடிகிறது.
காந்தி கொலையில் சம்மந்தபட்ட கோட்சே உள்ளிட்ட ஆறுபேர் பிராமணர்கள் என்ற நிதர்சனத்தை நினைவில் வைத்து பார்த்தால், அந்தகாலத்தில் மற்ற பத்திரிகைகள் மறைத்த அரசியலையும்,பெரியார்,அண்ணா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே ’கோட்சே ஓரு பார்ப்பனர்’ என்று சொல்லமுடிந்த அரசியலையும் புரிந்து கொள்ளலாம்!
அதுவும் பெரியார் ஒருபடி மேலே சென்று,வருங்காலத்தில் கோட்சேவை கடவுள் ஆக்கினாலும் ஆக்கிவிடுவர் என்று தீர்க்கதரிசனத்துடன் எழுதியுள்ளதையும் பார்த்தால் சிலிர்க்கிறது...!
இந்த பதிவை கொண்டுவந்த நண்பர் கடற்கரையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! இது விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு வரலாற்றுக் கடமையாகும்! அந்த கடமைக்கு துணை நின்ற சந்தியா பதிப்பக நடராஜனையும் மனமாற வாழ்த்துகிறேன்!
- சாவித்திரி கண்ணன்!
[9:55 PM, 3/21/2020] சாவித்திரி கண்ணன்: #WhatsApp sharing


இப்போதும் திருடி வந்த புத்தகத்தைப் பற்றி இப்போது பேசாவிட்டால் வேறு எப்போது பேசுவது… உலகின் மிக முக்கியமான 25 புத்தகங்களில் ஒன்றாக இதை பட்டியலிடுவார்கள்.
கார்ல் மார்க்ஸ் எழுதியதை லெனின் நடைமுறை படுத்திய புரட்சி நடந்த நாட்களைப் பற்றியது. மிக நெருக்கடியான புரட்சி நடந்த முதல் பத்து நாட்களைப் பற்றியது.
இந்த புத்தகத்தின் பெயர் உலகை குலுக்கிய பத்து நாட்கள், அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீட் அவர்கள் எழுதியது. இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த நாட்களில், நான் உலகை முழுதாக கண்களை விரித்துக்கொண்டு பார்க்கத் தொடங்கியிருந்தேன். அப்படிப் பார்க்க இந்தப் புத்தகம் கற்றுக் கொடுத்தது.
நூற்றுக் கணக்கான போர் காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்த்த கிளர்ச்சி, எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஏற்படுத்தும். புனைவு என்ற சொல்லுக்கே சின்ன இடமுமில்லை, அப்பட்டமான கறுப்பு என்பார்களே அப்படி …. இந்தப் புத்தகத்தை வாசித்த நாட்களில் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் என்னால் கேள்வி கேட்கவும், உற்று நோக்கவும், மற்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும், ஏமாற்று, பாசாங்கு, பசப்பு அரசியல்களை ப் புரிந்துகொள்ளும் நெஞ்சுரம் ஏற்பட்டது போலிருந்தது என்று என்னால் உண்மையாகச் சொல்லமுடியும்.
உலகை குலுக்கிய பத்து நாட்கள் புத்தகம் வாசிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ‘டாக்டர்’ பட்டம் பெற்றதற்காக திரையுலகம் பாராட்டு விழா நடத்தியிருந்தது. நான், என் தம்பி, பாலிடெக்னிக்கில் பயிலும் என் உறவினர் என சிறுவர்களாகிய நாங்கள் பழைய நேரு திறந்தவெளி விளையாட்டரங்கில் நடக்கும் விழாவை வேடிக்கை பார்க்கப் போயிருந்தோம். எம்.ஜி.ஆர். மேடையேறிய தருணம், மக்கள் முண்டியடித்து அவரை அருகில் பார்க்கத் துடித்த ஆர்வக் கோளாறில் சிறுவர்களாகிய நாங்கள் சிக்கிக்கொண்டோம். அந்த சன சுனாமியடங்க பத்து நிமிடம் பிடித்தது. (சனங்களின் அலையில் நாங்கள் சிக்கி பிதுங்கிவிட்டோம். உயிரோடு வீட்டுக்குப் போனது அதிசயம்தான்.) அதுநாள் வரை எனக்கு எம்.ஜி.ஆர். மீதிருந்த சிறுவர்களுக்கே உரிய மயக்கம் தெளிய காரணம் அந்தப் புத்தகம்தான்…
உண்மையிலும் உண்மையான புரட்சியாளனை, உண்மையான மக்கள் தலைவனான வி.இ.லெனின் என்கிற விளாந்திமிர் இல்யிச் உல்யானவ் அவர்களை, உலகின் மிகச் சில அரிய மக்கள் தலைவரில் ஒருவரை மீண்டும் ஒருமுறை எனக்கு எடுத்துக்காட்டிய புத்தகம்.
சமநிலையற்று வர்க்கமாகப் பிளவுண்டிருக்கும் இந்த சமூக ஆக்கத்தின் உண்மையான பிரதிநிதிகளான உழைக்கும் மக்களின் ஆட்சியை சமைக்க பன்னெடுங்காலமாக வேலைகள் நடந்து வந்தன. பல்லாயிரம் உயிர் தியாகங்கள் செய்யப்பட்டன… அதன் இறுதி கட்டமான அந்தக் கடினமான நாட்களைப் பேசுகிறது என்பதைவிட காட்டுகிறது என்பேன். இந்தப் புத்தகம் அழகியல் மிக்க கவிதைகளால் ஆனதல்ல..
சிறு வயதில் கடைகளில் பொருள் வாங்கும்போது கொசுறு தருவார்கள். அப்படியான கடைகளில் ஒரு கடைக்காரர் எனக்கும் என்போன்ற சிறுவர்களுக்கும் எதாவது பொருள் வாங்கினால், அது பத்து காசுக்கு காப்பி தூளாகக்கூட இருக்கலாம்… கொசுறாக உடைத்தக் கடலையும் கொஞ்சம் நாட்டுச் சக்கரையும் தருவார். அவரை புரட்சித்தலைவர் என்று யாரோ சொல்ல, நாங்களும் அப்படியே அழைப்போம்… அப்படிதான் நம்மூர் ‘புரட்சித்தலைவர்கள்’ என்ற பட்டங்கள் எடுப்பாக இருக்க சூட்டிக்கொண்டவை என்று எனக்குப் புரிய வைத்த புத்தகம்.
இந்தப் புத்தகம்தான் நான் திருடி வந்து படித்த புத்தகம்… ஆனால் அந்தப் புத்தகமோ என் முழு இதயத்தை, அல்லது மனசாட்சியை, ஆன்மாவை என்று எழுத நினைத்தேன். அந்த வார்த்தையின் அர்த்தம் இங்கு மாய வாதமாக கருதப்படுவதால் அதைத் தவிர்க்கிறேன் (ஆன்மா என்பதற்கான பொருள் பற்றி எனக்கு தனிப்பட்ட ஒரு கருத்துண்டு. அது பற்றிய புதினம் ஒன்றெழுதவும் எனக்கு ஆசையுண்டு.)
ஒருவேளை இவ்வளவு காலம் புத்தக உரிமையாளர்களுக்கு தெரியாமல் நான் கொள்ளையடித்து வந்த பல புத்தகங்களையும், இப்போது வாசித்தப்பின் என்னை உலுக்கியெடுக்கும் இந்தப் புத்தகத்தையும் நான் ஒப்பீடு செய்து பார்க்கிறேன். முன்பு திருடிய புத்தகங்களின் பட்டியல் இப்படியாகத்தான் இருந்தது. நான்கைந்து அம்புலி மாமாக்கள்.. ஒன்றிரண்டு சாண்டில்யனின் வரலாற்று புனைவுகள், மிக அதிகமாக படக் கதை புத்தகங்கள்… ஆரம்ப நாட்களில் பட கதைகள்தான் என்னை ஒரேயடியாக கவர்ந்து இழுப்பவை. அவற்றைப் படித்து முடித்தவுடன் எங்கே எடுக்கப்பட்டதோ அங்கேயே வைத்துவிடுவது பற்றி நான் கவலைபட்டதில்லை….
ஆனால் இந்தப் புத்தகத்தை உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது. அதே நேரம் புத்தகத்தையும் விட்டு பிரியமனமில்லை… காரணம், இந்த உலகில் நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்பட்ட அரியதொரு நிகழ்வை எனக்குக் காட்டிய அந்தப் புத்தகத்துக்கும், அதை நான் வாசிக்க காரணமான மனிதருக்கும் நான் தருகிற மரியாதை அதை திருப்பி தந்துவிடவேண்டியதுதான். புத்தகத்தை எடுத்துக்கொண்டு திருப்பித்தர தொழிற்கல்வி மாணவர் விடுதிக்குப் போகிறேன்.. புத்தகத்துக்குரியவர் அறையைக் காலி செய்துகொண்டு போய்விட்டார் என்கிற தகவல் வந்தது… அதைவிட முக்கியமானது நான் எடுத்துச் சென்ற புத்தகங்களை அவர் எனக்குப் பரிசாக தந்துவிட்டதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்… அப்படியானால் அந்தப் புத்தகத்தை எடுத்தது நான்தான் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. நான் அதை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறார். அப்படிப்பட்ட மனிதரிடம் கேட்காமல் எடுத்து வந்த துயரம் 30 ஆண்டுகள் கழிந்த பின்னும் எனக்குண்டு.
இப்புத்தகத்திற்கு தோழர் வி.இ.லெனின் அவர்களே முன்னுரை எழுதியிருந்தார்கள். 1917இல் நடந்த புரட்சியின் மிக முக்கியமான அந்தப் பத்து நாட்களின் ஆவேசத்தை உயிர்த் துடிப்புடன் இந்தப் புத்தகம் பேசுகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன் என்று லெனின் முகவுரையில் சொல்கிறார்.
ரஷ்யரல்லாத அன்னியர்களில் புரட்சியை நேரில் கண்ணுற்றவர்கள் மிகச் சொற்பமானவர்களே.. ஜான் ரீட் அவர்களில் மிக முக்கியமானவர். அக்டோபர் புரட்சியானது கடந்தகால வரலாறாகிவிட்டது. வருங்கால இளந்தலைமுறையினருக்கு இப்புத்தகம் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரீட் அவர்களின் இப்புத்தகத்தை இதிகாச படைப்பென்றே சொல்ல வேண்டும். இப்படி எழுதியவர், லெனின் அவர்களின் துணைவியார் நதேழ்தா குரூப்ஸ்கயா.
அமெரிக்கரான இந்நூலின் ஆசிரியர் ஜான் ரீட், புரட்சி காலத்தில் அதனோடு தன்னை இணைத்துக்கொண்டவர். இந்நூலை எழுதி முடிக்கும் முன்பே அந்த மதிப்பிற்குரிய தோழர் டைபஸ் (டைப்பாய்டு அல்ல) காய்ச்சலுக்கு ஆளாகி ருஷ்யாவின் கிரம்ளின் செஞ்சதுக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
போல்ஷ்விக், மென்ஷிவிக், என்ற வார்த்தைகளைப் புரட்சி, எதிர்ப்புரட்சி என்பதன் அர்த்தங்களை எனக்குக் கற்பித்த புத்தகம். பாரிஸ் கம்யூனிஸ்டிகளின் வீர வரலாற்றை பேசுகிற ஒட்டுமொத்த புத்தகங்களுக்கு இணையான ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம் இந்த உலகை குலுக்கிய பத்து நாட்கள்.
புரட்சியாளர்கள் , எதிர்ப்புரட்சியாளர்கள், குள்ளநரித்தனம் கொண்ட தந்திரவாதிகள், நேர்மையற்ற பாசாங்கு அரசியல் வணிகர்கள், சனங்களைப் பற்றியென்ன, கழிசடைகள்… எசமானர்கள் தான் கடவுளுக்கு சமமானவர்கள் என்று மக்கள் மேல் பாய்ந்து பிடுங்கிய ராணுவ அதிகாரிகள் … என அன்றைய எல்லா நிலைமைகளும் காட்சிகளாய் நம் கண் முன்னே ஒரு திரைப்படத்தைப்போல அப்பட்டமாகக் காட்டுகிற புத்தகம்.
குறிப்பாக, புரட்சி நடந்த ஆண்டான 1917, குளிர்காலம் நீண்டதாக இருந்தது. பெரும்பாலான பணக்காரர்கள், மிக செல்வம் படைத்த வணிகர்கள், அண்டை நாடுகளுக்கு செல்வங்களுடன் ஓடிவிடுகிறார்கள். கடுமையான பஞ்சம். பனி, மழை, குளிர் இவற்றில் போதுமான ஆடைகளற்று உழைக்கும் மக்கள் பெண்கள் ,சிறுவர்களென விடியும் முன்பிருந்தே பால், ரொட்டி, சக்கரை, புகையிலைக்காக கடுங்குளிரில் நிற்பதை ரீட் மிக தத்ரூபமாக விவரிக்கிறார்…
அதே நேரம் புதிதாக அமைந்த பாட்டாளிகளின் ஆட்சியை ஒழிக்க விரும்பும் பணக்காரர்கள்… வழக்கம்போல கவிதை, நாடகம், ஓவியமென தங்க, வெள்ளி பேழைகளில் போதுமான சக்கரையுடன் தரமான ரொட்டியை சுமந்துகொண்டு சொகுசாக நமது ஜார் மன்னர் திரும்பவும் வருவாரா இல்லை ஜெர்மன் படை வந்து இந்த போல்ஷிவிக்குகளை ஒழித்துகட்டுவார்களா என்று ஏக்கத்தோடு குசுகுசுக்கும் காட்சிகள்.
டிராமில் ஒரு புரட்சிப்படையைச் சேர்ந்த பெண், தன் சக தோழரை ‘தோழர்’ என்று அழைத்ததற்காக, அவளைப் பணியிலிருந்து துரத்தியடிக்கும் ஒரு முதலாளி..
குழப்பத்தை உண்டாக்கி அதில் ஆதாயம் தேட முயன்ற அதிகாரிகள், ராணுவ ஜெனரல்கள், அமைச்சர்கள், எலும்பு துண்டுகளுக்கு விலை போகாத புரட்சியாளர்களை கண்டறிவது, கைது செய்வது என அவர்களுக்கு ஓயாத வேலை…. ஏனெனில் புரட்சியை நசுக்கி நாசமாக்கினால்தானே பழையபடி மக்களை ஏய்த்து கஜானாக்களில் செல்வத்தை குவிக்க முடியும். அதனால் புரட்சியை ஒழித்துக்கட்ட முதல் உலகப்போரில் யார் எதிரிகளாக இருந்தார்களோ அதே ஜெர்மன் ராணுவ முதலாளிகளுடன் சேர்ந்து ஓயாமல் சதி செய்தபடியே இருந்தவர்களைப் பற்றிய சான்றுகளுடன், அவர்களை எப்படித் தங்கள் திறத்தால் புரட்சியாளர்கள் வென்றார்கள் என்கிற சம்பவங்கள் இந்த புத்தகத்தில் ஏராளம்.
இந்த நூலை உங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியுமென நான் நம்பவில்லை. ஆனால் இந்தியாவின் இன்றைய நாட்களை அப்படியே பேசுகிறது அன்றைக்கு எழுதப்பட்ட இந்தப் புத்தகம்.
நாட்டுக்காக இன்னும் தியாகம் புரியுங்கள், இன்னும் அதிகமாக என்று ஆட்சியில் இருப்பவர்கள் புரட்சியில் பங்கேற்காத, அதைப்பற்றி புரிந்துகொள்ளாத மக்களைப் பார்த்து, அதிகாரிகள் கத்துகிறார்கள். அதே நேரம் எல்லா வசதிகளும் பெற்றிருப்பவர்கள் எதையும் கைவிடாதபடி சுகமாக இருக்கிறார்கள் அல்லது மேலதிகமான பணத்துடன் வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகிறார்கள்.
லெனின் முதல் உலகப்போரில் ஈடுபட்டிருந்த ருஷ்யர்களை, “சண்டை நமக்கு வேண்டாம். இப்போது நமக்கு வேண்டியது சமாதானம். உள்ளூரில் புரட்சிக்கு உதவ நாடு திரும்புங்கள்…. புரட்சிக்கு எதிரான கயவர்களை அடக்க வாருங்கள். சண்டை வேண்டாம், நமக்கு அண்டை நாடுகளுடன் சமாதானமே இப்போதைய தேவை” என அழைக்கிறார். ஆனால் புரட்சிக்கு எதிரான ஆட்களோ, “ஜெர்மனி நம் எதிரி. அவனை ஒழிக்க வேண்டும். யுத்தத்துக்கு போங்கள். யுத்தம்… யுத்தம்” என்று கத்துகிறார்கள்… லெனின் பேச்சைக் கேட்டு யாராவது போர்முனையிலிருந்து திரும்பினால் மரண தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கிறார்கள்.
அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஒரு படையாள் இப்படிக் கேட்கிறான்:
“நான் போர் புரிவது எதற்காக என எனக்குச் சொல்லுங்கள்… சுதந்திர ருஷ்யாவிற்காகவா? அல்லது சனநாயகத்துக்காகவா? அல்லது கொள்ளைக்கார முதலாளிகளுக்காகவா? நான் போர் புரிவது புரட்சியின் பாதுகாப்புக்காக என்பதை உங்களால் எனக்கு நிரூபிக்க முடியுமா? சுதந்திர ருஷ்யாவுக்காக நான் போரிடுகிறேன். சனநாயகத்துக்காக நான் போரிடுகிறேன் என்று நீங்கள் நிரூபித்தால் எதற்கு மரண தண்டனை அச்சுறுத்தல்? நானே என் ருஷ்யாவிற்காக சண்டையிடுவேன். நிலம் விவசாயிகளுக்கும், ஆலை தொழிலாளர்களுக்கும், ஆட்சியதிகாரம் மக்களுக்கும் என்றாகுமென்றால் நான் சண்டையிடுவது அர்த்தமுள்ளதாக இருக்கும். அதற்காக மட்டுமே நான் போர் புரிவேன்.”
இப்படியாக எல்லா போர் முனைகளிலும் பேச்சுகள் எழுகிறது. வீரர்கள் உள் நாட்டின் புரட்சிகர தொழிலாளர்களுடன் சேர்ந்துகொள்ள நாடு திரும்புகிறார்கள்.
உள் நாட்டின் புரட்சிகர அமைப்புகளுடன் சேர்ந்து மென்ஷ்விக்குகளான புரட்சியின் எதிரிகளோடு போராடக்களத்தில் நிற்கிறார்கள். புரட்சிப்படைகளை சீர்குலைக்க புரட்சிக்கு எதிரான பணம்படைத்தவர்கள் ஒயினை இலவசமாக வினியோகிக்கிறார்கள். புரட்சிப் படையினர் அதை கண்டுபிடித்து ஒயின்களை நாசமாக்கி மூழ்கடிக்கிறார்கள்.
கேரென்ஸ்கி போன்ற ஆட்கள் புரட்சிக்கெதிராக எவ்வளவு தந்திரத்தையும், வன்மத்தையும் காட்டியும் போல்ஷிவிக்குகள் தங்கள் தியாகத்தாலும் நேர்மையாலும் முடிவில் ஆட்சியதிகாரத்தைக் கைபற்றுகிறார்கள்.
குளிர்கால அரண்மனையில் 50 கோடி ரூபில் மதிப்புள்ள பொருட்கள் சூரையாடப்பட்டதாகப் புரட்சிக்கு எதிரானவர்களால் குற்றம் சாட்டப்பட்டது… உண்மையில் பல அரிய பொருட்கள் செப்டம்பரிலேயே மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. சில, மிக பாதுகாப்பான முறையில் அரண்மனையின் நிலவறைகளில் பதுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தன. பல பொருட்கள் திருடப்பட்டிருந்தன என்பது உண்மையே. பல நூறு ஆண்டுகளாக உழைக்கும் மக்கள் நுழையமுடியாத அந்த அரண்மனைக்குள் உட்புகுந்ததும் இதுவரை பார்த்தறியாத விலை மதிக்க முடியாத பொக்கிசங்களை அள்ளிச்செல்லவே… அதை மீட்க, திரும்ப ஒப்படைக்க சோவியத் அரசாங்கம் தனிப்படையமைத்து திரும்பத் தரும்படி உத்தரவிடுகிறது.
பொருட்களை எடுத்துச் சென்ற மக்கள் புரட்சியினர், அரசின் வார்த்தைக்கு மதிப்பளித்து அதை திருப்பித் தருகிற கண்ணியம் .. அதையும் விலைக்கு வாங்கிக் கடத்தத் துணியும் பணம்படைத்த கசடர்களின் கேடுகெட்ட செயல், என பலவிதமான காட்சிகள்.
நடிப்பு கவர்ச்சிகளைப் புரட்சித்தலைவர் என்று நம்பிய 17 வயது இளைஞனின் உள்ளத்தை.. அறமற்ற சுரண்டல் அரசியல் சூழலில் வாழும் இலக்கிய மனம் கொண்ட சின்னஞ்சிறுவனை, இந்தப் புத்தகம் என்ன பாடு படுத்தியிருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியாது. இன்றைய எனது புதின படைப்புகளுக்கான சக்தியூற்று இதுபோன்ற புத்தகங்களின்மீதான வாசிப்பும், புரிதலும்தான் வேறென்ன? என்னைச் சுற்றியும், உங்களைச் சுற்றியும் இதுபோன்றவைகள்தானே நெருக்குகிறது.
புரட்சிக்கு எதிரான முதலாளித்துவ புளுகர்களின் பேச்சுக்குப் பலியாகாதீர்கள். தொழிலாளர்களே, படையாட்களே, விவசாயிகளே, புரட்சிகர பற்றுறுதியும் கட்டுபாடும் காட்டும்படி உங்களை அறை கூவியழைக்கிறோம். மக்கள் புரட்சியின் வெற்றி உறுதியிலும் உறுதி என்கிற அறிவிப்புகள் கொண்ட சுவரொட்டிகள்.
கசாக்குகள் வீரதீரமான படை என்று புகழ்பெற்றது. ஆனால் அந்தப் படைகளின் தலைவர் கலேடின், கசாக்குகளின் பெரும் நிலப்பிரபுகளுக்கு ஆதரவானவர். எழை கசாக்கு விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிக்கும் நடைமுறைக்கு எதிராக இருந்தவர். ஆனால் அவரது படையினரோ லெனின் அவர்களின் நிலம் பகிர்ந்தளிப்பு முறைக்கு ஆதரவாக இருந்தார்கள், எனவே அவர்கள் புரட்சிப்படைக்கு ஆதரவாக மாற, கலேடின் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலை உண்டானது.
புரட்சி முடிவுக்கு வந்ததும் லெனின் முதல் உலகப்போரிலிருந்து ருஷ்யாவை முழுமையாக விடுவித்துக்கொள்கிறார்… அண்டை நாடுகளுடன் சமாதானம்… படையாட்கள் உள்ளூர் நிலைமைகளைச் சரிசெய்ய மக்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறார். புரட்சியை ஒழித்துக்கட்ட முதலாளிகள் பழைய ஜாரை மீண்டும் பதவியில் அமர்த்த பிற்போக்கு வெளிநாட்டு உதவியுடன் நசுக்க முனைய, மக்கள் அவர்களை ஆயுதங்களால் எதிர்கொள்கிற காட்சிகளை ரீட் பார்த்ததை பார்த்தபடி விளக்குகிறார். போல்ஷ்விக்குகளின் தியாகம், அதனால் விளைந்த ருஷ்ய புரட்சியை இப்புத்தகம்போல் சொல்ல வேறு சில புத்தகங்களும் அரிதாக இருக்கலாம்… இந்த நூலை மிகச் சிறப்பான ஒன்று என நீங்கள் வாசிக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
அடுத்து இரண்டாம் உலகப்போரில் விமானச் சண்டையில் தன் இரண்டு கால்கள் இழந்த பின்னும் 18 நாட்கள் பனியில் ஊர்ந்து கடந்த சாகசக்காரனை, மீண்டும் விமானியாகி விண்ணில் எதிரிகளோடு சமர் புரிந்த உண்மை மனிதனின் வரலாற்று புதினத்தை பற்றிப் பேசுவோம்.
உலகை உலுக்கிய புத்தகம், என்னை உலுக்கியது. உங்களையும் உலுக்கும்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
5.சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன் – https://bit.ly/39cpdiw
4. லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு – https://bit.ly/2xRVWN0
3.நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல – https://bit.ly/3b7r09O
2.லெனினுக்கு மரணமில்லை – https://bit.ly/2IXJU79
1.புத்தகங்களைத் திருடுகிறவன் – https://bit.ly/3baGDNO
முனைவர் இராம.மலர்விழி மங்கையர்க்கரசியின் நூலைத் தரவிறக்கிப் படிக்கவும் தோழர்களே.
தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஐஞ்சிறுகாப்பியங்களில் மூன்றாம் காப்பியமாகிய யசோதர காவியத்தை நாடக வடிவில் வழங்கியதில் தனி முத்திரை பதித்துள்ளார் மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராம.மலர்விழிமங்கையர்க்கரசி.
தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஐஞ்சிறுகாப்பியங்களில் மூன்றாம் காப்பியமாகிய யசோதர காவியத்தை நாடக வடிவில் வழங்கியதில் தனி முத்திரை பதித்துள்ளார் மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராம.மலர்விழிமங்கையர்க்கரசி.
.jpg)
அரிய தமிழ் புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள
https://packiam.wordpress.com/web-links/free-books/tamil-books/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/18b73de8-e218-4e4b-974a-10f23e0edc77%40googlegroups.com.

கொடை விளக்கு – கவிதை – வ.சுப.மாணிக்கனார் Posted: 05 Apr 2020 10:42 PM PDT நூல் : கொடை விளக்கு ஆசிரியர் : வ.சுப.மாணிக்கனார் அட்டைப்படம் : லெனின் குருசாமி மின்னூலாக்கம் : ச. ஐஸ்வர்யா வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க Download “கொடை விளக்கு epub” kodai_vilakku.epub – Downloaded 2 times – புது கிண்டில் கருவிகளில் படிக்க Download “கொடை விளக்கு mobi” kodai_vilakku.mobi – Downloaded 0 times – குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க Download “கொடை விளக்கு A4 PDF” kodai_vilakku_a4.pdf – Downloaded 0 times – பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க Download “கொடை விளக்கு 6 inch PDF” kodai_vilakku_6_inch.pdf – Downloaded 0 times –
|
வாழ்வும் பவுத்தமும் – கட்டுரைகள் – சித்தார்த்தா கல்வி மற்றும் அறக்கட்டளை Posted: 07 Apr 2020 11:32 PM PDT நூல் : வாழ்வும் பவுத்தமும் ஆசிரியர் : சித்தார்த்தா கல்வி மற்றும் அறக்கட்டளை |
மின்னூலாக்கம் : ச. ஐஸ்வர்யா லெனின் |
|
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
கதைக் கொத்து – சிறுகதைகள் – சி. சுப்ரமணிய பாரதியார்
Posted: 08 Apr 2020 10:51 PM PDT
நூல் : கதைக் கொத்து
ஆசிரியர் : சி. சுப்ரமணிய பாரதியார்
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraj...@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை : Public Domain – CCO
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
இலங்கையில் ஏற்பட்டுள்ளது அரசியல் மாற்றமல்ல – நேர்காணல்கள் – அ.தமிழ்ச்செல்வன் Posted: 08 Apr 2020 08:12 PM PDT நூல் : இலங்கையில் ஏற்பட்டுள்ளது அரசியல் மாற்றமல்ல ஆசிரியர் : அ.தமிழ்ச்செல்வன்
அட்டைப்படம் : B.மீனா மின்னூலாக்கம் : லெனின் குருசாமி |
வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
திராவிட வாசிப்பு – அக்டோபர் 2019 – கட்டுரைகள் – திராவிட எழுத்தாளர்கள் Posted: 09 Apr 2020 09:45 PM PDT நூல் : திராவிட வாசிப்பு – அக்டோபர் 2019 ஆசிரியர் : திராவிட எழுத்தாளர்கள்
|
மின்னூலாக்கம் : லெனின் குருசாமி வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : Public Domain – CCO |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
உயிர்த்திரளின் ஆதார விதி மற்றும் சில கட்டுரைகள் – கட்டுரைகள் – வெ. சுரேஷ் Posted: 09 Apr 2020 07:34 PM PDT நூல் : உயிர்த்திரளின் ஆதார விதி மற்றும் சில கட்டுரைகள் ஆசிரியர் : வெ. சுரேஷ்
|
அட்டைப்படம் : லெனின் குருசாமி மின்னூலாக்கம் : ச. ஐஸ்வர்யா லெனின் |
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-NC-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/uyir_thiralin_aathara_vithi_matrum_sila_katturaigal புத்தக எண் – 625 |
போராளிகளை போற்றுவோம் – கவிதைகள் – சடையன் பெயரன் Posted: 09 Apr 2020 08:49 AM PDT நூல் : போராளிகளை போற்றுவோம் ஆசிரியர் : சடையன் பெயரன்
அட்டைப்படம் : லெனின் குருசாமி மின்னூலாக்கம் : ஷேக் அலாவுதீன்,தமிழ் இ சர்வீஸ் |
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
Download “போராளிகளை போற்றுவோம் 6 inch PDF” Poralikalai_Potruvom_6_inch.pdf – Downloaded 1 time –
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/poralikalai_potruvom புத்தக எண் – 624 |
" சோழன் கரிகாலன் " --- பற்றி முதன்முதலில் வெளிவந்த நூல்.
+(+++++++(++++++(+++++(++++(++++(+++
1913 ஆம் ஆண்டு வெளிவந்த நூல். தஞ்சாவூர் ட .உலகநாத பிள்ளை எழுதியது.
எளிய தமிழில் கிட்(Git) – தொழில்நுட்பம் – கி. முத்துராமலிங்கம் Posted: 11 Apr 2020 10:13 PM PDT நூல் : எளிய தமிழில் கிட்(Git) ஆசிரியர் : கி. முத்துராமலிங்கம்
அட்டைப்படம் : ஷேக் அலாவுதீன்,தமிழ் இ சர்வீஸ் |
மின்னூலாக்கம் : ஷேக் அலாவுதீன்,தமிழ் இ சர்வீஸ் வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Eliya_tamizhil_git-2020-04-11-22-21-20 புத்தக எண் – 628 |
சான்றோர் தமிழ் – சமூகவியல் – முனைவர் சி. பாலசுப்பிரமணியன் Posted: 10 Apr 2020 08:06 PM PDT நூல் : சான்றோர் தமிழ் ஆசிரியர் : முனைவர் சி. பாலசுப்பிரமணியன் |
|
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC0 |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள் – வாழ்க்கை வரலாறு – என். வி. கலைமணி Posted: 12 Apr 2020 10:49 PM PDT நூல் : உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள் ஆசிரியர் : என். வி. கலைமணி |
மின்னூலாக்கம் : லெனின் குருசாமி |
|
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-NC-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/ulaga_varalatril_viduthalai_veerargal புத்தக எண் – 631 |
டெக் ஹைக்கூ – கவிதைகள் – விக்னேஷ் Posted: 12 Apr 2020 04:37 AM PDT நூல் : டெக் ஹைக்கூ ஆசிரியர் : விக்னேஷ் மின்னூலாக்கம் : விக்னேஷ் |
வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
இன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும் – கட்டுரைகள் – களந்தை பீர்முகமது Posted: 12 Apr 2020 03:34 AM PDT |
|
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் – கட்டுரைகள் – பாவலரேறு பெருஞ்சித்திரனார் Posted: 13 Apr 2020 10:34 PM PDT நூல் : ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் ஆசிரியர் : பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
அட்டைப்படம் : லெனின் குருசாமி மின்னூலாக்கம் : லெனின் குருசாமி வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC0 |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/aryapaarpanarin_alavirantha_kottangal புத்தக எண் – 634 |
அவளின் கலைப்பக்கங்கள் – கவிதைகள் – கலைவாணன் Posted: 13 Apr 2020 06:45 PM PDT |
அட்டைப்படம் : லெனின் குருசாமி |
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி |
|
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
இனிக்காத சீனி (நாடகம்) – நாடகம் – நிர்மலா ராகவன் Posted: 13 Apr 2020 09:11 AM PDT நூல் : இனிக்காத சீனி (நாடகம்) ஆசிரியர் : நிர்மலா ராகவன்
அட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப் |
மின்னூலாக்கம் : லெனின் குருசாமி வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-NC-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
source - https://www.commonfolks.in/books/d/panmuga-aalumai-m-arunachalam
பன்முக ஆளுமை மு. அருணாச்சலம்
நூலாசிரியர் - ஜெ. சுடர்விழி
₹280, பரிசல் - பதிப்பகம்
இந்த நூல் குறித்து காணொளி மதிப்புரை
தமிழ் இலக்கிய வரலாறு, மு.அருணாசலம் |
மதிப்புரை செய்பவர் ஜெய்கணேஷ்
காலங்களில் சிவன் வசந்தம் – கட்டுரைகள் – கா.பிரபாகரன் Posted: 15 Apr 2020 07:47 PM PDT நூல் : காலங்களில் சிவன் வசந்தம் ஆசிரியர் : கா.பிரபாகரன்
அட்டைப்படம் : கா.பிரபாகரன் |
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-SA-NC |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
---------- |
ஞானியின் கவிதைகள் – கவிதைகள் – ஞானி Posted: 15 Apr 2020 09:07 AM PDT நூல் : ஞானியின் கவிதைகள் ஆசிரியர் : ஞானி |
மின்னூலாக்கம் : ஷேக் அலாவுதீன்,தமிழ் இ சர்வீஸ் |
|
வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/gnaniyin_kavithaigal புத்தக எண் – 635 |
மரப்பாச்சி கவிதைகள் – கவிதைகள் – தி.தினேஷ்(எ)பண்பரசு
Posted: 17 Apr 2020 07:20 PM PDT
நூல் : மரப்பாச்சி கவிதைகள்
ஆசிரியர் : தி.தினேஷ்(எ)பண்பரசு

மின்னஞ்சல் : sadayapp...@gmail.com
அட்டைப்படம் : N. Sathya
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraj...@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை : CCA
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
#மோகமுள் – தி.ஜானகிராமன்,
நாவல் பிறந்த கதை
————————————————-
தி.ஜானகிராமன் ஏப்ரல் 7, 2011
ரோஜா முத்தையா நூலகத்தில் படிக்கக் கிடைத்த, 1961-ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி வார இதழில் இடம்பெற்றிருந்த தி.ஜானகிராமன் எழுதிய இக்கட்டுரையை, ஸ்கேன் செய்து அனுப்பிய திரு.லலிதா ராம் அவர்களுக்கு சொல்வனத்தின் நன்றிகள்.
கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.
“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”
“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே. அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?…” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.
“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ! பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”
“அது என்னமோப்பா! பாதிப் பணம் அப்பப்ப எனக்கு வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது நியாயம்தானே?” என்றாள் பாட்டி.
“எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே!”
“அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு பார்க்கறியா? என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை – அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்கப்பட்டாலும் போ – எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ…?”
பாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான். சொன்னது அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில் கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம் கொடுத்திருக்கிறேன். காவேரி வண்டலில் செழித்தபயிர் கண்ணாடிப் பாட்டி. பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை, ‘சுருக்சுருக்’கென்று தைக்கிற கூர்மை, சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம், சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும், சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய ஹாஸ்ய வகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை – பாட்டி ரொம்பப் பெரியவள்.
thija
“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை. “மோக முள்”ளில் சில அத்தியாயங்களைக் கிடைத்தபொழுது வாசிக்கச் சொல்லிக் கேட்டாளாம் பாட்டி. ஓரிரண்டு இடங்களை நன்றாக இருப்பதாக அவள் ஒப்புக்கொண்டு கூடவிட்டாள். ஆகவே மற்ற விமர்சகர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
பள்ளிக்கூடத்தில் படித்த பத்து வருஷங்களில் ஞாபகம் இருக்கக் கூடியதாக ஒன்றுமில்லை. எப்பொழுது இச்சிறையிலிருந்து விடுபடப் போகிறோம் என்று ஆத்திரப்பட்டது ஞாபகம் இருக்கிறது. “உனக்குக் கணக்கு வராது. நீ கதை பண்ணத்தான் லாயக்கு. தொலை” என்று என் முகத்தில் பிரம்பை விட்டெறிந்த நாமமும், அம்மை வடு முகமும் கொண்ட மூன்றாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் ரங்காச்சாரியார், எனக்கு ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசீர்வாதம்-
வகுப்புக் கட்டுரைகளில் சொந்தக் கை வரிசையைக் காட்டி அதிகப்பிரசங்கித்தனமாக அசடு வழிந்ததற்கு, சில வாத்தியார்கள் மற்றப் பையன்களுக்கு நடுவில் பரிஹாசம் செய்து மனத்தைக் கிழித்துப் போட்டதில் ஏற்பட்ட புண்கள்-
தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு முலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார், வெங்கடேசப்பெருமாள் சன்னிதி அனுமார், மேலவீதி விசுவநாதர், மேலவீதிப்பிள்ளையார், தெற்குவீதிக் காளி அம்மன், வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள், நாணயக்காரச் செட்டித்தெரு ராமலிங்க மடம், பக்கத்தில் திருவையாறு – இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த பழக்கம்-
நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது –
உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக் கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசணையாக, தியான மார்க்கமாக, அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு, உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு-
கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று. அந்தப் பூரிப்பு-
கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்-
நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்)க் கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடுத்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை-
தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் . சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலிநிலத்துக்கு வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான். சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான். இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம் –
தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள். தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்தமாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன. பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் ‘பைசல்’ செய்துவிட்டார் அவர்! ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம் –
என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது –
இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.
எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.
தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.
என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனே, என்னவோ, யார் கண்டார்கள்?
(கல்கி – 27.08.1961)
••••••••••
மோகமுள் கதையின் கதை.......
(வாழ்வது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! அதுவும் காவேரிக்கு ஓரமாக இந்த இடத்தில் வாழ்வது எவ்வளவு ஆனந்தம்! காவேரி மண்ணில் வேர்விட்டு உரம் குடித்து வானில் ஓங்கிய பச்சை, வெயில், பட்சிகளின் ஆர்ப்பாட்டம் வாசலில் கறிகாய் கூவும் அங்காடிகளின் குரலினிமை - வாழ்வின் வெவ்வேறு ஸ்வரங்களாக இவை ஒலித்து, ஒரு சுருதி சுத்தமான காணமாகக் கேட்டன. இதை ஏதும் வந்து கெடுக்க முடியவில்லை.)
*********
//இப்ப கச்சேரி கச்சேரின்னு பறக்கறதுக்கு ஆயிடலை. நிறைகுடமா வித்தையைச் சம்பாதிச்சுண்டு ஆரம்பிச்சா தேவலைன்னு தோண்றது. பிஞ்சிலே பழுக்க வேண்டாமேங்கறதுக்காகச் சொல்றேன். வேறென்ன - எள்ளோடு எலிப்புழுக்கையும் எண்ணெய்க்குக் காயறாப் போல, அரைகுறைகள், வெந்தது வேகாதது எல்லாம் ஜவ்வாதுப் பொட்டை இட்டுண்டு, சாரைப் பாம்பு மாதிரி ஒரு ஜரிகைமடிப்பைக் கழுத்திலேபோட்டுண்டு கச்சேரி கச்சேரின்னு கிளம்பிவிட்டுது. கேட்பானேன்? பாம்புப்பிடாரன் கத்தறாப்பலதான் இருக்கும், அதெல்லாம் வேண்டாம்னு சொல்றேன். புரியறதோ? . . தண்ணியிலே இறங்காம எப்படி நீஞ்சறதுன்னு பலபேர் புத்தியைக் கலைப்பா. அதையெல்லாம் கேட்டா தளர்ந்து போயிடப்படாது . . . அந்தரங்கமாக் கேட்டா, உனக்குக் கச்சேரியே வேண்டாம்னு சொல்லுவேன், ஆத்மானந்ததுக்கு ஏற்பட்ட வித்தை. விலை பேசற வித்தையில்லை. தானே அனுபவிச்சு அனுபவிச்சு, நாலு நல்ல சிஷ்யனாப் பார்த்துக் கடைசியிலே அவன் தோளுக்கு எல்லாத்தையும் மாத்தி விட்டுப் போறதுதான் உத்தமமான காரியம். இதைத் தொழிலா வச்சிண்டா, நாம சேவகம் பண்றது மாத்ரமில்லை கேட்கிற எஜமான் போக்குக்கு நம்ம வித்தையும் மாத்திக்கணும். ஞானத்தை எதுக்காகச் சம்பாதிக்கிறது? ஞான சூன்யங்கள் சொல்றபடி ஆடறத்துக்கா? சத்யத்தை எதுக்காகத் தெரிஞ்சுக்கறது? பயமில்லாம பொய் சொல்றதுக்கா? ஏண்டாப்பா . . . என்னடாது, ஆசையிலெல்லாம் மண்ணை அள்ளிப் போடறானேன்னு வருத்தப்படறியோ? நீ கச்சேரி பண்றதை வாண்டாம்னு சொல்ல மனசு வல்லை. அவசரப்பட வாண்டாம்னு தான் சொல்றேன்.//
//தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு மூலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார் வெங்கடேசப் பெருமாள் சன்னிதி அனுமார் மேலவீதி விசுவநாதர் மேலவீதிப் பிள்ளையார் தெற்குவீதிக் காளி அம்மன் வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள் நாணயக்காரச் செட்டித் தெரு ராமலிங்க மடம் பக்கத்தில் திருவையாறு இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக்கொண்டிருந்த பழக்கம். நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது. உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக்கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசனையாக தியான மார்க்கமாக அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று.//
//பார்க்கிற்கு வெளியே, ஹோட்டல் வாசலில் மாட்டிய ஒலி பெருக்கியிலிருந்து இசை தவழ்ந்து வந்துகொண்டிருந்தது. வீணையின் இசை; ஏதோ தேர்ந்த விரலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைரவி ராகத்தை இவ்வளவு சுத்தமாக எப்படி வாசிக்க முடியும்? அரை நிமிடம் கேட்பதற்குள் பாபுவின் உள்ளமும் உயிரும் அதில் ஒன்றிவிட்டன. அவ்வளவு சுருதி சுத்தமாக இசைந்தது, அந்த கானம். கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சையும் இதயத்தையும் தன் வசப்படுத்துகிற அனுபவம் நிறைந்த கானம். நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்யமத்தைத் தொட்டுத் தொட்டுக் கோலமிட்ட அந்த வரிசை, உள்ளத்தை உலுக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது. மநிதபதமா, நீதநீத நீத பதமாகரீ . . . ஆகா! வீணையை அப்படி வருடிய விரல்கள் எவ்வளவு புண்யம் செய்தவைகளோ! முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பு ஊர்ந்து அவன் உடல் உதறிற்று. பதமா . . . என்று கெஞ்சி இறைஞ்சும் அந்த இசை அவனைக் குற்றம் சாட்டிற்று. அவன் செய்தது தவறென்று உணரவில்லையா என்று தீனமாக மன்றாடிக் கேட்டது. பழைய நினைவுகளை உதறிவிட்டு, மீண்டும் சங்கீதத்தின் இனிமையில் லயிக்க முயன்றான் பாபு.//
நன்றி-Kolappan Bhagavathy
••••••••••
மோகமுள் கதையின் கதை.......
(வாழ்வது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! அதுவும் காவேரிக்கு ஓரமாக இந்த இடத்தில் வாழ்வது எவ்வளவு ஆனந்தம்! காவேரி மண்ணில் வேர்விட்டு உரம் குடித்து வானில் ஓங்கிய பச்சை, வெயில், பட்சிகளின் ஆர்ப்பாட்டம் வாசலில் கறிகாய் கூவும் அங்காடிகளின் குரலினிமை - வாழ்வின் வெவ்வேறு ஸ்வரங்களாக இவை ஒலித்து, ஒரு சுருதி சுத்தமான காணமாகக் கேட்டன. இதை ஏதும் வந்து கெடுக்க முடியவில்லை.)
*********
//இப்ப கச்சேரி கச்சேரின்னு பறக்கறதுக்கு ஆயிடலை. நிறைகுடமா வித்தையைச் சம்பாதிச்சுண்டு ஆரம்பிச்சா தேவலைன்னு தோண்றது. பிஞ்சிலே பழுக்க வேண்டாமேங்கறதுக்காகச் சொல்றேன். வேறென்ன - எள்ளோடு எலிப்புழுக்கையும் எண்ணெய்க்குக் காயறாப் போல, அரைகுறைகள், வெந்தது வேகாதது எல்லாம் ஜவ்வாதுப் பொட்டை இட்டுண்டு, சாரைப் பாம்பு மாதிரி ஒரு ஜரிகைமடிப்பைக் கழுத்திலேபோட்டுண்டு கச்சேரி கச்சேரின்னு கிளம்பிவிட்டுது. கேட்பானேன்? பாம்புப்பிடாரன் கத்தறாப்பலதான் இருக்கும், அதெல்லாம் வேண்டாம்னு சொல்றேன். புரியறதோ? . . தண்ணியிலே இறங்காம எப்படி நீஞ்சறதுன்னு பலபேர் புத்தியைக் கலைப்பா. அதையெல்லாம் கேட்டா தளர்ந்து போயிடப்படாது . . . அந்தரங்கமாக் கேட்டா, உனக்குக் கச்சேரியே வேண்டாம்னு சொல்லுவேன், ஆத்மானந்ததுக்கு ஏற்பட்ட வித்தை. விலை பேசற வித்தையில்லை. தானே அனுபவிச்சு அனுபவிச்சு, நாலு நல்ல சிஷ்யனாப் பார்த்துக் கடைசியிலே அவன் தோளுக்கு எல்லாத்தையும் மாத்தி விட்டுப் போறதுதான் உத்தமமான காரியம். இதைத் தொழிலா வச்சிண்டா, நாம சேவகம் பண்றது மாத்ரமில்லை கேட்கிற எஜமான் போக்குக்கு நம்ம வித்தையும் மாத்திக்கணும். ஞானத்தை எதுக்காகச் சம்பாதிக்கிறது? ஞான சூன்யங்கள் சொல்றபடி ஆடறத்துக்கா? சத்யத்தை எதுக்காகத் தெரிஞ்சுக்கறது? பயமில்லாம பொய் சொல்றதுக்கா? ஏண்டாப்பா . . . என்னடாது, ஆசையிலெல்லாம் மண்ணை அள்ளிப் போடறானேன்னு வருத்தப்படறியோ? நீ கச்சேரி பண்றதை வாண்டாம்னு சொல்ல மனசு வல்லை. அவசரப்பட வாண்டாம்னு தான் சொல்றேன்.//
//தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு மூலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார் வெங்கடேசப் பெருமாள் சன்னிதி அனுமார் மேலவீதி விசுவநாதர் மேலவீதிப் பிள்ளையார் தெற்குவீதிக் காளி அம்மன் வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள் நாணயக்காரச் செட்டித் தெரு ராமலிங்க மடம் பக்கத்தில் திருவையாறு இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக்கொண்டிருந்த பழக்கம். நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது. உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக்கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசனையாக தியான மார்க்கமாக அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று.//
//பார்க்கிற்கு வெளியே, ஹோட்டல் வாசலில் மாட்டிய ஒலி பெருக்கியிலிருந்து இசை தவழ்ந்து வந்துகொண்டிருந்தது. வீணையின் இசை; ஏதோ தேர்ந்த விரலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைரவி ராகத்தை இவ்வளவு சுத்தமாக எப்படி வாசிக்க முடியும்? அரை நிமிடம் கேட்பதற்குள் பாபுவின் உள்ளமும் உயிரும் அதில் ஒன்றிவிட்டன. அவ்வளவு சுருதி சுத்தமாக இசைந்தது, அந்த கானம். கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சையும் இதயத்தையும் தன் வசப்படுத்துகிற அனுபவம் நிறைந்த கானம். நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்யமத்தைத் தொட்டுத் தொட்டுக் கோலமிட்ட அந்த வரிசை, உள்ளத்தை உலுக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது. மநிதபதமா, நீதநீத நீத பதமாகரீ . . . ஆகா! வீணையை அப்படி வருடிய விரல்கள் எவ்வளவு புண்யம் செய்தவைகளோ! முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பு ஊர்ந்து அவன் உடல் உதறிற்று. பதமா . . . என்று கெஞ்சி இறைஞ்சும் அந்த இசை அவனைக் குற்றம் சாட்டிற்று. அவன் செய்தது தவறென்று உணரவில்லையா என்று தீனமாக மன்றாடிக் கேட்டது. பழைய நினைவுகளை உதறிவிட்டு, மீண்டும் சங்கீதத்தின் இனிமையில் லயிக்க முயன்றான் பாபு.//
நன்றி-Kolappan Bhagavathy
சமூக பொறுப்புணர்வுத்திட்டம் – கட்டுரைகள் – அன்பரசு சண்முகம் Posted: 20 Apr 2020 10:52 PM PDT நூல் : சமூக பொறுப்புணர்வுத்திட்டம் ஆசிரியர் : அன்பரசு சண்முகம் |
அட்டைப்படம் : Canva.com மின்னூலாக்கம் : ஆரா பிரஸ், சென்னை |
வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-NC-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள் – கட்டுரைகள் – பூவை. எஸ். ஆறுமுகம் Posted: 20 Apr 2020 06:51 PM PDT நூல் : கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள் ஆசிரியர் : பூவை. எஸ். ஆறுமுகம் |
|
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC0 |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
தமிழகப் பண்பாடு: சங்ககாலம் முதல் பிற்காலச் சோழர் காலம் வரை என்ற இந்நூலின் ஆசிரியர் அ.கா. பெருமாள்.
பாடவியல் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டிருப்பினும் பொது வாசகனும் வாசித்துக்கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றது.
இந்நூல் நான்கு பகுதிகளில் பின்வருமாறு வகைசெய்யப்படு விளக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வு மாணவர்களுக்கு பயனுடைய நூல்.
முதல் பகுதி
1. தமிழக நில அமைப்பு
2. தமிழக வரலாற்றிற்கான சான்றுகள்
3. வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தமிழகம்
4. சிந்துவெளி நாகரிகம்
இரண்டாம் பகுதி
5. சங்க காலம் முதல் பிற்காலச் சோழர்காலம் வரை சுருக்கமான வரலாறு
மூன்றாம் பகுதி
6. ஐந்திணை சமுதாயம்
7ஆரம்பகால நாட்டார் சமயமும் வைதீகமாதலும்
8. சமயப்பூசல்கள், பக்தியியக்கம்
9. இலக்கிய இலக்கண நூற்கள்
10. கட்டிடம், ஓவியம் பிற கலைகள்
நான்காம் பகுதி
11.வேளாண்மை விரிவாக்கம்
12. கடல் வணிகம், வணிகக்குழு
13. சைவத்தின் எழுச்சி
14. சோழர்களின் ஊராட்சி முறை
15. சோழர்களின் கோவில் பணி
-ஆதித்தன்.
பெரியார் புத்தகங்களின் PDF இணைப்புகள். விருப்பமுள்ளவர்
பயன்படுத்தி கொண்டு வாசியுங்கள்..!
சமஸ்கிருத சனியன் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2016/07/sanskrit.pdf
அழியட்டும் "ஆண்மை" --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/2.pdf
அழிவு வேலைக்காரன் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/3.pdf
ஆத்மா, மோட்சம் - நரகம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/5.pdf
இந்து மதப் பண்டிகைகள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/10.pdf
இயற்கையும், மாறுதலும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/11.pdf
இராமாயணக் குறிப்புகள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/13.pdf
இனிவரும் உலகம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/15.pdf
உயர் எண்ணங்கள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/16.pdf
கிராமங்கள் ஒழிய வேண்டும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/20.pdf
சித்திரபுத்திரன் விவாதங்கள் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/22.pdf
சிந்தனையும் பகுத்தறிவும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/23.pdf
சுதந்திரத் தமிழ்நாடே எனது லட்சியம் -- > http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/25.pdf
இலங்கைப் பேருரை --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/28.pdf
தமிழர்கள் இந்துக்களா ? --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/33.pdf
தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம்: பெரியாரும் ம.பொ.சி.யும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/31.pdf
திராவிடர் - ஆரியர் உண்மை --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/36.pdf
திராவிடர் திருமணம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/38.pdf
தேவதாசி ஒழிப்புச் சட்டம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/39.pdf
பறையன் பட்டம் போகாமல் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/43.pdf
பிள்ளையாரை உடைப்போம் ! --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/46.pdf
புத்தர் விழா --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/48.pdf
புராணங்களை எரிக்க வேண்டும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/50.pdf
பெண் விடுதலைச் சட்டங்களும் பார்ப்பனர்களும் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/51.pdf
பெரியாரின் தன் வரலாறு --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/57.pdf
பொதுத் தொண்டு --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/59.pdf
பொதுவுடைமை சமதர்மம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/60.pdf
மனு சாஸ்த்திரத்தை எரிக்க வேண்டும். ஏன் ? --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/66.pdf
மனு நீதி: ஜாதிக்கொரு நீதி --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/68.pdf
ரஷ்யாவின் வெற்றி --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/69.pdf
ஜனநாயகத்தின் முட்டாள்த்தனம் --> http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/73.pdf
அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் – கட்டுரைகள் – என். வி. கலைமணி Posted: 21 Apr 2020 10:00 PM PDT நூல் : அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் |
ஆசிரியர் : என். வி. கலைமணி |
அட்டைப்படம் : லெனின் குருசாமி மின்னூலாக்கம் : ச. ஐஸ்வர்யா லெனின் |
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC0 உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
வேற்றுகிரகவாசியை சந்தித்தேன்…. – அறிவியல் – அ.தமிழ்ச்செல்வன் Posted: 26 Apr 2020 10:33 PM PDT நூல் : வேற்றுகிரகவாசியை சந்தித்தேன்…. |
ஆசிரியர் : அ.தமிழ்ச்செல்வன் |
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி |
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA-NC |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை – கட்டுரைகள் – ச. சாம்பசிவனார் Posted: 25 Apr 2020 09:17 PM PDT நூல் : உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை ஆசிரியர் : ச. சாம்பசிவனார் |
|
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC0 |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/uraivendar_avvai_duraisamypillai புத்தக எண் – 645 |
தமிழர் நாட்டுப்பாடல்கள் – பாடல்கள் – நா.வானமாமலை Posted: 23 Apr 2020 10:50 PM PDT நூல் : தமிழர் நாட்டுப்பாடல்கள் ஆசிரியர் : நா.வானமாமலை |
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி |
|
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : Public Domain |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
நிமிர்ந்து நில் – கவிதைகள் – அ.இம்ரான் ஹக் Posted: 22 Apr 2020 10:18 PM PDT நூல் : நிமிர்ந்து நில் ஆசிரியர் : அ.இம்ரான் ஹக்
அட்டைப்படம் : அ.ஷேக் அலாவுதீன்,தமிழ் இ சர்வீஸ் மின்னூலாக்கம் : அ.ஷேக் அலாவுதீன்,தமிழ் இ சர்வீஸ் |
|
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Nimirndhu_Nil-2020-04-22-23-03-38 புத்தக எண் – 643 |
கற்பூர வெண்பா – கவிதைகள் – ஆ. வேலு Posted: 22 Apr 2020 07:36 PM PDT நூல் : கற்பூர வெண்பா ஆசிரியர் : ஆ. வேலு |
அட்டைப்படம் : லெனின் குருசாமி மின்னூலாக்கம் : லெனின் குருசாமி வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
ஆதியில் சொல் இருந்தது – கட்டுரைகள் – அன்பரசு சண்முகம் Posted: 22 Apr 2020 04:45 AM PDT நூல் : ஆதியில் சொல் இருந்தது |
ஆசிரியர் : அன்பரசு சண்முகம் |
|
அட்டைப்படம் : Canva.com |
மின்னூலாக்கம் : ஆரா பிரஸ், சென்னை |
வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-NC-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
#விதை_நெல்லை
————————
விதை நெல்லை பாதுகாப்பது கிராமத்தில் முக்கிய அடிப்படை கடமையாகும். அதை யாரும் தொடவும் மாட்டார்கள், எந்த பயனுக்கும் அதை பயன்படுத்துவதில்லை. விவசாயிகளுக்கு அது மரபுரீதியான வைப்புச் சொத்து (traditional fixed asset).
“வெதை நெல்லை வித்தவைரை லாபம்னு நெனைக்கிறவனும், வெதை நெல்ல வேகவச்சு தின்னவனும் எந்த காலமும் வெளங்க மாட்டான்னு ‘’ என
சொலவடை சொல்லுவாங்க.
தலையே போனாலும் வெதை நெல்லுல மட்டும் கை வைக்கக் கூடாது அதுதான் நம்ம வாழ்வு என பய பக்தியோடு கிராமத்தில் நம்பிக்கை.வழி வழியா பாரம்பரியமாக இதை கடை பிடிப்பது உண்டு.
பாரம்பரிய நெல் விதைகள்,இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து பட்டன.
இந்தியாவின் கட்டாக் அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா, 1959 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதை நெல் வகைகளை சேகரித்து அவற்றை பயன்படுத்துவதே நல்லது என்றும் நவீன ஐ.ஆர்.ஆர் ரக வீரிய நெல் விதைகள் அதிகம் நோய்கள் பரப்பக்கூடியவை என்றும் எடுத்துக்கூறி நவீன ரகத்திற்கு அனுமதி மறுத்து அதன் விளைவாக அவர் மாற்றம் செய்யப்பட்டு, பின் நோயுற்று வறுமையில் வாடி அவர் இறந்தார்.
பின்னர் அப்பதவிக்கு வந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மற்ற இயக்குநர்களாலும் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா சேகரித்திருந்த பாரம்பரிய ரக விதைநெல்கள் காணாமல் போனதைப்பற்றிக் கூற மறுத்து விட்டார்கள். எம்.எஸ். சுவாமிநாதன் காலத்தில் வந்த பசுமைப்புரட்சியில் அதிக விளைச்சல் நவீன ரகங்கள் முக்கியத்துவம் தரப்பட்டு, பாரம்பரிய நெல் விதைகள் இந்தியாவில்
அழிக்கப்பட்டது பெரிய துயரமான இழப்புகள் .
மீண்டும் விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இது குறித்து திரு எ. வி. பால
சுப்பிரமணியம் சகோதரி திருமதி கே.விஜயலட்சுமி ஆகியோர் ஆய்வு செயது CIKS சார்பில்
‘Traditional Rice Varieties of Tamilnadu’
என்ற அரிய நூலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நமது தமிழகபாரம்பரியநெல்விதைகளை
வகை படித்தி தொகுத்துள்ளனர்.
அவர்களுக்கு பாராட்டுக்கள்.
read more at https://satavic.org/dr-richharias-story-crushed-but-not-de…/
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.04.2020
#ksrposts
சிந்தனைப் புதிதில் சிந்தியத் துளிகள் – கட்டுரைகள் – ஆலம்பட்டு. சோ.உலகநாதன் Posted: 28 Apr 2020 11:49 PM PDT நூல் : சிந்தனைப் புதிதில் சிந்தியத் துளிகள் ஆசிரியர் : ஆலம்பட்டு. சோ.உலகநாதன் |
மின்னூலாக்கம் : லெனின் குருசாமி |
|
வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/sindhanai_puthidil_sindhiya_thuligal புத்தக எண் – 649 |
அப்பம் தின்ற முயல் – சிறுவர் கதைகள் – பாவலர் நாரா. நாச்சியப்பன் Posted: 27 Apr 2020 09:45 PM PDT நூல் : அப்பம் தின்ற முயல் ஆசிரியர் : பாவலர் நாரா. நாச்சியப்பன் |
மின்னூலாக்கம் : ச. ஐஸ்வர்யா லெனின் |
வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC0 |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
மண்ணில் இருந்து விண்வெளிக்கு – அறிவியல் கதைகள் – பொன் குலேந்திரன் Posted: 27 Apr 2020 05:16 AM PDT நூல் : மண்ணில் இருந்து விண்வெளிக்கு ஆசிரியர் : பொன் குலேந்திரன் மின்னூலாக்கம் : M விக்னேஷ் |
|
வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/from_earth_to_space_tamil_short_stories-2020-04-27-17-36-21 புத்தக எண் – 647 |
Whether you're interested in space travel, the inner workings of the universe, the mind of a brilliant mathematician or human behavior and the dark life of a patient who underwent a lobotomy, Live Science probably has a book for you here. Our writers scanned our archives for our favorite science books, those in which the storytelling is as compelling as the science and history itself, so you don't have to sift through Amazon picks or stocked bookshelves.
1.
Packing for Mars: The Curious Science of Life in the Void
Exploring Space
Mary Roach is the author of a series of one-word-titled books that look at the stranger side of science. "Packing for Mars," published in 2011, breaks the title trend, but not the theme. This is a book about the nitty-gritty of travel among the stars. Is food disgusting? Where do you go to the bathroom? Have you ever thought of how many skin flakes you wash down the shower drain each morning and where those dead cells would go if you were floating around, unbathed, in zero gravity?
2.
The Big Burn: Teddy Roosevelt and the Fire That Saved America
How to Conserve our Lands
In 1910, an enormous wildfire immolated 3 million acres of Washington, Idaho and Montana, killing 87 people. This conflagration turns out to be the fulcrum upon which former President Teddy Roosevelt's dreams of conservation turned. Timothy Egan tells the story of Roosevelt and his forestry chief Gifford Pinchot and their efforts to wrangle Western lands into public hands.
3.
The Demon-Haunted World: Science as a Candle in the Dark
One of Carl Sagans Best Works
While neither as poetic as "Pale Blue Dot" nor as comprehensive as "Cosmos," "The Demon-Haunted World" remains one of Carl Sagan's most compelling books. In it, Sagan explains how to use the scientific method in everyday life, as well as how to protect yourself from charlatanism and expose pseudoscience.
4.
Newton And The Counterfeiter
A Fascinating Slice of True-Crime History
Most know the story of Sir Isaac Newton: scientist, mathematician and sworn enemy of apple trees everywhere. What fewer people know is the story of Sir Isaac Newton: detective for the British government. In 1699, Newton became the Master of the Mint, and matched his considerable wits against William Chaloner, a charismatic and inventive criminal mastermind.
5.
The Immortal Life of Henrietta Lacks
Modern Medicine at Work
In her book, science writer Rebecca Skloot brings to life not only a tale of some of the most important cells in medicine, but also the life of the owner of those cells, Henrietta Lacks, an African-American tobacco farmer born in Roanoke, Virginia, in 1920. Lacks was diagnosed with cervical cancer in 1951; cells taken from one of her tumors astonished scientists when they reproduced indefinitely in a lab dish, according to "The Immortal Life of Henrietta Lacks" (Crown Publishing Group, 2010).
6.
The Spirit Catches You and You Fall Down
A Collision of Two Cultures
At the surface, "The Spirit Catches You and You Fall Down" (Farrar, Straus and Giroux, 2012) is about a young girl with a severe form of epilepsy whose parents and doctors have conflicting ideas on how to treat her. But it's also the story of a Hmong refugee family from Laos and their attempt to navigate an American medical system that they neither understand nor trust.
7.
The Emperor of All Maladies: A Biography of Cancer
Heavy Subject but Expertly Written
This is an important piece of work about one of the most horrific and pervasive diseases of our time. Don't be turned off by the "heavy" subject matter — Siddhartha Mukherjee does an incredible job of weaving science with storytelling. The book is extremely well researched, the stories are beautifully conveyed and Mukherjee is a masterful writer.
8.
Predictably Irrational (Dan Ariely)
In the book, Dan Ariely, who researches behavioral economics at Duke University, posits that while we all like to think of ourselves as rational, we are largely irrational. That said, we are irrational in similar and highly predictable ways. Ariely also delves into how social context alters decision-making. The vignette-like descriptions of each experiment make the book easy to devour, and a few will stick with you.
9.
Patient H.M. (Luke Dittrich)
Most people who have waded into the field of psychology or neuroscience have heard of Patient H.M., a man who, at the age of 27 in 1953, got a lobotomy and lost the ability to form new memories. The world learned H.M.'s true identify — Henry Molaison — when he died in 2008. But now, we're invited to dive into Molaison's life and the years of research spent on his brain thanks to Luke Dittrich, the grandson of the surgeon who performed the lobotomy.
10.
A Brief History of Time (Stephen Hawking)
Stephen Hawking explains the universe. In this best-seller, the renowned physicist breaks down black holes, space and time, the theory of general relativity, and much more, and makes it accessible to those of us who aren't rocket scientists. The book is a great primer for anyone who wants to learn more about the origins of the universe, and where it's all heading.
11.
Alex & Me (Irene M. Pepperberg)
"Alex & Me" (Harper, 2008) pulls readers into the amazing world of animal intelligence. In fact, after reading about Alex, the African gray parrot who learns countless words, simple math and the nuances of spoken language, you'll never use the insult "bird brain" again.
12.
A Beautiful Mind (Sylvia Nasar)
Get inside John Nash's head in this biography that examines the famed mathematician's important contributions to game theory, as well as his struggles with paranoid schizophrenia.
13.
Surely You're Joking, Mr. Feynman! (Richard Feynman)
Arguably one of the most "curious characters," Richard Feynman was a physicist whose life was as eccentric as his experiments. In this book, Feynman dances from a childhood experience in which he had his parents, unknowingly, test a burglar alarm he'd concocted to his rap sessions with Albert Einstein and Niels Bohr in which the geniuses talked about atomic physics.
14.
The Glass Universe (Dava Sobel)
Dava Sobel, a former science writer at the New York Times, delves into the lives and work of a group of women astronomers hired by Harvard University; women at the time, in the early 1900s, were not called astronomers and often referred to as "human computers," according to a review of the book by NPR.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/12fb9ece-01a8-472d-b26c-bfc645fd742e%40googlegroups.com.
அண்ணன்மார்சாமி கதை-ஒருபன்முகப்பார்வை – கட்டுரைகள் – கோ.ந.முத்துக்குமாரசாமி
Posted: 30 Apr 2020 07:08 PM PDT
நூல் : அண்ணன்மார்சாமி கதை-ஒருபன்முகப்பார்வை
ஆசிரியர் : கோ.ந.முத்துக்குமாரசாமி

மின்னஞ்சல் : kumar...@hotmail.com
அட்டைப்படம் : N.Sathya
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraj...@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை : CC-BY-SA-NC
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/annanmaarsami-kathai-6-inch
புத்தக எண் – 650
ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களையும் அவற்றிற்கான பொருள் விளக்கங்களையும் உதாரணங்களையும் கொண்டமைந்துள்ள இந்த யாழ்ப்பாணத்தமிழ் அகராதியானது, யாழ்ப்பாணத்தமிழ்ச் சொற்களுக்கென வரும் முதல் அகராதியாகும். இது 150க்கும் மேற்பட்ட சொற்களுக்கான விளக்கப்படங்களையும் கொண்டிருக்கிறது.
தற்போது, பல்வேறு பரிணாமங்களில் நிகழும் உலகமயமாக்கலும், வேகமாக இடம்பெறும் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியல் மாற்றமும் இந்தப் புத்தகத்தினை அவசியப்படுத்தியுள்ளது என்கிறார் ஆசிரியர். மேலும், புலம்பெயர்ந்தும், சிதறுண்டும் வாழ்ந்து வரும் தமிழர்கள், யாழ்ப்பாணத்தமிழ்ச் சொற்களை அறிந்துகொள்ளவும், அதன் வழியாக யாழ்ப்பாணச் சமூகத்தினை நோக்கவும், ஆய்வு செய்யவும் ஏதுவாக அமையும்.
அத்தோடு காலமாற்றத்தால் , முன்னைய வாழ்க்கை நிலையிலிருந்து பெருமளவு வேறுபட்டு வாழும் இலட்சக்கணக்கான தமிழர்கள், தங்கள் இயல்பான மொழிச்சுகத்தை, இந்தப் புத்தகத்தினூடாக மீளவும் பயணித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
நூலதிகாரம்
**************************************************************
நூல்; தென் கொங்கு நாட்டில் முதல் விடுதலைப்போர்
ஆசிரியர் ; பேராசிரியர், முனைவர்.மதியழகன்
வெளியீடு ; உடுமலை வரலாற்று மையம்
விலை; 250 உரூ, தொ.எண்; 9944066681
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உள்ளூர் வரலாறு உலகவராலாற்றோடு இணைந்திருக்கும். உலக வரலாறு உள்ளூர் வரலாற்றோடு இணைந்தால் பல மாற்றங்களுக்கும் புரட்சிக்கு அடிப்படை காரணியாக இருக்கும். அந்தவகையில் வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாக அழைக்கப்படும் 'கொங்குநாடு' என அறியப்படும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திண்டுகல் கேரள எல்லையில் உள்ள பாலக்காடு இவைகளே. இந்த நிலப்பரப்பினை நொய்யல் நதியே பிரிக்கிறது. இதனால் வடகொங்கு, தென்கொங்கு என நிலத்தின் வாயிலாக பிரிந்து வரலாற்று ரீதிகாகவும் தனித்துள்ளது.
தென் கொங்கு நாட்டில் வியஜநகர ஆட்சியாளர்கள் பாளையப்பட்டுகள் அமைத்தனர். இதில் வளம்கொண்டுள்ள பகுதியாக இருப்பவற்றில் தளி பாளையமும் ஒன்று. கொடைக்கானல், திருமூர்த்தி மலையில் உற்பத்தியாகும் சின்னாறு, ஆம்புருனை (அமராவதி) நதிக்கரையில் அமைந்திருந்தது இந்த பாளையம்.
சுமார் 1770ல் துவங்கிய முதல் விடுதலைப்போராகக் கருத்தப்படும் பாஞ்சாலங்குறிச்சி, நெற்கட்டும்சேவல் போருக்கு அடுத்து பிரிட்டீஷாருக்கு அடிபணியாது அழிவை சந்தித்தது தளி பாளையப்பட்டு. அதன் வரலாற்றை கோயில்களாக, கல்வெட்டாக, செப்பேடாக, மக்கள் வழிப்பாட்டு சடங்காக, பிரிட்டீஷ் ஆவணங்களில் இப்பாளையம் தனது பெருமையான வீரசெயல்களின் இருப்பைத் தக்கவைத்துள்ளது. ஆனால் பளையத்தின் கோட்டை கொத்தளத்தை இருந்த இடம் கூட தெரியாமல் பிரிட்டீஷ் பிரங்கிகள் தகர்த்து விட்டது.
மூன்று ஆனை முதுகின் அகளத்தை விட பெரியதான கோட்டை சுவரின் அடிப்பாகம் மட்டுமே சாட்சியாக பார்க்கலாம். இந்த நூலாசிரியர் இவ்வரலாற்றை கடும் சிரத்தை எடுத்து கள ஆய்வில் தொகுத்துள்ளார் என்பதை வாசிப்பாளன் உணர்ந்து கொள்வான்.
குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் கரையாளர் என்பது சமூக தகுதியாக பட்டமாக இன்றும் பார்க்கப்படுகிறது. 'ஆற்றை விட சிறியதாகவும், கால்வாயினை விட சற்று பெரியதாகவும்'' உள்ளதே கரை என்பதற்கான பொருள் என்பதற்கான விளக்கம் மிகசரியானது. இக்கரையை வைத்து எல்லை பிரித்து ஆளும் நபராக இருப்பவனே கரையாளர்.
அடுத்து மன்றாடியார் இது சேர அரசர்கள் கொங்கு நாட்டை ஆண்ட போது நிலத்தை உழுதவர்களின் தலைவனுக்கு மன்றாடியார் என்று பொருள். இந்த மன்றாடியார் பட்டம் குடும்பன் என்ற பள்ளர், கோனார், பறையர், வேட்டுவர், குறவர், பிராமனர் போன்ற குலத்தினர் மன்றாடியார்களாக இருந்துள்ளனர் என்பதை சான்றுரைத்து துவக்குகிறது நூல்.
தென் கொங்கு நாட்டில் நாடுகளை குறிப்பிட்டுள்ளதில் கோயம்புத்தூர் என்பது போரூர் நாடாக இருந்ததையும், ஆனைமலையை உப்பற்காடு என்பதை சொல்லுகிறது நூல். அங்கு வசிக்கும் பழங்குடிமக்கள் ஆனைமலையை இன்றும் உப்பற்காடு என்றும், இது சேர நாடு என்றும் சொல்லுவதை கேட்கலாம். ஆனைகள் நிறைந்த மலைப்பகுதிகளை சங்க இலக்கியத்தில் உப்பற்காடு, கடமலை என்று குறிப்புள்ளது. இச்சொல் இன்றும் புழக்கத்தில் உள்ளது வியப்பாக உள்ளது.
இன்று திருப்பூர் நகரமாக அறியப்படும் நல்லூர்நாடே கொங்கு நாட்டின் தலைமையிடமாக அன்று இருந்தது. பொது ஆண்டிற்கு பின்பு 12ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் ஆட்சியின் போது கம்மாளர்கள் செருப்பு போட, குடை பிடிக்க போராடியும், வேண்டுகோள் விடுத்தும் உரிமையைப் பெற்றுள்ளனர். இதற்கான அரசஆணை திருப்பூர் மேற்கே இருபதாவது கிலோமீட்டர் தூரத்திலுள்ள கொங்கீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு பதிவிடப்பட்டுள்ளது. இச்செய்தியை தேடி பதிவிட்டுள்ளார். இச்செய்தி ஒவ்வொரு குலங்களும் தங்களது உரிமையை பெற போராட வேண்டுயுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஹைதர் அலி காலத்தில் அதன் பின்னர் அவரது மகன் திப்புசுல்தான் காலத்தில் மைசூர் அரசுக்கு கீழ் கொங்கு இருந்துள்ளது. மைசூர் உடையார் பிரிட்டீஷாருடன் இணக்கமான பின்பு திப்புவின் தனி அரசாங்கத்தின் பிடியிலும் கொங்கு மண்டலம் முழுழுவதும் இருந்துள்ளது. கொங்கு நாடு ஹைதர் அலி ஆதிக்கத்தின் கீழிருந்தபோது நிலங்கள் அளவை செய்யப்பட்டது. அவர்கள் காலத்திலே பியூன் என்ற பதவி வந்துள்ளது. பியூன் பதவி இன்று இழிவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அன்று துப்பாக்கி ஏந்தி வரி வசூல் செய்திடும் அதிகாரம் படைத்தவர்கள் என்பதை தெளிவாக பதிவிட்டுள்ளது நூல். நில வசூல் தமிழ் சாதிகள் இருந்த இடத்தில் பூல் பாண்டி, அம்பலம் என்ற பதிவியினரே வசூல் செய்துள்ளனர். இவர்கள் தமிழர்கள். தெலுங்கு மக்கள் வாழும் இடத்தில் கோடாங்கி நாயக்கர், பூசாரி கோடாங்கி நாயக்கர்கள் வரி வசூல் செய்துள்ளனர். அரிகாரர்கள் என்ற பதவி ஒற்றர்களுக்கானது, இன்றும் புழகத்திலுள்ள கட்டுக்குத்தகை, கட்டுபடி போன்ற செய்திகள், கம்பளம் என்பது சபை தர்பார் என நூலாசிரியரின் தேடி பொருள் தந்தவிதம் மெச்சும்படியாக உள்ளது.
ஹைதர் அலி கொங்கு நாட்டை பிடித்த போது திண்டுக்கல் தான் தலையிடமாக இருந்துள்ளது. அதன் பின்னர் பிரிட்டீஷார் பிடிக்கு வந்த போது மதுரைக்கும் சேர்த்து திண்டுக்கல் தலைமையிடமாக இருந்துள்ளது.
பிரிட்டீஷாரை எதிர்த்த கன்னிவாடி பாளையக்காரர் அப்பயநாயக்கர், அவரது துணைப்படைத்தளபதி தேவதானப்பட்டி பூசாரி கோடாங்கிநாயக்கர் தனது ஆனையூர் கள்ளர் படையுடன் சேர்ந்து பிரிட்டீஷாருடன், ஆனையூர் கண்மாயில் போர் நடந்தது. அங்கு கைது செய்யப்பட்ட கோடாங்கி பூசாரி நாயக்கர், அப்பயநாயக்கர், கள்ளர் படையினர் பலரும் தூக்கில் போடப்பட்டனர். மதுரை மாவட்ட மேலூர், ஆனையூர் கள்ளர்கள் திருநெல்வேலி மாப்பிள்ளை வன்னியன், இராமநாதபுரம் கலியாணித்தேவன், மேலப்பன், சென்னப்ப செட்டி, ரங்கப்ப முதலி, முமகது மண்ஹான், அப்துல்காதார், சோடா முகமது, சுப்பாராவ், பீர் முகமது, போன்ற 160 விடுதலை வீரர்கள் கோவை, தாராபுரம் வீதிகளில் 160 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளனர். இப்படியாக பல நூறு பாத்திரங்கள் விடுதலைக்காக உயிரை மாய்த்த தகவல்களை தேடிதேடி பதிவிட்டுள்ளது நூல்.
தளி பாளைப்பட்டில் பள்ளர்களும், மாதாரிகளும், கம்பளத்து நாயக்கர்களும், வேட்டுவகுல (கவுண்டர்) பெரும்பாலும் படை வீரர்களாக இருந்துள்ளர். போன்ற செய்திகளுக்கு சான்றுகளை தொகுத்துள்ள விதத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
முதல் விடுதலைப்போரில் பாஞ்சாலங்குறிச்சிக்கு தளியிலிருந்தே பெரும்படை போனது. பாஞ்சாலங்குறிச்சி அழிவிற்கு பின்பு, சிவகங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்களின், திப்பு இவர்களின் கூட்டின் முக்கியமான நிகழ்வுகள் பெரும்பாலும் தளி பாளையப்பட்டு எல்லையில் உள்ள ஆனைமலை காடுகளிலே நடந்தேறியுள்ளதை பிரிட்டீஷார் குறிப்புகள் மூலம் தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர்.
திப்பு மறைவிற்கு பின் வடகொங்கு நாட்டு பிரிட்டீஷார் வசம் போனது. பேரூர் நாட்டில் பிரிட்டீஷார் பிரிட்டீஷார் ஸ்காட்லாந்த் அதிகாரிகளை வைத்து அளவை செய்துள்ளனர். இவர்களின் முறைக்கு தங்கொவ் ஆகும். இதுவே பின்னாலில் வருவாய்துறை மூலம் இனாம் நிலங்களுக்கு தர்காஸ் என்று குறிப்பிட்டார்கள் என்ற செய்திகள் வியப்பை ஏற்படுத்துகிறது. கோவையில் நூற்பு தொழிலில் ஏற்பட்ட மாற்றத்திற்கான வித்து இங்கிருந்து தான் துவங்கியது என தெளிவுபடுத்துகிறது நூல்.
ஜம்பு தீவு பிரகடனம்
பிரிட்டீஷார் எதிர்ப்பினை பலமான கூட்டமைப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை இதுவரை எந்த நூலுல் சொல்லாத தரவுகளை சொல்லுகிறது. திப்பு நான்காம் கருநாடகப்போரில் இறந்த பின்பு அவரது படைப்பிரிவினர் பலர் பிரிட்டீஷ் மற்றும் பிரஞ்சுக்காரர் படைகளில் சேர்ந்தார்கள். இதில் விருப்பம் இல்லாத சிலர் குறு நிலப்பரப்பை ஆண்டனர். அவர்களின் மையமானவர் துண்டாஜிவாக். இவர் திப்புவின் குதிரைப்படை தளபதியாகவும் மெய்காப்பாளனாவும் இருந்தவர். இவர் பிரிட்டீஷாரை எதித்துவந்தார். இவரை கூட்டணியில் சேர்க்க தூது அனுப்பப்பட்டது. அவரது உதவி ஒருமுறை கிடைத்தது. ஆனால் கோவையிலிருந்த பிரிட்டீஷ் படை முகாமினை தாக்க திட்டமிட்ட தகவல் கசிய படைத்தலைவர்கள் பலரும் சிறைப்பட்டனர். படை வீரர்கள் சிதறி ஓடினார்கள்.
இதனால் தளிப்பாளையத்தில் பதுங்கியிருந்து படைக்கு வழிநடத்திய ஊமத்துரை போன்றோர் தளிகாட்டுக்குள் இருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தனர் பிரிட்டீஷார். இவர்கள் படைகள் தழிஞ்சி மலைக்குள் வழி அறிந்து வருவதாலும் பீரங்கி தாக்குதலை எதிர் கொள்ளும் அளவிற்கு இவர்களிடம் பீரங்கி எண்ணிக்கை குறைவானதாலும் படைகள் சிதரியது. பிரிட்டீஷாரின் பாளைக்காரர்களின் படையிலிருந்தவர்களுக்கு நிலம் கொடுப்பதாக அறிவித்தனர். இதனால் காவல்காரர்கள், அரிகார்கள் கூட்டம் கூட்டமாக பிரிட்டீஷ் படையில் சேர்ந்தனர். இந்தப்பணியை துரிதமாக செய்து கொடுத்தவர் தளியில் பாளையப்பட்டு அனுமதியுடன் தங்கியிருந்த ஏசு சபை பாதிரியார் ஆண்டரு கேத்தீஸ். இதை அறிந்த தளி பாளையத்தலைவர் எத்தலப்பநாயக்கர் பாதிரியாரை தூக்கி தொங்கவிட்டார். இதனால் கடும் கோபமான பிரிட்டிடீஷார் கோட்டை கொத்தளம் அனைத்தையும் பீரங்கியால் நொறுக்கி சாம்பளக்கி ஆனைமலை காடுகளை தீயிட்டனர்.
ஒரு ஆய்வு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு தகுதியுள்ள நூல் என்பதைத்தாண்டி பல்கலை கழகத்தில் பாடமாக வைக்க வேண்டிய நூலாகவே நான் நினைக்கிறேன்.
உடல் மனம் உள்ளே – கட்டுரைகள் – அன்பரசு சண்முகம் Posted: 15 May 2020 06:51 PM PDT நூல் : உடல் மனம் உள்ளே |
ஆசிரியர் : அன்பரசு சண்முகம் |
|
அட்டைப்படம் : Canva.com |
மின்னூலாக்கம் : ஆரா பிரஸ், சென்னை |
வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-NC-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
ஸ்ரீ வைகுந்த வாழ்வளிக்கும் கருடசேவை – கட்டுரைகள் – கைலாஷி Posted: 15 May 2020 06:00 PM PDT நூல் : ஸ்ரீ வைகுந்த வாழ்வளிக்கும் கருடசேவை ஆசிரியர் : கைலாஷி
அட்டைப்படம் : பிரசன்னா |
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA-NC உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/KarudaSevai-2020-05-15-23-11-03 புத்தக எண் – 652 |
அண்மையில் மதுரை திட்டம் வெள்ளுரையாக வெளியிட்ட நூல்கள்#691.
கோடுகளும் கோலங்களும்
(சமூக நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
ராஜம் கிருஷ்ணன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0692.html
#693.
ஞானக் குறவஞ்சி
பதிப்பாசிரியர் : வீ. சொக்கலிங்கம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0693.html
பண்டிதர் 175 சிறப்பு வெளியீடு
க.அயோத்திதாசப் பண்டிதரின் 175வது பிறந்த நாளை முன்னிட்டு தலித் உரையாடல் அவை சிறப்பு வெளியீட்டினை வெளியிடுகிறது. அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய பண்டிரின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கையடக்கச் சுவடி மொபைலில் படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றைத் தெரிந்துக் கொள்ளாமல் வரலாற்றைப் படைக்க முடியாது
தலித் உரையாடல் அவையின் 7வது வெளியீடு இது
அனைவருக்கும் பகிருங்கள்..
தொடர்பாளர்
தலித் உரையாடல் அவை
இந்நூலாசிரியர் முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவரது பெற்றோர்களின் பூர்வீக ஊர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆகும். சமூகவியல் ஆய்வாளரான இவர் தமது பெற்றோர்களின் பூர்வீக ஊரான சிவகாசி யை ஆய்வுக் களமாகக் கொண்டு எழுதி 2016 ஆவது ஆண்டில் வெளியிடப்பட்ட நூலே இந்நூல். சிவகாசியில் வாழ்ந்த தமது சமூகத்தைச் சேர்ந்த இருபத்திஅய்ந்து பெண்களின் திருமண வாழ்க்கையைக் கதைபோல் எழுதியுள்ளார். இருப்பினும் இதில் கற்பனைத் தன்மை மேலோங்கி இல்லை. 1890ஆவது ஆண்டு தொடங்கி 1980 வரையிலான 90ஆண்டுக் காலத்தில் சிவகாசி நகரில் வாழ்ந்த இருபத்தி அய்ந்து பெண்களின் திருமண வாழ்க்கை இந்நூலில் பதிவாகி உள்ளது. அய்ந்து தலைமுறைப் பெண்களின் வாழ்க்கை வரலாறு என்றில்லாமல் திருமணம் தொடர்புடைய மரபுகளையும் சமூகப் பழக்க வழக்கங்களையும் பதிவு செய்துள்ளார்.இது இந்நூலின் சிறப்புக்கூறாகும். சமூக மாறுதல்கள் திருமண உறவுகளில் ஏற்படுத்திய மாற்றங்களும் பதிவாகியுள்ளன. பெண்ணின் குடும்பம்,அவளது அழகு(குறிப்பாக நிறம்) பெண்ணுக்குத் தரும் அணிகலன்கள்,பணம் என்பன மட்டுமே திருமண உறவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பின்னர் பெண்ணின் கல்வித் தகுதியும் இணைகிறது. 25 பெண்களின் பெயர்களில் கூட மாற்றங்கள்.ஜானகியம்மாள், ராஜம்மாள்,செல்லம்மாள்,பொன்னம்மாள்,சீதையம்மாள்,வள்ளியம்மாள்பாலம்மாள் என் அம்மாள் விகுதி, பெற்றவர்கள், பின் அம்மாள் விகுதி இன்றி பானுமதி, அனுசுயா,புஷ்பம்,உஷா ,வனஜா என்ற, வடமொழிப்பெயர் தாங்கியவர்கள்,தேமொழி, மலர்விழி என் தமிழ்ப்பெயர் தாங்கியவர்கள் எனப் பெயர்களில் ஒரு சமூக மாற்றம் தென்படுகிறது . நூலாசிரியர், "போகிறபோக்கில்"என்பது போல் கூறிச் செல்லும் செய்திகள் கூட நுட்பமானவை. நூலின் பின்அட்டையில். "பெண்களும்,பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்களும் பெண்களின் தாழ்வு நிலைக்குத் தாங்களும் காரணம் என்பதை உணர்ந்து கொள்ள ஆண்களும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய நூல்" என்று குறிப்பிட்டுள்ளது முற்றிலும் சரியே. ஆசிவசுப்பிரமணியன்
ஒரு துளி மணலில் ஓர் உலகு! – கடிதங்கள் – அன்பரசு சண்முகம் – ராமமூர்த்தி அய்யாவு Posted: 21 May 2020 06:50 AM PDT |
|
அட்டைப்படம் : Canva.com |
மின்னூலாக்கம் : ஆரா பிரஸ், சென்னை |
வெளியிடு : FreeTamilEbooks.com |
உரிமை : CC-BY-NC-SA |
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க* ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க |
புது கிண்டில் கருவிகளில் படிக்க |
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க |
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க |
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/oru_thuli_oru_manalil_ulagu புத்தக எண் – 654 |
I have been writing since Internet was available to the public. I wrote mostly in Tamil, my mother tongue. When Bala Pillai & Muthu Nedumaran came up with the idea of Tamil.Net the first email based chat group, I was delighted as if I discovered my mother land. Then I was living in Germany. I do not know how many pages worth of thoughts in Tamil I might have written so far? A million? Donno, but I wrote in Tamil eMail groups of all sorts, I wrote in several blogs that I creat...
See Moreயாஊயாகே வாட்ஸ் அப் குழுவின் உறுப்பினர், மருத்துவர்.சுரேந்திரன் அவர்கள். கிணத்துக்கிடவு பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். கோவில் கட்டடக்கலை தொடர்பாய் விஷயம் அறிந்தவர். இந்த Quarentine நாளில் குழு நண்பர்களுக்கு எளிதாக கட்டடக்கலை குறித்து அறிந்துகொள்ள 50 நாட்கள் வகுப்பெடுத்தார். நம் நோக்கம் கடல்போன்ற விஷயம் உள்ள கட்டிடக்கலையினை சிறிதளவேனும் அறிந்து கொள்வோம் என்பதே. கோயிலுக்கு சென்று இனி வணங்கும்போது அக்கோவில் எக்காலகட்டம், எந்த வகை விமானம், கோவில்கட்டிட உறுப்புகள், கோட்டத்தில் உள்ள மூர்த்திகள் போன்றோர்களை ஓரளவு எளிதாக அடையாளம் கண்டு, நமது கலையினை பிறரும் ஓரளவேனும் தெரிந்துகொள்ள செய்வது என்பதே நம் நோக்கம். இந்த 50 நாள் வகுப்பினை Pdf வடிவில் மாற்றியுள்ளோம். நிச்சயம் இது பயனுள்ளதாய் அமையும்.
முதல் தொகுதி இன்றும் மறுதொகுதி நாளையும் வெளியிடுகிறோம். நன்றி🙏
Google drive link:
https://drive.google.com/…/1F83svs06NWckSWJTwsOuwhk1h…/view…
Download செய்ய முடியாதவர்கள் தனிப்பிரிவில் தொடர்புகொள்க
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/02915a9d-0bb0-4aec-be29-90bc2059c22do%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e1bd3153-bd40-4aa6-ac47-a2bc82ff3235o%40googlegroups.com.
தமிழகத்தில் தற்போது பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிடுவது அருகி வருகிறது...
இந்த நிலையில் எட்டயபுர சமஸ்தானத்தில் எத்தனை நெல் வகைகள் இருந்தது என்பதை, ‘எட்டயபுரம் பள்ளு’ பாடலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்நூலைப் பாடியவர் நாகூர் முத்துப்புலவா் என்பாராவார். இப்புலவர் சோழ நாட்டைச் சேர்ந்த தஞ்சைக்கு அடுத்திருக்கும் கடற்கரை நகரான நாகூர் ஊரைச் சேர்ந்தவர் ஆவர். இப்புலவர் பாட்டுடைத் தலைவன் மீது மட்டும் அல்லாது. அவனது முன்னோரான “வேங்கடேசுர எட்டப்ப பூபதி' என்பார் மீதும் செய்யுட்கள் பாடியுள்ளார் என உ.வே. சாமிநாதைய்யர் கூறுவர். (அப்பாடல்கள் சில பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன].
இப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவர் காலத்தவர். இக்கடிகை முத்துப் புலவர் கி.பி. 1705 முதல் கி.பி. 1725 வரை, ஆட்சி புரிந்து வந்த 'ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர்' காலத்தவர் என ஐயா குறிப்பின் துணை கொண்டு அறிய முடிகிறது. இப்புலவர் குமார எட்டேந்திரன் அவையில் முதன்மைப் புலவராக விளங்கினார். நாகூர் என்பது இன்றைய நாகப்பட்டினமாகும். அன்னை வேளாங்கன்னியின் திருக் கோயிலும் இசுலாமியர் போற்றும் புனித பள்ளிவாசலும் பெற்று இன்று இவ்வூர்ஆன்மிகச் சிறப்பு மிக்க ஊராக விளங்குகிறது.
*நூல் எழுந்த காலம்*
கடிகை முத்துப் புலவர். என்பார் எட்டையபுர சமஸ்தானத்தின் அரசுப் புலவராக விளங்கினார் என்பதும், ஜெக வீரராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர் மீது, 'சமூத்திர விலாசம்”, காமரசமஞ்சரி போன்ற நூல்களைப் பாடினார் என்பதும், இவர் கி.பி. 1705-1725 உட்பட்ட மேற்சொன்ன மன்னர் காலத்தவர் என்பதும் முன்பே கண்டோம்.
ஏட்டின் முன்னோ அல்லது பின்னோ நூல் எழுந்த காலத்தையோ அல்லது படி எடுத்த காலத்தையோ குறிப்பிடப்படாததால், கலைக்களஞ்சியக் குறிப்பின் துணைக்கொண்டு இந்நூலின் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.
பூசாரியிடம் அளித்ததாகவும் (174) ராமவெங்கடாசல விட்ணு ஆலயத்திற்குச் சம்பா நெல் ஆயிரங்கோட்டை திருமலை அய்யங்கார் வசம் அளந்ததாகவும்(175), சாத்தூர் பெருமாள் படித்தரப்பூசை, காலம் தவறாமல் நடைபெற அரசரின் ஆணைப்படி ஆயரங்கோட்டை நெல்லை, கஸ்தூரி வாணன் பால் அளந்ததாகவும் (176), விண்ணோர் போற்றும் கழுகாசலக்குகவேளுக்கு பூந்தாளைச் சம்பா நெல், அண்ணாப்பட்டர் வசம் ஆயிரங்கோட்டை அளந்ததாகவும்(177), ஆதிவெயிலு வந்தாள் அன்னை முப்பிடாரியலங்காரி கோயிற்கு ஐநூறு
கோட்டை நெல் பண்டாரத்திட்டம் அளந்ததாகவும் (178), மங்காத கீர்த்தி பெறு எட்டையபுரத்தங்காள் நாயகிக்கென முன்னூறு கோட்டை நெல்லைப் பூசாரி அங்கணன் வசம் அளந்ததாகவும் (179), தவசித்தம் பிரானுக்கு உரிய பூசைகள் நடைபெற நல்கையாக சுப்பன் பண்டாரம் வசம் ஆயிரங்கோட்டை ராசவெள்ளை நெல் அளந்ததாகவும் (180), கூலதெய்வமான சக்கதேவிக்கு ஆனைக் கொம்பன் நெல்
முன்னூற்றைந்து கோட்டை அளந்ததாகவும் (182), காசிநகாரதனில் வாசம் செய்யும் விசுவேசருக்கு நித்திய பூசை நடைபெற ஆயிரங்கோட்டை நெல் போசனச் சம்பா அளந்ததாகவும் (183), புனித நீராடுதலுக்குரிய தமிழகத்தின் தலைசிறந்த தலமான தனுக்கோடி சிவராமலிங்கர் ஆலய பூசைக்காக பிள்ளைச் சம்பா ஆயிரங்கோட்டை நெல் அளந்ததாகவும் (184), இரத்தினகிரிக் கோவிற் கட்டளைக்கென எண்ணூறு கோட்டை மிளகி நெல்லை சிவாலயப் பண்டாரத்திடம் அளந்ததாகவும் (185), மதுரையில் எழுந்தருளியிருக்கும் சொக்கா மீனாட்சி ஆலயத்திற்கு குங்குமச் சம்பா நெல்லில் எண்ணூறு கோட்டை நெல் மீனாட்சிநாத பட்டர் வசம் அளந்ததாகவும் (186), தென்பாண்டி நாட்டில் ஆழ்வார்திருநகரில் எழுந்தருளியுள்ள பெருமாள் கட்டளைக்கென, பூந்தாழை நெல்லில் நானூறு கோட்டையை நல்கையாக சேஷயங்கார் வசம் அளந்ததாகவும் (187), நெல்லையில் கோயில் கொண்டுள்ள நெல்லை நாயகர் உடன் உறைகாந்திமத் கோயிலுக்குக் கட்டளையாக ஆயிரங்கோட்டை புழுகுச்சம்பா நெல்லை வாடிக்கைப்படி அளந்ததாகவும் (188), புனைவனச் சங்கரேசுபவர் கோயிலுக்கு நித்திய பூசை வேண்டியும் அன்னதான நற்காரியத்திற்காகவும் சம்பா நெல்லில் அறுநூறு
கோட்டை அளந்ததாகவும்(189), மங்கை யெனும் கோவிற் பட்டியில் எழுந்தருளியுள்ள பூவண்ண நாதர் பூசைக்கென்று சம்பா நெல் முன்னூறு கோட்டை அளந்ததாகவும்(190), கடல் முத்தமிடும் அறுபடை வீட்டில் ஒன்றான திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் சண்முக நாதர் கட்டளைக்கென வெந்தயச்சம்பா நெல்லில் எழுநூறு கோட்டை வேலன் என்பாரிடம் அளந்ததாகவும்(191), வேதபாராயணம் மற்றும்
சாத்திர, தோத்திரங்கள் கற்றுத்தரும் அந்தணர்களான தாத்தையங்கார் வகையினருக்கு ஐநூறு கோட்டை நெல் அளந்ததாகவும் (192), வீடுபேற்றை நல்க வல்ல வேள்வி களைச் செய்யவல்ல வேத விற்பன சுப்பிர தீட்சதருக்கு எழுநூற்றொரு கோட்டை சீரகச்சம்பா நெல் அளந்ததாகவும் (193), எட்டையபுர சமத்தான பரம்பரையைச் சேர்ந்த கண்ணப்ப குருசாமிக்கென எண்ணூற்றஞ்சு கோட்டை நெல்
அளந்ததாகவும் (194), நற்றமிழ் காத்தும் படிப்பித்தும் ஆசானாகவும் இருந்தும் செயலாற்றும் பன கடிகை நமச்சிவாயப் புலவர் பெருமகனார்க்கு அரசனின் ஆணைப்படி மூன்னூற்றைந்து கோட்டை நெல் வழங்கியதாகவும் (195), இன்னிசையில் வல்லுனராக வீணை தனிற் சிறந்து விளங்கும் வெள்ளை அண்ணாவி குமாரர்க்கென்று வாழைப்பூச் சம்பாவில் தொன்னூற்று ஐந்து கோட்டை நெல் அளந்த
தாகவும்(196), குமார எட்ட பாண்டிய தெய்வேந்திர கன்னன் பெயரை நாளும் பாடும் நற்றமிழ்ப் புலவர் நாகூர் முத்துப் புலவனுக்கு வளமைசேர்க்க முன்னூறு கோட்டை நெல் அளந்ததாகவும்(197), நீர்நிலைகளை உண்டாக்குபவரும், அவ்வாறு உண்டாக்கிய குளம், ஏரிகளைக் காவற் புரிவோருக்கும், பசிப்பிணிப் போக்க நீர்நிலை காக்கும் ராக்கப்பன் செட்டியார். வசம் அரண்மனை நல்கையாக ஆயிரங்கோட்டை நெல் அளந்ததாகவும்(198), கனக சபாபதியாபிள்ளைக் கணக்கின்படி முத்துப்பேயன்பால் எண்ணாயிரம் கோட்டை நெல் பாட்டத்தில் அளந்ததாகவும்(199), உவணகிரி சுற்றித் தேரோட்டி வைப்பதற்கு ஒன்பதினாயிரம் கோட்டை நெல் அளந்ததாகவும் அந்நெல்லைக் குமாரவேல் மணி என்பார் பெற்றதாகவும் (200), சம்பாதி என்ற இடத்தில் உள்ள குமரகுருபரர் சன்னதி சத்திரம் நடக்கவென்று தொண்ணூற்றொரு கோட்டை நெல் சுப்பன் வசம் அளந்ததாகவும் (201) குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்த வகையில் எண்பத்தீராயிரத் தெழுநூற்றொரு கோட்டை நெல் நீக்கி சேரில் வந்த நெல் அளவு தொண்ணூற்றிரண்டு லச்சங்கோட்டை: சொந்தத்திருப்பில் உள்ளதாகவும், ஒரு பாடல் (202) கூறுகிறது. இவை அன்றிச் சம்பிறுதிப் பிள்ளை வயித்திலிங்கத் தயாள் எழுதுங் கைக் கணக்கின்படி இன்னும் அளக்கப்படாத நெற்கட்டுகள் உள்ளதாகவும்(209) இத்தனை நெல்லும் உளளூர் மணியம் வெங்கடேசு ரெட்டுவேள் முன்னிலையில் அளந்து கணக்கிடப்பட்டது என்ற குறிப்பும் (204) உள்ளது.
இவற்றை . எல்லாம் காணும் போது எட்டையபுர அரண்மனையின் செல்வச் செழிப்பையும் நிருவாகச் சிறப்பையும் தரும சிந்தனையையும் அறிந்து கொள்ளதக்க சான்றாக மேற்சொன்னவைகள் அமையும் அன்றோ.
இதுவரை கண்ட செய்திகளில் இருந்து இந்த எட்டையபுரப் பள்ளு அனைத்து வகையிலும் சிறப்புற்று விளங்கும் நல் இலக்கியமாகவே திகழ்கிறது.
இதுவரைத் தமிழகத்தில் முக்கூடற்பள்ளுதான் மக்களிடையே புலவர்களாலும்ஆசிரியர்களாலும் பெரிதும் எடுத்துப்பேசப்பட்டது. இன்று அச்சு நூலாகத் தமிழன்னையின் பாதத்தை அழகு செய்யும் இந்நூல் முக்கூடற் பள்ளிற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல.
தென்னிளசைச் (எட்டையபுரம்) சிறப்பு, அதனை ஆண்டு வந்த மாமன்னர்தம் பெருமை, சமூகப் பண்பாட்டுச் செய்திகள் ஆகியவற்றை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தும் இந்நூலின் சிறப்புப் போற்றுதற்குரியது. அரசும், தமிழ் ஆர்வலர்களும் இந்நூலை மக்களிடையே கொண்டு சென்றால் இப்பள்ளின் பெருமையை யாவரும் அறிந்துபோற்ற ஏதுவாக அமையும்.
••••
*கலிப்பா*
172. மேதினியோர் போற்றுமத வேள்குமாரெட் டேந்திரமனு
நீதிதழைத் தோங்கவென்றே நெல்லளந்து கண்டபள்ள
னூதிபமுஞ் சிலவு முற்றபண்ணைக் காரனுக்கே
யாதிமுதல் அந்தமட வாயுரைத்தனனே .
*சிந்து*
173. கொண்ட லிளசைக் குமாரெட்ட மேந்திர
மண்ட லீகரன் பண்ணை தனியின்று
கண்டிடும் நெல்லுக்கும் புல்லுக் குமுள்ள
கணக்குநா(ன்) சொல்லுகிற னாண்டே.
174. மாலோன் வணங்குமெட் டீசுபரர்பூசை
வகைக்கெனச் சீரகச் சம்பா நெல்லில்
நாலா யிரங்கோட்டை யோர்துகையா யம்மை
நாதபட்டர் வசமளந்தேன்
175. மெய்யான காரண ராம வெங்கடாசல
விஷ்ட்டுணுவின் கோவிற்குச் சம்பா நெல்லிலை
யாயிரங் கோட்டை நம்பி திருமலை
அய்யங்கார் தன்வச மளந்தேன்.
176. சாத்தூர் பெருமாள் படித்தரப் பூசை
தவறாம லென்றென்னும் நடக்கவுங்கள்
வார்த்தைப் படிக்காயிரங் கோட்டைக் கஷ்தூரி
வாணனம் பாரத்தில் அளந்தேன்.
177. விண்ணோர் பரவுங் கழுகாசலக் குக
வேளுக்குப் பூந்தாளைச் சம்பா நெல்லை
அண்ணப் பட்டர் வசமெண் ணாயிரங் கோட்டை
யட்டி பண்ணாமலே யிளந்தேன்.
178. ஆதிவெயி லுவந்தாள் முப்பிடாரி .
யலங்காரிக் கைஞ்னூறு கோட்டை மனு
நீதிய தாகவே பண்டாரங் கையினில்
நோ்முத்துச் சம்பாநெல்லளந்தேன்.
179. மங்காத கீர்த்தி பெறுமெட்டையா
புரத்தங்காள் நாயகிக் கெனவேகன
பொங்கமாய் முன்னூறு கோட்டைநெற்
பூசாரி யங்கணன் பாரிசமளந்தேன்.
180. செப்ப முறுந்தவ சித்தம்பிரானுக்குச்
சித்திரக் காலி நெல்லதிலே சைவச்
சுப்பன் பண்டாரம் வசமளந்தேனோ
துகையாயிருநூறு கோட்டை
181. தாரணி போற்று மிளசையன்தான்
சத்திரத் துக்கே ராசவெள்ளை நெல்லி
லாருமகிழச் சிதம்பரய்யன் வசத்(ந்)தா
ஆயிரங் கோட்டை யளந்தேன்
182. குலதெய்வ மெனுஞ் சகதேவித்தாய்க்
கானைக் கொம்பன் சம்பாக் களஞ்சியத்தில்நா
னில்வரமாக முன்னூற் றஞ்சு கோட்டை
நெல்தந்தி நேரத்தி லளந்தேன்.
183. காசிநகர் தனில் வாசமிகும
விசுவேசர் படித்தரம் நடக்கும்படி
பூசை தவறாம லாயிரங் கோட்டைநெல் :
போசனச் சம்பாவி லளந்தேன்.
184. தீர்த்த விசேடம் பெறுந் தனுக்கோடி
சிவராம லிங்கர் பூசனைக்குக்கண்
பார்த்து மோராயி ரங்கோட்டை நெல் நேத்தியாம்
பள்ளயச்சம்பாவி ளைந்தேன்.
185. காசினி போற்றிய ரற்றின கிரிக்கோவிற்
கட்டளைக் கெண்ணூறு கோட்டைவிசு
வாசம்தான் சிவாய பண்டாரம்
வசத்தில் மிளகிநெல்லளந்தேன்.
186. கூடல் வளர் சொக்கர் மீனாட்சிக் கெண்ணூறு
கோட்டைநெற் குங்குமச் சம்பா விந்த
நாடறியும்படி கட்டளை மீனாட்சி
நாதபட்டர் வசமளந்தேன்.
187. ஆழ்வார் திருநகரில்ப் பெருமாள்
கட்டளைக்கென நானூறு கோட்டைநெல்லிற்
தாழ்வு வாராமலே சேஷயங் கார்க்குப்பூந்
தாழையம் பாரத்தி லளந்தேன்.
188. காந்திமதி வடிவாம் நெல்லை நாயகர்
கட்டளைக் காயிரங்கோட்டைடமன
வாந்தக மாகப் புழுகுச்சம்பா நெல்லை
வாடிக்கையாகவே யளந்தேன்.
189. புன்னைவனச் சங்கரேசுபரர் கோவிலுட
பூசைதவறாமல் நடக்கத் தானே
யன்னதானச் சம்பா நெல்லோர் துகையாய்
அறுநூறு கோட்டை நானளந்தேன்.
190. மங்கையெனுங் கோவிற்பட்டியதனிலே
வாழ்பூவண நாதர் பூசைக்கென்றே
யிங்கிதமாகவே முன்னூறு கோட்டைநெல்
லீற்குச் சம்பாவினி லளந்தேன்.
191. சந்தவரைத் திருச்செந்தூரில்மேவிய
சண்முக நாதர் கட்டளைக்கே நல்ல
வெந்தையச் சம்பா வெழுநூறு கோட்டைநெல்
வேலன் பகுத்தியி லளந்தேன்.
192. சாத்திர தோத்திர வேத பாராயண
தாத்தையங்கார் வகைக்கெனவே நம்ம
ளாத்தி கிணத்தில் அஞ்நூற்றொரு கோட்டைநெல்
காத்தன் பகுத்தியி லளந்தேன்.
193. மோட்சம் பெறும்படி மந்திர யாக
முறைதவ றாது செய்வேதச் சுப்பர
தீட்சதருக் கெழுநூற் றொருகோட்டைநெற்
சீரகச்சம்பாவி லளந்தேன்.
194. ஆதிக்கத்துக்குட் பரம்பரையான்கண்
ணப்ப குருசாமி தனக்கே யின்று
மாதிட்ட மாக வெண்ணுற் றஞ்சி கோட்டைநெல்
மாசற்ற சம்பாவி லளந்தேன்.
195. நற்றமிழர் காக்கும் பனகடிகை
நமசிவாயப் புலவருக்கே துரை
சொற்றவ றாமல் முன்னூற்றஞ்சு சோட்டைநெல்
துய்ய வெள்ளைதனில் லளந்தேன்.
196. வீணைதனிற் சுரக்கியான மிசைத்திடும்
வெள்ளை யண்ணாவி குமாரர்க்கென்றே
வாணர்புகழத் தொண்ணூற் றஞ்சுகோட்டைநெல்
வாழைப்பூச் சம்பாவி லளந்தேன்.
197. கத்தன் குமாரெட்ட பாண்டிய தெய்வேந்திர ப
கன்னன் நிருநாமந் துதிக்கும் நாகூர்
முத்துப்புலவன் வளவுக்குத் தானுண்ண
முன்னூறு கோட்டை நெல்லளந்தேன்.
198. திட்டமதாய்க் குளவெட்டுக் கென்றே
சேரிக் கெட்டும் நெல்லாயிரங் கோட்டையதைக்
கெட்டியதாய் நோட்டம் பார்க்கின்ற ராக்
கப்பன் செட்டியார் தன் வசமளந்தேன்.
199. சட்டம தாகப் படிக்குங்கனக
சபாபதியர் பிள்ளை கணக்கின்படி
கொட்டிய முத்துப்பேயன் பாலெண்ணாயிரங்
கோட்டைநெற் பாட்டத்தி லளந்தேன்.
200. உவணகிரி சுற்றித் தேரோட்டி வைப்பதற்
கொன்பதி னாயிரங் கோட்டை நெல்
லெவருமகிழ குமாரவேல்மணி யத்துக்
கேற்கவே தீர்க்கமா யளந்தேன்.
201. சம்பாதி வெற்புக் குமரகுருபரர்
சன்னதிச் சத்திரம் நடக்கவென்றே
சொம்பு பெறவே தொண்ணூற் றொருகோட்டைநெற்்
சுப்பன் பகுத்தியிலளந்தேன்.
202. இந்தவகை யன்பத் தீராயிரத் தெழுநூற்
றொரு கோட்டை நெல்நீக்கிச் சேரில்
வந்த நெல் தொண்ணூற் றிரண்டு லட்சங்
கோட்டை சொந்தத் திருப்புக் காணாண்டே
203. சம்பிறுதிப் பிள்ளை வயித்திய லிங்கத்
தயாலெழுதுங் கைக்கணக்கின்படி
யம்பாரஞ் சேரிற்களஞ்சியந் தோறும்
அனேகநெற்கட்டினே னாண்டே.
204. இத்தனை நெல்லு முள்ளூர் மணியம்
வெங்கடேசு ரெட்டுவேள் முன்னிலைக்கே யின்று
கர்த்த னுத்தாரப் படிக்களந்தே சேரிற்
கட்டிவைத்தேன் பண்ணையாண்டே.
*கலிப்பா*
205. கண்டநெல் லுக்குள்ள கணக்கனைத்துங் கண்டபள்ளன்
கொண்ட பெண் டென்றேன் கணக்குக்கூ ராத்தேதெனவே
வண்டனைய மைக்கருங்கண் மானாளர் மூத்தபள்ளி
துண்டரிகப் பள்ளியாமுன் சொல்லத் துணிந்தாளே
நெல் அளந்த குறிப்பு: இந்நூலில் அரண்மனை நெல் யார்
யாருக்கு நல்கையாக அளக்கப்பட்டது என்பதற்கான சில
குறிப்புகள் காணப்படுகின்றன. எட்டையபுர சமத்தான -
வரலாற்றை அறிவதற்குக் இக்குறிப்புகள் பெரிதும் தரவுகளாக
அமைந்து துணை செய்யும்.
இககணக்கை எழுதுபவன் தன்னைப்பற்றிக்
கூறிக்கொள்ளும்போது, :.
“கண்டிடும் நெல்லுக்கும் புல்லுக்கு முள்ள டட
கணக்கு நா(ன்) சொல்லுறே னாண்டே:” (பா: 173)
எனத் தன்னை அறிமுகப்படுத்திக்
கொள்கிறான்.
-பதிப்பாசிரியர்,த. பூமி நாகநாதன்.
வெளியீடு- உலக தமிழாரய்ச்சி நிறுவனம்.
#Ettiyapuram
*#எட்டையபுரப்_பள்ளு*
#பாரம்பரிய_நெல்_வகைகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-06-2020







Dr. L. Kailasam
வரலாற்றுப் புதினங்கள் எழுதும் டாக்டர் எல்.கைலாசம் அவர்களின் வரவிருக்கும் அடுத்த நூல் குறித்த முன்னுரை ..
நம் குழுமத்தில் வரலாற்றுப் புதினங்களைச் சேகரிப்போர் பார்வைக்கு..
முன்னுரை
இன்றைய மதுரைக்குத் தென்கிழக்கில், பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில், திருப்புவனத்திற்கு அருகே இருக்கும் பள்ளிச்சந்தை மேட்டுத் திடலில், செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காகத் நிலத்தைத் தோண்டிய ஒருவர், மிகப்பெரிய செங்கற்சுவரைப் பார்த்து, அதிர்ந்து போய் ஆராய்ச்சியாளர்களிடம் சொல்ல, அவர்கள் அங்கு சென்று பார்த்தபொழுது அந்த இடத்தில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன.
மேட்டுத் திடலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆராயும் பொழுது, அந்தக் காலத்திலிருந்த செங்கற்சுவரைத் தவிர, உறை கிணறுகள், தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள், சூது, பவளம், பளிங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல்கள், தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், மண்பாண்டங்கள், தாயக்கட்டைகள், எழுத்தாணிகள், சுடுமண் பொம்மைகள் போன்ற பொக்கிஷங்கள் கிடைக்க, நமது பராம்பரிய சரித்திரமும், வேர்களும் நன்றாகப் புரிந்தது. இதுவரை புறநானுறிலும், அகநானுறிலும் சொல்லப்பட்ட விவரங்கள் இலக்கியச்சுவை கொண்ட பாடல்கள் மட்டுமல்ல, மறுக்க முடியாத சரித்திர உண்மைகள் என்பதும் புலனாகியது. கரிமத்தேதியிடல் முறையில் செய்யப்பட்ட சோதனையில், கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று உலகிற்குச் சொன்னது.
அதன் பின் முந்நூறு வருடங்கள் கழித்து அதாவது, இன்றிலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு (கி.மு. 245-220 வாக்கில்) பெருமணலூர் என்று அழைக்கப்படும் மதுரையிலிருந்து (தற்போதைய கீழடி) பாண்டிய மாமன்னர் பூதப்பாண்டியர் ஆட்சி புரிந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்தப் புதினம் புனையப்பட்டுள்ளது. பெருமணலூரிலிருந்து கோலோச்சிய பாண்டிய மாமன்னர் பூதப்பாண்டியர் செய்த தவறினைச் சுட்டிக்காட்டிய கதையின் நாயகி இயக்கி, பாண்டிய நாட்டின் முன்னேற்றத்திற்கு எப்படி உதவினாள் என்பதைச் சொல்லும் இந்தப் புதினம், கீழடியில் கிடைக்கப்பெற்ற பல பொருட்களின் பயன்பாடுகளையும் சொல்கிறது.
சென்ற வருடம் நான் எழுதிய பொன்னி புதினத்தில், கதையின் மாந்தர்களான பொன்முடியும், பொன்னியும் ஜலசமாதி அடைந்து, இன்றும் நம்மைக் காத்து வருகிறார்கள் என்று முடித்திருந்தேன். பொன்னியம்மனுக்கு இணையான தெய்வம்தான் இசக்கியம்மனும். தென்தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் கலந்து போன இசக்கியம்மன், ஏமாற்றுபவர்களை, தவறு செய்பவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டாள் என்றும் அநீதி இழைத்தவர்களை இசக்கியம்மனை வேண்டும் பொழுது, அவர்களைத் திருத்துகிறார் என்றும் அம்மனை வழிபடுபவர்கள் நம்புகிறார்கள்.
இசக்கியம்மனின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட இந்தக் கதையின் நாயகி இயக்கி, நாட்டுப்பற்று கொண்டவள். பாண்டிய நாட்டுக்கு எதிராக யார் என்ன செய்தாலும், அது தளபதியாக இருந்தாலும்.. ஏன் பாண்டிய நாட்டின் மன்னராக இருந்தாலும் கூட மன்னிக்கமாட்டாள் என்ற நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தப் புதினம் அந்தக் காலத்தில் மதுரை எப்படி இருந்திருக்கும் என்பதை இன்று கீழடியில் தொடரும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் விவரிக்கிறது.
இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, ‘நேர்மையான ஆட்சி’ நடந்திருக்க முடியுமா என்று புதினத்தைப் படிக்கும் வாசகர்களுக்குச் சந்தேகம் வரலாம். புறநானூனற்றில் பூதப்பாண்டியரைப் பற்றி இருக்கும் குறிப்புகள், அந்தக் காலத்திலும் ராஜாங்கம் மேம்பட்ட முறையில் நடந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
சங்ககால அரசர்களின் ஒருவரான பெருஞ்சாத்தான், பாண்டிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஒல்லையூரை தனதாக்கிக் கொள்கிறார். பாண்டிய மன்னர் அவரை வென்று அதைப் பாண்டிய நாட்டுடன் மீண்டும் இணைத்து ‘ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியர்’ என்று போற்றப்பட்டார் என்பது புறநானுறு சொல்லும் வரலாறு. வஞ்சினக்காஞ்சித் துறையில் உள்ள இந்தப் புறநானுறு பாடலில், ‘படையோடு என்னுடன் வந்து போரிடுவதாகக் கூறுபவரைப் புறமுதுகிட்டு ஓடச்செய்வேன்; அப்படி நான் செய்யாவிட்டால், எனது அன்பு மனைவியைப் பிரிவேன்; அறநிலைத் திரியாத என அவைக்களத்தில் திறமை இல்லாதவனை அமர்த்தி வலிமை இல்லாத ஆட்சி புரிவேன்; சுடுகாட்டைக் காக்கும் பிறவி அடைவேன்’ என்று வஞ்சினம் கூறுகிறார். இந்தப் பாடலில் அன்றிருந்த நீதி வழுவாத ஆட்சி, பெண்களை மதிக்கும் பண்புடமை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. அவர் எப்படித் தன்னை எதிர்த்த மன்னர்களை வென்றார் என்பதையும், என்ன தவறு செய்தார் என்பதையும், அதற்கு அவருக்கும் அவனது மனைவி மாதரசி பாண்டிமாதேவி கோப்பெண்டு தனக்குத்தானே விதித்துக் கொண்ட தண்டனையும் பற்றியும் சொல்கிறது இந்தப் புதினம்.
கற்பனையைக் கலந்து சொல்வதுதானே புதினம். இந்தப் புதினத்தில் பெருஞ்சாத்தான் சோழ நாட்டின் மன்னரை, ஒல்லையூர் விடுதலை பெற உதவிக்கு அழைத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒல்லையூர் யுத்தத்திற்கு ஆதாரம் இருந்தாலும், சோழ மன்னர் உதவியதற்கு ஆதாரம் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிற்றரசரான ஒல்லையூர் கிழார், அருகில் இருக்கும் நாடுகளின் உதவி இல்லாமல் ஒல்லையூர் யுத்தத்தை நடத்தி இருக்க முடியாது என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கற்பனைச் சித்திரம்தான் இந்தப் புதினம்.
இந்தப் புதினத்தின் முக்கிய நோக்கம், நாட்டுப்பற்றினை இன்றைய இளைஞர்களிடையே வளர்ப்பதுதான். இயக்கி போன்ற பெண்களின் மனஉறுதியும், யார் தவறு செய்தாலும், அதைத் தட்டிக் கேட்கும் தைரியமும், நாட்டின் மீது கொண்ட பக்தி போன்றவற்றையும் இந்தப் புதினத்தைப் படிப்பவர்கள் தாங்களும் அது போன்று நடக்க வேண்டும் என்ற எண்ணினால் அதுவே இந்தப் புதினத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.
புறநானுறு மற்ற தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டதைத் தவிர இந்தப் புதினத்தில் எழுதப்பட்டது அனைத்தும் கற்பனையே. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவையல்ல.
எப்பொழுதும் போல எனது வலதுகரமாக விளங்கும் திரு. சுந்தர் கிருஷ்ணன் அவர்கள் தனது திறமையான திருக்கரத்தால் இந்தப் புதினத்தையும் திருத்திக் கொடுத்தார்கள். எனது ஆருயிர் நண்பர் சுந்தரம் அவர்கள் இந்தப் புதினத்தை மேம்படுத்த உதவினார்கள். அவர்களுக்கு எனது என்றும் மறவாத நன்றியை இந்தத் தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
புத்தகம் தயாரானதும், வானதி இராமநாதன் அவர்களைப் பதிப்பித்துத் தருமாறு கேட்டேன் மனமகிழ்ந்து உதவினார்கள். அவர்களுக்கும், வானதி குழுமத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அன்புக்கும், மரியாதைக்கும் உரிய வாசக எஜமானர்களே, எனது இந்தப் புதிய புதினத்தை வாங்கி எப்பொழுதும் போல உங்களது ஆதரவை என்றும் தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்ளும்,
உங்களின் அன்பான
டாக்டர் எல். கைலாசம்
எண்17, சேரமாதேவி சாலை,
திருநெல்வேலி 6.
9444088535
