அமையும் மகிழ என்பது தப்பி வந்துவிட்ட எழுத்து அதனால் அது மகிழ அல்ல மகிஷ என்றேன்
அகநானுறு
36
பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
கொடுவாய் இரும்பின் கோள்இரை துற்றி
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து எழுந்து
அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித் 5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறுஇடு கதச்சேப் போல மதம்மிக்கு
நாள் கயம் உழக்கும் பூக்கேழ் ஊர
வருபுனல் வையை வார்மணல் அகன்துறைத்
திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில் 10
நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினம்கெழு திதியன் 15
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி
நார்அரி நறவின் எருமை யூரன்
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன் என்று
எழுவர் நல்வலம் அடங்க ஒருபகல் 20 அக்காலத்து திகழ்ந்த ஏழு பெரு ரு மன்னர்களில் ஒருவனாகக் எருமை நாடன் காண்க
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெலக்
கொன்று களம்வேட்ட ஞான்றை
வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே
அகநானுறு
115
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்
பழிஇலர் ஆயினும் பலர்புறங் கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெஞ்சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக
நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன் 5 /// எருமை நாடு ஓர் குடக்கமைந்த நாடு
ஆய்நலம் தொலையினும் தொலைக என்றும்
நோய்இல ராக நம் காதலர் வாய்வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின்முன் பரித்துஇடூஉப் பழிச்சிய
வள்உயிர் வணர்மருப்பு அன்ன ஒள்இணர்ச் 10
சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடைப்
பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை
சினம்மிகு முன்பின் வாமான் அஞ்சி
இனம்கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை 15
நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு
நம்நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடா மையின் நீடி யோரே
அகநானுறு
253
வைகல் தோறும் பசலை பாய என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென
அன்னையும் அமரா முகத்தினள் அலரே
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி
நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் 5
பொன்மலி நெடுநகர்க் கூடல் ஆடிய
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்குயான்
சிலநாள் உய்யலென் போன்ம் எனப் பலநினைந்து
ஆழல் வாழி தோழி வடாஅது
ஆர்இருள் நடுநாள் ஏர்ஆ ஒய்யப் 10
பகைமுனை அறுத்துப் பல்இனம் சாஅய்
கணம்சால் கோவலர் நெடுவிளிப் பயிர்அறிந்து
இனம்தலைத் தரூஉம் துளங்குஇமில் நல்ஏற்றுத்
தழூஉப்பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
அம்தூம்பு அகல்அமைக் கமஞ்செலப் பெய்த 15
துறுகாழ் வல்சியர் தொழுஅறை வவ்வி
கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம்
நேரா வன்தோள் வடுகர் பெருமகன்
பேர்இசை எருமை நல்நாட்டு உள்ளதை // இங்கு வடுகர் பெருமகன் என்று தனித்துக்காட்டப் பட்டுள்ளதும் காண்க
அயிரியாறு இறந்தனர் ஆயினும் மயர்இறந்து 5 நீலகிரியில் உள்ள படுகர் = வடுகர் என்பதே அன் நீங்கள் அறிவீர்
உள்ளுப தில்ல தாமே பணைத்தோள்
குரும்பை மென்முலை அரும்பிய சுணங்கின்
நுசுப்புஅழித்து ஒலிவரும் தாழ்இருங் கூந்தல்
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்னநின் திருமுகத்து
ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே
------------------------
தெனாலி ராமன் கதையில் வரும் "திலகாஷ்ட மகிஷ பந்தனம் "
என்பதிலும் எருமை கட்டும் கயிறு எனத்தான் பொருள் காட்டப்படுகின்றது