சமய குரவரான அப்பர் - சம்பந்தரின் பணி சமணச் செல்வாக்கால் புகழ் மங்கி மறைந்து கிடந்த சிவத்தலங்களை மக்கள் பார்வைக்கு வெளிக்கொணர்வதாகவே அமைந்தது.
சமய குரவரான அப்பர் - சம்பந்தரின் பணி சமணச் செல்வாக்கால்புகழ் மங்கி மறைந்து கிடந்த சிவத்தலங்களை மக்கள் பார்வைக்குவெளிக்கொணர்வதாகவே அமைந்தது.சைவ வளர்ச்சிக்கு அரச குடும்பத்தினர் செல்வாக்கை அவர்கள் பயன்கொண்டனர் என்று முடிவுகட்ட இயலாது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
:-))) குஜராத்தில் சைவம் சாப்பிடுவோர் அதிகமா அல்லது அசைவம் சாப்பிடுவோர் அதிகமா? ;-)
While it seems to be surprising, if one attempted to know more about Gujarat, one would learn that 70 percent of the state’s population is non-vegetarian.
“Senior sociologist professor Ghanshyam Shah believes the myth that Gujarat is a vegetarian state was exploded a decade ago by a survey of Anthropological Survey of India, which said 70 percent of the state was non-vegetarian. "Ten per cent Muslims, seven percent Dalits, 40 percent OBCs and 14 percent Adivasis are all meat eating," he says. "Among the OBCs, only smaller artisan communities like Prajapatis and Suthars, forming seven percent, are traditionally vegetarian. Among upper castes, Rajputs are traditionally meat eaters", repors the Times of India.
Gujarati cuisine (Gujarati: ગુજરાતી ભોજન) refers to the cuisine of Gujarat, a state in western India. Despite having an extensive coastline providing wholesome seafood, it is primarily a vegetarian state due to the influence of Jain vegetarianism and traditional Hinduism, however some families may include chicken, lamb, and goat to these dishes.[1][2]
----------------------
......... மனைவி சொல்படி நடப்பதே பெண்ணியம். பாண்டியன் சிறந்த பெண்ணியவாதி போலும் :-). கூட சம்பந்தரின் தமிழும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும்?
On Friday, 3 July 2015 15:49:16 UTC-7, செல்வன் wrote:......... மனைவி சொல்படி நடப்பதே பெண்ணியம். பாண்டியன் சிறந்த பெண்ணியவாதி போலும் :-). கூட சம்பந்தரின் தமிழும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும்?வளவர்கோன் பாவை முதலிலிருந்தே சைவ சமயத்தில்தான் இருந்தார்;கணவனார் சமண நெறியிலிருந்தாலும் அவர் சமண ஒழுக்கங்களைப்பின்பற்றினாரில்லை.
சோழர் கை தாழ்ந்திருந்த நிலையில் அரசியல்காரணங்களுக்காக சமணரான பாண்டிய மன்னரை அவர் மணந்திருக்கலாம்என ஊகிக்க இடமுள்ளது.
முதலில் பெண்ணிய ஆதரவாளராக இல்லாமலிருந்துவிட்டுசம்பந்தர் பெருமானின் வருகைக்குப்பின் கூன் பாண்டியர்பெண்ணிய ஆதரவாளராக மாறியிருக்கலாம் :))
தேவ்
வளவர்கோன் பாவை முதலிலிருந்தே சைவ சமயத்தில்தான் இருந்தார்;கணவனார் சமண நெறியிலிருந்தாலும் அவர் சமண ஒழுக்கங்களைப்பின்பற்றினாரில்லை.சார்! நக்கீரன் பத்திரிகை விரும்பிப் படிப்பீரோ? :-)))))
வளவர்கோன் பாவை முதலிலிருந்தே சைவ சமயத்தில்தான் இருந்தார்;கணவனார் சமண நெறியிலிருந்தாலும் அவர் சமண ஒழுக்கங்களைப்பின்பற்றினாரில்லை.
ஆஹா.செல்வன்/சொல். வன் ( மை )
--
//சோழர் கை தாழ்ந்திருந்த நிலையில் அரசியல்
காரணங்களுக்காக சமணரான பாண்டிய மன்னரை அவர் மணந்திருக்கலாம்
என ஊகிக்க இடமுள்ளது. //
கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே !
பெரிய புராணம் படித்தால் போதும்.ஞான சம்பந்தர் கூடல் வந்து சேர்ந்தபின், மன்னவனுக்கும்,மங்கையர்க்கரசியாருக்கும் இடையே நடந்த உரையாடல் :தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான்”காவி நீள் கண்ணினாய் கேள் ! காவிரி நாட்டில் மன்னும்தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்குமேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்றான் .
தமிழ்க்குடி போர்க்குடி. வாளேந்தி முந்தோன்றி மூத்த குடி எனக்கூறுவதுண்டு
சங்க இலக்கியங்களை படித்தால் தமிழர் நண்டு, உடும்பு, மான், பன்றி, பசு என ஒரு மிருகத்தையும் விட்டு வைக்காமல் உண்டு களித்தது தெரியவரும். இறைச்சிக்கு அடுத்து தமிழரை பைத்தியமாக அடித்த இன்னொரு பொருள் கள். கள்ளை எத்தனை மொந்தை அடித்தாலும் போதை ஏறாது என்பது கவனிக்கதக்கது. விஸ்கி, ரம் மாதிரி கெடுதலானது அல்ல கள்.
இக்கதையில் மன்னருக்கு நோய் தீர்த்தார் அதனால் மதம் மாறினார் என்பது மட்டும் சரியான காரணமாக இருக்கலாம்...பல இலக்கிய ஆசிரியர்கள்..அப்பர்..அருணகிரிநாதர்...இன்று ஏ ஆர் ரகுமான் குடும்பம் வரை இதுதான் கதை. நோய் தீர்ந்தால் கடவுள் பக்தி .உயிர் பிழைத்ததால் மதம் மாறுபவர்கள் ....நன்றி தெரிவிக்கும் நோக்கில் தீவிர மதவாதியாக மதம் பரப்புவதில் இறங்குவதை இன்று கூடப் பார்க்க முடியும்.முதலில் படிப்பதில் எதுவரை கற்பனை எந்தப் பகுதி உண்மையாக இருக்கும் எனப் பிரித்து அறிவது உதவும்.இதில் இலக்கியம் எழுதியவர் தீவிர மதவாதியாக இருந்தால் எப்படி எல்லாம் தனது கற்பனையை ஓடவிட்டு தான் சார்ந்த சமயத்தை முன்னிறுத்த விரும்பியிருப்பார் என்பதை எண்ணிப்பார்க்க விரும்பினால், இங்கே மின்தமிழில் மதசார்புடன் எழுதும் மக்களின் மனநிலை உணர்த்தாதா ...ஐந்தாறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் verbatim கொடுக்கிறாரா ... நான் நொந்து போய் விட்டேன்.
நோய் தீர்த்தனர், அற்புதம் நிகழ்த்தினர் , ஆள் சேர்த்தனர் - எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.ஏன் பாண்டி நாட்டிலோ, தொண்டை நாட்டிலோ பாடல்பெற்ற தலங்கள் அதிகம் இல்லை ?ஏன் பசிப்பிணி போக்குவதற்கும் மன்னர்பால் செல்லாமல் சமய குரவர் இறைவனிடம் கையேந்தினர் ?நொந்துகொள்ளாமல் சொல்லுங்கள். இவை பெரிய புராணத்தின் ஆதாரத்தில் அமைந்த கேள்விகள்இல்லை
தேவ்
On Saturday, 4 July 2015 03:59:27 UTC-7, இரா.பா wrote:வளவர்கோன் பாவை முதலிலிருந்தே சைவ சமயத்தில்தான் இருந்தார்;கணவனார் சமண நெறியிலிருந்தாலும் அவர் சமண ஒழுக்கங்களைப்பின்பற்றினாரில்லை.சார்! நக்கீரன் பத்திரிகை விரும்பிப் படிப்பீரோ? :-)))))இல்லை ஐயா, பெரிய புராணம் படித்தால் போதும்.
ஞான சம்பந்தர் கூடல் வந்து சேர்ந்தபின், மன்னவனுக்கும்,மங்கையர்க்கரசியாருக்கும் இடையே நடந்த உரையாடல் :தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான்”காவி நீள் கண்ணினாய் கேள் ! காவிரி நாட்டில் மன்னும்தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்குமேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்றான் .வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம்கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டியானும் காதல்வண்டுணத் துதைந்த கோதை மானியே ! இங்கு வந்தபண்பு மற்று இதுவேயாகும் பரிசு வேறு இல்லை ”என்றான்.மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கு அரசியார் தாம்”நின்னிலை இதுவே யாகில் நீடிய தெய்வத் தன்மைஅன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்துதுன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன !” என்றார்.நீறு பூசிய நபர்களைக் கண்ட சமணர்க்குக் ‘கண்டு முட்டு’ ஆயிற்று;அதைச் செவியுற்ற எனக்குக் ‘கேட்டு முட்டு’ ஆயிற்று என்றான்மன்னன்; ’கண்டு முட்டு, கேட்டு முட்டு’ போன்ற மொழிகளைஅரசியார் உரைக்கவில்லைதேவ்
முதலில் நன்றி ஐயா. கிண்டலாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு!
சம்பந்தரரின் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு, சேக்கிழார் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு.கிட்டதட்ட, 500 ஆண்டுகள், மிக நீண்ட இடைவெளி. எப்படி மூவருக்குள் நடந்ததை,
பெரியப் புராணமாக எழுத முடிந்தது, எந்த வித பிற ஆதாரங்களோ இல்லாமல்??
On Monday, 6 July 2015 03:04:24 UTC-7, இரா.பா wrote:முதலில் நன்றி ஐயா. கிண்டலாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு!புரிதல் மகிழ்ச்சி தருகிறது :))சம்பந்தரரின் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு, சேக்கிழார் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு.கிட்டதட்ட, 500 ஆண்டுகள், மிக நீண்ட இடைவெளி. எப்படி மூவருக்குள் நடந்ததை,
பெரியப் புராணமாக எழுத முடிந்தது, எந்த வித பிற ஆதாரங்களோ இல்லாமல்??என்ன செய்யலாம் ஐயா ?நாம் புழங்கும் சமயத்துறையே அப்படித்தானே இயங்குகிறது !தீர்த்தங்கரர்கள் குறித்து அறிவதற்கு அவர்களுக்குப் பலநூற்றாண்டுகளுக்குப்பின் எழுந்த நூல்களைத்தானேஆதாரமாகக் கொள்கிறோம் ?
ஜைநத்தின் சாஸந தேவ / தேவியர் பிற்காலச் சேர்க்கை என எழுதுகிறார்ஒரு ஜைந நண்பர்.
பார்ச்வநாதருக்கு முன்பிருந்ததாகச் சொல்லப்படும் தீர்த்தங்கரர்களைவரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனரா ? நேர்மையுடன் விடைகூறுங்கள்.அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நீங்களும்அவர்களை வழிபடாமல் இருப்பீர்களா ?
ஆய்வுப்படிப்பார்த்தால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு முதலே கற்சிற்பங்கள் வருகின்றன.
ஏன் பாண்டி நாட்டிலோ, தொண்டை நாட்டிலோ பாடல்பெற்ற தலங்கள் அதிகம் இல்லை ?ஏன் பசிப்பிணி போக்குவதற்கும் மன்னர்பால் செல்லாமல் சமய குரவர் இறைவனிடம் கையேந்தினர் ?
இதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? நான் குறிப்பிட்டதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
நீங்களோ ... கள்ளை எத்தனை மொந்தை அடித்தாலும் போதை ஏறாது என்று கூறுகிறீர்களே ...எது உண்மை எது உண்மைக்கு மாறானது?
தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கப்படுவோர், நம்மை போன்று தாய்வயிற்றில் பிறந்த மனிதர்கள்தாம்.இதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால்.. அதே தீர்த்தங்கரர்கள், ஆயிரம் அடி வளர்ந்திருந்தார்கள், ஆயிரம்ஆண்டுகளாக வாழ்ந்திருந்தார்கள் என்று சொல்லும்போது, அதுமிகைப்படல்! என்றும் அதுபோன்றுநடவா!! இதையும் யாரும் மறுக்கமுடியாது.
பொன்னியின் செல்வனில் வராது! அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தது அல்லவோ இந்தக் கதை!!!!!!!!!!!!!! சிவகாமியின் சபதத்தில் வரும். கடைசி பாகத்தில் படிக்கலாம்.
//நல்ல வேளை பொன்னியின் செல்வனில் இருந்து மங்கையர்க்கரசியின் கதையை மேற்கோள் கொடுக்காமல் விட்டீர்களே என்று மகிழ்ச்சி அடைகிறேன்.//பொன்னியின் செல்வனில் வராது! அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தது அல்லவோ இந்தக் கதை!!!!!!!!!!!!!! சிவகாமியின் சபதத்தில் வரும். கடைசி பாகத்தில் படிக்கலாம்.
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி வழங்கிய “பொன்னியின் செல்வன்”(சுருக்கப்பட்ட பதிப்பு)
கதை சுருக்க உதவி: தேமொழி
சிறுத்தொண்டரும், திருநீலகண்டரும், கண்ணப்ப நாயனாரும் பாடல்கள்இயற்றவில்லை. ஆனாலும் அவர்கள் பற்றிய குறிப்பைப் பிற்காலத்தில்
தோன்றிய அடியார்கள் தருகின்றனர் - மாணிக்க வாசகர் , - திருத்தொண்டத் தொகை, - பட்டினத்தார்
கால இடைவெளியை அளந்து பார்க்க முடியுமா ?அடியார்தம் வரலாறு அகச்சான்றுகளை ஒட்டியே பெரும்பாலும்அமைவன; ஏற்பதோ ஏற்காததோ வேறு விஷயம்.
- சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் ஜென்மப்பகை துவங்கியது ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் காலத்தில்தான்.
தேவ்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
// பதனீர் என்றழைக்கப்படும் பதனீர் சிறுகள் எனவும் புளித்த பதநீர் கள் என்றும் கருதலாம். பின்னதில் போதை கட்டாயம் உண்டு.இரண்டையும் அருந்தியவன் என்ற முறையில் இது எனது சொந்தக் கருத்து என்க//
//ஆய்வுப்படிப்பார்த்தால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு முதலே கற்சிற்பங்கள் வருகின்றன. //
On Monday, 6 July 2015 04:37:49 UTC-7, இரா.பா wrote://ஆய்வுப்படிப்பார்த்தால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு முதலே கற்சிற்பங்கள் வருகின்றன. //ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வுப்படி, பிள்ளையார்பட்டி குடவரைக் கோவில் பொது நூற்றாண்டு இரண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது [பாண்டியர்கள் கட்டியது]. அப்படியென்றால், இரண்டாம் நூற்றாண்டில் ஆனைமுகன் வழிபாடு இருந்தது, அதுவும் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்திலேயே இருந்தது என்றும் சான்று [நீங்கள் கேட்கும் சான்று] கிடைக்கிறது, இரா. பா. அவர்களே!
//விநாயகர் சிலையுடன் கூடிய பிள்ளையார்பட்டி ஆலயம் 2ம் நூற்றாண்டில் கட்டியது என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடும் நூல் விபரமும் பக்கச்சான்றும் கூடுதல் விபரங்களும் இருந்தால் கொடுத்து உதவுங்கள். எனது குறிப்புக்களுக்க் உஅது உதவும்.//
சம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு....பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் வாழ்ந்த காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுபாண்டிய மன்னர் சமணர் என்பதும்,அவரது மனைவியும் அமைச்சருமே அவர் சைவ மதத்திற்கு மாறக் காரணம்,அதற்கு சம்பந்தர் உதவி செய்தார்மன்னர் மதம் மாறிய பிறகு சமணருக்கு செல்வாக்கு குறைந்ததுஎன்பது மட்டுமே மாறமுடியாத வரலாற்றுத் தகவலாக இருக்க வாய்ப்புள்ளது.இக்கதையை பிற்காலத்தில் எழுதிய சேக்கிழாரின் கற்பனைத்திறம் எவ்வளவு இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டாமா?அவர் உரையாடலாகக் கூறியவற்றை எல்லாம் அப்படியே எடுத்துக் கொள்ள முடியுமா?நாளை செல்வன் எழுதிய கதையைப் படித்த ஒருவர் அதை மேற்கோள் கொடுத்தால் நம்பும் நிலையும் வரும் போலிருக்கிறது.ஒரு இலக்கியத்தில் எது வரை வரலாற்றுத் தகவல் பகுதியாக இருக்கக் கூடும், அதில் எதுவரை கற்பனை என்பதை பிரித்தறிய முடியாதவர்களா நாம்?
ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வுப்படி, பிள்ளையார்பட்டி குடவரைக் கோவில் பொது நூற்றாண்டு இரண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது [பாண்டியர்கள் கட்டியது]. அப்படியென்றால், இரண்டாம் நூற்றாண்டில் ஆனைமுகன் வழிபாடு இருந்தது, அதுவும் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்திலேயே இருந்தது என்றும் சான்று [நீங்கள் கேட்கும் சான்று] கிடைக்கிறது, இரா. பா. அவர்களே!
இரா.பா. அவர்களே,உங்கள் இழையின் தலைப்பு: சமய குரவர் அரசு ஆதரவோடு சைவத்தைத் திணித்தனரா ?
- கடைசி சொல் எனக்கு விஷமத்தனமாக எழுதியிருப்பதுபோலவே படுகிறது.
--
இரா.பா. அவர்களே,
உங்கள் இழையின் தலைப்பு: சமய குரவர் அரசு ஆதரவோடு சைவத்தைத் திணித்தனரா ?
சமய குரவரான அப்பர் - சம்பந்தரின் பணி சமணச் செல்வாக்கால்புகழ் மங்கி மறைந்து கிடந்த சிவத்தலங்களை மக்கள் பார்வைக்குவெளிக்கொணர்வதாகவே அமைந்தது.சைவ வளர்ச்சிக்கு அரச குடும்பத்தினர் செல்வாக்கை அவர்கள் பயன்கொண்டனர் என்று முடிவுகட்ட இயலாது. சம்பந்தர் பெருமான் தம்மைவரவேற்று ஆதரவு நல்கிய பாண்டிய நாட்டில் நிலையாகத் தங்கினாரா ?இல்லை. ஆலவாய் தவிர அவர் பாடிய தலங்கள் திருப்பூவணம்,திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர், திருக்கானப்பேர்,திருச்சுழியல், திருக்குற்றாலம், இராமேசுவரம், திருக்குறும்பலா,திருநெல்வேலி .இவை யாவும் ஏற்கெனவே இருந்த சிவத்தலங்களே.தல யாத்திரை முடிந்ததும் மீண்டு சோழநாடுதிரும்புகிறார். சைவத்தைப் பரப்பும் பொருட்டு அரச ஆதரவோடுபாண்டிய நாட்டில் புதிய சிவாலயங்களை அமைத்தாரா என்றால்அதற்கும் விடை இல்லை. குரவர் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவேஇருந்த ஆலயங்கள், அவ்வூரின் சூழல் இவற்றை விவரிப்பதாகவேஅமைகின்றன.பெரும்பான்மைப் பாடல்கள் சோழர் செல்வாக்குஇழந்திருந்த சோழ மண்டலப் பகுதியில் உள்ளவை.பிறர்க்குதவப் பணத்தேவை நேர்ந்த தருணங்களில்சமய குரவர் ஈசனிடம் கோரி அதைப் பெற்றதாகவேஅகச்சான்று சொல்கிறது. அரசர்களிடம் யாசித்ததாகவரலாறு அமையவில்லை. மக்களின் பசிப்பிணி நீக்கசம்பந்தர் பெருமான் இறைவனிடம் செல்வம் வேண்டுவது -வாசி தீரவே, காசு நல்குவீர்மாசின் மிழலையீர், ஏச லில்லையே.இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்கறைகொள் காசினை, முறைமை நல்குமே.’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’என்று சுந்தர மூர்த்தி சுவாமிகளால் போற்றப்பட்டகாழிப்பிள்ளையாரின் காலம் 6ம் நூற்றாண்டு.அப்பரடிகள், சிறுத்தொண்டர், திருநீலகண்ட யாழ்ப்பாணர்,அப்பூதி அடிகளார் போன்றோர் சம்பந்தரின் சமகாலத்தவர்.இக்காலகட்டத்தில் சோழர் செல்வாக்கிழந்திருந்தனர்.சம்பந்தரின் வாழ்வு சோழ நாட்டில் தொடங்கிஅங்கேயே முடிவடைகிறது. அப்பரடிகள்முக்தி பெற்றதும் சோழநாட்டில்தான்.அப்பரடிகள் தாமே உழவாரப்படையுடன் ஆலயந்தோறும்சென்று தம்மை வெளிக்காட்டிக்கொள்ளமல் பணி செய்ததாகவரலாறு.காஞ்சியில் பல்லவர் கற்றளிகளை அமைத்தாலும்தமிழகம் முழுவதும் பரவலாகக் கற்றளிகளைஉருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர்சோழர்களே. பிற்காலச் சோழர் எழுச்சி பெற்றபோதுசமய குரவர் காலம் முடிந்து விட்டிருப்பதையும்நாம் பார்க்கிறோம்.3ம் நூற்றாண்டு முதல் சுமார் ஏழு நூற்றாண்டுகாலம் சோணாடு பிறர் ஆட்சியில் இருந்தது.பிற்காலச் சோழர் எழுச்சி கி பி 9ம் நூற்றாண்டின்பிற்பகுதியில் விஜயாலய சோழரிடமிருந்து தொடங்குகிறது.The 9th century marked a fresh movement in theSouth Indian style, as revealed in several small,simple but very elegant, temples set up duringthe ascendancy of the Chola and other contemporarydynasties. Most important of a large number ofunpretentious but beautiful shrines that dotthe Tamilnadu countryside are the VijayalayaColisvara temple at Narttamalai (mid-9th century)with its circular sanctum, spherical cupola,and massive, plain walls; the twin shrines calledAgastyisvara and Colisvara,at Kilaiyur (late 9th century);and the splendid group of two temples (originally three)known as the Muvarkovil,at Kodumbalur (c. 875).காஞ்சிப் பெரியவர் காவிரியின் பெருமையைக்கூறுமிடத்தில் [தெய்வத்தின் குரல், 7ம் பகுதி] -"அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரர், ஆகிய மூவர் தேவாரம் பாடியக்ஷேத்ரங்களைப் 'பாடல் பெற்ற ஸ்தலங்கள்' என்பார்கள்.அப்படி மொத்தம் 275. அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி,சோழ நாட்டின் காவேரிக்கு வடக்கு - தெற்குக் கரைகளில்இருக்கிறவைதான் !"அப்பர் - சம்பந்தர் காலத்தில் வலிமை பெற்றுக்கோலோச்சியவர் பல்லவரும், பாண்டியரும்.பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்கள்14 மட்டுமே.தொண்டை மண்டலத்தில் சற்று அதிகம்.சோழவள நாட்டில்தான் மிகுதியான பாடல்பெற்றதலங்கள்; ஆனால் அது சோழர் செல்வாக்கிழந்திருந்த காலம்.சைவ சமயம் சார்ந்த வளவர்கோன் பாவை சமணரானபாண்டிய மன்னருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்.சமய குரவர் காலத்துக்குப் பின்னரே பெருவாரியாகக்கற்றளிகளும், பேராலயங்களும் உருப்பெற்றன.சோழநாட் டொருநூற்றுத் தொண்ணூற் றொன்றுலேழிரண்டு மலைநாட்டி லொன்று கொங்கி
- தொல்லிங்கை இரண்டுதமிழ்ப் பாண்டி நாட்டி
ஏழைந்தோ டிருபதாம் தொண்டை நாட்டி
- லேழுநடு நாட்டிலிரு பத்தி ரண்டே
ஏழுபத்தைந் துடனிரண்டு நூறு கொண்ட
- லெணொன்றே துளுவத்தில் வடநாட் டைந்தே
- தீசனுறை தேவாரத் திருத்த லங்கள்.
தேவ்
//அரசர்களிடம் யாசித்ததாகவரலாறு அமையவில்லை. மக்களின் பசிப்பிணி நீக்கசம்பந்தர் பெருமான் இறைவனிடம் செல்வம் வேண்டுவது -வாசி தீரவே, காசு நல்குவீர்மாசின் மிழலையீர், ஏச லில்லையே.இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்கறைகொள் காசினை, முறைமை நல்குமே.//வரலாறு என்பது சம்பந்தர் பாடியதே. இறைவனிடம் கேட்டார்; இறைவன் கொடுத்தார் என்பது சைவவழிபாடுடையோருக்கு ஏற்புடைத்து.வரலாறறறிஞர் ஏற்க முடியாது. சைவத்திருமறைகளோ, வைணவத்திருமறைகளோ - அவைகளிலிருந்து ஓரளவுக்கு சமூக வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளலாமே தவிர, நரியைப் பரியாக்கியதை, குழந்தையை வெட்டிக்கறி சமைத்ததை, , பாடல் பாடியதும் தூக்குக்கயிறு பற்றி எரிந்தது; அரசன் பத்திரிகிரி நடுங்கினான் அவர் காலில் வீழ்ந்து சீடனானான் - பாடல்களில் சொல்லி விட்டார்கள்; இவையே நடந்த வரலாறு என்று வாதிட முடியவே முடியாது. பெரியபுராணம், கந்தபுராணம், என்று எல்லாப் புராணங்களிலும் ஏகப்பட்ட கட்டுக்கதைகள். (கந்தபுராணத்தில் இல்லா புரட்டா ? கேட்டவர் பாரதியார்). கிருத்த்வத்தில் உயிருத்தெழுந்தார். புணர்ச்சியில்லாக் கருத்தரித்தல், ஒன்றை பலவாக்குதல்; முஹமதுவுக்கு மட்டும் கேட்கும்படியாக இறைவன் மறைகளை ஒவ்வொன்றாக அருளினார்அதே சமயம் இப்படிப்பட்ட கற்பனைகள் அவசியாமின்றன மதத்தை பாமர மக்களிடம் கொண்டு போக. அவை வெறும் நம்பிக்கைகள் மட்டுமே. நமபிக்கைகளின் மேல் கட்டப்பட்டவையே எல்லா மதங்களும். Such religion is necessary,இப்படியிருக்க மீண்டும் மீண்டும் அப்பர் சொன்னார், சம்பநதர் சொன்னர், பெரிய புராணம் சொல்லியது - அவையே வரலாற்று உண்மைகளாகும் என்பது இன்றைய நம் கல்விக்கு ஒத்து வாரா. அதே சமயம், நம் கல்வியை கொஞ்ச நேரம் புறந்தள்ளிவிட்டு பக்தி குல்லாவை மாட்டிக்கொண்டால், எதையும் நம்பலாம். I said already: Believing where we cannot prove.திரு தேவராஜர் எழுதுபவை பக்தர்களால் ஏற்கப்படலாம். மற்றபடி, சமபந்தர் இறைவனிடம் யாசிக்க இறைவன் எப்போதெல்லாம் அவருக்கு வேண்டுமோ அப்போதெல்லாம் அள்ளிக்கொடுத்துக்கொண்டேயிருந்தாராம். இதை நம்பவா? அப்படியென்றால், சம்பந்தர் தமிழ்நாட்டில் பசி பஞ்சம் பட்டினியில்லாமல் செய்திருப்பாரே? என்று பகுத்தறிவாளர் கேட்டால், ஙே...! என்றுதான் முகத்தை வைக்கவேண்டும்
--
On Monday, July 6, 2015 at 7:09:16 AM UTC-7, Dev Raj wrote:சிறுத்தொண்டரும், திருநீலகண்டரும், கண்ணப்ப நாயனாரும் பாடல்கள்இயற்றவில்லை. ஆனாலும் அவர்கள் பற்றிய குறிப்பைப் பிற்காலத்தில்தோன்றிய அடியார்கள் தருகின்றனர் - மாணிக்க வாசகர் , - திருத்தொண்டத் தொகை, - பட்டினத்தார்கால இடைவெளியை அளந்து பார்க்க முடியுமா ?அடியார்தம் வரலாறு அகச்சான்றுகளை ஒட்டியே பெரும்பாலும்அமைவன; ஏற்பதோ ஏற்காததோ வேறு விஷயம்.திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமானது திருவிளையாடல்களை பரஞ்சோதி முனிவர் கூறினால் என்ன அல்லது ஏ. பி. நாகராஜன் கூறினால்தான் என்ன?
2015-07-07 3:10 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:இரா.பா. அவர்களே,உங்கள் இழையின் தலைப்பு: சமய குரவர் அரசு ஆதரவோடு சைவத்தைத் திணித்தனரா ?ஸூத்ரதாரி அடியேனே. இரா பா இல்லை.
ஒரு இடத்திலும் நிலைத்துத் தங்காத தேவார முதலிகளுக்கும்,நில உடைமை கைமாறலுக்கும் முடிச்சுப்போட்டு ஒரு கட்டுரை !மேலிடத்துச் செல்வாக்கைக் கொண்டு சமய குரவர் சைவத்தைப் பரப்பினர்எனும் அவதூறு. ஆகவே ஒரு தனித்த இழையின் தேவை.உண்மையில் வழக்கொழிந்து போயிருந்த தமிழிசை மீண்டு, உயிர் பெற்றதுபக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்தில்தான். இக்கருத்தை நண்பர்கள்யாராவது சொல்வார்களா என இதுகாறும் காத்திருந்தேன்.தமிழ் என்பதே இசையோடு சேர்ந்ததுதான். பத்துப்பாட்டு, முல்லைப்பாட்டுகுறிஞ்சிப்பாட்டு எனும் சங்கநூல் தலைப்புகள் காண்க. பாணர், விறலியர் இசையோடுபொருத்தி இன்தமிழ் பாடினர். பின்னர் களப்பிரர் ஆட்சியில் அது மறைந்தது.அகத்துறைக்கும், இசைத்தமிழுக்கும் மீண்டும் வடிவம் கொடுத்ததுபக்தி இலக்கியம். இறையனார் களவியலும் மீட்சிக்குத் துணை செய்தது.......அன்பின் ஐந்திணை எனும் அறுபது சூத்திரம்கடலமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத்தெளிதாக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள்....எனும் கல்லாட வரிகள் சான்றளிக்கின்றன.காழிப்பிள்ளையாருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும்,மதங்க சூளாமணியாரும் இசை மீட்சியில் இணைந்து கொண்டனர்.பெரியபுராண வரிகளை இணைக்க விருப்பம். ஆனால் அது 20ம்நூற்றாண்டு நாவல்களுக்கு இணையாகிவிடும். ஆகவேதவிர்த்து விட்டேன்.தேவ்
மேலே சொன்ன வாக்கியம், உண்மையில் நடந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் உண்டா? இல்லையா?* கல்லைக் கட்டி கடலில் போட்டாலும், அப்பர் இறையருளால் மீண்டு வந்தார்! -இதை தெளிவுப்படுத்திக்கொள்ளாமல், மேலே விவாதித்துக் கொண்டு போவதில் பயனில்லை.
On Tuesday, 7 July 2015 00:45:37 UTC-7, இரா.பா wrote:மேலே சொன்ன வாக்கியம், உண்மையில் நடந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் உண்டா? இல்லையா?* கல்லைக் கட்டி கடலில் போட்டாலும், அப்பர் இறையருளால் மீண்டு வந்தார்! -இதை தெளிவுப்படுத்திக்கொள்ளாமல், மேலே விவாதித்துக் கொண்டு போவதில் பயனில்லை.பாதிக்கப்பட்டவரே பாடியுள்ளார் -
கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே !
"உண்மையும் நம்பிக்கையும்" என்ற இழையைப் படிக்கவும்! ;-)
மேலே சொன்ன வாக்கியம், உண்மையில் நடந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் உண்டா? இல்லையா?உவமைக்காக சொல்லப்படுவதற்கும், உயர்வு நவிர்ச்சியாக சொல்லப்படுவதற்கும், இலக்கியக் கற்பனையாகப் புனைவதற்கும் வித்தியாசம் அறியாமல் இல்லை ஐயா!* கல்லைக் கட்டி கடலில் போட்டாலும், அப்பர் இறையருளால் மீண்டு வந்தார்! -
எல்லாம் வல்ல இறைவனால் இம்மாதிரி அற்புதங்களை நிகழ்த்த முடியாது எனும் தங்கள் நம்பிக்கை தான் எனக்கு வியப்பளிக்கிறது.கடவுளுக்கு அந்த அளவு சக்தி இல்லையா என்ன? :-)
கடவுளே இல்லை. உலகம் படைக்கப்படவே இல்லை.ஆதிபகவன் முதற்றே உலகு. :)
--
செல்வன், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதன்று இங்கு சொல்லவருவது.அன்று ஒர் அற்புத செய்ல நிகழ்ந்திருந்தால், இன்றும் அதுபோல நிகழவேண்டுமே. அதற்குதான் அவ்வாறு செய்துக் காட்ட முடியுமா என்கிறேன்.
--
கடவுளை நம்புபவர்கள் மனப்போக்கில் இறைவன் அற்புதங்கள் நிகழ்த்துவதாகத் தோன்றும் நம்பிக்கைக் காட்சிகள் அவர்களுக்கு ஏற்றதாகத் தெரிகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் இறைவனை அறிந்து கொள்ள அற்புதங்கள் நிகழவேண்டும் என்று மனம் விழைவதும் நிகழ்வுகளை அற்புதங்கள் என்று ஏற்றுக்கொள்வதும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்வது. அவ்வாறு நடப்பதில்லை என்று அவர்களுக்கு ஒருபோதும் ஒரு மனமாற்றத்தை ஒ்ரு நம்பிக்கையின்மையை மற்றவர்களால் ஏற்படுத்தமுடியாது
"உண்மையும் நம்பிக்கையும்" என்ற இழையைப் படிக்கவும்! ;-) மூல நூல் வரிகளைக் கொடுக்கவும்? மூன்றாம் தர சான்றுகள் வேண்டாம்!
ஸூத்ரதாரி அடியேனே. இரா பா இல்லை.நன்றி தேவ் சார்!
(அரிசோனா ஐயாவிற்கு ஏன் என்மேல் கோபம் என்றுத் தெரியவில்லை. :-) எங்காவது இதுபோன்ற சொற்றொடர்களைக் கண்டால் நாந்தான் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறார். :-)))இரா.பா
//பார்ச்வநாதருக்கு முன்பிருந்ததாகச் சொல்லப்படும் தீர்த்தங்கரர்களை
வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனரா ? நேர்மையுடன் விடைகூறுங்கள்.அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நீங்களும்
அவர்களை வழிபடாமல் இருப்பீர்களா ?//
On Tuesday, 7 July 2015 02:41:04 UTC-7, இரா.பா wrote:"உண்மையும் நம்பிக்கையும்" என்ற இழையைப் படிக்கவும்! ;-) மூல நூல் வரிகளைக் கொடுக்கவும்? மூன்றாம் தர சான்றுகள் வேண்டாம்!குந்தகுந்த ஆசார்யர் விண்வழியே பறந்து சென்று விதேஹம் அடைந்ததாகவும்,சமவ சரணத்தில் பங்கு கொண்டதாகவும் சொல்கின்றனர் -Acharya Kundkund was knowing the Avakashgamini vidya (Skill to teleport self through air). He went to videh kshetra where Simandhar swamis samav sharan was going. Height of acharyas there was so huge that Kundkund looked like cardamom size in front of them. Hence those acharyas called him Elacharya (Cardamom sized acharya). Acharya Kundkund gained knowledge directly from Tirthankara Shri Simandhar Swami and created the Samaysaar.
வரலாற்று வல்லுநர்கள் இவரை ஒப்புக்கொள்கின்றனர்; இவர் எழுதிய நூல்களும் உள்ளன.இவர் செய்த ஆகாசகமநம் உண்மையா ? நம்பிக்கையா ? இவரது உயரம் ஏலக்காய் அளவுதெரியுமளவு பிறர் மிக உயரமாக இருந்தனர் என்பதும் உண்மையா ?
மூல நூல் எனத் தாங்கள் குறிப்பது எவற்றை ? திகம்பர நூல்களா ?சுவேதம்பர நூல்களா ?
ஐயா, முன்னமே என் பதிலை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டேன்.தாங்கள் எழுப்பிய கேள்விக்கு வருகிறேன்.குந்தகுந்த ஆச்சாரியார் இதுபோல செய்திருக்க வாய்பில்லை. நடந்திருக்கவும் முடியாது. பின்னாளில் வந்தவர்கள்அவரின் புகழ்ப்பாட இவ்வாறெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். அவர் காலத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை. (சொல்லப்பட்டிருந்தாலும், அதுவாறு நடக்க முடியாது)இதற்குதான் மூல பாடத்தையோ, ஆச்சாரியார்கள் எழுதிய நூல்களையோ சான்றாக காட்டுங்கள் என்று சொன்னேன்!
திகம்பர நூலிலிருந்துச் சான்று காட்டுங்கள் ஐயா! (இதை மறந்து விடாதீர்கள்)
இந்து சமயமும் -- குறிப்பாக சைவமும் தாக்கப்படும் அளவுக்கு இந்த மின்தமிழ் மேடையில் வேறதுவும் தாக்கப்படுவது இல்லை. இதுவே உண்மை. அதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல. அதைத்தான் நிறுத்தச் சொல்கிறேன்.
ஒரு அரிசோனன்
"கடவுள் இல்லை" என்னும் வாதம், "கடவுள் இருக்கிறது!' என்ற நிலைப்பாட்டுக்குப் பின்னர்தான் வர இயலும். எனவே ஆத்திகத்திற்குப் பின்னர்தான் ஆத்திக மறுப்பான நாத்திகம் தோன்ற இயலும். இதற்கு வரலாறு தேவை இல்லை -- தர்க்கவாதம் ஒன்றே போதும்.
ஒரு அரிசோனன்
2015-07-04 10:41 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:
கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே !அப்பரே இப்படி ஓதிச் சென்றிருக்கும்போது, யாரோ ஒருவர் எழுதிய கட்டுரையை இரா.பா. அவர்கள் வைத்திருப்பது -- கட்டுரையில் இருப்பவர், தனக்குப் பட்டதை எழுதியிருப்பது -- கட்டுரை எழுதியவர், திருமுறைகளைச் சரிவரக் கற்காமல் கருத்துச் சொல்வது -- தவறான கருத்தைப் பரப்புவதாகவே இருக்கிறது.ஒரு அரிசோனன்