இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 1 ‘குயுக்தி’ காமுப்பாட்டி

77 views
Skip to first unread message

Innamburan Innamburan

unread,
Jul 24, 2012, 2:10:47 AM7/24/12
to mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan

இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 1

‘குயுக்தி’ காமுப்பாட்டி


ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்தி வேளையில் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்கும் போது, பிரசன்னமானாள்,ஊரையே கலங்கடிக்கும் மாதுஶ்ரீ. காமாக்ஷி குப்புசாமி ஐயர் அலையஸ் ‘குயுக்தி’ காமுப்பாட்டி. 


நான்: வாங்கோ, மாமி. 

(மனம் ‘போங்கோ’ என்கிறது. பாட்டி ஒரு பெண்பால் நாரதர் cum ராவணன். பாட்டி என்று கூப்பிட்டால், பல்லை உடைத்து, கையில் கொடுக்காமல், கடாசி விடுவாள்.)

கு.பா: என்ன பண்ணிண்டு இருக்கே, ராஜு?

நான்: (என்ன சொன்னாலும் ஆபத்து!) (பணிவாக) சந்தியாவந்தனம் பண்ணிண்டிருக்கேன், மாமி. 

கு.பா: (எரிச்சலுடன்) மண்டூகம்!  எனக்கு கண்ணு அவிஞ்சா போயிடுத்து? நீயும், உன் சந்தியாவந்தனமும்? காயத்ரி சொல்லத்தெரியாது. சந்தியாவந்தனம் பண்றானாம். ருக்கு பிள்ளைன்னா இப்படித்தான். ஒண்ணு கேட்டா, ஒண்ணு சொல்றது. நான் அந்த பாழாப்போன பாகீரதியை பற்றி கேட்டேன். பெரிய பீ.எல். படிச்சு கிழிச்சுட்டான். வக்கீல் சன்னது வேறே, இந்த அழகிலே. உன்னெல்லாம்....!

(நாக்கைத் துருத்தறா. முட்டாக்கு நழுவறது. தாடகை மாதிரி இரட்டை நாடியா? பாத்தாலே, பயமாயிருக்கு.)

நான் அழுச்சாட்டியமா ‘காயத்ரி ஜபம்’ பண்றேன். காமுப்பாட்டி தொடருகிறாள். 


(முன்கதைச்சுருக்கம்: ஏழு வயதிலே அவளுக்குக் கல்யாணமாம். சாங்கோபாங்கமாக, அஞ்சு நாள் கல்யாணம். அப்பா, கணபதி அக்ரஹாரம் என்ற ஊர்லே பெரிய பண்ணை. மாப்பிள்ளை குப்புசாமி, எஸ்.எஸ்.எல்.சியில் முதல் தடவை கோட்டு என்ற வாகை சூடிய தருணம். கட்டுக்குடுமி. சண்டியர் காலர், டப்பா மடிப்பு, மைனர் சங்கிலி. அப்பா, ஊர்லெ சின்ன பண்ணை. அவருடைய கண்டிப்பு தாங்காமெ, அண்ணா சுப்பராமன், கிருத்துவ ‘அக்ரஹாரம்’ செபாஸ்டியன் பொண்ணு ஜூலியோட ஓடிப்போயிட்டானா, இவனுக்கு எக்கச்சக்க அம்மா செல்லம். அவ கொடுக்கிற காசை வச்சுண்டு கும்பகோணம் டவர் டாக்கீஸ்லெ கச்சதேவயானி சினிமா பார்க்கப்போயிடுவான், குடியானத்தெருவிலேயிருந்து, ஜமா சேத்துண்டு. அப்பா தான் சாமியாடுவார், அவன் இல்லாத சமயம் பார்த்து, ‘மூதேவி! உங்கப்பன் மாதிரி, உனக்கு பிள்ளை வாய்ச்சிருக்கான். மளிகை மாணிக்கம் சொன்னாண்டி. தேரடித்தெருவிலே, ஒரு கூறு கெட்டவளோட சுத்தரானாம். ஆத்துக்கு வரட்டும். நரசிம்மம் மாதிரி குடலை உருவிட்றேன்.‘ ஆனா, அவன் வரச்சே,லேசா நழுவி, சீட்டு விளையாட போயிடுவார், டொச்சு மாமாவாத்துக்கு. பொறுக்கமுடியாமா, ஒருநாள் மாமி எதிர்த்துக் கேட்டுவிட்டாள், ‘எங்கப்பா பேரை இழுத்தா, நாக்கு அழுகிப்போயிடும். அவர் சத்யசந்தன். உங்கப்பா மாதிரி பொம்மனாட்டி பித்து இல்லை. சுப்பு அவரை உரிச்சு வச்சு இருக்கானா. அதான்...‘. மொத்திப்பிட்டார், மொத்தி. அந்தக்காலத்திலெல்லாம், ஆணாதிக்கம் கிடையாது. ஆண்  பைசாசம் மட்டும் தான். அம்மாக்காரி, அழுகையோடு அழுகையா, ‘குப்புவுக்கு மங்களத்தைக் கேட்கச்சொல்லி’, ஆணையிட்டாள். அவரும், தரகர் ராமசாமி சாஸ்திரிகள் கூட, பெரிய பண்ணையிடம் போய், அவர் லாகிரி மயக்கத்தில் இருந்த போது, செட்டில் பண்ணி விட்டார் என்று, தன் மாமனாரை நிந்திப்பாள், காமாக்ஷி. கல்யாணம் ஆகி அஞ்சு வருடத்திலெ வீணாப்போயி, பொறந்த வீட்டுக்கு வந்து விட்டாளா, இவள். அப்பாவும் நொடிச்சுப்போய்ட்டார். கூடப்பிறந்த இரண்டு அண்ணாவும் சரி, மதனிகளும் சரி, இவ மேலெ கரிச்சுக்கொட்டினா. இவளும் தற்காப்புக்காக, காலாவட்டத்தில், ‘குயுக்தி’ குப்புப்பாட்டியாக மறுபிறவி எடுத்தாள். அவள் ஊரை ஆட்டிவைக்கும் முன், அண்ணா/மன்னிகளை ஜன்மவைரிகளாகப் பிரித்து விட்டாள்.  

( ‘குயுக்தி’ காமுப்பாட்டி ஒரு தொடர்கதை)

இன்னம்பூரான்

23 07 2012

*

சந்தியாவந்தனம் ~ காலை, மாலை பிராமண நித்ய பூஜை மாதிரி;

மண்டூகம் ~ தவளை;

‘காயத்ரி ஜபம்’~ ஒரு விதமான தேவி உபாசனை;

கோட்டு ~ ஃபெயில்;

ஜமா: ~ சேக்காளி;

டொச்சு ~ ‘துரைசாமி’ யின் திரிபு.

Geetha Sambasivam

unread,
Jul 24, 2012, 11:03:40 AM7/24/12
to tamizhs...@googlegroups.com, mintamil, thamizhvaasal, Innamburan Innamburan
என்னனு சொல்றது? காமுப் பாட்டி மாதிரியும் பார்த்திருக்கேன்.  அதுக்கு நேர் எதிரிடையா நமக்கு வாய்ச்சது இவ்வளவு தான்;  அதுக்குப் பிறத்தியாரை ஏன் நொந்துக்கணும்னு எல்லார்ட்டயும் பாசமா இருந்த பாட்டிமார்களையும் பார்த்திருக்கேன். இந்தக் காமுப் பாட்டி மேலே பரிதாபம் தான் வருது.  அந்த வயசிலே எப்படி இருந்திருப்பேனோ தெரியலை; இப்போப் பாவம் பாட்டி!

2012/7/24 Innamburan Innamburan <innam...@gmail.com>

இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 1

‘குயுக்தி’ காமுப்பாட்டி



Innamburan Innamburan

unread,
Jul 30, 2012, 7:12:46 PM7/30/12
to mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan

இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 2

‘குயுக்தி’ காமுப்பாட்டி


‘...அவள் ஊரை ஆட்டிவைக்கும் முன், அண்ணா/மன்னிகளை ஜன்மவைரிகளாகப் பிரித்து விட்டாள்...’. எப்படின்னா கேட்கிறாய்?

( ‘குயுக்தி’ காமுப்பாட்டி ஒரு தொடர்கதை) 

இன்னம்பூரான்

23 07 2012

*

சுருங்கச்சொல்லின்: மூத்தவர் கிருஷ்ணசாமி அய்யர் நல்லவர், ஆனால் முன்கோபி. பார்யாள் பார்வதி மதனி தெய்வம் மாதிரி; நின்று கொல்லுவாள். சின்ன அண்ணா ராமுடு முசுடு. பார்யாள் சுப்புலக்ஷ்மி படவாகினி. இவாளுக்கு நடுவிலே குப்பைக் கொட்டுவது கடினம் என்பதை பிறந்த வீடு வந்தவுடனே கிருஹிச்சிண்ட காமு, ஒரு காரியம் செய்தாள். 


பார்வதியிடம் சொன்னாள், ‘மதனி! அண்ணாவை அந்த படவாகினியோட அளவா பழக சொல்லுங்கோ. சொல்றதைச் சொல்லிப்பிட்டேன்.’ ஒரு சொட்டு கண்ணீர்.


கிருஷ்ணசாமி அய்யரிடம், ‘அண்ணா! ஊருக்கெல்லாம் முசுடு, உங்க ப்ராதா. மதனிக்கிட்ட மட்டும் வழியறான். சொல்றதைச் சொல்லிப்பிட்டேன்.’ மூக்கைச் சிந்தினாள்.


சுப்புலக்ஷ்மியிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. கண்ஜாடையுடன் சரி, பார்வதியோட அலமாரியை நோக்கி. அன்னிக்கி ராத்திரியே அவள் குடைஞ்சு எடுத்துப்பிட்டா அந்த அலமாரியை. சத்தம் கேட்டு, அலக்க மலக்க எழுந்து வந்த பார்வதி போட்ட கூச்சல், வசவு...!


குறட்டை விட்டுக்கொண்டிருந்த ராமுடுவை எழுப்பி, ‘ பாரு அண்ணா! மதனி அடிக்கிற கூத்தை’ என்றாள்.


அன்றிலிருந்து அண்ணன் தம்பிக்கு, அவா சம்சாரங்களுக்கு முகாலோபனம் கிடையாது. ஸ்நானப்ராப்தி இல்லை. சொத்துப்பிரிச்சாச்சு. அதான் சாக்குன்னு, ‘அம்மாவோட மஞ்சக்காணியை எனக்கு கொடுப்பேளோன்னு‘ என்று உருக்கமான விண்ணப்பம் போட்டாள்.


( ‘குயுக்தி’ காமுப்பாட்டி ஒரு தொடர்கதை)

இன்னம்பூரான்

30 07 2012 


பார்யாள்- மனைவி;

முசுடு - எளிதில் ஒத்துப்போகாதவன்;

படவாகினி - ரொம்ப பொல்லாதவள்;

ப்ராதா- ப்ரதர்;

முகாலோபனம் - முகம் கொடுத்துப் பேசமாட்டார்கள்;

ஸ்நானப்ராப்தி - செத்தால், குளிக்கக்கூட மாட்டார்களாம்;

மஞ்சக்காணியை- அம்மா வழி சொத்துப் பெண்ணுக்கு.

**********

முன் கதை:

***

Geetha Sambasivam

unread,
Jul 31, 2012, 5:02:22 AM7/31/12
to mint...@googlegroups.com, thamizhvaasal, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan
உண்மை, இப்படியும் இருந்திருக்காங்க தான். :(((( ஆனால் கொஞ்சமானும் பணம், காசு இல்லைன்னா, காமுப்பாட்டிக்குப் பிழைப்புக்கு என்ன வழி? 

2012/7/31 Innamburan Innamburan <innam...@gmail.com>

இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 2

‘குயுக்தி’ காமுப்பாட்டி


‘...அவள் ஊரை ஆட்டிவைக்கும் முன், அண்ணா/மன்னிகளை ஜன்மவைரிகளாகப் பிரித்து விட்டாள்...’. எப்படின்னா கேட்கிறாய்?

( ‘குயுக்தி’ காமுப்பாட்டி ஒரு தொடர்கதை) 

இன்னம்பூரான்

23 07 2012

*

சுருங்கச்சொல்லின்: மூத்தவர் கிருஷ்ணசாமி அய்யர் நல்லவர், ஆனால் முன்கோபி. பார்யாள் பார்வதி மதனி தெய்வம் மாதிரி; நின்று கொல்லுவாள். சின்ன அண்ணா ராமுடு முசுடு. பார்யாள் சுப்புலக்ஷ்மி படவாகினி. இவாளுக்கு நடுவிலே குப்பைக் கொட்டுவது கடினம் என்பதை பிறந்த வீடு வந்தவுடனே கிருஹிச்சிண்ட காமு, ஒரு காரியம் செய்தாள். 


பார்வதியிடம் சொன்னாள், ‘மதனி! அண்ணாவை அந்த படவாகினியோட அளவா பழக சொல்லுங்கோ. சொல்றதைச் சொல்லிப்பிட்டேன்.’ ஒரு சொட்டு கண்ணீர்.


கிருஷ்ணசாமி அய்யரிடம், ‘அண்ணா! ஊருக்கெல்லாம் முசுடு, உங்க ப்ராதா. மதனிக்கிட்ட மட்டும் வழியறான். சொல்றதைச் சொல்லிப்பிட்டேன்.’ மூக்கைச் சிந்தினாள்.


சுப்புலக்ஷ்மியிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. கண்ஜாடையுடன் சரி, பார்வதியோட அலமாரியை நோக்கி. அன்னிக்கி ராத்திரியே அவள் குடைஞ்சு எடுத்துப்பிட்டா அந்த அலமாரியை. சத்தம் கேட்டு, அலக்க மலக்க எழுந்து வந்த பார்வதி போட்ட கூச்சல், வசவு...!


குறட்டை விட்டுக்கொண்டிருந்த ராமுடுவை எழுப்பி, ‘ பாரு அண்ணா! மதனி அடிக்கிற கூத்தை’ என்றாள்.


அன்றிலிருந்து அண்ணன் தம்பிக்கு, அவா சம்சாரங்களுக்கு முகாலோபனம் கிடையாது. ஸ்நானப்ராப்தி இல்லை. சொத்துப்பிரிச்சாச்சு. அதான் சாக்குன்னு, ‘அம்மாவோட மஞ்சக்காணியை எனக்கு கொடுப்பேளோன்னு‘ என்று உருக்கமான விண்ணப்பம் போட்டாள்.


( ‘குயுக்தி’ காமுப்பாட்டி ஒரு தொடர்கதை)

இன்னம்பூரான்

30 07 2012 



"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
Jul 31, 2012, 5:09:22 AM7/31/12
to mint...@googlegroups.com, thamizhvaasal, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan
படவா - படவாகினி, அட நன்றாகவே ஒத்துப் போகிறதே

ப்ராதா - பிரதர் - வடமொழி கொடுத்த கொடையாக்கும்.

இப்படி ஒத்துமையைக் கெடுப்பதற்கே யாராவது ஒருவர் பிறப்பாராக்கும்..
குயுக்தி எப்போதுமே யுக்தியை  விட வலிமையானதுதான். நான் ரசித்துப் படித்தேன்.. 

அன்புடன்
திவாகர்

2012/7/31 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2012, 5:15:06 AM7/31/12
to thamiz...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan
ஒற்றுமைப் படுத்த எந்த குயுக்தியும்  யுக்தியும்  உதவுவதே இல்லை

 

அந்த விஷயத்தில் குயுக்தி ,யுக்தி இரண்டும் தோற்றுப் போகிறதே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/7/31 Dhivakar <venkdh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

330.gif

Dhivakar

unread,
Jul 31, 2012, 5:24:54 AM7/31/12
to mint...@googlegroups.com
தேனியாரே!

கண்ணனின் ‘யுக்தி’ யான பாஞ்சாலி திருமணமே ஐவரின் ஒற்றுமைக்காக என்பார் கே.எம். முன்ஷி, தன் கிருஷ்ணா 3 ஆம்பாகத்தில் ‘தி ஃபைவ் பிரதர்ஸ்’ புத்தகம் முழுதும் இந்த யுக்தியைப் பின்புலமாக வைத்தே எழுதியிருப்பார். அருமையான புத்தகம். கீதாம்மா தமிழாக்கம் செய்து வருகிறார்கள். 

2012/7/31 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
330.gif

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2012, 5:33:07 AM7/31/12
to mint...@googlegroups.com
நிச்சயம் படிக்கிறேன் திரு இன்னம்பூராரே

 

 
 
அந்தக் கண்ணனின் யுக்திதானே   முதல்வன் கர்ணனை பிரித்தது
ஐவரிடமிருந்து
 
 
அந்த ஐவரின் ஒற்றுமைதானே நூற்றுவரின் வேற்றுமைககும் அடிப்படையாக அமைந்தது

 

அந்தக் கண்ணனின் யுக்திதானே  விதுரனின் வில்லை அவரிடமிருந்து பிரித்தது

 

எல்லாமே அந்தக் கண்ணனின் யுக்திதான்

 

(காரணம் தர்மயுத்தம் நடக்க வேண்டும் என்பதாக இருந்தாலும் ) 

 

 நூற்றுவரையும் பஞ்சபாண்டவர்களையும் ஒற்றுமைப்படுத்த உபயோகமாகவில்லையே   அந்தக் கண்ணனின் யுக்தி    

 

அன்புடன்

தமிழ்த்தேனீ



2012/7/31 Dhivakar <venkdh...@gmail.com>
ஐவரின் ஒற்றுமைக்காக

Karuannam Annam

unread,
Jul 31, 2012, 5:51:22 AM7/31/12
to mint...@googlegroups.com


2012/7/31 Dhivakar <venkdh...@gmail.com>

தேனியாரே!

கண்ணனின் ‘யுக்தி’ யான பாஞ்சாலி திருமணமே ஐவரின் ஒற்றுமைக்காக என்பார் கே.எம். முன்ஷி,
பாஞ்சாலி திருமணமும் அறுவரின் வாழ்க்கையும் காலங்காலமாக மிகப் பலரின் கருத்துக்கும் கற்பனைக்கும் இடமளித்துள்ளன. எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இரண்டாம் இடமும் அருணனின் பூரு வம்சமும் ஐவரின் ஒற்றுமைக்காகக் குந்தியின் யுக்தி என்று கட்டுரைக்கிறார்கள். யுக்தி நன்மையையும் விளைக்கலாம். தீமையிலும் முடியலாம்.    
ஆனால் குயுக்தி யாருக்காவது மன உளைச்சலில் தான் முடியும்.

திரு இனம்பூராரின் பதிவு தொடர்ந்து படிக்க ஆவல்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

shylaja

unread,
Jul 31, 2012, 6:28:23 AM7/31/12
to thamiz...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan
குயுக்தி காமுப்பாட்டி பாவம்தான் , நிறைய பேர் அந்த நாளில் இப்படி இருந்திருக்கக்கூடும்... படவாகினி யெல்லாம் கேள்விப்பட்டதே இல்லையே எங்க இ சார் இதல்லாம் பிடிக்கறீங்க?!

2012/7/31 Innamburan Innamburan <innam...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2012, 6:33:52 AM7/31/12
to thamiz...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan
படவா   ஆண்பால்
 
படவாஹினி    பெண்பால்

 

அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/7/31 shylaja <shyl...@gmail.com>
330.gif

shylaja

unread,
Jul 31, 2012, 6:36:56 AM7/31/12
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, mintamil, Innamburan Innamburan
ஆனால்தேனிசார் படவாஹினி  நான் கேள்விப்பட்டதே இல்ல..ஒருவேளை  நான் மிக சமத்தாக இருந்ததால்(இருப்பதால்) என்னை நோக்கி யாரும் இதை சொல்லவில்லையோ?:):)

2012/7/31 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
330.gif
Reply all
Reply to author
Forward
0 new messages