Re: மதுரைக்கு வந்த சுனாமி

278 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 28, 2014, 6:41:19 PM2/28/14
to mintamil, thiruppuvanam, bala subramani, Palanichamy Shanmugam, naga rethinam, drn...@yahoo.com




மதுரைக்கு வந்த சுனாமி

Inline image 1

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுமத்ரா தீவுகளில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தாய்லாந்து, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சுனாமி ஏற்பட்டது.  இதனால் மிகப்பெரும் அலைகள் தோன்றித் தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இருந்த மீனவ கிராமங்களை அழிந்தன.  கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள்  உயிரிழந்தனர்.  பல ஆயிரம் பேர் வீடு, உடமைகளை இழந்தனர்.  கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி வந்த 500 பேரைக் காணவில்லை.  வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து சுமார் 100-200 மீட்டரிலேயே கடல் இருப்பதால், அலையின் உக்கிரத்தில் அங்கு உயிர் இழப்பு அதிகம்.  தமிழகத்தில் மட்டுமல்லாது அந்தமான் மற்றும் ஆந்திராவிலும் மற்றும் கடலோர மாநிலங்களிலும் இதேபோன்று பெரும் உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளன.  2004 ஆண்டு சுனாமியினால் 2 இலட்சத்து 28ஆயிரம்பேர் (227,898) இறந்துள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.  சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடு ஜப்பான் ஆகும்.

சுனாமியினால் உண்டான சோகமான நிகழ்வுகள் மக்கள் நினைவுகளிலிருந்து இன்னும் நீங்கவில்லை.   ஒவ்வொரு ஆண்டும், சுனாமி தாக்கிய நாளில் கடற்கரை பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் குடம் குடமாக பால் கொட்டியும், பூக்களைத் தூவியும், இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களுக்கு விருப்பமான உணவுப் பண்டங்களைப் படைத்துக் கண்ணீர்விட்டுக் கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  26.12.2013 
Inline image 3

இன்றுடன் சுனாமி தாக்கி 9-ம் ஆண்டுகள் ஆகிவிட்டன.  இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் உற்றாருக்கும் சுற்றாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை திஹிந்து நாளிதழ் தெரிவித்துக் கொள்கிறது.  

இப்படி ஒரு பிரளயம் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் அழிந்து விடுவார்கள் என எந்த ஒரு விஞ்ஞானியோ, ஆராய்ச்சியாளரோ முன்கூட்டியே கணித்துக் கூறவில்லை.  தேர்தல் முடிவுகளையும்,  கிரிக்கெட்போட்டி முடிவுகளையும் முன்பே கணித்துக் கூறும் சோதிடர்கள் கூட இந்தச் சுனாமி பற்றிக் கணித்துக் கூறவில்லை.  

முதலில் நிலநடுக்கம்.  அதைத் தொடர்ந்து கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்று தொடர்ச்சியாக நடைபெற்று சுனாமி உருவாகிறது.  பூமியின் மேற்பரப்பில் இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகி உள்ளன. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் நாடுகளும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் மோதிக் கொண்டன.  இதனால் மிகப் பெரிய பூகம்பம் உண்டானது.  மிகப் பெரிய கட்டிடங்கள் எல்லாம் ஆட்டம் கண்டன.  

அப்போது தோன்றிய கடலலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தின.   26 டிசம்பர் 2004 சுனாமி, இந்தோனேஷியாவிலுள்ள Phuket-ஐ epicentre-ஆகக் கொண்டு  தோன்றியது. இந்த இடம் பாண்டிய நாட்டிற்கும் இலங்கைக்கும் நேர் கிழக்கில் (across the Bay of Bengal) அமைந்துள்ளது. இதனால் இந்தச் சுனாமியினால் இலங்கையும் தமிழகமும் அதிகமாகப் பாதிக்கப்பட்டன.

Inline image 2

சுனாமி என்றால் என்னவென்று அறிந்திராத தமிழக மக்களுக்குச் இந்தச் சுனாமி மிகப் பெரிய கொடூரத்தை ஏற்படுத்தியது.  

ஆனால் இப்போதுதான் முதன்முறையாகத்  தமிழகத்தைச் சுனாமி தாக்கியுள்ளது என்று கூறுவதற்கில்லை.  2004 ஆண்டு சுனாமியைவிட மிகப் பெரிய சுனாமிகள்  தோன்றி இலங்கையையும் தமிழகத்தையும் இதற்கு முன்பு பலமுறை அழித்துள்ளன.  
தமிழகத்தைத் தாக்கிய சுனாமிகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன.  

“மலிதிரை ஊர்ந்து தன் மண்  கடல் வவ்வலின்
மெலிவு இன்றி மேல் சென்று  மேவார் நாடு இடம்பட
புலியோடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர் தென்னவன்“
- கடல்அலைகள் மலிந்து தோன்றி, ஊர்ந்துவந்து பாண்டியநாட்டையே மூழ்கடித்தபோதிலும், மனம் தளராமல் பாண்டிய மன்னன் வடநாடுகளை எல்லாம் வென்று தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்துள்ளான் என்று இக் கலித்தொகை பாடல் குறிப்பிடுகிறது.

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை சுனாமி தோன்றி மதுரையைத் தாக்கியதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

பிரளய காலத்தில் கடல்அலைகள் பொங்கி வந்து தமிழகத்தைக் கடந்து மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டிச் சென்றுள்ளது.  
பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது.  
இதனால் அடுத்தடுத்து எழுகடல்களிலும் சுனாமிகள் தோன்றியுள்ளன.

பிரளயம் ஏற்பட்டபோது உண்டான நிலநடுக்கத்தால், மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்றமலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையும் திருப்பரங்குன்ற மலையும் மூழ்கடித்துள்ளன என்கிறது திருவிளையாடற்புராணம்.  

இவ்வாறு உண்டான சுனாமி அலைகள் சேறும்சகதியுமாக இருந்துள்ளன.  இந்த அலைகளினால் பூமியின் மேற்பரப்பில் இருந்த அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.  ஆனால், ஒரேயொரு விருட்சம் (மரம்) மட்டும் இவ்வளவு பெரிய  பிரளயத்திலும் ஆடாமல் அசையாமல் பூமியின் மேல் ஒரு ஆணியை அடித்து வைத்தது போல், அப்படியே நிலையாக ஆழிப்பேரலையை (சுனாமியை) எதிர்த்து நின்றுள்ளது.

தண்ணீர் பாய்ந்து ஓடும் ஒரு மணற்பரப்பின் நடுவில் ஒரு குச்சியை நிலையாக நிறுத்தி வைத்தால், நீரோட்டத்தினால் அடித்துவரப்படும் மணல்கள் அந்தக் குச்சிக்குப் பின்புறம் சென்று நீண்டதொரு மேட்டினை உருவாக்கும்.  அலைகள் மிகுந்த கடற்கரையில் நாம் நின்றால், அலையானது நமது கால்களைத் தாண்டிச் செல்லும் போது, நமது கால்களுக்குப் பின்புறமாக ஒரு நீண்ட மணல்மேட்டினை உருவாக்குவதைக் காணலாம்.  இதனைச் செயற்கையாகவும் நாம் சோதனை செய்தும் பார்க்கலாம்.

இதுபோன்றே, சுனாமி அலையால் அரிந்து வரப்பட்ட  பொருட்கள் இந்த விருட்சத்தில் மேல் மோதி நிலைகொண்டு விருட்சத்திற்குப் பின்புறமாகச் சென்று,   மணலும் சேறும் சகதியும் நிறைந்த ஒரு நீண்ட நெடிய மேட்டினை உருவாக்கிவிட்டது.   இந்த மேட்டில் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட கடல்நீர், மணல், சகதி மற்றும் வரும் வழியில் இருந்த அனைத்து வகையான மரம் செடிகொடுகளும், மற்றும் உயிரினங்களும் படிந்து விட்டன.
Inline image 13
இவ்வாறு உண்டான களிமண்மேடு படிமமாக 24கி.மீ. தூரத்திற்கு நீண்டு சென்றுள்ளது.   இப்போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கழிந்து விட்டன.  இத்தனை ஆண்டுகளில், பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட அழுத்தத்தினாலும் மற்றும்பல இயற்கைக் காரணங்களாலும் களிமண் அப்படியே பாறைபோல் மாறிவிட்டது.  இப்போது இந்தக் களிமண் மேடானது, “நாகமலை“ என்று அழைக்கப்படுகிறது.  யானைமலையும் திருப்பரங்குன்றமலையும் கடும்பாறைகளாக இருக்க, நாகமலை மட்டும் கடும் பாறையாக இல்லாமல், மணற்குன்றாக இருப்பதை இன்றும் காணலாம்.   இதே போன்று பழமுதிர்சோலைமலையையும் (அழகர்கோயில்மலை) ஆழிப்பேரலையானது தாங்கியுள்ளதால் அங்கேயும் இதுபோன்ற படிமங்களைக் காணலாம்.  

ஆழிப்பேரலையாலும் அசைக்க முடியாமல் பூமியின் மேல் ஆப்புப் (ஆணி அடித்தது) போன்று அசையாமல் நின்ற அந்த விருட்சமானது, காலப்போக்கில் படிமம் ஆகியுள்ளது.  இப்போது “ஆப்புடையார்“ என்று அழைக்கப்படுகிறது.  மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ளது பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று.

திருஆப்புடையார் போன்று, திருப்பரங்குன்றமலையும் ஆழிப்பேரலையை எதிர்த்து நின்றதால், திருப்பரங்குன்றமலைக்கு மேற்குப் பகுதியிலும் நாகமலைக்கு இணையாக ஒரு சிறிய படிம மலைத் தொடர் இருப்பதைக் காணலாம்.

Inline image 5
தொன்மையான தமிழர்களும் அவர்களது உடமைகளும் இந்த  நாகமலையில் புதையுண்டு கிடக்கின்றன.  நாகமலையை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால்,  தமிழரின் தொன்மையான வரலாறு அறிவியல் அடிப்படையில் நிறுவிடலாம்.

பிரளயம் வற்றிய போது தேங்கியிருந்த கடல்நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேடாக உள்ளது.  இதனால் இந்த இடம் “முகவை“ என்றும் சேதுக்கரை என்றும் பெயர் பெறலானது.  இந்த இடங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழரின் தொன்மைச் சான்றாதாரங்கள் எளிதில் கிடைக்கும்.

திருவிளையாடற் புராணத்தின் நான்காவது படலத்தில் மதுரையை ஆண்ட மலையத்துவசனின் மனைவியான காஞ்சனமாலை என்பவள் கடலில் நீராட விரும்பம் கொண்டாள் என்றும்,  இவளது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிச் சிவபெருமான் அழைத்ததனால் ஏழு கடல்களும் மதுரைக்கு வந்தன என்ற குறிப்பு உள்ளது.

திருவிளையாடற் புராணத்தின் பதினொன்றாவது படலத்தில் சுந்தரபாண்டியனின் மகனான உக்கிர குமாரன் என்ற மன்னனது ஆட்சிக் காலத்தில் ஆழிப்பேரலை(“சுனாமி”) தோன்றி மதுரைவரை வந்ததாகவும், உக்கிரபாண்டியன் வேல் எறிந்து அந்தச் சுனாமி அலைகளைத் தடுத்து நிறுத்தியதாகவும் ஒரு குறிப்பு உள்ளது.

திருவிளையாடற்புராணத்தின் 17ஆவது படலத்தில்  உக்கிர பாண்டியனின் மகன் அபிடேக பாண்டியன் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி (“சுனாமி”) மதுரையை அழிக்க, அதனை அந்த மன்னன் வற்றச் செய்தான் என்ற குறிப்பும் உள்ளது.

திருவிளையாடற்புராணத்தின் 44ஆவது படலத்தில் வரகுணபாண்டியனின் மகனான இராசராச பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் மதுரை யானைமலைக்கு அருகே உள்ள பன்றிமலை தோன்றியது என்ற குறிப்பும் உள்ளது.  பன்றிமலையைப் பெருமாள்மலை என்றும் அரிட்டாபட்டிமலை என்றும் இப்போது அழைக்கின்றனர்.

Inline image 9
Inline image 8


Inline image 7
திருவிளையாடற்புராணத்தின் 49ஆவது படலத்தில் அதுல கீர்த்தியின் மகன் கீர்த்திவீடணனின் ஆட்சிக் காலத்தில் பிரளயம்  ஏற்பட்டு ஏழுகடல்களும் பொங்கி எழுந்து (ஆழிப்பேரலை, “சுனாமி”) உலகையே அழித்தன என்ற குறிப்பு உள்ளது.   

தமிழகத்தைச் சுனாமி தாக்கியதற்கு மேலும் ஒரு ஆதாரமாக,  குமரிக்(லெமூரியாக்) கண்டத்தையே கடல் அழித்துவிட்டதாகச் சிலப்பதிகாரத்தில் ஒரு குறிப்பு உள்ளது.

“வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி!“
- என்கிறது சிலப்பதிகாரம் காடுகாண்காதை 17 -22

குமரிக்கண்டம் அழியக் காரணமான பிரளயகாலத்தில் உண்டான காலத்தில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அப்போது தோன்றிய ஆழிப்பேரலைகள் ( சுனாமி அலைகள் ) இலங்கையையும் தாண்டிவந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலையையும், யானைமலையையும், 
Inline image 10

Inline image 11
பிரான்மலையையும் மூழ்கடித்துச் சென்றுள்ளன. இவ்வாறு அடித்துச சென்றன எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்த பள்ளத்தாக்குகளில் தங்கிட கடல்அலைகள் அதையும் தாண்டிச் சென்று மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளன.  

இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருந்த பள்ளத்தாக்குகள் நிறைந்து சற்று சிறிய சமவெளிகளாக மாறியுள்ளன.  இவ்வாறு பண்டைய தமிழர் புதையுண்ட இடமே ‘பொதிகை‘ என்று அழைக்கப்படுகின்ற இடமாகும்.  களிமண் கல்லாக மாறிடச் சுமார் 10-17 இலட்சம் ஆண்டுகள் ஆகும்.  எனவே பொதிகையில் பொதிந்துள்ளனவற்றைப் புதைபொருள் ஆராய்ச்சி செய்தால், சுமார்  10-17 இலட்சம் வருடங்களுக்கு முந்திய நமது பண்டைத் தமிழரின் படிமங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்திற்குப் பலமுறை சுனாமி வந்துள்ளது.  இவ்வாறு சுனாமி அலைகளால் அடித்துவரப்பெற்ற மண்மேடுகளால் மதுரையில் நாகமலை, பன்றிமலை, பசுமலை என்ற மண்மலைகள் எல்லாம் உருவாகியுள்ளன.  நாகமலையில் உள்ள மண்ணில் அதிகமான அளவில் துத்தநாகம் உள்ளது.  இதனால் இந்த மலைக்கு நாகமலை என்று பெயர் உண்டாகியுள்ளது.

மண் எவ்வாறு தோன்றியது? என்று ஆராய்ந்த அறிஞர்கள் கற்கள் தேய்ந்து மண் உருவாகியுள்ளது என்கின்றனர்.  
ஆனால் தமிழகத்தில் உள்ள பாறைகளையும், குன்றுகளையும், அவற்றின் அருகே உள்ள மண்மேடுகளையும் வேதியல் முறையில் ஆராய்ந்து பார்த்தால், கற்பாறைகளில் உள்ள தனிமங்களின் வேதியல் பண்பிற்கும், அப்பாறைகளின் அருகே உள்ள மண்ணின் வேதியல் பண்பிற்கும் பெருத்தமாறுபாடுகள் உள்ளன.  மேலும் தமிழிகத்திலி உள்ள குன்றுகளின் மேல் உள்ள மண்ணில் துத்தநாகம் அதிக அளவில் காணப்படுகிறது.  கடல்அலைகைள் இந்த மண்ணை அடித்து வந்து இங்கே சேர்த்ததே இதற்குக் காரணமாகும்.

மேலும் தமிழகத்தில் உள்ள மலைகளின் பாறைகளின் இடையே காணப்படும் மணல்கள் எல்லாம் இவ்வாறு கடல்அலைகளால் அடித்துவரப் பெற்றனவே.

இந்தோனேசியா, சுமத்திரா தீவுகளில் பூகம்பங்கள் ஏற்படும் காலங்களில் உண்டாகும் சுனாமிகளால் இலங்கையும், தமிழகமும் அதிகம் பாதிப்படைகின்றன. 
முன்காலத்தில் தமிழகத்தையே அழித்த சுனாமிஅலைகள், இப்போது கடலோரக் கிராமங்களை மட்டுமே பழிவாங்கியுள்ளது.  இதனால் இனிவரும் காலங்களில் சுனாமியால் தமிழகத்திற்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என நம்புவோம்.

பார்வை நூல்கள் - திருவிளையாடற் புராணம் 4,11,17,44 படலங்கள்,  திருவாப்புடையார் புராணம், கலித்தொகை, சிலப்பதிகாரம்-காடுகாண்காதை 17 -22

கட்டுரையாளார் - 
முனைவர். கி. காளைராசன்,
துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 630 003
அலைபேசி எண் 94435 01912
மின்னஞ்சல் kalair...@gmail.com

திருப்பூவணம் புராணம் முனைவர் பட்ட ஆய்வாளர்,
திருவிளையாடற் புராணம் ஆய்வாளர்,
திருவாப்புடையார் புராணம் ஆய்வாளர்,
திருவிளையாடற் புராணம் ஆய்வாளர்,
சூரைமாநகர்ப்புராணம் ஆய்வாளர்.

வெளியிட்டுள்ள நூல்கள்
1) திருப்பூவணக்காசி
2) திருப்பூவணப் புராணம்
3) புவனம் போற்றும் பூவணம்

கட்டுரை உதவி.
ஒரிசா பாலு என்ற திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள், சென்னை.
கடல்கோள் ஆய்வாளர்,
கடலாமைகள் ஆய்வாளர்.
கடல் நீரோட்டம் ஆய்வாளர்,
கடல்வழித் தமிழர் பயணம் ஆய்வாளர்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 28, 2014, 6:55:28 PM2/28/14
to mintamil, thiruppuvanam, bala subramani, Palanichamy Shanmugam, naga rethinam, drn...@yahoo.com
ஒரு சிறு திருத்தம்...


2014-03-01 5:11 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

மதுரைக்கு வந்த சுனாமி

Inline image 1

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுமத்ரா தீவுகளில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தாய்லாந்து, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சுனாமி ஏற்பட்டது.  இதனால் மிகப்பெரும் அலைகள் தோன்றித் தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இருந்த மீனவ கிராமங்களை அழிந்தன.  கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள்  உயிரிழந்தனர்.  பல ஆயிரம் பேர் வீடு, உடமைகளை இழந்தனர்.  கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி வந்த 500 பேரைக் காணவில்லை.  வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து சுமார் 100-200 மீட்டரிலேயே கடல் இருப்பதால், அலையின் உக்கிரத்தில் அங்கு உயிர் இழப்பு அதிகம்.  தமிழகத்தில் மட்டுமல்லாது அந்தமான் மற்றும் ஆந்திராவிலும் மற்றும் கடலோர மாநிலங்களிலும் இதேபோன்று பெரும் உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளன.  2004 ஆண்டு சுனாமியினால் 2 இலட்சத்து 28ஆயிரம்பேர் (227,898) இறந்துள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.  சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடு ஜப்பான் ஆகும்.

சுனாமியினால் உண்டான சோகமான நிகழ்வுகள் மக்கள் நினைவுகளிலிருந்து இன்னும் நீங்கவில்லை.   ஒவ்வொரு ஆண்டும், சுனாமி தாக்கிய நாளில் கடற்கரை பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் குடம் குடமாக பால் கொட்டியும், பூக்களைத் தூவியும், இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களுக்கு விருப்பமான உணவுப் பண்டங்களைப் படைத்துக் கண்ணீர்விட்டுக் கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  26.12.2013 
Inline image 3

சுனாமி தாக்கி 9-ம் ஆண்டுகள் ஆகிவிட்டன.  இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் உற்றாருக்கும் சுற்றாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 23, 2014, 9:42:31 PM3/23/14
to mintamil, thiruppuvanam, bala subramani, Palanichamy Shanmugam, naga rethinam, drn...@yahoo.com

2014-03-16 16:25 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

தமிழின் தொன்மையை கேலி பேசக்கூடாது சார் ...
.
டாக்டர் செம்மல் அவர்களே.....நிச்சயமாக இல்லை ----
"கல்தோன்றி மண் தோன்றா " என  கதைப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
அடுத்தவன் நம் மொழியின் தொன்மையை -வளமையை புரிந்துகொண்டு நம் புகழைப் பாட வேண்டாமா....நாமே  நம் புகழைப் பாடிக் கொண்டிருப்பதா?
தமிழ் நிலம்தான் முதலில் தோன்றியது என்கிறோம்...அதை எப்படி நிறுவப் போகிறோம்...
உணர்வுப் பூர்வமாக மட்டும் பேசுவதை தவிர்த்து அறிவுப் பூர்வமாகவும் பேசுவோம்.....
அய்யா செம்மல் அவர்கள் சினம் காக்க...

பணிவுடன் 
சிங்கநெஞ்சன்....


வணக்கம் ஐயா.
 
தாங்கள் மிகவும் சிரமம் மேற்கொண்டு மிகவும் விரிவான விளக்கங்களை அளித்து வருகின்றீர்கள் ஐயா.
இருப்பினும் நாம் தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம்.
 
“ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“
என்ற புறப்பொருள் வெண்பாமாலையின் வரிகளை அறிவியல் அடிப்படையில் தங்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
ஆனால் புராணங்களில் அடிப்படையில் அந்த வரிகள் உண்மையானவை என நான் நம்புகிறேன்.  
இதுவே நமது கருத்து வேறுபாடு.

மேற்கண்ட புறப்பொருள் வெண்பாமாலைக்குச் சான்றாகத்  திருவிளையாடற் புராணப் பாடல்கள் உள்ளன.

திருவிளையாடற் புராணத்தில் நான்கு வெவ்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மதுரையைக் கடல் கொண்டது பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஒருமுறை மதுரையைக் கடல்கொண்டபோது, நாகமலை, பசுமலை, பன்றிமலைகள் இந்தக் கடல்கோளால் தோன்றின என்ற குறிப்பு உள்ளது.
மறுமுறை மதுரையைக் கடல்கொண்டபோது இம்மலைகள் கடல்அலைகளால் அழியாமல் நிலையாக நின்றன என்ற குறிப்பும் உள்ளது.

எனவே புராணத்தில் உள்ளதை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து நிரூபணம் செய்துவிட்டால், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் “மண்தோன்றாக்காலத்தே முன்தோன்றினர்“ என்பதை உறுதி செய்யலாம்.

புராணப்பாடல்களின் அடிப்படையிலும், பலமுறை நேரில் சென்று பார்த்தவகையிலும் நான் (புரிந்து) அறிந்து கொண்டனவற்றைத் கீழே தொகுத்துக் கொடுக்கிறேன்.  

1) கல்தோன்றி...
விளக்கம் -  மதுரையின் தெற்கே திருப்பரங்குன்றம், மேற்கே மேலக்குயில்பட்டி, வடக்கே யானைமலை முதலான கல்மலைகள்  தோன்றியிருந்துள்ளன....

2) மண்தோன்றா.....
விளக்கம் -  மதுரையின் தெற்கே பசுமலை, மேற்கே நாகமலை, மற்றும் பன்றிமலை முதலான மண்மலைகள் தோன்றிருக்கவில்லை....

3) காலத்தே...
விளக்கம் -  கல்லால் ஆன மலைகள் தோன்றியிருக்க, மண்ணால் ஆன மலைகள் தோன்றாத இந்த இடைப்பட்ட காலத்திலே...

4) வாளொடு...
விளக்கம் -  கையில் ஆயுதத்துடன்...

5) முன்தோன்றிய...
விளக்கம் - உலகில் வேறுபிற இடங்களில் எல்லாம் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே மதுரையில் மனிதன் தோன்றிய....

6) மூத்தகுடி...
விளக்கம் - குடி என்பது கூட்டாக வாழ்வது.  தங்களுக்குள் உறவுமுறை, குடும்பம், ஊர், நாடு, மன்னன், காவல் என வகுத்துக் கொண்டு ஒன்றாய்ச் சேர்ந்து வாழ்வது...
இவ்வாறாகக் குடிகளாய் வாழ முதன்முதலில் முயற்சி செய்த குடியே “மூத்த குடி“ யாகும்.
நாகமலை தோன்றுவதற்கு முன்பே மதுரையை குலசேகர பாண்டியன்,, மலையத்துவச பாண்டியன், சுந்தரபாண்டியன், உக்கிரகுமாரன், வீரபாண்டியன் என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர் என்கிறது புராணம். 

எனவே,
புறப்பொருள் வெண்பாமலைக்கான எனது புரிதல்..
இதே காலகட்டங்களில் உலகின் வேறு பிற கண்டங்களிலும் மனிதர்கள் தோன்றியிருந்திருக்கலாம்....
தோன்றாமலும் இருந்திருக்கலாம்....
ஆனால், மதுரையில் தோன்றியிருந்த மனிதர்களின் தனிச்சிறப்புகள்
1) இவர்கள் மதுரையில் மண் தோன்றுவதற்கு முன்பே தோன்றியிருந்தனர்.
2) வாள் (ஆயுதம்) பயன்படுத்தியுள்ளனர்
3) தங்களுக்குள் குடும்பம், ஊர், நகரம், மன்னன் எனக் குடியாட்சி நடத்தியுள்ளனர்
4) உலகமக்களில் இவர்களே முதன்முதலில் குடியாக வாழந்துள்ளனர். permanent residence.

மேற்கண்ட கருத்தினை அறிவியல் அடிப்படையில் நிரூபணம் செய்திடத் தேவையானவை என்று நான் கருதும் காரணிகள்.
1) நாகமலை, பசுமலை, பெருமாள் மலைகளின் மேல் படிந்துள்ள மண்ணின் வயது என்ன?
2) நாகமலை போன்று சுமார் 24 கி.மீ. நீளத்திற்கு நேர்கோடாக உள்ள மலை உலகில் வேறு எங்கும் உள்ளதா?
3) நாகமலை உள்ளே உள்ளது களிமண் படிமம் ஆகி, அதனால் உண்டான பாறையா
4) நாகமலையின் மூன்றுக்கும் மேற்பட்ட  படிவ வகைகளால் ஆனதா?( is it made of Three different rock  layers?)
5) நாகமலையின் உள்ளே உள்ள பாறையின் வயது என்ன?
6) நாகமலையின் உள்ளே உள்ள பாறைகள் கிடைமட்டமாகச் செதில்செதிலாக உள்ளனவா?
7) அவ்வாறு அவை இருப்பதற்கான காரணம் என்ன?
8) அழகர்கோயில்மலையின் மேல்பகுதி, கல் சிதைந்து தோன்றி மண்ணால் ஆனது என எடுத்துக்கொண்டால், 
திருப்பரங்குன்றமும் யானைமலையும் அதேகாலகட்டத்தில் ஏன் இவ்வாறு (அழகர்கோயில்மலை போன்று) மாறவில்லை?
9) அழகர்கோயில்மலையின் மேல் உள்ள பாறைத் திட்டுகள் (rock slates) படுக்கை (horizontal) வடிவத்தில் அமைந்திருக்க,
நாகமலையில் உள்ளே உள்ள மண்திட்டுகள் செங்குத்து (vertical) வடிவத்தில் அமைந்திருக்கின்றன?

ஐயா,
நான்குமுறை மதுரையைச் சுனாமி தாக்கியதன் காரணமாகவே, மேற்கண்டன எல்லாம் நடைந்துள்ளன என நான் கருதுகிறேன்.

தாங்கள் அன்புள்ளம் கொண்டு, இதுகாலமும் பொறுமையாகப் பதில் அளித்து எனது ஐயங்களைப் போக்கிவருவது போன்று, மேற்கண்ட எனது ஐயங்களுக்கும் விளக்கம் அளித்து உதவிடுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

Singanenjam Sambandam

unread,
Mar 24, 2014, 11:47:06 AM3/24/14
to mint...@googlegroups.com

வணக்கம் அய்யா , புவிஇயல் பார்வையில் உங்களுக்கு விடை தர முயன்றிருக்கி கிறேன்....புராணங்களோடு முழுமையாக முரண்படுகிறேன்....

 

நான்குமுறை மதுரையைச் சுனாமி தாக்கியதன் காரணமாகவே, மேற்கண்டன எல்லாம் நடைந்துள்ளன என நான் கருதுகிறேன்.

முழுக்க முழுக்க மாறுபடுகிறேன் அய்யா, தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளை வரலாற்றுக் காலத்திலோ அதற்கு முன்போ சுனாமி தாக்கியிருக்கக் கூடும். இன்றைய மதுரை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 450 அடி உயரத்தில் உள்ளது-கடற்கரையிலிருந்து சுமார் 110 தூரத்தில் உள்ளது. நானூறு அடி உயரத்திற்கு அலை எழும்பி நூறு கி.மீ. வரவேண்டுமெனில் , கற்பனைக்குக்கூட எட்டாத அளவிற்கு கடுமையானா நில அதிர்ச்சியை நாம் கற்பனை செய்ய வேண்டும்; அப்படி ஒரு நிலஅதிர்ச்சி நிகழ்ந்திருக்குமே ஆயின் பூமிப் பந்து பலப்பல துண்டுகளாக -சிதறிப் போயிருக்கும். புராணங்கள்  ஓரளவு நடந்த நிகழ்வுகளைக் கொண்டு பின்னப்பட்ட நல்ல கற்பனைக் கதைகள் என்றே தோன்றுகிறது.

1)     நாகமலை, பசுமலை, பெருமாள் மலைகளின் மேல் படிந்துள்ள மண்ணின் வயது என்ன?

மண்ணின் வயதை நாங்கள் கணிப்பதில்லை-யாரேனும் பெடோலோஜிஸ்ட் உங்களுக்கு உதவலாம்.

2)     நாகமலை போன்று சுமார் 24 கி.மீ. நீளத்திற்கு நேர்கோடாக உள்ள மலை உலகில் வேறு   எங்கும் உள்ளதா?

பல நூறு கி.மீ. நீளமுள்ள மலைகள உள்ளன- மேலும் நாகமலை ஒரு மடிக்கப்பட்ட மடிப்பு மலை- நீங்கள் குறிப்பிடுவது-அந்த மடிப்பின் ஒரு பகுதியே- கூகுல் பதிமத்தில்     இது நன்கு தெரியும்.

3)     நாகமலை உள்ளே உள்ளது களிமண் படிமம் ஆகி, அதனால் உண்டான பாறையா

 

நாகமலை உருமாறிய மணற்பாறைகளால் ஆனது-களிமண் படிமங்களால் அல்ல.

4)     நாகமலையின் மூன்றுக்கும் மேற்பட்ட  படிவ வகைகளால் ஆனதா?( is it made of Three different rock  layers?)

ஆம்- வரை படத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட பாறைகள் காட்டப்பட்டுள்ளன.

5)     நாகமலையின் உள்ளே உள்ள பாறையின் வயது என்ன?

நாகமலையில் உள்ள பாறை தொகுப்புகளின் வயது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கும் மேல்.

 

 

நாகமலையின் உள்ளே உள்ள பாறைகள் கிடைமட்டமாகச் செதில்செதிலாக உள்ளனவா?

7 ) அவ்வாறு அவை இருப்பதற்கான காரணம் என்ன

 

 

 

நாகமலை வடமேற்கு –தென்கிழக்கு வாகாக அமைந்துள்ளது- இதில் தென்மேற்கு சரிவில் உள்ள பாறைகள் வடகிழக்கு நோக்கியும், வடகிழக்கு சரிவில் உள்ளவை தென்மேற்கு நோக்கியும் , அதாவது ஒன்றை ஒன்று நோக்கி குழிமுக மடிப்பாக மடிந்து அமைந்துள்ளன. பின் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாக செதில் செதிலான அமைப்புகள் உருவாகியிருக்கும்.

 

8) அழகர்கோயில்மலையின் மேல்பகுதி, கல் சிதைந்து தோன்றி மண்ணால் ஆனது என எடுத்துக்கொண்டால்

திருப்பரங்குன்றமும் யானைமலையும் அதேகாலகட்டத்தில் ஏன் இவ்வாறு (அழகர்கோயில்மலை போன்று) மாறவில்லை?

ஏனெனில் அவை வெவ்வேறு பாறைகளால் ஆனவை.பாறைகளின் தன்மையைப் பொறுத்து அவை சிதைவுறும் காலமும் அளவும் மாறுபடும். சில இடங்கள் மலைகளாகவும் சில இடங்கள் சமவேளிய்யாக இருக்கவும் இதுவே காரணம். எளிதில் சிதைவுறும் பாறைகள் உள்ள பகுதி சமவெளியாக மாறி விடுகிறது----எளிதில் சிதைவுறா பாறைகள் மலைகளாக நிற்கின்றன. Most of the hills in this part are erosional remnents.

 

9) அழகர்கோயில்மலையின் மேல் உள்ள பாறைத் திட்டுகள் (rock slates) படுக்கை (horizontal) வடிவத்தில் அமைந்திருக்க,நாகமலையில் உள்ளே உள்ள மண்திட்டுகள் செங்குத்து (vertical) வடிவத்தில் அமைந்திருக்கின்றன?

படிவப் பாறைகள் உருவாகும் போது படுக்கைகளாகவே உருவாகின்றன. பின் அவை அழுத்தங்களால் மடிக்கப்பட்டு மடிப்பு மலைகளாக  வடிவ மாற்றம் பெறும்போது பல்வேறு கோணங்களில் ( மடிப்பின் எந்தப் பகுதியை நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து ) காட்சி அளிக்கின்றன. நாகமலையின் தென் கிழக்குக் கோடியில் பாருங்கள்- அங்கே செங்குத்து அமைப்பு இருக்காது....  

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி

மண் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகின்றன-மண் தோன்றும் மனிதன் தோன்றினான் என்பது மிக மிக மிகை. ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை .

நீங்கள் முயன்றுள்ள விளக்கங்கள் உங்கள் நம்பிக்கையின்பாற்பட்டது. பகுத்தறிவின் அடிப்படையில் ஆனது அல்ல. இறை நம்பிக்கை வேறு விடயம்-மத நூல்களில் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் காட்சிகள் ஏராளம்-( சங்க இலக்கியம் எனக் கூறப்படும் நூல்களில் அதிக மிகை இருப்பதாகத் தெரியவில்லை)



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 24, 2014, 8:15:03 PM3/24/14
to mintamil, thiruppuvanam, Palanichamy Shanmugam, naga rethinam, திருத்தம் பொன்.சரவணன்

திருத்தம் பொன்.சரவணன்

10:19 (19 hours ago)
to mintamil
2014-03-24 7:07 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

ஆனால், மதுரையில் தோன்றியிருந்த மனிதர்களின் தனிச்சிறப்புகள்
1) இவர்கள் மதுரையில் மண் தோன்றுவதற்கு முன்பே தோன்றியிருந்தனர்.
2) வாள் (ஆயுதம்) பயன்படுத்தியுள்ளனர்
3) தங்களுக்குள் குடும்பம், ஊர், நகரம், மன்னன் எனக் குடியாட்சி நடத்தியுள்ளனர்
4) உலகமக்களில் இவர்களே முதன்முதலில் குடியாக வாழந்துள்ளனர். permanent residence.

காளைராசன் ஐயா,

சில சந்தேகங்கள்.

மதுரையில் மண்ணே தோன்றியிருக்கவில்லை என்றால் நிச்சயம் அங்கே செடிகொடிகளும் மரங்களும் தோன்றியிருக்காது அல்லவா. 

மேலும் நிச்சயம் அங்கே உழவுத் தொழிலும் செய்திருக்க முடியாது அல்லவா.

என்றால், அவர்கள் எதை உண்டு உயிர் வாழ்ந்திருக்க முடியும்?

ஒருவேளை அவர்கள் பிற விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்ந்திருப்பார்கள் என்று கொண்டாலும் தாவர உணவின்றி இது எத்தனை ஆண்டுகள் சாத்தியப்படும்?.

தாவர உணவில்லை என்றால் பல விலங்கினங்கள் உயிர் வாழவும் முடியாதே.

இது எப்படி சாத்தியமாயிற்று என்று சற்று விளக்குங்களேன். 

அன்புடன்,

தி.பொ.ச.
-------------------------------------------------------------------..
வணக்கம் தி.பொ.சா. ஐயா.


2014-03-24 10:19 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
மதுரையில் மண்ணே தோன்றியிருக்கவில்லை என்றால் நிச்சயம் அங்கே செடிகொடிகளும் மரங்களும் தோன்றியிருக்காது அல்லவா. 
மண் தோன்றுவதற்கு முன் மதுரையின் நிலப்பகுதி எவ்வாறு இருந்தது என்பது பற்றிய செய்திகள் ஏதும் திருவிளையாடற் புராணத்தில் இல்லை.

ஆனால், நேரில் பார்த்தவகையில்,
வெறும் பாறைகளில் மட்டுமே வளரக்கூடிய செடிகளும், கொடிகளும், மரங்களும் உள்ளன.  

பிரான்மலை, திருப்பரங்குன்றம், குன்றக்குடி, திருக்கழுக்குன்றம், திருமலை(சிவகங்கை மாவட்டம்) முதலான குன்றுகளில் இதுபோன்ற மரஞ்செடிகொடிகளை இன்றும் காணலாம்.

ஒரு கைப்பிடிஅளவு மண் இல்லாமலும், ஒருகடுகளவு தண்ணீர் இல்லாமலும் உள்ள பாறையில் மிகப்பெரிய மரங்கள் உள்ளதை இன்றும் காணலாம்.   (திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள மரமே இதற்குச் சிறந்த சான்று)

எனவே, மண்ணில்லாமல் பாறைகளில் மட்டுமே வளர்ந்து பயன்தரும் மரஞ்செடிகொடிகள் நிறையவே உள்ளன.
இவை போன்று அந்தக் காலத்தில் இருந்திருக்க வேண்டும்.   மேலும் மரங்கள் இருந்துள்ளதால், ஊர்வன பறப்பனவும், விலங்குகளும் வாழ்ந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும்.
Inline images 1திருப்பரங்குன்றத்தில் மண்ணில்லாமல், தண்ணீர் மற்றும் பாறைகளில் மட்டுமே வளர்ந்துள்ள மரங்கள்.
இன்னும் சில அருமையான படங்கள் வைத்திருந்தேன். தேடியெடுத்து விரைவில் போடுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

2014-03-01 5:11 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 25, 2014, 1:33:31 AM3/25/14
to mintamil, thiruppuvanam, Palanichamy Shanmugam, naga rethinam, Nagarajan Vadivel
பேராசிரியருக்கு வணக்கம்.

2014-03-24 10:26 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​கல் தோன்றி மண் தோன்றா என்பது மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் ஆதிகுடியாக இருந்த மலைமக்கள் ஒரே குடியாகி ஒரே அரசனின் ஆட்சிக்குட்பட்ட அரசாக மதுரை யை உருவாக்கிக் கோட்டை அமைத்து மதுரைக்கு வெளியே இருந்த வந்த சமணர் தாக்குதலை வாள்கொண்டு அடக்கி என்ற பொருள் சொல்லலாமே

மதுரையில் நாகமலை பசுமலை பன்றிமலைகள் தோன்றியபோதுதான் மண்தோன்றியது என்று கருத்திற் கொண்டால்,
நாகமலை (மண்) தோன்றுவதற்கு முன்தோன்றிய குடிகளை 1) குலசேகர பாண்டியன், 2) மலையத்துவச பாண்டியன், 3) சுந்தரபாண்டியன் (சிவபெருமான்?), 4)உக்கிரகுமாரன்  (முருகன்?), ஆட்சிசெய்துள்ளனர் என்கிறது திருவிளையாடற் புராணம்.  
எனவே இம்மன்னர்களது ஆட்சியில் வாழ்ந்தவர்களே “முன்தோன்றிய மூத்தகுடியினர்“.  
இவர்களில் உக்கிரகுமாரன்,  இந்திரன் மீது வளை(ஆயுதம்) யெறிந்ததாகப் புராணக்குறிப்பு உள்ளது.

இதெல்லாம் “சும்மா“ என்றால்,  இம்மூன்று மலைகளில் ஏதேனும் உயிரினங்களின் அல்லது மரஞ்செடிகொடிகளின் படிமங்களாகக் கிடைக்கின்றனவா? எனத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.  ஒரு கடற்“சங்கே“னும் கிடைக்க வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்.
நாகமலையில், ஏதேனும் படிமங்கள் கிடைக்கப் பெற்றால் அவற்றின் காலத்தைக் கொண்டு பாண்டியர்களின் காலத்தைக் கணக்கிடலாம்.

அல்லது, அறியில் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்துவிட்டோம், நாகமலையில் உயிர்களின் படிமங்கள் ஏதும் இல்லை என்று அறிவியலார் அறுதியிட்டுக் கூறும்வரை, கிடைத்துள்ள புராண ஆதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு, “மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“  புறப்பொருள்வெண்பாமலைப் பாடல்வரிகளை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்...

தங்கள் மாணவன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 25, 2014, 8:19:38 AM3/25/14
to mintamil

வணக்கம் ஐயா.

2014-03-24 21:17 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

புவிஇயல் பார்வையில் உங்களுக்கு விடை தர முயன்றிருக்கி கிறேன்....புராணங்களோடு முழுமையாக முரண்படுகிறேன்....

புறப்பொருள் வெண்பாமலைப் பாடல்வரிகளுக்கு ஆதாரமாகப் புராணத்தில் உள்ளனவற்றைச் சொல்வது நான்.
புவிஇயலைச் சொல்வது தாங்கள்.
எனவே தாங்கள் புராணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை ஐயா.
எமது நோக்கம் புராணத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளை புவியியல் அடிப்படையில் பொருந்தி வருகிறதா என்று அறிந்து கொள்ளவதே.

 

நான்குமுறை மதுரையைச் சுனாமி தாக்கியதன் காரணமாகவே, மேற்கண்டன எல்லாம் நடைந்துள்ளன என நான் கருதுகிறேன்.

முழுக்க முழுக்க மாறுபடுகிறேன் அய்யா, தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளை வரலாற்றுக் காலத்திலோ அதற்கு முன்போ சுனாமி தாக்கியிருக்கக் கூடும். இன்றைய மதுரை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 450 அடி உயரத்தில் உள்ளது-கடற்கரையிலிருந்து சுமார் 110 தூரத்தில் உள்ளது. நானூறு அடி உயரத்திற்கு அலை எழும்பி நூறு கி.மீ. வரவேண்டுமெனில் , கற்பனைக்குக்கூட எட்டாத அளவிற்கு கடுமையானா நில அதிர்ச்சியை நாம் கற்பனை செய்ய வேண்டும்; அப்படி ஒரு நிலஅதிர்ச்சி நிகழ்ந்திருக்குமே ஆயின் பூமிப் பந்து பலப்பல துண்டுகளாக -சிதறிப் போயிருக்கும். புராணங்கள்  ஓரளவு நடந்த நிகழ்வுகளைக் கொண்டு பின்னப்பட்ட நல்ல கற்பனைக் கதைகள் என்றே தோன்றுகிறது.

ஆமாம். மிகவும் சரி.
இப்போது இந்தோனேசியாவில் நடைபெற்ற சுனாமி உருவாகும் முன் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்டிடங்கள் எல்லாம் ஆடின.  கீழே விழுந்து தரைமட்டம் ஆயின.
மதுரைக்குச் சுனாமி வருவதற்குமுன் பூகம்பம் ஏற்பட்டது பற்றிய குறிப்பு உள்ளது.  அதில் யானைமலையும், திருப்பரங்குன்றம் மலையும் ஆடின என்றுள்ளது.  இவ்விரு கல்மலைகளும் நடுங்கி ஆடும் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
 

1)     நாகமலை, பசுமலை, பெருமாள் மலைகளின் மேல் படிந்துள்ள மண்ணின் வயது என்ன?

மண்ணின் வயதை நாங்கள் கணிப்பதில்லை-யாரேனும் பெடோலோஜிஸ்ட் உங்களுக்கு உதவலாம்.

தமிழகத்தில் எரிமலைகள் ஏதும் இல்லாதபோது,
மதுரையில் பெரிய பூசணிக்காய் அளவிற்கு ‘கல் உருண்டைகள்‘ மழைபோல் பெய்ததாக ஒரு புராணக் குறிப்பு உள்ளது.
இதே போன்று திருச்சியிலும் மண்மழை பெய்ததாக ஒரு புராணக் குறிப்பு உள்ளது.
எனவே தான் இதுபோன்ற மண்மழைகளிலிருந்து இந்த நாகமலை மாறுபட்டிக்கலாமோ என்று ஒரு ஐயம்.  அதற்காகவே நாகமலையின் மண்ணின் வயதை அறிந்து கொள்ள விரும்பினேன்.  
 

2)     நாகமலை போன்று சுமார் 24 கி.மீ. நீளத்திற்கு நேர்கோடாக உள்ள மலை உலகில் வேறு   எங்கும் உள்ளதா?

பல நூறு கி.மீ. நீளமுள்ள மலைகள உள்ளன- மேலும் நாகமலை ஒரு மடிக்கப்பட்ட மடிப்பு மலை- நீங்கள் குறிப்பிடுவது-அந்த மடிப்பின் ஒரு பகுதியே-கூகுல் பதிமத்தில்     இது நன்கு தெரியும்.

3)     நாகமலை உள்ளே உள்ளது களிமண் படிமம் ஆகி, அதனால் உண்டான பாறையா

 நாகமலை உருமாறிய மணற்பாறைகளால் ஆனது-களிமண் படிமங்களால் அல்ல.

4)     நாகமலையின் மூன்றுக்கும் மேற்பட்ட  படிவ வகைகளால் ஆனதா?( is it made of Three different rock  layers?)

ஆம்- வரை படத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட பாறைகள் காட்டப்பட்டுள்ளன.

5)     நாகமலையின் உள்ளே உள்ள பாறையின் வயது என்ன?

நாகமலையில் உள்ள பாறை தொகுப்புகளின் வயது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கும் மேல்.

சுனாமியினால் அடித்துவரப்பட்ட   கடல்மண்ணும், களிமண்ணும் காலப்போக்கில் இறுகிப் பாறையாக மாறியுள்ளன என்று நான் கருதினேன்.
அவை களிமண் படிங்கள் என்று எண்ணியதால், சில இலட்சம் வருங்கள் இருக்கும் என்று எண்ணியிருந்தேன்.
விளக்கத்திற்கு நன்றி ஐயா.  

 

நாகமலையின் உள்ளே உள்ள பாறைகள் கிடைமட்டமாகச் செதில்செதிலாக உள்ளனவா?

7 ) அவ்வாறு அவை இருப்பதற்கான காரணம் என்ன

நாகமலை வடமேற்கு –தென்கிழக்கு வாகாக அமைந்துள்ளது- இதில் தென்மேற்கு சரிவில் உள்ள பாறைகள் வடகிழக்கு நோக்கியும், வடகிழக்கு சரிவில் உள்ளவை தென்மேற்கு நோக்கியும் , அதாவது ஒன்றை ஒன்று நோக்கி குழிமுக மடிப்பாக மடிந்து அமைந்துள்ளன. பின் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாக செதில் செதிலான அமைப்புகள் உருவாகியிருக்கும்.

 

8) அழகர்கோயில்மலையின் மேல்பகுதி, கல் சிதைந்து தோன்றி மண்ணால் ஆனது என எடுத்துக்கொண்டால்

திருப்பரங்குன்றமும் யானைமலையும் அதேகாலகட்டத்தில் ஏன் இவ்வாறு (அழகர்கோயில்மலை போன்று) மாறவில்லை?

ஏனெனில் அவை வெவ்வேறு பாறைகளால் ஆனவை.பாறைகளின் தன்மையைப் பொறுத்து அவை சிதைவுறும் காலமும் அளவும் மாறுபடும். சில இடங்கள் மலைகளாகவும் சில இடங்கள் சமவேளிய்யாக இருக்கவும் இதுவே காரணம். எளிதில் சிதைவுறும் பாறைகள் உள்ள பகுதி சமவெளியாக மாறி விடுகிறது----எளிதில் சிதைவுறா பாறைகள் மலைகளாக நிற்கின்றன. Most of the hills in this part are erosional remnents.

 

9) அழகர்கோயில்மலையின் மேல் உள்ள பாறைத் திட்டுகள் (rock slates) படுக்கை (horizontal) வடிவத்தில் அமைந்திருக்க,நாகமலையில் உள்ளே உள்ள மண்திட்டுகள் செங்குத்து (vertical) வடிவத்தில் அமைந்திருக்கின்றன?

படிவப் பாறைகள் உருவாகும் போது படுக்கைகளாகவே உருவாகின்றன. பின் அவை அழுத்தங்களால் மடிக்கப்பட்டு மடிப்பு மலைகளாக  வடிவ மாற்றம் பெறும்போது பல்வேறு கோணங்களில் ( மடிப்பின் எந்தப் பகுதியை நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து ) காட்சி அளிக்கின்றன. நாகமலையின் தென் கிழக்குக் கோடியில் பாருங்கள்- அங்கே செங்குத்து அமைப்பு இருக்காது....  


அழகர்கோயில் மலையின் மேல்பகுதியில் உள்ள பாறைத் திட்டுகளும்,
நாகமலையின் உட்பகுதியில் உள்ள பாறைத் திட்டுகளும்
சுனாமியினால் அடித்துவரப்பட்ட களிமண்ணால் ஒரேகாலத்தில் தோன்றியிருக்க வேண்டும் எனக் கருதினேன்.
தாங்கள் நாகமலையானது களிமண்பாறையால் ஆனதல்ல என்று கூறுவதால், எனது ஊகங்கள் தவறாகிவிடுகின்றன.

ஐயா,
அன்புள்ளம் கொண்டு, 1) பசுமலையும், 2) திருப்பரங்குன்றம் (தியாகராசர் பொறியியல் கல்லூரி) அருகே உள்ள கூடுதட்டிப்பரம்பு மலை
இவ்விரண்டு மலைகளும் எவ்வாறு தோன்றின? எதனால் ஆனவை? இவைகள் களிமண் பாறைகளா? என்பன போன்ற விளக்கங்கள் ஏதேனும் இருந்தால் அளித்து உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி

மண் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகின்றன-மண் தோன்றும் மனிதன் தோன்றினான் என்பது மிக மிக மிகை. ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை .

 

நீங்கள் முயன்றுள்ள விளக்கங்கள் உங்கள் நம்பிக்கையின்பாற்பட்டது. பகுத்தறிவின் அடிப்படையில் ஆனது அல்ல. இறை நம்பிக்கை வேறு விடயம்-மத நூல்களில் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் காட்சிகள் ஏராளம்-( சங்க இலக்கியம் எனக் கூறப்படும் நூல்களில் அதிக மிகை இருப்பதாகத் தெரியவில்லை)


அழகர்கோயில்மலையின் அடிவாரத்தில் உள்ள பாறையும், திருப்பரங்குன்றத்தில் உள்ள பாறையும், யானைமலையில் உள்ள பாறையும்
ஒரே வகையைச் சார்ந்தன என்றே கருதுகிறேன்.  அன்புள்ளம் கொணடு தங்களது இத்தகவலை உறுதிசெய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், கடற்கரையை அடுத்துள்ள மகாபலிபுரம், திருப்பரங்குன்றம், குன்றக்குடி, யானைமலை முதலான மலைகள் எல்லாம் மொட்டைப்பாறைகளாக இருக்கவும், இம்மலைகளுக்கு மேற்கே உள்ள மலைகள் எல்லாம் மண்போர்த்தி யிருப்பதும் சுனாமியினால்தான் என்று கருதுகிறேன்.
அன்புள்ளம் கொண்டு மேற்கண்ட எனது ஐயப்பாட்டிற்கும் விளக்கம் அளித்து உதவிடுமாறு வேண்டுகிறேன்.

தேமொழி

unread,
Mar 25, 2014, 3:10:01 PM3/25/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com

நண்பர் திரு.காளைராசன், 

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி" என்ற இலக்கியத்  தமிழ் வரிகளை, அவை மிகைப்படுத்தி எழுதப்பட்டவை அல்ல என்ற கோணத்தை அடிப்படையாகக் கொண்டு  geology  அடிப்படையில் நீங்கள் ஆராய்கிறீர்கள்.  

நான் இந்த ஆராய்சிக்கு  மாற்றுக் கோணமும் உள்ளது என்பதைக் காட்டவிரும்புகிறேன். 

வாளோடு என்பது எது போன்ற வாள்  என்பதை முதலில் நிறுவ வேண்டும்....
The Stone Age, The Bronze Age, The Iron Age (http://en.wikipedia.org/wiki/Three-age_system#Three-age_system_resumptive_table) எக்கால வாள்?
பிறகு ஆதிகுடி என்று கொண்டால் கற்கால ஆயுதங்கள் தேடிக் கண்டுபிடித்து காலத்தை நிர்ணயித்து அதன்  வழி தமிழர் முதன்மையானவர் என்பதையும் நிரூபிக்கலாம்.  

அல்லது அவர்களது fossil கொண்டும் நிரூபிக்கலாம். 
Paleolithic (http://en.wikipedia.org/wiki/Palaeolithic) காலமே (10,000 ஆண்டுகள் முன்னர் உள்ள காலமே) இதுவரை  நாமறிந்த ஆதி காலம் 
அக்காலத்தில் உள்ள fossil கிடைத்திருப்பது 


Zoologist என்ற முறையில் (B.Sc, M.SC. M.Phil in Zoology) நான் பார்க்கும் கோணம், Australopithecus fossil க்கும் முன்னர் உள்ள 
மூத்தகுடி என்பதற்கான தமிழர்களின் human  fossil தமிழகத்தில் கிடைக்கிறதா? 
அது மட்டுமே  இதுவரை கிடைத்த ஆதிமனிதர்களின் human  fossil களை அவை விட நம் மக்கள் fossil பழமையானது  என்ற அறிவியல் அடிப்படையில்  மட்டுமே இருக்கும்.

ஆனால் இதுவரை அவ்வாறு கிடைத்த தகவல் இல்லை.  கிடைத்தவுடன் உங்கள் ஆராய்சிக் கோணத்திற்கு அது வலிமை சேர்க்கக்கூடும்.

இது போல ஒவ்வொரு துறையும் நீங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளவற்றை அறிவியலுடன் ஒப்பிட்டு பார்க்க முனைவது போல பல துறை வல்லுனர்களையும் அவர்களது கோணம் கொண்டு ஆராய வேண்டியது அவசியம்.

மரபியல் அடிப்படையிலும் மரபணு கொண்டு சோதனை நிகழ்த்தப்படுகிறது ...Haplogroup (http://en.wikipedia.org/wiki/Haplogroups)

இதுவரை இந்த ஆராய்ச்சி ஆப்ரிகாவையே ஆரம்பம் எனக்காட்டி வருகிறது.

சமீபத்தில் வெளிவந்த இந்த நூல் உங்களுக்கு பல்வேறு கோணங்களையும் காட்டும் 



The Evolution and History of Human Populations in South Asia: Inter-disciplinary Studies in Archaeology, Biological Anthropology, Linguistics and Genetics (Google eBook)
Michael D. Petraglia, Bridget Allchin
Springer, May 22, 2007 




































என் கோணத்தில் (விலங்கியல்) தேடிய பொழுது fossil record இல்லை என்பதை படத்தில் உள்ள தகவல் காட்டுகிறது.

நான் இன்னமும் நூலை முழுமையாகப் படிக்காததால் நீங்கள் இதைப் பற்றிக்  கேட்டால் விளக்கம் சொல்ல இயலாத நிலையில் இருக்கிறேன்.

ஆனால் துறைகளுக்கிடையேயான ஒப்பீடு  என்பதால் நல்ல தகவல் அடங்கியிருக்கும் என்பது என் எண்ணம்.  

அன்புடன் 

..... தேமொழி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 25, 2014, 8:10:47 PM3/25/14
to mintamil
வணக்கம்.

2014-03-26 0:40 GMT+05:30 தேமொழி <them...@yahoo.com>:
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி" என்ற இலக்கியத்  தமிழ் வரிகளை, அவை மிகைப்படுத்தி எழுதப்பட்டவை அல்ல என்ற கோணத்தை அடிப்படையாகக் கொண்டு  geology  அடிப்படையில் நீங்கள் ஆராய்கிறீர்கள்.  
மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
 
நான் இந்த ஆராய்சிக்கு  மாற்றுக் கோணமும் உள்ளது என்பதைக் காட்டவிரும்புகிறேன். 

வாளோடு என்பது எது போன்ற வாள்  என்பதை முதலில் நிறுவ வேண்டும்....
The Stone Age, The Bronze Age, The Iron Age (http://en.wikipedia.org/wiki/Three-age_system#Three-age_system_resumptive_table) எக்கால வாள்?
பிறகு ஆதிகுடி என்று கொண்டால் கற்கால ஆயுதங்கள் தேடிக் கண்டுபிடித்து காலத்தை நிர்ணயித்து அதன்  வழி தமிழர் முதன்மையானவர் என்பதையும் நிரூபிக்கலாம்.  

அல்லது அவர்களது fossil கொண்டும் நிரூபிக்கலாம். 
Paleolithic (http://en.wikipedia.org/wiki/Palaeolithic) காலமே (10,000 ஆண்டுகள் முன்னர் உள்ள காலமே) இதுவரை  நாமறிந்த ஆதி காலம் 
அக்காலத்தில் உள்ள fossil கிடைத்திருப்பது 

ஆப்பிரிக்காவில் (சுனாமியின் பாதிப்பு ஒருமுறையே நடைபெற்றுள்ளது என்பது எனது யூகம்.  இதனால் அங்கு) fossil கிடைக்கின்றன.

ஆனால் தமிழகத்தில் fossil கிடைக்கவில்லை. இதற்குக் காரணங்கள் என நான் யூகிப்பது.
1) அனைத்தும் சுனாமியினால் அடித்துச் செல்லப்பட்டு நாகமலையின் அடியில் புதைக்கப்பட்டுவிட்டன.
2) சுனாமியின் பாதிப்பு குறைந்தவுடன், தொன்தமிழர் மீண்டும் மதுரையிலேயே குடியாய் வாழ ஆரம்பித்து விடுகின்றனர்.   மீண்டும் மீண்டும் சுனாமி, பின்னர் குடியேற்றம் என மதுரையில் குறைந்தது நான்கைந்து முறை நடைபெற்றுள்ளது.  எனவே  எஞ்சியிருக்கும் எச்சங்கள் fossil கள் எல்லாம் மதுரையின் அடியிலேயே மூடப்பெற்றுள்ளன.  அவற்றின் மேலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
4) எல்லாவற்றிற்கும் மேலாக, யாரும் இதுகுறித்துப் பெரிதாக அக்கரை காட்டுவதில்லை.  பிறர் அக்கரை எடுத்துக் கொள்ளும்வகையில் எனக்குச் சொல்லத் தெரியவில்லை

fossilகள் கிடைக்க......வாய்ப்பு உள்ளதாக நான் யூகிக்கும் இடங்கள்.
1) மிகமிகப் புராதன fossilகள் பொதிகைமலையைத் தோண்டினாலும் கிடைக்கும்.
மிகவும் புராதன காலத்தைச் சேர்ந்த fossilகள் நாகமலையைத் தோண்டினால் கிடைக்கும்.

2) புராதான காலத்தைச் சேர்ந்த fossilகள், நாகமலையின் மேல்ப்பகுதி, அழகர்கோயில்மலையின் மேல்ப்பகுதி,  அரிட்டாபட்டிமலையின் மேல்பகுதி, மேலூருக்குக் கிழக்கே உள்ள இரண்டு சிறிய குன்றுகளிலும் தேடினால் கிடைக்கும்.  
(சுருக்கமாகச் சொல்வதென்றால் சுனாமியினால் அடித்துச் செல்லபப்பட்ட எச்சங்கள்,  நின்றகோலத்தில் பெருமாள் உள்ள ஊர்களிலும்,  சுனாமியின் தாக்கம் முடிந்தவுடன் கடல்அலைகள் மீண்டும் கடலுக்கே திரும்பும்போது அடித்துச் சென்ற எச்சங்கள் fossil எல்லாம் சேதுக்கரை, கமுதி, சுந்தரபாண்டிய பட்டிணம் போன்ற கடற்கரையை ஒட்டியுள்ள  பெருமாள் அமர்ந்தகோலத்தில் உள்ள ஊர்களிலும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.)

3) மதுரையின் பொற்றாமரைக் குளம், கும்பகோணம் மகாமககுளம், திருவண்ணாமலை, திருப்பூவணம் மற்றும் சுயம்புலிங்கங்கள் உள்ள திருத்தலங்களில் உள்ள தீர்த்தங்களின் அடியில் தமிழரின் தொன்மையான (கிரியை) எலும்புகள் கிடைக்கும்.



Zoologist என்ற முறையில் (B.Sc, M.SC. M.Phil in Zoology) நான் பார்க்கும் கோணம், Australopithecus fossil க்கும் முன்னர் உள்ள 
மூத்தகுடி என்பதற்கான தமிழர்களின் human  fossil தமிழகத்தில் கிடைக்கிறதா? 
அது மட்டுமே  இதுவரை கிடைத்த ஆதிமனிதர்களின் human  fossil களை அவை விட நம் மக்கள் fossil பழமையானது  என்ற அறிவியல் அடிப்படையில்  மட்டுமே இருக்கும்.

ஆனால் இதுவரை அவ்வாறு கிடைத்த தகவல் இல்லை.  கிடைத்தவுடன் உங்கள் ஆராய்சிக் கோணத்திற்கு அது வலிமை சேர்க்கக்கூடும்.
இதற்காக அதிக நேரமும் உழைப்பும் தேவைப்படுகிறது.
என்னால் முடிந்த அளவிற்கு, எனக்குக் கிடைக்கும் விடுமுறைநாட்களில்  இந்த மலைகளில் தேடும் பணியைச் செய்து வருகிறேன்.   ஆனால் இது மிகவும் சிரமமாக உள்ளது.  உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது.  
தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.

இது போல ஒவ்வொரு துறையும் நீங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளவற்றை அறிவியலுடன் ஒப்பிட்டு பார்க்க முனைவது போல பல துறை வல்லுனர்களையும் அவர்களது கோணம் கொண்டு ஆராய வேண்டியது அவசியம்.

மரபியல் அடிப்படையிலும் மரபணு கொண்டு சோதனை நிகழ்த்தப்படுகிறது ...Haplogroup (http://en.wikipedia.org/wiki/Haplogroups)

இதுவரை இந்த ஆராய்ச்சி ஆப்ரிகாவையே ஆரம்பம் எனக்காட்டி வருகிறது.
இது மிகவும் சரியே.
ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒரேநாளில் சுனாமியால் புதைக்கப்பட்டுவிட்டது என்கிறது திருவிளையாடற்புராணம்.   எனவே இப்போதிருக்கும் மனிதர்களில் ஆப்ரிக்கர்களே ஆதிவாசிகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

தமிழர்கள் ஆப்பிரிக்கர்களைவிடத் தொன்மையானவர் என நிறுவிட fossilகளே சிறந்த சான்றாக அமைந்திடும்.



சமீபத்தில் வெளிவந்த இந்த நூல் உங்களுக்கு பல்வேறு கோணங்களையும் காட்டும் 



The Evolution and History of Human Populations in South Asia: Inter-disciplinary Studies in Archaeology, Biological Anthropology, Linguistics and Genetics (Google eBook)
Michael D. Petraglia, Bridget Allchin
Springer, May 22, 2007 




































என் கோணத்தில் (விலங்கியல்) தேடிய பொழுது fossil record இல்லை என்பதை படத்தில் உள்ள தகவல் காட்டுகிறது.

நான் இன்னமும் நூலை முழுமையாகப் படிக்காததால் நீங்கள் இதைப் பற்றிக்  கேட்டால் விளக்கம் சொல்ல இயலாத நிலையில் இருக்கிறேன்.
தாங்கள் அன்புள்ளம் கொண்டு இந்நூலை முழுமையாகப் படித்து ஏதேனும் அரிய தகவல்கள் கிடைத்தால் அன்புடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 28, 2014, 11:18:54 AM3/28/14
to mintamil, thiruppuvanam, Palanichamy Shanmugam, naga rethinam, திருத்தம் பொன்.சரவணன், நா. கணேசன்

N. Ganesan

19:19 (9 hours ago)
to vallamaihoustontamilmintamilme
On Monday, March 17, 2014 2:55:00 AM UTC-7, kalai wrote:
வணக்கம் ஐயா.

விமானத்தை வைத்து விளையாடுவது இறைவனாக இருந்தாலும்,
அதை ஒளித்து வைத்துள்ளது மனிதனே...

அன்பன்
கி.காளைராசன்


கோயில்களில் உள்ள விமானத்தில் இறைவன் விளையாடுகிறான் என்கிறீர்களா?

மனித விஞ்ஞானிகள் கண்டுபிடித்த விமானம் 777. சுமார் 2000 கோடி ரூபாய்.
இதனைக் கடலுக்கடியே அழித்தது மலேசிய மனிதன். கண்டுபிடித்தது நாசா சாட்டிலைட்களும்,
அவ் விமானம் அனுப்பிய ஸிக்னலும். ஆச்சர்யம் என்னவெனில் விமானி
யாரும் கண்டுபிடிக்கக்கூடாது என்று தொடர்பாடுகருவிகளை நிறுத்திவிட்டு
ஆஸ்திரேலியா வரை ஓட்டியிருக்கிறான். கல்நெய் தீர்ந்து கடலில் சமாதி.
இருப்பினும் கண்டாயிற்று.

மலேசிய விமானம் ஓட்டும் மனிதனின் தவறான செய்கை பல உயிர்களுக்கும்,
விமானத்துக்கும் சாவும் ஜலசமாதியும். 

ஓர் குறிப்பு: விமானம் விழுந்த இடத்தில் தென்மதுரை இல்லை.
தென்மதுரை என்ற ஊர் எங்கும் இருந்ததாக சரித்திர ஆராய்ச்சி காட்டுவதில்லை.
சமணர்களின் தமிழ் இலக்கிய, இலக்கணக் கொடைகளை மறைக்க
சைவர்கள் 8-ஆம் நூற்றாண்டில் கட்டிய கதை இவை. மதுரைக்கு
சுனாமி வந்தது என்பதுபோல், தமிழ்ச் சங்கங்கள் கடலில் அழிந்தன என்பதும்,
தென்மதுரை ஆஸ்திரேலியா கிட்டக்க என்பதும். விஞ்ஞானிகள் தள்ளிவிடும்
புராணக் கூற்றுகள் இவை.

நா. கணேசன்

-----------------------------------------------------------

வணக்கம் ஐயா.

மேற்கண்ட தங்களது குறிப்பிற்கான எனது விளக்கம்.

1) எனது இந்த இழை ‘தென்மதுரை‘ பற்றியது அல்ல.
இந்த இழையில் ‘மதுரை‘ என்று குறிப்பிடப் பெறுவது தற்போதுள்ள மதுரையே ஆகும்.
இந்தக் கட்டுரை தொடர்பான தங்களது விளக்கங்களோ, அல்லது ஐயங்களோ இருந்தால் அன்புடன் இங்கே பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

2) எனது இந்த இழை “தமிழ்ச் சங்கங்கள் கடலில் அழிந்தன“ பற்றியதும் அல்ல.
தமிழ்ச்சங்கங்களின் அழிவு தொடர்பான தங்களது விளக்கங்களோ அல்லது ஐயங்களோ இருந்தால் தனியொரு இழையில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

3) மதுரைக்கு சுனாமி வந்தது பற்றிய புராணக்கூற்றுக்களை புவியியல் விஞ்ஞானிகளின் விளக்கங்களை வரவேற்கிறேன்.
எனது கருத்துக்கள் புராணத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும்.
விஞ்ஞானிகளின் கருத்துகள் அவர்களது துறைசார்ந்த ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

வெறுமனே, மொட்டையா ‘தவறு, சரியில்லை‘ என்று சொல்வதைவிட,
“எவ்வ  துறைவ  துலக  முலகத்தோ
டவ்வ  துறைவ  தறிவு“  
என்ற குறளுக்கு ஏற்ப, துறைசார்ந்த விளக்கங்களின் அடிப்படையில் விஞ்ஞானிகளின் கருத்துக்களை வரவேற்கிறேன்.

இந்த இழை தொடர்பான தங்களது மேலான கருத்துக்களை வரவேற்கிறேன் ஐயா.

“கடனறிந்து  காலங்கருதி   யிடனறிந்
தெண்ணி   யுரைப்பான்   றலை“
என்ற குறளுக்கு ஏற்ப விரைவில் புராணத்தில் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை புவியியல் ஆதாரங்களுடன் பதிவு செய்திட முயற்சிக்கிறேன்.

Singanenjam Sambandam

unread,
Mar 29, 2014, 3:56:26 AM3/29/14
to mint...@googlegroups.com, thiruppuvanam, Palanichamy Shanmugam, naga rethinam, திருத்தம் பொன்.சரவணன், நா. கணேசன்

வணக்கம் காளை அய்யா,

புவி இயல் பற்றி பேசுவதால் மீண்டும் மூக்கை நுழைக்கிறேன்- சும்மா இருக்க முடியவில்லை...

விரைவில் புராணத்தில் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை புவியியல் ஆதாரங்களுடன் பதிவு செய்திட முயற்சிக்கிறேன்.

மிக நல்ல முயற்சி – தங்களின் முடிவுகள் எங்களுக்கும் பலனளிக்கும்.

“மதுரைக்கு வந்த”  சுனாமி பற்றிய குறிப்புகள்  உள்ள பாடல்களை சொல்லுங்கள்- படிக்க ஆவல்.

கிழக்குக் கடலும் மேற்குக் கடலும் கலந்தன  எனில், தமிழகமும் கேரளமும் முழுமையாக கடலில் மூழ்கியிருக்குமே, உயிர்கள் எப்படித்  தப்பின- இது எப்போது நடந்ததாக புராணம் கூறுகிறது.

அழகர்மலைப் பகுதியில் Fossils  இருக்கும் என நினைக்கும் நீங்கள்-தமிழகம் முழுக்க Fossils இருக்கும் என்று ஏன் எதிர்பார்க்கவில்லை.

ஆப்ரிக்காவில் ஒரு முறைதான் சுனாமி  -----

இப்படியெல்லாம் எப்படி உங்களால் ஊகிக்க முடிகிறது....

ஒரு கைப்பிடிஅளவு மண் இல்லாமலும், ஒருகடுகளவு தண்ணீர் இல்லாமலும் உள்ள பாறையில் மிகப்பெரிய மரங்கள் உள்ளதை இன்றும் காணலாம்.   (திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள மரமே இதற்குச் சிறந்த சான்று)

அய்யா , இப்போது அங்கே மண் இல்லாமல் இருக்கலாம்- அந்த மரம் முளை விட்டபோது அங்கே மண் இருந்திருக்கும்-இப்போதும் அதன்  வேர்கள் பாறை இடுக்குகளில் நுழைந்து அங்குள்ள மண் மற்றும் ஈரத்தை பயன் படுத்திக் கொண்டிருக்கும்.

 நாகமலையில் உயிர்களின் படிமங்கள் ஏதும் இல்லை என்று அறிவியலார் அறுதியிட்டுக் கூறும்வரை,........

அய்யா, நாகமலையிலுள்ள பாறைகளில் உயிர்களின் படிமங்கள் ஏதும் இல்லை என உறுதியாக அறுதியிட்டுக் கூறுகிறேன். காரணம் அவை படிவப்பாறைகள் அன்று.ஆதலின் புறப்பொருள் வெண்பாமாலைப்  பாடலை உயர்வு நவிற்சியாகக்  கொள்வதே சரி.

 

அன்புள்ளம் கொண்டு, 1) பசுமலையும், 2) திருப்பரங்குன்றம் (தியாகராசர் பொறியியல் கல்லூரி) அருகே உள்ள கூடுதட்டிப்பரம்பு மலை

இவ்விரண்டு மலைகளும் எவ்வாறு தோன்றின? எதனால் ஆனவை? இவைகள் களிமண் பாறைகளா? என்பன போன்ற விளக்கங்கள் ஏதேனும் இருந்தால் அளித்து உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

இவைகளை நான் பார்த்ததில்லை , ஆதலின் பதிலிறுக்க இயலவில்லை-அந்தப் பாறைகளின் மாதிரிகளை சென்னை வரும் போது கொண்டுவாருங்கள் –பார்ப்போம் –பேசுவோம்-

 

 

 மேலும், கடற்கரையை அடுத்துள்ள மகாபலிபுரம், திருப்பரங்குன்றம், குன்றக்குடி, யானைமலை முதலான மலைகள் எல்லாம் மொட்டைப்பாறைகளாக இருக்கவும், இம்மலைகளுக்கு மேற்கே உள்ள மலைகள் எல்லாம் மண்போர்த்தி யிருப்பதும் சுனாமியினால்தான் என்று கருதுகிறேன்.

அன்புள்ளம் கொண்டு மேற்கண்ட எனது ஐயப்பாட்டிற்கும் விளக்கம் அளித்து உதவிடுமாறு வேண்டுகிறேன்.

 

முன்பே குறிப்பிட்டதைப் போல , பாறைகளின் கனிம அமைப்பு –கட்டமைப்பு –பருவ நிலை வேறுபாடுகள்  இவைகளைப் பொறுத்தே மண் உருவாதலும்,உருவான இடத்திலேயே அது நிலை பெற்றிருப்பதும் நிகழ்கின்றன-

 

 



Singanenjam Sambandam

unread,
Mar 29, 2014, 4:00:52 AM3/29/14
to mint...@googlegroups.com, Kalairajan Krishnan

Geetha Sambasivam

unread,
Mar 29, 2014, 4:21:40 AM3/29/14
to மின்தமிழ்
  
//(சுருக்கமாகச் சொல்வதென்றால் சுனாமியினால் அடித்துச் செல்லபப்பட்ட எச்சங்கள்,  நின்றகோலத்தில் பெருமாள் உள்ள ஊர்களிலும்,  சுனாமியின் தாக்கம் முடிந்தவுடன் கடல்அலைகள் மீண்டும் கடலுக்கே திரும்பும்போது அடித்துச் சென்ற எச்சங்கள் fossil எல்லாம் சேதுக்கரை, கமுதி, சுந்தரபாண்டிய பட்டிணம் போன்ற கடற்கரையை ஒட்டியுள்ள  பெருமாள் அமர்ந்தகோலத்தில் உள்ள ஊர்களிலும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.)//

சகோதரரே, பெருமாள் நின்ற கோலத்தில் உள்ள ஊர்களில் கிடைப்பதற்கும், அமர்ந்த கோலத்தில் உள்ள ஊர்களில் கிடப்பவைக்கும் குறிப்பிடத் தக்க காரணம் என்ன?  பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கும் ஊர்களில் சுநாமி எச்சங்கள் தான் கிடைக்கும் என்பதை எப்படி உறுதியாய்ச் சொல்கிறீர்கள்?
அதே போல் சுயம்பு லிங்கங்கள் இருக்கும் ஊர்களிலும் தொன்மையான எலும்புகள் கிடைக்கலாம் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?



2014-03-26 5:40 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 29, 2014, 2:28:40 PM3/29/14
to Singanenjam Sambandam, mint...@googlegroups.com
வணக்கம் ஐயா.


2014-03-29 13:30 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

வணக்கம் காளை அய்யா,

புவி இயல் பற்றி பேசுவதால் மீண்டும் மூக்கை நுழைக்கிறேன்- சும்மா இருக்க முடியவில்லை...

தங்களை வரவேற்கிறேன் ஐயா. தங்களது வரவு நல்வரவு ஆகுக.
 

விரைவில் புராணத்தில் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை புவியியல் ஆதாரங்களுடன் பதிவு செய்திட முயற்சிக்கிறேன்.

மிக நல்ல முயற்சி – தங்களின் முடிவுகள் எங்களுக்கும் பலனளிக்கும்.

“மதுரைக்கு வந்த”  சுனாமி பற்றிய குறிப்புகள்  உள்ள பாடல்களை சொல்லுங்கள்- படிக்க ஆவல்.


  1. திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் 2 ஆம் ஊழிப் பிரளயம் விவரிக்கபப்டுகிறது. அதற்கு முன் ஆண்ட 22 பாண்டிய அரசர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் கீர்த்தி பூடண (பூஷண) பாண்டியன் ஆண்ட போது பிரளயம் ஏற்பட்டது. 

  2. “எழில்புனை யதுல கீர்த்தி யெனவிரு பத்தி ரண்டு

    வழிவழி மைந்த ராகி வையங் காத்த வேந்தர்

    பழிதவி ரதுல கீர்த்தி பாண்டியன் றன்பா லின்பம்

    பொழிதர வுதித்த கீர்த்தி பூடணன் புரக்கு நாளில். 

    (ஆலவாய்க் காண்டம் - ஆலவாய்ப் படலம் -8)


    கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி

    ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்

    பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்

    பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த வன்றே.

    (ஆலவாய்க் காண்டம் -ஆலவாய்ப் படலம்-9)“


    திருஆலவாயான படலம்  முழுவதுமே சுனாமியைப் பற்றியே கூறுகிறது. எனவே நேரம் கிடைக்கும் போது முழுவதையும் வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  http://www.tamilvu.org/slet/l41d0/l41d0pd1.jsp?bookid=68&part=I&link=716


கிழக்குக் கடலும் மேற்குக் கடலும் கலந்தன  எனில், தமிழகமும் கேரளமும் முழுமையாக கடலில் மூழ்கியிருக்குமே, உயிர்கள் எப்படித்  தப்பின- இது எப்போது நடந்ததாக புராணம் கூறுகிறது.

உயிர்கள் எல்லாம் அழிந்து விட்டன என்கிறது புராணம்.
பிரளயம் தோன்றிய வருடம் பற்றிய குறிப்பு இல்லை.  ஆனால் அப்போது கீர்த்திபூடண பாண்டியன் ஆட்சிசெய்து வந்தான் என்கிறது புராணம்.
 

அழகர்மலைப் பகுதியில் Fossils  இருக்கும் என நினைக்கும் நீங்கள்-தமிழகம் முழுக்க Fossils இருக்கும் என்று ஏன் எதிர்பார்க்கவில்லை.

 புராணம் மதுரையை மட்டும் குறிப்பிடுவதாலும்,
எனது தலைப்பும் மதுரையை மட்டுமே நான் குறிப்பிடுவதாலும்,  மதுரையை மட்டுமே நான் அதிகமாக அறிந்திருப்பதாலும் அழகர்மலையை மட்டும் குறிப்பிடுகிறேன்.
ஆனால், மதுரையைக் குறிவைத்துத் தாக்கிய சுனாமியானது தமிழகம் முழுவதையுமே அழித்துள்ளது.  எனது தமிழகம் முழுவதும் மனிதனின் (தமிழனின்) படிமங்கள் கிடைக்க வாய்ப்புகள் நிறையவே உள்ளன.  நான் முன்பே குறியுள்ளதுபோல், பெருமாள் நின்றகோலத்தில் உள்ள (உதாரணமாக திருப்பதி (ஆந்திரா), திருவெள்ளறை, திருவந்திபுரம், திருமுஷ்ணம் முதலான) தலங்களில்  படிமங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று எண்ணுகிறேன்.  

மதுரை அழகர்கோயில் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள மலைகளைப் பற்றி நன்கு அறிவேன்.  ஆனால் தமிழகத்தின் மற்றைய ஊர்கள் பற்றிய எனது கருத்துகள் எனது யூகமே ....(தவறாகவும் இருக்கலாம்)

ஆப்ரிக்காவில் ஒரு முறைதான் சுனாமி  -----

இப்படியெல்லாம் எப்படி உங்களால் ஊகிக்க முடிகிறது....

ஒரு கைப்பிடிஅளவு மண் இல்லாமலும்ஒருகடுகளவு தண்ணீர் இல்லாமலும் உள்ள பாறையில் மிகப்பெரிய மரங்கள் உள்ளதை இன்றும் காணலாம்.   (திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள மரமே இதற்குச் சிறந்த சான்று)

அய்யா , இப்போது அங்கே மண் இல்லாமல் இருக்கலாம்- அந்த மரம் முளை விட்டபோது அங்கே மண் இருந்திருக்கும்-இப்போதும் அதன்  வேர்கள் பாறை இடுக்குகளில் நுழைந்து அங்குள்ள மண் மற்றும் ஈரத்தை பயன் படுத்திக் கொண்டிருக்கும்.

பாறையின் இடுக்குகளில் மரங்கள் வளர்கின்றன.  இடுக்குகளின் மரங்களின் மக்கிய இலைகளும், பாறையின் இடுக்குகளில் தேங்கும் தண்ணீரும் மரத்திற்குப் பயன்படுகின்றன.
 

 நாகமலையில் உயிர்களின் படிமங்கள் ஏதும் இல்லை என்று அறிவியலார் அறுதியிட்டுக் கூறும்வரை,........

அய்யா, நாகமலையிலுள்ள பாறைகளில் உயிர்களின் படிமங்கள் ஏதும் இல்லை என உறுதியாக அறுதியிட்டுக் கூறுகிறேன்.

ஐயா, நீங்கள் சொல்வது சரியே.

மதுரைக்கு நான்கைந்து முறை சுனாமி வந்துள்ளது.
ஒவ்வொரு முறை வரும் போதும் சுனாமியினால் அடித்துவரப்பெற்ற களிமண்ணும், மணலும்  நாகமலையின் மேல் அடுக்கடுக்காக திட்டுக்களாகச் சேர்ந்துள்ளன என நினைக்கிறேன். எனது கணிப்பு சரியாக இருந்தால், நாகமலையின் மேல் படிமங்கள் இருக்க வாய்ப்பு இல்லை.  அதன் உள்ளேயே இருக்கவே அதிகம் வாய்ப்புள்ளது.  
ஆனால், பசுமலை, அழகர்கோயில்மலை, அரிட்டாபட்டி மலை, மேலூருக்கு அருகில் உள்ள இரண்டு சிறிய குன்றுகள், இவற்றின் மேற்பரப்பில் படிமங்கள் கிடைத்திட நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

காரணம் அவை படிவப்பாறைகள் அன்று.ஆதலின் புறப்பொருள் வெண்பாமாலைப்  பாடலை உயர்வு நவிற்சியாகக்  கொள்வதே சரி.

அடுத்தடுத்து வந்த சுனாமியின் அலைகளால் நாகமலையின் மேலே இருந்தனவற்றை அடித்துச் சென்றிருக்க வாய்புகள் அதிகம். 
எனவே நாகமலையை துளைத்து ஆராய வேண்டும் எனக் கருதுகிறேன் ஐயா.

ஆனால், ஒருமுறை படிந்தனவற்றை மறுமுறை அடித்துச் செல்லமுடியாதபடியுள்ள இடங்களும் உள்ளன.  மதுரை அருகே வட்டவடிவில் பெரும் பள்ளத்தாக்குகள் இருந்துள்ளன.  (இந்த இடங்கள் எரிகற்கள் விழுந்த இடங்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.)
Inline images 1 இந்தக் குறிப்பிட்ட இடங்கள் முன்பு பெரும்பள்ளங்களாக இருந்து பின்னர் சுனாமியினால் மூடப்பெற்ற இடங்களாகும்.  இந்த இடங்களிலும் தமிழரின் உடற் படிமங்கள் கிடைத்திட வாய்ப்புகள் மிக அதிகம்.


 

அன்புள்ளம் கொண்டு, 1) பசுமலையும், 2) திருப்பரங்குன்றம் (தியாகராசர் பொறியியல் கல்லூரி) அருகே உள்ள கூடுதட்டிப்பரம்பு மலை

இவ்விரண்டு மலைகளும் எவ்வாறு தோன்றினஎதனால் ஆனவைஇவைகள் களிமண் பாறைகளாஎன்பன போன்ற விளக்கங்கள் ஏதேனும் இருந்தால் அளித்து உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

இவைகளை நான் பார்த்ததில்லை , ஆதலின் பதிலிறுக்க இயலவில்லை-அந்தப் பாறைகளின் மாதிரிகளை சென்னை வரும் போது கொண்டுவாருங்கள் –பார்ப்போம் –பேசுவோம்-

ஆமாம் ஐயா.
புராணங்களின் அடிப்படையிலான எனது கருத்துக்களனைத்தும் தங்களால் ஆராயப்பட வேண்டும்.  அவசியம் தங்களைச் சந்திக்கிறேன் ஐயா.
 

 

 

 மேலும்கடற்கரையை அடுத்துள்ள மகாபலிபுரம்திருப்பரங்குன்றம்குன்றக்குடியானைமலை முதலான மலைகள் எல்லாம் மொட்டைப்பாறைகளாக இருக்கவும்இம்மலைகளுக்கு மேற்கே உள்ள மலைகள் எல்லாம் மண்போர்த்தி யிருப்பதும் சுனாமியினால்தான் என்று கருதுகிறேன்.

அன்புள்ளம் கொண்டு மேற்கண்ட எனது ஐயப்பாட்டிற்கும் விளக்கம் அளித்து உதவிடுமாறு வேண்டுகிறேன்.

 

முன்பே குறிப்பிட்டதைப் போல , பாறைகளின் கனிம அமைப்பு –கட்டமைப்பு –பருவ நிலை வேறுபாடுகள்  இவைகளைப் பொறுத்தே மண் உருவாதலும்,உருவான இடத்திலேயே அது நிலை பெற்றிருப்பதும் நிகழ்கின்றன-

தமிழகத்தில் உள்ள பாறைகள் எல்லாம் ஒரே காலத்தில் தோன்றியிருக்கச் சில பாறைகளின் (மலைகளின்) மேற்பகுதி மட்டும் சிதைவுற்று மண்ணாக மாறவும், அருகில் உள்ள மற்றொரு மலை (பாறை) அவ்வாறு மாறாதிருக்கவும் வாய்ப்பு இல்லை யல்லவா?
அதாவது அழகர்கோயில்மலையும் அரிட்டாபட்டி மலையும் சிதைவுற்றிட,
அருகில் உள்ள யானைமலையும் திருப்பரங்குன்றமலையும் சிதைவடையாமல் எப்படியிருக்க முடியும்?

-----------------------------------------------------
எனது யூகம்.
எல்லாப் பாறைகளும் சிதைவடைந்துள்ளன.
ஆனால் கிழக்கே உள்ள கடலிலிருந்து  சுனாமி உண்டாகி மேற்கு நோக்கிச் செல்லும் போது, தரைப்பகுதியில் புகுந்தவுடன் கடல்அலைகளை முதலில் எதிர்கொண்ட (திருப்பரங்குன்றம், யானைமலை, குன்றக்குடி, மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம்முதலான) மலைகளின் மேல் இருந்த மண் திட்டுக்களை அடித்துச் சென்றுவிட்டது.  
அவ்வாறு அடித்துச் செல்லப்பட்ட மண்ணும், சுனாமியினால் தோன்றிய களிமண்ணும் சேர்ந்து இம்மலைகளுக்குப் பின்னால் ( மேற்கே ) உள்ள மலைகளின் மேல் படிந்துள்ளன.  

எனவேதான், கிழக்குக் கடற்கரையை ஒட்டியுள்ள மலைகள் எல்லாம் மொட்டையாக பாறைமலைகளாக இருக்கின்றன.
தமிழகத்திற்கு மேற்கே உள்ள மலைகளின் மேற்பகுதியும்,  கேரளத்தில் உள்ள மலைகளிலும் மணற்படிமங்கள் உள்ளன.  
------------------------------------------------------

சட்டெனப் பொய்யென்றும், பொருந்தாக் கூற்று என்றும் ஒதுக்கிவிடாமல்,
தொடர்ந்து தாங்கள் கவனம் செலுத்தி காரணகாரியங்களுடன் கூறிவருவது எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.  நன்றியுடைன்.

தொடர்ந்து இன்னும் சில படங்கள் உள்ளன.  அவற்றையும் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 29, 2014, 2:51:38 PM3/29/14
to mintamil, Geetha Sambasivam
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

எல்லாம் ஒரு யூகந்தான்..


1) நின்ற கோலம் 
சுனாமியானது கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பி மேற்கு நோக்கிச் செல்லும் போது,
மிகப்பெரிய பாறைகளால் ஆனா மலைகளே இந்தச் சுனாமியைத் தடுத்துள்ளன.
இவ்வாறு தடுத்த இடங்களில்தான் மிகவும் பழமையான பெருமாள் கோயில்கள் உள்ளன.
இந்தக் கோயில்களில் எல்லாம் பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார்.

பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கும் இடங்களை என்னைவிடத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
அன்புள்ளம் கொண்டு நின்ற கோலத்தில் உள்ள பழமையான பெருமாள் கோயில்களின் பட்டியல் ஒன்றைக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அத்திருத்தலங்களில் எவ்வாறு சுனாமி தாங்கியிருக்கும் என்பதை நான் விளக்க முற்படுகிறேன்.

நான் அறிந்தவரையில்
ஆந்திராவில் உள்ள திருப்பதி, திருவெள்ளறை, திருமுஷ்ணம், அழகர்கோயில், திருமோகூர் (மதுரை) ஆகிய திருத்தலங்களை இனிவரும் இழைகளில் விளக்க முற்படுகிறேன்.

2) சுயம்புலிங்கங்கள்
சுயம்புலிங்கங்கள் உள்ள இடங்களில் எல்லாம் மிகவும் பழமையான தீர்த்தங்கள் உள்ளன. 
இத் தீர்த்தங்களில் நமது முன்னோர்கள் (ஸ்ரீராமன் உட்பட) ஆண்டாண்டுகாலமாகத் திதி தர்பணம் முதலானவற்றைச் செய்துவருகின்றனர்.
எனவே இத் தீர்த்தங்களில் மிகவும் பழமையான மனித எலும்புகள் கிடைத்திட வாய்ப்புகள் மிகமிக அதிகம் என்று கருதுகிறேன்.


இதெல்லாம் ஒரு யூகந்தான்..
விரைவில் பெருமாள் நின்ற கோலத் திருத்தலங்களைக் காண்போம்....
முதலில் அழகர்கோயில்.... தொடரும்...


அன்பன்
கி.காளைராசன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 11, 2014, 4:26:02 AM4/11/14
to mintamil, thiruppuvanam, naga rethinam, திருத்தம் பொன்.சரவணன்
Inline images 1

Inline images 1

 

ஒரு கைப்பிடிஅளவு மண் இல்லாமலும், ஒருகடுகளவு தண்ணீர் இல்லாமலும் உள்ள பாறையில் மிகப்பெரிய மரங்கள் உள்ளதை இன்றும் காணலாம்.   (திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள மரமே இதற்குச் சிறந்த சான்று)

எனவே, மண்ணில்லாமல் பாறைகளில் மட்டுமே வளர்ந்து பயன்தரும் மரஞ்செடிகொடிகள் நிறையவே உள்ளன.
இவை போன்று அந்தக் காலத்தில் இருந்திருக்க வேண்டும்.   மேலும் மரங்கள் இருந்துள்ளதால், ஊர்வன பறப்பனவும், விலங்குகளும் வாழ்ந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும்.

Geetha Sambasivam

unread,
Apr 11, 2014, 5:03:18 AM4/11/14
to மின்தமிழ்
எங்கே எடுத்தது?


2014-04-11 13:56 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:


 

Singanenjam Sambandam

unread,
Apr 11, 2014, 10:33:27 AM4/11/14
to mint...@googlegroups.com
நல்ல படங்கள் , ஆனால் அரிய படங்கள் அல்ல. இது போன்ற காட்சிகளை மழைப் பாதைகளில் பல இடங்களில் காணலாம். மரங்களின் வேர்கள் பாறை இடுக்குகளில் நுழைந்து பெருக்கும் போது  பாறைகள் பிளவு பட்டு சிதைகின்றன. புவியியலில் இது BIOLOGICAL WEATHERING என்று அழைக்கப் படுகிறது. 

விதை முளை விட்டபோது அங்கே மண் இருந்திருக்கும். இப்போதும் பாருங்கள் வேரின் நுனிகள் நீரையும் மண்ணையும் இடுக்குகளில் தேடுவதை. "பாறையில் விழுந்த விதை  முளைக்காது" என்று விவிலியத்திலோ  எங்கோ படித்த நினைவு. 


On Fri, Apr 11, 2014 at 2:33 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
எங்கே எடுத்தது?


2014-04-11 13:56 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:


 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 12, 2014, 12:01:36 PM4/12/14
to mintamil
2014-04-11 20:03 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
நல்ல படங்கள் ,
நன்றி ஐயா.
ஆனால் அரிய படங்கள் அல்ல. இது போன்ற காட்சிகளை மழைப் பாதைகளில் பல இடங்களில் காணலாம்.
ஆமாம்.
மரங்களின் வேர்கள் பாறை இடுக்குகளில் நுழைந்து பெருக்கும் போது  பாறைகள் பிளவு பட்டு சிதைகின்றன. புவியியலில் இது BIOLOGICAL WEATHERING என்று அழைக்கப் படுகிறது. 
 

விதை முளை விட்டபோது அங்கே மண் இருந்திருக்கும். இப்போதும் பாருங்கள் வேரின் நுனிகள் நீரையும் மண்ணையும் இடுக்குகளில் தேடுவதை. "பாறையில் விழுந்த விதை  முளைக்காது" என்று விவிலியத்திலோ  எங்கோ படித்த நினைவு. 
Inline image 1
படம் நன்றி = திரு. உதயன்.

விருட்சங்கள் என்று அழைக்கப்படும் மரங்கள் வளர்வதற்கு மண் தேவையில்லை என்றே கருதுகிறேன் ஐயா.
விதை அசையாமல் இருக்க இடம் மட்டும் இருந்தால் போதும்,  தண்ணீர் கிடைத்தவுடன் அந்த விதை வேர் விட்டு வளர்ந்து விடுகிறது.  செடியாக வளர்ந்த பின்னர், தண்ணீர் இன்றி அப்படியே உயிரோடு இருக்கிறது.  எப்பொழுது மழை பெய்கிறதோ, அந்தக்காலகட்டத்தில் மட்டும் செடி வளர்கிறது.  மழை(தண்ணீர்) இல்லாவிட்டால் அப்படியே வளர்ச்சியின்றி இருக்கிறது.  தண்ணீர் இல்லையென்றாலும் செடி பட்டுப்போய்விடுவதில்லை.  இவ்வகை விருட்சங்கள் வளர சிறிது இடமும்,  சிறிது தண்ணீரிரும் இருந்தாலே போதும்.

கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தில் தமிழகத்தில் இதுபோன்ற விருட்சங்கள் நிறையவே இருந்துள்ளன.  இந்த விருட்சங்களின் படிமங்களேய  சுயம்புலிங்கங்களாகும்.

Suba.T.

unread,
Apr 12, 2014, 2:03:14 PM4/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Fri, Apr 11, 2014 at 11:03 AM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
எங்கே எடுத்தது?



​இவை குன்றக்குடியில் எடுத்த படங்கள் என நினைக்கின்றேன். சேர்ந்து சென்றிருந்தோம் இல்லையா திரு.காளைராசன் அவர்களே?

சுபா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 13, 2014, 9:17:36 AM4/13/14
to mintamil, Geetha Sambasivam, Subashini Tremmel
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

On Fri, Apr 11, 2014 at 2:33 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
எங்கே எடுத்தது?

அன்புச் சகோதரி சுபா அவர்கள் கூறியுள்ளது சரியே.
இந்தப் படம் குன்றக்குடியில் உள்ள சமணர் படுக்கைக்குச் செல்லும்  வழியில் எடுத்தது.

திருப்பரங்குன்றத்தில், மண் இல்லாமல் தண்ணீரில் மட்டுமே வளர்ந்த தாவரத்தின் படம் ஒன்று உள்ளது.  அதையும் பதிவு செய்கிறேன். 
ஆனால் அதைவிட, திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் பாறையில் ஒரு ஒட்டுப்புல்லைப் போல் பாறையில் ஒட்டிக் கொண்டு மரம் ஒன்று வளர்ந்துள்ளது.  அந்தப் படத்தைத் தேடியெடுத்து விரைவில் பதிவு செய்கிறேன்.

இப்படங்களின் வழியாக, கல்தோன்றியிருக்க மண்தோன்றாதிருந்த காலத்திலேயே இதுபோன்ற மரங்கள் வளர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்று அறிந்து கொள்ள முடிகிறது.

N. Ganesan

unread,
Apr 13, 2014, 9:38:25 AM4/13/14
to mint...@googlegroups.com, Geetha Sambasivam, Subashini Tremmel, kalair...@gmail.com
இல்லை ஐயா. சிங்கநெஞ்சன் விளக்கியிருந்தாரே, மண் இருக்கும் இடத்தில் விழுந்த பறவை எச்சங்களால்
முளைத்த கல்லிச்சி மரங்கள். ஆல், அரசு, இச்சி மரங்கள் கல்லைப் பிடித்துக்கொண்டு வளரும்.
எனவே அவற்றைக் கோளி என்பர்,. கொள்ளுதல் > கோளி. These are fig trees whose roots hug the rock tightly.

கிரஹங்கள் ஆளைப் பிடிக்கும் என்று சிந்துசமவெளிக் காலத்திலேயே தமிழர் நம்பினர்.
அதனால் கோள் > க்ரஹம் என்று வடமொழி மொழிபெயர்ப்பு.க்ரஹம் என்பதன் பொருளின் வேர்
தமிழில் தான் உண்டு,

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 15, 2014, 5:32:49 PM4/15/14
to mintamil, Geetha Sambasivam, Subashini Tremmel
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

திருச்சி மலைக்கோட்டையில் எடுத்த இரண்டு படங்களை இணைத்துள்ளேன்.
(அலைபேசியில் எடுத்த படங்கள், தெளிவில்லாமல் இருக்கிறது)

Inline image 2

Inline image 3

சில குறிப்பிட்ட வகை மரங்கள் மண் இல்லாமலேயே வளர்ந்துள்ளன.
இதுபோன்ற மரங்கள் மண்தோன்றாக் காலத்திலேயே வளர்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என்பதை இப்படங்கள் காட்டுகின்றன.

N. Ganesan

unread,
Apr 20, 2014, 12:04:47 PM4/20/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, vall...@googlegroups.com
மண் இல்லாமல் தண்ணீரில் ஊட்டச்சத்து கொடுத்தால் வளரும்  பல தாவரங்கள் உள்ளன. இதனை திருப்பரங்குன்றத்தில் பார்த்தீர்களா?
இத்துறை ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும்:

ஆனால், பாறையில் உள்ள செடி காட்டும் படம் ஹய்ட்ரோபோனிக்ஸ் அல்ல. பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல்
பேராசிரியரைக் கேட்டால் என்ன செடி உள்ளது என்று தெரிந்துவிடும். அதன் விதையை இந்த சித்திரை மாதத்தில்
பாறையில் தூவுங்கள். செடி முளைக்காது. ஆனால், பாறைக்கு நடுவே கொஞ்சம் மண் உள்ள தொட்டியில் தண்ணீரும் கொடுத்தால்
செடிமுளைக்கும்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Apr 21, 2014, 10:08:52 AM4/21/14
to vallamai, மின்தமிழ், Kalairajan Krishnan
வேர் ஊர பாறையும் பிளக்கும்


20 ஏப்ரல், 2014 12:04 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Singanenjam Sambandam

unread,
May 4, 2014, 9:00:04 AM5/4/14
to mint...@googlegroups.com
இந்தப் படம் காளையாருக்குப்  பிடிக்கும்..... 

Inline image 1


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba.T.

unread,
May 5, 2014, 3:05:10 AM5/5/14
to மின்தமிழ்
2014-05-04 15:00 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
இந்தப் படம் காளையாருக்குப்  பிடிக்கும்..... 

Inline image 1

​எனக்கும் பிடித்தது. 
​வித்தியாசமான கோணத்தில் நன்கு எடுக்கப்பட்டுள்ளது.

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 5, 2014, 5:59:30 AM5/5/14
to Minthamil

அந்திரத்தில் நிற்குது ஓர் மரம்
மந்திர மில்லை மாய மில்லை
தந்திர மில்லை தகிடு தத்த மில்லை
சு தந்திரமாய்த் தன் வேர் பிடித்தே நிற்குது அம்மரம்



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Innamburan S.Soundararajan

unread,
May 5, 2014, 6:53:33 AM5/5/14
to mint...@googlegroups.com
அவரொரு வேராளி.
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 7, 2014, 2:08:30 AM5/7/14
to mintamil
வணக்கம் ஐயா.


2014-05-04 18:30 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
இந்தப் படம் காளையாருக்குப்  பிடிக்கும்..... 
ஆமாம், ஆமாம். 

Inline image 1

அடிமண், ஆணிவேர் எல்லாம் ஆட்டம் கண்டுவிட்டாலும்,
நிமிர்ந்த தன்நிலையிலிருந்து சிறிதும் பிறழாத மரம். 

“நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது“
என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்கிறது.

அரியதொரு படத்தை வழங்கியதற்கு நன்றி ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 5, 2014, 2:33:15 AM11/5/14
to mintamil, bala subramani, SANJEEVIKUMAR TLsanjeevikumar
கடும் பாறைகளுக்குக் கீழே மண் உள்ளது.




மண் மேல் கல் தோன்றியது எவ்வாறு?
இவ்வாறான புவி அமைப்புகள் எப்படி உருவாகின?




பிரளய காலத்தில் ஏற்பட்ட கடல்அலைகளால் (சுனாமியினால்) அடித்துவரப்பட்ட மண், பாறைகளுக்குக் கீழே படிந்துள்ளது என்று உறுதி செய்யலாம்.

அன்பன்
கி.காளைராசன் 





2013-12-10 15:25 GMT+05:30 கி.காளைராசன் <kalair...@gmail.com>:

மதுரைக்கு வந்த சுனாமி

Inline image 1

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுமத்ரா தீவுகளில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தாய்லாந்து, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சுனாமி ஏற்பட்டது.  இதனால் மிகப்பெரும் அலைகள் தோன்றித் தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இருந்த மீனவ கிராமங்களை அழிந்தன.  கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள்  உயிரிழந்தனர்.  பல ஆயிரம் பேர் வீடு, உடமைகளை இழந்தனர்.  கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி வந்த 500 பேரைக் காணவில்லை.  வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து சுமார் 100-200 மீட்டரிலேயே கடல் இருப்பதால், அலையின் உக்கிரத்தில் அங்கு உயிர் இழப்பு அதிகம்.  தமிழகத்தில் மட்டுமல்லாது அந்தமான் மற்றும் ஆந்திராவிலும் மற்றும் கடலோர மாநிலங்களிலும் இதேபோன்று பெரும் உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளன.  2004 ஆண்டு சுனாமியினால் 2 இலட்சத்து 28ஆயிரம்பேர் (227,898) இறந்துள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.  சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடு ஜப்பான் ஆகும்.

சுனாமியினால் உண்டான சோகமான நிகழ்வுகள் மக்கள் நினைவுகளிலிருந்து இன்னும் நீங்கவில்லை.   ஒவ்வொரு ஆண்டும், சுனாமி தாக்கிய நாளில் கடற்கரை பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் குடம் குடமாக பால் கொட்டியும், பூக்களைத் தூவியும், இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களுக்கு விருப்பமான உணவுப் பண்டங்களைப் படைத்துக் கண்ணீர்விட்டுக் கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  26.12.2013 
Inline image 3

இன்றுடன் சுனாமி தாக்கி 9-ம் ஆண்டுகள் ஆகிவிட்டன.  இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் உற்றாருக்கும் சுற்றாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை திஹிந்து நாளிதழ் தெரிவித்துக் கொள்கிறது.  

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 2, 2015, 2:07:00 AM7/2/15
to mintamil, thiruppuvanam, bala subramani, Palanichamy Shanmugam, naga rethinam, drn...@yahoo.com
வணக்கம்.
மதுரைக்குக் கிழக்கே 10 கி.மீ. தூரத்தில் கீழடி பள்ளிச்சந்தையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் 10 அடி ஆழத்தில் பல்வேறு நிறங்களில் மண்படிமங்களைக் காண முடிந்தது.   மண்படிமங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக மஞ்சள் நிறத்தில் கோடு போட்டுள்ளேன்.  இந்த மண்திட்டுகள் சுனாமியால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற எனது கருத்தை அகழ்வாராய்ச்சி இயக்குநர் அவர்களிடம் தெரிவித்தேன்.  அவர் சுனாமி இங்கே வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.  இது வைகை ஆற்றுப் பெருக்கால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால், அகழ்வாராய்ச்சியில் உள்ள மண்படிமங்கள் போன்றே மலைத்தொடர்களிலும் மண்படிமங்களை நான் கண்டுள்ளேன்.



மேலே உள்ள படம் கீழடி அகழ்வாராய்ச்சியில் எடுத்தது.
கீழே உள்ள படம் கொடைக்கானலில் எடுத்தது.


இது போன்ற மண்படிமங்களை அழகர்கோயில், சேலம் மற்றும் ஆந்திர மலைத் தொடர்களில் கண்டுள்ளேன். 
திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் (சுனாமி) ஏற்பட்டு மதுரையை அழித்ததாகக் குறிப்புகள் உள்ளன. புராணம் குறிப்பிடும் சுனாமியால்தான் இதுபோன்ற மண்படிமங்கள் கீழடியிலும், அழகர்கோயிலிலும், கொடைக்கானலிலும், சேலம் மலைத்தொடர்களிலும் உள்ளன என்பது எனது கருத்து.  இதுபோன்று மண்படிமங்கள் மதுரையில் தோன்றுவதற்கு முன்பே மதுரையில் மக்கள் வாழ்ந்திருந்த காரணத்தினால்தான் “மண்தோன்றாகக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“ என்று தமிழரின் தொன்மை புகழ்ந்து கூறப்படுகிறது.

அன்பன்
கி.காளைராசன்

தேமொழி

unread,
Jul 2, 2015, 2:18:37 AM7/2/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
ஹ்ம்ம் ...

இது போன்ற அறிவியல் கருத்துகளை அத்துறை சார்ந்த ஆய்வாளர்  தக்க சான்றுகளுடன் வைப்பதை, அத்துறை சார்ந்த பிற ஆய்வாளர்ளின் பரிசீலனைக்குப்  பிறகு ஒப்புக்கொள்ளவே வழியுள்ளது.

Let us wait for professional opinions of reputable geologists on this issue 

..... தேமொழி

Singanenjam Sambandam

unread,
Jul 2, 2015, 10:02:12 AM7/2/15
to mint...@googlegroups.com
முன்பே இது பற்றி விளக்கம் அளித்தேன் ........விரைவில் எழுதுவேன்.....

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 3, 2015, 1:29:24 AM7/3/15
to mintamil
வணக்கம்.

2015-07-01 22:18 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஹ்ம்ம் ...

இது போன்ற அறிவியல் கருத்துகளை அத்துறை சார்ந்த ஆய்வாளர்  தக்க சான்றுகளுடன் வைப்பதை, அத்துறை சார்ந்த பிற ஆய்வாளர்ளின் பரிசீலனைக்குப்  பிறகு ஒப்புக்கொள்ளவே வழியுள்ளது.

Let us wait for professional opinions of reputable geologists on this issue 

..... தேமொழி
தங்களது கருத்தைப் பெரிதும் வரவேற்கிறேன்.
தொல்லியலாளரின் ஆய்வு முடிவுகளை மட்டும் கருத்திற் கொள்ளாமல்,
மொழியாளர்கள், புவியாளர்கள், மண் வேதியல் ஆய்வாளர்கள், மற்றும் அக்கிராமத்தார்  அனைவரும் அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்து அவரவரது கருத்தைப் பதிவு செய்திட வேண்டும்.
எல்லோரது கருத்தைக்களையும் ஆய்ந்தறிந்து, அதன்பின் ஒரு முடிவிற்கு வரவேண்டும்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 3, 2015, 1:31:10 AM7/3/15
to mintamil
வணக்கம் ஐயா.
நலமா,

2015-07-02 6:02 GMT-08:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
முன்பே இது பற்றி விளக்கம் அளித்தேன் ........விரைவில் எழுதுவேன்.....
உடல் நலன் சீரானபின்னர், நேரம் கிடைக்கும்போது, சிரமம் இல்லாமல் இருக்கும் போது எழுதுங்கள் ஐயா.
தங்களது கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்பன்
கி.காளைரசான் 

Singanenjam Sambandam

unread,
Jul 6, 2015, 11:20:10 PM7/6/15
to mint...@googlegroups.com

துரைக்குக் கிழக்கே 10 கி.மீ. தூரத்தில் கீழடி பள்ளிச்சந்தையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் 10 அடி ஆழத்தில் பல்வேறு நிறங்களில் மண்படிமங்களைக் காண முடிந்தது.   மண்படிமங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக மஞ்சள் நிறத்தில் கோடு போட்டுள்ளேன்.  இந்த மண்திட்டுகள் சுனாமியால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற எனது கருத்தை அகழ்வாராய்ச்சி இயக்குநர் அவர்களிடம் தெரிவித்தேன்.  அவர் சுனாமி இங்கே வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.  இது வைகை ஆற்றுப் பெருக்கால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

 

அகழ்வாராய்ச்சி இயக்குநர் பதில் முழுக்க முழுக்க சரி. தற்போதைய மதுரை பகுதியில் சுனாமி வந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் மயிலை மியூசிக் அகாடமி எதிரே உள்ள உயர்ந்த கட்டிடம் கட்டப்பட்டபோது, அடிவாரத்திற்கு தோண்டிய மணலைப் படித்தேன -அந்த மணலில் கலந்திருந்த கடல் சிப்பி துண்டுகள் அந்த மணல்  கடல் மணல் என தெளிவாக அடையாளம் காட்டின.-இதன் அடிப்படையில் , அந்தப் பகுதி முற்காலத்தில் கடலின் கீழ் இருந்தது எனக்  கருத இடமுண்டு..- திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகமும் இந்த கருத்திற்கு வலு சேர்ப்பதாகவே  உள்ளது.

பள்ளிச்சந்தையில் அகழப்பட்ட மண்ணை எடுத்து உருப்பெருக்கியின் கீழ் பாருங்கள்—கடல் வாழ் உயிரிங்களின் தடயங்கள் ஏதும் உள்ளனவா என்று. அகழ்வாராய்ச்சி இயக்குநர் சொல்வதுபோல் இது வைகை ஆற்றுப் பெருக்கால் ஏற்பட்டிருக்க வேண்டும்;


பிற, பின்பு......


--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 8, 2015, 5:51:29 AM7/8/15
to mintamil, Singanenjam Sambandam
வணக்கம்.
தங்களது விளக்கத்திற்கு நன்றி ஐயா.

2015-07-06 19:20 GMT-08:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
பள்ளிச்சந்தையில் அகழப்பட்ட மண்ணை எடுத்து உருப்பெருக்கியின் கீழ் பாருங்கள்—கடல் வாழ் உயிரிங்களின் தடயங்கள் ஏதும் உள்ளனவா என்று.
அப்படியே செய்கிறேன்.
அகழ்வாய்வாளர்கள் அவர்களது கண்ணோட்டத்தில் ஆராய்ந்து பார்க்கட்டும்.
அப்பப்ப உங்களைத் தொந்தரவு செய்து கொண்டு, நானும் எனது கண்ணோட்டத்தில் ஆராய்ந்து பார்க்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

Singanenjam Sambandam

unread,
Jul 8, 2015, 10:52:19 PM7/8/15
to Kalairajan Krishnan, mintamil
தொந்தரவுகளை, ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்......அவ்வப்போது விரிவாக பேசுவோம்.......

.இது போன்ற மண்படிமங்களை அழகர்கோயில், சேலம் மற்றும் ஆந்திர மலைத் தொடர்களில் கண்டுள்ளேன். 

திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் (சுனாமி) ஏற்பட்டு மதுரையை அழித்ததாகக் குறிப்புகள் உள்ளன. புராணம் குறிப்பிடும் சுனாமியால்தான் இதுபோன்ற மண்படிமங்கள் கீழடியிலும், அழகர்கோயிலிலும், கொடைக்கானலிலும், சேலம் மலைத்தொடர்களிலும் உள்ளன என்பது எனது கருத்து.  இதுபோன்று மண்படிமங்கள் மதுரையில் தோன்றுவதற்கு முன்பே மதுரையில் மக்கள் வாழ்ந்திருந்த காரணத்தினால்தான் மண்தோன்றாகக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடிஎன்று தமிழரின் தொன்மை புகழ்ந்து கூறப்படுகிறது.

 

 

பாறைகள் சிதைந்தே மண் உருவாகிறது. பாறைகளின் தன்மை ,நில அமைப்பு, தட்ப வெப்ப நிலை இவை பொறுத்தே இது அமைகிறது.மண் தோன்றா காலத்தே மரம் செடி கொடிகளோ,மக்களோ தோன்றியிருக்க வாய்ப்புகள் அறவே இல்லை.

 

 



நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 9, 2015, 3:50:12 AM7/9/15
to Singanenjam Sambandam, mintamil
வணக்கம்.

2015-07-08 18:52 GMT-08:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
தொந்தரவுகளை, ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்......அவ்வப்போது விரிவாக பேசுவோம்.......
தங்களது அன்பிற்கு நன்றி. 

.இது போன்ற மண்படிமங்களை அழகர்கோயில், சேலம் மற்றும் ஆந்திர மலைத் தொடர்களில் கண்டுள்ளேன். 

திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் (சுனாமி) ஏற்பட்டு மதுரையை அழித்ததாகக் குறிப்புகள் உள்ளன. புராணம் குறிப்பிடும் சுனாமியால்தான் இதுபோன்ற மண்படிமங்கள் கீழடியிலும், அழகர்கோயிலிலும், கொடைக்கானலிலும், சேலம் மலைத்தொடர்களிலும் உள்ளன என்பது எனது கருத்து.  இதுபோன்று மண்படிமங்கள் மதுரையில் தோன்றுவதற்கு முன்பே மதுரையில் மக்கள் வாழ்ந்திருந்த காரணத்தினால்தான் மண்தோன்றாகக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடிஎன்று தமிழரின் தொன்மை புகழ்ந்து கூறப்படுகிறது.

 

 

பாறைகள் சிதைந்தே மண் உருவாகிறது. பாறைகளின் தன்மை ,நில அமைப்பு, தட்ப வெப்ப நிலை இவை பொறுத்தே இது அமைகிறது.

ஆனால் வேறுவேறு நிறங்களில் மண்படிமங்கள் பாறைகளின் மேல் அமைந்துள்ளன.
கீழே உள்ள படம் சேலம் அருகே உள்ள மலைக்குன்று.


சில இடங்களில் கடுமையான பாறைக்குக் கீழே மண்படிமங்கள் அமைந்துள்ளன. 
இவ்வாறான இடங்களில் பாறைகளின் நிறங்களும், பாறைகளுக்குக் கீழே அமைந்துள்ள மண்படிமங்களின் நிறங்களும் வேறுவேறாக உள்ளன.

மேலே உள்ள படத்தில் உள்ள மலையின் மேல்பகுதி மிகவும் கடினமான கிரானைட் பாறைகளால் ஆனாது.
நடுவில் மண்படிமங்கள் உள்ளன.  இந்த மண் படிமங்களுக்குக் கீழே மிகவும் கடினமாக கிரானைட் பாறைகள் உள்ளன.

கீழே உள்ள படம் கிரானைட் பாறைகளுக்கு நடுவில் உள்ள மண்படிமத்தைக் கையில் எடுத்துப் பார்க்கிறோம்.

கருநாடகம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் மலைகளில் உள்ள மண்படிமங்களும், 
தமிழகத்தில் அழகர்கோயில் கொடைக்கானல் மலைகளில் உள்ள மண்படிமங்களும் ஒன்றாகவே உள்ளன.


மண் தோன்றா காலத்தே மரம் செடி கொடிகளோ,மக்களோ தோன்றியிருக்க வாய்ப்புகள் அறவே இல்லை.

மண்ணில்லாமல் பாறைகளின் இடுக்குகளில் வளர்ந்துள்ள மரஞ்செடிகள்.
 
மண்தோன்றாத காலத்திலும் இதுபோன்று மரஞ்செடிகள் இருந்திருக்கலாம் அல்லவா?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 9, 2015, 3:53:01 AM7/9/15
to Singanenjam Sambandam, mintamil
2015-07-08 23:49 GMT-08:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.

2015-07-08 18:52 GMT-08:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
தொந்தரவுகளை, ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்......அவ்வப்போது விரிவாக பேசுவோம்.......
தங்களது அன்பிற்கு நன்றி. 

.இது போன்ற மண்படிமங்களை அழகர்கோயில், சேலம் மற்றும் ஆந்திர மலைத் தொடர்களில் கண்டுள்ளேன். 

திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் (சுனாமி) ஏற்பட்டு மதுரையை அழித்ததாகக் குறிப்புகள் உள்ளன. புராணம் குறிப்பிடும் சுனாமியால்தான் இதுபோன்ற மண்படிமங்கள் கீழடியிலும், அழகர்கோயிலிலும், கொடைக்கானலிலும், சேலம் மலைத்தொடர்களிலும் உள்ளன என்பது எனது கருத்து.  இதுபோன்று மண்படிமங்கள் மதுரையில் தோன்றுவதற்கு முன்பே மதுரையில் மக்கள் வாழ்ந்திருந்த காரணத்தினால்தான் மண்தோன்றாகக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடிஎன்று தமிழரின் தொன்மை புகழ்ந்து கூறப்படுகிறது.

 

 

பாறைகள் சிதைந்தே மண் உருவாகிறது. பாறைகளின் தன்மை ,நில அமைப்பு, தட்ப வெப்ப நிலை இவை பொறுத்தே இது அமைகிறது.

ஆனால் வேறுவேறு நிறங்களில் மண்படிமங்கள் பாறைகளின் மேல் அமைந்துள்ளன.
கீழே உள்ள படம் சேலம் அருகே உள்ள மலைக்குன்று.


சில இடங்களில் கடுமையான பாறைக்குக் கீழே மண்படிமங்கள் அமைந்துள்ளன. 
இவ்வாறான இடங்களில் பாறைகளின் நிறங்களும், பாறைகளுக்குக் கீழே அமைந்துள்ள மண்படிமங்களின் நிறங்களும் வேறுவேறாக உள்ளன.

மேலே உள்ள படத்தில் உள்ள மலையின் மேல்பகுதி மிகவும் கடினமான கிரானைட் பாறைகளால் ஆனாது.
நடுவில் மண்படிமங்கள் உள்ளன.  இந்த மண் படிமங்களுக்குக் கீழே மிகவும் கடினமாக கிரானைட் பாறைகள் உள்ளன.

கீழே உள்ள படம் கிரானைட் பாறைகளுக்கு நடுவில் உள்ள மண்படிமத்தைக் கையில் எடுத்துப் பார்க்கிறோம்.


மிகப் பெரிய கடினமான கிரானைட் பாறைகளுக்கு நடுவில் மண்படிமங்கள் உள்ளன.  
இந்த மண்படிமம் சுனாமியினால்  அடித்துவரப்பட்ட மண் என்பது எனது கருதுகோள்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 14, 2015, 1:54:13 AM7/14/15
to Singanenjam Sambandam, mintamil
மண் இல்லாமல், பாறைகளின் இடையே செடிகொடிகள் வளர்ந்துள்ளன. 

கடுமையான பாறையின் இடையே புல் பூண்டுகள் முளைத்துள்ளன.

கடுமையான பாறையில் ஒரு மரம் ஒன்று வளர்ந்துள்ளது.

​இவை போன்று, மண்தோன்றாத காலத்திலும் பாறைகளின் இடையே மரஞ்செடிகள் இருந்திருக்கலாம் அல்லவா?
எனவே மண்தோன்றுவதற்கு முன்னரே மரஞ்செடிகொடிகள் தோன்றி வளர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டே என்றே கருதுகிறேன் ஐயா.
அனைவரது கருத்தையும் அறிய ஆவல்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 19, 2015, 3:49:14 AM8/19/15
to mintamil, s. bala subramani B+ve, tlsanjeevikumar

உ.பி., துன்மன்கஞ் அருகில் உள்ள பாறைகள்.
பிரளய காலத்தில் ஏற்பட்ட சுனாமியால் பாறைகள் அரித்துச் செல்லப் பட்டுள்ளதைக் காண முடிகிறது.

IMG_20150819_090657.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages