எழுத்தாளர் சுஜாதா (ஸ்ரீரங்கம் ரெங்கராஜன்) இன்று
27/02/2008 இரவு 9:22 க்கு ஆசாரியன் திருவடி அடைந்தார்.
http://www.desikan.com/blogcms/?item=200
நா கணேசன்
எழுத்தாளர் சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம், படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. 1970-களில் தமிழ் பத்திரிகைகளில் எழுத்தாளர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோது, அவர்களில் இளம் தளகர்த்தராக சுஜாதா இருந்தார்.
சுஜாதா என்ற புனைபெயர், அவருடைய துணைவியாரின் பெயராகவே இருந்தபோதிலும் அதில் கவர்ச்சி மின்னியது. அவருடைய எழுத்தும் மின்னல், கதையும் மின்னல். மிகப்பெரிய தத்துவ விசாரங்களையும், கள வர்ணனைகளையும் எழுதாமலேயே நாவல்களையும் சிறுகதைகளையும் உள்ளத்தில் பதிய வைத்தவர்.
பெண்களை வர்ணிக்க அவர் செலவிட்ட நேரமும் எழுத்துகளும் குறைவுதான் என்றாலும் வாசகனின் நினைவில் அவை புகுந்துகொண்டு இம்சை செய்த நேரங்கள் அதிகம். இளைஞர்கள் மட்டும் அல்ல யுவதிகளாலும் போட்டி போட்டு வாசிக்கப்பட்டவர்.
அவர் பிறந்த ஸ்ரீரங்கத்தை மட்டும் அல்லாது பெங்களூருவையும் தில்லியையும் (அதன் அஜ்மல்கான் ரோடு, எம்.ஜி. ரோடு மகாத்மியங்கள் உள்பட) வர்ணித்து காசு செலவில்லாமல் "காதல் ஷேத்ராடனம்" போக வைத்தவர்.
விமானம் எப்படி ஓடுகிறது, கம்ப்யூட்டர் எப்படிச் செயல்படுகிறது, ஹைஜாக்குகள் எப்படி நடக்கின்றன, கணினியின் கட்டுப்பாட்டில் எதிர்கால நகரங்கள் எப்படி இருக்கும் என்றெல்லாம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.
ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற நடைச் சித்திரமும், கடைசி பாராவில் கதையின் போக்கையே படு கிண்டலாக மாற்றிய முத்திரைக் கதைகளும் இன்ன பிற உத்திகளும் சுஜாதாவின் முத்திரைகள்.
பத்திரிகைகளில் எழுத தொழில்முறை எழுத்தாளர்கள் ஆயிரம் பேர், நமக்குக் கிடைத்த நல்ல உத்தியோகத்தில் நாலு நாட்டைப் பார்ப்போம், நமது தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்ப்போம் என்று ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன் நினைத்திருந்தால், நமக்கு "சுஜாதா"வின் அறிமுகமே கிட்டியிருக்காது.
எதற்காக எழுத வந்தாரோ, தமிழ் வாசகர்களுக்கு நல்லதொரு எழுத்து விருந்து படைத்தார். அவரைத் தன்னிடம் அழைத்துக் கொண்ட "மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்".
வ.ரங்காச்சாரி
(வாசிக்கலாமோ கூடாதோ என்ற அச்சத்தோடு பள்ளிக்கூட நாட்களிலிருந்து சுஜாதாவின் கதைகளை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் படித்து மகிழ்ந்திட்ட வாசகனின் கண்ணீர்த்துளி அஞ்சலி இது.)
நன்றி: தினமணி
His crispness was the forte of his writing. No doubt he had the highest number of ypouth as his fans!
May his soul rest in peace.
narasiah
எழுத்தாளர் சுஜாதா மறைவு!
எழுத்தாளர் சுஜாதா (ஸ்ரீரங்கம் ரெங்கராஜன்) இன்று
27/02/2008 இரவு 9:22 க்கு ஆசாரியன் திருவடி அடைந்தார்.
http://www.desikan.com/blogcms/?item=200
அன்புடன்
தமிழ்த்தேனீ
2008/2/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
--
My blogs:(all in Tamil)
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
வார்த்தைகள் மாறி இருக்கலாம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
எதிர் பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச
நேரம் முடங்கிப்போனது. கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித்
துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப் படுத்தும் ஒரு
கணக்கு தீர்க்கப் பட்டிருக்கும். 1981 தைமாத ஆரம்பத்தில் மதுரை
தமிழாராட்சி மாநாட்டு மண்டபத்தில் என்னைச் சந்திததில் இருந்து 1999ல்
எனது அவசர புத்தியால் முரண்பட்டதுவரை நமது நட்ப்பு எப்போதாவது நேரிலும்
எப்போதும் இணையத்திலும் செளித்தபடியே இருந்தது. நட்பு மனசுக்கு
பல்லாயிரம் கிலோ மீட்டரும் நடந்து போகிற தூரம்தானே.
மைதொட்டு எழுதுகிற பேனாக்குச்சிக் காலத்தில் இருந்து அதி நவீனக்
கணனிக் காலம்வரைக்கும் சுஜாதா விஞ்ஞானத் தொழில் நுப்பத்தாலும் மனசாலும்
மீண்டும் மீண்டும் பிறந்து காலத்தை வென்றுகொண்டிருந்தார். என்னை கனனியில்
எழுதவைத்ததில் சுஜாதாவுக்குத்தான் முதல் மரியாதை. அடுத்த மரியாதைகள்
அவுஸ்திரேலிய பாலப்பிள்ளைக்கும் சிங்கப்பூர் முத்துநெடுமாறனுக்குமே
சேரும். என்னைப்போலவே வேறு பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் அவரரது
கைவிரலலைப் பற்றித்தான் கணனித் தமிழ் உலலகினுள் காலடி எடுத்து
வைத்தார்கள் என்று பின்னர் அறிந்தேன். மாறும் உலகோடு மீண்டும் மீண்டும்
பிறந்து தலைமுறைகளைக் கடந்து செல்கிற கலை கைவர அமரர் சுஜாதாவின் நட்பும்
எனக்கு உதவியிருக்கிறது. அவரைப்போலவே நானும் இளைய கலைஞர்களது படைப்புகளை
தேடி தேடி வாசிக்கவும் மனம் திறந்து பாராட்டவும் பழகிக் கொண்டேன்.
கால் நூற்றாண்டுகளின் முன்னம் 1981ம் ஆண்டு தைமாதம் மதுரைத்
தமிழாராட்ச்சி மாநாட்டு மண்டபதில்தான் நாங்கள் முதன் முதலாகச்
சந்தித்தோம். கோமல் சுவாமிநாதந்தாதான் சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து
வைத்தார். கோமல் சுவாம்நாதனை தலித் இலக்கிய முன்னொடியும் எனது ஆதர்சமுமான
கே.டானியல் அண்ணாதான் எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார். அந்த பயணம்
முழுவதிலும் எங்களோடு டானியல் அண்ணாவும் இருந்தார்.
ஆச்சரியப் படும்வகையில் பிரபல எழுத்தாளரான சுஜாத்தா என்னுடைய
கவிதைகளை அறிந்து வைத்திருந்தார். 1970பதுகளின் பிற்பகுதியில்
யாழ்ப்பாணம் வந்திருந்த எழுத்தாளர் அசோக மித்திரனூடாக என்னுடைய ஆரம்ப
காலக் கவிதைகள் சில ஏற்க்கனவே தமிழ் நாட்டை எட்டியிருந்தது
(Google chat-lirunthu. Seoul Airport)