- இந்த வரியின் அர்த்தம் புரியவில்லை. அதாவது பொருத்தப்பாடு. உழைப்பின்றி உணவு உண்டாவதும், களவை விடுவதும் நேர் தொடர்பில் இருப்பது போல் வருகிறது. ம்... ம் ... ஒன்றும் புரியவில்லை :-(அனைவருக்கும் உழைப்பின்றி யுண வுண்டாகும்;ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்பாரதியார் பாடலில் ஓர் ஐயம்.ஐயம் இட்டு உண் - என்பது நல்லோர் வாக்கு.
ஐயா... புரியல்லைன்னுதான் சாமி கேட்டேன்.கொஞ்சம் விளங்கச் சொல்லுங்க வாத்யார்சாமி.
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
இதுவும் புரிஞ்சாச்சு. தேவரீர் பாக்கியசாலி. :-)
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
இயற்கை உணவு வேணா கொடுக்கலாம். ஆனாகாரு, ஏசி, பங்களாகாசு, பணம், துட்டு, மணி மணிஇதெல்லாம் யாரு கொடுப்பாங்க்ணா.? :))
ஐயம் இட்டு உண் - என்பது நல்லோர் வாக்கு.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஐயா! வேளாண்மை பண்ணாம இயற்கை எங்கய்யா தானா உணவு கொடுக்குது? ஏதோ காடு செடி கொஞ்சம் உதவலாம். ஆனால் எல்லாருக்குமா?
பொதுவாகக் கவிஞர்களின் வார்த்தைகளுக்குப் பொருள் இல்லாம போவதில்லியே ...அல்லவாஅப்படி ஒரேயடியா சொல்லிடமுடியுமா?எந்தக் கருத்துல சொன்னாருன்னு யோசிக்கலாமே....
***
--
ஏன் கால் நடுங்குது....ஏன் நடுங்குதுங்குறேன் என்ன மாதிரி...:-)
பொறுப்புணர்ந்த வல்லதுரை புண்ணியத்தில் கண்ணேர்சிறப்புறுமே சில்காட்சித் தூள்.
:-)
கண்டவர் விண்டிலராய்க் காட்டுவோர் காணாதஎண்ணும் உளவோ இவண்.
***
:-)
--
ஒன்றைக் குறிப்பிட்டுக் கேட்டுளேன் உள்ளபடிநன்கு விளக்குவார் நீடு.
***
:-)
பாரதியார் பாடலில் ஓர் ஐயம்.
ஐயம் இட்டு உண் - என்பது நல்லோர் வாக்கு.
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி யுண வுண்டாகும்;
- இந்த வரியின் அர்த்தம் புரியவில்லை. அதாவது பொருத்தப்பாடு. உழைப்பின்றி உணவு உண்டாவதும், களவை விடுவதும் நேர் தொடர்பில் இருப்பது போல் வருகிறது. ம்... ம் ... ஒன்றும் புரியவில்லை :-(
--(ஒன்னாங் கிளாஸ் வாத்யார் அப்பவே திட்டினாரு - மரமண்டை உனக்கு... ஒன்னும் புரியமாட்டேங்குதுன்னு. சரிதான் போல )
***
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
புதிய இந்தியாவின் பொன்னொளியாம் சுவாமி விவேகாநந்தர் தம் கல்லூரி நாட்களில் நரேந்திரநாதராக தக்ஷிணேஸ்வரத்துப் பேரொளியாம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவரைக் கண்டதும், அவர் கேட்டதற்கிணங்க பாடிய முதல் பாடல். அருமையான பொருள் பொதிந்த பாடல். கூடவே என்னுடைய தமிழ் மொழிபெயர்ப்பையும் தருகிறேன்.முதன் முதலில் சுவாமி விவேகாநந்தர் தக்ஷிணேச்வரத்து ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்த பொழுது ப்ரம்ம சமாஜத்துப் பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்டதும் பரமஹம்ஸருக்கு இளைஞன் நரேந்திரனின் ஆன்மிக ஜீவிதமே புரிந்துவிட்டது.‘மனமே! ஏன் நீ அந்நிய இடம் இங்கு திரிகின்றாய்?நம் சொந்த நிலயத்திற்குப் போவோம் வா’என்று ஆரம்பிக்கும் ‘மொனொ சொலொ நிஜொ நிகொதொனெ’ என்ற பாடலை இங்கு கேட்டு ரசிக்கலாம்.மனமே நம் நிஜவசிப்பிடம் செல்வோமே !ஸம்ஸாரமாகிய இவ்வன்னிய பூமியில்அயல்நாட்டினன் போலே வேடமிட்டேலட்சியம் அற்றே அலைவதுமேன்?சுற்றியுள்ளவரும்சூழ்ந்துள பஞ்ச பூதங்களும்உன்னுடையர் அல்லவேஒரு நாளும்உனக்கு உரியவை அல்லவேஉன் சொந்தமெனஎவருமே இங்கில்லையேஅந்நியமாம் இவற்றினில்பற்று வைத்தே ஏன் நீஅறிவிழந்தே போனாய்என் மனமே?உன் சொந்தம் எது எனமறந்தும் போனாய் மனமே !சத்தியப் பாதையில்முன்னேறு என் மனமே !சலித்து விடாமல் நீ அனுதினமே !அன்பு என்பதை உன் வழிவிளக்காகஏந்திச் செல் நீ என் மனமே!வழிநடைத் தேவைக்காகநற்குணங்கள் தமையேபோற்றிப் பாதுகாப்பாகக்கொணர்ந்திடு என் மனமே !ஏனெனில் வழியினில்ஆறலைக் களவர்கள் இருவர்அறிவு மயக்கம், பேராசையென்பார்உன் அருந்தனம் அனைத்தையும்கொள்ளையடிக்கவே காத்துக் கிடப்பார்ஆபத்துகளில் உன் தற்காப்புக்கெனஎப்பொழுதும் நீ அண்டைகொள் மனமே!மனச் சாந்தி என்பது ஒன்றும்புலனடக்கம் என்பது ஒன்றும்என்றும் உனக்கரண் ஆகிடுமேசாதுசங்கமே நீ வழி இளைப்பாறத்தகுந்த புகலிடம் ஆகும் என் மனமே !அவ்விடம் நீ தங்கிஅலுப்புற்ற அங்கத் தளர்வுகள் நீங்கிமேற்கொண்டு செல்லும் வழியினைப் பற்றிஏற்ற நல் உபதேசம் கேட்பாய் !என்றும் உனைக் கண்வைத்துக் காக்கும்அவன் உண்டோ என ஐயுற்றுப் பார்க்கும்உன் சந்தேகம் தீர்ந்திடக் கேட்பாய் !வழியினில் பயமெனில்மொழிந்திடும் அவன் நாமத்தைஉரக்கச் சொல் மனமே !ஏனெனில் அவனே அந்தப்பாதைக்கெல்லாம் தலைவன்;அவன் பேரைச் சொன்னாலேமரணமும் தலை தாழ்த்தி வண்ங்கிடுமே.மனமே என் மனமே !மனமே நம் நிஜவசிப்பிடம் செல்வோமே !***(மொழிபெயர்ப்பு -- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் )***
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றிங்க பவளா. ஆம் நல்ல பண்புகள் மறைந்துகொண்டிருக்கின்றன.
நான் நடுநிலையான விமரிசன ரீதியான மனப்பான்மை உடையவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் மனத்தையே மிகவும் ஆராய்ந்து பார்த்தால் சில சாய்வுகள் கலந்துதான் இருக்கின்றன.
சிறுவயதிலேயே ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர் என்ற விதந்த ஈடுபாடு கொண்டதன் காரணமாக என் மனத்தில் அவர்களும் அவர்கள் சொன்னவைகளும் எப்படியோ சான்று நிலைகளாகத் தக்க வைக்கப் படுகின்றன. அவர்களையும் விமரிசன ரீதியில் பார்த்தாலும் சுற்றி வளைத்து, விளக்கச் சுகத்திலோ அல்லது ஒப்புக்கு விமரிசித்து விட்டோம் போதும் அவ்வளவுதான் என்று மனத்தைச் சாந்தியடையச் செய்தோ பின்னர் தொடர்மொழியாட்டம் போய்க் கொண்டுதான் இருக்கிறது. என் மனத்திலேயே இவ்வளவு பயஸ் - சாய்வுப் படர்வு என்றால் அப்புறம் நான் எப்படிப் பிறரைச் சொல்ல? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் அப்படித்தான் இருக்கும் போலும். முழுமையான சாய்வு மனநிலையற்ற அணுகுமுறை இயலாத ஒன்றாயின் அப்பொழுது வெளிப்படையாக என்னுடைய மனச் சாய்வுகள் இன்ன இன்னன்னவை என்று கூறிவிடுதல்தான் செயற்பாலது போலும்!***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஏணிக்குச் சிறப்பு. ஆனால் ஏணியில் ஏறி எல்லாரும் போய்க் கொண்டிருப்பார்கள். ஏணி சாய்ந்தபடியே கிடக்க வேண்டியதுதான். அந்தச் சிறப்பு எனக்கு வேண்டாம்பா :-)
சரியாய் நிலைக்கும் உலகு
திருக்குறளுக்கு ஆழ அகலமான ஓர் உரை செய்என்றது மனத்தில் ஒரு குரல்அரிஸ்டாட்டிலை முழுக்கவும் தமிழில் கொண்டுவாஎன்றது ஒரு குரல் மனத்தில்அயின்ராண்டின் தத்துவ நுணுக்கம் பற்றி விரிவாக எழுதுஎன்றது மற்றும் ஒரு குரல்வேத நூல்களில் ஆராய்ச்சியில் இறங்குகிரேக்கம் முதலிய உலக தத்துவப் பள்ளிகளை ஒப்பாய்வு செய்உன்னுடைய தத்துவ இயல் நூலை எழுதிமுடிஇப்படிஇப்படிஇப்படி...............குரல்களின் தொல்லை அதிகமாகவே...எப்படா வெயில் சாயும் என்று பார்த்துவெளியில் நடக்கப் போய்விட்டேன்நிம்மதிஅலுக்க சலிக்க நடந்துவந்துவிட்டால்இரவு நன்கு தூங்கிவிடலாம்இனிமேல் தொல்லை நாளைக்குத் தானேபார்த்துக் கொள்ளலாம்இன்றைய பாடு இன்றைக்குஇளமையில் என்னுடன் கோலி விளையாடியநண்பனை இன்று பார்த்தேன்கவலையே இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தான்நீ கொடுத்து வைக்கலையே ரங்கா!நல்லாதோர் வீணை செய்தே என்றபாரதியைப் படித்தாய்...இப்படித்தான்..போ..
--***
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
..என்று சொன்னால் ,உங்கள் சுறுசுறுப்பு எனக்கு வராது தாயின்னு சொல்லி விட்டு சென்று விடிவீர்கள், என்பதும் தெரியுமே.சுபா>>>>>
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதைத்தான் சொல்வென்.மலேசியாவில் ஒரு சின்னப் பெண் வாழ்வில் மேன்மையுற வேண்டும் என்று கிளம்பிஐரோப்பா சென்று இன்று இவ்வளவு சாதித்துக் கொண்டு இருக்கிறார் என்றால் அந்தச் சுறுசுறுப்பு சும்மாவா?(ஆனால் அந்தச் சின்னப் பெண்ணின் துணிச்சல் - நினைத்தால்எனக்கு பய உணர்ச்சி ஏற்படுகிறது இன்றும்.)***
செய்த செயலின் விளைவிலிருந்துயாரும் தப்புவதில்லை.செயல் செயலின் விளைவுகள்என்னும் சங்கிலி அறுபடாமல் சுழல்கிறதுஐயோ என்று அழுபவர்அழிவைப் பயிர் செய்யும் காலத்துஅகங்கார போதையில் எதையும் உணர்வது இல்லை;ஆனால் எதைச் சொல்லி அழுதாலும்வேடிக்கை பார்த்தபடியே வினைச் சுழலம்சுழல்கிறது அதன் பார்க்கும் கண்கள்பரிதாபப்பட அமைக்கப்படவில்லை.யாரும் பார்க்கவில்லை என்றுதீமை புரியும் ஒருவரைப்பஞ்ச பூதங்களும் பார்த்து நகைக்கின்றன.வானில் ஈரம் இருக்கிறதாகாலத்திற்குக் கண் இருக்கிறதாஎன்றெல்லாம் ஏங்கும் மனிதர்முன்பு தீமை புரியும் காலத்தேதம் கண்ணையும், நெஞ்சின் ஈரத்தையும்எங்கே தொலைத்தனர் அகங்கார வெறியில்?எங்கோ தொடக்கம் இந்த நெடுஞ்சாலைஎங்கோ போகிறதுஎங்கு முடியும் என்று எவரே கண்டார்தொடங்கும் முன்முடிந்த பின்என்ற நிலைகளைக்கணக்கிட்டுப் பேசிக் காலம் போக்குவதற்குப் பதில்இன்று இப்பொழுது இக்கணம்செயலின் விதியை உணர்ந்து நின்றால்நன்மையின் நனவில் அடங்கி நின்றால்அவை அவை என்னவாய் இருந்தால் என்னநன்மைதான் விளையும் என்ற விதிஇன்றைய கணத்தில் சுழலும் அன்றோ!அடக்கத்தின் அமைதி ஓரார்அழிவிற்கே அடிமை பூண்டார்திடமாகத் தொடரும் வினையின்சுழன்றிடும் வட்டம் தாண்டஅடம் பிடித்து ஏதோ செய்வார்அம்மவோ கொடியவாறே!***
நன்றி.ஆனால் மின் தமிழ் மேடை வேண்டாம். இங்ஙனமே அமைக.
பொருள்நீர் என்ற ஒன்றுஇல்லாதாயின்நிலம் காயும்நிலம் என்ற ஒன்றுகாய்ந்தால் அந்தவான் பெயுமோ?வான் என்ற ஒன்றுபாழே ஆயின்அருள் எங்கே?அருள் என்ற ஒன்றுவறண்டதாயின்வாழ்வெங்கே?வாழ்வென்ற ஒன்றுஇல்லாதாயின்உலகெங்கே?உலகென்ற ஒன்றுஇருக்கும்வரையில்விடையெங்கே?விடையென்ற ஒன்றுகிட்டும்வரையில்தேட்டம் இங்கேதேட்டம் என்ற ஒன்றுதொடரும்வரையில்பொருள் இங்கே.***
//வாழ்வென்ற ஒன்றுஇல்லாதாயின்உலகெங்கே?//அருமையான வரிகள்
சேவல் அரவம் பன்னி
ஒன்று ஒன்றின் வாலைக் கவ்வி
உள்ளடக்கும் வட்டம்
வெளிச்சம் இருட்டு சமமாய்க்
கவிந்ததொரு வட்டம்
ஆறு உலகம் ஒருங்கே
அடங்கிக் கிடக்கும் வட்டம்
அத்தனையும் உள்ளடக்கி
ஆர்ந்த வெளிவட்டம்
அதில் பன்னிரண்டு கட்டம்
வாழ்க்கை என்னும் வட்டம்
ஒன்றை ஒன்று நம்பி
ஒன்றால் ஒன்று கிளம்பி
ஒன்று ஒன்றை நெம்பி
ஒன்றுபோல் சுழலும் வட்டம்
இதைக் கண்டு பிடித்தாலோ
காணாமல் போவாய்
அப்புறம் உன் இட்டம் !:-)
***Any guess what is this ?*
>>>சீன ஆண்டுகள்இல்லையம்மா.சங்கரக்ஷிதா என்னும் பௌத்த ஆசானின் இயற்பெயர் டென்னிஸ் லிங்வுட் என்பது. தெற்கு லண்டனில் 1925 ஆம் ஆண்டு பிறந்தவர். தாமாகவே புத்தரின் அரிய அட்டாங்கிக மக்கா (ஆர்ய அஷ்டாங்க மார்க்கா) பற்றி விரிவாகக் கற்று த்ரிரத்னா புத்திஸ்ட் ஆர்டர் என்னும் அமைப்பை உருவாக்கியவர். அவரது நூல் ஒன்று விஷன் அண்ட் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்பது. அதில் வீல் ஆஃப் லைஃப் - வாழ்க்கை வட்டம் பற்றி பௌத்தத்தில் வரும் சில கருத்துக்களைக் கூறுகிறார். அதில் முக்கியமானது சம்யக் த்ருஷ்டி என்பது. அதை படம் ரூபமாகவும் அல்லது உரைநடை கொண்டும் புரியவைக்கும் இருவழிகள் உண்டு என்கிறார். அதில் படம் ஒன்றில் அடிப்படைக் கருத்துக்களை அடக்கும் ஒரு வடிவு இதுவாகும்.The Wheel of Life comprises four concentric circles. Within thecentral circle, which forms the hub of the wheel, are three animals,a cock, a snake, and a pig, each biting the tail of the animalin front. These animals represent the three poisons of greed, hatred,and delusion which control our minds and make the wholewheel of mundane existence revolve. Outside the hub is a secondcircle, divided into two equal segments, one black and onewhite. The white half represents the good or ethical path leadingupwards, to states of happiness. The black half represents thebad or unethical path leading downwards, to states of misery.The third circle is divided into six segments representing the different‘worlds’ or spheres of existence within which, accordingto Buddhism, sentient beings are continuously reborn. These sixworlds are those of the gods, titans, hungry ghosts, hell beings,animals, and humans. The outermost circle of the wheel, whichforms the rim, is divided into twelve segments. These are thetwelve nidãnas, or links in the process which is called DependentOrigination, or Conditioned Co-production (pratîtyasamutpãda).These show in detail the whole process of birth, life,death, and rebirth.
நூறு பக்கங்கள் கொண்ட நூல். ஆன்லைனில் வைத்திருக்கிறார்கள். அருமையான விளக்கம்.***
--
பௌத்தக் கருத்துக்களைப் பற்றிச் சிலர் பேசக் கேட்பது மிக மகிழ்ச்சி தருவது. அஜன் ப்ரஹ்மவம்ஸோ, முதலிய இன்னும் பலர். அதில் ஒருவர் பௌத்தப் பிக்ஷுணியான ரொபிநா கோர்டின். அவருடைய அனுபவம் செறிந்த உரையாடல் மிகவும் நுட்பமான கருத்தையும் கண்முன் நிறுத்தும்.
***
--
பொறுமை என்பது என்ன?யாருமே கைகொடுக்காத ஒருவருக்குஅவர் செய்யும் பணியின் முக்கியம் கருதிஉதவி செய்யினும் அவர்பதிலுக்கு மதிப்பதில் நன்றியில்வெகு அலட்சியமாகத் தவறக்கூடும்என்று உணர்ந்தும் மீறிக் கைகொடுத்து உதவிஅவரும் நிலைபெற்று அதன் பின்னர்பல உதவிகளும் வந்ததால்அதைப் பேணி நம்மிடமே வந்துஅதையெலாம் போற்றிநாமும் மெதுவாக நாமும் முதற்கண்செய்ததை நினைவுறுத்த முயலும் போதுஓ நீங்களும் உதவினீங்களா.. யா யா
என்னும் போது
தெரிந்ததுதான் என்றுவெறும் டிகாக்ஷன் போல்விழுங்கி அடுத்த வேலையைப் பார்க்கும்இடைப்பட்ட நிலையே பொறுமை.***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.