புவியன்பு மடல் - 2

163 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Aug 28, 2009, 10:08:58 PM8/28/09
to Min Thamizh
வெள்ளையடித்து வெப்பத்தைக் குறைப்போம்!

கே.என்.ராமசந்திரன்

கடந்த ஜூன் ஆறாம் நாளை உலகச் சுற்றுச்சூழல் தினமாக உலகெங்கும் கொண்டாடி முடித்துவிட்டார்கள்.

வழக்கம்போல,
  • பிளாஸ்டிக் குப்பைகளைத் தடை செய்ய வேண்டும்
  • மின்சார நுகர்வைக் குறைக்க வேண்டும்
  • பழைய காகிதங்களையும், துணிகளையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும்
  • கரிமக் குப்பைகளை உரமாக்க வேண்டும்
  • குளியல் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் நீரைத் தோட்டங்களில் பாய்ச்சி, கறிகாய்களை உற்பத்தி செய்ய வேண்டும்
என்பன போன்ற அறிவுரைகள் தாராளமாக அள்ளி வீசப்பட்டுள்ளன.

நோக்கியா நிறுவனம் பழைய செல்பேசிகளையும் இதர மின்னணுச் சாதனங்களையும் சேகரித்துச் சமையல் பாத்திரங்களாகவும், பூங்கா பெஞ்சுகளாகவும் மறுசுழற்சி செய்து வழங்கப் போவதாகச் சொல்கிறது. அத்துடன் தன்னிடம் தரப்படும் ஒவ்வொரு செல்பேசிக்கும் ஒரு மரக்கன்றை நடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. நல்ல நோக்கம். நல்ல முயற்சி.

மனிதக் காரியங்களால் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பது கட்டாயம் என்று விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் எச்சரிக்கிறார். தமிழகத்தின் நீண்ட கடற்கரையே ஒரு சாபமாக மாறிவிடலாம் என அவர் கூறுகிறார். வளிமண்டல வெப்பநிலை ஒரு செல்சியஸ் டிகிரி உயர்ந்தாலும் ஹெக்டேருக்கு முக்கால் டன் என்ற அளவில் நெல் உற்பத்தி குறையும். கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையோர வயல்கள் மூழ்கினால் நெல் உற்பத்தி வெகுவாகக் குறையும்.

இமயமலைப் பனியாறுகள் உருகி நேபாளத்தில் வெப்ப அபாயத்தை உண்டாக்கி வருகின்றன.

அடுத்த
50 ஆண்டுகளில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்லத் திட்டமிடுகிறார்கள்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நவீன உலகின் விவசாயப் பண்ணைகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் எனப் பலவகையான காரணிகள் உள்ளன.

இதெல்லாம் சரிதான்.

அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.

அமெரிக்க அரசின் ஆற்றல்துறை அமைச்சர் ஸ்டீவன் சூ வீடுகளின் கூரைகள், மொட்டை மாடிகள், சாலைகள், வாகனங்களின் மேற்பரப்புகள் என வெயில்படுகிற எல்லாப் பரப்புகளிலும் வெள்ளையடித்துவிட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி.

அவர் சொன்னால் அர்த்தமிருக்கும்.

வெள்ளை நிறப்பரப்புகள் தம் மீது விழும் வெப்பத்தில் எண்பது விழுக்காடு வரை பிரதிபலித்து வானுக்குத் திருப்பி அனுப்பிவிடும். மொட்டை மாடியில் வெள்ளையடிப்பதால் வீட்டுக்குள் இறங்கும் வெப்பம் குறைந்து மின் விசிறிகள், குளிர் சாதனங்கள் போன்றவற்றின் தேவை குறையும். கார்களின் மேற்பரப்பு வெள்ளையாக இருந்தால், உள்ளே சூடு குறைந்து ஏ.சி போடாமல் சமாளிக்க முடியும். இவ்விதமாக வெள்ளையடிப்பது, உலகிலுள்ள அத்தனை கார்களும் பதினோரு ஆண்டுகளுக்கு ஓடாமலிருந்தால் ஏற்படக்கூடிய வெப்ப உமிழ்வு குறைவின் நல்விளைவை ஏற்படுத்தும் என்று கலிபோர்னியாவிலுள்ள தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த ஆர்ட் ரோசன்பெல்ட், ஹஷிம் அக்பரி, சுரபி மேனன் ஆகிய விஞ்ஞானிகளின் ஆய்வுகள் காட்டுகின்றன.

நூறு சதுர அடி பரப்புள்ள வெள்ளைக் கூரை, ஒரு டன் கரியமில வாயுவால் ஏற்படக்கூடிய பசுங்குடில் விளைவை ஈடு செய்யும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்மூலம் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்குப் பத்து லட்சம் டாலர் வரை மின்சாரச் செலவைக் குறைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. கலிபோர்னியா மாநில அரசு அங்குள்ள வர்த்தக நிறுவனங்களில் வெயில்படும் பரப்புகள் யாவும் வெள்ளை நிறம் பூசப்பட வேண்டுமென சட்டமியற்றியுள்ளது. விரைவில் அந்தச் சட்டம் தனியார் வீடுகள் மற்றும் பண்ணைகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது. இங்கிலாந்திலும் அதே போன்றதொரு சட்டம் வரப்போகிறது.

நாமும் அதை மேற்கொள்ளலாம்.

அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் நாடாக இந்தியா உள்ளது. அவற்றில் 68 சதவிகிதம் நிலக்கரியை எரிப்பதால் உருவாகின்றன. மரம் நடுவது, மழை நீர் சேமிப்பு, மின்சார உபயோகத்தைக் குறைப்பது, நடை அல்லது சைக்கிள் மூலம் பயணிப்பது போன்றவற்றுடன் நம் வீட்டு மொட்டை மாடிகளில் வெள்ளைச் சாயம் பூசுவதன் மூலம் நம்மாலான அளவில் வளிமண்டலம் சூடாவதைக் குறைக்கும் பங்களிப்பைச் செய்யலாம்.

நன்றி:- தினமணி

N. Kannan

unread,
Aug 28, 2009, 10:37:53 PM8/28/09
to mint...@googlegroups.com
அருமையான யோசனை கண்ணன்!

அன்று ரெ.கா கேட்ட கேள்விக்கு இதில் பதில் உள்ளது. அதாவது பனிப்பாறைகள்
உருகுவதால் நீர்மட்டம் உயர்வது மட்டுமல்ல, பிரபஞ்ச வெளிக்கு திருப்பி
அனுப்பப்படும் சூரிய ஒளியும் குறைகிறது. அதை நிறை செய்ய இப்படி எல்லோரும்
வீட்டுக்கு வெள்ளையடிக்கலாம். பெரும்பாலான கிரேக்க வீடுகள் இப்படித்தான்
உள்ளன.

க.>

2009/8/29 Kannan Natarajan <thar...@gmail.com>:

Sri Sritharan

unread,
Aug 29, 2009, 12:27:56 AM8/29/09
to mint...@googlegroups.com
இன்றைய விக்கி செய்தி:

சூழல் மாசடைதலைத் தடுக்க செயற்கை மரங்கள்

http://tinyurl.com/lkhots

Visit: http://ta.wikinews.org

----- Original Message -----
From: "Kannan Natarajan" <thar...@gmail.com>


| *வெள்ளையடித்து வெப்பத்தைக் குறைப்போம்! *

நா.கண்ணன்

unread,
Aug 31, 2009, 3:38:32 AM8/31/09
to மின்தமிழ்
Inform yourselves about H1N1 Influenza (swine flu)

http://www2a.cdc.gov/podcasts/player.asp?f=11226#

Kannan

Kannan Natarajan

unread,
Oct 17, 2009, 4:59:57 PM10/17/09
to mint...@googlegroups.com
மதுரையின் அடையாளமான கடம்பமரங்களை மீண்டும் நட வனத்துறையினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு காலத்தில் நீர்க்கடம்ப மரங்களால் சூழ்ந்திருந்த மதுரை, "கடம்பவனம்" என அழைக்கப்பட்டது. படிப்படியான நகரமயமாக்கலினால் அவை அழிக்கப்பட்டன.

எஞ்சியுள்ள கடம்பமரங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில் மலையில் மட்டுமே இன்றும் சாட்சியாக உள்ளன.
  • நீர்க்கடம்பு
  • வெள்ளைக்கடம்பு
  • மஞ்சள் கடம்பு
வகைகள் உள்ளன.

இதன் தாய்நாடு இந்தியா.

http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_15940058232.jpg

புனிதமரமாக கருதப்படுகிறது. இவை தேக்குபோன்று தடிமரங்கள், பர்னிச்சர்கள், காகிதம் தயாரிக்க பயன்படுகிறது. நீர்க்கடம்பு வளர அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது மதுரையில் நீர்வளம் குறைந்துவருவதால் அதை வளர்ப்பது மிகவும் கடினம்.

அதற்கு மாற்றாக வெள்ளைக்கடம்பை மதுரையில் வளர்க்க வனத்துறையினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி ஆரோவில் இருந்து
500 வெள்ளைக் கடம்புமர நாற்றுக்களை வாங்கி மதுரை அருகே வேம்பரளி வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் நட்டுள்ளனர். இவை ஆறு ஆண்டுகளில் நன்கு வளர்ச்சியடைந்ததும் விதையை சேகரித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும்.

பின் நாற்றுக்கள் உற்பத்தி செய்து மதுரையில் கடம்பமரம் நடப்படும். விதை கடுகு அல்லது எள் போல் இருக்கும். ஒரு கிலோவில்
90 ஆயிரம் விதைகள் இருக்கும். இதன் பாகங்கள் மருத்துவ குணம் கொண்டவை. விதை தலைவலியை குணமாக்கும். பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும். மரப்பட்டைகள் மனிதர்களின் உடல் வலி, காய்ச்சலை போக்கும். இலைகள் கால்நடைகளுக்கு உணவாகின்றன.

நன்றி:- தினமலர்

Kannan Natarajan

unread,
Feb 8, 2010, 5:42:01 PM2/8/10
to mint...@googlegroups.com
மாறுமா மக்களின் மனோபாவம்...!

100 கோடியைத் தாண்டிய மக்கள் தொகை,உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு,​​ கணினி,​​ விண்வெளித் துறையில் வல்லரசுகளோடு போட்டிபோடும் வளர்ச்சி,​​ 50 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் ஏராளமான மனிதவளம்,​​ மதம்,​​ மொழிகளால் பிளவுபட்டிருந்தாலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒன்றுபட்டிருக்கும் தேசம் என ​ இந்தியா பற்றிய கண்ணோட்டம் இப்போது மாறியிருக்கலாம்.

​ஆனால்,​​ எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடுவதைப்போல உள்ளது,​​ சுற்றுப்புறச் ​ சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில் மக்களிடம் உள்ள அலட்சியப் போக்கு.

நமது கலாசாரம் தொன்மையானது,​​ ஒழுக்கமானது எனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும்,​​ குறிப்பாக சுகாதார மேம்பாட்டில் வளர்ந்த நாடுகளை விட,​​ வெகுவாகப் பின்தங்கி உள்ளோம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்போது,​​ தொலைக்காட்சிகளில் தமிழில் மொழிமாற்றம் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது ஒரு சேனல்.​ அதில்,​​ ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தாலும்,​​ அதன் கருத்தாக்கம்..​ வர்ணனை..​ வருத்தமளிப்பதாக இருந்தது.​ ​

​அந்நிகழ்ச்சியில்,​​ புகழ்பெற்ற தாஜ் மகால் அமைந்துள்ள ஆக்ராவைச் சுற்றி கேமராவோடு வலம் வருகிறார் வர்ணனையாளரான வெளிநாட்டு இளைஞர்.​ அந்நகர் பற்றியும்,​​ வீதிகளில் மலஜலம் கழிக்கும் குழந்தைகள்,​​ சாலையோர உணவகங்கள்,​​ அருகில் குவிந்திருக்கும் குப்பைகள்,​​ வீதிகளில் திரியும் கால்நடைகள்,​​ பிச்சைக்காரர்கள்,​​ கழைக் கூத்தாடிகள்,​​ குடிசைப்பகுதிகள் என ஒவ்வோர் இடமாக கேமராவை நுட்பமாகச் சுழற்றி,​​ தமக்கே உரிய பாணியில் கிண்டலடித்துக் கொண்டே செல்கிறார் அந்த இளைஞர்.​ கடைசியில் "ஒரே நாற்றம்.​ குடலைப் புரட்டுது;​ ஏண்டா இங்க வந்தோம்னு ஆச்சு" என அலுத்துக் கொள்வதோடு நிகழ்ச்சி முடிவடைகிறது.

​அந்நிகழ்ச்சி,எவ்வித பாதிப்பையோ,​​ மாற்றத்தையோ இங்கு ஏற்படுத்திவிடப் ​ போவதில்லை.​ ஆனால்,​​ உலகம் முழுவதும் வெவ்வேறு மொழிகளில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது,​​ அதைப் பார்க்கும் மேலைநாட்டவர்களிடம்,​​ இந்தியா பற்றி எதிர்மறையான கண்ணோட்டம் உருவாவதைத் தவிர்க்க முடியாது.

அண்மையில்,​​ நாளிதழ்களில் "நகராட்சிப் பணியாளர்கள் நூதனப் போராட்டம்" என்ற செய்தி வெளியானது.​ அதில்,​​ அரசு மருத்துவமனையின் முன்புறம் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது.​ இந்நிலையில்,​​ மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவக் கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் கொட்டாமல்,​​ கண்ட இடங்களில் கொட்டி வந்துள்ளனர்.​ எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காததால்,​​ பொறுமையிழந்த துப்புரவு ஊழியர்கள்,​​ திடீரென குப்பைகள் அனைத்தையும் வாரி,​​ மருத்துவமனை நுழைவாயிலில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அது,​​ மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து பேச்சுவார்த்தை நடத்தி,​​ குப்பைப் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

​நகரில் கொட்டப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக,​​ மாநகராட்சி சார்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

​மக்கும் குப்பைகள்,​​ மக்காத குப்பைகள் என பிரித்துப் போடுவதற்காக வீடுகள்தோறும் வெவ்வேறு நிறங்களில் ​(பச்சை,​​ சிவப்பு)​ பிளாஸ்டிக் பக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.​ இப்போது,​​ அத்திட்டம் தோல்வியடைந்து விட்டதாக மாநகராட்சி அதிகாரிகளே ​ ஒப்புக்கொள்கின்றனர்.

வாங்கியே பழக்கப்பட்டுவிட்ட மக்களுக்கு,​​ இலவசமாகக் கிடைத்த புத்தம் புதிய ​ பக்கெட்டுகளில் குப்பைகளைக் கொட்ட மனம் வருமா..?​ ​

பெரும்பாலானோர்,​​ அவற்றை வேறு பயன்பாட்டுக்கு வைத்துக் கொண்டு,​​ வழக்கம்போல,​​ வீதியில் குப்பைகளைக் கொட்டி, பணிச் சுமையை அதிகப்படுத்துவதாக துப்புரவுப் பணியாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

​இலாரிகளில் சரியாக தார்ப்பாயால் மூடாமல்,​​ வீதியெங்கும் குப்பைகளைச் சிதற விட்டுச் செல்வது,​​ பல நாள்களாக அள்ளப்படாமல் தொட்டிகளில் நிரம்பி நாற்றமடிக்கும் குப்பைகள் என துப்புரவுப் பணியாளர்கள் மீதும் பொதுமக்களிடமிருந்து ​ பல்வேறு புகார்கள்.​ ​

மாநாடு,​​ விழாக்கள்,​​ பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகள்,​​ உணவுக் கழிவுகளை அமர்ந்த இடங்களிலேயே போட்டுவிட்டுச் செல்லும் பொதுமக்கள்,​​ பஸ் நிலையம்,​​ வழிபாட்டுத் தலங்களின் சுவரில்கூட,​​ கூச்சமின்றி இயற்கை உபாதையைத் தணித்துவிட்டுச் செல்லும் பாதசாரிகள்,​​ வெள்ளம் வரும்போது தவிர,​​ மற்ற காலங்களில் நகரில் மிகப் பெரிய குப்பைக் கிடங்காகவும்,​​ திறந்தவெளிக் கழிப்பிடமாகவும் ஆகிவிட்ட ஆறுகள்,​​ சாயக் கழிவுகளால் விஷமாகிப்போன நதிகள் என,​​ சுகாதாரக்கேடு தீராத நோயாக நீடித்து,​​ மக்களுக்குப் பல்வேறு நோய்களைப் பரப்பி வருகிறது.​ ​ ​

அமைச்சர்கள்,​​ உயர் அதிகாரிகள் வருகையின்போது மட்டும் அரசு மருத்துவமனைகள்,​​ சாலைகள் வெள்ளையடிக்கப்பட்டு பளிச்சென இருப்பதும்,​​ மற்ற நேரங்களில் சுகாதாரக் கேட்டின் உறைவிடமாக அவை திகழ்வதும்,​​ "நம்மை யார் கேட்கப் போகிறார்கள்..?" என்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் அசிரத்தையான மனோபாவம்தான்.

இந்தியாவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது.​ ஆனால்,​​ மலைபோலக் குவியும் குப்பைகளால்,​​ மெட்ரோ நகரங்கள்கூட அழுக்கடைந்து காணப்படுவதாக,​​ மத்திய அமைச்சர் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்குத்தான் நிலைமை நீடிக்கிறது.

கடுமையான சட்டங்களால்,​​ மக்களின் மனோபாவத்தை ஒரேநாளில் மாற்றிவிட முடியாது.​ "மூவாயிரம் அடி பயணமும்,​​ முதல் அடியில் தொடங்குகிறது" என்பதற்கேற்ப அரசு,​​ தூய்மைப் பணியை புதிய ஓர் இயக்கமாகத் தொடங்கி,​​ பல்வேறு ​ அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு முனைப்புடன் செயல்பட்டால்,​​ முழு சுகாதாரம் என்பது எட்டாக்கனியாகி விடாது..!​​

ப.செ.​ சங்கரநாராயணன்

Kannan Natarajan

unread,
Feb 19, 2010, 4:33:16 PM2/19/10
to mint...@googlegroups.com
கடலில் கலக்கலாமா சாயம்?


காற்றே "உயிர்க்கடலில்" இருந்து
எங்களுக்கு உயிர்மழை கொண்டுவா
".

என்றழைத்துக் கேட்டான் பாரதி.

கடலிலிருந்து என்று அவன் சொல்லாமல் "உயிர்க்கடலிலிருந்து" என்று சொன்னது கடல் தான் உயிர்களின் தாயகம் என்பதை முற்றாக உணர்ந்திருந்தான்.

அவனழைத்த அந்த உயிர்க்கடலின் நிலையை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.

  • அணுகுண்டுகள்
  • ரசாயன ஆயுதங்கள்
  • உயிரி ஆயுதங்கள்
ஆகியன மட்டுமே பேரழிவு ஆயுதங்களாக இதுவரை அறியப்பட்டு வந்துள்ளன.

இவ்வரிசையில் இன்று சுற்றுச்சூழல் பாதிக்கும் நச்சுக் கழிவுகள் மனித சமூகத்தையும், உயிர்ச்சூழலையும் கொஞ்சம் கொஞ்சமாகவும், கொத்துக் கொத்தாகவும் கொன்றழிக்கும் பேரழிவு ஆயுதங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளன. 

பருவநிலை மாற்றத்தின் மூலகாரணியே சுற்றுச்சூழல் சீர்கேடு என்ற பேராயுதங்கள்தான்.

தமிழகம் 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இது இந்தியக் கடற்கரையின் நீளத்தில் 15 விழுக்காடாகும்.

இப்பகுதியில் ஒரு
லட்சம் ச.கி.மீ. கடல் நீர்ப்பரப்பில் தனியுரிமை பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது. 

தமிழகத்தின் சென்னை உள்பட
  • 26 நகரங்களையும்
  • 2,390 கிராமங்களையும்
சேர்ந்த 7.37 லட்சம் கடற்கரைப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வகையில் ஜவுளி மாவட்டங்களிலிருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுகளை குழாய் மூலம் கடலில் கொண்டு சேர்க்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளாலும், கப்பல் உடைக்கும் தொழிலகம், கப்பல்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளாலும் இந்தியக் கடற்பகுதி மாசுபட்டு மீன்வளம் குறைந்து வருகிறது. 

இந்நிலையில் சாயக்கழிவு நீரைக் கடலில் கொண்டு சேர்ப்பது என்பது கடலின் பல்லுயிர்ச் சூழலை அழிப்பதோடு சுனாமிப் பேரழிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவரும் மீனவ மக்களுக்கு மீண்டும் ஒரு பேரழிவாக முடியும்.

  • இலங்கை கடற்படைத் தாக்குதல்
  • கச்சத்தீவுப் பிரச்னை
  • மீனவர் மசோதா
என்று அடிமேல் அடிவிழும் மீனவ சமுதாயத்தின் மீது விழப்போகும் மேலும் ஓர் அடியாக சாயக்கழிவைக் கடலில் சேர்க்கும் திட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

வெறும் சாயம்தானே என்று இப்பிரச்னையை ஒதுக்கிவிட முடியாது.
  • கரூர்
  • ஈரோடு
  • திருப்பூர் மற்றும்
  • கோவை
ஆகிய ஜவுளி மாவட்டங்களில் செயல்படும் சாய மற்றும் சலவைப் பட்டறைகளிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 40 கோடி லிட்டர் சாயக்கழிவு நீர்
  • நொய்யல்
  • பவானி
  • காவிரி
  • அமராவதி மற்றும்
  • ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளை வளப்படுத்திய காளிங்கராயன் கால்வாயிலும்
கலக்கச் செய்யப்படுகிறது. 

இதனால் அம்மாவட்டங்களில் வாழும் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.  கால்நடைகள் பாதிப்படைந்துள்ளன. 

வேளாண்தொழில் கேள்விக்குறியாகிவிட்டது. 

அதிகரித்து வரும் விவசாயிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க சாயக்கழிவை கடலில் கலப்பது தீர்வாகாது.

ஜவுளி மாவட்டங்களில் சாயத்தொழிலில் 90களின் மத்திய பகுதிவரை மனித சக்தியால் மேற்கொள்ளப்பட்ட கைச்சாயம் என்றழைக்கப்படும் நாப்தால் வகைச் சாயங்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்த வகைச் சாயங்களைப் பயன்படுத்தி சாயமேற்றப்பட்ட ஜவுளிகளின் இறக்குமதியை ஐரோப்பிய நாடுகள் 90களின் மத்தியில் தடை செய்தன. 

இதன் காரணமாக சாயப்பட்டறை உரிமையாளர்கள் எந்திரங்களைப் பயன்படுத்தி சாயமேற்றும் புரோசியன் தொழில்நுட்பத்துக்கு மாறினர். 

இதற்கான எந்திரங்களும் தொழில்நுட்ப உபகரணங்களும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம் மனித உழைப்பு பாதியாகக் குறைக்கப்பட்டதுடன் உற்பத்தியும்,
லாபமும் பன்மடங்கு அதிகரித்தன.

புரோசியன் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சாயப்பொருள்கள்
ரசாயன எதிர் வினையாற்றக்கூடிய நச்சுத்தன்மை கொண்டவை. 

அவற்றில் முக்கியமானவை
  • ஹைட்ராக்ûஸடு
  • ஹைட்ரோ குளோரிக் ஆக்ûஸடு
  • சல்பூரிக் ஆக்ûஸடு மற்றும்
  • சோடியம் நைட்ரேட் இவற்றுடன்
  • சாதா உப்பு என்றழைக்கப்படும் சோடியம் குளோரைடு
அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. 

இதனால் சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் நச்சுத்தன்மையுடன் உப்புத்தன்மையும் கலந்து காணப்படுகிறது. 

சாயக்கழிவு நீரில் கலந்துள்ள உப்புத்தன்மையின் அளவு கடல் நீரின் உப்பு அளவைவிட 20 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாயத் தொழில்நுட்பங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்புக்கான தேர்ந்த தொழில் நுட்பங்களைக் கொண்டுவரத் தவறிவிட்டனர். 

மேலும் ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய சாயக்கழிவு நீரைச் சுத்தம் செய்வதற்கான வெற்றிகரமான தொழில்நுட்பம் எதுவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே தான் ஐரோப்பிய நாடுகளும், பிற வளர்ந்த நாடுகளும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் சாயத்தொழிலை முற்றிலுமாகக் தடை செய்வதோடு சுற்றுச்சூழல் கேடுகளை தங்கள் நாட்டில் அனுமதிப்பதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றன.

இப்போது பயன்பாட்டில் உள்ள சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் காலாவதியான நாப்தால் சாயமேற்றும் நுட்பத்துக்காக அமைக்கப்பட்டவை.

புரோசியன் சாயக்கழிவு நீரைச் சுத்திகரிப்பு செய்ய எள்ளளவும் இவை ஏற்றவையல்ல. 

பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பின்னர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மறுசவ்வூடு பரவல் முறையில் சுத்தம் செய்து தாங்களே அந்த நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்திக் கொள்வதாக நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால், அந்த வாக்குறுதியை இன்றைய தேதிவரை செயல்படுத்தவில்லை என்பதும் அந்த வாக்குறுதியை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே சாயக்கழிவைக் கடலில் கலக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

தொழிற்பெருக்கம் என்ற முழக்கம் வீரியமாக எழும்போது சுற்றுச்சூழல் சீர்கேடு, அதனால் விளையும் பாதிப்பு தவிர்க்க இயலாதது என்று நியாயப்படுத்தும் அறிவுஜீவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில்,  சாயக்கழிவை நதியில் விடவேண்டாமென்றால் "பரவாயில்லை, கேட்பதற்கு நாதியற்ற கடல் இருக்கிறது, அதில் குழாய் மூலம் கொண்டு சென்று கலந்து விடலாம்" என்ற கருத்தைப்  பலப்படுத்தவும், பரவலாக்கவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

வாய்வழியாக விஷத்தைத் தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், நரம்பு வழியாக விஷத்தைச் செலுத்துவதுதான் தீர்வு என்பதுபோல இது இருக்கிறது.

கடற்சூழலில் இருக்கிற பாதிப்புகள் போதாதென்று ஜவுளி உற்பத்தி மூலம் பெறப்படும்
லாபத்துக்கு ஈடாக வெளியேற்றப்படும் ரசாயன நச்சு நீரைக் கடலில் கலக்கச் செய்யத் திட்டமிடப்படுகிறது.

கடலில் சாயக்கழிவைக் கலக்க வேண்டும் எனும் திட்டம் "பேசல்" உடன்படிக்கை 1989க்கு எதிராக அமைவதோடு 1986ம் ஆண்டின் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்துக்கும், கடற்கரை ஒழுங்காற்றுப்பகுதி அறிவிக்கை  1991க்கும் எதிரானதாக அமையும்.

இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கடலென்ன, ஆறென்ன, வாய்க்காலென்ன சுற்றுச்சூழல் தகவுகள் தான் என்ன எனும் போக்கு, சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்கும். 

ஜவுளி மாவட்டங்களில் மாசுபட்ட நீரைச் சுத்திகரித்து கடலில் விடவேண்டும் என்கிறார்கள், ஏன் சுத்திகரித்து கடலில் விடவேண்டும்?

அந்நீரை மீண்டும் சாயமேற்றப்  பயன்படுத்தலாமே எனும் கேள்விக்கு யார் பதில் சொல்வர்?

குறிப்பாக, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள்  803.42 கோடியில் சாய சுத்திகரிப்பு நிலையங்களை  அமைத்துள்ளதாகக் கூறுவது உண்மையானால் நொய்யல் ஆற்றில் இன்றுவரை  சாயக் கழிவு நீர் வருவது ஏன் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். 

கோடிகோடியாய் அன்னியச் செலாவணி வருமானத்தைப் பெற்றுத் தரும் ஜவுளி உற்பத்தித் தொழில் நசிந்து போவதை எவருமே விரும்ப மாட்டார்கள்.

ஆனால் அத்தொழிலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அறிவியல்பூர்வமாகச் சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

நதிகள் உள்ளிட்ட நன்னீர் வள ஆதாரங்களையெல்லாம் நஞ்சாக்கிவிட்டு, கடலின் மீதும் கை வைப்பது எவ்விதத்தில் நியாயம்?

சில கி.மீ. தொலைவுக்குள் உள்ள  ஊர்களுக்குக் குடிநீர் எடுத்துச் செல்லப்படும் சிறிய குடிநீர்த் திட்டங்களே பல நேரங்களில் திருப்திகரமாகச் செயல்படுவதில்லை. மோட்டார் பழுது, குழாய் உடைப்பு என்று அதற்குக் காரணம் சொல்லப்படுகிறது. நன்னீர் விநியோகத்தின் முறையே இவ்விதம் நிகழ்கின்றதென்றால், கோடிக்கணக்கான லிட்டர் நச்சுக் கழிவுநீரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் செலுத்திவிட முடியுமா?

அவ்விதம் செலுத்த நேரிட்டாலும் கசிவுகள் ஏற்படும்போது, குழாய் செல்லும் பாதையில் உள்ள கொஞ்ச நஞ்சமுள்ள விவசாய நிலங்களும், நீர்வள ஆதாரங்களும் சத்தமின்றி கெட்டுப்போகும் என்பதை அறியாமலா கடலில் கொண்டு சென்று சாயத்தைச் சேர்க்க வேண்டும் என்று பேசுவார்கள்?

பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கக்கூடிய, மீனவர்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குள்ளாக்குகின்ற இத்திட்டத்தைத் தொடங்கும் முன்னர் மீனவர் மசோதாவுக்கு எழுந்த எதிர்ப்புகளை அரசு எண்ணிப்பார்ப்பது நல்லது.

ஏழை மீனவர்களின் வாழ்வுச் சூழலை நிர்ணயிக்கிறது கடல். புவியைப் போர்த்திப் பாதுகாக்கும் கடல்வாழ் உயிர்களுக்கெல்லாம் மழைமேகமாகத் திரண்டு உயிரளிக்கும் கடல், நஞ்சுகளின் தொட்டியாக மாற நாம் அனுமதிக்கப் போகிறோமா?

எது தேவை என்பதில்தான் நமது எதிர்காலம் அடங்கியிருக்கிறது.


கட்டுரையாளர்:
- சுடர் ம. தென்னரசு
அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கப் பொதுச் செயலாளர்

N. Kannan

unread,
Feb 19, 2010, 7:09:58 PM2/19/10
to mint...@googlegroups.com
மிக முக்கியமான கட்டுரை.

இவர்கள் கொட்டும் கழிவுச்சாயம் தென்னையில் ஏறி இளனி கலர், கலராக வருவதாக
ஒருமுறை கேள்விப்பட்டேன். Sewagae Treatment, Offshore/Ocean Sewage
Dumping இவையெல்லாம் மிகப்பெரிய சூழல் பிரச்சனைகள். இது குறித்து
தொடர்ந்து எங்கள் ஆய்வகம் ஆய்வு செய்து வருகிறது. கைவசம் ஒரு scientific
publication போய்கொண்டு இருக்கிறது. பிலிப்பைன்ஸ்ஸில் நடத்திய அறிவியல்
பட்டறையில் பாசிக் ஆற்றின் மூலமாக கடலில் கலக்கும் வேதிமங்களை
மாணவர்களுக்கு சோதனைகள் மூலம் சுட்டிக்காட்டினோம்.

திருப்பூர் ஜவுளித்தொழில் ஒரு பேராசையுடன் இயங்கும் தொழில். காசு, காசு
என்று காசு வந்து கொட்டினாலும், சூழலைக் கெடுத்துவிட்டு அரிசிக்குப்பதில்
காசைத் தின்னமுடியாது! தமிழனின் பொதுவான சூழல் அறிவைச் சுட்டும் ஒரு
பழக்கத்தைச் சொல்லலாம். வீட்டில் சுத்தி பண்ணி விருந்துண்டுவிட்டு இலையை
வெளியே தூக்கி எறிவது! சூழல் என்பது வீட்டின் ஒரு நீட்சியே என்பதை யாரும்
யோசிப்பதில்லை.

தமிழகமெங்கும் கடலில் கலக்கும் முன் சாக்கடை சுத்திகரிப்பு கட்டாயம்
செய்யப்பட வேண்டும்.

க.>

2010/2/20 Kannan Natarajan <thar...@gmail.com>:

amal eronimus

unread,
Feb 22, 2010, 6:39:25 AM2/22/10
to mint...@googlegroups.com
சாயப் பட்டறைகளை எதிர்த்து
போராடிய பல்வேறு குழுக்கள் மற்றும்
குமுக ஆர்வலர்களை சிறை வாய்த்த
அரசுகள் எதைத்தான் மக்களுக்கு செய்தன
கையூட்டு பெற்ற பின்
தம் கைவரிசையை காட்டுகின்றன
ஏழை மாள எட்டிப் பார்ப்பான்
கொட்டாவி விட்டு தொங்குவான்
ஒரு நாள் அவன் உடலும் தொங்கும்
இது தானே உண்மை



ஓன்று மட்டும்  உண்மை
நாளைய தலைமுறைக்கு நாம்
ஒன்றும் விட்டுச் செல்லப் போவதில்லை
அறிவியல் என்ற அறிவுசார்பில்லாததை தவிர



2010/2/20 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அமல்
24 /36 அ. களிமார்
குளச்சல்
குமரி - 6 2 9 2 5 1
பேச: 9791185225

Kannan Natarajan

unread,
Feb 26, 2010, 4:46:45 PM2/26/10
to mint...@googlegroups.com
ஒலி மாசுவின் விஸ்வரூபம்!

வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது, நல்ல காற்று, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றோடு முடிந்துவிடுவதில்லை. அமைதியும் முக்கியம். ஓசை என்பது ஓசையாகவே இருக்க வேண்டும்; அது ஒலியாக மாறி நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.

மாசு நிறைந்த நீர், நிலம், காற்று ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் எப்படிப் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணராவிடில் உடல் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

ஒலியற்ற வாழ்வை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில், ஒருவருக்கு விருப்பமான ஒலி மற்றவருக்கு விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். இதில், சப்தம், ஓசை, இரைச்சல், கூச்சல், உருமல் ஆகிய விதங்களில் வெளிப்படும் ஒலிகளில் எது மனித உடலையும் உள்ளத்தையும் பாதிப்படையச் செய்கிறதோ அது ஒலி மாசாகக் கருதப்படுகிறது.

ஆனால், பெரும்பாலானோர் சப்தம் நம்மை என்ன செய்துவிடும் என்றே கருதுகின்றனர், அதிலும் இளைஞர்களின் விருப்பம் இவ்விஷயத்தில் மோசமாக உள்ளது.

அதிக ஒலியே இன்பம் தரும் என்ற தவறான எண்ணத்தால் மின்னணு ஒலியால் கவரப்பட்டு அதில் மயங்கிக் கிடக்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.

ஆனால், ஒலி என்பது அமைதியாகக் கொல்லும் தன்மையுடையது என்பதை அவர்கள் உணரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்! ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளை நம் செவி ஏற்றுக்கொண்ட பின்னர், அதை நாம் புரிந்து செயல்பட மூளை துணை புரிகிறது.

அதேநேரத்தில் செவியால் குறிப்பிட்ட அளவுக்கு மேலான அதிர்வுகளைத் தாங்க முடியாது. அதாவது,  20 ஆயிரம் அதிர்வுகளுக்கு மேல் செவியால் கேட்க முடியாது, 120 டெசிபல் (அலகு) வரையிலான ஒலி அழுத்தங்களை மட்டுமே நன்றாகக் கேட்க முடியும்.  இதன் அளவு அதிகரித்தால் செவிகள் பாதிக்கப்படும்.

ஆனால், இந்தியக் கிராமங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியானாலும் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலியுடன் அதிக நேரம் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம்.

இதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தால், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த ஒலி அளவை மீறியே பிறரிடம் பேசும் சூழலில், அவர்களது செவித்திறன் பாதிக்கப்படும்.

மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள் ஆகியவை ஒலி மாசினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

ஒலி மாசைக் கட்டுப்படுத்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது செவித்திறனின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு இயக்கத்தின்போதும்  வெளியாகும் ஒலியின் அளவு, அதன் தீவிரம் குறித்து வகுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் உலகில் 5 சதவீத சிறுவர்கள் (10 வயதுக்கு உள்பட்டோர்) ஒலி மாசு காரணமாக, கேட்புத் திறனை இழந்துள்ளதாகவும் 85 டெசிபல் இரைச்சல் சூழலில் பணியாற்றிய பலரும், காது இரைச்சல், தலைவலி, அயர்ச்சி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்டோமொபைல் தொழிலகங்களில் பணிபுரிவோரில் நான்கில் ஒரு பங்கினர் கேட்கும் சக்தியை இழக்கத் தூண்டும் இரைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

மேலும், 90 டெசிபலுக்கு மிகையான இரைச்சல் சூழலில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு "செவிப்புல அயர்ச்சி" ஏற்படுகிறது. இந்திய நாட்டில் சென்னை, கொல்கத்தா, தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள சாலையோர பழ வியாபாரிகள், ஓட்டுநர்களில் 40 சதவிகிதத்தினர் காது இரைச்சல் பற்றி முறையிட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் ஒலி மாசினால் 10 சதவிகிதத்தினர் செவித்திறனை இழப்பதாகவும், ஏறத்தாழ 8 கோடி மக்கள் ஒலி மாசினால்  பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், 1000 பேருக்கு 35 பேர் எனும் விகிதத்தில் காது இரைச்சல் நோயால்  பாதிப்படைவதாகவும் இந்திய நாட்டில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 10 சதவிகிதத்தினரும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 7 சதவிகிதத்தினரும் கேட்கும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக ஒலி ஒரு மனிதனை நிம்மதியாக உறங்கவிடுவதில்லை. குறைவான ஒலியும் மூளையின் முக்கிய மையங்களைப் பாதித்து இயல்பான உறக்கத்தைக் குலைத்துவிடுகிறது.

நரம்புத்தளர்ச்சி மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அதிக ஒலியையோ, எதிர்பாராத சப்தத்தையோ கேட்க நேரிட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர்.  இரைச்சல் தொடர்ந்தால் அதுவே மனிதனின் இறப்புக்கு வழிகோலும். எனவே, இரைச்சலைக் கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆனால், இன்றைய சூழல் எப்படி இருக்கிறது என்பதை நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் புரிந்துவிடும். தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திலிருந்து துக்க நிகழ்ச்சிகள் வரை தொடரும் பட்டாசு சப்தம் நம் காதுகளைப் பதம் பார்க்கிறது.

கனரக வாகனங்கள், பஸ்(பேருந்து)களில் பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை போதாது என்று இரு சக்கர வாகனங்களிலும் தங்கள் பங்குக்கு பலவகை வினோத ஒலி எழுப்பும் மின்னணு ஒலிப்பான்களைப் பொருத்தி, பாதசாரிகளை மிரட்டி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.

இதைக் கண்காணித்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

2000வது ஆண்டில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒலி மாசுக் கட்டுப்பாடு சட்டத்தைத் திருத்தி விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்.

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவித குறுக்கீடுகளோ,  இடையூறுகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒலி மாசால் மனிதனுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இயற்கை நமக்கு அளித்துள்ள சிறந்த ஒலி மாசுத் தடுப்பு சாதனமாகத் திகழும் மரங்களை சாலையோரங்களில் பெருமளவில் வளர்க்கும் திட்டத்தைச்  செயல்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒலி மாசு என்னும் அரக்கனை அழிக்க வேண்டும்.

கட்டுரையாளர்:- ஆர்.மோகன்ராம்

நன்றி:- தினம
ணி

N. Kannan

unread,
Feb 26, 2010, 9:38:56 PM2/26/10
to mint...@googlegroups.com
2010/2/27 Kannan Natarajan <thar...@gmail.com>:

> ஒலி மாசுவின் விஸ்வரூபம்!
>

ஐயோ! தமிழகத்தில் ஓசை என்பதற்கு இலக்கணமே கிடையாதே!

பெண் பெரியவள் ஆனால் ஸ்பீக்கர் போட்டு இரைச்சல்.
அப்பத்தா செத்துப்போனால் ஸ்பீக்கர் போட்டு ஒப்பாரி.
ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டா ஸ்பீக்கர் போட்டு .ஐயோ! அப்பா! என்று கூக்குரல்.
புதிய சினிமா என்றால், அந்தப் பாடல்களை ஒலிபரப்பி கூச்சல்
ஒரு விசேஷமும் இல்லையென்றால், சும்மா, பழைய வசனங்களைப் போட்டு லவுட் ஸ்பீக்கர்.

மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருமுறை சொன்ன ஜோக் நினைவிற்கு வருகிறது.

`ஏன் தமிழர்கள் இப்படிச் சத்தமாகப் பேசுகின்றனர்` (தமிழ்நாடு = அரவநாடு)?

ரொம்ப வேர்வையினால் `கப்பு`. கிட்ட வந்து பேசமுடியாது. அதனால் தூர நின்று
உரக்கப்பேச வேண்டியுள்ளது!

பின் அதுவே பழகி, எங்கும் சத்தம், அதிலும் சத்தம் என்று.....

வெளிநாட்டில் கார் ஹார்ன் கூட யாரும் அடிப்பதில்லை...ம்..ம்ம். நாய் கூட
குறைப்பதில்லை! ம்ம்ம்ம்

க.>

Hari Krishnan

unread,
Feb 27, 2010, 2:15:15 AM2/27/10
to mint...@googlegroups.com


2010/2/27 Kannan Natarajan <thar...@gmail.com>

ஒலி மாசுவின் விஸ்வரூபம்!


மாசு+அற்ற=மாசற்ற
மாசு+இன்=மாசின்

கொழும்பிலிருந்து என்னாமல், கொழும்புவிலிருந்து என்று எழுதிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கண்ணன்-இன், நடராஜன்-இன் என்று எழுதத்தான் போகிறார்கள்.  நாமும் மறுஒலிபரப்பு செய்துகொண்டுதான் இருக்கப் போகிறோம்.

மின்தமிழ்-இல், ஹரிகி-இன் புலம்பல் வந்து-உம் என் வாரது-உம் என்.

--
அன்புடன்,
ஹரிகி.

தாரகை

unread,
Feb 27, 2010, 2:38:27 AM2/27/10
to மின்தமிழ்
> மின்தமிழ்-இல், ஹரிகி-இன் புலம்பல் வந்து-உம் என் வாரது-உம் என்.

மாசில் வீணையைப் போல் ஹரிகியின் மாசிலா எண்ணத்தால் மாசு படிந்த சொற்களைப்
பற்றி மாசிலா"மணி"யான தினமணிக்கு சேர்கிறதோ இல்லையோ குழுமத்தில் மாசித்
திங்கள் நாளொன்றில் சேர்ந்துள்ளது:-)

Kannan Natarajan

unread,
Mar 6, 2010, 5:41:10 PM3/6/10
to mint...@googlegroups.com
  • மதுரை யாதவர் கல்லூரியும்
  • சென்னை லயோலா கல்லூரியும்
இணைந்து வியாழக்கிழமை (04/03/10) நடத்திய மாற்று எரிசக்தி குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கை மதுரையில் சென்னைப் பல்கலைக்கழகத்  துணைவேந்தர் க. திருவாசகம் தொடங்கிவைத்து பேசியதாவது:-

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் மனிதவளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மனிதவளத்தை உரியமுறையில் பயன்படுத்தவேண்டும். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அவசியம். அதன்மூலம் சமூக மாற்றங்களை கொண்டு வரமுடியும்.  அதன்படி உயர் கல்வித்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

வறுமை, கல்வி அறிவின்மை, சுகாதார வசதியின்மை ஆகியவற்றுக்கு தீர்வுகாணும் வகையில் ஆய்வுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

மாற்று எரிசக்தி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. உலக வெப்பமயமாதல் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. வெப்பத்தால் காலச்சூழலில் மாற்றம் ஏற்பட்டு, அதனால் பாதிப்பு உருவாகிறது. இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படும்.

இந்தியா தொழில் வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், உலக வெப்பமயமாதல் கொள்கை பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்திய நாட்டில் 75% மின்சாரம் அனல் மின்நிலையத்தாலும், 21% மின்சாரம் புனல் மின்நிலையத்தாலும், 4% மின்சாரம் அணு மின்நிலையத்தாலும் மேலும், காற்றாலை உள்ளிட்டவை மூலமும் பெறப்படுகிறது. எனவே ஆய்வுகள் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைவது அவசியமாகும். நமக்குத் தேவையான எரிசக்தி கிடைக்காததால், வெளிநாடுகளிலிருந்தே அவற்றை பெறவேண்டியுள்ளது. இதற்காக அதிகம் செலவிடப்படுகிறது.

புனல் மின் நிலையம் மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரம் பெறும் வசதியை அதிகப்படுத்துவது அவசியம். சென்னை பல்கலைக்கழகத்தில் மாதந்தோறும் மின்சாரத்துக்காக ரூ.9
லட்சம் செலவிடப்படுகிறது. இது பல்கலைக்கழக நிதியில் அதிகச் செலவாகும்.

எனவே சூரிய சக்தி மூலம் பல்கலைக்கழக வளாகத் துறைகள் மின்வசதி பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி ரூ.3 கோடியில் சென்னை பல்கலைக்கழக அனைத்து வளாகங்களிலும் சூரியசக்தி மின்சாரம் பெறும் வசதி,அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் மாற்று எரிசக்தி குறித்த கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது.
லயோலா கல்லூரி ப்ராண்டியர் எனர்ஜி மைய இயக்குநர் எம்.செல்வவிநாயகம்  பேசுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மாற்று எரிசக்தி அவசியம். நமது சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்திருக்க மாற்று எரிசக்தியை மேம்படுத்தவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் கே.பி.நவநீதகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் பி.ரெங்கன் தலைமை வகித்தார். கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியை கிருஷ்ணவேணி வரவேற்றார். மாணவி இலக்கியா நன்றி கூறினார்.

தாரகை

unread,
Mar 6, 2010, 7:08:56 PM3/6/10
to மின்தமிழ்
பவளப்பாறைகளின் உற்பத்தித் திறனுக்கு காரணமான ஜூசாந்தெல்லே,
பாலிப்புகளுக்கும் உணவு தேடி தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணற்ற உயிரினங்களுக்கும் உறைவிடமாக திகழ்வது
பவளப்பாறைகள் தான். கடலின் அழகுக்கும், பாதுகாப்புக்கும் இதன் பங்கு
அவசியம். பவளப்பாறைகளின் உயிர் பகுதியாக, "பாலிப்"கள் உள்ளன.

http://img.dinamalar.com/data/images_news/tbltnsplnews_33661615849.jpg

இவை, "கோரல்லைட்" எனப்படும், கடின பகுதியில் அமைந்துள்ளன. "பாலிப்"கள்,
ஒருவித கோழையை சுரப்பதன் மூலம், கடல் நீரிலுள்ள நுண்ணுயிரிகளை பிடித்து
உண்கின்றன.

பவளப்பாறையின் உயிர் பகுதியான இவற்றுக்கும், "ஜூசாந்தெல்லே" என்ற
நுண்ணுயிர் பாசிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு தான், பவளப்பாறைகள் அதிக
உற்பத்தி திறனுக்கு காரணமாகின்றன. பவளப்பாறைகள் இருக்கும் இடத்தில்,
"ஜூசாந்தெல்லே" நிச்சயம் இருக்கும். பூமத்திய ரேகைக்கு அருகில் மிதவெப்ப
மண்டல நாடுகளின் கடற்பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.

மத்திய இந்திய பசிபிக், கரீபியன் பகுதிகளில், அதிக உயிர் இனங்களை
உள்ளடக்கிய பவளப்பாறைகளிலும் உள்ளன. "ஜூசாந்தெல்லே", இந்தியாவில், 2,375
ச.கி.மீ., இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில்,

1. மன்னார் வளைகுடா
2. பாக் ஜலசந்தி

அந்தமான் நிக்கோபார் , இலட்சத்தீவுகளில் அதிகம் காணப்படுகின்றன.

உணவு, மருந்துக்கு பயன்படும் மீன்கள், சிப்பிகள், சங்குகள்
போன்றவற்றிற்கு புகலிடமாக உள்ள பவளப்பாறைகளின் உற்பத்தி திறனுக்கு இவை
காரணமாக இருப்பதால், கடற்பகுதியில் இருக்க வேண்டியது கட்டாயம்.

முறையில்லாத மீன்பிடி, இழு வலை உபயோகம் போன்றவற்றால் அழிவையும் இவை
சந்திக்கின்றன.

பவளப்பாறையை அறிந்த நம்மவர்களுக்கு, இந்த உயிரினத்தை பற்றி
அறிந்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

நன்றி:- தினமலர்

Kannan Natarajan

unread,
Mar 15, 2010, 6:32:17 AM3/15/10
to mint...@googlegroups.com
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!

திருப்பூர் சாயத் தொழிற்கூடங்களால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்திய மத்திய அரசு,​​ நிதிநிலை அறிக்கையில் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மானியமாக ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது.

​சுத்திகரிப்பு நிலைய முதலீட்டில் 15 சதவீதத் தொகையை மாநில அரசின் பங்காக வழங்க உத்தரவாதம் அளித்துள்ளார் தமிழக முதல்வர்.​ இந்த வேளையில்,​​ திருப்பூர் சாயத் தொழிற்கூடங்கள் தங்களது சுத்திகரிப்பின் கடைசி நிலையில் மிஞ்சும் 15 சதவீத நீரை,​​ கடலில் கலப்பது சரியா,​​ தவறா என்ற விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.

இதற்குக் காரணம்,​​ திருப்பூர் சாய ஆலைகளின் முந்தைய குற்றப் பதிவுகள் அப்படியானவை.​ சாயத் தொழிற்கூடங்களை ஒரு பழைய குற்றவாளியைப் பார்ப்பதைப் போலவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்க்கிறார்கள்.​ மற்றவர்களும் அப்படியே பார்க்க வேண்டும் என்கிற முயற்சியிலும் இறங்குகிறார்கள்.

​பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் "ஓபன் விஞ்ச்" எனப்படும் பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே,​​ சாய ஆலைகள் சாயமேற்றி வந்தன.​ அப்போதைய 500 சாய ஆலைகளுக்கும் சேர்த்து மொத்த முதலீடே ரூ.200 கோடி தான்.

​தொடக்க காலத்தில்,​​ உப்புத்தன்மை அதிகம் இருந்தாலும்,​​ சாயத்தை நீக்கி வெண்மையான நீரை ஆற்றில் விட்டால் போதும் என்ற அளவில் தான் கட்டுப்பாடுகள் இருந்தன.​ பெரும்பான்மையான ஆலைகள் இந்த முறையைக் கையாண்ட போதிலும்,​​ சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் கலக்கவிட்ட சிலரால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது உண்மையே.

இந்தத் தவறுகளுக்காக,​​ சுற்றுச்சூழல் காப்பீட்டுக் கழகம் விதித்த ஈட்டுத்தொகை,​​ ஒரத்துப்பாளையம் அணையை சுத்தம் செய்ய தீர்வை,​​ நீதிமன்ற அபராதம் என ரூ.100 கோடியை திருப்பூர் சாய ஆலைகள் செலுத்தின.

ஆனால் இன்று நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது.​ ரூ.​ 2,​500 கோடி முதலீட்டில் குறைந்த தண்ணீரில் சாயமேற்றும் புதிய தொழில்நுட்பக்கருவிகளை ​ சாயப்பட்டறைகள் நிறுவியுள்ளன.​ விவசாயிகள் மட்டுமல்ல,​​ அதே மண்ணில் அவர்களுடன் வாழும் தங்கள் உடல் நலனும் பாதிக்கப்பட்டு வருவதை உணர்ந்து கொண்டதால்,​​ தங்களுக்கும் சமூகப் பொறுப்பு உண்டு என்ற அளவில் சாய நீரை ஒரு துளிகூட ஆற்றில் கலக்க மாட்டோம் என்று சாய ஆலைகள் நீதிமன்றத்தில் உறுதி கூறின.

​நீரில் கரைந்திருக்கும் திடப்பொருள் அளவைக் கொண்டு அதனைத் தரம் பிரிக்கிறது தண்ணீர் தர நிர்ணயக் கழகம்.​ நீரில் உப்புத்தன்மை 1,000 டி.டி.எஸ் ஆக இருப்பின் அது நன்னீர்.​ ​(பத்து இலட்சம் நுண்பகுப்பில் திடப்பொருள் 1,000 நுண்பகுப்புகளாக இருப்பின் அதுவே 40,000 டி.டி.எஸ் ஆக இருக்குமெனில் அது கரிக்கும் கடல் நீர்.​ சாயத் தொழிற்கூடங்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளபடி,​​ நீரைச் சுத்திகரிக்க 20 நவீன பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளன.​ பல ஆயிரம் கிலோ கிராம் சாணத்தைப் பல இலட்சம் லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து நுண்ணுயிர்களை உற்பத்தி செய்து,​​ அந்தத் தொட்டிகளில் சாயக்கழிவுகள் 2 நாள்கள் தேக்கி வைக்கப்படும்போது இந்த நுண்ணுயிர்கள் சாயக்கழிவுகள் அனைத்தையும் உணவாக எடுத்துக்கொண்டு இரசாயனம் இல்லாத தண்ணீர் வெளிக்கொணரப்படுகிறது.

​பாதுகாப்பு கருதி இந்த நீரை மணல் மற்றும் செறிவூட்டப்பட்ட கரித்தூள் கலன்கள் வழியாக வடிகட்டும்போது,​​ ​ சாயமேற்றுவதற்காக கரைத்த உப்புத்தன்மை 5,000 டி.டி.எஸ் தவிர எந்த இரசாயனமும் அதில் இருக்காது.​ இந்த வெண்மையான நீரை மறுசவ்வூடு இயந்திரங்கள் மூலம் வெளிக்கொணரும்போது,​​ ஒருபுறம் 85 சதவீதம் 50 டி.டி.எஸ் உப்புத்தன்மையுள்ள மென்னீரும் மறுபுறம் 40,000 டி.டி.எஸ் உப்புத்தன்மை கொண்ட கடல்நீருக்கு இணையான உப்புநீரும் ​(15 சதவீதம்)​ வெளியே வரும்.​ இந்த 15 சதவீத நீரை கடலில் கலக்கச் செய்வதால் கடலுக்கோ கடல்வாழ் உயிரினங்களுக்கோ எந்தத் தீங்கும் ஏற்படாது.

​இதற்கு உதாரணமாக இன்னொரு விவரத்தையும் சொல்லலாம்.​ கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்,​​ குடிநீராகப் பிரிக்கப்பட்ட தண்ணீர் போக மீதமுள்ள தண்ணீரின் உப்புத்தன்மை 80,000 டி.டி.எஸ்.​ இந்தத் தண்ணீரை கடலில் கலப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றால்,​​ சாயத் தொழிற்கூடங்கள் கடலில் கலக்கும் கடல் நீருக்கு இணையான தண்ணீரால் மட்டும் என்ன தீமை நேர்ந்துவிடும்?

​சாய ஆலைகளின் 15 சதவீத தண்ணீரின் அளவு ஒரு நாளைக்கு 1.5 கோடி லிட்டர்.​ ​ அதாவது வினாடிக்கு 7 கனஅடி தண்ணீர்.​ காவிரியில் 6 மாதங்களுக்குப் ​ ​ பாசனத்துக்கு விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,800 கனஅடி.​ கோடையில்,​​ காவிரியில் குடிநீருக்காக விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடி.​ இந்தக் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால்,​​ சாய ஆலைகள் கடலுக்குக் கொண்டு செல்லும் உப்புநீரின் அளவு மிகச் சொற்பம் என்று புரியும்.

​பொது சுத்திகரிப்பு முறைகளில்,​​ சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சாய ஆலைகள் இருப்பதையும்,​​ தங்களால் நேர்ந்த களங்கம் தங்களாலேயே துடைக்கப்பட வேண்டும் என்று இந்த ஆலைகள் நம்புவதையும் அரசு புரிந்து கொண்டிருக்கிறது.​ ஆராய்ச்சியாளர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.​ ஆனால் சில சுற்றுச்சூழல் அமைப்புகள் மட்டும் புரிந்துகொள்ள முயலவில்லை என்பது வேதனையானது.​ ​

எஞ்சியுள்ள இந்த 15 சதவீத நீரையும் ​ சுத்திகரிக்க முடியாதா என்று கேட்கிறார்கள்.​ நிச்சயமாக முடியும்.​ ஆனால்,​​ இந்த 15 சதவீத தண்ணீரை ஆவியாக்கி குளிரவைத்து நன்னீராக்க ஆகும் செலவு,​​ மற்ற எல்லா நிலைகளிலும் ஏற்படும் செலவைக் காட்டிலும் பல மடங்கு அதிகம்.​ பல இலட்சம் யூனிட் மின்சாரம் வீணாகும்.

இதனால் சீனா,​​ வங்கதேச நாடுகளின் உற்பத்திச் செலவைக் காட்டிலும் நமது நாட்டின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும்.​ ​அந்த ​ நாடுகளுடன் உலகச் சந்தையில் போட்டி போட முடியாத நிலை உருவாகும்.​

இதனால் ஜவுளித் தொழிலில் நசிவு ஏற்படும்.​ ஆலைகள் மூடப்படும்.​ தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.​ சுற்றுச்சூழலில் எவை எதனால் பாதிக்கின்றன என்று பார்க்கும் அந்த ஆர்வலர்கள்,​​ சமூக - பொருளாதாரவியலில் எவற்றையெல்லாம் எது பாதிக்கும் என்று பார்ப்பதில்லை.​ ​

இந்தியா முழுவதிலும் உப்புத்தன்மை 2,100 டி.டி.எஸ் உள்ள இரசாயன நீரை சாய ஆலைகள் ஆற்றில் விட அனுமதியுண்டு.​

இருந்தும் கூட எதற்காக,​​ ஒரு துளி நீர் கூட ஆற்றில் கலக்காமல்,​​ அவற்றைச் சுத்திகரித்து கடலில் கலக்கச் செய்வோம் என்று சாய ஆலைகள் சொல்ல வேண்டும்?​

இதற்காக ரூ.800 கோடி கடன் சுமையை ஏன் சாயஆலைகள் ஏற்க வேண்டும்?​

அந்த அளவுக்குப் பொறுப்பேற்புடன் செயல்பட சாய ஆலைகள் முன் வந்துள்ளன.​ மீண்டும் நொய்யல் ஆற்றைப் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற ஆர்வமும் முனைப்பும்தான் இதற்குக் காரணம்.

இந்தியாவைப் போல பத்து மடங்கு அதிகமாக ஆடை உற்பத்தி செய்யும் சீனாவும்,​​ வங்காளதேசமும்,​​ ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலும்கூட,​​ சாய ஆலைகளிலிருந்து உப்புத்தன்மை 4,000 முதல் 6,000 டி.டி.எஸ் உள்ள சுத்திகரிக்கப்பட்ட நீர் ஆற்றில் தான் விடப்படுகிறது.​ அவை கடலில் கலக்கின்றன.​ அங்கே ஏற்படாத பாதிப்பு,​​ திருப்பூரிலிருந்து கடல் நீருக்கு இணையான உப்பு நீரைக் குழாய் மூலம் கடலுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தால் மட்டும் எப்படி நேரிடும்?

​சென்னையில் கூவம் மற்றும் அடையாறு மூலம் கடலில் கலக்கும் பெருநகர சாக்கடையால் கடலுக்கு ஏற்படும் மாசு மிக,மிக அதிகம்.​ அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.​ ஆனால்,​​ திருப்பூர் சாயத் தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்பட்ட உப்பு நீரைக் கடலில் கலப்பது சரியா தவறா என்று விவாதிக்கப்படுகிறது.​ ​

சாயத் தொழிற்கூடங்கள் தாங்கள் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுகிறார்களா என்று கண்காணித்து,​​ வார்த்தை தவறும் போது அம்பலப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.​ அதே நேரத்தில்,​​ நொய்யல் ஆற்றில் நஞ்சு கலத்தல் கூடாது என்று உறுதியோடு செயல்பட முனையும் சாய ஆலைகளை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர,​​ மீண்டும் குற்றப்பார்வையுடன் பார்ப்பது முறையல்ல.​ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,​​ அமைப்புகள் யாராக இருந்தாலும் சாய ஆலைகளின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்த்து,​​ பின்னர் விமர்சிப்பது தான் சரியாக இருக்க முடியும்.​

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை,​​ சுற்றுச்சூழலும் இல்லை.

கட்டுரையாளர்:- திவ்யார் எஸ்.​நாகராஜன்
தமிழ்நாடு அரசு திட்டக் குழுவின் நீர் மேலாண்மைத் துறை ​ உறுப்பினர்

S.Partha sarathy

unread,
Mar 15, 2010, 7:21:46 AM3/15/10
to mint...@googlegroups.com
///சென்னையில் கூவம் மற்றும் அடையாறு மூலம் கடலில் கலக்கும் பெருநகர சாக்கடையால் கடலுக்கு ஏற்படும் மாசு மிக,மிக அதிகம்.​ அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.​ ஆனால்,​​ திருப்பூர் சாயத் தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்பட்ட உப்பு நீரைக் கடலில் கலப்பது சரியா தவறா என்று விவாதிக்கப்படுகிறது///
 கூவம் மாசு - Biodegradable
சாயத்தொழிற்சாலை மாசு - Non-degradable
வித்தியாசம் சிறிது ...ஆனால் விளைவு பெரிது...அதனால்தான் விவதிக்கப்படுகின்றது.
அன்புடன்
பார்த்தசாரதி

2010/3/15 Kannan Natarajan <thar...@gmail.com>
--

MANICKAM POOPATHI

unread,
Mar 15, 2010, 5:31:14 PM3/15/10
to mint...@googlegroups.com
வணக்கம் நண்பர்களே :

அரவம் எனும் உரிச்சொல்
இடம் பொருள் ஏவலுக்கேற்ப    
பல்பொருள்(/ஒருமொழி) தர வல்லது  
என்பதனை நண்பர்கள் நன்கு அறிவார்கள் ..?

எ.கா: 
அரன் = அருக்கன்/அருகன் /அரணாசவிஞ்ஞை "உ"
(அரசாணி விஞ்சி (மெட்டி ?) வராதுங் )) ;-|
அரல்/அரலை = பச்சைக்கல்/மரகதம்.... 

அது சரி..
உழைப்பாளிகள் வியர்த்து வடித்தால்தானே 
நாமனைவரும்  சாதம் வடித்து உண்ண முடியும். :-)

உண்டால்தானே  உரக்கப் பேச முடியும்..
விரட்டி  வேலை வாங்க முடியும் ..? (வித்துவேடனம்)
நம்மால் உச்சாடனம் (உச்சஸ்தாயி)  செய்ய முடியும்...??

பிறகு..
நாகசுரம் (நாதஸ்வரம்)  மோளம்.. (மேளதாளம்)
அரங்கம்/குடைவாசல்  (natural amphitheater i.e.,)
போன்ற வெட்டி வேலையெல்லாம்  எதற்காக..?  :-p

அருள் கூர்ந்து எண்ணிப் பாருங்கள்..?

நன்றி வணக்கம்
 
அன்புடன்.../பூபதி
_______________

பிகு :  இனிய நண்பர்கள் அனைவருக்கும்
இதயம் நிறைந்த  தெலுங்கு/கன்னட புத்தாண்டு வாழ்த்துதல்கள்
உரித்தாகட்டும்...!    _/\_
____________________________




2010/2/26 N. Kannan <navan...@gmail.com>:

Venkatachalam Subramanian

unread,
Mar 16, 2010, 1:32:33 AM3/16/10
to mint...@googlegroups.com


மார்ச்27ம் தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைக்க ஏற்பாடு
Tuesday , 16th March 2010 08:29:56 AM

பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு வரும் 27ம் தேதி டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.

இயற்கையை பேணிகாக்கும் சர்வதேச நிதி அமைப்பு, உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு, பெருநகரங்களில் மார்ச் கடைசி சனிக்கிழமை அன்று இரவு, ஒரு மணி நேரம் விளக்கை அணைக்கக்கோரி வருகிறது. இதன் மூலம் கணிசமான மின்சாரமும் சேமிக்கப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த நடைமுறை துவங்கியது. 2008ம் ஆண்டில் விளக்கு அணைக்கும் நிகழ்ச்சியில் இந்தியா உள்ளிட்ட, 35 நாடுகள் பங்கேற்றன. கடந்த ஆண்டு 88 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரம் நகரங்களில் விளக்கு அணைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த நிகழ்ச்சியின் மூலம், டில்லியில் மட்டும் 700 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது. ஒரு மணி நேர விளக்கணைப்பு நிகழ்ச்சியில் டில்லியும், மும்பையும் நம்நாட்டில் முதலிடத்தில் உள்ளன. இந்த ஆண்டு வரும் 27ம் தேதி நடக்கவுள்ள விளக்கு அணைப்பு நிகழ்ச்சிக்கு, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆதரவளித்துள்ளார்.

வரும் 27ம் தேதி, வீட்டில் உள்ளவர்கள் இரவு நேர உணவை மெழுகுவர்த்தியின் ஒளியில் சாப்பிடும் படியும், ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒரு மணி நேரத்துக்கு விளக்கை அணைக்கும் படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், பூமியை காக்கும் விளக்கணைப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்த உள்ளார். வரும் 27ம் தேதி படப்பிடிப்பின் போது விளக்கணைக்க வற்புறுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எங்கள் குடும்பத்தினரும் இதை வற்புறுத்துவார்கள் என, அபிஷேக் தெரிவித்துள்ளார்.

டில்லி, மும்பையைத் தொடர்ந்து சென்னை, ஆமதாபாத், புனே, ஐதராபாத், பெங்களூரு, கோல்கட்டா நகரங்களும் வரும் 27ம் தேதி விளக்கணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.


S.Partha sarathy

unread,
Mar 16, 2010, 1:49:36 AM3/16/10
to mint...@googlegroups.com
தமிழகத்தில் நாம் இதை ஏற்கனவே சிறாப்போடு செயல் படுத்திக்கொண்டு வருகின்றோம்.
ஒரு மணி நேரம் அல்ல...இரண்டுமணி நேரம்.
மார்ச் 27 மட்டும் அல்ல.... தினம்தோறும்.
விளக்கு மட்டும் அல்ல.... அனைந்து மின்சாதனங்களும்


அன்புடன்
பார்த்தசாரதி

2010/3/16 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

S.Krishnamoorthy

unread,
Mar 15, 2010, 9:43:38 PM3/15/10
to mint...@googlegroups.com
ஆனாலும் ரொம்பக் கிண்டல்தான்.
“மௌன அழுகை”யைக் கேள்விப்பட்டதில்லையா?
வழிப்போக்கன்

2010/3/16 MANICKAM POOPATHI <poop...@gmail.com>



--
S. Krishnamoorthy

Subashini Tremmel

unread,
Mar 18, 2010, 8:40:47 AM3/18/10
to mint...@googlegroups.com
:-)
 
சென்னையில் கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியின் போது திடீரென்று மின்சாரம் தடை பட்டு விட்டது. பட்டறையை நினைத்தபடி நடத்த முடியாமல் ஏதோ ஒரு வகையாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம். சற்று நேரத்தில் வரும் ஒரு மணி நேரத்தில் மின்சாரம் வரும்  என்று சொன்னார்கள். ஆனால் மாலை வரை வரவேயில்லை..:-)
-சுபா
2010/3/16 S.Partha sarathy <spsar...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Mar 18, 2010, 10:17:39 AM3/18/10
to mint...@googlegroups.com
முக்யமான நிகழ்ச்சிகளில் மின்சாரத்தடை ஏற்படுத்துவது தருமமிகு சென்னையின் இயல்பு.



2010/3/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
இன்னம்பூரான்

Tthamizth Tthenee

unread,
Mar 18, 2010, 11:20:23 AM3/18/10
to mint...@googlegroups.com
மின்சாரத் தடை என்பதே  சென்னையில் கிடையாது
 
மின்சாரமே  கிடையாது
 
பிறகு   எதற்கு   தடை
 
தினம்தோறும்   தீபாவளி போல்   தினம்தோறும் மின்தடை என்று  கொண்டாடலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
18-3-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Innamburan Innamburan

unread,
Mar 18, 2010, 12:00:13 PM3/18/10
to mint...@googlegroups.com
அது சரி, தேனீ, இதனால் மற்றதொரு தடை 'விருதாவாக' போய் விடுகிறதே என்ற சமூகநல விசனம்.



2010/3/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

தாரகை

unread,
Mar 18, 2010, 3:20:37 PM3/18/10
to மின்தமிழ்
தலையங்கம் - செய்வன திருந்தச் செய்!

இந்தியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கவும்,
இழப்பீடுகளை நிர்ணயிக்கவும் பசுமை நீதிமன்றங்கள் அமையவுள்ளதாக மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் இரமேஷ் இரு தினங்களுக்கு முன்
அறிவித்துள்ளார்.

இத்தகைய பசுமை நீதிமன்றங்களை அமைப்பதில் இந்தியா முதல் நாடாக இருக்கும்
என்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முதல் முறையாக நீதிமன்றத் தீர்வு
கிடைக்கவுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டாலும், இத்தகைய பசுமை
நீதிமன்றங்கள் ஏற்கெனவே பிலிப்பைன்ஸ் நாட்டிலும் (2008) சீனாவிலும்
(2007) நடைமுறைக்கு வந்தாகிவிட்டது. இந்தியாவில் இத்தனை காலமாகப்
பேசப்பட்டு வந்த நிலை மாறி இப்போது தான் அதற்கான வடிவம் காணப்பட்டுள்ளது.
அதுவும்கூட நடைமுறைக்கு எப்போது வரும் என்பதும் தெரியவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு அமைப்புகளை உருவாக்கவுள்ளது.

ஒன்று, தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இந்தத் தீர்ப்பாயம், சுற்றுச்சூழல்
பாதிப்புகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து இழப்பீட்டை எவ்வளவு வழங்க
வேண்டும், பாதிப்பை எப்படி போக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறும்.

இரண்டாவதாக அமைக்கப்படவிருப்பது தேசீய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்.
இந்த ஆணையம் ஏறக்குறைய ஒரு கண்காணிப்பு அமைப்பு. சுற்றுச்சூழல்
விதிமீறல்களை கண்காணிப்பதும், நடவடிக்கை எடுப்பதும், கொள்கையைத்
தீர்மானிப்பதும், சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி
வழங்குவதும் இந்த ஆணையத்தின் வேலை.

இந்தத் தீர்ப்பாயத்தின் வரையறைக்குள் காற்று, நீர், மண், காடுகள்,
கனிமங்கள் அனைத்தையும் மனித உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு வகை
செய்தல், அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு தண்டனை தருதல் ஆகியவை
அடங்கும் என்றாலும், இது உண்மையாகவே இன்னொரு நீதிமன்றமாக இருக்குமா
என்பது சந்தேகமே!

காவிரி தீர்ப்பாயத்தைப் போலவே, இதுவும் ஒரு தீர்ப்பாயம் மட்டுமே. இந்த
தீர்ப்பாயத்துக்கு தண்டனையை பரிந்துரைக்க முடியுமே தவிர, சட்டப்படி
தண்டனையை நீதிமன்றம் தீர்ப்பளிப்பதைப்போல அளிக்க முடியாது என்பது
சட்டத்துறை வல்லுநர்களின் வாதம். இந்தத் தீர்ப்பாயத்தில் ஓய்வு பெற்ற
நீதிபதிகளும் அரசினால் நியமிக்கப்படும் அங்கத்தினர் இருவரும் விசாரணை
நடத்துவார்கள். ஏறக்குறைய நுகர்வோர் மன்றம் போலவே இதுவும் அமையும்
என்பதுதான் சட்ட வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

2007ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தனியாகச் செயல்பட்ட ஃபாரஸ்ட் பெஞ்ச்
கலைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அரசு,

அப்போது சொன்ன காரணம்:-

காடுகள், சுற்றுச்சூழல் பிரச்னைகளில் நிபுணத்துவம் இல்லாதவர்கள்
அளிக்கும் தீர்ப்பு அல்லது மேற்கொள்ளும் முடிவுகளால் பிரச்னைகள் தான்
ஏற்படுகின்றன. மேலும், இந்த ஃபாரஸ்ட் பெஞ்ச் சொல்லும் தீர்ப்புகளை மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்புடையதாகக் கருதாமல், மேல்முறையீடு
செய்கிறது. மேலும், இந்த காடுகள் என்ற வரையறை நிர்ணயிப்பதில் மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சகம் சொல்லும் அளவுகோலும், நீதிமன்றத்தின் அளவுகோலும்
வேறாக இருக்கின்றன என்பதுபோன்ற பல காரணங்கள் அடுக்கப்பட்டன. இப்போது
மட்டும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்
கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுமா?

உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு ஃபாரஸ்ட் பெஞ்ச் இருந்தால் பிரச்னை
ஏற்படுகிறது என்பதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ்,
தாங்கள் நியமிக்கும் நீதிபதிகள் மற்றும் அங்கத்தினர்களைக் கொண்ட
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்பதும் கைவிடுவதும் அமைச்சகத்திற்கு
பிரச்னைகளோ கேள்விகளோ ஏற்படுத்தாதது என்ற நல்லெண்ணத்தினால் இப்படியாக ஒரு
பசுமைத் தீர்ப்பாயம் ஏற்படுத்துகிறார்களா?

சீனாவில் பசுமை நீதிமன்றங்கள் ஏற்பட்டதன் மிக அடிப்படையான காரணமே
தொழிற்சாலை மாசுகளால் குடிநீர் ஆதாரங்கள் பாழ்பட்டது தான். அந்நாட்டின்
பல்வேறு மாகாணங்களிலும் இந்தப் பிரச்னை பெரிதானபோது தவிர்க்க முடியாமல்
இந்த நீதிமன்றங்களை சீனா ஏற்படுத்தியது. இந்த நீதிமன்றத்தின் வரையறை
சுற்றுச்சூழல்சார்ந்த குடிமையியல், குற்றவியல், நிர்வாகவியல் வழக்குகள்
அனைத்தையும் விசாரிக்க அதிகாரம் பெற்றுள்ளது. மேலும் இதில் யாரும்
பொதுநலன் வழக்குகள் தொடுக்கவும்கூட சீன அரசு விதிமுறைகளில்
சட்டத்திருத்தம் செய்திருக்கிறது என்றால், அந்த நீதிமன்றத்துக்கு சீனா
அளித்துள்ள முக்கியத்துவத்தை உணர முடிகிறது.

பிலிப்பைன்ஸில் அமைக்கப்பட்டுள்ள பசுமை நீதிமன்றத்தின் அடிப்படைக்
காரணமும் குடிநீர் மாசுபடுவதைத் தடுப்பது தான்.

இந்தியாவில் நீர் ஆதாரங்களுக்கும் நிலத்தடி நீருக்கும் நிகழ்த்தப்பட்டு
வரும் மிகப்பெரும் அநீதியைப்போல வேறு எந்த நாட்டிலும் நடக்காது. குடிநீர்
மாசுபாடு ஒன்றுக்காக மட்டுமே தனி நீதிமன்றம் அமைக்கும் அளவுக்கு
பிரச்னைகள் மலிந்து கிடக்கின்றன. வேலை எனது அடிப்படை உரிமை, கல்வி எனது
அடிப்படை உரிமை என்பதைப் போல குடிநீரும் காற்றும் எனது அடிப்படை உரிமை
என்று கோர வேண்டிய அவலம் அரங்கேறியிருக்கிறது.

இந்த நிலைமையிலும், நீதிமன்றம் என்ற போர்வையில், நீதிமன்றத்தின் கீழ்
செயல்படும் தனிப் பிரிவாக இல்லாமல், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ்
செயல்படும் அமைப்பாக பசுமைத் தீர்ப்பாயம் அமையும் என்றால், அரசியல்
தலையீடுகளும், நாணல் தீர்ப்புகளும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இத்தகைய வழக்குகளை இப்போதைய நீதித்துறையின் கீழ், தனி நீதிமன்றம்
அமைத்து, அவர்கள் விரும்பினால் சுற்றுச்சூழல் ஆர்வலர் அல்லது அறிவியல்
அறிஞர்களைக் கொண்டு ஒரு குழுவிடம் பிரச்னையை விவாதித்து பிறகு தீர்ப்பு
வழங்கும் முறையை ஏற்படுத்தலாம். சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்களை
கண்காணிக்க வனத்துறையும், மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு
வாரியமும் இருக்கும்போது, தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் என்பது
இன்னொரு அதிகார அடுக்காக அமையுமே தவிர, வேறு எதற்கும் பயன்படாது.

Hari Krishnan

unread,
Mar 18, 2010, 11:47:23 PM3/18/10
to mint...@googlegroups.com


2010/3/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

மின்சாரத் தடை என்பதே  சென்னையில் கிடையாது
 
மின்சாரமே  கிடையாது
 
பிறகு   எதற்கு   தடை
 
தினம்தோறும்   தீபாவளி போல்   தினம்தோறும் மின்தடை என்று  கொண்டாடலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

ரொம்பத்தான் பீத்திக்காதீங்க.  ஒருநடை பெங்களூருக்கு வந்து, நாலுநாள் தங்கிட்டுப் பொறவு சொல்லுங்க.  கடந்த ஏழெட்டு மாதங்களாக (பருவமழை பெய்து, அணைகள் நிரம்பியிருந்த சமயத்தில் கூட--ஹைட்ரோ எலக்ட்ரிசிடி உற்பத்தி ஆகல...எல்லாத் தண்ணியையும் தமிழ்நாட்டுக்காரன் குடிச்சிடறான்னு சொல்ல முடியாம, அணைக்கட்டுல தேக்கிவைக்க இயலாம திறந்துவிட்ட அந்தச்சமயம் உட்பட--தினோம் மூணுலேந்து நாலுமுறை கோயிந்தோ.  ஒவ்வொரு முறையும் ஒண்ணுல இருந்து ரெண்டு வரைக்கும் கோயிந்தோ.  மொத்தம் ஒரு நாளைக்கு நாலுல இருந்து ஆறுமணி நேரம் கோயிந்தோ.  

ஒங்க சாதனையைக் காட்டிலும் எங்க சாதனைதான் பெருசாக்கும்.  இதுவும் வாழற எடத்துக்குப் பொருத்தமான பதில்தான்.  (இந்த திசையில எல்லாம் தாரகைகள் கண்சிமிட்டுமா என்பது எனக்குத் தெரியாதுங்கோவ்...)

Hari Krishnan

unread,
Mar 18, 2010, 11:52:24 PM3/18/10
to mint...@googlegroups.com


2010/3/19 Hari Krishnan <hari.har...@gmail.com>

சொல்ல முடியாம, அணைக்கட்டுல தேக்கிவைக்க இயலாம திறந்துவிட்ட அந்தச்சமயம் உட்பட--தினோம் மூணுலேந்து நாலுமுறை கோயிந்தோ.  ஒவ்வொரு முறையும் ஒண்ணுல இருந்து ரெண்டு வரைக்கும் கோயிந்தோ.  

ஒவ்வொரு முறையும் ஒண்ணுல இருந்து ரெண்டுமணி நேரம் வரைக்கும் கோயிந்தோ என்பது இரண்டாம் பதிப்பு என்க.  இதையே மென்பொருளாளர் M1.01 (M=Mail :P)  1.023 என்றெல்லாம் வருணிக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலையாய் தெற்றென விளங்கா நின்றதாம் என்க.  

Tthamizth Tthenee

unread,
Mar 19, 2010, 12:02:41 AM3/19/10
to mint...@googlegroups.com
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழ்வனைத் தூக்கி மணையில் உட்காரவை

என்று ஒரு சொல் வழக்கு உண்டு

அதுதான் நினைவுக்கு வருகிறது

அடிக்கடி பெங்களூருக்கு விஜயம் செய்யும் நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக
கவனித்து வருகிறேன்

முன்பெல்லாம் ரெயில் பெங்களூர் உள்ளே நுழையும்போதே குளிர் ஆரம்பித்துவிடும்,

பசுமையான காட்சிகளும் தென்பட ஆரம்பித்துவிடும்

சாலைகள எல்லாம் பூங்கா, மலர்ச் செடிகள் என்று பசுமை போர்த்தியிருக்கும்

கார்டன் சிட்டி என்றழைக்கப்பட்ட அந்த பெங்களூரை இனி காணமுடியாது

இப்போது வரண்டு கிடக்கும் பெங்களூரூ

பசுமை இல்லாத ஊரிலே மழையே வராது,மின்சாரம் மட்டும் எப்படி வரும்


அன்புடன்
தமிழ்த்தேனீ

19-3-10 அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
>
> To unsubscribe from this group, send email to

> mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words
> "REMOVE ME" as the subject.
>


--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள


தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Hari Krishnan

unread,
Mar 19, 2010, 12:10:35 AM3/19/10
to mint...@googlegroups.com


2010/3/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்   கிழ்வனைத் தூக்கி மணையில் உட்காரவை

என்று ஒரு சொல் வழக்கு உண்டு

அதுதான் நினைவுக்கு வருகிறது

ஏன்?  இந்த இழைக்கு பெங்களூரு தொடர்பில்லாத ஒன்றா?  புவியன்பு மடல்தானே இது?  பெங்களூரு புவியில்தானே இருக்கிறது?  கிழவனத் தூக்கி மணையில வச்ச கதை நினைவுக்கு வருவானேன்! :-))


S.Partha sarathy

unread,
Mar 19, 2010, 9:42:11 AM3/19/10
to mint...@googlegroups.com
///ஆனாலும் ரொம்பக் கிண்டல்தான்///

கிண்டல் இல்லை ஐயா, தமிழக அமைச்சரின் அறிவிப்பு.
                  “... வரும் மே மாதம் வரை (மார்ச் 27 மட்டும் அல்ல) மின்தடை நீடிக்கும்...மின் வெட்டு கிடையாது.. கிராமங்களில் 2 மணிநேரம் மின்தடை உள்ளது.......”

பார்த்தசாரதி

2010/3/16 S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Mar 19, 2010, 9:47:48 AM3/19/10
to mint...@googlegroups.com
ஏன்? இந்த இழைக்கு பெங்களூரு தொடர்பில்லாத ஒன்றா? புவியன்பு மடல்தானே
இது? பெங்களூரு புவியில்தானே இருக்கிறது? கிழவனத் தூக்கி மணையில வச்ச
கதை நினைவுக்கு வருவானேன்! :-))


இந்த இழை பெங்களூருக்கும் தொடர்புள்ளதுதான்

சென்னைக்கும் தொடர்புள்ளதுதான்

மக்களுக்கு நன்மை செய்யவேண்டிய ஆக்கத்திட்டங்கள் எவ்வளவோ இருக்க
தேவையில்லாத திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற ஏதோ செய்துகொண்டிருக்கிறார்களே
என்னும் ஆதங்கத்தில் தான் அப்படி எழுதினேன்

பின் குறிப்பு (இன்று (பராமரிப்புக்காக) என்னும் பெயரில் காலை முதல்
மாலை ஐந்து மணி வரை மின்சாரம் இல்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

19-3-10 அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:
>
>

Subashini Tremmel

unread,
Mar 19, 2010, 3:02:59 PM3/19/10
to mint...@googlegroups.com
சென்னைக்குப் போட்டியாக பெங்களூரிலும் மின்சாரத் தடை பிரபலமாக இருக்கும் போலிருக்கின்றதே.
 
சரி - தேனீயார்.  நெடுநாட்களுக்குப் பிறகு தமிழகம் வந்திருக்கின்றீர். நண்பர்களை எல்லாம் பார்த்தாச்சா? உங்கள் சினிமா/நாடகத்துறை எப்படி  இருக்கின்றது? கணினி இப்போது சரியாகிவிட்டதா?
 
-சுபா

2010/3/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Kannan Natarajan

unread,
Mar 19, 2010, 7:56:35 PM3/19/10
to Min Thamizh
பாலைவனமாகும் சோலை வனங்கள்!

தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து உதகை வரை இந்த மலைத் தொடரில் மனிதர்களின் புழக்கத்திற்கு வராத குன்றுகளின் உச்சியில் இருக்கும் புல்வெளிகள், பெய்யும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் தேக்கி வைக்கும் நீர்த் தொட்டிகளாக இயற்கையாகவே அமைந்துள்ளன. மலைச் சிகரங்களில் நடக்கும் மகத்தான இயற்கை நிகழ்வைப் புரிந்து கொண்டால் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் சிக்கல் வராமல் செய்ய முடியும்.

சமவெளியைவிட மலை உச்சிகளில் மழைப்பொழிவு அதிகம். அறிவியல் படி தண்ணீர் உயரமான இடத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடிவரும் இயல்பு கொண்டது. ஆனால், இந்தப் புல்வெளிகள் இருக்கும் குன்றுகளில் மழை பெய்தால் அவற்றைத் தம் வேர்க் கால்களால் தேக்கி வைக்கும் இயல்பை புல்வெளிகள் கொண்டுள்ளன.

இக் குன்றுகளின் சரிவுகளில் இருக்கும் சோலைக் காடுகள் நம் மலைக்கே உரித்தான தனித்தன்மை கொண்டவை. வள்ளுவன் சொன்ன "அணிநிழற்காடு" இந்த சோலைகள் தான். கதிரவனின் ஒளிக்கீற்றுக்குள் புகமுடியாத, ஈரப்பதம் நிறைந்த சோலைகளில் மண் உருவாகும் விதமே சிறப்புக்குரியது.

தமிழகத்தின் ஆண்டுதோறும் சராசரி மழையளவு 900 மி.மீ. ஆனால், நமக்கு ஆண்டுக்கு 50 நாட்களுக்கும் குறைவாகவே மழை கிடைக்கிறது. இவற்றை ஆண்டு முழுவதும் பயன்படுத்த இயற்கை கொடுத்த கொடை தான் மலைக்காடுகள். இதைத்தான் நம் முன்னோர்கள் குறிஞ்சி நிலம் என வரையறுத்து வைத்தனர்.

காடாய் இருந்த முல்லை நிலங்களை அழித்து மருத நில வயல்களாய் மாற்றிய தமிழர்கள், குறிஞ்சி நிலத்தை எந்த சேதாரமுமின்றி வைத்திருந்ததாக வரலாறு சொல்கிறது. எந்த நதியும் சமவெளிகளில் உற்பத்தியாவதில்லை. மலைகளில் தான் உற்பத்தியாகிறது. பசுஞ்சோலைகளே ஆறுகளின் தாய்மடி.

வெள்ளையர்கள் காலத்தில் நமது மலை வளம் கொள்ளை போனது. இயற்கைச் சோலைகள் அழிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட யூகலிப்டஸ், வேட்டல், பைன், தேயிலை, காபி என பசுமைப் பாலைவனங்கள் உருவாக்கப்பட்டன. ஓடைகள் மடிந்து நதிகள் சுருங்கின. இன்னும் மிச்சமிருக்கும் மிகக் குறைந்த மலைக்காடுகளே தண்ணீரின் ஆதாரம். அவற்றைக் காப்பது நம் தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து.

உலகம் இன்று ஒரு பேராபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் "புவி வெப்பம்". இதுபற்றி அறிவியல் உலகம் ஆழ்ந்த கவலையில் உள்ளது. மனிதர்கள் தோன்றிய நாள் முதல் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை பூமியின் வெப்பநிலை சீராக இருந்தது.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக பூமியின் வெப்பநிலை உயரத் தொடங்கி உள்ளது. விழும் கதிரவனின் ஒளிக்கீற்றுகளில் பெரும் பகுதியை பூமி திருப்பி அனுப்பி விடுகிறது. அந்த அளவோடு நின்றுவிட்டால் பூமி முழுவதும் துருவப் பகுதியை போல் உறைந்து போயிருக்கும். ஆனால், திருப்பி அனுப்பப்படும் வெப்பத்தை, புவியைச் சூழ்ந்துள்ள சில வாயுக்கள் உள்வாங்கி இங்கு ஓர் இதமான வெப்பம் நிலவ காரணமாய் உள்ளன.

இந்த விளைவு பசுமைக்குடில் விளைவு என்றும், அந்த வாயுக்கள் "பசுமைக்குடில் வாயு"க்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கார்பன் - டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஆகியவை முக்கியமான பசுமைக்குடில் வாயுக்கள்.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெளியேற்றிய கார்பன் - டை - ஆக்ஸைடு புவி வெப்பம் உயர்ந்ததற்கு முக்கியக் காரணம். உலகின் துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருக ஆரம்பித்துவிட்டன. இதன் விளைவாக கடல் மட்டம் உயர்வதோடு பருவநிலையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் உள்ள குளிர்நாடுகளில்கூட அனல் காற்று வீசுகிறது. பெரும் வறட்சி, வெள்ளம் ஆகியவை பல நாடுகளை அச்சுறுத்துகிறது. விவசாயம் கேள்விக் குறியாகி உள்ளது. புதிய நுண் கிருமிகளின் தோற்றத்தால் புதுப்புது நோய்களுக்கு மனிதகுலம் உள்ளாக்கிறது. துருவக் கரடிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளன. இமயமலையில் பனி உருகுவது தொடர்ந்தால் வடஇந்திய நதிகள் அனைத்தும் வறண்டு போய்விடும்.

சுனாமியால் பாதித்த பல கடலோர கிராமங்கள் உள்பட மும்பை, சென்னை போன்ற நகரங்களும் கடலில் மூழ்கிவிடும். இந்த பேராபத்தில் இருந்து நம் தேசத்தையும், மக்களையும் காப்பாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தத் தருணத்திலும் விழித்துக் கொள்ளாவிட்டால் மணலும், கற்களும் தான் மிஞ்சும்.

ஜப்பானின் கியாட்டோ நகரில் கூடிய உலக ஆய்வாளர்கள், உற்பத்தியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவைக் குறைக்க வலியுறுத்தினார்கள். ஆனால், இவற்றை பெருமளவு உற்பத்தி செய்யும் அமெரிக்கா போன்ற நாடுகள் கையெழுத்திட மறுக்கின்றன. கடந்த டிசம்பரில் கோபன்ஹெகனில் நடந்த உலக மாநாட்டிலும் இது பற்றி பேசப்பட்டது. ஆனால், செயல்பாடுகள் தொடர்பாக இன்றும் ஆயத்தமாகவில்லை.

கார்பன்-டை-ஆக்ஸைடு உற்பத்தியைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதோடு உலகை வற்புறுத்தும் கடமையும் நமக்கிருக்கிறது. மறுபுறம் இந்த பூமியின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதன்மூலம் உற்பத்தியான கார்பன்-டை-ஆக்ஸைடை குறைக்கச் செய்யலாம். குறிப்பாக, இந்த பூமியில்தான் தண்ணீரும், உயிர்க்காற்றும் உள்ளது. அதனால்தான் பூமியை உயிர்க்கோளம் என்று அழைக்கிறோம்.

இந்த உயிர்க் கோளத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வது உலகின் 13 நாடுகளில் உள்ள காடுகள்தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, இமயமலைக் காடுகள் உலகில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளே, வெளியேறிய கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சிக் குடிக்கின்றன. காடுகளைக் காப்பாற்றுவதன் மூலம் உலகை அச்சுறுத்தும் புவி வெப்பத்தில் இருந்து எல்லா உயிர்களையும் காப்பாற்ற முடியும்.

எம்.கார்த்திக்

Tthamizth Tthenee

unread,
Mar 20, 2010, 12:47:40 AM3/20/10
to mint...@googlegroups.com
இன்னும்   மடிக்கணிணி சரியாகவில்லை
 
நண்பர்களை ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டிருக்கிறேன்
 
இதற்கு இடையில் என்னுடைய  சொந்த வேலைகள்  மிகுந்து இருக்கின்றன
 
அதையும் செய்து வருகிறேன்
 
நாடகத்துறையிலும் , திரைத்துறையிலும்  மீண்டும் அழைக்கிறார்கள
 
என்னுடைய பல பணிகளுக்கு இடையே இவை  சாத்தியப்பட்டால்  மீண்டும் அந்தத் துறையிலும் இயங்குவேன்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
20-3-10 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Kannan Natarajan

unread,
Mar 20, 2010, 4:10:54 AM3/20/10
to Min Thamizh
புவி வெப்பமயமாதலை தடுக்க பள்ளிகளில் 'பசுமை போர்வை' திட்டம்

புவி வெப்பமயமாதலை தடுக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்டம் தோறும் தேர்வு செய்யப்பட்ட நான்கு பள்ளிகளில், 'பசுமை போர்வை' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

புவி வெப்பமயம்:-

தொழிற்சாலைகள், வாகன பெருக்கம் உட்பட பல்வேறு விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் புகை காரணமாக புவி வெப்பமயமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க சுற்றுச்சூழல் துறை சார்பில் இயற்கை சார்ந்த பொருள்கள் அழியாமலும், புதுப்பிக்கவல்ல எரிசக்திகளை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.

புதிய திட்டம்:-

புவி வெப்பமயமாதலை தடுக்கவும், கரியமிலவாயு தாக்கத்தை குறைக்கும் விதமாகவும் பள்ளிகளில், 'பசுமை போர்வை' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இரண்டு உயர்நிலை, இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்டத்திற்கு தலா ஒரு இலட்சம் வீதம், 31 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியில் பள்ளி வளாகத்தில் தேவையான மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வளர்க்கப்பட உள்ளன. இந்த கல்வியாண்டிலிருந்து ஆண்டுதோறும், ஒவ்வொரு
மாவட்டத்திலும், நான்கு பள்ளிகளை தேர்வு செய்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான நிதி பயன்படுத்தும் விதம், திட்ட அறிக்கையை பள்ளிகளிடம் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

நன்றி:- தினமலர்

S.Partha sarathy

unread,
Mar 20, 2010, 12:03:39 PM3/20/10
to mint...@googlegroups.com
////இதற்காக இரண்டு உயர்நிலை, இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த, //////

சென்னை பள்ளிக்கூடங்களில் விளையாட்டுத்திடல் என்பதே அரிதாகையால் அதை விட்டுவிடார்கள் போலும். கிராம பள்ளிக்கூடங்களுக்கு  மரத்தடியே மேல் என்பதால் மாவட்டங்ளுக்கு 1 லட்சம் ரூபாயில் வீதம் கட்டிடடம் கட்டாமலேயே  வகுப்பரை பிரச்சனையும் தீர்ந்த்தது. ஒரே கல்லில் இரண்டுமாங்காய்.

ஊட்டி, கொடைக்கானல் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள காடுகளை அழிக்கும் கும்பல்களை அழிக்கும் தைரியம் இல்லாமல் பள்ளிகளுக்குப் “ பசுமை போர்வை’யாம்.!  மரம் வளர்பது நல்ல முயற்சிதான் வரவேற்கலாம். ஆனால் மாவட்டதிற்கு நான்கு பள்ளிகளில் ”முடிந்தவரையில்” மரக்கன்றுகளை வைத்து புவிவெப்பமாவதைத் தடுக்கின்றோம் என் மாசு கட்டுப்பட்டுவாரியம் என்றுரைப்பது - ”புவிவெப்பமடைதல்” என்பதை  சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லையோ என தோன்றுகின்றது.


பார்த்தசாரதி

2010/3/20 Kannan Natarajan <thar...@gmail.com>

தாரகை

unread,
Mar 20, 2010, 6:03:41 PM3/20/10
to மின்தமிழ்
> ”புவிவெப்பமடைதல்” என்பதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லையோ என தோன்றுகின்றது.

Every thing needs to be started at a small & simple level.

We always chide any organisation for an innovative step.

Atleast, we can cultivate an attitude of appreciation for a start!

S.Partha sarathy

unread,
Mar 20, 2010, 11:18:23 PM3/20/10
to mint...@googlegroups.com
///Every thing needs to be started at a small & simple level.


We always chide any organisation for an innovative step.



ஐயா, பள்ளிக் குழந்தைகள் இதை துவங்கி இருந்தால் சந்தோசம் அடையலாம்.  வேறு அரசுசார அமைப்புகல் என்றால் பாரட்டலாம்.
ஆனால் மாசு கட்டுப்பாடுவாரியம் இப்படி சிம்ப்பில் லெவெலில் செய்தால் எப்படி.?.. அவர்களுக்கு என்று ஒரு லெவல் உள்ளதே...அதற்குமேல் அதிகாரமும் உள்ளதே...
எவ்வளவோ செய்வார்கள் என்ற எதிர்பார்புகள் இருக்கையில் குழந்தைத்தனமாக செய்கின்றார்களே! இந்த ரேஞ்சில் அரசாங்கம் ’start’ பண்ணுவதாலேயே சீரியசாக எடுத்துக்கொள்ளவிலலை என தோன்றுகின்றது.

//Atleast, we can cultivate an attitude of appreciation for a start!//
கண்டிப்பாக... அதற்காக முடிந்தவரை முயற்சி செய்துவிட்டு வழி இல்லாததால் ஜால்ட்ரா போட மனம் இடம் தரவில்லை.



அன்புடன்

பார்த்தசாரதி




2010/3/21 தாரகை <thar...@gmail.com>

தாரகை

unread,
Mar 21, 2010, 12:55:24 AM3/21/10
to மின்தமிழ்
> //Atleast, we can cultivate an attitude of appreciation for a start!//
> கண்டிப்பாக... அதற்காக முடிந்தவரை முயற்சி செய்துவிட்டு வழி இல்லாததால்
> ஜால்ட்ரா போட மனம் இடம் தரவில்லை.


There is always a way....Our heart needs to open up.....

Any worthwhile task requires appreciation - which does not equate to
adulation.

We sometimes lack the attitude to acknowledge even small steps,but
crave for more big things...

வான் விரும்பி

unread,
Mar 21, 2010, 11:05:51 AM3/21/10
to மின்தமிழ்
ஐயா, எதையும் பாரட்டும் மனப்பக்குவம் வேண்டும் எனில் என்னுடைய பதிவையும்
தாங்கள் பாராட்டி இருக்கலாமே! விமர்சனம் ஏனோ?

அன்புடன்
பார்த்தசாரதி

Kannan Natarajan

unread,
Mar 27, 2010, 8:59:46 PM3/27/10
to Min Thamizh
புவி வெப்பமயமாதல்:- ஒரு மணி நேரம் மின்விளக்குகள் அணைத்து விழிப்புணர்வு

புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (27/03/10) இரவு 8.30 முதல் 9.30 மணி வரை மின்விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டன.

புவி வெப்பமயமாதல் குறித்து உலக நாடுகள் அனைத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திகளை அந்தந்த நாடுகள் வகுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மின்விளக்குகளை அணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு 2007லிருந்து நடத்தப்படுகிறது.

இதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் "கிரீன் விங்ஸ்" மாணவர் அமைப்பு சார்பில் இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (27/03/10) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஓசை, சிறுதுளி,
ராக் உள்ளிட்ட தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள், 200க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இரவு 8.30க்கு பல்கலை. வளாகத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டன.

புவியைப் பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி "60
நி எர்த் அவர்" என்று ஆங்கிலத்தில் அகல் விளக்குகளால் அமைத்திருந்தனர். இரவு 9.30 மணி வரை விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

வேளாண் பல்கலை. பேராசிரியர் இளமுருகு மற்றும் சிறுதுளி, ராக் அமைப்பின் நிர்வாகிகள் புவி வெப்பமயமாதல் குறித்து பேசினர்.

Kannan Natarajan

unread,
Apr 2, 2010, 12:10:56 AM4/2/10
to Min Thamizh
உலகம் அழிந்துவிடுமா?

விரைவில் உலகம் அழிந்துவிடுமா?
 
அண்மைக்காலமாக மனித குலத்தின் ஆழ்மனத்தில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கேள்வி இது.

திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஒரு மாணவி இதைக் கேட்டார். ஒரு கணம் மெளனித்த அந்த விஞ்ஞானி, அப்புறம் இப்படி பதில் தந்தார்:- "இல்லை. பூமியில் 1,000 கோடி ஆண்டுகள் சூரிய வெளிச்சம் இருக்கும் என்று விஞ்ஞானி சந்திரசேகர் தன் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்.

தற்போது 500 கோடி ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உள்ளன. ஆகையால், கவலைப்படத் தேவையில்லை.''
 
அந்த மாணவி என்றில்லை; இயற்கையின் மீதும், சக மனிதர்கள் மீதும் எந்த அக்கறையும் இல்லாதவர்களையும்கூட இந்தக் கேள்வி பதற்றத்துக்குள்ளாக்குகிறது. மாயர்களின் நாகரிகத்தில் தொடங்கி புவி வெப்பமயமாதல் கருதுகோள் வரை சகலமும் இந்தக் கேள்வியாளர்களின் மனத்தை கேள்வியை நோக்கித் தள்ளுகின்றன. பனிமலைகள் உருகுகின்றன; மலைகள் சரிகின்றன; கடல்மட்டம் உயர்கிறது; தீவுகள் மூழ்குகின்றன. உலகம் அழிந்துவிடுமா?
 
எப்படி இந்த உலகைக் காப்பது?
 
தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை அணைத்தா?
 
பாலிதீன் பைகளைத் தவிர்க்க கடைக்கு துணிப் பைகளை எடுத்துச் சென்றா?
 
இனி,காருக்குப் பதில் பஸ்ஸிலேயே பயணம் மேற்கொண்டா?

உலகின் அத்தனை தொழிற்சாலைகளையும் செம்மையான தொழில்நுட்பத்தின் கீழ் மாற்றியா?
 
எப்படி உலகைக் காப்பது?
 
மனிதர்களின் பதற்றம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
 
உலகின் மிகப்பெரிய பாலைவனமாக இன்று காட்சியளிக்கும் சஹாரா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகள் நிறைந்த பசுமையான பகுதியாக இருந்தது. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.

பின்னாளில், ஏதோ ஓர் அழிவு சக்தியில் - எரிகற்களின் மோதலில் அல்லது ஒரு கொடும் தீப்புயலில் நிலத்திலிருந்த யாவும் எரிந்தழிய பாலையானது சஹாரா. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.

யாரால், எதனால் ஏற்பட்டது அந்த தீப்புயல்?
 
பல கோடி ஆண்டுகளாகக் கோள்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக புவியும் இருக்கிறது. மனிதனால் எதை மாற்ற முடியும்?

மனிதன் தீயை உருவாக்கக் கற்றுக்கொண்டபோதே அழிவு சக்தி உருவாகிவிட்டது. சக்கரத்தை அவன் கண்டறிந்தபோது அந்த அழிவு சக்தி நூறு கால்களையும் கொண்டது. ஆயுதங்களை அவன் கண்டுணர்ந்தபோது அழிக்க முடியாத சக்தியை அந்த அழிவு சக்தி பெற்றது. இந்தப் பயணம் நிலையானது. தவிர்க்க முடியாதது.
 
அடர் வனங்கள், இலட்சக்கணக்கான தாவர இனங்கள், பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகள், பறவைகள், உயிரோட்டமிக்க நீர்நிலைகள், நீர்வாழ் உயிரினங்கள், ஒட்டுண்ணிகள், நுண்ணியிரிகள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன.

சிங்கங்கள், புலிகள், கானுறை வேங்கைகள், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், ஓங்கில்கள்,சோலைப்பாடிகள், பிணந்தின்னிக்கழுகுகள் யாவும் அருகிக்கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் எப்படித் தப்ப முடியும்?

சீன ஞானி இலா வோட்சு சொன்னது போல,"வானகமும், வையகமும் நிரந்தரமாக நீடிக்க முடியாதபோது மனிதன் எப்படி நீடிக்க முடியும்?''
 
புன்சிரிப்போடு பதில் சொல்லுங்கள்:- உலகம் அழிந்துவிடுமா?
 
அழிந்தால்தான் நாம் என்ன செய்யப்போகிறோம்?

வானகமும், வையகமும் அடர் வனங்களும் உயிரோட்டமிக்க நீர்நிலைகளும் பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகளும் பறவைகளும் நீர்வாழ் உயிரினங்களும் அழிந்துகொண்டிருக்க மனிதன் மட்டும் எப்படி நீடிக்க முடியும்?
 
சிங்கங்களும், புலிகளும், கானுறை வேங்கைகளும், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும், ஓங்கில்களும், சோலைப்பாடிகளும், பிணந்தின்னிக் கழுகுகளும் அழிந்த  பின் மனிதன் மட்டும் ஏன் நீடிக்க வேண்டும்?
 
சமஸ்

Kannan Natarajan

unread,
Jun 7, 2010, 7:23:00 PM6/7/10
to Min Thamizh
முறைமையில் திரியும் நீர் மேலாண்மை!

நாளுக்குநாள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீருக்கான தேவைகளும்
அதன்மூலம் ஏற்படும் விளைவுகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

சரி, இப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?

மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில், யானை வந்தது,
பயிர்களை நாசம் செய்தது, மனிதர்கள் விரட்டினர், அவர்களை யானையும்
விரட்டியது, சிறுத்தை வந்தது, அதை வனத்துறையினர் பிடித்தனர்;
மிருகங்களின் அட்டகாசம் மக்கள் அச்சம்! என்ற செய்தி வராத நாளே இல்லை என்ற
நிலைக்கு நாம் வாழும் இந்த மாநிலப்பகுதி வெகுவிரைவில் வந்து
சேர்ந்துவிட்டது.

முறைமையில் திரிந்ததன் விளைவு இது.

மலைக்காடுகளில் போதுமான நீர் வசதி இல்லாததாலும், உணவுத்தேவை
ஏற்படுவதாலும் மிருகங்கள் தங்களின் வாழிடம் விட்டு மனிதர்கள் வசிக்கும்
பகுதிக்கு வந்துவிடுகின்றன என்ற விளக்கம் சரியாக இருந்தாலும், ஏன் நீர்
வசதி இல்லை?

மிருகங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுவதைத்
தடுக்க இயலுமா?

காடுகளில் மட்டுமல்ல, முற்றிலும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் தான்
நீர் குறித்தான பற்றாக்குறை அம்சங்கள் கணக்கிலடங்காமல் பெருகிவிட்டன.

சுற்றிலும் தண்ணீரைத் தடைசெய்து தன்பலம் காட்டும் மனிதாபிமானமில்லாத
மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாட்டில் இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புற
வாழ வேண்டிய வழிமுறைகள் நீர் மேலாண்மையில் முழுமையாகக்
கடைப்பிடிக்கப்படவில்லை.

நமக்கு அளிக்கப்பட்டுள்ள - நமக்காக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள நீர்
ஆதாரங்களையும், அதன் பாரம்பரியக் கட்டமைப்புகளையும் சிதிலமடையாமல்
பாதுகாப்பதும், சிதிலமடைந்தவைகளைப் புனரமைப்பதுமான கடமை நமக்கும்
இருக்கிறது என்கிற பொறுப்புணர்வு அனைவருக்கும் தேவையான ஒன்று.

இயற்கையான நீர்வழிப் பாதைகளின் பாதுகாப்புக்கு அரசும், சம்பந்தப்பட்ட
பகுதிகளின் மக்களும்தான் காவலாளிகள்.

நமது அடிப்படை உரிமைகளில் ஒன்று நன்னீர் பெறுவது.

மேலும் நமக்குப் பிறகு வரும் தலைமுறைக்கு நாம் தரக்கூடிய வெகுமதி சரியான,
தேவையான அளவு நீர்கிடைக்கச் செய்வதாகும்.

இது தலைமுறைகளின் தவிர்க்கவியலாத கடமை.

எனவே நீர் நிர்வாகத்தில் சற்றும் பின்தங்கி விடாத கொள்கையுடையவர்களாக
நாம் இருக்க வேண்டும்.

இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இவ்விதமாக இருப்பதுதான் இன்றுள்ள நீர் பற்றாக்குறையால் ஏற்படும்
சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உழவுத்
தொழிலுக்கு இயற்கையான நீர்வளம் போதாது எனும் நிலையில், அரசர்களால்
செயற்கையான நீர்வள அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

வெள்ளச்சேதம் நேராதவாறும், வேளாண் தொழிலுக்கு ஏற்ப பாய்ச்சலுக்கு நீர்
ஓடுமாறும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆறுகளுக்குக் கரைகள் ஏற்படுத்தலும், நீரைத் தேக்க வேண்டிய இடத்தில் அணை
கட்டுவதும் திட்டமிட்டுச் செய்யப்பட்டன.

பேராற்றின் மூலம் கண்ணாறும், கண்ணாற்றில் இருந்து கால்வாயும், கால்வாயில்
இருந்து வாய்க்கால் வெட்டலும் நிகழ்ந்தன.

இவை செய்ய இயலாத இடங்களில் ஏரி, குளங்களும் அரசர்கள் காலத்தில் வெட்டப்பட்டன.

கண்ணாறுகளும், கால்வாய்களும் பெரும்பாலும் சோழநாட்டில் உருவாக்கப்பட்டன.

ஏரி குளங்கள் அதிகமாகப் பாண்டிய நாட்டில் வெட்டப்பட்டன.

இவ்விதமாக உருவாக்கப்பட்ட நீர் மேலாண்மைக் கட்டமைப்புகள் தகுந்த பயனைத் தந்தன.

வேளாண்தொழில் பெருமை தரும் வளர்ச்சி அடைந்திருந்தது என்பதை வரலாறு
நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

தமிழகத்தின் நீர்வளம் இந்தியாவின் நீர்வளத்தில் 2 சதவீதமாக இருக்கிறது.

ஓர் இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நீரில் 3ல் ஒரு பாகம்தான்
தமிழகத்தில் வாழும் குடிமகனுக்குக் கிடைக்கிறது.

தற்போதுள்ள நீர்வளத்தைச் செம்மையாகக் கையாளவும், பருவமழை காலங்களில்
கிடைக்கும் நீரை உரியமுறையில் சேமிக்கவும் தகுந்த திட்டங்களையும்
நடைமுறைகளையும் வகுக்க வேண்டும்.

வகுக்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் அவற்றைப் பின்பற்றி
வருங்கால சமுதாயத்துக்குக் காத்துத் தர வேண்டும்.

ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக்
கூடிய தாய்மடிகள். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்கிற
எண்ணம் வெறும் எழுச்சி முழக்கமாக மட்டுமே பார்க்கப்படும் நிலை மாற
வேண்டும்.

வேதனையைத் தீர்க்கும் மருந்து அரசிடம் மட்டுமே இருக்கிறது என்பது
ஒருபுறம் உண்மையாக இருந்தாலும் மக்களுக்கும் அதில் பங்கிருக்கிறது.

குளங்களும், ஏரிகளும், ஊருணிகளும், கண்மாய்களும் தனிநபர்களின்
இலாபநோக்கத்துக்காக, மெகா விளம்பரங்கள் மூலம் விலைக்குப்
பிரித்தளிக்கப்படும் ரியல் எஸ்டேட்டுகளுக்காக அமைக்கப்பட்டவை அல்ல.

அரசுத் துறைகளின் அட்டகாசமான அலுவலகங்கள் எழுவதற்குத் திட்டமிட்டு
உருவாக்கப்பட்டவைகளும் அல்ல. வேளாண்பெருக்கத்துக்கும், உழுதுண்டு
வாழ்வோரை உய்விக்கவும், மக்களின் நலன்மீது கொண்டுள்ள மேன்மையான
அக்கறையின் வெளிப்பாடாகவும் அமைக்கப்பட்டவை. வெட்டப்பட்டவை.

ஆனால் நமது மாநிலத் தலைநகரம் சென்னையில் ஏரிகளைத் தூர்த்து மேடாக்கிக்
கட்டப்பட்ட நகரம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இதுபோலவே வளம்பல தந்த ஏரிகளும், குளங்களும் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன!

கட்டடக் காடுகளாய் மாறிக்கொண்டு இருக்கின்றன.

தமிழகத்தின்

1. மொத்தஆற்றுப்படுகைகள் - 33
2. மொத்த நீர்ப்பாசனத் தேக்கங்கள் 52
3. மொத்த ஏரிகள் 39,000

இதில்,

4. வானம் பார்த்த ஏரிகள் 25,600
5. 18,26,906 கிணறுகளில் - 13 இலட்சத்துக்கு மேற்பட்ட கிணறுகள்
மின்மோட்டார் வசதி கொண்டவை.

மேற்கண்ட நீர்சேகரிப்புக் கட்டமைப்புகள் 95 விழுக்காட்டுக்கு மேல் பருவ
மழையை மட்டுமே நம்பி உள்ளன.

பருவமழையால் கிடைக்கும் மொத்த நீரின் அளவு சராசரியாக 2,400 கோடி கனமீட்டர்.

அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி வரும் நீரின்
அளவு சுமராக 1,200 கோடி கனமீட்டராக இருக்கிறது என ஒரு புள்ளிவிவரம்
தெரிவிக்கிறது.

வாய்ப்புள்ள மொத்த நிலத்தடி நீர் 2,640 கோடி கனமீட்டர்.

இதில் 1,320 கோடி கனமீட்டர் தண்ணீர் இறைக்கப்படுகிறது.

இதனால் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு அபாயகரமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

ஆறுகளிலும், நீர் வழிப்பாதைகளில் ஓடிவரும் தண்ணீரை நடக்க வைக்க வேண்டும்,
நடக்கும் தண்ணீரை நிற்க வைக்க வேண்டும்; நிற்கும் தண்ணீரை பூமியின் உள்ளே
செலுத்த வேண்டும் என்கிற செயல்முறைகளால் மட்டுமே நீர் பற்றாக்குறை
அபாயத்தில் இருந்து மீளமுடியும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்
மேலாண்மை ஆர்வலர்கள் குரல் கொடுப்பது எவ்வளவு பொருள் பொதிந்தவையாக


இருக்கின்றன.

ஆற்றில் வருகிற நீர் மற்றும் குளம், குட்டைகள், ஏரிகள் போன்ற இன்னபிற
நீர் ஆதாரக் கட்டமைப்புகளின் மீது அவசியமான அவசரமான, அலட்சியமற்ற கவனம்
கொள்ள வேண்டிய காலமிது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள காட்டு வளங்களை அதிகரிக்கச் செய்யத்
தேவையான திட்டங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

அத்திட்டங்களில் அப்பகுதி மக்களின் பங்கேற்பும் உறுதி செய்யப்பட
வேண்டும்.தமிழகத்தின் நதிகள் அனைத்தும் மேற்கு மற்றும் கிழக்குத்
தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தே இருக்கின்றன.

நீர்வளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் காடுகளைப்
பாதுகாப்பது, காடுகளின் பரப்பளவை அதிகரிப்பது என்பது தான் தேவைக்கு ஏற்ப
நீர் பெறுவதற்கான ஒருவழியாக இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்த்துச்
செயல்படுவது நல்லது.

ஏற்கெனவே உள்ள நீர்சேகரிப்பு அமைப்புகளை நூறு விழுக்காடு பயன்பாடு
தன்மையுள்ளதாக உருவாக்குவது, அவ்வமைப்புகளுக்கு நீர் வரும் சிறு சிறு
பாதைகளை அடையாளம் கண்டு பராமரிப்பது, அரசு நிலங்கள் மட்டுமல்ல, தனியார்
நிலங்களின் ஊடேயும் மண்கரைகள் அமைத்து மழைநீர் நிலத்தடிக்குப் போகக்
கூடிய சூழலை ஏற்படுத்துவது, மேலும் புதிய புதிய நீர் சேகரிப்பு
அமைப்புகளை உருவாக்குவது போன்றவையே தண்ணீர் சேகரிப்பு நிலையமாக நமது
மாநிலம் சிறப்புற உருவாக வழி செய்யும்.

வீடுகள், கட்டடங்களிலும் நீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் இடம் பெற வேண்டும்.

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று; ஆங்கே,
எடுப்பதூஉம் எல்லாம் மழை" (15)

எனும் திருக்குறளும்,

"அமுதூறு மாமழை நீரதனாலே அமுதூறும்"

எனப் பேசிய திருமந்திரமும் தொடங்கி வைத்த கருத்தாக்கத்தின் அடிப்படையில்
பயணிப்போம்.

மழை நீர் சேகரிப்புச் செயல்பாடுகளில் இயன்ற பங்களிப்பை நல்குவது,
இருக்கின்ற நீர்வள ஆதாரங்களை அழியாமலும் மாசடையாமலும் தடுப்பது போன்ற
செயல்களை வாழ்வின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்வது நமது நல்வாழ்வுக்கு
உத்தரவாதமளிக்கும்.

புதிய வாழ்க்கை முறை, பற்றாக்குறையற்ற தண்ணீர் வளம் என்பது தான் நமது
நோக்கமாக இருக்க வேண்டும்; அது அவசியமும் கூட. இது அரசுக்கும் புரியும்;
எனவே உரத்துச் சொல்லுவோம் "மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!''

ம.தென்னரசு

meena muthu

unread,
Jun 8, 2010, 12:48:32 AM6/8/10
to mint...@googlegroups.com
முன்பு விக்கிபீடியாவில் என் பங்களிப்பாக மழைநீர் சேகரிப்பது பற்றிய கட்டுரை இட்டிருந்தேன் அது இங்கே:

பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிநாடுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிக்கவென்று சிறப்பான அமைப்புகள் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன.

வானம் பார்த்த ஊர்களான சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் மழை நீரை நம்பியே வேளாண்மை உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே நகரத்தார் காரைக்குடி, கோனாபட்டு, ஆத்தங்குடி, கானாடுகாத்தான, கோட்டையூர், தேவகோட்டை, ராங்கியம், சிறுகூடல்பட்டி, வலையபட்டி, புதுவயல் மற்றும் செட்டிநாட்டு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தங்களின் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புக்களை கட்டிவைத்துள்ளனர்.

வீட்டின் நடுப் பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்துள்ளனர். எல்லா வீட்டிற்குமே (மாடமாளிகையாய் இருந்தாலும்) கூரைக்கு நாட்டு ஓடுகள்தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. மாடியின் மேல் தளத்தில் விழும் மழைநீர் நேராக கூம்பு குழாயின் வழியாக இரண்டாவது தளத்திற்கு வந்து அங்கிருந்து அடித்தளத்திற்கு கூடல் (கூடறு) வாய்த்தகரத்தின் வழியாக வந்து சேர்கிறது, இடையில் நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழை நீரும் முற்றத்துக்குள் வந்து கொட்டும். அப்படி வந்து கொட்டும் நீரை கூடல்வாய்க்கு கீழே பெரிய பித்தளை (அகழி) அண்டாக்களை முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு வேடு கட்டி பிடித்து சேமித்து வைக்கப்படும். பின்னர் சேமிக்கப்பட்ட நீரை தேவைப்படும் போது எடுத்து சுடவைத்து அருந்துவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

தங்களுக்கு தேவையான நீரை அகழியில் பிடித்தது போக மேல்கொண்டு மிஞ்சும் மழை நீரை வீணடிக்காமல் தங்களது வீட்டின் ஓரத்திலேயே கால்வாய்களை அமைத்து வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கட்டி வைத்து அதனுள் விழுமாறு அமைத்துள்ளனர். இப்படி இப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டட கலையினால் சிறு துளி தண்ணீர்கூட வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அதே போல கழிவு நீரும் வெளியே தெருவில் செல்லாதபடி நிலத்துக்குள்ளேயே கால்வாய் அமைத்து வெளியேற்றப்படுகிறது.

இப்படி வீடுகளில் மட்டுமல்லாது கோயில்கள்,தெருக்கள் என எல்லா இடங்களிலும் மழைநீரை சேமித்துவைக்கும் தொலை நோக்கு அவர்களுக்கு இருந்துள்ளது.எப்படி என்றால் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த செம்புரான் எனப்படும் பாறைக்கற்கலால் கட்டப்பட்டுள்ள குளங்கள் அங்கு ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் எங்கு தேங்கி ஓடினாலும் கடைசியில் இந்த குளத்தில் கலக்கும் விதமாக கால்வாய்கள் வெட்டி வைக்கப்பட்டுள்ளன.

இதனால்தான் இப்பகுதியில் உள்ள குளங்கள் என்றும் வற்றாதவையாக உள்ளன. மொத்தத்தில் நகரத்தார்கள் கட்டிய வீடுகள் யாவும் மழைநீர் சேமிப்புக்கான வடிகால்கள் என கூறலாம்.

மீனா



2010/6/8 Kannan Natarajan <thar...@gmail.com>

ஏற்கெனவே உள்ள நீர்சேகரிப்பு அமைப்புகளை நூறு விழுக்காடு பயன்பாடு
தன்மையுள்ளதாக உருவாக்குவது, அவ்வமைப்புகளுக்கு நீர் வரும் சிறு சிறு
பாதைகளை அடையாளம் கண்டு பராமரிப்பது, அரசு நிலங்கள் மட்டுமல்ல, தனியார் நிலங்களின் ஊடேயும் மண்கரைகள் அமைத்து மழைநீர் நிலத்தடிக்குப் போகக் கூடிய சூழலை ஏற்படுத்துவது, மேலும் புதிய புதிய நீர் சேகரிப்புஅமைப்புகளை உருவாக்குவது போன்றவையே தண்ணீர் சேகரிப்பு நிலையமாக நமது மாநிலம் சிறப்புற உருவாக வழி செய்யும்.வீடுகள், கட்டடங்களிலும் நீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் இடம் பெற வேண்டும்.


புதிய வாழ்க்கை முறை, பற்றாக்குறையற்ற தண்ணீர் வளம் என்பது தான் நமதுநோக்கமாக இருக்க வேண்டும்; அது அவசியமும் கூட. இது அரசுக்கும் புரியும்;எனவே உரத்துச் சொல்லுவோம் "மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!''

ம.தென்னரசு

நன்றி:- தினமணி

Kannan Natarajan

unread,
Jun 16, 2010, 8:00:00 PM6/16/10
to Min Thamizh
இயற்கையைப் போற்றுவோம்!

கடந்த 7,000 ஆண்டுகளில் சிற்றூர்கள் பேரூர்களாகவும், பேரூர்கள் நகரங்களாகவும், நகரங்கள் பெரு நகரங்களாகவும் மாறின. அவ்வாறு நிகழ்கையில், சோலைகள் அழிந்து நகரங்களாகி, நகரங்கள் நரகங்களாகிவிட்டன.

உலக வயதின் காலக்கணிப்பில், மற்ற உயிர்வகைகளை ஒப்பிட்டால், மனித இனம் தவழ்ந்திடும் மழலைதான். ஆனால், மனித இனம் அளவு கடந்த அறிவாற்றலால், மலைகளைப் பெயர்த்திடவும், நதிகளை நகர்த்திடவும், உயிர்ச் செல்களினுள் ஊடுருவி, அவைகளை உருமாற்றம் அடையச் செய்யவும் ஆற்றல் பல பெற்றுள்ளது.

இதே ஆக்க அறிவு, பல தாக்கங்களைப் பாரில் உள்ள பல்லுயிரின் பாலும் பாராமுகமாகப் பரப்பிக் கொண்டே உள்ளது.

இப்பூவுலகில் தாவரங்கள் இன்றேல் மனிதன் வாழ இயலாது.

பறவைகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது.

விலங்குகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது.

ஏன், நுண்ணுயிர் வகைகள் இன்றேலும் மனிதன் வாழ இயலாது. 

ஆனால், மனிதன் என்ற இனம் இவ்வுலகத்தில் இல்லாவிட்டால் மற்ற உயிர் வகைகள் நிச்சயமாக வாழ முடியும் - வெறும் வாழ்வு அல்ல, மிக மகிழ்வாக வாழ இயலும்.

எனவே, மனித இனம் இவ்வுலகில் ஓர் இன்றியமையாத அங்கமன்று.

மனித இனம் இயற்கை என்ற சிலந்தி வலையில் ஓர் இழை.

இவ்விழை, தனித்து இருக்க முடியாது.

பிரிந்தால் பஞ்சுபோல் பறந்து விடும்.

எனவே தான், நமது வளமான வாழ்வு, மற்ற உயிர் வகைகளின் நலமான வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப கூரறிவுடன் தமிழகத்துக்குத் தகுந்த இயற்கை மேம்பாட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றினால், அனைத்து உயிர்களின் வாழ்வு வளம் பெருகும். பல் உயிர் ஓம்பல்  திட்டம் மலைகள் நலம், மக்களின் வளம்  அனைத்து உயிர்வகைகளின் மகிழ்வான வாழ்வுதான், மனித இனத்தின் நலமான,வளமான வாழ்வுக்கு ஆதாரம். எனவே, பல்லுயிர்களும் பரவலாக வாழும் மலைப்பகுதிகள்,வனப்பகுதிகளிலே இவைகளின் மகிழ்வான வாழ்வை உறுதி செய்திடும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

மகரந்தச் சேர்க்கை, விதைகள் பரவுதல் போன்ற இயற்கைப் பணிகளை அனுதினமும் செய்து வரும் பறவைகள், பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்கள், பறவைகள் போன்ற விதைபரப்பும் உயிரினங்களுக்கு ஆண்டு முழுவதும், தேவையான அளவுக்கு, விருப்பமான உணவு தரும் மரவகைகளைக் கண்டறிய வேண்டும். கண்டறிந்து, தமிழக கிழக்குத் தொடர்ச்சிமலை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொழில்நுட்ப அறிவுடன் திட்டம் தீட்டி வளர்க்க வேண்டும். இதனால் மலைகளின் நலம் பெருகும்; பல லட்சக்கணக்கான இளம் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மழைநீரை உறிஞ்சி வைத்து, சுனை நீராக மாற்றிடும் மலைகளின் மறைந்து போன மாபெரும் திறன் மீண்டும் மீண்டு வரும். இதனால் சமவெளிகளில் நீர்வள ஆதாரம் பெருகும். எனவே நீர் உயரும்.

மேலும், இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியானது இளம் தாவரங்களின் இலைப்பசுமை, காற்றிலுள்ள கரியமிலவாயுவை, தற்போதைவிட இருமடங்கு அதிக அளவில் கிரகித்து, தன்னகப்படுத்தும், அதிக அளவு பிராணவாயுவை வெளிவிட்டு, உலகம் வெப்பமாவதைக் குறைத்திடும்.

அன்றாடம் அதிகரித்து வரும் பொருளாதார, கலாசார, தொழில் வளர்ச்சியால் இணைந்து வளர்ந்து, விசுவரூபம் எடுத்துவரும் இயற்கைப் பாதிப்பின், தெளிவான வெளிப்பாடு தான் உலகம் வெப்பமயமாதல் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுதோறும் உலகின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வடதுருவம், தென் துருவப் பனிப்பாறைகளும், இமயமலை போன்ற நெடிதுயர்ந்த மலைப்பகுதியில் அடர்ந்து, படர்ந்து படிந்துள்ள பனிக்கட்டிகளும், மிக வேகமாக உருகிக் கரைந்து குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடல்மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகளில் பெருமளவு கடல்கொள்ளும் என உலக அறிவியல் வல்லுநர்கள் அனுதினமும் எச்சரித்துக் கொண்டே உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரைப்பகுதியில் உள்ள நகரங்கள், கிராமங்கள், விளைநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் மிக அதிகம். தமிழகத்தில் உள்ள சுமார் 6.2 கோடி மக்கள்தொகையில் 2.9 கோடி மக்கள் 13 மாவட்டங்களின் கடற்கரைப் பகுதியில் வாழ்கிறார்கள்.

இந்தக் கடற்கரைப் பகுதிகளில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 810 பேர் வாழ்கிறார்கள். இது தமிழகத்தின் சராசரி மக்கள்தொகையான 512ஐ காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும். நாகை, கடலூர் மாவட்டங்கள் மிக அதிக சேதத்துக்கு உள்ளாகலாம்.

நாகை மாவட்டத்தில் சுமார் 56 சதவீதம் பரப்பு கடல்மட்டத்துக்குத் தாழ்வான உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுதவிர, தமிழகத்தில் மாறிவரும் பருவமழை, குறைந்த மழைநாள்களில் நிறைந்த மழை பொழிந்திடும் பாதகத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வறட்சி அதிகரித்து, விளைநிலங்கள் பாலைநிலங்களாக வருங்காலங்களில் மாறிவிடும் அபாயமும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர்களின் மகசூல் குறைவதுடன் நோய் பரப்பும் பூச்சிகளின் எண்ணிக்கையும், அவைகளால் சேதாரமும் அதிகரிக்கும்.

இக்குறைகள் அனைத்தையும் மிக விரைவில் கட்டுப்படுத்த, காற்றில் உள்ள கரியமிலவாயுவின் அடர்த்தியை இனியேனும் அதிகரிக்கவிடாமல் கட்டுப்படுத்தவல்ல ஆக்கபூர்வமான திட்டங்கள் செயலாக்கப்பட வேண்டும்.

வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் ஒரு சராசரி மனிதன்  14 டன்  கரியமிலவாயுவை வான்வெளியில் பரப்பும் அளவுக்கு தனது நாகரிக, பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறான். இந்தியாவில் சராசரி  இரண்டு டன்  கரியமிலவாயு மட்டுமே ஒரு சராசரி மனிதன் பயன்பாட்டினால் வெளிப்படுகிறது.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகரிக்க தேவைப்படும்  எரிசக்தி, மின்சக்திக்காக  நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவைகள் தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தப்படும் கட்டாயத்தால், அதிக அளவு கரியமிலவாயு வெளிப்படுத்தலை குறைக்க இயலாது.

ஆனால், இயற்கை வளங்களான தாவரங்களைக் கொண்டு தமிழகத்தில் அந்தச் சாதனையை நிகழ்த்த அதிக அளவு வாய்ப்புள்ளது. பொய்த்து வரும், மாறி வரும் பருவமழையையும், தொடர்ந்து வரும் வறட்சி, வளமிழக்கும் மண் போன்ற சோதனைகளைத் தாங்கி, சாதனை புரிய வல்ல தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளவை மரவகைகளே.

வறட்சியைத் தாங்கி, மிகவேகமாக வளர்ந்து அதிக அளவு மகசூல் வழங்கி, தொழிற்சாலைகளுக்கு ஏற்ற மூலப் பொருளாகவும் உள்ளவை அவையே, மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் சாதனமாகவும், விவசாயிகளுக்கு அதிக லாபம் தர சாதகமான பல இன, இந்நாட்டு, வெளிநாட்டு மரங்கள் தமிழகத்தின் வனத்துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
இவைகளைப் பெருமளவில் வளர்த்தால், ஒவ்வொரு சொட்டு நீரையும் ஒவ்வொரு துளி மண்ணையும் ஒவ்வொரு சூரியக் கதிரையும் ஒன்றிணைத்து மாபெரும் சத்தியாக மாற்றலாம்.

அதைத் தமிழக மக்களின் வளமான, நலமான வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடிப்படையாகவும் அமைத்திடலாம்.

இத்திட்டங்கள் பொருளாதார ரீதியில் வளமானதாகவும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பதாகவும், மாசு கட்டுப்பாட்டுக்கான  மந்திரமாகவும் தமிழகத்தில் பரிமளிக்க வல்லவை.

தமிழக மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வின் தரத்தையும், வளத்தையும் உயர்த்த வல்ல வரம் தரும் மரம் நடும் திட்டத்துடன், நலம் காத்திடும் நல்ல திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இப்பூவுலகம் நமது மூதாதையரிடமிருந்து பெற்ற சொத்து என்று கருதாமல், நமது பிள்ளைகளிடமிருந்து பெற்ற கடன் என்று கருதி, பொறுப்புடன், முதலுடன் வட்டியையும் சேர்த்து, வளமிக்கதாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இயற்கையே நமது எதிர்காலம் என்ற மாபெரும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

நமது வருங்காலச் சந்ததிகள் மற்றும் அனைத்து உயிர்வகைகளின் வளமான, வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குதற்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

கட்டுரையாளர்:- கு. குமாரவேலு 

முன்னாள் வனத்துறைத் தலைவர்

Kannan Natarajan

unread,
Jun 17, 2010, 7:57:55 PM6/17/10
to Min Thamizh
காடு வளர்ப்போம்!

தவறான வேளாண் சாகுபடி நுட்பங்கள், இரசாயன இடுபொருள்கள் தவிர பயிர் சாகுபடித் திட்டம் எனப் பல்வேறு அதிரடித் திட்டங்கள் மூலம் 1950களில் விவசாயத்தில் வெற்றி காணச் செய்த முயற்சியின் விளைவு, சுற்றுச்சூழல் பாழ்பட்டுப்போய் விளையும் மண்ணே நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது. 

இந்த நிலையிலாவது நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், இன்னும் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பயிரினங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காது, உணவுப் பொருள் உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் குறைந்து போவதோடு, நச்சுத்தன்மை மிகுந்ததாகவும் இருக்கும். 

தட்பவெட்ப நிலை மாறுபாடு ஏற்பட்டு பூமியில் பிரளயம் நிகழும்.

நாம் எதிர்கொள்ளவிருக்கும் இந்தச் சீர்கேடுகளையும், பேரழிவினையும் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பதுதான்.

அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல; வனம் வனமாய், தோப்புத் தோப்பாய் காணும் இடமெல்லாம் பச்சைப் போர்வை படரச் செய்ய வேண்டும். 

மொத்தமுள்ள நிலப்பரப்பில் 3ல் ஒரு பங்கு மரங்களும், செடி கொடிகளும் சூழ்ந்த தாவரப் போர்வையாக இருக்க வேண்டும்.

நம் (இந்திய) நாட்டில் இப்போது 5ல் ஒரு பங்குகூட தாவரப் போர்வை இல்லை. பசுமை இல்லை. வனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டதன் விளைவுதான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வெப்பக்கொடுமை.

முடிவு - வறட்சி, பசி, பட்டினி, அழிவு.

மனித சமூகத்துக்கு இயற்கை கொடையாக வழங்கிய தாவரப் போர்வை அவரவரின் சுயநலப் போக்குக்காக அழிக்கப்பட்டது. அதன்மூலம் பொருளாதார ரீதியாக நொறுங்கிவிட்ட வேளாண்மையின் செயல்பாடுகள் குழம்பிப் போய்விட்டன.   தாவரப் போர்வை நிலத்தில் இருந்தால், தாவரப் பொருள்களுடன் அங்குள்ள உயிரினக் கழிவுகளும் ஒன்று சேர்ந்து மண்ணை வளமாக்குவதுடன், மண் புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்களின் இயக்கத்தால் மண் இறுக்கம் தளர்ந்து இளக்கமாகிறது. அதன்மூலம் மழைநீர் நிலத்தினுள் முழுமையாக ஊடுருவ முடிகிறது. இந்த இயற்கை நிகழ்வுகளை நாம் அழித்துவிட்டதால் பெய்யும் மழைநீர் வளமான மண்ணையும் அரித்துக் கொண்டு விரைந்தோடி கடலில் கலந்து விடுகிறது. அதனால், மண் வளத்தை இழப்பதோடு, நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே போகிறது.   

கூட்டம் கூட்டமாய் மரம் வளர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு.

வறண்ட இடத்தில்கூட வளம் சேர்க்க மரங்களால் மட்டுமே முடியும்.

சில இன மரங்கள் மண் ஈரத்தையும், மழை நீரையும் விரும்புவதில்லை. ஏனெனில், அந்த மரங்கள் நிலத்தடி நீரை மட்டுமே விரும்பும். அதனால், நிலத்தடி நீரைத் தேடி கடினமான பூமியாயிருப்பினும் அந்த மரங்களின் பலம் மிகுந்த வேர்கள் பூமிக்கடியில் போய் நிலத்தடி நீரை மேலே கொண்டு வந்து விடும்.  இன்னும் சில மரங்கள் பூமிக்குள் ஆழமாக வேரோடு உள்ளே புகுந்துபோய், நிலத்தடி நீரையே தொட்டு விடும். இதன்மூலம், பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நீரைக்கூட தனது ஈர்ப்பு விசை மூலம் இழுத்து அந்த இடத்தில் மேலும் மரங்கள் வளர்வதற்கு உதவும். 

இப்படித்தான் தாவரங்கள் பெருகி பல்லுயிர் பெருக்கம் ஏற்பட்டு, மாசற்ற சுற்றுப்புற மண்டலம் உருவாகிறது. இந்தச் சுற்றுப்புற மண்டலத்தை மையமாகக் கொண்டுதான் உயிர் மண்டலம் உருவாகிறது. இப்படி இயற்கையிலேயே உள்ள உயிரினத்தை வாழவைக்கும் மரங்களை இனியாவது வளர்க்க வேண்டும். 

அழிப்பதை நிறுத்திவிட்டு, மரங்களை வளர்க்க வேண்டும்.

ஏனெனில், இயற்கை தேர்வின் மூலம் இயற்கையாக விதைகள் தானாக விழுந்து முளைத்து, இலையாகி, செடியாகி, மரமாகி வளர்ந்து பயன்தர பல ஆண்டுகள் ஆகும். அதுவரை காத்திருக்காமல் உடனே தாமே முனைந்து திட்டமிட்டு காடுகள் வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.  

அப்படித் திட்டமிட்ட இயற்கை வன வளத்தை தாவரப் போர்வையாக உருவாக்க முனையும்போது, ஒளி ஈர்க்கும் தாவரங்கள், மித ஒளி ஈர்க்கும் தாவரங்கள், வெயிலைச் சமாளிக்கும் தாவரங்கள், நிழலை விரும்பும் தாவரங்கள் மற்றும் குத்துச்செடிகள், கொடிகள் எனத் தேர்வு செய்ய வேண்டும். 

இந்தத் தாவரங்களை,
  1. முதன்மைத் தாவரங்கள்
  2. ஆதாரத் தாவரங்கள்
  3. 2ஆம் நிலைத் தாவரங்கள்
  4. சிறந்த தாவரங்கள்
என 4 வகைகளாகப் பிரிக்கலாம்.

இந்தத் தாவர வகைகள் மண் தன்மை, மண் வளம், தட்ப வெட்பநிலை, கடல் மட்டம், சுற்றுப்புற உயிரின மற்றும் மனித இயக்கம் உயிரின பன்முகத்துக்கான தொடர் நிலைகள் ஆகிய காரண காரியங்களின் அடிப்படையில், தாவரப் போர்வையின் உயரம், வளர்ச்சிப் பெருக்கம் மற்றும் குற்று இனங்களைக் கண்டறிந்து, திட்டமிட்டு அவற்றின் சார்பு மற்றும் தோழமைத் தாவரங்களை உருவாக்கினால் 10 ஆண்டுகளில் 10 ஏக்கரில் விளைந்து கிடைக்கும் பயன்களை 4 ஏக்கரில் பெற முடியும்.

அண்மை ஆண்டுகளில் வனங்கள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், சாலை மேம்பாட்டுக்காகக் கணக்கில் அடங்காத மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.  அழிக்கப்படும் மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நடப்படுவதில்லை. உச்ச நீதிமன்றம் சாலை மேம்பாட்டுக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்குப் பதிலாக 10 மரக் கன்றுகளை நடவேண்டுமென்று உத்தரவிட்டது.    

இந்த உத்தரவு எத்தனை இடங்களில் பின்பற்றப்படுகிறது என்பது சந்தேகமே. எனவே, வன மரங்களை அழிப்பதைத் தவிர்த்து, மரம் வளர்ப்பில் ஈடுபட்டு, நாட்டுக்குப் பசுமை சேர்த்து, வீட்டுக்கு வளத்தைச் சேர்க்கலாம்.

ஆர். தங்கராஜு

Kannan Natarajan

unread,
Jul 30, 2010, 9:37:01 PM7/30/10
to Min Thamizh
பயமல்ல... நிஜம்!

பசுமை இல்ல வாயு பற்றியும், புவி வெப்பமடைதல் பற்றியும் யாராவது எழுதினாலோ, பேசினாலோ அவர்கள் தேவையில்லாமல் மக்களைப் பயமுறுத்தும் எதிர்மறைச் சிந்தனையாளர்கள் என்பதுபோல மிகவும் சாதுர்யமாகத் தங்களது விளம்பர யுக்திகளின் மூலம் வர்ணிக்க முற்படுகின்றன, பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமீட்டும் எண்ணெய் நிறுவனங்கள்.

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று எச்சரித்தால், மனித இனம் வசதியாக வாழ்வதைப் பார்க்கப் பிடிக்காத வயிற்றெரிச்சல் வாதிகள் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

இயற்கையுடன் விளையாடத் தொடங்கி இருக்கிறோம்.

ஒரு சில தலைமுறைகள் மனித இனம், அதிலும் ஒரு சிறிய விழுக்காடு மட்டும், வசதியாக வாழ்வதற்காக வருங்கால உலகத்தையே பாலைவனமாக்கும் முயற்சி அரங்கேறி வருகிறது.

இதன் விளைவுகள் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கிய பின்னும்கூட மனிதன் சுதாரித்துக் கொண்டு, வசதிகளைச் சுருக்கிக் கொண்டு வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முன்வராமல் போனால் அதை என்னென்று கூறுவது?

இந்த ஆண்டு ரஷியா இதுவரை காணாத வெப்பத்தால் பாதிக்கப்பட்டது.

கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட ரஷிய நாட்டு மக்கள், ஏரிகள், நதிகள் என்று பெரும் திரளாகப் படையெடுத்துக் கோடை வெயிலின் வெப்பத்தை எதிர்கொள்ள முற்பட்டனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 233 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள்.

பூமி வெப்பமடைதல் பொய்யென்றால், ரஷியாவில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்குவானேன்?

இந்தியாவுக்கு வருவோம்.

இமயமலையில் பனிப்பாறைகள் உருகி, பனிச் சிகரத்தின் உயரம் கணிசமாகக் குறைந்து வருகிறதே, அது ஏன்?

டேவிட் ப்ரிஷியர்ஸ் என்கிற அமெரிக்கர் 1983லிருந்து ஐந்து தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோதெல்லாம் இமயமலையையும், அதன் பனிப்பாறைகளையும், சிகரங்களையும் தனது கேமராவில் பதிவு செய்து வைத்திருப்பவர்.

பனிச்சிகரங்களின் உயரம் குறைந்து வருவது அவருக்கு அதிர்ச்சி அளித்ததால், முன்பு எந்த இடத்திலிருந்து ஒரு சிகரத்தைப் படம் பிடித்தாரோ அதே இடத்திலிருந்து மீண்டும் படமெடுத்துப் பதிவு செய்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி.

சுமார் நாற்பது மாடிக் கட்டடம் நான்கு மாடிக் கட்டடமாகச் சுருங்கினால் எப்படி இருக்கும், அதுபோல பல பனிச் சிகரங்கள் சுருங்கி இருப்பதை டேவிட் ப்ரிஷியர்ஸ் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.

ருங்பெக் பனிச் சிகரம் செங்குத்தாக சுமார் 330 அடி உயரம் குறைந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.

இமயமலையிலுள்ள பல பனிச் சிகரங்கள் அசுர வேகத்தில் சுருங்கத் தொடங்கி இருப்பதை சீன ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

இப்படியே போனால், கைலாயம்கூடக் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா போன்ற பனிச் சிகரங்கள் ஆண்டுக்கு 26 அடி உயரம் குறைந்து வருவதாகத் தெரிகிறது.

இதற்கு மூல காரணம் அளவுக்கு அதிகமாகக் கட்டுப்பாடற்ற முறையில் வெளியேற்றப்படும் கரியமில வாயு.

வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், வெளியேற்றப்படும் கரியமில வாயுவை உள்வாங்க இயற்கையால் முடியாமல் போகிறது.

காற்று மண்டலத்தில் வியாபித்துவிட்டிருக்கும் கரியமில வாயுவால் வானமண்டலமே வெப்பமடைந்திருக்கிறது.

மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் மழையின் அளவு குறைந்து விட்டிருக்கிறது.

பருவநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இதன் விளைவாக, உருகும் பனியை ஈடுகட்டும் அளவுக்கு குளிர்காலத்தில் பனி உறைவது இல்லை.

மேலும், பெட்ரோல், டீசல் புகையிலிருந்து வெளியேறும் கரியமில வாயு பனிச் சிகரங்களில் படர்வதால் வழக்கத்தைவிட அதிகமாக பனிச்சிகரம் உருகிவிடுகிறது; பனி உறைவதும் இல்லை.

புவி வெப்பமடைதல், பனிச் சிகரங்கள் உறைதல் போன்றவைகளின் தொடர்ச்சியாக  நாம் சந்திக்கப் போகும் சவால் இன்னொன்றும் இருக்கிறது.

விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

கடந்த மாதம் வெளியாகி இருக்கும் "சயன்ஸ்" இதழ், இதன் தொடர்விளைவுகள் சிந்து மற்றும் பிரம்மபுத்ரா நதிகளைப் பெரிய அளவிலும், கங்கை, சீனாவில் பாயும் மஞ்சள் நதி மற்றும் யாங்க்ட்ஸ் நதிகளை சிறிய அளவிலும் பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறது.

சிந்து மற்றும் பிரம்மபுத்ரா சமவெளிப் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 60 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் தன்மையது இந்த பனிச் சிகரங்கள் உருகும் போக்கு என்பதை நாம் உணர்வதாகவே தெரியவில்லை.

எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், குறிக்கோளையும் நிர்ணயிப்பது பல பில்லியன் டாலர்
லாபம் மட்டுமே.

பெருவாரியான மத்தியதர, மேல் மத்தியதர, பணக்கார மக்களின் எண்ணப்போக்கை நிர்ணயிப்பது இன்று அனுபவிக்கும் கார், ஏ.சி., குளிர்பதனப் பெட்டி, விமானம் போன்ற வாழ்க்கை வசதிகள் மட்டுமே.

எப்போதோ வரப்போகும் ஆபத்தைப் பற்றி இப்போதே சிந்தித்துக் கவலைப்படுவது போன்ற முட்டாள்தனம் இருக்க முடியுமா?

புவி வெப்பமடைதல், கரியமில வாயு, பனிச் சிகரங்கள் உருகுதல் என்றெல்லாம் இந்த எதிர்மறைச் சிந்தனையாளர்கள் ஏன் பயமுறுத்த வேண்டும்?

நாம் அப்போது உயிரோடு இருக்கப் போகிறோமா?

இருப்பதுவரை சுகமாக வாழ்வதை அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏன் நாளையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி -உங்களுக்கெல்லாம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் கிடையாதா?

வருங்காலச் சந்ததியினரைப் பற்றிய கவலையே உங்களுக்கு இல்லையா?

செல்வன்

unread,
Jul 30, 2010, 9:52:07 PM7/30/10
to mint...@googlegroups.com
சிறப்பான கட்டுரை.ஆனால் இதை தினமணியில் அச்சடிக்காமல் விட்டிருந்தால் பல லட்சம் தாள்கள் மிச்சமாகி, பல மரங்கள் வெட்டுபடாமல் தவிர்க்கபட்டு, பூமியின் சூடேற்றம் குறைந்திருக்கும்.

இப்படி "மரங்களை வெட்டாதீர்கள்" என்பதை சொல்ல மரங்களை வெட்டி பேப்பர் தயாரித்து பிரச்சாரம் செய்பவர்களின் நகைச்சுவை உணர்வை நான் மிகவும் பாராட்ட கடமைபட்டுள்ளேன்


--
செல்வன்

www.holyox.blogspot.com

I love my freedom.  I love my America.  ~Jessi Lane Adams

N. Kannan

unread,
Jul 30, 2010, 10:08:16 PM7/30/10
to mint...@googlegroups.com
மிகத் தேவையான, நல்ல கட்டுரை.
மிக்க நன்றி கண்ணன்.

க.>

2010/7/31 Kannan Natarajan <thar...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Jul 31, 2010, 8:40:13 PM7/31/10
to Min Thamizh

உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் மாதம் இரவு 10 மணிக்கு 10 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து வைக்குமாறு தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை - எவர்வின் பள்ளியில் புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

உலக வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடைபெறும் நிகழ்ச்சி. இங்கு ஆயிரம் மாணவர்களுக்கு மேல் கலந்துக் கொண்டாலும் கண்ணியத்தோடு, கட்டுப்பாட்டோடு இருக்கின்றீர்கள். உங்களிடம் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நீங்கள் சமுதாயத்திற்கும் உங்களுடைய பெற்றோர்களுக்கும் அதனை வலியுறுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நாம் வாழ்கின்ற உலகம் சிறிது சிறிதாக வெப்பம் அடைந்து வருகிறது. நாம் பயன்படுத்துகிற வீட்டு மின் விளக்குகள், அதாவது, குண்டு பல்புகள் என்று சொல்லப்படுகிற டங்ஸ்டன் பயன்பாடும், இந்த வெப்பத்தை அதிகரிக்கிறது என்று தெரியவருகிறது. அதற்காகத்தான் எக்ஸ்னோரா போன்ற அமைப்புகள் இதுபோன்ற விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகின்றன.

மாநில அரசும், மத்திய அரசும் மக்களுக்கு தேவையான பலத் திட்டங்களை செயல்படுத்த கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கினாலும், மக்களின் ஈடுபாடு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றியடையாது. உலக வெப்பமயமாதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரவு 10 மணிக்கு 10 நிமிடங்கள் மின்விளக்கு உட்பட அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். 

உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி பாராட்டக் கூடியது. இந்த முயற்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

செல்வன்

unread,
Aug 1, 2010, 2:43:18 AM8/1/10
to mint...@googlegroups.com


2010/8/1 வினோத்-VINOTH <vino...@gmail.com>
பேசும் போதே இதையெல்லாம் கேட்க யாருக்கும் துணிச்சல் வரலியே... :(


Autorickshaw1.jpg

வினோத்-VINOTH

unread,
Aug 1, 2010, 2:45:51 AM8/1/10
to mint...@googlegroups.com


2010/8/1 செல்வன் <hol...@gmail.com>



2010/8/1 வினோத்-VINOTH <vino...@gmail.com>
பேசும் போதே இதையெல்லாம் கேட்க யாருக்கும் துணிச்சல் வரலியே... :(


Autorickshaw1.jpg

நான் எதுவும் பேசலை. பேசலை.. :)))

--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


வினோத்-VINOTH

unread,
Aug 1, 2010, 2:40:30 AM8/1/10
to mint...@googlegroups.com
2010/8/1 செல்வன் <hol...@gmail.com>

நாம தான் ஆற்காட்டார் புண்ணியத்தில் தினமும் ஆறுமணிநேரம் பூமிதினம் கொண்டாடிகிட்டு இருக்கோமே?இந்த பத்து நிமிசம் எந்த மூலைக்கு...அடிச்சு ஆடுங்க ஆற்காட்டார் ஐயா..:-)

நான் சொல்லவந்தேன், நீங்க சொல்லிட்டீங்க.

பேசும் போதே இதையெல்லாம் கேட்க யாருக்கும் துணிச்சல் வரலியே... :(


 
--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


செல்வன்

unread,
Aug 1, 2010, 2:20:14 AM8/1/10
to mint...@googlegroups.com


2010/7/31 Kannan Natarajan <thar...@gmail.com>

உலக வெப்பமயமாதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரவு 10 மணிக்கு 10 நிமிடங்கள் மின்விளக்கு உட்பட அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். 

உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி பாராட்டக் கூடியது. இந்த முயற்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


நாம தான் ஆற்காட்டார் புண்ணியத்தில் தினமும் ஆறுமணிநேரம் பூமிதினம் கொண்டாடிகிட்டு இருக்கோமே?இந்த பத்து நிமிசம் எந்த மூலைக்கு...அடிச்சு ஆடுங்க ஆற்காட்டார் ஐயா..:-)

Geetha Sambasivam

unread,
Aug 2, 2010, 11:14:06 AM8/2/10
to mint...@googlegroups.com
ம்ம்ம்ம் இங்கே எப்போன்னு சொல்ல முடியாம மின்சார விநியோகம் தடைப் படுகிறது. சில சமயம் அரை மணி நேரத்தில் வந்துடும். மின் கட்டண உயர்வை சமன் செய்ய இப்படி ஒரு ஏற்பாடோ?? இப்படியானும் மக்களுக்கு உதவலாமேனு நினைச்சிருப்பாங்க.

2010/8/1 வினோத்-VINOTH <vino...@gmail.com>


2010/8/1 செல்வன் <hol...@gmail.com>


2010/8/1 வினோத்-VINOTH <vino...@gmail.com>
பேசும் போதே இதையெல்லாம் கேட்க யாருக்கும் துணிச்சல் வரலியே... :(


Autorickshaw1.jpg

நான் எதுவும் பேசலை. பேசலை.. :)))

--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


--
329.gif

Innamburan Innamburan

unread,
Aug 2, 2010, 11:37:56 AM8/2/10
to mint...@googlegroups.com
அது மட்டுமல்ல. கூகிள் ஜீ.பி.எஸ். மூலமாக, குளிக்கும்போது, சோறு, கொட்டிக்கும்போது, காஃபி ஜலம் பொங்கும் போது, நம் இயலாமையை அறிந்து மின் வெட்டுவார்கள். தட்டுதடுமாறி எல்லாம் முடித்த பிரகு வெளிச்சம் போடுவார்கள்.
இன்னம்பூரான்

2010/8/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>
329.gif

N. Kannan

unread,
Aug 3, 2010, 3:25:57 AM8/3/10
to mint...@googlegroups.com
2010/8/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>
> ம்ம்ம்ம் இங்கே எப்போன்னு சொல்ல முடியாம மின்சார விநியோகம் தடைப் படுகிறது. சில சமயம் அரை மணி நேரத்தில் வந்துடும். மின் கட்டண உயர்வை சமன் செய்ய இப்படி ஒரு ஏற்பாடோ?? இப்படியானும் மக்களுக்கு உதவலாமேனு நினைச்சிருப்பாங்க.


இந்தியா போன்று கனிம, பிற இயற்கை வளங்களற்ற கொரியா இன்று பசுமை சக்தி
துறையில் முன்னோடியாக உள்ளது. அணுசக்தி அமைப்பை மத்திய கிழக்கில்
நிருவுவதில் முன்னோடியாக உள்ளது. தமிழகம் தடபுட வென்று அடிப்படை வசதிகள்
இல்லாமல் வளர்ந்துவிட்டது. சென்னையில் மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யு ஓடி
என்ன பயன்? ரோடு சரியில்லை, சாலை விதிகள் பராமரிக்கப்படுவதில்லை,
நடமாடும் மக்களுக்கு சரியான நடைபாதை வசதி இல்லை. பணம் எக்கச்சக்கமாகப்
புழங்குகிறது. எல்லோரும் கோடியில் பேசுகின்றனர்!! ஆனால் மின்சாரம்
முறையாய் வருவதில்லை.

உடனே சீர் செய்ய வேண்டியவை என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கு!

க.>

Innamburan Innamburan

unread,
Aug 3, 2010, 3:46:03 AM8/3/10
to mint...@googlegroups.com
உண்மை. முதல்வர் புதிய சட்டசபையை பசுமை அமைப்பாக செய்தார் என்கிறார்கள்.
ஒரு நினைவு. 1999. இலஹாபாத்தில் எங்கள் அலுவலகம் புண்ய பூமி. 1857
யுத்தகளம். அதை ஹெரிடேஜ் பாதுகாப்பு செய்ய எண்ணி, அங்கு நூல் நிலையமும்,
பயிற்சிப்பள்ளி மட்டும் வைத்து, மற்றதற்கு
புதிய அலுவலகம் கட்டினோம். அதை பசுமை அமைப்பாக செய்ய விழைந்தேன். என்ன
தான் அதிகாரம் இருந்தாலும், மற்ற துறைகளை வழிக்குக் கொண்டு வருவது,
குதிரைக்கொம்பாக இருந்தது. இருந்தும், சாம, தான, பேத, தண்டங்களை,
பயன்படுத்தி காரியத்தை சாதித்துக்கொண்டதில், ஒரு ஆத்ம திருப்தி.
2010/8/3 N. Kannan <navan...@gmail.com>:

D Bala sundaram

unread,
Aug 3, 2010, 3:47:32 AM8/3/10
to mint...@googlegroups.com
தமிழ் நாட்டில் மின்சார உற்பத்தியில் கவனம் 10௦ ஆண்டுகளாக
கவனம் செலுத்தப்படவில்லை என்று மின்சார ஒழுங்குமுறை வாரியம் கூறியுள்ளது
2010/8/3 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
D Balasundaram
Coimbatore

Innamburan Innamburan

unread,
Aug 3, 2010, 3:56:03 AM8/3/10
to mint...@googlegroups.com
40 வருடங்களாக, என்று தணிக்கைத்துறை கூறுகிறது. எல்லா சாதங்களும் தரம்
குறைந்தவை என்று பல முறை உரைத்தாயிற்ரு.

2010/8/3 D Bala sundaram <balasun...@gmail.com>:

செல்வன்

unread,
Aug 3, 2010, 4:00:56 AM8/3/10
to mint...@googlegroups.com
நாற்பது வருடங்களாக மின் தட்டுபாடு, சாதனங்கள் சரியில்லை,.......

மின் துறை அரசு கட்டுபாட்டில் இருப்பது காரணமாக இருக்குமோ?தனியார் மயம் ஆனால் ஒருவேளை விடிவு வருமோ?:-)



2010/8/3 Innamburan Innamburan <innam...@googlemail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Tthamizth Tthenee

unread,
Aug 3, 2010, 5:27:18 AM8/3/10
to mint...@googlegroups.com
அரபு நாடுகளில்  தண்ணீர் கிடையாது
ஆனால் அவர்கள் மறு சுழற்சி முறையிலே  தடைப்படாமல் தண்ணீர் வழங்குகிறார்கள்
 தடைப்படாமல்  மின்சாரம் வழங்குகிறார்கள்
 
ஆனால் நாம்  அண்டை மாநிலங்களில் கையேந்தி நிற்கிறோம்
 
என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்
ஏன் கையை  ஏந்த வேண்டும்  வெளிநாட்டில்
 
என்று பாடினார்   கண்ணதாசன்
 
ஆனால் ஏன் கையை ஏந்த வேண்டும்  அண்டை மாநிலத்தில்
 
முறையான  திட்டமிடுதல் கடந்த 60 வருடங்களாக  நம் நாட்டில் நடைபெறவில்லை
 
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை 
எரிமுன்னர் வைத்தூறு போல் கெடும்
 
மறந்துவிட்டோம் 
 
இப்போதாவது விழித்துக்கொண்டு  ஆவன செய்யாமல்
 
இருப்பது  இன்னும் அதிக கேட்டைத் தரும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
3-8-10 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Selva Murali

unread,
Aug 3, 2010, 5:33:43 AM8/3/10
to mint...@googlegroups.com
தனிமயம் எல்லாம் ஆகவேண்டாம்.
தட்டிக்கேட்கணும். இல்லாட்டி அதட்டியாவது கேட்கணும்.
நாமத்தான் எதயும் கேட்கமாட்டேன்கிறோமே :)

அப்பாவி அம்பி :)

2010/8/3 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com

Innamburan Innamburan

unread,
Aug 3, 2010, 6:48:47 AM8/3/10
to mint...@googlegroups.com
அதற்கு முன்னால் தனியார் கையில் இருந்த சின்ன சின்ன அமைப்புகள் செய்த
கொள்ளைகளின் வரலாறு கேட்டால் அசந்து விடுவீர்கள். மாம்பேயில் டாடா
நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் செம்மையாக இயங்கியதும் உண்மை. மற்ற பெரிய
தனியார் நிறுவனங்கள் தவறு பல இழைத்தன. தனியார் மயம் ஆனால், விடிவு வரலாம்
அல்லது வெடிப்பு வரலாம்.
இன்னம்பூரான்.

2010/8/3 செல்வன் <hol...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Aug 8, 2010, 11:55:16 AM8/8/10
to mint...@googlegroups.com
காப்புரிமை & நன்றி

The Huffington Post
AUGUST 8, 2010


This is the print preview: Back to normal view »
Greenland Iceberg Four Times Bigger Than Manhattan Breaks Off Glacier
| 08/ 6/10 04:33 PM |
WASHINGTON — A giant ice island has broken off the Petermann Glacier
in northern Greenland.

A University of Delaware researcher says the floating ice sheet covers
100 square miles – more than four times the size of New York's
Manhattan Island.

Andreas Muenchow, who is studying the Nares Strait between Greenland
and Canada, said the ice sheet broke off early Thursday. He says the
new ice island was discovered by Trudy Wohlleben of the Canadian Ice
Service.

Not since 1962 has such a large chunk of ice calved in the Arctic, but
researchers have noticed cracks in recent months in the floating
tongue of the glacier.


2010/8/3 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Kannan Natarajan

unread,
Oct 16, 2010, 3:10:41 AM10/16/10
to Min Thamizh
அடியாத்தி.. இது அலையாத்தி!

டிசம்பர் 26 - 2004.

இந்த நாளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

உலகையே குலுக்கிய நாள் அது.

ஆம், சுனாமி என்னும் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தை இந்த உலகம் உணர்ந்த நாள்.

அன்றைய தினம் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், கன்னியாகுமரி என தமிழகக் கடலோரப் பகுதிகள் முழுவதும் கடும் அழிவைச் சந்தித்தன.

பல ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள். 

ஆனால், கடலோரத்தில் இருந்தும்கூட, சுனாமியின் சுவடுகளைக் கூட காணாத ஊர் முத்துப்பேட்டை.

அடுத்து 2008 நவம்பர் இறுதியில் வீசிய நிஷா புயலில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டன.

அப்போதும் மழையின் பாதிப்பை மட்டுமே உணர்ந்த முத்துப்பேட்டையில்,  சூறாவளிக் காற்றின் பாதிப்பு பெரிதாக இல்லை. 

இப்போது மட்டுமல்ல.

இதற்கு முன்பு வீசிய கடும் புயல்களில்கூட முத்துப்பேட்டை பகுதி பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டது.

காரணம், அலையாத்திக் காடுகள். 

முத்துப்பேட்டையிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம் வரை சுமார் 15 கி.மீ. கடலோரத் தொலைவுக்கு, 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் இந்தக் காடுகள் பரவியுள்ளன.

"கடலிலிருந்து கடும் வேகத்துடன் வீசும் அலையின் வேகத்தை, காற்றின் வேகத்தைக் குறைத்து, கட்டுப்படுத்துவதால்தான் இந்தக் காடுகளை அலையாத்திக் காடுகள் என்று மக்கள் அழைக்கிறார்கள்'' என்கிறார் இயற்கை ஆர்வலரான மன்னார்குடி எம். செல்வநாதன்.

மேலும் தொடர்ந்தார்:- 

"ஆற்று நீரும், கடல் நீரும் கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் உப்புத் தன்மை குறைவாக உள்ள நீரீல் வளரும் காடுகளை சதுப்பு நிலக் காடுகள் என்கிறோம். இந்த அலையாத்திக் காடுகளும் அந்த வகையைச் சேர்ந்தவைதான். காவிரியின் பல கிளை ஆறுகள் இங்கு கடலில் கலக்கின்றன.

இதேபோல் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் காடுகள், மேற்குவங்கம், ஒரிசா மாநிலங்களில் உள்ள சுந்தரவனக் காடுகள் ஆகியவையும் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.

முத்துப்பேட்டை அலையாத்திக் காட்டில், அவீசினியா என்னும் இனத்தைச் சேர்ந்த குறுமரங்களே அதிகம் உள்ளன.

அதில் இரண்டு வகை மரங்கள் உள்ளன.

அவற்றை உள்ளூர் மக்கள் வெண்சுண்டல், கருஞ்சுண்டல் என அழைக்கின்றனர்.

மேலும் ஒரிசா மற்றும் பிச்சாவரம் காடுகளிலிருந்து எடுத்துவரப்பட்ட சுரபுன்னை என்னும் தாவரமும் இப்போது வனத் துறையினரால் இந்தக் காட்டுப் பகுதியில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது.

இந்தக் காடுகளில் வளரும் தாவரங்கள் வேர்களால் சுவாசிப்பவை. எனவே,  ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் தண்ணீருக்குள் இருந்து மேல்நோக்கி வளர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான வேர்களைக் காண முடியும்.  

இந்த வேர்களுக்கு இடையே தங்கி இனப்பெருக்கம் செய்வதற்காக ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் அலையாத்திக் காடுகளைத் தேடி வருகின்றன.

குறிப்பாக, இந்தப் பகுதியில் பல வகையான நண்டுகள், இறால்கள் அதிகம் கிடைக்க இதுவே காரணம். 

இங்குதான் கொடுவா மீன் அதிக அளவில் கிடைக்கிறது.

மேலும், வடகிழக்குப் பருவ மழை காலத்தில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கு வருகின்றன'' என்கிறார் செல்வநாதன்.

உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் இப்போது ஏராளமானோர் அலையாத்திக் காடுகளைக் கண்டு இரசிப்பதற்காக வருகின்றனர்.

எனினும், இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், மீனவர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.

அலையாத்திக் காடுகளை மேம்படுத்துவது குறித்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் எம். குருசாமி, முத்துப்பேட்டை வனச் சரகர் எஸ். மாணிக்கம் ஆகியோர் கூறியதாவது:-

"சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விறகுக்காக அலையாத்திக் காடுகளை வெட்டுவது அதிகமாக இருந்தது. ஆனால், விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்ட ஏழை மக்களுக்கு இப்போது மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விறகு அடுப்புகளைப் பயன்படுத்துவதும் இப்பகுதியில் பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், விறகுக்காக காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது'' என்றனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களின் எல்லையாக திகழும் முத்துப்பேட்டை பகுதியில் காணப்படும் அலையாத்திக் காடுகளை, இயற்கை அளித்த மாபெரும் கொடை என்றே கூற வேண்டும்.


வி. தேவதாசன்

தாரகை

unread,
Oct 16, 2010, 3:19:20 AM10/16/10
to மின்தமிழ்
உலக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இன்னொரு பூமி தேவைப்படும் என்று
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலை இன்னும் 20 ஆண்டுகளுக்குள் ஏற்படும் என்று
குறிப்பிட்டுள்ளனர்.

பூமியில் உள்ள வளங்களை மிகவும் அதிக அளவில் மனிதர்கள் பயன்படுத்தத்
தொடங்கியுள்ளனர் என்று வாழும் பூமி குறித்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இயற்கை வளங்களின் நுகர்வு இரண்டு மடங்கு
அதிகரித்துள்ளது.

இதனால் பூமியின் வளம் பாதியாகக் குறைந்துவிட்டது.

தற்போதைய நிலை தொடருமானால் 2030ம் ஆண்டிற்குள் மேலும் ஒரு பூமி
மனிதனுக்குத் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வெப்ப மண்டல நாடுகளில் வன விலங்குகளின் வாழ்க்கைச் சூழல்
கேள்விக்குறியாகியுள்ளது.

இவற்றின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 60 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

புவியில் உள்ள வளங்களில் மிக அதிகமான அளவில் பிரிட்டன் மக்கள்
பயன்படுத்துவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல அனைவரும்
பயன்படுத்தத் தொடங்கினால் புவியில் உள்ள மக்கள் தொகைக்கு மேலும் ஒரு பூமி
தேவைப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

புவியில் உள்ள வளங்களைப் பயன்படுத்தும் அளவு மற்றும் கரியமில வாயு
வெளியிடும் அளவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து பார்க்கும்போது பிரிட்டன்
31வது இடத்தில் உள்ளது.

Kannan Natarajan

unread,
Oct 28, 2010, 3:30:14 PM10/28/10
to mint...@googlegroups.com
பட்டாசுகளைத் தவிர்ப்போம்; மத்தாப்பூவாய் மலர்வோம்!

"தீபாவளி" இந்துக்களின் பாரம்பரியமான திருவிழா.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்கள் மட்டுமன்றி, மற்ற மதத்தினரும் கொண்டாடும் உற்சாகத் திருநாள்.

இதற்குக் காரணம் குழந்தைகளை மகிழ்விக்கும் மத்தாப்பூ, சரவெடி, பட்டாசு என வண்ண ஒளியையும் அசாதாரணமான சத்தத்தையும் அள்ளி வழங்கும் திருவிழா, தீபாவளி.

இளைஞர்களையும், யுவதிகளையும் மட்டுமல்லாது பெரியோரையும் மகிழவைக்கும் பண்டிகை தீபாவளி.

இப்படி எல்லா மதத்தினரையும், வயதினரையும் மகிழவைக்கும் தீபாவளி வனவிலங்கையும், பறவைகளையும் மகிழவைக்கிறதா?

என்றால் இல்லை.

அவைகளைக் கதற வைக்கிறது என்பதே உண்மை.

இதற்குக் காரணம் ஒலி மாசு.

ஓசை என்பது சுற்றுச்சூழலின் மாசுப்பொருளாகும்.

ஓசையானது -

- இயற்கை ஓசை

மற்றும்

- செயற்கை ஓசை

என்று இருவகைப்படும்.

- இடிஓசை இயற்கை ஓசையாகும்.

- வீட்டு ஓசை மற்றும் கனரக இயந்திரங்கள், தொழிற்சாலைகள், இரயில் வண்டிகள், விமானங்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் போன்றவற்றால் சமுதாய ஒலி உருவாக்கப்படுகிறது.

ஒலி அலைகளின் தீவிரமும், அலைவெண்ணும் கலந்ததே உரத்த ஒலியாகும்.

இதை டெஸிபெல் என்னும் அலகால் அளவீடு செய்வர்.

டெஸிபெல் என்னும் சொல்லில் உள்ள டெஸி என்பது 10 என்பதைக் குறிக்கிறது.

பெல் என்பது தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹம் பெல்லைக் குறிக்கிறது.

விரும்பத்தகாத ஒலியைத் தொடர்ந்து செவிமடுத்தால்

- எரிச்சல்
- கோபம்
- மனக்கிளர்ச்சி
-மனஅழுத்தம்
- தூக்கமின்மை
- முரட்டுத்தன்மை

போன்றவை உண்டாகின்றன.

சிறிய அளவில் மனநோய் உள்ளவர்களை "நியூராட்டிக்" என்று அழைப்பர்; இயல்பான மக்கள் ஓசைமாசால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மிக அதிகமாக அவர்கள் எரிச்சலும், கோபமும் அடைகின்றனர்.

பொதுவாக மூளையைப் பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு ஓசைமாசு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அது கவனச்சிதறலை ஏற்படுத்துவதால், மனதை ஒருமுகப்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை உண்டாக்குகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனச்சோர்வு உண்டாகி அவர்களுடைய பணித்திறன் குறைகிறது.

மிகநெருக்கடியான போக்குவரத்து 60 டெஸிபெல் ஓசையை எழுப்புகிறது.

இதனால் பேச்சு மற்றும் ஓசையின் தீவிரம் சமமாக இருப்பின், பேசும் வார்த்தைகளில் சுமார் 70 விழுக்காடு புரிவதில்லை.

தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் 90 டெஸிபெல் ஓசைக்கு ஒருவர் உட்படுவாராயின், அவருடைய கேட்கும்திறன் குறைந்துவிடும்.

காதுகேளாமை தாற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்படலாம்.

ஒரு மனிதர் மீண்டும் மீண்டும் 100 டெஸிபெல் ஓசைக்கு உட்படுவாராயின், அவருக்கு நிரந்தரமாகக் காது கேளாமை அல்லது ஒலிசார்ந்த தீங்கு ஏற்படுகிறது.

110 டெஸிபெல் ஒலி அளவு கொண்ட இடியோசை திடுக்கிடச் செய்யும் ஓர் இயற்கை ஓசையாகும்.

இடியோசை, வெடியோசை மற்றும் சூப்பர்-சானிக் ஓசை கருவுற்ற தாயின் கர்ப்பப்பையில் வளரும் சிசுவுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் சிசுவின் உருவம் திரிந்துவிடும் அபாயமும் உண்டு.

சுற்றுச்சூழலில் ஓசைமாசு மிகுந்துகொண்டே இருப்பின், பறவைகள் தமது இருப்பிடங்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

பறவை சரணாலயங்களுக்குக் குறிப்பிட்ட பருவங்களில் வருகை தரும் இடம்பெயரும் பறவைகளின் எண்ணிக்கை ஓசைமாசால் குறைந்துகொண்டே வருகிறது.

மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்கள் ஓசைமாசால் அவதிப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், இயற்கையாகவே பல்வேறு காரணிகளால் இடம்பெயரும் பறவைகள் மற்றும் விலங்குகள் பலத்த ஓசையுள்ள வெடிச்சத்தத்தால் பயந்துபோய் போகுமிடம் தெரியாமல் அல்லாடுகின்றன.

பிறந்த சில நாள்களே ஆன குழந்தைகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் அச்சுறுத்தும் விஷயமாக வெடிச்சத்தம் இருப்பதால் தீபாவளிக்குப் பட்டாசு வெடியைத் தவிர்த்து மத்தாப்பூக்களை கொளுத்தி மகிழ்வோம்.

ஒலிமாசைக் குறைப்போம்.

2010ம் ஆண்டு "சர்வதேச உயிர்ப்பன்மம் மற்றும் பல்லுயிர்ப்பெருக்க ஆண்டா"க உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படும் நிலையில் பறவைகள், விலங்குகள் என பல்லாண்டு காலமாக இயற்கையோடு இணைந்த உயிரினங்களை, சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் நமது இடத்துக்கு வரும் பறவைகளை நமது சில நிமிட சந்தோஷத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் வெடிவெடித்து விரட்டியடிப்பதைத் தவிர்ப்போம்.

பறவைகள் சரணாலயங்களாக உள்ள பல கிராமியப்பகுதிகளில் வாழும் மக்கள் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்திவரும்

- வெடியில்லா தீபாவளியை நகரப் பகுதிகளிலும் செயல்படுத்துவோம்;

- அதிர்வெடியால் ஏற்படும் குப்பைகளைத் தவிர்ப்போம்;

- உடல் மற்றும் மனநலனைப் பேணிக்காப்பதோடு பறவைகளையும், விலங்குகளையும் தீபாவளியன்று மகிழ்விப்போம்.

பி. நடராஜன்

செல்வன்

unread,
Oct 28, 2010, 3:34:29 PM10/28/10
to mint...@googlegroups.com


2010/10/28 Kannan Natarajan <thar...@gmail.com>

பறவைகள் சரணாலயங்களாக உள்ள பல கிராமியப்பகுதிகளில் வாழும் மக்கள் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்திவரும்

- வெடியில்லா தீபாவளியை நகரப் பகுதிகளிலும் செயல்படுத்துவோம்;

- அதிர்வெடியால் ஏற்படும் குப்பைகளைத் தவிர்ப்போம்;

- உடல் மற்றும் மனநலனைப் பேணிக்காப்பதோடு பறவைகளையும், விலங்குகளையும் தீபாவளியன்று மகிழ்விப்போம்.


Ridiculous idea.




--
 
செல்வன்

www.holyox.blogspot.com

We on this continent should never forget that men first crossed the Atlantic not to find soil for their ploughs but to secure liberty for their souls.  ~Robert J. McCracken

தாரகை

unread,
Oct 28, 2010, 3:51:51 PM10/28/10
to மின்தமிழ்
> Ridiculous idea. - செல்வன்

Rude(i)-culous idea:-)

செல்வன்

unread,
Oct 28, 2010, 4:10:37 PM10/28/10
to mint...@googlegroups.com
Correction.


who is going to follow such ridiculous ideas?

செல்வன்

unread,
Oct 28, 2010, 4:10:04 PM10/28/10
to mint...@googlegroups.com
Tharagai,

You just copied and pasted that post. I don't find fault with you. But I really think that who ever wrote that article in the first place is a kill joy and spoil sport. All enviro nuts are. what is wrong with having fun for one day? who is going to such ridiculous ideas? It will only bring in bad reputation to the environment movement

தாரகை

unread,
Oct 29, 2010, 4:31:04 PM10/29/10
to மின்தமிழ்
> But I really think that who ever wrote that article in the first place is a kill
> joy and spoil sport.

The author has campaigned for a clean & safe environ,which is the need
all around.

Alternative thoughts need to be listened to rather than being nipped
in the bud.


> All enviro nuts are. what is wrong with having fun for
> one day? who is going to such ridiculous ideas? It will only bring in bad
> reputation to the environment movement

The inner core of "nuts" contain essence & some only stare at the
xterior along with ridiculing:-(

When some human minds are polluted, where from could we seek for
humane purity!

செல்வன்

unread,
Oct 30, 2010, 2:23:07 AM10/30/10
to mint...@googlegroups.com


2010/10/29 தாரகை <thar...@gmail.com>

The author has campaigned for a clean & safe environ,which is the need
all around.

Alternative thoughts need to be listened to rather than being nipped
in the bud.


He can campaign for anything that he wants to. But not against Deepavali. It won't succeed.


The inner core of "nuts" contain essence & some only stare at the
xterior along with ridiculing:-(

When some human minds are polluted, where from could we seek for
humane purity!


Not ready for word play:-). Let us debate the issue in hand. 


--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



தாரகை

unread,
Oct 30, 2010, 3:35:24 AM10/30/10
to மின்தமிழ்
125 டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் எழுப்பும் பட்டாசுகளை தயாரிப்பதோ,
விற்கவோ கூடாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

125 டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்
கூடாது.

125 டெசிபல் அல்லது 145 டெசிபல் (உச்ச அளவு) அளவுக்கு மேல் ஓசை எழுப்பும்
வெடிகளைத் தயாரிப்பது, விற்பது மற்றும் வெடிப்பது ஆகியவற்றுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ளது.

அதிக ஓசை எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பைத் தவிர்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை
பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

பொது இடங்களில் ஒலிபெருக்கி குழாய்கள் மூலம் விளம்பரப்படுத்தும் சப்தம்
10 டி.பி.ஏ-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள்ளாக எந்தவித சப்தம்
ஏற்படுத்தும் கொட்டு மேளங்களையோ, வேறு ஒலிபெருக்கி விளம்பரங்களையோ (அவசர
காலங்கள் தவிர) பயன்படுத்தக் கூடாது.

போக்குவரத்து நெரிசலான சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும்
நீதிமன்றங்கள் போன்ற அமைதிப் பகுதிகளில் வெடிக்கக் கூடாது.

திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாகப் பட்டாசுகளை
வெடிக்கலாம்.

வெடிகளை வெடிக்கும்போது காலணிகளை அணிந்துகொண்டு வெடிப்பது நல்லது.

தீக்காயங்கள் ஏற்படும்போது அதிகமான தண்ணீரை காயத்தின் மேல் ஊற்ற


வேண்டும்.

கண்ணில் ஏற்படும் தீக்காயங்களை அதிக தண்ணீர் விட்டு 10 நிமிடங்களுக்குக்
குறையாமல் கண்ணைக் கழுவ வேண்டும். பின்பு மருத்துவமனைக்குச் செல்ல


வேண்டும்.

குழந்தைகளின் சட்டைப் பையில் வெடிகளை வைக்க அனுமதிக்ககக் கூடாது.

பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றைத்
தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பட்டாசுகளுக்கு செலவிடும் பணத்தை ஏழைகளுக்குப் பாடப் புத்தகங்கள், ஆடைகள்
வாங்கிக் கொடுத்தால் நல்ல பலனைத் தரும்.

செல்வன்

unread,
Oct 30, 2010, 3:40:22 AM10/30/10
to mint...@googlegroups.com

பட்டாசுகளுக்கு செலவிடும் பணத்தை ஏழைகளுக்குப் பாடப் புத்தகங்கள், ஆடைகள்
வாங்கிக் கொடுத்தால் நல்ல பலனைத் தரும்.


தினமணி வாங்குவதை நிறுத்திவிட்டு அந்த காசில் குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம் வாங்கி தந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்.பேப்பருக்காக மரங்கள் வெட்டபடுவது குறையும். அதுதான் சுற்றுசூழலுக்கு நல்லது

--
 
செல்வன்

www.holyox.blogspot.com

தாரகை

unread,
Oct 30, 2010, 3:49:28 AM10/30/10
to மின்தமிழ்
> He can campaign for anything that he wants to. But not against Deepavali. It
> won't succeed.

The author was'nt campaigning against celebrating Deepavali but to
avoid some fire-crackers that make noises more then the required
normal decibels:-)

> Not ready for word play:-). Let us debate the issue in hand.

Rather than a debate - u started with statements like ridiculous idea,
who is going to follow such ridiculous ideas?, But I
really think that who ever wrote that article in the first place is a
kill joy and spoil sport. It will only bring in bad
reputation to the environment movement et al.....

செல்வன்

unread,
Oct 30, 2010, 3:54:19 AM10/30/10
to mint...@googlegroups.com


2010/10/30 தாரகை <thar...@gmail.com>

The author was'nt campaigning against celebrating Deepavali but to
avoid some fire-crackers that make noises more then the required
normal decibels:-)

No. He is totally against all fire works, not just "some".

This is what he said வெடியில்லா தீபாவளியை நகரப் பகுதிகளிலும் செயல்படுத்துவோம்; 

Rather than a debate - u started with statements like ridiculous idea,
who is going to follow such ridiculous ideas?, But I
really think that who ever wrote that article in the first place is a
kill joy and spoil sport. It will only bring in bad
reputation to the environment movement et al.....

Those were directed against the author of the article. Not you.

தாரகை

unread,
Oct 30, 2010, 3:55:27 AM10/30/10
to மின்தமிழ்
> பேப்பருக்காக மரங்கள் வெட்டபடுவது குறையும். அதுதான் சுற்றுசூழலுக்கு நல்லது

புதிதாக ஏதாவது சொல்லு(எழுது)ங்கள் செல்வன் அவர்களே. மரம் வெட்டுவதைப்
பற்றி முன்பொரு முறை கூறியிருந்தீர்கள்:-)

மரத்திற்கு இருக்கும் பரிவை சற்று விலங்கினித்திடமும் காட்டலாமன்றோ:-)

செல்வன்

unread,
Oct 30, 2010, 3:59:45 AM10/30/10
to mint...@googlegroups.com
மரத்தை வெட்டினால் விலங்கினமும் பாதிக்கபடும் அன்றோ?:-)

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பவர்கள் தான் உலகின் அதிக சதவிகிதத்திலான வெஜிட்டேரியன்கள். அதுதான் உண்மையான விலங்கின அன்பு.


2010/10/30 தாரகை <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

தாரகை

unread,
Oct 30, 2010, 4:02:34 AM10/30/10
to மின்தமிழ்
> No. He is totally against *all* fire works, not just "some".

We always assume & blame others:-)


> This is what he said வெடியில்லா தீபாவளியை நகரப் பகுதிகளிலும்
> செயல்படுத்துவோம்;

Certainly there is a difference between fire-crackers, பூச்சட்டி,
கம்பி மத்தாப்பு, சாட்டை, தரைச்சக்கரம்:-)

> Those were directed against the author of the article. Not you.

Any article needs to be discussed in two angles rather than by
statements.

I'm aware that your comments were directed against the author,but in
an educated group like MinThamizh - it would be worthwhile to analyse
the pro's & cons rather than join a chorus of either supporting or
admonishing an issue:-)

செல்வன்

unread,
Oct 30, 2010, 4:09:03 AM10/30/10
to mint...@googlegroups.com


2010/10/30 தாரகை <thar...@gmail.com>

Certainly there is a difference between fire-crackers, பூச்சட்டி,
கம்பி மத்தாப்பு, சாட்டை, தரைச்சக்கரம்:-)

That's for babies.What is a deepavali without rockets, cap, oosi pattaasu and thousand vala?

I'm aware that your comments were directed against the author,but in
an educated group like MinThamizh - it would be worthwhile to analyse
the pro's & cons rather than join a chorus of either supporting or
admonishing an issue:-)

That's what I am doing here.

தாரகை

unread,
Oct 30, 2010, 4:12:21 AM10/30/10
to மின்தமிழ்
> That's for babies.What is a deepavali without rockets, cap, oosi pattaasu
> and thousand vala?

The sound of cap, oosi pattaasu do not cross the normal decibels
barrier like the major fire-crackers like 1000 vala.

> That's what I am doing here.

Sometimes:-)

செல்வன்

unread,
Oct 30, 2010, 4:12:31 AM10/30/10
to mint...@googlegroups.com


2010/10/30 தாரகை <thar...@gmail.com>
அந்நிலை மாறிவருகிறது:-)


புரட்டாசி, மார்கழி மாதங்களில் கோழிபண்னை தொழில் செத்து பிழைப்பது தான் யதார்த்தம்.சபரிமலைக்கு மாலைபோடுபவர்கள் எண்ணிக்கையும் வருடா வருடம் அதிகரித்தே வருகிறது.இந்துக்கள் அசைவம் உண்டாலும் வருடத்தின் பல நாட்கள், மாதங்களில் அசைவத்தை தவிர்ப்பார்கள்.இதனால் இயற்கையாக ஒரு கண்ட்ரோல் உருவாகிவிடுகிறது

என்னவென்றும், எப்படியென்றும் விளக்கமளித்தால் "சர்வதேச உயிர்ப்பன்மம்
மற்றும் பல்லுயிர்ப்பெருக்க ஆண்டில்" (2010) மேலும் தெளிவுபெறுவோம்:-)

சைவ உணவு எப்படி விலங்குகள் மேலான அன்பை காட்டுகிறது என கேட்டால் என்ன பதில் சொல்ல இயலும்?:-)

செல்வன்

unread,
Oct 30, 2010, 4:13:50 AM10/30/10
to mint...@googlegroups.com


2010/10/30 தாரகை <thar...@gmail.com>

The sound of cap, oosi pattaasu do not cross the normal decibels
barrier like the major fire-crackers like 1000 vala.


That author did not say anything about decibels. I have burst all such crackers including 1000, 5000 and 10,000 and they are legal. If high decibel is illegal then they would not sell it.

தாரகை

unread,
Oct 30, 2010, 4:07:20 AM10/30/10
to மின்தமிழ்
> தீபாவளியன்று பட்டாசு வெடிப்பவர்கள் தான் உலகின் அதிக சதவிகிதத்திலான
> வெஜிட்டேரியன்கள். அதுதான் உண்மையான விலங்கின அன்பு.

அந்நிலை மாறிவருகிறது:-)


> உண்மையான விலங்கின அன்பு.

என்னவென்றும், எப்படியென்றும் விளக்கமளித்தால் "சர்வதேச உயிர்ப்பன்மம்

தாரகை

unread,
Oct 30, 2010, 4:24:54 AM10/30/10
to மின்தமிழ்
> புரட்டாசி, மார்கழி மாதங்களில் கோழிபண்னை தொழில் செத்து பிழைப்பது தான்
> யதார்த்தம்.

அப்படியா! அப்பண்ணைகள் செத்துபிழைப்பற்கு பறவைக் காய்ச்சல் (Avian
Influenza - Bird flu)) மற்றும் slack export demand என்று பல காரணிகள்
உள்ளன. புரட்டாசித் திங்கள் வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளலாம், மார்கழி
எதில் சேர்ப்பது? செல்வனின் கோழிப்பண்ணையிலா:-)


> இதனால் இயற்கையாக ஒரு கண்ட்ரோல் உருவாகிவிடுகிறது

செயற்கையாக நாம் இயற்கையை குறைகூறுவதில் நம்மை மிஞ்சியவர்கள் எவர்
உள்ளனர்:-)

செல்வன்

unread,
Oct 30, 2010, 4:31:35 AM10/30/10
to mint...@googlegroups.com
மார்கழியில் தான் ஐயப்பன் விரதம்

2010/10/30 தாரகை <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Oct 30, 2010, 4:32:11 AM10/30/10
to mint...@googlegroups.com


2010/10/30 தாரகை <thar...@gmail.com>
he recent news item posted from Dinamani mentions the (125 டெசிபல்

அளவுக்கு மேல் சப்தம் எழுப்பும் பட்டாசுகளை தயாரிப்பதோ,
விற்கவோ கூடாது) the cut off limits of fire-crackers.


That means if it is sold then it is legal and you can burst it

தாரகை

unread,
Oct 30, 2010, 4:31:15 AM10/30/10
to மின்தமிழ்
> That author did not say anything about decibels.

The author has provided the basics of decibel:-)

The recent news item posted from Dinamani mentions the (125 டெசிபல்


அளவுக்கு மேல் சப்தம் எழுப்பும் பட்டாசுகளை தயாரிப்பதோ,
விற்கவோ கூடாது) the cut off limits of fire-crackers.

> If high decibel is illegal then they would not sell it.

That awareness is now being established:-)

தாரகை

unread,
Oct 30, 2010, 4:36:26 AM10/30/10
to மின்தமிழ்
> மார்கழியில் தான் ஐயப்பன் விரதம்

அது சரி, கோழிப்பண்ணையாளர்கள் ஐயப்பன் விரதத்தால் தங்கள் முட்டை மற்றும்
கோழி விற்பனை குறைந்ததாக தெரிவிக்கும் செய்திகள் எங்குள்ளன?

தெரிவித்தால் நலம் பயக்கும்:-)

Nagarajan Vadivel

unread,
Oct 30, 2010, 4:37:53 AM10/30/10
to mint...@googlegroups.com
aஅன்மையில் லக்னோ நீதிமன்றத்தின் தீர்ப்பை மனதில் கொள்ளுங்கள்
தீபாவளி என்பது காலங்கால்மாக இந்துக்கள் மனதில் உள்ளது.
சட்டத்தால் அதைத் தடுத்து நிறுத்தக்கூடாது
இது என் கட்டைப் பஞ்சாயத்துமுறைத் தீர்ப்பு
நாகராசன்

2010/10/30 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

தாரகை

unread,
Oct 30, 2010, 4:41:31 AM10/30/10
to மின்தமிழ்
> That means if it(125 டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் எழுப்பும் பட்டாசுகளை தயாரிப்பதோ,
> விற்கவோ கூடாது) is sold then it is legal and you can burst it

Its like buying illegal or counterfeit products. Would you do that if
you are in a foreign country?

Well, its after all India is'nt it:-)

Who cares attitude has sunk deeply even to ask the question if sold -
then its legal:-(

செல்வன்

unread,
Oct 30, 2010, 4:47:44 AM10/30/10
to mint...@googlegroups.com


2010/10/30 தாரகை <thar...@gmail.com>

அது சரி, கோழிப்பண்ணையாளர்கள் ஐயப்பன் விரதத்தால் தங்கள் முட்டை மற்றும்
கோழி விற்பனை குறைந்ததாக தெரிவிக்கும் செய்திகள் எங்குள்ளன?

தெரிவித்தால் நலம் பயக்கும்:-)

Poultry industry report says that 


When organized poultry production commenced in India in the late .... price can be a powerful driver for demand. Tamil Nadu is a state ... abstinence like Aadi, Purattasi, Karthigai Margali; drastically reduce consumption. ...

செல்வன்

unread,
Oct 30, 2010, 4:50:17 AM10/30/10
to mint...@googlegroups.com


2010/10/30 தாரகை <thar...@gmail.com>

Its like buying illegal or counterfeit products. Would you do that if
you are in a foreign country?

Well, its after all India is'nt it:-)

Who cares attitude has sunk deeply even to ask the question if sold -
then its legal:-(


If there is a law banning crackers above 125 decibel then selling crackers above 125 decibel is illegal

How do you expect public to know whether the crackers they burst has a decibel of above 125?

So if it is sold, they will burst it. They have no way to know whether it is legal or illegal. Only govt should take action.

தாரகை

unread,
Oct 30, 2010, 4:56:19 AM10/30/10
to மின்தமிழ்
> like Aadi, *Purattasi*, Karthigai Margali; drastically reduce consumption. *

சான்று கிடைப்பது கடினமன்றோ:-)

நாம் இருப்பதோ 2010 - நீங்கள் எடுத்துக்காட்டிவுள்ளது 2005ஆம்
ஆண்டறிக்கை.

அண்மைக்கால ஆண்டறிக்கை ஏதாவது இருப்பின் நம் உரையாடலுக்கு
சாலப்பொருந்தும்:-)

ஆக, கோழிப்பண்ணையாளர்கள் "ஐயப்பன் விரத"த்தால் தங்கள் முட்டை மற்றும்
கோழி விற்பனை குறைந்ததாக தெரிவிக்கும் செய்தியை உங்களால் காட்ட
முடியவில்லை.

செல்வன்

unread,
Oct 30, 2010, 5:00:49 AM10/30/10
to mint...@googlegroups.com
மார்கழியில் கோழிபண்னை வியாபாரம் சரிவது தான் பாயிண்ட்.மார்கழியில் வணிகம் சரிய ஐயப்பன் விரதமும் ஒரு காரணம்.மார்கழியில் அது ஒன்றுதானா விசேஷம்? மார்கழியில் தான் பெருமாள் கோயிலில் 30 நாளும் பூஜை செய்வார்கள்.இம்மாதிரி எத்தனையோ நல்ல நாட்கள் மார்கழியில் வரும்.

2005 வரை ஆதாரம் இருக்கல்ல?:-).2010 கிடைத்தால் இடுகிறேன்:-).


2010/10/30 தாரகை <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Oct 30, 2010, 5:02:09 AM10/30/10
to mint...@googlegroups.com


2010/10/30 தாரகை <thar...@gmail.com>
Most likely, the wrappings might denote - if not to check with the
respective shops.


If they sell illegal crackers how would they print it on wrapper?

I have bought crackers all my life. Till 2004 in India. Never have I seen decibels printed on wrappers

தாரகை

unread,
Oct 30, 2010, 5:00:50 AM10/30/10
to மின்தமிழ்
> How do you expect public to know whether the crackers they burst has a
> decibel of above 125?

Most likely, the wrappings might denote - if not to check with the
respective shops.


> If there is a law banning crackers above 125 decibel then selling crackers
> above 125 decibel is illegal

Absolutely correct. I concur:-)

Though,there are traders who might sell to earn fast money like
illicit liquor trade.

> So if it is sold, they will burst it. They have no way to know whether it is
> legal or illegal. Only govt should take action.

I agree too.

Yes both the Govt & the common man should have responsibility to
conduct a safe & happy Deepavali:-)
It is loading more messages.
0 new messages