கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு.ராசகோபால் மறைந்தார்

2 views
Skip to first unread message

தேமொழி

unread,
11:04 AM (2 hours ago) 11:04 AM
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆழ்ந்த அஞ்சலி🙏🏽


Rajagopal Archeologist.jpg
கல்வெட்டு ஆய்வாளர் முனைவர்  சு.ராசகோபால் மறைந்தார் 

கல்வெட்டு அறிஞர் திரு.சு.இராசகோபால் இன்று மதியம் காலமானார்.

வயது 76- என்றாலும்  இளைஞர்களோடு உடனிருந்தார். கல்வெட்டுக் கல்வி பயிற்றுநர் பணி அவருக்கு மகிழ்வானது.

தொல்லியல் கழகத்தின் 'ஆவணம்' இதழாசிரியராக இந்த ஆண்டு இதழ் வரை பணியாற்றியவர்.
 
சென்ற ஆண்டு நிர்வாகக்குழுவில் இந்த ஆண்டோடு ஆவணப்பணியிலிருந்து விடுபடுகிறேன் என்று ஏன் சொன்னரோ? அகவை முதிர்வில் எம் நண்பர்கள் குழாமிலிருந்து பலரை இயற்கை விடுக்கிறது.

அன்பானவர்.கற்பித்தலில் ஆர்வமுடையவர்.
தமிழகத் தொல்லியல் துறையில் 33 ஆண்டுகாலம் பணியாற்றியவர்.

இருபத்தி ஒன்பது நூல்கள் 66 மேலான ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியவர்.
"திசையாயிரம்" எனும் தலைப்பில் இவருக்கானப் பணிப்பாராட்டுநூலை,  பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் சென்ற ஆண்டு வெளியிட்டுள்ளது.

கல்வெட்டுத்துறைக்கு இவரது மறைவு பேரிழப்பாகும்.
இவரின் இறுதி நிகழ்வுகள் சென்னையில் நடைபெறுகிறது.

ஆழ்ந்த அஞ்சலி.

-ராஜாராம் கோ மகன்
Reply all
Reply to author
Forward
0 new messages