பாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி

154 views
Skip to first unread message

Ponnaiah Thirunavukkarasu

unread,
Apr 21, 2009, 1:32:42 AM4/21/09
to minT...@googlegroups.com, pals...@googlegroups.com
URL:http://www.kalaikesari.com/culture/culturenews/


பாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி

  பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிர் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றாலும் நம் மூத்தோர்களின் உணர்வுகளையும், உணர்வின் வெளிப்பாடுகளையும், யாரால் மறைக்க முடியும்? பழந்தமிழரின் உள்ளத்திலே ஏற்படும் மகிழ்ச்சி, அன்பு, கோபம், துக்கம், கவலை, ஏக்கம், காதல், கனிவு, போட்டி என உணர்வுகள் பலவும் வெவ்வேறானாலும் உண்மை, நீதி, அன்பு, சமத்துவம் என உரிமைகள் சார்ந்த ஒடுக்குமுறைகளை மாற்றõரிடமிருந்து உணரும்போதுதான் எதிர்ப்பு கிளம்பி போர்க்குணமாகப் பரிணமிக்கிறது. அத்தகைய பரிணாமங்கள் தான் நம் மூத்த குடிகளின் கைவரிசைகளாகவும், இம் மண்ணின் கலைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்கிராமியக் கலைகளில் இருந்தே நம் சாஸ்திரிய நடனமான பரதநாட்டியம் தோற்றம் பெற்றுள்ளது என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன. இக்கிராமியக் கலைகள் ஒரு சில கிராமங்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இக்கலையை காசுக்காக ஆசைப்பட்டு கலை சேவை செய்வதாக சிலர் நம் மண்ணில் கலைகளை கடைச்சரக்காகவும் கையாளுகின்றார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில் தமிழர் வாழ்வையும் அவர்தம் உரிமை மொழியும் கலைவழி மீட்டெடுக்க இந்த மண்ணில் கலைகளையே ஆயுதமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்தவொரு கலை வடிவமும் அது உயிர் வாழ்வதற்கான சமூகக் காரணங்கள் உள்ளவரைதான் உயிர் வாழும். சமூகக் காரணங்கள் மாறும்போது அக்கலைகள் தானாகவே அழிந்துவிடும். எனவே, இக்கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்காகவே இதன் ஒரு முயற்சியாக மக்கள் பண்பாடு பற்றி ஒரு விழிப்புணர்வை பயிற்சிகள் மூலம் கொடுப்பதற்கு முயற்சி செய்தார்கள். இம்முயற்சியின் பயனாகத் தோற்றம் பெற்ற கலைக்கூடமே நாகர்கோவில் "களரி மக்கள் பண்பாட்டு மையமும்', "திண்டுக்கல் சக்தி மையமும்' ஆகும். இம்மையத்தின் ஆசான்கள் மூலம் பல மாணவர்களுக்கு கிராமியக் கலையை கற்றுக் கொடுத்தார்கள். இவ்வாறு பாமரர் மட்டுமின்றி படித்தவர்களும் பயி ன்று திறனடைந்தார்கள். இக்களரி மையத்தால் தென்னிந்தியாவில் மட்டுமன்றி மேலைத்தேய நாடுகளிலும் இக்கலை கொண்டு செல்லப்பட்டது. இக்கலைகளின் பிரிவுகளான கும்மியாட்டம்,கோலாட்டம், ஒயிலாட்டம், லெசீம் ஆட்டம், கரகாட்டம், பறையாட்டம், சிலா ஆட்டம் என்பனவாகும். இவைபோன்று இன்னும் பல ஆடல் வகைகள் உள்ளன.

கும்மியாட்டம்:

பெண்கள் வட்டமாகச் சுற்றிவந்து கைகளால் கொட்டி குனிந்து நிமிர்ந்து ஆடும் ஆட்டம் கும்மியாட்டம் எனப்படும். கும்மாய், கும்முதல்,குழுமி என்பதிலிருந்து கும்மி என்று வந்தது. பழந்தமிழ் இலக்கிய நூலான அகநாநூறு, சிலப்பதிகாரத்தில் "கொம்மை' என்ற சொற்களும் வருகின்றன. கோயில் விழாக்கள், பூப்பு நிகழ்ச்சி, மழை பெய்ய வேண்டுதல் போன்ற வைபவங்களுக்கு கும்மி ஆடப்படுகின்றது.

கும்மி

ஆடும் போது முளைப்பாரி, குத்துவிளக்கு, மலர்க்கூடை, பலகாரக் கூø ட வைத்து ஆடுவார்கள். கும்மி நடனத்தின் தாளம் 6/8 அல்லது 12/8 என்ற வேகதாளம் கொண்டது. இத்துடன் தோல் பானை, சிங்கி போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்டதே கும்மியாட்டமாகும்.

கோலாட்டம்:

கோலாட்டத்தில் நிறங்கள் தீட்டப்பட்ட கோல்களைக் கொண்டு தாளத்திற்கும், இசைக்கும் ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று தட்டி ஒலியெழுப்பி பெண்கள் ஆடும் நடனம் இதுவாகும். தமிழகத்தில் பல இடங்களிலும் மற்றும் குஜராத், ஒரிசா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் இது ஆடப்படுகின்றது. தமிழகத்தில் கண்ணன் பிறப்பு நாளன்று கோலாட்டம் ஆடுவதும் ஒரு மரபாக உள்ளது. மற்றும் அரச விழாக்கள், கல்விக்கூட விழாக்கள், சமூக விழிப்புணர்வுக்காகவும் ஆடப்பட்டு வருகின்றன. கோலாட்டத்தில் நேர்கோட்டு வடிவம், பின்னல் வடிவம், வட்டவடிவ முறை, கூட்டவடிவ முறை அல்லது சிலுøவக்கோல் என்றும் வடிவங்கள் உண்டு. பாடலுக்கு ஏற்ப தவில், டோலக் போன்ற இசைக்கருவிகள் பயன்படுகின்றன. இவ்வாட்டத்தில் நாடகப்பாணியும் பயன்படுத்தப்படுகின்றது.

ஒயிலாட்டம்:

ஆண்கள் குழுவாக கைக்குட்டை வைத்துச் சுழற்றித் தங்கள் ஆண்மை அழகு வெளிப்படும் வண்ணம் ஆடும் ஆட்டம் ஒயிலாட்டம் எனப்படும். ஒயிலென்றால் அழகு, அலங்காரம், ஒய்யாரம், சாயம் எனப் பொருள்படும். கோயில் விழாக்களிலும் கத்தோலிக்க, கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் ஆடப்பட்டு வருகின்றன. பாடல், ஆடல், உரையாடல் என்பவற்றைக் கொண்டுள்ளது. தற்காலம் உரையாடல் வழக்கில் இல்லை. அடவுகளின் வேகத்தை ""தக்கு, காலம்'' என இரண்டாகப் பிரிக்கலாம். மேலும் ஒயிலாட்டத்தின் அடவுகளை அடி, சாரி, தட்டு என மூன்று வகையாக பிரித்துள்ளனர். இவற்றிற்கு பயன்படுத்தும் இசைக்கருவி தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி என்பனவும் அத்துடன் காலில் சலங்கை கட்டியும் ஆடுவார்கள்.

லெசீம் ஆட்டம்:

இந்த ஆட்டத்தில் லெசீம் என்ற இசைக்கருவியைப் பயன்படுத்துவர். எவ்வாறெனில் லெசீமைக் கையில் பிடித்துக் கொண்டு தட்டியும், இழுத்தும் ஒலியெழுப்பி அடவுகளை ஆடும் ஆட்டம் லெசீம் ஆட்டமாகும். சால்ரா போன்ற ஒலியை எழுப்பும் லெசீம் சிறிய கட்டை, நீண்ட கட்டை என்ற இரு கட்டைகளினாலும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நடனம் ஒரு மராட்டிய நடனமாகும். இந்த நடனத்தை மராட்டிய மன்னன் சிவாஜி தனது போர் வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என்று கருதப்படுகிறது. இந்நடனம் பிரசாரங்கள், ஊர்வலங்கள், வீதி நாடக நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் ஆடப்படுகின்றது. இந்த ஆட்டத்தின் அடவுகள் எழுச்சியும், ஆவேசமும் எழுப்பும் ஆட்டமாகும். இவற்றில் தவில், செண்டை அத்துடன் லெசீம் எழுப்பும் இசைக்கருவியும் முக்கிய இடம் வகிக்கின்றது.

கரகாட்டம்:

அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும். கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு 3 கிலோ எடையுள்ள செம்பினுள் 3 அல்லது 4 கிலோ மண்ணோ, அரிசியோ இட்டு ஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். செம்பின் வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டை வைத்திருக்கின்றனர். இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர். குடையின் மேலே கிளி, அன்னம், புறா போன்ற தக்கைப்பறவை உருவம் இருக்கும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்' என்றும் தொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர். தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால் செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும். முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களே ஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பன இசைக்கப்படுகின்றன.

பறையாட்டம்:

பறை அல்லது தப்பு என்கின்ற இசைக்கருவியை இடது கை தோளில் தொங்க விட்டபடி தன் மார்போடு அணைத்து நீளமான குச்சியை இடது கையினாலும், சிறிய குச்சியை வலது கையினாலும், பிடித்து தாளங்களை அடித்து அடவுகளை ஆடுவது பறை ஆட்டம் ஆகும். தப்பு அடித்து ஆடுவதால் தப்பாட்டம் எனவும், பறையர் சாதியினரால் ஆடப்பட்டதால் பறையாட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பறை மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிச் சட்டத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தோலை இழுத்து ஒட்டிச் செய்யப்படும். ஒன்றே கால் அடி நீளமும் ஒரு செ.மீ. அகலமும் கொண்ட "சிம்புக்குச்சி' (மூங்கில் குச்சி) யைப் பயன்படுத்துவர். இதனை இடக்கையிலும், மற்றும் பூவரசக்கம்பில் செதுக்கப்பட்ட அரையடி நீளமும் மூன்று செ.மீ. சுற்றளவுமுள்ள "அடிக்குச்சி' வலது கையிலும் வைத்து அடித்து ஓசை எழுப்பப்படும். தப்பாட்டம் முன்பு "சாவு மேளம்' என்றும் உயர் சாதியினர் கூறினர். இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கோயில்களிலும், தேவாலயங்களிலும், அரச விழாக்களிலும் தப்பாட்டம் ஆடப்படுகிறது. இவ்வாட்டத்தில் பல அடிமுறைகள் உள்ளன. அவற்றில் சில சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, ஜாயிண்டு அடி, மருள் அடி, சாமி சாட்டுதல் அடி, சினிமா அடி, மாறடித்தல் அடி,வாழ்த்து அடி என்பவையாகும். இவற்றுக்கு துணைக் கருவிகள் ஆவன மரம், சிங்கி, செண்டை, மேளம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

சிலா ஆட்டம்:

கையில் மான் கொம்புகளை வைத்து விலாவில் அலகு குத்தி நேர்த்திக்காகவும், வேண்டுதலுக்காகவும் சிலம்பு அடவுகளோடு ஆடப்படும் நடனம் சிலா ஆட்டம் எனப்படும். மான் கொம்புக் கருவியானது இதை ஆடுகின்ற மக்களால் தயாரிக்கப்படுகிறது. நேராக சுழன்று வளைந்திருக்கும் இரு மான் கொம்புகளில் ஒன்றை மேல் நோக்கியும் மற்றதை கீழ் நோக்கியும் பிடித்து ஆடுவர். சிலர் உண்மையான மான் கொம்பை வைத்து ஆடுவார்கள். இது ஒரு நேர்த்தி நடனம் என்பதால் விரதம் இருத்தல், கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குகள் கடைப்பிடித்தல் போன்ற பல நிபந்தனைகள் உண்டு. இந்நடனம் நேர்த்திக்காக ஆண்கள் மட்டும் ஆடும் நடனம். ஆசான் ஆடி முன் செல்ல தொடர்ந்து சிலா குத்தியவர்கள் பின் செல்வார்கள். மனிதன் மிருகங்களிடமிருந்து போர் உத்திகள், நடன உத்திகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டான் என்பதற்கு இந்த நடனம் நல்லதொரு எடுத்துக்காட்டு. இந்த நடனம் "மான்கள்' ஒன்றை ஒன்று எதிர்ச்சண்டையிடுவது போன்று ஆடப்படுகிறது. பாச்ச ஒயில், ஒத்தக்கிறுக்கி, இரட்டக்கிறுக்கி, நிரடு ஒயில், கால் தூக்கி ஒயில், ஒருகால் ஒயில், இரண்டு கால் ஒயில், ஐந்து கால் ஒயில், டேப் போன்றவை அடவு வகைகளாகும். சõமியாட்டத்திற்குரிய தவில், பம்பை, தப்பு போன்ற இசைக் கருவிகளையும் பயன்படுத்துகின்றனர்.

இக்கிராமியக் கலைகள் அனைத்திலும் ஆண்கள் தார்ப்பாச்சி, மஞ்சள் நிற ஜிப்பா சட்டை அணிந்து கொள்வார்கள். பெண்கள் சாரியை கிராமத்து முறையில் கட்டிக் கொள்வார்கள். காலில் சலங்கைகள் கட்டி ஆடுவார்கள். இவ்வாறு பல ஆடல் வகைகள் இருக்கின்றன. அவற்றில் இன்று ஆடப்பட்டு வரும் ஆடல்கள் இவையாகும். இன்று இந்தியா மட்டுமன்றி மேலை நாடுகளிலும் ஆடப்பட்டு வருகின்றன. இக்கிராமியக் கலை நம் நாடான ஈழ நாட்டிலும் அடவு முறைகள் இல்லாது ஆடப்பட்டு வருகின்றது. பாடசாலைகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பழந்தமிழர் ஆடிய நடனம் இன்று அழிவுறாமல் அனைத்து நாடுகளிலும் பிரகாசித்து மிளிர்கின்றன.
 

--
Right Faith.,
Right Knowledge.,
Right Action.,

Yours.,
Pon.Thirunavukkarasu.,                          (பொன் .திருநாவுக்கரசு)

Jonathan Swift  - "May you live every day of your life."

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 21, 2009, 3:34:41 AM4/21/09
to மின்தமிழ்
நல்லதொரு செய்தியைப் படம் பிடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
கிராமங்களில் வாழும்போது, கிராமியக் கலைகளும் வாழும்.
பாரத தேசத்தின் உயிர் கிராமங்களில் இருக்கிறது என்று சொன்னார் காந்தி-
நான் ஒரிஜினல் காந்தியை சொல்றேங்க:-)

அந்த காந்தியை வெறும் "ரூபாய் நோட்டில் வாழுகிறார் காந்தி"ன்னு மட்டும்
தானே நமக்குத் தெரியும்?

கிராமங்களே கவனிப்பாரற்றுப் போய்க்கொண்டிருக்கிற வேளையில், கிராமியக்
கலைகளைகவனிப்பாரும் உண்டோ?

கிராமியக் கலைகளை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு, இந்தக் கலைகளை, இன்று
யார் யார் எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கப்
பட வேண்டிய விஷயம்!

On Apr 21, 10:32 am, Ponnaiah Thirunavukkarasu <ponnth...@gmail.com>
wrote:


> URL:http://www.kalaikesari.com/culture/culturenews/
>
> பாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 21, 2009, 3:33:28 AM4/21/09
to மின்தமிழ்
நல்லதொரு செய்தியைப் படம் பிடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
கிராமங்களில் வாழும்போது, கிராமியக் கலைகளும் வாழும்.
பாரத தேசத்தின் உயிர் கிராமங்களில் இருக்கிறது என்று சொன்னார் காந்தி-
நான் ஒரிஜினல் காந்தியை சொல்றேங்க:-)

அந்த காந்தியை வெறும் "ரூபாய் நோட்டில் வாழுகிறார் காந்தி"ன்னு மட்டும்
தானே நமக்குத் தெரியும்?

கிராமங்களே கவனிப்பாரற்றுப் போய்க்கொண்டிருக்கிற வேளையில், கிராமியக்
கலைகளைகவனிப்பாரும் உண்டோ?

கிராமியக் கலைகளை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு, இந்தக் கலைகளை, இன்று
யார் யார் எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கப்
பட வேண்டிய விஷயம்!

On Apr 21, 10:32 am, Ponnaiah Thirunavukkarasu <ponnth...@gmail.com>
wrote:

> URL:http://www.kalaikesari.com/culture/culturenews/
>
> பாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி

Chandra sekaran

unread,
Apr 21, 2009, 8:20:32 AM4/21/09
to minT...@googlegroups.com
நேற்று, கலாக்‌ஷேத்ரா தலைவி லீலா சாம்ஸனுடன் வெகு நேரம் உரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கலாக்‌ஷேத்ரா என்றாலே மேல் மட்ட மக்கள் தங்களுக்குள் பரத நாட்டியத்தை ரசிக்கும் ஒரு இடம் என்ற எண்ணம் பரவலாக எல்லாருக்கும் உள்ளது.அழிந்து கொண்டிருக்கும் கிராமீயக் கலைகள், கலைஞர்களை ஊக்குவிக்கவும், அதே சமயம் தொன்மை வாய்ந்த பழங்கோவில்களை வெளி உலகுக்கு வெளிச்சமிட்டு காண்பிக்கவும், ஒரு இயக்கத்தை அவர் ஆரம்பிப்பாரேயானால், நான் அதில் முழு நேர பணியாளனாக இணைத்துக் கொள்ளத் தயார் என்றேன். வரவேற்றார்கள்! இது நிறைவேறும் பட்சத்தில், எல்லா மின் தமிழ் அன்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்: உங்களுக்குத் தெரிந்த அம்மாதிரியான கலைஞர்கள், கலைகள், முகவரி, தொடர்பு எண் போன்றவற்றை எனக்கு அளித்தால், ஒரு database ஏற்படுத்தி, அவர்களுக்கு நிரந்தரமான வருமானத்திற்கு வழி செய்ய ஒரு முறை ஏற்படுத்தலாம்.

சந்திரா

Tirumurti Vasudevan

unread,
Apr 21, 2009, 9:53:49 AM4/21/09
to minT...@googlegroups.com
ஏனய்யா, எவ்வளோ வேலைதான் பார்ப்பீர்கள்? க்ளோன் பண்ணி வெச்சு இருக்கீங்களா?
திவா

2009/4/21 Chandra sekaran <plastic...@gmail.com>

நான் அதில் முழு நேர பணியாளனாக இணைத்துக் கொள்ளத் தயார் என்றேன்.



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Chandra sekaran

unread,
Apr 21, 2009, 12:13:06 PM4/21/09
to minT...@googlegroups.com
தி.வா சார்,
க்ளோன் பண்ணுவது உங்களை மாதிரி வைத்தியர்கள் வேலை! வாழ்க்கையில் எல்லாருக்கும் க்ளவுன் ஆகாமல் இருந்தால் சரி :)
சந்திரா

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 21, 2009, 11:09:48 PM4/21/09
to மின்தமிழ்
//அழிந்து கொண்டிருக்கும் கிராமீயக் கலைகள், கலைஞர்களை ஊக்குவிக்கவும்,

அதே சமயம் தொன்மை வாய்ந்த பழங்கோவில்களை வெளி உலகுக்கு வெளிச்சமிட்டு
காண்பிக்கவும், ஒரு இயக்கத்தை அவர் ஆரம்பிப்பாரேயானால்...//

வேர்களைத் தேடி விழுதுகள் தான் வர வேண்டும், சந்திரா!
அவர்கள் இருக்கிற இடத்திலேயே இருந்து கொண்டு, ஒரு இயக்கம்


ஆரம்பிப்பாரேயானால்

என்பதெல்லாம் .....என்ன சொல்வது?!

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

On Apr 21, 5:20 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com> wrote:
> நேற்று, கலாக்‌ஷேத்ரா தலைவி லீலா சாம்ஸனுடன் வெகு நேரம் உரையாட ஒரு சந்தர்ப்பம்
> கிடைத்தது. கலாக்‌ஷேத்ரா என்றாலே மேல் மட்ட மக்கள் தங்களுக்குள் பரத
> நாட்டியத்தை ரசிக்கும் ஒரு இடம் என்ற எண்ணம் பரவலாக எல்லாருக்கும்
> உள்ளது.

இந்தப் பரவலான எண்ணம், தவறாக இருப்பது உண்மையானால், கலா க்ஷேத்ராவை
நிர்வகிப்பவர்கள் அதை மாற்ற என்ன செய்திருக்கிறார்கள்?

Chandra sekaran

unread,
Apr 22, 2009, 3:48:31 AM4/22/09
to minT...@googlegroups.com
மாற்றம் வேண்டித்தானே, என்னைப் போன்ற வெளி விமர்சகர்களின் பேச்சை செவிமடுத்துக் கேடிகிறார்கள்?
மின் தமிழ் அன்பர்கள் அதுபோன்ற கலைஞர்கள், கலைகள், அவர்களது ஊர்கள் பற்றி தெரிவித்தால், கலாக்‌ஷேத்ரம், அக்கலைஞர்களைத் தேடி அங்கு போகும். நிச்சயம்!
சந்திரா

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 22, 2009, 8:39:30 AM4/22/09
to மின்தமிழ்
நம்பிக்கைகள் வாழ்க. நலமே தருக!

On Apr 22, 12:48 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com>
wrote:

Kannan Natarajan

unread,
May 21, 2009, 6:58:06 PM5/21/09
to minT...@googlegroups.com
ஆட்டம் காணுமா ஒயிலாட்டம்?

மதுரை மாவட்டத்தில் வெற்றிலைக்குப் புகழ்பெற்ற ஊர் சோழவந்தான். இவ்வூரில் இருந்து நகரிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது "வெற்றிலை மண்டபம்". கொடிக்கால் விவசாயிகள் வெற்றிலையைப் பறித்துக் கொண்டு வந்து, அவற்றைச் சுத்தப்படுத்தி, 100, 200 என்ற எண்ணிக்கையில் கட்டி விற்பனைக்கு அனுப்பும் இடம்தான் இந்த வெற்றிலை மண்டபம்.

இந்த மண்டபத்தின் ஒரு மூலையில், ஒரு சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். வெள்ளை பனியன், வெள்ளை பேண்ட், பேண்டுக்கு மேலே சிவப்பு நிற கால்சட்டை, காலில் சலங்கை, தலையில் தலைப்பட்டை, கையில் நீளமான துணி என ஒருவித கலக்கல் அலங்காரத்துடன் 15 பேர் வரிசையாக நிற்கின்றனர். அனைவரும் 30 வயது முதல் 40 வயதுக்குள்பட்டவர்கள்.

சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர், விநாயகர் துதியை குரலெடுத்துப் பாட, அருகில் பக்கவாத்தியக்காரர்கள் வாசிக்க, இவர்களது இசைக்கேற்ப 15 பேரும் "ஐல்சா" போட்டவாறு கையில் உள்ள துணியை விசிறியும், காலைத் தூக்கியும் ஒரேமாதிரி, சிறிதுகூட அச்சுப் பிசகாமல் ஆடுகின்றனர். அக்காட்சியைப் பார்ப்பதற்கே அற்புதமாக இருந்தது.

http://www.dinamani.com/Images/article/2009/5/15/17konda7.jpg


இவர்கள் ஒயிலாட்டக் கலைஞர்கள். ஒரு கிராமத்தில் விரைவில் நடக்கவுள்ள ஒரு திருவிழாவில் ஒயிலாட்ட நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஒத்திகை ஒருமணி நேரம் தொடர்ந்தது. அடுத்து பிரேக்.

தமிழ்நாட்டில் பாரம்பரியக் கலைகளில் ஒன்று ஒயிலாட்டம்.

"ஒயில்" என்றால் அழகு என்று அர்த்தம். அதாவது "அழகின் நடனம்" எனக் கூறுகின்றனர். பாரம்பரியமிக்க இந்த நடனத்தை ஆண்கள் மட்டுமே ஆடி வந்தனர். அண்மைக் காலமாக பெண்களும் இந்த ஆட்டத்தை ஆடி வருகின்றனர்.

குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த ஆட்டம் பிரசித்தம். மேலும், கொங்கு மண்டலத்திலும் இந்த ஆட்டத்தை ஆடி வருகின்றனர். ஒயிலாட்ட அசைவு முறைகள் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு வகையான பாடல்களும் உள்ளன. மேலும் விவரமறிய, அந்த ஒயிலாட்டக் குழுவின் தலைவரான கே. வாசகம் பிள்ளையின் அருகே சென்று அமர்ந்தோம். நமது நோக்கத்தைத் தெரிவித்தோம். ஒயிலாட்டக் கலை குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை இதோ...

"மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள தொட்டணம்பட்டியில் 17 வயதில் ஒயிலாட்டம் ஆடத் தொடங்கினேன். இப்போது எனக்கு வயது 67. பாரம்பரியமிக்க இக்கலையை எனக்குக் கற்றுத் தந்தவர் குருநாத பிள்ளை. அச்சமயத்தில் எங்களது கிராமத்தில் ஏராளமானோர் ஒயிலாட்டத்தைக் கற்று வந்தனர். அதனால், எனக்கு அதில் ஈர்ப்பு ஏற்பட்டது. முறையாகக் கற்றேன்.

தற்போது சோழவந்தானில் "கரக ஒயிலாட்டக் கிராமியக் கலைக்குழு" என்ற குழுவின் மூலம் ஒயிலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதில் 20 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கரகத்துடன், ஒயிலாட்டம் ஆடுவது எங்களது குழுவின் சிறப்பு. பொதுவாக, எல்லோரும் ஒயிலாட்டம் மட்டுமே ஆடுவர். எங்களது குழுவினர் கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஒயிலாட்டம் ஆடுவார்கள்.

ஆரம்பத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். 1997ல் எங்களது குழுவை முறைப்படி பதிவு செய்தோம். தற்போது தமிழகம் முழுவதும் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

இந்த ஆட்டத்தை அனைவரும் எளிதில் ஆடிவிட முடியாது. இதில் தனி ஈடுபாடு வேண்டும்.

  • தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம்
  • தென்னகப் பண்பாட்டு மையம்
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
ஆகியவை நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கரக ஒயிலாட்டம் ஆடி வருகிறோம்.

கரகாட்டம் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகளைப் போல ஒயிலாட்டத்தையும் 3 மணி நேரம் வரை ஆடலாம். இதற்கென,

  • விநாயகர் குறித்த பாடல்கள்
  • முருகன்,
  • இராமரின் சிறப்பு ஆகியவற்றை விளக்கும் பாடல்கள் உள்ளன.
ஒவ்வொரு பாட்டையும் சுமார் 5 நிமிடம் பாடலாம். பக்கவாத்தியக்காரர்களின் இசைக்கேற்பவும் ஆடலாம்.

ஒரு நிகழ்ச்சி நடத்த 12 கலைஞர்கள் அவசியம் தேவை. எங்களது குழுவின் மூலம் "கோலடி ஆட்ட" நிகழ்ச்சியும் நடத்துகிறோம்.

கிராமங்களில் இக்கலையின் மீதான மோகம் குறைந்து வரும் அதே சமயத்தில், நகரங்களில்,

  • கோயில் திருவிழாக்கள்
  • கும்பாபிஷேகம்
  • அரசு விழாக்கள்
    என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புத் தருகின்றனர்.
    • பழனி
    • திருவண்ணாமலை
    பகுதியில் வசிக்கும் காசுக்காரச் செட்டியார்கள் திருமணத்துக்கு முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பின்போது, ஒயிலாட்ட நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

    மேலும், இதில் பெண்கள் இடம்பெறாததால், பிரச்னை ஏற்படாது எனக் கூறி எங்களை அழைக்கின்றனர்.

    ஒரு நாளைக்கு நிகழ்ச்சி நடத்தினால், ஒரு கலைஞருக்கு சுமார் 300 ரூபாய் கிடைக்கும். மேலும், ஒயிலாட்ட நிகழ்ச்சி இல்லாத நாள்களில் கலைஞர்கள் அனைவரும் இப்பகுதியில் உள்ள கொடிக்கால்களுக்கு கூலி வேலைக்குச் சென்றுவிடுவர்.

    மதுரை மாவட்டத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஒயிலாட்டக் கலைஞர்கள் உள்ளனர். அரசு கலை, பண்பாட்டு மையம் மூலம் இக்கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் தர வேண்டும்.

    மேலும், இக்கலையைக் கற்பதற்கு அதிகமானோர் முன்வருவதில்லை. அதனால், இக்கலை விரைவில் அழிந்துவிடுவோமோ என்ற பயம் இக்கலைஞர்களுக்கு உள்ளது. அதனால், பள்ளிகளில் இக்கலையைக் கற்பிக்க அரசு உரிய ஏற்பாடுகள் செய்து, ஒயிலாட்டக் கலைக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும்.

    மேலும், நலிந்த கலைஞர்களுக்கு வீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும்.   இக்கலைஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் "கலைமாமணி" விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும், என்று கோரிக்கைகளை முன்வைத்த வாசகம் பிள்ளை விட்ட பணியைத் (ஒத்திகையை) தொடர நம்மிடம் இருந்து விடை பெற்றார்.

    பா.இராஜா

    நன்றி:- ஞாயிறு கொண்டாட்டம் (தினமணி)

    நா.கண்ணன்

    unread,
    May 21, 2009, 10:22:25 PM5/21/09
    to மின்தமிழ்
    On May 22, 7:58 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
    >
    > குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த ஆட்டம் பிரசித்தம். மேலும்,
    > கொங்கு மண்டலத்திலும் இந்த ஆட்டத்தை ஆடி வருகின்றனர். ஒயிலாட்ட அசைவு முறைகள்
    > ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    நான் தென்மாவட்டக்காரன். பள்ளிப்பருவங்களில் ஒயிலாட்டம் ஆடியிருக்கிறேன்.
    அப்போது நாங்கள் மானாமதுரையில் வாழ்ந்து வந்தோம். கிருஷ்ண ஜெயந்தி அன்று
    பள்ளிவிழாவிற்கென ஏதோவொரு கிராமத்திற்கு ஒயிலாடப் போய்விட்டேன். ஆடிக்
    களைத்து, மேடையிலிருந்து இறங்கும் போது, 'கண்ணன் பிறந்த நாள்' நினைவாக
    அம்மா எனக்கு அனுப்பிய சீடை வகையறா காத்திருந்தது!
    பசுமையான நினைவுகள்.
    அன்னையர் வாழ்க!
    அவர்தம் அன்பு என்றும் வாழ்க!

    க.>

    Reply all
    Reply to author
    Forward
    0 new messages