வரலாறு மிகவும் முக்கியம்

815 views
Skip to first unread message

vj kumar

unread,
Feb 2, 2010, 4:03:13 AM2/2/10
to mintamil
வணக்கம் ,

யாரையும் தடுக்காமல் புதிய பதிவாய்  இதை இடுகிறேன். இதனால் ஏன் புண்ணியத்தில் தவறான கருத்துக்களுக்கு தேவையற்ற விளம்பரம் கிடைப்பதும் தடைப்படும்.

வரலாறு மிகவும் முக்கியம். ஒரு பிரிவின்  அடையாளத்தை விட ஒரு நாட்டின் , ஒரு சமூகத்தின் அல்லது  ஓர் சமுதாயத்தின் அடிப்படை உணமைகளை வெளிப்படுத்தும் வரலாறு மிகவும் முக்கியம். இன்று நான் யார் என்று தெரியாமல் ஏது உண்மை ஏது பொய் என்று திண்டாடும்  நமக்கு  ஆயிரம் இல்லை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு   முன்னரே நீ ஒரு உயர்ந்த நிலையில் இருந்தாய்  என்பதை உணர்த்தும் உன்னதம் வரலாறு. 

இதற்கு  முதலில்  ஒரு  தெளிவு  வேண்டும். இந்த தெளிவை நாம் பெற நமது நோக்கம் எந்த சார்பையும் அற்று , உண்மையை உண்மையாக பார்க்கும் மனப்பக்குவம் பெற வேண்டும். எப்படி - நான் சொன்னால் சின்ன பையன் - பிதற்றுகிறான் என்பார்கள்.
 
கீழே கொடுத்துள்ளது, சமீபத்தில் வெளியிடப்பட்ட கோயில் ஒழுகு புத்தகத்தின் அணிந்துரையின் ஒரு பகுதி:


http://www.srivaishnavasri.com/files/koilozhugu_munnurai.pdf
page 18.
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
அணிந்துரை
(முனைவர் திரு. ஓ.ங.ராமன்)

ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர் அவர்களால்
தொகுக்கப்பெற்ற கோயிலொழுகின் எளியநடை தமிழ்
விவரணத்தைப் பலமுறை படித்து மகிழ்வுற்றேன். தரம்மிக்க

ஆய்வு நூல்கள் அருகிவரும் காலகட்டத்தில் மணம்
வீசக்கூடிய மலராக இந்தநூல் மலர்ந்துள்ளது.
கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ர
தாயத்தைப் பற்றிமுழுமையான செய்திகள் சென்றடைவ

தில்லை. பெரும்பாலான ஸம்ப்ரதாய நூல்கள் மணிப்ரவாள
நடையில் அமைந்துள்ளதால் அவர்களுக்கு இந்த நூல்களில்
அமைந்துள்ள சொற்றொடர்களுக்கான பொருள் எளிதில்
விளங்குவதில்லை. வரலாற்று ஆசி›யர்களும் கல்வெட்டு
ஆராய்சியாளர்களும் ஸம்ப்ரதாய நூல்களில் வரலாற்றுக்
குறிப்புகள் அமைந்திருக்க வாய்ப்பில்லை என்ற தவறான
தொரு கருத்தை இன்றுவரை கொண்டுள்ளார்கள்.முனைவர் திரு.ஹரிராவ், மஹாவித்வான்மு.ராகவ

அய்யங்கார் போன்ற சில ஆய்வாளர்கள் இத்தகைய கருத்துக்கு
விதிவிலக்காக அமைந்துள்ளனர். அத்தகைய விதிவிலக்குப்
பட்டியலில் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யரும்
தற்போது இடம்பெற்றுள்ளார். பொதுவாக ஸ்ரீவைஷ்ணவப்
பெருமக்கள் கல்வெட்டு ஆராய்ச்சியிலும்,சரித்திர  சான்று
களை இணைத்து உண்மைச் செய்திகளை கண்டறிவதிலும்
பெருவிருப்புக் கொள்வதில்லை. குருபரம்பரைச் செய்தி
களில் ஏடுபடுத்தியோருடைய குறைபாடுகள், மற்றும்
வரலாற்றுக்கு முரண்பட்ட செய்திகளை நீக்கி செய்திகளை
உண்மை வடிவில் ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்
பெரும்பாலான ஸ்ரீவைஷ்ணவப் பெருமக்களிடம் சென்ற
நூற்றாண்டின் இறுதிவரை ஏற்படவில்லை. இத்தகைய
காலகட்டத்தில் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்
துணிவுடன் பல கருத்துக்களை முன்  வைத்துள்ளது பாராட்
டத்தக்கது.


நன்றி
விஜய்
www.poetryinstone.in

Tirumurti Vasudevan

unread,
Feb 2, 2010, 4:53:26 AM2/2/10
to mint...@googlegroups.com
இது நல்லது. இந்த இழையில் உணர்ச்சி வசப்படாமல் மனதை தள்ளி வைத்துவிட்டு புத்தி பூர்வமாக ஆராய்ச்சி நோக்கோடு மட்டும் பங்கு கொள்வோர் செய்யட்டும். ஆதாரத்துடன் இழை பெருகட்டும். ஏனையோர் உணர்ச்சி வசப்படுவோராயின் தள்ளியே நிற்றல் நன்று.

திவாஜி

2010/2/2 vj kumar <vj.ep...@gmail.com>

யாரையும் தடுக்காமல் புதிய பதிவாய்  இதை இடுகிறேன். இதனால் ஏன் புண்ணியத்தில் தவறான கருத்துக்களுக்கு தேவையற்ற விளம்பரம் கிடைப்பதும் தடைப்படும்



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Geetha Sambasivam

unread,
Feb 2, 2010, 8:57:08 AM2/2/10
to mint...@googlegroups.com
நல்லதொரு ஆரம்பம் விஜய், தொடருங்கள் காத்திருக்கேன். இரண்டையும் தெரிஞ்சுக்கலாமே. வாழ்த்துகள்.

2010/2/2 vj kumar <vj.ep...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Feb 2, 2010, 9:08:22 AM2/2/10
to mint...@googlegroups.com
வாழ்த்துக்கள் விஜய்

அறிவு பூர்வமாக,, ஆய்வு பூர்வமாக கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்களுடன்
ஆதார பூர்வமாக இந்த இழை வளரட்டும்
உண்மைகளைத் தெரிந்துகொள்ள அனைவருமே தயாராய் இருப்பர்
அனைவரும் கலந்துகொண்டு ஆரோக்கியமாக விவாதிப்போம்

அன்புடன்
தமிழ்த்தேனீ


2-2-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:


--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

srirangammohanarangan v

unread,
Feb 2, 2010, 9:09:02 AM2/2/10
to mint...@googlegroups.com
ஸ்வாமி!   நீர்   யாரைச்  சொல்றீர்னே    தெரியலையே !!  :--)))))
உம்ம  ஸ்டைலே    தனி.  ஹஹஹஹஹ்

 

vj kumar

unread,
Feb 2, 2010, 11:20:57 PM2/2/10
to mint...@googlegroups.com
வரலாறு மிகவும் முக்கியம் - பாகம் 2

கல்லறை  ஆராய்ச்சியோ   கல்வெட்டாராய்ச்சியோ எவ்வளவு முக்கியம் என்பதை நான் சொன்னால் எடு படாது. அதனால்  மீண்டும் நேற்று கண்ட வாக்கியத்தை ஒருமுறை படித்துவிட்டு மேலே செல்வோம். ( நல்ல ஆக்கபூர்வமான கருத்தை தைரியாமாக ஒன்றுக்கு  இருமுறை சொன்னால் தப்பில்லையே )

http://www.srivaishnavasri.com/files/koilozhugu_munnurai.pdf

<<<<<<<
பொதுவாக ஸ்ரீவைஷ்ணவப்
பெருமக்கள் கல்வெட்டு ஆராய்ச்சியிலும்,சரித்திர  சான்று
களை இணைத்து உண்மைச் செய்திகளை கண்டறிவதிலும்
பெருவிருப்புக் கொள்வதில்லை. குருபரம்பரைச் செய்தி
களில் ஏடுபடுத்தியோருடைய குறைபாடுகள், மற்றும்
வரலாற்றுக்கு முரண்பட்ட செய்திகளை நீக்கி செய்திகளை
உண்மை வடிவில் ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்
பெரும்பாலான ஸ்ரீவைஷ்ணவப் பெருமக்களிடம் சென்ற
நூற்றாண்டின் இறுதிவரை ஏற்படவில்லை. இத்தகைய
காலகட்டத்தில் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்
துணிவுடன் பல கருத்துக்களை முன்  வைத்துள்ளது பாராட்
டத்தக்கது.
>>>>>
மேலும் படிப்போமா ? கல்லறை தந்த ஆவணம் - ஏது ?

<<<<<<
தற்போது கோயில் நிர்வாஹத்தினர் வசம் கோயிலொழுகின்
ஓலைச்சுவடி இருப்பதாகத் தெரியவில்லை. திரு.வாலஸ் துரை
காலத்தில் வேலப்ப முதலி என்பவர் எல்லா ஒழுகுகளையும் திரட்டி
அவற்றின் பிரதிகளைத் தெற்குக் கல்லறையில் வைத்திருக்கவில்லை
எனில் இன்று நாம் ஸ்ரீரங்கம் கோயிலின் வரலாற்றை உள்ளபடி
அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. வேலப்ப முதலி காலத்தில்
ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்தின் ஒழுகு, கோயிலண்ணன்
திருமாளிகை ஒழுகு, உத்தமநம்பி வம்ச ப்ரபாவம் போன்றவைகள்
படியெடுக்கப்பட்டுப் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன. ஆனால்,
இன்றோ ஸ்ரீரங்கம் கோயிலைச் சார்ந்த பல ஓலைச்சுவடிகள்
தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளன. அவற்றில்
என்ன செய்திகள் பொதிந்துள்ளன? அவற்றையெல்லாம் எவ்வாறு
ஒழுங்குபடுத்துவது! என்பது பற்றி சிந்திக்க நமக்கு நேரமில்லை.
ஒருவேளை மறுபடியும் ஒரு வாலஸ் துரையும், வேலப்ப
முதலியும் நம்மிடையே தோன்றினால் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில்
உள்ள ஓலைச்சுவடிகளில் எந்தவிதமான செய்திகள் அடங்கியுள்ளன
என்று அறிந்துகொள்ள முடியும் போலும். அரிய தொடர்பு சாதனங்
கள் பல அமைந்துள்ள இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிஞர்கள்
ஒன்றுகூடி இந்த ஓலைச்சுவடிகளைப் பரிசோதித்தால் இன்னும் பல
செய்திகள் நமக்குக் கிடைக்கக்கூடும். ஒவ்வொரு ஆண்டும் நடை
பெற்ற முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து அருள்மிகு அரங்கநாத
ஸ்வாமி தேவஸ்தானத்தின் சார்பில் அந்த ஆண்டிற்கான
கோயிலொழுகு பதிப்பினை வெளியிட்டால், பல ஆண்டுகளுக்குப்
பிறகு அத்தகைய தொகுப்புகள் வரலாற்று ஆசிரியர்களுக்கு உதவிடக்
கூடும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>
சரி இப்போது கல்வெட்டு பற்றி ஆசிரியரின் முன்னுரையில் உள்ள குறிப்புகளை பார்ப்போம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வறியவன் ஒருவன் பொற்காசுகள் நிறைந்த புதைய
லைக் கண்ணுற்ற மகிழ்ச்சியை அடியேன் அப்போது அடைந்
தேன். மேலும் ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றிய பல நூல்களைத்
திரட்டிட மூற்பட்டபோது அடியேனுக்கு கிடைத்த பெரிய
தொரு மற்றுமோர் நிதிக்குவியல் இந்தியத் தொல்பொருள்
ஆய்வுத் துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டுத்
தொகுப்பு  பகுதி 24. இந்தத் தொகுப்பில் திருவரங்கம்
பெரிய கோயிலில் அமைந்துள்ள 644 கல்வெட்டுகள் இடம்
பெற்றுள்ளன. அதில் அமைந்துள்ள கல்வெட்டு வாசகங்
களைப் பலமுறை  படிக்க முற்பட்ட போது, பற்பல புதிய
செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.
>>>>
இன்னும் இருக்கு
<<<<<

திருவரங்கம் பெரிய கோயில் திருச்சுற்றுக்களில் வலம்
வரும்போது அதன் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள
ஒவ்வொரு கல்வெட்டையும் உற்றுநோக்கி, அவற்றின் மீது
அடியேனுடைய கரங்களை வைத்து எழுத்தெழுத்தாகப்
படிக்க முற்பட்டபோது அந்தக் கல்வெட்டுகள் பேசுவதை
உணர்ந்தேன். வரலாற்று முக்கியத்துவம்  வாய்ந்ததாகக்
கோயிலொழுகில் குறிப்பிடப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளை
உட்கண்களால் காண முடிந்தன . அந்த நிகழ்ச்சிகளின்
பின்புலமான ஆரவாரத்தையும் கேட்க முடிந்தது . கோயி
லொழுகில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு மண்டபங்
களும், கோபுரங்களும், சிற்பங்களும் பல வரலாற்று
உண்மைகளைப் பறைசாற்றும் கருவுகலமாகத் தான் காட்சி
யளித்தன
>>>>>>>>>>>>>
தனக்கு வேண்டும் என்பதை மட்டும் படித்து விட்டு, அதில் தனக்கு பிடித்தவை மட்டும் எடுத்துக் கொள்வது குறிகிய பார்வை. வரலாறு அப்படி அல்ல - நடந்தவற்றை நடந்த முறையில் காட்டும் கண்ணாடி. இதற்கு சான்றுகள் பின்னர் பார்ப்போம். இப்போதைக்கு ஆசிரியர் இதையும் சொல்கிறார்.

>>>>>>>>
இந்த நூலைப் படிக்கும் போது வரலாறு, கல்வெட்டு,
ஸம்ப்ரதாயம், மரபுகள், ஆழ்வார் ஆசார்யர்களுடைய
வாழ்க்கை வரலாறு ஆகியன எவ்வாறு ஒன்றோடொன்று
பிணைக்கப்பட்டு அமைந்துள்ளன என்பதைப் புதிய
கோணத்தில் நீங்கள் காண இயலும்.

>>>>>>>>>>>>>>>>

சரி , கோயில் ஒழுகு அப்படி நூற்றுக்கு நூறு தவறே இல்லமால் நடந்தவற்றை குறையிள்ளமால் சொல்லும் சாசனமா ?

>>>>

கோயிலொழுகில் நிகழ்ச்சிகள் விவரிக்கப்படும் போது
கொடுக்கப்பட்டுள்ள சக ஆண்டு குறிப்புகள் வரலாற்றுச்
செய்திகளுக்கு முரண்பட்ட  ஆண்டுகள் என்பது பல
இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

>>>>>>>>>>

தொடரும்

விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man

Geetha Sambasivam

unread,
Feb 3, 2010, 2:57:16 AM2/3/10
to mint...@googlegroups.com
தொடருங்கள்.

2010/2/3 vj kumar <vj.ep...@gmail.com>

vj kumar

unread,
Feb 3, 2010, 5:00:07 AM2/3/10
to mint...@googlegroups.com
 
வரலாறு மிகவும் முக்கியம் - பாகம் 3

   
கல்வெட்டு என்ற உடனே ஏதோ கண்கட்டு வித்தை என்று சி( ப) லர் எண்ணுகிறார்கள். அது ஒன்றும் அப்படி பெரிய விஷயமே இல்லை. அதுவும் சோழர் கால கல்வெட்டுகள் எளிய தமிழ் நடையிலே தான் உள்ளன. முதலில் பார்ப்பதற்கு எழுத்துகள் கொஞ்சம் கஷ்டமாக தெரியும். ஒரு இரு முறை படித்தவுடன் - அட - இது இவ்வளவு தானா என்று சொல்லத் தோன்றும்.
   
உதாரணத்திற்க்கு இந்த கல்வெட்டை வாசியுங்கள்.. பார்ப்போம்.
>>>>>>>>
" ஸ்வஸ்திஸ்ரீ திருபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் திருத்தங்கையர் ராஜராஜன் குந்தவை ஆழ்வார், ஆளுடையாருக்கு தண்ணீர் அமுது செய்தருள இட்டமிண்டம் ஒன்றினால் க்டிநர்கள் நிறை மதுராந்தகன் மடையோடு ஒக்கும் பொன் ஐம்பது பைம்படிங் கழஞ்சு,நாநிலத்தை முழுதாண்ட ஜயதரர்க்கு நாற்பத்து நாலாண்டில் மிமின நிகழ்ஹ் ஞாயிற்று வெள்ளி பெற்ற உரோசணி நாள் இடபம் போடல் தேனிலவு போலீர் தில்லை நாயகர் தன் கோயில் எலாம் செம்பொன் மேய்ந்தல் எனவருன் தொழுதேத்தும் ராஜராஜன் குந்தவை புவியாண்டாள் தில்லை நாயக தேவருக்கு திருக்கண்ணாடியும் இட்டார்

ஸ்ரீ ராஜேந்திர சோழத் தேவருக்கு  காம்போச ராஜன் காட்சியாகக் காட்டின கல்லு இது உடையார் ராஜேந்திர சோழதேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பலமுடையார் கோயிலில் முன் வைத்தது இந்தக் கல்லு திருவெதிர் அம்பலத்து திருக்கல் சரத்தில் திருமுன் படிக்கு மேலைப் படியில் வைத்தது
"
>>>>>>>>>
இதெல்லாம் எதற்கு என்று எங்கோ ஒரு குரல் கேட்கிறதே . அதற்குதானே  வருகிறேன் சுவாமி.

அங்கே நாற்பத்து நாலாண்டில் மிமின நிகழ் ஞாயிற்று வெள்ளி பெற்ற உரோசணி நாள் இடபம் - என்று வருகிறதே அது  மன்னனின் ஆட்சியாண்டை குறிப்பது. நாள் , தேதி என்று அனைத்துக் குறிப்புகளுடன்  வருபவை  சோழ கல்வெட்டுகள்.

குலோத்துங்கனின் நாற்பத்தி நாலாம் ஆட்சி ஆண்டு - முதலாம் குலோத்துங்கன்  அரியணை ஏறியது 1070 CE. அப்போது இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு 1114 CE என்று நமக்கு தெளிவாய் தெரிகிறது.

இது ஏன் இரண்டாம் குலோத்துங்கனாக இருக்க முடியாது என்ற கேள்வி எழலாம். இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சி ஆண்டுகள் 1133- 1150. பதினேழு ஆண்டுகளே ஆட்சி செய்த இவன் மேலே குறிப்பிடும்  அரசனாக இருக்க முடியாது.

இப்போது வருகிறது முதல் கேள்வி.

ஸ்ரீ ராமானுஜர் அவரது காலம் - அதில் நிறைய வாதங்கள் இருந்தும் பெரும்பாலான அறிஞர்கள் ஒத்துக்கொள்ளும் கால அட்ட  வரை.
1017 - 1137 ( நூற்றி  இருபது  ஆண்டுகள் )

இதை சரியென எடுத்துக் கொண்டால் நாம் தொடரலாம்
. ...

தொடரும்.
Message has been deleted
Message has been deleted

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 3, 2010, 11:47:04 PM2/3/10
to மின்தமிழ்
வணக்கம் விஜய்!
உங்கள் சொல் வண்ணம் "அங்கு" கண்டேன்!
செயல் வண்ணம் "இங்கு" கண்டேன்!
நல்ல அழகான துவக்கம்! வாழ்த்துக்கள்!

Seeking of Truth is essential in any Seeking!
We are not "peeking" at the truth, but "seeking" at the truth...
சத்யம் பரம் தீமஹி என்று சொல்வது வழக்கம்!
"தரப்பு" உரையாடல்களாக இல்லாது, "தகுதி" உரையாடல்களாக அமையட்டும்!

இந்த இழையில் உங்களுடன், அவ்வப்போது நானும் கலந்து கொள்கிறேன்!
இந்த ஆய்வுத் தொடர், அதன் "சத்யமான" வெற்றியைப் பெற, என் இனிய
வாழ்த்துக்கள்!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 3, 2010, 11:49:19 PM2/3/10
to மின்தமிழ்
இந்தக் கட்டுரையை அரங்கனும் வாசிப்பான் அல்லவா? :)
அவன் தானே இத்தனை நிகழ்வுகளுக்கும் நடுவில் நின்ற நடு-நாயகன்!
அவன் அப்பப்போ, தன் வாய் திறந்து, இதில் கலந்து கொண்டு,
உண்மையொளி பாய்ச்ச உதவ வேண்டும்-ன்னு,
இப்பவே அவனை ரெண்டு தட்டு தட்டி வைத்து விட்டேன்! :))

கோயில் ஒழுகு என்பது காலங்காலமாக, பல்வேறு படிமானங்களில் வந்துள்ளது!
(கல்வெட்டு, ஓலைகள், நூல்கள், செப்பேடுகள்.....
அது மட்டுமல்ல, இன்றும்...யாத்திரையின் போது பாடப்படும் பல நாட்டுப்புற
பாடல்கள் கூடச்
சுவையான செய்திகளைத் தாங்கியுள்ளன! Not only sweet but consistent
information across many songs...)

கோயிலொழுகு - சுவையான டைரிக் குறிப்புகள்!
அதில் இருந்து நன்கு அள்ளித் தாருங்கள்! காத்து இருக்கிறோம்!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 3, 11:47 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> வணக்கம் விஜய்!
> உங்கள் சொல் வண்ணம் "அங்கு" கண்டேன்!
> செயல் வண்ணம் "இங்கு" கண்டேன்!
> நல்ல அழகான துவக்கம்!  வாழ்த்துக்கள்!
>
> Seeking of Truth is essential in any Seeking!
> We are not "peeking" at the truth, but "seeking" at the truth...
> சத்யம் பரம் தீமஹி என்று சொல்வது வழக்கம்!
> "தரப்பு" உரையாடல்களாக இல்லாது,  "தகுதி" உரையாடல்களாக அமையட்டும்!
>
> இந்த இழையில் உங்களுடன், அவ்வப்போது நானும் கலந்து கொள்கிறேன்!
> இந்த ஆய்வுத் தொடர்,  அதன் "சத்யமான"  வெற்றியைப் பெற, என்  இனிய
> வாழ்த்துக்கள்!
>
> anbudan

> KRShttp://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 3, 2010, 11:50:22 PM2/3/10
to மின்தமிழ்
/இப்போது வருகிறது முதல் கேள்வி.

ஸ்ரீ ராமானுஜர் அவரது காலம் - அதில் நிறைய வாதங்கள் இருந்தும்
பெரும்பாலான
அறிஞர்கள் ஒத்துக்கொள்ளும் கால அட்ட வரை. 1017 - 1137 ( நூற்றி இருபது
ஆண்டுகள் )//

இல்லை!
1017-1137 என்பது முழுமையாகப் பொருத்திப் பார்க்காமல் எழுந்த ஒரு காலக்
குறிப்பு தான்!
இதை ஒரு சில அறிஞர்களே ஆய்ந்துள்ளனர்!
மற்ற பெரும்பாலான அறிஞர்கள் அதில் ஆய்வு என்று தனியாகச் செய்யவில்லை!
இராமானுசரின் காலம் என்ன என்றே தெரியாதிருந்த காலத்தில்....
இந்த 1017-1137 என்பது தோன்றி, சற்றே பரவலாகி விட்டதால், அவர்களின்
Focus இதர ஆய்வுத் தளங்களுக்குச் சென்று விட்டது!

1077 - 1197 என்பதும் இன்னொரு முக்கியமான காலக் குறிப்பு!
அவர் பிறந்த பிங்கல ஆண்டு (தமிழ் ஆண்டு என்று சொல்ல மாட்டேன்; பிரபவாதி
60 வருட அட்டவணை என்று சொல்கிறேன்)!
அதை வைத்து ஆய்வு செய்யப்பட்ட காலக் குறிப்புகள் கொண்டது....
ஏன்னா பல குருபரம்பரை மற்றும் செப்பேடுகளில், இந்த 60 ஆண்டு காலக்
கணக்கில் குறித்துள்ளனர்!
அதோடு பொருத்திப் பார்த்துச் செய்த கால ஆராய்ச்சி இது!

//இதை சரியென எடுத்துக் கொண்டால் நாம் தொடரலாம்*. ...//

முடிந்த முடிபு என்பது இரண்டிலும் இல்லை!
அதனால், இதை சரி/தவறு என்ற காரணிக்குள் அடக்க வேண்டாம்!
நீங்கள் மேலும் தொடருங்கள்! மிக்க ஆவல் கிளப்பும் அழகிய தொடர்!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 3, 11:49 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> இந்தக் கட்டுரையை அரங்கனும் வாசிப்பான் அல்லவா? :)
> அவன் தானே இத்தனை நிகழ்வுகளுக்கும் நடுவில் நின்ற நடு-நாயகன்!
> அவன் அப்பப்போ, தன் வாய் திறந்து, இதில் கலந்து கொண்டு,
> உண்மையொளி பாய்ச்ச உதவ வேண்டும்-ன்னு,
> இப்பவே அவனை ரெண்டு தட்டு தட்டி வைத்து விட்டேன்! :))
>
> கோயில் ஒழுகு என்பது காலங்காலமாக, பல்வேறு படிமானங்களில் வந்துள்ளது!
> (கல்வெட்டு, ஓலைகள், நூல்கள், செப்பேடுகள்.....
> அது மட்டுமல்ல, இன்றும்...யாத்திரையின் போது பாடப்படும் பல நாட்டுப்புற
> பாடல்கள் கூடச்
> சுவையான செய்திகளைத் தாங்கியுள்ளன!  Not only sweet but consistent
> information across many songs...)
>
> கோயிலொழுகு - சுவையான டைரிக் குறிப்புகள்!
> அதில் இருந்து  நன்கு அள்ளித் தாருங்கள்!  காத்து இருக்கிறோம்!
>
> anbudan

> KRShttp://madhavipanthal.blogspot.com

Tirumurti Vasudevan

unread,
Feb 4, 2010, 1:15:33 AM2/4/10
to mint...@googlegroups.com
ஓ! தரவு தரவு, நல் வரவு வரவு!
:-)))))

2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

"தரப்பு" உரையாடல்களாக இல்லாது,  "தகுதி" உரையாடல்களாக அமையட்டும்!

இந்த இழையில் உங்களுடன், அவ்வப்போது நானும் கலந்து கொள்கிறேன்!
இந்த ஆய்வுத் தொடர்,  அதன் "சத்யமான"  வெற்றியைப் பெற, என்  இனிய
வாழ்த்துக்கள்!

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 1:33:05 AM2/4/10
to மின்தமிழ்
//அங்கே *நாற்பத்து நாலாண்டில் மிமின நிகழ் ஞாயிற்று வெள்ளி பெற்ற உரோசணி
நாள்
இடபம் -* என்று வருகிறதே//

ஞாயிற்று வெள்ளி பெற்ற உரோசணி நாள் இடபம் என்றால் என்ன விஜய்?
ஞாயிற்றுக் கிழமையா? வெள்ளிக் கிழமையா? - எது சரி??
மேலும்...ரோகிணி நட்சத்திரமா?

//குலோத்துங்கனின் நாற்பத்தி நாலாம் ஆட்சி ஆண்டு - முதலாம்


குலோத்துங்கன் அரியணை
ஏறியது 1070 CE. அப்போது இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு 1114 CE என்று

நமக்கு தெளிவாய் தெரிகிறது//

இல்லையே! தெளிவாய்த் தெரியவில்லையே!
இந்தக் கல்வெட்டு "நாற்பத்து நாலாண்டில் மிமின நிகழ் ஞாயிற்று வெள்ளி"-
ன்னு மட்டுமே சொல்லுது!
So this is a relative measurement and not an absolute measurement!
நாற்பத்து நாலாண்டு என்றால்.....துவக்கத் தேதி எது? 1070 CE என்பதற்கு
கல்வெட்டு ஆதாரம் இல்லையே! எதன் அடிப்படையில், அன்றிலிருந்து 44ஆம்
ஆண்டைக் கணக்கில் கொள்வது??

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 4, 1:15 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> ஓ! தரவு தரவு, நல் வரவு வரவு!
> :-)))))
>

> 2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>


>
> > "தரப்பு" உரையாடல்களாக இல்லாது,  "தகுதி" உரையாடல்களாக அமையட்டும்!
>
> > இந்த இழையில் உங்களுடன், அவ்வப்போது நானும் கலந்து கொள்கிறேன்!
> > இந்த ஆய்வுத் தொடர்,  அதன் "சத்யமான"  வெற்றியைப் பெற, என்  இனிய
> > வாழ்த்துக்கள்!
>
> --

> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/

V, Dhivakar

unread,
Feb 4, 2010, 3:46:43 AM2/4/10
to mint...@googlegroups.com
My Dear KRS,
 
It is very pleasure by your joining here in this post and hoping healthy informations flow hereafter.
 
Reagarding forty forth year means, this is to be added from the year their crowning period. Means 1070 Kuloththunga Crowned, so Vijay added forty four years. That is right.
 
Dhivakar

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

vj kumar

unread,
Feb 4, 2010, 4:08:26 AM2/4/10
to mint...@googlegroups.com

வரலாறு மிகவும் முக்கியம் - 4

இந்த பதிவில் பங்கு கொண்டோருக்கும், பார்த்து மகிழ்ந்தோருக்கும் , நடு நிலையாக வெளியில் / வேலியில் நின்று  ரசிப்போருக்கும்  நன்றி..

உடையவரின் தேதிகள் குறித்து நாம் தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

நண்பர் சொன்னார்  - இந்த அளவு அக்கால நிகழ்ச்சிகள் வைணவ நூல்களில் ஆவணமாகியுள்ளன.  நிவேதனம் செய்யப் பயனான அரிசி வகைகளையும் குறித்து வைத்துள்ளனர்.  திருமுடி அடைவு என்னும் நூற்பகுதி ஆசார்யர்கள் பிறந்த குடி, குலம், சீடர்கள் போன்ற தகவல்களைத் தருகின்றன.ஆலய வரலாற்றைப் பதிவு செய்யும் நடைமுறையும் இருந்து வந்துள்ளது.

அப்போது இந்த தேதிகளை குறிக்கும்போது மட்டும் ஏன் இந்த  சர்ச்சைகள்.

சரி, இந்த தேதியை நிர்ணயிக்க -( நான் இது தான்  சரி என்று சொல்லவில்லை) - ஒரு பழைய குறிப்பு ( நாங்களும் பழைய நூல்களை  படிப்போம்ல - குறிப்பும் கொடுப்போம் )


LIFE & TEACHINGS OF RAMANUJACHARYA
BEINGTHE INAUGURAL ADDRESS
DELIVERED ON THE 5TH MAY 1908
BY
M. B. SRINIVASAINGAR, M. A.,\
(Mysore Educational Service} S
Author of the " Aryan Prayer-Book" & f
Editor of the "NithiyANUsandAnum"Series),
on the occasion of the Celebration of the
Twenty-Fifth Anniversary of Sri Ramanujacharya's Birthday-Festivities
MADRAS,
THE BRAHMAVADIN PRESS.
1910.

7. As regards the date of the birth of Ramanujacharya,
there has been no difference of opinion, unlike that
of Sri Sankaracharya, which is wrapped up in obscurity
even to this day. This is easily accounted for, since from
the earliest days of his earthly career, Ramanuja's contemporaries
and admirers began to associate the periods of the
incidents of his life with specific noble thoughts of some
significance. Hence the traditional date of Salivahana
Saka 939 (corresponding to 939 -j- 78= 1017 A.D.) has been
taken advantage of by his Biographers, and has accordingly
been made synonymous with the noble thought
(Real knowledge attained), as if this year
was particularly designed by Providence for the spread of
REAI, KNOWLEDGE on earth through Ramanujacharya.
So also is the saka year "1059" corresponding to A. D,
1137, designated  year (Dhaimo Nastah=
Lord lost to the world), when the earthly
career of Sri Ramanujacharyar closed. Hence these two
important dates became fixed in the ancient chronicles of
the land, and could not be changed.

சரி, மிகவும் சமீபத்திய குறிப்பு. IIT ஆராய்ச்சி - இதன்  பிரதி என்னிடத்தில் இல்லை - அங்கே இருப்பவர்கள் முயன்று படித்து எதிர் கருத்துகள் இருந்தால் அந்த ஆசிரியரிடமே விடலாம்.

The date of birth of the 11th century Vaishnaivite saint Ramanujacharya was deciphered thanks to the two-year research of IIT-Madras professor G. Rangarajan.

Using the first biographical account of the philosopher from 13th Century Ramanujarya Divya Charitai and the ephemeris (astronomical tables) for 700 AD to 1700 AD of Swamikannu Pillai, Prof Rangarajan has arrived at April 13, 1017 as the date of birth.
>>>>>>>>>>>>>>>>
சரி, அடுத்த கேள்வி. ஸ்ரீ நாதமுனி அவர்களின் காலம் ஏது ?

நேரம் கிடைப்பவர்கள், பொறுமை இருப்பவர்கள், சரித்திரம் பொய்க்காது என்பதை உணரும் மனப்பக்குவம் கொண்டவர்கள் - மேலே படியுங்கள்.

>>>>>>>>>>>>>>
வரலாறு  ஏன் முக்கியம் தெரியுமா. நடந்ததை நடந்தவாறு இருதரப்பு குறிப்புகளையும் கொண்டு நிரூபணம் செய்யும் வண்ணம் ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும்.

கல்கி கதை எழுதினார் - கதை விடவில்லை - அப்படி என்றால் என்ன - வரலாற்று  நிகழ்வுகளை அவர் திரித்து எழுதவில்லை.  சில மாதங்களுக்கு முன்னர் இது ஒரு ஹாரத்தின் கதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இங்கே இட்டேன். பொன்னியின் ச்லேவன் குழுமத்தின் நிகழ்ச்சி மலரில் வெளி வந்த கட்டுரை.  யாரும் படிக்க வில்லை என்று நினைக்கிறேன் - சரி , அதில் ஒரு பாதியை இங்கே இடுகிறேன். படித்துவிட்டு கதை எப்படி வரலாற்றுடன் ஒற்று இருக்கிறது என்பதைபாருங்கள்.
>>>>>>>>>>>>>>
பொன்னியின் செல்வன்.

தியாக சிகரம் - அத்தியாயம் 58

கருத்திருமன் கதை


பாண்டிய அரசர் சில தினங்களுக்குப் பிறகு இலங்கை அரசரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். இரு மன்னர்களும் சேர்ந்து இலங்கையின் தென்கோடியில் மலைகள் சூழ்ந்திருந்த ரோஹண நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில தினங்கள் தங்கியிருந்தார்கள். கருத்திருமன் பேரில் பிரியம் கொண்ட பாண்டிய மன்னர் அவனையும் தம்முடன் அழைத்துப் போனார். ரோஹண நாட்டில் பல இடங்களையும் இலங்கை அரசர் பாண்டிய மன்னருக்குக் காட்டினார். கடைசியாக, யாரும் எளிதில் நெருங்க முடியாத ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மலைக் குகையில் அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்கள், விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் முதலியவை வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, இலங்கை அரசர் ஒரு தங்கப் பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினார். அதற்குள்ளே ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்த மணி மகுடம் ஒன்றும், இரத்தின ஹாரம் ஒன்றும் இருந்தன. அரசர்களுடைய சம்பாஷணையிலிருந்து அந்தக் கிரீடம் பாண்டிய வம்சத்து அரசர்களின் புராதனமான கிரீடம் என்றும், இந்த இரத்தின ஹாரம் பாண்டிய குல முதல்வனுக்குத் தேவேந்திரன் வழங்கியதாகச் சொல்லப்பட்ட ஹாரம் என்றும் தெரிந்து கொண்டான். அவற்றை எடுத்துக்கொண்டு போகும்படி இலங்கை அரசர் பாண்டியனை வற்புறுத்தினார். பாண்டிய மன்னர் மறுத்து விட்டார். சோழர்களை அடியோடு முறியடித்துவிட்டு மதுரையில் தாம் முடி சூடிக்கொள்ளும் நாள் வரும்போது, இலங்கையின் அரசரே அவற்றை எடுத்துக் கொண்டு மதுரைக்கு வந்து உலகம் அறியத் தம்மிடம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

>>>>>>>>>>>>
இது சேவூர் போருக்கு சற்று முன்னர் நடை பெற்ற காட்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும் . அதாவது 959 C.E

கதையில் அருமையான தருணம். கடை போருக்கு செல்லும் மன்னன், மிகவும் பெருமை வாய்ந்த மன்னன் , தான் போரில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தெரிந்தும், தான் வீர மரணம் அடையப்போகிறோம் என்று தெரிந்தும் , தந்து வமிசத்தில் யாரவது ஒருவர் மீண்டும் தழைத்து எழுவர் என்ற நம்பிக்கையுடன் விடை பெரும் காட்சி, ஆனால் இது வெறும் கதையா ?  பாண்டிய மன்னன் தனது குல தனங்களை  இலங்கை அரசனிடம் இவ்வாறு கொடுத்து விதான. இது நிஜமா , அதற்க்கு ஆதாரங்கள் உண்டா?

இதற்க்கு விடை காண நமக்கு வேறு ஆவணம் தேவை. சரித்திரத்தை குறை கூறும் பலர் சாட்சி கேட்பார்கள். அதுவும் நிலையான சாட்சி தேவை. இதற்க்கு மகாவம்சம் எனப்படும் இலங்கை பெளத்த பிக்ஷுகள் எழுதி வைத்த வரலாற்று குறிப்பு உதவுமா. சற்று பார்ப்போம்

இலங்கையில் ஐந்தாம் தப்புளா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தபொழுது (918-930) , அப்போதைய
பாண்டிய மன்னன் உதவி கேட்டுச் சென்றான் அவனிடம். உதவி மறுக்கப் படவே,
தன்னுடைய பாண்டிய ஹாரத்தை இலங்கையில் விட்டு சேர நாட்டுக்கு
சென்றுவிட்டான் பாண்டியன் (Mahav. 53, 5ff). பின் இலங்கை இரண்டாம் உதயா
ஆட்சியில் இருந்த பொழுது, சோழ மன்னன் அந்த பாண்டிய ஹாரத்தை கைப்பற்ற ஒரு
பெரும் படையை அனுப்பினான், போரில் பெரும் வெற்றி அடைந்தாலும் அவர்களால்
அந்த பாண்டிய ஹாரத்தை கைப்பற்ற முடியவில்லை. தோல்வி அடைந்த உதயா அந்த
பாண்டிய ஹாரத்தொடும் மற்ற பொக்கிஷங்களோடும் தலைமறைவானான். அந்த வெற்றி
கொண்ட சோழ மன்னன் பராந்தகன்-1 (907-947) என்பது அவனுடைய ஈழப் போர் பற்றிய
கல்வெட்டுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமின்றி தெரிய வருகிறது.

மீண்டும் சேனாவிற்கு பின் ஆட்சிக்கு வந்த நான்காம் உதயாவிடம் (955 AD - 964 AD)பாண்டிய ஹாரத்தை ஒப்படைக்கச் சொல்லி சோழ மன்னன் செய்தி அனுப்பினான்.உதயா மறுக்கவே சோழப் பெரும்படை உதயாவை பதம் பார்க்க தோற்ற அவன் ரோகானாவிற்கு தப்பி ஓடி மறைந்தான்.

எப்படி சாட்சியம். இப்போது என்ன அளவிற்கு அமரர் கல்கி பொன்னியின் செல்வன் கதையை வராற்றுடன் பிணைத்து சித்தரித்துள்ளார் பார்த்தீர்களா.


சரி, பிறகு என்ன ஆயிற்று இந்த ஹாரம் ? மகாவம்சத்திலேயே தேடுவோம்


A.D.981
ஆம் ஆண்டு ஐந்தாம் மகிந்தா ஆட்சியில் இருந்தான், கோழை மன்னனான இவன் தன
பாதுகாப்பிற்காக சேரர்களையும் மற்ற மன்னவர்களையும் நம்பியிருந்தான்.
அவர்களுடைய சேவையை பொன் பொருளால் ஈடுகட்டமுடியாமையினால், உள்நாட்டுக்
கலகம் வெடித்தது. இதனால் மகிந்தா ரோகானவிற்கு சென்று மறைந்தான்.

வடஇலைங்கையில் கலகக்காரர்கள் கோலோச்ச, குழப்ப நிலையை சரியாக பயன்படுத்திக்
கொண்ட சோழ மன்னன் இலங்கை தீவை கைப்பற்றியதோடு ரோதனாவிற்கு சென்று
மகிந்தாவையும் அவன் மனைவியையும், பொக்கிஷங்களையும் இந்தியாவிற்கு எடுத்து
வந்தான். இது நிகழ்ந்தது மகிந்தாவின் 36 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில்,

அதாவது A.D.1017.

அந்த வெற்றித் திருமகன் யார். அவன் அபகரித்த பொக்கிஷங்கள் எவை.

ஆம் , இவர் நமது பொன்னியின் செல்வறது வீரமே உருகொண்ட மகனான முதலாம் ராஜேந்திர சோழன்,

அவருடைய திருமலை மெய்கீர்த்தியில், பெருங்கடல் சூழ்ந்த இலங்கை மன்னன் கிரீடமும், பேரழகு பொருந்திய அரசியின் கிரீடமும், பாண்டிய மன்னனின் இந்திர ஹாரமும் (பாண்டியன் ஈழ மன்னனிடம் பாதுகாப்பிற்காக கொடுத்துவைத்தது), ஈழ மண்டலம்

முழுவதையும் கொண்ட என்று பொறிக்கப் பட்டுள்ளது. அதையும் பார்ப்போமே.

முதலாம் ராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தி

ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும்
.......................
பெருங்கடல் ஈழத்து அரசர் தம் முடியும்
அங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்

தென்திரை ஈழமண்டலமும் முழுவதும்
எறிபடை கேரளர் முறைமயிர்  சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையும் செங்கதிர் வேலைத்..



தென்னவர் - தனது மெய்கீர்த்தியில் பாண்டியனின் பெயரை கூறாமல் கூறும் அழகு ...புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தன பாட்டன்சுந்தர சோழன் தேடி , தன தந்தை இராஜ ராஜர் தேடி முடியாத காரியத்தை தான் செய்து முடித்தேன் என்ற பெருமிதம் தெரிகிறதா?

கதை எழுதும்போது கூட வரலாற்றுக்கு / அதில் வரும் பாத்திரங்களுக்கு சற்றும் இழுக்கு ஏற்படாமல் நமக்கு பாடம் கற்பிக்கிறார் அமரர் கல்கி. ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தின் பெயரை வைத்துக்கொண்டு அவர் புகழ் பாடிய சோழ பரம்பரையை நையாண்டி செய்கின்றனர். கேட்டால் நீ யார் பழுவேட்டையரையாரா  என்று நக்கல் வேறு


தொடரும்
விஜய்

( குறிப்பு - கல்கி இந்த இடத்தில சற்று தவறு செய்து விட்டார் - பொன்னியின் செல்வர் அருண்மொழி இருந்த காலத்தில் பழுவேட்டையார்கள் இன்னும் வரவில்லை  - அதையும் சொல்லி விடுகிறேன் )

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 4:17:16 AM2/4/10
to மின்தமிழ்
Dhivakar Sir,

Nandri...
Pardon me, if am going back to the basics...

//this is to be added from the year their crowning period. Means 1070
Kuloththunga Crowned//
How do we know Kulothunga crowned in 1070?
I am ok with adding 40 years, per the kalvettu.
But adding 40 to what year? Whatz the basis? Thatz my question.

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 4, 3:46 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> My Dear KRS,
>
> It is very pleasure by your joining here in this post and hoping healthy
> informations flow hereafter.
>
> Reagarding forty forth year means, this is to be added from the year their
> crowning period. Means 1070 Kuloththunga Crowned, so Vijay added forty four
> years. That is right.
>
> Dhivakar
>

> >http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot....now with english text too!

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 4:38:44 AM2/4/10
to மின்தமிழ்
Vijay and all our friends...
I repeat vijay's words here for the benefit of all...

வரலாறு ஏன் முக்கியம் தெரியுமா?


நடந்ததை நடந்தவாறு
"இருதரப்பு குறிப்புகளையும்"
கொண்டு நிரூபணம் செய்யும் வண்ணம்
ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும்.

-----------------------------------------------------------------

இப்போது கீழ்க்கண்ட வரிகளுக்கு வருவோம்!
//Ramanuja's contemporaries and admirers began to associate the


periods of the
incidents of his life with specific noble thoughts of some

significance//
//Hence the traditional date of Salivahana Saka 939 (corresponding to
939 -j- 78= 1017 A.D.)//

ஆக...இதை முதலில் குறித்தது Ramanuja's admirers...


with specific noble thoughts of some significance.

இராமானுசரின் "admirers", பல கதைகளையும் புனைவுகளையும் வரலாற்றில்
சேர்த்து விட்டார்கள்! - என்பது தானே குற்றச்சாட்டு? அதற்காகத் தானே,
உண்மை அறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம்? with scientific and rational
approach?

அப்படியிருக்க, அவர் "admirers" குறித்த வைத்த 1017 AD என்பதை மட்டும்,
எப்படி அப்படியே எடுத்துக் கொள்ள முடியும்?
இன்று வரை...1017 AD is the "traditional" date....
All we need to do is ascertain that "tradition" and make sure, that
something is not goofed there...

1017 என்பதற்கு மட்டும் - "Traditional Account" எடுத்துக் கொண்டு
மற்றவைக்கு, "Traditional Account"-ஐ, நம்ப முடியாது...என்பது சரியான
வழிமுறை ஆகாது! :))

Let's get back to basics and ascertain...

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 4, 4:08 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> வரலாறு மிகவும் முக்கியம் - 4
> இந்த பதிவில் பங்கு கொண்டோருக்கும், பார்த்து மகிழ்ந்தோருக்கும் , நடு நிலையாக
> வெளியில் / வேலியில் நின்று  ரசிப்போருக்கும்  நன்றி..
>
> உடையவரின் தேதிகள் குறித்து நாம் தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
>

> நண்பர் சொன்னார்  - *இந்த அளவு அக்கால நிகழ்ச்சிகள் வைணவ நூல்களில்


> ஆவணமாகியுள்ளன.  நிவேதனம் செய்யப் பயனான அரிசி வகைகளையும் குறித்து
> வைத்துள்ளனர்.  திருமுடி அடைவு என்னும் நூற்பகுதி ஆசார்யர்கள் பிறந்த குடி,
> குலம், சீடர்கள் போன்ற தகவல்களைத் தருகின்றன.ஆலய வரலாற்றைப் பதிவு செய்யும்

> நடைமுறையும் இருந்து வந்துள்ளது.*

>  *The date of birth of the 11th century Vaishnaivite saint Ramanujacharya


> was deciphered thanks to the two-year research of IIT-Madras professor G.

> Rangarajan.*
>
> * Using the first biographical account of the philosopher from 13th Century


> Ramanujarya Divya Charitai and the ephemeris (astronomical tables) for 700
> AD to 1700 AD of Swamikannu Pillai, Prof Rangarajan has arrived at April 13,

> 1017 as the date of birth.*


>
> சரி, அடுத்த கேள்வி. ஸ்ரீ நாதமுனி அவர்களின் காலம் ஏது ?
>
> நேரம் கிடைப்பவர்கள், பொறுமை இருப்பவர்கள், சரித்திரம் பொய்க்காது என்பதை
> உணரும் மனப்பக்குவம் கொண்டவர்கள் - மேலே படியுங்கள்.
>
>
>

> *வரலாறு  ஏன் முக்கியம் தெரியுமா. நடந்ததை நடந்தவாறு இருதரப்பு குறிப்புகளையும்
> கொண்டு நிரூபணம் செய்யும் வண்ணம் ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும்.*


>
> கல்கி கதை எழுதினார் - கதை விடவில்லை - அப்படி என்றால் என்ன - வரலாற்று

> நிகழ்வுகளை அவர் திரித்து எழுதவில்லை.  சில மாதங்களுக்கு முன்னர் இது *ஒரு
> ஹாரத்தின் கதை *என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இங்கே இட்டேன். பொன்னியின் ச்லேவன்


> குழுமத்தின் நிகழ்ச்சி மலரில் வெளி வந்த கட்டுரை.  யாரும் படிக்க வில்லை என்று
> நினைக்கிறேன் - சரி , அதில் ஒரு பாதியை இங்கே இடுகிறேன். படித்துவிட்டு கதை
> எப்படி வரலாற்றுடன் ஒற்று இருக்கிறது என்பதைபாருங்கள்.

> *>>>>>>>>>>>>>>
> பொன்னியின் செல்வன். *
> *தியாக சிகரம் - அத்தியாயம் 58*
>
> *கருத்திருமன் கதை*
> *


> பாண்டிய அரசர் சில தினங்களுக்குப் பிறகு இலங்கை அரசரின் அரண்மனைக்கு வந்து
> சேர்ந்தார். இரு மன்னர்களும் சேர்ந்து இலங்கையின் தென்கோடியில் மலைகள்
> சூழ்ந்திருந்த ரோஹண நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில தினங்கள்
> தங்கியிருந்தார்கள். கருத்திருமன் பேரில் பிரியம் கொண்ட பாண்டிய மன்னர்
> அவனையும் தம்முடன் அழைத்துப் போனார். ரோஹண நாட்டில் பல இடங்களையும் இலங்கை
> அரசர் பாண்டிய மன்னருக்குக் காட்டினார். கடைசியாக, யாரும் எளிதில் நெருங்க
> முடியாத ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மலைக் குகையில்
> அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்கள், விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் முதலியவை
> வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, இலங்கை அரசர் ஒரு
> தங்கப் பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினார். அதற்குள்ளே ஜாஜ்வல்யமாகப்
> பிரகாசித்த மணி மகுடம் ஒன்றும், இரத்தின ஹாரம் ஒன்றும் இருந்தன. அரசர்களுடைய
> சம்பாஷணையிலிருந்து அந்தக் கிரீடம் பாண்டிய வம்சத்து அரசர்களின் புராதனமான
> கிரீடம் என்றும், இந்த இரத்தின ஹாரம் பாண்டிய குல முதல்வனுக்குத் தேவேந்திரன்
> வழங்கியதாகச் சொல்லப்பட்ட ஹாரம் என்றும் தெரிந்து கொண்டான். அவற்றை
> எடுத்துக்கொண்டு போகும்படி இலங்கை அரசர் பாண்டியனை வற்புறுத்தினார். பாண்டிய
> மன்னர் மறுத்து விட்டார். சோழர்களை அடியோடு முறியடித்துவிட்டு மதுரையில் தாம்
> முடி சூடிக்கொள்ளும் நாள் வரும்போது, இலங்கையின் அரசரே அவற்றை எடுத்துக் கொண்டு

> மதுரைக்கு வந்து உலகம் அறியத் தம்மிடம் அளிக்க வேண்டும் என்று கூறினார். *


>
> இது சேவூர் போருக்கு சற்று முன்னர் நடை பெற்ற காட்சியாக எடுத்துக்கொள்ள
> வேண்டும் . அதாவது 959 C.E
>
> கதையில் அருமையான தருணம். கடை போருக்கு செல்லும் மன்னன், மிகவும் பெருமை
> வாய்ந்த மன்னன் , தான் போரில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தெரிந்தும், தான்
> வீர மரணம் அடையப்போகிறோம் என்று தெரிந்தும் , தந்து வமிசத்தில் யாரவது ஒருவர்
> மீண்டும் தழைத்து எழுவர் என்ற நம்பிக்கையுடன் விடை பெரும் காட்சி, ஆனால் இது
> வெறும் கதையா ?  பாண்டிய மன்னன் தனது குல தனங்களை  இலங்கை அரசனிடம் இவ்வாறு
> கொடுத்து விதான. இது நிஜமா , அதற்க்கு ஆதாரங்கள் உண்டா?
>

> *இதற்க்கு விடை காண நமக்கு வேறு ஆவணம் தேவை. சரித்திரத்தை குறை கூறும் பலர்


> சாட்சி கேட்பார்கள். அதுவும் நிலையான சாட்சி தேவை. இதற்க்கு மகாவம்சம்
> எனப்படும் இலங்கை பெளத்த பிக்ஷுகள் எழுதி வைத்த வரலாற்று குறிப்பு உதவுமா.

> சற்று பார்ப்போம்*
> *


> இலங்கையில் ஐந்தாம் தப்புளா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தபொழுது (918-930) ,
> அப்போதைய
> பாண்டிய மன்னன் உதவி கேட்டுச் சென்றான் அவனிடம். உதவி மறுக்கப் படவே,
> தன்னுடைய பாண்டிய ஹாரத்தை இலங்கையில் விட்டு சேர நாட்டுக்கு
> சென்றுவிட்டான் பாண்டியன் (Mahav. 53, 5ff). பின் இலங்கை இரண்டாம் உதயா
> ஆட்சியில் இருந்த பொழுது, சோழ மன்னன் அந்த பாண்டிய ஹாரத்தை கைப்பற்ற ஒரு
> பெரும் படையை அனுப்பினான், போரில் பெரும் வெற்றி அடைந்தாலும் அவர்களால்
> அந்த பாண்டிய ஹாரத்தை கைப்பற்ற முடியவில்லை. தோல்வி அடைந்த உதயா அந்த
> பாண்டிய ஹாரத்தொடும் மற்ற பொக்கிஷங்களோடும் தலைமறைவானான். அந்த வெற்றி
> கொண்ட சோழ மன்னன் பராந்தகன்-1 (907-947) என்பது அவனுடைய ஈழப் போர் பற்றிய

> கல்வெட்டுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமின்றி தெரிய வருகிறது.*
> *
> *
> *மீண்டும் சேனாவிற்கு பின் ஆட்சிக்கு வந்த நான்காம் உதயாவிடம் (955 AD - 964


> AD)பாண்டிய ஹாரத்தை ஒப்படைக்கச் சொல்லி சோழ மன்னன் செய்தி அனுப்பினான்.உதயா
> மறுக்கவே சோழப் பெரும்படை உதயாவை பதம் பார்க்க தோற்ற அவன் ரோகானாவிற்கு தப்பி

> ஓடி மறைந்தான்.*
> *
> **எப்படி சாட்சியம். இப்போது என்ன அளவிற்கு அமரர் கல்கி பொன்னியின் செல்வன் கதையை


> வராற்றுடன் பிணைத்து சித்தரித்துள்ளார் பார்த்தீர்களா.

> *


>
> சரி, பிறகு என்ன ஆயிற்று இந்த ஹாரம் ? மகாவம்சத்திலேயே தேடுவோம்

> *
>
> *
> *A.D.981


> ஆம் ஆண்டு ஐந்தாம் மகிந்தா ஆட்சியில் இருந்தான், கோழை மன்னனான இவன் தன
> பாதுகாப்பிற்காக சேரர்களையும் மற்ற மன்னவர்களையும் நம்பியிருந்தான்.
> அவர்களுடைய சேவையை பொன் பொருளால் ஈடுகட்டமுடியாமையினால், உள்நாட்டுக்
> கலகம் வெடித்தது. இதனால் மகிந்தா ரோகானவிற்கு சென்று மறைந்தான்.
>
> வடஇலைங்கையில் கலகக்காரர்கள் கோலோச்ச, குழப்ப நிலையை சரியாக பயன்படுத்திக்
> கொண்ட சோழ மன்னன் இலங்கை தீவை கைப்பற்றியதோடு ரோதனாவிற்கு சென்று
> மகிந்தாவையும் அவன் மனைவியையும், பொக்கிஷங்களையும் இந்தியாவிற்கு எடுத்து
> வந்தான். இது நிகழ்ந்தது மகிந்தாவின் 36 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில்,
>

> அதாவது A.D.1017.*


>
> அந்த வெற்றித் திருமகன் யார். அவன் அபகரித்த பொக்கிஷங்கள் எவை.
>
> ஆம் , இவர் நமது பொன்னியின் செல்வறது வீரமே உருகொண்ட மகனான முதலாம் ராஜேந்திர
> சோழன்,
>
> அவருடைய திருமலை மெய்கீர்த்தியில், பெருங்கடல் சூழ்ந்த இலங்கை மன்னன்
> கிரீடமும், பேரழகு பொருந்திய அரசியின் கிரீடமும், பாண்டிய மன்னனின் இந்திர
> ஹாரமும் (பாண்டியன் ஈழ மன்னனிடம் பாதுகாப்பிற்காக கொடுத்துவைத்தது), ஈழ மண்டலம்
>
> முழுவதையும் கொண்ட என்று பொறிக்கப் பட்டுள்ளது. அதையும் பார்ப்போமே.
>

> *முதலாம் ராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தி *
>
> *ஸ்வஸ்தி ஸ்ரீ


> திருமன்னி வளர இருநில மடந்தையும்
> போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
> தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
> நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும்
> .......................
> பெருங்கடல் ஈழத்து அரசர் தம் முடியும்
> அங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
> முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
> சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
> தென்திரை ஈழமண்டலமும் முழுவதும்
> எறிபடை கேரளர் முறைமயிர்  சூடும்
> குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்

> செங்கதிர் மாலையும் செங்கதிர் வேலைத்..*

V, Dhivakar

unread,
Feb 4, 2010, 4:43:46 AM2/4/10
to mint...@googlegroups.com
Dear KRS.,
 
The timings in History was well planned and put by Cholas in the Inscriptions. Nearly 85% of total inscriptions so far exposed in India belonged to Tamilnadu.
 
The calculations they make according to their crowning year only. This was confirmed by historical researchers almost everybody. From Raja Raja Chola period we have a clear picture up to Pandya ending. Only during the entry of Vizianagara Kings, the salivahana year system has come.
 
Regarding Kulottunga, historians has catagorically said that he has 'taken' crowning by the year of 1070. This is his year of crowning first as Vengi King, and next he took over as Chola emperor. I will give you the following by N. Subramaniam, the famous author of 'The history of Tamilnadu' and he has covered all the researchers for this book.
 
"Rajendra (Eastern Chalukya and later Kulottunga) findsing his position untenable in Vengi is a result of his Uncle (Siththappa)'s userpation left or induced to leave for the Eastern lands (Combodia,etc) where he spent his time in military adventure, When Vira Rajendra wanted to re conquer Kadaram, he used Kulottunga for that purpose and successful Kulottunga visited the Chinese court representing Cholas. But later in 1068, he realised the course of events went against him and there was none to espouse his cause, he returned to India, overthrew Vijayathithya, his Uncle (Siththappa) took over the government of Vengi, i.e. in 1070 and in 1071 when Athiranjendran, son of Virarajendra, passed away, he seized the chola thrown, virtually became the joint ruler of Chola as well Eastern Chalukya Kingdoms. But he preferred to rule from Gangai Konda Cholapuram, not only because he was three-fourth Chola, but also the chola kingdom is larger, prestigeous and prosperous of the two.
 
The Sittamalli stone inscription of Athirajendra dated 3rd May 1071 makes it clear that Kulottunga could have succeeded to Chola throne only after that date, for Athirajendra was alive atleast till that date. Hence 9th June 1070 till now considered to be Kulottunga date of accession to the Vengi must be deemed to the accession in general for calculating his ruling years. "
 
KRS, I think, you will agree with this.
 
Dhivakar

 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 4:44:41 AM2/4/10
to மின்தமிழ்
விஜய்

//ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தின் பெயரை


வைத்துக்கொண்டு அவர் புகழ்
பாடிய சோழ பரம்பரையை நையாண்டி செய்கின்றனர்.

கேட்டால் நீ யார் பழுவேட்டையரையாரா என்று நக்கல் வேறு//

அருமையான தொகுப்புத் தகவல்களைச் சிரமப்பட்டு, முன் வைக்கறீர்கள்!
பாராட்டுக்கள்!
அந்த முயற்சியின் போது, இது போன்ற தனிப்பட்ட Reference-கள் வேண்டாமே!
சென்ற பதிவின் காரசார நினைவுகளை இங்கே தவிர்த்து விடுங்கள்!

இந்தப் பதிவு முழுக்க முழுக்க, scientific based fact finding ஆக மட்டுமே
இருக்க வேண்டும் என்பதே என் அவா!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 4, 4:08 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> வரலாறு மிகவும் முக்கியம் - 4
> இந்த பதிவில் பங்கு கொண்டோருக்கும், பார்த்து மகிழ்ந்தோருக்கும் , நடு நிலையாக
> வெளியில் / வேலியில் நின்று  ரசிப்போருக்கும்  நன்றி..
>
> உடையவரின் தேதிகள் குறித்து நாம் தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
>

> நண்பர் சொன்னார்  - *இந்த அளவு அக்கால நிகழ்ச்சிகள் வைணவ நூல்களில்


> ஆவணமாகியுள்ளன.  நிவேதனம் செய்யப் பயனான அரிசி வகைகளையும் குறித்து
> வைத்துள்ளனர்.  திருமுடி அடைவு என்னும் நூற்பகுதி ஆசார்யர்கள் பிறந்த குடி,
> குலம், சீடர்கள் போன்ற தகவல்களைத் தருகின்றன.ஆலய வரலாற்றைப் பதிவு செய்யும்

> நடைமுறையும் இருந்து வந்துள்ளது.*

>  *The date of birth of the 11th century Vaishnaivite saint Ramanujacharya


> was deciphered thanks to the two-year research of IIT-Madras professor G.

> Rangarajan.*
>
> * Using the first biographical account of the philosopher from 13th Century


> Ramanujarya Divya Charitai and the ephemeris (astronomical tables) for 700
> AD to 1700 AD of Swamikannu Pillai, Prof Rangarajan has arrived at April 13,

> 1017 as the date of birth.*


>
> சரி, அடுத்த கேள்வி. ஸ்ரீ நாதமுனி அவர்களின் காலம் ஏது ?
>
> நேரம் கிடைப்பவர்கள், பொறுமை இருப்பவர்கள், சரித்திரம் பொய்க்காது என்பதை
> உணரும் மனப்பக்குவம் கொண்டவர்கள் - மேலே படியுங்கள்.
>
>
>

> *வரலாறு  ஏன் முக்கியம் தெரியுமா. நடந்ததை நடந்தவாறு இருதரப்பு குறிப்புகளையும்
> கொண்டு நிரூபணம் செய்யும் வண்ணம் ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும்.*


>
> கல்கி கதை எழுதினார் - கதை விடவில்லை - அப்படி என்றால் என்ன - வரலாற்று

> நிகழ்வுகளை அவர் திரித்து எழுதவில்லை.  சில மாதங்களுக்கு முன்னர் இது *ஒரு
> ஹாரத்தின் கதை *என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இங்கே இட்டேன். பொன்னியின் ச்லேவன்


> குழுமத்தின் நிகழ்ச்சி மலரில் வெளி வந்த கட்டுரை.  யாரும் படிக்க வில்லை என்று
> நினைக்கிறேன் - சரி , அதில் ஒரு பாதியை இங்கே இடுகிறேன். படித்துவிட்டு கதை
> எப்படி வரலாற்றுடன் ஒற்று இருக்கிறது என்பதைபாருங்கள்.

> *>>>>>>>>>>>>>>
> பொன்னியின் செல்வன். *
> *தியாக சிகரம் - அத்தியாயம் 58*
>
> *கருத்திருமன் கதை*
> *


> பாண்டிய அரசர் சில தினங்களுக்குப் பிறகு இலங்கை அரசரின் அரண்மனைக்கு வந்து
> சேர்ந்தார். இரு மன்னர்களும் சேர்ந்து இலங்கையின் தென்கோடியில் மலைகள்
> சூழ்ந்திருந்த ரோஹண நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில தினங்கள்
> தங்கியிருந்தார்கள். கருத்திருமன் பேரில் பிரியம் கொண்ட பாண்டிய மன்னர்
> அவனையும் தம்முடன் அழைத்துப் போனார். ரோஹண நாட்டில் பல இடங்களையும் இலங்கை
> அரசர் பாண்டிய மன்னருக்குக் காட்டினார். கடைசியாக, யாரும் எளிதில் நெருங்க
> முடியாத ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மலைக் குகையில்
> அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்கள், விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் முதலியவை
> வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, இலங்கை அரசர் ஒரு
> தங்கப் பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினார். அதற்குள்ளே ஜாஜ்வல்யமாகப்
> பிரகாசித்த மணி மகுடம் ஒன்றும், இரத்தின ஹாரம் ஒன்றும் இருந்தன. அரசர்களுடைய
> சம்பாஷணையிலிருந்து அந்தக் கிரீடம் பாண்டிய வம்சத்து அரசர்களின் புராதனமான
> கிரீடம் என்றும், இந்த இரத்தின ஹாரம் பாண்டிய குல முதல்வனுக்குத் தேவேந்திரன்
> வழங்கியதாகச் சொல்லப்பட்ட ஹாரம் என்றும் தெரிந்து கொண்டான். அவற்றை
> எடுத்துக்கொண்டு போகும்படி இலங்கை அரசர் பாண்டியனை வற்புறுத்தினார். பாண்டிய
> மன்னர் மறுத்து விட்டார். சோழர்களை அடியோடு முறியடித்துவிட்டு மதுரையில் தாம்
> முடி சூடிக்கொள்ளும் நாள் வரும்போது, இலங்கையின் அரசரே அவற்றை எடுத்துக் கொண்டு

> மதுரைக்கு வந்து உலகம் அறியத் தம்மிடம் அளிக்க வேண்டும் என்று கூறினார். *


>
> இது சேவூர் போருக்கு சற்று முன்னர் நடை பெற்ற காட்சியாக எடுத்துக்கொள்ள
> வேண்டும் . அதாவது 959 C.E
>
> கதையில் அருமையான தருணம். கடை போருக்கு செல்லும் மன்னன், மிகவும் பெருமை
> வாய்ந்த மன்னன் , தான் போரில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தெரிந்தும், தான்
> வீர மரணம் அடையப்போகிறோம் என்று தெரிந்தும் , தந்து வமிசத்தில் யாரவது ஒருவர்
> மீண்டும் தழைத்து எழுவர் என்ற நம்பிக்கையுடன் விடை பெரும் காட்சி, ஆனால் இது
> வெறும் கதையா ?  பாண்டிய மன்னன் தனது குல தனங்களை  இலங்கை அரசனிடம் இவ்வாறு
> கொடுத்து விதான. இது நிஜமா , அதற்க்கு ஆதாரங்கள் உண்டா?
>

> *இதற்க்கு விடை காண நமக்கு வேறு ஆவணம் தேவை. சரித்திரத்தை குறை கூறும் பலர்


> சாட்சி கேட்பார்கள். அதுவும் நிலையான சாட்சி தேவை. இதற்க்கு மகாவம்சம்
> எனப்படும் இலங்கை பெளத்த பிக்ஷுகள் எழுதி வைத்த வரலாற்று குறிப்பு உதவுமா.

> சற்று பார்ப்போம்*
> *


> இலங்கையில் ஐந்தாம் தப்புளா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தபொழுது (918-930) ,
> அப்போதைய
> பாண்டிய மன்னன் உதவி கேட்டுச் சென்றான் அவனிடம். உதவி மறுக்கப் படவே,
> தன்னுடைய பாண்டிய ஹாரத்தை இலங்கையில் விட்டு சேர நாட்டுக்கு
> சென்றுவிட்டான் பாண்டியன் (Mahav. 53, 5ff). பின் இலங்கை இரண்டாம் உதயா
> ஆட்சியில் இருந்த பொழுது, சோழ மன்னன் அந்த பாண்டிய ஹாரத்தை கைப்பற்ற ஒரு
> பெரும் படையை அனுப்பினான், போரில் பெரும் வெற்றி அடைந்தாலும் அவர்களால்
> அந்த பாண்டிய ஹாரத்தை கைப்பற்ற முடியவில்லை. தோல்வி அடைந்த உதயா அந்த
> பாண்டிய ஹாரத்தொடும் மற்ற பொக்கிஷங்களோடும் தலைமறைவானான். அந்த வெற்றி
> கொண்ட சோழ மன்னன் பராந்தகன்-1 (907-947) என்பது அவனுடைய ஈழப் போர் பற்றிய

> கல்வெட்டுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமின்றி தெரிய வருகிறது.*
> *
> *
> *மீண்டும் சேனாவிற்கு பின் ஆட்சிக்கு வந்த நான்காம் உதயாவிடம் (955 AD - 964


> AD)பாண்டிய ஹாரத்தை ஒப்படைக்கச் சொல்லி சோழ மன்னன் செய்தி அனுப்பினான்.உதயா
> மறுக்கவே சோழப் பெரும்படை உதயாவை பதம் பார்க்க தோற்ற அவன் ரோகானாவிற்கு தப்பி

> ஓடி மறைந்தான்.*
> *
> **எப்படி சாட்சியம். இப்போது என்ன அளவிற்கு அமரர் கல்கி பொன்னியின் செல்வன் கதையை


> வராற்றுடன் பிணைத்து சித்தரித்துள்ளார் பார்த்தீர்களா.

> *


>
> சரி, பிறகு என்ன ஆயிற்று இந்த ஹாரம் ? மகாவம்சத்திலேயே தேடுவோம்

> *
>
> *
> *A.D.981


> ஆம் ஆண்டு ஐந்தாம் மகிந்தா ஆட்சியில் இருந்தான், கோழை மன்னனான இவன் தன
> பாதுகாப்பிற்காக சேரர்களையும் மற்ற மன்னவர்களையும் நம்பியிருந்தான்.
> அவர்களுடைய சேவையை பொன் பொருளால் ஈடுகட்டமுடியாமையினால், உள்நாட்டுக்
> கலகம் வெடித்தது. இதனால் மகிந்தா ரோகானவிற்கு சென்று மறைந்தான்.
>
> வடஇலைங்கையில் கலகக்காரர்கள் கோலோச்ச, குழப்ப நிலையை சரியாக பயன்படுத்திக்
> கொண்ட சோழ மன்னன் இலங்கை தீவை கைப்பற்றியதோடு ரோதனாவிற்கு சென்று
> மகிந்தாவையும் அவன் மனைவியையும், பொக்கிஷங்களையும் இந்தியாவிற்கு எடுத்து
> வந்தான். இது நிகழ்ந்தது மகிந்தாவின் 36 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில்,
>

> அதாவது A.D.1017.*


>
> அந்த வெற்றித் திருமகன் யார். அவன் அபகரித்த பொக்கிஷங்கள் எவை.
>
> ஆம் , இவர் நமது பொன்னியின் செல்வறது வீரமே உருகொண்ட மகனான முதலாம் ராஜேந்திர
> சோழன்,
>
> அவருடைய திருமலை மெய்கீர்த்தியில், பெருங்கடல் சூழ்ந்த இலங்கை மன்னன்
> கிரீடமும், பேரழகு பொருந்திய அரசியின் கிரீடமும், பாண்டிய மன்னனின் இந்திர
> ஹாரமும் (பாண்டியன் ஈழ மன்னனிடம் பாதுகாப்பிற்காக கொடுத்துவைத்தது), ஈழ மண்டலம்
>
> முழுவதையும் கொண்ட என்று பொறிக்கப் பட்டுள்ளது. அதையும் பார்ப்போமே.
>

> *முதலாம் ராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தி *
>
> *ஸ்வஸ்தி ஸ்ரீ


> திருமன்னி வளர இருநில மடந்தையும்
> போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
> தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
> நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும்
> .......................
> பெருங்கடல் ஈழத்து அரசர் தம் முடியும்
> அங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
> முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
> சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
> தென்திரை ஈழமண்டலமும் முழுவதும்
> எறிபடை கேரளர் முறைமயிர்  சூடும்
> குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்

> செங்கதிர் மாலையும் செங்கதிர் வேலைத்..*

vj kumar

unread,
Feb 4, 2010, 4:54:02 AM2/4/10
to mint...@googlegroups.com
நண்பரே,

நான் மகான் அல்ல. அப்படி ஆகவும் எண்ணம் இல்லை.

விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

V, Dhivakar

unread,
Feb 4, 2010, 4:59:13 AM2/4/10
to mint...@googlegroups.com
KRS, I do not understand your question here, honestly telling
 
In what way we could find 1017, 1053 or 1076 in that which one is right?
 
We will have to beleive mainly the researchers like Krishnamachariar during the early 1900s, KA Nilakanta sastri, and other people, who like our U.VE.SA, have extremely worked and bring the dates of accession. Most of recent finding from the teams of KU. RAA and Dr. Kalaikkovan also found so many but not contradictory to earlier results but adding new informations to the old ones.
 
You will have to beleive the history professors and researchers who worked hard during their life-times, I read Mr. Burtain, (Cambride, presently living at London) who bowed his head to Krishnamachariar and Neelakanta sastry who gave accurate details. Krishnamachariar walked everywhere in South India to collect details, inscriptions, copper plates, Palm leaves and compiled. What a great people. Recently you must have read a full back page article in The Hindu regards 'mural paintings' findings in 1931.
 
Today we are just talking through computers and mobiles, but think about of those days. that too 100 years back. Yet they have done.
Let us respect and beleive them
 
I have no second opinion on Acharya's works and other scholars details, but the hardworkers always brings fruits.
 
I think we will give our opinion after Vijay complete his full details and wait for that. I think our waiting will be worthy.
 
Anbudan
Dhivakar


 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 5:11:49 AM2/4/10
to மின்தமிழ்
Now,
coming to the birth date of Ramanuja...
1017 is NOT a magic number, that has been "thoroughly established"...

1. இராமானுசர் பிங்கள ஆண்டு பிறந்தார் என்பது, குருபரம்பரை, திருமுதி
அடைவு போன்ற குறிப்புக்கள்!

2. 120 வயது வரை வாழ்ந்தார் என்பதும் அப்படியே!
(எனக்கு ஒரு மனிதர் 120 ஆண்டுகள் வாழ முடியுமா என்பதிலேயே சந்தேகம்
உள்ளது...ஆனால் தற்சமயத்துக்கு இதை விடுவோம்)

3. அனைத்து ஆய்வுகளும், "குரு பரம்பரை" குறிப்புகளையே, அடிப்படையாகக்
கொண்டு, ஆய்வைத் துவங்குகிறது!

இதோ பிள்ளை லோகம் ஜீயர் அவர்களின் அந்தக் குறிப்பு:
கலியுகம் பிறந்து நாலாயிரத்தொரு நூற்று பதினெட்டு வர்ஷத்துக்குப் பின்பு,
பிங்கள வர்ஷம், சித்திரை மாசம்
சுக்ல பக்ஷத்தில், பஞ்சமி, குருவாரம், திருவாதிரையிலே, சுபமுகூர்த்ததிலே,
கார்க்கட லக்னத்திலே, துளசீ வனத்திலே...நீர் வண்ணன் நிர்மலையாறு கானத்தே,
பெரிய ஏரியை உடைய பெரும்பூதூரிலே
ஸ்ரீமன் ஆன ராமானுஜ திவாகரனும், ஸ்ரீ பூமிப் பிராட்டியார்
திருவுதரத்திலே, தோன்றியருளினார்!

(There are a few inconsistencies here...esp Neervannan
NirmalaiyaaRu...will come back later)
Now, ONLY based on this "guru paramparai" stuff, using the Indian
Ephemeris compiled by L.D.Swamik kannup pillai...This date of 1017 is
arrived at, by traditional accounts and people..

NOW MY QUESTION IS:
1. குரு பரம்பரை "ஓவரா" கதை விடுது-ன்னு தான், இந்த உண்மை அறியும்
முயற்சியிலேயே இறங்கி இருக்கின்றார்கள்
2. அப்படி இருக்க, அனைத்து ஆய்வுகளுக்கும் மூலமான பிறந்த தேதிக்கு
மட்டும்.....
"குரு பரம்பரை"யை எப்படி நம்புகிறீர்கள்?

உங்களின் ஒரு வாதத்துக்கு - குரு பரம்பரையின் நம்பகத்தன்மை மேல் கை
வைத்து
இன்னொரு வாதத்துக்கு - அதை முழுமையாக நம்பலாம்....என்பது சரி தானா?
How scientific and rationalistic, is this approach?????

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 4, 4:44 am, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> விஜய்
>
> //ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தின் பெயரை
> வைத்துக்கொண்டு அவர் புகழ்
> பாடிய சோழ பரம்பரையை நையாண்டி செய்கின்றனர்.
> கேட்டால் நீ யார் பழுவேட்டையரையாரா  என்று நக்கல் வேறு//
>
> அருமையான தொகுப்புத் தகவல்களைச் சிரமப்பட்டு, முன் வைக்கறீர்கள்!
> பாராட்டுக்கள்!
> அந்த முயற்சியின் போது,  இது போன்ற தனிப்பட்ட Reference-கள் வேண்டாமே!
> சென்ற பதிவின் காரசார  நினைவுகளை  இங்கே தவிர்த்து விடுங்கள்!
>
> இந்தப் பதிவு முழுக்க முழுக்க, scientific based fact finding ஆக மட்டுமே
> இருக்க வேண்டும் என்பதே என் அவா!
>
> anbudan

> KRShttp://madhavipanthal.blogspot.com

> ...
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 5:20:28 AM2/4/10
to மின்தமிழ்
Continuing on the magic number 1017...

//The horoscopic details provided above can be checked using the


Indian Ephemeris compiled by L.D.Swamik kannup pillai

( ref. An Indian Ephemeris A.D.700 to A.D.1700 by L.D.Swamikannu
Pillai, Agam Prakashan Delhi, first published 1922, first
reprinted 1982, p.36) .
When this is done it is found that there is a complete one to one
correspondence between the above data
and the date is 4th April, 1017//

ஆக,
"குரு பரம்பரை" கணக்கை உண்மை-ன்னு "நம்பி" எடுத்துக் கொண்டு....
அதன்படி கணக்கு போட்டுப் பார்த்தால் ஏப்ரல்-4-1017 என்று சொல்லி
விட்டார்கள்!

இப்போ என் கேள்வி:
இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!
ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))

4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
எது சரி?

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 4, 5:11 am, "Kannabiran Ravi Shankar (KRS)"

> ...
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 5:24:40 AM2/4/10
to மின்தமிழ்
//நண்பரே,
நான் மகான் அல்ல. அப்படி ஆகவும் எண்ணம் இல்லை//

விஜய்
No emotions...Ungalai "magaan" nu chollala.
That was only a request to "refrain" from personal references...
We want ONLY a fact-based discussion. Neenga virumbiyathum athu
thaane?
Let's walk the talk!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 4, 5:20 am, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> Continuing on the magic number 1017...
>
> //The horoscopic details provided above can be checked using the
> Indian Ephemeris compiled by L.D.Swamik kannup pillai
> ( ref. An Indian Ephemeris A.D.700 to A.D.1700 by L.D.Swamikannu
> Pillai, Agam Prakashan Delhi, first published 1922, first
> reprinted 1982, p.36) .
> When this is done it is found that there is a complete one to one
> correspondence between the above data
> and the date is 4th April, 1017//
>
> ஆக,
> "குரு பரம்பரை" கணக்கை உண்மை-ன்னு  "நம்பி" எடுத்துக் கொண்டு....
> அதன்படி கணக்கு போட்டுப் பார்த்தால் ஏப்ரல்-4-1017 என்று சொல்லி
> விட்டார்கள்!
>
> இப்போ என் கேள்வி:
> இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!
> ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))
>
> 4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
> எது சரி?
>
> anbudan

> ...
>
> read more »

vj kumar

unread,
Feb 4, 2010, 5:29:37 AM2/4/10
to mint...@googlegroups.com
அப்பாடா,

ஒருவராவது வாய்திறந்து இதனை ஒத்துக்கொண்டாரே.

"இராமானுசர் பிங்கள ஆண்டு பிறந்தார் என்பது,  குருபரம்பரை, திருமுதி அடைவு போன்ற குறிப்புக்கள்!"

வேறு கருத்துக்கள் இருக்குமாயின் இப்போதே சொல்லிவிடலாம்.

அது சரியா தவறா என்பதை நான்  விமர்சிக்கவில்லை. IIT ஆய்வுக்  குறிப்பு விபரமும் கொடுத்துள்ளேனே - அதை ஆர்வம் உள்ளவர்கள் மனது வைத்தால் தேடி கண்டு பிடித்து இங்கே இடலாமே. இது நாளேடுகளில் பிரபலாமாக வந்த தகவல் - ஆயிரம் ஆண்டு பழைய ஆவணம் இல்லையே, அதற்குள் காணமல் போக!

அப்படியே நண்பர், குருபரம்பரையில் திரு நாதமுனி அவர்களின் காலத்தையும் அவர் எங்கே உயிர் துறந்தார் என்பதையும் தேடி கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

இதை வைத்துக்கொண்டு நாம் மேலே செல்வோம்.

விஜய்

http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

vj kumar

unread,
Feb 4, 2010, 5:31:18 AM2/4/10
to mint...@googlegroups.com
சரி அன்பரே,

இனிமேல் சுத்தமான சரித்திரம் மட்டுமே இடுகிறேன்.

நன்றி
விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
//நண்பரே,
> ...
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 5:38:07 AM2/4/10
to மின்தமிழ்
Sure Dhivakar Sir...
I have deeply read your "thirumalai thirudan" also in this regard...I
have profound respect for your views..
Here are my two cents!

1. //You will have to beleive the history professors and researchers
who worked hard during their life-times//
History is NOT to be "believed" - Then it will become another guru
parampara!
History has to be established!

2.//I think we will give our opinion after Vijay complete his full
details and wait for that. I think our waiting will be worthy//
Sure...
What I want to bring forth is..
When u start the experiment itself, based on a "suspicious" or
"conflicting" (guru parampara) evidence...
Then, the results are also going to be "suspicious" or "conflicting"

Garbage-in/Garbage-out
Thatz why trying to "reason the date"

How can u disprove one guru parampara piece, if you assume other guru
parampara piece alone is right? :))
Hope u understand...

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

> ...
>
> read more »

V, Dhivakar

unread,
Feb 4, 2010, 5:48:25 AM2/4/10
to mint...@googlegroups.com
>>>What I want to bring forth is..
When u start the experiment itself, based on a "suspicious" or
"conflicting" (guru parampara) evidence...
Then, the results are also going to be "suspicious" or "conflicting"

Garbage-in/Garbage-out
Thatz why trying to "reason the date"<<<
 
Dear KRS.,
 
So far he has not countered the guruparambara theory as far as Udaiyavar's date concern. He agreed and seek us whether he can assume the same..
 
I do not think, he started conflicting evidence, let us wait, and we have to give time also for him to come with clear cut answers. He has already quoted the genuine sources, whether it is Guru Parambara, or Historians like Mr. K.V Raman's article.
 
Again telling, Let us wait.
 
I agree you gave him a beutiful lift. We will support him whenever necessary because this is again history to be 'established' not to counter another. We will take it in positive way, because we are getting lot of new informations.
 
Anbudan
Dhivakar



 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shivan .

unread,
Feb 4, 2010, 5:52:10 AM2/4/10
to mint...@googlegroups.com
//2. அப்படி இருக்க,  அனைத்து ஆய்வுகளுக்கும் மூலமான  பிறந்த தேதிக்கு
மட்டும்.....
"குரு பரம்பரை"யை எப்படி  நம்புகிறீர்கள்?///

திவாகர்ஜியிடம் கேட்ட வினா அவ்வளவு சரியில்லை என்பது என் பணிவான கருத்து.

உதாரணத்திற்கு, ஒரு கல்வெட்டை எடுத்துக் கொள்வோம். அதில் இந்த மன்னன் இதை செய்தான், இதை சாதித்தான் என்றெல்லாம் இருக்கும். அதிலேயே அந்த மன்னன் ஆண்ட வருடமும் இருக்கும்.

அந்த ராஜ்ஜியத்தை சேர்ந்த கல்வெட்டில் அந்த மன்னனின் புகழ்தான் மிகைப்பட இருக்கும் என்பதால் அந்த மன்னன் செய்த சாதனைகளை ஆராய்ந்தே கொள்வர்.

ஆனால் அதே கல்வெட்டில் இருக்கும்  ஆட்சி காலத்தை சந்தேகமின்றி ஒப்புக் கொள்வர்.

ஆக எதை ஆராய வேண்டும், எதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது சில விஷயங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இங்கே ஒரே அடியாக குருபரம்பரை சேதிகளை ஒதுக்க வேண்டியதுமில்லை, ஒரேயடியாய்  ஏற்க வேண்டியதுமில்லை என்பதே சரி.

2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 5:58:31 AM2/4/10
to மின்தமிழ்
shivan sir
vanakkam

//உதாரணத்திற்கு, ஒரு கல்வெட்டை எடுத்துக் கொள்வோம். அந்த ராஜ்ஜியத்தை


சேர்ந்த கல்வெட்டில் அந்த மன்னனின் புகழ்தான் மிகைப்பட இருக்கும்

என்பதால் அந்த மன்னன் செய்த சாதனைகளை ஆராய்ந்தே கொள்வர்//

okay!

//ஆனால் அதே கல்வெட்டில் இருக்கும் ஆட்சி காலத்தை சந்தேகமின்றி ஒப்புக்
கொள்வர்//

nopes...
கல்வெட்டில் காலம் என்பது, relative ஆகத் தான் சொல்லப்படுகிறது!
முன்பே பார்த்தது போல், adding 40 years to coronation...
So, coronation has to be "established" 1st and then add this 40.
So, //சந்தேகமின்றி ஒப்புக் கொள்வர்// is not a scientific approach.
It needs to calibrated and cross-referenced.

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 4, 5:52 am, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> //2. அப்படி இருக்க,  அனைத்து ஆய்வுகளுக்கும் மூலமான  பிறந்த தேதிக்கு
> மட்டும்.....
> "குரு பரம்பரை"யை எப்படி  நம்புகிறீர்கள்?///
>
> திவாகர்ஜியிடம் கேட்ட வினா அவ்வளவு சரியில்லை என்பது என் பணிவான கருத்து.
>
> உதாரணத்திற்கு, ஒரு கல்வெட்டை எடுத்துக் கொள்வோம். அதில் இந்த மன்னன் இதை
> செய்தான், இதை சாதித்தான் என்றெல்லாம் இருக்கும். அதிலேயே அந்த மன்னன் ஆண்ட
> வருடமும் இருக்கும்.
>
> அந்த ராஜ்ஜியத்தை சேர்ந்த கல்வெட்டில் அந்த மன்னனின் புகழ்தான் மிகைப்பட
> இருக்கும் என்பதால் அந்த மன்னன் செய்த சாதனைகளை ஆராய்ந்தே கொள்வர்.
>
> ஆனால் அதே கல்வெட்டில் இருக்கும்  ஆட்சி காலத்தை சந்தேகமின்றி ஒப்புக் கொள்வர்.
>
> ஆக எதை ஆராய வேண்டும், எதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது சில விஷயங்களால்
> தீர்மானிக்கப்படுகிறது. இங்கே ஒரே அடியாக குருபரம்பரை சேதிகளை ஒதுக்க
> வேண்டியதுமில்லை, ஒரேயடியாய்  ஏற்க வேண்டியதுமில்லை என்பதே சரி.
>

> 2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> ...
>
> read more »

shivan .

unread,
Feb 4, 2010, 6:15:46 AM2/4/10
to mint...@googlegroups.com
///கல்வெட்டில் காலம் என்பது, relative ஆகத் தான் சொல்லப்படுகிறது!

முன்பே பார்த்தது போல்,  adding 40 years to coronation...
So, coronation has to be "established" 1st and then add this 40.
So, //சந்தேகமின்றி ஒப்புக் கொள்வர்// is not a scientific approach.
It needs to calibrated and cross-referenced.///

நீங்கள் சொன்னது போல காலம் இன்னொன்றை சார்ந்தது சொல்லி இருந்தால் எதை சார்ந்து இருந்ததோ அதை கேள்வி கேட்கலாம்; ஆராயலாம். தப்பு இல்லை.

ஆனால் இந்த வருடம், இந்த நட்சத்திரம் என்று தெளிவாக சொல்லி கொண்டாடும் போது அதை பொதுவாக ஏற்றுக் கொள்வர்.

Relative என்கிறோமே ஆராய்ச்சியே அதுதானே.  ஒன்றை இன்னொன்றை வைத்து சரிப்பார்க்க போகிறீர்கள்; அந்த இன்னொன்றை மற்றொன்றை வைத்து சரி பார்ப்போம்; இப்படியே போனால் எங்கு போய்தான் நிற்கும்?

அடுத்து முக்கியமான ஒன்றை கோட்டை விட்டு விட்டீர்கள்.

இங்கு குரு பரம்பரையினர் சொன்ன ஒரு நிகழ்ச்சியில்தான் விஜய்க்கு கருத்து வேறுபாடே!

ஆக அவர்கள் சொன்ன ஒரு காலத்தை வைத்துக் கொண்டுதான் அதை தவறு என விஜய் நிரூபிக்க முடியும்.

ஆக ஒரு காலத்தையாவது அவர்கள் சொன்னதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்.

குரு பரம்பரையில் வரும் எதையுமே ஏற்கவில்லை என்றால் இங்கே குலோத்துங்கனைப் பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை. ஆசார்ய வைபவத்தில் உள்ளவைகளே சரியா என்ற நோக்கில் இழை போய்விடும்.

ஆனால் இழையின் நோக்கம் அதுவல்ல. சோழன் அப்படி செய்யவில்லை என்பதுதான் வாதம். அதற்கு குருபரம்பரையில் அவர்கள் சொன்ன ஒரு தேதியை எடுத்துக் கொண்டு, அந்த தேதியில் இருந்த அரசன் யார் என பார்த்து அவன் செய்தானா என்று ஆராயவே விஜய் எண்ணுகிறார். அதற்கே இந்த இழை தொடங்கியது.






2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
> ...
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 6:16:04 AM2/4/10
to மின்தமிழ்
Okay
Lemme take Dhivakar sir's suggestion for now...
Let us proceed "ASSUMING" the magic number is 1017.
We can re-visit and cross-examine later.

But just putting forth on the table...
There are other Historical Evidences that DO NOT agree to 1017.

Carman, John Braisted (1974), The Theology of Rāmānuja: speaks about
these evidences.
T. N. Subramanian, an official in the then Madras government has
worked on a much different date...

His starting point is not the so called "fictitious" guru
parampara....
He starts with the book written (Sri Baashya) and Temple Inscriptions
in Melkote and does reverse engineering and arrives at the date...a
more rationalistic approach.....
And an unbiased John Carman speaks about this hypothesis.

Historians like S. Ramachandran and Archaeologists like KS Sampath,
add credibility to this, from Inscriptions in Tamilnadu & Karnataka as
well..

Having said that..let's proceed now "ASSUMING" the magic number = 1017

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 4, 5:48 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> >>>What I want to bring forth is..
>
> When u start the experiment itself, based on a "suspicious" or
> "conflicting" (guru parampara) evidence...
> Then, the results are also going to be "suspicious" or "conflicting"
>
> Garbage-in/Garbage-out
> Thatz why trying to "reason the date"<<<
>
> Dear KRS.,
>
> So far he has not countered the guruparambara theory as far as Udaiyavar's
> date concern. He agreed and seek us whether he can assume the same..
>
> I do not think, he started conflicting evidence, let us wait, and we have to
> give time also for him to come with clear cut answers. He has already quoted
> the genuine sources, whether it is Guru Parambara, or Historians like Mr.
> K.V Raman's article.
>
> Again telling, Let us wait.
>
> I agree you gave him a beutiful lift. We will support him whenever necessary
> because this is again history to be 'established' not to counter another. We
> will take it in positive way, because we are getting lot of new
> informations.
>
> Anbudan
> Dhivakar
>

> ...
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 6:46:43 AM2/4/10
to மின்தமிழ்
@Shivan Sir

//இப்படியே போனால் எங்கு போய்தான் நிற்கும்?//

எங்கும் நிற்காது!
Relative approach has its own scientific ways to establish the
hypothesis.
ஒன்றை மட்டுமே வைத்து முடிவு கட்டாமல், பன்முகத் தன்மை கொண்டே, ஆய்ந்த
முடிபுக்கு வர முடியும்!
Thatz why we take many readings in an experiment.
Zero Error and Standard Deviation is the key to minimize the risk of
hypothesis!

//அடுத்து முக்கியமான ஒன்றை கோட்டை விட்டு விட்டீர்கள்.


குரு பரம்பரையில் வரும் எதையுமே ஏற்கவில்லை என்றால் இங்கே
குலோத்துங்கனைப்

பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை//

தவறு!
முக்கியமான ஒன்றை நீங்கள் தான் கோட்டை விட்டு விட்டீர்கள்!
குரு பரம்பரை "குலோத்துங்கன்" என்று பேரிட்டுச் சொல்லவே இல்லை!
அப்படியிருக்க, குரு பரம்பரை சொல்லாததை "மறுக்க",
குரு பரம்பரை சொன்னதில் இருந்து துவங்குகிறேன் என்கிறீர்கள்! இது முரண்
நகை :)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

//ஆனால் இழையின் நோக்கம் அதுவல்ல. சோழன் அப்படி செய்யவில்லை என்பதுதான்
வாதம்//
Sure! That I understand!

//அதற்கு குருபரம்பரையில் அவர்கள் சொன்ன ஒரு தேதியை எடுத்துக் கொண்டு,
அந்த தேதியில் இருந்த அரசன் யார் என பார்த்து//

அவர்கள் சொன்ன தேதி, பிறந்த தேதி மட்டுமே!
மற்றபடி, "அந்தத்" தேதியும், "அந்த" அரசனும் என்று சொல்லாத போது,
அது குலோத்துங்கன் என்று நீங்களாகச் சொல்லிக் கொண்டு,
அது அவன் இல்லை என்பது - is not an scientific experiment!

* பிறந்த தேதியை உறுதிப்படுத்தி,
* "அந்தத்" தேதியும் உறுதிப்படுத்தி,
* அப்போது ஆண்ட "அந்த" அரசன் யார் என்பதை உறுதிப்படுத்தி
* அப்புறம் தான்....செய்தானா? செய்யலையா?? என்ற ஆய்வு!

The source data that feeds in has to be reliable, to get the output
data reliable.
I am just trying to set the objectives and operating conditions for
the experiment, correct!
As simple as that!
Okay,Letz proceed!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

> 2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> ...
>
> read more »

vj kumar

unread,
Feb 4, 2010, 7:07:26 AM2/4/10
to mint...@googlegroups.com
நண்பர் இன்னும் கல்வெட்டு கூறும் உண்மை ஆண்டை முழுவதுமாக நம்பவில்லை என்று நினைக்கிறேன். அரை மனதுடன் தொடரை படிக்க வேண்டாம் - உங்கள் ஐயத்தை போக்க

DATES OF CHOLA KINGS,
BY  F. KIELHORN, PH.D., LLD., CIE. ; GOTTINGEN
.
(Continued from. Vol. IV, PAGE  266.)
A -  RAJARAJA.

No. 25. Inscription, in the Sthanunatha temple at Suchindram near Cape comorin.


Svasti sr[i] tirumaga[l]...pola =...........
.........................................................................ko isaraa [sa]
kesari [vanma]rkku [ya]ndu padin ain [ju] iv [v] -andu kanni - [nay]irru muv[v-a]
n [diy=ag]i [S] e[v] vay - [k] kilmai porra [Pu] rayirattadi-nal

" In the year fifteen (of the reign) of king Rajaraja-Kesarivarman, on the day of
Purva-Bhadrapada, which corresponded to a Tuesday, three evenings having expired
of the month of Kanya in this year"


We have found before (above, Vol. IV, p. 266) that Rajaraja's reign commenced between
the 24th December A.D. 984 and the 26th September A.D. 985. A date of the month of Kanya
(August-September) of the 15th year of his reign, therefore, will be expected to fall either
in A.D. 999, in saka-samvat 921 expired, or in A.D. 1000, in Sata-Samvat 922 expired.
Aa a matter of fact, this new date  works out correctly for Saka-Samvat 921 expired.

In Saka-Sanival 921 expired the month of Kanya lasted from the 27th August to the
25fch September AD. 999, and during this period the moon was in the nakshatra Purva-
Rhadrapada - by the equal-space system for 15 h. 6 m,, by the Brahma-siddhanta for 3 h
56 m, and according to Garga for 3 h, 17 m., after mean sunrise on Tuesday, the 28tb
August A.D. 999, which was the third day of the month of Kavya* (and the full-moon
day of the month of Bhadrapada) .

The date reduces the period during which the reign of Rajaraja must have commenced
to the time from the 24th December A.D. 984 to (approximately) the 29th August A.D. 985.


B. KULOTTUNGA CHOLA I
.
No: 26. Inscription in the Rajagopala-Perumal temple at Mannargudi
in the Tanjore district.

1 Svasti Sri Pugal madu vi[lan]ga . . .......
Irajakesarivarmaraana  Tr[i]bhuvanachakrava[rtt]i[gal] sri-Kulottunga -sola
de[va]rkku=iyan[du] 48 avadu Makara-nayarru purvva-pakshattu trayodasiyum
Tingat-kilamaiyum, perra Tiru[v]adirai -nal

In the 48th. year (of the reign) of king Rajakesarivaraman, alias the emperor of
the three worlds, the glorious Kulottunga-Choladeva, on the day of Ardra, which
corresponded to a Monday and to the thirteenth tithi of the first fortnight of the month of
Makara."

Above, Vol. IV. p. 263, we have seen that a day in the month of Kumbha of the 48th year
of the reign of Kulottunga-Chola, I, corresponds to the 25th January A.D, 1118, This date,
of the month of Makara which immediately precedes the month of Kumbha, of the same
48th year, -will therefore be expected to fall within a mouth before the 23rd January A.D.
1118, the first day of the month of Kumbha of that other date, And so it really does. For,
the date corresponds to Monday, the 7th January A,D. 1118, when the 13th tithi of the
bright half (of the month Magha)) ended 15 h. 1 m,, and when the nakshatra was Ardra, by the equal-space system for 14 h 27 m,, by the Brahma-siddhanta for 0 h, 39 m,, and according to Garga for 2 h, 38 m., after mean sunrise.

என்ன நண்பரே - கல்வெட்டு குறிக்கும் தேதி நாள் நட்சத்திரம் - அரியணை எரிய நாள் - எல்லாம் எப்படி தெளிவாக கணிக்கப்பட்டு - கல்லில் பொரிக்க வைத்து - இன்றும் உண்மையை பேசிக்கொண்டுள்ளனர் - சோழர்.

இன்னும் சாட்சியங்கள் வேண்டும் என்றால் கேட்கவும்.

நன்றி
விஜய்

V, Dhivakar

unread,
Feb 4, 2010, 7:28:15 AM2/4/10
to mint...@googlegroups.com
DATES OF CHOLA KINGS,
BY  F. KIELHORN, PH.D., LLD., CIE. ; GOTTINGEN
.
Dr. Kielhorn is excellent source Vijay!
 
In fact I was searching his book which I had for long for some references.
 
See, the second inscription no.26, I was searching for the past two months. You dont beleive it, these type of posts also bring some good things for some individuals. Thanks for the information.
 
ok, any chance, have you got volume no.3 (Telugu, and Tamil) of Kulottunga?
 
D

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Feb 4, 2010, 7:44:57 AM2/4/10
to mint...@googlegroups.com


2010/2/4 vj kumar <vj.ep...@gmail.com>

நண்பர் இன்னும் கல்வெட்டு கூறும் உண்மை ஆண்டை முழுவதுமாக நம்பவில்லை என்று நினைக்கிறேன். அரை மனதுடன் தொடரை படிக்க வேண்டாம் - உங்கள் ஐயத்தை போக்க

விஜே,

இந்த இழையைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.  காலக் கணக்குகளில் நான் கெட்டிக்காரனில்லை.  கம்பனில் எந்தச் செய்யுளை, எந்த இடத்தைச் சொன்னாலும் என்னால் புத்தகத்திலிருந்தாவது அதை உடனடியாக எடுக்க முடியும்.  அவ்வளவு முறை படித்தாயிற்று.  இருந்தாலும், கம்பனின் காலம் என்ன என்ற கேள்வி எழுமானால், நான் மௌனமாக இருப்பதையே விரும்புவேன்.  கேட்டுக்கொள்ளலாம்.  அதற்குமேல் என்னால் இயலாது.  என்னைக் கேட்டால், கம்பராமாயணத்திலிருந்து அதன் ஆசிரியரைப் பற்றி என்ன தெரியவருகிறது என்றால், ‘கம்பராமாயணம்’ என்ற பெயரால் வழங்கப்பட்டு வருவதால், இந்தக் காப்பியத்தைக் கம்பன் என்ற ஒருவன் இயற்றியிருக்க வேண்டும்; அவன் தமிழனாகத்தான் இருக்கவேண்டும்; ஆழமான கல்வி உடையவனாக இருந்திருக்க வேண்டும்.  ஆனால், அவன் பெயர் கம்பன்தானா என்பது எனக்குத் தெரியாது.  ஏனெனில், தன் பெயரை அவன் ராமாயணம் நெடுகிலும் எங்கேயும் சொல்லிக் கொள்ளவில்லை.  அதிகம் போனால் வெண்ணைநல்லூர் சடையன் என்பவன் அவனை ஆதரித்தான் என்பது மட்டும்தான் அவன் வாழ்க்கைக் குறிப்பு; அகச்சான்று.  கம்பன் இயற்றியதாகச் சொல்லப்படும் மற்ற நூல்களெல்லாம், என் வரையில், கம்பன் இயற்றியதாகச் சொல்லப்படுபவை.  அவ்வளவே.

ஆகவே, எனக்கு ராமாயணம்தான் பெரிதாகத் தென்படுகிறதே ஒழிய அதை இயற்றியவனுடைய மனப்போக்கும், ஆழமான அறிவும், விசாலமான கற்பனையும், நாடகப்பாங்கும் அந்தக் கவிதை அழகும்தான் பெரிதாகத் தென்படுகிறதே ஒழிய, அதை இயற்றியவன் எவனா வேண்ணா இருந்துட்டுப் போகட்டும் போ... என்று விட்டுவிட்ட மனப்பான்மையில்தான் இந்தக் கேள்வியை அணுகிக் கொண்டிருக்கிறேன்.  கம்பனுடைய காலம் திருத்தக்க தேவருக்கு முற்பட்டது என்று அசஞா சொல்கிறார்.  இல்லை என்று மயிலையார் உள்ளிட்ட மறறவர்கள் மறுக்கிறார்கள்.  இரண்டு கோஷ்டியுமே அறிஞர்கள் என்ற பிரிவுக்குள்தான் வருகின்றன.  தமிழ்புலவர் வரலாறுகளைச் சொல்லும் எந்த நூலாயினும், நூல் (விடறது) என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.  

இழை விலகியதற்கு மன்னிக்கவும்.  எண்ணிய சகாப்தம் எண்ணூற்றேழு என்று சொல்லப்பட்டிருப்பதனை CEக்கு எந்த அடிப்படையில் மாற்றுவது என்பதே ஒரு சிக்கலாக எனக்குப் படுகிறது.  (அப்படி வருடத்தைக் குறித்துச் சொல்லியிருப்பவன் கம்பன் அல்லன்; வேறு யாரோ ஒரு பெயர் தெரியாத கவிஞன் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.)

ஏசுநாதருக்கு சுமார் 600 வருடங்களுக்குப் பிறகுதான் நடைமுறையில் உள்ள இந்தக் காலக் கணக்கே அறிமுகப்படுத்தப்பட்டது.  இதிலும் துல்லியமான கணித வரையறைகளை (அதாவது, இது நடைமுறைக்கு வந்த காலத்துக்கு முந்தைய காலத்தை) திருப்திப்படுத்துமா என்பதே ஐயத்துக்கிடமான ஒன்றாக இருக்கிறது.  (இதையெல்லாம் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தெளிவாகவே சொல்கிறது.  எடிட் செய்யும்போது படித்த குறிப்பு என்பதனால் நினவிலிருந்து சொல்கிறேன்.  விக்கிபீடியா போன்ற மற்ற தளங்களிலும் இது இடம்பெற்றிருக்கலாம்.)  கிமு என்பது கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்னால் என்றும்; கிபி என்பது கிறிஸ்துவுகுப் பிறகு (கிறிஸ்து மரித்த பிறகு) என்று கொள்வோமேயானால், அவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சுமார் 33 ஆண்டுகள் எந்தக் கணக்கில் வரும்?  கிமு, அல்லது கிபி?  (இதற்கு விளக்கங்களும், எதிர்க் கேள்விகளும் அவற்றுக்குச் சமாதானங்களும் உண்டு என்பதையும் அறிவேன்.)  

எனவே, பூஜ்யம் தொடங்கும் இடம் எப்போதும் ஏதோ ஒரு அனுமானத்தின் அடிப்படையில்தானே ஏற்கவேண்டி வருகிறது?   நடைமுறை ஆண்டுக் கணக்கே தள்ளாடும்போது, விக்கிரனாண்டு தொடங்கி பல்வேறுபட்ட கணக்குகளை நடைமுறை ஆண்டுக் கணக்குக்கு எதன் அடிப்படையில் மாற்றுவது?  எப்படி மாற்றுகிறார்கள்?  தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.  

மற்றபடி, நீங்கள் உங்கள் விவாதங்களைத் தொடருங்கள்.  எனைத்தானும் நல்லவை கேட்க.  (அந்த ஆசாமி என்னடான்னா, ‘அனைத்தானும் ஆன்ற பயனைத் தரும் அப்படின்னு சொல்லக் காணும்.... ஆன்ற பெருமை தரும் அப்படின்னு எடக்குப் பண்ணிட்டுப் போயிருக்காரு...:)) இந்த எடக்காளிய என்ன பண்றது அப்படின்னு எனக்குத் தெரியல...)   அனைத்தானும் ஆன்ற பயனைத் தருவீர்கள் என்ற உறுதியில் பின்தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.)

கேள்விகள் சம்பந்தமில்லாதவை போல் தோன்றினால், விடையளிக்க சிரமப்பட வேண்டாம்.  பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்ற திருப்தி போதுமானது எனக்கு.  

--
அன்புடன்,
ஹரிகி.

shivan .

unread,
Feb 4, 2010, 7:51:15 AM2/4/10
to mint...@googlegroups.com
//தவறு!

முக்கியமான ஒன்றை நீங்கள் தான் கோட்டை விட்டு விட்டீர்கள்!
குரு பரம்பரை "குலோத்துங்கன்" என்று  பேரிட்டுச் சொல்லவே இல்லை!
அப்படியிருக்க, குரு பரம்பரை சொல்லாததை "மறுக்க",
குரு பரம்பரை சொன்னதில் இருந்து துவங்குகிறேன் என்கிறீர்கள்! இது முரண்
நகை :)
-----------------------//

இல்லை! நீங்கள்தான் தவறாக புரி்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் ஐயா.

இந்த இழை தொடங்கக் காரணமான முந்தைய இழையை நீங்கள் சரியாக படித்திருக்க மாட்டீர்கள்.

கூரத்தாழ்வார் காலத்தில் , அவரை ஒரு தீய புத்தி படைத்த சோழன் என்று அந்த கொடுமைகள் பற்றி தொடங்கவும், அது எந்த சோழன் என்று கேள்வி தொடங்கி, இந்த இழையில் அது குலோத்துங்கன் என்று ஆகி எப்படி எப்படியோ போனது.

அதிருக்கட்டும். இந்த இழையில் கூட முக்கியமானது என்னவென்றால் கூரத்தாழ்வார் காலத்தில் இருந்த சோழன் யார் என்பதே!

குருபரம்பரை சொன்னது சோழன் என்றால்  அது எந்த சோழன் என்பதுதான் இங்கே விஜயின் கேள்வி. குலோத்துங்கன் இல்லயென்றால் எந்த சோழன் என்பதே இங்கே பிரச்சனை. குலோத்துங்கனா இதரரா என்பது பிரச்சனை இல்லை. மொத்தத்தில் எந்த சோழனாவது இப்படி செய்தான என்பதே கேள்வி.

ஆகவே குலோத்துங்கன் என்பது இங்கே பிரச்சனையேயில்லை.

2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
> ...
>
> read more »

இராமகி

unread,
Feb 4, 2010, 10:19:49 AM2/4/10
to மின்தமிழ்
Pretty interesting. I just want to be a onlooker and do not want to
give any input of mine. But I think KRS has a point. He wants an
explanation of the date entirely from a different angle and not from
guru-parampara alone. It does not mean he is rejecting it. He wants an
independant confirmation. [This is like asking an independant
confirmation of Mahaviraa's Nirvaana date, other than from the Jain
sources.] Nothing wrong in asking that. Is there an alternative
explanation?

Vijay, You are doing fine in initiating the discussions and proceeding
on the fascinating subject. But this request is genuine. Why not you
attempt?

With regards,
iraama.ki.

On Feb 4, 3:20 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> Continuing on the magic number 1017...
>
> //The horoscopic details provided above can be checked using the
> Indian Ephemeris compiled by L.D.Swamik kannup pillai
> ( ref. An Indian Ephemeris A.D.700 to A.D.1700 by L.D.Swamikannu
> Pillai, Agam Prakashan Delhi, first published 1922, first
> reprinted 1982, p.36) .
> When this is done it is found that there is a complete one to one
> correspondence between the above data
> and the date is 4th April, 1017//
>
> ஆக,
> "குரு பரம்பரை" கணக்கை உண்மை-ன்னு  "நம்பி" எடுத்துக் கொண்டு....
> அதன்படி கணக்கு போட்டுப் பார்த்தால் ஏப்ரல்-4-1017 என்று சொல்லி
> விட்டார்கள்!
>
> இப்போ என் கேள்வி:
> இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!
> ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))
>
> 4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
> எது சரி?
>
> anbudan

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Kumaran Malli

unread,
Feb 4, 2010, 10:22:26 AM2/4/10
to மின்தமிழ்
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இந்த இழையில் இது வரை வந்திருக்கும் எல்லா
அஞ்சல்களையும் படித்துவிடவில்லை; தொடக்க அஞ்சல்களைப் படித்ததில் இருந்து
மீண்டும் சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது.

இந்த ஆய்வு இழை விவாத இழையாக மாறினாலும் ஆய்வு இழையாகவே தொடர வேண்டும்
என்று வேண்டுகிறேன். இரு தரப்புகள் ஏற்பட்டிருக்கிறது; விவாத இழைக்கு அது
இயல்பு. ஆனால் இரு தரப்பும் முன்முடிவுகளுடன் இவ்விவாதத்தில் ஈடுபட்டால்
'யார் வெற்றி பெற்றார்கள்? யார் தோல்வி உற்றார்கள்?' என்பதே முதன்மையாகப்
போய்விடும். அப்படி இன்றி எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்;
உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள். இறுதியில் நாமிருவரும்
ஏற்றுக் கொள்வதையே முடிவாகக் கொள்வோம் என்று நினைத்தால் இவ்விவாதத்தைத்
தொடரலாம்.
இல்லையேல் இது வெறும் சேற்றை வாரியிறைப்பதாக முடிந்து போகும்.

விஜய்/திவாகர் ஐயா & அவர்கள் சார்பாக இருப்பவர்களுக்கு: இரவிசங்கரும்
அவருக்குச் சார்பாக இருப்பவர்களும் எடுத்து வைக்கும் தரவுகள்/சான்றுகளின்
அடிப்படையில் ஒரு கருத்து உறுதிப்பட்டால், அது நீங்கள் இப்போது
கொண்டிருக்கும் கருத்துக்கு நேர் மாறாக இருந்தாலும், அதனை ஏற்றுக்
கொள்வீர்களா?

இரவிசங்கர் & அவர் சார்பாக இருப்பவர்களுக்கு: விஜயும் திவாகர் ஐயாவும்
அவர்களுக்குச் சார்பாக இருப்பவர்களும் எடுத்து வைக்கும் தரவுகள்/
சான்றுகளின் அடிப்படையில் ஒரு கருத்து உறுதிப்பட்டால், அது நீங்கள்
இப்போது கொண்டிருக்கும் கருத்துக்கு நேர் மாறாக இருந்தாலும், அதனை
ஏற்றுக் கொள்வீர்களா?

நீங்கள் பொதுவில் பதில் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் மனசாட்சியாக பதில்
சொல்லிக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் விவாதத்தைத்
தொடருங்கள். இல்லையேல் பேசாமல் இருப்பதே மேல்! விவாதத்தைத் தொடர்ந்தால்
ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

என் பதில்: நான் ஏற்றுக் கொள்வேன். அதனால் இப்பேச்சைத் தொடர்கிறேன்.
தற்போதைக்கு என் சார்பு நிலை என்ன என்பது இனி நான் எழுதுவதில் இருந்து
தெரியும். ஆனால் என் சார்பு நிலை தகுந்த தரவுகள்/சான்றுகளைக் கண்டு
நிச்சயம் மாறும்.

Kumaran Malli

unread,
Feb 4, 2010, 10:30:05 AM2/4/10
to மின்தமிழ்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரைப் புகழ்வதற்காக இது வரை வாழ்ந்த
ஸ்ரீவைஷ்ணவர்களை எல்லாம் பழித்திருக்கிறது கோவிலொழுகு முன்னுரை.
கூரத்தாழ்வான் வாழ்க்கையில் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சிகளைப் பேசும்
போது, ஒருவரைப் புகழ மற்றவரைத் தாழ்த்தத் தேவையில்லை; அப்படிப்
புகழாமலேயே 'கதை நல்ல கருவுடன்' இருக்கிறது என்று சொன்ன விஜய், இங்கே
இந்த முன்னுரையில் ஒருவரைப் புகழ மற்றவரைத் தாழ்த்துவதை வரலாற்று
உண்மையாக எப்படி எடுத்துக் கொள்கிறார்? இதற்கு எனக்குப் பதில்
தேவையில்லை. அவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. தனக்குச்
சாதகமாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்வதும், தன் கருத்துக்கு மாற்றாக
இருந்தால் அதனை 'தவறான கருத்துகள்; அதற்குத் தேவையற்ற விளம்பரம்' தன்னால்
வரவேண்டாம் என்பதும் நேர்மை தானா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். 'தனக்கு
வேண்டும் என்பதை மட்டும் படித்து விட்டு, அதில் தனக்கு பிடித்தவை மட்டும்
எடுத்துக் கொள்வது குறுகிய பார்வை' என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இப்போது விஜய் கட்டம் கட்டிய பகுதிக்குத் தொடர்பான இன்னொரு விசயம்.
கல்வெட்டுகள் போன்ற சான்றுகளைப் பற்றி கவலைப்படாமல் மரபாகச் சொல்லி வரும்
செய்திகளை உண்மை என்று சொல்வதை ஸ்ரீவைஷ்ணவர்கள் மட்டும் தான் செய்து
வந்தார்களா? கூன் பாண்டியன் யார்? பாண்டியப் பேரரசன் ஒருவன் சைவர்களைக்
கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தானா? சம்பந்த பெருமான் புனல் வாதம், அனல்
வாதம் செய்தது உண்மை தானா? சம்பந்தப் பெருமானின் தூண்டுதலினாலோ தூண்டுதல்
இன்றியோ பாண்டியப் பேரரசன் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினானா?
சோழர்களைச் சில நூற்றாண்டுகள் தலையெடுக்க விடாத பெரும் பேரரசர்களான
பல்லவர்களின் ஒருவன் அப்பரை கல்லுடன் கடலில் தள்ளினானா?
சுண்ணாம்புக்காளவாயில் தள்ளினானா? யார் அந்தப் பல்லவன்? இக்கேள்விகளுக்கு
எல்லாம் பெரிய புராணம் முதலிய சைவ சமய நூல்களை விடுத்து வேறு ஏதேனும்
கல்வெட்டுகளைக் கொண்டு உண்மை அறிய வேண்டும் என்ற ஆவலும் செயல்பாடும்
பொதுவாகத் தமிழர்களுக்கு இருந்ததா? ஒன்றிரண்டு பேர்களை காட்ட இயலும்
என்றே நினைக்கிறேன். ஆனால் பொதுவாக சைவப் பெருமக்களை உள்ளிட்ட தமிழர்கள்
பெரிய புராணத்தை ஆதரவாகக் காட்டினார்களா, கல்வெட்டுகளைக் காட்டினார்களா?
ஒரே வரியில் என்ன சொல்ல வருகிறேன் என்று சொல்கிறேன் - இந்த மன நிலை
ஸ்ரீவைஷ்ணவர்களை மட்டும் சார்ந்தது இல்லை; மொத்த தமிழ்ச் சமுதாயமும்
அப்படியே தான் இருந்தது; இருக்கிறது. இன்றைக்கும் இக்கேள்விகளுக்குப்
பதில்கள் கேட்டால் கீதாம்மாவும் திவாகர் ஐயாவும் இன்னும் பலரும் பெரிய
புராண வரிகளைத் தான் சான்றாகக் காட்டுவார்கள். எப்படி மொத்தத் தமிழ்ச்
சமுதாயத்தில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் சமய நூல்கள் காட்டுவதையே
உண்மையென்று சொன்னார்களோ அதே போல் தான் ஸ்ரீவைஷ்ணவர்களிலும் ஒரு சிலரைத்
தவிர மற்றவர்கள் எல்லோரும் சமய் நூல்களை மட்டுமே சான்றாகக் கொண்டார்கள்;
கொள்கிறார்கள். ஒருவரைப் புகழ்வதற்காக மற்ற எல்லோரையும் தவறாகக் கூறியது
'முன்னுரை எழுதியவரின்' பெருந்தவறு; அதனை எடுத்துக் காட்டிக் கட்டம்
கட்டுவது விஜயின் நிலைப்பாட்டிற்கும் ஏற்புடையதில்லை; பொதுவான
ஏரணத்திற்கும் ஏற்புடையதில்லை.

Kumaran Malli

unread,
Feb 4, 2010, 10:30:53 AM2/4/10
to மின்தமிழ்
கல்லறை என்ற சொல்லைப் பற்றி ஒரு சிறு குறிப்பு: தற்காலத்தில் இடுகாட்டில்
இருக்கும் சமாதி என்ற பொருளில் கல்லறை என்ற சொல் புரிந்து
கொள்ளப்படுகிறது. ஆனால் கோவிலொழுகு சொல்லும் கல்லறை என்ற சொல்லுக்கு
கல்லால் செய்யப் பட்ட ஒரு அறை என்பது மட்டுமே பொருள். இந்தப் பொருள்
வேறுபாடு எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்றாலும் நண்பர் விஜய் அதனைச்
சாதுர்யமாக 'கல்லறை ஆராய்ச்சியோ கல்வெட்டு ஆராய்ச்சியோ' என்று சொன்னதால்
சட்டென்று படிக்கும் போது தோன்றும் பிம்பத்தினால் யாரும் வேறு மாதிரி
நினைத்துவிடக் கூடாது என்பதால் இந்த விளக்கம்.

Kumaran Malli

unread,
Feb 4, 2010, 10:31:55 AM2/4/10
to மின்தமிழ்
என் நிலைப்பாட்டையும் சொல்லிவிடுகிறேன். இது வரை சொன்னதை வைத்து நானும்
வைணவச் சார்புடையவன் என்று தெரிந்திருக்கும். அது உண்மை தான். அதனை
மறுக்க மாட்டேன். ஆனால் அதே நேரத்தில் கோவிலொழுகு போன்ற நூல்களில் வரும்
செய்திகள் கல்வெட்டு போன்ற மற்ற 'சான்றுகளுடன்' ஒத்துப் போனால் தான் சரி;
இல்லையேல் கோவிலொழுகு போன்ற நூல்களின் செய்திகளைக் கேள்வி கேட்கலாம் என்ற
எண்ணமும் செயல்பாடும் கொண்டவன். பெரிய புராணச் செய்திகளைப் பற்றிய
எண்ணமும் அப்படியே. தெய்வத்தின் குரல் சொல்லும் செய்திகளைப் பற்றிய
எண்ணமும் அப்படியே. வைணவச் சார்புடையவன் என்பதால் வைணவர்களைத் தாக்கி
பெரிய புராணமோ தெய்வத்தின் குரலோ ஏதேனும் சொன்னால் துணுக்குறுபவன் தான்.
ஆனால் அதே நேரத்தில் பெரிய புராணமோ தெய்வத்தின் குரலோ முழுக்க முழுக்க
ஒதுக்கப் பட வேண்டியவை என்று எண்ணாதவன்; அவற்றிற்கு பெரும் மதிப்பு
தருபவன். உண்மையைச் சொன்னால் 'துணுக்குற்றாலும்' அவற்றிற்கு எதிராக
எதிர்வினை செய்யாதவன்; ஏனெனில் வேற்றுமையில் ஒற்றுமை காண விரும்புபவன்.

V, Dhivakar

unread,
Feb 4, 2010, 10:32:03 AM2/4/10
to mint...@googlegroups.com
Dear Kumaran,
 
The basic is not at all right. Here is no two parties. I do not know how you have come to this conclusion.
 
But everybody, including KRS, Shivan ji, and myself added some inputs to Vijay's post, that's all. Please add your views too.
 
Kindly consider it very positively as I am not at all interested in  competition or debate.
 
I know KRS and I know Vijay and I know Shivan ji.
 
If you feel it is debate like this, I will immediately withdraw from here.
 
Dhivakar.
 


 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kumaran Malli

unread,
Feb 4, 2010, 10:33:02 AM2/4/10
to மின்தமிழ்

இரவிசங்கர், நீங்கள் அரங்கனைத் துணை கொள்கிறீர்கள். ஆனால் விஜயோ நானோ
திவாகர் ஐயாவோ மற்றவர்களோ இதில் அரங்கனைத் துணை கொள்வோமோ என்று
தெரியவில்லை. அரங்கனைத் துணை கொள்வது 'வெறும் நம்பிக்கை'யின் பாற்பட்டது;
ஆய்வுகள் வேறு; நம்பிக்கை வேறு; என்று எண்ணுபவர்கள் நாங்கள். இல்லை
அரங்கனின் துணையே பெரிது கல்வெட்டு முதலிய சான்றுகளைப் பெரிதாக
எண்ணவில்லை என்று சொல்லி யாரும் நான் சொன்னதை மறுக்க மாட்டார்கள் என்று
நினைக்கிறேன். சரி தானா? :-)

Kumaran Malli

unread,
Feb 4, 2010, 10:50:58 AM2/4/10
to மின்தமிழ்
Dear Dhivakar Sir,

Please do not withdraw. If there is really no debate or competition
here, then my points are very well valid. We are here together to work
towards the same goal. So, no name calling or anything like that - at
least in this thread. If there are name calling and punch dialogues it
definitely feels like debate and competition.

I also want to have the tone of the discussions to be similar to your
tone. Your tone has not been challenging or criticizing, at least in
this thread. Please continue that. And I request everyone, including
myself, to have that kind of polite tone in our discussions. I will
refrain from pointing fingers from now onwards and write in the most
humblest possible way.

Thanks and Regards,
Kumaran.

On Feb 4, 9:32 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> Dear Kumaran,
>
> The basic is not at all right. Here is no two parties. I do not know how you
> have come to this conclusion.
>
> But everybody, including KRS, Shivan ji, and myself added some inputs to
> Vijay's post, that's all. Please add your views too.
>
> Kindly consider it very positively as I am not at all interested in
> competition or debate.
>
> I know KRS and I know Vijay and I know Shivan ji.
>
> If you feel it is debate like this, I will immediately withdraw from here.
>
> Dhivakar.
>

> Dhivakarhttp://www.vamsadhara.blogspot.comhttp://aduththaveedu.blogspot.com- Hide quoted text -

Subashini Tremmel

unread,
Feb 4, 2010, 10:52:46 AM2/4/10
to mint...@googlegroups.com


2010/2/4 Kumaran Malli kumara...@gmail.com



இந்த ஆய்வு இழை விவாத இழையாக மாறினாலும் ஆய்வு இழையாகவே தொடர வேண்டும்
என்று வேண்டுகிறேன். இரு தரப்புகள் ஏற்பட்டிருக்கிறது; விவாத இழைக்கு அது
இயல்பு. ஆனால் இரு தரப்பும் முன்முடிவுகளுடன் இவ்விவாதத்தில் ஈடுபட்டால்
'யார் வெற்றி பெற்றார்கள்? யார் தோல்வி உற்றார்கள்?' என்பதே முதன்மையாகப்
போய்விடும். அப்படி இன்றி எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்;
உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள். இறுதியில் நாமிருவரும்
ஏற்றுக் கொள்வதையே முடிவாகக் கொள்வோம் என்று நினைத்தால் இவ்விவாதத்தைத்
தொடரலாம்.
இல்லையேல் இது வெறும் சேற்றை வாரியிறைப்பதாக முடிந்து போகும்.
 
இது அருமையான பார்வை. வெற்றி தோல்வி யாருக்கு அல்லது யாருடைய கருத்துக்கு என்பதை விட சரித்திர வரலாற்று உண்மைகளை இந்த விவாதம் தேடுவதற்கு உதவினால் அதுவே சிறந்த ஆய்வு முடிவுக்கு துணை புரியும். சமயம் என்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்று. அதே வேளை இறைவன், இறைமை என்பது பொது என்பதை உணர்ந்தால் ஒன்றை ஏற்றி மற்றொன்றை குறைத்துப் பார்க்கும் மனப்பான்மை இருக்காது( இது தனிப்பட்ட முறையில் நான் கொண்டிருக்கும் கொள்கையே தவிர இந்த இழை அது தொடங்க காரணமாக இருந்த இழை பற்றிய கருத்தல்ல. ) ஆய்வுப்பூர்வமான கலந்துரையாடல் தொடரட்டும்.
 
சுபா

வினோத் ராஜன்

unread,
Feb 4, 2010, 11:12:20 AM2/4/10
to மின்தமிழ்
//கூன் பாண்டியன் யார்? பாண்டியப் பேரரசன் ஒருவன் சைவர்களைக்

கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தானா? சம்பந்த பெருமான் புனல் வாதம், அனல்
வாதம் செய்தது உண்மை தானா? சம்பந்தப் பெருமானின் தூண்டுதலினாலோ
தூண்டுதல்
இன்றியோ பாண்டியப் பேரரசன் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினானா?
சோழர்களைச் சில நூற்றாண்டுகள் தலையெடுக்க விடாத பெரும் பேரரசர்களான
பல்லவர்களின் ஒருவன் அப்பரை கல்லுடன் கடலில் தள்ளினானா?
சுண்ணாம்புக்காளவாயில் தள்ளினானா? யார் அந்தப் பல்லவன்?
இக்கேள்விகளுக்கு
எல்லாம் பெரிய புராணம் முதலிய சைவ சமய நூல்களை விடுத்து வேறு ஏதேனும்
கல்வெட்டுகளைக் கொண்டு உண்மை அறிய வேண்டும் என்ற ஆவலும் செயல்பாடும்
பொதுவாகத் தமிழர்களுக்கு இருந்ததா? ஒன்றிரண்டு பேர்களை காட்ட இயலும்
என்றே நினைக்கிறேன். ஆனால் பொதுவாக சைவப் பெருமக்களை உள்ளிட்ட தமிழர்கள்
பெரிய புராணத்தை ஆதரவாகக் காட்டினார்களா, கல்வெட்டுகளைக் காட்டினார்களா?
ஒரே வரியில் என்ன சொல்ல வருகிறேன் என்று சொல்கிறேன் - இந்த மன நிலை
ஸ்ரீவைஷ்ணவர்களை மட்டும் சார்ந்தது இல்லை; மொத்த தமிழ்ச் சமுதாயமும்
அப்படியே தான் இருந்தது; இருக்கிறது.//

சத்யம் சத்யம் புனர் சத்யம் !

V

On Feb 4, 8:52 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> 2010/2/4 Kumaran Malli kumaran.ma...@gmail.com

shivan .

unread,
Feb 4, 2010, 11:13:02 AM2/4/10
to mint...@googlegroups.com
/இப்போ என் கேள்வி:

இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!
ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))

4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
எது சரி?/

இதில் குழப்பம் ஏதுமில்லை.

நீங்கள் சொல்வது போல் 4th April, 1017 என்று வந்தாலும் சித்திரை என்பது சரியே.

இராமர் சித்திரை மாதம் பிறந்தார் என்பார்கள். ஆனால் பங்குனியில்தான் இராம நவமி வரும். ஏனெனில் வடக்கில் உள்ள சைத்ர மாதம் சற்று முன்னதாகவே தொடங்கி விடும்.

அதையும் தமிழில் சித்திரை என்றுதான் சொல்வார்கள். ஆவணி அவிட்டத்தை சில சமயம் ஆனியில் கொண்டாட நேருவதும் இதனால்தான்.

2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
Continuing on the magic number 1017...
> ...
>
> read more »

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

வினோத் ராஜன்

unread,
Feb 4, 2010, 11:14:33 AM2/4/10
to மின்தமிழ்
நான் எழுத வேண்டும் என்று நினைத்ததை அச்சு அசலாக நீங்கள்
எழுதிவிடீர்கள் .

Same Pinch :P

V

shivan .

unread,
Feb 4, 2010, 11:19:35 AM2/4/10
to mint...@googlegroups.com
ம்ஹூம். இது சரியில்லை.

எதிரே பேசுபவர் முன் கூட்டி ஒன்றை தீர்மானித்து பேசுகிறார் என மறு தரப்பு எண்ணும் பட்சத்தில் நடப்பது விவாதமாகவே இருக்காது.

உண்மையை சொன்னால், நிரூபணமனால் இவர் ஒத்துக் கொள்வார் என்ற நம்பிக்கைதான் விவாதத்திற்கு நல்லது.

உண்மையில் எதிர் தரப்புக்கு முன் கூட்டிய தீர்மானம் இருக்கிறது என நம்பும் பட்சத்தில் விவாதத்தில் கலந்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

ஏனெனில், இந்த எண்ணமே விவாதத்தை விதண்டாவாதமாக மாற்றி விடும் என்பது என் பணிவான கருத்து.

2010/2/4 Kumaran Malli <kumara...@gmail.com>

shivan .

unread,
Feb 4, 2010, 11:34:12 AM2/4/10
to mint...@googlegroups.com
/ 2. 120 வயது வரை வாழ்ந்தார் என்பதும் அப்படியே!

 (எனக்கு ஒரு மனிதர் 120 ஆண்டுகள் வாழ முடியுமா என்பதிலேயே சந்தேகம்
உள்ளது...ஆனால் தற்சமயத்துக்கு இதை விடுவோம்)/

ஒருவர் 120 வயதிற்கு மேல் வாழ முடியும் என்பதற்கு சமீப காலத்திலேயே ஒரு ஆணித்தரமான ஆதாரம் இருக்கிறது.

தேவ்ரஹ பாபா என்பவர் பிருந்தாவனத்தில் இருந்தவர். பார்பதற்கு அறுபது வயது அகவை கொண்டவர் போலிருப்பார்.

 அவரைப் பற்றி இந்தியாவின் முதல் ஜனாதிபதி பாபு இராஜேந்திர பிரசாத் சொன்னது:
"நான் சிறுவனாய் இருந்தப் போது என் தந்தையாருடன் இவரை தரிசித்தேன். அப்போதும் இவர் இப்படித்தான் இருந்தார்."

அதை சொன்னப்போது பாபு இராஜேந்திர பிரசாத்திற்கு எழுபது வயதிற்கு மேல்.

அதற்குப் பிறகும் 1989ஆம் வருடம் வரை தேவ்ரஹ பாபா இருந்தார்.



2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
Now,
> > உணரும் மனப்பக்குவம் கொண்டவர்கள் - மேலே படியுங்கள்.
>
> > *வரலாறு  ஏன் முக்கியம் தெரியுமா. நடந்ததை நடந்தவாறு இருதரப்பு குறிப்புகளையும்
> > கொண்டு நிரூபணம் செய்யும் வண்ணம் ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும்.*
>
> > கல்கி கதை எழுதினார் - கதை விடவில்லை - அப்படி என்றால் என்ன - வரலாற்று
> > நிகழ்வுகளை அவர் திரித்து எழுதவில்லை.  சில மாதங்களுக்கு முன்னர் இது *ஒரு
> > ஹாரத்தின் கதை *என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இங்கே இட்டேன். பொன்னியின் ச்லேவன்
> > குழுமத்தின் நிகழ்ச்சி மலரில் வெளி வந்த கட்டுரை.  யாரும் படிக்க வில்லை என்று
> > நினைக்கிறேன் - சரி , அதில் ஒரு பாதியை இங்கே இடுகிறேன். படித்துவிட்டு கதை
> > எப்படி வரலாற்றுடன் ஒற்று இருக்கிறது என்பதைபாருங்கள்.
> > *>>>>>>>>>>>>>>
> > பொன்னியின் செல்வன். *
> > *தியாக சிகரம் - அத்தியாயம் 58*
>
> > *கருத்திருமன் கதை*
> > *
> > பாண்டிய அரசர் சில தினங்களுக்குப் பிறகு இலங்கை அரசரின் அரண்மனைக்கு வந்து
> > சேர்ந்தார். இரு மன்னர்களும் சேர்ந்து இலங்கையின் தென்கோடியில் மலைகள்
> > சூழ்ந்திருந்த ரோஹண நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில தினங்கள்
> > தங்கியிருந்தார்கள். கருத்திருமன் பேரில் பிரியம் கொண்ட பாண்டிய மன்னர்
> > அவனையும் தம்முடன் அழைத்துப் போனார். ரோஹண நாட்டில் பல இடங்களையும் இலங்கை
> > அரசர் பாண்டிய மன்னருக்குக் காட்டினார். கடைசியாக, யாரும் எளிதில் நெருங்க
> > முடியாத ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மலைக் குகையில்
> > அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்கள், விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் முதலியவை
> > வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, இலங்கை அரசர் ஒரு
> > தங்கப் பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினார்.
>
> ...
>
> read more »

V, Dhivakar

unread,
Feb 4, 2010, 11:36:27 AM2/4/10
to mint...@googlegroups.com
>>>வரலாறு மிகவும் முக்கியம். ஒரு பிரிவின்  அடையாளத்தை விட ஒரு நாட்டின் , ஒரு சமூகத்தின் அல்லது  ஓர் சமுதாயத்தின் அடிப்படை உணமைகளை வெளிப்படுத்தும் வரலாறு மிகவும் முக்கியம். இன்று நான் யார் என்று தெரியாமல் ஏது உண்மை ஏது பொய் என்று திண்டாடும்  நமக்கு  ஆயிரம் இல்லை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு   முன்னரே நீ ஒரு உயர்ந்த நிலையில் இருந்தாய்  என்பதை உணர்த்தும் உன்னதம் வரலாறு<<<
 
This is what Vijay started, and so far till evening (in India), it was going with strong points.
 
KRS asked why 'nakkal' from Vijay. But It was only a passing cloud with suitable give back and this is natural.Probably both have not taken it seriously I think.
 
Dear Kumaran, Kindly do not treat this as Shiva-Vishnu debates, I tell you I have my Gurus who are born as Vaishnavites. If  you are practising Vaishnavite, it is wonderful. But practising faith is strictly individual.  
 
At the same time was it necessary to bring such serious notes on Shiva and Sambanthar and Koon pandiyan here?.
 
My basic request to you and every one is same what I requested to give authentic details if possible to strengthen this informations.
 
Dear Subha,
 
I welcome your views.
 
Dear Vinodh,
 
Your views I understand. But this was answered earlier also suitably. Let us not divert the topic.
 
Dear Vijay,
You are so far giving wonderful informations, please continue. Your search will bring good fruits, I beleive.
 
Dhivakar
 
 
 


 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 12:48:40 PM2/4/10
to மின்தமிழ்
Vijay

//என்ன நண்பரே - கல்வெட்டு குறிக்கும் தேதி நாள் நட்சத்திரம் - அரியணை


எரிய நாள்
- எல்லாம் எப்படி தெளிவாக கணிக்கப்பட்டு - கல்லில் பொரிக்க வைத்து -
இன்றும்

உண்மையை பேசிக்கொண்டுள்ளனர் - சோழர்//

* சோழர் "உண்மையை" பேசினார்களா?
* குரு பரம்பரை "பொய்" பேசியதா?
* சோழர் கல்வெட்டு மட்டும் தான் "தெளிவாக" கணிக்கப்பட்டு உள்ளதா?
* பாண்டியன் கல்வெட்டு அப்படி இல்லையா?
* சோழ மன்னர்கள் மீது "அவதூறு" சொல்லலாமா? அவர்கள் பண்பாட்டின்
விடிவெள்ளி அல்லவா?
* பாண்டிய மன்னர்கள் (கூன் பாண்டியன்/வரகுண பாண்டியன், அரியமர்த்தன
பாண்டியன்)
- இவிங்க மேல மட்டும் "அவதூறு" சொல்லலாமா? அவர்களும் பண்பாட்டின்
விடிவெள்ளி அல்லவா?

- இது போன்ற இடுக்குகளில் எல்லாம், இப்போது சிக்கிக் கொள்ளத் தேவை
இல்லை!
சமயம் வரும் போது சிக்கிக்கலாம் (அ) சோழர்களின் கொ.ப.செ ஆகி, அவிங்க
அவிங்க புகழ் பாடலாம் :)
- இப்போது let's keep the discussion to rationale & scientific.

//நண்பர் இன்னும் கல்வெட்டு கூறும் உண்மை ஆண்டை முழுவதுமாக நம்பவில்லை


என்று
நினைக்கிறேன். அரை மனதுடன் தொடரை படிக்க வேண்டாம் - உங்கள் ஐயத்தை

போக்க//

விஜய் - உங்கள் கல்வெட்டுத் தகவல்களை "நம்பாமல்" எல்லாம் இல்லை!
I appreciate your efforts for providing us with high quality info.

குலோத்துங்கன் கல்வெட்டுகள் எல்லாம் ஓக்கே தான்! நான் இப்போதைக்கு
மறுக்கலை!
ஆனால் பேசு பொருளில் முக்கியமான ஒன்று: இராமானுசர் பிறந்த தேதி!
அதற்கான கல்வெட்டு ஆதாரங்களை அளித்தால் இன்னும் மகிழ்வோம்!
மற்றபடி, இதர கல்வெட்டுத் தகவல்களைக் காட்டி, "பார்த்தீங்களா எம்புட்டு
வெவரம் இருக்கு? இதான் சோழர்கள் கல்வெட்டு ஸ்பெஷாலிட்டி"-ன்னு பாடாண்
திணை எல்லாம் இப்போது தேவையில்லை!

பேசு பொருளுக்கான கல்வெட்டுத் தகவல்களை மட்டும் அளியுங்கள்!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Kumaran Malli

unread,
Feb 4, 2010, 12:59:33 PM2/4/10
to மின்தமிழ்
//At the same time was it necessary to bring such serious notes on
Shiva and
Sambanthar and Koon pandiyan here?. //

I will come back later as I have not read through all the details
provided in these emails yet. But wanted to give a quick response on
this one only. Yes. It was necessary to bring the references on
Sambanthar, koon paandiyan & samanar, and appar, pallavan & samanar
here as paandiyan and pallavan were also great royal lines, and their
inscriptions are also found in Tamilnadu. Ravishankar pointed out very
well in the following why those points are being made as a response of
the ways the discussions are being made in this thread.

> //என்ன நண்பரே - கல்வெட்டு குறிக்கும் தேதி நாள் நட்சத்திரம் - அரியணை
> எரிய நாள்
> - எல்லாம் எப்படி தெளிவாக கணிக்கப்பட்டு - கல்லில் பொரிக்க வைத்து -
> இன்றும்
> உண்மையை பேசிக்கொண்டுள்ளனர் - சோழர்//
>
> * சோழர் "உண்மையை" பேசினார்களா?
> * குரு பரம்பரை "பொய்" பேசியதா?
> * சோழர் கல்வெட்டு மட்டும் தான் "தெளிவாக" கணிக்கப்பட்டு உள்ளதா?
> * பாண்டியன் கல்வெட்டு அப்படி இல்லையா?
> * சோழ மன்னர்கள் மீது "அவதூறு" சொல்லலாமா? அவர்கள் பண்பாட்டின்
> விடிவெள்ளி அல்லவா?
> * பாண்டிய மன்னர்கள் (கூன் பாண்டியன்/வரகுண பாண்டியன், அரியமர்த்தன
> பாண்டியன்)
> - இவிங்க மேல மட்டும் "அவதூறு" சொல்லலாமா? அவர்களும் பண்பாட்டின்
> விடிவெள்ளி அல்லவா?
>
> - இது போன்ற இடுக்குகளில் எல்லாம், இப்போது சிக்கிக் கொள்ளத் தேவை
> இல்லை!
> சமயம் வரும் போது சிக்கிக்கலாம் (அ) சோழர்களின் கொ.ப.செ ஆகி, அவிங்க
> அவிங்க புகழ் பாடலாம் :)
> - இப்போது let's keep the discussion to rationale & scientific.

I will stop this reference to saiva saints and their life histories
pointing fingers at paandya and pallava, and would not call them as
'thavaRana seithikaL' from now onwards. But it is my sincere wish that
those also need to be researched well - if they have been researched
well without any questions lingering, those details are shared
appropriately - not necessarily in this thread but in a different
thread. It is not a question of saiva vs vaishnava - it is the
question of 'whether cholas' name only got damaged or pandyas' and
pallavas' names also got damaged' and 'our efforts to repair that
damage'.

I am from Madurai and I can definitely pose 'hurt feelings' on reading
the damage rendered to my beloved Pandyas. :-) Just kidding.

I will refrain from mentioning koon pandyan and pallavan from now
onwards.

Thanks,
Kumaran.

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 1:00:28 PM2/4/10
to மின்தமிழ்
@ ஹரி கிருஷ்ணன் ஐயா
//எண்ணிய சகாப்தம் எண்ணூற்றேழு என்று சொல்லப்பட்டிருப்பதனை CEக்கு எந்த

அடிப்படையில் மாற்றுவது என்பதே ஒரு சிக்கலாக
எனக்குப் படுகிறது//
//ஏசுநாதருக்கு சுமார் 600 வருடங்களுக்குப் பிறகுதான் நடைமுறையில் உள்ள

இந்தக் காலக் கணக்கே அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் துல்லியமான கணித
வரையறைகளை திருப்திப்படுத்துமா என்பதே ஐயத்துக்கிடமான ஒன்றாக
இருக்கிறது//

அருமையான எண்ணங்கள்! வாழி!
It has to be approached from both qualitative & quantitative angles!
குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி, மிக்க கொளல் - என்ற
ஐயன் வழியே எந்தவொரு வரலாற்று ஆய்வுக்கும், பற்றுக் கோடாய் இருக்க
வல்லது!
உங்கள் மேலான சிந்தனைகளுக்கு என் உவகை!

@ இராம.கி ஐயா
//But I think KRS has a point. He wants an explanation of the date


entirely from a different angle and not from
guru-parampara alone. It does not mean he is rejecting it. He wants an

independant confirmation//

Exactly!
மிகச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள் ஐயா!
I am neither operating on an "historical-chozha anbu" angle nor on a
"religious-vaishnava aachara" angle.
I just want this whole process to be "rational & scientific"
Quality of Data Input is directly proportional to the Quality of Data
Output - Birth Date is a "very critical" data factor here!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 4, 7:44 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/4 vj kumar <vj.epist...@gmail.com>...


>
> > நண்பர் இன்னும் கல்வெட்டு கூறும் உண்மை ஆண்டை முழுவதுமாக நம்பவில்லை என்று
> > நினைக்கிறேன். அரை மனதுடன் தொடரை படிக்க வேண்டாம் - உங்கள் ஐயத்தை போக்க
>
> விஜே,
>
> இந்த இழையைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.  காலக் கணக்குகளில் நான்
> கெட்டிக்காரனில்லை.  கம்பனில் எந்தச் செய்யுளை, எந்த இடத்தைச் சொன்னாலும்
> என்னால் புத்தகத்திலிருந்தாவது அதை உடனடியாக எடுக்க முடியும்.  அவ்வளவு முறை
> படித்தாயிற்று.  இருந்தாலும், கம்பனின் காலம் என்ன என்ற கேள்வி எழுமானால், நான்
> மௌனமாக இருப்பதையே விரும்புவேன்.  கேட்டுக்கொள்ளலாம்.  அதற்குமேல் என்னால்
> இயலாது.  என்னைக் கேட்டால், கம்பராமாயணத்திலிருந்து அதன் ஆசிரியரைப் பற்றி என்ன
> தெரியவருகிறது என்றால், ‘கம்பராமாயணம்’ என்ற பெயரால் வழங்கப்பட்டு வருவதால்,
> இந்தக் காப்பியத்தைக் கம்பன் என்ற ஒருவன் இயற்றியிருக்க வேண்டும்; அவன்
> தமிழனாகத்தான் இருக்கவேண்டும்; ஆழமான கல்வி உடையவனாக இருந்திருக்க வேண்டும்.
>  ஆனால், அவன் பெயர் கம்பன்தானா என்பது எனக்குத் தெரியாது.  ஏனெனில், தன் பெயரை
> அவன் ராமாயணம் நெடுகிலும் எங்கேயும் சொல்லிக் கொள்ளவில்லை.  அதிகம் போனால்
> வெண்ணைநல்லூர் சடையன் என்பவன் அவனை ஆதரித்தான் என்பது மட்டும்தான் அவன்
> வாழ்க்கைக் குறிப்பு; அகச்சான்று.  கம்பன் இயற்றியதாகச் சொல்லப்படும் மற்ற

> நூல்களெல்லாம், என் வரையில், கம்பன் இயற்றியதாகச் *சொல்லப்படுபவை*.  அவ்வளவே.

>  (அந்த ஆசாமி என்னடான்னா, ‘அனைத்தானும் ஆன்ற *பயனைத் *தரும் அப்படின்னு சொல்லக்
> காணும்.... ஆன்ற *பெருமை *தரும் அப்படின்னு எடக்குப் பண்ணிட்டுப்


> போயிருக்காரு...:)) இந்த எடக்காளிய என்ன பண்றது அப்படின்னு எனக்குத் தெரியல...)
>   அனைத்தானும் ஆன்ற பயனைத் தருவீர்கள் என்ற உறுதியில்
> பின்தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.)
>
> கேள்விகள் சம்பந்தமில்லாதவை போல் தோன்றினால், விடையளிக்க சிரமப்பட வேண்டாம்.
>  பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்ற திருப்தி
>

> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 1:11:35 PM2/4/10
to மின்தமிழ்
@ Kumaran
//இரவிசங்கர் & அவர் சார்பாக இருப்பவர்களுக்கு://

Ha ha ha!
Kumaran - Do you think I am in the opposite side? Actually I am
helping Vijay! :)
I am facilitating transparent analysis!

//விஜயும் திவாகர் ஐயாவும் அவர்களுக்குச் சார்பாக இருப்பவர்களும் எடுத்து


வைக்கும் தரவுகள்/சான்றுகளின் அடிப்படையில் ஒரு கருத்து உறுதிப்பட்டால்,
அது நீங்கள் இப்போது கொண்டிருக்கும் கருத்துக்கு நேர் மாறாக இருந்தாலும்,

அதனை ஏற்றுக் கொள்வீர்களா?//

நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன்!
இதை பல முறை, பதிவுகளில் நீங்களே பார்த்திருப்பீர்கள்!

தசாவதாரம் படம் வந்த போது,
* ரங்கராஜ நம்பி = புனைவுப் பாத்திரம்
* கடலுள் சிலை சென்றமை மட்டுமே = வரலாற்று குறிப்புகள் இருக்கு-ன்னு
பதிவு எழுதியவன் தானே நான்?
Kamal Hassan & his naked lies-ன்னு பதிவு போட்டு, All India Kamal Fans
மற்றும் கொஞ்சம் வைணவர்கள் கூட என் மேல கோச்சிக்கிட்டாங்களே? ஞாபகம்
இருக்கா? :))

அது சைவமோ/வைணவமோ, சோழமோ/பாண்டியமோ...
இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டில்லை!
எத்தன்மைத்தாயினும், மெய்ப் பொருள் காண்பது மட்டுமே நோக்கம்!
அந்தப் பாதையில்..."முன்னம் எழுதினான் ஓலை பழுது...இழுகினான் ஆகாப்ப
தில்லையே" என்ற சங்கத் தமிழ் நெறியே, நெறி!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 1:23:57 PM2/4/10
to மின்தமிழ்
@ குமரன்
//ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரைப் புகழ்வதற்காக இது வரை வாழ்ந்த
ஸ்ரீவைஷ்ணவர்களை எல்லாம் பழித்திருக்கிறது கோவிலொழுகு முன்னுரை//

விஜய் கொடுத்திருக்கும் சுட்டி - "கல்வெட்டுகளை" வைணவர்கள் அவ்வளவாக
மதிக்கவில்லை - என்று சும்மா காட்டுவதற்காக, ஒரு சுவையான முன்னுரை
கொடுத்தார்! அவ்வளவே!

அந்த நூல், ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ பதிப்பகம், அதன் விவரணமாக எழுதிய கோயில் ஒழுகு
தானே தவிர...
அது மூல நூல் - கோயில் ஒழுகு இல்லை!
மூல வரிகள் சில இடம் பெற்றிருப்பினும் - அதன் பத்தி பத்தியான விவரணம் -
இவர்கள் எழுதியது!

//இரவிசங்கர், நீங்கள் அரங்கனைத் துணை கொள்கிறீர்கள். ஆனால் விஜயோ நானோ


திவாகர் ஐயாவோ மற்றவர்களோ இதில் அரங்கனைத் துணை கொள்வோமோ என்று
தெரியவில்லை. அரங்கனைத் துணை கொள்வது 'வெறும் நம்பிக்கை'யின்

பாற்பட்டது;//

அட, நான் எங்கே துணை கொண்டேன், குமரன்?
நான் "நாமக்காரன்" இல்லப்பா! அதான் இராமானுசர் பிறந்த தேதியிலேயே கை
வைக்கிறேனே! :)))
அரங்கன் தலையில் தட்டி வைக்கிறேன்-ன்னு தானே சொன்னேன்! ச்ச்ச்சும்மா
வெளையாட்டுக்குத் தான்! அரங்கன் தானே அத்தனைக்கும் மெளன சாட்சி...வாயைத்
தொறடா, முத்தா உதிர்ந்துரும்?-ன்னு ஒரு அதட்டல்! :)

சீரியசா கல்வெட்டு, புல்வெட்டு-ன்னு பேச்சுக்கு நடுவே, கொஞ்சம்
இளைப்பாறிக்க வேணாமா?
We are all scientists and We need to laugh in between experiments :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 1:39:22 PM2/4/10
to மின்தமிழ்
@ Shivan Sir

//இதில் குழப்பம் ஏதுமில்லை.


நீங்கள் சொல்வது போல் 4th April, 1017 என்று வந்தாலும் சித்திரை என்பது

சரியே//

Not Acceptable!
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே - என்று It is very very
explicit!

//இராமர் சித்திரை மாதம் பிறந்தார் என்பார்கள். ஆனால் பங்குனியில்தான்
இராம நவமி
வரும்//

Nopes!
இராமர் பிறந்தது பங்குனி மாதம் தான்!
சைத்ர வேறு - சித்திரை வேறு! அது சந்திரமானம், இது செளரமானம்!
ஒன்னு பங்குனி-ன்னு சொல்லுங்க...இல்லாக்க்காட்டி சைத்ரம்-ன்னு
சொல்லுங்க!
நடுவில் சித்திரை-யை நுழைத்து, "அதான்-ப்பா இது!" என்பது வேண்டாம்! :)

//உண்மையை சொன்னால், நிரூபணமனால் இவர் ஒத்துக் கொள்வார் என்ற
நம்பிக்கைதான் விவாதத்திற்கு நல்லது//

அதே தான் உங்களுக்கும்!
நிரூபணங்களில், கேள்வி கேட்டு, அதன் அடிப்படை தவறு என்று சான்றுகளோடு
காட்டினால்,
ஒத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை தான் விவாதத்திற்கு நல்லது! :)

//ம்ஹூம். இது சரியில்லை. எதிரே பேசுபவர் முன் கூட்டி ஒன்றை தீர்மானித்து


பேசுகிறார் என மறு தரப்பு

எண்ணும் பட்சத்தில் நடப்பது விவாதமாகவே இருக்காது//

அதே தான் உங்களுக்கும்! :)
முன் கூட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்தப் பேசு பொருளுக்கு, வலுச்
சேர்க்கத் தானே விவாதமே நடக்கிறது?
அப்படி இருக்க, எதிரே பேசுபவர் முன் கூட்டி தீர்மானித்துப் பேசுகிறார்
என்று சுட்டு விரல் நீட்டாதீர்கள்! :)

அவரவர் அவரவர் தீர்மானங்களில் இருந்து பேசுவது தான் விவாதம்!
எனவே இங்கே "தீர்மானம்" முக்கியம் இல்லை! "அறிவுப் பூர்வமான வழிமுறைகளே"
முக்கியம்!
Itz not the objective that matters, but the approach that matters! -
Scientific Problem Solving Approach!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 4, 11:13 am, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> /இப்போ என் கேள்வி:
> இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!

> ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))...
>
> read more »


>
> 4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
> எது சரி?/
>
> இதில் குழப்பம் ஏதுமில்லை.
>
> நீங்கள் சொல்வது போல் 4th April, 1017 என்று வந்தாலும் சித்திரை என்பது சரியே.
>
> இராமர் சித்திரை மாதம் பிறந்தார் என்பார்கள். ஆனால் பங்குனியில்தான் இராம நவமி
> வரும். ஏனெனில் வடக்கில் உள்ள சைத்ர மாதம் சற்று முன்னதாகவே தொடங்கி விடும்.
>
> அதையும் தமிழில் சித்திரை என்றுதான் சொல்வார்கள். ஆவணி அவிட்டத்தை சில சமயம்
> ஆனியில் கொண்டாட நேருவதும் இதனால்தான்.
>

> 2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> > > > > சரி, இந்த- Hide quoted text -

shivan .

unread,
Feb 4, 2010, 1:45:58 PM2/4/10
to mint...@googlegroups.com
 உங்களின் இந்த மடல் குழப்பியது போல் வேறு எதுவுமே என்னை குழப்பவில்லை.

தடாலென Not Acceptable! என்கிறீர்; திடீரென  Nopes என்கிறீர்; சம்பந்தமேயில்லாமல் ' அதேதான் உங்களுக்கும்' என்கிறீர். அப்படி என்ன explicitஐ கண்டீர்கள்?

உங்கள் வாதம் மிகுந்த குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. என்ன பேச வருகிறீர் என்பதில் குழப்பம் மிஞ்சுகிறது! 

என்னதான் சொல்ல வருகிறீர்?

தெளிவாக சொல்லுங்கள்.

சைத்ர எப்படி சித்திரை ஆகாது என்கிறீர்?

அவர்கள் சந்திரமானத்தில் சொல்லவில்லை என்று எப்படி தெரிந்தது?

/அப்படி இருக்க, எதிரே பேசுபவர் முன் கூட்டி தீர்மானித்துப் பேசுகிறார்
என்று சுட்டு விரல் நீட்டாதீர்கள்! :)/

அப்படி யாரை நான் நினைத்தேன்? யாரையுமே அப்படி நினைக்கவில்லையே!





2010/2/5 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

--

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 1:51:24 PM2/4/10
to மின்தமிழ்
@ Shivan Sir
//ஒருவர் 120 வயதிற்கு மேல் வாழ முடியும் என்பதற்கு சமீப காலத்திலேயே

ஒரு
ஆணித்தரமான ஆதாரம் இருக்கிறது.
தேவ்ரஹ பாபா என்பவர் பிருந்தாவனத்தில் இருந்தவர். பார்பதற்கு அறுபது வயது
அகவை
கொண்டவர் போலிருப்பார்//

ஆணித்தரமான ஆதாரம் என்றால் என்ன? "ஆணித்தரம்" என்று முன்னொட்டு போட்டுக்
கொள்வதா?
இந்த பிருந்தாவனம், சமாதி போன்ற விடயங்கள், எல்லாம் மறுபடியும் அதே
"டுபாக்கூர் குரு பரம்பரைக் கதை"-யாகத் தான் போய் முடியும்! :))))
So, please use holistic methods in this discussion!

Maximum Life Span is a measurable in Science.
The oldest recognized person on record is Jeanne Calment, a French
woman who lived for 122 years and 164 days.
I can comprehend 120 years for a person, few centuries back, but he is
tied and not active length and breadth of the country!
Thatz why I said, let's leave the matter for now.

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 4, 11:34 am, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> / 2. 120 வயது வரை வாழ்ந்தார் என்பதும் அப்படியே!
>  (எனக்கு ஒரு மனிதர் 120 ஆண்டுகள் வாழ முடியுமா என்பதிலேயே சந்தேகம்

> உள்ளது...ஆனால் தற்சமயத்துக்கு இதை விடுவோம்)/...
>
> read more »


>
> ஒருவர் 120 வயதிற்கு மேல் வாழ முடியும் என்பதற்கு சமீப காலத்திலேயே ஒரு
> ஆணித்தரமான ஆதாரம் இருக்கிறது.
>
> தேவ்ரஹ பாபா என்பவர் பிருந்தாவனத்தில் இருந்தவர். பார்பதற்கு அறுபது வயது அகவை
> கொண்டவர் போலிருப்பார்.
>
>  அவரைப் பற்றி இந்தியாவின் முதல் ஜனாதிபதி பாபு இராஜேந்திர பிரசாத் சொன்னது:
> "நான் சிறுவனாய் இருந்தப் போது என் தந்தையாருடன் இவரை தரிசித்தேன். அப்போதும்
> இவர் இப்படித்தான் இருந்தார்."
>
> அதை சொன்னப்போது பாபு இராஜேந்திர பிரசாத்திற்கு எழுபது வயதிற்கு மேல்.
>
> அதற்குப் பிறகும் 1989ஆம் வருடம் வரை தேவ்ரஹ பாபா இருந்தார்.
>

> 2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> > > > incidents of his life with specific noble thoughts of some- Hide quoted text -

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 2:14:48 PM2/4/10
to மின்தமிழ்
@ Dhivakar Sir
//At the same time was it necessary to bring such serious notes on
Shiva and
Sambanthar and Koon pandiyan here?//

அதே தான் நானும் கேட்கிறேன்!
//கூரத்தாழ்வார் காலத்தில், அவரை ஒரு தீய புத்தி படைத்த சோழன்// -ன்னு
அங்கே சொன்னதால் தானே பொங்கிச்சு?

//பொதுவாக ஸ்ரீவைஷ்ணவப் பெருமக்கள்....உண்மைச் செய்திகளை கண்டறிவதிலும்
பெருவிருப்புக் கொள்வதில்லை.
பெரும்பாலான ஸ்ரீவைஷ்ணவப் பெருமக்களிடம் சென்ற நூற்றாண்டின் இறுதிவரை
ஏற்படவில்லை// -ன்னு இங்கேயும் ஏன் அப்படியே ஆரம்பிக்க வேண்டும்?

இது விஜய் சொன்னது அல்ல! நூலில் BV Raman சொன்னாரு-ன்னு சொல்லப்
போறீங்களா?
அப்போ அங்கேயும், அவர் (பேரு என்னாங்க? ரங்கனா??) தானாச் சொல்லலையே!
நூலில் இருந்து தானே அவரும் சொன்னார்?

சமயத்துக்கு ஏற்றாற் போல் நீதியா???????

//இந்த தெளிவை நாம் பெற நமது நோக்கம் எந்த சார்பையும் அற்று , உண்மையை
உண்மையாக பார்க்கும் மனப்பக்குவம் பெற
வேண்டும். எப்படி - நான் சொன்னால் சின்ன பையன் - பிதற்றுகிறான்
என்பார்கள்//
- என்று சொல்லிட்டு, திருப்பியும் அப்படியே ஆரம்பிச்சா எப்படி?

போதாக்குறைக்கு, மின் தமிழ் மட்டுறுத்தாளர், நா. கண்ணன்-ஐ,
ஆழ்வார்க்கடியான்/பொன்னியின் செல்வன்-ன்னு நக்கல் வேற!
Not Acceptable!
"ஆழ்வார்க்கடியான்"-ன்னா ஏதோ கல்கி கண்டுபுடிச்ச பேரு மாதிரி-ல்ல ஒரு
முழக்கம் இங்கே கேட்டது???

"ஆழ்வார்க்கடியான்", "இன்-கவி" என்பது மதுரகவி என்னும் ஒரு ஆழ்வாராம்-
ல்ல? அவருக்குச் சிறப்புப் பெயர்களாம்!
அது தெரியாமல், ஏதோ கல்கியின் வரலாற்றுப் பணியில் உதிச்ச் பேரு போலவும்,
அதை வச்சிக்கிட்டு இப்படியெல்லாம் பேசறாரு போன்ற நக்கல்களும் - தேவை
இல்லாத ஒன்று!

நக்கல் பண்றது--ன்னா "அந்தப் பழைய" பதிவில் வைத்துக் கொள்ளலாம்!
இது முழுக்க முழுக்க, "உண்மை விழையும்" பதிவு!
Here, We are ONLY TO SEEK!

I just notated this, bcoz u asked "was it necessary to bring in other
stuff like koon pandiyan"
Itz ok...Vijay did accept that, going fwd, he will stick on "true
historical spirit"
and so lets not discuss this further...

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

> Dhivakarhttp://www.vamsadhara.blogspot.comhttp://aduththaveedu.blogspot.com- Hide quoted text -

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 2:21:21 PM2/4/10
to மின்தமிழ்
OKAY
ALL SURROUNDING DISCUSSIONS "HALTED" FOR THE NEXT FEW HOURS!!!

VIJAY - VAANGA,
PL TAKE US TO THE NEXT STEP IN THE CHOSEN TOPIC.
"ASSUMING 1017 AS THE MAGIC NUMBER" - WHAT IS OUR NEXT STEP IN THIS
PROCESS?

Thanks All.
Let Vijay continue...and then We will discuss and cross-reference
again!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 4, 2:14 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"

> KRShttp://madhavipanthal.blogspot.com

> > > அது- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

shivan .

unread,
Feb 4, 2010, 2:37:30 PM2/4/10
to mint...@googlegroups.com
/ணித்தரமான ஆதாரம் என்றால் என்ன? "ஆணித்தரம்" என்று முன்னொட்டு போட்டுக்
கொள்வதா?/

ஓ! இதுதான் உங்கள் உரையாடும் ஸ்டைலா? நல்லது. நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை தான்!

/இந்த பிருந்தாவனம், சமாதி போன்ற விடயங்கள், எல்லாம் மறுபடியும் அதே
"டுபாக்கூர் குரு பரம்பரைக் கதை"-யாகத் தான் போய் முடியும்! :))))/

உங்கள் மடல்களைத் தவிர பிறர் மடல்களை சரியாக படிக்க உங்களால் இயல்வதில்லையா?

இந்தியாவின் முதல் ஜனாதிபதியின் கூற்றை வைத்து பாருங்கள்.

ஜனாதிபதி தான் தன்னுடைய சிறு வயதில் தன் தகப்பனாருடன் அவரைப் பார்த்திருக்கிறேன் என்று பத்திரிகை பேட்டியே அளித்திருக்கிறார். அதை சொன்னப் போது ராஜேந்திர பிரசாத்துக்கே எழுபது வயதிற்கு  மேலிருக்கும். ஜனாதிபதியின் நானே நேரில் பார்த்திருக்கிறேன் என்பதை விட என்ன ஐ விட்னெஸ் வேண்டும்?

வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

சரி இந்த டுபாக்கூர் வேண்டாமெனில் உங்கள் சொந்த டுபாக்கூரை தொடருங்கள். படிக்கிறோம்.

/So, please use holistic methods in this discussion!/

:))))))). அது சரி! மெதட்ஸ் இருக்கட்டும். விவாதம் தொடங்கிய உடனேயே தாங்கள் உபயோகித்த டுபாக்கூரே கூராக உங்கள் holistic methods ஐ புரிய வைத்து விட்டது.




2010/2/5 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

--

shivan .

unread,
Feb 4, 2010, 2:40:57 PM2/4/10
to mint...@googlegroups.com
யார் இவர் ? படுபயங்கரமாக தடாலடியாக பேசுகிறார். :)))) எல்லோரையும்  கமாண்ட் மேலே கமாண்ட் போட்டு தூக்கியடிக்கிறார்,

ரொம்ப பெரியவர் போலும்.

நான் பாட்டுக்கு யார் என்று தெரியாமல் உளறுகிறேனா?

என்னைப் போல் குழுவில் புதியவர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஒரு ஓரமாக அடங்கி இருக்கிறேன்.



2010/2/5 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
@ Dhivakar Sir
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Message has been deleted

Kumaran Malli

unread,
Feb 4, 2010, 7:40:37 PM2/4/10
to mint...@googlegroups.com

இராம.கி. ஐயா, நீங்கள் உங்களது கருத்துகளையும் தர வேண்டும் என்று வேண்டுகிறேன். ஏன் தயக்கம்? முன்னோர்கள் அவர்களுக்குக் கிடைத்த சில தடயங்களையும் வசதிகளையும் கொண்டு செய்த ஆய்வுகளை முடிந்த முடிபாக அப்படியே எடுத்துத் தராமல், தற்காலத்தில் மேலும் கிடைத்திருக்கும் தடயங்களையும் வசதிகளையும் கொண்டு ஏரணத்தின் படியும் சிந்தித்து முன்னோர்கள் ஏதோ காரணத்தால் காணாமல் விட்ட சில சான்றுகளையும் கணக்கில் கொண்டு வரலாற்று ஆய்வுகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் சுய சிந்தனையை உங்களிடம் நிறைய இடங்களில் கண்டிருக்கிறேன். அந்த நேர்மையை வியந்து விரும்பியிருக்கிறேன். அதனால் இந்த விதயத்திலும் உங்களுக்கு கருத்துகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். தயங்காமல் சொல்ல வேண்டும்.

Kumaran Malli

unread,
Feb 4, 2010, 7:44:18 PM2/4/10
to mint...@googlegroups.com

சிவன் ஐயா. வடமொழி சாத்திரங்களின் அடிப்படையில் வரும் நாட்கள் (இராமநவமி, ஆவணி அவிட்டம்) போன்றவை வடமொழி மாதங்களின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு வருவதால் தமிழ் மாதங்களில் அது முன்னும் பின்னுமாக வருகிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் வைணவ நூல்களில் சூரிய மான முறையிலேயே கடக மாதம், மிதுன மாதம், மேட மாதம் என்றோ சித்திரை, கார்த்திகை என்றோ  தான் மாதங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே சைத்ரம் முதலிய சாந்திரமான மாதங்கள் பெரும்பாலும் குறிக்கப்படவில்லை. அதனால் சைத்ரம் = சித்திரை; சைத்ரம் சித்திரைக்குக் கொஞ்சம் முன்னாலேயே வருவதால் பங்குனி கடைசியையும் சித்திரை என்று குறித்தார்கள் என்று சொல்ல இயலாது என்று நினைக்கிறேன். இது ஒரு புறம்.

 

சித்திரை, வைகாசி என்பவை முழுக்க முழுக்க சாந்திரமான மாதப்பெயர்கள் கிடையாது. சாந்திரமானம் - சைத்ரம், வைசாகம், ... போன்ற முழு நிலவன்று எந்த நடசத்திரம் வருகிறது என்பதைக் கொண்டு ஏற்பட்ட மாதப் பெயர்கள். சூரியமானம் - மேடம், இடபம்,... போன்ற சூரியன் எந்த இராசியில் சஞ்சரிக்கிறான் என்பதைக் கொண்டு ஏற்பட்ட மாதப் பெயர்கள். சித்திரை, வைகாசி போன்றவையோ பெயரளவில் சைத்ரம், வைசாகம் போன்றவற்றை ஒத்திருந்தாலும் நாட்கணக்குகளில் மேடம், இடபம் போன்றவற்றை ஒத்திருக்கிறது. அதனால் சிலர் அவற்றை சூரிய சந்திரமானங்கள் என்றும் குறிப்பார்கள்.

 

இங்கே விவாதத்தில் சித்திரைத் திருவாதிரை என்று வைணவ நூல்கள் குறிப்பிடும் மாதம் சைத்ரமா மேடமா என்று கேட்டால் அது மேடம் என்றே தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிப் பார்த்தால் ஏப்ரல் நடுவில் தான் மேட மாதம் துவங்குகிறது; ஏப்ரல் தொடக்கத்தில் இல்லை.

 

இந்த மாத முறைகளைப் பற்றியெல்லாம் இராம.கி. ஐயா, ஜடாயு ஐயா போன்றவர்கள் எழுதிப் படித்ததில் எவை நினைவில் இருக்கிறதோ அதைக் கொண்டு எழுதியிருக்கிறேன். என்னை விட இவற்றைப் பற்றி இங்கிருப்பவர்கள் பலருக்கும் நன்கு தெரிந்திருக்கலாம். ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் திருத்துங்கள்.

 

அன்பன்,

குமரன்.

vj kumar

unread,
Feb 4, 2010, 8:44:13 PM2/4/10
to mint...@googlegroups.com
dear இராமகி

First of all - i must acknowledge yours and Sri Rangan's roles in helping me create something that is now being valued. It was you who had objected to my thread of Tamizh Koyil kalai azagu in mintamil, since i was sending lot of attachments - that time, me and some others thought it was an attempt to derail the thread. I too posted an emotional farewell and Rangan sir was kind enough to voice his feelings. But on hindsight, i was able to take on the challenge and create www.poetryinstone.in. So many thanks.

I will come back to this once the current flow is over. There are couple of important things that i need to clarify which are core history.

rgds
vj

 
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2010/2/4 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>
Pretty interesting. I just want to be a onlooker and do not want to
give any input of mine. But I think KRS has a point. He wants an

explanation of the date entirely from a different angle and not from
guru-parampara alone. It does not mean he is rejecting it. He wants an
independant confirmation. [This is like asking an independant
confirmation of Mahaviraa's Nirvaana date, other than from the Jain
sources.] Nothing wrong in asking that. Is there an alternative
explanation?

Vijay, You are doing fine in initiating the discussions and proceeding
on the fascinating subject. But this request is genuine. Why not you
attempt?

With regards,
iraama.ki.

On Feb 4, 3:20 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
> Continuing on the magic number 1017...
>
> //The horoscopic details provided above can be checked using the
> Indian Ephemeris compiled by L.D.Swamik kannup pillai
> ( ref. An Indian Ephemeris A.D.700 to A.D.1700 by L.D.Swamikannu
> Pillai, Agam Prakashan Delhi, first published 1922, first
> reprinted 1982, p.36) .
> When this is done it is found that there is a complete one to one
> correspondence between the above data
> and the date is 4th April, 1017//
>
> ஆக,
> "குரு பரம்பரை" கணக்கை உண்மை-ன்னு  "நம்பி" எடுத்துக் கொண்டு....
> அதன்படி கணக்கு போட்டுப் பார்த்தால் ஏப்ரல்-4-1017 என்று சொல்லி
> விட்டார்கள்!
>
> இப்போ என் கேள்வி:
> இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!
> ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))
>
> 4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
> எது சரி?
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
>
> On Feb 4, 5:11 am, "Kannabiran Ravi Shankar (KRS)"

> > On Feb 4, 4:44 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
>
> > <shravan.r...@gmail.com> wrote:
> > > விஜய்
>
> > > //ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தின் பெயரை
> > > வைத்துக்கொண்டு அவர் புகழ்
> > > பாடிய சோழ பரம்பரையை நையாண்டி செய்கின்றனர்.
> > > கேட்டால் நீ யார் பழுவேட்டையரையாரா  என்று நக்கல் வேறு//
>
> > > அருமையான தொகுப்புத் தகவல்களைச் சிரமப்பட்டு, முன் வைக்கறீர்கள்!
> > > பாராட்டுக்கள்!
> > > அந்த முயற்சியின் போது,  இது போன்ற தனிப்பட்ட Reference-கள் வேண்டாமே!
> > > சென்ற பதிவின் காரசார  நினைவுகளை  இங்கே தவிர்த்து விடுங்கள்!
>
> > > இந்தப் பதிவு முழுக்க முழுக்க, scientific based fact finding ஆக மட்டுமே
> > > இருக்க வேண்டும் என்பதே என் அவா!
>
> > > anbudan
> > > KRShttp://madhavipanthal.blogspot.com
>
> > > On Feb 4, 4:08 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
>
> > > > வரலாறு மிகவும் முக்கியம் - 4
> > > > இந்த பதிவில் பங்கு கொண்டோருக்கும், பார்த்து மகிழ்ந்தோருக்கும் , நடு நிலையாக
> > > > வெளியில் / வேலியில் நின்று  ரசிப்போருக்கும்  நன்றி..
>
> > > > உடையவரின் தேதிகள் குறித்து நாம் தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
>
> > > > நண்பர் சொன்னார்  - *இந்த அளவு அக்கால நிகழ்ச்சிகள் வைணவ நூல்களில்
> > > > ஆவணமாகியுள்ளன.  நிவேதனம் செய்யப் பயனான அரிசி வகைகளையும் குறித்து
> > > > வைத்துள்ளனர்.  திருமுடி அடைவு என்னும் நூற்பகுதி ஆசார்யர்கள் பிறந்த குடி,
> > > > குலம், சீடர்கள் போன்ற தகவல்களைத் தருகின்றன.ஆலய வரலாற்றைப் பதிவு செய்யும்

> > > > நடைமுறையும் இருந்து வந்துள்ளது.*
>
> > > > அப்போது இந்த தேதிகளை குறிக்கும்போது மட்டும் ஏன் இந்த  சர்ச்சைகள்.
>
> > > > சரி, இந்த தேதியை நிர்ணயிக்க -( நான் இது தான்  சரி என்று சொல்லவில்லை) - ஒரு
> > > > பழைய குறிப்பு ( நாங்களும் பழைய நூல்களை  படிப்போம்ல - குறிப்பும் கொடுப்போம் )
>
> > > > LIFE & TEACHINGS OF RAMANUJACHARYA
> > > > BEINGTHE INAUGURAL ADDRESS
> > > > DELIVERED ON THE 5TH MAY 1908
> > > > BY
> > > > M. B. SRINIVASAINGAR, M. A.,\
> > > > (Mysore Educational Service} S
> > > > Author of the " Aryan Prayer-Book" & f
> > > > Editor of the "NithiyANUsandAnum"Series),
> > > > on the occasion of the Celebration of the
> > > > Twenty-Fifth Anniversary of Sri Ramanujacharya's Birthday-Festivities
> > > > MADRAS,
> > > > THE BRAHMAVADIN PRESS.
> > > > 1910.
>
> > > > 7. As regards the date of the birth of Ramanujacharya,
> > > > there has been no difference of opinion, unlike that
> > > > of Sri Sankaracharya, which is wrapped up in obscurity
> > > >  even to this day. This is easily accounted for, since from
> > > > the earliest days of his earthly career, Ramanuja's contemporaries
> > > > and admirers began to associate the periods of the
> > > > incidents of his life with specific noble thoughts of some
> > > >  significance. Hence the traditional date of Salivahana
> > > > Saka 939 (corresponding to 939 -j- 78= 1017 A.D.) has been
> > > > taken advantage of by his Biographers, and has accordingly
> > > > been made synonymous with the noble thought
> > > > (Real knowledge attained), as if this year
> > > > was particularly designed by Providence for the spread of
> > > > REAI, KNOWLEDGE on earth through Ramanujacharya.
> > > > So also is the
>
> ...
>
> read more »- Hide quoted text -

vj kumar

unread,
Feb 4, 2010, 9:03:29 PM2/4/10
to mint...@googlegroups.com
வணக்கம் திரு குமரன்

நீங்கள் எழுதியது அனைத்தையும் படித்தேன் - நான் எதற்காக கட்டம் கட்டினேன் என்பது போக போக புரியும். அதுவரை பொறுமை பொறுமை. நான் எங்கும் ஓடிப் போக போவதில்லை. நிதானமாக ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தருகிறேன். உங்கள் புண்ணியம் - முதலில் பல்லவனை பற்றி.

"
பல்லவர்களின் ஒருவன் அப்பரை கல்லுடன் கடலில் தள்ளினானா?
சுண்ணாம்புக்காளவாயில் தள்ளினானா? யார் அந்தப் பல்லவன்? "

அடுத்து கூன் பாண்டியன்.

நினைவில் வைத்துக் கொள்கிறேன். இரண்டிற்கும் அருமையான வரலாற்றுக்   குறிப்புகள் உள்ளன. எனினும் இன்று வேண்டாம் - வாரக் கடைசி - இழைக்கு முக்கியாமான கருத்தை சொல்ல அனுமதி கொடுங்கள்.

விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2010/2/4 Kumaran Malli <kumara...@gmail.com>
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரைப் புகழ்வதற்காக இது வரை வாழ்ந்த
ஸ்ரீவைஷ்ணவர்களை எல்லாம் பழித்திருக்கிறது கோவிலொழுகு முன்னுரை.
கூரத்தாழ்வான் வாழ்க்கையில் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சிகளைப் பேசும்
போது, ஒருவரைப் புகழ மற்றவரைத் தாழ்த்தத் தேவையில்லை; அப்படிப்
புகழாமலேயே 'கதை நல்ல கருவுடன்' இருக்கிறது என்று சொன்ன விஜய், இங்கே
இந்த முன்னுரையில் ஒருவரைப் புகழ மற்றவரைத் தாழ்த்துவதை வரலாற்று
உண்மையாக எப்படி எடுத்துக் கொள்கிறார்? இதற்கு எனக்குப் பதில்
தேவையில்லை. அவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. தனக்குச்
சாதகமாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்வதும், தன் கருத்துக்கு மாற்றாக
இருந்தால் அதனை 'தவறான கருத்துகள்; அதற்குத் தேவையற்ற விளம்பரம்' தன்னால்
வரவேண்டாம் என்பதும் நேர்மை தானா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். 'தனக்கு
வேண்டும் என்பதை மட்டும் படித்து விட்டு, அதில் தனக்கு பிடித்தவை மட்டும்
எடுத்துக் கொள்வது குறுகிய பார்வை' என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இப்போது விஜய் கட்டம் கட்டிய பகுதிக்குத் தொடர்பான இன்னொரு விசயம்.
கல்வெட்டுகள் போன்ற சான்றுகளைப் பற்றி கவலைப்படாமல் மரபாகச் சொல்லி வரும்
செய்திகளை உண்மை என்று சொல்வதை ஸ்ரீவைஷ்ணவர்கள் மட்டும் தான் செய்து
வந்தார்களா? கூன் பாண்டியன் யார்? பாண்டியப் பேரரசன் ஒருவன் சைவர்களைக்

கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தானா? சம்பந்த பெருமான் புனல் வாதம், அனல்
வாதம் செய்தது உண்மை தானா? சம்பந்தப் பெருமானின் தூண்டுதலினாலோ தூண்டுதல்

இன்றியோ பாண்டியப் பேரரசன் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினானா?
சோழர்களைச் சில நூற்றாண்டுகள் தலையெடுக்க விடாத பெரும் பேரரசர்களான
பல்லவர்களின் ஒருவன் அப்பரை கல்லுடன் கடலில் தள்ளினானா?
சுண்ணாம்புக்காளவாயில் தள்ளினானா? யார் அந்தப் பல்லவன்? இக்கேள்விகளுக்கு
எல்லாம் பெரிய புராணம் முதலிய சைவ சமய நூல்களை விடுத்து வேறு ஏதேனும்
கல்வெட்டுகளைக் கொண்டு உண்மை அறிய வேண்டும் என்ற ஆவலும் செயல்பாடும்
பொதுவாகத் தமிழர்களுக்கு இருந்ததா? ஒன்றிரண்டு பேர்களை காட்ட இயலும்
என்றே நினைக்கிறேன். ஆனால் பொதுவாக சைவப் பெருமக்களை உள்ளிட்ட தமிழர்கள்
பெரிய புராணத்தை ஆதரவாகக் காட்டினார்களா, கல்வெட்டுகளைக் காட்டினார்களா?
ஒரே வரியில் என்ன சொல்ல வருகிறேன் என்று சொல்கிறேன் - இந்த மன நிலை
ஸ்ரீவைஷ்ணவர்களை மட்டும் சார்ந்தது இல்லை; மொத்த தமிழ்ச் சமுதாயமும்
அப்படியே தான் இருந்தது; இருக்கிறது. இன்றைக்கும் இக்கேள்விகளுக்குப்
பதில்கள் கேட்டால் கீதாம்மாவும் திவாகர் ஐயாவும் இன்னும் பலரும் பெரிய
புராண வரிகளைத் தான் சான்றாகக் காட்டுவார்கள். எப்படி மொத்தத் தமிழ்ச்
சமுதாயத்தில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் சமய நூல்கள் காட்டுவதையே
உண்மையென்று சொன்னார்களோ அதே போல் தான் ஸ்ரீவைஷ்ணவர்களிலும் ஒரு சிலரைத்
தவிர மற்றவர்கள் எல்லோரும் சமய் நூல்களை மட்டுமே சான்றாகக் கொண்டார்கள்;
கொள்கிறார்கள். ஒருவரைப் புகழ்வதற்காக மற்ற எல்லோரையும் தவறாகக் கூறியது
'முன்னுரை எழுதியவரின்' பெருந்தவறு; அதனை எடுத்துக் காட்டிக் கட்டம்
கட்டுவது விஜயின் நிலைப்பாட்டிற்கும் ஏற்புடையதில்லை; பொதுவான
ஏரணத்திற்கும் ஏற்புடையதில்லை.

Kumaran Malli

unread,
Feb 4, 2010, 9:09:36 PM2/4/10
to mint...@googlegroups.com
நன்றி விஜய்.

2010/2/4 vj kumar <vj.ep...@gmail.com>

vj kumar

unread,
Feb 4, 2010, 9:10:46 PM2/4/10
to mint...@googlegroups.com
நண்பரே ,

 நண்பர் விஜய் அதனைச் சாதுர்யமாக 'கல்லறை ஆராய்ச்சியோ கல்வெட்டு ஆராய்ச்சியோ' என்று சொன்னதால் - என்று நீங்கள் கூறுவது  தவறு. இதை முதலில் யார் சொன்னது என்று தேடித் பாருங்கள். இங்கே இல்லை, அங்கே ....


விஜய்

http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2010/2/4 Kumaran Malli <kumara...@gmail.com>
கல்லறை என்ற சொல்லைப் பற்றி ஒரு சிறு குறிப்பு: தற்காலத்தில் இடுகாட்டில்
இருக்கும் சமாதி என்ற பொருளில் கல்லறை என்ற சொல் புரிந்து
கொள்ளப்படுகிறது. ஆனால் கோவிலொழுகு சொல்லும் கல்லறை என்ற சொல்லுக்கு
கல்லால் செய்யப் பட்ட ஒரு அறை என்பது மட்டுமே பொருள். இந்தப் பொருள்
வேறுபாடு எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்றாலும் நண்பர் விஜய் அதனைச்
சாதுர்யமாக 'கல்லறை ஆராய்ச்சியோ கல்வெட்டு ஆராய்ச்சியோ' என்று சொன்னதால்
சட்டென்று படிக்கும் போது தோன்றும் பிம்பத்தினால் யாரும் வேறு மாதிரி
நினைத்துவிடக் கூடாது என்பதால் இந்த விளக்கம்.

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 9:11:28 PM2/4/10
to மின்தமிழ்
@ Shivan Ayya

//ஜனாதிபதியின் நானே நேரில் பார்த்திருக்கிறேன் என்பதை விட என்ன ஐ


விட்னெஸ் வேண்டும்?

வேறு என்ன ஆதாரம் வேண்டும்?//

சரி, Birth Certificate எல்லாம் எதுக்கு வாங்கிக்கிட்டு?
அதான் ஆனானப்பட்ட ஜனாதிபதியே பாத்துட்டாரே! அதை விட என்ன ஐ விட்னெஸ்
வேண்டும்? :))
சார்...அது ஆனானப்பட்ட ஜனாதிபதியே ஆனாலும்,
"நானே பார்த்து இருக்கேன்" எல்லாம் கோர்ட்டுலயோ/வரலாற்றிலேயோ நிற்காது!
His evidence will be evaluated!

இதையே மதத்திலும் சொல்லலாமே!
ஆனானப்பட்ட ராமானுஜரே "சோழன்" என்று குறிப்பிட்ட பின், என்ன ஐ விட்னெஸ்
வேண்டும்?-ன்னு அவிங்க கேட்டா ஒத்துப்பீங்களா? :)
Pl provide holistic info...

//இதுதான் உங்கள் உரையாடும் ஸ்டைலா? நல்லது. நான் இதை
எதிர்ப்பார்க்கவில்லை தான்!//

ஓஓஓ...மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா!


//ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தின் பெயரை

வைத்துக்கொண்டு அவர் புகழ் பாடிய சோழ பரம்பரையை//
- இது தான் உங்கள் உரையாடும் ஸ்டைலா? நல்லது! நானும் இதை
எதிர்ப்பார்க்கவில்லை தான்! :)
- இப்படிப் பேசின போது, இப்ப காட்டும் இதே "ஆர்வம்" காட்டப்படவில்லையே!
ஏன்? (Sorry Vijay! Even if I am done, ayya drags me :)

*** ஏதிலார் குற்றம் போல், தன் குற்றம் காண்கிற் பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு! ***

//4th April 1017//
4th April 1017 - பங்குனி மாதம்! சித்திரை இல்லை! சைத்ர மாசம்-ன்னு
பக்கத்து ஊரில் வேணும்னா வச்சிக்கலாம்!
ஆனால் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக, (தமிழ்ச்) சித்திரையில் தான், சித்திரைத்
திருவாதிரை, இராமானுஜர் நட்சத்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது!
It happens always after Apr-13/14...ஓரிரு நாள் முன்ன பின்ன
போகலாம்...But
definitely NOT 11 days to 4th April 1017!

SO, THE DATE OF 1017 IS NOT WELL VALIDATED & STILL "SUSPICIOUS"!
------------------------------------------------------------------------

//யார் இவர் ? படுபயங்கரமாக தடாலடியாக பேசுகிறார். :)))) எல்லோரையும்
கமாண்ட் மேலே கமாண்ட் போட்டு தூக்கியடிக்கிறார்//

யார் இவரா? ஹா ஹா ஹா!
"இவர் யார்?" என்று கேட்பதை விட,
"நான் யார்?" என்று என்னைக் கேட்டுக் கொள்வதே எனக்குப் பிடிக்கும் Shivan
Ayya!

சரி, நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்!
இவர் யார்? = நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து, நான் நடுவே...
வீடகத்தே புகுந்திடுவான் என்று மணிவாசகப் பெருந்தகை பாடும்
நடிப்படியார்களில் ஒருவன்! :)

//ரொம்ப பெரியவர் போலும்//
ரொம்ப பொடிப் பையன்-ங்க நானு! :)
பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல், அதனிலும் இலமே!

Shivan Ayya!
பொறுத்து அருளுங்கள்!
Can we call a truce?
...and Invite Vijay to take the next step in the discussion? Please?
Period.

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 4, 2:40 pm, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> யார் இவர் ? படுபயங்கரமாக தடாலடியாக பேசுகிறார். :)))) எல்லோரையும்  கமாண்ட்
> மேலே கமாண்ட் போட்டு தூக்கியடிக்கிறார்,
>
> ரொம்ப பெரியவர் போலும்.
>
> நான் பாட்டுக்கு யார் என்று தெரியாமல் உளறுகிறேனா?
>
> என்னைப் போல் குழுவில் புதியவர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.
>
> ஒரு ஓரமாக அடங்கி இருக்கிறேன்.
>

> 2010/2/5 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> ...
>
> read more »

vj kumar

unread,
Feb 4, 2010, 9:21:50 PM2/4/10
to mint...@googlegroups.com
நண்பர் KRS,

நீங்கள் தானே இப்படி சொன்னீர்

- So this is a relative measurement and not an absolute measurement!
நாற்பத்து நாலாண்டு என்றால்.....துவக்கத் தேதி எது? 1070 CE என்பதற்கு
கல்வெட்டு ஆதாரம் இல்லையே!  எதன் அடிப்படையில்,  அன்றிலிருந்து 44ஆம்
ஆண்டைக் கணக்கில் கொள்வது??


அதாரம் கேட்டீர்கள் - தந்தேன் - அப்புறம் இப்படி பதில் போட்டால் எப்படி?

 

மற்றபடி, இதர கல்வெட்டுத் தகவல்களைக் காட்டி, "பார்த்தீங்களா எம்புட்டு
வெவரம் இருக்கு? இதான் சோழர்கள் கல்வெட்டு ஸ்பெஷாலிட்டி"-ன்னு பாடாண்
திணை எல்லாம் இப்போது தேவையில்லை!





http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2010/2/5 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 4, 2010, 9:25:16 PM2/4/10
to மின்தமிழ்
@குமரன்

//சைத்ரமா மேடமா என்று கேட்டால் அது மேடம் என்றே தான் சொல்ல வேண்டும்//

எந்த Madam பத்திச் சொல்றீங்க? :)
ஓ,,,மேஷமா?
ஹிஹி! மேடம்-ன்னு படிச்சி, எங்க ஸ்கூல் டீச்சர் ஷீலா மேடமோ-ன்னு பயந்தே
போயிட்டேன்! :)
ஒத்தை மல்லிப்பூ வச்சிக்கிட்டு, அழகா இருப்பாங்க!
விஷமம் பண்ணா அடிக்க மாட்டாங்க! அவங்க சேர்-ல போயி பப்ளிக்கா
உட்காரணும்! Staff Room-ல்ல கூடவே போயி உட்காரணும்! ஒரே கூச்சமா
இருக்கும்! இதுக்காகவே அவிங்க வகுப்புல மட்டும் நோ விஷமம்ஸ்! :))

//அப்படிப் பார்த்தால் ஏப்ரல் நடுவில் தான் மேட மாதம்
துவங்குகிறது; ஏப்ரல் தொடக்கத்தில் இல்லை//

மிகவும் நன்றி, சிவன் ஐயாவுக்கு எடுத்துச் சொல்லியமைக்கு!
4th April, 1017, holds very valid clue for the objective of the
experiment. It is NOT chithirai thiruvaathirai!

The number 1017 is NOT the number provided by guru parampara.
This number was wrongly calculated in this century.
and bad data was built over bad data...which causes so much
confusion...
Quality of Source Data is very important in any experiment.

I will deal with more of this...But after Vijay completes his 2nd
step...
We shd give time to Vijay now.

Thanks again

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

vj kumar

unread,
Feb 4, 2010, 11:58:43 PM2/4/10
to mint...@googlegroups.com

வரலாறு மிகவும் முக்கியம் - 5


என் தந்தை அடிக்கடி அறிவுரை கொடுப்பார். அவர் ஒரு கருத்தை சொன்னால் அது நடு மண்டையில் நச்சென்று அடித்தார் போல சொல்வார். எப்படி தெரியுமா - அறிவுரையை வாக்கியமாக சொல்லாமல் ஒரு கதை போல சொல்லுவர். கதை கேட்கும் ஆர்வத்தில் நானும் கூர்ந்து கவனிப்பேன். முடிவில் தான் புரியும் அது வெறும் கதை இல்லை என்று.


நானும் அவர் பாணியில் ஒரு கதை சொல்லுகிறேன். முற்றிலும் கற்பனை கதை.

கதா பாத்திரங்கள் :

கார் ஓட்டுனர் - மாறன்
வீட்டு எஜமானர் - கிட்டு மாமா
எஜமானி - அலமேலு மாமி
மகன் - சித்தார்த் ( என்கிற சிட் )
மாமாவின் பால்ய சிநேகிதன் : சந்துரு


கதை கரு - மாமா அலமாரியில் வைத்திருந்த ஒரு தஸ்தாவேஜு சமீபத்தில் பெய்த மழையில் சுவரில் கசிந்த நீரில் நனைத்து விட்டது. அதை மகன் சிட் கொண்டு அவர் சரி செய்ய பார்கிறார்.

பெப்ருவரி ஐந்தாம் தேதி ஈராயிரத்தி  பத்து ( feb 5th 2010)
காலை - மணி எட்டு


ரேடியோவில் சுப்ரபாதம் முடிந்து இப்போது பழைய  பாடல்கள் ஓடிக்கொண்டுள்ளது

 ........ வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....

சிட் : டாட் , எந்தனை நாள் தான் இதே பழைய பாட்டை கேப்ப . சேனல மாத்துப்பா !!

மாமா: ஏன்டா - அங்கே உங்க அம்மா டிவிய புடிசுண்டா, உனக்கு தான் அந்த லேட்டஸ்ட் mp3 பிளேயர் வாங்கிக் கொடுத்தேனே, அதுல்ல சங்கீதம்ன்ற பேர்ல எதையோ கேக்கறியே - போதாதா ?. நான் ஏதோ இந்த பழைய ரேடியோவை கட்டிண்டு அழவேண்டி இருக்கு - அது சரி உங்க அம்மா என்ன பண்றா? ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்கும் போல இருக்கு.

மாமி: செத்த இருங்கோ, காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா உங்க குருக்ஷேற்றத்தை !!! அங்கே செய்தி வசிக்கும் ரத்னா புடவை பார்டர் எதோ புதுசா இருக்கு, அதுக்கு மாட்சிங்கா கல் நெக்லஸ் வேற புது டிசைன்  - சரியா பாக்கறதுக்குள்ள ......அது சேரி நேத்து ராத்திரி ஏதோ சித்தார்த் கிட்ட ஞாபகம் படுத்த சொன்னேளே, வர வர உங்க ஞாபக மறதி எனக்கும் தொத்திண்டு இருக்கு

மாமா : ஆ , மறந்தே போச்சே, டேய் - அந்த டாகுமென்ட் சேரி பண்ண சொன்னேனே செஞ்சியா

சிட் : விச் ஒன் டாட்  - ஓ, அதுவா - அப்போவே பண்ணிட்டேன். இந்தாங்கோ - இட் வாஸ் எ நோ ப்ரைனர் ( it was a no brainer)

மாமா : டேய், மாறா  - கார் ஸ்டார்ட் பண்ணினியா, அலமு  - மூக்கு கண்ணாடி எங்கே - சரி, நீயே ஒரு வாட்டி படியேன்.

சிட்: டாட், ஐ டோன்ட் ஹவ் டைம் போர் ஆள் திஸ் .

மாமா : டேய், உதவாக்கர - இப்போ படிக்கறியா !!

சிட் :  என்ன தண்டசோறு உதவாக்கரைன்னு திட்டாம உங்களுக்கு பொழுது போகாதே.

மாமாவின் பால்ய சிநேகிதன் சந்துரு மாமா உள்ளே வருகிறார்

சந்துரு : என்ன ஒய், கலம்பரையே ஆரம்பிச்சாச்ச - ஏன்டா சித்தார்த் , உங்க தோப்பனார் சொல்றதை செஞ்சுட்டு போயேன்.

சிட்: ஹலோ அங்கிள்  ( வந்துட்டார் - ஓ சி காபிக்கு இப்படி ஒரு சாக்கு வேற )

படிக்கறேன் - கேளுங்கோ ....தஸ்தாவேஜை முழுவதும் படித்து  விட்டு - கிழே கையெழுத்து போடும் இடத்தை காட்டுகிறான்

மாமா: இந்த வேலையெல்லாம் நல்ல செய் - உட்டா என் கையெழுத்தும் கூட போடுவான் ....

மாறன் : சார், பெட்ரோல் போடணும் -போன தபா ஆபிசு போகும் பொது போட்டதுக்கு டைம் இல்லைன்னு மேலையும் கிளையும்  குதிச்சே - இன்னும் நீ  ரெடி ஆவ நேரம் ஆவுன்னா  சொல்லு, பொய் பில் பண்ணிட்டு வந்துடுவேன் . சார், என்ன சார் - இப்படி பண்ணினா மாட்டிக்குவே

மாமா : ஏன்டா, வந்த வேலையை பாக்காம நான் என்ன பண்றேன்னு உனக்கு என்னடா நோட்டம்

சந்துரு : ஒய், எதோ சொல்லறான், என்னதான் அப்படி சொல்றான்னு
கேளும் .

 
மாமா: அப்படி என்னடா பெருசா கண்டுபிடிச்சுட்டே துப்பறியும் சாம்பு மாதிரி .

மாறன் : சாமி , இந்த தஸ்தாவேஜு லே என்னா தேதி போட்டுருக்கு ?

மாமா: ஏன், 8.8 1964. அதுக்கு என்ன.

மாறன் : ஏன் சாமி, அந்த தேதி டாகுமென்ட் ரெடி பண்றே, உஷாரா  செய்ய மாட்டியா.

மாமா: டேய், நாங்க ஒன்னும் புதுசா ரெடி பண்ணலை. கொஞ்சம் அழிஞ்சு போச்சு. அதை செத்த சரி பண்ணி இருக்கோம்

மாறன்: அது சரி, அதுல்லே என்ன தமிழ் நாடுன்னு வருது. நீயும் கீழே சென்னை , 8.8.1964, நு கையெழுத்து போடறியே .

சந்துரு: ஒய், இவன்  சொல்றது எதுவுமே புரியலை. டேய், புரியற மாதிரி சொல்லேண்ட கடன்காரா

மாறன்: எனக்கு நல்லா வேணும், நல்லத சொன்ன சவுண்ட் உடறியே. நீலாம் இஸ்கூலுக்கு பொய் என்னாத்த படிச்சியோ !! சிட் தம்பி - கைல அந்த கம்ப்யூட்டர் வெச்சுருக்கே ள - அதுல்ல கூகிள் பண்ணி - எப்போ மெட்ராஸ் ஸ்டேட் தமிழ் நாடுன்னு மறிச்சி, எப்போ மெட்ராஸ் சென்னையா மாரிச்சுன்னு பார்த்துட்டு , அப்படியே இங்கே இருக்கும் ரெண்டு புத்திசாளிங்களுக்கும் காட்டு.  நான் போறேன்.

ரேடியோ பாட்டு தொடர்கிறது .....மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான். ...

கதை முடிந்தது . இப்போது  சரித்திரம் தொடரும்.

devoo

unread,
Feb 5, 2010, 3:11:05 AM2/5/10
to மின்தமிழ்
> வரலாறு மிகவும் முக்கியம் - 5

Feb 4, 12:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"


> ஆணித்தரமான ஆதாரம் என்றால் என்ன? "ஆணித்தரம்" என்று முன்னொட்டு போட்டுக்
> கொள்வதா?
> இந்த பிருந்தாவனம், சமாதி போன்ற விடயங்கள், எல்லாம் மறுபடியும் அதே
> "டுபாக்கூர் குரு பரம்பரைக் கதை"-யாகத் தான் போய் முடியும்! :))))


தேவரஹா பாபாவின் நெடிய ஆயுள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று;

http://hi.wikipedia.org/wiki/%E0%A4%A6%E0%A5%87%E0%A4%B5%E0%A4%B0%E0%A4%B9%E0%A4%BE_%E0%A4%AC%E0%A4%BE%E0%A4%AC%E0%A4%BE


//ஸ்வஸ்திஸ்ரீ *திருபுவன சக்கரவர்த்திகள்* ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்
திருத்தங்கையர் ராஜராஜன் குந்தவை ஆழ்வார், ஆளுடையாருக்கு தண்ணீர் அமுது
செய்தருள இட்டமிண்டம் ஒன்றினால் க்டிநர்கள் நிறை மதுராந்தகன் மடையோடு
ஒக்கும் பொன் ஐம்பது பைம்படிங் கழஞ்சு, *நாநிலத்தை முழுதாண்ட*
ஜயதரர்க்கு//


இந்தச் சக்ரவர்த்தி ஆண்ட “திருபுவனம்” எது ? பாதாள லோகம் உண்மையில்
உண்டா ?

*நாநிலத்தை முழுதாண்ட* - இந்த முழு நாநிலத்தின் எல்லைகளைத் தெரிவிக்கும்
வரைபடம் மேதகு மேனாட்டு ஆராய்ச்சியாளர்களிடம் உள்ளதா ?
ஒரு டுபாகுர் ராஜ பரம்பரைக்கதை என்றால் ஒப்புக்கொள்வார்களா ?
ஆராய்ச்சி என்றால் கிறிஸ்தவ ஆண்டை ஒட்டித்தான் அமைய வேண்டுமா ?
எதன் அடிப்படையில் பண்டைய தமிழ் மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகளை
ஒப்புக்கொள்கிறோம் ?
சிலப்பதிகாரம் கூறுவது எவ்வளவு ஜாதகக்கதை ? எவ்வளவு உண்மை ?

தேவ்

vj kumar

unread,
Feb 5, 2010, 3:51:35 AM2/5/10
to mint...@googlegroups.com

வரலாறு மிகவும் முக்கியம் - 6


சிறுகதை படித்தீர்களா, யாரையும் புண் படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நான் முறையாக சரித்திரமோ , வரலாறோ படித்தவனும் இல்லை. தவறு ஏதேனும் வருமாயின், தயை செய்து அடியேனை மன்னித்துவிடுங்கள்.

 இப்போது வரலாறு சொல்லும் உணமைகளையும் மூல நூல்களின் குறிப்புகளையும் ஒப்பிட்டு பார்ப்போம்.


மெய்க்கீர்த்தி

முதலில் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்தி பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மெய்கீர்த்தி என்றால் என்ன - மெய் -True, கீர்த்தி  - Fame. குறிப்பாக  ராஜராஜ சோழர் காலத்தில் இந்த மெய்க்கீர்த்தி மிகவும் முக்கியத்துவம் பெற்றது. கவி நடையாக அந்த ஆட்சி ஆண்டில் அவர் அதுவரை நிகழ்த்திய சாகசங்களை மெய்க்கீர்த்தி அழகாக பட்டியல் இட்டது.  ஒரு ஆட்சி ஆண்டிற்கும் அடுத்த ஆண்டிற்கும் மெய்க்கீர்த்தியில் வரும் புதிய வெற்றிகளை கொண்டு அந்த ஆண்டு மன்னர் என்ன புதிய வெற்றிகளை அடைந்தார் என்ற கால அட்டவணை நிரூபணம்ஆகிறது.

கங்கை கொண்டசோழன் மற்றும்  அவனது புதிய தலை நகர்  கங்கை கொண்ட சோழபுரம் :

நாம் முன்னவே ராஜராஜரின் ஆட்சி ஆண்டு 985 CE  என்பதை பார்த்தோம். அதில் துவங்கி கடைசி கல்வெட்டுக் குறிப்பு அவரது 29th ஆண்டு வரையிலும் கிடைத்துள்ளது. எனவே அவரது ஆட்சி 985+29 = 1014 CE வரையிலும்  கண்டிப்பாக  இருந்தது. அதே போல ராஜேந்திரர்  1012ஆம்  ஆண்டு தன் தந்தையுடன் சேர்ந்து அரசாளும் உரிமை பெற்றார் என்பதும் தெரிய வருகிறது.

தன் தந்தைக்கு பிறகு - ராஜேந்திர சோழர்  தனக்கென தனி தலை நகரம் அமைத்து அதுவரை தஞ்சையில் இருந்து விலகி தில்லையில் இருந்து ஆண்டார் என்ற குறிப்புகள் உள்ளன.

அவரது மெயக்கீர்த்திகளை ஆராயும்போது அவரது இரண்டாம் ஆண்டிற்கும் ஐந்தாம் ஆண்டிற்கும் நடுவில் அவரது புகழ் பெற்ற கங்கை வரை சென்று பல நாடுகளுடன் போர் தொடுத்து வெற்றி கிடைத்தது என்பதையும்  நாம் அறியலாம். அதாவது 1017 CE முன்னாள். ( முழு விவரங்களையும் இந்த பதிவின் முடிவில் இணைத்துள்ளேன் )  அப்போது தான் அவர் கங்கை கொண்ட சோழன் என்ற பெயரை ஏற்றார் என்பதும் தெரிய வருகிறது.

சுமார் 1025 CE இருந்து  தனது புது தலை நகரத்துக்கு கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயரிட்டு அங்கே தஞ்சை கோயிலுக்கு இணையாக ஒரு பெரும் ஆலயத்தை கட்டத் துவங்கினார்.


 
ஸ்ரீ நாதமுனி அவர்களின் காலம் ஏது :

ஸ்ரீ யமுனாச்சர்யர் என்ற பெயர் கொண்ட ஆளவந்தார் ,ஸ்ரீ  ஈஸ்வரமுநிகளின் பிள்ளை, ஸ்ரீ நாதமுனி அவர்களின் பேரன். தனது முதிர்ந்த பருவத்தில், உடையவர் அவரை (ஆளவந்தாரை) பார்க்க வரும் முன்னரே அவர் மரித்த சம்பவம் மிகவும் எழுதப்பட்ட ஒன்று. இப்படி இருக்க  நாதமுனி அவர்கள் வாழ்ந்த காலம் உடையவர் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்பது பொதுவாக கொண்ட கருத்து. இதை மனதில் கொண்டால் சுமார்  920 CE.


குருபரம்பராப்ரபாவம்


இது சரியான மூல நூல் தானே - பார்த்து சொல்லிவிடுங்கள். அட்டைப்படமும் நாம் பார்க்கும் மூன்று பக்கங்களும் இணைத்துள்ளேன்.

மொத்தம் நான்கு இடங்களில் கங்கை கொண்ட சோழபுரம் என்று வருகிறது . எழுத்து தட்டச்சு செய்ய கொஞ்சம் கடினமாக உள்ளது. எனினும் ஒரு பகுதியை மட்டும் இங்கே தருகிறேன். மீதியை இணைத்துள்ள பக்கங்களில் கண்டிப்பாகப் பார்க்கவும்.

நாதமுனிகள் வைபவம் , பக்கம் கச

 ராஜா இவருடைய யோக வைபவங்களைக் கேட்டு அங்கேறப்போய் மன்னன்னாரையும் ஸேவித்து தானும் ஸ்த்ரீகளுமாய் இவர் யோகத்திலே எழுந்தருளிக்கும்படியைக் கண்டு ஆச்சரியப்பட்டு மீண்டுபோகிறளவிலே ‘ திருவுடை மன்னரைக் காணில், திருமாலைக் கண்டேனே யென்னும்’ என்கிறபடியாக அவர்களை க்ருஷ்ணனும் கோபியருமாக நினைத்து அவர்கள் பின்னே கங்கைகொண்ட சோழபுரத்தேற எழுந்தருளா நிற்க, இது கேட்டு, உய்யக் கொண்டார், திருகைக்காவலப்பன் உள்ளிட்ட முதலிகளுடன் பின் தொடர்ந்து எழுந்தருளிக் கங்கை கொண்ட சோழபுரத்தேக் கண்டு, ‘தேவரீர் இப்படி செய்யலாமோ’ என்று விண்ணப்பஞ்செய்ய, நாதமுனிகளும் ‘க்ருஷ்ணனும் பெண்டுகளுமாய் நினைத்து அவர்களுடனே வந்தேன்’ என்று அருளிச் செய்து மீண்டருளினார்.

சோழர் மெதுவாக தலை தூக்கும் காலம் (920 என்பது) அது......, அவர் வாழ்ந்த காலத்தில் அப்படி ஒரு நகரமோ, ஏன் அப்படி ஒரு பட்டப்  பெயரே இருந்ததற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் - எப்படி இந்த முரண்பாடு.


குற்றம் என்று சுட்டிக்காட்ட வில்லை - கட்டம் போட்டது இதற்குதான். தவறு இருந்தால் திருத்த வேண்டியதுதான். இதில் இருந்து நாம் ஒன்றை கண்டிப்பாக உணர முடிகிறது. இந்த நூலை எழுதிய அல்லது தொகுத்த காலம் -  தஞ்சை சோழர்களின் தலை நகரம் என்பதே மறந்து, கங்கை கொண்ட சோழபுரம்தான் தலை நகரம் என்று பொது வழக்கத்தில் வந்த பிறகே என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது. இப்படி புகழ் பெற்ற தஞ்சை நினைவில் இருந்ததிலிருந்து அகற்ற குறைந்தபட்சம் ஒரு தலைமுறையாவது தேவை படுமாயின், முடிவினை வாசகர்களுக்கே விட்டு விடுகிறேன். பிரதி எடுத்தவன் தன் பங்கிற்கு சில விட்டு போன இடங்களையோ இல்லை நடையை இன்னும் அழகு படுத்தவோ மூல நூலை தம் இஷ்டத்துக்கு கண்டிப்பாக மாற்றி உள்ளான்  என்பதை உணர்த்துவதே  இந்த பதிவின் நோக்கம் .

எதிர் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன

ராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தி பற்றி மேலும் படிக்க
 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நன்றி : varlaaru.com
http://www.varalaaru.com/Default.asp?articleid=913
திருமன்னிவளர...
மா. இலாவண்யா

இராஜேந்திரன் என்ற பெயரில் மூன்று சோழ மன்னர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் இருந்த பொழுதும், இராஜேந்திர சோழர் என்று குறிப்பிட்டாலே, இந்தச் சிறப்பிதழின் நாயகன் முதலாம் இராஜேந்திரன் தான் எல்லோர் மனதிலும் தோன்றுவார். அந்த அளவிற்குப் பெயர்பெற்ற மாமன்னரும், வீரருமான இராஜேந்திரரை, அவரின் பண்பு நலன்களை அவர் காலக் கல்வெட்டுகளின் வழி காணலாம்.

முதலாவது அவருடைய வீரம். அம்மன்னருடைய மெய்கீர்த்தியை ஆராய்ந்தாலே அவரின் வீரம் வெளிப்பட்டுவிடும். வெவ்வேறு ஆட்சியாண்டுகளில் இராஜேந்திரரின் மெய்கீர்த்தி எவ்வாறு இருந்தது என்று பார்க்கலாம்.

அவருடைய முதல் இரண்டு ஆட்சியாண்டு கல்வெட்டுகள் ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேஸரி பன்மர்கு யாண்டு என்று தான் தொடங்குகிறது. எழுத்தமைதி கொண்டு அக்கல்வெட்டுகளை இராஜேந்திரர் காலக் கல்வெட்டுகள் என்று அடையாளம் கண்டுள்ளனர். உதாரணத்திற்கு பாபநாசம் தாலுகாவில், கோயில் தேவராயன்பேட்டையில் மத்ஸ்யபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள கோப்பரகேஸரிபன்மரின் கல்வெட்டு. (SII 19 No.24)

அவரின் மூன்றாம் நான்காம் ஆண்டு கல்வெட்டுகளும் மெய்கீர்த்தியின்றி இருந்தாலும், இராஜேந்திர சோழர் கல்வெட்டுகள் தான் என்று உறுதிபடக் கூறும் வகையில் அவரின் பெயர் கொண்டு இருக்கின்றன. உதாரணத்திற்கு திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள். (SII 17 No. 738, 739, 741)

அவரின் ஐந்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டு கீழ்கண்ட வகையில் சிறு மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது.

ஸ்வஸ்திஸ்ரீ பூர்வ தேசமும், கெங்கையும் கடாரமும் கொண்டருளின கோப்பரகேஸரிபம்மரான உடையார் ஸ்ரீராஜேந்திரசோள என்று வருகிறது.

தென் ஆற்காடு மாவட்டத்தில் கிராமார்தநாதர் கோயிலில் உள்ள அவரின் மற்றொரு ஐந்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் கீழேயுள்ள மெய்கீர்த்தி வரிகள் உள்ளன. கல்வெட்டுப் பாடம் மெய்கீர்த்தி வரை மட்டுமே கீழே கொடுத்துள்ளேன். கோயிலுக்கு நிலம் வழங்கியதைப் பற்றிய செய்தியையுடைய கல்வெட்டின் முழுப்பாடத்தை கொடுக்கவில்லை.

ஸ்வஸ்திஸ்ரீ திருமன்நி வளர இருநிலமடந்தையும் பொ[ற்]செயப்
பாவையுஞ் சிர்த்தனிசெல்வியுன் தந் பெருந்தெவியராகி இ
ந்புற நெடிதியலூழியு ளிடைதுறைநாடுந் துடர்வனவெலி
படர் வனவாசியுஞ் சுள்ளிச்சூழ்மதிட் கொள்ளிப்பாக்கமு நண்ணற்கருமுரண் மண்ணை
க்கடக்கமும் பொருகடலிழத்தரைசர்த முடியு மாங்கவர் தெவிய 吆ரா]ங்கெழில் முடியும் முந்[ந]
[வ]ந்பக்கல் தெந்னவந் வைத்த சுந்தரமுடியும் இந்திரநாரமும் 吆த]ன்றிசை யிழமண்டலமு
ழுவதும் எறிபடைக் கெரளன் முறைமையிற் சூடுங் குலதனமாகிய பலர்புகழ் முடியு
ம் செங்கதிர்மாலையும் சங்கதிர்வெலைத் தொல்பெருங்காவல் பல பழந்திவும் மாப்பெருந் த
ண்டாற் [கொண்ட] கொப்பரகெஸரிபந்மரான ஸ்ரீராஜெந்திரசொழதெவற்க்கு யாண்டு [அ]ஞ்சா[வ]து மிலாடான
ஜெநநாதவளநாட்டுப் பானூற்கூற்றத்து பிரம்மதெயம் இறையானரையூர் ஊர்.....

எட்டாம், பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளின் மெய்கீர்த்தி இன்னும் நீளமாக உள்ளது.. இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் சிறிது கூட்டப்பட்டு அவரின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் கீழ்கண்டவாறு அமைந்துள்ளது.

விழுப்புரம் தாலுகாவில் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோயில் மண்டபத்தின் கிழக்கு சுவரில் உள்ள கல்வெட்டு மெய்கீர்த்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ திருமன்நிவளர இருநிலமடந்தையும் பொர்செயப்பாவையும் சிர்த்தநிசெல்வெயும் தன்பெ
ரு தெவியராகி இன்புற நெடுதுயலுழ்நி உள் இடதுரை நாட்டும் துடர்வன வெல்விபடர்வன
வாசியும் சுள்ளிசூழ்னதிள் கொள்ளிப்பாகையும் நண்ணல்கருமுரண் மண்ணை கடக்கமும் பொருகடல் இழத்த
ரச தன்முடியும் ஆங்கவன் தெவியர் ஒங்கெழில் முடியும் முன்நவர் பக்கல் தென்நவந் வைத்த சுந்தரன்
முடியுமிந்திரந் ஆரம்மும் தென்திசை இழ்ழ மண்டலம் முழுவதும் எறிபடை கெராள்ளன்முறை
மையில் சுடுங்குலதனமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர்மாலை சங்கதிர் வெலைதொல்பெருங்
காவல் பலபழந்திவ்வும் செருவில் சினவில் இருபத்தொருகால் அரைசு களை கட்டபரசிராம்மன் மெல்
வரும் சாந்திமற்றிவமரண் கருதிருத்திய செம்பொற்றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முசங்கியில் முதுகிட்டொ
ளித்த ஜெயசிங்கன் அளப்பெரும் புகழ் ஓடும் பிடியி இலட்டபாடி எழ்ழரை இலக்கம் மும் அவநெதிகுல பெருமலைகள்ளு
ம் விக்கிரம வீரர் சக்கரகொட்டமும் முதுரைபடவல் மதுரை மண்டலமுங் காமிடைவளை நாமணை கொண்ணை
யும் வெங்சினவீரர் பங்ச பள்ளியும் பாசுடை பழந மாசுணி தெசமும் அயர்வில் வண்கித்தி ஆதிநகரவையிற் சந்திரன் தொ
ல் குலத்திந்திரதிலதனை விளையமாசுளத்துக் கிளையொடும் பிடித்து பலதனத்தொடு நிறைகுலதனசூவையும் கிட்
டருஞ்செறிமுளை ஒட்ட விஷயமு பூசுர செய்நல்க்கொசலைநாடும் தந்மபாலனை வெம்முனை அழித்து வண்டுறை சொலை
தண்டபுத்தியும் இரணசூரனை முரணுகத்தாசிக திக்கனை கீர்த்தி தக்கண இலாடமுங் கொலிதசந்த மாவழிந்தொ
ட வங்காரசாரல் கங்காளதெயமும் தொடுகழற்சங்கை ஒட்ட மஹிபாலனை வெஞ்சமவிளாகத் தஞ்சுவித்தருளி ஒண்டிற
ல் யானையும் பெண்டிர் பண்டாரமும் நித்திர நெடுங்கடல் லுத்திரலாடமும் வெறிமலர்த்திர்த்தது தெறிபுநற் கங்கையும்
அலைகடல் நடுவும் பலகலஞ்செலுத்திய சங்கிராம்மவிசையதுங்கபன்மன்நாகிய கிடாரத்தரயனை வாகைய
ம்பொருகடல் கும்பகரியொடும் அகபட பிடித்துரிமையில் பிறசி பெருநெதி பிறக்கமும் ஆந்தவர் நகர் நகபொர்த்தொழில் வாசனண் பிரநற்பன இ
ல்லில் விஜந்திர தொராணம்மும் பொர்சதொருரிர் பன்மணிப்புதவமும் கனமணிக்கதவமும் நிறைல் விஜையமுதுறை காவல் லில்லிலங்க.....
பங்கமு விளைப்பனூறுடை வளைப்பந்தூறும் கலைத்தங்கொர் புகழ் தலைதக்கொலமும் திதமாவல்வினை மாதாமலிங்கமும் கலாமுறி....லிலாமுரிதெசமும் தெனக்கவர் பொழில் மாநக்கவாரமும் தொடுகடற்காவல் கடுமுரட் கடாரமும் மாப்பொருத
ண்டாற்கொண்ட கொப்பரகெசரிபன்மரான உடையார் ஸ்ரீராஜெந்திரசொழ்ழதெவர்க்கு யாண்டு 19 ஆவது ஜயங்கொண்ட சொழமண்டலத்து..........................

அப்பாடி எவ்வளவு பெரிய மெய்கீர்த்தி. கல்வெட்டுச் செய்தியே இன்னும் வரவில்லை. மெய்கீர்த்தியில் இராஜேந்திர சோழன் போரிட்டு ஜெயித்த நாடுகளின் பட்டியல் இருக்கிறது. என்னென்ன நாடுகள் என்று தெரிந்துகொள்வதற்கே ஒரு ஆய்வு தேவை.. மேலும் இந்த மெய்கீர்த்தியில் இரண்டு இடத்தில் கடற்காவல் பற்றிய குறிப்புள்ளது. அலைகடல் நடுவும் பலகலஞ்செலுத்திய என்பதில் இராஜேந்திரசோழன் ஒரு கடற்படையையே கொண்டு பல கப்பல்கள் செலுத்திய செய்தி கிடைக்கிறது. இத்தகைய வீரம் பொருந்திய மாமன்னனை கடற்கொள்ளைக்காரன் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள் சில [அறி]வாளர்கள்.. தமிழ் வியாபாரிகள் கொள்ளைக்காரர்கள் பயமின்றி கடல் கடந்து சென்று வியாபாரம் செய்ய வகைசெய்து கொடுத்தவனை கொள்ளைக்காரன் என்று தானே கூறமுடியும்.

இந்த மெய்கீர்த்திகள் புகழ்பாடலாக இருப்பதனால் அவை கற்பனை என்று கருத இடமில்லை. ஒவ்வொரு ஆட்சியாண்டு மெய்கீர்த்திகளையும் ஆராய்ந்து அம்மன்னன் எந்த ஆட்சியாண்டில் எந்த நாட்டைக் கைப்பற்றினான் என்று கூட கூறமுடியும்.. கற்பனையென்றால் இப்படி ஒவ்வொரு ஆண்டும் மெய்கீர்த்தி வேறுபட தேவையில்லையே.
>>>>>>>>>>>
வணக்கம்
ref to gkc.pdf
book cover.pdf

Geetha Sambasivam

unread,
Feb 5, 2010, 4:54:08 AM2/5/10
to mint...@googlegroups.com
தொடர்ந்து வருகிறேன் விஜய், நன்றி. தகவல்கள் அனைத்துக்கும் மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படித்துக்கொள்கிறேன்.

2010/2/5 vj kumar <vj.ep...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Feb 5, 2010, 5:08:48 AM2/5/10
to mint...@googlegroups.com
தேவரஹா பாபாவை தரிசித்திருக்கிறேன். அவர் வயது பற்றி ஆதாரம் கிடைக்கவில்லை.
இன்னம்பூரான்.

2010/2/5 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இன்னம்பூரான்

shivan .

unread,
Feb 5, 2010, 5:15:29 AM2/5/10
to mint...@googlegroups.com
இந்த இழையில் மேற்கொண்டு கலந்துக் கொள்ள அடியேனுக்கு அவசியமே இல்லை. பெரியவர்கள் பேசும் இடத்தில் என் உளறல் வேண்டியதில்லை என்பது சரியே.

கிளம்புமுன் சில கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு இழையிலிருந்து கிளம்புகிறேன்.


/- இது தான் உங்கள் உரையாடும் ஸ்டைலா? நல்லது! நானும் இதை

எதிர்ப்பார்க்கவில்லை தான்! :)
- இப்படிப் பேசின போது, இப்ப காட்டும் இதே "ஆர்வம்" காட்டப்படவில்லையே!
ஏன்? (Sorry Vijay! Even if I am done, ayya drags me :)/


முதலில் அந்த முந்தையை இழையை ஒழுங்காகப் படிக்கவும். பிறகு கேட்கவும்.



/அப்போ அங்கேயும், அவர் (பேரு என்னாங்க? ரங்கனா??) தானாச் சொல்லலையே!/

!!!!!!!! அதை எழுதினது யார் 'என்னமோ ரங்கனா' என்பது போல் கேள்வியை எழுப்பிய நீர் அந்த இழையை தொட்ட விதத்தைத்தான் போட்டு உடைத்து விட்டீரே! இப்படியா பேசுவது?  அதை எழுதியவர் பெயர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் என்று கூட படித்துக் கொள்ள முடியாத அளவிற்கு பிஸியாய் இருப்பவரின் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை.

உங்கள் பார்வையில் அவர் 'என்னவோ ரங்கனா'க இருந்தால், அதை விட ஒன்றுமே இல்லாத நான் ' யாரோ சிவன்'தான். இதற்கு பிறகும் பேச மனம் வரவில்லை.

//

 

இங்கே விவாதத்தில் சித்திரைத் திருவாதிரை என்று வைணவ நூல்கள் குறிப்பிடும் மாதம் சைத்ரமா மேடமா என்று கேட்டால் அது மேடம் என்றே தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிப் பார்த்தால் ஏப்ரல் நடுவில் தான் மேட மாதம் துவங்குகிறது; ஏப்ரல் தொடக்கத்தில் இல்லை.//kumaran malli


அப்படி சொல்லவதற்கு இல்லை குமரன் மல்லி ஜி!

அஹோபில மடம், விசிஷ்டாத்வைத ரிஸர்ச் சென்டரின் ஆசார்ய வைபவம் போன்றவற்றில் தெளிவாக சித்திரை திருவாதிரைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.


மேலும் ஏப்ரல் 4 என்பதை போட்டும், இந்த சித்திரை திருவாதிரையை சொல்லிய அவர்களது இணைய வலைப்பக்கத்தையும் பார்த்திருக்கிறேன்.


இவ்வளவு பார்த்தவர்களுக்கு ஏப்ரல் நாலு பங்குனி என்று தெரியாதா என்ன?


சைத்ர மாதத்தை கொள்வதும் நடக்கிறது. ஆவணி அவிட்டத்திலும், சிலசமயம் கிருஷ்ண ஜெயந்தியிலும் இதை அவர் கணிப்பதிலிருந்து காணலாம். 


எனக்கு இது குறித்து மேலே பேச விருப்பமே. ஆயினும் இந்த இழை என் தகுதிக்கு மிக மீறியது.


பெரியவர்கள் பேசட்டும்.


2010/2/5 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

--

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 5, 2010, 11:47:36 AM2/5/10
to மின்தமிழ்
தேவ் ஐயா
வணக்கம்!

//தேவரஹா பாபாவின் நெடிய ஆயுள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று//

என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா!
தேவரஹா பாபா அவர்கள் மீது எனக்கு நன் மதிப்பு உண்டு!
யோகம், சமாதி, பிருந்தாவனம் என இன்றும் பல நல்லடியார்கள் உளர்!
எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!

அடியேன் சொல்ல வந்தது, அவை அனுபவ அளவில்...அதை ஆய்வுக்குட்படுத்த
முடியாது!
அப்படி உட்படுத்தினால்..."ஆய்வு முறையில்" ஆயப்படுவது முறைமை என்றே சொல்ல
வந்தேன்!
குடியரசுத் தலைவர் சொன்னார்-ன்னு எல்லாம், ஆய்வில் கொள்ள முடியாது என்றே
கூற முனைந்தேன்!
மறுமுறையும், அடியேனை மன்னிக்கவும்!


//இந்தச் சக்ரவர்த்தி ஆண்ட “திருபுவனம்” எது ? பாதாள லோகம் உண்மையில்
உண்டா ?//
//*நாநிலத்தை முழுதாண்ட* - இந்த முழு நாநிலத்தின் எல்லைகளைத்


தெரிவிக்கும்
வரைபடம் மேதகு மேனாட்டு ஆராய்ச்சியாளர்களிடம் உள்ளதா ?

ஒரு டுபாகுர் ராஜ பரம்பரைக்கதை என்றால் ஒப்புக்கொள்வார்களா ? //

ஹா ஹா ஹா! சூப்பராக் கேட்டீங்க! சோழர்கள் பாதாள உலகம் ஆண்டார்களா? விஜய்
சொல்லட்டும்! :)
கல்வெட்டுகளில் கொஞ்சம் கொஞ்சம் "தற்குறிப்பேற்றம்" எல்லாம் உண்டு தான்,
என்பது பற்றி அவர் தான் சொல்ல வேண்டும்!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 5, 3:11 am, devoo <rde...@gmail.com> wrote:
> > வரலாறு மிகவும் முக்கியம் - 5
>
>  Feb 4, 12:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
>
> > ஆணித்தரமான ஆதாரம் என்றால் என்ன? "ஆணித்தரம்" என்று முன்னொட்டு போட்டுக்
> > கொள்வதா?
> > இந்த பிருந்தாவனம், சமாதி போன்ற விடயங்கள், எல்லாம் மறுபடியும் அதே
> > "டுபாக்கூர் குரு பரம்பரைக் கதை"-யாகத் தான் போய் முடியும்! :))))
>
> தேவரஹா பாபாவின் நெடிய ஆயுள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று;
>

> http://hi.wikipedia.org/wiki/%E0%A4%A6%E0%A5%87%E0%A4%B5%E0%A4%B0%E0%...

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 5, 2010, 11:54:28 AM2/5/10
to மின்தமிழ்
விஜய்

கையைக் குடுங்க!
கதை சூப்பரோ சூப்பர்!
நீங்க நாதகம் எல்லாம் எழுதுவீங்களோ?

//ரேடியோவில் சுப்ரபாதம் முடிந்து இப்போது பழைய பாடல்கள்


ஓடிக்கொண்டுள்ளது

........ வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....//

ஹிஹி! ஐ லைக் இட்!
பாட்டுல கூட, உங்க வரலாற்று ஆர்வம் தெரிகிறது விஜய்!

//...... வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....


அது சரி, அதுல்லே என்ன தமிழ் நாடுன்னு வருது. நீயும் கீழே சென்னை ,

8.8.1964, நு கையெழுத்து போடறியே .//

சூப்பர்! கதையின் முடிவு...நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லும் உத்தி...ஐ
லைக் இட்!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 4, 11:58 pm, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> வரலாறு மிகவும் முக்கியம் - 5

> **


> என் தந்தை அடிக்கடி அறிவுரை கொடுப்பார். அவர் ஒரு கருத்தை சொன்னால் அது நடு
> மண்டையில் நச்சென்று அடித்தார் போல சொல்வார். எப்படி தெரியுமா - அறிவுரையை
> வாக்கியமாக சொல்லாமல் ஒரு கதை போல சொல்லுவர். கதை கேட்கும் ஆர்வத்தில் நானும்

> கூர்ந்து கவனிப்பேன். முடிவில் தான் புரியும் அது வெறும் கதை இல்லை என்று....


>
> நானும் அவர் பாணியில் ஒரு கதை சொல்லுகிறேன். முற்றிலும் கற்பனை கதை.
>

> *கதா பாத்திரங்கள் :

> *
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 5, 2010, 12:24:59 PM2/5/10
to மின்தமிழ்
இப்போ...
விஜய் கதைக்கு இன்னொரு முடிவுக் காட்சியை நான் கொடுக்கிறேன்! ஓக்கேவா? :)
All rights reserved with the author :))

//வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....


அது சரி, அதுல்லே என்ன தமிழ் நாடுன்னு வருது. நீயும் கீழே சென்னை ,

8.8.1964, நு கையெழுத்து போடறியே//

"ஹே சிட்...இதெல்லாம் டாக்குமென்ட்! இதுல எல்லாம் பொய் சொன்னாலும்
பொருந்தச் சொல்லோனும்!
படிக்கும் போதே ஹிஸ்டரி புஸ்தகம் ஒழுங்காப் படிக்க மாட்டே!
பரீட்சைக்கு படிச்சிட்டு, ஹிஸ்டரி புக்கைத் தான் தலைகாணிக்கு
வச்சிக்கிட்டு தூங்குவ!
உன் நல்ல நேரம், உனக்கு ஹிஸ்டரி பத்தாங் கிளாஸோட போயாச்சி!
பாத்தியா? ஹிஸ்டரி ஒழுங்காப் படிச்சி இருந்தீன்னா, ஒழுங்கா "மதராஸ்
ஸ்டேட் - 8.8.1964" -ன்னு எழுதி இருப்பீல்ல?"

"ha ha ha....Come on Dad! C'mon Dude!
Dont think we are dullards in history.
Coz these are no brainers, dont mean, we dudes are brainless...
We gotta like history too! we just didnt read it for exams"

"டேய் சித்...தமிழ்-ல பேச மாட்டியா-டா? அது என்னடா ட்யூட், காட்சா,
கூட்சா-ன்னு கிட்டு?"

"Dad...Hope u know Subramania Bharathi? Hope u also know a person
called Vadalur Ramalingam??"

"அடங்க்க்க்க...எனக்கே ஹிஸ்டரி சொல்லித் தரீயா நீயி?"

"சொல்ப வெயிட் மாடி, தந்தே...
பாரதியார் 8.8.1964-க்கு முன்னாடி தானே???"

"உக்கும்...கிழிஞ்சிது! இதுவே தெரியாதா? Date Lines & Time Lines டா!
Dating the personalities in history is a big subject.
இந்த டேட்டிங் பண்ணிக்கிட்டு இருக்க உனக்கு,
அந்த டேட்டிங் எல்லாம் எங்க தெரியப் போகுது?"

"Ha ha ha! Dad..you are so funny!
பாரதியார் 8.8.1964-க்கு முன்னாடியே...
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட "தமிழ்நாடு"-ன்னு
எழுதி வச்சாறாமே அப்படியா??
Vadalur Ramalingam 8.8.1964-க்கு முன்னாடியே...
தருமமிகு "சென்னையில்" கந்த கோட்டத்துள் வளர் தவமோங்கு கந்த வேளே-ன்னு
எழுதி வச்சாறாமே அப்படியா??"

"டேய்...தமிழ்ப் பாட்டு எல்லாம் சொல்லுற? அடப்பாவி சித்தார்த்தா! எங்க
போயிடா இதெல்லாம் படிச்ச ட்யூட்?"

"8.8.1964-க்கு முன்னாடியே "சென்னை", "தமிழ்நாடு"-ன்னு அங்காங்க
குறிச்சிட்டு போயிருக்காக! "சென்னை"-ன்னு லெட்டர் கீழே எல்லாம்
எழுதி்னாராமே யாரோ மறைமலை அடிகள்...அப்படியா? :)
பாரதியார், வடலூர் வள்ளல் - இவிங்களுக்கு எல்லாம், பொய் சொன்னாலும்
பொருந்த சொல்லத் தெரியாதா டாடி?" :))))))

- Sid says "Gotcha"
- We also say Gotcha?? End of Story! :))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 5, 11:54 am, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> விஜய்
>
> கையைக் குடுங்க!
> கதை சூப்பரோ சூப்பர்!
> நீங்க நாதகம் எல்லாம் எழுதுவீங்களோ?
>
> //ரேடியோவில் சுப்ரபாதம் முடிந்து இப்போது பழைய  பாடல்கள்
> ஓடிக்கொண்டுள்ளது
>  ........ வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....//
>
> ஹிஹி! ஐ லைக் இட்!
> பாட்டுல கூட, உங்க வரலாற்று ஆர்வம் தெரிகிறது விஜய்!
>
> //...... வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....
> அது சரி, அதுல்லே என்ன தமிழ் நாடுன்னு வருது. நீயும் கீழே சென்னை ,
> 8.8.1964, நு கையெழுத்து போடறியே .//
>
> சூப்பர்! கதையின் முடிவு...நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லும் உத்தி...ஐ
> லைக் இட்!
>
> anbudan

> KRShttp://madhavipanthal.blogspot.com

> > 8.8.1964, நு கையெழுத்து- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 5, 2010, 12:27:52 PM2/5/10
to மின்தமிழ்
ஹைய்யோ
கதை முடியலை....கொஞ்சம் இருங்கோ....

ரேடியோ பாட்டு தொடர்கிறது .....
மனிதன் மாறிவிட்டான், ஆற்றில் விழுந்து விட்டான்! வர-லாற்றில் விழுந்து
விட்டான்!

:))))
Thanks Vijay! Juz for fun!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 5, 12:24 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"

> KRShttp://madhavipanthal.blogspot.com

> > > மாட்சிங்கா கல் நெக்லஸ் வேற புது- Hide quoted text -

Kumaran Malli

unread,
Feb 5, 2010, 12:33:49 PM2/5/10
to mint...@googlegroups.com


எனக்கு இதே ஆவணம் (தஸ்தாவேஜூ) நீதிமன்றத்திற்குப் போன போது நடந்தவை எல்லாம் நாடகமா கண் முன்னாடி விரியுது...பாத்து இரசிக்கிட்டு இருக்கேன்...ஒரே குறை...நீதிமன்றத்தில் வானொலி இல்லை. :-(

என் கண் முன்னால் விரிந்ததை விரிவாக எழுத கொஞ்சம் நேரம் தேவை. எழுதி இடுகிறேன். :-)

 

Tthamizth Tthenee

unread,
Feb 5, 2010, 12:35:13 PM2/5/10
to mint...@googlegroups.com
ரேடியோ பாட்டு தொடர்கிறது .....
மனிதன் மாறிவிட்டான், ஆற்றில் விழுந்து விட்டான்! வர-லாற்றில் விழுந்து
விட்டான்!

ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஅ உண்மையிலேயே சிரிப்பை அடக்க முடியலை

ஹய்யோ கதை இன்னும் முடியலை

கொஞ்சம் இருங்கோ

அன்புடன்
தமிழ்த்தேனீ

5-2-10 அன்று, Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com> எழுதியது:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Innamburan Innamburan

unread,
Feb 5, 2010, 12:41:53 PM2/5/10
to mint...@googlegroups.com
சரி.சரி. இழை ஒன்று பேசப்படுவது மற்றொன்று.
 


 
2010/2/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--

Kumaran Malli

unread,
Feb 5, 2010, 12:45:22 PM2/5/10
to mint...@googlegroups.com

இல்லை இ ஐயா. தொடர்புடையது தான். :-)

Kumaran Malli

unread,
Feb 5, 2010, 1:05:48 PM2/5/10
to mint...@googlegroups.com

இடம்: நீதிமன்றம்

காலம்: சிலருக்கு காலத்தில் குழப்பம்; சிலருக்கு காலத்தை நிறுவதிலேயே குழப்பம்; ஆக மொத்தம் எல்லோரும் குழம்பும் காலம் :-)

 

இரண்டு வழக்கறிஞர்கள். ஒருவர் பெயர் நாககுமாரசாமி. இன்னொருவர் பெயர் ஆழ்வார்க்கடியான்.

 

நாககுமாரசாமி வாதிடுகிறார்.

 

"கனம் கோர்ட்டார் அவர்களே...

 

இந்த ஆவணம் செல்லாது என்பதற்குச் சில வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.

 

1964ல் எழுதப்பட்ட இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டவர்கள் தமிழ்நாடு என்றும் சென்னை என்றும் கையொப்பமிட்டிருக்கிறார்கள். சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் வந்தது 1968ல். தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை என்ற பெயர் வந்ததே அதற்கும் பின்னர் தான். இந்தக் கையொப்பத்தில் இவ்விரு பெயர்கள் இருப்பதால் இந்த ஆவணம் பொய் ஆவணம் என்று நிறுவப்படுகிறது. “

 

நீதிமன்றத்தில் பெருஞ்சலனம். 'ஆமாம் ஆமாம் இப்புடிப் பொய் சொல்லியிருக்காங்களே' என்றெல்லாம் குசுகுசுவென்று பேசிக் கொள்கிறார்கள்.

 

ஆழ்வார்க்கடியான் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு மெதுவாக எழுகிறார்.

 

தொண்டையைக் கனைத்துக் கொண்டே

 

"இந்த ஆவணத்தில் 1964ம் வருடம் எழுதப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?"

 

முதலில் விழிக்கிறார் நா.கு.சா. பின்னர் மெதுவாக

 

"எனது வக்கீல் குமாஸ்தா தான் அப்படி சொன்னார்"

 

"அவர் ஏன் அப்படிச் சொன்னார் தெரியுமா?"

 

"இருங்க. கேட்டுச் சொல்றேன்"

 

கேட்டுவிட்டு

 

"இந்த ஆவணம் விபவ வருடத்தில் எழுதப்பட்டிருக்கிறதாம். விபவ வருடம் 1964ல் வந்தது. அதனால் அப்படி சொன்னாராம்."

 

"அவர் சொன்னதை நீங்கள் சரி பார்த்துக் கொண்டீர்களா?"

 

"அதற்கெல்லாம் தேவையில்லை. அவர் என்னிடம் பல வருடங்களாக வேலை பார்க்கிறார். அவர் தொழில் சுத்தம் உள்ளவர். மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்".

 

"தொழில் சுத்தமும் இருக்கலாம். நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கலாம். ஆனால் இங்கே ஒரு பிழை செய்திருக்கிறார். விபவ வருடம் 1964ல் வரவில்லை. 1929ல் வந்தது"

 

"எப்படி இருந்தால் என்ன? இது பெரிய பிழையா? 1929ல் எழுதப் பட்டதோ 1964ல் எழுதப்பட்டதோ நான் வைத்த வாதங்களின் படி தமிழ்நாடு என்ற பெயர் அதற்குப் பின்னர் வந்தது தானே?"

 

"ஏன் அவசரப்பட்டு பாட்டு பாடுகிறீர்கள்? 1929ல் வந்த விபவ வருடம் மீண்டும் 1989ல் வந்தது. இந்த ஆவணம் 1989ல் எழுதப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்போது தமிழ்நாடு என்ற பெயர் வந்துவிட்டதா இல்லையா?"

 

"வந்துவிட்டது. ஆனால் சென்னை என்ற பெயர் மாற்றம் நிகழவில்லை"

 

"ஐயா. நீர் சின்ன வயது இருக்கும் போது சென்னைக்கு வந்திருக்கிறீரா? அப்போது திருவள்ளுவர் பேருந்து சென்னை என்று தமிழிலும் மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும் பலகை வைத்திருக்குமே? பார்த்ததுண்டா? இல்லை நீர் மில்லியனியம் பிள்ளையா?"

 

பதிலில்லை.

 

"இது தான் ஐயா இந்த வழக்கில் இருக்கும் அடிப்படை குழப்பம். வருடத்தைத் தவறாகக் கணக்கிட்டு விட்டு அதிலிருந்து வாதத்தை வைத்திருக்கிறார்கள்.

 

வாதங்களும் ஒழுங்காக இல்லை. சென்னை என்ற பெயர் அன்றும் உண்டு; இன்றும் உண்டு. தமிழ்நாடு என்ற பெயரும் அப்படியே. என் பெயரும் சிலருக்கு இந்த மாதிரி குழப்பங்கள் ஏற்படுத்துவதுண்டு. என் பெயரைப் படித்துவிட்டு கல்கியின் நாவலைப் படித்து எனக்கு இந்தப் பெயரை வைத்தார்கள் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். மதுரகவியாழ்வாரின் பக்தர்களான என் பெற்றோர் இந்தப் பெயரை வைத்ததும் இந்தப் பெயர் எங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வருவதும் அவர்களுக்குத் தெரிவதில்லை."

 

"அதெல்லாம் இருக்கட்டும் ஓய். என்னுடைய வாதம் இன்னும் முடியவில்லை. அதற்குள் தீர்ப்பு சொல்லிவிட முடியாது"

 

"பொறுமையாக இருக்கிறேன். இன்னும் உங்கள் வாதங்களைக் கேட்க. தொடர்ந்து பேசுங்கள்"...

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 5, 2010, 1:54:30 PM2/5/10
to மின்தமிழ்
@ Shivan Ayya

//!!!!!!!! அதை எழுதினது யார் 'என்னமோ ரங்கனா' என்பது போல் கேள்வியை
எழுப்பிய
நீர் அந்த இழையை தொட்ட விதத்தைத்தான் போட்டு உடைத்து விட்டீரே!//
//அதை எழுதியவர் பெயர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் என்று கூட படித்துக்
கொள்ள முடியாத அளவிற்கு//
//அதை விட ஒன்றுமே இல்லாத நான் ' யாரோ சிவன்'தான்//

ஹைய்யோ! என்னமா கோவம் வருது Shivan Ayya-வுக்கு! :)


மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா!

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களையும், மின்தமிழில்/மற்றும் அவர்
திருவரங்கன் வலைப்பூவையும் முன்பே தெரியும்...:) அவருக்கும் என்னைத்


தெரியும்!

//முந்தைய இழையில்...அவர் (பேரு என்னாங்க? ரங்கனா??)// -ன்னு
ச்ச்ச்ச்ச்ச்சும்மா கேட்டேன்...ஒரு விளையாட்டிற்கு...
முந்தைய இழையின் தாக்கங்கள் இங்கு வேணாம் என்பதற்காக...அப்படி ஒரு
வெளையாட்டு....Take it Ez..:)

//அப்படி சொல்லவதற்கு இல்லை குமரன் மல்லி ஜி!//

ஹிஹி!

//அஹோபில மடம், விசிஷ்டாத்வைத ரிஸர்ச் சென்டரின் ஆசார்ய வைபவம்


போன்றவற்றில்

......


மேலும் ஏப்ரல் 4 என்பதை போட்டும், இந்த சித்திரை திருவாதிரையை சொல்லிய
அவர்களது
இணைய வலைப்பக்கத்தையும் பார்த்திருக்கிறேன்.

இவ்வளவு பார்த்தவர்களுக்கு ஏப்ரல் நாலு பங்குனி என்று தெரியாதா என்ன?//

அதானே!
இவ்வளவு பார்த்தவர்களுக்கு "கிருமி கண்டவன்" யாரு-ன்னு மட்டும் தெரியாதா
என்ன? :))
பேசாம நம்ம விஜய்-யை அகோபில மடத்துக்கு அனுப்பிறலாமா? :)))
எதுக்கு அவர் இத்தனை ஆதாரம் திரட்டிக் கஷ்டப்படணும்? :)

//ஆவணி அவிட்டத்திலும், சிலசமயம் கிருஷ்ண ஜெயந்தியிலும் இதை அவர்
கணிப்பதிலிருந்து காணலாம்.//

இவை பண்டிகைகள்! ஆவணி அவிட்டம் என்பதில் உள்ள "ஆவணி" என்பது ஒரு
முன்னொட்டு தான்!
Shravan Poornima-வை ஒட்டியும் வரும்!
உபகர்மா-வே முக்கியம்! ஆடியா? ஆவணியா என்பது அல்ல!

ஆனா சித்திரை திருவாதிரை என்பது ஒரு மனிதரின் பிறந்தநாள்! அதில் எந்த
உபகர்மாவும் இல்லை!
பிறந்த நாள், பிறந்த் நாள் அன்னிக்கித் தான் வரும்! :)
சித்திரை மாசம், திருவாதிரை நட்சத்திரம்!

//எனக்கு இது குறித்து மேலே பேச விருப்பமே. ஆயினும் இந்த இழை என்


தகுதிக்கு மிக மீறியது.

பெரியவர்கள் பேசட்டும்//

தாங்கள் தொடர்ந்து பேசலாம்! பேச்சுத் தடை ஆகும் அளவுக்கு இவ்விடத்தே
யாதும் நடந்து விடவில்லை!
கருத்துக்களை "கருத்தாக" மட்டுமே கொண்டு, ஒட்டியும், வெட்டியும் பேசுவது
நன்மையே பயக்கும்! கேள்வியே வேள்வி!
விவாதத்திற்கு தங்கள் மேலான பங்களிப்பைத் தொடர்ந்து தாருங்கள்!
நன்றி!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 5, 5:15 am, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> இந்த இழையில் மேற்கொண்டு கலந்துக் கொள்ள அடியேனுக்கு அவசியமே இல்லை.

> பெரியவர்கள் பேசும் இடத்தில் என் உளறல் வேண்டியதில்லை என்பது சரியே....
>
> read more »

> 2010/2/5 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> > பெரியோரை வியத்தலும் இலமே!- Hide quoted text -

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 5, 2010, 2:03:50 PM2/5/10
to மின்தமிழ்
//தேவரஹா பாபாவை தரிசித்திருக்கிறேன். அவர் வயது பற்றி ஆதாரம்
கிடைக்கவில்லை//

நன்றி இன்னம்பூரான் சார்!
உண்மை தான்! சரியாச் சொன்னீங்க! ஆதாரங்கள் இல்லை!

தேவரஹா பாபாவின் வயதிற்கு ஆதாரம் ஏன் தேட வேண்டும்?
பக்தர்கள் நோக்கம் வேறு! ஆதாரம் தேவையில்லை!
ஆய்வாளர் நோக்கம் வேறு! ஆதாரம் தேவை!
பக்தன் என்றும் சொல்லிக் கொண்டு, ஆய்வும் செய்ய, மனத்திற்குள் விழைவதால்
வரும் குழப்பங்கள் அஃது!

ஆதாரம் - தேடுவோர் தேடிக் கொள்ளட்டுமே!
பாதாரம் - தேடுவோர் தேடிக் கொள்ளட்டுமே!
அவரை அணுகுவோர் எதற்கு அணுகுகிறார்கள் என்பதைப் பொருத்து அது!
அணுகில் அணுகும்! அகலில் அகலும்!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 5, 5:08 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> தேவரஹா பாபாவை தரிசித்திருக்கிறேன். அவர் வயது பற்றி ஆதாரம் கிடைக்கவில்லை.
> இன்னம்பூரான்.
>
> 2010/2/5 devoo <rde...@gmail.com>
>
>
>
>
>
> > > வரலாறு மிகவும் முக்கியம் - 5
>
> >  Feb 4, 12:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
> > > ஆணித்தரமான ஆதாரம் என்றால் என்ன? "ஆணித்தரம்" என்று முன்னொட்டு போட்டுக்
> > > கொள்வதா?
> > > இந்த பிருந்தாவனம், சமாதி போன்ற விடயங்கள், எல்லாம் மறுபடியும் அதே
> > > "டுபாக்கூர் குரு பரம்பரைக் கதை"-யாகத் தான் போய் முடியும்! :))))
>
> > தேவரஹா பாபாவின் நெடிய ஆயுள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று;
>

> >http://hi.wikipedia.org/wiki/%E0%A4%A6%E0%A5%87%E0%A4%B5%E0%A4%B0%E0%...

> இன்னம்பூரான்- Hide quoted text -

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 5, 2010, 2:09:25 PM2/5/10
to மின்தமிழ்
//1929ல் வந்த விபவ வருடம் மீண்டும் 1989ல் வந்தது//

Hurrah!
Kumaran Anna is kalakkings :))
தொடர்ந்து வருகிறேன். நன்றி குமரன். தகவல்கள் அனைத்துக்கும் மீண்டும் ஒரு
முறை ஆழ்ந்து படித்துக்கொள்கிறேன்.

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

devoo

unread,
Feb 5, 2010, 3:09:38 PM2/5/10
to மின்தமிழ்
Feb 5, 1:03 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"

//தேவரஹா பாபாவின் வயதிற்கு ஆதாரம் ஏன் தேட வேண்டும்?


பக்தர்கள் நோக்கம் வேறு! ஆதாரம் தேவையில்லை! ஆய்வாளர் நோக்கம் வேறு!
ஆதாரம் தேவை!
பக்தன் என்றும் சொல்லிக் கொண்டு, ஆய்வும் செய்ய, மனத்திற்குள் விழைவதால்

வரும் குழப்பங்கள் அஃது!//

கிறிஸ்து பிறந்த நேரம், நாள், ஆண்டு இவற்றுக்கு ஆதாரம் என்ன ? கிறிஸ்தவ
ஆண்டு எந்த அறிவியலின் அடிப்படையில் ? தகுந்த ஆதாரத்தின்
அடிப்படையில்தான் மேனாட்டவர் அதை நடைமுறையில் ஏற்றுக்கொண்டுள்ளனரா ?
அதைப் பின்பற்றுவோர் எல்லாரும் கிறிஸ்துவின் பக்தர்களா ? அல்லது
எல்லாருமே ஆராய்ச்சி செய்வோரா ? கிறிஸ்துவுக்கு ஏன் ஆதாரம் தேட வேண்டும்
என்று நடுநிலை வகிப்பவரான நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

தேவ்


தேவ்

devoo

unread,
Feb 5, 2010, 3:24:29 PM2/5/10
to மின்தமிழ்
கண்ணபிரான் சார்,

அன்பர் விஜயின் முயற்சிகளை நகையாடும் எண்ணம் அடியோடு இல்லை; உயர்வு
நவிற்சி எங்கும் உண்டு; சிலாசாஸனங்களுக்கு அரசனின் புகழ் பாடும்
நோக்கமும் உண்டு என்பதை ஏற்க வேண்டும். கல்வெட்டுப் பதிவுகளின் நிறை
குறைகள் குரு பரம்பரை நூல்களிலும் இருக்கலாம். த்ரிபுவனத்தையும் கட்டி
ஆளுதல், நானிலம் முழுக்க ஆளுதல் இவை ஜாதகக் கதையின் நூலிழைகள்.

நவீனச் சூழ்நிலையில் ஒரு புரிதலுக்காக ஆசார்ய பரம்பரைத் தொகுப்பில்
கிறிஸ்தவ ஆண்டு முறையைக் கொடுத்துள்ளேன். அக்கணிப்பில் உரிய மாற்றங்களைப்
பெரியோரிடமிருந்து எதிர்பார்த்தேன்; அவகாசம் அளித்த பின்னரே அதை மரபு
விகியில் பதிவு செய்தேன். கிறித்தவ ஆண்டுக் கணிப்பைக் காட்டிலும்
கல்யப்த, சந்த்ரமாந, ஸௌரமாந முறைகளில் அறிவியல் அதிகம் என்பதை ஆன்றோர்
நன்கறிவர்.

கண்களை இழந்து இல்சேர வழி தெரியாமல் கையறு நிலையில் இருந்த
அப்பெரியோர்களுக்கு உதவியது ‘நாவல்கொடி அம்மாள்’ என்ற ஒரு பெண்மணி; சோழ
மன்னனை ’அவ்யபதேச்யன்’ என்றே சுட்டுவர்.

Sympathy ஏற்படுத்த வேண்டுமானால் கூரேசருக்குப் பதிலாக ராமானுஜரின்
கண்கள் பறிக்கப்பட்டன என்று நூல் விட்டிருக்கலாம்; இன்னும் எடுப்பாக
இருக்கும். மாலிருஞ்சோலை ஆலயம் திருமாலையாண்டான் வம்சத்தவரின் சீரிய
நிர்வாஹத்தில் இருந்தது; அங்கு கூரேசர் சென்றார் என்றால் சோழ
நாட்டிலிருந்து தப்பி நல்ல பாதுகாப்பில் இருக்கும் பொருட்டே என்று
புரிந்து கொள்ளலாம்; வைணவ வரலாறு தெரிந்தவர் தாங்கள் என்பதால் இதை எழுத
நேர்ந்தது. இழை பிரிக்கும் நோக்கம் எள்ளளவும் இல்லை. அடியேன் விஜயின் பரம
ரஸிகன்; அப்படியே தொடர விழைகிறேன்

தேவ்


Innamburan Innamburan

unread,
Feb 5, 2010, 3:38:16 PM2/5/10
to mint...@googlegroups.com
தேவ,
கிறிஸ்து அக்காலத்தவர். தோரஹா ( இரு வழி ) பாபா சமகாலத்தவர். வரலாற்று நடுநிலைமை தமிழில் தேடுபவர்கள், மு.வ. அவர்களின் 'தமிழ் இலக்கிய வரல்ளறு' என்ற நூலில் அதை காணலாம்.  தன ஆசான் திரு.வி.க. அவர்களின் இலக்கியவரவு பற்றி நடுநிலைமையில் கூறியுள்ளார். இந்த இழையின் தலைப்பை இந்திய வரலாறு என்று பார்த்தால், வின்சென்ட் ஸ்மித்தின் இந்திய வரலாற்றுடன் சர் ஜாதுநாத் சர்க்கார் அவர்களின் இந்திய வரலார்ற்றை ஒப்பியல் ஆய்வு செய்யவேண்டும். தொடருங்கள். தலைப்பை மற்றும் மாற்றி விடுங்கள்.
 இன்னம்பூரான்


 
2010/2/5 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 5, 2010, 4:43:16 PM2/5/10
to மின்தமிழ்
//கல்கியின் நாவலைப் படித்து எனக்கு இந்தப் பெயரை வைத்தார்கள் என்று

நிறைய பேர் நினைக்கிறார்கள்.

மதுரகவியாழ்வாரின் பக்தர்களான என் பெற்றோர் இந்தப் பெயரை வைத்ததும்
இந்தப் பெயர் எங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வருவதும்

அவர்களுக்குத் தெரிவதில்லை//

அட, என்னாங்க நீங்க..
கல்கி தான் வரலாற்று உலகில் முதல் முறையாக....
"ஆழ்வார்க்கடியானை" கண்டே புடிச்சது!

அதுக்கும் முன்னாடியே "இன்-கவி", "ஆழ்வார்க்கடியான்" என்ற பேரெல்லாம்
மதுரகவி ஆழ்வாருக்கு பாட்டுல இருக்கு-ன்னு சொன்னாப் போதுமா?

பாட்டுல இருக்குறது எல்லாம் பத்தாது!
கல்வெட்டுல இருக்கா? அதைச் சொல்லுங்க!
கல்வெட்டில் "பொறிச்சி", இன்னிக்கும் "உண்மை" பேசிக்கிட்டு இருக்கா? அது
மட்டுமே முக்கியம்! :))

கண்ணகி சிலையை, மெரீனாவில் இருந்து எடுத்து, மியூசியத்தில் வச்ச போது
கூட,
அதுக்கு கீழே, அப்போதைய அரசாங்கம், ஏன் சிலையை எடுத்தோம்-ங்கிற
காரணத்தை,"பொறிச்சி" வச்சிச்சாம்!
அப்படிப் "பொறிச்சது" தான், கண்ணகி சிலை விஷயத்தில், சத்யம் சத்யம் புன:
சத்யம்! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 5, 2:09 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> //1929ல் வந்த விபவ வருடம் மீண்டும் 1989ல் வந்தது//
>
> Hurrah!
> Kumaran Anna is kalakkings :))
> தொடர்ந்து வருகிறேன். நன்றி குமரன். தகவல்கள் அனைத்துக்கும் மீண்டும் ஒரு
> முறை ஆழ்ந்து படித்துக்கொள்கிறேன்.
>
> anbudan

> KRShttp://madhavipanthal.blogspot.com

> > பேசுங்கள்"...- Hide quoted text -

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 5, 2010, 5:19:04 PM2/5/10
to மின்தமிழ்
@குமரன் அண்ணா

//விபவ வருடம் 1964ல் வரவில்லை. 1929ல் வந்தது//

//1929ல் வந்த விபவ வருடம் மீண்டும் 1989ல் வந்தது//

//இது தான் ஐயா இந்த வழக்கில் இருக்கும் அடிப்படை குழப்பம். வருடத்தைத்
தவறாகக்
கணக்கிட்டு விட்டு அதிலிருந்து வாதத்தை வைத்திருக்கிறார்கள்//

கலக்கல்ஸ்!
இதைத் தான் நான் இந்த இழையின் துவக்கத்தில் இருந்து சொல்லி வருகிறேன்!
The Quality of Input data is Critical to the Quality of Output data.
இராம.கி ஐயா அவர்களும், அடியேனின் இந்த Independent Verification-ஐ முன்
மொழிந்துள்ளார்!

Herez the methodology:
1. குரு பரம்பரையை மட்டுமே வைத்து, இராமானுசரின் பிறந்த தேதியை எடுத்துக்
கொண்டது முதல் பிழை!
2. அப்படியே எடுத்துக் கொண்டாலும், அதை 1017 என்று Convert செய்த போது,
எழுந்த Ephmeresis குளறுபடிகள் இரண்டாம் பிழை! 4th April, 1017 is NOT
சித்திரைத் திருவாதிரை! It is Panguni!

Now,
* குரு பரம்பரை எங்கேயும் 4th April, 1017 என்று சொல்லவில்லை! அது
சொன்னதெல்லாம்...
//பிங்கள வர்ஷம், சித்திரை மாசம்
சுக்ல பக்ஷத்தில், பஞ்சமி, குருவாரம், திருவாதிரையிலே,
சுபமுகூர்த்ததிலே,
கார்க்கட லக்னத்திலே, துளசீ வனத்திலே...நீர் வண்ணன் நிர்மலையாறு
கானத்தே,
பெரிய ஏரியை உடைய பெரும்பூதூரிலே
ஸ்ரீமன் ஆன ராமானுஜ திவாகரனும், ஸ்ரீ பூமிப் பிராட்டியார்
திருவுதரத்திலே, தோன்றியருளினார்!//
* குரு பரம்பரை எங்கேயும், சோழ மன்னனைப் பேர் சொல்லிக் குறிக்கவில்லை!

ஆக,
சொல்லாத ஒன்றைச் சொல்லியதாக நிறுவுவதற்கு...
சொல்லாத தேதியான 1017-ஐ, சொல்லியதாக எடுத்துக்கிட்டு...
அதுக்கு, ஆதாரம் அடுக்குகிறேன் என்றால் எப்படி?
"பொய்" சொல்லிட்டாங்க பார்! "உண்மை"யப் பொறிச்சி வைக்கலை பார்! என்று


தான் போய் முடியும்!

You start with bad quality data!
and then convert it to, more bad quality data!
and then use this data to conduct experiment and pass judgement?
Is this scientific?
Where is the zero error, zero correction and the std deviation for
this data set?
Is the data variance = 1 sigma, 2 sigma or 3 sigma?

"மதத்தில் ஏறி விட்டான்" என்று ஒரு காட்சியைக் காட்டி விட்டு...
வரலாற்றை, "இன்னொரு மதமாக" ஆக்கலாமா?
Should History not be Absolutely Scientific? - With all source data's
identification & traceability?

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 5, 4:43 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"


<shravan.r...@gmail.com> wrote:
> //கல்கியின் நாவலைப் படித்து எனக்கு இந்தப் பெயரை வைத்தார்கள் என்று
> நிறைய பேர் நினைக்கிறார்கள்.
>
> மதுரகவியாழ்வாரின் பக்தர்களான என் பெற்றோர் இந்தப் பெயரை வைத்ததும்
> இந்தப் பெயர் எங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வருவதும்
> அவர்களுக்குத் தெரிவதில்லை//
>
> அட, என்னாங்க நீங்க..
> கல்கி தான் வரலாற்று உலகில் முதல் முறையாக....
> "ஆழ்வார்க்கடியானை" கண்டே புடிச்சது!
>
> அதுக்கும் முன்னாடியே "இன்-கவி", "ஆழ்வார்க்கடியான்" என்ற பேரெல்லாம்
> மதுரகவி ஆழ்வாருக்கு பாட்டுல இருக்கு-ன்னு சொன்னாப் போதுமா?
>
> பாட்டுல இருக்குறது எல்லாம் பத்தாது!
> கல்வெட்டுல இருக்கா? அதைச் சொல்லுங்க!
> கல்வெட்டில் "பொறிச்சி", இன்னிக்கும் "உண்மை" பேசிக்கிட்டு இருக்கா? அது
> மட்டுமே முக்கியம்! :))
>
> கண்ணகி சிலையை, மெரீனாவில் இருந்து எடுத்து, மியூசியத்தில் வச்ச போது
> கூட,
> அதுக்கு கீழே, அப்போதைய அரசாங்கம், ஏன் சிலையை எடுத்தோம்-ங்கிற
> காரணத்தை,"பொறிச்சி" வச்சிச்சாம்!
> அப்படிப் "பொறிச்சது" தான், கண்ணகி சிலை விஷயத்தில், சத்யம் சத்யம் புன:
> சத்யம்! :)
>
> anbudan

> > > தமிழ்நாடு என்ற பெயரும் அப்படியே. என் பெயரும் சிலருக்கு இந்த மாதிரி- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

Message has been deleted
It is loading more messages.
0 new messages