மாதே, மலயத்வஜ பாண்ட்ய ...

142 views
Skip to first unread message
Message has been deleted

N. Ganesan

unread,
Mar 31, 2009, 12:19:53 AM3/31/09
to mint...@googlegroups.com
http://www.youtube.com/watch?v=IM3ibqt-taQ

இது யார் பாடிய பாட்டு? மைசூர் அவையிலா?

ஜெயசாமராஜ உடையார்? ஹரிகேசநல்லூர்?
அன்றி, அதற்கும் பழசா?

நா. கணேசன்

karth...@gmail.com

unread,
Mar 31, 2009, 6:17:20 AM3/31/09
to மின்தமிழ்
முத்தையா பாகவதர் பாடல்; கமாஸ் ராகம்.

இதை இங்கு விசேஷமாகக் கேட்பது ஏனோ?

ரெ.கா.

N. Ganesan

unread,
Mar 31, 2009, 6:49:33 AM3/31/09
to மின்தமிழ்

On Mar 31, 5:17 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:


> முத்தையா பாகவதர் பாடல்; கமாஸ் ராகம்.
>
> இதை இங்கு விசேஷமாகக் கேட்பது ஏனோ?
>
> ரெ.கா.

நன்றி. முதல்முறையாக இப்பாட்டைக் கேட்கிறேன்.
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் தான் என்பதறிய மகிழ்ச்சி.

----------

நல்ல எடிட்டர் இருந்தால் இத்தகு கிருதிகளை
ஒருவர் எழுதியிட, மற்றொருவர் பொருள் விளக்கி விடலாம்.

கமலம் போன்றோர் மலையாள முதல் நூல்களை
மலையாள எழுத்தில் இட்டால், எழுத்தைத் தமிழெழுத்தாக்கினால்
பழையவற்றுக்கு அனேகமாக பொருள் புரியும்.

அமெரிக்காவில் பாப்லோ நெருடா போன்றோர் புத்தகங்கள்
இடப்பக்கம் ஸ்பானிஷிலும், வலப்பக்கம் ஆங்கில அழகான மொழிபெயர்ப்பிலும்
கிடைக்கின்றன. அதுபோல இருமொழிப் பதிப்புகள் பல.
கிரேக்க இலக்கியங்கள் அவ்வாறு வெளிவது 100 ஆண்டு ஆயிற்று.
வடமொழியின் உன்னத இலக்கியங்கள் ’கிலே ஸான்ஸ்கிரிட் லைப்ரர்ரி’
ஓர் அம்மாள் தன் சொத்தைக் கொடுத்து இதனை உற்பவித்தார்:
http://www.claysanskritlibrary.org/
(இடப்புறம் வடமொழி மூலம் - ஆங்கில எழுத்து மீக்குறியொடும்.
வலப்புறம் அழகான மொழிபெயர்ப்பு என்று). இதுவரை
பதிப்பான எல்லா க்லே புக்ஸும் என்னிடம் உள.
(ஓர் அதிசயம், வங்காளத்தில் பால அரசர்களின் அவையில்
ஏற்பட்ட (சம்ஸ்கிருத) தென்றல்விடுதூது மொழிபெயர்ப்பில்
அச்சாக்கியிருக்கிறார்கள். நம் ஊர்ப் பெயர்கள் எல்லாம் இருக்கின்றன.
பல பெருமாள் திவ்யஸ்தலங்கள், ...
தமிழில் மொழிபெயர்ப்பாக வேண்டிய புஸ்தகம்.)

இதுபோல், நான்கு திராவிட மொழியிலக்கியங்களுக்கு ஒரு சீரீஸ்
ஏற்படணும். தனவந்தர்களும், யூனிவெர்ஸிட்டிகளும் இணைந்தால்
நடக்கும்.

தமிழில் அவைபோல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்கம், ஒரியம்,
பஞ்சாபி, வடமொழி, இந்தி, உர்து, ... மொழிகளின் இருமொழிப் பதிப்பு
ஏற்படும் காலம் தோன்றவேண்டும். மூலம் ஆங்கில எழுத்தோ, தமிழ் எழுத்தோ.
தமிழில் மொழிபெயர்ப்பு வலப்புறம் அமையலாம்.

நா. கணேசன்

>
> On Mar 31, 12:19 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> >http://www.youtube.com/watch?v=IM3ibqt-taQ
>
> > இது யார் பாடிய பாட்டு? மைசூர் அவையிலா?
>
> > ஜெயசாமராஜ உடையார்? ஹரிகேசநல்லூர்?
> > அன்றி, அதற்கும் பழசா?
>

> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Mar 31, 2009, 6:58:01 AM3/31/09
to மின்தமிழ்

On Mar 31, 5:17 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:

> முத்தையா பாகவதர் பாடல்; கமாஸ் ராகம்.
>
> இதை இங்கு விசேஷமாகக் கேட்பது ஏனோ?
>

இன்னொன்று: சபனா, அடியேன் - இருவருக்கும் ஒரே பிறந்தநாள்.
(செப். 15 அண்ணா, செப். 16 - எம்.எஸ்., செப். 17 பெரியார், செப். 18 -
ஆஸ்மி).

> ரெ.கா.
>
> On Mar 31, 12:19 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> >http://www.youtube.com/watch?v=IM3ibqt-taQ
>
> > இது யார் பாடிய பாட்டு? மைசூர் அவையிலா?
>
> > ஜெயசாமராஜ உடையார்? ஹரிகேசநல்லூர்?
> > அன்றி, அதற்கும் பழசா?
>

Hari Krishnan

unread,
Mar 31, 2009, 8:28:48 AM3/31/09
to minT...@googlegroups.com


2009/3/31 N. Ganesan <naa.g...@gmail.com>

http://www.youtube.com/watch?v=IM3ibqt-taQ


இது யார் பாடிய பாட்டு? மைசூர் அவையிலா?

ஜெயசாமராஜ உடையார்? ஹரிகேசநல்லூர்?
அன்றி, அதற்கும் பழசா?

நா. கணேசன்

ராகம் கமாஸ்.  மைசூர் வாசுதேவாசாருடைய ப்ரோசேவாரெவருராவைப் போல ஒலிக்கிறது.  (சங்கராபரணம் திரைப்படத்தில் ஒலித்த பாடல்.)  ராகம் சரிதானே?

பாடலைப் பற்றிய குறிப்புகளை நானும் எதிர்பார்க்கிறேன்.   
--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Mar 31, 2009, 10:51:19 PM3/31/09
to மின்தமிழ்

On Mar 31, 7:28 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/3/31 N. Ganesan <naa.gane...@gmail.com>


எம். எஸ்.:
http://www.sawf.org/audio/khamaj/ms_mate.ram

சுதா ரகுநாதன்:
http://www.youtube.com/watch?v=pdVdmEQAvLo

http://intl-truveo-vs-mtc01.evip.aol.com/tag/khamas

Mysore Doraiswamy Iyengar (1920-1997) Mathe Malayadhwaja -
Khamas Varnam - Adi Talam,
the famous daru varnam composed by Sri. Harikesanallur
Muthaiah Bhagavathar.
http://www.youtube.com/watch?v=S26xf4pj2qY

Morning Raga - movie title song:
http://www.youtube.com/watch?v=IM3ibqt-taQ

http://www.culturalcentreofindia.com/DancesofIndiaBharataNatyamArangetramDancesDVD.html
Varnam song displays a great combination of both pure technique and
facial expressions. This song is a prayer to Goddess Parvati. Set in
Ragam Kamas and Talam Adi.
Language: Kannada & Sanskrit
Poet: Harikesa Nallur Muthayya Bhagavathar

Lyrics:
Mathe Malaya dhwaja pandya samjathe mathanga vadana guha(4)
Jathi: Thaka Naka thaka
Mathe Malaya dhwaja pandya samjathe mathanga vadana guha(21)
Sakodari sankari Chamundeswari chandrakaladari thaye gouri(5)

DADA nidadani dadanida danipama
DADA nirisani sadanisa dapapama
DADA nigarini risanida panidama
DADA magamapa mapa dada nini dama
DADA risanida ni da da madanima ni
DADA sasapada ni da da magarisa ni
DADA pa DA da ni DA da saDA niDA
magari sani da nisanini dada pama
(Ist speed & second speed)
Data sakala kala nipuna chathura
Data vividha matha samaya samarasa
Data sulabha hrudaya madhura vachana
Data sarasa ruchira tara swaralaya
Geetha sukada nija bhava rasikavara dhata
Mahisha suranada nalmadi srikrishna rajendra nadaya
Sada pore mahitha harikesa manohare sadaya
(Ist speed & second speed)
Mathe Malaya dhwaja pandya samjathe mathanga vadana guha (11/2)

Shyame sakala bhuvana sarva bhoume sasi mandala madhyaga (5)
1.MA,MA, pani dada papa magamapa MA,MA, nida MAsani dapadada(2)
Shyame sakala bhuvana sarva bhoume sasi mandala madhyaga
2.nidanida dapapama PAPA nidapama gamaPA nidaMA sanidapa MAnida(2)
Shyame sakala bhuvana sarva bhoume sasi mandala madhyaga
3.saSAsa nidanisa niDApa magamapa maMAma samagama pasanida NI;(7)
nidani padani mapadani gamapadani samagama padani samagari sasanida
pada
Shyame sakala bhuvana sarva bhoume sasi mandala madhyaga

Meaning:
O Mother! You are the daughter of the Pandya king Malayadhwaja
You are the lady with the face glowing green

O Mother! You have the beauty of the moon

You have the great expertise in all the arts
You allow equal rights to all the creeds
You are soft and sweet spoken
You express affection in music and rhythm
You inspire us with your beautiful and expressive song
You have gained fame for killing the demon, Mahishasura
You protect and care for Sri Krishna Rajendra, the Maharaja of Mysore
Ever pray to Siva and the mother, Parvati

Mother! You glow with the blue color
You care for the whole world
You glow like a full moon


தரு வர்ணம்
கமாஸ் ராகம் - ஆதி தாளம்

மாதே மலயத்வஜ பாண்ட்ய சஞ்ஜாதே
மாதங்க வதன குஹ மாதே

சகோதரி சங்கரி சாமுண்டேஸ்வரி
சந்திரகலாதரி தாயே கௌரி

....

நா, கணேசன்

N. Ganesan

unread,
Sep 16, 2011, 10:18:39 PM9/16/11
to N. Ganesan, மின்தமிழ்

ரெ.கா. ஸார் ரொம்ப நாளாக எழுதுவதில்லையே.

பாரதியார் நண்பர் பரலி சு. நெல்லையப்பரின் பிறந்தநாளும்
செப்டம்பர் 18 தானாம்.

மதுரை மீனாட்சி மீது பாடிய பாட்டு - சபனா ஆஸ்மி (மார்னிங் ராகா):
http://www.youtube.com/watch?v=IM3ibqt-taQ

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 16, 2011, 10:36:24 PM9/16/11
to N. Ganesan, mintamil, Santhavasantham

புதுச்சேரி
19 ஜுலை 1915

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு
காத்திடுக

தம்பி - மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள் , நினதறிவு மலர்ச்சி பெற்று
வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் - ஞாயிற்றின்
கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்
நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும்
மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட
வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு
வழியில்லை
ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,

அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை
நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை
நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே
கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை,
புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்

தம்பி - நான் ஏது செய்வேனடா

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு
வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும்
உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு
ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பி - உள்ளமே உலகம்

ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே! மேலே!

நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு
பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச்
சிரி

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! - மேலே மேலே! மேலே!
**

தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது

அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க
என்றெழுது

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி
என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது

ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது

தொழில்கள், தொழில்கள் என்று கூவு

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேற்குலத்தான்
என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக

முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல்,
இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று
முழங்கு

சக்தி ! சக்தி! சக்தி! என்று பாடு

தம்பி - நீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல்
இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர்
கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன்.
அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம்
செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத்
தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும்
எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி
- உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை ? நீ வாழ்க.

உனதன்புள்ள
பாரதி

--------------------------------------

செப். 15 அண்ணா, செப் 16, எம் எஸ், செப் 17 பெரியார், செப் 18 பரலி சு.
நெல்லையப்பர்
பிறந்தநாள். பாரதி நெல்லையப்பபிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் ௐ
ஓங்காரத்தை ஓரெழுத்தாகப் பயன்படுத்தியுள்ளேன்.
http://nganesan.blogspot.com/2011/04/meenakshi-tamil-archanai.html

இன்று பரலி சு. நெல்லையப்பர் பிறந்தநாள்!

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

N. Kannan

unread,
Sep 16, 2011, 11:00:30 PM9/16/11
to mint...@googlegroups.com
2011/9/17 N. Ganesan <naa.g...@gmail.com>:

>
> ரெ.கா. ஸார் ரொம்ப நாளாக எழுதுவதில்லையே.
>

ரெ.கா ஒரு அறுவை சிகிச்சைக்குப்பின் அமையாக இலக்கியப்பணியில் மட்டும்
ஈடுபட்டுள்ளார். அடுத்த மாதம் சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டில்
சந்திப்பேன்.


> மதுரை மீனாட்சி மீது பாடிய பாட்டு - சபனா ஆஸ்மி (மார்னிங் ராகா):
> http://www.youtube.com/watch?v=IM3ibqt-taQ
>

அற்புதமான பாடல். அன்னை மீனாக்ஷி மீது. சங்கராபரணம். சுதா ரகுநாதன் குரல்
போல் உள்ளது. நடிப்பு ஷோபனா ஆஸ்மி.

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Sep 16, 2011, 11:07:56 PM9/16/11
to மின்தமிழ், Santhavasantham

On Sep 16, 10:00 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/9/17 N. Ganesan <naa.gane...@gmail.com>:

நான் கேட்டபோது ரெ.கா. கமாஸ் என்றதாக நினைவு.

எம். எஸ். பாடுகிறார்:
http://www.sawf.org/audio/khamaj/ms_mate.ram

தரு வர்ணம்
கமாஸ் ராகம் - ஆதி தாளம்

மாதே மலயத்வஜ பாண்ட்ய சஞ்ஜாதே
மாதங்க வதன குஹ மாதே

சகோதரி சங்கரி சாமுண்டேஸ்வரி
சந்திரகலாதரி தாயே கௌரி

நா. கணேசன்

rajam

unread,
Sep 16, 2011, 11:26:15 PM9/16/11
to mint...@googlegroups.com, Narayanan Kannan


On Sep 16, 2011, at 8:00 PM, N. Kannan wrote:

> 2011/9/17 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>
>> ரெ.கா. ஸார் ரொம்ப நாளாக
>> எழுதுவதில்லையே.
>>
>
> ரெ.கா ஒரு அறுவை
> சிகிச்சைக்குப்பின்
> அமையாக
> இலக்கியப்பணியில் மட்டும்
> ஈடுபட்டுள்ளார். அடுத்த
> மாதம் சிங்கப்பூர்
> இலக்கிய மாநாட்டில்
> சந்திப்பேன்.
>


ஓ? அறுவை மருத்துவம்
நல்லபடியாக
முடிந்திருக்கும் என்று
நம்புகிறேன். உடல் நலமும்
நல்ல முறையில் மீண்டும்
வர வேண்டுகிறேன். நல்ல
அமைதியான பெரியவர்.
எங்கள் வணக்கத்தைத்
தெரிவிக்கவும்.

அன்புடன்,
ராஜம்

Nagarajan Vadivel

unread,
Sep 16, 2011, 11:31:50 PM9/16/11
to mint...@googlegroups.com
கணேசர் ஐயா
இடுகைக்கு நன்றி.  இன்றைய தேவை பாரதியின் வாழ்க்கையைக் காட்டும் மைல்கற்கள் அவர் வாழ்விம் நிகழ்வுகள் தவறேதுமின்றி எழுதப் பட்டுள்ளதா?
பாரதி வாழ்க்கையின் இருண்ட பகுதிகளைப் பற்றிய புதிய தரவுகள் தகவல் திரட்ட முடியுமா?
பதினான்கு வயதில் திருமணம்.  பதினாறு வயதில் காசி பயணம்.  நான்காண்டுகள் காசிவாசி. 
1898-1902 காசியில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?

அவர் தன்னுடைய தோற்றத்தை அகோரி அய்யாவழிப்படி கருப்பு ஆடையும் தலைப்பாகையும் வைத்ததைத் தவிர இந்துமதத்தின் பல பரிமானங்களை அறிந்தது எங்கனம்?
1905-ல் காசியில் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார்
சகோதரி நிவேதிதாவைச் சந்திக்கிறார்
ஆயினும் அந்தக்குயில் காசிப் புலவர் உரை கருவி மூலம் பரப்பச் சொன்ன குயில் 1898-1902 காசியில் பாடியதா?
பின்னர் மீண்டும் தமிழகம்.  அப்போது தொழிலில் பொருள் நட்டம் காரணமாக எட்டயபுரன் அரண்மனை வாசம் சேதுபதி உயர்நிலைப்பள்ள ஆசிரியர் பணி
நட்டம் ஏற்பட  என்ன தொழில் செய்தார்?
சில ஆண்டுகள் அவர் கவிதயே எழுதவில்லை என்ற அனுமானம் சரியா?
http://www.tamilvu.org/library/l9100/html/l9100ba1.htm
அவர் எழுதிய கவிதை கட்டுரைகளின் தேதி டேட்லைன் உள்ளதா?
ஆய்வுகில் எழுத்தைப் பகுத்து ஒருவரின் ஆளுமையை ஒருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட வாழ்வின் திருப்பு முனைகளை அறிய முடியும்
அத்தகு ஆய்வுப்பணியை முன் எடுத்துச் செல்ல உங்கள் கருத்து வளங்கள் உதவ வேண்டும்
நாகராசன்



2011/9/17 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Sep 16, 2011, 11:38:21 PM9/16/11
to mint...@googlegroups.com
கணேசன்:

என் கணிப்பு தவறாக இருக்கலாம். புரேசே வா ரகுவரா (சங்கராபரணம் படத்தில்
சோமயாஜுலு பாடுவாரே!)...அதே ராகம்!

இன்று காலையை இனிமையாக்கியதற்கு நன்றி.

கண்ணன்


2011/9/17 N. Ganesan <naa.g...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Ganesan

unread,
Sep 16, 2011, 11:47:35 PM9/16/11
to மின்தமிழ்

On Sep 16, 10:31 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> கணேசர் ஐயா
> இடுகைக்கு நன்றி.  இன்றைய தேவை பாரதியின் வாழ்க்கையைக் காட்டும் மைல்கற்கள்
> அவர் வாழ்விம் நிகழ்வுகள் தவறேதுமின்றி எழுதப் பட்டுள்ளதா?
> பாரதி வாழ்க்கையின் இருண்ட பகுதிகளைப் பற்றிய புதிய தரவுகள் தகவல் திரட்ட
> முடியுமா?
> பதினான்கு வயதில் திருமணம்.  பதினாறு வயதில் காசி பயணம்.  நான்காண்டுகள்
> காசிவாசி.
> 1898-1902 காசியில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?
>
> அவர் தன்னுடைய தோற்றத்தை அகோரி அய்யாவழிப்படி கருப்பு ஆடையும் தலைப்பாகையும்
> வைத்ததைத் தவிர இந்துமதத்தின் பல பரிமானங்களை அறிந்தது எங்கனம்?
> 1905-ல் காசியில் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார்
> சகோதரி நிவேதிதாவைச் சந்திக்கிறார்
> ஆயினும் அந்தக்குயில் காசிப் புலவர் உரை கருவி மூலம் பரப்பச் சொன்ன குயில்
> 1898-1902 காசியில் பாடியதா?
> பின்னர் மீண்டும் தமிழகம்.  அப்போது தொழிலில் பொருள் நட்டம் காரணமாக எட்டயபுரன்
> அரண்மனை வாசம் சேதுபதி உயர்நிலைப்பள்ள ஆசிரியர் பணி
> நட்டம் ஏற்பட  என்ன தொழில் செய்தார்?

> சில ஆண்டுகள் அவர் கவிதயே எழுதவில்லை என்ற அனுமானம் சரியா?http://www.tamilvu.org/library/l9100/html/l9100ba1.htm


> அவர் எழுதிய கவிதை கட்டுரைகளின் தேதி டேட்லைன் உள்ளதா?
> ஆய்வுகில் எழுத்தைப் பகுத்து ஒருவரின் ஆளுமையை ஒருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட
> வாழ்வின் திருப்பு முனைகளை அறிய முடியும்
> அத்தகு ஆய்வுப்பணியை முன் எடுத்துச் செல்ல உங்கள் கருத்து வளங்கள் உதவ வேண்டும்
> நாகராசன்
>

கொங்கின் ம. பெ. தூரன், விழுப்புரம் ரா. அ. பத்மநாபன்,
சீனி. விசுவநாதன்

- போன்றோர் உழைத்துச் சேர்த்த பாரதியார் எழுத்துக்கள் எல்லாம்
அழியும் காயிதங்களில் தேங்கிக் கிடக்கின்றன (அவற்ரை எல்லாம்
படிப்பவர்கள் எத்தனை பேர்?). சீனி. விசுவநாதன்
http://nganesan.blogspot.com/2009/09/bharati-last-speech.html
புத்தகங்கள் எல்லாமும் ஹரிகி போன்றோர் தலைமையில்
இணையத்தில் பாரதியார்.ஆர்க் போன்ற நல்ல பெயரில்
ஒரே இடத்தில் கிடைக்கும்படி செய்யவேண்டும். இது பாரதி
பக்தர்களின் கடமை ஆகும். இணையத்தில் தமிழ் ஆழம்
பெற இவை போன்ற செயல்கள் அத்தியாவசியம்.

நடக்கும் என்று நம்புவோம்.
கனா மெய்ப்படுவதாக,
நா. கணேசன்

பி.கு.:
http://nganesan.blogspot.com/2009/09/bharati-last-speech.html
பாரதியாரின் ஈரோட்டுப் பிரசங்கத்தைக் கேட்ட
ச.து.சு. பாரதியின் கட்டுரை உங்களுக்குக் கிடைக்குமா?
இல்லையெனில் ஸ்டாலினுடன் பேசுகிறேன்.

> 2011/9/17 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Sep 17, 2011, 12:14:42 AM9/17/11
to mint...@googlegroups.com


2011/9/17 N. Kannan <navan...@gmail.com>

கணேசன்:

என் கணிப்பு தவறாக இருக்கலாம். புரேசே வா ரகுவரா (சங்கராபரணம் படத்தில்
சோமயாஜுலு பாடுவாரே!)...அதே ராகம்!

சங்கராபரணத்தில் பாடப்படும் ப்ரோசே வாரெவருரா... கமாஸ்.  (இரண்டு மூன்று ப்ரோசேவா.. இருக்கின்றன.)

மாதே மலையத்வஜ பாடலும் கமாஸ்தான்.


டி என் சேஷகோபாலன் பாடுவது, ராகக் குறிப்புகளுடன் உள்ளது.

செவிக்கூர்மை!  குழலனா கொக்கா!

N. Kannan

unread,
Sep 17, 2011, 12:24:44 AM9/17/11
to mint...@googlegroups.com
2011/9/17 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> சங்கராபரணத்தில் பாடப்படும் ப்ரோசே வாரெவருரா... கமாஸ்.  (இரண்டு மூன்று
> ப்ரோசேவா.. இருக்கின்றன.)
> மாதே மலையத்வஜ பாடலும் கமாஸ்தான்.
> http://www.musicindiaonline.com/#/search/clips/global!q=mathey+malayadhwaja&genre=128
> டி என் சேஷகோபாலன் பாடுவது, ராகக் குறிப்புகளுடன் உள்ளது.
> செவிக்கூர்மை!  குழலனா கொக்கா!
>

நன்றி..நன்றி...
உங்க எல்லார் புண்ணியத்திலும் கமாஸ் காலை! சபாஷ்!

க.>

Hari Krishnan

unread,
Sep 17, 2011, 12:25:06 AM9/17/11
to mint...@googlegroups.com


2011/9/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கணேசர் ஐயா
இடுகைக்கு நன்றி.  இன்றைய தேவை பாரதியின் வாழ்க்கையைக் காட்டும் மைல்கற்கள் அவர் வாழ்விம் நிகழ்வுகள் தவறேதுமின்றி எழுதப் பட்டுள்ளதா?

உங்களுக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வம் உண்மையிலேயே இருக்குமானால், விடை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை.  போற்றி சுற்றியிருப்பவர்களும்; தூற்றிச் சுற்றியிருப்பவர்களும், போற்றப் புகுந்து தூற்றிச் சென்றிருப்பவர்களும் விளைத்திருக்கும் குழப்பங்கள், கான்ட்ரடிக்டரி செய்திகள் நிறைய இருக்கின்றன.  இவற்றில் பலவற்றை நான் விளக்கி conjecture, deduction  எல்லாம் செய்து, எது சரியாக இருக்கலாம் எது சாத்தியமே இல்லாதது என்று என் இணையப் பிரவேச காலத்திலிருந்து செய்துகொண்டிருக்கிறேன்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாடல் இயற்றப்பட்டது எப்போது, எந்த சந்தர்ப்பத்தில் என்பதற்கு மட்டும், பாரதியின் சிறுவயதுத் தோழர் நாவலர் சோமசுந்தர பாரதி சொல்வது, மண்டயம் சீனிவாசாரியாருடைய மகள் யதுகிரி அம்மாள் சொல்வது, பாரதிதாசன் சொல்வது, உவேசா சொல்வது (இன்னொருவர் பெயர் நினைவுக்கு வரவில்லை) என்று ஐந்துவிதமான வர்ஷன்கள் உள்ளன.

நீங்கள் இந்தத் துறையில் உண்மையிலேயே ஆர்வமுள்ளவராக இருந்தால் சீனி விசுவநாதன் எழுதியுள்ள ‘பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற புத்தகத்தைப் படியுங்கள்.  (சென்ற ஆண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள, பேசப்பட்டுள்ள சிக்கல்களில் பலவற்றை கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் நான் எழுதிவந்திருக்கிறேன் என்பது தற்செயல்.  சீனி விசுவநாதனைப் பார்த்து நானெழுதவில்லை--ஏனெனில் அவர் புத்தகம் வந்தது சென்ற ஆண்டில்.  என்னைப் பார்த்தும் அவர் எழுதியிருக்க முடியாது ஏனெனில் நான் கணக்கிலேயே சேராத ஆள்!:)))) )

Nagarajan Vadivel

unread,
Sep 17, 2011, 8:34:25 AM9/17/11
to mint...@googlegroups.com
//நீங்கள் இந்தத் துறையில் உண்மையிலேயே ஆர்வமுள்ளவராக இருந்தால் சீனி விசுவநாதன் எழுதியுள்ள ‘பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற புத்தகத்தைப் படியுங்கள்.  (சென்ற ஆண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள, பேசப்பட்டுள்ள சிக்கல்களில் பலவற்றை கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் நான் எழுதிவந்திருக்கிறேன் என்பது தற்செயல்.  சீனி விசுவநாதனைப் பார்த்து நானெழுதவில்லை--ஏனெனில் அவர் புத்தகம் வந்தது சென்ற ஆண்டில்.  என்னைப் பார்த்தும் அவர் எழுதியிருக்க முடியாது ஏனெனில் நான் கணக்கிலேயே சேராத ஆள்!:)))) )//

நீங்கள் என்னைப் பற்றி ஐயம் கொள்வதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆர்வமுள்ளதால் நீங்கல் எழுதுவதப் படிக்கிறேன் கேள்வி எழுப்புகிறேன்
விக்கிப் பீடியாவில் பாரதிபற்றிய செய்திகள் எப்படி வெளியிடப்பட்டுள்ளது என்று பாருங்கள்
எம்.டி.டி ஹிந்துக் கல்லூரி என்ற பள்ளியில் படித்தார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது
தமிழ் இணயப் பலகலை
http://www.tamilvu.org/courses/degree/c011/c0111/html/c0111112.htm
பாரதியார் காசியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். அங்கே காசி இந்து கலாசாலையில் சேர்ந்து, வடமொழி, இந்தி ஆகியவற்றைப் பயின்றார்; அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 'பிரவேசப் பரீட்சை'யில் தேறினார்.
என்று குறிப்பிடுகிறது
விக்கியில்  அவர் ஏழு ஆண்டுகள் கவிதையே எழுதவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆனல்
இக்கால கட்டத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன், கீட்ஸ் போன்றோரது கருத்துகளால் பாரதியார் பெரிதும் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக அக்கவிஞர்களின் விடுதலை உணர்வு அவரை மிகவும் கவர்ந்தது. இதனை, அந்தக் காலத்தில் அவர் 'ஷெல்லிதாசன்' என்னும் புனைபெயருடன் பத்திரிகைகளுக்குச் சில வியாசங்கள்கூட எழுதியதுண்டு” (பாரதியார் சரித்திரம், பக். 29) எனச் செல்லம்மா பாரதி தம் நூலில் நினைவு கூர்ந்துள்ளார்.
பெரும்பாலோர் வருகைதரும் படிக்கும் விக்கிப்பீடியாவில் தவ்றுகள் களையப்படவேண்டும்
தமிழக அரசு இணையத்தில் பாரதியின் படைப்புகளை தமிழ் இணையப் பலகலைக்கழகத் தளத்தில் வெளியிட்டுள்ளது
அதில் உள்ள தவறுகள் என்ன என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்
இந்த் இணைய வளத்தைக் கொண்டு என்ன ஆய்வு செய்யலாம் என்பதைப் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு பரிந்துரையாக அளிக்கலாம்
நாகராசன்


2011/9/17 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Sep 17, 2011, 8:41:37 AM9/17/11
to mint...@googlegroups.com


2011/9/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

நீங்கள் என்னைப் பற்றி ஐயம் கொள்வதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆர்வமுள்ளதால் நீங்கல் எழுதுவதப் படிக்கிறேன் கேள்வி எழுப்புகிறேன்

ஐயா,

உங்களைப் பற்றி உங்கள் மடல்களின் மூலமாக ஒருவகையா அனுமானிக்கத்தான் முடியும்.  உங்களுக்கு இவை முன்னரே தெரிந்தும் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை.  எந்த ஸோர்ஸ் மெடீரியலை அணுகினால் நடுநிலை தவறாத உண்மை கிடைக்கும் என்பதைச் சொன்னேன்.

 
விக்கிப் பீடியாவில் பாரதிபற்றிய செய்திகள் எப்படி வெளியிடப்பட்டுள்ளது என்று பாருங்கள்

ரா அ பத்மாநாபன், வை சச்சிதானந்தன் போன்ற பெரிய ஆய்வாளர்களிடமே வரலாற்று வழுக்களும், பிறழ்ச்சிகளும் காணப்படுகின்றன.  அவ்வளவு ஏன்?  வராவே சில இடங்களில் குழப்படி பண்ணியிருக்கிறார் (இதையும் என்னுடைய ஓடிப்போனானா புத்தகத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.)

பெரியவங்களே இப்படி இருக்கும்போது விக்கிபீடியாவை முற்ற முழுக்க பாரதி வரலாற்றுக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.  ‘பாரதியை ஜி சுப்பிரமணிய ஐயர் தலையங்கம் எழுதவிடாத காரணத்தால் சுதேசமித்திரனை விட்டு விலகி, இந்தியாவை அடைந்தான்’ என்று கவிராஜன் கதையில் வைரமுத்து எழுதுகிறார்.  அவரென்ன செய்ய முடியும்?  வராவே தடுக்கி விழுந்த இடம்!  இந்த விளக்கம் வேண்டுமானால், ஓடிப்போனானாவில் விவரித்திருக்கிறேன்.

விவித்பாரதி போல் தோன்றினால் மன்னித்துக் கொள்ளவும்.  தமிழ்ஹிந்து தளத்தில் முதல் 11 அத்தியாயங்கள் உள்ளன.  

Hari Krishnan

unread,
Sep 17, 2011, 9:13:34 AM9/17/11
to mint...@googlegroups.com


2011/9/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

அவர் ஏழு ஆண்டுகள் கவிதையே எழுதவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆனல்
இக்கால கட்டத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன், கீட்ஸ் போன்றோரது கருத்துகளால் பாரதியார் பெரிதும் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக அக்கவிஞர்களின் விடுதலை உணர்வு அவரை மிகவும் கவர்ந்தது.


எந்த ஏழு ஆண்டுகள் என்பதைக் குறிப்பிடவில்லையே!

ஒரு சில ஆண்டுகள், தான் எந்தக் கவிதையையும் இயற்றாமல் இருந்ததை தனிமை இரக்கம் என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறான்.

கவிதா தேவி அருள் வேண்டல் என்ற தலைப்பிலுள்ள கவிதையில்

வானகத் தமுத மடுத்திடும் போழ்து
மற்றதி னிடையோர் வஞ்சகக் கொடுமுள்
வீழ்ந்திதை் தொண்டையில் வேதனை செய்தென
நின்னொடு களித்து, நினைவிழந் திருந்த
எனைத் துயர்ப் படுத்த வந்தெய்திது உலகில்
கொடியன யாவுளும் கொடியதா மிடிமை.
அடிநா முள்ளினை அயல் சிறிதேகிக்
களைந்துபின் வந்து காண்பொழுது ஐயகோ!
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்.....

கவிதைப் பெண்ணே, உன்னோடு நான் கலந்து என்னை மறந்து கிடந்த காலங்கள் பல.  ஆனால், காலச் சுழற்சியால் இடையில் நான் வறுமைவாய்ப் பட்டேன்.  அந்த வறுமைப் பிணியிலிருந்து விடுபட்டு, என்னை நான் சற்று நிலைப்படுத்திக்கொண்டு மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது (கவிதை இயற்றுதல் என்பதான உந்து சக்தியாகி) அமுதத்தை நிறைத்து வைத்திருந்த பொற்குடம் மறைந்துபோய்விட்டதே!

இந்தக் கவிதை 1909 ஜனவரியில் இயற்றப்பட்டது.  ஆனால் 1904 தொடங்கி, தொடர்ச்சியாகக் கவிதை இயற்றியபடிதானே இருந்திருக்கிறான்.   எனவே, 1904க்கு முந்தைய காலகட்டத்தில் சில ஆண்டுகள் கவிதை இயற்றுவது, பொருள் முட்டுப்பாட்டால் நின்றிருந்தது என்பது பாரதி வாக்கிலிருந்தே பெறப்படுகிறது.  

1902-1904 எட்டயபுர ஜமீந்தாரிடம் உத்தியோகம்

1904 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி.

1904 நவம்பர் முதல் சுதேசமித்திரன் பணி.  கவிதைகள் வெளியிடப்படுகின்றன.  எப்போது இயற்றப்பட்டு இப்போது வெளிவந்தன என்பதற்கு ஆதாரமில்லை.

1898 முதல் 1904 வரையிலான காலகட்டத்தை தன்னுடைய கவிதை blind spot என்ற பாரதி குறிப்பிடும் காலகட்டமாகக் கொள்ள இயலுமா என்பது ஆய்வுக்குரியது.  But there definitely was a blank in is poetic endeavours.  This happens to every poet; every writer.  விடாமல் வேகமாகச் செயல்படுவன், கடைசிக் கட்டத்தில் நீர்த்துப் போகிறான். ஜெயகாந்தன் ஓர் எடுத்துக்காட்டு.

ஆனால், காலத்தைக் குறிப்பிடாமல், ஏழாண்டுகள் பாரதி கவிதை இயற்றயவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னால் அதில் மயக்கம் ஏற்படத்தான் செய்கிறது. விக்கிபீடியா சொல்வது மேற்படி blank age ஆக இருக்கலாம்.  ஆனால் அது எப்படி ஏழு ஆண்டுகள் என்ற துல்லியமாகக் கணித்தார்கள் என்பது விளங்கவில்லை..

Nagarajan Vadivel

unread,
Sep 17, 2011, 9:53:01 AM9/17/11
to mint...@googlegroups.com
Blind spot or dark side?
Wiki states the period is from his travel to Kasi and back from Kasi (1898-1904)
Is it due to non availability of data and documents
Kasi is also a place one can easily shed the self and live without identity
But he was an active learner of languages and philosophy
Kais was a breeding ground for rationalists
Buddha, Adi Sankara, Vivekananda, Bharathy and Periyar
Curiously Kasi not only changed their inner outlook but also theri outer attire and mode of dressing
Buddha chose the cloth normally put on the condemned prisioners to denote civil death
Adi Sankara saffron colour
Bharathi and Swami vivekananda - headgear and long coat (Bharathi -black)
Bharathy was further influenced by the aghori philosophy representing the angry face of Siva
Nagarajan


 
2011/9/17 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Nagarajan Vadivel

unread,
Sep 17, 2011, 11:01:02 AM9/17/11
to mint...@googlegroups.com
மிந்தமிழ் நாரதர் பாரதி எட்டயபுரம் மன்னருக்கு விஸ்வநாதா வேலைகொடு என்று மனுப்போட்டதாக எழுதுகிறார்
இன்னொரு சோர்ஸ் எட்டயபுரம் மன்னர் டில்லியில்
பிரிட்டிஷ் மன்னரின் அரியனை ஏறும் விழவுக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் பாரதியை எட்டயபுரம் வருமாறு அழைத்ததாக தமிழ் இணையதளப் பாடத்தில் இருக்கிறது
கணேசரர் சோர்ஸ் மற்றும் இணையப் பலகலைக் கழக சோர்ஸ் இவற்றின் நம்பகத்தன்மையை அறிவது எப்படி?
நாகராசன்
2011/9/17 Hari Krishnan <hari.har...@gmail.com>


--

N. Ganesan

unread,
Sep 17, 2011, 11:24:04 AM9/17/11
to மின்தமிழ்


On Sep 17, 8:53 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> Blind spot or dark side?
> Wiki states the period is from his travel to Kasi and back from Kasi
> (1898-1904)
> Is it due to non availability of data and documents
> Kasi is also a place one can easily shed the self and live without identity
> But he was an active learner of languages and philosophy
> Kais was a breeding ground for rationalists
> Buddha, Adi Sankara, Vivekananda, Bharathy and Periyar
> Curiously Kasi not only changed their inner outlook but also theri outer
> attire and mode of dressing
> Buddha chose the cloth normally put on the condemned prisioners to denote
> civil death
> Adi Sankara saffron colour
> Bharathi and Swami vivekananda - headgear and long coat (Bharathi -black)http://www.vivekananda.org/archivedphotoslideshow.asp?id=26
> Bharathy was further influenced by the aghori philosophy representing the
> angry face of Sivahttp://www.youtube.com/watch?v=GWFZzBwfArg&feature=related
> Nagarajan
>

Prof. Nagaraj,

I have not spent any time on Bharati. But one thing is
certain: there will be efforts to do cleansing & build up
and researchers need to be careful.
I would give more weightage to the writings by those who
have met the poet-journalist personally and his friends,
and did interviews and wrote.

Wiki material need to be checked more.

N. Ganesan

Nagarajan Vadivel

unread,
Sep 17, 2011, 12:40:46 PM9/17/11
to mint...@googlegroups.com
ஆய்வுக்குமுன் அதற்குரிய ஆவணங்களைத் திரட்டுவது அவசியம்.  பாரதி பற்றிய ஆவணங்கள் தமிழகம் தாண்டி காசி, புதுச்சேரி போன்ற இடங்களிலும் தமிழ் மொழி மட்டுமன்றி ஹிந்தி ஃப்ரெஞ்ச் போன்ற மொழிகளிலும் இருக்கலாம்
உங்களின் சோர்ஸ்களும் உங்களின் ஆவணங்களும் எளிதில் கிடைக்கும்.  அரிதாய் உள்ள ஆவணங்களைத் தேடும்பணி முதன்மை பெறுகிறது
நாகராசன்

2011/9/17 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Sep 17, 2011, 11:05:00 PM9/17/11
to mint...@googlegroups.com


2011/9/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Blind spot or dark side?

Read in isolation this first sentence is not only sweeping; but also has patches of wild fantasy.  I am unable to see a dark side of Bharati.  If there is one, kindly enlighten me with evidence.  Most acceptable is, internal evidence.  Show a single line from the body of his prose and poem that shows a dark side.  Before that kindly define what is meant by a 'dark side'.
 
Wiki states the period is from his travel to Kasi and back from Kasi (1898-1904)
Is it due to non availability of data and documents

Non-availability of documents does not prove that he did not write.  It is likely he could have written but they did not get published.

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தைப் போற்றிய ஜமீந்தாரருடைய சவாலை ஏற்று ஒரே நாளிரவில் பாரதி எழுதி முடித்ததாகச் சொல்லப்படும் சிந்துப் பாவில்

பச்சைத் திருமயில் வீரன் - அலங்
                                   காரன்-கௌ
                                   மாரன் - உயர்
         பன்னிரு தோள்புயப் பாரன்

என்ற அடி மட்டுமே கிடைத்திருக்கிறது.  அதுவும் மனைவி காட்டியிருக்கும் மேற்கோள் மூலமாக.  (திருமணத்துக்கு முந்தைய நிகழ்வு.)  தன்னுடைய திருமண நலங்கில் விதவிதமாகச் செல்லம்மாவைக் கிண்டல் செய்து ஸ்பாட் காம்போசிஷனாகப் பாடியனவற்றுள்

தேடக் கிடைக்காத சொன்னமே - உயிர்ச்
                           சித்ர மேமட அன்னமே - அரோ
                           சிக்குது பால்தயிர் அன்னமே - மாரன்
         சிலைமேல் கணை
         கொலைவேலென
         விரிமார்பினில் 
        நடுவே துளை..........

என்று தொடங்கி, 

இனி யாகிலும்
அடி பாதகீ
கட்டியணைத்தொரு முத்தமே - தந்தால்
கைதொழுவே னுனை நித்தமே

என்றெல்லாம் பாடி, தனக்கு வெட்கத்தை ஏற்படுத்தியதை செல்லம்மா சொல்கிறார்.

ஆகவே, வாய் திறந்தால் கவி கொட்டிக் கொண்டிருந்த ஜீவன் அது.  இன்றைக்கு இசைக்கவி ரமணன் இல்லையா?  பேச்சே பாட்டுதான் அவனுக்கு.  இவனே இப்படியிருந்தால் அவன் எப்படியிருந்திருப்பான்!

எனவே, absence of documents does not prove anything.  He might have written, or might not have written.  பாரதியுடைய பாடல்களிலேயே காணப்படும் குறிப்புகளை வைத்து all that we can deduce is ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் non-poetic activity, non-expression in poetry, which might perhaps even be a poetic silence என்பது மட்டுமே,

அந்தக் காலகட்டத்தில் ‘தன்னைக் கவிதை விட்டுவிட்டுப் போய்விட்டது.  தன்னால் இனிமேல் எழுத முடியாது’ என்று கருதியிரக்கிறான் என்பது வெளிப்படை.  எனக்கே கூட இப்படிப்பட்ட patch இருந்ததுண்டு.  (பாரதிக்குச் சமமானவன் என்று என்னை முன்னிறுத்திக் கொள்ள முயலவில்லை.  அவனுக்கே ஒரு patch of silence ஏற்பட்டால், அவனில் கோடியில் ஒரு பங்காகிய எனக்கு ஏற்படக்கூடாதா என்ன!)  இந்தக் காலகட்டத்தில், என்னைப் பழைய நண்பர்கள் சந்திக்கும்போது, அருகிலிருக்கும் மற்றவர்களுக்கு ‘இது ஹரி...நல்ல கவிஞன்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தாலே my response by reflex was ‘அதெல்லாம் அந்தக் காலத்தில்.  இனிமே எழுதுவேனான்னு தெரியாது.  எழுத முடியாதுன்னுதான் நினைக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.  பிறகு மெல்ல மெல்ல எழுத்தில் தலைகுப்புற மறுபடியும் விழுந்தேன்

இப்ப, ஒரு நூறு வருஷம் கழிச்சு இன்னொரு போகராஜன் கொடிவேல் கிளம்பி, ‘இது இந்த ஆளுடைய ப்ளைன்ட் ஸ்பாட்டா, டார்க் ஸைடா?  இந்த ஆளுக்குச் சின்ன வயதில் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பிருந்ததாகச் சிலமுறை சொல்லியிருக்கிறான்.  நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்து ரகசியப் பணியாற்றியிருக்க வாய்ப்புண்டு’ என்று ஆஆஆஆஆஆஆய்ஊஊஊஊ செய்தால்எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உங்கள் அகோரி தியரி. (அதாவது நீங்கள் மேற்கோள் காட்டும் அகோரி தியரி.)

மற்றபடி விவேகாநந்தரும் பாரதியும் முண்டாசு கட்டினாங்க என்று தோற்ற ஒற்றுமைகளை யெல்லாம் பட்டியலிடுவதில் பொருளே இல்லை.  பாரதி தாடி வச்சிருந்தான்.  வவேசு ஐயரும் தாடி வச்சிருந்தார்.  சுப்பிரமணிய சிவாவும தாடி வச்சிருந்தார்

கடற்கரை கூட்டமொன்றில் பாரதியின் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா (திரைப்படத்தில் நாசர் செய்வாரே, அதே பாத்திரம்) மக்களைப் பார்த்துக் கேட்டாராம்: உங்களுக்கும் மீசை இருக்கிறது; கரப்பான் பூச்சிக்கும் இருக்கிறது.  என்ன வித்தியாசம்’ என்று.  

அப்படித்தான், தாடி வச்சதையும், தலப்பா கட்டினதையும் ஒப்பிடறது.  விவேகாநந்தரிடம் பாரதிக்கு ஈடுபாடு இருந்தது உண்மை.  அதற்காக, காசி போய்விட்டு வந்தவன் எல்லாம் ட்ரெஸ் பண்ற விதத்தை மாற்றிக் கொண்டான்; நாத்திகச் சிந்தனைக்குள் புகுந்து புறப்பட்டான்; காசிக்குப் போனா என்னவோ ஆயிடுது.... அவன் அகோரிய பாத்ததுமே அவனுக்கும் அந்த இன்ஃப்ளுவன்ஸ் வந்துருது என்பதெல்லாம் ஐராவதம் மஹாதேவன் (கண்ணகியைப் பற்றி செம்மொழி மாநாட்டில் ஓர் உரையாற்றினார்.  அந்தச் சமயத்தில்) பேத்தியதைப் போன்றது  

நானும் நாத்திகம் பேசியிருக்கிறேன்; நண்பன் மதுரபாரதி எனக்கு ஒருபடி அதிகமாகவே பேசியிருக்கிறான்.  எல்லாருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு பேட்ச் வரத்தான் செய்யும்.  இருக்கிறது என்று தொடங்கி, இல்லவே இல்லை என்று மோதிக் கொண்ட பிறகுதான் உள்ளே தெளிவுக்கான முதல் கீற்றுத் தோன்றத் தொடங்குகிறது.  தெளிவு முழுக்கப் பிறக்காவிட்டாலும்.

டோன்ட் முடிச்சுஃயை மொட்டைத் தலை அன்ட் மொழங்கால். If you still want to persist on this course, go ahead.  But support your arguments from internal evidence.  பாரதி எங்கே எந்தக் கட்டுரையில், அல்லது கவிதையில் அப்படிச் சொல்லியிருக்கிறான் என்பதை ஆதாரமாகக் காட்டவும்.  அவன் உள்ளத்துக்குச் சாவி அவன் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது. 

Hari Krishnan

unread,
Sep 17, 2011, 11:06:20 PM9/17/11
to mint...@googlegroups.com


2011/9/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

உங்களின் சோர்ஸ்களும் உங்களின் ஆவணங்களும் எளிதில் கிடைக்கும்.  அரிதாய் உள்ள ஆவணங்களைத் தேடும்பணி முதன்மை பெறுகிறது

ஐயா,

நான் என் வழியில் தேடிக் கொண்டு போகிறேன்.  நான் செய்வது எளிதில் கிடைப்பதாக இருக்கலாம்.  முதன்மை பெறுவதாக நீங்கள் சொல்கிறீர்களே, அதை நீங்கள் செய்வதை நான் தடுக்கவில்லையே!  செய்யுங்களேன்!  

Hari Krishnan

unread,
Sep 17, 2011, 11:12:45 PM9/17/11
to mint...@googlegroups.com


2011/9/17 N. Ganesan <naa.g...@gmail.com>

Prof. Nagaraj,

I have not spent any time on Bharati

நல்லவேளை.  நீங்க பாரதியில் அதிக நேரம் செலவிடாதது பாரதிக்கும் சரி, பாரதி அன்பர்களுக்கும் சரி.  நல்ல நேரம்.  இல்லாட்டி, இத்தனை நேரத்துக்கு பாரதியும் சமணன்தான் என்று சத்தியம் பண்ணி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்திருப்பீர்கள்!  பாரதி பொழச்சான்!

N. Ganesan

unread,
Sep 18, 2011, 12:55:36 AM9/18/11
to மின்தமிழ்

On Sep 17, 10:12 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>


wrote:
> 2011/9/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > Prof. Nagaraj,
>
> > I have not spent any time on Bharati
>
> நல்லவேளை.  நீங்க பாரதியில் அதிக நேரம் செலவிடாதது பாரதிக்கும் சரி, பாரதி
> அன்பர்களுக்கும் சரி.  நல்ல நேரம்.  இல்லாட்டி, இத்தனை நேரத்துக்கு பாரதியும்
> சமணன்தான் என்று சத்தியம் பண்ணி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்திருப்பீர்கள்!
>  பாரதி பொழச்சான்!
>

பாரதிக்கும் சமணத்துக்கும் என்ன சம்பந்தம்? கம்பனை சமணம் என்றா
சொல்கிறார்கள்
தமிழ்ப் பேராசிரியர்கள்? சுவெலபில்லோ, மேவீவே பிள்ளையவர்களோ, வையாபுரிப்
பிள்ளையவர்களோ, கி. நாச்சிமுத்தோ?

நா. கணேசன்

> --

Nagarajan Vadivel

unread,
Sep 18, 2011, 8:02:32 AM9/18/11
to mint...@googlegroups.com


2011/9/18 Hari Krishnan <hari.har...@gmail.com>



2011/9/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
Blind spot or dark side?

Read in isolation this first sentence is not only sweeping; but also has patches of wild fantasy.  I am unable to see a dark side of Bharati.  If there is one, kindly enlighten me with evidence.  Most acceptable is, internal evidence.  Show a single line from the body of his prose and poem that shows a dark side.  Before that kindly define what is meant by a 'dark side'.
 
Sir, I wrote this term ’dark side’ based on my understanding of a model of human communication currently used in management called "Johari Window"
Human communication takes place by means of "Self-diclosure" and  "Feed back"
Based on this twin process communication area is divided into four areas - Public area, Private area, hidden area and unknown area
 1. public area is one where things communicated are public
 2. When the total output made is available only partly and few data and information are unavailable then it is dark side like dark continent darker side of history

I do not know the assumption behind your blind spot- is it hidden area, unknown area?
 
 
Wiki states the period is from his travel to Kasi and back from Kasi (1898-1904)
Is it due to non availability of data and documents

Non-availability of documents does not prove that he did not write.  It is likely he could have written but they did not get published.

எனவே, absence of documents does not prove anything.  He might have written, or might not have written.  பாரதியுடைய பாடல்களிலேயே காணப்படும் குறிப்புகளை வைத்து all that we can deduce is ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் non-poetic activity, non-expression in poetry, which might perhaps even be a poetic silence என்பது மட்டுமே,

இது தரவுகள் அடிப்படையில் சொல்லும் வாதமல்ல என்வே ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் அல்ல.  எழுதியிருப்பான் எழுதாமலும் இருந்திருப்பான் என்று உங்களைப் போன்ற பாரதி அறிஞர்கள் பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது. விக்கிப் பீடியாவிலும் இதுபோல் எழுத்தில் மங்காத்தா ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.  பாரதியைப் பற்றி நோகாமல் நொங்கெடுப்பதுபோல் எழுதுவதற்குப் பதில் எழு்தாமல் விட்டு விடலாம். 
 
இப்ப, ஒரு நூறு வருஷம் கழிச்சு இன்னொரு போகராஜன் கொடிவேல் கிளம்பி, ‘இது இந்த ஆளுடைய ப்ளைன்ட் ஸ்பாட்டா, டார்க் ஸைடா?  இந்த ஆளுக்குச் சின்ன வயதில் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பிருந்ததாகச் சிலமுறை சொல்லியிருக்கிறான்.  நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்து ரகசியப் பணியாற்றியிருக்க வாய்ப்புண்டு’ என்று ஆஆஆஆஆஆஆய்ஊஊஊஊ செய்தால்எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உங்கள் அகோரி தியரி. (அதாவது நீங்கள் மேற்கோள் காட்டும் அகோரி தியரி.)
 
இது வழக்கபோல் உங்கள் பானி.  போகராஜன் சரி கொடிவேல் என்பது அவங்க அப்பாவா?  அவரு பாவம் என்ன செய்தார்.  இலக்கிய அறிமுகக் காலத்திலேயே ridiculous ludicurous வேறு பாட்டைக் கற்றிருப்பீர்கள் ஆனால் அது உங்களுக்குக் கைகொடுக்க மாட்டேன் என்கிறது.  நீங்கள் என்னை ரிடிக்யூல் செய்கிறீர்கள் நகைச்சுவை என்ற பெயரில் என்னையும் என் தந்தையையும் நையாண்டி செய்கிறீர்கள் பாரதி பாட்டன் சொத்து என்று சொல்லும் பேத்தியையும் நையாண்டி செய்கிறீர்கள் நீங்கள் சொன்னால் ஆய்வு நான் சொன்னால் ஆஆஆஆஆஆஆய்ஊஊஊஊ (இ ஈ விட்டுப்பொய்விட்டதே) என்று நையாண்டி செய்தால்எப்படி?

மஹாத்மா காந்தியைப் அமெரிக்க உளவியல் அறிஞர் எரிக் எரிக்சன் ஆய்வு செய்து அவர் ஆளுமையை வெளிக்கொனர்ந்திருக்கிறார்.
http://en.wikipedia.org/wiki/Erik_Erikson
அகோரித் தியரியின் அடிப்படையில் அவர் ஆளுமைய்ப்பற்றீ ஒருவர் ஆய்வு செய்ய முயன்றால் அது தவறா?  பாரதியார் வரலாற்றுத் திருப்புமுனையான நிகழ்வுகள் மத்தியில் வாழ்ந்தார் என்று கூறுவதும் பின்னர் அவர் ஏன் காசி போனார் அங்கே என்ன செய்தார் ஏன் பாண்டிச்சேரி சென்றார் அங்கே என்ன செய்தார் என்று கேட்டால் பாண்டி விளையாடுவதுபோல் ஒரு காலை நொண்டிக்கொண்டு ஒரு கண்னை மூடிக்கொண்டு விளையாடச் சொல்லலாமா. நான் ஆய்வின் அடிப்படையில் ஒரு கற்றறிந்தோர் கூடியிருக்கும் மன்றில் அல்லது ஆய்வேட்டில் பதிப்பித்தால் அங்கே வந்து கேள்வி கேட்கலாம் மறுப்புத் தெரிவித்து கட்டுரை எழுதலாம். உங்கள் நோக்கம் பாரதிபற்றி வேறு யாரும் வாய் திறக்கக் கூடாது நீங்கள் சொல்வதை மட்டும் மூடிக்கொண்டு (வாயை) கேட்கவேண்டும் (மடலாடலில் ரங்கனார் பாணி) என்று சொன்னால் மாட்டேன் என்று சொல்ல மாட்டேன்


மற்றபடி விவேகாநந்தரும் பாரதியும் முண்டாசு கட்டினாங்க என்று தோற்ற ஒற்றுமைகளை யெல்லாம் பட்டியலிடுவதில் பொருளே இல்லை.  பாரதி தாடி வச்சிருந்தான்.  வவேசு ஐயரும் தாடி வச்சிருந்தார்.  சுப்பிரமணிய சிவாவும தாடி வச்சிருந்தார்
 
முண்டாசுக் கவிஞசன் என்று பெருமையாகக் கூறுவிர்கள் அவன் ஏன் முண்டாசு கட்டினான் என்று கேட்டால் மண்டை இருப்பவன் எல்லாம் முண்டாசு கட்டுவான் என்று சொன்னால் எப்படி

கடற்கரை கூட்டமொன்றில் பாரதியின் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா (திரைப்படத்தில் நாசர் செய்வாரே, அதே பாத்திரம்) மக்களைப் பார்த்துக் கேட்டாராம்: உங்களுக்கும் மீசை இருக்கிறது; கரப்பான் பூச்சிக்கும் இருக்கிறது.  என்ன வித்தியாசம்’ என்று.  

அப்படித்தான், தாடி வச்சதையும், தலப்பா கட்டினதையும் ஒப்பிடறது.  விவேகாநந்தரிடம் பாரதிக்கு ஈடுபாடு இருந்தது உண்மை.  அதற்காக, காசி போய்விட்டு வந்தவன் எல்லாம் ட்ரெஸ் பண்ற விதத்தை மாற்றிக் கொண்டான்; நாத்திகச் சிந்தனைக்குள் புகுந்து புறப்பட்டான்; காசிக்குப் போனா என்னவோ ஆயிடுது.... அவன் அகோரிய பாத்ததுமே அவனுக்கும் அந்த இன்ஃப்ளுவன்ஸ் வந்துருது என்பதெல்லாம் ஐராவதம் மஹாதேவன் (கண்ணகியைப் பற்றி செம்மொழி மாநாட்டில் ஓர் உரையாற்றினார்.  அந்தச் சமயத்தில்) பேத்தியதைப் போன்றது  
 
ஆஹா ஐராவதம் மஹாதேவன் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது ஆனை மலை திருப்பரங்குன்றம் கல்வெட்டுச் சிறப்புகளை எடுத்துச் சொல்ல சென்பகலட்சுமி என்ற சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியையுடன் ஒரு ஐஎஸ் ஆஃபீஸர் வந்தார் அவுருங்களா? அவர் செம்மொழிநாட்டில் பேத்தினாரா? அவர் கதையே இப்படீன்னா என்னை நீங்க என்னவேணாலும் சொல்லலாம்

நானும் நாத்திகம் பேசியிருக்கிறேன்; நண்பன் மதுரபாரதி எனக்கு ஒருபடி அதிகமாகவே பேசியிருக்கிறான்.  எல்லாருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு பேட்ச் வரத்தான் செய்யும்.  இருக்கிறது என்று தொடங்கி, இல்லவே இல்லை என்று மோதிக் கொண்ட பிறகுதான் உள்ளே தெளிவுக்கான முதல் கீற்றுத் தோன்றத் தொடங்குகிறது.  தெளிவு முழுக்கப் பிறக்காவிட்டாலும்.
 
நான் இங்கே எங்கே நாத்திகம் பேசினேன் புத்தரும் ஆதி சங்கரரும் பேசியது நாத்திகமா? பாரதி புதுமைக் கவிஞன் புதுமைக் கவிஞன் என்று சொல்ல்கிறார்களே எப்புடி என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? 
அவனை ஆங்கில ஏகாதிபத்தியம் ராஜத் துரோகி வன்முறையில் நம்பிக்கை கொண்டவன் என்று முத்திரை குத்தியதையும் கைது செய்து பின்னர் அவருக்கு அம்னெஸ்டி கொடுத்ததும் வரலாற்றுச் செய்திதான் அரவிந்தர் போன்ற வங்காளத் தீவிர வாதியுடன் தொடர்பில் இருந்ததால் அவனை நக்சல் என்று முத்திரை குத்தியது போகராஜன் கொடிவேல் அல்ல  மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் அரசு.  பின்னர் விலக்கிக் கொண்டதும் அதே அரசு.  தீவிர வாதி என்று முத்தைரையுடன் திருவல்லிக்கெணியில் அவன் நடைப்பினமாம வலம் வந்த காலம் எவ்வளவு சோதனையான காலம்? அவன் இறந்தபோது இறுதிமரியாதையில் கலந்துகொண்டவர்களில் சக்கரைச் செட்டியார் என் உறவு.  அவர் கம்யூனிசச் சிந்தனைகொண்ட தொழிற்சங்கத் தலைவர் எனவே பாரதியின் சிந்தனையில் மீது சிவப்பு வண்ணம் பதிந்ததுபற்றி ஆய்வது தவறு  என்று கூறுவது சரியல்ல

டோன்ட் முடிச்சுஃயை மொட்டைத் தலை அன்ட் மொழங்கால். If you still want to persist on this course, go ahead.  But support your arguments from internal evidence.  பாரதி எங்கே எந்தக் கட்டுரையில், அல்லது கவிதையில் அப்படிச் சொல்லியிருக்கிறான் என்பதை ஆதாரமாகக் காட்டவும்.  அவன் உள்ளத்துக்குச் சாவி அவன் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது. 

ஆராய்ச்சியில் இப்படியெல்லாம் முன் நிபந்தனை கூடாது?  உங்களுக்குப் பாரதியார் பாட்டு மட்டும்தான் தெரியும் அதனால்
 support your arguments from internal evidence என்பது முறையல்ல.  பாரதிபற்றி இருப்பதாகக் கருதப்படும் ஆவணங்களை தேடிச் சேகரிக்க வேண்டும். பின்னர் அதன் நம்பகத்தன்மையையும் அதன் பொருள் பிழையின்றி இருக்கிறதா என்றும் பகுப்பாய்வு செய்யவேண்டும்.  அதன் அடிப்படையில் அவர் தனி வாழ்க்கை அவர் ஆளுமை அவர் குமுகம் பற்றிக் கொண்டிருந்த கொள்கைநிலைபற்றிய அனுமானங்களை மற்றவர் ஆய்வுக்காக வெளியிடவேண்டும். அப்படி ஒரு அனுமானம் வெளியானால் அதில் இணைத்துக்கூறப்படும் இரு நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள உறவு முழங்காலுக்கும் மொட்டைக்காலுக்கும் முடிச்சுப்பொடும் அனுமானம் என்று நீங்கள் கருதினால் மறுப்புத் தெரிவியுங்கள்.  இம்மென்றாலே உங்கள் பேனாவின்   கூர்முனை பின்போல் குத்துவது ஏனோ?
நாகராசன்
--
அன்புடன்,
ஹரிகி.

--

Hari Krishnan

unread,
Sep 18, 2011, 8:36:05 AM9/18/11
to mint...@googlegroups.com


2011/9/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

I do not know the assumption behind your blind spot- is it hidden area, unknown area?
 

Blind spot is very commonly used by humble men like me to denote an aspect that remains unseen and invisible to every eye.  Every eye has a blind spot is the proverb.  


இது தரவுகள் அடிப்படையில் சொல்லும் வாதமல்ல என்வே ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் அல்ல.  எழுதியிருப்பான் எழுதாமலும் இருந்திருப்பான் என்று உங்களைப் போன்ற பாரதி அறிஞர்கள் பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது. விக்கிப் பீடியாவிலும் இதுபோல் எழுத்தில் மங்காத்தா ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.  பாரதியைப் பற்றி நோகாமல் நொங்கெடுப்பதுபோல் எழுதுவதற்குப் பதில் எழு்தாமல் விட்டு விடலாம். 

தரவுகள் கிடைக்கவில்லையே!  கிடைக்கவில்லை என்பதனால் செய்யவே இல்லை என்று அஸ்யூம் செய்ய முடியுமா?  புறநானூற்றில் நானூறு பாடல்கள்தாம் உள்ளன என்றால், மொத்தமே சங்ககாலத்தில் 400 பாடல்கள்தாம் அந்தப் பிரிவின் கீழ் இயற்றப்பட்டதாகக் கருதவேண்டுமா?  புறநானூறு என்பது, எத்தனையோ ஆயிரம் பாடல்களிலிருந்து கொகுக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை.  அந்தப் பாடல்களெல்லாம் கிடைக்காத காரணத்தினாலே, அவையெல்லாம் இயற்றவேபடவில்லை என்றால், presence proves a point; absence proves nothing.  

சரி.  நாங்கதான் பொத்தாம் பொதுவாக மங்காத்தா ஆடுகிறோம்.  நீங்கள் தேடிக் கிளம்புங்களேன்.  1898 முதல் 1904 வரை பாரதியின் படைப்புகள் எவை என்று கண்டுபிடித்து வெளியிட்டால் நாங்க என்ன வேணாம்னா சொல்லப் போறோம்?

 
இப்ப, ஒரு நூறு வருஷம் கழிச்சு இன்னொரு போகராஜன் கொடிவேல் கிளம்பி, ‘இது இந்த ஆளுடைய ப்ளைன்ட் ஸ்பாட்டா, டார்க் ஸைடா?  இந்த ஆளுக்குச் சின்ன வயதில் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பிருந்ததாகச் சிலமுறை சொல்லியிருக்கிறான்.  நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்து ரகசியப் பணியாற்றியிருக்க வாய்ப்புண்டு’ என்று ஆஆஆஆஆஆஆய்ஊஊஊஊ செய்தால்எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உங்கள் அகோரி தியரி. (அதாவது நீங்கள் மேற்கோள் காட்டும் அகோரி தியரி.)
 
இது வழக்கபோல் உங்கள் பானி.  போகராஜன் சரி கொடிவேல் என்பது அவங்க அப்பாவா?  அவரு பாவம் என்ன செய்தார்.  இலக்கிய அறிமுகக் காலத்திலேயே ridiculous ludicurous வேறு பாட்டைக் கற்றிருப்பீர்கள் ஆனால் அது உங்களுக்குக் கைகொடுக்க மாட்டேன் என்கிறது.  நீங்கள் என்னை ரிடிக்யூல் செய்கிறீர்கள் நகைச்சுவை என்ற பெயரில் என்னையும் என் தந்தையையும் நையாண்டி செய்கிறீர்கள் பாரதி பாட்டன் சொத்து என்று சொல்லும் பேத்தியையும் நையாண்டி செய்கிறீர்கள் நீங்கள் சொன்னால் ஆய்வு நான் சொன்னால் ஆஆஆஆஆஆஆய்ஊஊஊஊ (இ ஈ விட்டுப்பொய்விட்டதே) என்று நையாண்டி செய்தால்எப்படி?

இது உங்களுடைய வழக்கமான பாணி.  Making a big issue out of lighter comments and boohooing over sheer bullshit.  Please accept the fact that I am capable of acting silly.  You are at liberty to brush aside the entire Me as silly.  You are welcome to do so.  If you feel that you are hit very badly, why don't you do it back to me?  Only kids need such kind of lectures my dear Professor!



பாண்டி விளையாடுவதுபோல் ஒரு காலை நொண்டிக்கொண்டு ஒரு கண்னை மூடிக்கொண்டு விளையாடச் சொல்லலாமா. நான் ஆய்வின் அடிப்படையில் ஒரு கற்றறிந்தோர் கூடியிருக்கும் மன்றில் அல்லது ஆய்வேட்டில் பதிப்பித்தால் அங்கே வந்து கேள்வி கேட்கலாம் மறுப்புத் தெரிவித்து கட்டுரை எழுதலாம். உங்கள் நோக்கம் பாரதிபற்றி வேறு யாரும் வாய் திறக்கக் கூடாது நீங்கள் சொல்வதை மட்டும் மூடிக்கொண்டு (வாயை) கேட்கவேண்டும் (மடலாடலில் ரங்கனார் பாணி) என்று சொன்னால் மாட்டேன் என்று சொல்ல மாட்டேன்

இலக்கியக் கூட்டங்களில் கேள்வி நேரம் என்றொன்று ஒதுக்கப்படும் வழக்கம் 80களில் தொடங்கியது.  கேள்வி நேரத்தில் என்ன பிரச்சினை என்றால், கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்று மேடையேறுபவர், அரைமணிநேரம் மைக்கைப் பிடித்துக் கொண்டு, மேடையிலிருப்பவர்களையும், இல்லாதவர்களையும், சொன்ன கருத்துகளையும் சொல்லாதவற்றையும், தனக்குத் தெரிந்தவை என்ற ஒரே காரணத்துக்காக் கொட்டிக் கவிழ்த்துவிட்டு இறங்குவார்.

இறங்கியபின், பதிலுக்காகக்கூட காத்திருக்க மாட்டார்.  ‘எப்டி கீஷ்டம் பாத்தியா’ என்பது போன்ற பெருமிதப் பார்வையும், சிலசமயங்களில் வாய்மொழியாகவும் சொல்லியபடி அரங்கை விட்டே போய்விடுவார்.  கேள்வி கேட்கப்பட்டவர் பேந்தப் பேந்த முழிக்க வேண்டியதுதான்.  நீங்க அப்படி என்று நான் சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன், சொல்லவே மாட்டேன்.  
 
முண்டாசுக் கவிஞசன் என்று பெருமையாகக் கூறுவிர்கள் அவன் ஏன் முண்டாசு கட்டினான் என்று கேட்டால் மண்டை இருப்பவன் எல்லாம் முண்டாசு கட்டுவான் என்று சொன்னால் எப்படி

இது பொதுவான பேச்சு.  நான் ஒருநாளும் முண்டாசுக் கவி என்று பெருமைப் பட்டுக் கொண்டதில்லை.  தாங்கள் இதற்காகவே ஆய்வு மேற்கொள்ளலாம்.  (ஆமா, தெரியாமத்தான் கேக்கறேன், பாரதியுடைய முண்டாசால் அவனுக்குப் பெருமையா, அல்லது அவனுடைய எழுத்தாலும் கருத்தாலும் பெருமையா?  என்வீட்டில் பாரதி படம் கிடையாது.  பாரதி வாழ்வது படத்திலன்று என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன்.  அண்மையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் அன்பளிப்பாகக் கொடுத்தார்களே என்பதற்காக மட்டுமே விவேகாநந்தர் படத்தைப் போன மாதம்தான் சுவரில் மாட்டினேன்.  என் பாரதி அவனுடைய எழுத்தில் இருக்கிறான்.)  Therefore this question does not arise as far as I am concerned.
 
ஆஹா ஐராவதம் மஹாதேவன்


நான் குறிப்பிட்டது அந்த குறிப்பிட்ட சொற்பொழிவுக்கு மட்டுமே பொருந்தும்.  நாளைக்கே வேறொரு விஷயத்துக்காக அவருடைய கருத்து ஏற்புக்குரியதாகவும், போற்றற்குரியதாகவும் இருந்தால், அதையும் சொல்லத் தயங்கமாட்டேன்.

ஆமா, என் கேரக்டரைசேஷன் மேலேயே இவ்வளவு குறி வைக்கிறீர்களே, அப்படி என்ன கொலைவெறி என்பேரில் உங்களுக்கு?  :))

 
நானும் நாத்திகம் பேசியிருக்கிறேன்; நண்பன் மதுரபாரதி எனக்கு ஒருபடி அதிகமாகவே பேசியிருக்கிறான்.  எல்லாருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு பேட்ச் வரத்தான் செய்யும்.  இருக்கிறது என்று தொடங்கி, இல்லவே இல்லை என்று மோதிக் கொண்ட பிறகுதான் உள்ளே தெளிவுக்கான முதல் கீற்றுத் தோன்றத் தொடங்குகிறது.  தெளிவு முழுக்கப் பிறக்காவிட்டாலும்.
 
 
நான் இங்கே எங்கே நாத்திகம் பேசினேன் புத்தரும் ஆதி சங்கரரும் பேசியது நாத்திகமா? பாரதி புதுமைக் கவிஞன் புதுமைக் கவிஞன் என்று சொல்ல்கிறார்களே எப்புடி என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? 
அவனை ஆங்கில ஏகாதிபத்தியம் ராஜத் துரோகி வன்முறையில் நம்பிக்கை கொண்டவன் என்று முத்திரை குத்தியதையும் கைது செய்து பின்னர் அவருக்கு அம்னெஸ்டி கொடுத்ததும் வரலாற்றுச் செய்திதான் 

இதெல்லாம் பழைய கதை தலைவா.  தெரியாத மேட்டர் ஏதானும் இருந்தா அவுத்துவுடுங்க.  கைதட்றேன்.
 
டோன்ட் முடிச்சுஃயை மொட்டைத் தலை அன்ட் மொழங்கால். If you still want to persist on this course, go ahead.  But support your arguments from internal evidence.  பாரதி எங்கே எந்தக் கட்டுரையில், அல்லது கவிதையில் அப்படிச் சொல்லியிருக்கிறான் என்பதை ஆதாரமாகக் காட்டவும்.  அவன் உள்ளத்துக்குச் சாவி அவன் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது. 

ஆராய்ச்சியில் இப்படியெல்லாம் முன் நிபந்தனை கூடாது? 

சரி.  உங்களுக்கு ‘அப்படித்தான் செய்வேன்’பிடிவாதம் இன்னும் போகவில்லை என்றால் போயிட்டுப் போவுது.  நீங்க நல்லா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள்.  நான் தடையேதும் சொல்வில்லை.

ஏற்கெனவே ஒண்ணு பத்து வருஷமா முட்டி மோதிட்டு இருக்கு.  பத்தோட ஒண்ணு பதினொண்ணு.

நடத்துங்க சாரேய்! 

Nagarajan Vadivel

unread,
Sep 18, 2011, 9:31:07 AM9/18/11
to mint...@googlegroups.com
//ஏற்கெனவே ஒண்ணு பத்து வருஷமா முட்டி மோதிட்டு இருக்கு.  பத்தோட ஒண்ணு பதினொண்ணு.//
 
இந்த வேலைதா்ன் வேனாங்குறது.  பத்தும் ஒன்னும் பதினொன்னா
பத்துமேல உங்களுக்கிருக்கிற பத்தும் நீங்க மொத்துர மொத்தும் இந்த சின்ன ஒன்னுக்கு ஒத்துவராதுங்க
ஆள விடுங்க
நாகராசன்
 

 
2011/9/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Mohanarangan V Srirangam

unread,
Sep 18, 2011, 10:06:56 AM9/18/11
to mint...@googlegroups.com
>>>(மடலாடலில் ரங்கனார் பாணி) என்று சொன்னால் மாட்டேன் என்று சொல்ல மாட்டேன்<<< 

குழும உரையாடல் என்பது வேறு. யதேச்சைத்தனம் நிறைந்தது. ஆனால் என்னுடையது வரவர seminar டைப்பாக ஆகிவிட்டது. இதைப்பற்றி முன்னரே மின்மடல் குழும உரையாடலில் எழுதியிருக்கிறேன் 


ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு உண்மையான குழும உரையாடல் எப்படி அமையக்கூடும் என்று ஒரு simulation எழுதிப் பார்க்க வேண்டும். 

*** 


2011/9/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

N. Ganesan

unread,
Sep 18, 2011, 1:41:38 PM9/18/11
to மின்தமிழ்

On Sep 18, 6:31 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> //ஏற்கெனவே ஒண்ணு பத்து வருஷமா முட்டி மோதிட்டு இருக்கு.  பத்தோட ஒண்ணு
> பதினொண்ணு.//
>
> இந்த வேலைதா்ன் வேனாங்குறது.  பத்தும் ஒன்னும் பதினொன்னா
> பத்துமேல உங்களுக்கிருக்கிற பத்தும் நீங்க மொத்துர மொத்தும் இந்த சின்ன
> ஒன்னுக்கு ஒத்துவராதுங்க
> ஆள விடுங்க
> நாகராசன்
>

Don't worry, These things will contuinue from him & his ardent Hindu
supporters.
But we have to go by what is published in the University scholars
worldwide,
on Valluvar's religion, or Manickavasakar's era etc., I still believe
western and indian scholars have to join their forces to crack at many
puzzles
in the Indian past.

We don't believe things about Sanskrit what the traditional pundits
say,
but check them against what is written abour vedas and Indo-Iranian
expansion into India from University publications (journals,
books, ...)
Same thing is true for Tamil literature also, while generations of
western scholars have worked on Sanskrit and have constructed its
history
for 200+ years, Tamil scholarship is just beginning, most of them
are alive, just Zvelebil has passed away recently. Much work remains
to be done. For me, Hart, Parpola, Zvelebil, Tieken, JLC, ... are
showing
how Indian and Tamil past were and hw they interacted with each other.

N. Ganesan

N. Kannan

unread,
Sep 18, 2011, 7:39:58 PM9/18/11
to mint...@googlegroups.com
2011/9/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு உண்மையான குழும உரையாடல் எப்படி அமையக்கூடும்
> என்று ஒரு simulation எழுதிப் பார்க்க வேண்டும்.
> ***

இணைய உரையாடல் என்பது கட்டுத்தெறிக்கு அகப்படாத காளைபோல் துள்ளுகிறதே! காரணமென்ன?

நம்மால் ஏன் ஒரு ‘உரையாடல்’ கூடச் செய்யமுடியவில்லை. நேரில் சந்திக்கும்
போது, ‘கேட்கும் திறன்’ கூட இருப்பதாக நம்புகிறேன்.

இது ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஒரு சிமுலேஷன் கொடுங்கள், பார்ப்போம்.

நா.கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages