இங்கே வழக்கில் பச்சை என்பது பச்ச என்றாயிற்று.
தமிழார்வலர்கள் இந்த 'பச்ச' யின் விவரம் அறியத் தாருங்களேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"
இந்த பச்சையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சையாகப் பேசுதல் என்பதும் ஒரு வழ்க்கு. மூடி மறைக்காத, பூச்சு இல்லாத, அனேகமாக ஆபாசமாகப் பேசுதலும் இதன் பொருளாகக் கொள்ளப்படுகிறது. கொஞ்சம் யோசித்தால் இன்னும் பல வழக்குகள் தென்படலாம்.
பச்சையாகப் பேசுதல் என்பதும் ஒரு வழ்க்கு. மூடி மறைக்காத, பூச்சு இல்லாத, அனேகமாக ஆபாசமாகப் பேசுதலும் இதன் பொருளாகக் கொள்ளப்படுகிறது. கொஞ்சம் யோசித்தால் இன்னும் பல வழக்குகள் தென்படலாம்.
On Apr 19, 10:13 am, Thamilthendral Muthupillai
எல்லா ஊரிலும் உள்ள வழக்கம்தான்.
பசுமை - fresh, raw என்ற பொருளில் வருகிறது.
பச்சை என்றால் வெறும் நிறத்தைக் குறிப்பதில்லை.
உங்கள் கேள்வியைப் பார்த்ததும் 101 ஆண்டு வாழ்ந்து
மறைந்த பிரெஞ்சு மாந்தவியல் நிபுணர் ஞாபகத்துக்கு
வருகிறார். அவரது “Raw and the Cooked" படிக்கலாம்.
http://en.wikipedia.org/wiki/The_Raw_and_the_Cooked
"Cuit" in French does not necessarily mean "cooked", but is also used
to denote "done" or "prepared", which is not necessarily obtained by
cooking. In this case, Strauss' use of cuit implies what culture and
society do to the raw and make it 'done' or 'cooked'.
"Cuit" எனும் பிரெஞ்சுச் சொல்லுக்கு எதிர்ப்பதம் தமிழின் “பச்சை”
எனக் கருதுகிறேன்.
க்லாட் லெவி-ஸ்ட்ராஸ் (1908-2009):
http://en.wikipedia.org/wiki/Claude_L%C3%A9vi-Strauss
நா. கணேசன்
On Apr 20, 2:36 pm, Vijay Vanbakkam <vcvi...@hotmail.com> wrote:
> ஹிந்தியிலும் பக்கா என்றால் சமைத்தது மட்டுல் இல்லை, முடிவான தீர்மானம் என்ற பொருளிலும்.
>
> தமிழில் பச்சை என்பது பல பொருள் கொண்டது., can be used in various contexts. நல்ல தமிழ் அகராதி என்றால் எல்லா பொருள்களையும் கொடுக்க வேண்டும்.
>
> வகொவி
>
>
>
>
>
>
>
> > Date: Thu, 19 Apr 2012 18:40:28 -0700
> > Subject: [MinTamil] Re: பச்சையா சில சொற்கள்...
> > From: naa.gane...@gmail.com
> > To: mint...@googlegroups.com
> > CC: jeanluc.chevill...@gmail.com; yavaru...@googlegroups.com; santhav...@googlegroups.com; thami...@googlegroups.com
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
பச்சைமண் என்பது virgin land என்ற பொருளில் வழங்குகின்றது. இதற்கும் பண்படுத்தி பயிர் செய்யாத இயற்கை நிலம் என்பது பொருள். இங்கு இயற்கை என்பதற்கும் பண்படாத என்பதற்கும் ஒரு உறவு உண்டு என்பதை உணரலாம். ஆதியில் மாந்தன் தன் முயற்சி அல்லாதவற்றை தாவரங்களின் பசுமை நிறத்தின் ஊடாகவே கண்டதால் அவன் இயற்கையை பச்சை என்ற பொருளில் உணர்ந்தான் எனக் கொள்ளலாம்.
சேசாத்திரி
முன்னம் ஒரு முறை கண்ணனின் நிறம் கருப்பா நீலமா என்ற விவாதம் நடந்தது
வண்ணத்தைக் குறிக்கும் வார்த்தைகளை அலசும்போது நாம-ரூப அடிப்படையில் அலச வேண்டியது அவசியம்
ஐயா,
ஆங்கிலத்தில் unprocessed என்பார்களே, இதாவது உள்ளது உள்ளபடியே என்று அதையே இந்த virgin land, பச்சை மண் என்பது குறிக்கின்றது எனலாம். நெல்லை ஈரமாக்கி அதைப் புழுக்கி (வேகவைத்து) பின் உமி நீக்குவது என்பது ஒரு செயன்முறை (process). இந்த வகையில் பெறப்படுவது தான் புழுங்கல் அரிசி. இந்த செயன்முறைக்கு உட்படாத அரிசி பச்சரிசி எனப்படுவதை நோக்குக. உழவிற்காக பண்படுத்திய நிலம் தமிழில் புலம் எனப்படுகின்றது. இந்த பண்படுத்துதல் என்பதும் ஒரு வகை செயன்முறை (process) தான். இவ்வாறு பண்படுத்தாமல் இருக்கும் நிலமே பச்சைமண். இப்போது கன்னி நிலம் என்பதையும் கன்னி என்ற வழக்கையும் நோக்கினால் அது இயல்பாக இருப்பது என்பதை உணர்த்தக் காண்கின்றோம். இயல்பு என்பதினின்றே இயற்கை என்ற சொல் உருவானது. கன்னி நிலம் என்பதும் பச்சைமண் என்பதும் ஒரே பொருள் கொண்டவை.
rijபசுமஞ்சள், பசுமண் ஆகியன ஈரமான என்ற பொருளில் குறிப்பிடப்பட்டாலும் காய்தல் என்னும் சுடுதல் செய்முறைக்கு உட்படாததால் அவையும் இயற்கையght
பசுமஞ்சள், பசுமண் ஆகியன ஈரமான என்ற பொருளில் குறிப்பிடப்பட்டாலும் காய்தல் என்னும் சுடுதல் செய்முறைக்கு உட்படாததால் அவையும் இயற்கையான என்ற பொருளையே கொண்டிருப்பது நோக்கத்தக்கது. இதாவது தோன்றுங்கால் இருந்த இயல்பு மாறாத என்பது ஈண்டு உணரப்படவேண்டும்.
சேசாத்திரி
2012/4/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
பச்சை மஞ்சள் என்பார்கள் பசுமஞ்சள் என்பார்கள்
காயாமல் பசுமையாய் இருக்கும் மஞ்சளைஅன்புடன்தமிழ்த்தேனீ
பச்ச புள்ளை - புதிதான, பண்படாத(raw-வா) குழந்தை (பச்ச புள்ளய எப்படித்
தூக்குறா பாறேன்...)
பச்ச நாவி - இயற்கையில் (எளிதில் கிடைக்கும்) நஞ்சு. (ஆமாம், நாவி
என்றால் நஞ்சா...?)
பச்சை மண் - பண்படாத நிலம்.
பச்சரிசி - ஃப்ரஷ்ஷான அரிசிங்க... (இப்ப நானிருக்கும் ஊரில் ரா ரைஸ்
என்று கடைகளில் விற்கிறார்கள். புழுங்கரிசிக்கு பாயில்ட் அரிசியாம்)
பசும் பொன் - தூய பொன் (24 காரட்?)
பச்சைத் தமிழன் - கலப்பற்ற தமிழன் (நீங்களும் நானுந்தான்).
பச்ச பச்சயா பேசுறான் - பண்படாத சொற்களைப் பேசுகிறான்
நாம் முன்னாளில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததனாலோ என்னவோ அதிகம் பச்சையை
'பச்சையா' வழக்கிலும் இலக்கியத்திலும் பயன்படுத்தவில்லை போலும்.
இலக்கியத்தில் பசுங்காய் -
மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு *பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை..
(குறுந்தொகை)
நுண்ணீர் தெவிள வீங்கி புடை திரண்டு
தெண்ணீர் *பசுங்காய் சேறு கொள முற்ற....
(நெடுநல்வாடை)
சாலி யரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப
மெல்விரல் சிவப்பப் பல்வேறு *பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்ய....
(சிலம்பு)
மொய்த்தாரை ஓர் இமைப்பின்தலை, முடுகத் தொடு சிலையால்
தைத்தான் அவர் கழல் திண் *பசுங்காய் ஒத்தனர் சரத்தால்..
(கம்பராமாயணம்)
கிள்ளையின் வதனம் அன்ன கேழ்கிளர் *பசுங்காய் தூங்கி....
(கந்தபுராணம்)
பன்னிறப் *பசுங்காய் சிந்தும் பழுமரக் காமர் காவுள்
பொன்னிவர் புனை மாண் கோயில் புரவலற்கு அமைந்த அன்றே
(கந்தபுராணம்)
தேவ்
On Apr 23, 11:29 am, Thamilthendral Muthupillai
> >http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88