கட்டுரை மொழியியல். அறிவியல்.இலக்கியம் இவற்றின்
கூட்டணி அமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.பாராட்டுகள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

மிக்க நன்றி தேமொழி அம்மா!கட்டுரைக்கான முகவரி இடத்தில் தாங்கள் காட்டியுள்ள முகவரிதான் அப்படியே தெரிந்தது. நான் அதனை நகலெடுத்தபோது ஏகப்பட்ட % குறியீடுகளுடன் மிக நீளமாக வந்தது. இரண்டுமுறை முயன்றேன். அவ்வாறே வந்தது. சரி தேமொழி பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிட்டேன். பார்த்துக்கொண்டீர்கள். மிக்க நன்றி. சரி! மீனைப் பிடித்துக்கொடுத்துவிட்டீர்கள். அதை எப்படிப் பிடிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தால் அடுத்தமீனுக்குத் தங்களைத் தேடமாட்டோம் அல்லவா! (ஆனால் நன்றியுடன் ஒவ்வொருமுறையும் நினைவுகூர்வோம்!!)ப.பாண்டியராஜா
>முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே> வெளியிடுகிறேன். மிக்க நன்றி, அன்புடன், ப.பாண்டியராஜா
இப்போது சுட்டி http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/மதி-சேர்-அரவு/article3085271.ece என்று சுருங்கிய வடிவுடையதாகிவிடும். அதைத்தான் தோழி தேமொழி செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.
//நீங்கள் கொடுத்துள்ள வலைக்கண்ணைச் சொடுக்கிப் பார்க்கவும். தொழிற்படாது.//சொடுக்கிப் பார்த்தேன்; தொழிற்படுகிறதே! :-)
அந்தச் சுட்டியில் ‘மதி-சேர்-அரவு’ என்ற சொல்லைத் தவிர்த்த மற்ற இடங்களில் சொடுக்கினால் கட்டுரையை எடுக்க முடிகிறது.அதுபோலவே வேறுசில கட்டுரைகளையும் சுருங்கிய வடிவில் கொடுத்துச் சோதித்துப் பார்த்தேன். தமிழ்ச்சொல் உள்ள இடம் தவிர்த்த மற்ற இடங்களில் சொடுக்கி அவற்றை இயங்கவைக்க முடிகிறது.
--
படம் சந்திர கிரகணத்தை விளக்கும் படம் போல இருக்கிறது. என் சிறு மூளைக்கு படத்தில் ஒரு குறை தோன்றுகிறது, சூரிய ஒளி சந்திரன் மீது படாத நிலையில், பூமியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சந்திரனின் பாதி கருப்பாக அல்லவோ தெரிய வேண்டும்?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்புமிகு சரவணன்!தங்களின் கட்டுரையை முழுமையாகப் படித்தேன். முதலில் நுதலைக் கண் என்றீர்கள். இப்போது அரவை மேகம் என்கிறீர்கள். இப்படியே போனால் நீங்கள் சொல்வதை யாரும் serious-ஆக எடுத்துக்கொள்வார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது.
”நான் கண்ட இந்த காட்டுச் சிறுஆந்தையின் அருகில் வந்த சிறிய வெள்ளைக் கண்ணி கத்திக் கொண்டிருந்ததையும், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த ஆந்தை அப்படியே அசையாமல் அமர்ந்திருந்ததையும் பார்க்க வேடிக்கையாக இருந்தது.
். கண்ணைச் சுற்றியிருக்கும் வெள்ளை வளையத்தை வைத்து இதைச் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.
அன்புள்ள வேந்தன் சரவணன் அவர்களேஅரவம் என்பது அசைவு ஒலி இவற்றையும் குறிக்கும் "ஆள் அரவமே"இல்லாத காடு என்ற சொல்லில் இது விளங்குகிறது.இங்கே அசைவும்(வண்டுக்கூடத்தின் சுழல் அசைவைக் குறிக்கும்.அவற்றின் மொத்த ரீங்கார ஒலியே இங்கு "அரவு" ஆகவும் கொள்ளலாம்.இருப்பினும் இந்த செய்யுளில் பாம்பு என்ற பொருளே அந்த அசைவை ஒட்டிய பொருளாகக் கொள்ளப்படுகிறது.நீங்கள் மேகம் என்று குறிப்பிடும் பொருள் கூட அசைவை குறித்து (ஓடும் மேகங்கள்) எழுந்ததே=======================================ருத்ரா
2015-10-19 17:14 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:். கண்ணைச் சுற்றியிருக்கும் வெள்ளை வளையத்தை வைத்து இதைச் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.இதைத்தானே நானும் சொல்கிறேன்.இப்படி வெள்ளை வளையம் உடைய பறவையினை கம்புள் என அழைத்தனர் முன்னோர்.கண்ணைச் சுற்றி வெள்ளை வளையம் உள்ளதால் தான் இதனை வெண் நுதல் கம்புள் என்று இலக்கியம் கூறுகிறது.இதில் உங்களுக்கு என்ன குழப்பம்?
அன்புநிறை திரு.ப.பாண்டியராஜா அவர்களேஉங்கள் எழுத்துக்களைக்கண்ட போது"எழுதரு மதியம் கடற்கண்டாங்கு"என்பதைபோல் உள்ளம் பொங்குகிறது."மதி" என்ற சொல் தொல் தமிழ்ச்சொல் தான்.அது வடமொழி சொல்போல தோற்றம் கொடுப்பதுஅங்கே இங்கே பரிமாறப்படுவதால் தான்.நம் பிள்ளைகளே நமக்கு சில சமயங்களில் அயற்பிள்ளைகளைப்போல் (கருத்து வேறுபாடுகளால் தோன்றுவது இல்லையா) அது போல் தான்.ஆனால் மதி என்ற சொல் நம் சங்கத்தமிழ்ப்புலவர்களுக்கு களிப்பு தருவது ஆகும்.அச்சொல் வராத சங்கப்பாடல்கள் மிக மிகக்குறைவு.
"மதி மலி புரிசை நான்மாடக்கூடல்"என்பது தானே நம் மதுரைக்குப்பெயர்.மதி என்பது உள்ளம் சார்ந்த சொல்.(லுனார் என்று
மதி சேர் அரவு
இன்றைய மொழியியற் கொள்கைப்படி இத் தொடர் ஒரு மயக்கு தொடர் ஆகும் (ambiguous statement). இக்கூற்று மதி அரவை அடைந்தது எனக் கூறுகிறதா, அல்லது அரவு மதியை அடைந்தது எனக் கூறுகிறதா என்பதில்தான் மயக்கம். முதற் பொருளின்படி இதனை (மதி) (சேர்) (அரவு) என மூன்று கூறுகளாக்கி, இவற்றை எழுவாய்(subject), பயனிலை (predicate), செயப்படுபொருள் (object) எனக்கொள்ளலாம். இதன்படி இது ஒரு முழுத் தொடர் ஆகிறது. இரண்டாவது பொருளின்படி இது (மதி சேர்) அரவு என்று பிரிக்கப்பட்டு, முதலிரண்டு சொற்களும் மூன்றாம் சொல்லுக்கு அடையாக (adjective) அமைந்து இது ஒரு எழுவாய்த்தொடர் (Noun class) ஆகிறது. இவ்வாறான மயக்குதொடர்கள் இலக்கிய இன்பம் தரலாம். ஆனால் அறிவியல் தமிழுக்குத் தெளிவு தேவை அல்லவா? பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் இத்தொடர் காணப்படுகிறது. அங்கு இத் தொடர் எந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது என ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
ஒரு நாட்டிற்கு வளம் சேர்ப்பது அதன் வயல்வெளிகளே. வயல்வெளிகள் நிறைந்த நிலப்பகுதியை மருதநிலம் என்கிறோம். நீர்வளம் இல்லையென்றால் இந்த வயல்களும் வறண்டுவிடும். நல்லியக்கோடனின் நாடு நீர்வளம் மிக்கது என்று கூறவந்த புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இங்கு ஓர் அழகிய சொல்லோவியத்தைக் காட்டுகிறார்.
நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை
குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது
கொங்கு கவர் நீல செம் கண் சேவல்
மதி சேர் அரவின் மான தோன்றும்
மருதம் சான்ற மருத தண் பணை - சிறு 178 - 186
நறு மலர்களின் மாலை போல நாள்தோறும் பூக்கும் கிளைகளைக் கொண்ட குட்டையான அடிமரத்தை உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,
நிலையான நீர் இல்லாத குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து
புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீலநிற மீன்கொத்தியின்
பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன்
முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம்
திங்கள் சேர்கின்ற (கரும்)பாம்பு போலத் தோன்றும்,
மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல்வெளிகள்'
‘நீர் நிறைந்த குளங்களைக் கொண்ட மருதநிலம்' என்பதுவே கூறவந்த பொருளாகும். அதை நேரிடையாகச் சொன்னால் அது உரைநடை ஆகும். எனவே இங்கே ஒரு குளத்தங்கரைக் காட்சியைச் சொல்லால் வடிக்கிறார் புலவர்.
ஒரு குளத்தில் தாமரை பூத்திருக்கிறது. அதில் ஒரு பூ அன்றுதான் மலர்ந்திருக்கிறது. அன்றலர்ந்த மலர் என்று இப்போது கூறுகிறோம். இதைத்தான் புலவர் ‘முகிழ் விரி நாள் போது' என்கிறார். எனவே அதில் தேன் நிறைய இருக்கும். அது வெள்ளைத் தாமரையாக இருக்கவேண்டும். ஒரு வண்டுக்கூட்டம் அதை மொய்த்துக் கொண்டிருக்கிறது. இக்காட்சி வெண்ணிலவைப் பாம்பு விழுங்குவது போன்று இருந்தது என்று புலவர் கூறுகிறார். உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடத் தயாராகுங்கள்! சந்திர கிரகணம் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியும். சூரிய ஒளி பூமியின் மீது விழும்போது ஏற்படும் நிழல்கூம்பினுள் (cone of shadow) சந்திரன் நுழைய நேரிடும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த நிழல்கூம்பைத் தான் நம் முன்னோர் பாம்பு என்று கூறினர். கூம்பின் நுனி பாம்பின் வால். கூம்பிற்குள் சந்திரன் நுழைகிறது என்பதற்குப் பதிலாக பாம்பு வந்து சந்திரனை விழுங்குவதாகக் கூறினர். நிழலை விட்டு சந்திரன் வெளியே வருவதையே பாம்பு அதை உமிழ்ந்துவிட்டதாகக் கூறினர்..
உண்மையில் அரவு எனப்படும் நிழல் எப்போதும் இருப்பது. ஆனால் மதி என்னும் நிலவு பூமியைச் சுற்றிவருவது. அப்படி வரும்போது பலநேரங்களில் நிலவு நிழலுக்குள் செல்லாமல் விலகிச் செல்கிறது. சில நேரங்களில் நிலவு நிழலுக்குள் சென்று வருகிறது. அதைத்தான் மறைப்பு அல்லது கிரகணம் என்கிறோம். இப்போது சொல்லுங்கள் மதி அரவைச் சேர்ந்து விலகுகிறதா, அல்லது, அரவு நிலவைச் சேர்த்து விலக்குகிறதா என்று. முதற்கூற்றே சரியானது. அதாவது, மதி சேர் அரவு என்பது அரவைச் சேரும் மதி என்ற பொருளையே தரும். ஆனால் புலவரின் நோக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.
புலவர் இத் தொடரை ஓர் உவமைக்குப் பயன்படுத்துகிறார். தாமரை மலர் மீது மொய்த்திருக்கும் வண்டுக்கூட்டம் நிலவை விழுங்கும் பாம்பு போல் இருந்தது என்று அவர் கூறிமுடித்திருக்கலாம். புலவரின் கற்பனைத் திறன் இதோடு முடியவில்லை. ‘காஞ்சி மரத்தின் கிளையில் காத்திருந்த மீன்கொத்தி, மீன் ஒன்றைக் கொத்தித் தூக்க, அதன் கால் நகங்களால் கிழிக்கப்பட்ட இலைகளைக் கொண்ட தாமரை' என்ற புலவரின் வருணனை நீளமானதாகவும், தேவையற்றதாகவும் தோன்றலாம். ஆனால் தேவையற்ற எதனையும் சங்கப் புலவர்கள் கூறுவதில்லை.ஒரு குளத்தில் மீன் கொத்தி ஒன்று மீன் பிடிக்கும் காட்சிகள் இங்கு காட்டப்பட்டுள்ளன. நெடுநெரம் காத்திருக்கும் பறவை, தக்க தருணம் அமைந்ததும், மீனை நோக்கி அம்பு போல் பாய்கிறது. நீருக்குள் மூழ்கி மீனைக் கவ்விப்பிடிக்கிறது. அந்த வேகத்தில் அது நீருக்குள் சற்று ஆழமாகவே செல்ல நேர்கிறது. மேல் மட்டத்தில் உள்ள தண்ணீர் ‘பளார்' என்று வெளியே தெறிக்கிறது. பின்னர், பறவை மேல் நோக்கித் திரும்பித் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு வருகிறது. மேலே தன் இருப்பிடத்திற்குத் திரும்புகிறது. இந் நிகழ்ச்சி அப் பகுதியில் ஒரு பெரிய சலசலப்பையே உண்டாக்கியிருக்கும். நீரைக் கிழித்துக்கொண்டு பறவை உட்சென்று வெளிவருவதால் நீர்ப்பரப்பு இரண்டு முறை அதிர்கிறது. அதனால் நீரில் மேலுள்ள தாமரை போன்ற மலர்கள் ஆட்டங்கொள்ளும். ஆனால் இது கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிவதால் மலர்கள் நீண்ட நேரம் பாதிப்படைவதில்லை. ஆனால், புலவர் இங்கு மேலும் ஒரு நிகழ்வினைக் குறிப்பிடுகிறார். போகிற போக்கில் பறவையின் கால்கள் அங்கிருக்கும் தாமரை இலையில் படுகின்றன. காலின் கூரிய நகங்கள் அந்த இலையை இழுத்துக் கிழித்துவிடுகின்றன. இதனால் மலருடன் சேர்ந்த கொடி முழுவதுமே பாதிப்படைகிறது. எனவே தாமரை மலர் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி நீண்ட நேரம் ஆடிக்கொண்டே இருக்கும். இச் சூழ்நிலையில் வண்டுக்கூட்டங்கள் பாம்பு போல் அம் மலரைச் சூழ வரமுடியுமா? கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.
விடியற்காலத்தில் ஓரளவே மலர்ந்த (முகிழ் விரி நாள் போது) மலரினுள் சென்று தேனீக்கள் ஏற்கனவே தேன் உறிஞ்சிக்கொண்டு இருக்கின்றன. மேலும் பல தேனீக்கள் மலரைச் சுற்றிலும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. எனவே, அவை மலரை ஏறக்குறைய மறைத்து விட்டிருக்கின்றன.
நன்கு விடிந்த பின்னர் பறவைகள் உணவு தேட ஆரம்பிக்கும். அப்போது வந்த மீன்கொத்தி, மரக் கிளையில் நீண்ட நேரம் (நெடிது இருந்து) காத்திருக்கிறது. அதற்குள் இன்னும் நிறைய தேனீக்கள் அம்மலரை மொய்க்க ஆரம்பிக்கின்றன. தக்க நேரத்தில் பறவை பாய்ந்து மீனைப் பிடித்த சலசலப்பினாலும், இலை கிழிக்கப்பட்ட அதிர்ச்சியினாலும் பாதிக்கப்பட்ட மலர், பெரிதாக ஆட்டங்கொள்ள, மலர் மீது மொய்த்து இருந்த தேனீக்கள் ‘விருட்டென்று' மேலெழும்புகின்றன. மேல் மட்டத்தில் இருந்த சில தேனீக்கள் முதலில் மேலெழும்ப, அதை அடுத்தடுத்து இருந்தவையும் அடுக்கடுக்காய் எழும்ப, பறந்துபோகும் தேனீக்கள் கூட்டம் ஒரு கூம்பைப் போல் தோன்றுகிறது.
மிக்க நன்றி அம்மா!!ப.பாண்டியராஜா
On Monday, October 19, 2015 at 10:02:27 PM UTC+5:30, தேமொழி wrote:
குறிப்பு:அனைவரின் கவனத்திற்கும்...மதி ... அரவு... நுதல் ...ஆகிய வேர்ச்சொல் ஆய்வுகள் இனி ஓர் தனி இழையில் தொடரப்படும்.
பாண்டியராஜா ஐயாவின் மதி சேர் அரவு - தமிழ்மணி (தினமணி) கட்டுரை பற்றிய கருத்துப் பரிமாற்றம் மட்டுமே இவ்விழையில் தொடரப்படும்...... தேமொழி
அப்போது சிறிது சிறிதாக வெளித்தெரிந்த வெள்ளைத் தாமரை, பாதி மூடிய முழுநிலவைப் போல் காட்சியளிக்கிறது. இதுவே, ‘மதி சேர் அரவின்' என்று புலவரைப் பாடச் செய்திருக்கிறது. எனவே, ‘கொங்கு கவர் சேவல்' என்ற வினைத்தொகைச் சொல்லுக்கு ‘தேனை நுகர்ந்த தேனீக்கள்' என்ற சென்ற காலத் தொடராக விரிவு காண்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. மேலும், தேனீக்களை ஆய்வோர், ‘தேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதில்லை. தனித்தனியாகவே சென்று பூக்களைத் தேடுகின்றன' என்று கூறுவர். எனவே, ‘கொங்கு கவர் சேவல்' என்ற வினைத்தொகைச் சொல்லுக்கு ‘தேனை நுகர்வதற்காக வரும் தேனீக்கள்' என்ற நிகழ்காலத் தொடராக விரிவு காண்பது பொருத்தமற்றது என்பது உறுதியாகிறது. இங்கே, சேவல் என்பது ஆண்தேனீக்களைக் குறிக்கும். அறிவியலார் கூற்றுப்படி, பெண் தேனீக்கள் மட்டுமே தேன் சேகரிக்க வெளியில் செல்லும். ஆண் தேனீக்கள் கூட்டிலேயே சோம்பியிருக்கும். எனவே ஆண் தேனீக்களுக்கு வீணன் அல்லது சோம்பித்திரிபவன் (drones) என்று பெயர். அக் காலத்தில் ஆண்கள் மட்டுமே வெளியில் பொருள் சேர்க்கச் செல்வர் என்பதால், தேன் சேகரிக்க வரும் தேனீக்களும் ஆண்களாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றைச் ‘சேவல்' என்று புலவர் அழைக்கிறார். எனினும், ஆண், பெண் என்ற இருபால் தேனீக்களில் ஒருபால் இனமே தேனெடுக்க வெளியில் வருகிறது என்ற உண்மையைப் பண்டைய மக்கள் அறிந்திருந்தனர் எனத் தோன்றுகிறது. ‘நீல செம் கண் சேவல்' என்ற தொடரை, ‘நீலச்சேவல், செங்கண் சேவல்' எனப் பிரித்துக் ‘கரிய நிறமும் சிவந்த கண்களையும் உடைய வண்டு' என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் தேனீக்களின் கண்கள் சிவப்பானவை அல்ல. படங்களைப் பாருங்கள்.
தேனீக்களின் கண்கள் பெரும்பாலும் நீலமும் ஓரளவு சிவப்பும் கலந்த நிறத்தவை. எனவே, இத்தொடரில், ‘நீல', ‘செம்' ஆகிய இரண்டையுமே கண்ணுக்கு அடைகளாகக் கொண்டு, சிவப்புக் கலந்த நீல நிறமுடைய கண்கள் என்று பொருள் கொள்வதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. எனினும், தேனீக்களின் கண்களைக் கூட இத்தனை உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ள புலவரின் கூர்த்த மதி எண்ணி எண்ணி வியத்தற்குரியது. அதைப் போலவே ‘பொன் வாய் மணிச் சிரல்'-அதாவது ‘பொன்னிற வாயை யுடைய நீலமணி போன்ற சிச்சிலி-யின்' என்ற புலவரின் கூற்றும் எவ்வளவு உண்மை என்பதைப் படத்தில் பாருங்கள். எனவே, சங்கப் புலவர்களின் சொல்லோவியங்கள் ‘கறுப்பு-வெள்ளை' (Black and White)ப் படங்களாக இல்லாமல், வண்ணப் படங்களாகவே இருப்பதை மீண்டும் இங்குக் காண்கிறோம்.
அடுத்ததாகப் பறவை அமர்ந்திருந்த மரத்தைப் பற்றியும் புலவர் கூறுகிறார். அது ஒரு காஞ்சிமரம்; இப்பொழுது அது ஆற்றுப்பூவரசு என அழைக்கப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இருக்கும். அதைக் குறுங்கால் காஞ்சி என்கிறார் புலவர். அதாவது சிறிய அடி மரத்தைக் கொண்டது அது. குட்டையான அந்த மரத்தின் கிளைகளில் சில நீரின் மேல் பகுதி மேலும் நீண்டிருக்கும். அப்போது அது நீருக்கு அருகில் இருக்கும். எனவே, அங்கிருந்து நீருக்குள் இருக்கும் மீன்களைப் பார்ப்பதுவும், தக்க நேரத்தில் சீக்கிரமாய்ப் பாய்ந்து செல்லவும் அது மிக்க வசதி உடையதாக இருக்கும். எனவேதான் மீன்கொத்தி அந்த மரத்தின் கிளை ஒன்றைத் தேர்ந்தெடுத்தது. பறவைகளின் உளப்பாங்கையும் புலவர் அறிந்து வைத்திருக்கிறார்.
காஞ்சி மரத்துக்கு வேறு ஒரு சிறப்பும் உண்டு. அதன் பூ ஏற்கனவே தொடுத்த ஒரு மாலையைப் போலிருக்கும். படத்தைப் பார்க்க. இதையும் வருணிக்கப் புலவர் மறக்க வில்லை. எனவே இதனை, நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை என்கிறார். இதன் கிளைகள் பார்ப்பதற்குக் குச்சி போல் இருப்பினும் பறவை உட்காருமளவுக்கு வலுவுள்ளன என்பதை நாள் சினை என்பதன் வாயிலாகக் குறிப்பிடுவதற்கும் புலவர் மறக்கவில்லை.
ப.பாண்டியராஜா
வணக்கம் ஐயா.
மதி சேர் அரவு – ஒரு அருமையான அறிவியல் விளக்கத்தையும், இலக்கிய இன்பம் துய்த்திடும் வகையில் படங்களுடனும் வழங்கி உள்ளீர்கள் ஐயா. பண்டைத் தமிழ் இலக்கியங்களை இவ்வாறு பகுத்து உணர்ந்து எடுத்து இயம்புவது பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறான விளக்கங்களால் பாடல்வரிகள் மனதில் நீங்காது பதிந்து விடுகின்றன. தாங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுபோன்ற தங்களது புதிய சிந்தனைகளைப் பதிவு செய்து எங்களையும் இலக்கிய இன்பத்தில் ஆழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மற்றபடி, தங்களது கருத்தில் இரண்டு நெருடல்கள் எனக்கு உள்ளன.
1) தாமரை பெரிது, அதை மறைக்கும் தேனீ மிகச் சிறிது.
ஆனால் மதி சிறிது அதில் சேரும் அரவு பெரிது.
ஒருமுறை சந்திரகிரகணத்தைப் பார்த்தாலே இது தெளிவாக விளங்கும். எனவே புலவர் குறிப்பிடும் சேவல் என்பது தாமரை மலரை ஒத்த வடிவுடைய ஒரு பறவையாக இருக்க வேண்டும், மேலும், இப்பறவைக்குச் சேவல் போன்றதொரு வால் இறகு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
இதனால், “சேவல் என்பது தேனீ அல்ல“ என்பது எனது கருத்து.
2) “மதி அரவைச் சேர்ந்து விலகுகிறது என்ற கூற்றே சரியானது“ என்று தாங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள் ஐயா.
தங்களது கருத்துப்படி, சந்திரோதயம் சூரியோதயம் என்ற சொற்களும் பிழையானவை ஆகின்றன. நாம் அண்டத்திலிருந்து பூமியையும் அதன் நிழலையும் சந்திரனையும் பார்க்கவில்லை. அறிவியல் அப்படியிருந்தாலும், புலவர் தன் கண்ணால் காண்பதையே கவிதையாகப் பதிவு செய்கிறார். நாமும் சந்திரகிரகணத்தன்று பார்த்தால், “மதியில்தான் இருள் சேர்ந்து விலகுகிறது“. எனவே மதியில் அரவு சேர்கிறது என்பதே சரியான கருத்தாகும்.
எனது சங்கப்புலவர் சரியாகவே எழுதியுள்ளார் என்று எண்ணுகிறேன். எனது இவ்விரண்டு கருத்துகளும் சரியா? தவறா?
ஐயா அவர்கள் விளக்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
>முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே> வெளியிடுகிறேன். மிக்க நன்றி, அன்புடன், ப.பாண்டியராஜா
கட்டுரை படித்தேன். முழுக் கட்டுரையும் (நறுக்காக் கட்டுரை) காண ஆவல்.மதி சேர் அரவு, உரையாசிரியர்கள் குறிப்பிடும் “புலிகொல்யானை” என்னும் தொடர்போல அமைந்துள்ளது.விளக்கத்திற்கு நன்றி. புலியைக் கொன்ற யானையா? புலியால் கொன்ற (கொல்லப்பட்ட) யானையா? என்பது 2-ஆம் (அ) 3-ஆம் வேற்றுமை உருபுகொண்டுதான் சொல்லமுடியும்.
மதி சேர் அரவுFirst Published : 18 October 2015 12:53 AM ISTபுகைப்படங்கள்இன்றைய மொழியியற் கொள்கைப்படி இத்தொடர் ஒரு மயக்குத் தொடர் ஆகும் (ambiguous statement). இக்கூற்று மதி அரவை அடைந்தது எனக் கூறுகிறதா, அல்லது அரவு மதியை அடைந்தது எனக் கூறுகிறதா என்பதில்தான் மயக்கம். முதற் பொருளின்படி இதனை மதி, சேர், அரவு என மூன்று கூறுகளாக்கி, இவற்றை எழுவாய்(subject), பயனிலை (predicate), செயப்படுபொருள் (object) எனக் கொள்ளலாம். இதன்படி இது ஒரு முழுத்தொடர் ஆகிறது.இரண்டாவது பொருளின்படி இது (மதி சேர்) அரவு என்று பிரிக்கப்பட்டு, முதலிரண்டு சொற்களும் மூன்றாம் சொல்லுக்கு அடையாக (adjective) அமைந்து இது ஓர் எழுவாய்த்தொடர் (Noun class) ஆகிறது. இவ்வாறான மயக்குத் தொடர்கள் இலக்கிய இன்பம் தரலாம். ஆனால், அறிவியல் தமிழுக்குத் தெளிவு தேவை அல்லவா? பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் இத்தொடர் காணப்படுகிறது. அங்கு இத்தொடர் எப்பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.வயல் வெளிகள் நிறைந்த நிலப்பகுதியை மருதநிலம் என்கிறோம். நீர்வளம் இல்லையென்றால் இந்த வயல்களும் வறண்டுவிடும். நல்லியக்கோடனின் நாடு நீர்வளம் மிக்கது என்று கூறவந்த புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், ஓர் அழகிய சொல்லோவியத்தைக் காட்டுகிறார்.""குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடைமுள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது
கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல்மதி சேர் அரவின் மானத் தோன்றும்மருதம் சான்ற மருதத் தண்பணை'' (சிறு:178-185)"குட்டையான அடிமரத்தை உடைய காஞ்சி மரத்தின் கொம்பில் ஏறி, நிலையான நீர் இல்லாத குளத்தை(கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீலநிற மீன்கொத்தியின் பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன் முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின் தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம், திங்கள் சேர்கின்ற (கரும்)பாம்பு போலத் தோன்றும், மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல் வெளிகள் நீர் நிறைந்த குளங்களைக்கொண்ட மருதநிலம்' என்பதுவே கூறவந்த பொருளாகும். அதை நேரிடையாகச் சொன்னால் அது உரைநடை ஆகும். எனவே, இங்கே ஒரு குளத்தங்கரைக் காட்சியைச் சொல்லால் வடிக்கிறார் புலவர்.ஒரு குளத்தில் வெள்ளைத் தாமரை பூத்திருக்கிறது. அதில் ஒரு பூ அன்றுதான் மலர்ந்திருக்கிறது. இதைத்தான் புலவர் முகிழ் விரி நாள் போது என்கிறார். எனவே, அதில் தேன் நிறைய இருக்கும். ஒரு வண்டுக்கூட்டம் அதை மொய்த்துக் கொண்டிருக்கிறது. இக்காட்சி வெண்ணிலவைப் பாம்பு விழுங்குவது போன்று இருந்தது என்கிறார்.சூரிய ஒளி பூமியின் மீது விழும்போது ஏற்படும் நிழல்கூம்பினுள் (cone of shadow) சந்திரன் நுழைய நேரிடும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த நிழல்கூம்பைத்தான் நம் முன்னோர் பாம்பு என்றனர். கூம்பின் நுனி பாம்பின் வால். கூம்பிற்குள் சந்திரன் நுழைகிறது என்பதற்குப் பதிலாக பாம்பு வந்து சந்திரனை விழுங்குவதாகக் கூறினர். நிழலை விட்டு சந்திரன் வெளியே வருவதையே பாம்பு அதை உமிழ்ந்துவிட்டதாகக் கூறினர்.உண்மையில் அரவு எனப்படும் நிழல் எப்போதும் இருப்பது. ஆனால், மதி என்னும் நிலவு பூமியைச் சுற்றிவருவது. அப்படி வரும்போது பல நேரங்களில் நிலவு, நிழலுக்குள் செல்லாமல் விலகிச் செல்கிறது. சில நேரங்களில் நிலவு நிழலுக்குள் சென்று வருகிறது. அதைத்தான் மறைப்பு அல்லது கிரகணம் என்கிறோம். இதன்படி, மதி அரவைச் சேர்ந்து விலகுகிறது என்ற கூற்றே சரியானது. அதாவது, மதி சேர் அரவு என்பது அரவைச் சேரும் மதி என்ற பொருளையே தரும். ஆனால், புலவரின் நோக்கம் என்ன?புலவர் இத்தொடரை ஓர் உவமைக்குப் பயன்படுத்துகிறார். "காஞ்சி மரத்தின் கிளையில் காத்திருந்த மீன்கொத்தி, மீன் ஒன்றைக் கொத்தித் தூக்க, அதன் கால் நகங்களால் கிழிக்கப்பட்ட இலைகளைக்கொண்ட தாமரை' என்கிறார்.ஒரு குளத்தில் நெடுநெரம் காத்திருக்கும் மீன்கொத்திப் பறவை ஒன்று, தக்க தருணம் அமைந்ததும், மீனை நோக்கி அம்பு போல் பாய்கிறது. போகிற போக்கில் பறவையின் கால்கள் அங்கிருக்கும் தாமரை இலையில் படுகின்றன. காலின் கூரிய நகங்கள் அந்த இலையை இழுத்துக் கிழித்துவிடுகின்றன. இதனால் மலருடன் சேர்ந்த கொடி முழுவதுமே பாதிப்படைகிறது. பறவை ஒரு பேரதிர்ச்சியை உண்டாக்குகிறது. எனவே, தாமரை மலர் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி, நீண்ட நேரம் ஆடிக்கொண்டே இருக்கும்.இச்சூழ்நிலையில், மேல் மட்டத்தில் இருந்த சில தேனீக்கள் முதலில் மேலெழும்ப, அதை அடுத்தடுத்து இருந்தவையும் அடுக்கடுக்காய் எழும்ப, பறந்துபோகும் தேனீக்கள் கூட்டம் ஒரு கூம்பைப் போல் தோன்றுகிறது. அப்போது சிறிது சிறிதாக வெளித்தெரிந்த வெள்ளைத் தாமரை, பாதி மூடிய முழுநிலவைப் போல் காட்சியளிக்கிறது. இதுவே, "மதி சேர் அரவின்' என்று புலவரைப் பாடச் செய்திருக்கிறது. எனவே, "கொங்கு கவர் சேவல்' என்ற வினைத்தொகைச் சொல்லுக்குத் தேனை நுகர்ந்த தேனீக்கள்' என்ற சென்ற காலத் தொடராக விரிவு காண்பதே பொருத்தம். அத்தோடு மதி சேர் அரவு என்ற வினைத்தொகைச் சொல்லுக்கு மதி சேர்ந்த பாம்பு என்ற சென்ற காலத் தொடராக விரிவு காண்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.பாதி மூடிய மலரை விட்டுக் தேனீக்கள் கூம்பு போல் எழுந்துசெல்லும் காட்சி மதி நுழைந்த அரவு போல் இருப்பதாகப் புலவர் பாடியுள்ளார். தேனீக்கள் விலகும் நிலையில் பாதி வெளித்தெரியும் வெள்ளைத்தாமரையைப் புலவர் உவமித்திருந்தால் "அரவு சேர் மதியின் மான' என்று உவம உருபான "மான'வை மதியுடன் இணைத்திருப்பார். ஆனால், அவர் "மதி சேர் அரவின் மான' என்று தெளிவாகக் கூறியிருப்பதால், புலவரின் ஒப்புமை தாமரைக்கும் மதிக்கும் அல்ல என்றும், உவமை கூம்பு போன்ற வண்டுக் கூட்டத்துக்கும் கூம்பு போன்ற அரவு என்னும் நிழலுக்குமே என்பது தெளிவு.இப்போது உவமையை உற்றுப்பாருங்கள்: கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல், மதி சேர் அரவின் மானத் தோன்றும். எனவே, கிரகணம் என்பதில் உள்ள அரவு நிழல்கூம்பே என்ற அறிவியல் நுணுக்கத்தை அன்றைத் தமிழர் தெரிந்திருந்தனர் என்று நம்ப இடமிருக்கிறது.-முனைவர் ப.பாண்டியராஜா
On Saturday, October 17, 2015 at 10:57:04 PM UTC-7, Pandiyaraja wrote:அன்புடையீர்,இன்றைய (18.10.2015 ஞாயிறு) தினமணி நாளிதழின் நடுப்பக்கத்தில் தமிழ்மணி பகுதியில் மதி சேர் அரவு என்ற தலைப்பிட்ட என் கட்டுரை வெளியாகியிருக்கிறது. வெகுநாட்களுக்கு முன்னர் நான் எழுதி அனுப்பிய கட்டுரை இது. ஓரளவுக்கு நறுக்கப்பட்டிருந்தாலும் பொருள் சிதைப்போ, தொடர்ச்சியின்மையோ ஏற்படாவண்ணம் மிகவும் திறமையாக, அவர்களின் இட அளவுக்கேற்ற வகையில் குறைக்கப்பட்டிருக்கிறது.இதனை இங்கு பார்க்கலாம்:(இதை Ctrl + Click செய்யும்போது இதனடியில் Go to link : என்று முகவரி தோன்றுகிறது. அதனைத் தட்டுங்கள்)ஆகஸ்ட்டு, செப்டம்பரில் 'மருத்துவ விடுப்பில்' இருந்தேன். சற்றே தேறி வரும்போது அக்டோபரில் 15 நாள் இடைவெளியில் இரண்டு அடுத்தடுத்த பெரிய அதிர்ச்சிகள். இந்த அதிர்வலைகளின் சுனாமித் தாக்கத்தினால் மனத்தில் ஏற்பட்ட பெரும் நாசம் மாறி, இயல்புநிலை அடையப் பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்தக் கட்டுரை வந்து கொஞ்சம் மயிலிறகாய்த் தடவிவிட்டிருக்கிறது.இந்தச் சுட்டியின்மூலம் கிடைக்காவிட்டால், google Search - இல் மதி சேர் அரவு என்று தட்டிப் பாருங்கள்.முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே வெளியிடுகிறேன்.மிக்க நன்றி,அன்புடன்,ப.பாண்டியராஜா
On 20-Oct-2015 9:32 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம் ஐயா.
> மதி சேர் அரவு – ஒரு அருமையான அறிவியல் விளக்கத்தையும், இலக்கிய இன்பம் துய்த்திடும் வகையில் படங்களுடனும் வழங்கி உள்ளீர்கள் ஐயா. பண்டைத் தமிழ் இலக்கியங்களை இவ்வாறு பகுத்து உணர்ந்து எடுத்து இயம்புவது பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறான விளக்கங்களால் பாடல்வரிகள் மனதில் நீங்காது பதிந்து விடுகின்றன. தாங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுபோன்ற தங்களது புதிய சிந்தனைகளைப் பதிவு செய்து எங்களையும் இலக்கிய இன்பத்தில் ஆழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
>
> மற்றபடி, தங்களது கருத்தில் இரண்டு நெருடல்கள் எனக்கு உள்ளன.
> 1) தாமரை பெரிது, அதை மறைக்கும் தேனீ மிகச் சிறிது.
> ஆனால் மதி சிறிது அதில் சேரும் அரவு பெரிது.
> ஒருமுறை சந்திரகிரகணத்தைப் பார்த்தாலே இது தெளிவாக விளங்கும். எனவே புலவர் குறிப்பிடும் சேவல் என்பது தாமரை மலரை ஒத்த வடிவுடைய தேன்சிட்டுப் போன்றதொரு பறவையாக இருக்க வேண்டும், மேலும், இப்பறவைக்குச் சேவல் போன்றதொரு வால் இறகு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
> இதனால், “சேவல் என்பது தேனீ அல்ல“ என்பது எனது கருத்து.
> 2) “மதி அரவைச் சேர்ந்து விலகுகிறது என்ற கூற்றே சரியானது“ என்று தாங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள் ஐயா.
> தங்களது கருத்துப்படி, சந்திரோதயம் சூரியோதயம் என்ற சொற்களும் பிழையானவை ஆகின்றன. நாம் அண்டத்திலிருந்து பூமியையும் அதன் நிழலையும் சந்திரனையும் பார்க்கவில்லை. அறிவியல் அப்படியிருந்தாலும், புலவர் தன் கண்ணால் காண்பதையே கவிதையாகப் பதிவு செய்கிறார். நாமும் சந்திரகிரகணத்தன்று பார்த்தால், “மதியில்தான் இருள் சேர்ந்து விலகுகிறது“. எனவே மதியில் அரவு சேர்கிறது என்பதே சரியான கருத்தாகும்.
>
> எனது சங்கப்புலவர் சரியாகவே எழுதியுள்ளார் என்று எண்ணுகிறேன். எனது இவ்விரண்டு கருத்துகளும் சரியா? தவறா?
> ஐயா அவர்கள் விளக்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
>
> On 18-Oct-2015 8:36 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>
>>
>> >முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே
>> > வெளியிடுகிறேன். மிக்க நன்றி, அன்புடன், ப.பாண்டியராஜா
>>
>> கட்டுரை படித்தேன். முழுக் கட்டுரையும் (நறுக்காக் கட்டுரை) காண ஆவல்.
>>
>> மதி சேர் அரவு, உரையாசிரியர்கள் குறிப்பிடும் “புலிகொல்யானை” என்னும் தொடர்போல அமைந்துள்ளது.
>> விளக்கத்திற்கு நன்றி. புலியைக் கொன்ற யானையா? புலியால் கொன்ற (கொல்லப்பட்ட) யானையா? என்பது 2-ஆம் (அ) 3-ஆம் வேற்றுமை உருபுகொண்டுதான் சொல்லமுடியும்.
>> http://www.tamilvu.org/slet/l0100/l0100noo.jsp?song_no=96&head_id=2
>>
>>>
>>> http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/10/18/மதி-சேர்-அரவு/article3085271.ece
>>
>>
>>
>> மதி சேர் அரவு
>>
>> First Published : 18 October 2015 12:53 AM IST
>> புகைப்படங்கள்
>>
>>
வணக்கம் ஐயா.
என் பொருட்டு உடன் விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஐயா.
On 20-Oct-2015 11:00 pm, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> மிக்க நன்றி காளை ஐயா!
உரிமையுடன் காளை என்று அழைத்தால் பெரிதும் மகிழ்வேன் ஐயா.
> நான் இறுதியில் அனுப்பிய முழுக்கட்டுரையையும் படித்துவிட்டுத்தான் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
ஆமாம் ஐயா.
நான் மிகப் பெரும்பாலும் உரையாசிரியர்கள் கூற்றை ஒட்டியே எழுதுவேன். அவர்களின் உரைகளைப் படித்துத்தான் புரிந்துகொள்கிறேன் என்பதை வெளிப்படையாகவே கூறிக்கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. இருப்பினும் அந்தப் பொருளை உள்வாங்கிக்கொண்டு நானே தனிவழியில் சிந்திக்கிறேன். சிற்சில இடங்களில் நான் மாறுபட நேரிடுகிறது. ஆனால் அவசரப்படாமல் பலவித உள்/வெளிச் சான்றுகளின் அடிப்படியில்தான் என் மாறுபடுதலை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.
> கொங்குகவர் நீலச் செங்கண் சேவல் என்பதற்கு பெருமழைப்புலவர் கூறுவது: "தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணினையுமுடைய வண்டொழுங்கு". இங்கு சேவல் என்பது ஒரு தனித்த தேனீ அல்ல. ஒரு தேனீக்கூட்டம் என்பது தெளிவாகிறது. மேலும் அவர் "சேவல் - ஆண்பால் குறித்த சொல். எனவே கொங்கு கவர் ஆண்வண்டுகள் என்றபடியாம்" என்கிறார்.
சங்கப்புலவரின் பாடல் வரிகளை ஆராயும்போது, உரையாசிரியர் பெருமழைப்புலவர் கூறும் விளக்கங்கத்தில்
1) தண்ணீர் தடாகத்தில் உள்ள தாமரையில் தேனீக்கள் தேன் எடுக்குமா?
2)தேனீக்கள் ஒரு மலரை மறைக்கும் அளவிற்கு ஒருகுழுவாகக் கூடிச் சென்று தேன் எடுக்கும் இயல்புடையனவையா? எனவும் அறிய வேண்டியுள்ளது ஐயா.
எனக்கு என்னவோ, வளைந்த வால் உடைய ஒரு சிறிய கரியநிறப் பறவையைப் புலவர் குறிப்பிடுகின்றார் என்ற எண்ணம்.
சங்கப்புலவரின் பாடல் வரிகளை ஆராயும்போது, உரையாசிரியர் பெருமழைப்புலவர் கூறும் விளக்கங்கத்தில்
1) தண்ணீர் தடாகத்தில் உள்ள தாமரையில் தேனீக்கள் தேன் எடுக்குமா?
2)தேனீக்கள் ஒரு மலரை மறைக்கும் அளவிற்கு ஒருகுழுவாகக் கூடிச் சென்று தேன் எடுக்கும் இயல்புடையனவையா? எனவும் அறிய வேண்டியுள்ளது
On 21-Oct-2015 11:10 pm, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> மிக்க நன்றி அம்மா! (கணினிக்)கரம் கொடுத்துத் தூக்கிவிடுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே!
> ப.பாண்டியராஜா
>
ஆமாம் ஐயா.
"இணையப் புயல்" அவர்களுக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்படியே நேரம் கிடைத்தால், தேன்சிட்டு தாமரையில் தேன் உண்ணுவது போன்ற படம் இணையத்தில் இருக்கிறதா? எனவும் பார்த்துக் கூறினால் நன்றியுடையவனாவேன்.
> On Wednesday, October 21, 2015 at 10:45:04 PM UTC+5:30, தேமொழி wrote:
>>
>> On Wednesday, October 21, 2015 at 8:51:53 AM UTC-7, kalai wrote:
>>>
>>>
>>> சங்கப்புலவரின் பாடல் வரிகளை ஆராயும்போது, உரையாசிரியர் பெருமழைப்புலவர் கூறும் விளக்கங்கத்தில்
>>>
>>> 1) தண்ணீர் தடாகத்தில் உள்ள தாமரையில் தேனீக்கள் தேன் எடுக்குமா?
>>> 2)தேனீக்கள் ஒரு மலரை மறைக்கும் அளவிற்கு ஒருகுழுவாகக் கூடிச் சென்று தேன் எடுக்கும் இயல்புடையனவையா? எனவும் அறிய வேண்டியுள்ளது
>>
>>
அப்படியே நேரம் கிடைத்தால், தேன்சிட்டு தாமரையில் தேன் உண்ணுவது போன்ற படம் இணையத்தில் இருக்கிறதா? எனவும் பார்த்துக் கூறினால் நன்றியுடையவனாவேன்.
மேலும் இரண்டு படங்கள் கீழ் காணும் சுட்டிகளில்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையான படம்.
என் பொருட்டு இணையத்தில் புயலாய்த் தேடித் தேன்சிட்டுப் படம் எடுத்துப் போட்ட தேமொழியாருக்கு நன்றி பல.
வணக்கம் ஐயா.
On 22-Oct-2015 9:59 am, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> மிக்க நன்றி அம்மணி!
> தாங்கள் கொடுத்துள்ள இரண்டு சுட்டிகளுள் முதலாவது A 1. மலர்ந்தும் மலராத பாதி மலராய் நிற்கும் சங்கப் புலவரின் முகிழ் விரி நாள் போது அதுதான். அதுமட்டும் வெள்ளைத்தாமரையாய் அமைந்திருந்தால் SUPER -ஆக இருந்திருக்கும். பார்க்காமலா பாடியிருக்கிறார்கள் சங்கப் புலவர்கள்? தேன் குடிக்கும் பறைவையினத்தில் மிகப்பெரியது இந்தத் தேன்சிட்டுதான் என நினைக்கிறேன். இது எப்படி மதி சேர் அரவைப் போல் மலரை மறைக்கும்? Partial eclipse கூட முடியாதே!!!
> ப.பாண்டியராஜா
ஆமாம் ஐயா.
மலரும் தாமரை மொட்டை மறைக்கும் அளவிற்குத் தேன்சிட்டு பெரியதல்ல என்றே கருதுகிறேன்.
>
>
> On Thursday, October 22, 2015 at 9:06:26 AM UTC+5:30, தேமொழி wrote:
>>
>>
>>
>> On Wednesday, October 21, 2015 at 8:10:29 PM UTC-7, kalai wrote:
>>>
>>> அப்படியே நேரம் கிடைத்தால், தேன்சிட்டு தாமரையில் தேன் உண்ணுவது போன்ற படம் இணையத்தில் இருக்கிறதா? எனவும் பார்த்துக் கூறினால் நன்றியுடையவனாவேன்.
>>
அன்புடையீர்,இன்றைய (18.10.2015 ஞாயிறு) தினமணி நாளிதழின் நடுப்பக்கத்தில் தமிழ்மணி பகுதியில் மதி சேர் அரவு என்ற தலைப்பிட்ட என் கட்டுரை வெளியாகியிருக்கிறது. வெகுநாட்களுக்கு முன்னர் நான் எழுதி அனுப்பிய கட்டுரை இது. ஓரளவுக்கு நறுக்கப்பட்டிருந்தாலும் பொருள் சிதைப்போ, தொடர்ச்சியின்மையோ ஏற்படாவண்ணம் மிகவும் திறமையாக, அவர்களின் இட அளவுக்கேற்ற வகையில் குறைக்கப்பட்டிருக்கிறது.இதனை இங்கு பார்க்கலாம்:(இதை Ctrl + Click செய்யும்போது இதனடியில் Go to link : என்று முகவரி தோன்றுகிறது. அதனைத் தட்டுங்கள்)ஆகஸ்ட்டு, செப்டம்பரில் 'மருத்துவ விடுப்பில்' இருந்தேன். சற்றே தேறி வரும்போது அக்டோபரில் 15 நாள் இடைவெளியில் இரண்டு அடுத்தடுத்த பெரிய அதிர்ச்சிகள். இந்த அதிர்வலைகளின் சுனாமித் தாக்கத்தினால் மனத்தில் ஏற்பட்ட பெரும் நாசம் மாறி, இயல்புநிலை அடையப் பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்தக் கட்டுரை வந்து கொஞ்சம் மயிலிறகாய்த் தடவிவிட்டிருக்கிறது.இந்தச் சுட்டியின்மூலம் கிடைக்காவிட்டால், google Search - இல் மதி சேர் அரவு என்று தட்டிப் பாருங்கள்.
முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே வெளியிடுகிறேன்.மிக்க நன்றி,அன்புடன்,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கேளாய் எல்ல தோழி வேலன் வெறி அயர் களத்து சிறு பல தாஅய விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின் உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் சிறு புன் மாலையும் உள்ளார் - அகம் -114
On 22-Oct-2015 7:45 pm, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
> கதிரவன் வேறு, திங்கள் வேறு என்று அறிவோம்.
>
> ஆனால், கீழ்க்காணும் பாடலில் கதிரவனைத் திங்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர்.
>
> கேளாய் எல்ல தோழி வேலன்
> வெறி அயர் களத்து சிறு பல தாஅய
> விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
> உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
செந் நிறத்தில் தோன்றும்,
இதைப் போன்றே
> அரவு நுங்கு மதியும் ஐயென மறையும்
போது செந் நிறத்தில் தோன்றும்.
On 22-Oct-2015 9:10 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
>
> On 22-Oct-2015 7:45 pm, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
> >
> > கதிரவன் வேறு, திங்கள் வேறு என்று அறிவோம்.
> >
> > ஆனால், கீழ்க்காணும் பாடலில் கதிரவனைத் திங்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர்.
> >
> > கேளாய் எல்ல தோழி வேலன்
> > வெறி அயர் களத்து சிறு பல தாஅய
> > விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
> > உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
> செந் நிறத்தில் தோன்றும்,
>
> இதைப் போன்றே
> > அரவு நுங்கு மதியும் ஐயென மறையும்
> போது செந் நிறத்தில் தோன்றும்.
>
> >
> > கரியமலையின் பின்னால் சென்று மாலைவேளையில் மறையும் கதிரவனை, கருமேகம் மறைக்கின்ற வெண்ணிலவுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதைக் காணுங்கள்.
கருமேகம் மறைத்த வெண்ணிலவு செந்நிறமாகத் தோன்றாது!
//சந்திர கிரகணம் நடப்பது பெரும்பாலும் முழுநிலா நாளன்று பின்னிரவு வேளையில் தான் அதாவது இரவு 10 மணிக்கு மேல்தான் துவங்கும். //
Is it possible to observe a lunar eclipse during daylight? Normally not. During an eclipse the sun and the moon are pretty much exactly opposite. So if one is above the horizon, the other must be below the horizon. So both can not be visible at the same time. One could say the body of the earth blocks the view.
Only under very special circumstances can both object be visible when they are opposite to each other. At this time for example both touch the horizon at the same time. One rises when the other sets. Then comes our atmosphere. Refraction apparently lifts objects a bit higher. The more the closer the object is to the horizon. At the time of sunset the solar disk is lifted about 30arc minutes (about it's own diameter). Also if one observes from a very high mountain the apparent horizon is somewhat lower as we observe a bit around the curvature of the earth.
These conditions came together on August 16 1989 when a lunar eclipse happened where the moon passes through the shadow cast into space by the earth. During the partial phase of the eclipse the moon was rising as seen from the top of Mauna Kea on the island of Hawaii. The mountain has an altitude of 4200m and give the impression of rather standing on the edge of the earth than on the surface.
The following images show the setting sun and the rising partially eclipsed moon. On the image showing the moon the sun light on the cloud tops can be seen. Also very impressive is the shadow of the mountain acting as a pointer to show the opposite direction of the setting sun.


ஒரு அரிசோனன்
![]() |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இச் சுட்டியில் வருகின்ற இரண்டாவது விழியக் காட்சியினை நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், சந்திரனைப் பாம்பு ஒன்று விழுங்கி உமிழ்வதைப் போலவா இருக்கிறது?.ஐயா,இதோ ஒரு சந்திர கிரகணத்தின் விழியக் காட்சியின் சுட்டி.
http://www.ibnlive.com/news/tech/for-the-first-time-in-33-years-supermoon-lunar-eclipse-on-september-27-28-1106534.html
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் பார்த்ததில்லை இதுவரை. :)))பொதுவாகவே, சந்திர கிரகணம் இப்படித் தான் பார்ப்பதற்குத் தோன்றும் என்று நினைக்கிறேன்.
பின்னிரவு வேளையில் அதாவது இரவு 10 மணிக்கு மேல்" விழிக்கும் வழக்கம் இல்லையா? :-)
அன்புள்ள சரவணன்!சந்திரகிரகணத்தைப் பற்றி நான் அத்துணை விலாவாரியாகச் சொல்லியும் இப்படிக் கூறியிருக்கிறீர்கள்;"பகலில் சந்திர கிரகணம் நடப்பதைக் காண்பது அரிதினும் அரிதான ஒன்று."பூமியின் பகல்பகுதியில் சந்திரகிரகணம் தெரியாது. ஆங்கிலக் கட்டுரையும் இதைத்தான் சொல்லுகிறது. நான் கரடியாய்க் கத்தியும் தங்கள் காதில் சரியாய் விழமாட்டேன் என்கிறது
2015-10-23 18:47 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:அன்புள்ள சரவணன்!சந்திரகிரகணத்தைப் பற்றி நான் அத்துணை விலாவாரியாகச் சொல்லியும் இப்படிக் கூறியிருக்கிறீர்கள்;"பகலில் சந்திர கிரகணம் நடப்பதைக் காண்பது அரிதினும் அரிதான ஒன்று."பூமியின் பகல்பகுதியில் சந்திரகிரகணம் தெரியாது. ஆங்கிலக் கட்டுரையும் இதைத்தான் சொல்லுகிறது. நான் கரடியாய்க் கத்தியும் தங்கள் காதில் சரியாய் விழமாட்டேன் என்கிறதுஐயாஎனது எழுத்துக்கள் உங்களை வருத்தியிருந்தால் பொறுத்தருள்க.ஆனால், நான் சொல்லும் கருத்தையே நீங்களும் ஏன் சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.பூமியில் மேல்பகுதியில் பகல் நேரத்தில் சந்திர கிரகணம் தெரியாது என்றுதானே நானும் சொல்கிறேன்.ஆனால், நீங்கள் எனது கேள்விக்குப் பதிலளிக்காமல் ஏன் சினம் அடைகிறீர்கள் என்றுதான் புரியவில்லை.கண்ணுக்குத் தெரியாத மக்களால் எளிதில் பார்க்க இயலாத ஒரு சந்திர கிரகணத்தைப் பற்றிப் புலவன் எப்படி பாடமுடியும்?. சொல்லுங்கள்.
--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !கடமையைச் செய் ! - அதையும்உடனடியாய்ச் செய் !----------------------------------------------------------------
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//நான் கூறவந்த கருத்தினை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. //
//இப்போதுதான் அரிசோனன் ஐயாவிற்கு பதில் கூறினேன். அதில், பகலில் சந்திர கிரகணம் நடப்பதைக் காண்பது அரிதினும் அரிதான ஒன்று. இதற்கு அவர் கொடுத்த சுட்டியிலேயே சான்று உள்ளது. இப்படிக் கண்ணால் காணவே இயலாத ஒன்றைப் பற்றித் தானா புலவர்கள் உவமையாகக் கூறுவார்கள்?. //
//சந்திர கிரகணம் பார்ப்பதற்கு பாம்பு விழுங்குவதைப் போல உங்களுக்குத் தெரிகிறதா? என்றுதான் கேட்டேன். //
//படிக்காதவர்களின் கூற்று எனக்குத் தேவையில்லை. நீங்கள் படித்த அறிஞர் என்பதால், உங்கள் கருத்தினை அறிந்துகொள்ளவே கேட்டேன் ஐயா. எப் பக்கமும் சாயாமல், நடுநிலையாகத் திறந்த மனதுடன் கூறுங்கள் ஐயா. அவர்கள் சொன்னார்கள், அதைத்தான் நான் சொன்னேன் என்று தயவுசெய்து கூறாதீர்கள். //
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளற்பெரும்பசுக்கள் "
//"வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளற்பெரும்பசுக்கள் "//
திருத்தியமைக்கு நன்றி, மலர்விழிமங்கை அவர்களே!