மூளைக்குள் சூரியன் கொண்டவர் பாரதி

14 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 11, 2025, 6:03:06 PM (3 days ago) Dec 11
to மின்தமிழ்

ஒரு மகாகவி ஜனிப்பது
சதைவழிப்பட்ட
புழைவழியல்ல
காலம்
தன்னை யுகம்செய்துகொள்ள
ஒருவனைத்
தட்டித் தட்டித் தயாரிக்கிறது
அவனை
வறுமையால் ஆசீர்வதிக்கிறது
சனாதனத்தின்மீது மீசைவைக்கிறது
நூற்றாண்டுப் புழுக்கத்தில்
நுரையீரைலைப் பட்டினியிடுகிறது
சாப்பாட்டைப் பறித்து
சாம்ராஜ்யத்தோடு
சண்டையிடச் செய்கிறது
முக்காலம் இருள்செய்து
மூளைக்குள் சூரியன் வைக்கிறது
ராஜசபைகளில் மொழிபயிற்றிப்
பாமரவெளியில் பாடச்செய்கிறது
ஏதேனுமொரு தீயில்
இட்டு இட்டுச்
சுட்டுச் சுட்டுத்
தங்கம்தான் என்று
சான்றளிக்கிறது
தெருவைத் திரட்டி
அவமதிக்கச் செய்கிறது
தேசத்தையே கூட்டி
அஞ்சலிக்கச் சொல்கிறது
ஆயுளைப் பறிக்கிறது
புகழைத் திணிக்கிறது
மண்ணுக்குள் புதைத்து
மகாகவி ஆக்குகிறது
அவன்
அக்கிரகாரத்தான் என்றுசிலர்
அலட்சியம் செய்யாதீர்;
சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று
சகலரும் கொண்டாடுவீர்
வாழ்க பாரதி!

Reply all
Reply to author
Forward
0 new messages