வாலறிவன்

278 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 14, 2017, 2:16:00 AM9/14/17
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran

தனது இறைவனை  வாலறிவன் என்று புகழ்கிறார் திருவள்ளுவர்.

தூய்மையான ஞானம் பெற்றவன் - கேவல ஞானம் என்பது சமண சமயம்.
அதனைச் சொல்கிறார்.

வாலறிவன், அறிவன் என்று வரும் சைவப் பாடல்கள் உண்டா? எந்த நூற்றாண்டு?

யாப்பருங்கல விருத்தி மேற்கோள்:

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி                  [அசை]
     மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை                    [சீர்]
     முக்குடை நீழற் பொற்புடை ஆசனம்
     ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
     ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை                    [அடி]
     அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
     துன்னிய மாந்தரஃ தென்ப                             [எழுத்து]

     பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே’.1 


திருந்தொளி அறிவன் = தூய்தான அறிவன் = வாலறிவன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 14, 2017, 2:25:03 AM9/14/17
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran

வள்ளுவரும் இறைவாழ்த்தும்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு

நான் உங்கள் வாசகன் நீங்கள் இன்று எழுதிய கட்டுரை வாசித்தேன் அப்போது என் நண்பர்களுடன் ஒரு சிறிய உரையாடலில் திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் விவாதம் எழுந்தது அதில் ஒரு நண்பர் திருவள்ளுவர் முதலில் எழுதியது கடவுள் வாழ்த்து அல்ல என்று கூறினார் நான் தேடிய வரையில் எந்த தெளிவும் பிறக்கவில்லை தங்கள் இதற்குரிய தெளிவினை தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

 

அன்புடன்,

பே.ஜதுர்சனன்

 

அன்புள்ள ஜதுர்சனன் அவர்களுக்கு

 

இதுவரை கேட்காத பெயர். நீங்கள் ஜைனரா?

நான் பள்ளியில் படிக்கும் காலகட்டத்திலேயே  இந்த விவாதம் நடந்து ஓரளவு முடிவுக்கு வந்துவிட்டது. என் வகுப்புகளில் அன்றைய தமிழாசிரியர்கள் இதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்

தமிழ்ப் பதிப்பியக்கமும், சைவமறுமலர்ச்சி இயக்கமும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நூறாண்டுகளுக்கு முன் தொடங்கியவை.  அன்று திருக்குறளை ஒரு சைவநூல் என நிறுவும் பல்வேறு உரைகள் எழுந்தன. கா.சு.பிள்ளை எழுதிய உரைவிளக்கநூல் அதில் முதன்மையானது

அதன்பின் ஐம்பதுகளில் திருக்குறளை மதச்சார்பற்ற தமிழ்ப்பொதுமறையாக நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடங்கின. அன்றைய தமிழியக்கம், திராவிட இயக்கத்தின் பண்பாட்டுப்பணிகளில் முக்கியமானது இது. பல்வேறு உரைகள் வழியாக இது நடந்தது. முதன்மையான உரை மு.வரதராசனாருடையது. மிகப்பிரபலமானதும் அதுவே

இருசாராருக்குமே சிக்கலாக இருந்தது திருக்குறளின் கடவுள்வாழ்த்து அதிகாரம்தான். சைவர்களுக்கு அதிலுள்ள இறைவிளக்கம் அவர்களின் சைவ மரபுசார்ந்த விளக்கங்களுடன் பொருந்தாததாக இருந்தது. ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், பொறிவாயில் ஐந்தவித்தான், வாலறிவன் போன்ற சொல்லாட்சிகள் சமணத்தின் அருகர்களுக்குப் பொருந்துபவை. அவற்றை சைவத்துக்குள் கொண்டு வைக்க மிகப்பெரிய சொல்திரிப்பும் கருத்துவளைப்பும் தேவைப்பட்டது.

அதேபோல மதச்சார்பின்மைவாதிகளுக்கும் அந்த அதிகாரத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்கள் இரண்டு வாதங்களை முன்வைத்தார்கள். ஒன்று குறளின் பிற அத்தியாயங்களில் எங்கும் வாழ்க்கையின் சிக்கல்களுக்குத் தீர்வாக இறைவழி சொல்லப்படவில்லை. ஊழுக்கு அளிக்கப்பட்ட இடம் கூட கடவுளுக்கு அளிக்கப்படவில்லைஆகவே கடவுள்வாழ்த்துப் பகுதி பின்னர் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்

இரண்டாவது வாதம், தேவநேயப் பாவாணர் வழிவந்தது. அவர் சொற்திரிப்புக்கு உலகளவில் நிகரற்றவர். ஆதிபகவன் முதலிய அனைத்துச் சொற்களையும் இலக்கணநெறிகளைக்கூட மீறி விருப்ப்படி பிரித்து எந்த விதப் பண்பாட்டுக்குறிப்புகளும் இல்லாமல் பொருள்கொண்டு அவை குறிப்பிடுவது இறைவனையே அல்ல என்றும் தொல்தமிழ் மூத்தார்வழிபாட்டை மட்டும்தான் என்றும் அவர் சொன்னார்.

உண்மை என்ன? நமக்கு திருக்குறள் எப்போது கிடைக்கிறதோ அப்போதே இறைவாழ்த்துடன் 1330 குறள்களுடன்தான் உள்ளது. அதன் எண்ணிக்கை பல இடங்களில் சொல்லப்பட்டிருப்பதனால் அந்நூலின் அமைப்பு எளிதில் மாற்றப்படக்கூடியது அல்ல.

தமிழ்நூல்களில் சமண பௌத்தப் பின்புலம் கொண்ட நூல்களில் இடைச்செருகல்களும் பாடபேதங்களும் குறைவு. சமண பௌத்த மதங்கள் விரிவான எழுத்துமரபும் கல்விப்புலமும் கொண்டவை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். சமண பௌத்த மதங்களின் சரிவுடன் அவையும் மறக்கப்பட்டு நீண்டநாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம்.

கம்பராமாயணம் போன்றவற்றிலுள்ள இடைச்செருகல்கள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தாலும் மதம்சார்ந்த முக்கியத்துவத்தாலும் உருவானவை. காப்பியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்ற சமண பௌத்த நூல்களிலேயே குறள் தூயபிரதியாகவே நமக்குக் கிடைத்தது.

ஆகவே இறைவாழ்த்தை வள்ளுவர் எழுதவில்லை, இறைவாழ்த்தை அவர் பின்னால் எழுதியிருக்கலாம் என்று சொல்வதற்கு மிகச்சிறிய ஆதாரத்தைக்கூட நாம் இன்று கண்டடைய முடிவதில்லை

திருக்குறள் கிபி நான்காம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம். 1500 ஆண்டுகள் பழைமை கொண்ட ஒரு பிரதியைப்பற்றி அப்படி ஆதாரபூர்வமாக ஏதும் சொல்லிவிடமுடியாது. அத்துடன் தமிழில் நமக்கு தெளிவாக வரலாறுகளைப் பேணும் வழக்கமும் இல்லை.

திருக்குறளை மட்டும் வைத்துக்கொண்டு இத்தகைய ஊகங்களை நிகழ்த்துவதெல்லாம் வெறும் தர்க்கவிளையாட்டு. எல்லா பழைய நூல்களும் அவ்வாறு சமகாலத்தில் வாசித்து அர்த்தப்படுத்தப்படுகின்றன. பல்வேறு கோணங்களில் வாசிப்பு நிகழ்கிறது. அவற்றுக்கிடையேயான ஒரு சமரசமாக அந்நூலுக்கான பொதுவாசிப்பு திரண்டு வருகிறது. இது முடிவடையாது நடந்துகொண்டே இருக்கும் ஒரு செயல்பாடு.

பொதுவாக மூலநூல்களை ஒவ்வொரு தரப்பும் தங்கள் நோக்குக்கு இழுக்க முயல்வது எங்கும் நிகழ்வதுதான். இந்திய மரபில் நமக்கு இவ்வாறு உரைகள் வழியாக மூலநூல்களை வளைத்துக்கொள்வது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிந்தனைமுறையாகவே உள்ளது. பிரம்மசூத்திரமோ கீதையோ தலைமுறை தலைமுறையாக வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகளால் வெவ்வேறுவகையில் உரைவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. அதுவே குறள்சார்ந்தும் தொடர்கிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்

ஜெ

வள்ளுவரும் அமணமும்
குறள் – கவிதையும், நீதியும்.
குறளறம்
இந்திய சிந்தனை மரபில் குறள்.1
இந்திய சிந்தனை மரபில் குறள் 2

இந்திய சிந்தனை மரபில் குறள் 3
இந்திய சிந்தனை மரபில் குறள் 4
இந்திய சிந்தனை மரபில் குறள் 5

nkantan r

unread,
Sep 14, 2017, 2:38:52 AM9/14/17
to மின்தமிழ்
Sorry for reply in English .

I remember my science teacher now who kindled whatever little interest i have in tamil literature. He explained the meaning of வால்.

He used to tell the exact meaning is pure and all dictionaries would show தூய்மை, சுத்தமான. His contention was that these words represent a 'cleansing' act (துவைத்தல், சுத்தம் செய்தல்..) Whereas the word வால் really means naturally blemishless.

He used to quote some puranaanuru poems. I would check and revert.

Thanks for reminding my teacher today.

rnk

Jalasayanan

unread,
Sep 14, 2017, 7:35:07 AM9/14/17
to vall...@googlegroups.com, மின்தமிழ், Banukumar Rajendran

தீர்த்தங்கர்களை பணிந்தாலே மோக்ஷம் என்பது சமணக்கொள்கையா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Banukumar Rajendran

unread,
Sep 17, 2017, 2:41:24 AM9/17/17
to மின்தமிழ்

வாலறிவன்



பிறவியும் ஞானமும்



உயிர்கள் தத்தம் ஊழ்வினைப் பயனால் எண்ணற்ற ஆண்டுகள், பல பலப் பிறவிகளில்(1) உழன்று, பின் தன் நன்முயற்சியால் அவ்வினைகளை உதிர்த்து வீடு பேறு அடைகின்றன. அவ்வுயிர்கள் தன் வினைக் கட்டுகளிலிருந்து விடுபட்டு, வரம்பற்ற ஞானத்தில் திளைக்க, வழிக்காண முயன்றவர்கள் தான் தீர்த்தங்கரர்கள். "தீர்த்தங்கரர்" என்றால் கடலைக் கடக்க உதவுபவர்கள் என்று பொருள். அஃதாவது, பிறவி என்னும் கடலைக் கடக்க தெப்பமாக(2) /புணையாகவிருந்து உதவுபவர்கள். இவர்களையே சமணர்கள் தங்கள் கடவுளாகக் போற்றி வணங்கி வருகிறார்கள். இவர்களே தொழத்தக்கவர்கள் ஆவர்.


குணஸ்தானப் படிகள்

வீடுபேறு என்பது நாம் விரும்பிய உடனே கிடைக்கக்கூடியதல்ல. உயிர் வீடுபேறு அடைய வேண்டுமானால் தன் வினைக்கட்டுகளிலிருந்து விடுபடவேண்டும். அப்படிவிடுபட்ட உயிரே வீடு நிலை எய்தி வரம்பற்ற ஞானத்தில்(3) திளைக்க முடியும் என்பது சமணரின் கோட்பாடாகும்.

உயிர்கள் எண்ணற்ற பிறவிகளில் உழன்று, தன் முயற்சியில் தாழாது, படிப்படியாக தான், அந்த வரம்பற்ற முழுதுணர் ஞானத்தை பெற முடியுமேயன்றி, வேறு "சக்தி"(4)யுடைய உந்துதலாலேயோ, துணையாலேயோ வீடுபேறு அடைய முடியாது.

உயிர்கள் மும்மணிகளான, "நற்காட்சி", "நல்ஞானம்","நல்லொழுக்கம்", என்னும் மூன்று மணிகளைப் பற்றி படிப்படியாகத் தான் வீடுபேறு அடைய முடியும். உயிர் படிப்படியாக முன்னேறுவதை, சமணத்தில் "குணஸ்தானம்" என்பார்கள்.

ஞானம் அல்லது அறிவு

சமண கொள்கைப்படி ஞானம் (அறிவு) ஐந்து வகைப்படும்.

1. மதி ஞானம் - இயற்கையான அறிவு அல்லது ஐம்பொறியினால் அறியும் அறிவு.

2. சுருத ஞானம் - ஆகம அறிவு அல்லது நூற்களால் ஏற்படும் அறிவு.

3. அவதி ஞானம் - முற்பிறவிகளை அறியும் அறிவு.

4. மனப்பர்யாய ஞானம் - பிறர் மனதில் உள்ளதை அறியும் அறிவு.

5. கேவல ஞானம் - முழுதுணர் ஞானம் அல்லது மூன்று உலகங்களையும், மூன்றுக் காலங்களையும் ஒருங்கே அறியும் அறிவு.


குணஸ்தானத்தில் கடைசி நிலை "தீர்த்தங்கர" நிலை. இக்கடைசி நிலையடைந்த உயிரே கேவல ஞானம் பெற்று திகழ முடியும். இந்த கேவல ஞானத்தை அடைந்தவர்களையே "தீர்த்தங்கரர்கள்" என்று போற்றப் படுகிறார்கள். இவர்களே சமணர்கள் வழிப்படும் கடவுளர்களாம். ஈங்கு ஒன்றை நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும். எந்த உயிரும், முயன்றால், "தீர்த்தங்கரர்" நிலை எய்த முடியும். அஃதாவது "கடவுளாகவே" ஆக முடியும். ”முடியும்” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டாலும், பிறவி என்னும் கடலைக் கடக்க, பிறவிகள் கோடானகோடி பிறவிகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஈண்டு நினைவில் வைத்தல்வேண்டும். இந்த இடத்தில்தான் சமணம் மற்ற சமயங்களில் இருந்து மிகவும் வேறுபடுகிறது. ஏனைய சமயங்கள் உயிர்கள் கடவுளை அடைவதைத்தான் வீடுபேறு என்று சாற்றுகின்றன.



கேவல ஞானம் 

பிராகிருத (பாகதம்) பெயரான "கேவல ஞானம்" என்பதற்கு தமிழில் "கடையிலா அறிவு","அறிவுவரம்பற்ற", "முழுதுணர் ஞானம்", "வினையின் நீங்கி விளங்கிய அறிவு", அலகிலா அறிவு", "முற்றறிவு", ”தூய அறிவு” என்று பொருள்.

இக்கேவல ஞானத்தையே திருக்குறள் ஆசிரியர் தேவர், "வாலறிவன்" என்று போற்றி புகழ்கிறார். அந்த குறள் இதுதான்.


"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்" - திருக்குறள்



வாலறிவன் = வால்+அறிவன். "வால்"(5) என்பதற்கு "Greatness, Abandance,Purity, Last" என்று ஆங்கிலத்தில் பொருள் வரும். வாலறிவு என்பதற்கு "முழுதுணர்ந்த அறிவு" என்றும் "முற்றும் உணர்ந்த அறிவு" என்றும் "கடையிலா அறிவு" என்றும் தூய அறிவு என்றும் பொருள் படும். அவ்வாறே, வாலறிவன் என்பதற்கு கடையிலா ஞானத்தை உடையவன் எனவும், முழுதுணர்ந்த அறிவன் எனவும், அறிவுவரம்பு உடையவன் எனவும் பொருள் படும். வாலறிவு என்பதற்கு "மெய்யுணர்வு" என்று ஈங்கு பொருள் கொள்வது பொருந்தாது!



சமண இலக்கியத்தி வாலறிவு


வாலறிவு என்ற சொற்றொடரை எடுத்தாளும் சமண இலக்கியங்களையும் இங்கு பார்ப்போம்!



1. கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்

2. இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை

3. அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்

4. உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி

5. பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச் 
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத் 
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள 
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157) 

இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் கொடுக்கமுடியும் விரிவஞ்சி இங்குக் கொடுக்கப்படவில்லை!


அறம் மறவற்க!
அறமல்லது துணையில்லை!!


இரா.பானுகுமார்,
சென்னை.



குறிப்புகள்:

1. "தொல்லை நம்பிறவி எண்ணின்
தொடுகடல் மணலும் ஆற்றா எல்லைய" - சீவக சிந்தாமணி

2. "ஆழ்கடற் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்" - சீவக சிந்தாமணி

3. "அறிவன், அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்" - சிலப்பதிகாரம்

4. "தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூகி தரும்" - திருக்குறள்

5. தமிழ் அகராதி
========================================

N. Ganesan

unread,
Sep 17, 2017, 10:52:45 AM9/17/17
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran
நன்றி, பானுகுமார். இந்த வலைக்கண் பதிவை அறிவேன். அதில் இல்லாத வாலறிவன் பாடல்கள் சில காட்டவே இந்த இழையைத் தொடங்கினேன்.
ஸ்ரீ. ஜலஸயநன் போன்றோருக்கு உதவும் என நம்புகிறேன். 

சலசயனன் திருக்குறள் கடவுள்வாழ்த்தை தாண்டிவிட்டால் திருக்குறள் சமணர் இயற்றியது என்பது கடினம் என்கிறார். எல்லோருக்குமாக எழுதியது
குறள். பொதுமறை. பெ. சுந்தரனார் தமிழ்த்தாய்வாழ்த்திலும் குறிப்பிடுகிறாரே.

ஆனால், ஒரு பத்துப், பன்னிரண்டு குறள்கள் திருக்குறளின் உள்ளேயும் இருக்கின்றன. அவற்றுக்கு உரைகண்டு ஒருநூல் வெளியிட ஆவல். பார்ப்போம்.

சலசயனன் கடவுள் வாழ்த்து என்பதை முதல் நான்கு அதிகாரம் என்று சொல்லலாம். சைவர்களுக்கு சிக்கல் அளித்தது இந்த முதல் நான்கு
அதிகாரங்கள். வ.உ.சி. போன்றோருக்கு.

இலங்கை தேசிய கீதம் பற்றிய வரலாறு ஒன்று நினைவுக்கு வருகிறது. நல்லதம்பிப் புலவர் தமிழில் மொழிபெயர்த்து அதுவும்
தேசியகீதமாக ஏற்கப்பட்டது. சமரக்கோன் தாகூரின் மாணவர். தாகூரால் தான் இலங்கை தேசிய கீதம் உருவானது. மாணவர் ஸமரகோன்.
ந்யுமராலஜி போன்ற மூடநம்பிக்கைகளில் ஆர்வம்கொண்ட சிங்கள அரசியல்வாதிகள் முதல்வரியை மாற்றினர். ஸ்ரீலங்கா என்று சேர்த்தனர்.
ஆனால், சமரக்கோன் இறுதிவரை சம்மதிக்கவே இல்லை. தாகூர்-தன்னுடைய பாடலை தலையைவெட்டக் கூடாது என்றார்.

அதுபோல, திருக்குறளின் தலை. தலைமையான முதல் நான்கு அதிகாரங்கள் அவர் சமணர் என்று அறிவிப்பவை. இதை திருவள்ளுவர் சமயம்
எது என்று எழுதுவோர் கருத்தில் கொள்ளவேண்டும்.

பிற பின்,
நா. கணேசன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Sep 17, 2017, 11:27:05 AM9/17/17
to மின்தமிழ்
கண்ணதாசன் பேசியது:

https://youtube.com/watch?v=REvikRsEqws

rnk

வேந்தன் அரசு

unread,
Sep 17, 2017, 8:38:11 PM9/17/17
to vallamai, மின்தமிழ், Banukumar Rajendran
நல்தாள் = நல்த்தாள்= நற்றாள்

17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:22 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N D Logasundaram

unread,
Sep 20, 2017, 6:09:06 AM9/20/17
to vallamai, mintamil, thamizayam, தமிழ் மன்றம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, muthum...@gmail.com, Seshadri Sridharan, ara...@gmail.com, Vasudevan Letchumanan, SivaKumar, Raji M
அன்பின் 
திரு பானுகுமார் அவர்களுக்கு 

பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய் - தழைகாதல்
வாலறிவன் ஆக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந்து அணைந்து.                 (23)

இப்பாடலில் வாலறிவன் எனும் சொல் பயன்பாடு உள்ளது 

இஃ து இன்னிலை எனும் நூலினை சார்ந்தது 

இது மதுரைத்திட்டத்தில் உள்ளது எனினும் இங்கேயே உங்களுக்கு 
எளிதில்கிட்ட  இணைப்பில் வைத்துள்ளேன் (மற்றவர்க்கும் பயன்) 
 
இதனில் 45 பாடல்களே இருந்தாலும் பாரதம் பாடிய பெருந்தேவனாரின் இணைப்பாகும் கடவுள் வாழ்த்துப்பாடலும் முதல்  பாடலாக பெற்றுள்ளது (%%) 
எனினும் பாடல்களின் பொருள் நோக்கு நடை மகடூஉ முன்னிலை இவற்றினைக்
காண 18 கீழ் கணக்கு நூல்களின் காலத்தினது ஆகலாம் என கொள்ளத்தக்கதே.
 மேலும்
 1 அறப்பால் 2 பொருட்பால் 3 இன்பத்துப்பால் 4 வீட்டுப்பால் = இல்லியால் / துறவியல்
 எனும் தலைப்புகளுடன் காண்கின்றமையும் நூலினுள் பல சொல்லாட்சி பொருளாட்சி நோக்க திருக்குறளையே சார்ந்து எழுந்தது எனலாம் 

புல்லங்காடனாரின் கைந்நிலை  என்பதுதான் 18 கீழ்க்கணக்கு நூல் களில் கா ட்டப்
படுவது. அதனுடன் ஓலைச் சுவடிகளில் இன்னிலையும் இணைந்து வந்துள்ளது அதற்கு ஓக்க அறம் பாடும் ஓர் சிறந்த நூலென்று வைக்கலாம் என ஓலைச்சுவடி பேணுபவர் கொண்டனர் போலும் 
-------------------------------------------------
(%%) கடவுள் வாழ்ந்துகொண்டு  இந்நூல்
 சைவம் சார்ந்தது என மறை முகமாக
காட்ட நினைக்கவில்லை அய்யா)
பெருந்தேவனாரின் கடவுள்வாழ்த்து இத்தகையது  
குறுந்தொகை முருகன் 
நற்றிணை       திருமால் 
 இன்னிலை      சிவன் 
புறநானூற்றின் முதல் பாடல் =ஆசிரியர் வேறு பெருந்தேவனார் 


--------------------------------------
இன்னிலை
ஆசிரியர் : பொய்கையார்

கடவுள் வாழ்த்து
0
வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத் தமரிய கொழுவேல்
கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்
கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே
             பாரதம் பாடிய பெருந்தேவனார்

                    1. அறப்பால்
அன்றமரில் சொற்ற அறவுரைவீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகைதேர்மின் - பொன்றா
அறமறிந்தோன் கண்ட அறம்பொருள்கேட்டு அல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு
1
பொருள்விழையார் போற்றார் உடல்நலன் நம்மை
அருள்விழையார் அஃதே முழுஎவ்வம் பாய்நீல்
இருள்இழையார் வீழ்வார்மேல் பாலஆக்கார் ஆம்ஆறு
அருள்இழையார் தாமும் அது
2
கோலப் புறவின் குரல்கூவிப் புள்சிமிழ்ந்தோன்
காலில் தளைபரப்பச் சீர்ஒலிக்கும் - மாலின்
வரிநிழல் தாம்எய்தார் தீப்பழுவத்து உய்ப்பர்
உரிமை இவண்ஒரா தார்
3
கழிவிரக்கங் கொள்ளார் கதழ்வாளார் வேர்த்துப்
பழிமுறுகக் கோடார் பயன்பேர்த்து - அழிமுதலை
இல்லம்கொண்டு ஆக்கார் இடும்பைத் தளைகணப்பா
நல்லறனை நாளணிகொள் வார்
4
திரைந்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல்
உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த
பயன்தவர் செய்வார் சிலரேதம் நெஞ்சத்து
இயன்றவா செய்வார் பலர்
5
அம்மை இழைத்த தலைப்பட்டு அழிவாயா
இம்மையும் கொண்டுறுத்தும் ஈர்ம்பெயலாம் - மும்மை
உணர்ந்தார் திருவத்தர் ஓரார் உழண்டைத்
தளைப்படுவர் தட்பம் தெறார்
6
தாம்ஈட்டு அருவினைகள் தண்டா உடம்புஒன்ற
நாம்மீட்டு ஒறுக்குஒணா ஞாங்கரடித் தீம்பால்
பிதுக்கப் பெயல்போல் பிறப்புஇறப்புப் போகா
கதுப்போடு இறுத்தல் கடன்
7
தூயசொல் லாட்டும் துணிவறிவும் துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும் - பூயல்
படுக்கும் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கும் மடிச்சேரா வாறு
8
கடன்முகந்து தீம்பெயலை ஊக்கும் எழிலி
மடனுடையார் கோதசுற்றி மாண்புறுத்தல் ஏமம்
படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு
9  மூன்று அடிகளில் அமைந்த சிந்தியல் வெண்பா

இடிப்பதென்று எண்ணி இமைவானைக் காயார்
முடிப்பர் உயிரெனினும் முன்னார் - கடிப்பக்
கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே நீண்மோத்தை
ஒன்ற உணராதார் ஊங்கு
10
உண்மையொராப் பித்தர் உடைமை மயக்கென்ப
வண்மையுற ஊக்கல் ஒருதலையே - கண்ணீர்
இருபாலும் தோன்றன்ன ஈர்க்கலார் போழ்வாள்
இருபால் இயங்கலினோடு ஒப்பு
11
உடைமையறாது ஈட்டல் உறுதுணையாம் யாண்டும்
உடைமையராச் சென்றக்கால் ஊரெல்லாம் சுற்றம்
உடைமைக்கோல் இன்றங்குச் சென்றக்கால் சுற்றம்
உடையவரும் வேறு படும்
12
மண்ணீர் உடையார் வழங்கிச் சிறுகாலைத்
தண்ணீரார் சாரும் நிலம்சார்வர் - உண்ணீர்
அறியின் அருஞ்செவிலி மாண்பொருளே வெண்ணீர்ச்
சிறியரையும் ஏர்ப்படுத்தும் செய்
13
மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூஒழுக்கும்
மெய்யா அளிக்கும் வெறுக்கையிலார் - வையத்துப்
பல்கிளையும் வாடப் பணையணைதோள் சேய்திரங்க
ஒல்குஉயிர்நீத்து ஆரும் நரகு
14
குருட்டாயன் நீள்கானம் கோடல் சிவணத்
தெருட்டாயம் காலத்தால் சேரான் - பொருட்டாகான்
நல்லறமும் பேணானாம் நாரமிவர்த் தானாம்
பொல்லாங்கு உறைவிடமாம் புல்
15
                        2 பொருட்பால்(??)
முப்பொருள் உண்மை தெளிவான் அருஞ்சீலன்
முப்பொருள் உண்மை உடையான் அருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பான் இறைஆங்கு
முப்பொருள் உண்மைக்கு இறை
16
கால்கலத்தால் சேர்பொருளும் கண்ணற்றார் தேர்பொருளும்
நாலிரண்டாற் கூடு நலப்பொருளும் - கோல்தாங்கிக்
கோடும் அரசிற்கு உரியாமே தொல்புவிக்கீழ்
ஆடும் பொருளோடு அணந்து
17
ஆம்போன் வினையான் அணைவுற்ற பேர்வெறுக்கை
ஓம்புஒம்பு எனமறை கூறத் தலைப்பெயல்என்
எம்போம் எனவரைதல் ஈட்டுநெறி தேராமை
சாம்போழ்து அலறும் தகைத்து
18
பட்டாங்குத் தூயர் பழிச்சற்கு உரியராய்
ஒட்டின்று உயர உலகத்தோர் - கட்டளை
யாம்வெறுக்கை யின்றி அமையாராம் மையாவின்
ஆம்வெறுக்கை நிற்க உடம்பு
19
                           3 இன்பப் பால்
அறங்கரை நாவானம் ஆய்மயிலார் சீர்இல்
லறங்கரையா நாப்பண் அடைவாம் - புறங்கரையாத்
திண்மை நிலையின் உயர்புலத்தில் சேர்வாம்ஈண்டு
எண்நிலைக்கு உய்வாய் இது
20
துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காதார் ஆகல் - புணைதழீஇக்
கூட்டுங் கடுமிகையான் கட்டியில் கொண்டற்றால்
வேட்டபோழ்து ஆகும் அணி
21
ஒப்பாவில் வேட்டோன் ஒருநிலைப்பட்டு ஆழ்ந்தசெயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிய -துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி யறிந்து
22
பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய் - தழைகாதல்
வாலறிவன் ஆக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந்து அணைந்து
23
அழக்குடம்பு யாத்தசீர் மெல்லியவை ஆணம்
முழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக் - குழீஇக்கூடல்
என்னே செறிகாமம் பூட்டும் இயல்மாரன்
மனஅரசால் மாண்பூப்பு உலகு
24
இன்ப இயல்ஓரார் யாணர் விழைகாமம்
பொன்னின் அணிமலரின் செல்விதாம் - தன்மேனி
முத்த முறுவல் முயக்குஒக்கின் அன்னத்தின்
பெற்றியரின் என்பேறும் பேறு
25
தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பையலர்
காவியன சேல்கண் குறுந்தொடியார் - ஆவிக்கு
இனியர் இணைசேரார் ஈர்ங்கண் மாஞாலத்
தனிமைக்கு அவரோர் கரி
26
காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின்
ஏம இருக்கையே தூந்திரையாம் - ஏமத்துஈண்டு
ஆம்பரலே தோன்றும் அளியூடல் ஆம்பரவில்
தெற்றித் தெறிப்பாம் ஒளிஒளிபாய் கண்ணேசீர்த்து
உற்றுகப்பாய்ப் பெற்ற மகவு
27
கறங்குபறை காணா வுறுவூனைக் காதல்
பிறங்கறை நாவாகும் அஃதே - திறம்இரங்கி
ஊடி உணர்வாரே தாமிசைவார் பல்காலம்
ஈடில தோர்இன்ப விருந்து
28
தோற்றாரே வெல்வர் துணைமிசைவார் கோட்டியானை
யேற்றுக் கழல்தொடியார் மிக்காரை யார்வரைவர்
போற்றளி கூடல் கரி
29
காதல் விரிநிலத்து ஆரா வகைகாணார்
சாதல்நன் றென்ப தகைமையோர் - காதலும்
ஆக்கி அளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே
நோக்கிலரை நோவ தெலன்
30
அளகும் அளிநாகைப் பேண அணியார்
அழகரிவை வீழ்முயக்கை அண்ணாத் - தனியாளர்
பெற்ற பிறத்தெறிந்து புத்தாய பெட்டுழலும்
பெற்றியர் பெட்ட கழுது
31
4 வீட்டுப் பால் / இல்லியல்
ஒத்த உரிமையனர் ஊடற்கு இனியளாக்
குற்றம் ஒருஉங் குணத்தளாக் சுற்றறிஞர்ப்
பேணும் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து
நாணும் தகையளாம் பெண்
32
மனைக்கொளிசேய் நாற்பணியோன் நாரப் புலக்கார்
விளக்கொளியாம் கட்காம் அனலி முனைக்குஅஞ்சா
வீரர் ஒளியா மடமே அரிவையார்க்காம்
ஏரொளியாம் இல்லுடையான் துப்பு
33
எய்ப்பில்லைப் பாக வருவாயில் ஐந்தொன்றை
மெய்ப்பிணி சேய்வரை வில் கூட்டிடுக - கைப்பொருள்வாய்
இட்டில்உய் வாய்இடுக்க வீங்க விழையற்க
வட்டல் மனைக்கிழவன் மாண்பு
34
ஐம்புலத்தோர் நல்குரவோர் ஓம்பித் தலைப்பட்ட
செம்பாக நன்மனையைப் பேணிக் - கடாவுய்த்த
பைம்புல் நிலைபேணி யூழ்ப்ப வடுஅடார்
ஐம்புலர்ஈர்த் தாரில் தலை
35
உள்ளவா சேறல் இயைபெனினும் போம்வாய
வெள்ளத்து அனசேறல் வேண்டல் - மனைக்கிழவன்
நள்அளவின் மிக்காய கால்தொழிலை ஓம்பலே
தெள்அறிஞர் கண்ட நெறி
36
ஐங்குரவர் ஓம்பல் இனல்நீக்கல் சேர்ந்தோர்க்குப்
பைங்கூடு களைகணாப் பார்த்தளித்தல் = நையுளத்தார்க்கு
உற்ற பரிவுஈர்த்தல் எண்ணான்கு அறநெறியில்
உத்த புரிதல் கடன்
37
நல்லினம் சாரல் நயணுணர்தல் பல்லாற்றான்
நல்லினம் ஓம்பல் பொறையாளல் - ஒல்லும்வாய்
இன்னார்க்கு இனிய புரிதல் நெறிநிற்றல்
நன்னாப்பண் உய்ப்பதோர் ஆறு
38
முனியான் அறம்மறங்கள் முக்குற்றம் பேணான்
கனிகாக்கும் ஒண்மை உறைப்படுத்தும் பண்போல்
பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரான் நடுக்கற்று
இனியனா வான்மற் றினி
39
            4 வீட்டுப் பால் / துறவியல்
முப்பாலை வீழ்வார் விலங்கார் செறும்பாவை
முப்பால் மயக்குஏழ் பிறப்பாகி - எப்பாலும்
மெய்ப்பொருள் தேறார் வெளிஒரார் யாண்டைக்கும்
பொய்ப்பாலை உய்வாய்ப் போந்து
40
உண்மைமால் ஈர்ந்து இருள்கடிந்து சார்ஐயம்
புண்விலங்கச் சார்பொருளைப் போற்றினோர் - நுண்ணுனர்நான்
அண்ணா நிலைப்படுவர் ஆற்றம் விழப்புலனை
ஒண்பொருட்டு ஊர்இயலைச் சார்ந்து
41
மாக்கல் வீறும் ஒளியன்ன நோன்புடையார்
மூசா இயற்கை நிலன்உணர்வார் - ஆர்சுற்றி
இன்னல் இனிவாயாம் கொள்வார் பிறப்புஇறப்பில்
துன்னார் அடையும் நிலன்
42
பேராப் பெருநிலன் சேய்த்தே உடம்பொன்றா
பேரா ஒருநிலனா நீங்காப் பெரும்பொருளை
யேரா அறிந்துய்யும் போது
43
மெய்யூணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம்
பொய்யுணர்வான் ஈண்டிய எல்லாம் ஓருங்கு அழியும்
ஐயுணர்வாம் ஆயந்து அறஞ்சார்பாச் சார்புஒறுக்க
நையா நிலைவேண்டு வார்
44
ஒண்றுண்டே மற்றுடலிற் பற்றி வினையிறுக்கும்
பொன்றா உணர்வால் விலங்கொறுக்க பைம்மறியாத்
தன்பால் பெயர்க்குந்து பற்றுதலைப் பட்டோர்
நன்பால் அறிந்தார் துறந்தார் வரல்உயர்ந்தார்
புல்பாலாற் சுற்றப் படார்
45
இன்னிலை முற்றிற்று



நூ த லோ சு
மயிலை
ஊ 

N. Ganesan

unread,
Sep 20, 2017, 10:17:05 AM9/20/17
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran

ஹிந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகள், சைவமும் வைணவமும் ஆகும்.
இந்தியாவின் இதிகாசங்கள் இரண்டு: ராமாயணம், மகாபாரதம்.
இராமாயணத்தை முழுமையாக தமிழில் தந்த கம்பன்
வாலறிவன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

முனிவர் என்ற பொருளிலே ஆள்கிறார். காசிபன் என்ற முனிவர்க்கு
மகனாய் வாமனாவதாரத்திலே மஹாவிஷ்ணு பிறந்ததைப் பாடும்போது
வாலறிவன் = முனிவர் என்று கம்பர் பாடியது:

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்.
நீல நிறத்து நெடுந்தகை வந்து. ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான் - கம்பன்

விஷ்ணுவை ‘Solar deity' என்பர், விஷ்ணு என்றால் சூரியனின் கதிர்கள்
என்பது வேதத்திலே உள்ள பொருள். விள்- என்ற தாதுவேரில் இருந்து 
விண்ணு, விண்டு, விட்டு என்ற சொற்களாகி, விண்ணு > விஷ்ணு.
வாமனன் ஆகி, திரிவிக்ரமன் ஆக வளர்தல் நாள்தோறும் சூரியன் செய்யும்
செயல் என்று ஹிந்து சமய நூல்களிலே சொல்லப்படுவது.
திருவள்ளுவர் அச் சூரியனின் செயல் போல மன்னன் உழைக்க அறிவுறுத்துகிறார்:

இதே போல, சரபங்க முனிவரையும் வாலறிவான் என்றே கம்பர் குறிப்பிடுகிறார்:

'எல்லா உலகிற்கும் உயர்ந்தமை, யான்
சொல்லாவகை, நீ உணர் தொன்மையையால்:
நல்லாளுடனே நட, நீ' எனலும்,
'அல்லேன்' என, வால்அறிவான் அறைவான்.  - கம்பர்

கடவுள் என்பதனை முனிவர் என்ற பொருளும் தமிழில் உண்டு,
மயிலை சீனி. வேங்கடசாமி கட்டுரை:

அதே போல, வாலறிவன் என்ற திருக்குறளின் முதன்மைப் பொருள் முனிவர்
என்பதைக் கம்பரின் பாடல்கள் விளக்குகின்றன. திருக்குறளில் வாலறிவன்
ஹிந்து சமய மஹாதேவர்கள் ஆகிய விஷ்ணு, சிவபிரான் என்பதைக் காட்டிலும்
சமணரின் கடவுள், முனிவர் என்னும் தீர்த்தங்கரர் எனக் குறிப்பால் 
திருவள்ளுவர் வழிநின்று உணர்த்துகிறார்  கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

தீர்த்தங்கரர் - பெயர் ஆய்வுக்கு நல்ல ஆய்வுக்கட்டுரை:
Parpola, Asko, 2003. Sacred bathing place and transcendence: Dravidian kaTa(vuL) as the source of Indo-Aryan ghâT, tîrtha, tîrthankara and (tri)vikrama. Pp. 523-574 in: Olle Qvarnström (ed.),  Jainism and early Buddhism: Essays in honor of Padmanabh S. Jaini, I-II. Fremont, California: Asian Humanities Press.

நா. கணேசன்

Suba

unread,
Sep 20, 2017, 10:36:22 AM9/20/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-09-20 16:16 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

ஹிந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகள், சைவமும் வைணவமும் ஆகும்.

​இந்த வாக்கியம் ஏன் இந்தப் பதிவில்?
எனக்கு பதில் தரவேண்டும் என நினைத்தால் நேர்மையாக இக்கேள்வி எங்கு எழுந்ததோ அங்கே பதிய வேண்டியது தானே.. 

சரி இந்து சமயத்தில் எத்தனை பிரிவுகள்? அவை எவை? யார் எந்த காலத்தில் எந்த நூலில் எழுதினார்? அதனை வெட்டி ஒட்டி இங்கு தரவும்.
இந்தியாவின் இதிகாசங்கள் இரண்டு: ராமாயணம், மகாபாரதம்.
​இந்த விளக்கமும் இந்தப் பதிவிற்கு தேவையில்லையே.

​ஏன் உங்கள் சுற்றல் விளையாட்டுக்களை  மீண்டும் மீண்டும் தொடர்கின்றீர்கள்.

சுபா


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

N. Ganesan

unread,
Sep 20, 2017, 10:37:05 AM9/20/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Banukumar Rajendran
இன்னொரு முக்கியமான கம்பன் பாடல்:
பற்று அவா வேரொடும் பசை அற. பிறவி போய்
முற்ற. வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன். இருந்து யோகு செய்தனன் எனின்.
சொற்றவாம் அளவதோ. மற்று இதன் தூய்மையே?

யோகேசுவரனாகிய சிவபிரானைப் புகழும் பாடல்.
சிவபிரான் வானந்த்தில் இருக்கும் வானவன் என்கிறார்.

வாலறிவினர் என்று பிறப்பை அறுக்கவும், பற்று அறுக்கவும்
தவம் செய்யும் முனிவர்களைச் சொல்லுதல் காண்க.

இப்பொருளிலே, தீர்த்தங்கரரை வாலறிவன் என்கிறார் வள்ளுவர்.


2017-09-20 7:16 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

ஹிந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகள், சைவமும் வைணவமும் ஆகும்.
இந்தியாவின் இதிகாசங்கள் இரண்டு: ராமாயணம், மகாபாரதம்.
இராமாயணத்தை முழுமையாக தமிழில் தந்த கம்பன்
வாலறிவன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

முனிவர் என்ற பொருளிலே ஆள்கிறார். காசிபன் என்ற முனிவர்க்கு
மகனாய் வாமனாவதாரத்திலே மஹாவிஷ்ணு பிறந்ததைப் பாடும்போது
வாலறிவன் = முனிவர் என்று கம்பர் பாடியது:

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்.
நீல நிறத்து நெடுந்தகை வந்து. ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான் - கம்பன்

விஷ்ணுவை ‘Solar deity' என்பர், விஷ்ணு என்றால் சூரியனின் கதிர்கள்
என்பது வேதத்திலே உள்ள பொருள். விள்- என்ற தாதுவேரில் இருந்து 
விண்ணு, விண்டு, விட்டு என்ற சொற்களாகி, விண்ணு > விஷ்ணு.
வாமனன் ஆகி, திரிவிக்ரமன் ஆக வளர்தல் நாள்தோறும் சூரியன் செய்யும்
செயல் என்று ஹிந்து சமய நூல்களிலே சொல்லப்படுவது.
திருவள்ளுவர் அச் சூரியனின் செயல் போல மன்னன் உழைக்க அறிவுறுத்துகிறார்:

http://nganesan.blogspot.com/2013/03/dharmacakra-antiquity-and-india-flag.html 

N. Ganesan

unread,
Sep 20, 2017, 10:39:03 AM9/20/17
to மின்தமிழ்
2017-09-20 7:36 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:


2017-09-20 16:16 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

ஹிந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகள், சைவமும் வைணவமும் ஆகும்.

​இந்த வாக்கியம் ஏன் இந்தப் பதிவில்?
எனக்கு பதில் தரவேண்டும் என நினைத்தால் நேர்மையாக இக்கேள்வி எங்கு எழுந்ததோ அங்கே பதிய வேண்டியது தானே.. 

சரி இந்து சமயத்தில் எத்தனை பிரிவுகள்? அவை எவை? யார் எந்த காலத்தில் எந்த நூலில் எழுதினார்? அதனை வெட்டி ஒட்டி இங்கு தரவும்.
இந்தியாவின் இதிகாசங்கள் இரண்டு: ராமாயணம், மகாபாரதம்.
​இந்த விளக்கமும் இந்தப் பதிவிற்கு தேவையில்லையே.


உங்களுக்குப் பதில் தர எழுதவில்லை சுபா.  ஹிந்து சமயத்தின் இதிகாசங்கள் என்பது உலகத்தார் எல்லோரும் அறிந்தது தான்.

kanmani tamil

unread,
Sep 20, 2017, 12:33:56 PM9/20/17
to mint...@googlegroups.com

Hinduism is a religion which accepts and absorbs the good and optimistic views and practices from the other religions in India
eg. when I went to amaranth last year I was shown the small carved image of Lord Buddha at the entrance of the cave above.so I'm sure it is a cave of the Buddhists once upon a time.now lakhs and lakhs of Hindus are visiting the cave shrine

Oru Arizonan

unread,
Sep 20, 2017, 3:31:01 PM9/20/17
to vallamai, mintamil


2017-09-20 7:16 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
 
//விஷ்ணுவை ‘Solar deity' என்பர், விஷ்ணு என்றால் சூரியனின் கதிர்கள்
என்பது வேதத்திலே உள்ள பொருள். //

விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவர் [omnipresent] என்றே பொருள்;  இது எக்கடவுளையும் குறிக்கப்பயன்படினும், மகாவிஷ்ணு என்று கொண்டாடப்படும் திருமாலைச் சிறப்பாகக் குறிக்கப்பயன்படுகிறது -- மகாதேவன் என்ற சொல் சிவனைச் சிறப்பாகக் குறிக்கப் பயன்படுவதைப்போல. 

ஒரு அரிசோனன்
विष्णु [L=44345] [p= 0949-a]vishṇu, us, us, u (in Uṇādi-s. III. 
39. said to be fr. rt. 2. vish, ‘to pervade;’ according 
to some fr. rt. 1. viś), all-pervading, encompassing, 
pervading, penetrating (Ved); (us), m., N. of one 
of the principal Hindū deities, (in the later mythology 
regarded as ‘the preserver,’ and with Brahmā ‘the 
creator’ and Śiva ‘the destroyer,’ constituting the 
well-known Tri-mūrti or triad; although Vishṇu 
comes second in the triad he is identified with the 
supreme deity by his worshippers; 

தேமொழி

unread,
Sep 22, 2017, 12:53:49 AM9/22/17
to மின்தமிழ்


On Wednesday, September 13, 2017 at 11:16:00 PM UTC-7, N. Ganesan wrote:

தனது இறைவனை  வாலறிவன் என்று புகழ்கிறார் திருவள்ளுவர்.

தூய்மையான ஞானம் பெற்றவன் - கேவல ஞானம் என்பது சமண சமயம்.
அதனைச் சொல்கிறார்.


வாலறிவன் என்பதற்கு "இளவயதில் அறிஞராக மாறியவர்" என்பதும் ஒரு பொருள்.
அத்தகுதிக்குரியவர்  புத்தர்.

பால = வால 

அரச புத்திரன் வாலவயதில் கொண்ட விவேக மிகுதிக்கு வாலறிஞன், வாலறிஞன், வாலறிஞன் என்னும் பெயரையும் அளித்தார்கள் (ஆதிவேதம் 7).

பார்க்க: 
ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்:  அயோத்திதாசரின் சொல்லாடல்
- ப. மருதநாயகம்
பக்கம்:   163

..... தேமொழி 

N. Ganesan

unread,
Sep 22, 2017, 10:24:11 AM9/22/17
to மின்தமிழ், vallamai
2017-09-21 21:53 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, September 13, 2017 at 11:16:00 PM UTC-7, N. Ganesan wrote:

தனது இறைவனை  வாலறிவன் என்று புகழ்கிறார் திருவள்ளுவர்.

தூய்மையான ஞானம் பெற்றவன் - கேவல ஞானம் என்பது சமண சமயம்.
அதனைச் சொல்கிறார்.


வாலறிவன் என்பதற்கு "இளவயதில் அறிஞராக மாறியவர்" என்பதும் ஒரு பொருள்.
அத்தகுதிக்குரியவர்  புத்தர்.

பால = வால 

அரச புத்திரன் வாலவயதில் கொண்ட விவேக மிகுதிக்கு வாலறிஞன், வாலறிஞன், வாலறிஞன் என்னும் பெயரையும் அளித்தார்கள் (ஆதிவேதம் 7).



நன்றி. பேரா. ப. மருதநாயகத்துடன் 3 நாள்கள் நாகர்கோயில் திருக்குறள் மாநாட்டில் இருக்கும் வாய்ப்பு அமைந்தது.
 
ஒன்று குறிப்பிடவேண்டும்.  Baala என்ற வடமொழியின் சொல்லை வள்ளுவர் ”வால் அறிவன்” என்று பயன்படுத்திடவில்லை.
வால் என்பது தூய தமிழ்ச்சொல். வால்அறிவன் - துறவி,முனிவர் என்று தீர்த்தங்கரருக்கு வள்ளுவர் ஆளும் சொல்லாகும்.
இதனை, வள்ளுவர் வழியில் கம்பரும் உறுதிப்படுத்துகிறார்: மூன்று பாடல்கள் இவ்விழையில் கம்பரிடம் இருந்து
கொடுத்துள்ளேன். வால் அறிவன் என்ற சொல்லுக்கு துறவி, முனி என்ற பொருளில் தான் கம்பரிலும் இருக்கிறது.
வளையாபதி கடவுள் வாழ்த்திலும், வள்ளுவர் போன்றே தீர்த்தங்கரர் வாழ்த்தே உள்ளது. என் நூலகத்தில்
இருந்து அட்லாண்டா பெரி. சந்திரா தட்டச்சி ப்ராஜக்ட் மதுரை தளத்தில் வளையாபதிச் செய்யுள்கள் முதன்முதலாக
இணையம் ஏறின.

பகு-/வகு-. இதுபோல், பால்-/வால்- என்றாகும். வால்:வான் (வானம்). வெண்மையானது, தூய்மையானது
என்ற பொருளில் வால்அறிவன். வெண்பா - தூய்மையான பாவினம். இது Baala என்னும் வடசொல் இல்லை.

வாலறிவன் என்ற குறள் அண்மைக்கால நூல் ஆகிய (சொர்ணம்பிள்ளை) இன்னிலையில் இருக்கிறது.

அதுபோலவே, புராணங்களில் காணலாகும். காளைராசனுக்கு மணலூர் என்னும் பெயரை (வைஷ்ணவத்துடன் தொடர்பு
கொண்ட மணலூர். திருவிளையாடற்புராணத்தில் 17-ஆம் நூற்றாண்டில் வைஷ்ணவ தொடர்பு மாற்ற,
மணவூர் என்று சைவக் கதை ஏற்படுத்துகிறாஎ என விளக்கியுள்ளேன். பெரு மணலூர் பற்றிப் புதிய கல்வெட்டுகள்
கிடைத்துள்ளன. அதை ஏனோ கீழடி என்கிறார்கள். சிந்து சமவெளியாம்!! சாந்தலிங்கம் என்ன சொல்லியுள்ளார்
எனப் பார்க்கலாம். கிடைத்த மிகச் சில தமிழ் ப்ராமி பானைச் சில்லுகள் வந்துள்ள லேயர்ஸ் கி.பி. நூற்றாண்டுகள்
எனலாம். மதுரையில் கர்நாடகம், கொங்கு (கொடுமணம், பொருந்தல்), வழியாக மதுரைக்கு ப்ராமி வந்துள்ள நிலையை
கீழடி ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

நா. கணேசன்

பார்க்க: 
ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்:  அயோத்திதாசரின் சொல்லாடல்
- ப. மருதநாயகம்
பக்கம்:   163

..... தேமொழி 




 

வாலறிவன், அறிவன் என்று வரும் சைவப் பாடல்கள் உண்டா? எந்த நூற்றாண்டு?

யாப்பருங்கல விருத்தி மேற்கோள்:

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி                  [அசை]
     மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை                    [சீர்]
     முக்குடை நீழற் பொற்புடை ஆசனம்
     ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
     ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை                    [அடி]
     அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
     துன்னிய மாந்தரஃ தென்ப                             [எழுத்து]

     பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே’.1 


திருந்தொளி அறிவன் = தூய்தான அறிவன் = வாலறிவன்.

நா. கணேசன்

--

N. Ganesan

unread,
Sep 22, 2017, 10:42:43 AM9/22/17
to மின்தமிழ், vallamai
2017-09-21 21:53 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, September 13, 2017 at 11:16:00 PM UTC-7, N. Ganesan wrote:

தனது இறைவனை  வாலறிவன் என்று புகழ்கிறார் திருவள்ளுவர்.

தூய்மையான ஞானம் பெற்றவன் - கேவல ஞானம் என்பது சமண சமயம்.
அதனைச் சொல்கிறார்.


வாலறிவன் என்பதற்கு "இளவயதில் அறிஞராக மாறியவர்" என்பதும் ஒரு பொருள்.
அத்தகுதிக்குரியவர்  புத்தர்.

பால = வால 

அரச புத்திரன் வாலவயதில் கொண்ட விவேக மிகுதிக்கு வாலறிஞன், வாலறிஞன், வாலறிஞன் என்னும் பெயரையும் அளித்தார்கள் (ஆதிவேதம் 7).



நன்றி. பேரா. ப. மருதநாயகத்துடன் 3 நாள்கள் நாகர்கோயில் திருக்குறள் மாநாட்டில் இருக்கும் வாய்ப்பு அமைந்தது.
 
ஒன்று குறிப்பிடவேண்டும்.  Baala என்ற வடமொழியின் சொல்லை வள்ளுவர் ”வால் அறிவன்” என்று பயன்படுத்திடவில்லை.
வால் என்பது தூய தமிழ்ச்சொல். வால்அறிவன் - துறவி,முனிவர் என்று தீர்த்தங்கரருக்கு வள்ளுவர் ஆளும் சொல்லாகும்.
இதனை, வள்ளுவர் வழியில் கம்பரும் உறுதிப்படுத்துகிறார்: மூன்று பாடல்கள் இவ்விழையில் கம்பரிடம் இருந்து
கொடுத்துள்ளேன். வால் அறிவன் என்ற சொல்லுக்கு துறவி, முனி என்ற பொருளில் தான் கம்பரிலும் இருக்கிறது.
வளையாபதி கடவுள் வாழ்த்திலும், வள்ளுவர் போன்றே தீர்த்தங்கரர் வாழ்த்தே உள்ளது. என் நூலகத்தில்
இருந்து அட்லாண்டா பெரி. சந்திரா தட்டச்சி ப்ராஜக்ட் மதுரை தளத்தில் வளையாபதிச் செய்யுள்கள் முதன்முதலாக
இணையம் ஏறின.

பகு-/வகு-. இதுபோல், பால்-/வால்- என்றாகும். வால்:வான் (வானம்). வெண்மையானது, தூய்மையானது
என்ற பொருளில் வால்அறிவன். வெண்பா - தூய்மையான பாவினம். இது Baala என்னும் வடசொல் இல்லை.

வாலறிவன் என்ற குறள் அண்மைக்கால நூல் ஆகிய (சொர்ணம்பிள்ளை) இன்னிலையில் இருக்கிறது.

அதுபோலவே, புராணங்களில் காணலாகும். காளைராசனுக்கு மணலூர் என்னும் பெயரை (வைஷ்ணவத்துடன் தொடர்பு
கொண்ட மணலூர். திருவிளையாடற்புராணத்தில் 17-ஆம் நூற்றாண்டில் வைஷ்ணவ தொடர்பு மாற்ற,
மணவூர் என்று சைவக் கதை ஏற்படுத்துகிறார் என விளக்கியுள்ளேன். பெரு மணலூர் பற்றிப் புதிய கல்வெட்டுகள்
கிடைத்துள்ளன.

வாலறிவன் என்று ஹிந்து கடவுளருக்கு குறிப்பிடும் பழைய நூல் தமிழில் ஏதும் இல்லை எனப் பார்த்தோம்.
கம்பரும் வாலறிவன் துறவிமுனி என்றுதான் வள்ளுவர், வளையாபதி வகுத்த வழியில் செல்கிறார்.

முதன் முதலாக ஹிந்து கடவுள் ஒருவற்குச் செய்பவர் திருவிளையாடற்புராணமுடையார்.
17-ஆம் நூற்றாண்டிலே பிரமனை வாலறிவன் என்கிறார். இது குறளுக்கு மிகப் பிற்காலம்.

NG
 
மணலூரை ஏனோ கீழடி என்கிறார்கள். சிந்து சமவெளியாம்!! சாந்தலிங்கம் என்ன சொல்லியுள்ளார்
Reply all
Reply to author
Forward
0 new messages