வணக்கம் ஐயா .
பெண்ணாடம் கோயில் கும்ப அபிசேகம் காணக்கிடைத்தது ஓர் பெரும் பாக்கியமே
திரு வினைத்தீர்த்தான் அவர்களேமிக்க நன்றி. எனது ஞான வாழ்க்கையில் மிகச் சிறப்பான இடத்தை வகிப்பது சிவஞானபோதமே. மலேசியாவில் அதனை போதிப்பதற்கு யாரும் இல்லாத சூழலில் யானே முயனறு பல உரைகள வழியாக கற்று பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததொடு தமிழிலும் புதியவோர் 'நூலிய அறிவியல்' உரையும் எழுதினேன்.நான் பிறப்பால் சைவன் அல்ல. ஆனால் மெய்கண்டாரின் அற்புதமான நூலிய அறிவியல் சான்ற ஏரணவியல் சான்ற சிவஞானபோத்ததப் புரிந்துகொண்ட பிறகு, நல்லவொரு சைவ சித்தாந்தியாக இருப்பதைத் தவிற வேறொன்றும் தேவையில்லை என்ற முடிவிற்கு வந்தேன். இன்றும் அப்படித்தான் இருக்கின்றேன்.மெய்கண்டாருக்கு இப்படி சிறப்புக்கள் செய்வது மகிழ்ச்சியைத் தந்தாலும், அவரது வரலாறு பல கற்பனைக் கதைகளை உடையதாகவே இருக்கின்றது.யார் போத்தத்தைக் கற்கின்றார்களோ அதற்கு மெய்கண்டாரே எழுதிய உரை, தொல்காப்பியர் வகுத்தளித்த காண்டிகை உரை என்பத அறியாதே இருக்கின்றனர். மெய்கண்டார் நல்லவொரு தொல்காப்பியப் புலவர்.மேலும் அவர் திருக்குறளின் தாக்கத்திற்கும் ஆளாகியவர். அவரது முதல் சூத்திரம் திருக்குறளின் முதல் குறளின் விரிவாக்கம் ஆகும்.இப்படிப்பட்ட வரலாற்று உணமைகளை இதுவரை யாரும் ஆய்ந்து வெளியிடாதது ஓர் பெருங்குறையே.ஓர் கேள்வி கேட்டு போதத்தை இன்னும் புதிய கோணங்களைல் ஆய்ந்துணர முயற்சி செய்யலாம் என்று வற்புறுத்த நினைக்கின்றேன்.சிவஞானபோதத்தில் விளங்கும் காண்டிகை உரை, அது காட்டும் ஏரணவியல், பார்தமெங்கும் பரவி இருக்கும் நையாயிகமா அல்லையா? என்பதே என் கேள்வி.கோயில்கள் எழுப்பி அவரை போற்றுவது ஒருபுரம் இருக்க அவரது சிந்தனையின் ஆழத்தைப் புரிந்துகொள்வதும் தேவையே
நன்றி வினைதீர்த்தான் அவர்களே மெய்கண்டாரைக் கண்டு காட்டியமைக்கு வாழ்த்துக்கள்.படங்கள் சிறப்பாக இருந்தன.சபா.அருணாசலம்.
பதிவையும் படங்களையும் கண்டு வாழ்த்தியமைக்கு நன்றி திரு சபா அருணாசலம் ஐயா. வளாகத்திலிருந்த நூல்நிலையத்தில் சில நூல்களும் மெய்கண்டார் சூன் 2014 திங்கள் இதழும் வாங்கினேன்.
அவ்விதழில் ஸ்ரீமாதவச் சிவஞான சுவாமிகள் சித்திரை ஆயில்ய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தங்களுடைய கட்டுரையின் முதல் பகுதி வெளியிடப்பட்டிருந்தைப் படித்தேன். மாதவச் சிவஞான யோகிகள் அருளிய பிள்ளைத்தமிழ் நூல்களில் சிவநெறிச் செய்திகள் என்ற தலைப்பில் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் குறித்த செய்திகள் பார்த்தேன். மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
சிவபெருமானும் விநாயகரும் வேறல்லர்; ஒருவரே என்ற கருத்தையும் பிள்ளைத் தமிழிலில் உள்ள சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.