மனம் - மூளை. என்ன தொடர்பு? (முன்பு: எனக்குப் புரிந்தது இதுவே)

801 views
Skip to first unread message

karth...@gmail.com

unread,
May 6, 2009, 7:25:53 AM5/6/09
to மின்தமிழ்

(என் சுருக்கப் பெயர் ரெ.கா. "ரெ.கோ" அல்ல.)

புதிய இழை தொடங்குகிறேன். இங்கே தொடர்வோமே!

வள்ளுவர் மூளையைப் பற்றிக் கூறாததால் மூளை என
ஒன்று இல்லை என்று பொருளாகிவிடாது.
வள்ளுவர் மனதைப் பற்றிப் பேசியிருக்கிறார். ஆனால்
மனதுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப்
பேசவில்லை. ஆகவே அது குறித்து அவரிடமிருந்து விளக்கம் பெற
இயலாது. (அவர் மழை பற்றிப் பேசியிருக்கிறார்;
ஆனால் மழைக்குக் காரணமான சூரியன் பற்றி
ஒன்றும் பேசவில்லை. அது போலத்தான்.)

உங்களுடைய "எனக்குப் புரிந்தது இதுவே" இழையில்
மனம் குறித்து விரிவாகவும் நுணுக்கமாகவும்
பேசியிருக்கிறீர்கள். ஆனால் மூளை பற்றி ஒன்றுமே
சொல்லவில்லை. ஆகவேதான் இரணடுக்கும் தொடர்பு
இருக்கிறதா என்னும் கேளவி எழுப்பினேன்.

தமிழ்த்தேனீ தொடர்பே இல்லை என்கிறார். உங்கள்
கருத்து என்னவோ?

ரெ.கா.

On May 6, 6:55 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
> அன்புள்ள திரு ரெ. கோ அவர்களே
> ஆனாலும் தமிழர் எத்ததை பாசாங்கு என்பதை இந்த மனம் விஷயத்தில் பார்க்கலாம் !
> திரு வள்ளுவர் மனம் என்பது பற்றி 13 குறள் பாடியிருக்கிறார் .
> ஆனால் இதுவரை மனம் எங்கே இருக்கிறது என நாம் தெளியவில்லை
> .திரு வள்ளுவருக்கு நிகர் இல்லை என மட்டும் பேசி வருகிறோம்
> ஆனால் உங்கள் கேள்வி இதை தெளிவிப்பதர்காகவே கேட்க்கப் பட்டது என அறிவேன் .!
> மனம் பற்றி இப்போது பள்ளிகளில் கற்று தருகிறார்களா ?ஆனால் கல்லூரி நிலையில்
> மட்டும் மனவியல் என முது நிலை படிப்பு இருக்கிறது .அது மூளைஇயல் என ஏன் இல்லை
> ?மனம் வேறு மூளை வேறு என தெரியும் போலிருக்கிறது !
> அன்புடன் ,
> ஏ சுகுமாரன்
>
> On 5/6/09, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
>
>
>
> > அன்புள்ள திரு ரெ. கோ அவர்களே
>
> > //சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்
> > வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
> > இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்
> > "மனம்" இந்த உடலுக்குள் எங்கே இருக்கிறது?
>
> > ரெ.கா.//
>
> --
> A.Sugumaran ,
> PONDICHERRY INDIA
> MOBILE 09345419948
>
> இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
> இது வரை செய்யாததை செய்யவேண்டும் !

annamalai sugumaran

unread,
May 6, 2009, 7:44:28 AM5/6/09
to minT...@googlegroups.com

அன்புள்ள திரு ரெ.கா. அவர்களே ,
மன்னித்துக்கொள்ளுங்கள் !   பெயரில் தவறு செய்வது மிகுந்த மடத்தனம்
.நான்  ஏதோ  ஒன்று நினைத்து ஏதோடைப்
செய்து விட்டேன் .
மனம்  எங்கோ இருந்து விட்டது ,இதில் லயிக்கவில்லை .

 

 //சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்

வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்

"மனம்" இந்த உடலுக்குள் எங்கே இருக்கிறது?
ரெ.கா.//
 
 
மூளைக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இது  straight   ஆன பதில் !
நான் திரு வள்ளுவரை பற்றி சொன்னது அவர்   மனம் பற்றி பாடி  2000  ஆண்டுகள் ஆகிவிட்டது .
 2000 ஆண்டுகளாக நாம்  மனத்தை பற்றி அறிந்திருக்கிறோம் .என்பதற்காகவே .
.இன்றைக்கு  best seller  லிஸ்டில் முதல் பத்தில் ஒன்று நிச்சயம்  mind power , secret  of the mind ,intution,   போன்றவைதான்
 
 
மனம் ஒரு மென்  பொருள் ,அது இல்லாமல் எந்த புலனும் செயல் படாது .
ஆனால் அது எந்த பொறியோ புலனோ செயல் படுகிறதோ அங்கே அப்போது அது இருக்கிறது !அது அந்தக் காரியத்தில் லயித்தால் தான் அந்தப் புலன் வேலை செய்யும் ..!அது மூளைக்கும் பொருந்தும் !

Tthamizth Tthenee

unread,
May 6, 2009, 8:15:39 AM5/6/09
to minT...@googlegroups.com
மனம் இறங்கு என்கிறோம்
 
தவறான செயல் செய்யும்போது மூளை இல்லையா என்று கேட்கிறோம்
 
ஆகவே மூளைக்கும் மனதுக்கும் நிச்சயமாக வேறுபாடு இருக்கிறது
 
 
மனம் சிந்திக்கிறது
அந்த சிந்தனையை  மூளை உள் வாங்கிக்கொண்டு செயல் படுகிறது
 
ஆகவே மனம் எஜமானன்  மூளை சேவகன்
 
ஆனால் எஜமானனால் தனித்து இயங்க முடியாது
மூளை என்னும் சேவகன் இருந்தால் தான் மனமாகிய எஜமானன் நினைக்கும் வேலைகள் நடக்கும்
 
 
உள்ளுக்குள்ளே கண் காண முடியாத இடத்தில் இருந்து கொண்டு ஆட்டிப் படிக்கும் மனம்தான்  இறை
மனதாழம் செல்ல முடிந்தோர்க்கு புலப்படும் இறை ஆனால் அப்போதும் மனத்தைக் காணமுடியாது     இறையைக் காணலாம் என்று ஞானிகள் கூறுகின்றனர்
 
இறையைக் கண்டாலும் காணலாம் ஆனால் மனதைக் காண முடியாது
 
ப்ரபஞ்ச வெளியின் உள்ளேயும் வெளிஒயேயும் நிறைந்திருக்கும் மனம் தன்னுள்ளேயும் ப்ரபஞ்ச  வெளியையும் வைத்திருக்கிறது
 
ஆகவே உள்ளூம் புறமும் நீக்கமற நிறைந்த மனத்தை என்ன்வென்று சொல்வது
 
உள்ளே...உள்ளே ஒவ்வொருவரும் தனித்தனியாக உட்ப்ரயாணம் செய்து தான் மட்டுமே காண முடிந்த மனம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 


 
அன்புள்ள

தமிழ்த்தேனீ

karth...@gmail.com

unread,
May 6, 2009, 9:09:31 AM5/6/09
to மின்தமிழ்
அன்பின் சுகு,

> மூளைக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இது straight ஆன பதில் !

மனம் என நீங்கள் வருணிப்பது முழுவதும் ஒரு மனிதனின்
எண்ணங்களின் தொகைதானே! எண்ணங்களால் ஆனதுதான்
மனது.

எண்ணங்களைத் தோற்றுவிப்பது மூளைதான். மூளை இல்லாமல்
எண்ணங்கள் தோன்றா!

மூளைதான் எண்ணங்களின் தோற்றுவாய். இப்படிப் பார்த்தால்
எப்படி மூளைக்கும் மனதிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனச்
சொல்ல முடியும்?

ரெ.கா.

On May 6, 7:44 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
> அன்புள்ள திரு ரெ.கா. அவர்களே ,

annamalai sugumaran

unread,
May 6, 2009, 12:10:47 PM5/6/09
to minT...@googlegroups.com

விஞ்ஞானம எதையும் நேரில்  கண்ணால்  கண்டால் தான் நம்பும் ! எனவே நமது பண்டைய சித்தர் இயல் ,உபநிஷத்துக்கள் இவைகளில் கூறப் பட்டிருக்கும் அந்தக்கரணம் என்பதில் உள்ள மனம் புத்தி சித்தம் ,அகங்காரம் இவைகள் அவர்களுக்கு தெரியாது  ஏன் எனில் கண்ணுக்கு தெரியாது .
எனவே இல்லை எனக் கொண்டனர்
.எனவே பல செயல்களை அவர்கள் மூளையின் மேல் ஏற்றி மூளை தான் செய்வதாக கூறிவிட்டார்கள் .

அந்தக்கரணம் என்றாலே கண்ணுக்கு தெரியாத பொறிகள் என்றுதான் பொருள் .
கண்ணுக்குக்கு தெரிந்த பொறிகள்  10  தெரியாதது  4  .
மூளை மனம் இல்ல ! இதை நான் முன்பே பல பகுதியில் கூறியிருக்கிறேன் .
மூளை ஒரு பொறி ,ஒரு இயந்திரம் ,பதிவு செய்யும் இயந்திரம் .
அது மனம் எனும் ஆற்றல் இல்லாமல் செயல் படாது .மனமோ ஆத்மா இல்லாமல் செயல் படாது .!
எண்ணைகள் தோன்றுவதற்கு மனமே காரணம் !தொடருவதும் மனதில் தான் !
எண்ணங்கள் தோன்றுவது பழைய பதிவுகளும் ,விருப்பு வெறுப்புமே காரணம் ..!
அடுத்தது சுழல் !
எண்ணம் எப்படி தொடங்குகிறது   என நோக்கிக் கொண்டே இருந்து ,அது தோன்றும் போதே மாய்ப்பதுதால் ரமணரின் மார்க்கம் !
எண்ணம் வளரவிட்டால் அது இழை போல விரிந்து கொண்டே போகும் .!
,எல்லா எண்ணமும் நம்மிடம் மட்டும் தோன்றுவதில்லை .
பல பிறரிடம் இருந்தும் நம்மை பற்றும் !
அதை இல்லாமல் ஆக்கினால் தான் பிறவி சக்கரத்தில் இருந்து விடுபடலாம் !
நல்லது செய்தாலும் ,கேட்டது செய்தாலும் ,மனதில் பதிவு தொடர்ந்துதான்  ஆகும் !

மனம் தான் பழைய பதிவுகளை ஜன்ம ஜென்மமாக தொடர்ந்து சேமித்து  ஆன்மாவுடன் தொடர்ந்து வருவது .!
 நமது மனம் பிரபஞ்ச மனத்துடன் தொடர்பு கொண்டது !
பிரபஞ்ச மனம் அனைத்து மனங்களும் மொத்தமாக சேர்த்து வைக்கப் பட்டிருக்கும்
ஒரு  supper computer  போன்றது .!
எண்ணங்கள் மூளையில் பதிவாகிறது ,ஒரு கருவியை போல மட்டும் !
மூளை  இந்த உடலுடன் அழிவது .!ஆனால்
மனம் நுண் பொருள்
உடல் அழிந்தால் அழிவதில்லை !
மனம் இல்லாமல் மூளை வேலை செய்யவே செய்யாது !
அனேகமாக நமது பண்டைய கருத்துக்களையே எகிப்தியர்களும் கொண்டிருந்தனர் போலும் !
அவர்கள் மம்மி தயாரிக்கும் போது மூளையை சேமித்து வைக்கவில்லை .!
மூக்கு வழியே உறிஞ்சி எடுத்து வெளியே வீசி விட்டனர் ..!
ஆனால் இதயம் நுரையிரல் முதலியவற்றை பாதுகாத்தனர் !
மூளையை பற்றி இன்னும் பல ஆராயத்தக்கது !
அப்படியே மனம் பற்றியும் .தான் !
நமது பண்டைய நூல்களில் உள்ள மனதின் ஆற்றல்களும் அவற்றிற்கும் மூச்சுக்கும் இடையே உள்ள இணைப்பும் வரும் காலத்தில் மிகப் பெரிய மாற்றத்தை மனித குலத்திற்கு தரும் .!
இதுவே  எனக்கு புரிந்தது !

அன்புடன் ,
ஏ சுகுமாரன்




 


அன்பின் சுகு,

> மூளைக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இது  straight   ஆன பதில் !

Amala Singh

unread,
May 6, 2009, 8:53:28 AM5/6/09
to minT...@googlegroups.com
உங்கள் கவித்துவம் அருமை. ஆனால் எனக்கு வைரமுத்து தான் நினைவுக்கு வருகிறார்.

'கவிதைக்கு பொய் அழகு', 'கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை'
என்றெல்லாம் சொல்லும் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

ஒரு விடயத்தை எளிமைப்படுத்தும்போது, பயன்படுத்தும் வார்த்தைகள், எந்த
விடயத்தை எளிமைப்படுத்துகிறோமோ, அதைவிட எளிமையாக இருக்கவேண்டும்.
உங்களுடைய கவிதை, சொல்லப்பட்ட விடயத்தை மேன்மேலும் கடினமாக்குமே ஒழிய
மென்மையாக்காது. மனத்தை விளக்குகிறோம் என்று இறையைக்கொண்டு வருகிறீர்கள்.
இனி இறையை யார் விளக்குவார்கள்?

2009/5/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

--
--
Nandri,
Amala Singh

Ratnam ji

unread,
May 6, 2009, 10:20:14 AM5/6/09
to minT...@googlegroups.com
என்னருமை  நண்பர் சுகுஜிக்கு 
மனதின் மாண்பு பற்றிய 
தொகுப்பின் முக்கிய கட்டமே 
மனம் மனித உடலில் எங்கே 
இருக்கிறது  என்ற கேள்விதான் .....

நேற்று நம் தொலைபேசி உரையாடலில் 
பேசியபடி நீண்டநாள் நான் தொடமலிருந்த
என் பழம்பனையோலைதொகுப்பில்
தீயிட்டு விட்டீர்கள் .....

வள்ளுவர் மட்டுமல்ல 
பத்துபட்டு பதினேன்கீழ்கன்னக்கு
சங்க இல்லக்கியங்கள் எய்தொன்றிலும்
மனமிருக்கும் இடம்பற்றி 
தெளிவோன்ருமில்லை 

சித் தர்  பாடல்களிலும் 
திருமந்திரத்திலும் 
மனமிருக்குமிடம்பற்றி 
 சற்றே ரக்குறைய  தெளிவுண்டு ...

 மனமிருக்கும் இடம் பற்றி பேசுமுன்
மனமியங்கும்  பொருள் அறிதல் 
நன்று ..

ஆழ்மனம் அன்மாவுடனும் 
புறமனம் நம் புலன்களுடனும் 
நுணுக்கமாய் சம்பத்தப்பட்டது.

அழ்மனம்  புறமனம் இரண்டும் 
மனிதன் உள்ளிழுத்து வெளிவிடும் 
மூச்சின் வழி சம்பந்தப்பட்டது ....

அழ்மனம் நாள் முழுழுதும் விழித்திருக்கும் ..
(விழித்திரு தனித்திரு எனும் வள்ளலாரின்  
சொல்லை நினைவுறுங்கள் )
அதற்க்கு தூக்கம் என்றுமில்லை 

புறமனம் நாம் துயிலுறும் 
நேரம் தானும் துயிலுறும் 

நாளை மீண்டும் தொடர்கிறேன்  நண்பரே .....

தமிழ் போக்கும் உன் அயர்ச்சி 
புகழ் சேர்க்கும் உன் முயற்சி ......
ரத்னம்ஜி 



--
Remain Positive ...
Remain Powerful....
& Remain Bullish....
you can reach
& touch even the stars in the sky....
Ratnamji

karth...@gmail.com

unread,
May 6, 2009, 11:42:51 PM5/6/09
to மின்தமிழ்
அன்பின் சுகு,

On May 7, 12:10 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:


> விஞ்ஞானம எதையும் நேரில்  கண்ணால்  கண்டால் தான் நம்பும் ! எனவே நமது பண்டைய
> சித்தர் இயல் ,உபநிஷத்துக்கள் இவைகளில் கூறப் பட்டிருக்கும் அந்தக்கரணம்
> என்பதில் உள்ள மனம் புத்தி சித்தம் ,அகங்காரம் இவைகள் அவர்களுக்கு தெரியாது
> ஏன் எனில் கண்ணுக்கு தெரியாது .
> எனவே இல்லை எனக் கொண்டனர்
> .எனவே பல செயல்களை அவர்கள் மூளையின் மேல் ஏற்றி மூளை தான் செய்வதாக
> கூறிவிட்டார்கள் .

அறிவியல் தான் கண்டதை வருணிக்கும்; சோதிக்கும். சோதனைக்குப் பிறகு
முடிவைச்
சொல்லும். இந்த முடிவுகள் காலப் போக்கில் மாறுவதுண்டு. சோதனை முறைகள்
மேம்படும்போது புதிய கண்டுபிடிப்புக்கள் உதிக்கின்றன. அறிவியல்
சொல்வதெல்லாம்
"இப்போதைக்கு நாம் அறிந்த அளவுக்கு இது உண்மை" என்பதுவே.

அறிவியல் தன்னால் அறியப் படாதது அதிகம் உண்டு என்பதை
தயக்கமின்றி ஒப்புக் கொள்ளும். ஆனால் தன்னால் அறியப்படாத
விஷயங்கள் மீது அலங்காரமான கற்பனைக் கோட்டைகளைக் கட்டாது.
தெரிந்ததைச் சொல்லும். தெரியாததை தெரியாது என்று சொல்லும்.

அறிவியலைப் புறந்தள்ளிவிட்டு நாம் கருத்துச் சொல்ல முற்படும்போது
பேசும் விஷயங்களுக்கு எல்லை இருக்காது. கற்பனை அலங்காரங்களுக்குக்
குறைவிருக்காது.

பிரச்சினை என்னவெனில் அறிவியலுக்கு வெளியே நாம் பேசும் எந்த
விஷயத்தையும் வழக்கமான முறைகளில் நிருபிக்க முடியாது. அதுவே.

ஆனால் அறிவியலுக்கு வெளியே உள்ள விஷயங்களைப் பற்றிப் பேசுவது
சுவாரஸ்யமாக இருக்கிறது. அறிவியலில் அலங்காரங்கள் இல்லாததால்
வறட்சியாகவே தோன்றும்.

ரெ.கா.

அரவிந்தலோசனன்

unread,
May 7, 2009, 1:38:35 AM5/7/09
to மின்தமிழ்
ரெ.கா:

நாட்சி (Nazi) காலங்களில் மனிதன் மீதான குரூர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அவை முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதை வெளியிட அறிவியல் சமூகம்
இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. அவை மனிதாபிமானம் என்பதற்கு சவால்விடும்
பரிசோதனைகள் (இப்போது விலங்குகளை பரிசோதிப்பதில் கூட ஏகக்கெடுபிடி
வந்துவிட்டது).

இப்பரிசோதனைகளில் 'மரணம்' என்றால் என்னவென்று ஆராய்ந்திருக்கிறார்களா?
என்று தெரியாது!

அது இன்னும் சுவாரசியமாகவே உள்ளது. அது என்ன ஒரு நொடியில் reality என்பது
முற்றும் மாறிவிடுகிறது. அதுவரை பயன்பட்ட உபகரணங்கள் (ஐம்பொறிகள்)
அப்படியே இருக்கும் போது இயங்குதளம் காணாமல் போய்விடுகிறது!! அறிவியல்
அங்கும் எட்டும்..இந்த நூற்றாண்டில் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் மூளைதான் எல்லாம் என்பது பழைய கணக்கு என்பதை தீபக் சோப்ராவின்
ஆராய்ச்சி மையம் நிரூபித்து வருகிறது. ஜெர்மனியில் நானொரு தொலைக்காட்சி
ஆவணம் பார்த்தேன். அதில் ஒரு யோகி கழுத்தில் கத்தியைப்
பாய்ச்சிக்காட்டினார். உடலெங்கும் வைக்கப்பட்ட sensors வலி, வலி
எனத்துடிக்கிறது. ஆனால் மூளை அது பாட்டுக்கு உறங்கிக்கொண்டிருக்கிறது.
மூளைதான் கட்டளைத் தலைமைத்தலமென்றால் இங்கு அதை நிர்வகிப்பது யார்? அது
ஏன் ஐம்பொறிகள் அனுப்பும் 'மரணவலி' எனும் சேதியைப் புறம் தள்ளுகின்றன.
இது evolutionary principles க்கு மாறானது அல்லவோ.

யோசிப்போம்.

க.>

On May 7, 12:42 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:

Hari Krishnan

unread,
May 7, 2009, 2:24:53 AM5/7/09
to minT...@googlegroups.com



மூளைதான் எண்ணங்களின் தோற்றுவாய். இப்படிப் பார்த்தால்
எப்படி மூளைக்கும் மனதிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனச்
சொல்ல முடியும்?

அன்புள்ள ரெ கா,

இப்போதைக்கு என்னால் அதிகம் எழுத முடியாது.  இன்னமும் இரண்டு மாதங்களுக்கு இப்படிதான் இருக்க முடியும்.  இப்போதைக்கு சுருக்கமாகச் சொல்கிறேன். 

மனம், மூளை மட்டுமில்லை.  வேறு வேறாகக் கருதப்படுபவை எவை எவை என்பதற்கு ஒரு சின்ன சாம்பிள் தருகிறேன்.

மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்

சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா

மிஞ்சிநின்றோம்.  ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்

வஞ்சனைநான் கூறவில்லை  மன்மதனார் விந்தையால்

புத்தி மனஞ்சித்தம் புலனென் றறியாமல்

வித்தைசெயுஞ் சூத்திரத்தில் மேவுமொரு பொம்மையெனக் 

காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே

நீலிதனைக் காணவந்தேன்...........

--பாரதியின் குயில் பாட்டு. 

புத்தி, மனம், சித்தம், புலன் எல்லாமே வேறு வேறுதான்.  விஞ்ஞானப் பார்வை பார்பதானால், மூளையை புத்தி என்றும் மனம் என்றும் இரு கூறுகளாக பிரித்துக் கொள்ளுங்கள்.  புத்தி என்பது அனுபவங்கள், கற்று அறிந்த செய்திகளின் தொகுப்பு.  It is a data-bank.  A collection of all data that has been experienced and learnt over the years.  மனம் என்பது உணர்ச்சிகளின் மையம்.  ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாம் கிளைக்கும் ஊற்றுக்கண். 

ஒரு எண்ணம் கிளைக்கிறது.  'இன்ன காரியத்தைச் செய்ய வேண்டும் போல' இருக்கிறது.  (இதற்க்கு உள்ளே போனால், ஆசை வேறு, அன்பு வேறு, பாசம் வேறு என்றெல்லாம் விரியும்.  இப்போதைக்கு என்னால் முடியாது.)  இந்த ஆசை சரியானது தானா, இல்லை அடையக் கூடாத ஒன்ற என்பதை முடிவு செய்ய உதவும் கருவி புத்தி.  In other words, a desire is assayed with the help of the data-bank called buddhi.  அப்படி முடிவு செய்ததன் பிறகு, புத்தி சொல்வதன் படியோ அல்லது மனம் விடாமல் துண்டுவதன் படியோ எது முடிவு எடுக்க உதவுகிறதோ அந்தக் கருவியின் பெயர் சித்தம்.  புலன் எனப்படுவது input devices. 

ஆக, புத்தி மனம் சித்தம் புலன் என்று எல்லாமே கருவிகள் தாம்.  யாருக்கு அமைந்த கருவிகள், யார் பயன்படுத்தும் கருவிகள் என்பதற்கு விடை காண ரமண மகரிஷி எப்போதும் சொல்லிக் கொண்டிருந்த கேள்வி ஒன்றுதான் வழி. 

எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் கலந்து கொள்கிறேன்.  பதில் எழுத மாட்டேன்கிறானே என்று நினைக்க வேண்டாம்.  முதுகுப் பிரச்சினை சரியானதும் மீண்டும் வருகிறேன்.   
--
அன்புடன்,
ஹரிகி.

Tthamizth Tthenee

unread,
May 7, 2009, 3:02:33 AM5/7/09
to minT...@googlegroups.com
ஹரிகி அவர்களே உங்கள் முதுகு  ப்ரச்சனை  சீக்கிறம் தீர்ந்து மீண்டும் எழுத வாருங்கள்
காத்திருக்கிறோம்
உங்களுக்காக அடியேனும் ப்ரார்த்திக்கிறேன்


மனோ,  வாக்கு,  காயம், என்று மூன்று பகுதிகள் பிரித்திருக்கிறார்கள்

அதில்  மனோ  என்பது  சித்தம் என்று பொருள் வருகிறது

ஆனால் காயம் என்பதில்தான் மூளை அடங்குகிறது

மூளை ஒரு கணிணி என்றால்
அதில் கண்ணுக்குத் தெரியாமல் எல்லாச் செய்திகளையும் உள்ளடக்கிக் கொண்டு 

அந்தந்த  பகுதிக்கு அவ்வப்போது அனுப்பிக்கொண்டிருக்கும்  மாயத் தளம் மனது

அன்புடன்

தமிழ்த்தேனீ
அன்புடன்

தமிழ்த்தேனீ

2009/5/7 Hari Krishnan <hari.har...@gmail.com>



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

அரவிந்தலோசனன்

unread,
May 7, 2009, 4:27:46 AM5/7/09
to மின்தமிழ்
On May 7, 12:42 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
>
> அறிவியல் தான் கண்டதை வருணிக்கும்; சோதிக்கும். சோதனைக்குப் பிறகு
> முடிவைச்சொல்லும். இந்த முடிவுகள் காலப் போக்கில் மாறுவதுண்டு. சோதனை முறைகள்
> மேம்படும்போது புதிய கண்டுபிடிப்புக்கள் உதிக்கின்றன. அறிவியல்
> சொல்வதெல்லாம் "இப்போதைக்கு நாம் அறிந்த அளவுக்கு இது உண்மை" என்பதுவே.
>
> அறிவியல் தன்னால் அறியப் படாதது அதிகம் உண்டு என்பதை
> தயக்கமின்றி ஒப்புக் கொள்ளும். ஆனால் தன்னால் அறியப்படாத
> விஷயங்கள் மீது அலங்காரமான கற்பனைக் கோட்டைகளைக் கட்டாது.
> தெரிந்ததைச் சொல்லும். தெரியாததை தெரியாது என்று சொல்லும்.
>
> அறிவியலைப் புறந்தள்ளிவிட்டு நாம் கருத்துச் சொல்ல முற்படும்போது
> பேசும் விஷயங்களுக்கு எல்லை இருக்காது. கற்பனை அலங்காரங்களுக்குக்
> குறைவிருக்காது.


முதலில் திரு.சுகு பேசுவது அறிவியல் அல்ல என்பதை யார் முடிவு செய்வது?
அது அலங்கார வார்த்தை என்பதையும் யார் முடிவு செய்வது?
அறிவியல் செய்பவர்க்கும், அலங்காரம் (கவிதை) செய்பவர்க்கும் இயங்கு தளம்
ஒன்றே.
மொழிகள் வேறுபடுகின்றன. அணுகுமுறை வேறுபடுகின்றன.
உளத்துள் நிகழும் நிகழ்வுகளை அறியும் முறைகள் எவை? அதற்கான அணுகுமுறை
என்ன?
உளவியல் மருத்துவர் முழுக்க, முழுக்க அறிவியல் பூர்வமாக இயங்குகிறாரா?
'நான்' என்பது இல்லாத அறிவியலோ, அலங்காரமோ உண்டா?
இந்த 'நான்' என்பது என்ன? எங்கிருக்கிறது? மூளைதான் நானா? இதயம் 'நான்'
இல்லையா? சிறுநீரகம்?

அறிவியல் நீங்கள் பேசும் தளத்திலிருந்து பெயர்ந்து வெகுகாலமாகிவிட்டது.
60ம் ஆண்டு வாதங்களை 21ம் நூற்றாண்டில் வைத்துப் பார்ப்பது நம் பிழையே!
அறிவியலில் கவிதை இல்லைதான். ஆனால் அறிவியல் புதினம் உண்டு.
இப்போதைக்கு இது போதும் ;-)

அலோ!

annamalai sugumaran

unread,
May 7, 2009, 5:02:34 AM5/7/09
to minT...@googlegroups.com

அன்பின் ரெ.கா.,
 //அறிவியல் தான் கண்டதை வருணிக்கும்; சோதிக்கும். சோதனைக்குப் பிறகு
முடிவைச்
சொல்லும்//
  ஆமாம் ! தனக்கு கிடைத்த தகவல்களை மட்டும் கொண்டு ஆராயும் .
ஆனால் விருப்பு வெறுப்பு கொண்டது .கூறியவர் யார் எனப் பாக்கும். அவருக்கு
அறிவியல்  பின் புலம் ,அங்கிகாரம் மட்டும் இருக்கிறதா என்று பார்க்கும் !
அவருக்கு முழு உண்மை தெரிய வேண்டிய ,தேவை இல்லை .கிடைத்த தகவல்களை மட்டும் வைத்து ஒரு முடிவு கூறும் .அந்த முடிவு  மாறிக்கொண்டே இருக்கும் .
நான் கூறும் அக உண்மைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நமது பெரியவர்கள் பின்  ,வரும் சன்னதியினரின் நல வாழ்வுக்காக தந்து சென்றுள்ளனர் !இது வரை கூறப் பட்ட கருத்தில் மாற்றம் ஏதும்  யாராலும் செய்யப் படவில்லை .
.
இந்த முறைகள் எதுவும் ,இதை நம்பித்தான் ஆகவேண்டும் ,கேள்வியே கேட்க்கக்கூடாது எனக் கூறவில்லை .
பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த சித்தாந்தங்களின் மேல் தொடர் விவாதம் நடைபெற்று வந்துள்ளது .எனவேதான் இது இன்னும் இளமை மாறாமல் இருக்கிறது .  நவ கோடி சித்தர் எனக் கூறப் பட்டாலும் ,எந்த சித்தரும்
இந்தக் கருத்துக்களுக்கு புறம்பாக ஒன்றும் கூறியதில்லை .
வழி வழியாக   ஒரே கருத்தே மாறாமல் வந்துள்ளது .
நான் இது வரை பேசுவது பல ஆயிரம் ஆண்டுகளாக பேசியும் ,இன்னும் முழுமையாக அறிவியல் எனப்படும் மேல் நாட்டு அங்கிகாரம் பெறாதது .
ஆனால் இன்றைய அறிவியலின் முதல் கவனம் இப்போது இதில் தான் .
நான் பல நூறு ஆதாரங்களை விஞான கட்டுரைகளை இந்த துறைப் பற்றி காட்ட முடியும் .
அனால் நாம் பேசுவது இப்போது அதை விட உயர்ந்தது .
தன்னை அறிவது !
தன்னை தான் அறிவதை விட வேறு எந்தை அறிவது பயன்தரும் !
 biology geology ,statistics  எனப் படும் அறிவுகளை
தேடி அறிவதைவிட தன்னை தன்னிடம் உள்ளதை
அறிவதில் தப்பில்லை .
இதில் அறிவியல் பற்றியும் விவாதம் இல்லை .! தேவையும் இல்லை !
நான் அறிவியலுக்கு விரோதியும் இல்லை
எது அறிவியல் ,எது அறிவியல் இல்லை என்பதை காலம் தீர்மானிக்கும் .
இதில் அலங்காரம் ஒன்றும்  இப்போது தேவை இல்லை .
அகப் பொருள் அனைவருக்கும் கிட்டாது !
உள்ளதை மட்டும்  எதுவும்  கற்ப்பனை கலக்காது சுருக்கமாக தர முயற்ச்சிக்கிறேன் .!
எனவே கண்ணால் காணாததை அறிவியல் நம்பாது என கூறியதில் தவறு இல்லை என நினைக்கிறன் ..
அன்பு கூடத்தான் கண்ணால் பார்க்க முடியாது . ஆனால் இது இல்லை என கூற முடியுமா !

என்னமோ !உங்களுக்கு தெரியாததா ?


அன்புடன் ,
ஏ சுகுமாரன்

அன்பின் சுகு,

On May 7, 12:10 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> விஞ்ஞானம எதையும் நேரில்  கண்ணால்  கண்டால் தான் நம்பும் ! எனவே நமது பண்டைய
> சித்தர் இயல் ,உபநிஷத்துக்கள் இவைகளில் கூறப் பட்டிருக்கும் அந்தக்கரணம்
> என்பதில் உள்ள மனம் புத்தி சித்தம் ,அகங்காரம் இவைகள் அவர்களுக்கு தெரியாது
> ஏன் எனில் கண்ணுக்கு தெரியாது .
> எனவே இல்லை எனக் கொண்டனர்
> .எனவே பல செயல்களை அவர்கள் மூளையின் மேல் ஏற்றி மூளை தான் செய்வதாக
> கூறிவிட்டார்கள் .

அறிவியல் தான் கண்டதை வருணிக்கும்; சோதிக்கும். சோதனைக்குப் பிறகு
முடிவைச்

annamalai sugumaran

unread,
May 7, 2009, 5:13:23 AM5/7/09
to minT...@googlegroups.com
அன்பின் அரவிந்தலோசனன்  ,
 தாங்கள் வாதங்களுக்கு நன்றி !
இந்த தொடரை முழுமையாக முடித்துவிட்டால் ,இது எது குறித்து என்ன கூறுகின்றது என்பது தெளிவாக புரியும் என நினைக்கிறன்.
எனினும் தங்கள் பங்களிப்பிற்கு நன்றி !

அன்புடன் ,
ஏ சுகுமாரன்

2009/5/7 அரவிந்தலோசனன் <en.am...@gmail.com>

On May 7, 12:42 pm, "karthige...@gmail.com"

Amala Singh

unread,
May 7, 2009, 5:01:20 AM5/7/09
to minT...@googlegroups.com
எவன் எழுதுகிறானோ அவன் தான் அறிஞன். அறிவியல் என்பது மந்திரம் அல்ல.
மூளையில் இருந்து வெளிப்படுவது தான் அறிவியல். இவன் சொன்னான் அவன்
சொன்னான் என்பதை விடுங்கள். உங்களுக்கு என்ன தோணுது. இயல்பா எழுதுங்கள்.
நீங்கள் தான் விஞ்ஞானி.

உள்ளம் = உள்+அம்(உள்ளே இருப்பது)
எண்ணம் = எண்+அம்(இந்த வார்த்தை, நம்பர், அதாவது, ஒன்று, இரண்டு,
மூன்று)
மனம் = மன்+அம்(மன் என்பது ஆளுமை.மன்னன், மனிதன், மன்றம்,
ஒருவனின் ஆளுமை, ஆக்கம், உருவாக்கம்)

எழுதுவதற்கு முன்னால், வார்த்தைகளின் இடைவெளிகளைக்கவனிப்போம்.

இடைவெளிகளில் கூட பொருள் உளது. ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து
எழுதுவோம். ஏனென்றால், கவனிக்கவில்லை என்றால் உளறல் ஆகிவிடும்.

2009/5/7 அரவிந்தலோசனன் <en.am...@gmail.com>:

--
--
Nandri,
Amala Singh

நா.கண்ணன்

unread,
May 7, 2009, 6:15:10 AM5/7/09
to மின்தமிழ்
On May 7, 6:01 pm, Amala Singh <amalasi...@gmail.com> wrote:
> எவன் எழுதுகிறானோ அவன் தான் அறிஞன். அறிவியல் என்பது மந்திரம் அல்ல.

இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுவதால்தான் தமிழகத்தில் பகுத்தறிவும்
வளரவில்லை, அறிவியலும் வளரவில்லை.

அறியியல் புலத்தில் ஆழங்காட்பட்டவரோ, இல்லை ஆன்மீகத்தில் ஆழம் கண்டவரோ
இப்படிச் சொல்லமாட்டார்கள்.
எழுதுபவன் எல்லாம் அறிஞன் என்றுதான் தமிழகத்தில் சொல்லுகிறார்கள்.

அறிவியலை மந்திரமென்றும் யாரும் சொன்னதில்லை.

தமிழகத்தில் ஏகப்பட்ட சிந்தனைக் குழப்பம் இருப்பது தெரிகிறது!

> மூளையில் இருந்து வெளிப்படுவது தான் அறிவியல். இவன் சொன்னான் அவன்
> சொன்னான் என்பதை விடுங்கள். உங்களுக்கு என்ன தோணுது. இயல்பா எழுதுங்கள்.
> நீங்கள் தான் விஞ்ஞானி.
>

என்ன ஆணித்தரமான பதில். ஆனால் அறிவியல் எப்படி வேலை செய்கிறது என்று இவர்
அறியார் ;-)

அறிவியலில் proper citation, proper reference இல்லாமல் எதையும்
முன்வைக்க முடியாது. இதை அவன் சொன்னான், இவன் சொன்னான் category ல்
சேர்க்கலாமா? கூடாதா?

யோகம் என்பது முழுக்க, முழுக்க அறிவியல். அது சைவ மடத்தில் இருப்பதால்
அது அறிவியல் இல்லை என்றாகிவிடாது.

சுகுமாரன் சொன்னது போல் பல்லாயிரமாண்டு சோதனைகள் செய்தபின் விளைந்தவையே
யோகம். யோகம் செய்து அனுபவப்பட்டிருந்தால் இப்படியெல்லாம் எதையும் எள்ளி
நகையாடத் தோன்றாது.

வளரும் 21ம் நூற்றாண்டு அறிவியலில் எதுவுமே நகைப்பிற்கில்லை.

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.

அதுதான் விஞ்ஞானம் அல்லது அறிவியல்.


>> எழுதுவதற்கு முன்னால், வார்த்தைகளின் இடைவெளிகளைக்கவனிப்போம்.
> இடைவெளிகளில் கூட பொருள் உளது. ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து
> எழுதுவோம். ஏனென்றால், கவனிக்கவில்லை என்றால் உளறல் ஆகிவிடும்.
>

இதில் பொருள் உள்ளது. மௌனம் என்பதற்கு இட்டுச் செல்வதே யோகம்.
அங்கிருந்துதான் அனைத்தும் உருவாகின்றன.

கண்ணன்

devoo

unread,
May 7, 2009, 7:43:43 AM5/7/09
to மின்தமிழ்
May 7, 3:15 pm, நா.கண்ணன்
//அறிவியலில் proper citation, proper reference இல்லாமல் எதையும்
முன்வைக்க முடியாது.//

Proper citation, proper reference ஆன்மிகத்திலும் உள்ளதே.
அறிவியல் என்றால் ஒப்புக்கொண்டு விடுகின்றனர்.
ஆன்மிகத்தில் அவ்வாறு காட்டினால் நம்பிக்கை ஏற்படுவதில்லை.

’அன்பு’, ‘வெறுப்பு’, ’ஆழ் துயில்’ இவற்றுக்கு அறிவியல் ரீதியில் அலகு
நிர்ணயித்து எந்தக் கருவி கொண்டு அளப்பது ?

தேவ்

Raja sankar

unread,
May 7, 2009, 7:57:33 AM5/7/09
to minT...@googlegroups.com
என்னுடைய கருத்துக்கள்.

நாம் உணவு உண்பதால் நம் உடலுக்கு வெப்பம் கிடைக்கிறது. ஆனால் அது இரைப்பையில் தான் ஜீரணிக்கப்படுகிறது. இதே போல் சுவாசமும். ஆனால் வெப்பம் இரைப்பையால் மட்டுமே வருவதில்லையல்லவா?

கண்களால் நாம் பார்ப்பது மிகச்சிறிய அலைவரிசையே. காதல் கேட்பதற்கும் கேட்க முடியாத ஒலிகளுக்கும் அலை வரிசையே வேறுபாடு.

மனம் மூளை வேறுபாட்டை/ஒற்றுமையை புரிந்து கொள்ள சில கேள்விகள்.

1. நாம் தினமும் உறங்குகிறோம். எந்தக்கணத்தில் உறக்கம் நிகழ்கிறது? எப்படி விழிக்கிறோம்.

2. கற்றுக்கொள்ளும் செயல்கள் எவ்வாறு அனிச்சை செயலாக மாற்கின்றன? எ.கா. முதலில் வாகனம் ஓட்டும் போது கவனம் அதிகம் தேவை. சில வருடங்கள் பழகிய பின் காலும் கையும் அனிச்சையாகவே வண்டியை இயக்குகின்றன.

3. விளையாட்டிலோ, திரைப்படத்திலோ ஆழ்ந்திருக்கும் போது ஏன் மற்றயவை செவியில் விழுவதில்லை?(விழுகிறது நாம் கேட்பதில்லை?)


ராஜசங்கர்

Narayanan Kannan

unread,
May 7, 2009, 8:13:23 AM5/7/09
to minT...@googlegroups.com
2009/5/7 devoo <rde...@gmail.com>
ஆம்!
 
இந்து மரபில் விஞ்ஞானம் என்பது தனியான ஒரு துறை அல்ல. அது பரதத்துவத்தின் நீட்சியே. நமது பிரச்சனை என்னவென்றால், முறையான இந்தியக் கல்வி இல்லாமல் போய்விட்டது. நாம் கேட்டுக்கொண்டிருப்பதெல்லாம் ஆரம்பநிலைக் கேள்விகள். நமது அன்றையக் கல்வி முறையில், குறிப்பாக வேதாந்தக் கல்வியில் இக்கேள்விகளுக்கு பதில்கள் ஆரம்பக்கல்வி நிலையிலேயே அறியப்பட்டு மேற்கொண்டு விசாரத்திற்கு போயிருப்பர். வேதாந்த விசாரத்தில் பரிட்சயம் வர, வரத்தான் புரிகிறது, நாம் கேட்கும் கேள்விகளை நம் முன்னோர்களும் கேட்டு பதில் அறிந்துள்ளனர் என்று. அவர்களது கட்புலன் razor sharp இருப்பதை உணரமுடிகிறது. இப்போது கடவுள், மூடநம்பிக்கை அது இது என்று எல்லாம் குழம்பிக்கிடக்கிறது. பகுத்தறிவின் உச்ச கட்ட அறிதல்தான் இறைமை. அதை அடைவதற்குள் பூர்வ பக்ஷமாக நாம் பேசும் விஷயங்களெல்லாம் அலசி முடிந்துவிடுகின்றன. மிகத்தெளிந்த மனதும், கூர்மையான புத்தியும் இருந்தால்தான் இறைமையை உணர முடியும். ஏனெனில் அது சுத்த அறிவாக உள்ளது. அதற்கு மேலான அறிவொன்றும் இல்லை. ஆனால், அவ்வளவு புனிதக் கல்வி இன்று உதாசீனப்படுத்தப்பட்டு, எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்று கேள்வி கேட்க முடிகிறது. நம்மாலும் வாயை அடக்கிக்கொண்டு இருக்கமுடியவில்லை. என்ன செய்ய? 5 வருடம் இணையத்தில் குப்பை கொட்டிவிட்டால் முதல் நிலை பாடத்திட்டத்தை திரும்ப ஆரம்பிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். மேலே உயரவே முடியாது! ஒரே அலைவ்ரிசை அமைவது மிகக்கடினம், ஒரே பாடநிலை அமைவதும் கடினம். மின்வெளியில் ஒண்ணாம் வகுப்பு படிப்பவனும், முனைவர் பட்டம் வாங்கிவனும் ஒரே கிளாஸ் ;-)
 
க.>

Ratnam ji

unread,
May 7, 2009, 6:55:03 AM5/7/09
to minT...@googlegroups.com
என்னருமை நண்பர் சுகுஜிக்கு

மனம் தொட்டுவிடும் தூரத்திலிருந்தாலும் 
தொடபடாமல் இன்னும் ஆராய்வுக்கு 
வுட்பட்டே இருக்கிறது .....

சித்தர் பாடல்களில் பலவிடங்களில் 
புதிரான சித்தர் சொற்களிடயே 
இன்னும் புரிபடா பொருளாகவே 
மனம் இருக்கிறது.

இந்த மனமெனும் பேருண்மை 
புரிபட மனம் எனும் மய்போருளை 
நம் மனதால் அறிந்து உணர்ந்துகொள்ளவேன்ன்டும் ...

இம்மனமேனும் மெய் பொருளை 
வெளிபடையாக ஏட் டில்
எழுதி வெளியிட முயன்ற 
கோரக்கரை சட்டை முனிசித்தர்
நேரில் வாதிட்டு 
கோரக்கர் எழுதிய நூல்களை 
கிழிததெறிந்ததாக 
ஒரு செய்தி சித்தர் பாடலிலே
வுண்டு .....

மனமது செம்மையானால் 
மந்திரம் செபிக்கவேண்டாம்..
என்பர் அகத்தியர் ..

மனம் முதி ற்சி பெறின்
செம் மனம் என்றும் பெயர்பெறும் .. 

"செம்மனக் கிழவோர் அன்புதா வென்றுன் 
  சேவடி பார்த்திருந்த தலச 
  எம்மனம் குடிகொண்டிருபதற்கு யானார்
  என்னுடைய அடிமைதான் யாதோ ? "
என்று கருவூர்த்தேவர் பாடுகின்றார் ..(தி .9 ப 14 பா .6)

அடி முடி தேடி மாயோனும் மலரவனும் 
மயங்கி பின் மனமே மலரடியான் உறைவிடம் 
என்றறிந்து உணர்ந்தார்கள் என்பதை நாமறிவோம். 

மனம், மூச்சு எனும் வாலைக்கு அடிமை ..
வாலையை வசபடுதாத சித்தர்கள் எவருமில்லை ..
 எனில் வாலை என்பது யாது
எனும்கேள்வி எழும் 

மனம் என்பது என்ன 
அது இருக்கும் இடம் எது 
என்பனவற்றை சுகுஜி 
அவர்தம் முந்தய மடல்களில் 
எழுதி இருக்ககூடும் என்றே நம்புகிறேன்

அவர்தம்  முந்தய மடல்களை 
நான் முழுமையாய் படிக்கவில்லை
எனவே அவர்தம் கருத்தை ஓத்த
என் மடலடக்கங்களை பொறுத்தருள்க ....

மற்றவை நாளை மடலில் 

தமிழ் போக்கும் உன் அயர்ச்சி 

புகழ் சேர்க்கும் உன் முயற்சி ......

ரத்னம்ஜி 


 .


2009/5/6 annamalai sugumaran <amirth...@gmail.com>

Amala Singh

unread,
May 7, 2009, 6:56:42 AM5/7/09
to minT...@googlegroups.com
அறிவியல் விதிகளை உருவாக்குகிறார்கள். பரிட்சைக்கு பையன் மனப்பாடம்
செய்து போய் கொட்டுகிறான். ஆனால் புரிஞ்சிருக்கா என்று எப்படி பார்ப்பது.
அவன் உதாரணங்களுடன் விளக்கிச்சொல்லவேண்டும். தன்னுடைய சொந்த
வார்த்தைகளைத்தான் பயன்படுத்தவேண்டும். இதைத்தான் நான் சொல்றேன்.

மத்தவன் சொன்னத வாந்தி எடுக்காத. வள்ளுவர வாந்தி எடுக்காத. நீ உன் சொந்த
வார்த்தையில் குறள் எழுது. ஏன்னா மூளையில் புற்று நோய் என்றால், அது
வள்ளுவர் என்றாலும், வண்ணான் என்றாலும் ஒரே மாதிரி வைத்தியம் தான்.
வள்ளுவருக்கு இருக்கும் மூளைதான் உனக்கும் இருக்கு. அவருக்கு இருக்கும்
இருபத்து நாலு மணி நேரம்தான் உனக்கும்.

அதனால் யோகம், கபம் என்று மத்தவன் சொன்னது இருக்கட்டும். உன்னிடத்தில்
இருந்து என்ன விதமான வார்த்தைகள் வருது. நீ என்ன மாதிரி கொள்கைகளை
உருவாக்கமுடியும்? அதுதான் விஞ்ஞானம்.

2009/5/7 நா.கண்ணன் <nka...@gmail.com>:

--
--
Nandri,
Amala Singh

Tthamizth Tthenee

unread,
May 7, 2009, 9:28:12 AM5/7/09
to minT...@googlegroups.com
ஆரம்ப காலத்தில் அறிவியல் யாருக்குத் தெரியும்
அறிவியல் என்று இப்போது சொன்னால் புறிகிறது
 
நம்முடைய முன்னோர்கள் அன்றைய காலகட்டத்தில் அறிவியல் என்று சொன்னால் புரியாது என்று மிகத்தெளிவாக ஆரய்ந்துதான்
மெய்ஞானத்தை  உணர்த்தினர்
 
நம்முடைய முன்னோர்கள் மெய்ஞானம் என்று போதித்த அனைத்துமே
இன்றைய அறிவியலின் முதல் கரு
 
மெய்ஞானத்தில் இல்லாத எதுவுமே அறிவியலில் இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம்
 
அறிவியல் என்று பேசுபவர்களெல்லாம்  நன்றாக ஆராய்ந்து பார்ப்போம்
மெய்ஞானத்தில் இல்லாத ஏதேனும் ஒன்று அறிவியலில் இருக்கிறதா என்று
 
 
நம்முடைய ஞானிகள், சித்தர்கள், யோகிகள், முனிவர்கள்
எல்லோருமே மெய்ஞானத்தை நன்கு உணர்ந்து அதை எளிய மக்களுக்கு புரியும் படி சொல்லவேண்டும், எளிய மக்களும் அதை நன்கு உணரவேண்டும் என்பதற்காக ஆன்மீகவழியில் அனைத்தையுமே சொல்லி விட்டுச் சென்றனர்
 
நம் முன்னோர்கள் கூறிய ஆன்மீகத்தை நன்கு ஆராய்ந்தாலே
அதில் மெய்ஞானமும்  விஞானமும் இணைந்து இருப்பது புரியும்
 
நமக்கு எதையுமே அயல் நாட்டுக்காரர் வந்து சொன்னால்தான் உண்மை என்று நம்பவேண்டும் என்னும் ஒரு மனோபாவம் இருக்கிறது
 
இன்றைய அறிவியல் நிச்சயமாக  முந்தைய  மெய்ஞானமே என்பதில் சந்தேகமே இல்லை
 
இன்றைய அறிவியலில்  ஆழ் மனதை தட்டி எழுப்பி வைத்தியம் செய்யும் மனோதத்துவ நிபுணர்களாலும் இன்னும் மனம் என்பது என்ன .மனம் என்பது எங்கிருக்கிறது என்பது போன்ற விவரங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை
 
ஆகவே  அன்பு சுகுமாரன் அவர்களும் திரு கண்ணன் அவர்களும் கூறுவது போல  எல்லாம் அறிந்தவர் யாருமில்லை
 
ஆகவே எழுதுபவரை ஏளனம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு
 
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
 
ப்ரபஞ்ச வெளியில் இருக்கு கணக்கற்ற  எண்ணங்கள், ஒலிகள், இன்னும் பலவிதமான ரகசியங்கள் அனைத்துமே
நம் மனதின் வழியே ஏதோ ஒரு அலைவரிசையை தொடர்பு கொண்டே
 
நம் மூளை வழியாக  கருத்துகள் பறிமாறிக் கொள்கிறோம்
 
ஒவ்வொருவர்  அலைவரிசை அவரவர்  சக்திக்கேற்ற விதமாக தொடர்பு கொள்ளும் முறையில்  சிந்தனைகள் மாறுபடலாம்
 
இன்னும் அலசுவோம்
 
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
 
வேதம் வேதியலின்  முந்தைய  வர்க மூலம்
வேதமே அறிவீயலின் தந்தை
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 


 

annamalai sugumaran

unread,
May 7, 2009, 12:31:34 PM5/7/09
to minT...@googlegroups.com
அன்புள்ள திரு அமலா அவர்களே ,
 தாங்கள் கருத்துக்களுக்கு நன்றி .
தமிழ் சித்தர்கள்  18  என்பர் ஆனாலும் ,இன்னும்  அதிகம் உண்டு ,
அவர்கள் கண்ட வாழ்வியல் முறை ,வைத்திய முறை , அறிவியல் முறை ,
மற்றும் ரசாயனம் போன்றவற்றை இன்னும் ஒரு மறை பொருளாகவே
கருதி வருகிறோம் .
திருமூலர் எழுதிய திரு மந்திரமே இன்னும் சரியான முறையிலே
பகுத்தாயப்  படவில்லை .
அந்த உயர்ந்த தத்துவங்களை மறை பொருளாக உள்ள ரகசியங்களை தற்க்கால வாழ்வில் எப்படி பயன்படுத்தி ,வாழ்வில் வெற்றியையும் , என்றும் இன்பத்தையும் அடைவது என்ற உண்மையை அறிய நானெடுத்த சிறு முயற்சிதான் இந்த தொடர்! .
இதை  எனக்குப் புரிந்தது இதுவே! எனப் பெயரிட்டதற்கு   காரணமே ,இதில் வரக்கூடிய கருத்துக்களை எனது பாணியில் எனக்கு புரிந்த வழியில் கூறுவதற்குத்தான் !.
இதில் யாரையும்  எந்த மூலத்தை  நான் சுட்டிக்காட்ட  முதலில் விரும்பவில்லை .ஏன் எனில் அப்படி மூலத்தையும் ஆதாரத்தையும் காட்டி நான் ஒன்றும் ஆராய்ச்சிக் கட்ட்டுரை எழுதநினைக்கவில்லை !..
வழிவழி வந்த தமிழ் சித்தர்களின் அறிவியல் ஞானத்தை ,சரியான முறையில் வரும்கால இளைஞர் சமுதாயம் தெரிந்து பயன் படுத்த வேண்டும் என்ற ஒரு அவாவே காரணம் .
அவர்களின் அறிவியல் ஞானம் ஒன்றும் பத்தாம் பசலி இல்லை !
இன்றும் அது புத்திளைமை பெற்று ,மீண்டும் அது உலகை ஆழ கிளம்புகிறது !
இது தான் இன்று மேலை நாடுகளில் எதோ புதிதாகக் கண்டது போல் ,இன்று மாதம் தோறும் பல நூல்கள் பல லக்ஷம் பிரதிகள் விற்று  தீருகின்றன .!
நமது  நாட்டு பெரியோரும் அதை வாகிப் படித்து பாராட்டுகின்றனர் .!

எனவே நாமும் நமது முறைகளை நமது வழியில் எளிதாக  மீண்டும் நினைவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எனவே ஒரு முகவுரைப் போல் சித்தர் இலக்கியத்தில் உள்ள ரகசிய முறைகளை வாழிவில் பயன் படுத்தி
எப்படி இன்புற்று வாழ்வது என்பதை மிக சுருக்கமாக முனுரைப் போல்  கூறும் முயற்சி இது !
இதுவே ஒரு நூல் வடிவில் செய்யும் எண்ணம் உண்டு . இதை சற்று சுருக்கமாக மனதில் சென்று சேரவேண்டும் என சிறிய சொற்க்களை பயன்பயன்படுத்திக்கூறி  வருகிறேன் .!
இதையே வள வள என உரை வடிவில் எழுத வேண்டாம் என எண்ணியே மிக சுருக்கமாக ஒரு வரி ,,இரு வரியில் ஒவ்வொரு செய்தியும் வரும் படி எழுதுறேன் ..
இதைதவிர இதில் எந்த கவிதை எழுதும் முயற்சியும் இல்லை .!

உண்மையில் இந்த தொடர் முழுமை பெற்றதும் ,இது  இதுவரை எதை நோக்கி எத்தனை காலம் நடை போட்டது ,ஏன் உடலின் தத்துவங்களை இத்தனை விரிவாக எடுத்து கூறப் பட்டது எனப் புரியும் .!
உடலை புரிந்து கொள்ளுதலே ,முழுமையான அறிவு ,தன்னை அறிதலே ,எல்லா அறிவிலும் தலை சிறந்தது .!
இதில் நான் கூறுவது  அனைத்தும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சித்தர்களாலும் ,உபநிஷங்களிலும் கூறப்பட்டு வந்த ,,இது வரை மாறாமல் ஒரே வித உண்மையை கூறிவருவதை  மட்டுமே மீண்டும் மீட்டெடுக்கும் ஒரு சிறிய முயற்சி .
ஆனால் அந்த அறிவே மனித குலத்திற்கு இப்போது அவர்களின் எல்லாவித துயரங்களும் தீர்க்கும் விடிவாக அமையும் என நம்புகிறேன் .!
இந்த உண்மைகளை  அறிவியல் ரீதியில் அறிவியல் அறிஞர்களுக்கு  ,அவர்களின் முறைப்படுத்தப் பட்ட விதிகளின் படி வருங்காலம் விளங்க வைக்கும் என நம்புகிறேன் ஆனால் அதுவரை காத்திராமல் அவரவர்க்கு  புரிந்ததை ,தங்கள் வாழ்வில் பயன் படுத்தவே நான் வேண்டுகிறேன் .!

இதில்தலைப்புஎன்னமோ  எனக்குபுரிந்ததுஇதுவே!  என இருந்தாலும்
இத்தனையும் எனக்கு புரிந்ததாக கூறமுடியாது .!
இதனையும் புரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன் .!
இந்தப் பெயர் இல்லாமல் எனக்கு தெரிந்தது   இதுவே  ! எனக் கொடுத்தாலும் ,
இத்தனையும் எனக்கு தெரியுமா  ? என்ற தன முனைப்பு என்னைக் கெடுக்கும் !.

இன்னும் நானும் மாணவன் தான் , பயணத்தின் போதே  பயிலும் எண்ணத்துடன் தான் இந்தத்தொடரை துவங்கினேன் .!
பார்ப்போம் எங்கு சென்று நிற்கிறது என்று  ?
தங்கள் பங்களிப்பிற்கு  திரு கண்ணனின் ஆதரவிற்கு , திரு ரெ.காவின் வித்தியாசமான பார்வைக்கு ,,திரு  ,ஹரிகி., தமிழ் தேனீ ,கமலம் போன்றோரின்
அன்பிற்கும்  அரவிந்தலோசனன்,ரத்னம்ஜி போன்றோரின்
ஆதவிற்க்கும்  நன்றி .!
இந்த தொடர் தொடர இவர்கள் தரும் உற்சாகமே காரணம் .!


நன்றி !
அன்புடன்

ஏ சுகுமாரன்


2009/5/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

ஆரம்ப காலத்தில் அறிவியல் யாருக்குத் தெரியும்
அறிவியல் என்று இப்போது சொன்னால் புறிகிறது
 
நம்முடைய முன்னோர்கள் அன்றைய காலகட்டத்தில் அறிவியல் என்று சொன்னால் புரியாது என்று மிகத்தெளிவாக ஆரய்ந்துதான்
மெய்ஞானத்தை  உணர்த்தினர்
 
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !

annamalai sugumaran

unread,
May 7, 2009, 1:53:32 PM5/7/09
to minT...@googlegroups.com

நன்றி  திரு ரத்னம்ஜி ,
தாங்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி !

//இந்த மனமெனும் பேருண்மை

புரிபட மனம் எனும் மய்போருளை

நம் மனதால் அறிந்து உணர்ந்துகொள்ளவேன்ன்டும் .//

இந்த மனதை மனதை விட ஒரு படி உயயர்ந்த புத்தியால் தான் அறிய வேண்டும் .
சித்தி புத்தி விநாயகர் மனதின் உருவகம் !

//கோரக்கரை சட்டை முனிசித்தர்


நேரில் வாதிட்டு
கோரக்கர் எழுதிய நூல்களை
கிழிததெறிந்ததாக
ஒரு செய்தி சித்தர் பாடலிலே

வுண்டு ....//
 
ஆம் , உண்மைதான்
சித்தர் கோரகர் எழுதிய சந்திரலேகை என்னும் நூலில்
இந்த விபரம் உள்ளது .
கோரகர் எதையும் வெளிப்படையாக கூற விரும்புபவர் ,அவர் பல உண்மைகளை மிகத் தெளிவாக சந்திர லேகையில் கூறயுள்ளார் .
இதை  விரும்பாத மற்ற சித்தர்கள் அவருடன்  வாதிட்டு மனதின் மர்மங்களை அனைவரும் அறிய கூறக் கூடாது என தடுத்ததாக அவரே கூறுகிறார் .

இவ்வாறு நாம் பல உண்மைகளை ,வெகுஜன அறிவாக மாற்றாது இருந்ததால் தான் ,   இன்னும் நமது பாரம்பரிய அறிவு .,இன்னும்  மறைக்கப்பட்டு ,பயன்படாமல் இருக்கிறது .
நான் வெளிபடையாக பல உண்மைகளை இந்தத் தொடரில் கூறி இருக்கிறேன் .சற்று ஆழ்த்து இருமுறை படித்தால் பல புதிய செய்திகள் கிடைக்கும் .
தங்கள் பங்களிப்புக்கு நன்றி !
அன்புடன்

ஏ சுகுமாரன்


 


On 5/7/09, Ratnam ji <ratn...@gmail.com> wrote:
என்னருமை நண்பர் சுகுஜிக்கு

மனம் தொட்டுவிடும் தூரத்திலிருந்தாலும் 
தொடபடாமல் இன்னும் ஆராய்வுக்கு 
வுட்பட்டே இருக்கிறது .....

சித்தர் பாடல்களில் பலவிடங்களில் 
புதிரான சித்தர் சொற்களிடயே 
இன்னும் புரிபடா பொருளாகவே 
மனம் இருக்கிறது.

இந்த மனமெனும் பேருண்மை 
புரிபட மனம் எனும் மய்போருளை 
நம் மனதால் அறிந்து உணர்ந்துகொள்ளவேன்ன்டும் ...

இம்மனமேனும் மெய் பொருளை 
வெளிபடையாக ஏட் டில்
எழுதி வெளியிட முயன்ற 
கோரக்கரை சட்டை முனிசித்தர்
நேரில் வாதிட்டு 
கோரக்கர் எழுதிய நூல்களை 
கிழிததெறிந்ததாக 
ஒரு செய்தி சித்தர் பாடலிலே
வுண்டு .....

annamalai sugumaran

unread,
May 7, 2009, 2:29:59 PM5/7/09
to minT...@googlegroups.com

அன்புள்ள ராஜா சங்கர்
நல்ல பல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள் .
மிக சுருக்கமாக இதற்க்கு  இப்போது பதில் கூறி இருக்கிறேன் .
இந்த தொடர் முடிந்ததும் விரிவாக இவைகளைப் பற்றி அலசுவோம் ..


தங்கள் பங்களிப்புக்கு நன்றி !

//நாம் உணவு உண்பதால் நம் உடலுக்கு வெப்பம் கிடைக்கிறது. ஆனால் அது இரைப்பையில் தான் ஜீரணிக்கப்படுகிறது. இதே போல் சுவாசமும். ஆனால் வெப்பம் இரைப்பையால் மட்டுமே வருவதில்லையல்லவா?//

 உடலில் ஜாடராகினி என்னும் அக்னி உள்ளது அதுவே ஜிரணத்தை கவனிக்கிறது !உடலில் தேயுவின் கூறு உள்ளது .! வாக்கு அக்னி சுரூபம் !
உபநிஷதம் பஞ்சாகினிப பற்றி கூறிஉள்ளது ..
அது நித்தியாகினி எனப் படும் .
பிறகு இவைகளை விரிவாகப பார்ப்போம் .


//கண்களால் நாம் பார்ப்பது மிகச்சிறிய அலைவரிசையே. காதல் கேட்பதற்கும் கேட்க முடியாத ஒலிகளுக்கும் அலை வரிசையே வேறுபாடு. //

ஆமாம் !
காதால் கேட்ப்பது  audio frequency  20 -20,000 c/s

கண்களால் நாம் பார்ப்பது   vedio frequency    20,000 c/sஇதற்க்கு மேம்பட்டது
இதில் பல வரிசை --- நிறத்திற்கு தக்க படி உண்டு


 //நாம் தினமும் உறங்குகிறோம். எந்தக்கணத்தில் உறக்கம் நிகழ்கிறது? எப்படி விழிக்கிறோம்//

உறக்கம் நமது ஜிவனில் உள்ள பிராணன் களைபடியும் போது,  cosmic energy  பெறுவதற்காக உள்ள ஒரு நிரந்திர அமைப்பு .
 இது ஒரு வகையில் தினசரி தியானம் ! அவசியம் தேவையானது !
இது ஒரு  auto  ஏற்ப்பாடு .! அப்போது 'நான்' இல்லாமல் இருப்பதால்
தூக்கம் இன்பமாக இருக்கிறது .!
இதுவும் பிறகு விரிவாக பேசலாம் இதில் அறிதுயில் என்ன என்பதையும் பார்க்கவேண்டும் .

 //கற்றுக்கொள்ளும் செயல்கள் எவ்வாறு அனிச்சை செயலாக மாற்கின்றன? எ.கா. முதலில் வாகனம் ஓட்டும் போது கவனம் அதிகம் தேவை. சில வருடங்கள் பழகிய பின் காலும் கையும் அனிச்சையாகவே வண்டியை இயக்குகின்றன.//

பழக்கங்கள் குணமாக மாறுகிறது
அது ஒவ்வொரு முறை செய்யும் போதும் ஒரு பதிவை ஏறப் படுத்துகிறது !
அதுவே வாசனை !

வாசனை ஜன்மம்தோறும் தொடரும் .
குணங்களும் தொடரும் !

விளையாட்டிலோ, திரைப்படத்திலோ ஆழ்ந்திருக்கும் போது ஏன் மற்றயவை செவியில் விழுவதில்லை?(விழுகிறது நாம் கேட்பதில்லை?)

ஏன் உணர்வதில்லை என்றால் அந்த செயல் நடை பெறும் போது நமது மனம் கண்ணில் இருந்து செயல் படவில்லை !
மனம் செயல் படாமல் எந்த புலனும் வேலை செய்யாது , .இதை நான் இந்தத்தொடரிலேயே பல முறை விளக்கிவிட்டேன் .

அன்புடன்
எ சுகுமாரன்

 

 



On 5/7/09, Raja sankar <errajasa...@gmail.com> wrote:
என்னுடைய கருத்துக்கள்.

நாம் உணவு உண்பதால் நம் உடலுக்கு வெப்பம் கிடைக்கிறது. ஆனால் அது இரைப்பையில் தான் ஜீரணிக்கப்படுகிறது. இதே போல் சுவாசமும். ஆனால் வெப்பம் இரைப்பையால் மட்டுமே வருவதில்லையல்லவா?

annamalai sugumaran

unread,
May 7, 2009, 2:42:10 PM5/7/09
to minT...@googlegroups.com

annamalai sugumaran

unread,
May 7, 2009, 2:42:57 PM5/7/09
to minT...@googlegroups.com

உண்மை திரு கண்ணன் ,
நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் உண்மை .மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் .
இன்னும் இந்தக் கலை எனக்கு கைவசப் படவில்லை .

//மிகத்தெளிந்த மனதும், கூர்மையான புத்தியும் இருந்தால்தான் இறைமையை உணர முடியும். ஏனெனில் அது சுத்த அறிவாக உள்ளது. அதற்கு மேலான அறிவொன்றும் இல்லை.//

ஒரே உண்மையும் ,ஒரே ஞானமும் இறைமை ஒன்றே ! இது உணரல் மட்டுமே முடியும் .
ஞான யோகத்தில் வெல்வதை விட பக்தி யோகத்தில் ,மிக எளிதில்
இறைமையின் அணுக்கத்தில் போய் விடலாம் !
நன்றி !


அன்புடன் ,
ஏ சுகுமாரன்

On 5/7/09, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
2009/5/7 devoo <rde...@gmail.com>
May 7, 3:15 pm, நா.கண்ணன்
//அறிவியலில் proper citation, proper reference இல்லாமல் எதையும்
முன்வைக்க முடியாது.//

Narayanan Kannan

unread,
May 7, 2009, 7:15:29 PM5/7/09
to minT...@googlegroups.com
அன்பின் சுகுமாரன்:
 
இறையருளால் எழுத தலையெடுத்துள்ளீர்கள். தொடருங்கள்.
 
மனம், புத்தி, சித்தனை என்றெல்லாம் பேசும் போது இத்துறையில் பயிற்சி இல்லாத பலருக்கு குழம்பிவிடுகிறது. இங்கு யாராவது கற்றையியல் (குவாண்டம் பிசிக்ஸ்) பற்றிப் பேசினால் நமக்கு ஒன்றுமே புரியாது. ஒவ்வொரு துறைக்கும் பரிபாஷைகளுண்டு. இதை technical jargon என்பர். அத்துறை அறிவு பெற பரிபாஷை அவசியம். பரிபாஷையின் மூலமாகத்தான் சொல்லிற்கு விளக்கம் கிடைக்கிறது. (to define a term). இது மிக அடிப்படை. ஒரு சொல் எப்பயன்பாட்டில், எப்படி வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் அடுத்த நிலைப் புரிதலுக்குள் போகமுடியாது. இது ஞான மார்க்கத்தின் சிக்கல். அங்கு அணுகுமுறைப் பயிற்சி (methodology) முதலில் தேவை. நாங்கள் முனைவர் பட்டம் பெறும் முன் முதலில் அத்துறை methodology தெரிந்து கொள்ள ஒரு வருடம் செலவிடுவோம். அதன் பின் தான் ஆய்வு. இப்பயிற்சி வேதாந்த, சித்தாந்தங்களிலும் உண்டு. இதைப் பூர்வபக்ஷம் என்கின்றனர்.
 
உங்கள் நோக்கு மிக உயர்ந்த நோக்கு. எப்பயிற்சியும் இல்லாதோருக்கும் ஞான அருள் கிட்ட வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள். அது இறைமையுடன் நோக்கத்தக்கது.
 
உங்கள் மொழி எளிமையாக, அன்றாடச் சொற்களால் அமையும் போது, உடனே கேள்வி கேட்கத்தோன்றுகிறது. இது இயல்பு. எனவே மொழியை முதலில் செந்தரமாக்க வேண்டும் (standardize the word). இச்சொல், இன்ன பொருளில் கையாளப்படுகிறது என்ற பொதுப் புரிதலை உருவாக்க வேண்டும். இது துறைக் கல்வி என்பதால் இவ்வளவும் அவசியமாகிறது.
 
நாம் வாழும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானிகளை நம்புகின்ற அளவிற்கு சித்தர்களையும், யோகிகளையும் நம்புவதில்லை. காரணம், இந்திய மெஞ்ஞானம் மிகப்பழமையானதாக உள்ளது. ஆயிரம் கிளைகள் கிளைத்த பெருமரமாக உள்ளது. ஆயிரம் சம்பிரதாயங்கள், பல்லாயிரம் வழிமுறைகள் என்று பல்கிப் பெருகியுள்ளது. இதனால் ஒரு சாதாரண இந்தியன் குழம்பிப்போயுள்ளான். விஞ்ஞானிகளை நம்புவது எளிதாக உள்ளது. எப்போதும் கண்ணால் காண்பதைப் பற்றிப் பேசுவது எளிது.
 
கண்ணால் காணாத ஒரு அறிவியல் பற்றி இந்தியா பல காலமாகப் பேசிவருகிறது. எனவே அவர்களது அணுகுமுறையை (methodology) அறிந்தால் ஒழிய இப்புலத்திற்குள் நுழைவது கடினம்.
 
முடிந்தவரை விளக்கிச் சொல்லுங்கள். இத்துறை நம் எல்லோருக்குமே புதிதுதான்.
 
கண்ணன் 

2009/5/8 annamalai sugumaran <amirth...@gmail.com>

kamaladevi aravind

unread,
May 7, 2009, 7:54:47 PM5/7/09
to minT...@googlegroups.com
அன்புக்குரிய சுகுமாரன்,
                                    ஞானத்தால் தொழுவார் சிவஞானிகள்
                                     ஞானத்தால் தொழுவேன் ஞானலேன்
                                       ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு
                                       ஞானத்தால் உனை ஞானும் தொழுவேனே
இந்த ஆன்றோர் வாக்கு என்ன என்பதை அப்படியே   மனத்தாட் கொண்டவள் என்பதால்
நிங்ஙளின் கட்டுரைத்தொடரை இழை இழையாய் அனுபவித்து வருகிறேன்.
சித்தர்கள் வாழ்வியல் தத்துவம் என்பது சரணடைதலின் மற்றொரு கோணம் . சித்தர்கள் பற்றி
அவ்வளவு புத்தகங்கள் வாசித்திருக்கிறேன் என்பதால் சொல்லவரவில்லை.
நவமுத்திரை, தீட்சைவிதிகூட அவர்கள் நோக்கில் மிக மாறுபட்டவையே.
                               பூஜையிலே  ஓமங்யனமசிவ என்று
                                                  புருவமையம் சதாசிவத்தே சிவாயநமா என்று
                                பூஜையிலே சிவபூஜை கிரிகைபூஜை
                                               பூண்டபின்பு   நாற்பத்து முக்கோண பூஜை
                                பூஜையிலே வாமத்திற் சக்தி  பூஜை
                                               புருவமையத் தாயாரை பூஜை பண்ணே’
இந்த வரிகளை ஆன்றோர் ஒருவரே கேரளத்தில் எங்கள் இல்லம்  தேடி வந்து உபதேசித்துள்ளார்.
சிவநியாசம், சோடச நியாசம் , சடாதார நியாசம், நிராதர நியாசம் ,மாது  கர  நியாசம் பற்றி, தெளிவுபெறுதல் ஒன்றும் லேசு பாசு அல்ல.
முனைவர் கண்ணன் கூறியதுபோல் இறைமை உணர்வதும் கூட தியானமே.
நிங்ஙளின் கட்டுரைத்தொடரை வாசிப்பதே கூட எனக்கு  தியானமே.
தொடர்ந்து எழுதுங்கள்,  ஞான் இத்தொடரின் பரமரசிகை.
அன்புடன் கமலம்







From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Friday, May 8, 2009 12:31:34 AM
Subject: [MinTamil] Re: மனம் - மூளை. என்ன தொடர்பு? (முன்பு: எனக்குப் புரிந்தது இதுவே)

kamaladevi aravind

unread,
May 7, 2009, 8:00:19 PM5/7/09
to minT...@googlegroups.com
இப்போது கடவுள், மூடநம்பிக்கை அது இது என்று எல்லாம் குழம்பிக்கிடக்கிறது. பகுத்தறிவின் உச்ச கட்ட அறிதல்தான் இறைமை. அதை அடைவதற்குள் பூர்வ பக்ஷமாக நாம் பேசும் விஷயங்களெல்லாம் அலசி முடிந்துவிடுகின்றன. மிகத்தெளிந்த மனதும், கூர்மையான புத்தியும் இருந்தால்தான் இறைமையை உணர முடியும். ஏனெனில் அது சுத்த அறிவாக உள்ளது. அதற்கு மேலான அறிவொன்றும் இல்லை.

<<
இந்த தத்துவம் மட்டும் அறிந்திருந்தால் சர்ச்சைக்கே இடமில்லை. ஆத்மார்த்தமான சத்ய வாக்கு.
கமலம்



Narayanan Kannan

unread,
May 7, 2009, 8:05:17 PM5/7/09
to minT...@googlegroups.com
உண்மை கமலம்.
 
இறைமையின் முழுப்பரிமாணம் அறியமுடியவில்லையெனினும், அது எத்தகையது என்னும் சிறுஞானமேனும் இல்லாமல் அதை அணுக முடியாது. பக்தியின் உச்சத்தில் நிற்கும் திருவாய்மொழி பற்றிப் பேசும் போது நம்மாழ்வார் எப்போதும் `பரத்துவத்தில்` ஆழ்பவர் என்று சொல்வார்கள். பரஞானம் இல்லாமல் அவனை அடைவது எப்படி?
 
நமக்கு சிந்தனை செய்யவே இன்னும் தெரியவில்லை. சிந்தனை கடந்து நிற்கும் பரம் எப்படிக் கண்ணில் படும் ;-) இல்லையா?
 
கண்ணன்

2009/5/8 kamaladevi aravind gokul...@yahoo.com

kamaladevi aravind

unread,
May 7, 2009, 8:20:07 PM5/7/09
to minT...@googlegroups.com
முனைவர் கண்ணன்,
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றும் இல்லை
அவனன்றி ஊர்புகு மாற்றி   யானே
திருவாய்மொழி மட்டுமல்ல. எந்த நிலைக்குமே ஆத்ம ஞானமும் கூட அத்தியாவசியமே.
ஆனால் பரஞானம்--என்ன அழகான வரிகள்??
ஆயினும்   கூட  எல்லோருக்குமே அது சாத்யம்தானா?
கமலம்

Narayanan Kannan

unread,
May 7, 2009, 8:27:45 PM5/7/09
to minT...@googlegroups.com
2009/5/8 kamaladevi aravind <gokul...@yahoo.com>

ஆயினும்   கூட  எல்லோருக்குமே அது சாத்யம்தானா?
 
சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. அதற்கு முதலில் ஆர்வம் வேண்டும். சங்கம் 'பக்தியை' ஆர்வம் என்ற சொல்லால் விளிப்பதாக இ.பா சொல்வார். ஆர்வமிருந்தால் ஆசை வரும். ஆசை வந்தால் அடைய வேண்டுமென்ற துடிப்பு வரும். துடிப்பு வரும் போது படிப்பு வரும். படிப்பு வரும் போது பக்குவம் வரும். பக்குவம் வரும் போது ஓரளவு புரியும்.
 
இந்த நிலைக்கு வரவே எவ்வளவு பிரயாசைப்பட வேண்டியுள்ளது? எத்தனை பேருக்கு ஆர்வமிருக்கிறது?
 
கண்ணன் 
 

karth...@gmail.com

unread,
May 7, 2009, 9:29:40 PM5/7/09
to மின்தமிழ்
அலோ,

அறிவியல், hypothesis, experimentation, reproducability என்ற அடிப்படைக்
கொள்கையிலிருந்து
மாறிவிட்டதா? 21ஆம் நூற்றாணடில் இந்தக் கொள்கைகள் எப்படி
மாறியுள்ளன என நீங்கள் சொன்னால் கேட்டுக் கொள்ளுகிறேன்.

நான் அண்மையில் விக்கியில் கண்டது:

Science is the effort to discover and increase human understanding of
how reality works. Knowledge in science is gained through research.
Using controlled methods, scientists collect observable evidence of
natural phenomena, record measurable data relating to the
observations, and analyze this information to construct theoretical
explanations of how things work. The methods of scientific research
include the generation of hypotheses about how phenomena work, and
experimentation that tests these hypotheses under controlled
conditions. The results of this process enable better understanding of
past events, and better ability to predict future events of the same
kind as those that have been tested.

ரெ.கா.

karth...@gmail.com

unread,
May 7, 2009, 9:43:06 PM5/7/09
to மின்தமிழ்
ஹரிகி,

முதுகு உட்கார வைத்தாலும் உங்கள் அறிவு நிமிர வைக்கும்.
நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன் என்று சொல்வதை விட
வேறு சொல்ல் இல்லை. ஆனால் இதனூடே உள்ள ஒரு கேள்வி:

"புத்தி என்பது அனுபவங்கள்" சரி! இதன் இருப்பிடம் மூளை. சரியா?

> மனம் என்பது உணர்ச்சிகளின் மையம். ஆசைகள்,
> உணர்ச்சிகள் எல்லாம் கிளைக்கும் ஊற்றுக்கண்.

சரி! இதன் இருப்பிடம் எங்கே? என் வாதம் இதுவும் மூளையின்
ஒரு பகுதியே என்பது. மனம் என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதி
எனவும் அதுதான் மூளையை இயக்குகிறது எனவும் சுகு கூறுகிறார்.
(சுகு, இது பிழையானால் திருத்துங்கள்.)

இல்லை. மூளைதான் தனது databankஇலிருந்து விஷயங்களை எடுத்து
அலசி, பின்னி, எல்லாவிதமான விவாதங்களையும் பண்ணி இறுதியில்
ஒரு முடிவுக்கு வந்து உடலைச் செயலில் இறங்க வைக்கிறது என்கிறேன்.

மூளைக்கு வெளியே ஒரு சக்தி இருப்பதென்பது நீங்கள் சொல்லும்
புலன்களால் பெறப்படும் stimiliதான். இதற்கு ஒரு மகத்துவமும் இறைத்துவமும்
அளிக்க வேண்டியதில்லை.


ரெ.கா.


On May 7, 2:24 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/5/6 karthige...@gmail.com <karthige...@gmail.com>

அரவிந்தலோசனன்

unread,
May 7, 2009, 9:57:20 PM5/7/09
to மின்தமிழ்
அன்பின் ரெ.கா:

அறிவியலின் அடிப்படை tenants மாறவில்லை. ஆயின், அதன்
'அடக்கம்' (humility) கூடியுள்ளது. நியூட்டோனியன் இயற்பியல் ஐன்ஸ்டைன்
வந்தவுடன் எப்படித் தலைக்கீழாக மாறியதோ, அது போல் கற்றையியல் வந்தபின்
அறிவியல் நோக்கு என்பது probability என்பதை வித்தியாசமாக
நோக்கத்தலைப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டுவரை அறிவியலின் பின்புலம் யூத-
கிறிஸ்தவ தத்துவப்புலமாக இருந்து வந்த நிலை மாறி 20-21ம் நூற்றாண்டு
அறிவியல் இந்து, பௌத்த தத்துவ ஞானத்தை பின்புலமாகக்
கருதத்தொடங்கியுள்ளது. இந்து, பௌத்த தருக்கவாதம் (logic) இப்போது
ஆதரவுடன் (sympathetic) புரிந்து கொள்ளப்படுகிறது. Indian mysticism
என்பதில் மறைந்திருக்கும் அறிவியல் கூறுகளை 'வெட்கமின்றி' (without
inhibition) பார்க்கத்துணிந்துள்ளனர்.

இப்பின்னணியில்தான் புதிய கற்றையியல், வானவியல் போன்றவை செயல்படுகின்றன.
இதன் புதிய வளர்ச்சி மனோதத்துவம். அங்கு ஆய்வுகள் இதுவரை கேட்கக்
கூச்சப்பட்ட விஷயங்களை கூச்சமின்றிக் கேட்கத்தலைப்பட்டுள்ளனர்.
இதிலொன்றுதான் நாம் பேசும் விஷயங்கள்.

மனம் என்பது மூளைக்குள் அடங்குமா? அடங்காதா?

சுவிஸ் நாட்டில் நடத்திய ஒரு பெரும் இயற்பியல் ஆய்வு, எல்லோரும்
எப்போதும் தொடர்புடன் இருக்கிறோம் என்று காட்டியது. இதை Nonlocality
(http://en.wikipedia.org/wiki/Non-local) என்பர். பிரித்து அனுப்பிய
இரண்டு இலத்திரன் துகள்கள் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும்
ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பதைக் கண்டனர். இது எப்படி சாத்தியப்படும்
எனில், இவைகள் ஒரே matrixல் இருந்தால் ஒழிய! இதை நோக்கும் போது
ஆதிசங்கரர் சௌந்தர்யலகரியில் கூறும் உவமானம் (தேவ் சுட்டு) சரியாகப்
பொருந்துவதைக் காணலாம். நாராயணன் என்ற சொல்லில் புதைந்துள்ள உண்மைப்
பொருள் விளங்குவதைக் காணலாம். அவர்களுக்கு ஈதெல்லாம் தெரியாது. ஆனால்
நமக்குத்தெரியும். ஏனெனில் இது பற்றி நம்மவர் பேசியுள்ளனர். எனவே,
இப்படிக் கதைப்பது இனிமேலும் கேலிக்குரியது அல்ல. பெரியார் பதப்படுத்தல்
(mental conditioing by Periyarism) இனிமேலும் எடுபடாது. 50-60 களில்
படித்தவர்கள் இப்பதப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இப்போது
விழித்துக்கொண்டால் நல்லது. மேலும் இலக்கியத்திலும் பின்நவீனத்துவம்
எல்லாவற்றையும் கட்டுடைக்கிறது. அதில் பெரியாரிசமும் உள்ளடி வாங்குகிறது.

பகுத்தறிவு என்பதை புதிய விளக்கொளியில் புரிந்து கொள்ள வேண்டிய
காலக்கட்டத்தில் உள்ளோம்.

உங்களால் lateral thinking செய்யமுடிகிறது. அதே நேரம் கட்டற்ற தாவல்
இன்னும் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. புவியீர்ப்பில் இருக்கவே
பழகியிருக்கிறீர்கள். அதுவே உங்களுக்கு பாதுகாப்பு என்றும்
நம்புகிறீர்கள். ஆயினும் கனவுலகில் கட்டற்று சஞ்சாரிப்பதால் நல்ல
நாவலாசிரியராகவும் இருக்கிறீர்கள். உங்களை ஆராய்வதே புதிய வழித்தடம்
அமைக்கும்.

அலோ!

On May 8, 10:29 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:

karth...@gmail.com

unread,
May 7, 2009, 10:11:24 PM5/7/09
to மின்தமிழ்
அன்பின் சுகு,

இது நட்பு முறையிலான உரையாடல் என்ற முன்னுரையுடன்
தொடங்குகிறேன். இது யார் வாதம் வெற்றி பெறுகிறது என்பதைப்
பற்றியதல்ல. நம் அறிவைத் தெளிவைப் படுத்திகொள்ளத்தான்
இதில் ஈடுபடுகிறோம். ஒப்புதல் இல்லையானாலும் இந்த உரையாடல்
நடப்பதே அறிவுக்கு ஒரு ஆதாயம்தான்.

On May 7, 5:02 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:

>   ஆமாம் ! தனக்கு கிடைத்த தகவல்களை மட்டும் கொண்டு ஆராயும் .
> ஆனால் விருப்பு வெறுப்பு கொண்டது .கூறியவர் யார் எனப் பாக்கும். அவருக்கு
> அறிவியல்  பின் புலம் ,அங்கிகாரம் மட்டும் இருக்கிறதா என்று பார்க்கும் !
> அவருக்கு முழு உண்மை தெரிய வேண்டிய ,தேவை இல்லை .கிடைத்த தகவல்களை மட்டும்
> வைத்து ஒரு முடிவு கூறும் .

அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோர்க்கு விருப்பு வெறுப்பு இருக்கிறது என
நீங்கள்
கூறுவது பிழை. விருப்பு வெறுப்பு இல்லாமல் முற்சார்பு (prejudice)
இல்லாமல்
ஈடுபடுபவர்களே அறிவியலாளர்கள்.

கூறியவருக்கு அறிவியல் அங்கீகாரம் இருப்பதும் இல்லாததும் முக்கியமே அல்ல.
பெரும்பாலும் அறிவியல் ஆய்வில் கிழித்தெறியப்படுபவர்கள் சக
அறிவியலாளர்களே.

மற்றபடி நீங்கள் கூறு கருத்து எதற்கும் நான் எதிரானவன் அல்ல. என்னுடைய
ஒரே
பிரச்சினை நான் எஅதையும் அவ்வளவு எளிதுஇல் நம்பிவிடுபவன் அல்ல.
"நம்பித்தான் ஆகவேண்டும்" என ஒருவர் வற்புறுத்தும்போது எனது அவநம்பிக்கை
மேலும் கூடுகிறது.

என்ன செய்வது? தீராத வியாதி போலும். ஹரிகியின் முதுகுவலிபோல் இருந்தால்
சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மாமலையில் உள்ள மருந்து
கிடைக்கலாம்.
என்னது உடன் பிறந்தது.

ரெ.கா.


karth...@gmail.com

unread,
May 7, 2009, 10:14:20 PM5/7/09
to மின்தமிழ்
அன்பின் கண்ணன்,

On May 7, 6:15 pm, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:
> On May 7, 6:01 pm, Amala Singh <amalasi...@gmail.com> wrote:

> சுகுமாரன் சொன்னது போல் பல்லாயிரமாண்டு சோதனைகள் செய்தபின் விளைந்தவையே
> யோகம். யோகம் செய்து அனுபவப்பட்டிருந்தால் இப்படியெல்லாம் எதையும் எள்ளி
> நகையாடத் தோன்றாது.
>

இந்த இழையில் யோகத்தின் சிறப்புக்கள் குறித்து எழுதுபவர்கள் அனைவரும்
யோகம் செய்து அனுபவப்பட்டுத்தான் எழுதுகிறார்களா?

ரெ.கா.

karth...@gmail.com

unread,
May 7, 2009, 10:20:32 PM5/7/09
to மின்தமிழ்

கண்ணன்,

On May 7, 8:13 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> மிகத்தெளிந்த மனதும், கூர்மையான
> புத்தியும் இருந்தால்தான் இறைமையை உணர முடியும். ஏனெனில் அது சுத்த அறிவாக
> உள்ளது. அதற்கு மேலான அறிவொன்றும் இல்லை. ஆனால், அவ்வளவு புனிதக் கல்வி இன்று
> உதாசீனப்படுத்தப்பட்டு, எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்று கேள்வி கேட்க
> முடிகிறது. நம்மாலும் வாயை அடக்கிக்கொண்டு இருக்கமுடியவில்லை. என்ன செய்ய? 5
> வருடம் இணையத்தில் குப்பை கொட்டிவிட்டால் முதல் நிலை பாடத்திட்டத்தை திரும்ப
> ஆரம்பிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். மேலே உயரவே முடியாது! ஒரே
> அலைவ்ரிசை அமைவது மிகக்கடினம், ஒரே பாடநிலை அமைவதும் கடினம். மின்வெளியில்
> ஒண்ணாம் வகுப்பு படிப்பவனும், முனைவர் பட்டம் வாங்கிவனும் ஒரே கிளாஸ் ;-)
>

இவையெல்லாம் ஏற்கனவேயே முடிவு செயப்பட்டுவிட்ட விஷயங்கள்; விவாதத்திற்கு
அப்பாற்பட்டவை
என்றால் கட்டுரையின் தொடக்கத்திலேயே அதனை அறிவித்து விடுதல் நல்லது.
இல்லையென்றால் இந்த திறந்த அரங்கத்தில் சுதந்திரமாகப் பேசலாம் என
நினைத்து
வரும் என் போன்றவர்களுக்கு எமாற்றம் நேராது.


ரெ.கா.

Narayanan Kannan

unread,
May 7, 2009, 10:33:17 PM5/7/09
to minT...@googlegroups.com
அன்பின் ரெ.கா:
 
விவாதப் பிதாமகர் தாங்கள்தான் என்றாலும், விவாதம் பிறரால் கடத்தப்படுவதை நாம் கண்டுள்ளோம். எனவே அச்சுட்டு உங்களுக்கானதல்ல. தாங்கள் இங்கு கொண்டு வந்திருக்கும் கரு மிகமுக்கியமானது. ஜே.கிருஷ்ணமூர்த்தி, டேவிட் பாம் உரையாடலில் இக்கரு வருகிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்திய மரபில் வரும் ஒரு mystic. டேவிட் பாம் கடைந்தெடுத்த மேலைக்கலாச்சார விஞ்ஞானி. ஐன்ஸ்டைனுக்கு அடுத்த நிலையில் வைத்து பேசப்படுபவர். அவரும் நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்கிறார். இந்தப் புரிதலில் 'மூளையின்' role என்ன? அதுவெறும் கருவியா? இல்லை அதுவே மூலமா? அவர்கள் கண்ட விடையைச் சொல்லப்போவதில்லை. நாமே புரிந்துகொள்வதே நலம் பயக்கும்.
 
ஆயின், காலையில் சுட்டியபடி நமக்குள் சில அளவுகோல்கள், பரிபாஷைப் புரிதல்கள் மிக அவசியம் இல்லையெனில் மீண்டும், மீண்டும் புதரடி செய்து கொண்டிருப்போம் (beating around the bush).
 
கண்ணன்

Kannan Natarajan

unread,
May 7, 2009, 10:37:48 PM5/7/09
to minT...@googlegroups.com
> மனம் என்பது உணர்ச்சிகளின் மையம்.

ரெ.கா அவர்களின் கூற்று நடைமுறை அறிவியலின் உண்மை. மனித முளையில் உள்ள "limbic system" நம் மனம், உணர்ச்சி, ஆகியவைகளைக் கூறுபடுத்தி ஆய்ந்து காலத்திற்கு ஏற்றவாறு  சில நரம்புத் தொடர்புடைய இயக்கு நீர்களின் (Dopamine,Serotonin,Epinephrine) அளவிற்கு ஏற்ப வெளிப்படுத்துவதே மனம்.

அகிலத்தில் பல நரம்பியல் தொடர்பான நோய்களைப் பற்றியும், மனிதனின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத (unreasonable) நடத்தை தொடர்புடைய நோக்கங்களையும், நடு மூளையில் உள்ள நம் மனநிலையை நாள்தோறும் சிறப்பாக வழிநடத்தும் limbic system - உட்பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டும், புதியச் செய்திகள் கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற இனங்களின் தத்துவஞானத்தை ஒரு வட்டத்தொடு கோடு (tangential) அளவில் தான் அறிவியல் ஏற்குமே அன்றி, தத்துவம் - அறிவியல் மகுத்துவம் பெறாது. தத்துவம் பேசுவோரும் அறிவியலை ஏற்க தயக்கம் காட்டுவதும், இதே நிலை தான்.

சிலரின் விடைகளைப் பார்க்கும் போது - மனம் செய்யும் வேலைகள், ஒரு இனத்தின் (நல்ல (அ) தீய) குணம் காட்ட வல்லது என தெரியவருகிறது!

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

karth...@gmail.com

unread,
May 7, 2009, 11:26:12 PM5/7/09
to மின்தமிழ்
அலோ,

அறிவியல் தனது கருத்துக்களைத் தொடர்ந்து சுய பரிசோதனை
செய்து மாற்றிக் கொண்டும் புதிப்பித்துக் கொண்டும் இருக்கிறது.
இது தெரிந்த விஷயம்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
சொல்லப்பட்டது முற்ற முடிந்த முடிவு. அது பயபக்தியுடன்
ஏற்கப்பட வேண்டும் என அது ஒரு நாளும் சொல்லாது.
"அடக்கம்" அதன் உறுப்புக்களில் ஒன்று.

தனக்குத் தெரியாதவற்றை அறிவியல் ஒரு ஆர்வத்தோடு
ஆராய முற்படுமே தவிர மறுக்காது. ஆகவே எந்தப் புதிய
கருத்தாக்கமும் அதற்கு விரோதமானதாக அது கருதாது.

சித்தர்கள் முதல் தீபக் சோக்ரா வரை அது ஆராய்ந்து கொண்டுதான்
இருக்கும். அதிலிருந்து வெளிப்படும் சோதிக்கப்பட்ட, நிருபிக்கப்பட்ட
உண்மைகளை நான் ஏற்பேன். ஒரு புதிய கருத்து வெளிப்பட்டவுடன்
அதனை விழுங்கிச் செரிக்க வேண்டும் என்ற அவசரம் எனக்கில்லை.


கீழே உள்ளவற்றில் என்னைப் பற்றி நீங்கள் செய்யும் எந்த அனுமானமும்
அறிவியல் பூர்வமானதல்ல. Assumபptions and speculations.
ஏன் விவாதத்தை விட்டுவிட்டு விவாதிப்பவரை ஆராய்கிறீர்கள்?

ரெ.கா.

Raja sankar

unread,
May 7, 2009, 11:28:30 PM5/7/09
to minT...@googlegroups.com
அன்பின் சுகுமாரன்,

வாசனை, குணம், பழக்கம் இவையெல்லாம் விவாதித்து அறிந்து கொள்பவை அல்ல என்பதே என்னுடைய கருத்து. சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியாது அல்லவா?

இருசக்கர வாகனம் ஓட்டுவதை ஏதேனும் புத்தகம் படித்து அறிய முடியாது. அதை ஓட்டி சில முறை கீழே விழுந்து எழுந்தால் தான் அத்திறமை வருவது போல.

பருப்பொருள் சக்தியாவது சக்தி பருப்பொருளாவது உயிரற்றது உயிருள்ளதாவது உயிருள்ளது உயிரற்றதாவதும் தொடர்ந்து நடக்கிறது.

அன்பின் ரெகா

//இல்லை. மூளைதான் தனது databankஇலிருந்து விஷயங்களை எடுத்து

அலசி, பின்னி, எல்லாவிதமான விவாதங்களையும் பண்ணி இறுதியில்
ஒரு முடிவுக்கு வந்து உடலைச் செயலில் இறங்க வைக்கிறது என்கிறேன்.

மூளைக்கு வெளியே ஒரு சக்தி இருப்பதென்பது நீங்கள் சொல்லும்
புலன்களால் பெறப்படும் stimiliதான். இதற்கு ஒரு மகத்துவமும் இறைத்துவமும்
அளிக்க வேண்டியதில்லை.
//

நீங்கள் உறங்கும் போது கொசு கடித்தால் தட்டுகிறீர்களே அது மூளையில் இருந்தா நடக்கிறது? அப்போது எவ்வாறு மூளை அலசி ஆராய்கிறது?

ராஜசங்கர்



Narayanan Kannan

unread,
May 7, 2009, 11:32:04 PM5/7/09
to minT...@googlegroups.com

>
 இந்த இழையில் யோகத்தின் சிறப்புக்கள் குறித்து எழுதுபவர்கள் அனைவரும்
யோகம் செய்து அனுபவப்பட்டுத்தான் எழுதுகிறார்களா?

மருத்துவக் கல்லூரிக்கு போகும் மாணவர்களுக்கு உயிரியல் துறை சார்ந்த பரிட்சயம் மிக அவசியம். அக்கருத்தில் சொல்லப்பட்டது.
இங்கு பேசும் விஷயங்கள் அனைத்தும் மனிதனுக்கு புறமானவையன்று. நாம் நம்மைப் பற்றிப்பேசிக்கொண்டிருக்கோம்.
நம்முள் செல்வதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. அதில் பரிட்சயம் இருந்தால் சில விஷயம் சட்டெனப்புரியும்.
இலக்கியப்பரிட்சமே இல்லாத ஒருவருக்கு அனிச்சம் பூவிற்கும், பெண்ணிற்குமுள்ள சம்பந்தம் புரியாது. அம்மட்டே அக்கருத்து.
 
கண்ணன்

Kannan Natarajan

unread,
May 7, 2009, 11:36:17 PM5/7/09
to minT...@googlegroups.com
> நீங்கள் உறங்கும் போது கொசு கடித்தால் தட்டுகிறீர்களே அது மூளையில் இருந்தா நடக்கிறது?
> அப்போது எவ்வாறு மூளை அலசி ஆராய்கிறது?

Tactile stimulation - ஊறுணர்வுப் புலஞ்சார்ந்ததும் மூளையின் கட்டுப்பாடு தான்.

Raja sankar

unread,
May 7, 2009, 11:36:57 PM5/7/09
to minT...@googlegroups.com
நண்பர்களுக்கு,

மூளைஅதன் செயல்பாடு பற்றி அறிய விரும்பினால்,

http://en.wikipedia.org/wiki/Cognitive_bias

http://en.wikipedia.org/wiki/Cognitive_dissonance

http://www.brainrules.net/ - இந்த தளம் விரிவாக வீடியோவோடு விளக்கும்.


Born believers: How your brain creates God


http://www.newscientist.com/article/mg20126941.700-born-believers-how-your-brain-creates-god.html?full=true - கடவுள் மூளையால் உருவாக்கப்படுகிறார் என வாதிடும் தளம்.


http://www.amazon.com/exec/obidos/ISBN=0060186399/theatlanticmonthA/ref=nosim/

http://video.google.com/videoplay?docid=6492494150503430511&q=brain&total=54157&start=0&num=10&so=0&type=search&plindex=9 - இந்த வீடியோ மூளை பற்றிய ஆராய்ச்சி பற்றி விவாதிக்கிறது.


ராஜசங்கர்




devoo

unread,
May 7, 2009, 11:37:47 PM5/7/09
to மின்தமிழ்
May 7, 10:53 pm, annamalai sugumaran

//இவ்வாறு நாம் பல உண்மைகளை ,வெகுஜன அறிவாக மாற்றாது
இருந்ததால்தான்,இன்னும் நமது பாரம்பரியஅறிவு இன்னும்
மறைக்கப்பட்டு ,பயன்படாமல் இருக்கிறது.//


இது உண்மைதான்; ஆனாலும் இவ்வாறு அவர்கள் செய்ததற்கு ஒரு வலிமையான காரணம்
உள்ளது என்றே எண்ணுகிறேன்.
எந்த ஓர் ஆற்றலும் தவறான கைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது
என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர்.

அறிவியல் தவறான விதத்தில் பயன்படுவதால் அழிவிற்குக்
காரணமாகி விட்டது. அரக்கர்கள் தவ ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தினர்.

தேவ்

Narayanan Kannan

unread,
May 7, 2009, 11:39:57 PM5/7/09
to minT...@googlegroups.com
அன்பின் கண்ணன்:
 
பிரபஞ்ச செயல்பாடு மிக விநோதமானது. இது அங்கிருக்கிறது, இங்கிருக்கிறது, என்று பிரித்துக்கொண்டே போனால் கடைசியில் ஒன்றும் இருப்பதில்லை
 
The Power of Ten என்பது இதை விளக்கும் நல்ல வீடியோ!
 
 
மூளை ஒரு உறுப்பு. அதன் செயல்பாடே அதிவிநோதம்தான் ;-)
 
கண்ணன்
 


 
2009/5/8 Kannan Natarajan <thar...@gmail.com>

Hari Krishnan

unread,
May 8, 2009, 1:11:09 AM5/8/09
to minT...@googlegroups.com


2009/5/8 Narayanan Kannan <nka...@gmail.com>

அதில் பரிட்சயம் இருந்தால் சில விஷயம் சட்டெனப்புரியும்.

பரிச்சயம்?

--
அன்புடன்,
ஹரிகி.

karth...@gmail.com

unread,
May 8, 2009, 1:14:16 AM5/8/09
to மின்தமிழ்
ஆமாம்! அதற்கு நான் பிரபஞ்சத்திலிருந்து கட்டளை ஏதும்
பெறவேண்டியதில்லை. க.ந.வுக்கு நன்றி.

ரெ.கா.

Narayanan Kannan

unread,
May 8, 2009, 1:44:42 AM5/8/09
to minT...@googlegroups.com
2009/5/8 Hari Krishnan <hari.har...@gmail.com>



2009/5/8 Narayanan Kannan <nka...@gmail.com>

அதில் பரிட்சயம் இருந்தால் சில விஷயம் சட்டெனப்புரியும்.

பரிச்சயம்?
 
நன்றி அண்ணா. முதுகுவலி எப்படியுள்ளது? கவிஞர்களை அணுகக்கூடாது என்று கட்டளை பிறப்பித்துவிடவேண்டியதுதான்;-)
முதுகுவலிக்கு இங்கொரு யோகப்பயிற்சி முறை காட்டப்பட்டதே. கவனித்தீர்களோ?
நான் முன்னெச்சரிக்கையாக செய்துவருகிறேன்!
 
க.>

annamalai sugumaran

unread,
May 8, 2009, 8:12:17 AM5/8/09
to minT...@googlegroups.com

//இது நட்பு முறையிலான உரையாடல் என்ற முன்னுரையுடன்


தொடங்குகிறேன். இது யார் வாதம் வெற்றி பெறுகிறது என்பதைப்
பற்றியதல்ல. நம் அறிவைத் தெளிவைப் படுத்திகொள்ளத்தான்
இதில் ஈடுபடுகிறோம். ஒப்புதல் இல்லையானாலும் இந்த உரையாடல்

நடப்பதே அறிவுக்கு ஒரு ஆதாயம்தான்.//

இதில் எனக்கு சந்தேகமே இல்லை !
இதில் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை .
ஏன் எனில் இத்தகைய வாதங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்கின்றன !
இதில் தவறு யார் பக்கமும் இல்லை !
வெற்றி தோல்வியும் இல்லை ! வருத்தமும் இல்லை !
இதில் தவறு சரிவர புரிந்தவர்களால் மற்றவர்க்கு  சரிவர   புரியவைக்க இயலவில்லை என்பதே உண்மை .!

 

மற்றபடி நீங்கள் கூறு கருத்து எதற்கும் நான் எதிரானவன் அல்ல. என்னுடைய
ஒரே
பிரச்சினை நான் எஅதையும் அவ்வளவு எளிதுஇல் நம்பிவிடுபவன் அல்ல.
"நம்பித்தான் ஆகவேண்டும்" என ஒருவர் வற்புறுத்தும்போது எனது அவநம்பிக்கை
மேலும் கூடுகிறது.

என்ன செய்வது? தீராத வியாதி போலும். ஹரிகியின் முதுகுவலிபோல் இருந்தால்
சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மாமலையில் உள்ள மருந்து
கிடைக்கலாம்.

என்னது உடன் பிறந்தது..

நான் கூறப் புகுந்தது சித்தர்கள் வழியில் நமது உடலில் உள்ள மர்மம்களையே .!
அதற்க்கு நவீன அறிவியலார் என்னப் பெயர் வேண்டுமானாலும்  இப்போது வைத்திருக்கலாம் அல்லது கூறலாம் . !
At frist we will take stock , then we will find out how to use effectively for our own llife ! !
ஆனால் முழுமையும்  முடித்துவிட்டால் ., சில வேளை விவாததிர்க்கே வேலை இராது போகலாம் !

அன்புடன்
ஏ சுகுமாரன்


karth...@gmail.com

unread,
May 8, 2009, 8:58:10 AM5/8/09
to மின்தமிழ்
அன்பின் சுகு,

நன்றி.

இந்தத் தொடரைப் பலர் ஈடுபட்டுப் படித்து வருகிறார்கள்.
நானும்தான். சில கருத்துக்கள் பிரமிப்பூட்டுகின்றன.
சொல்லப்படும் விஷயம் வெறும் அறிவால் மட்டும்
விளங்கிக் கொள்ளக் கூடியதல்ல என்று இப்போது
தெளிந்திருக்கிறேன்.

இடையில் தோன்றும் சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொள்ள
நான் எழுப்பிய கேள்வி திசை மாறி ஒரு முழு விவாதத்தை
ஏற்படுத்தி விட்டது. இது ஒரு unintended consequence.

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் மற்ற அபிமானிகளோகடு
நானும் தொடர்ந்து படிப்பேன். கவனிப்பேன்.
எனது சந்தேகங்கள் எதுவாயினும் அவற்றைத் தொடர்
முடிந்த பின்தான் எழுப்புவேன். அப்போது ஆறுதலாகப்
பேசலாம்.

ஒரு வேளை நீங்கள் சொல்வது போல கேள்விகள்
மறைந்தும் போகலாம்.

தொடர்ந்து எழுதுங்கள்.

ரெ.கா.

karuannam annam

unread,
May 8, 2009, 10:38:52 AM5/8/09
to minT...@googlegroups.com

அறிஞ்ர்கள்

சிலர் பதிவுகள் மருட்டுகின்றன. சிலர் பதிவுகள் ஏக வசனத்தில் வெருட்டுகின்றன. சில பதிவுகள் இனம் அல்லது பெரியார் எனச் சார்பு நிறம் கொடுப்பதாகத்தோன்றுகிறது. இருந்தாலும் பெரியோர்கள் ரெ.கா ,சுகுமாரன்,கண்ணன்

ஹரிகி

பதிவுகளால் கவரப்பட்டு எனக்குச் சரியெனப்பட்டதை நண்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

திரு

சுகுமாரன் 13 இடங்களில் திருக்குறளில் 'மனம்' வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். நேற்று பரிமேலழகர் துணையுடன் இரண்டு மணி நேரம் பயனுள்ள பொழுதாகச் செலவழித்தேன். மனம், நெஞ்சு , உள்ளம் என்ற மூன்றும் ஒரே பொருளில் உரையில் கையளப்பட்டுள்ளன. நெஞ்சு,உள்ளம் மிகப் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.

உள்ளுதல்

நினைவுகளின் தொகுப்பே ' உள்ளம்' மனமாகிறது. மூளையின் பதிவுகளே நினைவுகள். புலன்களால் பதிவுகள் ஏற்படுகின்றன.ஏற்கனவே GENE வழியும் ,சூழ்நிலை வழியும் பெறப்பட்ட நினைவுகளோடும் விளைந்த விளைவுகளோடும் (BELIEF SYSTEM)புதிய பதிவுகள் ஒப்பிடப்பட்டு புதிய நினைவுகள், விளைவுகள்(RESPONSES) உருவாகின்றன. நினைவுச்சங்கிலி நீள்கிறது. பல கோடி நினைவு முடுச்சுகள் இருப்பதால் புரிந்துகொள்ள இயலாதது ஆகிறது.   விதி, இறைமை ,பிரபஞ்சம் முதலியவை வருகின்றன. MORE EQUALS AMONG EQUALS உருவாகுகிறார்கள். பல பெயரால் புதிய சடங்குகளும் உருவாகின்றன். எனவே மனம்,புத்தி, உள்ளம் எல்லாம் நினைவுப் பதிவுகளே. வேறுபடுத்திப்பார்க்கமுயல்வது திருவள்ளுவரது உவமையான இதுவரை பூமியில் இறந்தவர்களை எண்ணி முடிப்பது போல கடினமானது.

'

நான் இல்லாமல் இருப்பதால் தூக்கம் இன்பமாக இருக்கிறது' என்று திரு சுகுமாரன் குறிப்பிட்டு இருந்தார்..அதைப்போல காதலிலும், பக்தியிலும் நான் இல்லாமல் இருப்பதால் அவையும் இன்பம் பயக்கின்றன. அதனால் பாரதி நினைவு நல்லது வேண்டும் என்றான். வேறுஒன்றும் இல்லை தன்னை விடுத்துப் பிறரை நினை. சித்தர்களும், இராமானுசரும், புதிய சித்தர்களும் சொன்னதும் இதுதானோ.

வணக்கமும் நன்றியும்

சொ

.வினைதீர்த்தான்

Ratnam ji

unread,
May 8, 2009, 11:15:24 AM5/8/09
to minT...@googlegroups.com

 //சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்

வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்

"மனம்" இந்த உடலுக்குள் எங்கே இருக்கிறது?//
இதே கேள்வியைத்தான் 
பல்லாண்டு பல்லாண்டு காலமாக 
கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ...

எனவே இந்த கேள்வி புதிதல்ல ....
இந்த கேள்விக்கு பதில் புரிந்து 
கொள்வதில் இல்லை ....
உணர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது .....

மனம் வேறு மூளை வேறு ....
மனம் .ஆத்மா.ஆன்மா   
சித்தம் ,சிவம், என பல்வேறு 
பொருள் புரியா பொக்கிழங்களை 
புதைத்து வைத்திருக்கும் கபாலத்தின் உள்ளே 
இருப்பதுதான் மூளை ....

..
மூளை யை  புரிந்துகொள்ள 
பலப் பல புத்தகங்கள் உள்ளன 
படித்தறிந்து கொள்ள ....

நமக்குள் இருக்கும் மனதை 
நாமே உணர்துகொள்ள முடியாத இயலாமையை 
"என்னிலே  இருந்த ஒன்றை யான் அறிந்ததிலையே "
என்று புலம்பும்  சிவவாக்கியர் 
"என்னிலே   இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின் 
  என்னிலே   இருந்த ஒன்றை யாவர் கணவல்லீரே"
என்று சொல்லி பின் 
"என்னிலே   இருந்த இருந்து யான் 
 உணர்ந்து கொண்டேனே "
என்று பாடி
  உணர்ந்து கொண்டார் சிவவாக்கியர்....

இந்த மனம் பற்றிய மிக கடினமான விஷயத்தை 
மிக எளிய தமிழ் நடையில் 
யார்மனதையும் புண்படுத்தாமல் 
ஒரு அராயிச்சி மனபக்குவதுடன் 
எழுத முயலும் என்னருமை சுகுஜி யே...
தொடர்ந்து எழுதுங்கள் .....
தொய்வின்றி எழுதுங்கள் ....
மிக அறிய ஒரு முயற்சியை  
சில சொற்கள் தடுத்துவிட கூடாது 
என்பதே என் விண்ணப்பம் நண்பரே .

நாளை சந்திப்போம் 
மீண்டும் சிந்திப்போம் 
வரும் நாளெலாம் 
உங்களுக்கு நலமே சித்திக்கும் ..

நான் எப்பொழுதும் சொல்வது போல் 

தமிழ் போக்கும் உங்கள் அயர்ச்சி ...
புகழ் சேர்க்கும் உங்கள் முயற்சி ...
என்றும் பேரன்புடன்  
உங்கள் 
ரத்னம்ஜி 

 




2009/5/6 annamalai sugumaran <amirth...@gmail.com>

அன்புள்ள திரு ரெ.கா. அவர்களே ,
மன்னித்துக்கொள்ளுங்கள் !   பெயரில் தவறு செய்வது மிகுந்த மடத்தனம்
.நான்  ஏதோ  ஒன்று நினைத்து ஏதோடைப்
செய்து விட்டேன் .
மனம்  எங்கோ இருந்து விட்டது ,இதில் லயிக்கவில்லை .

 

 //சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்

வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்

"மனம்" இந்த உடலுக்குள் எங்கே இருக்கிறது?
ரெ.கா.//
 
 
மூளைக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இது  straight   ஆன பதில் !
நான் திரு வள்ளுவரை பற்றி சொன்னது அவர்   மனம் பற்றி பாடி  2000  ஆண்டுகள் ஆகிவிட்டது .
 2000 ஆண்டுகளாக நாம்  மனத்தை பற்றி அறிந்திருக்கிறோம் .என்பதற்காகவே .
.இன்றைக்கு  best seller  லிஸ்டில் முதல் பத்தில் ஒன்று நிச்சயம்  mind power , secret  of the mind ,intution,   போன்றவைதான்
 
 
மனம் ஒரு மென்  பொருள் ,அது இல்லாமல் எந்த புலனும் செயல் படாது .
ஆனால் அது எந்த பொறியோ புலனோ செயல் படுகிறதோ அங்கே அப்போது அது இருக்கிறது !அது அந்தக் காரியத்தில் லயித்தால் தான் அந்தப் புலன் வேலை செய்யும் ..!அது மூளைக்கும் பொருந்தும் !

அன்புடன் ,


ஏ சுகுமாரன்


 



On 5/6/09, karth...@gmail.com <karth...@gmail.com> wrote:


>
> > அன்புள்ள திரு ரெ. கோ அவர்களே
>
> >  //சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்
> > வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
> > இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்
> > "மனம்" இந்த உடலுக்குள் எங்கே இருக்கிறது?
>
> > ரெ.கா.//

>
> --
> A.Sugumaran ,
> PONDICHERRY INDIA
> MOBILE 09345419948
>
> இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
> இது வரை செய்யாததை செய்யவேண்டும் !



--
Remain Positive ...
Remain Powerful....
& Remain Bullish....
you can reach
& touch even the stars in the sky....
Ratnamji

கிருஷ்ணமூர்த்தி

unread,
May 8, 2009, 11:30:55 AM5/8/09
to மின்தமிழ்

On May 8, 8:15 pm, Ratnam ji <ratna...@gmail.com> wrote:
>  //சரி! ஆனால் மூளை என்னும் உறுப்புக்கும் நீங்கள்
>
> வருணிக்கும் இந்த மனத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
> இருக்கிறதா, இல்லையா? அப்படி இல்லையென்றால்
> "மனம்" இந்த உடலுக்குள் எங்கே இருக்கிறது?//

மனம் என்பதைக் கடந்து சென்றாலொழிய, மனம் என்பது என்ன, எப்படிப் பட்டது
என்பதை அறிந்து கொள்ள முடியாது. இந்த விவாதத்திற்கு, நேரடியாகத் தொடர்பு,
பதில் என்று சொல்ல முடியாவிட்டாலும், எப்படித் தெரிந்து கொள்ள
முயற்சிப்பது என்ற அளவிலாவது, ஸ்ரீ அரவிந்தரின் இந்த வார்த்தைகள் உதவும்
என்றே நம்புகிறேன்:

"The Goal When we have passed beyond knowings, then we shall have
Knowledge.

Reason was the helper- Reason is the bar.

When we have passed beyond willings, then we shall have Power.

Effort was the helper- Effort is the bar.

When we have passed beyond enjoyings, then we shall have Bliss.

Desire was the helper- Desire is the bar.

When we have passed beyond individualising, then we shall be real
Persons.

Ego was the helper- Ego is the bar.

When we have passed beyond humanity, then we shall be the Man.

The Animal was the helper- the Animal is the bar.

Transform reason into ordered intuition; let all thyself be light.
This is thy goal.

Transform effort into an easy and sovereign overflowing of the soul-
strength; let all thyself be conscious force. This is thy goal.

Transform enjoying into an even and objectless ecstasy; let all
thyself be bliss. This is thy goal. Transform the divided individual
into the world-personality; let all thyself be the divine. This is thy
goal.

Transform the Animal into the Driver of the herds; let all thyself be
Krishna. This is thy goal."

Sri Aurobindo

“ Thoughts and Glimpses”

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

Hari Krishnan

unread,
May 8, 2009, 11:39:55 AM5/8/09
to minT...@googlegroups.com


2009/5/8 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>




மனம் என்பதைக் கடந்து சென்றாலொழிய, மனம் என்பது என்ன, எப்படிப் பட்டது
என்பதை அறிந்து கொள்ள முடியாது. இந்த விவாதத்திற்கு, நேரடியாகத் தொடர்பு,
பதில் என்று சொல்ல முடியாவிட்டாலும், எப்படித் தெரிந்து கொள்ள
முயற்சிப்பது என்ற அளவிலாவது, ஸ்ரீ அரவிந்தரின் இந்த வார்த்தைகள் உதவும்
என்றே நம்புகிறேன்:

என்னுடைய புத்தக அலமாரியை விட்டு வெகு தொலைவில் இருக்கிறேன்.  அருகில் இருந்திருந்தால் உரிய இடத்தை எடுத்து இட்டிருப்பேன்.  பாரதியின் ஞான ரதத்தில் சத்யலோகத்துக்குள் புகும் நேரத்தில் மனம் படும் பாட்டை எழுதி இருப்பான்.  'இந்த லோகத்த்க்குள் புகுந்தால், மனம் பஞ்சுபோல் எரிந்துபோய்விடும்' என்ற விளக்கத்தைக் கேட்டதும் 'அதனால்தான் இப்படி நடுங்கினாயா' என்று தன மனத்தைக் கேட்டுக் கொள்வதும், 'உன்னைப் பிரிந்தும் இருப்பேனா' என்று சமாதானப் படுத்துவதுமாக, மிகப் பெரிய தத்துவ விளக்கத்தை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பான்.  படித்துப் பாருங்கள்.  இந்தத் தலைப்புக்கு வெகு பொருத்தமான இடம் ஞான ரதத்தில் சத்யலோக வருணனை. 

Narayanan Kannan

unread,
May 8, 2009, 7:00:43 PM5/8/09
to மின்தமிழ்
வாழ்வு விசித்திரமாகத்தான் உள்ளது!
 
24 வருடங்களுக்குப் பிறகு ஒரு நண்பன் என்னை எப்படியோ கண்டு பிடித்து நேற்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். இப்போதெல்லாம் இதுவொன்றும் அதிசயமில்லை.
 
ஆனால், அதிசயம் என்னவென்றால் அவனைப் பற்றி நாங்கள் நினைத்து பேசிக்கொண்டிருந்த அடுத்த நாள் அவன் கடிதம் வருகிறது.
 
கொரியாவில் ஒரு தேயிலைத்தோட்டத்திற்கு போயிருந்தேன். மிக, மிக அழகான மலைகள், தோட்டங்கள். பக்கத்தில் சல, சலத்து ஓடும் அருவி. இந்த நண்பனுக்கு கூர்க்கில் தேயிலைத்தோட்டமுண்டு. அங்கு கல்யாணமான புதிதில் போயிருந்தோம். அந்த இயற்கையும், இரவில் வழியைத்தவறவிட்டு மின், மினிப்பூச்சிகளின் துணையுடன் வீடு வந்து சேர்ந்தது என பல இனிய நினைவுகள்.
 
ஏன் இத்தனை நாள் கழித்து? கேட்டால், நானும் உங்களை நினைத்துக் கொண்டிருந்தேன், நேற்று ஏதோ உந்த உன் முகவரி கண்டுபிடித்து எழுதினேன் என்கிறான்.
 
ஆமாம், மனம் எங்கிருக்கிறது?
 
க.>

Kannan Natarajan

unread,
May 8, 2009, 8:10:44 PM5/8/09
to minT...@googlegroups.com
> ஏன் இத்தனை நாள் கழித்து?

மனிதர் எவருக்கும் அவர்களின் காலத்தில், ஏதாவது ஒரு உந்துதல் காரணமாக நெடுங்காலத்திற்கு முந்தைய நிகழ்வுகளை கிளைக்கதைகளாக அவரவர் மனத்திரையில் வலம் வருவதற்கு அடிப்படை அனைவரின் பெருமூளையின் மையப் புறப்பகுதியில் உள்ள இம்மைக்குரிய சோணையே (Medial Temporal lobe). அவ்விடத்தில் ஏற்படும் ஊறு தான் - "முன்னேர்ந்த நினை இழப்பு" (நன்றி: இராமகி அவர்கள்) - remote memory loss .

ஒரு வகையான காக்கை வலிப்பு (Temporal lobe epilepsy - TLE), முதியோர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் குறைவு நோய்கள் - முக்கியமாக பல்வகையான "உன்மத்தம்" (நன்றி: இராமகி அவர்கள்) - dementia - பெருகிவரும் சூழல் உள்ளது. ஆதலால், எந்த அகவையில் இருந்தாலும், ஏதாவது புதியக் கற்றலை கசடறக் கற்பதிற்கு பயிற்சியை தொடர்ந்தால், இவ்வித உன்மத்த இடையூறுகளை கட்டுப்படுத்தலாம்.

karth...@gmail.com

unread,
May 8, 2009, 9:49:11 PM5/8/09
to மின்தமிழ்
க.ந.,

இது கவனிக்கத் தக்கது.

நா.க.வின் வியப்பு அவரும் அவர் பழைய நண்பரும் கிட்டத்தட்ட
ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் நினைத்தது எப்படி என்பது.
எனக்கும் இப்படி நிகழ்ந்துள்ளது.

இதே போல் "இதற்கு முன் இதை நான் அனுபவித்துள்ளேனே!"
எனும் உணர்வு. Deja vu.

எண்ணிப்பார்த்தால் வியக்க வைக்கும் விஷயங்கள். விடைகளை
அறிவியலும் ஆன்மீகமும் தேடிக்கொண்டுள்ளன. காத்திருப்போம்.

ரெ.கா.

கிருஷ்ணமூர்த்தி

unread,
May 8, 2009, 11:35:55 PM5/8/09
to மின்தமிழ்
//ஆமாம், மனம் எங்கிருக்கிறது? //

மனம் என்பதைக் கடந்தாலொழிய, மனம் என்பது என்ன, மனம் எங்கே இருக்கிறது
என்பதற்கான விடை இல்லை. இதையே, மனமற்ற நிலை அல்லது மனமிறந்த நிலை என்று
பெரியவர்கள் அனுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

நாம் எதை நினைக்கிறோமோ, நாம் அதுவாகவே ஆகிறோம் என்பதை பிரஹதாரன்யக
உபநிஷத்தும் சொல்கிறது. அந்த அடிப்படையில், மனம் என்பது எதை நினைக்கிறதோ
அதுவாகவே ஆகிவிடுகிறது, இல்லையா? அதே அடிப்படையில், அதற்கென்று, தனி
இருப்பிடம் எதுவும் இல்லை என்றும் ஆகிறது இல்லையா?

நம்முடைய கர்மாவுக்குத்தகுந்தபடி ஒரு உடலைக் கொண்டிருக்கிறோம், மனத்தால்
ஆளப் படுகிறோம் என்பது நமக்குத் தெரிகிறது. அதுபோலவே, இந்த சிருஷ்டி
முழுமையுமே, ஒரு பிரபஞ்ச மனத்தால் ஒன்றுபட்டிருப்பது நமக்குத்
தெரிவதில்லை.

அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

Narayanan Kannan

unread,
May 9, 2009, 2:42:53 AM5/9/09
to minT...@googlegroups.com


இதே போல் "இதற்கு முன் இதை நான் அனுபவித்துள்ளேனே!"
எனும் உணர்வு. Deja vu.
 
Correct! அதுதான். என் அறிவியல் ஆசிரியர் சொல்லுவார் correlation (coincidence) is not causation என்று. இதை ஒதுக்கிவிடலாம். ஆனால் இம்மாதிரி நிகழ்விற்குப் பின்னாலும் இன்னும் இனம் காணா அறிவியல் உள்ளது என்று தீபக் சோப்ரா சொல்லுகிறார். அவரும் மருத்துவர்தான். இங்கு முன்பு வந்துள்ள கட்டுரை மீண்டும்..
 
Everything is Connected to Everything Else
by Deepak Chopra

In the physical world, we have many different ways of acquiring
information: Newspapers, books, television, radio, cell phone
conversations, shortwave radios–all these ways of tapping into various
kinds of information, and many more, are readily available to us.

You can simply tune in to them with your sensory apparatus–look,
listen, feel, smell, taste the environment around you. But if you want
to tap in to the information at the level of the soul, you need a
different way to get the information.

We don’t normally have our attention in that unseen dimension, but
everything that’s happening in the visible world has its roots there.
Everything is connected with everything else. In the spiritual world,
those connections become visible. But in the physical world, we only
glimpse the connections in the clues given to us through coincidence.

As our attention creates energy, intention brings about the
transformation of that energy. Attention and intention are the most
powerful tools of the spiritually adept. They are the triggers for
attracting both a certain kind of energy and a certain kind of
information.

So the more attention you put on coincidences, the more you attract
other coincidences, which will help you clarify their meaning. Putting
your attention on the coincidence attracts the energy, and then asking
the question, “What does it mean?” attracts the information.

The answer might come as a certain insight, or intuitive feeling, or
an encounter, or a new relationship. The more attention you put on
coincidences and the more you inquire into their significance, the
more often the coincidences occur and the more clearly their meaning
comes into view. (இது இப்போது என் வாழ்வில் நடந்து வருகிறது)

Adapted from The Spontaneous Fulfillment of Desire, by Deepak Chopra
(Three Rivers Press). Everything is Connected to Everything Else
by Deepak Chopra

karth...@gmail.com

unread,
May 9, 2009, 8:15:25 AM5/9/09
to மின்தமிழ்
I wonder if Chopra has adequately described/explained "soul"
or "the level of the soul"?

Re.Ka.

On May 9, 2:42 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> Everything is Connected to Everything Else
> by Deepak Chopra

Reply all
Reply to author
Forward
0 new messages