Re: [தமிழ் வாசல்] படிப்புதான் உண்மையான ராஜயோகம்!

221 views
Skip to first unread message

shylaja

unread,
May 17, 2013, 10:49:57 AM5/17/13
to தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள், vallamai
உண் மைதான் வாசித்தல் ஒரு தவம் வாசித்தல்  பெரிய யாகம்  ராஜயோகம்தான்!  நீங்கள் எழுதியதை நான்   முதலில் படித்துவிட்டேன்!


2013/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.

மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.

படிப்பு ஒன்றுதான் மனிதரை தேவ நிலையினும் உயர்ந்த பெரும் நிலைகளுக்கு உயர்த்தக் கூடியது.

கடவுள், ஜபம், தபம், ஹோமம், பூஜை எல்லாம் சும்மா பிள்ளை விளையாட்டு.

உண்மையான ஆன்மிகம் என்பது படிப்பு.

நூலைக் கற்றல், புத்தகம் படித்தல் என்பதற்கு மேல் ஒரு மகத்தான ஆன்மிக வழி எனக்குத் தெரிந்தவரை இல்லை.

எனக்குத் தெரிந்தவரை இல்லை என்று கொஞ்சம் மரியாதையாகச் சொல்கிறேன். பச்சையாகப் பிளந்து சொல்ல வேண்டும் என்றால் ‘கிடையவே கிடையாது’.

மற்ற எல்லா வழிகளும் உன்னைக் குனிய வைத்து சிலர் பச்சைக் குதிரை தாண்டத்தான் பயன்படும்.

இல்லையேல் யாராவது காட்டும் சர்க்கஸ் வேலைகளுக்கு நீ கைதட்டும் கூட்டமாக ஆகத்தான் வழிவகுக்கும்.

நீ உண்மையிலேயே உயர வேண்டுமா?

இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் - எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் - படிப்பது தவிற வேறு மார்க்கம் இல்லை.

எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.

படிக்க வாய்ப்புகளும், நூல்களும் எக்கச்சக்கமாக பெருகியுள்ள உண்மையான கிருத யுகம் நம் காலம்தான்.

படிக்க முடியாமல் யாரோ நெற்றுப் பண்ணதை, வாய் வார்த்தையாகச் சொன்னதை நம்பி வாழ்ந்தானே அந்தக் காலம்தான் பார்க்கப் போனால் உண்மையில் கலிகாலம்.

ஆனால் படிப்பு என்றால் யார் விட்ட புருடாவையும் நம்பி அப்படியே ஏற்றுப் பாராயணம் பண்ணுவதுதான் படிப்பு என்று எண்ணாதே.

படிப்பு என்பது பெரிய தவம்.

தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.

எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.

படிப்பது. படித்ததைக் குறிப்பு எடுத்துக் கொள்வது. பின்னர் அதை நன்கு சிந்தனை செய்வது. சிந்தனை செய்யும் போது புரிய வருவதைக் குறித்துக் கொள்வது. பின்னர் அங்கு படித்ததையும், இங்கு படித்ததையும் ஒப்பிட்டு ஒத்திசைவு, வேறுபாடுகள் ஆகியவற்றை கவனம் கொள்வது.

இது ஒரு தொடர்ந்த யக்ஞம். வேள்வி. நீ தான் யஜமானன். இந்த வேள்வியில் அனைத்து தெய்வங்களும் நேரடியாக வந்து பேசும்.

தெய்வம் நீ என்றுணர் - என்று மகாகவி ஏன் சொன்னார் என்பது அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.

உடனே மூக்கால் அழாதே. ‘எங்கண்ணா நேரம் இருக்கு. ஏகப்பட்ட வேலை..’

நிறுத்து. உனக்கு ஒரே ஒரு வேலைதான் உண்டு. படிப்பது. உனக்கு முக்கியம் என்று பட்ட துறையில். உலகத் துறையா, உள்ளத் துறையா, ஆன்மிகமா, தத்துவமா - ஒரே ஓர் உண்மையான ராஜயோகம் - படிப்பு.

படிப்புன்னா என்னன்னா... என்று இழுக்காதே... வெளிப்படையாகப் பச்சைத் தமிழில் நான் சொல்வது புத்தகப் படிப்பைத்தான்.

பெரியவாள்ளாம் சில பேரு, மஹான்கள், புத்தகப் படிப்பைக்  கண்டிச்சிருக்காளே என்று கலங்காதே.

எந்தப் பெரிய மஹான் சொன்னாலும் அபத்தம் அர்த்தம் உள்ளதாக ஆகிவிடாது.

தாகம் கொள்ளை தாகம், பயங்கர வெயில். அந்த நேரத்தில் தண்ணீர்தான் தாகம் போக்கும் என்பதற்கு எந்த மஹானின் உபதேசம் வேண்டும்?

அதே போல் நம் அடிமைத்தனம் நீங்க எந்தத் துறையிலும் சரி, புத்தகம் படிப்பதுதான் வழி என்பது அனுபவ சித்தமாகத் தெரியும் போது எந்த மஹானின் வார்த்தையையும் லட்சியம் பண்ணாதே.

உன் கண்ணில் படும் இடத்திலெல்லாம் எழுதி வைத்துக் கொள் -

படிப்புதான் உண்மையான ராஜயோகம்.

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

sk natarajan

unread,
May 17, 2013, 9:09:33 PM5/17/13
to thamiz...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள், vallamai
படிப்பு என்பது பெரிய தவம்.

தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.

எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.

உண்மை
 அற்புதமான வரிகள் ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்


N. Kannan

unread,
May 17, 2013, 10:09:26 PM5/17/13
to மின்தமிழ்
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல், மலியப் புகுந்திசை பாடி யாடி அலைவர்
என்கிறார். பூதம் என்றால் பேய், பிசாசு என்று பொருளில்லை. ஐம்பூதங்கள்
என்று நீர், தீ, காற்று, வெளி, மண் இவைகளைச் சொல்வதுண்டு. இங்கு பூதம்
என்பதை இறைவன் அடியார் என்று கொள்ள வேண்டும். அதைவிட இதற்கு வேறொரு
பொருளும் சொல்லலாமென்று தோன்றுகிறது. 20 நூற்றாண்டில் நிகழ்ந்த மாபெரும்
புரட்சி இணையம் என்பது. இவ்விணையம் வந்த பின் இந்து சமயம் கட்டற்ற
மின்வெளியில் வழக்கமான கட்டற்ற (சுதந்திர) தன்மையில்
உலாவரத்தொடங்குகிறது. எனவே மின்னுருவம் என்பதும் இந்து தர்மம்
எடுத்துக்கொண்டுள்ள புதிய ரூபம் என்று சொல்லலாம். ஐம்பூதங்களில் ஒன்றான
இணையபூதம் அது! இதில் முக்கியக் கருது கோள் என்னவெனில் இனி வரும்
காலங்களில் சடங்கு ரூபமான புரிதல் என்பது இந்து மதத்தில் குறைந்து அறிவு
ரூபமான புரிதல் அதிகரிக்கும் என்று தோன்றுகிறது. பாரதி அடித்துச்
சொல்லவில்லையா? அறிவே சிவமென்று.

அடுத்த வார நயனம் இதழில் வரப்போகும் என் பத்தியில் கண்டவை.

வாழ்க ரங்கன். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பெற்றவர் நீர்!

நா.கண்ணன்

2013/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

Karuannam Annam

unread,
May 18, 2013, 3:55:40 AM5/18/13
to thamizhvaasal, min tamil, தமிழ் சிறகுகள், vallamai
2013/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.
 
மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான். 



படிக்க வாய்ப்புகளும், நூல்களும் எக்கச்சக்கமாக பெருகியுள்ள உண்மையான கிருத யுகம் நம் காலம்தான்.

படிக்க முடியாமல் யாரோ நெற்றுப் பண்ணதை, வாய் வார்த்தையாகச் சொன்னதை நம்பி வாழ்ந்தானே அந்தக் காலம்தான் பார்க்கப் போனால் உண்மையில் கலிகாலம்.

ஆனால் படிப்பு என்றால் யார் விட்ட புருடாவையும் நம்பி அப்படியே ஏற்றுப் பாராயணம் பண்ணுவதுதான் படிப்பு என்று எண்ணாதே.

படிப்பு என்பது பெரிய தவம்.

தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.

எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.

படிப்பது. படித்ததைக் குறிப்பு எடுத்துக் கொள்வது. பின்னர் அதை நன்கு சிந்தனை செய்வது. சிந்தனை செய்யும் போது புரிய வருவதைக் குறித்துக் கொள்வது. பின்னர் அங்கு படித்ததையும், இங்கு படித்ததையும் ஒப்பிட்டு ஒத்திசைவு, வேறுபாடுகள் ஆகியவற்றை கவனம் கொள்வது.

இது ஒரு தொடர்ந்த யக்ஞம். வேள்வி. நீ தான் யஜமானன். இந்த வேள்வியில் அனைத்து தெய்வங்களும் நேரடியாக வந்து பேசும்.

தெய்வம் நீ என்றுணர் - என்று மகாகவி ஏன் சொன்னார் என்பது அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.
 
படிப்புதான் உண்மையான ராஜயோகம். 
 

மிகச் சிறப்பான சிந்தனை. 
கிருத யுகத்தில் வாழக்கிடைத்த நற்பேற்றிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
படிப்பது பழக்கமாக வேண்டும். 
சாந்துணையும் உடன் வரும்.
பிள்ளைகளுக்குச் சொல்லிப் பார்க்கிறேன். ஒரு பேத்தி மட்டும் நிறையப் படிக்கிறாள். படித்ததை அழகாகச் சொல்கிறாள். மற்றவர்கள் தொலைக்காட்சியில் மூழ்கிப்போகிறார்கள்.
அமெரிக்கப் பள்ளிகள் நூலகப் படிப்பை ஊக்குவிக்கின்றன. நான் உயர்நிலைப் பள்ளி படித்த நாட்களில் நூலகம் செல்லாத நாளில்லை. அண்மையில் ஊருக்குச் சென்றிருந்தபோது விசாரித்தேன். பிள்ளைகள் வருவதில்லையென்றார்.
சென்ற ஆண்டு எனது பேரனின் பள்ளிக்குப் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திற்குச் சென்றபோது எனது நூலக அனுபவத்தைச்சொல்லிப் பிள்ளைகளுக்குப் படிப்பைப் பழக்கமாக்க வேண்டுமெனக் கேட்டுகொண்டேன். ஒத்துக்கொண்ட நிர்வாகம் வாரம் ஒரு புத்தகம் கொடுத்துப் பதிவேட்டில் பதிந்து ‘புக் லவ்வர்’ என்று சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு என் பேரனுக்கு அவன் வகுப்பில் சான்றிதழ் கிடைத்தது மகிழ்ச்சியளித்தது. ஆசிரியர் சொன்னால் கேட்கிறார்கள். நாம் சொல்வதைக் கேட்பதில்லை. 
திரு மோகனரங்கனின் சிந்தனை வருங்காலத்தில் கிருதயுக பிரஜைகளை உருவாக்குவது பற்றிய என் எண்ணங்களையும் சிறு முயற்சிகளையும் பகிர்ந்துகொள்ள வைத்தது. (அண்மையில் கண்டரமாணிக்கம், நெற்குப்பை நூலகங்களில் புரவலர் திட்டத்தில் இணைந்துள்ளேன். 22.5.2013 வரை சிவங்கை மாவட்டத்தில் கிளை நூலகங்களிடையே புரவலர் சேர்ப்பு போட்டி அமுலில் உள்ளது. பிற மாவட்டங்களிலும் இருக்கலாம்.) இழையிலிருந்து சிறிது விலகியத்ற்குப் பொறுத்துக்கொள்ளவும்.
நன்றி
சொ.வினைதீர்த்தான்.

Innamburan S.Soundararajan

unread,
May 18, 2013, 5:30:54 AM5/18/13
to vall...@googlegroups.com, mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, Innamburan Innamburan
'மரமண்டை' என்ற சொல்  ராஜயோகினி ராஜத்துக்குப் பிடித்த சொல்.மரமண்டையோ எனக்கு.
'அம்மா சொல்படி ராஜூ' பதிவு செய்யும் போது தான் 60 வருடங்களாக நாங்கள் எட்டு சகோதர, சகோதரிகளின் 'மரமண்டையில்' ஏறாத சமாச்சாரம் என் தலையை உருட்டியது. ஓடோடிப்போய் என் தங்கை கமலாவிடம் சொன்னேன். அழுதோம். நாங்கள் பெற்றோர்கள் வறுமையிலும் குடும்பக்கட்டுப்ப்பாடு பற்றி கவலைப்படவில்லை என்று கேலியாக பேசிக்கொள்வோம். குழந்தைகளின் படிப்பு தான் முக்கியம் என்று பல இடங்களில் சொன்ன அம்மா ஒரு இடத்தில், குழந்தைகளின் படிப்பு தான் முக்கியம் என்று 25 வருடங்கள் இப்படியும் அப்படியுமாக பிரிந்து இருந்ததை எழுதியிருந்தார். நான் விழுந்து, விழுந்துப் படித்தேன். படிக்கிறேன். ஆனால் என் மரமண்டையில் அந்த ராஜயோகியையும், ராஜயோகினியையும் புரிந்து கொள்ளத்தெரியவில்லையே. கண்கள் குளமாயின.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


2013/5/18 Karuannam Annam <karu...@gmail.com>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Kannan

unread,
May 18, 2013, 5:37:36 AM5/18/13
to மின்தமிழ்
நேற்று எம்துறை முதுகலை மாணவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். புத்ரா பல்கலைக்கழக நூலகம் மிகப்பெரிது. குளிர்சாதன் வசதியுள்ள அவ்வளாகத்தில் இந்நாளைய மின்னூல்களிலிருந்து அந்நாளைய காகிதப் புத்தகங்கள்வரை எல்லூமுண்டு. என்ன மாணவர்கள் வருகை குறைவு. அதனால் சொன்னேன், நூலகம் கலைவாணி வீடு. அங்கு போய் தூங்கினால் கூட அறிவு வருமென்று!

‘இ’ சாரின் சரிதம் அப்படியே எனக்குப் பொருந்துகிறது. எங்கள் வீட்டிலும் ஒரு ராஜயோகி இருந்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு புத்தகம் படிக்கத்தெரியாது.

நா.கண்ணன்


2013/5/18 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
May 18, 2013, 7:29:45 AM5/18/13
to vall...@googlegroups.com, mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, Innamburan Innamburan
கற்றிலன் ஆயினும் கேட்க என்றான் ஐயன்

அது எப்படி?


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Mohanarangan V Srirangam

unread,
May 18, 2013, 8:35:08 AM5/18/13
to vallamai, mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள்
’உம்’மை கற்பதின் சிறப்பை உணர்த்தும்.




--

வேந்தன் அரசு

unread,
May 18, 2013, 3:19:27 PM5/18/13
to tamizhs...@googlegroups.com, vallamai, mintamil, thamizhvaasal


18 மே, 2013 8:35 AM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

’உம்’மை கற்பதின் சிறப்பை உணர்த்தும்.

கற்றலின் கேட்டல் நன்று
கேட்டலின் காண்டல் நன்று

பொத்தகம் இருந்தாலும் ஆசான் வாயால் கேட்கணும்
ஆசான் வாயால் சொன்னாலும் செய்முறையால் காட்டணும்.

இந்த மடலாடல்கள் எல்லாம் கேட்பதற்கு நேர். கற்பதற்கு அல்லவே!
 

DEV RAJ

unread,
May 18, 2013, 3:34:02 PM5/18/13
to mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, vallamai, mintamil, thamizhvaasal
On Sunday, 19 May 2013 00:49:27 UTC+5:30, Zஈனத் Xஏவியர் wrote:
கற்றலின் கேட்டல் நன்று
கேட்டலின் காண்டல் நன்று
 

எல்லாம் கல்விக்கான
மாற்று ஏற்பாடுகள்;
பார்வை இழந்தோர் கேட்டுக்
கற்கின்றனர். கல்வி அறிவு
அதிகம் இல்லாத வேளாண்
குடிமக்கள் பண்ணைச் செய்முறைகளை
நகர் படம் வாயிலாகக் கண்டு
கற்கின்றனர். நாம் யூ ட்யூப்
வாயிலாக மொழிகள் கற்கலாம்.
உலகன் ஐயா சொல்லிவரும்
சுமேரு மொழியை அதில் அறிமுகம்
செய்கின்றனர்; புத்தகம் வாங்க
வேண்டாம்


தேவ்

வேந்தன் அரசு

unread,
May 18, 2013, 3:48:58 PM5/18/13
to tamizhs...@googlegroups.com, vallamai, mintamil, thamizhvaasal


18 மே, 2013 3:31 PM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:



2013/5/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
நீங்களே செய்து பாருங்கள். ஆசானிடம் போய்க் கேட்பது உங்களுக்குப் பிடித்தது என்றால் அது போல் செய்யுங்கள். இல்லை படிப்பது எவ்வளவோ சிறந்தது என்றால் அதைச் செய்யுங்கள்.

எனக்கு இந்த ஆசானிடம் கேட்கறது என்ற மயக்கம் எல்லாம் இல்லை.

தெளிவு - படிப்பு.

படிப்பில் சேர்ந்ததுதான் மடலாடுவது, வீடியோ கல்வி எல்லாம். அதாவது படிப்பைப் பல்லூடகத் தன்மையாய் ஆக்கிவைத்திருக்கும் போது எங்க ஆசான் இருக்காருன்னு போய்  பார்த்து குந்துக்க உட்காருங்களேன். யார் வேண்டாம் என்பது :-)

இப்போது நீங்கதான் ஆசான்.
 

வேந்தன் அரசு

unread,
May 18, 2013, 3:58:46 PM5/18/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், mintamil, thamizhvaasal


18 மே, 2013 3:52 PM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:
நல்ல நகைச்சுவை.


உங்கள் அருமை உங்களுக்கு தெரியலே.

எனக்கு ஒரு கொடிய நோய் பிணித்து இருக்கு.
அது அறிவாளிகள் சொல்வதை மறுக்கணும் எனும் மறுப்புநோய்.. 
கட்டளைக்கல்லொடு மோதினால் வாள் கூர்மை ஆகும்

-- 

Karuannam Annam

unread,
May 18, 2013, 10:26:00 PM5/18/13
to vallamai, தமிழ் சிறகுகள், mintamil, thamizhvaasal
இரண்டு ஆசான்கள்!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--

பழமைபேசி

unread,
Oct 27, 2013, 11:08:42 AM10/27/13
to tamizhs...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், vallamai
ஆமென்

Innamburan S.Soundararajan

unread,
Oct 27, 2013, 12:46:27 PM10/27/13
to vall...@googlegroups.com, Innamburan S.Soundararajan, தமிழ் சிறகுகள், min tamil, தமிழ் வாசல்
நேற்று ஶ்ரீரங்கம் மோஹனரங்கனுடன் ஒரு சம்பாஷணை. நாங்கள் இருவரும் eccentric ஆனாலும், அதுவும் இருதுருவத்து வாசிகள் ஆனாலும், சமயத்தில் ஒத்து ஊதிக்கொள்வோம். தற்செயலாக மாஜி ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் Sir Frederick Von Hayek அவர்களிடமும், எதிர்துருவமாகிய Sir Karl Popper அவர்களிடமும் படித்ததின் அரும்பயனை பற்றிச்சொன்னேன். ஆம். படிப்புதான் உண்மையில் கண்கண்ட ராஜ யோகம். 


இன்னம்பூரான்

வேந்தன் அரசு

unread,
Oct 27, 2013, 2:42:54 PM10/27/13
to vallamai, Innamburan S.Soundararajan, தமிழ் சிறகுகள், min tamil, தமிழ் வாசல்
வள்ளுவரு மூன்று அதிகாரம் எழுதினார்
கல்வி, கல்லாமை, கேள்வி.


27 அக்டோபர், 2013 12:46 PM அன்று, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 27, 2013, 4:39:54 PM10/27/13
to mint...@googlegroups.com, min tamil

கேள்வி வேள்வி இரண்டையும் வால்மீகி சொன்ன "மரா மரா" போல் சொல்லிக்கொண்டே யிருங்கள் .எது விரும்புவது (வேள்)?எது கேட்பது(கேள்)?
என்பது மயங்கி ஒலிக்கலாம்.இருண்ட காலத்திலிருந்து ஆரம்பித்தால் "தீ" மூட்டிய பிறகே சுற்றி அமர்ந்து கேட்க முயல்வார்கள் போலும்.கேட்பது செவிகள் தானே ஒளி எதற்கு என்று தோன்றலாம்.ஒளியும் வெப்பமும் முதல் தேவை அப்பபுறம் தான் ஞானவெளிச்சம் எல்லாம்."கேள்வி முயல்"என்றார்கள் சான்றோர்கள்.சொல்லிக்கொண்டே ஓடுபவரோடு நம் சிந்தனையையும் ஓட்டிக்கொண்டே அல்லவா செல்லவேண்டும்.அதுவும் ஓடிக்கொண்டே செய்யும் ராஜ யோகம் தான்.படிப்பு என்பது ஒவ்வொரு எழுத்திலும் "யுகங்களை" ஊற வைத்துக்கொண்டே இருக்கலாம்.சிந்தனை அடர்ந்து படர்ந்து கிளைவிடும்.எனவே கேட்பதை ராஜ யோகம் என்று சொன்னால் படிப்பதை "சக்கரவர்த்தி" யோகம் என்று தான் சொல்லவேண்டும்."கேட்டதை எழுதும் யோகம்" பயிற்சி செய்தவன் முதலில் விநாயர் தான் என்று நம் கதைகள் சொல்லுகின்றன.விநாயகர் வேகமாக எழுதி வியாசரை மூச்சு வாங்க வைத்து விடுவார்.அதற்காக அவரையே சிந்திக்க வைத்து சிந்திக்க வைத்து எழுதச்செய்து "டைம்" எடுத்துக்கொள்ள வியாஸர் ஆழமான சொற்களைப்போட்டு அந்த ஆனை(முகனை)யை குழியில் விழ வைத்து விடுவார் போல் இருந்தது.ஆனால் உண்மையில் வியாஸரை ஓட ஒட விரட்டியிருக்கிறார் என்பதே உண்மை.அதனால் தான் மகாபாரதத்தில்
கதைக்குள் கதைக்குள் என கத்தை கத்தையாய் கற்பனை கனவேகத்தில் ஓடியிருக்கிறது.முருகன் தான் அறிவுக்கூர்மை மிக்கவன்.பிள்ளையார் என்ன பிடித்து வைத்த கொழுக்கட்டையா?அவன் பிரணவ‌த்தை பிட்டு வைத்தவன் என்றால் இவனோ பிரணவமே ஆனவன்.படிப்பில் இவ்வளவு சுவை இருக்குமா?பௌராணிகர் சப்பளாக்கட்டையை தட்டினார் என்றால் கதைகள் மழையாய்ப்பொழியுமே!
படித்தலின் கேட்டல் நன்று என்று சும்மா பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைப்போம்.
அப்புறம் வேண்டுமானால் உல்டா வாக கட்சி மாறி உட்கார்ந்து கொள்வோம்.

அன்புடன் ருத்ரா 


On Friday, May 17, 2013 7:44:55 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.

மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.

படிப்பு ஒன்றுதான் மனிதரை தேவ நிலையினும் உயர்ந்த பெரும் நிலைகளுக்கு உயர்த்தக் கூடியது.

கடவுள், ஜபம், தபம், ஹோமம், பூஜை எல்லாம் சும்மா பிள்ளை விளையாட்டு.

உண்மையான ஆன்மிகம் என்பது படிப்பு.

நூலைக் கற்றல், புத்தகம் படித்தல் என்பதற்கு மேல் ஒரு மகத்தான ஆன்மிக வழி எனக்குத் தெரிந்தவரை இல்லை.

எனக்குத் தெரிந்தவரை இல்லை என்று கொஞ்சம் மரியாதையாகச் சொல்கிறேன். பச்சையாகப் பிளந்து சொல்ல வேண்டும் என்றால் ‘கிடையவே கிடையாது’.

மற்ற எல்லா வழிகளும் உன்னைக் குனிய வைத்து சிலர் பச்சைக் குதிரை தாண்டத்தான் பயன்படும்.

இல்லையேல் யாராவது காட்டும் சர்க்கஸ் வேலைகளுக்கு நீ கைதட்டும் கூட்டமாக ஆகத்தான் வழிவகுக்கும்.

நீ உண்மையிலேயே உயர வேண்டுமா?

இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் - எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் - படிப்பது தவிற வேறு மார்க்கம் இல்லை.

எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.

படிக்க வாய்ப்புகளும், நூல்களும் எக்கச்சக்கமாக பெருகியுள்ள உண்மையான கிருத யுகம் நம் காலம்தான்.

படிக்க முடியாமல் யாரோ நெற்றுப் பண்ணதை, வாய் வார்த்தையாகச் சொன்னதை நம்பி வாழ்ந்தானே அந்தக் காலம்தான் பார்க்கப் போனால் உண்மையில் கலிகாலம்.

ஆனால் படிப்பு என்றால் யார் விட்ட புருடாவையும் நம்பி அப்படியே ஏற்றுப் பாராயணம் பண்ணுவதுதான் படிப்பு என்று எண்ணாதே.

படிப்பு என்பது பெரிய தவம்.

தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.

எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.

படிப்பது. படித்ததைக் குறிப்பு எடுத்துக் கொள்வது. பின்னர் அதை நன்கு சிந்தனை செய்வது. சிந்தனை செய்யும் போது புரிய வருவதைக் குறித்துக் கொள்வது. பின்னர் அங்கு படித்ததையும், இங்கு படித்ததையும் ஒப்பிட்டு ஒத்திசைவு, வேறுபாடுகள் ஆகியவற்றை கவனம் கொள்வது.

இது ஒரு தொடர்ந்த யக்ஞம். வேள்வி. நீ தான் யஜமானன். இந்த வேள்வியில் அனைத்து தெய்வங்களும் நேரடியாக வந்து பேசும்.

தெய்வம் நீ என்றுணர் - என்று மகாகவி ஏன் சொன்னார் என்பது அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.

உடனே மூக்கால் அழாதே. ‘எங்கண்ணா நேரம் இருக்கு. ஏகப்பட்ட வேலை..’

நிறுத்து. உனக்கு ஒரே ஒரு வேலைதான் உண்டு. படிப்பது. உனக்கு முக்கியம் என்று பட்ட துறையில். உலகத் துறையா, உள்ளத் துறையா, ஆன்மிகமா, தத்துவமா - ஒரே ஓர் உண்மையான ராஜயோகம் - படிப்பு.

படிப்புன்னா என்னன்னா... என்று இழுக்காதே... வெளிப்படையாகப் பச்சைத் தமிழில் நான் சொல்வது புத்தகப் படிப்பைத்தான்.

பெரியவாள்ளாம் சில பேரு, மஹான்கள், புத்தகப் படிப்பைக்  கண்டிச்சிருக்காளே என்று கலங்காதே.

எந்தப் பெரிய மஹான் சொன்னாலும் அபத்தம் அர்த்தம் உள்ளதாக ஆகிவிடாது.

தாகம் கொள்ளை தாகம், பயங்கர வெயில். அந்த நேரத்தில் தண்ணீர்தான் தாகம் போக்கும் என்பதற்கு எந்த மஹானின் உபதேசம் வேண்டும்?

அதே போல் நம் அடிமைத்தனம் நீங்க எந்தத் துறையிலும் சரி, புத்தகம் படிப்பதுதான் வழி என்பது அனுபவ சித்தமாகத் தெரியும் போது எந்த மஹானின் வார்த்தையையும் லட்சியம் பண்ணாதே.

உன் கண்ணில் படும் இடத்திலெல்லாம் எழுதி வைத்துக் கொள் -

படிப்புதான் உண்மையான ராஜயோகம்.

***

K. Loganathan

unread,
Oct 27, 2013, 8:36:33 PM10/27/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

இதைத்தான் நானும் பல் ஆண்டுகளாக சொல்லி வருகின்றேன். சைவ சித்தாந்த அநாதிப் பொருளியல் அடிப்படையில், பினாங்கு வட்டாரத்தில் பரவி வரும் ஓர் கோட்பாடு இது. ஆகம வுளவியலின் அடிப்படையும் ஆகும்.'
'
மூல கருத்துக்கள்,.

1. கற்றல் என்பது அறியாமை நீக்கம். ஆணவ  மலத்தின் தாக்கத்தால்  அகத்தே  செறிந்திருக்கும் ஞான அந்தராத்தை நீக்குவதே கற்றல்,

2/ இது பொருட்கலவி என்றும் தற்கல்வி என்றும் முடிவாக இறைக்கல்வி என்றும் தொடரும்.

பொரருட்கல்வி யாவது பாச ஞானம் என்றும் சைவத்தில் சொல்லப்படும். ஐம்புலனகளின் பொறிலியப் பார்வைக்கு வரும் அறிவின் தெளிவுகள் இங்கு பொருட்கல்வி ஆகின்றது. உலகியல் அறிவு எனினும் ஒக்கும்.

இதனைச் சார்ந்து எழுவதே தன்னைப் பற்றி ஆன்மா கற்கும் கலவியாகிய தற்கல்வி.  பொருட்கல்வி தானே தற்கல்விக்குச் இட்டுச்  செல்லும். இங்கு பொறிலியப்  பார்வையோடு  நூலியப் பார்வையும் மெயாகிட, அசித்துப்பொருட்களோடு சித்துப் பொருட்களும் உண்டு என்ற விழிப்பு உண்டு.

தற்கல்வி தொடர் இறைக்கல்வி தோன்றும். தன்னைப் பற்றிய விசாரனையில் தன்னுள் தெய்வ வடிவங்கள் பல மூர்த்திகள் இருந்து உதவுவது தெரிய வர பதிக்கல்வியாகிய இறைக்கல்வி தொடங்கும்

இங்கு நுதலிப்பார்வையும் அதற்கு மேலான பல  பார்வைகளும்  மெய்யாகும். முடிவானப் பார்வை பாரவையற்ற பார்வை

3
எல்லாக் கற்றல்களும் இந்த முத்திறக் கற்றலில்  அடங்கும். ஏனெனில் அநாதிப் பொருட்களாக பதி பசு பாசம் தான் இருக்கின்றன.

இதனைப் பற்றி எனது 'திருநெறித் தெளிவு "  'அழிவில் உணமை' போன்ற நூற்களில் இன்னும் விரிவாக கூறியுள்ளேன்

உலகன்


2013/10/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
படிப்பைப் பற்றி இப்படி விதந்து எழுதிவிட்டு எனக்கே கொஞ்சம் தோன்றியது. ‘கொஞ்சம் அதிகப்படியா சொல்லிவிட்டோமோ?’ என்று. அதற்குத்தான் இவ்வளவு நாள் விட்டுப் பார்த்தேன். ஆனால் இப்பொழுதும் எனக்குத் தோன்றுவது யாதெனில் மிக நிதர்சனமான உண்மையை எழுதியுள்ளேன் என்று. ஆம். படிப்பு என்பதைப் போல உண்மையான ஆன்மிகம், மத வழிபாடு, சத் சங்கம் என்பது வேறு எதுவும் இல்லை. 

ஞானமே உருவானவர் கடவுள் என்பது உண்மையானால், அந்தக் கடவுள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அல்லது ஒருவர் என்று கிடையாது, அது அனுபூதி நிலை, எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்க! ஞானமே உருவான ஒன்றிற்கு அணுக்கமான வழி அறிவை வளர்க்கும் படிப்புதானேவொழிய வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் படிப்பு என்பது தன்னுடைய ஆர்வம், உண்மையான ஊக்கம், முழு ஈடுபாட்டுடன் கூடிய தீவிரமான படிப்பு என்று இருக்க வேண்டும். சும்மாவாக, மற்றவர்க்குக் கண் மயக்குவதற்காக என்று இருக்கக் கூடாது. 

அது ஜபமோ, தவமோ, அனுஷ்டானமோ எதுவும் படிப்பு என்பதற்கு இணை கிடையாது. 

அறியாமை என்பது அகலுவதைக் கண்கூடாக நாம் படிப்பு என்பதில் காண முடியும். எந்தப் படிப்பு ஆயினும். 

படிப்புக்கு வயசு சொல்லாதே! எந்த வயசாயிருந்தாலும் படி. படி. படி. 

அது வாழ்க்கையின் இடைவிடாத இதயத் துடிப்பாக இருக்கட்டும். படி. படிப்பதைச் சிந்தி. சிந்தித்ததை நினைவில் கொள். அந்த நினைவோடு அடுத்து மேலும் படி. பொருத்திப் பார். யோசி. மறுக்க வேண்டும் என்றால் துணிந்து மறுத்து சிந்தித்துப் பார். மறுத்ததை மீண்டும் கொள்வதற்கு இடம் உண்டு என்று பட்டால் தயங்காதே! எந்த விதத்தில் கொள்ள வேண்டும் என்பதைத் துல்லியமாக ஆழ்ந்து ஆய்ந்து பார். 

இதுதான் கண்கண்ட, கைகண்ட ஒரே தவம்! பொய்க்காத தவம் என்றால் இதுதான். நீ ஒவ்வொரு நாளும் புது புது உலகங்களில் நுழைந்து கொண்டிருப்பாய். புதிய மனிதராக ஆகிக்கொண்டிருப்பாய். ஏன்? மனிதர் என்பதையெல்லாம் கடந்தும் போய்க் கொண்டிருப்பாய். உனக்கு என்ன கவலை? படிப்பு என்னும் பெருந்தவம் வாய்த்தவளாக, வாய்த்தவனாக, வாய்த்தவராக நீ இருக்குங்கால், உன் ஆன்மிகப் பரிணாமம் உன் கண் முன்னாலே, கருத்தின் கண்ணிலேயே நிகழும் அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருப்பாய். நிறுத்தாதே.! 

எல்லாம் படிச்சு முடித்துவிட்டேன் என்று மனம் நைஸாக மாயை வேலை செய்யும். ஏமாறாதே! அந்த மனத்தையும் படி. மனிதன் என்பவன் படிக்கும் பிராணி. அதாவது யோசிக்கும் பிராணி. அதாவது கற்பனை செய்யும் பிராணி. அதாவது சிந்திக்கும் மிருகம். சிந்தனையாலேயே தன் பரிணாமத்தை மிருக நிலையிலிருந்து வெகு விரைவில் தேவ நிலைக்கு மாற்றக் கூடிய அற்புதம் நிகழ்த்தத் தெரிந்த ஒரே பிராணி! 

படிப்பு என்பதைப் பற்றிச் சொல்லி மாளாது. எனக்குத் தெரிந்ததைப் பொய் சொல்ல மாட்டேன். படிப்புதான் உண்மையில் கண்கண்ட ராஜ யோகம். 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--

K. Loganathan

unread,
Oct 27, 2013, 9:34:19 PM10/27/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
திரு தேனீ அவர்களே

கற்றலே அடிப்படை, கற்றலுக்கு உதவுவது சிந்தனை.  ஆனால் சிந்தனைக்கு மூலம் காட்சிகள்- பல வகையான காட்சிகள். காட்சிகட்கு மூலம் பார்வைகள்.

ஆக கற்றல் பார்வைகளில் தொடங்குகின்றது.  இடையே வருவதுதான் சிந்தனை

இந்தப் பார்வைகளும் பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை என்று பலதிறப்படும்

கற்றலை அடிப்படையாக கொண்டு ஞான விசாரணை தொடங்கினால் கற்க வேண்டிய பெருநூல் இந்த உலகமே என்றுமாக நமக்கு வேதாகமங்கள் எல்லாம் ஓர் உதவியேத் தவிற பிரமாணங்கள் அல்ல,

எல்லா உண்மைகளும்  இந்த உலகிலேயே இருக்கின்றது. அது எல்லாருக்கும் பொது. சாதி மத பேதங்கள் எல்லாம கடந்தது.


உலகன்




2013/10/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
சிந்திப்பது சிந்தனா யோகம்
 
 
சித்திப்பது என்ன யோகமோ  அதுதான் யதார்த்தம்
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/10/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

சிந்திப்பது என்ன யோகம், தமிழ்த்தேனீ?
2013/10/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஒரு சின்ன சந்தேகம்
 
 
எழுதுவது  ராஜ யோகமா
 
படிப்பது ராஜ யோகமா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/10/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Oct 28, 2013, 1:14:12 AM10/28/13
to vall...@googlegroups.com, mintamil, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
திசை மாறியது, பசை ஒட்டவில்லை. அசையாது அமருக ஶ்ரீரங்கமோஹனரங்கா.

ரா.கிருஷ்ணன்

unread,
Oct 28, 2013, 4:06:44 AM10/28/13
to mint...@googlegroups.com
ஆஹா..... எவ்வளவு இராஜ யோகிகள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Rishi Raveendran

unread,
Nov 2, 2013, 11:27:31 PM11/2/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
 
 
மன்னிக்கவும். இந்த இடத்தில் நான் மாறுபடுகின்றேன்.
 
உண்மையில் படிப்பு  என்பது என்ன ?
 
சில தகவல்களை மூளைக்கு அனுப்புவது அவ்வளவே.  படித்து பண்டிதரான ஒரு ஞானி மருத்துவமனையில் கோமா நிலையில் இருப்பதாய் கொள்வோம்.  இப்பொழுது அந்த படிப்பு என்னவாயிற்று ? ராஜயோகம் என்னவாயிற்று ? இவைகளெல்லாம் நிலையல்ல. உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது என்பதே நிஜம்.  ஆனால் நாம் நமக்கு நாலு கருத்துக்களை மூளைக்கு அனுப்பிவிட்டு ”எல்லாம் தெரிந்தவன்” எனப் பிதற்றிக்கொள்கின்றோம்.
 
ஒன்றுமேயில்லை.
ஆனால் அதில் எல்லாமே இருக்கின்றது.
ஒன்றுமேயில்லாததை அடைவது எப்படி ?



--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."


K. Loganathan

unread,
Nov 3, 2013, 12:36:32 AM11/3/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரியர் அவர்க்ளே

B.F Skinner  வற்புறுத்தியது  Operant Conditioning  என்பது,    உருஷிய  Pavlov  என்பார் வற்புறுத்தியது   Classical Conditioning  என்பது. இருவருமே  Behaviorism  எனும் உளவியல் கோட்பாட்டிற்கு தலையாய்வர்கள்,  இவர் கற்றல் என்பதை  conditioning  என்றும் மறத்தல் என்பதை  di-conditioning  அல்லது counter conditioning   என்று கூறிச் சென்றுள்ளனர்,

இவர்களை மறுத்தே நான் கற்றல் அறியாமை நீக்கம் என்றும் அது பொருட்கல்வி தற்கல்வி இறைக் கலவி என்றவாறு செல்லும் என்றும் சைவ சித்தாந்த பாசஞானம் பசுஞானம் பதிஞானம் என்பதைத் தழுவி ஆகமவுளவியலின் கூறாக வளர்த்துள்ளேன்

கற்றல் என்பது படிப்பு மாத்திரம் அல்ல,  உலகில் கற்றல் இல்லாது யாதும் இல்லை. புதியதாக ஓர் பொருளைக் காணலும் அதன வழி ஓர் அறியாமை நீங்களும் கற்றல்தான்.

அறியாமை முற்றிலும் நீங்கிய நிலையே சிவஞான நிலை,

படித்தல் வழி அறிவு திரட்டல் என்பது வேறு, இவ்வாறு அறிவு தெருட்டலுக்கும் எல்லையே இல்லை, ஆனால அறியாமை நீக்கத்திற்கு எல்லை உண்டு,

அகத்தே செறிந்திருக்கும் ஆணவ மலத்தால் வரும் அந்தகாரம் முற்றிலும் நீக்கப்படும் ஆகவே கற்றல் என்பது அறியாமை நீக்கம் எனும் போது அதற்கு ஓர் முடிவு உண்டு. எல்லை உண்டு.

இது ஐரொப்பிய உளவியலில் கோட்பாடுகளில்  இல்லாது ஒன்று,

உலகன்


2013/11/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

2013/11/3 Rishi Raveendran <rishira...@gmail.com>

உண்மையில் படிப்பு  என்பது என்ன ?

​அமெரிக்காவின் தலை சிறந்த உளவியல் அறிஞர் பி.எஃப்.ஸ்கின்னர்

படிப்பதையெல்லாம் படித்து மறந்ததுபோக மீதி உள்ளது கல்வி என்றார்

மனித நினைவும் மறதியும் ஒன்ன்றோடொன்று இணைந்து மனிதனை அறிவுப்பாதையில் அழைத்துச் செல்கிறது

நினைவின் மூலம் மூன்றடி எடுக்கும் மனிதன் மறதியின் மூலம் இரண்டடி பின்னுக்குப் போகிறான்

எனவே மனிதனுக்கு நினைவுபோன்றே மறதியும் முக்கியம்

மறதி என்பதே முறையான நினைப்புக்கு வழி வகுப்பது 

பழையதும் வேண்டாததையும் மற என்றால் மறவாத மனம் என்ன மனம்

மூளை ஒரு கிட்டங்கி அதற்குள் எது இருக்கவேண்டும் எது குப்பைக் கூடைக்கு என்று தீர்மானிக்கும் சூத்திரதாரி யார்?

வம்பு


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

DEV RAJ

unread,
Nov 3, 2013, 1:27:07 AM11/3/13
to mint...@googlegroups.com, vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Sunday, 3 November 2013 10:14:14 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
எனவே நாம் கவனிக்க விரும்புவதில்லை என்ற ஒன்றைத் தவிர, என்ன தவறு, ‘படிப்பு’ என்பதை உண்மையான ராஜ யோகம் என்று சொல்வதில்? 

 
படிப்பு அகவயத் தேடலுக்கு உதவுவது உண்மை.
ஆனால் அது மட்டுமே துரீயத்தில் நிலைக்க உதவுமானால்
இந்நேரம் பலர் அதை முயன்று ஒரு பாதை
ஆக்கியிருப்பார்களே 



தேவ்

துரை.ந.உ

unread,
Nov 3, 2013, 1:05:10 AM11/3/13
to Groups, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
இங்கே கோணம் மிக முக்கியம் என நினைக்கிறேன் 
1.Inline image 2

2.Inline image 3


3.Inline image 4


2013/11/3 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
0 099.jpg
0 0mjkjkk m (1).jpg
0 0mjkjkk m.jpg

K. Loganathan

unread,
Nov 3, 2013, 1:25:27 AM11/3/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

துரியம் துரியாதீதம் போனற அவத்தைகளைக் குறிப்பிடும்போது, அதன் தொடக்க நிலையாகிய சொப்பனாவத்தையை நாம் கருதவேண்டும் Freud  ஓர் தவறான கனாவியல் சொல்லியிருக்க Jung என்பார் அப்படி அல்ல.  ஆழமான ஞானக் கனவுகள மூரத்திகளின்( archetypes) விளையாடல் எனும்  கருத்தில் அவர் விளக்குவார். 

இப்பொழுது நான் விளக்கிவரும் திருமூலரின் புரானவியல் இப்படித்டன் செல்கின்றது. புராணங்கள் ஞானக் கனவுகள்

 இவ்வாறான ஞானக் க்னவுகள் கண்டு பெயர்த்து அறிந்து ஞானம் வளர்க்க சொப்பனாவத்தை  நிலையிலிருந்து  துரிய நிலை அடைவோம். பிறகு இன்னும் ஆழமான தியான நிலைபோன்ற அவத்தைகள்  தலைப்பட்டு துரியாதீத நிலை அடைவோம். இவை எல்லாம சாத்திரங்களை ஓதுவதால் மட்டும் வராது. உள்லபடியே அவற்றை ஒதுக்கிவிட்டு ஆழமான  ஞானக் அகனௌவுகள் ஆய்ந்து உயர வேண்டும்

ஆகமவுளவியலில் இது இறைக்கல்வி பால் அடங்கும்

உலகன்

 


2013/11/3 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Nov 3, 2013, 2:33:51 AM11/3/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரிய அவர்களே

இதற்கெல்லாம் மூலமாக உள்ள நூற்களை மேற்கோள் காட்டினல் சற்றுத் தெளிவாக இருக்கும். எந்த கலைசொற்கள எவ்வாறு தமிழ் படுகின்றீர் கள் என்று தெரியவில்லை,

அந்தகரணங்கள என்று வரும்போது அவை மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்று பகரப்படும்

காணக;

மேற்கோள்: ஈண்டு, இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாயுள்ள மனோ புத்தி யகங்கார சித்தங்களில் ஒன்று அன்று என்றது.
ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.

 

விளக்கம்:

https://sites.google.com/site/meykandasastras/civanjana-botham-tamil/a5-sutra-4

இன்னொன்று அவத்தைகள், இவற்றை சாக்கிரம்(விழிப்பு நிலை, சொப்பப்னம்(கனா நிலை) சுழுத்தி ( சுழி முனை நாடிச் செலவு) துரியம் துரியாதீதம் என ஐந்து அவத்தை நிலைகளை குறிப்பர்,

மேலும் இவற்றின் உட்பிரிவுகளாக சாக்கிரத்தில்ல் சாக்கிரம் சாக்கிரதில் சொப்பனம் என்றவாறு ஒவ்வொரு அவத்தை நில்லையிலும் இவ்வாறு இன்னும் பல வகுப்புக்கள் இருப்பதாக சுட்டுவர். இப்படிப்பட்ட ஆய்வுகள் திருமூலர் திருமந்திரத்தில் தொடங்கி ஏறக்குறைய 16ஆம் நூற்றாண்டு தத்துவப்பிரகாசம் எனும் நூலில் முடிவுற்றதாக தெரிகின்றது


மெய்கண்டார் சாகிரத்தில் அதீதம்ம் என்றோர் நிலையையும் குறிப்பிடுகின்றார்,

நான்காம் சூத்திரம்


மூன்றாம் படிமெய்

மேற்கோள்: இனி, இவ்வான்மா சாக்கிரஞ்  சொப்பனம் சுழுத்தி துரியந் துரியாதீதமாயுள்ள பஞ்சாவதித்தனாய் நிற்கும் என்றது.
ஏது: அதுதான் மலசொரூபத்தின் மறைந்து , அரூபசொரூபியாய் நிற்றலான்.\

மேலும்:

எடுத்துக்காட்டு 4.3.2

இலாடத்தே சாக்கிரத்தை எய்திய வுள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் -- இலாடத்தே
அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டதுவே
அவ்வற்றின் நீங்கலது வாங்கு.

என்றும் கூறுகின்றார்

இங்கு இலாடத் தானம் என்பது மூளையின் முற்பகுதி- தெள்ளிய ஞானஞ் சுடரும் இடம். இங்கு ஐந்து அவத்தை எய்துதல் சாக்கிராதீதம் அடைதல,

இதுவொரு தியான அல்லது சிவயோக நிலை

இதன் விரிவான விளக்கமெல்லாம் கீழே வரும் சுட்டியில்:\

https://sites.google.com/site/meykandasastras/civanjana-botham-tamil/a5-sutra-4

உலகன்




2013/11/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
தமிழ்ச் சித்தாந்தம் மன நிலைப்பாடுகளை நான்காகக் குறிப்பிடும் அவையாவன 

1. விழி நிலை

2. அறி துயில் அல்லது கனவுடன் கூடிய துயில்

3. ஆழ் துயில் அல்லது கனவுகளற்ற துயில்

4. துரிய நிலை

மேலைச் சித்தாந்தம் மன நிலைப்பாடுகளை முன்றாகக் குரிப்பிடும்

1.விழி நிலை

2. அறியா மன நிலை

3. அறியவியலா மன நிலை 

ப்ராய்டும் யுங்கும் செயல்பாட்டு நிலைகளை மட்டும் விளக்கிச் செயல்படாத நிலையைப் பற்றி எதுவும் கூறவில்லை

வம்பு




2013/11/3 K. Loganathan <k.ula...@gmail.com>

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 3:31:09 AM11/3/13
to mint...@googlegroups.com
நான் மட்டும் தனியாகப் பிதற்றிக் கொண்டிருக்கிறானோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். திருரவீந்திரனுக்கும் மறுப்பு இருக்கிறது என கண்டறிந்தது கொஞ்சம் ஆறுதல்.


2013/11/3 Rishi Raveendran <rishira...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 3:32:15 AM11/3/13
to mint...@googlegroups.com
தேவ் சொன்னக் கருத்தே இதுகாறும் நான் சொல்ல நினைத்த ஒன்று.



2013/11/3 DEV RAJ <rde...@gmail.com>

--

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 3:42:14 AM11/3/13
to mint...@googlegroups.com
எனக்கு முதல் முறையாக திரு.மோகனரங்கனின் எழுத்தின் மீது சற்று வெறுப்பும், சலிப்பும் தோன்ற காரணமான வரிகளைக் கீழே ஈட்டிருக்கிறேன்.


அதெல்லாம் பளய காலத்து ரிசிங்க..  அப்படியே குந்திக்குனு.. கண்ணை மூடிக்கினு.... யோகத்துல பார்த்தாங்கன்னு... டூப்பு டுபுக்குக் கதையெல்லாம் சொல்லி டகல்பாச்சா பண்ணாம ......>>>>>



1.நூலைப் படியுங்கள் என்று சொல்வது ஒருவரின் தனிப்பட்ட கருத்து. அதில் தவறு காண முடியாது. ஆனால் யோகம், ரிஷிகள் எல்லாம் டூப்பு என்று 'வெற்றிலை பாக்கு எச்சிலை' புளிச் என்று துப்புவது போல் சொல்லி விட்டார். 

2. டுபுக்கு என்ற சொல்லின் பொருளைத் தெரிந்துக் கொண்ட பின்னரே இந்த வார்த்தையைப் பயன் படுத்தினாரா?

இப்படி சிந்தியாமல் கோரமான சொற்களை பொருள் தெரிந்தோ, தெரியாமலோ பயன்படுத்துவதுதான் இழை ஒழுங்கா?


யாரும் இதை என்னவென்று கூட கேட்காதது இன்னும் எனக்கு வருத்தம். விசித்திரமும் கூட.

கண்ட கண்ட எழுத்துக்களைப் படிக்க வேண்டாமென்று பல வலைப் பக்கங்களுக்குப் போகாமல் சில குழுமங்களைத் தேர்ந்தெடுத்து சேர்க்கிறோம். அங்கும் இப்படி என்றால் நொந்து போகாமல் வேறேன்ன ஆகும்?


2013/11/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கணக்கு - இதுதான் கடைசியில் பிரபஞ்சக் கட்டுமானத்தின் அலகு என்று சொல்லலாமா? 

கடவுளும் பார்க்கப் போனால் கணக்குதானா? அல்லது ஓர் எண்ணா? 

பைதகோரஸ் சொன்னார் -- மகனே! உலகம் எண்களால் ஆனது என்று. வேதாந்தமோ ஏகம், த்விகம், த்ரிகம் என்று சொல்கிறது. 

கோடு, முக்கோணம், தளம், புள்ளி, சதுரம், வட்டம் -- இந்த உலகத்தில் பொருட்களை மிக ஆழமாக உற்று நோக்கினாலும் இந்த அடிப்படிகள்தான் மிஞ்சுகின்றன. மிக மிக விரிவாக நோக்கிப் போனாலும் இந்த அளவைகள்தான் மிஞ்சுகின்றன். 

அதாவது நீங்கள் ஒரு கோன் ஐஸ் வாங்கிச் சாப்பிடுகிறீர்கள். போதாத காலம். சாப்பிடுமுன் அந்த கோன் ஐஸ் என்ன என்று ஆழ்ந்த கண்ணால் பார்த்துக் கொண்டே போகிறீர்கள். 

ஃபூஉட்ட்ட்ட்ட்ட் கோன் ஐஸ் மறைந்துவிட்டது. கடைசியில் நுண்கருத்துகளால் ஆன கணக்குகளின் அளவைகள்தாம் உங்கள் கையில் (அது ஒரு நுண்கருத்துகளின் தளமாக ஆகிவிட்டதா) இருப்பதாக  முடிவாக... ஐயோ பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்?.. மறைந்து போன அந்த ஆழ்ந்த நோக்கு இல்லாத சாராசரி உலகை மீண்டும் வந்து அடைவதற்குள் அப்பாடா போதும் போதும் என்றாகிவிடுகிறது. 

இப்பொழுதும் கோன் ஐஸ் சாப்பிட யோசனையாக இருக்கிறது. 

சாப்பிடும் நான் யார்? 

சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் என்ன? 

எண்ணம் தோன்றும் மனம் என்ன? 

அந்த எண்ணம் எந்தவிதமான வெளியில் மனத்தில் தோன்றுகிறது? 

அதையெல்லாம் மறுபடியும் ஆழ்ந்து நோக்கினால், யம்மாடி எல்லாமே ஒரே கணக்கு மயம். 

ஐயய்யோ நானும் காணவில்லை, மனமும் காணவில்லை, கண் உடம்பு, எல்லாம் கணக்கு, எண்கள் இப்படி ஆகிவிட்டால்? கடவுளே கடவுளே.... 

ஆமாம் இந்தக் கடவுள் என்பது யார்? இன்னும் ஆழ்ந்து நோக்கும் போது.... 

வாவ்..... கடவுளும் கணக்குதானோ? 

சார்! கோன் ஐஸ் கேட்டீங்களே..... 

ஐயய்யோ எந்த உலகத்தில் இருந்து, எத்தனியாவது கோஆர்டினேட்டிலிருந்து, எத்தனையாவது ஜியோமிதி ட்ரான்ஸ்ஃபார்மர் திருவையிலிருந்து இந்தக் குரல் வருகிறது தெரியவில்லையே! 

என்ன முழிக்கிறீர்கள்! கீழ் காணும் யூ ட்யூப் லிங்கைப் பாருங்கள். 

விஞ்ஞானம் எந்த ரேஞ்சுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்று உங்களுக்கே புரியும். இதெல்லாம் படிப்பு இல்லாம முடுயுமா? 

அதெல்லாம் பளய காலத்து ரிசிங்க..  அப்படியே குந்திக்குனு.. கண்ணை மூடிக்கினு.... யோகத்துல பார்த்தாங்கன்னு... டூப்பு டுபுக்குக் கதையெல்லாம் சொல்லி டகல்பாச்சா பண்ணாம 

படி படி படி இந்த ட்யூபைப் பார்த்த பிற்பாடாவது... 



***

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2013, 3:49:05 AM11/3/13
to min tamil
ஓ உங்கள் மனத்தைப் புண்படுத்திவிட்டதா என் எழுத்து... மன்னிக்கவும் நண்பரே... (நண்பர் என்று சொல்வதும் வெறுப்பாக இல்லையெனில்) 

*** 


2013/11/3 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 3:52:18 AM11/3/13
to mint...@googlegroups.com
ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தை எழுத்திலோ, வேறு விதத்திலோ படிக்க உரிமை உண்டு. அதில் எனக்கு வருத்தம் ஏற்பட்டால் அது என் குறைப்பாடே.

ஆனால் நாம் மதிக்கும் ஒருவரிடம் விசிலடிச்சான் குஞ்சு போல சில பாஷைகள் வரும்போது ஏற்படுவது ஏமாற்றம்.

டுபுக்கு என்னை வீழ்த்தி விட்டது.


2013/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 3:54:11 AM11/3/13
to mint...@googlegroups.com
Typo error:

ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தை எழுத்திலோ, வேறு விதத்திலோ படிக்க உரிமை உண்டு.


ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தை எழுத்திலோ, வேறு விதத்திலோ பதிக்க உரிமை உண்டு.


Nagarajan Vadivel

unread,
Nov 3, 2013, 4:35:51 AM11/3/13
to மின்தமிழ்
இதுவே இணையம் செய்யும் மாயம்

பிம்பங்களை உருவாக்கி அதன் வாயிலாகக் கருத்தை வெளியிடும் மாய் மாலத்தில் அரிதாரம் பூசாத அரூப அவதாரங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று படிப்பவர் எதிர்பார்ப்பது விந்தையிலும் விந்தையே

படிக்காமலும் இருக்க முடியாது

படித்தாலும் மனதுக்குப் பிடிக்கவில்லை என்கிற மனக்குடைச்சல் 

காதில் சிறு இறைகை விட்டுத் திருப்புவதுபோல் சுகமான சுகமாக இருந்தாலும் குப்பையைக கிளறிவிட்டோமோ என்று உற்றுப் பார்த்து உறுதி செய்யும் கேனத்தனமும் அதில் அடக்கம்

தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டால் தன் மீது வெறுப்புத் திரும்புவதற்குப் பதிலாக இணையத்தின் மீதும் மற்றவர் மீதும் திரும்பினாலும் விஸ்வாமித்திரர் விரதம்போல் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் ஊர்வசியை உற்று நோக்கும் ஆர்வக்கோளாறைத் தப்பாமல் தினம் தினம் தூண்டிவிடுவதில் இந்த இணையத்துக்கு நிகர் இணையமே

வம்பு

வம்பாண்டி

DEV RAJ

unread,
Nov 3, 2013, 4:51:57 AM11/3/13
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Sunday, 3 November 2013 12:33:56 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஆயினும் ‘அறிவு ஏற்படுவது’, ‘அறியாமை இரிவது’ என்னும் epistemological moments இவற்றைக் கருத்தில் கொண்டு, (‘போதோதயம்’, போதகத்வம், ’அஞ்ஞான பா4தம்’ ஆகியவற்றை மனத்தில் கொண்டு) நோக்கினீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ......................


ஞானத்தின் இயல்பான நிலை வெளிப்படுவதே அறியாமை இரிவு
என்பது நன்கு புரிகிறது.

போ₃தோ₄த₃யம், போ₃த₄கத்வம்,அஜ்ஞாந பா₃தா₄ இவை தோன்றி நிலைபெற்று
விளங்க உதவும் படிப்பு எது ? அதற்கான துறை என்ன ? இன்றைய விஞ்ஞானம்
எந்த அளவு துணை புரிகிறது ?

ஏதோ ஒருவழியில் புரிதல் நிலைகள் ஆற்றுப்படுமானால்
நேரமும், ஆற்றலும் விரயமாகாமல் மிச்சப்படும் என்பதால்
இவ்வினாக்கள்



தேவ்
 

Nagarajan Vadivel

unread,
Nov 3, 2013, 5:18:08 AM11/3/13
to மின்தமிழ்
அரிதாரம் பூசுவது ஒரு பாத்திரத்தின் தோற்றத்தைத் தாக்கத்தைப் பார்ப்பவரின் மணதில் தோன்றச் செய்வது என்பது தோற்றுவாயாக இருப்பினும் இறுதியில் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடும் மனச் சிக்கல் ஒரு சிலருக்கு முடிவாக நிலைப்பதும் இயல்புதானே

எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் பார்ப்பவரின் ஆர்ப்பரிப்பு சில நேரம் சில மனிதரைப் போதைக்குள்ளாக்கிப் பாதை மாறச் செய்வதை என்னவென்று சொல்லுவது ஐயா

வம்பாண்டி


2013/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அரிதாரம் பூசிய முகம் என் எழுத்தால் என்பால் ஏற்பட்டுவிடாமல் இருக்கவும், ஏற்படுத்த ஒத்துழைக்காமல் இருக்கவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன் பேராசிரியரே! :-) 

***





2013/11/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 5:19:23 AM11/3/13
to mint...@googlegroups.com
விஷயம் திசை மாறுகிறது.

இங்கே பிம்ப பிரமைகளைப் பற்றியதல்ல என் கருத்து.

டுபுக்கு என்ற சொல்லின் பொருளைக் கூட சரிவர தெரிந்துக் கொள்ளாமல் எழுதுகிறோம்.

அது எதனுடைய spoonerism என்று அறிந்து எழுதினாரா இல்லையா என்று கூட இதுவரை தெரியவில்லை.

இணைய பிம்பங்கள் ஏதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் வெளியே காக்கப்பட்ட எழுத்து அந்த பிம்பத்தின் சுயரூபமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

தெரியாமல் சொல்லப்பட்ட சொல்லாகவும் அது இருக்கலாமே!

எனவே benefit of doubtஐ எழுதியவருக்கு தரவே இந்த விஷ்நயத்தைப் பற்றிய தெளிவை எதிர்ப்பார்த்தேன்.




2013/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அரிதாரம் பூசிய முகம் என் எழுத்தால் என்பால் ஏற்பட்டுவிடாமல் இருக்கவும், ஏற்படுத்த ஒத்துழைக்காமல் இருக்கவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன் பேராசிரியரே! :-) 

***





2013/11/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
இதுவே இணையம் செய்யும் மாயம்

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2013, 5:23:25 AM11/3/13
to min tamil
ஓ அது ஸ்பூனரிஸமா? அடக்கண்றாவியே. நன்றி ஐயா. திருத்தியதற்கு. 

*** 

Nagarajan Vadivel

unread,
Nov 3, 2013, 5:28:37 AM11/3/13
to மின்தமிழ்
எழுதியவர் யாரென்று யூகிப்பது ஒத்துவராத ஒரு தளத்தில் இப்படித்தான் எழுத வேண்டும் என்று வலியுறுத்த முடியாது

அச்செழுத்துக்கும் இணைய எழுத்துக்கும் உள்ள வேறுபாட்டை அறிதல் அவசியம்

அச்செழுத்து கல்லில் எழுத்து என்றால இணையத்தில் எழுத்து நீரின்மேல் எழுத்தாகும்

அச்செழுத்தில் ஒரு கருத்தை வெளியிடும் படைப்பாளன் புனைபெயரில் ஒளிந்துகொண்டால் அவனை அடையாளம் காண இயலாது

அவன் எழுத்த்ப் பிடிக்கும் என்றால் கோடிட்டுக் காட்டலாம்

பிடிக்கவில்லை என்றால் சில பக்கங்களைக் கிழித்தெறியலாம்

முழுதும் பிடிக்கவில்லை என்றால் நெருப்பிட்டுக் கொளுத்தலாம்

ஆனால் படைப்பாளனைப் பிடித்து உன்னைப் படிக்கவில்லை என்று சொல்ல முடியாது

இணையத்தின் விவகாரமே வேறு 

பிடிக்காததைச் சட்டென்று சொல்லலாம்

உன்னையே பிடிக்கவில்லை உன்னை வெறுக்கிறேன் எண்று சொல்லலாம்

பாதி படித்தோ அல்லது படிக்காமலோ ஒழித்து விடலாம்

எழுத்தில் நிஜம் இணையத்தில் நிழல்

வம்பாண்டி


ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 5:31:16 AM11/3/13
to mint...@googlegroups.com
நீங்கள் எழுதியது உண்மை.
ஆனால் நான் சொல்ல வந்தது வேறு.

ஆகவே உங்கள் மடலுக்கு என்னுடைய இழையில் பதில் பிறகு இடுகிறேன் திரு.நாகராஜன் ஐயா.


2013/11/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 3, 2013, 8:01:07 AM11/3/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Sunday, 3 November 2013 15:43:51 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஏன் இந்தக் ’கொலைவெறி’, :-) 

கண்ணனே காரணம், ஐயா :))
உங்களுக்குத் தெரியாத கீதையா ? 

|| தஸ்மாத்₃யோகீ₃ ப₄வார்ஜுந ||

|| தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோக₃யுக்தோ ப₄வார்ஜுந ||

 

தேவ்

seshadri sridharan

unread,
Nov 3, 2013, 8:20:27 AM11/3/13
to mintamil

2013/11/3 K. Loganathan <k.ula...@gmail.com>
துரியம் துரியாதீதம் போனற அவத்தைகளைக் குறிப்பிடும்போது, அதன் தொடக்க நிலையாகிய சொப்பனாவத்தையை நாம் கருதவேண்டும் Freud  ஓர் தவறான கனாவியல் சொல்லியிருக்க Jung என்பார் அப்படி அல்ல.  ஆழமான ஞானக் கனவுகள மூரத்திகளின்( archetypes) விளையாடல் எனும்  கருத்தில் அவர் விளக்குவார்.  

இப்பொழுது நான் விளக்கிவரும் திருமூலரின் புரானவியல் இப்படித்டன் செல்கின்றது. புராணங்கள் ஞானக் கனவுகள்

 இவ்வாறான ஞானக் க்னவுகள் கண்டு பெயர்த்து அறிந்து ஞானம் வளர்க்க சொப்பனாவத்தை  நிலையிலிருந்து  துரிய நிலை அடைவோம். பிறகு இன்னும் ஆழமான தியான நிலைபோன்ற அவத்தைகள்  தலைப்பட்டு துரியாதீத நிலை அடைவோம். இவை எல்லாம சாத்திரங்களை ஓதுவதால் மட்டும் வராது. உள்லபடியே அவற்றை ஒதுக்கிவிட்டு ஆழமான  ஞானக் அகனௌவுகள் ஆய்ந்து உயர வேண்டும்

ஆகமவுளவியலில் இது இறைக்கல்வி பால் அடங்கும் - உலகன்
 

எனக்கும் இந்த கனவு அனுபவம் உண்டு. ஆன்மிகம் தொடர்பான கனவுகளை இரவு 2 முதல் 3 க்குள் கண்டிருக்கிறேன். அவை அனைத்தும் நான் அடைந்த ஆன்மீக முன்னேற்ற நிலையை குறிப்பனவாக இருந்தன.  

கடந்த 10 நாள்கள் முன் ஒரு கனவு. நான் ஒரு சரிவான பாதையில் உச்சியில் சென்று சேர வேண்டும் என்று போய்க் கொண்டிருக்கிறேன். வழியில் ஆங்காங்கே பள்ளமும் சேரும் வெள்ளத் தேக்கமுமாக இருக்கிறது. அப்போது எதிர் பக்கமாக மேல் நோக்கி செல்லும் ஒரு பாதையை பார்க்கிறேன். அந்த பாதையில் பள்ளம் இராது அதனால் அந்த வழியே சென்று உச்சியை அடைந்து விடலாம் என்று கருதி வந்த பாதையிலேயே பின்னோக்கி நடந்து சரிவின் மேடான பகுதிக்கு வந்துசேருகிறேன். நிமிர்ந்து பார்க்கும் போது அங்கே தோள் முதல் முட்டி வரை நீளும் காவி உடுப்பை அணிந்து மார்பைத் தொடும் அளவு சிவப்பு மணி மாலை மூன்று துறவிகள் நிற்கிறார்கள்.  என்னை கண்டது அவர்கள் அடுத்தடுத்து ''பிரதி அவதார்'' என்கிறார்கள். அவர்களுக்கு பக்கத்தில்இன்னும் மூன்று அலிகள் இவர்களைப் போலவே காவி உடை உடுத்திக்கொண்டு என்னை வரவேற்று சிரிக்கிறார்கள். இந்த கனவுக் காட்சியால் நான் திடுக்கிட்டு எழுந்தேன். மணியை பார்த்த போது விடியகாலை 2.45. 

இன்னொரு முறை இதே 2.45 மணிக்கு நான் முற்றும் வேறுபட்ட ஒரு நிலப்பகுதிக்கு வந்து விட்டது போலவும் உடனடியாக நான் என் இடத்திற்கு வந்துவிட வேண்டும் என்று மனத்தால் துடியாய் துடிக்கிறேன். அந்த துடிப்பால் கனவு கலைந்தது. இதை ஆன்மீக அனுபவமுள்ள ஒருவரிடம் சொன்ன போது அவர் உனது ஆன்மா வேறு வேறு உலகங்களுக்கு சஞ்சரிக்கிறது. இதற்கு உனது குண்டலினி மணிபூரகத்தில் ஏறியிருப்பதே காரணம், அப்படியானால்  மட்டுமே இது நடக்க வாய்ப்புள்ளது என்றார்.    


சேசாத்திரி     

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2013, 8:24:48 AM11/3/13
to min tamil
இதற்கு திரு ரா கிருஷ்ணனின் விமரிசனமோ, பாராட்டோ என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன் :-) 

***



2013/11/3 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 8:59:57 AM11/3/13
to mint...@googlegroups.com
ஏற்கானவே குலை நடுங்கிப் போய் இருக்கிறேன். தெம்பு இல்லை.


2013/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இதற்கு திரு ரா கிருஷ்ணனின் விமரிசனமோ, பாராட்டோ என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன் :-) 

***

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 9:14:59 AM11/3/13
to mint...@googlegroups.com
பதஞ்சலி, திருமூலர், நாதமுனி, அoருணகிரிநாதர்,சித்தர்கள் இவர்களது யோகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.

நவீன கார்ப்பொரேட் மடங்களின் யோகத்தில் நம்பிக்கை இல்லை.


ரிஷிகள் தொடங்கி, ஸ்ரீராமகிருஷ்ணர், இரமண மகரிஷி வரை இவர்களது தியானம், அனுபவங்கள் இவற்றை நம்புகிறேன்..

இப்போது இருக்கும் ரீசண்ட் ரிஷிகளின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை.


பழைய ஞான விசாரங்களின் உண்மைத் தன்மையை உணர்கிறேன்.

இப்போது பாப்பாளா பள பள என நுனி நாக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும், இதர மொழிகளிலும் சமீபத்திய சில குருமார்கள் உதிர்க்கும் சொற்களில் சுத்தமாக நம்பிக்கை இல்லை.




2013/11/3 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>
ஏற்கானவே குலை நடுங்கிப் போய் இருக்கிறேன். தெம்பு இல்லை.

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 10:24:38 AM11/3/13
to mint...@googlegroups.com
 ஆனா ஒண்ணு. நம்ம சேசாத்திரியார் பழைய காலத்துல இப்படி எழுதியிருந்தா சும்மா ஜகஜ்ஜோதியா.... சேசாத்திரி மஹரிஷி உவாச -- என்று புராணம் கட்டியிருப்பாங்க. நாமும் சேசாத்திரியார் ரிஷி சொன்னதை யாராவது எதிர்த்துப் பேசினாக்க பயங்கரக் கோபப்பட்டிருப்போம். பாவம்! சேஷாத்ரியார், புத்தகப் படிப்பு பெருகிப் போன நம்ம காலத்துல வந்து நம்மோட சேர்ந்து கஷ்டப்படணும்னு இருக்கு. என்ன பண்றது? .....>>>>>


நானும் இப்போது மோகன ரங்கா உவாச என்று ஆவதற்குத்தான் எதிர்ப்பைக் காட்டிக் கொண்aடிருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் அல்ல. இந்த ஒரு கருத்துக்குத்தான்.
 

ஆனால் அது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா? 

ஆனால் பழங்கால ரிஷிகளுக்கு இல்லாத வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. மோகன ரங்கநாரால் இதற்கு பதில் போட முடியும்.. பழைய மகரிஷிகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை. என்ன வேண்டுமானாலும் நாம் அவர்களைத் திட்டி விட்டு, பதில் சொல்ல ஆளில்லாமல் விளையாட்டில் ஜெயித்துக் கொண்டே இருக்கிறோம்.

நீங்கள் சொன்னதில் பெரிய பிழையாக நான் கருதியது, பொத்தாம் பொதுவாக ரிஷிகள் என்று சொன்னதுதான். 

நீங்கள் பொதுவாக ரிஷிகள் என்று சொல்லி, உங்களுக்கு வாட்டமான ரிஷிகளை காட்டி, ஓட்டு மொத்த ரிஷிகளையும் பின்னுகிறீர்.

எனக்கு நேரடியாக பதில் சொன்னால் உபயோகமாக இருக்கும்.

நீங்கள் டூப்பு என சொன்ன ரிஷிகளில்,

வியாசரும் உபநிடத ரிஷிகளும் உண்டா?

பதஞ்சலி, திருமூலர், நாதமுனி இவர்களின் யோகமும் டூப்பா?

சித்தர்கள்?

இதற்கு நீங்கள் பதில் சொன்ன பிறகு நூல் விஷயத்திற்கும், அறிவு விஷயத்திற்கும் வருகிறேன்.







2013/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நானும் தான் குலை நடுங்கிப் போயிருக்கிறேன், இங்கு ஒரு நூலைப் படிக்கும் போது. என்ன நூலா? -- 

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் மிகவும் சான்றாண்மை உள்ள புராணமாகக் கொண்ட ஸ்ரீவிஷ்ணு புராணம் என்ற நூலைப் படித்துவிட்டு -- 

அதாவது பராசர ரிஷியை மைத்திரேயர் ஒரு கேள்வி கேட்கிறார்? 

‘நக்ன சொரூபம் என்றால் என்ன?’ அதாவது ஆடையில்லாத உருவம் என்றால் என்ன? 

அதற்கு பராசர ரிஷி கூறுகிறார் -- 

“இருக்கு, யசுஸ், ஸாமம் என்கிற பெயரை உடைய வேதமானது பிராம்மணாதிவர்ணங்களுக்கு மறைவாய் இருக்கின்றது. அப்படிப்பட்ட வேதத்தை விட்டவன் யாரோ அவனே நக்கினன் என்று அறியும். நக்கினன் என்ற சொல்லுக்கு உலகத்தில் வஸ்திரமில்லாமல் திகம்பரனாயிருக்கிறவன் என்று அர்த்தமானாலும், சாஸ்திரத்தில் நக்கினன் என்கிறது வேத ரூபமான மறைவை இழந்தவனுக்கே என்று உணர்ந்துகொள்ளும். திரயீ என்கிற இம்மூன்று வேதமும் பிராம்மணாதி நான்கு வர்ணங்களுக்கும் மறைவு மாத்திரமன்று, சம்ரக்ஷணமாயும் இருக்கிறது. இப்படிப்பட்ட இதை மோகத்தினாலே விட்டுவிட்டவன் எவனோ, அவன் நக்கினன் என்று சொல்லப்படுவான்.” 

இவ்வாறு சொல்லிவிட்டு வசிஷ்டர் பீஷ்மருக்கு அருளிச்செய்த நக்கின ஸ்வரூப சம்பந்தமான விஷயத்தைச் சொல்லுகிறார். 

அதாவது வழக்கம்போல் பூர்வத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் 100 வருஷங்கள் சண்டை நடந்தபோது, ஹ்ராதன் முதலிய அசுரர்களைக் குறித்து தேவர்கள் திருப்பாற்கடலில் ஸ்ரீவிஷ்ணுவிடம் முறையீடு செய்கிறார்கள். என்ன? அசுரர்கள் தர்மங்களில் தவறி நடக்கிறார்கள், தப்புத்தண்டா செய்கிறார்கள் என்றா? அதெல்லாம் இல்லையாம். 

“ஹ்ராதன் முதலான அசுரரெல்லாம் பிரம்மாவின் ஆக்ஞையையும் கடந்து எங்களுக்குச் சேர வேண்டிய மூன்று லோக ஹவிர்ப்பாகங்களையும் அபகரித்துக் கொண்டார்கள்.. நாங்கள் தேவர்களானாலும் வேதமார்க்கத்தை அனுசரித்துத் தங்களுக்குரிய தருமங்களில் நின்றவர்களாய்த் தபஸோடு கூடியிருக்கிற அவ்வசுரரை வெல்ல அடியோங்களுக்குச் சக்தியில்லை. சர்வாத்துமகனான ஓ பகவானே! அடியோமெல்லாம் அவ்வசுரரை எதனாலே வெல்ல மாட்டுவோமோ அப்படிப்பட்ட உபாயத்தை அடியோங்களுக்குக் கொடுத்தருள வேண்டும்” என்று பிரார்த்திக்கின்றார்கள். 

அப்படிப் பிரார்த்திக்க ஸ்ரீமஹாவிஷ்ணு தமது திருமேனியிலிருந்து ஒரு மாயாமோகனை உண்டாக்கி, அந்த தேவதைகளுக்குக் கொடுக்கிறார். அந்த மாயாமோகன் திகம்பரராய் நக்கின சொரூபம் என்று சொல்கிறது புராணம். 

அது மட்டுமன்று. அந்த சொரூபம் நேரே நருமதை நதிக்கரைக்குப் போய், தவம் செய்துகொண்டிருக்கும் அசுர ராஜர்களிடம் சென்று தர்மத்தைக் கைவிடும்படி உபதேசம் செய்து மாற்றுகிறதாம். புதிய உபதேசத்திற்கு நீங்கள் அருகர்கள், தகுதியானவர்கள், அருகர்கள் என்று மீண்டும் மீண்டும் சொன்னதினால் அவர்கள் எல்லாம் ஆருகதர்கள் ஆனார்களாம். அதே போல் சிவந்த ஆடை உடுத்துப் போய் இன்னும் வேறு சிலரை அறிந்துகொள்ளுங்கள், புத்யத புத்யத என்று சொல்லி அறிவு வாதத்தை உபதேசித்து மாற்றியதால் அவர்கள் புத்தன் பௌத்தர் என்று ஆயிற்றாம். 

ஐயா! சொல்வது யாரோ இல்லை. பராசர ரிஷி. சொல்லியிருக்கும் நூலோ ஆதிசங்கரரால் பிரமாணமாகக் கொள்ளப்பட்ட புராணமாகிய ஸ்ரீவிஷ்ணு புராணம். 

இன்று சரித்திர ரீதியாக நாம் சமணத்தைப் பற்றியும், பௌத்தத்தைப் பற்றியும் எவ்வளவு ஆராய்ச்சி முடிவாகப் பலதையும் அறிந்திருக்கிறோம். ஆனால் பிரமாண கிரந்தம் என்று கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படும் நூல் ஒன்று அந்தக் காலத்து ரிஷிகளால் எப்படிச் சிறிதும் அறிவு, ஆய்வு, வரலாற்றிற்கு உண்மையாக இருத்தல் என்ற எந்தவிதமான கவலையும் இன்றிக் கற்பனை போன போக்கில் தங்கள் சௌகரியத்திற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். 

இன்று ஒருவர் ஆய்வு நெறிகளுக்கும் அறிவு நெறிகளுக்கும் புறம்பாக எழுதும் போது நமக்குக் குலை நடுங்குகிறது. ஆனால் அப்படிப்பட்ட எவ்வளவு எழுத்துகள் ஏதோ பெரிய மகா யோக வல்லமையால் ரிஷிகளுக்கு வாய்த்த அற்புத ஞானம் போல் பழைய நூல்களில் பதியப்பட்டிருக்கிறது. அவற்றை இன்று படிக்கும் ஒவ்வொரு பொது அறிவு உள்ளவனுக்கும் குலை நடுங்குகிறது. 

காரணம் படிப்பறிவு தானே ஐயா! படிப்பறிவு இல்லையெனில் நீங்களும் நானும் என்ன சொல்லிக்கொண்டிருப்போம்? அதெல்லாம் பெரியவா சொல்றாள்னா அதுக்கு எல்லாம் ஒரு அர்த்தம் இருக்கும். நாம் யாரு அதெல்லாம் பற்றிக் கேள்வி கேட்பதற்கு? இப்படி காலத்துக்கும் இருக்கணும் நாம என்றுதானே ஐயா அவர்கள் படிப்பறிவு என்பதையே கண்டித்து, ஏளனம் செய்தார்கள்? புத்தகத்தைப் படிச்சுப் புட்டா நாம் சொல்றதை அப்படியே நம்ப மாட்டான். கேள்வி கேட்பான். வாதம் பண்ணுவான். நியாயம், நடுவு நிலைமை, ஆய்வு முறைகள் என்று பேசுவான் - அப்ப்டீன்னுதானே ‘நம்புடா நம்புடா... நம்பிக்கைதான் வழி. படிச்சுக் கெட்டுக் குட்டிசு சுவராப் போயிடாத’ என்று யோகிகளும், முனிவர்களும் உபதேசிக்கறதே.! ‘சாஸ்திர ஞானம் பஹு க்லேசம், புத்தி சலன காரணம்’ ‘சாத்திரங்களைப் படிக்காதே, பெரும் கஷ்டம், புத்தி அலைபாய அதுவே காரணம்’ -- இப்படிச் சொல்லிச் சொல்லியே.. என்ன சொல்ரது..... ஏதாவது சொன்னா நீங்க ஏன் அப்படி எழுதின, ஏன் இந்த மாதிரி வார்த்தையைப் போட்டே... படிக்கவே வெறுப்பா இருக்குன்னு திட்டுவீங்க.... ஆனால் என்னய்யா இதெல்லாம்? 

ஆனா ஒண்ணு. நம்ம சேசாத்திரியார் பழைய காலத்துல இப்படி எழுதியிருந்தா சும்மா ஜகஜ்ஜோதியா.... சேசாத்திரி மஹரிஷி உவாச -- என்று புராணம் கட்டியிருப்பாங்க. நாமும் சேசாத்திரியார் ரிஷி சொன்னதை யாராவது எதிர்த்துப் பேசினாக்க பயங்கரக் கோபப்பட்டிருப்போம். பாவம்! சேஷாத்ரியார், புத்தகப் படிப்பு பெருகிப் போன நம்ம காலத்துல வந்து நம்மோட சேர்ந்து கஷ்டப்படணும்னு இருக்கு. என்ன பண்றது? 

(ஸ்ரீவிஷ்ணு புராணம் - (தமிழில்) ஸ்ரீ வேதாந்த ராமானுஜாசாரியர் - சென்னை ஸ்ரீஆதிமூலம் பிரஸ் - 1925) 

மூல ச்லோகங்கள் வேண்டும் என்றாலும் போடுகிறேன். நானாகக் கதை விடவில்லை ஐயா! 

***





2013/11/3 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>
ஏற்கானவே குலை நடுங்கிப் போய் இருக்கிறேன். தெம்பு இல்லை.

seshadri sridharan

unread,
Nov 3, 2013, 10:41:26 AM11/3/13
to mintamil
2013/11/3 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>
ரிஷிகள் தொடங்கி, ஸ்ரீராமகிருஷ்ணர், இரமண மகரிஷி வரை இவர்களது தியானம், அனுபவங்கள் இவற்றை நம்புகிறேன்.. இப்போது இருக்கும் ரீசண்ட் ரிஷிகளின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை.

பழைய ஞான விசாரங்களின் உண்மைத் தன்மையை உணர்கிறேன்.

இப்போது பாப்பாளா பள பள என நுனி நாக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும், இதர மொழிகளிலும் சமீபத்திய சில குருமார்கள் உதிர்க்கும் சொற்களில் சுத்தமாக நம்பிக்கை இல்லை.


ஆன்மீக அனுபவத்தில் பழையது புதுவது என்று பாகுபாடு ஏதும் இல்லை. ஆன்மிக அனுபவம் என்பது ஒருவருக்கு உள்ளகமாக (internal) ஏற்படும் அதை பிறிதொருவர் அறிய முடியாது. ஆன்மீக அனுபவம் ஆளுக்கு ஆள் மாறுபடும் அதில் பொதுத் தன்மை என்பதே கிடையாது. அதனால் தான் ஆன்மீக அனுபவத்தை எவரும் பகிர்ந்து கொள்வதில்லை. பகிர்ந்து கொண்டால் அவருக்கு மிஞ்சுவது ஏளனப் பேச்சுதான்.   
.
இன்னொரு அனுபவம் > 2012 மே 5 ஆம் நாள் என் வீட்டிற்கு Alexis pixaven என்ற அமெரிக்கப் பெண் வந்திருந்தாள். அதற்கு முந்தய ஆண்டு (2011) ஒரு வாரம் என் வீட்டில் தங்கியிருந்ததால் இந்த முறையும் என் குடும்ப உறுப்பினர்களை கண்டு பேச வந்திருந்தாள். மாலை வரை இருந்து எல்லோரிடமும் பேசிவிட்டு அவளுடைய விடுதிக்கு சென்று விட்டாள். அன்று இரவு நான் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு கனவு. கனவில் ஒரு படகு. அதில் இரண்டு அடுக்கு மாடிகளுடன் அறைகள் உள்ளன. படகு கூவம் போன்ற ஒரு முழு சாய்க்கடை ஆற்றில் மிதந்து கொண்டிருக்கிறது.  நான் படகில் தரைத் தளத்தில் நின்று கொண்டிருக்கிறேன் அப்போது நடுஇரவு. அந்த நடுஇரவில் அந்த சாக்கடை ஆற்றில் ஒரு கிழவன் கழுத்தளவு நீரில் நின்று கொண்டிருக்கிறான். பக்கத்திலேயே இன்னொரு இளைஞன் அந்த நீரில் கழுத்தளவு நிற்கிறான். அவன் என்னையும் ஆற்றில் இறங்கி முழுக்கு போடச் சொல்கிறான். நான் அவனிடம் ''டேய், இதுலய? இது ஆறு அல்ல முழுக்க முழுக்க பீத்தண்ணி, நா இதில இறங்கி குளிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறேன். அவன் மீண்டும் என்னை படகைவிட்டு ஆற்றில் இறங்கி முழுகி எழச் சொல்கிறான். அப்படி செய்தால் எனக்கு ஆன்மீக முன்னேற்றம் கட்டாயம் கிடைக்கும் என்கிறான். நான் அவனை நண்பனை ஒத்த கடவுளாகவே மதிக்கிறேன். அதலால் அவன் பேச்சைத் தட்டாமல் அந்த கூவத்தில் இறங்கி இரண்டு முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் படகில் எறிவிடுகிறேன். நான் கடவுளாக மதிக்கும் அந்த நண்பன் மீண்டும் என்னை ''டேய், சீக்கிரம் வா, நேரமாவுது நான் சொன்னபடி குளித்தால் உனக்கு ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கும் பார்'' என்று வற்புறுத்திச் சொல்கிறான். எனவே மீண்டும் நான் அந்த சாக்கடை ஆற்றில் இறங்கி கழுத்தளவு நீரில் நிற்கிறேன். உடனே அவன் படகில் ஏறிவிட்டான். நான் தண்ணீரில் இறங்கி நின்று நெடு நேரமாகிவிட்டது என்று கருதி படகில் ஏறுகிறேன் அப்போது என் உச்சந்தலையில் சகஸ்ரார சக்கரத்தில் ஒரு துளை போட்டாற்போல் ஒரு அனுபவம் ஏற்படுகிறது. நான் அப்போது கைகூப்பி இறைவா நன்றி என்று சொல்கிறேன். அவ்வளவு தான் அடுத்த நொடி  அந்த துளை வழியே petrol bunk இல் petrol ஊற்ற ஒரு குழாய் நுழைப்பார்களே அது போல் ஒரு குழாய் நுழைக்கப்பட்டு அதன் வழியே என் தலைக்குள் ஆற்றல் (cosmic energy) பீச்சப்படுகிறது. அதன் காரணமாக என் உடல் முழுவதும்  கடுமையான அதிர்வலையால் அதிர்ந்து ஆடுகிறது. கட்டிலில் கவிழ்தார்ப் போல் படுத்த என் உடல் நன்றாக நடுங்குகிறது. பின் நான் குளிப்பதற்காக படகின் இரண்டாவது தளத்திற்கு என் நண்பனை பின் தொடர்ந்து ஓடுகிறேன். அவன் என் கண் பார்வையில் இருந்து மாயமாய் மறைந்து போகிறான். நான் அந்த இரண்டாவது தளத்தில்படியில் உள்ள மலத்தை எல்லாம் தாண்டி ஒரு அறைக்குள் நுழைகிறேன். அங்கு ஒரே பினாயில் நெடி என் மூக்கைத் துளைகிறது. அந்த நெடியால் என் கனவும் தூக்கமும் கலைகிறது. கண் விழித்துப் பார்த்தால் நேரம் இரவு 2 மணி.            


மறுநாள் என் தம்பியிடம் இந்த கனவைப் பற்றி கூறினேன். அதற்கு அவன் Alexis வந்ததால் தான் உனக்கு இந்த அனுபவம் கிட்டியது. அவள் ஆன்மீகத்தில் உன்னைவிட மிகப் பெரிய ஆளாக முந்தய பிறவியில் இருந்திருக்கவேண்டும் என்றான்.

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 10:44:53 AM11/3/13
to mint...@googlegroups.com
புத்தகபடிப்பு, நூலறிவு தேவை என்ற உங்கள் கருத்தை நீங்கள் சொன்ன போது அதை சற்றும் நான் எதிர்க்கவில்லை.

அது உங்கள் அனுபவம். அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு.

முடிவில் 'இதுதான் இராஜ யோகம்' என்றீர்கள்.  லேசாக 'உவாச' வாடை அடித்தது. ஆனால் அதுவும் பரவாயில்லை. ஒருவருக்கு கருத்து சுதந்திரம் உண்டு.

அதன் பிறகு 'இது மட்டுமே ராஜா யோகம்' இதர யோகம் எல்லாம் டூப்பு எனும்போது நீங்களும் ரீசண்ட் மகரிஷி ஆக ஆரம்பித்து விட்டீர்கள். உங்கள் சொற்கள் ஒரு புது மதத்தை உருவாக்க ஆரம்பித்தது.

அதற்குப் பிறகு "ரிஷிகள் தியானத்தில் கண்டார்கள் என்றாலோ, காட்சியை பார்த்தார்கள் என்றாலோ அதெல்லாம் டகல்பாச்சா' என்று சொன்னபோது மேட்டர் ஓவர்.

உங்களது அந்த வரிகளால் சகல மந்திரங்களும், வேதங்களும் எல்லாமே டகல்பாச்சா ஆகிவிட்டது. 

உங்களது அந்த வரிகளால் வேதாந்த மகா வாக்கியங்களும் டகல் பாச்சா ஆகி விட்டது.

 தியானித்து எழுதப்பட்ட திருமந்திர நூலும் உங்கள் வரியால் டகல் பாச்சா ஆகி விட்டது.

உண்மையைத் தேடி ஆய்வில் செல்லும் நூலறிவு படைத்தவர், ஒன்றை பொய் என்று எப்படி தீர்மானமாக சொல்ல முடியும்.

இத்தோடு ஆய்வு முடிந்தது என்ற நிலை வரும்போதுதான் ஒன்றைப் பொய் என்று சொல்ல முடியும்.

ஆனால் எந்த ஆய்வும் உண்மையை நோக்கிப் போய் கொண்டே இருக்கும்.  முடிவு என்பது பிரபஞ்சத்தின் எல்லை என்பதைப் போல இல்லாத ஒன்றை குறிக்கும் சொல்.









2013/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஒட்டுமொத்தமாகப் பொதுமைப் படுத்தக் கூடாது என்று நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் கணிசமான அளவில் இப்படித்தான் இருக்கிறது என்ன செய்ய? உங்கள் ஆதங்கம் புரிகிறது. அத்ற்கு வணங்குகிறேன். ஆனாலும் பல கடும் விமரிசனங்கள் இருக்கின்றன. என் குறிப்பு இந்த இழையைப் பொறுத்தமட்டில் புத்தகப் படிப்பு என்பது அலட்சியிக்கப்பட முடியாத அளவிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது. 

***

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2013, 10:46:55 AM11/3/13
to min tamil
அன்புடைய திரு சேஷாத்ரி அவர்களுக்கு, 

ஐயா! எழுதும் போது உதாரணம் என்ற முறையில் தங்களைக் குறிப்பிட்டு எழுத நேர்ந்துவிட்டது. மற்றபடித் தங்களை ஏளனம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அவ்வாறு என் எழுத்து அமைந்து தங்களுக்கு மனக்கஷ்டம் தந்திருந்தால் மன்னிக்கவும். 

***




2013/11/3 seshadri sridharan <ssesh...@gmail.com>

--

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 10:47:23 AM11/3/13
to mint...@googlegroups.com
திரு சேசாத்திரி

இங்கே பழைய, புதுசு என்பது காலத்தைக் குறிக்க நான் உபயோகித்த சொல்.

நீங்கள் நினைத்த பொருளில் அல்ல.

மேலும் உங்கள் அனுபவம் உங்கள் தனிப்பட்ட விஷயம். அதில் கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை.




2013/11/3 seshadri sridharan <ssesh...@gmail.com>

--

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 11:50:19 AM11/3/13
to mint...@googlegroups.com
நீங்கள் புரிந்துக் கொண்டிருப்பீர்கள் என எண்ணினேன்.

நான் தனிப்பட்ட முறையில் ஓரிருவர் பெயரைச் சொல்ல விரும்பாமல் ரீசண்ட் ரிஷிகள் என்றேன்

காரணம்  'நான் நம்புபவரை நீ சொல்லி விட்டாய்' என்று 'அது தனிப்பட்ட விமரிசனம்' ஆகி . அதனால் உங்கள் இழை திசை திரும்பி அடிதடி கூடம் ஆகி விடும்.

அதற்கு நான் காரணம் ஆக விரும்பவில்லை.

நான் இவர்களை நம்பாதது என் தனிப்பட்ட கருத்து. அதுவே பிறரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அறுதியான உண்மை என்று நான் நினைக்க மாட்டேன்.  அதற்கு எனக்கு தகுதியில்லை. 









2013/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ரீசண்ட் ரிஷிகள் என்று நீங்கள் குறிப்பிடுவதில் பலரும் எனக்கும் உடன்பாடில்லையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இதில் ஒட்டுமொத்தமாக இப்பொழுது என்னால் கழித்துக்கட்ட முடியாது என்று படுகிறது. 

உதாரணமாக ஜே கே. இவரைக் குறித்து நான் கடும் விமரிசனம் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ அவருடைய அணுகுமுறை மிகவும் பொருள் நிறைந்ததாகப் படுகிறது. 

ஏற்கனவே ஸ்ரீரமணர், அரவிந்தர் போன்றோர் வழிகளில் ஈடுபாடு உண்டு. விமரிசனமும் உண்டு என்பது ஒரு பக்கம். 

ஆனால் இப்பொழுது என்னால் பழையவர்கள், புதியவர்கள் என்ற பார்வையைக் கொள்ள முடியவில்லை. யார் சொன்னதில் என்ன பொருள் இருக்கிறது? என்பதுதான் கவனத்திற்கு வருகிறது. 

This is just by way of stating the status of my mind. 

***

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 3, 2013, 12:25:16 PM11/3/13
to mint...@googlegroups.com
 இது வேறொரு தளத்தில் விவாதிக்க வேண்டிய கருத்து. இத்தகு கருத்துக்கு ஆதாரமாக அமையும் மனம், எண்ணப்போக்கு, அனுபவம், சூழ்நிலை, அறிவின் தெளிவு ஆகியவை மனிதருக்கு மனிதர் மாறுபடும். எனவே இதை முடிவில்லாத விவாதமாக நீளும்.

எனவே இதில் உங்களுக்கு மாறுபாடான கருத்து இருக்கிறது என்பதை நான் அறிந்தேன் என்பதோடு எனக்கு இந்த விஷயம் முடிகிறது.




2013/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
>>நான் இவர்களை நம்பாதது என் தனிப்பட்ட கருத்து. அதுவே பிறரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அறுதியான உண்மை என்று நான் நினைக்க மாட்டேன்.  அதற்கு எனக்கு தகுதியில்லை. << 

இந்தக் கருத்து சரியில்லை. இவ்வாறு ரிலேடிவிஸ்டிக் அணுகுமுறையின் தயக்கத்தினால் நாம் நம் மனத்திற்கு உண்மையாக இருந்து படுகின்ற கறாரான விமரிசனங்களை வைக்கத் தயங்குவதால் நம் சம காலத்தினருக்கும், பின் வருவோருக்கும் உரிய மதிப்பு அளிக்கத் தவறுகிறோம் என்று கருதுகிறேன். 

நமது புரிதல்கள் மாறலாம். மேலும் நம் அறிவு விரிவடைய, ஆழ்ந்து, தீவிரமாக நம் நிலைப்பாடுகளும், விமரிசனங்களும் மாற்றம் அடையலாம். அதை நாம் உள்ளபடிப் பதிவு செய்து போவதுதான் முறை. அதைவிட்டு நான் யார் விமரிசனம் செய்ய எனக்கு என்ன தகுதி என்பன போன்ற அறிவின் அணுகுமுறைக்கான பின்நகர்வுகளுக்கான நியாயப்படுத்தல்கள் நன்மை எதையும் விளைப்பதில்லை. மாறாக எதுவும் விமரிசனம் அற்ற சூழ்நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்தியபடி காலத்தையும், தலைமுறைகளையும் தாக்கும் என்ற, நாமே பின்னால் வருந்த நேரிடும் நிலைமைக்கு, நாமே கண்மூடிய பங்குதாரர்களாக ஆகிவிட நேரிடும் அல்லவா? 

***

Nagarajan Vadivel

unread,
Nov 4, 2013, 4:21:04 AM11/4/13
to மின்தமிழ்
ஆனால் இப்பொழுது என்னால் பழையவர்கள், புதியவர்கள் என்ற பார்வையைக் கொள்ள முடியவில்லை. யார் சொன்னதில் என்ன பொருள் இருக்கிறது? 



2013/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ரீசண்ட் ரிஷிகள் என்று நீங்கள் குறிப்பிடுவதில் பலரும் எனக்கும் உடன்பாடில்லையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இதில் ஒட்டுமொத்தமாக இப்பொழுது என்னால் கழித்துக்கட்ட முடியாது என்று படுகிறது. 

உதாரணமாக ஜே கே. இவரைக் குறித்து நான் கடும் விமரிசனம் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ அவருடைய அணுகுமுறை மிகவும் பொருள் நிறைந்ததாகப் படுகிறது. 

ஏற்கனவே ஸ்ரீரமணர், அரவிந்தர் போன்றோர் வழிகளில் ஈடுபாடு உண்டு. விமரிசனமும் உண்டு என்பது ஒரு பக்கம். 

ஆனால் இப்பொழுது என்னால் பழையவர்கள், புதியவர்கள் என்ற பார்வையைக் கொள்ள முடியவில்லை. யார் சொன்னதில் என்ன பொருள் இருக்கிறது? என்பதுதான் கவனத்திற்கு வருகிறது. 

This is just by way of stating the status of my mind. 

***

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 4, 2013, 9:30:48 AM11/4/13
to mint...@googlegroups.com
எந்த படிப்பை விடச் சொன்னார்கள் எந்த படிப்பை படிக்கச் சொன்னார்கள் என்பது அந்த சமஸ்க்ருத சொல்லை ஆழ்ந்து கவனித்தால் புரியும்.

ஒரே சொல் நமக்கேற்றார் போல் பலவாறாகத் கற்பிதம் கொடுக்கும். 

வேதங்களிலும், உபநிடதங்களிலும் சில இடங்களில் சொன்ன படிப்பை பிரதானமாகச் சொன்ன நீங்கள் பெரும்பாலான இடங்களில் சொன்ன தியானத்தை, தவத்தை கண்டுக் கொள்ளவில்லையே.

தைத்ரீய உபநிடதத்தில் பிருகுவை வருணன் படிக்கச் சொன்னாரா, தியானிக்கச் சொன்னாரா?





2013/11/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அருளாளர்கள் எல்லாம் ஒருமிக்கப் பெரும்பாலும் படிப்பு என்பதையே அல்ட்சியித்தோ, அல்லது கண்டித்தோ ஒதுக்கிப் பேசும் போது வேதங்கள் 

படிப்புதான் முக்கியம். 

படிப்பைக் கைவிடாதே. 

படித்ததை ஒரு நாளும் மறந்துவிடாதே 

-- என்று வலியுறுத்துகின்றன. 

முத்கலரின் குமாரரான நாகர் என்பவர் -- 

படிப்பதும், படித்ததை நன்கு எடுத்துச் சொல்வதுமே ஒரே பெருநெறி -- என்கிறார். 

***



ரா.கிருஷ்ணன்

unread,
Nov 4, 2013, 9:55:44 AM11/4/13
to mint...@googlegroups.com
என்னிடம் இப்போது கணினி இல்லை.

இதுவே இப்போதைக்கு என் கடைசி மாடலாக இருக்கும். போனில் என்னால் பெரிய அளவில் டைப் செய்ய முடியவில்லை.

வேதத்தை உதாரணம் தந்தால் வேதத்தை முழுக்க தர வேண்டும். அப்போதே படிப்பவர் எது சரி என தீர்மானிக்க முடியும்.

நடு நடுவே நமக்கு வேண்டியதை மட்டும் தரும்போது....... 

நீங்கள் எதை வேண்டாம் என்று சொல்கிறீரோ அந்த 'உவாச' லிஸ்டில் நீங்களும் சேர்க்கப்பட்டு விடுவீர்கள்.

1, படிப்பு வேண்டும் என்று நீங்கள் சொல்வது உங்கள் உரிமை. 

2. இதர வழிகளான யோக, பக்தி வழிகளுக்கு ஈடாக ஒரு சாதனையாக அதை தாபிக்க நினைத்தால்....இது ஒரு புது சித்தாந்தாமாகிறது.

3. அப்படியென்றால் நிறைய நிரூபணம் வேண்டும்! 

4.நான் ஆத்மீகமாக சொல்லவில்லை, தெய்வத்தையும் நம்பவில்லை, உலகியல் வாழ்விற்கு சொல்கிறேன் என்றால் இதில் எனக்கு மறுப்பில்லை.

5. எது படிப்பு என்பதே மனிதருக்கு மனிதர் வேறுபடும் கருத்தாக இருக்கும்.

6. உங்களுக்கு இது பிடித்திருக்கிறது என்பது புரிகிறது.  நன்று! அது போல் யோக, தியான, பக்தி, தவ இத்யாதிகளும் இருக்கின்றன.

7. இது மட்டும்தான் சரி மீதி எல்லாம் டூப்பு என்றால்........இன்னொரு மகரிஷி தோன்றி விடுகிறார்.

நான் ஓடி விடுகிறேன்.

கணினி வரும் வரையில் விடைப் பெற்றுக் கொள்கிறேன். நமஸ்காரம்.

படிப்போ, குடும்பமோ, சினிமாவோ.....எல்லோரும் நிம்மதியாக இருந்தால் சரி.


2013/11/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
படித்ததை தியானிக்கச் சொல்கிறார்கள். படிப்புதான் அடிப்படை. 

***


2013/11/4 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Nov 4, 2013, 10:01:51 AM11/4/13
to min tamil
கவலையே படாதீர்கள். எனக்குச் சரியெனப் பட்ட கருத்தை எழுதுகிறேன். புதிய மார்க்கம் எல்லாம் உண்டாக்கும் நோக்கம் இல்லை. அதற்கான திறமையெல்லாம் என்னிடம் கிடையாது. உங்களுக்குப் பட்ட கருத்தைச் சொல்லுங்கள். சரியென எனக்குப் பட்டால் ஏற்றுக்கொள்கிறேன். 

***

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 4, 2013, 10:07:24 AM11/4/13
to mint...@googlegroups.com
டைப் பண்ண முடியவில்லை. பின்னொரு நாள் வருகிறேன்.

எனக்கு என் கவலையே பெரிதாக இருக்கிறது. வேறு கவலைப் பட எது நேரம்?


Sk Natarajan

unread,
Nov 4, 2013, 10:32:26 AM11/4/13
to தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள், vallamai
படிப்புதான் உண்மையான ராஜயோகம்.

உண்மை
அருமை , தொடருங்கள் ஐயா


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.

மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.

படிப்பு ஒன்றுதான் மனிதரை தேவ நிலையினும் உயர்ந்த பெரும் நிலைகளுக்கு உயர்த்தக் கூடியது.

கடவுள், ஜபம், தபம், ஹோமம், பூஜை எல்லாம் சும்மா பிள்ளை விளையாட்டு.

உண்மையான ஆன்மிகம் என்பது படிப்பு.

நூலைக் கற்றல், புத்தகம் படித்தல் என்பதற்கு மேல் ஒரு மகத்தான ஆன்மிக வழி எனக்குத் தெரிந்தவரை இல்லை.



DEV RAJ

unread,
Nov 4, 2013, 9:10:16 PM11/4/13
to mint...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், vallamai
On Monday, 4 November 2013 21:34:09 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஏன் ராமன் வாயாலும் இப்படிப் புத்தரிடம் காழ்ப்பு உணர்ச்சி? ஜாபாலியைத் திட்டுகின்றவர் அந்தச் சாக்கில் புத்தரைப் பற்றி இப்படியா? Why this obsessive hatred towards Buddha? 


...............................விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் .................... 

நீங்களே இதையொட்டி ஒருமுறை பேசியுள்ளது
நன்கு நினைவில் உள்ளது.

ஆன்மிகம் ஒருபுறம் இருப்பினும் வேத சமயம்
உலக வாழ்க்கையில் தீவிர வெறுப்பைக் காட்டவில்லை;
மாந்தர் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்றே முனைப்பைக்
காட்டுகிறது. பாரதத்தின் ராணுவ ஆற்றல் மழுங்கி தேசம்
வலிமை குன்றி, மாற்றார் வசப்படக் காரணமாக அமைந்தது
பவுத்தப் பரவலால் என அறிஞர் கூறுவர்



தேவ்

Subashini Tremmel

unread,
Nov 5, 2013, 12:21:15 AM11/5/13
to மின்தமிழ், Subashini Tremmel
அருமையானதொரு இழை.இங்கு நிகழ்ந்திருக்கும் உரையாடல்களையெல்லாம் வாசித்து மகிழ்ந்தேன். சிந்தனைக்கு விருந்தான விஷயங்கள்.

சுபா


2013/11/5 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

DEV RAJ

unread,
Nov 6, 2013, 9:41:57 PM11/6/13
to mint...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், vallamai
On Tuesday, 5 November 2013 19:27:55 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
..... அதுவும் ராமன்! புத்தர் ஒரு அவதாரம்! ராமன் புத்தரைப் பற்றி இப்படிப்பட்ட வார்த்தைகளையா பயன்படுத்துவது? 

ராமன் ஓர் அவதாரம், ஏன் பரசுராமரும்கூட ஓர் அவதாரம்.
இவர்களுக்குள் நேரடியான மோதலே நிகழ்ந்துள்ளது.
நாத்திக வாதம் பேசிய ஜாபாலிக்கு அயோத்தியில்
இடமில்லாமல் போய்விடவில்லை; வசிட்ட முனிவரே
இராமபிரான் முன்னிலையில் இவரைப் புகழ்ந்துள்ளார்.
பவுத்தாகமச் சிந்தனைகளை வேதாந்த விவாதங்களில்
இன்றும் விரிவாக அலசுகின்றனர். 

இராமபிரான் விசுவாமித்திரரைத் தொடர்ந்துசென்றது
தொடங்கி, போருக்கான ஆற்றலையும்
அறிவுப்புலத்துக்கான சித்தாந்தங்களையும்,  
சமன் செய்யும் பணியை மேற்கொண்டு 
வந்துள்ளதாகப் புரிந்துகொள்ள முடிகிறது
 

தேவ்

Banukumar Rajendran

unread,
Nov 8, 2013, 6:40:29 AM11/8/13
to மின்தமிழ், vallamai



2013/11/5 DEV RAJ <rde...@gmail.com>
போகிறப்போக்கில் இப்படித் தட்டிச் செல்கிறீர்களே?? தங்களுக்கே இது அபாண்டமாகத் தெரியவில்லை?

கி.பி.10ஆம் நூற்றாண்டிற்கு பிறகு பெளத்தப் பரவலை எந்த அறிஞர்க் குறிப்பிடுகிறார்??

உலகின் சிறந்த, உன்னதமான மதத்தை/சமயத்தை, அதுவும் தற்போது அருகிய நிலையில் இவ்வாறு கூறுவது நன்றாகயில்லை.


:-(


இரா.பானுகுமார்,
சென்னை

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 9, 2013, 8:00:10 AM11/9/13
to mint...@googlegroups.com
ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்.

எல்லாமுமே உங்களால் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டனவாக இருக்கின்றன.

இதுதான் அறிவுத் தெளிவா? இதுவா ஆய்வு?

எதை மறுப்பது? எதில் தொடங்குவது?

நீங்கள் எதை எல்லாம் மறுத்து சொன்னீர்களோ அந்த விஷயங்களை எல்லாம் நீங்களே செய்வது போலவும் ஒரு பிரமை.

உங்கள் எழுத்தைப் படிக்கும் போது நீங்களே ஒரு அவதாரம் போலதான் தென்படுகிறது.

யாரும் இங்கே நூல் படிப்பை வெறுப்பது போல தோன்றவில்லை.

யாரும் இங்கே நூல் படிப்பை வேண்டாம் என்றும் சொல்லவில்லை.

ஆகவே யாருக்கு இங்கே சொல்கிறீர்?
 

ஆத்மீகத் தளத்தில் இதைச் சொல்கிறீர் என்றால்,

படிப்பு வேண்டாம் என்று சொன்ன ரிஷிகள், ஞானியார் பெயரை எல்லாம் சொல்லி அவர்கள் சொன்னதை எல்லாம் முழுக்க இட்டு பின் உங்கள் கருத்தைச் சொன்னால் நன்று.

இப்போது நீங்கள் சொல்வது தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

புத்தகம் படித்தே எந்த நிலையை அடைந்து விடலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்பதும் புரியவில்லை.

உலகில் பேசப்படும் அறிவு வளர்ச்சியையா இல்லை ஆத்மீகத்தில் சொல்லும் பூரண நிலையையா?

ஓட்டு மொத்தமாக ஞானியார் ரிஷிகள் எல்லோரையும் வகை தொகை இல்லாமல் தாக்கு தாக்கு என்று தாக்குகிறீர்.

ஒருவேளை  பதில் சொல்ல அவர்கள் வரமாட்டார்கள் என்று முடிவு கட்டி விட்டீர்களோ?








2013/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சரி. ஏன் இவ்வாறு புத்தகப் படிப்பையும், அறிவு வாதத்தையும் இவர்கள் எரிச்சல் அடைந்து கண்டிக்கின்றனர் என்று பார்த்தால் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அதாவது ஞானம், சமாதி நிலையில் தெய்விக ஞானம் பெறுதல் என்று எல்லாம் பார்த்தால் அங்கு அவ்வித ஞானம் பெறுபவர் தாம் அசாதாரணமானவர் என்றும் கேட்பவர்கள் சாதாரண நிலையில் இருப்பவர்கள் என்றும், கர்மங்களால் பந்தப்பட்டு அறியாமையில் கிடந்து உழல்பவர்களாகவும், ஏதோ பல ஜன்மத்துப் புண்ணியம் இப்படி ஞானம் பெற்றவர்களைப் பார்க்கவாவது கிடைத்ததே என்று வியந்து நிற்பவர்களாகவும் ஒருவித எதிரும் புதிருமான சூட்சுமம் எண்ணச் சூழ்நிலையில் உலவும். ஆனால் புத்தகப் படிப்பு, அறிவு வாதம் என்று வரும்போது அது அனைவருக்குமான பொதுமையாக அமைகிறது. ஏதோ படித்தவர் அந்தத் தெய்வத்தின் அவதாரம், இந்தக் கடவுளின் அவதாரம், என்றெல்லாம் ஹைலட்டர்களோ, அல்லது புத்தகத்தைப் படிக்காதவர் ஏதோ கர்மங்களில் விழுந்து பந்தப்பட்டு துர்பாக்கியம் ஆனவராகவோ கருதும் சூழ்நிலை கிடையாது. புத்தகத்தைத் தானும் கற்க முடியும், அறிவைப் பயன்படுத்தித் தானும் சிந்தித்தால் விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்ற இயல்பான வேதாந்த மனநிலை புத்தகப் படிப்பில்தான் நிலவுகிறது. இந்த வித ஜனநாயகப் போக்கு மெய்ஞ்ஞானச் சூழல்களில் பழகியவருக்கு ரசிப்பதில்லை. அஹங்காரம் அற்ற சூழ்நிலையை உருவாக்குவதாகச் சொல்லிக்கொள்ளும் மெய்ஞ்ஞானச் சூழல்கள் பெரும்பாலும் இந்தவித சூட்சுமமான அஹங்காரத்தை உள்ளடக்கியிருக்க, எந்தவித பந்தாவும் அற்ற புத்தகப்படிப்பு, அறிவுவாதம் என்னும் இயல்பான மனித வளர்ச்சிக்கான செயல்பாடுகள் அஹங்காரம் என்பதைத் தன்னடையே அகற்றுவதாய் அமைந்துவிடுகிறது. 

***



2013/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பொதுவாகவே மதம், மெய்ஞ்ஞானம், யோகிகள், பக்தர்கள் என்று சொல்வோரெல்லாம் புத்தகப் படிப்பு, அறிவுவாதம், பொது புத்தியால் கேள்வி கேட்டல் என்பனவற்றை வெறுப்பவர்களாகவும், கண்டிக்கின்றவர்களாகவும், ஏசுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். கேட்டால், ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்கின்றனர். 

‘புத்தகப்படிப்பில் அகப்படுமாடா பிரம்மம்?’ என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்கள் என்றால், கேட்டவர் தாம் கற்ற நூல்கள், கற்க நினைக்கிற நூல்கள் அனைத்தையும் வெற்று வீண் வேலை என்று நோகத் தொடங்கிவிடுவர். ஏதோ தெரியாத் தனமாய்த் தாங்கள் நூல்களைப் படித்துவிட்டொம் என்றும், பதில் சொன்னவரைப் போலத் தமக்கும் பரம ஞானம் வாய்க்கவில்லையே, வாய்த்திருந்தால் தாமும் நூல்களாவது ஒன்றாவது எல்லாம் மண்ணாங்கட்டி என்று மெய்ஞ்ஞானிகளாய் உலவலாமே என்று வருத்தப்பட்டுக் கொண்டு நிற்பர். 

இந்த மாதிரியான பேச்சுகள் எல்லாம் மக்களுடைய அறிவுக்கான ஆர்வத்தைச் சீர்குலைத்து, புத்தகங்கள், நூலறிவு என்பது எல்லாம் பிரத்தியட்சமாய் மக்களுக்கு அறியாமையை விலக்கி அறிவு என்னும் மன ஒளியைத் தருகின்ற கண்கூடான உண்மையைக் காணாமல் அடித்து அஞ்ஞானம் அதிகப்படத்தான் வழிவகுக்கின்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன. கண் இருந்தும் குருடர்களாய் ஆவதுதான் ஆன்மிகம் என்ற போலியான உணர்ச்சி வழக்கத்தை அதிகப்படுத்துகின்றன. போதாக்குறைக்கு பக்தி, பஜனை என்பதெல்லாம் அறிவு நெறியை அலட்சியப்படுத்தி மக்கள் எதையோ நம்பிக்கை வைத்துப் பின் தொடரும் விழிப்பற்ற நிலையையே பரவ வழிவகுக்கின்றது. கற்றல், சிந்தித்தல், ஓர்தல், ஓர்ந்ததனில் ஊன்றி நின்று உணர்தல் என்ற உண்மையானதும், மக்கள் அறிவுக்கும், வாழ்க்கைக்கும் ஆரோக்கியமானதுமான அறிவுக்கான ஊக்கம் மக்கள் வாழ்க்கையில் வேர்கொள்ளாமலேயே போய்விடுகிறது. 

***


Mohanarangan V Srirangam

unread,
Nov 9, 2013, 8:05:05 AM11/9/13
to min tamil
வாங்க வாத்யாரய்யா! உங்கள் கருத்தை அல்லது திருத்தத்தைச் சொல்லுங்கள். 




2013/11/9 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 9, 2013, 8:10:43 AM11/9/13
to mint...@googlegroups.com
வாங்க வாத்யாரய்யா! ....>>>>

ஜெய் விவேகானந்தா


 உங்கள் கருத்தை அல்லது திருத்தத்தைச் சொல்லுங்கள். ...>>>

 
முதலில் ஒரு ரிஷியோ, ஞானியாரோ சொன்ன கருத்தை அப்படியே இடுங்கள். அதில் நீங்கள் புரிந்துக் கொண்டதைச் சொல்லி, உங்கள் கண்டிதத்தைச் சொல்லுங்கள்.

என் தரப்பு கருத்தை என்னால் முடிந்த வரை முன் வைக்கிறேன். 

மொட்டை தாதன் குட்டையில் தொபுகடீர் என்று விவரம் எதுவும் சொல்லாமல் அந்த ஞானி இப்படி சொல்லிப்புட்டார் அதனால் அது தப்பு என்ற ரீதியில்  பெயரையும் விவரத்தையும் சொல்லாமல் சொன்னால் எங்கே திருத்தத்தைச் சொல்வது?





ரா.கிருஷ்ணன்

unread,
Nov 9, 2013, 8:20:31 AM11/9/13
to mint...@googlegroups.com
என்ன ஐயா

ஆள் பெயரையும் சொல்லாமல் நூலையும் சொல்லாமல் கருத்தைச் சொல்லு சொல்லு என்றால் என்ன சொல்ல முடியும்?



 


2013/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இதெல்லாம் யாரை என்று குறிப்பிடுவது? பெரும்பான்மையும் புத்தகப்படிப்பைக் கண்டிப்பதுதான். பொதுவாகவே உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 9, 2013, 8:37:58 AM11/9/13
to mint...@googlegroups.com
என்னுடைய கருத்தைச் சொல்லி விடுகிறேன்.

அதில் சத்தியம் இருப்பதாகப் பட்டால் ஏற்கவும். இல்லையேல் தாராளமாக ஒதுக்கி விடலாம்.

1. ஒரு எழுத்து முதலில் எழுதுபவரின் குணாதிசயத்தை சார்ந்து இருக்கிறது.

2. அதனால் எழுதுபவரின் மனோநிலை, அவரின் தற்போதைய அறிவு விளக்கம் ஆகியவற்றின் தன்மையாலேயே ஒரு விஷயம் விளங்கிக் கொள்ளப் படுகிறது.

3. மேற்கூறிய இரு விஷயங்களால் உங்களைப் பற்றிய எண்ணம் எழாமல் இந்த விஷயத்தில் இருக்க முடியாது.

4. எனக்கு புரிய வருவது, நீங்கள் படிப்பை மிகவும் பற்றி விட்டீர்கள்.

5. மேலும் நீங்கள் தடாலடியாக ரிஷிகள் சொல்வது டூப்பு! யோகம், யோக நிலைகள் எல்லாம் டகல் பாச்சா என்று சொன்னதை பார்க்கும் போது, உங்களால் நூல் படிப்பைத் தவிர வேறேதிலும் அனுபவத்தை கண்டறிய முடியவில்லை என்பது புரிகிறது.

6. ஆகவே  நூல் படிப்பை விட்டால் வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு, பிற வழிகளின் தவறுகள் பெரிதாகத் தெரிய ஆரம்பிக்கும். காரணம், கிட்டாத ஒன்றின்கண் காணும் பிழைகள் மனதிற்கு ஆறுதல் தரும்.

7. நூல் படிப்பு நிச்சயம் உலக அறிவைத் தரும். ஆனால் ஆத்மீகம் என்றொன்று இருப்பது உண்மையானால் அதில் உள்ள பூரண நிலையை அடைய அது உதவும் என்பதை ஏற்க நீங்கள் முதலில்  அந்த பூரண நிலையப் புத்தகம் படித்தே அடைய வேண்டும். அப்படி நீங்கள் அடைந்தால் நீங்களே உதாரணமாவீர்கள். இல்லாவிட்டாலும் நீங்கள் உதாரணமாவீர்கள்.



2013/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ரீசண்ட் அருளாளர்கள் விஷயத்தில் நீங்கள் கொண்ட தயக்கம் தானய்யா எனக்கும். குறிப்பிட்டுச் சொன்னால் எனக்குப் பிடித்தவரைச் சொல்லிவிட்டாய், உனக்குப் பிடித்தவரைச் சொல்லிவிட்டாய் என்று தனிப்பட்ட வருத்தம் ஏற்படும் அல்லவா. 

பரவாயில்லை விருப்பப்பட்டால் முடிந்தால் சொல்லுங்கள். நோ ப்ராப்ளம். 

***

DEV RAJ

unread,
Nov 9, 2013, 11:00:47 PM11/9/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Saturday, 9 November 2013 18:09:52 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
சரி. ஏன் இவ்வாறு புத்தகப் படிப்பையும், அறிவு வாதத்தையும் இவர்கள் எரிச்சல் அடைந்து கண்டிக்கின்றனர் என்று பார்த்தால்.......


படகுப் பயணம் செய்து நீந்தத்தெரியாமல்  
நீரில் மூழ்கிய பண்டிதரைக் கேலி செய்யும் 
கதையும் குருதேவர் கூறியதுதான். ஒருகால் 
அப்பண்டிதரின் படிப்பு ராஜயோக ஸிலபஸில்
இல்லாததாக இருக்கலாம்



தேவ்

DEV RAJ

unread,
Nov 10, 2013, 12:26:21 AM11/10/13
to mint...@googlegroups.com
On Saturday, 9 November 2013 19:07:58 UTC+5:30, krishnanrnava wrote:
7. நூல் படிப்பு நிச்சயம் உலக அறிவைத் தரும். ஆனால் ஆத்மீகம் என்றொன்று இருப்பது உண்மையானால் அதில் உள்ள பூரண நிலையை அடைய அது உதவும் என்பதை ஏற்க நீங்கள் முதலில்  அந்த பூரண நிலையப் புத்தகம் படித்தே அடைய வேண்டும். அப்படி நீங்கள் அடைந்தால் நீங்களே உதாரணமாவீர்கள். இல்லாவிட்டாலும் நீங்கள் உதாரணமாவீர்கள்.
 

இதே வழியில்தான் என் சிந்தனையும் சென்றது. 
நூற்கல்வி விவேக மலர்ச்சிக்கு உறுதுணையாக
அமைதல் வேண்டும்; அந்த விவேகம் மலர்ச்சி பெற்று
ஞானமாகப் பரிணமிக்கும். விவேகத்தை ஊக்குவிக்காத
எவ்விதக் கல்வியும் ஆன்மிகப் புலத்துக்கு ஒவ்வாதது,
அது பெரும்பாலும் செருக்குக்கே அடிகோலும் என்பதே 
நான் புரிந்து கொண்டிருப்பது. கல்வியும், செல்வமும்
மேலும் மேலும் சேகரிப்பைத் தூண்டுவன. உத்தவரின்
கல்வி உதவாமற் போனது. ஒப்புக்கொள்வோர்
ஒப்புக்கொள்ளட்டும், இல்லையானாலும் நட்டமில்லை


தேவ்

DEV RAJ

unread,
Nov 10, 2013, 3:20:29 AM11/10/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
                    ||ஸா வித்₃யா யா விமுக்தயே|| 

தத்கர்ம யந்ந ப₃ந்தா₄ய ஸா வித்₃யா யா விமுக்தயே| 
ஆயாஸாயாபரம் கர்ம வித்₃யSந்யா ஶில்பநைபுணம் ||
                                                                    - விஷ்ணு புராணம்

Geetha Sambasivam

unread,
Nov 11, 2013, 4:06:13 AM11/11/13
to மின்தமிழ்
//கல்வியும், செல்வமும்
மேலும் மேலும் சேகரிப்பைத் தூண்டுவன. உத்தவரின்
கல்வி உதவாமற் போனது. //



தேவ் ஐயா, இதைக் குறித்து இன்னும் விரிவாக விளக்க இயலுமா?  நன்றி.


2013/11/10 DEV RAJ <rde...@gmail.com>
  கல்வியும், செல்வமும்
மேலும் மேலும் சேகரிப்பைத் தூண்டுவன. உத்தவரின்
கல்வி உதவாமற் போனது. ஒப்புக்கொள்வோர்
ஒப்புக்கொள்ளட்டும், இல்லையானாலும் நட்டமில்லை


தேவ்

-- 

DEV RAJ

unread,
Nov 11, 2013, 7:11:36 AM11/11/13
to mint...@googlegroups.com
இதைக் குறித்து இன்னும் விரிவாக விளக்க இயலுமா?  <<<<

பொதுவாக உலகியல் சார்ந்த கல்வி, நுண்கலைகள் போன்றவற்றில் 
ஏற்படும் ஆழ்ந்த தேர்ச்சி பெரும்பாலானோர்க்குச் செருக்கை 
ஏற்படுத்துகின்றன; தீவிரமான புத்திக்கூர்மை மேலும் மேலும் கற்பதில்
முனைப்பை ஏற்படுத்தும். பல்துறைத் தேர்ச்சியில் தவறில்லை.
செருக்கு ஏற்படுவது தவறு; செல்வவளம் மிகும்போதும் இதே ஆபத்து.
இருடியரின் தவ ஆற்றல் அவர்களைச் சினம் கொள்ளச் செய்வதையும்
பார்க்கிறோம். ஏனெனில் இவற்றில் புலன்களின் சார்பு அதிகம்.
கல்வியில் புத்தியின் தொடர்புள்ளது. தவம் மன ஒருமைப்பாட்டின்
தொடர்புள்ளது. உண்மையில் புத்தியோ, மனமோ ஆன்மா ஆகமுடியாது.
ஆன்மா அவற்றைக்காட்டிலும் நுண்ணியது; அவற்றிலும் வேறானது. 

ஆகவே உபநிஷத் அபர வித்யை என அவற்றைப் புறந்தள்ளுகிறது.

’வித்யயா அம்ருதம் அச்நுதே’ எனக்கூறும் நூல்கள் அந்த வித்யை
என்ன என்றும் சொல்கின்றன; எது உலகியல் தளையை நீக்கி
ஆன்ம விடுதலை தருமோ அதுவே வித்யை எனவும் வரையறை
செய்கின்றன -  ஸா வித்₃யா யா விமுக்தயே.

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் என்பார் மஹாகவி.
விவேக முதிர்ச்சி தரும் கல்வியே சாகக் கல்வி.

உத்தவர் கண்ணபிரானின் சிறிய தகப்பனாரின் புதல்வர்;
நில உலகின்  கலைகளைக் கற்றதுபோக மேற்படிப்புக்கு
வியாழ பகவானிடம் சென்று கற்றவர்.கண்ணனின் அந்தரங்க 
ஆலோசகரானவர். கண்ணனின் பிரிவால் வாடும் ஆயர்களைத்
தேற்றும் பணியை மேற்கொண்டு கிளம்பினார். ப்ரேம பக்தியின் 
எல்லையில் நிற்கும் அந்த அறிவொன்றுமில்லாத ஆயரிடம் 
உழுவலன்பின் வடிவம் யாது என்று தெரிந்துகொண்டு, அழுத 
கண்களும், தொழுத கையுமாகக் கண்ணனிடம்  திரும்பினார்.
பக்தியால் பண்பட்ட உள்ளம்பெற்ற அவருக்குப் பின்னர்
ஒரு கீதை அருள்கிறார் கண்ணபிரான்; அதன் பெயர் உத்தவ கீதை
மிகுந்த சாந்தியைத் தரவல்லது. உத்தவர் க்ருஷ்ண பக்தியின் 
ப்ரதீகமாக இன்றும் பதரிகாசிரமத்தில் வாழ்கிறார் என்பது 
அடியார்களின் நம்பிக்கை.

கீதாம்மாவுக்கு ஹிந்தி தெரியும் என்பதால் -
http://hi.brajdiscovery.org/index.php?title=%E0%A4%89%E0%A4%A6%E0%A5%8D%E0%A4%A7%E0%A4%B5


தேவ்

Geetha Sambasivam

unread,
Nov 11, 2013, 8:06:59 AM11/11/13
to மின்தமிழ்
ஓ, நன்றி.  சுட்டியில் ஹிந்தி படிக்கவும் எளிமை.  நன்றி. 


2013/11/11 DEV RAJ <rde...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 11, 2013, 8:10:27 AM11/11/13
to மின்தமிழ்
உண்மையில் புத்தியோ, மனமோ ஆன்மா ஆகமுடியாது.

ஆன்மா அவற்றைக்காட்டிலும் நுண்ணியது; அவற்றிலும் வேறானது. //


விளக்கத்திற்கு மிக்க நன்றி.  ஒவ்வொருத்தர் உயிரையும், ஆன்மாவையும் ஒன்றாக நினைப்பது சரியா?  உயிர், ஜீவன் இரண்டும் ஒன்று தானே???


2013/11/11 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 11, 2013, 8:26:59 AM11/11/13
to mint...@googlegroups.com
On Monday, 11 November 2013 18:40:27 UTC+5:30, myself wrote:
ஒவ்வொருத்தர் உயிரையும், ஆன்மாவையும் ஒன்றாக நினைப்பது சரியா?  உயிர், ஜீவன் இரண்டும் ஒன்று தானே???


ஆன்மிகம் இலக்காக வைப்பது தனித்த ஆன்மாவை - ப்ரத்யகாத்ம ஸ்வரூபம் என்பதை.
நாம் விவகரிக்கும் ஜீவன், சூக்கும உடலுடன் கூடிய உயிரை;
மனம், புத்தி, அகங்காரம், வாசனைகளுடன் கூடியது சூக்கும சரீரம்.
அந்த ஊர்தியின் துணை இருந்தால்தான் அடுத்த உடலைப்பற்றி
மறு பிறவி தொடர இயலும்.
 
டாக்டர் திவா ஜீ கண்ணில் படுகிறதா தெரியவில்லை; 
அவர் தரும் விளக்கம் அருமையாக இருக்கும்


தேவ்

Geetha Sambasivam

unread,
Nov 11, 2013, 8:32:31 AM11/11/13
to மின்தமிழ்
அவரோடு நிறையத் தரம் இது குறித்துக் கேட்டாச்சு!  மீண்டும் மீண்டும் சிலர் எழுதுவதால் சந்தேகம் வந்துடும்.  அதான் உங்களையும் கேட்டேன். :)))) எனக்குப் புரிகிறது.  சூக்ஷ்ம உயிர் குறித்த விளக்கமும் புரிகிறது. :))))


2013/11/11 DEV RAJ <rde...@gmail.com>
On Monday, 11 November 2013 18:40:27 UTC+5:30, myself wrote:
ஒவ்வொருத்தர் உயிரையும், ஆன்மாவையும் ஒன்றாக நினைப்பது சரியா?  உயிர், ஜீவன் இரண்டும் ஒன்று தானே???



டாக்டர் திவா ஜீ கண்ணில் படுகிறதா தெரியவில்லை; 
அவர் தரும் விளக்கம் அருமையாக இருக்கும்


தேவ்

--

Tthamizth Tthenee

unread,
Nov 11, 2013, 10:28:02 PM11/11/13
to mint...@googlegroups.com

2013/11/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஒவ்வொருத்தர் உயிரையும், ஆன்மாவையும் ஒன்றாக நினைப்பது சரியா?  உயிர், ஜீவன் இரண்டும் ஒன்று தானே???


​சமீபத்தில் எழுதிய கவிதை
 
 
உயிர்வதை பாவமென்றால் உணவே கிடையாது
உயிர் வதை என்கின்ற சொல்லே கிடையாது
கல்லிற்கும் உயிருண்டு என்ற  சொல்லிற்கும் உயிருண்டு
கல்லினுள் தேரை உண்டு  கௌதமரின் பத்தினியாம்
அகலிகை தானும் உண்டு  அமைதியாய் இருந்ததுண்டு
எனக்கொரு கேள்வியுண்டு  ராமனின் காலடியால்
காரிகை உயிர்த்து வந்தாள் உண்மைதான்
உயிர்த்தது  அகலிகையின் உயிரா உடலா
 
உடல் வதை என்னும் சொல் பொருத்தம்
உயிர் வதை என்ற சொல்லை செய்யுங்கள் திருத்தம்
உயிர்த் தியாகம் யாராலும் செய்ய முடியாது
உடல் தியாகம் செய்கின்ற உயிரும் தங்காது
 
உடலால் அழிவர் உயிரால் அழிவர் என்பது
உண்மைதான் வேறெதுவும் கிடையாது  
உடல் விட்டுப் போனாலும் உயிருக்கு அழிவேது
உயிர் விட்டுப் போனால் உடலே பிழைக்காது
 
உயிர் வதை பாவம் என்றால் மொழியே பிழைக்காது

உடல் வதை பாவமென்னும் வழியே  கிளைக்காது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

PRASATH

unread,
Jan 4, 2014, 12:06:18 PM1/4/14
to தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள், vallamai
:)))

மாறுபடுகிறேன் ஐயா...

பொருள் அறியாமல் வேதங்களை ஓதுபவனால் துயரதிலிருந்து விடுபட முடியும் என்பதையும், வேதங்களை மனன்ம் செய்து நினைவில் வைத்திருப்பவன் ஸ்வர்க்கத்தை அடைவான் என்பதையும் ஏற்க இயலவில்லை...

பொருளறிந்து வேதங்களை கற்ற்வன் துயரிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இயலாவிடினும் துயரங்கள் என்பவை என்ன, என்பதில் தெளிவு கிடைத்து அத்துயரங்களின் பாதிப்பைத் தன்னை பாதிக்க விடாமல் செய்து கொள்ள முடியும்.

மேலும் பொருளறிந்து வேதம் கற்றவன், அதன்படி வாழ்வானாயின் மோஷத்தை அடைவான் என்பதில் மாற்று கருத்து இல்லை... 

என்னை/எனது கருத்தை மாற்றிக் கொள்ள மேலும் விளக்கம் எதிர்பார்க்கிறேன்

2014/1/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
”எல்லா வேதங்களையும் ஓதுவதனால் துயரத்தினின்றும் உடனே விடுபடுகிறான். படித்த வேதங்களை மறவாமல் இருப்பதினால் ஸ்வர்க்கத்தையும், அவற்றின் பொருளை அறிவதனால் மோக்ஷத்தையும் அடைகிறான்.” 

-- பீஷ்மர். 


Innamburan S.Soundararajan

unread,
Jan 4, 2014, 12:28:26 PM1/4/14
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள்
அடடே! அந்தக் காலத்துலயும் நம்மளை மாதிரி யோசிச்சவங்க உண்டு போல இருக்கே! 

~ இது எப்படி இருக்கு என்றால்? … எதுக்கு வம்புக்கு போகணும் ராஜு? 'கம்'நு இரு அவர் மாதிரி.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

ரா.கிருஷ்ணன்

unread,
Jan 4, 2014, 1:07:47 PM1/4/14
to mint...@googlegroups.com
உடும்புபிடி உடும்பை விட கள்ளர்களுக்கே அதிகம் உதவும்.


On Saturday, January 4, 2014, Mohanarangan V Srirangam wrote:
”எல்லா வேதங்களையும் ஓதுவதனால் துயரத்தினின்றும் உடனே விடுபடுகிறான். படித்த வேதங்களை மறவாமல் இருப்பதினால் ஸ்வர்க்கத்தையும், அவற்றின் பொருளை அறிவதனால் மோக்ஷத்தையும் அடைகிறான்.” 

-- பீஷ்மர். 

அடடே! அந்தக் காலத்துலயும் நம்மளை மாதிரி யோசிச்சவங்க உண்டு போல இருக்கே! 

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

ரா.கிருஷ்ணன்

unread,
Jan 4, 2014, 1:28:04 PM1/4/14
to mint...@googlegroups.com
///Kindly avoid personalising the comments. ///

This is the worst kind of accusation I have ever come across.  Soon I will reply in this thread.



On Saturday, January 4, 2014, Mohanarangan V Srirangam wrote:
Ra Krishnan, 

If you do not like what I write kindly avoid seeing my mails. You have always the delete option. Kindly avoid personalising the comments. 

I hope you understand. 

***




2014/1/4 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 20, 2014, 11:11:37 AM1/20/14
to vallamai, min tamil
அருமை!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2014/1/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாராயணம் பண்ணுவதும், படிப்பதும் ஒன்றாகிவிடுமா? 

பாராயணம் பண்ணுகிறவருக்கு அது ஒரு சடங்கு. பாராயணம் பண்ணுவதால் இந்தக் காரியம் நடக்கும்; அந்தக் காரியம் நடக்கும்; ஏதாவது காரியம் பலிதமாகும் என்ற நூலுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள்தாம் முக்கியம். 

இல்லாவிட்டால் யோசித்துப் பாருங்கள் - ஒரு நூலில் இன்னார் எழுதினார், இன்னார் பதிப்பித்தார் என்று போட்டிருக்கும். எந்த புத்திசாலியாவது நூலைப் படிக்கும் போது 

”எழுதியவர் இன்னார் 

நூலைப் பதிப்பித்தவர் இந்தப் பதிப்பகத்தார் 
அட்ரஸ் - இன்ன தெரு இன்ன இலக்கம், இந்த ஊர் இன்ன பின் கோட் 

விலை விவரம் இத்தனை ரூபாய் 

இந்த அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. ஃபோட்டோ ஆப்செட், டெமி ஆக்டேவோ, ” 

இப்படி ஒன்று விடாமல் படித்தார் என்றால் சரி ஒன்றும் புரியாத ஆள் பாவம், கண்ணில் கண்டதை மேய்ந்து கொண்டிருக்கிறார் என்று சிரிப்பாக இருக்கும். 

ஆனால், (மிகச் சிறுபான்மை உண்மையான விதவான்களைத் தவிர), சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கிரந்தங்களைப் பாராயணம் பண்ணுகிறவர்களைப் பாருங்கள். கிட்டத்தட்ட இதையேதான் செய்து கொண்டிருப்பார்கள். 

ராமாயணமோ, கீதையோ அல்லது எந்த நூலாக இருந்தாலும் தவறாமல் 

ஓம் தத் ஸத் இதி ஸ்ரீமத பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய: 

இப்படி முடிவுக்கட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் பயங்கர ஏற்ற இறக்கத்தோடு நீட்டி முழக்கிச் சொல்வதைப் பார்த்தால், ‘ஐயோடீ! என்னமா பெரிய பண்டிதரு! வித்வான்...எவ்வளவு படிச்சவரு....’ என்று பார்க்கிறவர்களுக்கு விழி பிதுங்கிப் போகும். 

மொழி வேற சம்ஸ்கிருதமாச்சா? யாருக்குத் தெரியும் அர்த்தம்... என்னவோ பெரிய மந்திரம் எல்லாம் சொல்றாரு...என்றுதான் நினைக்கத் தோன்றும். 

ஆனால் இவையெல்லாம் பொருள் தெரிந்து பார்த்தால் வெறுமனே அந்தக் காலத்து பப்ளிஷிங் டீடெயில்ஸ். 

ஸ்ரீபகவத் கீதை என்னும் உபநிஷத்தாகிய பிரம்ம வித்யையில், கீதை என்னும் யோக சாத்திரத்தில், ஸ்ரீகிருஷ்ண அர்ஜுனர்களிடையே நடந்த உரையாடலில், விபூதி யோகம் என்னும் பெயர் பெற்ற பத்தாவது அத்யாயம் இதுவாகும். 

இந்தக் காலத்துல தலைப்பு கொடுத்து பேஜ் நம்பர் போட்டு முன்னாடி பொருளடக்கமும் கொடுத்துட்டா கதை முடிஞ்சுது. அந்தக் காலத்துல நெட்டுருப் பண்ணதால நினைவுல வைக்க வேண்டித் திருப்பிச் சொன்னாங்க. 

ஆனால் பாராயணம் பண்ணுகிறவருக்கு அதெல்லாம் கவலையில்லை. அங்கதான் விசேஷ சக்தி இருக்கிறதாக நினைத்துக்கொண்டு, அப்படி ஆடம்பரமா படிச்சார்னா அதனோட மகிமையே தனி! ஆனால் பொருள் மாத்திரம் கேட்கக் கூடாது. அது வேற கதை. 

ஆனால் படிப்பு என்பதன் வழியே வேறு. 

நமது மகத்தான மரபுகளில் படிப்பு என்பது மிகச் சிறிய வட்டங்களில்தான் நடைபெற்றிருக்கிறது. 

பெரும்பாலும் பாராயணம்தான். 

முதலில் சம்ஸ்கிருதத்தில் பாராயணம். அப்புறம் தமிழில், எந்த மொழியாய் இருந்தாலும் சரி பாராயணம்தான். இவ்வளவு நாள் ஓட வேண்டும். அதான் கணக்கு. காரிய சித்திக்கு அது போதாதோ? 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jan 20, 2014, 12:02:24 PM1/20/14
to vall...@googlegroups.com, min tamil
'தானும் அதுவாக பாவித்து…' 
ஓ! ஶ்ரீரங்கம் மோஹனரங்கம் சொல்வது புரிகிறது.
2014/1/20 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jan 20, 2014, 3:05:27 PM1/20/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014/1/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாராயணம் பண்ணுவதும், படிப்பதும் ஒன்றாகிவிடுமா? 

பாராயணம் பண்ணுகிறவருக்கு அது ஒரு சடங்கு. பாராயணம் பண்ணுவதால் இந்தக் காரியம் நடக்கும்; அந்தக் காரியம் நடக்கும்; ஏதாவது காரியம் பலிதமாகும் என்ற நூலுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள்தாம் முக்கியம். 

இல்லாவிட்டால் யோசித்துப் பாருங்கள் - ஒரு நூலில் இன்னார் எழுதினார், இன்னார் பதிப்பித்தார் என்று போட்டிருக்கும். எந்த புத்திசாலியாவது நூலைப் படிக்கும் போது 

”எழுதியவர் இன்னார் 

நூலைப் பதிப்பித்தவர் இந்தப் பதிப்பகத்தார் 
அட்ரஸ் - இன்ன தெரு இன்ன இலக்கம், இந்த ஊர் இன்ன பின் கோட் 

விலை விவரம் இத்தனை ரூபாய் 

இந்த அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. ஃபோட்டோ ஆப்செட், டெமி ஆக்டேவோ, ” 

இப்படி ஒன்று விடாமல் படித்தார் என்றால் சரி ஒன்றும் புரியாத ஆள் பாவம், கண்ணில் கண்டதை மேய்ந்து கொண்டிருக்கிறார் என்று சிரிப்பாக இருக்கும். 

ஆனால், (மிகச் சிறுபான்மை உண்மையான விதவான்களைத் தவிர), சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கிரந்தங்களைப் பாராயணம் பண்ணுகிறவர்களைப் பாருங்கள். கிட்டத்தட்ட இதையேதான் செய்து கொண்டிருப்பார்கள். 

ராமாயணமோ, கீதையோ அல்லது எந்த நூலாக இருந்தாலும் தவறாமல் 

ஓம் தத் ஸத் இதி ஸ்ரீமத பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய: 

இப்படி முடிவுக்கட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் பயங்கர ஏற்ற இறக்கத்தோடு நீட்டி முழக்கிச் சொல்வதைப் பார்த்தால், ‘ஐயோடீ! என்னமா பெரிய பண்டிதரு! வித்வான்...எவ்வளவு படிச்சவரு....’ என்று பார்க்கிறவர்களுக்கு விழி பிதுங்கிப் போகும். 

மொழி வேற சம்ஸ்கிருதமாச்சா? யாருக்குத் தெரியும் அர்த்தம்... என்னவோ பெரிய மந்திரம் எல்லாம் சொல்றாரு...என்றுதான் நினைக்கத் தோன்றும். 

ஆனால் இவையெல்லாம் பொருள் தெரிந்து பார்த்தால் வெறுமனே அந்தக் காலத்து பப்ளிஷிங் டீடெயில்ஸ். 

ஸ்ரீபகவத் கீதை என்னும் உபநிஷத்தாகிய பிரம்ம வித்யையில், கீதை என்னும் யோக சாத்திரத்தில், ஸ்ரீகிருஷ்ண அர்ஜுனர்களிடையே நடந்த உரையாடலில், விபூதி யோகம் என்னும் பெயர் பெற்ற பத்தாவது அத்யாயம் இதுவாகும். 

இந்தக் காலத்துல தலைப்பு கொடுத்து பேஜ் நம்பர் போட்டு முன்னாடி பொருளடக்கமும் கொடுத்துட்டா கதை முடிஞ்சுது. அந்தக் காலத்துல நெட்டுருப் பண்ணதால நினைவுல வைக்க வேண்டித் திருப்பிச் சொன்னாங்க. 

ஆனால் பாராயணம் பண்ணுகிறவருக்கு அதெல்லாம் கவலையில்லை. அங்கதான் விசேஷ சக்தி இருக்கிறதாக நினைத்துக்கொண்டு, அப்படி ஆடம்பரமா படிச்சார்னா அதனோட மகிமையே தனி! ஆனால் பொருள் மாத்திரம் கேட்கக் கூடாது. அது வேற கதை. 

ஆனால் படிப்பு என்பதன் வழியே வேறு. 

நமது மகத்தான மரபுகளில் படிப்பு என்பது மிகச் சிறிய வட்டங்களில்தான் நடைபெற்றிருக்கிறது. 

பெரும்பாலும் பாராயணம்தான். 

முதலில் சம்ஸ்கிருதத்தில் பாராயணம். அப்புறம் தமிழில், எந்த மொழியாய் இருந்தாலும் சரி பாராயணம்தான். இவ்வளவு நாள் ஓட வேண்டும். அதான் கணக்கு. காரிய சித்திக்கு அது போதாதோ? 

மிக நகைச்சுவையாக சொல்லியிருக்கின்றீர்கள். சிரிக்காமல் வாசித்து முடிக்க முடியாது. 
அருமை.

சுபா
 
***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

திவாஜி

unread,
Jan 22, 2014, 7:17:23 AM1/22/14
to mint...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல்
ஐயா சாமிமார்களே! அர்த்தம் தெரியுதோ இல்லையோ இப்படி காலாகாலமா படிச்சுகிட்டு வரதாலத்தான் இது இன்னும் பொழச்சு இருக்கு! அதனாலத்தான் இப்ப அச்சில படிச்சுட்டு கண்டபடி விமர்சனம் செய்ய முடிகிறது! நடாத்துங்க!

Innamburan S.Soundararajan

unread,
Jan 24, 2014, 11:11:08 AM1/24/14
to vall...@googlegroups.com, min tamil
சுவாரஸ்யம் தான். Meandrருக.
2014/1/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> - நம்ம நூல்களை, சாத்திரங்களை, புராணங்களை, இதிகாசங்களை எல்லாம் படிக்கணும்.
> இப்ப இருக்கற பசங்க எங்க அதெல்லாம் படிக்கறதுங்க..? எல்லாம் ஃபாரின் போகம்...
> நாவல்.. அது இதுன்னு
>
> -- அதெல்லாம் படிக்கணும்னா சம்ஸ்க்ருதம் தெரியணுமே... தமில் ஆங்கிலத்தில்
> யாராவது பொழிபெயர்ப்புகள் இருந்தா படிக்கலாம்.
>
> -- அதெல்லாம் இருக்கே... ஆஅனால் யார் படிக்கறேன்கிறா? ஒரு இண்ட்ரஸ்ட்
> வேணும்னா....அணா பைசாலயே பார்க்கக் கூடாது....
>
> -- யாரோட மொழிபெயர்ப்புகள் படிக்கலாம்?
>
> -- நீங்க என்ன பண்ணுங்கோ... ..அவர் மொழி பெயர்த்திருக்கிறார்... இன்னொருத்தர்
> கூட மொழிபெயர்த்திருக்கிறார்... அந்த ஒத்தரோட மொழிபெயர்ப்பு ரொம்ப நன்னா
> இருக்கும். ஆனால் கிடைக்கிறதா தெரியல்ல...
>
> சுவர் கடிகாரத்தில் முள்கள் ஓடுகின்றன. உதயம் அஸ்தமனம் உதயம். வாரம் மாதம்
> வருஷம்....
>
> -- நீங்க சொன்னீங்களே அந்த மொழிபெயர்ப்புல இப்படிப் போட்டிருக்கே...
>
> -- அதெல்லாம் நீங்க மூல மொழியில் படிக்கணும். சம்ஸ்கிருதத்துல படிச்சாத்தான்
> அது கரெக்டா புரிஞ்சுக்க முடியும். சும்மா மொழி பெயர்ப்புல பொத்தாம் பொதுவாப்
> போட்டிருப்பா.
>
> -- அப்படியா?
>
> காலம் நகர்கிறது. உருள்கிறது.
>
> -- நீங்க சொன்னது சரிதான். சம்ஸ்கிருதத்துல படிக்கும் போது மிகத் தெளிவா
> இருக்கு.
>
> -- பார்த்தீங்களா? அதுக்குத்தான் சொன்னேன். அதெல்லாம் தேவ பாஷை மாதிரி
> வராதுண்ணா...
>
> -- ஆனால் அதிலும் பார்த்த பொழுது அன்று கேட்டேனே கேள்வி அது இன்னும்
> வலுப்படுகிறதே....
>
> -- அதெல்லாம் விசாரம் பண்ணுங்கோ தப்பே கிடையாது. ஆனால் அதெல்லாம் ஒரு
> எல்லைக்குள்ள இருக்கணும்.
>
> -- இல்லை.. அந்தக் கேள்வி....
>
> - அதுக்கா.... அதுல பார்த்தீங்கன்னா.... அதுக்கு ஒரு காரிகை இருக்கு... அந்தக்
> காரிகைக்கு ஒத்தர் விருத்தி க்ரந்தம் எழுதியிருக்கிறார். அந்த விருத்தியைப்
> பார்த்தீங்கன்னு வச்சுப்போம்.. அதுல இது எல்லாத்தையும் அலசறார்.
>
> -- ஓஹோ அதுன் பேரு என்ன சொன்னிங்க....சரி
>
> காலம் ஓடுகிறது....
>
> - நீங்க சொன்ன விருத்தியைப் பார்த்தேன். அதுல.. அந்தக் கேள்விக்கு...
>
> - தோ பாருங்கோ நீங்க இதே பொழப்பா இருக்கற ஆளு... எனக்கு ஏகப்பட்ட வேலை... இப்ப
> பேச முடியாது. இத்த்னாந்தேதிக்குப் பிற்பாடு பேசுவோம்.
>
> -- சரி. அப்ப வரேன்.
>
> - பாருங்கோ பொறுமையா பாருங்கோ. அவசரம் இல்லாம பார்த்தீங்கன்னா எல்லாம் புரிய
> வரும்.
>
> காலம் அதுபாட்டுக்கு ஓடுகிறது.
>
> -- நீங்க இந்த தேதிக்குப் பிற்பாடு பார்க்கலாம்னு சொன்னீங்க
>
> -- ஓ சரி. என்ன விஷயம்? அதுக்கு என்ன விடை கிடைச்சுதா?
>
> - இல்லை அந்தக் கேள்வி....விருத்தி கிரந்தத்துல....சொல்லியிருக்கிற விஷயம்
> பார்க்கப் போனால் நான் சொன்னதை ஊர்ஜிதப் படுத்துகிறதே...அதுல இப்படிப்
> போட்டிருக்கு....அப்படீன்ன்னா இதுதானே முடிவு?
>
> - இங்க பாருங்க... நீங்க ரொம்ப படிச்சு பிரமையில் இருக்கீங்க...சரியா
> விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்... அதுக்குத்தான் குருமுகமா படிக்கணும் குருமுகமா
> படிக்கணும்கிறது... அப்ப சந்தேகம்லாம் வராது... எல்லாம் இந்தக் காலத்துல
> எல்லாத்துக்கும் புத்தகம் போட்டுக் குடுத்துட்றான். அது அது தறுதலைக் கணக்கா,
> தாந்தோணித்தனமா படிச்சுட்டு, முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்
> போட்டு... ஹி ஹி ஹி...நினைச்சுப் பாருங்கோ.... முழங்கால் எங்க இருக்கு?
> மொட்டத்தலை எங்க இருக்கு? என்ன ஓய்... ஒன்றும் பேச்சே காணோம்...முழங்கால் எங்க
> இருக்கு... மொட்டத் தலை.,, ஹா ஹாஹ் ஹா
>
> - இல்லை. அந்தக் கேள்விக்கு விடை... விருத்தி, காரிகை எல்லாவற்றிலும் ஒரே
> மாதிரிதான் இருக்கு... அப்ப முடிவு...
>
> -- நீங்க ஒன்றோட ஒன்ன போட்டுக் குழப்பிக்கிறீங்க... இதுக்குத்தான் சொல்றது...
> சாஸ்த்ர ஞானம் பஹு க்லேசம் புத்திச் சலன காரணம் -- சாத்திரங்களைப் படித்தல்
> என்பது மிகுந்த கிலேசத்தைக் கொடுக்கக் கூடியது, புத்தியைக் குழப்பும் காரணமாய்
> இருப்பது -- அப்படீன்னு சொல்வா....
>
> -- இல்லை இதுக்கு வேற பலர் எழுதின விளக்கங்களையும் படித்தேன். யாரோ எழுதின
> கண்டனத்துக்கு ஒருவர் மண்டனம் எழுதிய அந்த நூலையும் பார்த்தேன். அதையெல்லாம்
> பார்த்தப்புறம் இதுதான் முடிவு என்று படுகிறது.
>
> -- ஓஹோ...உங்களுக்கு முடிவுன்னு பட்ருத்துன்னா உடனே அதுதானா? பெரியவா
> பெருந்தலைன்னு ஒன்னும் கிடையாதோ...இல்லை தெரியாமத்தான் கேட்கறேன்.. அப்படி என்ன
> பெரிய ப்ராக்ஞனாப் போய்ட்டீங்க நீங்க...இந்தப் படிச்ச திமிரு இருக்கே... அது
> மனுஷாள அதள பாதாளத்துக்கு கொண்டு போய்ப் போட்டுடும்.. ஆமாம்
> ஜாக்கிரதை...இப்படித்தான் அந்தக் கோபாலி புள்ள...அப்படி இப்படின்னு ஏதேதோ
> படிக்கறானேன்னு பார்த்தா...அதுன்னான் இதுன்னான் கடைசில கம்யூனிஸ்டா
> போய்ட்டான்... போயி... ரஷ்யாலயே எங்கயோ போய் செட்டிலாயிட்டானான்.... எல்லாம்
> உருப்பட்றதுக் கில்ல.....ஆமாம்.... எல்லாம் நாமதான் படிச்சுட்டோஒமேன்னு
> திமிர்உல கேட்கப் படாது.. எல்லாம் நேத்திக்குப் பெஞ்ச மழையில இன்னிக்கு மொளைச்ச
> காளான்...
>
> -- இல்லை...இது சம்பந்தமா ஒரு வியாசம் ஒன்று... எழுதி...
>
> - ஓ அப்படியா... வியாசமே எழுதியாச்சோ.. மகா வித்வான்....
>
> என்றைக்கோ வாங்கிக் கட்டிக்கொண்ட திட்டுகள். இன்று நினைத்துப் பார்த்தால்
> சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
>
> படிப்பு என்பது ராஜ யோகம்தான்.
>
> ***
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Jan 25, 2014, 1:54:26 AM1/25/14
to mint...@googlegroups.com, vallamai
On Monday, 20 January 2014 07:16:06 UTC-8, Mohanarangan V Srirangam wrote:

ராமாயணமோ, கீதையோ அல்லது எந்த நூலாக இருந்தாலும் தவறாமல்
ஓம் தத் ஸத் இதி ஸ்ரீமத பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய: 

இப்படி முடிவுக்கட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் பயங்கர ஏற்ற இறக்கத்தோடு நீட்டி முழக்கிச் சொல்வதைப் பார்த்தால், ‘ஐயோடீ! என்னமா பெரிய பண்டிதரு! வித்வான்...எவ்வளவு படிச்சவரு....’ என்று பார்க்கிறவர்களுக்கு விழி பிதுங்கிப் போகும். 
மொழி வேற சம்ஸ்கிருதமாச்சா? யாருக்குத் தெரியும் அர்த்தம்... என்னவோ பெரிய மந்திரம் எல்லாம் சொல்றாரு...என்றுதான் நினைக்கத் தோன்றும். 
ஆனால் இவையெல்லாம் பொருள் தெரிந்து பார்த்தால் வெறுமனே அந்தக் காலத்து பப்ளிஷிங் டீடெயில்ஸ்.
 


இது போன்ற பப்ளிஷிங் டீடெய்ல்ஸ் படித்துக் கூட்டம் சேர்ப்போரை என் 60 ஆண்டு
ஆயுளில் இதுவரை நான் பார்த்ததில்லை; ஒருவேளை ஸ்ரீரங்கத்தில் இதுபோல்
நீட்டி முழக்கிப் பாராயணம் செய்து ஆள் சேர்த்தோர் இருந்தனரோ தெரியாது.

கீதையின் அளவு எனும் நூலின்கண் ஸ்வாமி ராமஸுகதாஸ் அவர்கள்
இதைப் புஷ்பிகா என்கிறார்; இந்த முத்தாய்ப்பின் எழுத்துகளையும்
எண்ணிக் கணக்கிட்டுள்ளார்.

பொருள் தெரிகிறதோ இல்லையோ இதுபோல் சிரத்தையுடன் பாராயணம் செய்தோர்தான்
கீதா ப்ரெஸ் [கோரக்புர்] எனும் பெரிய நிறுவனத்தை அமைக்க ஸேட்ஜீ ஜயதயால் கோயந்தகா
அவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்தனர் என்பதும் உண்மை. கீதையின் பலகோடிப்
படிகளைப் பல மொழிகளிலும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.


தேவ்

Dev Raj

unread,
Jan 25, 2014, 8:39:05 AM1/25/14
to mint...@googlegroups.com, vallamai
விண்ணப்பம் செய்தல் எனும் மரபை ஒட்டிச்
சில வைணவர் குடந்தை ஆராவமுதன் திரு
முன்னிலையில் அவர்களுக்குத் தெரிந்த ஆழ்வாரின் 
ஒரு பதிகத்தை ஓத, அதுவே நாதமுனிகளுக்கு
நாலாயிரத்தையும் மீட்கும் வேட்கையைத்
தோற்றுவித்தது என்பது வரலாறு.

திருமந்திரப் பாக்கள் பலவற்றுக்கும் பொருள் புரிவதில்லை; 
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வதே முறை
என்று காரணம் காட்டி அவற்றை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் 
என்று பரிந்துரைக்க முடியாது.அவற்றைக் காத்து அடுத்த 
தலைமுறைக்கு அளிப்பதே நம் கடமை. 


தேவ்

Subashini Tremmel

unread,
Jan 26, 2014, 4:23:34 AM1/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
உரையாடல் நாடகம் பார்ப்பது போலவே இருக்கின்றது. வாசித்து ரசிக்கலாம் ஆனால் உண்மையில் இவ்வகை அனுபவங்களைப் பெறுவோருக்கு அச்சமயம் ஏமாற்ற உணர்வும், வலியும் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டுவது அவசியம். 
கேள்வி எழுந்தாலும் கேட்காமல் சொல்லி வைத்ததை ஏற்றுக் கொண்டு செல்வதே மரியாதை என பெயர் சூட்டும் நிலையில் சமூகம் இருக்கும் வரை தெளிவு தேடுவோருக்கு பிரச்சனைதான்.

ஆங்கிலக் கல்வி, இவ்வகை சொன்னதை சொல்லும் வழக்கத்திலிருந்து மாற்றம் பெற ஓரளவு வழி செய்திருக்கின்றது என்றே நினைக்கின்றேன்.

சுபா


2014-01-24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Dev Raj

unread,
Jan 26, 2014, 10:05:42 AM1/26/14
to mint...@googlegroups.com
On Sunday, 26 January 2014 01:23:34 UTC-8, Suba.T. wrote:
உரையாடல் நாடகம் பார்ப்பது போலவே இருக்கின்றது. வாசித்து ரசிக்கலாம் ஆனால் உண்மையில் இவ்வகை அனுபவங்களைப் பெறுவோருக்கு அச்சமயம் ஏமாற்ற உணர்வும், வலியும் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டுவது அவசியம். 
கேள்வி எழுந்தாலும் கேட்காமல் சொல்லி வைத்ததை ஏற்றுக் கொண்டு செல்வதே மரியாதை என பெயர் சூட்டும் நிலையில் சமூகம் இருக்கும் வரை தெளிவு தேடுவோருக்கு பிரச்சனைதான்.


தெளிவு தேடுவோருக்குப் பிரச்னை என்றுமே இருந்ததில்லை.
ஒரே மத மரபு மட்டுமே நீடிக்க வேண்டும் என்னும் சமய வன்முறை
பாரதத்தில் என்றுமே இருந்தது கிடையாது. கடவுளைப் பேசாத மத 
மரபுகள் இருந்து வந்துள்ளன.
 
மறைக்கட்டுமானத்துக்குள்ளேயே சொல்லி வைத்ததை ஏற்காமல்
புதியதான சுக்ல யஜுர்வேதத்தைக் கொணர்ந்த முனிவர்  ஒருவரும்
இருந்துள்ளார். குரு ஒருவரின் தேவையில்லாமல் விவேகத்தை
ஒருவன் வளர்த்துக்கொண்டு உய்வு பெற முடியும் என்று போதித்தவர்
களும் பிரச்னை இல்லாமல் நிறுவனங்களை அண்மைக் காலத்தில்
நடத்தியுள்ளனர்.

பாஷ்யம், வார்த்திகம்,காரிகை, டீகை போன்றவற்றின் துணையின்றி
சுய வாசிப்பிலேயே யோக ஸித்தி பெற்றுவிட்ட அரங்கனார்
ஒருவரே போதுமான சான்று


தேவ்

Subashini Tremmel

unread,
Jan 26, 2014, 1:46:53 PM1/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
இங்கு நான் சொல்வதும் நீங்கள் சொல்வதும் வெவ்வேறு விஷயங்கள் திரு.தேவ்.
-சுபா


2014-01-26 Dev Raj <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Feb 23, 2014, 9:50:08 AM2/23/14
to மின்தமிழ், Subashini Tremmel



2014-02-23 7:17 GMT+01:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பழைய காலத்து ரிஷிக் கதைகளைப் பெரிதும் நோண்ட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஞானக் கண்ணால் கண்டது என்று சொல்லி எழுதப்பட்டுள்ள கதைகள் பலவற்றில் ஞானமும் இல்லை, கண்ணும் இல்லை என்பதுதான் சோக அனுபவம். ஆயினும் உண்மையும் உயர்வும் கொண்டோர் எந்தக் காலத்திலும் உண்டு என்பதுதான் பழம் நூல்களில் காணக் கிடைக்கும் அங்கங்கே அருமையான தத்துவப் பொழிவுகளாய் இருப்பவை நமக்கு உணர்த்துவன. அது ஒரு பக்கம். 

நம் காலத்தில் விவேகாநந்தர் என்பவர் உண்மையான ரிஷிகளின் உயர்ந்த நிலையைக் காட்டுபவராய் முன்னிறுத்தப்பட்டவர். அதற்கான முழு சிறப்பும், செறிவும் கொண்டவர். எனக்கு உள்ளபடியே இதயத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஆயினும் அவருடைய எழுத்திலும், பேச்சிலும் தெரியவருகின்ற ஏகப்பட்ட முரண்பாடுகள், பொருந்தாமைகள் இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது - அப்படி என்றால் தியானம், சமாதி நிலை, தெய்விக அனுபவம், யோக வல்லமை - இதெல்லாம் மனிதருக்கு மிகச்சரியான, தெளிவான, முன்னுக்குப் பின் முரண்பாடற்ற கருத்து நிச்சயத்தை தம்மளவில் ஏற்படுத்தாதா? அப்படி அவை தம்மளவில் தெள்ளிய அறிவின் காரணங்களாக இருந்திருக்குமேயானால் பெரும் யோகி, பிறவியிலேயே பெரும் தியான சித்தர், சிவபெருமானின் அவதாரம் என்றெல்லாம் சொல்லப்பட்ட விவேகாநந்தரின் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் இவ்வளவு முரண்பாடுகள் எப்படிக் காணக் கிடைக்கின்றன்? அப்படியென்றால் வேதாந்தக் கல்வி இயல் சொல்வது போல் யோகம், தியானம் என்பவை எல்லாம் தம்மைப் போல் அறிவு வழிகளாக ஒரு நாளும் ஆகா. அவை பனுவல் வாசிப்புக்கு மிகவும் அருந்துணைகள் என்னும் அவ்வளவே அவற்றின் பயன்  என்பதுதான் மிகச்சரியான கருத்தோ? 

மனிதன் புத்தகம் படிக்கத் தொடங்கிய நாளிலிருந்துதான் அவனுக்குத் தெய்விக வாழ்வு என்பது ஆரம்பம் ஆகியது. அன்றைய ஆரம்ப காலங்களில் படிப்பின் மகத்துவத்தை உள்ளபடி அறிய இயலாத சமுதாயம் புத்தகம் படிக்கும் மாந்தரிடை ஏற்பட்ட வித்யாசமான ஈடுபாடுகளைப் பார்த்து அதை திவ்யம், ஞானக் கண், உயர்ந்த சமாதி நிலை என்றெல்லாம் சித்திரங்களை உருவாக்கிவிட்டனர். அந்தச் சித்திரம் கட்டுடைக்கப்படாமலே அப்படியே காலப் போக்கில் வாய் வழக்காய் ஆகிவிட்டிருக்கிறது, கூடவே மாய மந்திர மழுமைகள் எல்லாம் சேர்ந்து! 

அருமை.

சுபா​​

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
It is loading more messages.
0 new messages