An Alveolar ṯ phenomenon: தொடு- > தொறு/தொழு

37 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 11, 2016, 3:23:04 PM2/11/16
to வல்லமை, மின்தமிழ், panb...@googlegroups.com, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, thami...@googlegroups.com, Santhavasantham, George Hart, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, Iravatham Mahadevan, K Rajan
வட்டெழுத்தில் கழிகோறு என்று கோழிக்கோட்டின் (Calicut, Kerala) பேர் எழுதப்பட்டுள்ளது, இது அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒரு கல்வெட்டு. கழிக்கோடு கழிக்கோறு என எழுதியுள்ளனர்,  Alveolar  ṯ என்னும் முந்து-த்ராவிட (Proto-Dravidian) ஒலியனை (Phoneme) எவ்வாறு தமிழ் எழுத்தில் எழுதுவது என்று பார்த்து -ட்-/-ற்-/-ழ்- எழுத்துக்களால் குறித்துள்ளனர் பண்டைத் தமிழர்கள். பறபற என்பது இறக்கை படபட என அடித்தல். எனவே பறத்தல் (= paṯattal), பறவை (= paṯavai) காரணப்பெயர்கள். நடுதல் நாற்று, இதிலும் Alveolar  ṯ  உள்ளது அல்லவா? அதேபோல், தொடுத்தல் (நிரை ஆக்குதல்) - இதிலும் Alveolar  ṯ  உளது. எனவே, தொறு/தொழு என்பது குட்டிகள், கன்றுகள் போடும் நாலு காலி விலங்குகளின் நிரைகளுக்குப் பெயராக கல்வெட்டில் வருகிறது. பருப்பினால் செய்வதை அடுத்தால் பருப்படம்/பப்படம் (> வப்படம் என்போம்). அப்பளம் என ஆகிறது. அதேபோல் தொடு- > தொறு-/தொளு- An Alveolar  ṯ  phenomenon என கருதுகிறேன். கொடு என்பதை குடு என்பது போல, கன்னடத்தில் தமிழின் தொறுவைத் துறு என்கின்றனர். துறுவை/துருவை. ஓங்கோடு என்னும் கல்வெட்டுப் பெயர் ஓங்கோளு (Ongole) என தென் ஆந்திரத்தில்  விளங்குகிறது. தளவாய்புரச் செப்பேடு மீயாட்சி என்பதை மீயாள்சி என்பது அப்படம்/அப்பளம், தொறு/தொளு (< தொடுத்தல், where Alveolar  ṯ is present) போலத்தான்.

தொடுத்தல் (toṯuttal) = நிரையாக்குதல் என்னும் வினைச்சொல்லில் இருந்தே தொறு/தொழு என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் பிறந்தன என்படற்கு அரிய ஆட்சியைச் சங்க நூல்களிலும், அதற்கு உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் விளக்கமும் சான்றாதலைக் கண்டேன். அதனைப் பாருங்கள்,

விடேஎன், தொடீஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டுங்
கடுவய நாகுபோ னோக்கிக் தொடுவாயில்
நீங்கிச் சினவுவாய் மற்று; (கலித்தொகை: முல்லைக்கலிப் பாட்டு)

நச்சினார்க்கினியர் உரை:
எ - து: அதுகேட்டவள், யான் நின்னைப் போகவிடேன் ; தன்னைத் தீண்டுதற்குச் செல்லுமவர்களை இடையே விலக்கி எதிரே மிக்குச்செல்லுங் கடிய வலியினையுடைய நாகுபோலே செறுத்துநோக்கித் தொழுவின் வாயிலி னின்றும் போந்து நின்று பின்னைச் சினப்பா யென்றான். எ - று.
முல்லைக்கலியின் இப்பாட்டு:

தொடுத்தல் என்னும் வினைச்சொல் தரும் தொறு/தொழு என்னும் கால்நடை வேளாணியல் சொற்கள் அரதப் பழசானவை. 8000 (அ) 10000 ஆண்டுப் பழைமை கொண்டன, அவற்றில் உள்ள Alveolar  ṯ  phenomenon இஃது. அதனை விளக்கும் கலித்தொகையின் முல்லைக்கலியும், நச்சினார்க்கினியரும் நம் போற்றுதலுக்குரியோர். தொடுத்தல்/தொழுதல்/தொறுதல் என்னும் பெயர்கள் முதலில் கூட்டமான ஆநிரைக்கு அமைந்தன. பிறகு உழவுத் தொழில்செய்யும் கூலியாட்கள் கூட்டமாகச் செய்யும் பணிக்கு தொழுதல்/தொண்டுசெய்தல், கி.பி. 5-ஆம் நூற்றாண்டு நிலவுடைமைச் சமுதாயப் பக்தி இலக்கியத்தில் தொழுதல்/தொண்டு என்று பொருள் விரிவு பெற்றுள்ளது. தொடு-/தொறு/தொழு- ஆநிரைக்கும், உழவுக்கு முதலில் ஏற்பட்டு பக்தகோடிகள் தொழுதல்/தொண்டுக்கு பொருள்விரிவால் அமைவது தமிழ் வளர்ந்த வரலாற்றின் ஓர் ஏடு.

கச்சிராப்பாளையம் வேடியப்பனுக்கு நடுகல்லில் வட்டெழுத்துக் கல்வெட்டு: விழுப்புரம் வீரராகவன் - மங்கையர்க்கரசி பதிப்பித்துள்ள நடுகல் கல்வெட்டு:
"கடைவெண் மலைக் கோட்டு
வேட்டுவரு இருவாய்
தொளுக் கொண்டு பட்டான்
கம்பாடரு மகன் சாமிக்கல்"

இந்த நடுகல்லில் உள்ள செய்தி:
கடைவெண்மலைக்கோடு என்னும் இடத்து வேட்டுவர்கள், இருவாய் என்னும் ஹார்ன்பில் புள்ளின் பெயரைக் குலச்சின்னமாய்க் கொண்டவர்களின் ஆநிரை கவரச்சென்றபோது இறந்துபட்டவனுக்கு எழுப்பிய நடுகல் என்பதே,

இருவாய்/இருவாசி/இருவாச்சி நிலத்தைக் கல் கரடு நீக்கப் பயன்படும் adze-axe. ஒருமுனை மண்வெட்டி போலும், மறுமுனை கூர்மையான வசி போலும் இருக்கும். இதனைக் கொண்டு ஹார்ன்பில் பறவைகளும், இருவாட்சி முல்லையும் உவமையாகுபெயராகப் பேர்பெறுகின்றன. 

நிலத்தைக் கல்லப் பயன்படுவது இருவாசி/இருவாச்சி/இருவாட்சி/இருவாய் (adze-axe, a.k.a pick-axe).அதற்கு முன்னர் மரம், செடிகளை வெட்டி நீக்கப் பயன்படுவது மழு. வடமொழியில் மழுவைப் பரசு என்பர். மழுவாள் நெடியோன் தமிழர் தெய்வங்களுள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுபவன் (மதுரைக் காஞ்சி). 2800 - 2500 ஆண்டுகள் பழமையான இரும்புக்காலச்சிற்பங்களுள் முதன்மையான கடவுள். மழு வடமொழியில் பரசு. பெரிய மழு ஏந்தி இருக்கும் இந்தியாவின் பழமையான லிங்கம் குடிமல்லத்தில் உள்ளது. இப்போதைய பெயர் பரசுராமேசுவரர். ”மழுவாள் நெடியோன்” மகர யக்‌ஷனின் மேல் நிற்கும் தாழைசூடி வருணன் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில், காலப்போக்கில் விடங்கர் என்னும் இலிங்க வடிவம் சிவனுக்கு ஆகிறது. மழு என்னும் மரங்கள், செடி கொடி சிறை ஒதுக்கப் பயன்படுவது. மழு என்ற சொல்லின் தாதுவேர் என்ன? பார்ப்போம். அதிலும் Alveolar  ṯ  phenomenon இலங்குகிறது.

"மழுவாள் நெடியோன்” சிற்பம் - 2800 - 2500 ஆண்டுப் பழைமை:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 13, 2016, 12:12:33 AM2/13/16
to வல்லமை, mintamil, dorai sundaram, ponvenk...@gmail.com, Dr. K. Nachimuthu, Tamizh Nenjam, sirpi balasubramaniam, Ramachandran Nagaswamy, Iravatham Mahadevan, S. V. Shanmukam


On Thursday, February 11, 2016 at 11:33:39 PM UTC-8, இவ்வன் wrote:
2016-02-11 20:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
 பண்டைத் தமிழர்கள். பறபற என்பது இறக்கை படபட என அடித்தல். எனவே பறத்தல் (= paṯattal), பறவை (= paṯavai) காரணப்பெயர்கள்.

 பர / பற என்பது உயர்வுக் கருத்துடையது. தெலுங்கில் பறத்தலை எகிற்(தல்) எகிற்தல் என்றால் உயர்தல் என்று தானே பொருள். 

இவ்வன் 

தோல் போர்த்தி மூடிச் செய்யப்படும் தாளக் கருவிகளின் சவ்வுத்தோல் படபட=பறபற என மேலும், கீழும் அதிரும்/துடிக்கும்.
எனவே, துடி என்பது சிறு  பறைக்கும், படலை என்பது பெரிய பறைக்கும் பெயரானதைச் சங்க இலக்கியத்திற்காண்க.
படலை பதலை என்றும் வரும். கடம்பு மலர் கதம்பு என வடமொழியில் சொல்வர். கடம்ப குலத்து அரசர்கள்
கோவா (கொண்கானம் = கொண்கு + கானம், இப்போதைய தெலுங்கு + கானம் = தெலுங்கானம் என்ற மாநிலம் போல), கர்நாடக
கடற்கரை ஓரம் ஆண்டதை சங்க காலப் பதிற்றுப்பத்து சேரர்-கடம்பர் போர்களில் விவரிக்கிறது. கடம்பர் கதம்பர் என
வடமொழி செப்பேடுகளில் ஆகிறது.  கடம்பு > கதம்பு, படலை > பதலை போல.

பறவை, பறத்தல், பறை, படலை இவற்றை முறையே paṯavai, paṯattal, paṯai,, paṯalai, ...   எனக் குறிப்பர் மொழியியலார்.
உ-ம்: Bh. Krishnamurti றகரத்தை ṯ (alveolar) என்றுதான் எழுதினார் அவர் நூல்களில். paṯai (பறை) gets its Tamil name
using alveloar  ṯ  due to its leather membrane vibrating up and down and producing sound.

நா. கணேசன்
தெலுங்கு தேசம் கொடுத்த திராவிட மொழியியல் அறிஞர் ப. கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழ் செம்மொழி அல்ல’ என்ற
வாதத்தை ஏற்கவில்லை:

 

N. Ganesan

unread,
Feb 13, 2016, 12:12:45 AM2/13/16
to வல்லமை, mint...@googlegroups.com, doraisu...@gmail.com, ponvenk...@gmail.com, tamiz...@yahoo.com, tamil...@gmail.com, sirpip...@gmail.com, urnag...@gmail.com, iravath...@gmail.com, svs....@gmail.com


On Thursday, February 11, 2016 at 11:33:39 PM UTC-8, இவ்வன் wrote:
2016-02-11 20:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
 பண்டைத் தமிழர்கள். பறபற என்பது இறக்கை படபட என அடித்தல். எனவே பறத்தல் (= paṯattal), பறவை (= paṯavai) காரணப்பெயர்கள்.

 பர / பற என்பது உயர்வுக் கருத்துடையது. தெலுங்கில் பறத்தலை எகிற்(தல்) எகிற்தல் என்றால் உயர்தல் என்று தானே பொருள். 

படபட/பறபற என்றால் உயர்வுக் கருத்தில்லை. பறை அடிக்கையில் பாருங்கள். The membrane moves sideways, to right & left,
so  paṯattal is just vibration & can occur in any direction. paṯattal does not have "uyarvu karuttu" in its core.

Reply all
Reply to author
Forward
0 new messages