வணக்கம்.
எரியோடு என்ற ஊருக்கு அருகே குஜிலியம்பாறை என்ற ஊர் உள்ளது.
குஜிலியம் என்றால் என்ன பொருள் ?
>>
>> 2014-02-14 17:52 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>>>
>>>> உ
>>>> புலிக்கரை ஐயனார் துணை
>>>>
>>>>
>>>> விண்ணிழி விமானம்
>>>>
>>>>
>>>> மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும். இது ஒரு “விண்கல்“. விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை. இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
>>>>
>>>> தேவர்களின் தலைவன் இந்திரன். இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான். வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது. இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான். தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான். எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது. இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.
>>>>
>>>> இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.
>>>>
>>>> முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது. அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை(1). மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது. இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.
>>>>
>>>> அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.
>>>>
>>>> சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும். எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.
>>>>
>>>> இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும். திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.
>>>
>>>
>>> அறிவியல் அடிப்படையில் இந்தப் புராணக் கருத்தை நோக்கினால்,
>>> சந்திரனில் விண்கற்கள் விழுந்ததால் உண்டான பள்ளங்கள் போன்று, மதுரைக்கு அருகிலும் விண்கற்கள் விழுந்த இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லவா?
>>>
>>> மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
>>> விண்கற்கள் விழுந்த இடங்களாக ஐந்து இடங்களைச் சிவப்பு மையினால் குறித்து இத்துடன் இணைத்துள்ளேன்.
>>
>> மேற்கண்ட படத்தில் எரிகற்கள் விழுந்த இடங்களாக நான் கருதும் இடங்களை வட்டமிட்டுக் காட்டி யிருந்தேன். இதில் வேடசந்தூருக்குக் கிழக்கே எரிகல் என்ற ஊருக்கு அருகில் விண்கல் விழுந்திருக்க வேண்டும் என வட்டமிட்டுச் சுட்டிக்காட்டி இருந்தேன்.
>> அறுபடைவீடு பாதயாத்திரை சென்ற போது 06.05.2016 வெள்ளிக்கிழமை யன்று வேடசந்தூரிலிருந்து புறப்பட்டு எரியோடு என்ற ஊர் வழியாக ஐயலூருக்கு (அய்யலூர்) நடந்துசென்றோம்.
>>
>> அப்போது எரியோடு என்ற இந்த ஊரில் எரிகல்லின் ஓடு விழுந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளனவா? என்ற அடிப்படையில் தேடிப்பார்த்தேன்.
>> எனது தேடலில் எரியோடு ஊரில் உள்ள பெருமாள் கோயில் அருகே மிகப்பெரிய பாறைஒன்று தென்பட்டது. இந்தப் பாறை நாம் சாதாரணமாகக் காணும் பாறை போன்று இல்லாமல் மாறுபட்டுள்ளது.
>>
>> (எரியோடு இருக்கும் இடத்தைக் காட்டும் கூகிள் படங்களை இணைத்துள்ளேன்)
>>
>> விண்கல் எரிந்து விழுந்து பெரும் வட்டவடிவிலான மேட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது. எரிகல் விழுந்த போது அதிலிருந்து பெயர்ந்த எரிகல் ஓடுமட்டும் தனித்து இந்த இடத்தில் விழுந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
>> புவியியல் வல்லுனர்கள் இந்த இடத்தில் உள்ள பாறையை இதற்கு முன் ஆராய்ந்துள்ளார்களா? என எனக்குத் தெரிவில்லை. அறிவியல் அடிப்படையில் இந்தப் பாறையை புவியியல் வல்லுனர்கள் ஆராய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
>> எரியோடு ஊரில் உள்ள பெருமாள்கோயிலின் அருகே உள்ள பாறையானது ஒரு விண்கல்லாக இருக்க வேண்டும்.
>
>
>>
>>
>>>> அன்பன்
>>>> கி.காளைராசன்
>>>> திருவிளையாடற் பராணம் ஆய்வாளர்,
>>>> திருப்பூவணப் புராணம் முனைவர் பட்ட ஆய்வாளர்,
>>>> திருவாப்புடையார் புராணம் ஆய்வாளர்,
>>>>
>>>>
>>>> ...............................................
>>>>
>>>> வாசிக்கப் பட்டவை...
>>>>
>>>>
>>>> (1)
>>>> திருவாலவாய்க் காண்டம்
>>>> நாற்பத் தொன்பதாவது திருவாலவாயான படலம்
>>>>
>>>> “தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
>>>> வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
>>>> கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
>>>> ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத“
>>>>
>>>> (2)
>>>> திருவிளையாடற் புராணம்
>>>> பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340
>>>>
>>>> “நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
>>>> விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்
>>>> திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப்
>>>> புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“
>>>>
>>>>
>>>>
>>>> 4. திருப்புகலியும் திருவீழிமிழலையும்291
>>>> ________________________________
>>>>
>>>> ஏகபெ ருந்தகை யாயபெம்மா
>>>>
>>>> னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
>>>>
>>>> மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
>>>>
>>>> விண்ணிழி கோயில் விரும்பியதே. 4
>>>>
>>>> 38. சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
>>>>
>>>> தையலொ டுந்தள ராதவாய்மைப்
>>>>
>>>> புந்தியி னான்மறை யோர்களேத்தும்
>>>>
>>>> புகலி நிலாவிய புண்ணியனே
>>>>
>>>> எந்தமை யாளுடை யீசவெம்மா
>>>>
>>>> னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
>>>>
>>>> வெந்தவெண் ணீறணிவார்மிழலை
>>>>
>>>> விண்ணிழி கோயில் விரும்பியதே. 5
>>>>
>> --
>> google.com/+KalairajanKrishnan
>>
>> http://pulikkarai-iyanar.blogspot.in/
>> http://thiruppuvanam1.blogspot.in/
>> http://kaalaiyarkovil.blogspot.in/
>> http://thiruvadanai-puranam.blogspot.com/
>> http://sakkudi.blogspot.in/
>>
>> http://temples-kalairajan.blogspot.in/
>> http://myletters-kalairajan.blogspot.in/
>> http://thirukural-kalai.blogspot.in/
>> http://tours-kalairajan.blogspot.in/
>> http://books-kalai.blogspot.in/
>>
>> http://kovillormadam.blogspot.in/
>> http://kalairajanletters.blogspot.in/
>> http://kalairajan26.blogspot.in/
>
>
வணக்கம்.
எரியோடு என்ற ஊருக்கு அருகே குஜிலியம்பாறை என்ற ஊர் உள்ளது.
குஜிலியம் என்றால் என்ன பொருள் ?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
..... தேமொழி
நடு குஜிலி தெருவில் குஜாத்தி சமாஜ் உள்ளது!
TVU தளத்தில் குச்சிலி என்பதற்கு கடை என்ற பொருள் உள்ளதாக கூறுகிறது.நன்றி
குஜிலி எனில் இந்தியில் திணவு அல்லது அரிப்பு என்று பொருள். பெரியவர் நூ. தா. லோ. சு. அவர்கள் குறிப்பிடுவது CHRYSTILE ASBESTOS......கல்நாரில் ஒரு வகை. இந்தக்கனிமம் அங்கே இல்லை.
” ஹோம் ரூல் கண்டன, திராவிட முன்னேற்ற, இராஜ விசுவாசக் கும்மி
[சேலம் ஆசுகவி தி.சு. கணபதி பிள்ளையால் எழுதப்பட்டது (1918).]
-பக்.274, முச்சந்தி இலக்கியம், ஆ.இரா. வேங்கடாசலபதி,
காலச்சுவடு பதிப்பகம்.
சுயமரியதைக்கு ஆதரவாகவும் ஆங்கில அரசின் பாதம் தாங்கவும் பாடப்பட்டதுதான் இந்த இராஜ விசுவாசக் கும்மி.
மலிவாக விற்கப்பட்ட இத்தகைய பாடல்கள் சென்னை ‘குஜிலி பஜாரில்’ விற்பனை செய்யப்பட்ட்ன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது கந்தகோட்டம் என்ற கந்தசாமிக் கோவில். இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பகுதி “குஜிலி பஜார்” என்றழைக்கப்பட்டது. குஜிலி என்பது இந்தப் பகுதியில் வசித்த குஜராத்திகளைக் குறிக்கும் என்றும் குஜிலி என்பது உருதுமொழிச் சொல் என்றும் ஒரு சர்ச்சை இருக்கிறது. லெக்சிகன்களையும் பேரகராதிகளையும் மூளையில் சுமப்பவர்களுக்கு அதை விட்டுவிடலாம். நமக்கு வேறு வேலை இருக்கிறது. குஜிலி பஜார் என்பதை மாலை நேரக் கடைத்தெரு என்று வைத்துக் கொள்ளலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து 1960கள் வரையும் கூடப் பாட்டுப் புத்தகங்கள், கதைப் பாடல்கள் போன்ற வெகுஜன நாட்டார் இலக்கியங்கள் இங்கே கிடைக்கும்.
புகைவண்டி, மின்சார விளக்கு, மண்ணெண்ணெய், சிகரெட், தேநீர் போன்ற புதுப்பொருட்களின் வருகை இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் விலை அரையணாவாக இருந்தது.
அன்றாடம் நிகழ்ந்த கொலை, கொள்ளை, அரசியல் தொடர்பான செய்திகள் உடனக்குடன் பாடலாக்கப்பட்டன. ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் சில ஆயிரம் படிகளே விற்ற காலத்தில் இந்தப் பாடல்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது.
1920 களிலும் 1930 களின் தொடக்கத்திலும் கிராமபோன் இசைத்தட்டுகள் மூலம் இசைப் பாடல்கள் பரவின. அது ரேடியோ இல்லாத காலம். எச்.எம்.வீ., கொலம்பியா, ஓடியன் போன்ற இசைத் தட்டுக் கம்பெனிகள் பிரபல நாடக மேடைப் பாடகர்களைக் கொண்டும், பிரபலம் ஆக வேண்டியவர்களைக் கொண்டும் நூற்றுக்கணக்கில் இசைத் தட்டுக்களை வெளியிட்டன.
குஜிலிக் கடைக்காரர்கள் கிராமபோன் பாடல்களை அச்சிட்டு விற்றனர். எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், என்.எஸ். பபூன் சண்முகம் போன்றோருக்கு தனிப் புத்தகங்கள் உண்டு.
குஜிலிக் கடைகளில் கூட தேசபக்திக்கே வரவேற்பு அதிகம் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தேசியத் தலைவர்கள் கைதான போது ‘அரெஸ்டு பாட்டு’ என்றே பாடல்கள் எழுதப்பட்டன. இவை சுடச்சுட விநியோகம் செய்யப்பட்டன. எதிர்த்தரப்பிலிருந்து “இராஜ விசுவாசக் கும்மி” போன்ற சில புத்தகங்களும் வந்தன.
வெகுஜனங்களின் விஷயஞானத்திற்காகவும் பொழுது போக்கிற்காகவும் பயன்பட்ட குஜிலிக் கடைகளைப் பார்த்தோம். இதே காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சினிமாவைப் பற்றியும் சிறிது பார்க்கலாம்.
அதற்கு, கந்தசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வால்டாக்ஸ் ரோடில் நிதானமாக நடந்து சென்ட்ரலைக் கடந்து விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு வரவேண்டும். அந்தக் காலத்தில் இத்தனை வாகனங்கள் இல்லை என்பதால் காலாற நடக்கலாம்.”
--
குஜிலி என்னும் சொல் பொதுவாக அதிகப்படியாக அலட்டும் (மேனாமினுக்கி) பெண்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. குறத்தியைக் கூட குஜிலி என்று சென்னையில் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். குஜிலிக்கடை என்பது மாலையில் மட்டும் நடத்தப்படும் அந்திக்கடை வகையறா என்று உள்ளது. ஒருவேளை பெண்கள் அல்லது குஜராத்தியர் நடத்தும் கடையை குஜிலிக்கடை குறிப்பிடலாம்.
இந்த குஜிலிக்கடைகளை ஆதாரமாக கொண்டு குஜிலியம்பாறை என்ற பெயர் குஜிலிக்கடைகளை நடத்தும் குஜராத்திகள் அவ்விடங்களில் இருப்பதால் இந்த பெயர் உண்டாயிற்று என்று சொல்வது எனக்கு ஏற்புடையாக தெரியவில்லை.
மேலும் குஜிலியம்பாறை பகுதிகளில் எத்தனை குஜராத்திகள் எவ்வளவு அந்திக்கடைகளை நடத்துகின்றனர் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. எனக்கு தெரிந்து அங்கு குஜராத்திகள் கடைகளை இல்லை.
குஜிலியம்பாறை என்ற பெயர் குச்சில் என்ற சொல்லில் இருந்து மருவி குஜில் என்று பேச்சு வழக்கில் மாறியிருக்கும்.
குச்சில் > குச்சிலியன் > குச்சிலியம் பாறை > குஜிலியம் பாறை
மற்றபடி குஜராத்தின் குஜிலிகளுக்கும், குஜிலிகடைக்கும், குஜிலியம்பாறைக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.
குஜிலியம்பாறை என்ற பெயர் குச்சில் என்ற சொல்லில் இருந்து மருவி குஜில் என்று பேச்சு வழக்கில் மாறியிருக்கும்.