rnk
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
1755 இல் ஆங்கிலேய படையை விரட்டியடித்த நத்தம் கள்ளர்கள்
==============================================
கள்ளர்நாடு நிலப்பிரதேசத்தில் இருந்த கள்ளர் இனக்குழுக் கூட்டத்தினர்
எவ்வித வரியினையும் கட்டாமல் இருந்தனர். இக்கள்ளர் நாடு என்ற அமைப்பு
மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நத்தம் பகுதிகளுக்கு இடைப்பட்ட
நிலமாக 17 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு சுருங்கி போனது. அதற்கு முன் சேலம்
பகுதியில் எல்லாம் கள்ளர்நாடுகள் இருந்தற்கான கல்வெட்டுகள் உள்ளன.
இராசேந்திரன் தன் மகனான சுந்தரசோழன் என்பவனை பாண்டிய நாட்டிற்குத் தலைவன்
ஆக்கினான். இவ்வளவில் கல்வெட்டுகளில் சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்
எனப்படுகிறான். பிராமணர்களுக்கும், வணிகர்களுக்கும் நத்தம் பகுதியில் பல
மானியங்களை தந்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது.
கிபி 1755ல் பெப்ரவரி மாதம் ஆங்கில தளபதி கர்னல் ஹெரான் மற்றும் நவாப்
தென் தமிழக பாளையக்காரர்களிடம் வரி வசூல் பாக்கியை பெற பெரும்படை கொண்டு
கிளம்பினான். மணப்பாறை பகுதியில் வெற்றிபெற்றதும் கர்னல் ஹெரானிடம்
பொறுப்பை ஒப்படைத்து நவாப் திருச்சிராப்பள்ளி திரும்பினான்.
1752 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆலம்கான், பிரெஞ்சு படை துணைகொண்டு
திருச்சியை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த சந்தாசாகிபுக்குத் துணையாய்
சென்றபொழுது மதுரை திருநெல்வேலி நாடுகளை மூன்று பட்டானிய
உத்தியோகஸ்தர்களிடம் விட்டுச் சென்றான். அம்மூவரின் பெயர் மகம்மது
பக்கிரி, மகம்மது மைனாக்கு, நபிகான் கட்டாக்கு என்பன. இவர்களுள்
முதலாமவன் பொதுவாக மியானா என்று சாதிப் பெயரால் வழங்கப்பட்டான்.
மதுரை பிரதிநிதியான மியானாவை பிடிப்பதற்காக கர்னல் ஹெரானும், கான் சாகிப்
என்கிற மருத நாயகமும் மதுரைக்கு வருகிறார்கள். இவர்களுடைய வருகையையொட்டி
மியானா அங்கிருந்து தப்பி மதுரையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
கோவில்குடி (திறம்பூர் என்பது அதனுடைய தொண்மையான பெயர், மேலூருக்கும்
மதுரைக்கும் நடுவில்) என்கிற இடத்தில் ஒளிந்து கொள்கிறான். இதனால் கர்னல்
ஹெரானும், கான் சாகிப்பும் கோவில்குடியை நோக்கி செல்கிறார்கள். இதனை
எதிர்பார்த்த மியானா மீண்டும் அங்கிருந்து தப்பி செல்கிறான்.
பின்பு மிகவும் தாமதமாக வந்த கர்னல் ஹெரான் கோவில்குடியில் உள்ள
கள்ளர்கள் பூர்வீகமாக வணங்கக்கூடிய கோவிலை கொள்ளையடிக்க திட்டமிடுகிறான்.
கோவிலை சுற்றி காவலுக்கு இருந்த கள்ளர்களுடன் சண்டையிட்டு, அங்கிருந்த
அனைத்து கள்ளர்களையும் கொன்றுவிட்டு பின்பு கொள்ளையடிக்க தயாராகிறான்
கர்னல் ஹெரான்.
கான் சாகிப்புக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லாமல் கோவிலில் ஏறுவதற்கு
ஏணி மற்றும் உபகரணங்கள் இல்லை என்றும் மேலும் மியானா இங்கிருந்து தப்பி
சென்றுவிட்டான் எனவும் கூறுகிறான். ஆனால் இதனை ஏற்காத கர்னல் ஹெரான் அந்த
கோவிலின் கோட்டை கதவை வைக்கோல் போரை வைத்து தீயிட்டு எரிக்க
ஆணயிடுகிறான்.
இதனை ஏற்று கான்சாகிப்பும் படைவீரர்களும் தீயிட்டு கதவை தகர்த்து உள்ளே
நுழைந்து இஷ்டம் போல் அனைத்தையும் சூரையாடி கோவிலை தரை
மட்டமாக்குகிறார்கள். மேலும் கள்ளர்கள் காலங்காலமாக வழிபடும் அவர்களது
சாமி சிலையை எடுக்கிறார்கள்.
இந்த காட்டு மிராண்டித்தனத்தை பிரிட்டீஸ் ஆய்வாளர்கள் இராபர்ட்
ஓர்மி,எஸ்.சி ஹிலும், பிரிட்டீஸ் கவுன்சிலும் கடும் கண்டனமும்,
வருத்ததையும் தெரிவிக்கிறார்கள். மேலும் கர்னல் ஹெரான் ஒட்டுமொத்த
மிலிட்டரி விதிமுறைகளை மீறிவிட்டான் எனவும் குறிக்கிறார்கள்.
கொள்ளையடித்த கள்ளர்களின் சாமி சிலையை ஒரு பிரமாணரிடம் 5000 ரூபாய்க்கு
கர்னல் ஹெரான் விற்க முனைகிறான் ஆனால் இதனால் ஏற்படும் பின்விளைவு அறிந்த
அந்த பிராமணர் ஏற்க மறுக்கிறார். இதனால் அந்த சாமி சிலையை கொள்ளையடித்த
பொருட்களோடு சேர்த்து கட்டுகிறார்கள். அங்கிருந்து மார்ச் 25, 1755 ல்
திருநெல்வேலியை அடைந்து பாளையக்காரர்களிடம் வரி வசூலில் ஈடுபட்டான்.
5 மே, 1755 ல் நெற்கட்டாஞ்சேவலை அடைந்து பூலித்தேவரிடம் வரி வசூல் செய்ய
முயன்றான் ஹரான். அவரது கோட்டை மீது சில மணி நேரம் பீரங்கி தாக்குதல்
நடத்தினான். ஆனால் வெள்ளையரின் ஆயுதபலம் மிகவும் குறைந்திருந்ததை
அறிந்திருந்த பூலித்தேவர் எந்த சலனமும் இன்றி இருந்ததால், ரூபாய்
கொடுத்தால் சென்று விடுகிறோம் என தூது அனுப்பினான் ஹரான். ஆனால்
பூலித்தேவர் ஒரு ரூபாய் கூட தர இயலாது என கூறிவிட்டார். ஹரானின்
படையினருக்கு தேவையான பொருட்கள் முடியும் நிலையில் இருந்ததால், அவர்கள்
அங்கிருந்து பின்வாங்க முடிவு செய்தனர்.20 மே 1755ல், ஹரானின் படை
மதுரையை அடைந்தது.
மதுரையை அடைந்தவுடன் படையினர் ஒய்வு எடுத்துக்கொண்டனர். ஜமால் சாகிப்
என்பவர் தலைமையில் 1000 சிப்பாய்கள் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட
தயாராயினர். ஆனால் அங்கிருந்து திருச்சிக்கு நேரடியாக செல்லும் பாதை
கள்ளர்கள் வாழும் அபாயகரமான பகுதியாதலால், கேப்டன் ஸ்மித் என்பவர்
தலைமையில் 100 ஐரோப்பியர்கள், 4 கம்பனி சிப்பாய்கள் மதுரையில் இருந்து 20
கிமீ தொலைவில் (நத்தம் கணவாயின் தெற்கு எல்லையில்) உள்ள வெளிச்சி நத்தம்
எனும் கோட்டையை நோக்கி செல்ல திட்டமிட்டனர்.
மதுரைக்கு தனது படைகளுடன் வந்த ஹெரானுக்கு பிரிட்டீஸ் கவுன்சிலிடம்
இருந்து அழைப்பு வருகிறது, அதனால் ஒட்டு மொத்த பிரிட்டீஸ் படையும்
திருச்சி நோக்கி செல்லத் தயாராகின்றன.
ஆனால் கிளம்புவதற்கு முன்பாக பிரிட்டீஸ் உளவுத்துறையிடம் இருந்து கர்னல்
ஹெரானுக்கும் அவரது படைகளுக்கும் ஒரு தகவல் வந்தது. மிகவும் ஆபத்தான
நத்தம் கணவாயை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தபடுகிறது.
ஹெரானுக்கு முன் மதுரை கமாண்டோ சார்ஜன்ட் கௌல்ட் (Sergeant gould)
என்பவர் தலைமையில் சென்ற சிப்பாய்கள் அனைவரும் கள்ளர்களால் நத்தம்
பகுதியில் கொல்லப்பட்டனர். அங்கு சென்ற அனைவரையும் கள்ளர் படைகள் ஊசிமுனை
அளவு கூட ஈவு இரக்கமின்றி குத்தி சரித்து விடுகிறார்கள்.
இதன் மூலமாக கர்னல் ஹெரானையும் அவரது படைகளையும் பழிக்கு பழியாக இரத்த
ருசி காண்பதற்கும் இழந்த தங்களுடைய சாமி சிலையை மீட்பதற்கும் கள்ளர்
படைகள் நத்தம் கணவாயில் தாயராக இருப்பதாக பிரிட்டீஸ் உளவுத் துறை தகவல்
அளிக்கிறது.
இந்த அதிர்ச்சி தகவலால் கர்னல் ஹெரான் மிகவும் நுணுக்கமாகவும்,
தந்திரமாகவும் தனது படையை நான்கு பாகமாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கு
ஒரு கேப்டன் தலைமை கொண்டு வழி நடத்த ஆணையிடுகிறார்.
(Joseph smith' account of expedition: orme mss india III 608-612:
கள்ளர்களின் தாக்குதலை நேரில் கண்ட கேப்டன் ஜோசப் ஸ்மித் குறிப்புகளில்
இருந்து)
28 May 1755 ல் ஹெரான் தலைமையிலான ஆங்கிலப்படை மதுரையில் இருந்து
புறப்பட்டது. காலை 5 மணிக்கு புறப்பட தயாரான வெள்ளையர் படை, பல அணிகளாக
பிரிந்து சென்றனர். முதலில் கேப்டன் லின் தலைமையிலான அணி, எந்த
பிரச்சனையும் இன்றி நத்தம் கணவாயை கடந்து நத்தம் நகரத்தை அடைந்தனர்.
இதன் பின் (Captain polier) கேப்டன் போலியர் தலைமையில் கம்பனி
சிப்பாய்கள், சார்ஜன்ட்கள், ஐரோப்பியர்கள் மற்றும் 12 பேர் அடங்கிய அணி
நத்தம் கணவாயில் பயணத்தை தொடங்கியது. இவர்களை பின் தொடர்ந்து ராணுவ
தளவாடங்கள் கொண்ட வண்டி, 20 ஐரோப்பியர்கள், 2 கம்பனி சிப்பாய்கள்
வந்தனர். இதனை தொடர்ந்து மாபூஸ் கானின் யானைகள் மற்றும் ஒட்டகங்கள்
தொடர்ந்தன.
இதனை தொடர்ந்து 6 ராட்சத பீரங்கிகள், 20 ஐரோப்பியர்கள், 200 சிப்பாய்கள்
மற்றும் கம்பனி படைகள் கேப்டன் ஸ்மித் தலைமையில் வந்தது. ஹரான் முன்னாள்
படைகளை வழிநடத்தி சென்றுகொண்டு இருந்தார். கணவாய் பகுதியில் கள்ளர்களை
எதிர்நோக்கி சென்றது படை.
முதலில் சென்ற இராணுவ பிரிவு தாங்கள் எந்த தாக்குதலுக்கும் ஆளாகவில்லை,
இங்கு கள்ளர்களின் நடமாட்டம் இல்லை என தகவல் அளிக்கிறார்.
அனைத்தும் பாதுகாப்பாக செல்கிறது என அனைவரும் மகிழ்ச்சியோடு சென்று
கொண்டிருந்தனர். ஆனால் இதை அனைத்தையும் வழித்தடத்தின் இருபுறத்திலும்
கள்ளர்கள் தங்களுடைய உளவுபடை உளவாளிகள் மூலம் அத்தனை நிகழ்வையும்
அவர்களுக்கே தெரியாமல் கண்காணித்து தகவல் கொடுத்து கொண்டிருந்தனர்.
கள்ளர்கள் உளவாளிகள் மூலம் அனைத்து சம்பவங்களையும் கண்காணித்து வந்தனர்.
தாக்குதலை தொடுக்க உரிய நேரத்திற்காக காத்திருந்தனர்.
இவ்வளவு பெரிய ஆங்கிலப்படைகளை தனிமை படுத்துவதற்காக கள்ளர்கள்
வழித்தடத்தில் மரங்கள வெட்டி 30 பேர் வரிசையாக செல்லும் வழியை 10
பேர்களுக்கும் குறைவாக செல்லும் அளவு பாதையை சுருக்குகிறார்கள்.
சரியாக கேப்டன் ஜோசப்பின் பீரங்கி படையுடன் வந்த சாமி சிலை பிரிவை
கள்ளர்கள் வெட்டி வைத்த புதைகுழியில், போர் கருவிகளை கொண்டு சென்ற ஒரு
வண்டியின் சக்கரம் குழியில் இறங்கி சிக்கி கொண்டது. தளபதி முன்னாள் சென்ற
வண்டிகளை நிறுத்தவில்லை. அந்த வண்டியை பின்தொடர்ந்த வண்டிகள் அனைத்தும்
நின்றது.
முன்னாள் சென்ற வண்டிகளுக்கும், பின்னால் குழியில் மாட்டியிருந்த ராணுவ
தளவாட வண்டிக்கும் இடையேயான தூரம் 2 மைல்களை அடைந்தவுடன், பின்னால்
இருந்த ராணுவ படையை நோக்கி கள்ளர்கள் தாக்க தயாரானார்கள்.
கள்ளர்களை கண்டவுடன் படையினர் சுடத்தொடங்கினர். கள்ளர்கள் தற்காலிகமாக
பின்வாங்கினர்.சிறிது நேரம் அமைதி நிலவியது. அவர்கள் திரும்பி
வரமாட்டார்கள் என எண்ணிக்கொண்டிருந்த போது, பெரும் எண்ணிக்கையிலான
கள்ளர்கள் அபாயகரமான சத்தம் எழுப்பிக்கொண்டு மற்றொரு புறத்தில் இருந்து
தாக்க தொடங்கினர். இதனால் பின்னால் வந்த அனைத்து படையும் ஒரே இடத்தில்
தப்பித்து ஓட முடியாதவாறு தேங்குகிறது.
ஆங்கிலபடைகள் என்ன செய்வதன்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த
நேரத்தில் திடீரென கள்ளர் படைகள் தங்களுடைய ஆயுதங்களுடன் (வளரி, வில்
அம்பு, 18 அடி ஈட்டி, நாட்டு துப்பாக்கிகள்) பயன்படுத்தி ஒருவிதமான வினோத
சத்தம் எழுப்பி நான்கு பக்கமும் திரண்டு தாக்குதல் நடத்துகிறார்கள்.
கேப்டன் ஜோசப் படைகள் பீரங்கி மற்றும் நவீன ஆயுதங்களுடன் எதிர் தாக்குதல்
நடத்துகிறார்கள். ஐரோப்பிய வீரர்கள் திக்குமுக்காடினர். கள்ளர்களின்
கையில் நவீன ஆயுதங்கள் கிடைத்துவிடாமல் இருக்க வேண்டும் என எண்ணினர்.
ஐரோப்பிய சிப்பாய்கள் சிறிய ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்கினர்.
கள்ளர்களும் தொடர்ந்து தாக்கினர்.
ஆனால் திடீரனெ கள்ளர் படைகள் அனைத்தும் காட்டுக்குள் மறைந்து விடுகிறது.
ஆங்கிலபடைகளால் அவர்களையோ, அவர்கள் சென்ற இடத்தையோ கண்டுபிடிக்க
இயலவில்லை.
இந்த முதல் தாக்குதலில் கேப்டன் ஜோசப் மற்றும் ஆங்கிலப்படைகள் இரத்தம்
உறையும் அளவிற்கு பயந்து நடுங்கி ஆயுதங்களுடன் நிற்கின்றனர். சற்று
நேரத்தில் மீண்டும் நான்கு பக்கமும் கள்ளர் படை சூழ்ந்து மிகவும்
உக்கிரமாக தாக்குதலை தொடர்ந்து பல பிரிட்டீஸ் வீரர்களை கொன்று குவித்து
முன்னேருகின்றனர்.
சிறிது நேரத்தில் கள்ளர்கள் காட்டுக்குள் பின்வாங்கி அங்கிருந்து
தாக்குதல் நடத்தினர். பிறகு அங்கிருந்து முன்னேறி ராணுவ தளவாடங்கள்
இருக்கும் பகுதியை நோக்கி வந்தனர்.
கள்ளர்கள் (Arrows, matchlocks, spikes, javelines,, rockets) அம்புகள்,
துப்பாக்கி, வேல் கம்பு, ராக்கெட் முதலிய ஆயுதங்களை கொண்டு
தாக்கினர்.கள்ளர்களின் மீது செய்யப்பட்ட ஒவ்வொரு தாக்குதலுக்கும் அதே
அளவு வீரியத்துடன் அபாயகரமாக சத்தம் எழுப்பிக்கொண்டு பதிலடி கொடுத்தனர்.
தாக்குதலில் சாமி சிலையை வைத்திருந்த பெரிய பீரங்கியை சுற்றி இருந்த
அனைவரையும் கள்ளர் படை தங்களது ஈட்டியால் குத்தி சரிக்கிறார்கள். அவற்றை
பாதுகாத்து நின்ற சிப்பாய்களை தங்களது ஈட்டி மூலம் பலியிட்டனர்.
பீரங்கிகள் இருந்து பகுதியை அடைந்து எதையோ தேடினர். பின்னால் இருந்து
மற்றொரு படை கள்ளர்களை தாக்கியது. ஆனாலும் கள்ளர்கள் பெரும்
எண்ணிக்கையில் திரண்டு தாக்கினர்.
ராணுவ தளவாடங்கள் இருந்த பகுதியில் கள்ளர்கள் எதையோ தேடத்தொடங்கினர்.
ஆக்ரோசமாக ஒலி எழுப்பினர். சிறுது நேரத்தில் கள்ளர்களின் குரல்
ஒருங்கிணைந்து ஒரே சொல்லை ஒலிக்க ஆரம்பித்தது. ஆம், " சாமி, சாமி, சாமி"
என ஆக்ரோசமாக ஒலி எழுப்பினர். அவர்கள் தேடி வந்தது கோயில்குடியில்
ஹரானால் திருடப்பட்ட சாமி சிலைகள்.
கள்ளர்களில் சிலர் அங்கிருந்த வண்டியில் இருந்த மூட்டைகளை எடுத்து
திறந்து பார்த்தனர். அதில் ஒரு மூட்டையில் சுவாமி சிலைகள் இருந்தது.சாமி
சிலைகள் கிடைத்த பின்பு அவர்கள் தங்களது மனைவி, பிள்ளைகள் திரும்ப
கிடைத்தால் வரும் மகிழ்ச்சியைவிட அதிகம் சந்தோசம் அடைந்தனர்.
சாமி சிலைகளை மீட்ட பின்பும் பல மணி நேரம் தொடர் தாக்குதல்கள்
கள்ளர்களால் நடத்தப்பட்டது. கேப்டன் ஸ்மித் உதவி கோரி அனுப்பிய உளவாளிகள்
யாரும் திரும்பவில்லை, எந்த படை உதவியும் கிடைக்கவில்லை. போராட்டம்
தொடர்ந்தது.
மாலை 4 மணி அளவில் கள்ளர்கள் தாக்குதல் குறைந்தது. ஆனால் சற்று நேரத்தில்
படையினர் மற்றும் கூலிகளை நோக்கி பாய்ந்தனர் கள்ளர்கள். கையில் சிக்கிய
அனைவரையும் கொன்று தீர்த்தனர்.வெள்ளைய தளபதிகளின் குடும்பத்தினர் உறவினர்
என அனைவரும் அலறியடித்து ஒடினர். சிப்பாய்களில் வெறும் 30 பேர் மட்டுமே
உயிர்தப்பினர்.
கேப்டன் ஸ்மித், கணவாயில் இருந்து பின்வாங்கி காட்டுப்பகுதியில் இருந்து
பின்வாங்கி சமவெளி பகுதிக்கு படையினரை அழைத்து வந்தார். இதன் பிறகு
கள்ளர்களின் தாக்குதல் ஒய்ந்தது.
இரவு நேரம் நெருங்கியதால், முடிந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை
அங்கேயே விட்டுவிட்டு வேகமாக ஒடினர் ஆங்கிலேயர்கள். முன்னாள் சென்றிருந்த
படைப்பிரிவினருடன் இணைந்து ஸ்மித் தலைமையில் படையினர் வேகமாக நகர்ந்தனர்.
கடுமையான சூரிய வெப்பத்தால் வெள்ளையர்கள் சோர்ந்திருந்தனர்.
அடுத்த நாள் காலை கள்ளர் படை தாக்குதலில் எஞ்சியிருந்த சில வீரர்களுடன்
கேப்டன் ஜோசப்பும், கர்னல் ஹெரானும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு
நத்தம் டவுனுக்கு வருகிறார்கள் நத்தம் நகரத்தை அடைந்து அங்கிருந்து
திருச்சி நோக்கி தப்பினோம் பிழைத்தோம் என ஒடினார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரிட்டீஸ் கவுன்சில் நத்தம் கணவாயை ஆபத்து
பகுதியாக அறிவித்து அந்த வழியாக செல்லும் போது அனைத்து படைகளும் மிகவும்
கவனமாக செல்ல வேண்டும் என அறிவிக்கிறது.
இந்த சம்பவத்தை அனைத்து பிரிட்டீஸ் ஆய்வாளர்களும் தங்களது புத்தகத்தில்
ஆவணப்படுத்தியுள்ளனர். கர்னல் ஹெரான் இருந்த வரை பிரிட்டிஸ்
படைகளும்,கள்ளர் படைகளும் மாறி மாறி இழப்பை சந்தித்தது.
(orme millitary transactions in hindoostan vol 1 :p(390-394)
(Yusuf khan the rebel commendant p 41-43)
நன்றி .
திரு . சியம் சுந்தர் சம்பட்டியார்
திரு. சோழ பாண்டியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பெரிய சூரியூர் கள்ளர்நாடு
=============================
திருச்சி மண்டலத்தில் உள்ள மூன்று கள்ளர் நாடுகளில் ஒன்று பெரிய சூரியூர்
கள்ளர்நாடு
பெரிய சூரியூர் கள்ளர்நாடு என்பது
பெரியசூரியூர்,
சின்னசூரியூர்,
வீரம்பட்டி,
பட்டவேலி,
கும்பக்குடி,
கண்டலூர்,
இலத்தப்பட்டி,
பூலாங்குடி,
மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும்
விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள்
விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல்
பார்த்துக்கொண்டது.
சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது
தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி
2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில்
படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான்
சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான
கம்பெனி என்று. தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால்
பெப்சிக்கு எதிராக போராடிவருகிறார்கள்.
ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்
நன்றி : யாஊயாகே
தமிழகத்தில் நகரமயமாக்கல் - மோகன் குமாரமங்கலம்
https://www.facebook.com/kallar.varalaru.50/videos/464135704124616/
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பழந்தமிழனின் பாரம்பரியம் காக்கும் வெள்ளலூர் நாட்டின் பாரிய வேட்டை
திருவிழாவில் நாட்டு அம்பலங்கள்..
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நாயக்கர்பாளையம் கள்ளர் பாளையக்காரர் சாவடி நாயக்கர்
=====================================================
தஞ்சை நாயக்கர் காலத்தில், அரசு அதிகாரியாக கள்ளர் குடியை சேர்ந்த
அய்யம்பேட்டை சாவடி நாயக்கர் நியமிக்கபட்டவர்கள் (கள்ளர்-நாயக்கர் என்ற
பட்டம்) . அய்யம்பேட்டை அவர்களுக்கு இனாம் கிராமம். முதல் மரியாதைக்கு
உரியவர்கள்.
சத்ரபதி சிவாஜி மறைவை தொடர்ந்து அவர் மூத்த மகன் சத்ரபதி சமபாஜி
மராட்டியத்தின் மன்னரானார். முஹலாய மன்னன் ஔரங்கசீப் சம்பாஜியை கொன்று
மராட்டியத்தை கைபற்றினார். சிவாஜியின் ஆறாவது மனைவி சொயிராபாய் தன் மகன்,
மராட்டியத்தின் அடுத்த அரசன் ராஜாராம் என்கிற ராமராஜவுடன் தப்பித்து
செஞ்சி வந்து, பின்னர் தஞ்சை மன்னர் எகோஜியிடம் பாதுகாப்பு கேட்டு
வருகிறார்கள். தஞ்சை மன்னர் சிவாஜியின் தந்தை ஷாஜியின் முதல் மனைவி
துக்காவுபாய் மகன். தன் சகோதரன் மனைவி, மகனை வரவேற்ற எக்கோஜி, அவர்களை
தஞ்சை அருகில் உள்ள அய்யம்பேட்டையில் (ராமச்சந்திரபுரம் ) சாவடி நாயக்கர்
பொறுப்பில் முழு பாதுகாப்புடன், அரச மரியாதையுடன் தங்கவைக்கிறார்.
அக்ரகாரத்தில் உள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயில் அருகில் வீடு, சேவகர்களுக்கான
குடியிருப்பு ஏற்படுத்தி, சில காலம் சகல பரிவாரங்களுடன் தங்கி, அருகில்
உள்ள கோயிலில், இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற வழிபாடு இயற்றி
கொண்டிருந்தார்கள்.
ஔரங்கசீப் மறைவிற்குப்பின் மராட்டியம் திரும்பு கிறார்கள். சாவடி
நாயக்கர் பொறுப்பில் பாதுகாப்பாக இருந்த, ராஜாராம் மராட்டியத்தின்
மன்னனாகிறார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கள்ளர் குல வரலாறு
5 mins ·
சோழ தேசத்தை காப்பாற்ற,
ஐதர் சேனையை தலையோட வெட்டி சமர்பொருதுந் தொண்டைமான் ராஜா ஸ்ரீ ராய ரகுநாத
தொண்டைமான்
(பொ. ஆ. 1769 - 1789)
==================================================================
தொண்டைமான் மன்னரான ராஜா ஸ்ரீராய ரகுநாத தொண்டைமான் 1769 டிசம்பர் 28
முதல் 1789 டிசம்பர் 30 வரை இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார்.
இவர் 1738ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். தந்தையார் முதலாம் விஜய ரகுநாத
ராய தொண்டைமான் மன்னராவார். தாயார் ராணி நல்லகட்டி ஆயி சாஹிப். இந்த
தம்பதியினருக்கு இவர் மட்டுமே ஒரே புதல்வர். இவரும் அவர்கள் குடும்ப
வழக்கப்படி வீட்டிலேயே தனி ஆசிரியரை அமர்த்திக் கல்வி கற்றவர்.
ராஜா விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1769 டிசம்பர் 28இல் காலமான போது இவர்
ஆட்சிக்கு வந்தார்.
ராய ரகுநாத தொண்டைமானும், தனது தந்தையைப் போல 20 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தார்.
இவர் தெலுங்கில் “பார்வதி பரிணயமு” எனும் நூலை இயற்றியிருக்கிறார்.
இவரது ஆட்சியில் தான் முத்துகுமரப் பிள்ளை, வெங்கப்ப அய்யர் ஆகியோர்
திறமைவாய்ந்த அமைச்சர்களாக இருந்தனர்.
ராய ரகுநாத தொண்டைமான் மன்னருக்கு பதினொரு ராணிகள். இவருக்கு ஒரேயொரு
மகள் மட்டும் இருந்தார். அவர் பெயர் ராஜகுமாரி பெருந்தேவி அம்மாள் ஆயி
சாஹேப்.
தொண்டைமான் 1770 முதல் 1773 வரை அளித்த படை உதவிக்காக புதுக்கோட்டை படை
வீரர்களின் செலவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருந்த நவாப், அந்த
பணத்தை கொடுக்க முடியாமல் போனதால் அதற்கு ஈடாக பட்டுக்கோட்டையின்
ஒருபகுதியான 142 கிராமங்களை உள்ளடக்கி தொண்டைமானுக்கு அளித்தார். இந்த
பகுதியில் இருந்து 53,000 சக்கரம் (அன்றைய செலவாணி பணம்) கிடைத்தது.
இதுவரை தேவைப்பட்ட படை செலவிற்காகவும், இனிவரும் காலங்களில் படை உதவி
அளிப்பதற்காகவும் இப்பகுதியை அளித்ததாக ஒப்பந்தம் உருவானது. இப்பகுதியை
1773 இல் ஆங்கிலேய கம்பெனி துல்ஸாஜியைத் தஞ்சை மன்னராக மீண்டும்
அமர்த்தியபோது தொண்டைமான் தஞ்சைக்கே இப்பகுதியை மீண்டும் வழங்கினார்.
.
#ஐதர் அலியுடன் போர்:-
.
1750களில் மைசூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்த கிருஷ்ணராஜா, தனது
படையில் ஓரு போர் வீரராக இருந்து தளபதியாக உயர்ந்த ஐதர்அலிக்கு தனது
ஆட்சிக்கு கீழிருந்த திண்டுக்கல் பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பை
தந்தார். ஐதர்அலிக்கு தானே அரசரானால் என்கிற சிந்தனை வர, படை வீரர்களை
தனக்கு சாதகமாக்கி 1762 ல் அரசை கைப்பற்றி மன்னராக அமர்ந்தான்.
மைசூரின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஐதர் அலி மாபெரும் படைபலத்தை
பெற்று தென்னிந்தியாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணினான்.
ஆங்கிலேயரும் ப்ரெஞ்சுகாரரும் அதிகாரப்போட்டியில் இருந்தப்போது ப்ரெஞ்சு
அரசாங்கத்துக்கு பேராதரவை அளித்து வந்தான். கிபி 1779 ல் ஐரோப்பாவில்
ஆங்கிலேயருக்கும் ப்ரெஞ்சு காரர்களுக்கும் ஏற்பட்ட போரின் விளைவு பற்றி
எரிய, போர் மேகங்கள் தென்னிந்தியாவிலும் சூழ்ந்தது. ப்ரெஞ்சு காரர்களின்
மாகே துறைமுகத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர், இதனால் ஐதர் அலிக்கு
வெளிநாட்டில் இருந்து வந்துக்கொண்டிருந்த போர் தளவாடங்களின் வருகை
நின்றது. ஆங்கிலேயருக்கு எதிராக ப்ரெஞ்சுகாரர்கள் தலைமையில் பெரும்
கூட்டணியை உருவாக்க எண்ணினான் ஐதர் அலி.
கிபி 1780 , ஜுலை மாதம் பெரும்படை கொண்டு மைசூரில் இருந்து கிளம்பிய
ஐதர், இரு வாரங்களில் பல குறுநிலமன்னர்களை வென்றான்.
தமிழகத்தில் நுழையும் முன் மலபாரின் கோயில்களை இடித்து தள்ளி, ஊரை
எரித்து, அனைவரையும் மதம் மாற்றி, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக
அழைத்து செல்கின்றான், நூற்றுக்கணக்கான மக்கள் கொள்ளப்பட்டனர்.
தமிழகத்தில் நுழைந்து கண்ணில் பட்ட இடங்களை எல்லாம் நாசமாக்கிவிட்டு
முன்னேறுகிறான்.
அடுத்து மதுரையை தாக்கிய ஐதர் அலி 11 கிராமங்களை தீக்கிரையாக்கினான்.
நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பாளையக்காரர்களை தன்னுடன் இணைய
வலியுறுத்தினான். தமிழகத்தில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரும் ஐதரின்
பக்கம் சென்றனர். தஞ்சை மன்னர் ஐதருடன் சேரும் பேச்சுவார்த்தையில்
இருந்தார். தஞ்சை மன்னர் எந்த முடிவும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி
வந்தார். புதுக்கோட்டை அரசர் ராய ரகுநாத தொண்டைமான் நவாப் மற்றும்
ஆங்கிலேயர் பக்கம் இருந்தார். தமிழகத்தின் மற்ற ஏனைய பாளையக்காரர்கள்
ப்ரெஞ்சு கூட்டணியில் ஐதருக்கு ஆதரவாக இருந்தனர். தனது பக்கம் வரும்படி
ஐதர் அலி அனுப்பிய தூதுகளை மறுத்து தொடர்ந்து ஆங்கிலேயர் பக்கம்
இருந்தார் தொண்டைமான்.
(General history of pudukkottai state 1916 R.aiyar page 262-263)
.
#தஞ்சையை சூரையாடிய ஐதர் அலி :-
.
மே மாதம் 1781, ஐதர் அலி தன் பக்கம் சேராத தஞ்சையை தாக்கினான்.23 ஜூலை
1781 அன்று தஞ்சையின் கோட்டை தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் ஐதர்
கைப்பற்றினான். தஞ்சையின் மற்ற அனைத்து கோட்டைகளையும் கைப்பற்றி தனது
கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். தஞ்சையில் இருந்து கால்நடைகள்
கடத்தப்பட்டன. விவசாய நிலங்கள் கொளுத்தப்பட்டது. கிராமங்கள்
தீக்கிறையாயின.குளங்கள் மற்றும் ஏரிகள் உடைக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு
ஏற்படுத்தப்பட்டது. கிணறுகளில் மனித பிணங்களே மிதந்தன. ஆயிரக்கணக்கான
சிறுவர்கள் அடிமைகளாக மைசூருக்கு இழுத்துசெல்லப்பட்டனர். கோயில்கள்
அடித்து நொறுக்கப்பட்டு, பழமையான தெய்வ சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் தஞ்சையில் வசித்து வந்த பாதிரியார் சுவார்ச் தனது
குறிப்பில் :- வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், கோயில்கள்
சூரையாடப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான சிறுவர்கள் (7-8 வயது) மைசூருக்கு
கடத்தப்பட்டதால் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் தஞ்சை வீதிகளில்
சுற்றி வருவதாகவும், பல பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், பல ஏரிகளும்
அணைகளும் உடைக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாழாகி போனதாக எழுதியுள்ளார்.
ஐதரால் மைசூருக்கு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இஸ்லாமியராக
மதமாற்றம் செய்யப்பட்டு, அனைவரையும் தனது பணியாளராக மாற்றினான். விவசாயம்
பல ஆண்டுகள் தடைப்பட்டது. வறட்சியால் வீதிகளில் தினமும் மக்கள் மடிந்து
விழுந்தனர். பிணங்களை அகற்றி மொத்தமாக எரிக்க ஊழியர்கள்
நியமிக்கப்பட்டனர். மக்கள் பசியால் கண்ணீர் விட்டனர். ஒரு சமயம் 1200
பேர் எலும்புக்கூடுகளை போல் நிற்க கூட முடியாமல் உணவுக்காக கையேந்தி
நின்றுக்கொண்டு இருந்ததாகவும், பசியால் வீதிகளில் இறந்து கிடந்தவர்களின்
உடல்களை நாய்களும், பறவைகளும் தின்றதாகவும், அவர்களுக்கு உதவ சென்ற
கிறிஸ்தவ மிசனரி குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
(The history of christian missions 1864 p147-148)
(General history of pudukkottai state 1916 R.aiyar page 264-265)
ஐதர் அலியிடம் இருந்து புதுக்கோட்டை மக்களின் உயிரை காத்த தொண்டைமான் :-
தஞ்சை மீது படையெடுத்து வந்த ஹைதரலி சேனையுடன் எதிர்த்து போர் புரிந்த
ஆங்கிலேய அரசுக்கு தேவையான படை உதவிகளை தொண்டைமான் செய்ததால்
ஆத்திரமடைந்த ஐதர் அலி படைகள் புதுக்கோட்டை மீது தாக்குதல் தொடுத்தனர்.
.
#ஐதர் படையின் முதல் தாக்குதல்:-
.
கிபி 1781 ல் , ஐதர் அலியின் பெரும்படை தனது எதிரணியில் உள்ள
புதுக்கோட்டை தொண்டைமானை அழிக்க புறப்பட்டது. புதுக்கோட்டை எல்லையில்
இருந்த ஆதனக்கோட்டை எனும் ஊரின் வழியே ஐதர் அலி படையின் ஒரு பிரிவு
தாக்கியது. ராய ரகுநாத தொண்டைமான் தனது தளபதி சர்தார் மண்ண வேளார்
தலைமையில் படையை அனுப்பி, ஐதரின் படைகளை ஆதனக்கோட்டையில் எதிர்க்கொண்டு
விரட்டி அடித்தனர். பல நூறு ஐதர் குதிரை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
(சர்தார் மண்ணவேளார் வம்சாவளிகள் இன்றும் வைத்தூர் அம்மன் கோயிலில் முதல்
மரியாதை பெறுகின்றனர். இவர்கள் புதுக்கோட்டை பல்லவராயர்களுடன் மண உறவில்
இணைந்தவர்கள்). இந்த சமயத்தில் ஐதர் அலியின் கைகளில் சிக்கியுள்ள
கீழாநிலைக்கோட்டையை மீட்கும்படி தஞ்சை மன்னர் தொண்டைமானுக்கு கடிதம்
எழுதினார். ஐதருக்கு ஆதரவாக மருங்காபுரி பாளையக்காரனான பூச்சி
நாயக்கனும், நத்தம் பாளையகாரன் லிங்க நாயக்கன் புதுக்கோட்டையில்
தாக்குதல் நடத்தினர். தொண்டைமான் இவ்விரு பாளையக்காரர்களையும் விரட்டி
அடித்தார். புதுக்கோட்டை தொண்டைமானின் ஏறுமுகத்தை அறிந்த தஞ்சையை சார்ந்த
அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் தொண்டைமானிடம் தஞ்சம்
அடைந்தனர்.
#ஐதர் படையின் இரண்டாம் தாக்குதல் :-
.
ஐதர் அலியின் மற்றொரு படைப்பிரிவு புதுக்கோட்டை - திருச்சி எல்லையில்
உள்ள மல்லம்பட்டி, எனும் பகுதியின் வழியாக புதுக்கோட்டையை தாக்கினர்.ராய
ரகுநாத தொண்டைமான் தானே நேரடியாக களத்தில் இறங்கினார்.ஐதர் அலியின்
வீரர்களின் தலைகளை கொய்தார்.
தொண்டைமானின் வீரத்தை பாடும் வெங்கண்ண சேர்வைக்காரர் வளந்தான் எனும் நூல்
" மலம்பட்டி வாடியிலே வந்த ஐதர் சேனையை தலையோட
வெட்டி சமர்பொருதுந் தொண்டைமான்"
என இந்நிகழ்வை குறிப்பிடுகிறது.
ஐதர் படையின் மூன்றாம் தாக்குதல் :-
ஐதரின் தளபதி ஒருவனை, ஒற்றைக்குதிரைக்காரன் என மக்கள்
குறிப்பிட்டுள்ளனர். அவனும் மற்றொரு பகுதி வழியாக தாக்குதல்
நடத்தியுள்ளான். அவனது தாக்குதலை தவிர்க்க எண்ணிய பேராம்பூர் மக்கள், ஒரு
ஏரியில் உடைப்பை ஏற்படுத்தினர். உடைப்பினால் ஏற்பட்ட வாயக்கால் இன்றும்
ஐதர் வாயக்கால் என அழைக்கப்படுகிறது.
இந்த ஒற்றைக்குதிரைக்காரன் புதுக்கோட்டை பகுதியில் தாக்குதல் நடத்தினான்.
இந்த போர் நிகழ்ச்சிகளை பற்றி அம்புநாட்டு வளந்தான் மற்றும் வெங்கண்ண
சேர்வைக்காரர் வளந்தான் எனும் இரு இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி தன் நாட்டில் புகுந்து சூரையாட தொடங்கிய ஒற்றைக்குதிரைக்காரனை
தொண்டைமான் விரட்டி அடித்து, விராலிமலை பகுதியில் ஒரு அடர்ந்த
காட்டுப்பகுதியின் நடுவில் வைத்து கொன்றுள்ளார்.
" மஸ்தகம் பதித்ததொரு விராலிமலை தன்னில்
ஒற்றைக்குதிரைக்காரன் ஒருமையாக வந்தவனை
பற்றித் துரத்திவெட்டும் பகதூர் தொண்டைமான்"
என தொண்டைமானின் வீரத்தை புகழ்கிறது. தேசத்தில் இருந்த தாய்மார்கள்
தங்களது பிள்ளைகளை சாப்பிட வைக்க ஒற்றைக்குதிரைக்காரனிடம் பிடித்து
கொடுத்து விடுவேன் என மிரட்டும் பழக்கம் கிபி 20 ஆம் நூற்றாண்டு வரை
இருந்துள்ளதை புதுக்கோட்டை வரலாறு எழுதிய ராதாகிருஷ்ண ஐயர் தனது நூலில்
குறிப்பிட்டுள்ளார்.
திருக்காட்டுப்பள்ளியை தொண்டைமான் கள்ளர் படை மீட்டல்:-
.
கிபி 1781, ஜூலை மாதம், ஐதர் அலியின் மகனான திப்புவுக்கு, ஒற்றர்கள்
மூலம் தகவல் வந்தது. தொண்டைமானின் படைகள் தஞ்சையில் இருந்த சிறுபடையோடு
திருக்காட்டுப்பள்ளியை மீட்க வருவதே அந்த தகவல். சையது சாகிப் எனும்
ஐதரின் தளபதி தாக்குதலை சமாளிக்க தயாரானார்கள். ஆனாலும் தொண்டைமான்
படைகளால் ஐதரின் படை விரட்டப்பட்டு , திருக்காட்டுப்பள்ளி மீட்கப்பட்டது.
இந்த வெற்றியை குறிப்பிடும் ஆங்கில ஆவணம் , " The officer commanding the
troops had frequently been shamefully defeated by kullars of tondaiman
and regular cavalry of tanjore " என விளக்கியுள்ளது.
(General history of pudukkottai state 1916 R.aiyar page 267)
.
#மன்னார்குடியை மீட்ட தொண்டைமான்:-
.
பட்டுக்க்கோட்டை, தஞ்சை, அறந்தாங்கி, கீழாநிலை ஆகிய பகுதிகள் ஐதரின் வசம்
தொடர்ந்து இருந்தது. கிபி 1781, செப்டம்பர் மாதம், தொண்டைமான் படைகள்
மன்னார்குடியில் இருந்து ஐதரின் படைகளை விரட்டியது. சிதறி ஒடிய ஐதர் படை
பட்டுக்கோட்டையில் தஞ்சம் அடைந்தது.
.
#தஞ்சை, அறந்தாங்கி, கீழாநிலை, பட்டுக்கோட்டையை மீட்ட புதுக்கோட்டை
பல்லவராயர் படை :-
.
புதுக்கோட்டை தொண்டைமான் அடுத்த தாக்குதலுக்கு தயாரானார். தஞ்சை ஐதரின்
கோர பிடிகளில் சிக்கித் தவித்தது. ஆங்கிலேயரும் நவாபும் ஐதரை
விரட்டியடிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
தஞ்சையை மீட்க வலிமையான படை ஒன்றை உருவாக்கினார் தொண்டைமான். பெருங்களூர்
போரம் பல்லவராயர், ராமசாமி ராங்கியத்தேவர், சுப்ரமணிய முதலியார்
தலைமையில் பெரும்படையை அனுப்பினார். தஞ்சை, கீழாநிலைக்கோட்டை,
பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகள் மீட்கப்பட்டது.
ஐதருக்கு ஆதரவாக செயல்பட்ட, சேதுபதியின் உறவினர் மாப்பிள்ளை தேவன்,
தொடர்ந்து போரிட்டார். அவரை வீழ்த்த நலம் கொண்ட ஆவுடையப்ப சேர்வைக்காரர்
தலைமையில் ஒரு படையை அனுப்பினார் தொண்டைமான். மாப்பிள்ளை தேவன்
தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கிபி 1781 இறுதியில் ஐதர் படை
சோழ தேசத்தில் இருந்து பின்வாங்கியது.
சோழதேசத்தில் துலுக்கரால் ஏற்பட்ட கழகங்களை ஒடுக்கி, ஐதர் படையை விரட்டி
அடித்து, மக்களையும் பாரம்பரிய சின்னங்களையும் காக்க தன் உயிரை துட்சமாக
எண்ணி போரிட்ட தொண்டைமான் தலைமையிலான படையினருக்கு சோழ நாட்டு மக்கள்
என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். தஞ்சையை ஆட்சி செய்த மராத்திய மன்னர்
தன் உயிரை காக்க தப்பி ஒடியபோதும், தன் நாடான புதுக்கோட்டையில் எந்த
சலசலப்பும் ஏற்படாமல் காவல் தெய்வங்களை போல காத்து நின்றவர் புதுக்கோட்டை
மன்னர் ராய ரகுநாத தொண்டைமான்!
திப்பு சுல்தான் படைகளை 1783ல் ஆங்கிலேயரோடு கைகோர்த்த தொண்டைமான் படை
வென்றது. கரூர்,அறவக்குறிச்சி,திண்டுக்கல் பகுதிகளை தொடர்ந்து பாலக்காடு
பகுதிகளையும் தொண்டைமான் படைகள் கைப்பற்றியது.
எதிர்த்த எல்லா படைகளையும்
(சிவகங்கை, இராமநாதபுரம் அரசுகள், தஞ்சை மராத்தியர், மதுரை நாயக்கர்கள்,
நவாப்கள்,பிரஞ்ச் படைகள்,மைசூர் சுல்தான் )
இன்று புதுக்கோட்டையில் இந்துக்களும் பழங்கால கோயில்களும் அதே பொலிவுடன்
விளங்குவதற்கு காரணம் 13 ஆம் நூற்றாண்டு முஸ்லிம்கள் மற்றும் 18 ஆம்
நூற்றாண்டில் ஐதரின் படைகளிடம் இருந்து புதுக்கோட்டையை காத்த கள்ளர்களும்
மற்றும் தொண்டைமான் மன்னர்களே.
இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார்
இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்:
“நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து
கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது,
தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து
நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம்.. தாங்கள் இன்னம்
சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு.”
இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த
பேருதவி யாரும் எளிதில் மறக்கற்பாலதன்று.
இருபது ஆண்டுகள் இவர் ஆட்சி முடிந்த நிலையில் இவர் 1789 டிசம்பர் 30 இல்
காலமானார். இவர் இறந்த போது இவருக்கு ஆண் மக்கள் எவரும் இல்லாத நிலையில்
இவரது ஒன்றுவிட்ட சகோதரர் உறவினரான “விஜய ரகுநாத தொண்டைமான்” அரச
பதவியைப் பெற்றார்.
General history of pudukkottai state R aiyar 1916/ p 264-271
தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmAh7Cwg%3D%2Bhj%3D4bhG1ozKewpCxpwMJ210-qf-K_skvJjnA%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்திர_குலம்
கரியவன்@இந்திரனை தேடிய எனது பயணத்தில் முதல் வெற்றியாக சுமார் 72வருட
பழமையான பத்திரத்தில், கள்ளர் சமூகத்தவர்கள் தங்களை இந்திர குலம் என்று
குறிப்பிட்டுள்ளனர்.
கள்ளர்களில் அதுவும் குறிப்பாக பிரமலைக்கள்ளர்களில் போன தலைமுறை
வரைக்கும் தனது வீட்டில் உள்ள ஒரு ஆண் குழந்தைக்கு தெய்வேந்திரன் என்கிற
பெயர் சூட்டுவார்கள்.
தேவேந்திரன் என்கிற இந்திரனுடைய பெயரைத் தான் தெய்வேந்திரன் என்று வைத்துள்ளார்கள்.
கல்வெட்டுகளில் கூட தேவர் என்கிற பெயர் தெவர் என்றே இருக்கும்.
இந்திரனை பற்றி கடந்து முறை நான் பதிவு செய்ததை பார்த்து மதிப்பிற்குரிய
அண்ணன் Thirumaranji அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு
நிலப்பத்திரம் உள்ளது என்று எனக்கு அனுப்பினார்.
அதனுடைய காலம் கிபி1947ஆம் ஆண்டு, அது ஒரு நிலப்பத்திரம் திருமாறன்
அண்ணன் தாயாரின் 3தலைமுறைக்கு முன்னாள் உள்ள பூர்வீக சொத்து.
அந்த பத்திரத்தில் மாயாண்டித்தேவர் இந்திரகுலம் என்று தெளிவாக உள்ளது.
இன்னும் இதற்கு முந்தைய பத்திரத்தில் இந்திர குலம் பிறமலைக் கள்ளர் சாதி
என்று தெளிவாக உள்ளதாகவும், அதனை நகல் எடுத்து தருகிறேன் என்று
கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக ஆய்வு செய்தால் சில மடையர்களின் மண்ணாங்கட்டி புனைவுகளை
உடைத் தெரியலாம்.
நன்றி
மதிப்பிற்குரிய அண்ணன்
Thiru Maran
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmBRBBSoGfaUQ4uBLB%3DHQjVaHvvb3T-0gZ4AA3FJf2J%3DLw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmCQcsRsRoDXAp99YQxOcOSK%3DmqwFF9r9inVonCP8DqZpA%40mail.gmail.com.
--
வணக்கம் ஐயா.அரியதொரு செய்தி.குடியரசுத்தலைவரின் இளம் அறிஞர் விருது பெற்றுள்ள முனைவர் கல்பனா ஈழம்கொண்டார் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.
சூரிய குல சோழர்கள்
சோழர்கள் சூரிய குலத்தை சேர்ந்தவர்கள் என்பதனை அனைத்து வரலாற்று
ஆய்வாளர்களும் அறிவர்.
ஆனால் உலகமுழுவதும் சூரிய வழிபாடு,சூரியன் சார்ந்த அர்த்தங்களுக்கு
#சோழர் என்ற சொல்லாடலே பல மொழிகளில் மருவி இன்றும் உலா வருவதை யாரும்
ஆராயவில்லை என்பதே நிதர்சனம்.
சோழர்களே முதன் முதலில் சூரிய வழிபாட்டை கொண்டு வந்தவர்கள் என்பதே எனது
ஆழமான கருத்தியல்.
ஏனென்றால் சோறுடைத்த சோழ நாடு என அழைக்கப்பட்டு அறுவடை தினத்தன்று
சூரியனுக்கு படையலிட்டு வணங்கியுள்ளனர் சோழ தேசத்து மக்கள்.
இன்றும் தெற்காசியா முழுவதும் பொங்கல் விழா வேறு,வேற பெயர்களில் கொண்டாட
காரணம் அந்த நாடுகளில் சோழர்களின் ஆளுமை இருந்த காரணம் தான்.
அதுபோல ஆதிகாத்தில் சோழர்கள் உலகம் முழுவதும் தொடர்பில் இருந்ததால்
அவர்களுடைய சூரிய குலப் பெயர் பல மொழிகளில் சோழர் என்ற வார்த்தையை
தழுவியே வருகிறது.
இன்றும் சூரிய சக்திக்கு உலகமுழுவதும் சோழார் எனர்ஜி என்றே குறிப்பிடுகிறார்கள்.
அவற்றை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்:-
மொழி சொல் தமிழில்
லத்தீன். ˈsōlər. சோழிஸ்
ஆங்கிலம். Solar சோழார்
குரோஷியன். solare சோழரி
போஸ்னியன். solarno. சோழரினோ
டேனிஷ் sol சோழ்
டச்சு. zonne- சோன்னி
பிரஞ்ச். Solarie. சோழரி
இந்தோனேஷியன் tenaga surya. டிநாக சூர்யா
ஜெர்மன். Solar. சோழார்
இத்தாலியன். Solare. சோழரி
மெசடோனியன். соларна. சோழார்னா
போர்ச்சுகீஸ். Solar. சோழார்
செர்பியன். соларни சோழார்னி
சிங்களம். සූර්ය. சூர்யா
ஸ்பெனிஷ். Solar சோழார்
சமஸ்கிருதம். सूर्य சூர்யா
நார்வேயியன். solenergi. சோழனேர்ஜி
ரோமானியன். Solar. சோழார்
ரஷ்யன். солнечный. சோழஜ்னி
வெல்ஷ். Solar. சோழார்
உருது. شمسی. சோங்சி
அரபிக். شمسي. சோம்சி
இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் அதாவது
பெங்காலி,மராட்டி,குஜராத்தி,கன்னடம்,சமஸ்கிருதத்தில்
சவுரவ்,சூர்யா என வழங்கப்படுகிறது.
இது சோழா,சூழா,சூழியா,சூரியா,சூர்யா,சூரவ்,சரவ்,சவுரவ் என மருவிருக்க வேண்டும்.
இதில் இந்தோனேஷியாவில் நாக சூர்யா என்று வருவது தான் நாகர்,சோழர் ஒருவராக
பாவிக்க வருகிறது.
ஏற்கனவே வரலாற்று ஆய்வாளர்கள் சோழர்களை நாகர் வழித்தோன்றல் என
கூறியுள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதற்காக சோழர்கள் உலகம் முழுவதும் ஆண்டார்கள் என்று கூறவில்லை.
உலகம் முழுவதும் ஆளுமை செலுத்தியுள்ளார்கள் என்பதே எனது கருத்து.
சோழர் பயணம் தொடரும்......!
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmAu_oyKWHBbTg%2B4rRCc%3DpkWMpUibK%2BDZh1bzU7Br_MduQ%40mail.gmail.com.
[ "...... செயசிங்க குலகால வளநாட்டு வடசிறுவாயின்னாட்டுக்கு சமைந்த
நாஞ்சில் ஊற்கு சமைந்த ஊரோமும் பெருஞ்செவூர் ஊற்கு சமைந்த ஊரோமும் விரைக்
குடிக்கு சமைந்த ஊரோமும் கணையக்குடி ஊற்கு சமைந்த ஊரோமும் இவ்வனைவோம்
எங்களில் இசைந்து...."]
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmBzqW%3Do_6VO5jxidJp7r-uhWoPJycj8KULMj2Nf-w2SvQ%40mail.gmail.com.