மதுரை அகழியும் கோட்டையும்

1,194 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 26, 2017, 3:59:40 AM9/26/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, Pirama Dr Palanichamy FFE, Tharakai Editor, naga rethinam

மதுரை அகழியும் கோட்டையும்



பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது.  மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில்  வணிகன் ஒருவன்  அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான்.  மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான்.  தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான்.

ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான்.  ஆமைகளும் மீன்களும் முதலைகளும் நிறைந்த அகழியை அமைத்தான்.

வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம்?

பாண்டியர் ஆட்சிக்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன.  1757ஆம் ஆண்டு வரைபடத்தில்  மதுரையின் அகழியும் கோட்டையும் காட்டப்பெற்றுள்ளன. 



1843 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர்.  மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன.  (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு). 

மதுரையில் சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்டிருந்த கோட்டையும் அகழியும் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டது போகத் தற்போது  எஞ்சி  இருப்பது சுமார் 50 அகலம் கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே ஆகும்.  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது.  கோட்டையின் எஞ்சிய பகுதி புதுப்பிக்கப்பெற்று நினைவுச் சின்னமாக உள்ளது.



வங்கியசேகர பாண்டியன் அமைத்த அகழிக்கு வெளிப்புறம் அமைந்திருத்த  சாலையானது வெளிவீதிகளாக உள்ளன.  மதுரையின் கோட்டைக்கு உள்ளே அமைக்கப்பட்ட சாலையானது பெருமாள் மேஸ்திரி வீதிகளாகவும் மாரட் வீதியாகவும் உள்ளன.    கோட்டையை இடித்து அகழியை மூடினாலும்  அவற்றின் எச்சங்கள் அழியாமல் இன்றும் உள்ளன.

அகழியும் கோட்டையும் அமைத்த மன்னனின் பெயரை மாமதுரை வீதிகளுக்குச் சூட்டாமல், தொன்மைச் சிறப்பு மிக்க தொல்லியல் தடையங்களை அழித்த மாரட் மற்றும் மேஸ்திரி இவர்களது பெயர்களால் வீதிகள் இன்றும் அழைக்கப்படுவது வியப்பாக உள்ளது.

 அன்பன்

கி. காளைராசன்

 (குறிப்பு - கூடுதலான படங்களுடன் உள்ள கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.)


திருவிளையாடல் புராணம் –  'இஞ்சி'  'எயில்'  'மதில்' அகழி. வாயில் ’,    என்ற சொற்கள் உள்ள பாடல்களின் தொகுப்பு.

 

106.       

எறியும் வாளையும் அடிக்கடி எழுந்து உடல் பரப்பிப்

பறியும் ஆமையும் வாளோடு கேடகம் பற்றிச்

செறியும் நாள் மலர் அகழியும் சேண் தொடு புரிசைப்

பொறியுமே ஒன்றி உடன்று போர் புரிவன போலும்.         

 

110.       

மாக முந்திய கடி மதின்  மதுரை நாயகர் கைந்

நாகம் என்பதே தேற்றம் அந் நகர் மதில்  விழுங்கி

மேகம் நின்று அசைகின்ற அவ் வெம் சினப் பணிதன்

ஆகம் ஒன்று தோல் ஊரிபட நெளிவதே ஆகும்.

 

112.       

சண்ட பானுவும் திங்களும் தடைபடத் திசையும்

அண்ட கோளமும் பரந்து நீண்டு அகன்ற கோபுரங்கள்

விண்ட வாயில்  ஆல் வழங்குவ விட அரா வங்காம்

துண்ட போல் பவும் உமிழ்வன போல் பவும் உழலா.          

 

113.       

மகர வேலை என்று யானை போல் மழை அருந்து  அகழிச்

சிகர மாலை சூழ் அம் மதி திரைக் கரம் துழாவி

அகழ ஓங்கு நீர் வைகையால் அல்லது வேற்றுப்

பகைவர் சேனையால் பொரப் படும் பாலதோ அன்றே.

 

 

114.       

எல்லைத் தேர் வழித் தடை செயும் இம் மதில்  புறம்  சூழ்ந்து

தொல்லை மேவலர் வளைந்துழி உடன்று போர் ஆற்றி

வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல

வல்ல அம் மதில்  பொழி செயு மறம் சிறது உரைப்பாம்.               

 

117.       

எள்ளி யேறு நரை இவுளி மார்பு இற எறிந்து குண்டு அகழி இடை விழத்

தள்ளி மீளும் உருள் கல்லிருப்பு முளை தந்து வீசி உடல் சிந்தும் ஆல்

கொள்ளி வாய் அலகை வாய் திறந்து கனல் கொப்பளிப்ப உடல் குப்புறத்

துள்ளி ஆடுவன கைகள் கொட்டுவன தோள் புடைப்ப சில கூளியே.

 

172.       

கொடி முகில் துழாவு மிஞ்சிக் கோ நகர் வடகீழ்  ஞாங்கர்

முடி மிசை வேம்பு நாற முருகு அவிழ் ஆரும்  போந்தும்

அடி மிசை நாறத் தென்னர் வழி வழி அரசு செய்யும்

இடி முரசு உறங்கா வாயில்  எழுநிலை மாடக் கோயில்.               

 

187.       

ஆறு நீர்க் கடல் அன்று அது என நிறை அகழ் கார்

ஊரு ஆழி அன்று அது என ஓங்கு எயில்  எட்டாய்ச்

சாரு நேமியன்று அது எனச் சமைந்த கோபுரம் பொன்

மேரு அன்று அது எனச் சுடர் விசும்பு இழி விமானம்.          

 

244.       

அன்னிய தலங்கள் தம்மில் ஆற்றிய பிரமகத்தி

பொன்னினைக் களவு செய்தல் கள் உண்டல் புனித ஆசான்

பன்னியைப் புணர்தல் இன்ன பாதகம் அனைத்தும்  என்றும்

தன்னிகர் ஆல வாயில்  வதிபவர் தமை விட்டு ஏகும்.      

 

336.       

சென்னி பொருட்டு எயில் வாயில்  திறந்து அடைத்து   விடை பொறித்த செயலும் சென்னி

மன் இகல் இட்டு அமர் விளைப்ப மீனவற்கு நீர்ப்  பந்தர் வைத்த வாறும்

பொன்னனையாள் பொருட்டுஇ ரதவாத வினை  முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்

தன்னை அகன் குழி வீட்டித் தென்னவற்கு மற வாகை  தந்த வாறும்.

 

509.       

வலம் வயின் இமய வல்லி பொன் கோயில் மாளிகை   அடுக்கிய மதில்  வான்

நிலவிய கொடிய நெடிய சூளிகை வான் நிலா விரி  தவள மாளிகை மீன்

குலவிய குடுமிக் குன்று இவர் செம் பொன் கோபுரம்  கொண்டல் கண் படுக்கும்

சுல வெயில் அகழிக் கிடங்கு கம்மி நூல் தொல்  வரம்பு எல்லை கண்டு அமைத்தான்.

 

650.       

பித்திகை வெள்ளை புதுக்குவார் பெட்பு உறுவார்களும்  பெட்பு உறச்

சித்திர பந்தி நிறுத்துவார் தெற்றிகள் குங்குமம் நீவு வார்

வித்திய பாலிகை மென் தழை விரிதலை நீர் நிறை   பொன் குடம்

பத்தியின் வேதி நிரப்புவார் தோரணம் வாயில்  பரப்புவார்.  


715.       

முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில்  நீந்தி

அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக

நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர்   அம் பொன்

துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச்  சூழ்ந்தார்.            

 

1042.    

இன்னவாறு எழுந்த வேலை மஞ்சு உறங்கும் இஞ்சி சூழ்

நல் நகர்க் குணக்கின் வந்து நணுகும் எல்லை அரை இரா

மன்னவன் கனாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்

முன்னர் வந்து இருந்து அரும்பு முறுவல் தோன்ற மொழிகுவார்.          

 

1044.    

கண் நிறைந்த அமளியின் கழிந்து வாயில்  பல கடந்து

உண் நிறைந்த மதி அமைச்சருடன் விரைந்து குறுகியே

மண் இறந்தத என முழங்கி வரு தரங்க வாரி கண்டு

எண் இறந்த அதிசயத்தன் ஆகி நிற்கும் எல்லைவாய்.     

 

1051.    

அஞ்சலி முகிழ்த்துச் சேவித்து அருகு உற வந்த வேந்தன்

இஞ்சி சூழ் கோயில் எய்தி இறைஞ்சினன் விடை கொண்டு ஏகிப்

பஞ்சின் மெல் அடியார் அட்ட மங்கலம் பரிப்ப நோக்கி

மஞ்சு இவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் மன்னோ.

 

1052.    

வளை எயில்  மதுரை மூதூர் மறி கடல் இவற்றின்  நாப்பண்

விளை வயன் நகரம் எல்லாம் வெள்ளி அம்பலத்துள்  ஆடும்

தளை அவிழ் கொன்றை வேணித் தம்பிரான் தனக்கே  சேர்த்துக்

களை கணாய் உலகுக்கு எல்லாம் இருந்தனன் காவல்  வேந்தன்.

 

1147.    

கன்னிப் பொன் எயில்  சூழ் செம் பொன் கடி நகர்க்கு  அணியன் ஆகிப்

பொன்னில் செய்து இழைத்த நீள் கோபுரத்தினைக்   கண்டு தாழ

உன்னித் தேர் இழிந்து எட்டோடு ஐந்து உறுப்பினால் பணிந்து எழுந்து

வன்னிச் செம் சுடர்க் கண் நெற்றி மன்னவன் மதுரை சார்ந்தான்.     

 

1148.    

அறத்துறை அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்

புறத்துறை அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்

நிறத்துறை அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள   முத்தின்

நிறத்துறை வைகை நீத்து நெடு மதில் வாயில்  புக்கான்.          

 

1339.    

சிறிது மூரலும் வெயர் வையும் திருமுகத்து அரும்பக்

குறுகி ஆவணம் சித்திர கூட நால் சந்தி

மருகு சூளிகை உபரிகை மாளிகை வாயில்

அறுகு சூழ் நிரைத்த தெற்றி இவ் விடம் தொறும்  அடைந்து.       

 

1465.    

பொன்னி நாடவன் வாயில்  உள்ளான் ஒரு புலவன்  வந்து அலர் வேம்பின்

கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல்  கரிகால் எம்

மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது  உனக்கு ஒன்று

தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான்.               

 

1508.    

வாயில்  உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்

கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான்

ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு   அவிந்தாளைத்

ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன்  என்றார்.          

 

1576.    

கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி  ஞாலம்

காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில்  உடுத்த  கூடல்

மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை

மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி  வாழ்வான்.              

 

1613.    

கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி தொழுது அடி கேள் அம்

கொண்டல் கண் வளர் மதில்  வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம்

அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள் வாய்

விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன்.

 

1620.    

தீவிடம் உருத்துத் திணி இருள் கடுப்பத் திருநகர் எங்கணும் செறிந்த

காவிடம் கூவல் கயம் தலை சதுக்கம் கழகம் ஆவணம் அகழ் இஞ்சி

கோவிடம் மாடம் உபரிகை மேடை கோபுர அரங்கம் எலாம் பரந்து

தாவிட மயங்கி உறங்கினார் போலச் சாம்பினார் தனிநகர் மாக்கள்.            

 

1721.    

ஆய பொதியில் விளை பொன்னால் அசும்பு செய்து  விசும்பு இழிந்த

கோயில் அதனை அகம் புறமும் குயின்று ஞானக்  கொழுந்து அனையது

ஆயில் அறுகால் பீடிகை வான் தடவு கொடிய நெடிய  பெரு

வாயில்  பிறவும் அழகெறிப்ப வேய்ந்தான் மறையின்  வரம்பு அறிந்தான்.

 

1739.    

கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர்  நீர் ஆழி

வெற்புத் திரிந்த மதில்  கூடல் மேய வணிகர்  கன்னியராய்ப்

பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு

அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர்.             

 

1744.    

மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து  வளை கொண்மின்

என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை  கேட்டு எழில் மயில் போல்

துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல   மகளிர்

மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார்.      

 

1789.    

சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்

அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா

வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில்  திறந்து  அழைத்து

இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.     

 

1790.    

தோடு வெட்டி மலைத்து வாள் விதிர் துணை  விழிக்குயில் இள முளை

கோடு வெட்டிய குறி கொள் மேனியர் குடி கொள் மா நகர் கடி கொள் பைங்

காடு வெட்டிய காரணக் குறி காடு வெட்டிய சோழன்    என்று

ஏடு வெட்டிய வண்டு சூழ் பொழில் எயில்  கொள் கச்சி உளான் அவன்.

 

1801.    
வறந்தவாறு கடந்து வந்து வடக்கு வாயில்  திறந்து  போய்

நிறைந்த காவல் கடந்து வீதிகள் நிந்தி நேரியர்  வேந்தனைச்

சிறந்த வாடக புனித பங்கய திப்பியப் புனல் ஆடுவித்து

அறம் தவாத அறை கான கண்டர் தம் ஆலயம்  புகுவித்தரோ.

 

1808.    

கங்குலின் அரும் கை குறைப்பான் எனச்

செம் கை நீட்டித் தினகரன் தோன்றலும்

எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து

அங்கண் வாயில்  திறப்பவர் ஐயுறா.               

 

1809.    

மற்றை வாயில்  கண் மூன்றினும் வல்லை போய்

உற்று நோக்கினர் தாம் நென்னல் ஒற்றிய

கொற்ற மீனக் குறி பிழை யாமை கண்டு

எற்றி இது ஆம் கொல் என்று ஏந்தல் முன் எய்தினார்.       

 

1810.    

போற்றி மன்ன நம் பொன் அம் கயல் குறி

மாற்றி உத்தர வாயில்  கதவு அதில்

ஏற்று இலச்சினை இட்டனர் யாரை என்று

ஆற்றல் வேந்த அறிகிலம் யாம் என்றார்.     

 

1813.    

மட்டது அலம்பிய தாதகி மாலையான்

உட்ட தும்பி ஒழுகிய அன்பினால்

கட்டு இல் அங்கு எயில்  கச்சியில் காடு எலாம்

வெட்டி நம் புடை வித்திய பத்தியான்.

 

1814.    

வந்து நமை வழி பட வேண்டினான்

இந்த வாயில்  திறந்து அழைத்து இன் அருள்

தந்து மீள விடுத்துப் பின் ஆட் கொளீஇ

நந்த மால் விடை நாம் பொறித்தேம் எனா

 

1939.    

சென்றவள் கங்குல் எல்லை தெரிந்தபின் எழுந்து வெள்ளி

மன்றவன் கோயில் வாயில்  வந்து வந்தனை செய்து அம் பொன்

குன்றவன் உரைத்த ஆற்றால் கொடுமைசால் வழக்குப் பூட்டி

வென்றவர் இருக்கை எய்தி விளம்புவாள் பலரும் கேட்ப.            

 

 

1982.    

பூசத் துறையில் புகுந்து ஆடியப் பொன்னித் தென்சார்

வாசத்து இடை மா மருதைப் பணிதற்கு வைகைத்

தேசத்தவன் கீழ்த்திசை வாயில்  கடந்து செல்லப்

பாசத் தளையும் பழியும் புற நின்ற அன்றே.              

 

1986.    

வரகுணன் அது கேட்டு ஐயன் மருதினை வளைத்து நீங்கற்கு

அருமையால் வாயில்  தோறும் அடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து

வரை துளைத்து அன்ன மேலை வாயிலால்  போவான் அன்ன

திருமணிக் கோபுரம் தன் பெயரினால் செய்து சின்னாள்.          

 

2065.    

நீல வண்ணன் தேறா நிமலன்

ஆல வாயில்  அமர்ந்தான் என்னே

ஆல வாயான் அலரில் வாசம்

போல் என் உளமும் புகுந்தான் என்னே.

 

2312.    

இந் நிலை நியமம் மூ ஐந்து எல்லை ஞான்று இயன்று பின் நாள்

அந் நிலை ஒழுகு நாரை ஆடக கமலம் தோய்வான்

வன் நிலை மதில்  சூழ் ஞாங்கர் வந்துழிப் பசியால் வெந்து

மின் நிலை வேல் போல் துள்ளும் மீன் கவர்ந்து உண்கும் என்னா.        

 

2345.    

சித்தர் தம் சின கரத்து எழுந்து அருளினார் செழியன்

பைத்த ஆலவாய் கோலிய படி சுவர் எடுத்துச்

சுத்த நேமிமால் வரையினைத் தொட்டு அகழ்ந்து எடுத்து

வைத்தது ஆம் என வகுத்தனன் மஞ்சு சூழ் இஞ்சி.              

 

2346.    

தென் திசைப் பரங் குன்றமும் வடதிசை இடபக்

குன்றமும் குடக் கேடக நகரமும் குணபால்

பொன்றல் அம் கிழித்து எழு பொழில் பூவண நகரும்

என்று நால் பெரு வாயில்  கட்கு எல்லையாய் வகுத்தான்.           

 

2347.    

அனைய நீள் மதில் ஆலவாய் மதில் என அறைவர்

நனைய வார் பொழில் நகரமும் ஆலவாய் நாமம்

புனையல் ஆயது எப்போதும் அப் பொன்னகர் தன்னைக்

கனைய வார் கழல் காலினான் பண்டு போல் கண்டான்.             

 

2348.    

கொடிகள் நீள் மதில்  மண்டபம் கோபுரம் வீதி

கடி கொள் பும் பொழில் இன்னவும் புதியவாக் கண்டு

நெடிய கோளகை கிரீடம் வாள் நிழல் மணியால் செய்து

அடிகள் சாத்திய கலன்களும் வேறு வேறு அமைத்தான்

2360.    

அளந்து சூழ் திரு ஆலவாய் மதில்  இன்புறத் தக ஆழிபோல்

வளைந்த சோழ நெடும் படைக்கு எதிர் வஞ்சி வேய்ந்து  எழு பஞ்சவன்

கிளர்ந்த சேனை அதிர்ந்து கிட்டின கிட்டி அவ் இரு படைஞரும்

களம் சிறந்திட வஞ்சினம் கொடு கை வகுத்து அமர்  செய்வர் ஆல்.   

 

2395.    

வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல்

கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில்  காசி தன்னில்

பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி

புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.

 

2640.    

அடி பணிந்து ஏத்தினானை அருள் சுரந்து அசையு மின்னுக்

கொடி அணி மனையில் போக்கிக் கோமன வல்லியோடும்

உடன் உறை புலவரோடு ஒல்லை தன் கோயில் புக்கான்

வட திரு ஆல வாயில்  வந்து வீற்று இருந்த வள்ளல்.           

 

2660.    

சூழும் வார் திரை வையை அம் துறை கெழு நாட்டுள்

கீழையார் கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர்

ஆழ நீள் கரும் கழி அகழ் வளைந்து கார் அளைந்த

தாழை மூது எயில்  உடுத்தது ஓர் தண் துறைப் பாக்கம்.               

 

2799.    

அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் செழியன் வாயில்

தெரி கலை அமைச்சர் ஏற்றைச் தேசிக வடிவத்து தீண்டி

வரிகழல் சூட்டி ஆண்ட வண்ணம் இவ் வண்ணம் ஐயன்

நரிகளைப் பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம்.

 

2858.    

துன்னும் இன்னிய முழக்கமும் துரகத ஒலியும்

அன்ன வீரர் வாய் அரவமும் திசை செவிடு அடைப்பக்

கன்னி மா மதில்  சூழ் கடி நகர்க் கரைக் காதம்

என்ன எய்தினான் மறைப் பரிப் பாகன் அவ் எல்லை.

 

2860.    

மன்னவன் நெறி கோட மந்திரர் அடல் ஏறே

பன்னிற எழு முந்நீர்ப் பரவைகள் வருமா போல்

துன்னின வருகின்ற துரகதம் உள எல்லாம்

பொன் எயில் மணிவாயில்  புகுவன இது போதில்.           

 

2863.    

ஏந்து அரி அணை நீங்கி எழுதிய தலை வாயில்

போந்து அருகு ஒளிர் மாடம் புகுந்து அரி அணை மேவிக்

காந்தளின் விரல் நல்லார் கவரிகள் புடை வீச

ஆய்ந்தவர் புறம் சூழ வரு பரி வரவேற்பான்.

 

2946.    

கிட்டி ஓடினர் வெருட்டு வோர் கீழ் விழக் கடித்துத்

தட்டி ஓடுவ சில எதிர் தடுப்பவர் அடிக் கீழ்

ஒட்டி ஓடுவ சில கிடந்து ஊளை இட்டு இரங்கும்

குட்டியோடு அணைத்து எயில்  இறக் குதிப்பன சிலவே.              

 

2957.    

கங்குல் எல்லை காணிய நகர் கண் விழித்து ஆங்கு

மங்குல் தோய் பெரு வாயில்கள்  திறந்தலும் மாறா

தெங்கும் ஈண்டிய நரி எலாம் இம் என ஓடிப்

பொங்கு கார் இருள் துணி எனப் போயின கானம்.            

 

2983.    

கல் என்று அதிர் சும்மைப் புனல் கடி மா மதில்  புறம்  போய்

இல்லங்களும் சிறு துச்சிலும் மறித்திட்டு இரும் கடல்  வாய்ச்

செல்லும் கல நாவாய் பல திமில் போல் சுமந்து ஏகிப்
புல்லும் புரிசையும் தள்ளி உள் புகுகின்றதை அன்றே.

 

3024.    

ஆங்கு அவள் அப்போது அட்ட சிற்றுணவு அளித்தாள்  ஐயர்

வாங்கி அங்கு கையும் நாவும் கனல் எழ வாயில்  பெய்து

பாங்கு இரு கொடிறும் ஒற்றிப் பதம் உறப் பருகிக்  கொண்டு

நீங்கி முன் போல போந்து நெடும் கரை அடைக்கல் உற்றார்

 

3162.    

வாயில்  எங்கணும் தூபமும் மங்கல விளக்கும்

தோய கும்பமும் கொடிகளும் சுண்ணமும் துவன்றச்

சேய காகள ஒலி மன்னன் செவிப் புலன் சுவைப்பக்

கோயில் எய்தினார் அமணர் தம் கோளரி அனையார்.  

 

 

பாடல்கள் – தமிழ் இணையக் கல்விக் கழகம் http://www.tamilvu.org/library



[1] திருவிளையாடல் புராணம்  49  திருவாலவாயான படலம்

[2] திருவிளையாடல் புராணம் பாடல் எண் 2345


--
அகழி எயில் மதில் வாயில் என்ற சொற்கள் அடங்கிய பாடல்கள்.docx

kanmani tamil

unread,
Oct 3, 2017, 5:33:26 AM10/3/17
to mint...@googlegroups.com, Kalai Email, thiruppuvanam, Pirama Dr Palanichamy FFE, Tharakai Editor, naga rethinam
வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம் ?

மின் தமிழ் மேலாளர்களுக்கு வணக்கம். 4 ஆண்டுகளுக்கு முன்னரே முனைவர் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி நான் இக்குழுமத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தாலும் இப்போது தான் பிற உறுப்பினர்களோடு மடலாட முனைகிறேன். எனக்கு குழுமத்தின் விதிமுறைகள் தெரியாது. எனினும் என் கருத்துக்களை தெரிவிக்க ஆவல்.

           பாண்டியன் கட்டிய கோட்டையை அவனது வம்சத்தில் பிறந்த சுந்தரபாண்டியனின் தாயாதிச்சண்டையே அழித்துவிட்டது. தம்பி வீரபாண்டியன் தந்தையின் ஆசைநாயகிக்கு பிறந்தவன்.ஆதலால் அவனுக்கு ராச்சியத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்று மனக்காய்ச்சல் கொண்டு டில்லி பாதுஷாவிடம் சென்று முறையிட்டு உதவி கேட்டவன் சுந்தரபாண்டியன் .இசுலாமியப்படை வழியெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு வந்ததைக்கண்டு மிரண்ட சுந்தரபாண்டியன் கஜானாவை காலி செய்து விட்டு காட்டிற்குள் சென்று ஒளிந்து கொன்டான் .பாண்டியநாட்டு செல்வவளத்தைப் பற்றி கேள்விப்பட்டு எதிர்பார்ப்புடன் வந்த இசுலாமியப்படை பொதுமக்களை கொள்ளையடித்தது. அப்போது வீரபாண்டியன் தான் துணிச்சலோடு எதிர்த்துப்போரிட்டான். ருசிகண்டு திரும்பிய இசுலாமியப்படை இரண்டாம் முறை முயன்றது .மீண்டும் சுந்தரபாண்டியன் ஒளிந்துகொள்ள பொதுமக்களோடு சேர்ந்து போரிட்டு விரட்டினான் வீரபாண்டியன் .இப்படி மூன்றுமுறை கொள்ளையடித்த இசுலாமியப்படையால் பாண்டியர்காலக்கோட்டை மிகவும் சிதிலமடைந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத்  துறைத்தலைவர் ராஜய்யன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இந்த வரலாற்றை உரைக்கிறது.

             கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்ட கோட்டை கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால் கட்டப்பட்டது. இடைக்கால 2ம் பாண்டியப்பேரரசுக்காலக்கோட்டை ஆவணிமூல வீதிகளுக்கும் மாசி வீதிகளுக்கும் இடையில் இருந்தது. அக்கோட்டையின் அகழி மேல் உருவான தெருக்கள் பாண்டியன் அகில் சந்து, பள்ள தெரு, என்ற பெயர்களில் வழங்குகின்றன. மதுரைநகரத் தெருக்கள் என்ற பெயரில் ஆய்வு செய்த ஜே.பாத்திமா அவர்கள் தம் ஆய்வேட்டில் இக்கருத்தை நிறுவுகிறார். 

             இவர் மின்தமிழின்  மூத்த உறுப்பினர் ராஜம் அம்மாவுடன் பாத்திமா கல்லூரியில் பணி ஆற்றியவர். நான் அவரகள் இருவருக்கும் மாணவி.

நன்றி 

கண்மணி 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Oct 3, 2017, 5:38:40 AM10/3/17
to மின்தமிழ், Kalai Email, Pirama Dr Palanichamy FFE, naga rethinam, Subashini Kanagasundaram, rajam
2017-10-03 11:33 GMT+02:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம் ?

மின் தமிழ் மேலாளர்களுக்கு வணக்கம். 4 ஆண்டுகளுக்கு முன்னரே முனைவர் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி நான் இக்குழுமத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தாலும் இப்போது தான் பிற உறுப்பினர்களோடு மடலாட முனைகிறேன். எனக்கு குழுமத்தின் விதிமுறைகள் தெரியாது. எனினும் என் கருத்துக்களை தெரிவிக்க ஆவல்.

           பாண்டியன் கட்டிய கோட்டையை அவனது வம்சத்தில் பிறந்த சுந்தரபாண்டியனின் தாயாதிச்சண்டையே அழித்துவிட்டது. தம்பி வீரபாண்டியன் தந்தையின் ஆசைநாயகிக்கு பிறந்தவன்.ஆதலால் அவனுக்கு ராச்சியத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்று மனக்காய்ச்சல் கொண்டு டில்லி பாதுஷாவிடம் சென்று முறையிட்டு உதவி கேட்டவன் சுந்தரபாண்டியன் .இசுலாமியப்படை வழியெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு வந்ததைக்கண்டு மிரண்ட சுந்தரபாண்டியன் கஜானாவை காலி செய்து விட்டு காட்டிற்குள் சென்று ஒளிந்து கொன்டான் .பாண்டியநாட்டு செல்வவளத்தைப் பற்றி கேள்விப்பட்டு எதிர்பார்ப்புடன் வந்த இசுலாமியப்படை பொதுமக்களை கொள்ளையடித்தது. அப்போது வீரபாண்டியன் தான் துணிச்சலோடு எதிர்த்துப்போரிட்டான். ருசிகண்டு திரும்பிய இசுலாமியப்படை இரண்டாம் முறை முயன்றது .மீண்டும் சுந்தரபாண்டியன் ஒளிந்துகொள்ள பொதுமக்களோடு சேர்ந்து போரிட்டு விரட்டினான் வீரபாண்டியன் .இப்படி மூன்றுமுறை கொள்ளையடித்த இசுலாமியப்படையால் பாண்டியர்காலக்கோட்டை மிகவும் சிதிலமடைந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத்  துறைத்தலைவர் ராஜய்யன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இந்த வரலாற்றை உரைக்கிறது.

             கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்ட கோட்டை கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால் கட்டப்பட்டது. இடைக்கால 2ம் பாண்டியப்பேரரசுக்காலக்கோட்டை ஆவணிமூல வீதிகளுக்கும் மாசி வீதிகளுக்கும் இடையில் இருந்தது. அக்கோட்டையின் அகழி மேல் உருவான தெருக்கள் பாண்டியன் அகில் சந்து, பள்ள தெரு, என்ற பெயர்களில் வழங்குகின்றன. மதுரைநகரத் தெருக்கள் என்ற பெயரில் ஆய்வு செய்த ஜே.பாத்திமா அவர்கள் தம் ஆய்வேட்டில் இக்கருத்தை நிறுவுகிறார். 

             இவர் மின்தமிழின்  மூத்த உறுப்பினர் ராஜம் அம்மாவுடன் பாத்திமா கல்லூரியில் பணி ஆற்றியவர். நான் அவரகள் இருவருக்கும் மாணவி.

நன்றி 

கண்மணி 

நல்வரவு.

தயங்காது பங்கு கொள்ளுங்கள். வரலாற்றுச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது இந்த குழுமத்தின் முக்கிய நோக்கம். ஏனைய செய்திகளும் பகிர்ந்து கொள்ளலாம். 
தாங்கள் தயங்காது கருத்துக்களைப் பகிரலாம். 

​ராஜம் அம்மா  பாத்திமா அவர்கள் பற்றி  என்னிடம் சில முறை சொல்லியிருக்கின்றார்கள். ​நீங்கள் அவரது முழு ஆய்வுக்கட்டுரையயும் இங்கு பதிவிடலாம். வரவேற்கின்றோம்.

அன்புடன்
சுபா




--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 3, 2017, 7:58:14 AM10/3/17
to mintamil, Kalai Email, naga rethinam, Tharakai Editor, thiruppuvanam, Pirama Dr Palanichamy FFE

வணக்கம்.
தங்களது வரவு நல்வரவு ஆகுக.
மதுரை வரலாற்று ஆய்வுகளைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

On 03-Oct-2017 3:03 PM, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:
>
> வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம் ?
>
> மின் தமிழ் மேலாளர்களுக்கு வணக்கம். 4 ஆண்டுகளுக்கு முன்னரே முனைவர் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி நான் இக்குழுமத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தாலும் இப்போது தான் பிற உறுப்பினர்களோடு மடலாட முனைகிறேன். எனக்கு குழுமத்தின் விதிமுறைகள் தெரியாது. எனினும் என் கருத்துக்களை தெரிவிக்க ஆவல்.
>
>            பாண்டியன் கட்டிய கோட்டையை அவனது வம்சத்தில் பிறந்த சுந்தரபாண்டியனின் தாயாதிச்சண்டையே அழித்துவிட்டது. தம்பி வீரபாண்டியன் தந்தையின் ஆசைநாயகிக்கு பிறந்தவன்.ஆதலால் அவனுக்கு ராச்சியத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்று மனக்காய்ச்சல் கொண்டு டில்லி பாதுஷாவிடம் சென்று முறையிட்டு உதவி கேட்டவன் சுந்தரபாண்டியன் .இசுலாமியப்படை வழியெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு வந்ததைக்கண்டு மிரண்ட சுந்தரபாண்டியன் கஜானாவை காலி செய்து விட்டு காட்டிற்குள் சென்று ஒளிந்து கொன்டான் .பாண்டியநாட்டு செல்வவளத்தைப் பற்றி கேள்விப்பட்டு எதிர்பார்ப்புடன் வந்த இசுலாமியப்படை பொதுமக்களை கொள்ளையடித்தது. அப்போது வீரபாண்டியன் தான் துணிச்சலோடு எதிர்த்துப்போரிட்டான். ருசிகண்டு திரும்பிய இசுலாமியப்படை இரண்டாம் முறை முயன்றது .மீண்டும் சுந்தரபாண்டியன் ஒளிந்துகொள்ள பொதுமக்களோடு சேர்ந்து போரிட்டு விரட்டினான் வீரபாண்டியன் .இப்படி மூன்றுமுறை கொள்ளையடித்த இசுலாமியப்படையால் பாண்டியர்காலக்கோட்டை மிகவும் சிதிலமடைந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத்  துறைத்தலைவர் ராஜய்யன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இந்த வரலாற்றை உரைக்கிறது.
>
>              

ஒரு சிறு திருத்தம். சரியா? எனக் கூறுங்கள்.

"கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால்

புனர்நிர்மாணம் செய்து

கட்டப்பட்ட கோட்டை
கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது."

இடைக்கால 2ம் பாண்டியப்பேரரசுக்காலக்கோட்டை ஆவணிமூல வீதிகளுக்கும் மாசி வீதிகளுக்கும் இடையில் இருந்தது. அக்கோட்டையின் அகழி மேல் உருவான தெருக்கள் பாண்டியன் அகில் சந்து, பள்ள தெரு, என்ற பெயர்களில் வழங்குகின்றன. மதுரைநகரத் தெருக்கள் என்ற பெயரில் ஆய்வு செய்த ஜே.பாத்திமா அவர்கள் தம் ஆய்வேட்டில் இக்கருத்தை நிறுவுகிறார். 
>
>              இவர் மின்தமிழின்  மூத்த உறுப்பினர் ராஜம் அம்மாவுடன் பாத்திமா கல்லூரியில் பணி ஆற்றியவர். நான் அவரகள் இருவருக்கும் மாணவி.
>
> நன்றி 
>
> கண்மணி 
>
>
> 2017-09-26 13:29 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> மதுரை அகழியும் கோட்டையும்
>>
>>
>> ​
>>

>> பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது.  மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில்  வணிகன் ஒருவன்  அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான்.  மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான்.  தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான்.
>>
>> ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான்.  ஆமைகளும் மீன்களும் முதலைகளும் நிறைந்த அகழியை அமைத்தான்.
>>
>> வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம்?
>>
>> பாண்டியர் ஆட்சிக்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன.  1757ஆம் ஆண்டு வரைபடத்தில்  மதுரையின் அகழியும் கோட்டையும் காட்டப்பெற்றுள்ளன. 
>>
>>
>> ​
>>

>> 1843 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர்.  மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன.  (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு). 
>>
>> மதுரையில் சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்டிருந்த கோட்டையும் அகழியும் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டது போகத் தற்போது  எஞ்சி  இருப்பது சுமார் 50 அகலம் கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே ஆகும்.  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது.  கோட்டையின் எஞ்சிய பகுதி புதுப்பிக்கப்பெற்று நினைவுச் சின்னமாக உள்ளது.
>>
>>
>> ​
>>

> ...

Pandiyaraja

unread,
Oct 3, 2017, 10:16:19 AM10/3/17
to மின்தமிழ்
திரு.காளைராஜன் ஐயா அவர்களுக்கு,
மதுரையில் நாயக்கர்கள் கட்டிய கோட்டை இன்றைய மாசி வீதிகளுக்கும் வெளியில். அதுதான் சிதிலமடைந்தபின் ஆங்கிலேயரால் இடிக்கப்பட்டது. ஆனால் பாண்டியர் காலக் கோட்டை இருந்தது மாசி வீதிகளுக்கும் உள்ளே, அதாவது, ஆவணிவீதிகளை ஒட்டி. கிழக்காவணிவீதிமூல வீதியில் இன்றைக்கும் பாண்டியன் கோட்டையின் நுழைவாயிலைக் காணலாம். மேற்குப்பக்கம், மேல ஆவணிமூல வீதியை அடுத்து, மேலமாசி வீதிக்கு முன்னரேயே இன்றைக்கும் இருக்கிறது மேலப் பாண்டியன் அகிழ் தெரு. அகழித்தெருதான் இவ்வாறு வழங்குகிறது. அகழி அங்கிருந்தால் கோட்டை இன்னும் உள்ளே தள்ளி இருந்திருக்கும். மொத்தத்தில், சங்ககாலத்திலிருந்து மதுரை இன்றைய நான்கு ஆவணி மூலவீதிகளுக்குள்தான் இருந்திருக்கிறது. மதுரைக் காஞ்சியில் கூறப்படும் மதுரை இதுதான். இதனைப் படங்களுடன், மல்லல் மூதூர் மதுரை என்ற என் மின் தமிழ் தொடர்கட்டுரையில் வ்விளக்கியிருக்கிறேன்.
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 4, 2017, 5:52:22 PM10/4/17
to mintamil
வணக்கம் ஐயா.

2017-10-03 19:46 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
திரு.காளைராஜன் ஐயா அவர்களுக்கு,
காளை என்று அழைத்தால் மகிழ்ச்சி அடைவேன் ஐயா.
 
மதுரையில் நாயக்கர்கள் கட்டிய கோட்டை இன்றைய மாசி வீதிகளுக்கும் வெளியில். அதுதான் சிதிலமடைந்தபின் ஆங்கிலேயரால் இடிக்கப்பட்டது. ஆனால் பாண்டியர் காலக் கோட்டை இருந்தது மாசி வீதிகளுக்கும் உள்ளே, அதாவது, ஆவணிவீதிகளை ஒட்டி. கிழக்காவணிவீதிமூல வீதியில் இன்றைக்கும் பாண்டியன் கோட்டையின் நுழைவாயிலைக் காணலாம்.
அவைகளைக் கோட்டையின் நுழைவாயில் என எவ்வாறு கருதுவது,
மேலும் 
அந்த இடத்தில் மிகப்பெரிய குளம் இருந்தது என்றும், தடாதகையின் தாயார் நீராடுவதற்காக அது உருவாக்கப்பட்டது என்றும் புராணத்தில் படித்த நினைவு.  அந்தப் பாடல்களை மீண்டும் படித்துவிட்டு மேற்கொள்களுடன் எழுதுகிறேன் ஐயா.
 
மேற்குப்பக்கம், மேல ஆவணிமூல வீதியை அடுத்து, மேலமாசி வீதிக்கு முன்னரேயே இன்றைக்கும் இருக்கிறது மேலப் பாண்டியன் அகிழ் தெரு. அகழித்தெருதான் இவ்வாறு வழங்குகிறது.
அகழிதான் அகில் (சந்தனம்) என்று அழைக்கப்படுகிறது என்று எவ்வாறு கொள்வது.  அகில்தெரு என்பது பாண்டியன் காலத்தில் உண்டான பெயர்.  அப்போது தவறான பெயரால் அழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன் ஐயா.

அகழி அங்கிருந்தால் கோட்டை இன்னும் உள்ளே தள்ளி இருந்திருக்கும். மொத்தத்தில், சங்ககாலத்திலிருந்து மதுரை இன்றைய நான்கு ஆவணி மூலவீதிகளுக்குள்தான் இருந்திருக்கிறது. மதுரைக் காஞ்சியில் கூறப்படும் மதுரை இதுதான். இதனைப் படங்களுடன், மல்லல் மூதூர் மதுரை என்ற என் மின் தமிழ் தொடர்கட்டுரையில் வ்விளக்கியிருக்கிறேன்.
ப.பாண்டியராஜா

ஆமாம் ஐயா,
தாங்களின் மல்லல் மூதூர் படித்துள்ளேன்.
குறித்தும் வைத்துள்ளேன்.

நான், ஒருமுறை தங்களது இழைமுழுவதையும் மீண்டும் வாசித்திடவும், திருவிளையாடற் புராணத்தில் உள்ள பாடல்களைப் படித்திடவும், மீண்டும் ஒருமுறை மதுரை சென்று நேரில்பார்த்து வரவும் வேண்டும்.

ஐயா, சிறிது காலஅவகாசம் வேண்டுகிறேன்.

அன்புடன்
காளை

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 4, 2017, 6:04:33 PM10/4/17
to mintamil
தடாதகை கோயில், காஞ்சனமாலை குளம் (நந்தி வைக்கப்பட்டுள்ளது), தேரோடும் வீதிகளையும் மீண்டும் ஒருமுறை சென்று பார்க்க வேண்டும்.

Pandiyaraja

unread,
Oct 4, 2017, 11:25:41 PM10/4/17
to மின்தமிழ்
"அந்த இடத்தில் மிகப்பெரிய குளம் இருந்தது என்றும், தடாதகையின் தாயார் நீராடுவதற்காக அது உருவாக்கப்பட்டது என்றும் புராணத்தில் படித்த நினைவு.  அந்தப் பாடல்களை மீண்டும் படித்துவிட்டு மேற்கொள்களுடன் எழுதுகிறேன் ஐயா.""
தாங்கள் குறிப்பிடுவது எழுகடல்தெருவில் உள்ள நுழைவாயில். அதுதான் சங்க காலப் பாண்டியர் காலத்துப் பெருவாயிலாக இருந்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம். அந்த இடத்தில் ஒரு பெரிய கோபுரத்தைக் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சி பாதியில் கைவிடப்பட்டு இன்றும் வெறும் தூண்கள் மட்டும் நிற்கின்றன. அதனை ஒட்டி, அண்மைக் காலம் வரை ஒரு குளம் இருந்ததாகச் சொல்வர். அது நேரே சென்றால் உள்ளே சுவாமி சந்நிதிக்குச் செல்லும். அதுதான் சங்ககாலப் பாண்டியரின் அரியணை இருந்த இடம் என்பதுவும் என் எண்ணம்.
இந்த வாயிலின் வழியாகத்தான் கண்ணகியும் கோவலனும் மதுரைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
ப.பாண்டியராஜா

iraamaki

unread,
Oct 5, 2017, 1:55:07 AM10/5/17
to mint...@googlegroups.com
ஐயா,
 
அருள்கூர்ந்து இப்படி நான் சொல்வதை மன்னியுங்கள். இற்றை மதுரைக்கும் சங்ககாலத்திற்கும் கொஞ்சமும் தொடர்பில்லை. இற்றை மதுரை கடுங்கோனுக்கு அப்புறம் எழுந்தது. அருள்கூர்ந்து “காவற் கோட்டம்” புதினம் படியுங்கள். பின்னால் மதுரை வளர்ந்த வளர்ச்சி அதில் தெரியும்.
 
கீழடியை இவ்வளவு ஆர்வமாய்ப் பலரும் தேடுவது ”சங்ககாலப் பழமதுரையைக் கண்டுவிட்டோமா?” என்ற ஐயத்தால் தான்.
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja

unread,
Oct 5, 2017, 4:58:39 AM10/5/17
to மின்தமிழ்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
இன்றைய மதுரைதான் சங்ககால மதுரை என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. களப்பிரர் காலத்தில் கைவிடப்பட்டு, பின்னர் பிற்காலப் பாண்டியர்களால் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. பத்துப்பாட்டு நூலான மதுரைக் காஞ்சியும், இளங்கோவடிகள் கூறும் மதுரையும் இன்றைய மதுரையை அப்படியே படம்பிடித்துக்காட்டுகின்றன. பெரும்புலவர் இராசமாணிக்கனாரே சிறிது தவ்றிழைத்திருக்கிறார் என்பது என் கருத்து.
ப.பாண்டியராஜா


On Thursday, October 5, 2017 at 11:25:07 AM UTC+5:30, இராம.கி wrote:
ஐயா,
 
அருள்கூர்ந்து இப்படி நான் சொல்வதை மன்னியுங்கள். இற்றை மதுரைக்கும் சங்ககாலத்திற்கும் கொஞ்சமும் தொடர்பில்லை. இற்றை மதுரை கடுங்கோனுக்கு அப்புறம் எழுந்தது. அருள்கூர்ந்து “காவற் கோட்டம்” புதினம் படியுங்கள். பின்னால் மதுரை வளர்ந்த வளர்ச்சி அதில் தெரியும்.
 
கீழடியை இவ்வளவு ஆர்வமாய்ப் பலரும் தேடுவது ”சங்ககாலப் பழமதுரையைக் கண்டுவிட்டோமா?” என்ற ஐயத்தால் தான்.
 
அன்புடன்,
இராம.கி.
 

kanmani tamil

unread,
Oct 5, 2017, 5:17:58 AM10/5/17
to mint...@googlegroups.com
I 've gone through your discussions  using my smartphone. let me take part in the same on 7th October as soon as I own one piece.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 5, 2017, 9:13:44 AM10/5/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
2017-10-05 2:17 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
I 've gone through your discussions  using my smartphone. let me take part in the same on 7th October as soon as I own one piece.


Thanks, Kanmani. Also, a help of possible. Please talk with Mrs. J. Fatima, your Tamil teacher, & if possible get a PDF file
of her "Madurai Nakarat TerukkaL". These research works remain unread by most Tamils & those interested in Tamil worldwide.
It is like the famous statement of BharatidAsan: "kOrikkaiyarRuk kiDakkutaNNE, vEriR pazutta palA".

I am also certain that Peru-MaNaluur (KeezhaDi) is not Old Madurai at all. Two different places entirely.
Once I was talking about Peru-MaNaluur with the Tiruchy Ophthalmologist, M. R. Kalaikkovan,
researcher in Chola art and epgraphy. Many info on the Keezhadi history has not appeared in Tamil media at all.
He asked me to write all this in VaralaaRu.com web site. Has to do that, may be in some weeks.

There are some hints given by the great Tamil scholar, V. Kanakasabai, where the Old Madurai was.
He wrote about it in 1904, some 113 years ago.
On Saaliyuur (UuNuur + Marungur patnam), he explained it as today's AzakankuLam. 
please see this thread,

N. Ganesan

rajam

unread,
Oct 5, 2017, 12:15:51 PM10/5/17
to Suba, மின்தமிழ், Kalai Email, Pirama Dr Palanichamy FFE, naga rethinam
On Oct 3, 2017, at 2:38 AM, Suba <ksuba...@gmail.com> wrote:



2017-10-03 11:33 GMT+02:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம் ?

மின் தமிழ் மேலாளர்களுக்கு வணக்கம். 4 ஆண்டுகளுக்கு முன்னரே முனைவர் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி நான் இக்குழுமத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தாலும் இப்போது தான் பிற உறுப்பினர்களோடு மடலாட முனைகிறேன். எனக்கு குழுமத்தின் விதிமுறைகள் தெரியாது. எனினும் என் கருத்துக்களை தெரிவிக்க ஆவல்.

           பாண்டியன் கட்டிய கோட்டையை அவனது வம்சத்தில் பிறந்த சுந்தரபாண்டியனின் தாயாதிச்சண்டையே அழித்துவிட்டது. தம்பி வீரபாண்டியன் தந்தையின் ஆசைநாயகிக்கு பிறந்தவன்.ஆதலால் அவனுக்கு ராச்சியத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்று மனக்காய்ச்சல் கொண்டு டில்லி பாதுஷாவிடம் சென்று முறையிட்டு உதவி கேட்டவன் சுந்தரபாண்டியன் .இசுலாமியப்படை வழியெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு வந்ததைக்கண்டு மிரண்ட சுந்தரபாண்டியன் கஜானாவை காலி செய்து விட்டு காட்டிற்குள் சென்று ஒளிந்து கொன்டான் .பாண்டியநாட்டு செல்வவளத்தைப் பற்றி கேள்விப்பட்டு எதிர்பார்ப்புடன் வந்த இசுலாமியப்படை பொதுமக்களை கொள்ளையடித்தது. அப்போது வீரபாண்டியன் தான் துணிச்சலோடு எதிர்த்துப்போரிட்டான். ருசிகண்டு திரும்பிய இசுலாமியப்படை இரண்டாம் முறை முயன்றது .மீண்டும் சுந்தரபாண்டியன் ஒளிந்துகொள்ள பொதுமக்களோடு சேர்ந்து போரிட்டு விரட்டினான் வீரபாண்டியன் .இப்படி மூன்றுமுறை கொள்ளையடித்த இசுலாமியப்படையால் பாண்டியர்காலக்கோட்டை மிகவும் சிதிலமடைந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத்  துறைத்தலைவர் ராஜய்யன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இந்த வரலாற்றை உரைக்கிறது.

             கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்ட கோட்டை கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால் கட்டப்பட்டது. இடைக்கால 2ம் பாண்டியப்பேரரசுக்காலக்கோட்டை ஆவணிமூல வீதிகளுக்கும் மாசி வீதிகளுக்கும் இடையில் இருந்தது. அக்கோட்டையின் அகழி மேல் உருவான தெருக்கள் பாண்டியன் அகில் சந்து, பள்ள தெரு, என்ற பெயர்களில் வழங்குகின்றன. மதுரைநகரத் தெருக்கள் என்ற பெயரில் ஆய்வு செய்த ஜே.பாத்திமா அவர்கள் தம் ஆய்வேட்டில் இக்கருத்தை நிறுவுகிறார். 

             இவர் மின்தமிழின்  மூத்த உறுப்பினர் ராஜம் அம்மாவுடன் பாத்திமா கல்லூரியில் பணி ஆற்றியவர். நான் அவரகள் இருவருக்கும் மாணவி. 

வாங்க கண்மணி! மின்தமிழ் ஒரு கருத்துக்களஞ்சியமாக உருவாகிவருகிறது; அதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளவும். உங்கள் கருத்துகளைத் தயங்காமல் பகிர்ந்துகொள்ளவும். ஆனால், மக்களுடன் உரையாடிப் பழகும்போது சற்றே கவனமாக இருப்பது நல்லது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல, வெளுத்ததெல்லாம் பாலல்ல. பாத்திமாக்கல்லூரி போன்ற கோட்டைக்குள் வளர்ந்துவிட்ட நமக்கு வெளியுலகம் பற்றிச் சரிவரத் தெரிவதில்லை.

மற்றபடி …

ஜே பாத்திமா எனக்கு மாணவி. நல்ல கூர்த்த அறிவு. அறிவோடு என்பால் அன்பும் மிகுதி. நான் 1975-இல் கல்லூரியிலிருந்து கிளம்பி அமெரிக்கா வந்துவிட்டேன். அப்போது ஜே.பாத்திமா இளநிலை ஆசிரியையாகச் (tutor) சேர்ந்திருந்தாரா என்று நினைவில்லை. (எனக்கு வயதாகிறதல்லவா!) பிறகு கல்லூரித் துணைமுதல்வர் நிலைக்கு உயர்ந்துவிட்டதாகக் கேள்வி. 

பல மாணவியர் தொடர்பில் உள்ளனர். உடன்பணியாற்றிய எம்.ஏ.சுசீலா, அன்புமீனாள்; மாணவியர் கமலி, விஜயம், சஃப்ரா பீகம், சி.எஸ். விசாலாட்சி  இன்னும் பலருடன் நல்ல தொடர்பு. விசாலாட்சிக்கு மாணவியாகிய முனைவர் பாரதி சங்கரராஜுலு இங்கே பெர்க்கிலிப் பல்கலைக்கழகத்தில் தமிழும் தெலுங்கும் கற்பிக்கிறார். பாத்திமா மகளிர் பலரும் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலைமையில் இருப்பதை அறிந்து எனக்கு மிகவும் மகிழ்ச்சிப்பெருமிதம்.



நன்றி 

கண்மணி 

நல்வரவு.

தயங்காது பங்கு கொள்ளுங்கள். வரலாற்றுச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது இந்த குழுமத்தின் முக்கிய நோக்கம். ஏனைய செய்திகளும் பகிர்ந்து கொள்ளலாம். 
தாங்கள் தயங்காது கருத்துக்களைப் பகிரலாம். 

​ராஜம் அம்மா  பாத்திமா அவர்கள் பற்றி  என்னிடம் சில முறை சொல்லியிருக்கின்றார்கள். ​நீங்கள் அவரது முழு ஆய்வுக்கட்டுரையயும் இங்கு பதிவிடலாம். வரவேற்கின்றோம்.

நான் உங்களிடம்  சஃப்ரா பீகம் பற்றிச் சொல்லியிருக்கிறேன், சுபா. கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். புறநானூறு முழுவதையும் உருதுவில் மொழிபெயர்த்திருக்கிறார்.

சஃப்ரா, கமலி (சிந்துப்பாடல்களில் ஆய்வு) போன்ற மாணவியரின் படைப்புகள் நூலாக வெளிவரவேண்டும். அன்புமீனாவின் ஒப்பாரிப்பாடல்கள் பற்றிய ஆய்வும் நூலாக வெளிவரவேண்டும். நானும் தூண்டிவிட்டுக்கொண்டேயிருக்கிறேன். ஆனால் அவரவருடைய வாழ்க்கைச் சிக்கல்கள் அவர்களைக் கட்டிவைத்திருக்கும் நிலை பாவம். கேட்கும்போதெல்லாம் என் மனம் குமுறும், ஆகவே … தற்காலிகமாகச் சாந்தநிலை மேற்கொண்டிருக்கிறேன்.

விட்டேற்றியாக,
ராஜம்


அன்புடன்
சுபா

 
2017-09-26 13:29 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

மதுரை அகழியும் கோட்டையும்

<மதுரை வெளிவீதி மாரட்வீதி - Copy.jpg>

பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது.  மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில்  வணிகன் ஒருவன்  அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான்.  மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான்.  தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான்.

ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான்.  ஆமைகளும் மீன்களும் முதலைகளும் நிறைந்த அகழியை அமைத்தான்.

வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம்?

பாண்டியர் ஆட்சிக்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன.  1757ஆம் ஆண்டு வரைபடத்தில்  மதுரையின் அகழியும் கோட்டையும் காட்டப்பெற்றுள்ளன. 

<Copy of TimePhoto_20170919_193736.jpg>

1843 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர்.  மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன.  (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு). 

மதுரையில் சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்டிருந்த கோட்டையும் அகழியும் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டது போகத் தற்போது  எஞ்சி  இருப்பது சுமார் 50 அகலம் கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே ஆகும்.  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது.  கோட்டையின் எஞ்சிய பகுதி புதுப்பிக்கப்பெற்று நினைவுச் சின்னமாக உள்ளது.

<download (2).jpg>

kanmani tamil

unread,
Oct 6, 2017, 7:15:19 AM10/6/17
to mint...@googlegroups.com, Suba, Kalai Email, Pirama Dr Palanichamy FFE, naga rethinam

ஒரு சிறு திருத்தம். சரியா? எனக் கூறுங்கள்.

"கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால் 

புனர்நிர்மாணம் செய்து

கட்டப்பட்ட கோட்டை
கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது."


காளைராஜன் ஐயா அவர்களூக்கு வணக்கம் .

விஸ்வநாதநாயக்கர்  பாண்டியர்காலக்கோட்டையின் புறநகர்ப் பகுதிகளை எல்லாம் உள்ளடக்கி விஸ்தாரமாக்கி பெரிய கோட்டையை மாசிவீதிகளுக்கு அப்பால் கட்டினார் .

குலசேகரபாண்டியன் கோட்டையும் அகழியும் ஏற்படுத்திய பின்னர் ஹரிஹரபுத்திரர் கோயில் ,சப்தமாதர்கோயில் ,திருமால்கோயில் ,காளிகோயில் முதலியவற்றை முறையே கிழக்கு ,தெற்கு ,மேற்கு ,வடக்கு ஆகிய திசைகளில் கட்டியதாக திருவாலவாயுடையார்கோயில் திருப்பணிமாலை பாடுவதை ஜெ.எம்.சோமசுந்தரம் பாண்டியர் பெருமாட்சி என்ற நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் .

இன்று கீழமாசிவீதியிலுள்ள ஐயனார்கோயில் பாண்டியன் கட்டிய ஹரிஹரபுத்திரர் கோயிலின் ஒரு பகுதி என்று A.V.ஜெயச்சந்திரன் தனது முனைவர்பட்ட ஆய்வேட்டில் கூறுகிறார்.இக்கோயில் இடைக்காலப் பாண்டியர் கட்டிட அமைப்பை பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது என்றும் மேற்சுட்டிய இருவரும் கூறியுள்ளனர் .

தெற்குமாசிவீதியில் இன்று நாகர விமானத்துடன் காணப்படும் சிறிய பிள்ளையார்கோயில் பாண்டியன் கட்டியசப்தமாதர் கோயிலின் எச்சம் என்றும் அது இடைக்கால கட்டிட த் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் அவர்களே கூறியுள்ளனர் .

வடக்குமாசிவீதியிலுள்ள செல்லத்தம்மன் கோயிலின் கருவறையில் கண்ணகிசிலை கையில் சிலம்புடன் காணப்பட்டாலும் சன்னதியின் முன் உள்ள அம்மனுக்கு வழிபாடு நடக்கிறது .இக்கோயிலின் கட்டிட அமைப்பும் இடைக்காலத்தைச் சேர்ந்தது என்கிறார்  A.V.ஜெயச்சந்திரன். இக்கோயிலே பாண்டியன் கட்டிய காளிகோயிலின் எச்சம் என்பது வெளிப்படை . 

பாண்டியன் கட்டிய திருமால் கோயில் கரியமாணிக்கப்பெருமாள்கோயில் என்று வழங்கி வந்தது .இன்று புனித  ரோசரி தேவாலயமாக மாற்றம் பெற்றுள்ளது என்கிறார் மதுரைக்கோயில் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் அவரகள் .1979ல் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை பதிப்பித்துள்ள இவர் சில ஆண்டுகளுக்கு முன்புவரை புடைப்புச்சிற்பங்களுடன் கூடிய கருங்கல் தூண்கள் சில ஒவ்வொன்றாக அகற்றப்பட்டன என்கிறார் .மாலிக்காபூர் படையெடுப்பினால் சிதைந்த இக்கோயிலிலிருந்து சில தூண்களை திருமலைநாயக்கர் மீனாட்சியம்மன் கோயில் கிளிமண்டபத்தில் நிறுத்தினார் என்று அகிபரந்தாமனார் மதுரை நாயக்கர் வரலாறு நூலில் கூறியுள்ளார் .

பாண்டியன் கோட்டைக்கு வெளியே கட்டிய 4கோயில்களையும் கோட்டைக்கு உள்ளே அமையும்படியாக விஸ்வநாதநாயக்கர் கோட்டை கட்டினார்.

கண்மணி 

kanmani tamil

unread,
Oct 6, 2017, 7:32:05 AM10/6/17
to mint...@googlegroups.com
, ஆவணிவீதிகளை ஒட்டி. கிழக்காவணிவீதிமூல வீதியில் இன்றைக்கும் பாண்டியன் கோட்டையின் நுழைவாயிலைக் காணலாம்.


பாண்டியராஜன் ஐயா அவர்களுக்கு வணக்கம் .அம்மன் சந்நிதிக்கு எதிரே கீழ ஆவணிமூலவீதிக்கும் கீழமாசிவீதிக்கும் இடையே விட்டவாசல் என்ற பெயரில் வழங்கும் கல்லாலான உயர்ந்த வாயில் அமைப்பபில் பாண்டியர்காலக் கோட்டையின் எஞ்சிய பகுதி என்று பதிப்பு க்கல்வெட்டு இருப்பதாக வ.கந்தசாமி மதுரை வரலாறும் பண்பாடும் என்ற நூலில் கூறியுள்ளார் .
கண்மணி 

2017-10-03 19:46 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

--

kanmani tamil

unread,
Oct 6, 2017, 8:03:45 AM10/6/17
to mint...@googlegroups.com, Suba, Kalai Email, Pirama Dr Palanichamy FFE, naga rethinam
ம்திப்பிற்குரியராஜம் அம்மா அவர்களுக்கு வணக்கம் .
1974ல் உங்களிடம் மொழியியல் படித்த மாணவி முதல் பருவம் ஒலியநியல் பாடம் சொல்லிக் கொடுத்தீர்கள் .2ம் பருவத்தில் 4வகுப்புகள் மட்டுமே வந்தீர்கள் .பின்னர் அமெரிக்காவுக்கு பறந்து விட்டீர்கள் .இத்தனை ஆண்டுகள் கழித்து உங்களோடு மடலாடுவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது . உலகம் ஓடும் வேகத்திற்கு ஈடு கொடுத்து நீங்களும் மேலேறி இருக்கிறீரகள் .நான் இல்லற சாகரத்தில் மூழ்கி இருந்த போது உலகம் என்னை விட்டுவிட்டு ரொம்ப தூரம் சென்று விட்டது இப்போது தான் விட்டு விலகி எழுத்துஎழுத்தாக தட்டச்சு செய்கிறேன் உங்கள் அன்பான மடல் செய்திகள் அனைத்தும் என்னை சரியான பாதையில் வழி நடத்தும் .நன்றி 
கண்மணி 

N. Ganesan

unread,
Oct 6, 2017, 8:50:46 AM10/6/17
to மின்தமிழ், vallamai
2017-10-06 4:31 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
, ஆவணிவீதிகளை ஒட்டி. கிழக்காவணிவீதிமூல வீதியில் இன்றைக்கும் பாண்டியன் கோட்டையின் நுழைவாயிலைக் காணலாம்.


பாண்டியராஜன் ஐயா அவர்களுக்கு வணக்கம் .அம்மன் சந்நிதிக்கு எதிரே கீழ ஆவணிமூலவீதிக்கும் கீழமாசிவீதிக்கும் இடையே விட்டவாசல் என்ற பெயரில் வழங்கும் கல்லாலான உயர்ந்த வாயில் அமைப்பபில் பாண்டியர்காலக் கோட்டையின் எஞ்சிய பகுதி என்று பதிப்பு க்கல்வெட்டு இருப்பதாக வ.கந்தசாமி மதுரை வரலாறும் பண்பாடும் என்ற நூலில் கூறியுள்ளார் .
கண்மணி 


வ. கந்தசாமி பழனி கல்லூரியில் இருந்தாரே.

அவரது நூலொன்று இணையப் பல்கலையில் உள்ளது:

தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் 
பண்பாட்டுச் சின்னங்களும்
 
V.கந்தசாமி,எம்.ஏ.எம்.எட்.

தேவகுஞ்சரியின் மதுரை பற்றிய நூல் படித்திருக்கிறீர்களா?

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 6, 2017, 9:11:36 AM10/6/17
to mintamil, Suba, Kalai Email, Pirama Dr Palanichamy FFE, naga rethinam, thiruppuvanam
வணக்கம்.

மதுரையின் வீதிகள் பற்றிய நல்லதொரு பதிவை வழங்கி யுள்ளீர்கள்.  மிக்க நன்றி.


2017-10-06 16:45 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

ஒரு சிறு திருத்தம். சரியா? எனக் கூறுங்கள்.

"கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால் 
புனர்நிர்மாணம் செய்து
கட்டப்பட்ட கோட்டை
கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது."


காளைராஜன் ஐயா அவர்களூக்கு வணக்கம் .

விஸ்வநாதநாயக்கர்  பாண்டியர்காலக்கோட்டையின் புறநகர்ப் பகுதிகளை எல்லாம் உள்ளடக்கி விஸ்தாரமாக்கி பெரிய கோட்டையை மாசிவீதிகளுக்கு அப்பால் கட்டினார் .

ஐயா பாண்டியராஜன் அவர்கள் சிலப்பதிகாரத்தின் வழியாக மதுரை வீதிகளை  அவரது மல்லல்மூதூர் இழையில் விரிவாக எழுதியுள்ளார்கள்.   அந்த இழையை வரிவிடாமல் அவசியம் படிக்க வேண்டும்.

ஐயா இராம.கி அவர்களும் “காவற் கோட்டம்” புதினம் படியுங்கள் எனக் கூறியுள்ளார்கள்.  எனவே காவற்கோட்டமும் படிக்க வேண்டும்.


1) “ விஸ்வநாத நாயக்கர் காலத்தில் மதுரையை சுற்றி கோட்டை கட்டப்படுகிறது. சிலப்பதிகார காலத்தில் இருந்த மதுரையிலும் சுற்று கோட்டையிருந்தது. மதுரை நகரம் தாமரைபூ வடிவத்தில் இருப்பதாகவும் அதற்கு உள்கோட்டை வெளிக்கோட்டை உண்டு என்று சாமிசிதம்பரானர் தன் நூலில் குறிப்பிடுகிறார். “  http://www.sramakrishnan.com/?p=505  என்று ஒரு குறிப்பும் படித்தேன்.  

2) 

திருவிளையாடல் பாடல் எண் 715.      


“முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில் நீந்தி

அகில் தவழ் மாட வீதி வலம்
 பட அணைவான் ஆக

நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன்

துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார்.“    

திருமணநாள் அன்று சிவபெருமான்  மதுரை வரும் போது, முதல் பெருவாயிலைக் கடந்து (அருள்மிகு ஆதிசொக்கநாதர் ஆலயம் உள்ள இடம்)  அகில்வீதியில் வலமாக வந்தான்  என்கிறது திருவிளையாடற் புராணம்.

திருவிளையாடற் புராணத்தின் அடிப்படையில் அன்னை மீனாட்சியின் ஆட்சிக் காலத்திலேயே (விசுவநாதநாயக்கர் காலத்திற்கு முன்பே (இப்போதுள்ள வெளிவீதிகளுக்கும் மாரட்வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில்) கோட்டையும் அகழியும் இருந்தன.  விசுவநாதநாயக்கர் காலத்தில் இவை சீர் செய்யப்பட்டன என்பது எனது கருதுகோள்.

எனவே ஐயா பாண்டியராஜன் அவர்களது இழை மற்றும் காவற்கோட்டம் வாசிப்புகளுக்குப் பின்னர் ஒருமுறை மதுரை சென்று இந்த இடங்களை எல்லாம் நேரில் பார்த்து எனது கருதுகோளைச் சீர் செய்துகொள்ள விரும்பியுள்ளேன்.

அதற்கு முன்னதாகத் தங்களது ஆய்வுக் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

அக்கா ராசம் அவர்களது கருத்துக்களையும், அம்மையார் கீதா அவர்களது கருத்துக்களைம் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

அன்பன்

கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 6, 2017, 9:13:08 AM10/6/17
to mintamil, vallamai
வணக்கம் ஐயா.

2017-10-06 18:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

வ. கந்தசாமி பழனி கல்லூரியில் இருந்தாரே.

அவரது நூலொன்று இணையப் பல்கலையில் உள்ளது:
இந்த நூலில் மதுரையின் கோட்டை அகழி மற்றும் வீதிகள் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை ஐயா.

அன்பன்
கி.காளைராசன்
 

kanmani tamil

unread,
Oct 10, 2017, 4:48:15 AM10/10/17
to mint...@googlegroups.com, vallamai
தேவகுஞ்சரியின் மதுரை பற்றிய நூல் படித்திருக்கிறீர்களா

வணக்கம் ஐயா , 1984ல் வாசித்திருக்கிறேன் 
என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கு பல தரவுகளைத்தந்த நூல் 1751முதல் கி.பி.1763வரை மதுரைக்கோட்டையில் நடந்த தாக்குதல்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தியுள்ளார் .
பழைய சொக்கநாதர் கோயில் 20ம் நூன் தொடக்க காலக் கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது என்கிறார் .
இன்றைய கீழ் மதுரையை அடுத்த அனுப்பானடியில் வரலாற்றுக்கு முந்தைய காலத் தாழிகளும் பிற எச்சங்களும் கிடைத்துள்ளன என்கிறார்.
மாடக்குளத்தின் அருகில் பண்டை மதுரை இருந்திருக்க வேண்டும் என்ற ஐயத்தையும் வைக்கிறார் .கல்வெட்டுக்கள் மாடக்குளக்கீழ் மதுரை என்று சுட்டுவதை எடுத்துக்காட்டுகிறார் .மாடக்குளக்கீழ் திருப்பரங்குன்றம் ,மாடக்குளக்கீழ் கொடிமங்கலம் என்றெல்லாம் கல்வெட்டுத்தொடர்கள் இருப்பதால் அது நிர்வாகத்திற்காக பிரிக்கப்பட்ட கூறு என்கிறார் .தொல் பொருள் ஆய்வாளர் திரு.வேதாசலம் அவரகள் மாடக்குளத்தின் மூலம் பாசனவசதி பெறுகின்ற மதுரை என்று விளக்கமளிக்கிறார் -அவரை நேரில் சந்தித்து உரையாடிய போது பெற்ற கருத்து .



--

kanmani tamil

unread,
Oct 10, 2017, 6:11:46 AM10/10/17
to mint...@googlegroups.com
 பத்துப்பாட்டு நூலான மதுரைக் காஞ்சியும், இளங்கோவடிகள் கூறும் மதுரையும் இன்றைய மதுரையை அப்படியே படம்பிடித்துக்காட்டுகின்றன. பெரும்புலவர் இராசமாணிக்கனாரே சிறிது தவ்றிழைத்திருக்கிறார் என்பது என் கருத்து.
வணக்கம் ஐயா .
மதுரைக்காஞ்சி பாடும் மதுரை சங்க கால மதுரை ஆகும் .இளங்கோவடிகள் பாடும் மதுரை அதற்குப் பிற்பட்டது .
சங்க கால மதுரை இன்றைய  மதுரைமையப்பகுதியின்  தென்ககூறை மட்டும்உள்ளடக்கியது என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன 
ஆதாரம் 1;பண்டைத்தமிழகத்தில் மயமதம் போற்றப்பட்டது .மயமத விதிகளின்படி மீனாட்சிசொக்கநாதர் கோயில் நகரின் ஈசான்யதிசையில் அமைய வேண்டும்.சொக்கநாதர் சன்னதியில் உள்ள லிங்கம் சுயம்புலிங்கம் .எனவே கருவறை இடம் மாற வாய்ப்பு இல்லை வடகிழக்கு மூலையில் இருந்த கோயிலை நகரின் மையப்பகுதியாக்கி வங்கியசேகரபாண்டியன் மதுரையை விரிவுபடுத்தினான் 
ஆதார ம் 2;மயமத விதியின்படி பெருமாள்கோயில் ஊரின் மேற்கே ஊரைப் பார்த்து அமைய வேண்டும் இன்றைய கூடலழகர் கோயிலுக்கு கிழக்கே உள்ள மதுரைப்பகுதி சங்ககால மதுரையின் கூறு என்று சொல்வதில் முரண்பாடு எதுவும் எழ வழியில்லை மயமதத்தின் கொள்கைக்கு ஏற்பவே மதுரை கோட்டையின் 4திசைகளிலும் கோபுரங்களைக் கொண்டிருந்தது என்பதும் நோக்கத்தக்கது .
ஆதாரம் 3;பண்டைத் தமிழகத்தில் ஊரகள் கீழ் மேல் என்று இருகூறு பட்டிருந்தன .கீழக்குயில்குடி ,மேலக்குயில்குடி ,கீழ்மாத்தூர் ,மேல்மாத்தூர் 'கீழ் பனங்குடி ,மேல் பனங்குடி 'கீழ ப்  பெரும்பள்ளம் ,மேலப் , பெரும்பள்ளம் போன்ற ஊரகளின் பெயரகளை நோக்குக .கிழக்குப் பகுதியில் தான் முனிவரகள் ,யோகிகள்தங்கும் இடங்கள்  ,இறந்தோரை ப் புதைக்கும் இடங்கள் முதலியன இருந்தன.இன்றைய தூய மரியன்னை ஆலயத்தை அடுத்து கீழ்மதுரை நடைப்பயண 
தூரம்தான் .1984ல் நடந்து தான் களஆய்வு செய்தென் .கீழ்மதுரையை ஒட்டியுள்ள அனுப்பானடியில் ஈமத்தாழிகள் கிடைத்துள்ளன. 

kanmani tamil

unread,
Oct 10, 2017, 6:28:59 AM10/10/17
to mint...@googlegroups.com
Please talk with Mrs. J. Fatima, your Tamil teacher, & if possible get a PDF file
of her "Madurai Nakarat TerukkaL"
சென்ற 6ஆண்டுகளாக நான் அவருடன் தொடர்பில் இல்லை.எனினும் அவரைத் தொடர்புகொள்ள நிச்சயம் முயற்சிக்கிறேன் 
மாநகராட்சித் தெருப்பெயர்ப் பட்டியலில் உள்ள சங்கீதாவினாயகர் கோயில் தெரு ,சங்கீத வித்துவான் பொன்னுசாமிப்பிள்ளை சந்து முதலியவை முறையே பள்ளத்தெரு,பூக்காரப்பள்ளத்தெரு என்று வழங்கின என்றும் அதற்கு முன்னர் அவை வடக்குப்பாண்டியன் அகிழ்த்தெரு என்றுஒரே பெயரைப் பெற்றிருந்தன என்றும் கருத்து நிலவியதாகக்  கூறியுள்ளார் .

Pandiyaraja

unread,
Oct 10, 2017, 7:11:22 AM10/10/17
to மின்தமிழ்
"மதுரைக்காஞ்சி பாடும் மதுரை சங்க கால மதுரை ஆகும் .இளங்கோவடிகள் பாடும் மதுரை அதற்குப் பிற்பட்டது ."

சில நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே மதுரை இடம்பெயர்ந்தது என்பது தங்கள் கருத்தா?
ப.பாண்டியராஜா
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Malarvizhi Mangay

unread,
Oct 10, 2017, 10:05:03 AM10/10/17
to mint...@googlegroups.com
கண்மணி குறிப்பிடும் அந்த பள்ளதெரு இன்றைய சிம்மக் கல்லுக்கும் ஆட்டு மந்தைக்கும் இடையில் இருந்திருகக்க கூடும்.

On 10-Oct-2017 7:21 PM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (pipi...@gmail.com) Add cleanup rule | More info

"மதுரைக்காஞ்சி பாடும் மதுரை சங்க கால மதுரை ஆகும் .இளங்கோவடிகள் பாடும் மதுரை அதற்குப் பிற்பட்டது ."

சில நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே மதுரை இடம்பெயர்ந்தது என்பது தங்கள் கருத்தா?
ப.பாண்டியராஜா
On Tuesday, October 10, 2017 at 3:41:46 PM UTC+5:30, kanmanitamilskc wrote:
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Pandiyaraja

unread,
Oct 10, 2017, 11:51:45 AM10/10/17
to மின்தமிழ்
இல்லை அம்மா! சங்கீத விநாயகர் கோவில் தெரு வடக்காவணிமூலவீதி அருகில் இன்றும் இருக்கிறது. அதுதான் பழைய வடக்குப் பாண்டியன் அகிழ் தெரு. அதாவது அன்றைய (நாயக்கர் காலத்துக்கு முந்தைய)மதுரையின் வடக்கு எல்லை!
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 12, 2017, 12:52:11 AM10/12/17
to mintamil, Pandiyaraja
வணக்கம் ஐயா.

2017-10-10 21:21 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
இல்லை அம்மா! சங்கீத விநாயகர் கோவில் தெரு வடக்காவணிமூலவீதி அருகில் இன்றும் இருக்கிறது. அதுதான் பழைய வடக்குப் பாண்டியன் அகிழ் தெரு. அதாவது அன்றைய (நாயக்கர் காலத்துக்கு முந்தைய)மதுரையின் வடக்கு எல்லை!
ப.பாண்டியராஜா

ஒரேயொரு சிறு ஐயம்.

திருவிளையாடல் புராணம் அகில் என்று குறிப்பிடுகிறது.
தாங்கள் அகிழ் தெரு என்று குறிப்பிடுகின்றீர்கள்.
அகிழ் என்றால் என்ன பொருள்?
அல்லது
அகிழ் என்பது அகழியைக் குறிக்கும் சொல்லா?

ஐயா அவர்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.

kanmani tamil

unread,
Oct 12, 2017, 3:22:13 AM10/12/17
to mint...@googlegroups.com, Pandiyaraja
I agree with thiru. pandiarajansir.
regarding akil/akilll(cirappu-l)it's due to typing error because I'm a new entry to type using uncode.  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pandiyaraja

unread,
Oct 12, 2017, 12:06:14 PM10/12/17
to மின்தமிழ்
காளை ஐயா!
அகழி என்பதுதான் பேச்சு வழக்கில் அகில் என்று வழங்கி வருவதாகத் திரு. சங்கரராஜுலு ஐயா என்னிடம் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 13, 2017, 12:47:32 PM10/13/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

2017-10-12 21:36 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
காளை ஐயா!
அகழி என்பதுதான் பேச்சு வழக்கில் அகில் என்று வழங்கி வருவதாகத் திரு. சங்கரராஜுலு ஐயா என்னிடம் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

ஐயா சங்கரராஜுலு அவர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்று அழகப்பா பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தவன் நான்.  
ஐயா அவர்களை என்றும் என் மனதில் போற்றி வருகிறேன்.
ஐயா அவர்களை நினைவு படுத்தியதற்கு நன்றி ஐயா.

மற்றபடி 
ஐயா சங்கரராஜுலு அவர்கள் எந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு இப்படிக் கூறியுள்ளார்கள் எனத் தெரியவில்லை.
அரிசிக்காரத் தெரு, பூக்காரத் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு இவற்றின் பெயர்கள் எல்லாம் அப்படியே இருக்க, அகில் தெருவை மட்டும் அகழியுடன் ஒப்பிடுவது எனக்கென்னவோ ஏற்புடையதாக இல்லை ஐயா.

இவ்வாறு அகில் என்பதை அகழி என்று முதன்முதலில் எழுதியவர் யார்? எதன் அடிப்படையில் இப்படி எழுதினார்? என்ற தகவல்கள் இருந்தால் (அல்லது இணையத்தில் இருந்தால்) அவற்றைச் சுட்டிக் காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன் ஐயா.

நானும், தீபாவளி முடிந்த பின்னர் மதுரைக்கு நேரில் சென்று பார்த்துவர முயற்சிக்கிறேன்.

Pandiyaraja

unread,
Oct 14, 2017, 12:30:18 AM10/14/17
to மின்தமிழ்
நாயக்கர்கள் ஆவணிமூலவீதியை ஒட்டியிருந்த கோட்டையை அழித்துவிட்டு, அந்த அகழியை மூடிவிட்டு, மாசிவீதிக்கும் வெளியில் புதிய கோட்டை அமைத்து மதுரையை விரிவுபடுத்தினார்கள் என்பதை நாயக்கர் வரலாற்றில் படிக்கிறோம். அதனால்தான் ஆவணிமூலவீதியை ஒட்டிய அகில் தெரு அன்றைய அகழியாக இருந்திருக்கவேண்டும். நாயக்கர்கால ஓவியங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Oct 14, 2017, 1:23:59 AM10/14/17
to மின்தமிழ்


On Thursday, October 12, 2017 at 12:22:13 AM UTC-7, kanmanitamilskc wrote:
I agree with thiru. pandiarajansir.
regarding akil/akilll(cirappu-l)it's due to typing error because I'm a new entry to type using uncode.  


அகழி, அகில் - இரண்டும் வெவ்வேறு சொற்கள்.

இன்றைய அகில்தெருவின் பழைய பெயர் அகழித்தெரு என
ஜே. பாத்திமா நூலில் சொல்லியுள்ளாரா?

-----------

Please talk with Mrs. J. Fatima, your Tamil teacher, & if possible get a PDF file
of her "Madurai Nakarat TerukkaL"
சென்ற 6ஆண்டுகளாக நான் அவருடன் தொடர்பில் இல்லை.எனினும் அவரைத் தொடர்புகொள்ள நிச்சயம் முயற்சிக்கிறேன் 
மாநகராட்சித் தெருப்பெயர்ப் பட்டியலில் உள்ள சங்கீதாவினாயகர் கோயில் தெரு ,சங்கீத வித்துவான் பொன்னுசாமிப்பிள்ளை சந்து முதலியவை முறையே பள்ளத்தெரு,பூக்காரப்பள்ளத்தெரு என்று வழங்கின என்றும் அதற்கு முன்னர் அவை வடக்குப்பாண்டியன் அகிழ்த்தெரு என்றுஒரே பெயரைப் பெற்றிருந்தன என்றும் கருத்து நிலவியதாகக்  கூறியுள்ளார் .

------------

காவல்கோட்டம் நாவலில் பேரா. பாண்டியராஜா சொல்வதுபோலவே அகழித்தெரு பற்றிச் சொல்லப்படுகிறது.

நா. கணேசன்
 
On 12 Oct 2017 10:22 am, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
வணக்கம் ஐயா.

2017-10-10 21:21 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
இல்லை அம்மா! சங்கீத விநாயகர் கோவில் தெரு வடக்காவணிமூலவீதி அருகில் இன்றும் இருக்கிறது. அதுதான் பழைய வடக்குப் பாண்டியன் அகிழ் தெரு. அதாவது அன்றைய (நாயக்கர் காலத்துக்கு முந்தைய)மதுரையின் வடக்கு எல்லை!
ப.பாண்டியராஜா

ஒரேயொரு சிறு ஐயம்.

திருவிளையாடல் புராணம் அகில் என்று குறிப்பிடுகிறது.
தாங்கள் அகிழ் தெரு என்று குறிப்பிடுகின்றீர்கள்.
அகிழ் என்றால் என்ன பொருள்?
அல்லது
அகிழ் என்பது அகழியைக் குறிக்கும் சொல்லா?

ஐயா அவர்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja

unread,
Oct 14, 2017, 3:43:14 AM10/14/17
to மின்தமிழ்


இது பழைய மதுரையின் படம். படத்தில் மையப்பகுதியில் தொலைதூரத்தில் இருப்பது திருமலை நாயக்கர் மகால். முன்புறத்தில் உயரமாக இருக்கும் காவற்கூடம் இன்றைக்கும் மதுரை கீழமாசிவீதியில் இருக்கிறது. படத்தில் தெரியும் தெரு கீழமாசிவீதி. இதற்கு வலப்புறத்தில் சற்றுப் பள்ளமாக இருக்கும் பகுதியைப் பாருங்கள். அதுதான் பாண்டியன் அகழியை மூடியபகுதி. வடக்குப்புறத்தில் இது பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டு, பின்னர் வடக்குப் பாண்டியன் அகில் தெரு ஆனது. இந்த அகில் தான் அகழி என்பதன் மரூஉ. கிழக்குப்பக்கம் இருந்த பள்ளம் நன்றாக மேவப்பட்டு இப்போது நெடுகக் கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழ்மாசிவீதியில் தேர்முட்டி அருகே நின்று இந்தப் படத்துடன் இன்றைய மதுரையை நான் ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறேன்.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Oct 14, 2017, 9:23:54 AM10/14/17
to மின்தமிழ்
நன்றி, ஐயா.

அன்புடன்,
நா. கணேசன்

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 14, 2017, 11:31:49 AM10/14/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

வணக்கம் ஐயா.


On 14-Oct-2017 1:13 PM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
>
> இது பழைய மதுரையின் படம். படத்தில் மையப்பகுதியில் தொலைதூரத்தில் இருப்பது திருமலை நாயக்கர் மகால்.

சரி.

முன்புறத்தில் உயரமாக இருக்கும் காவற்கூடம் இன்றைக்கும் மதுரை கீழமாசிவீதியில் இருக்கிறது.

இது தேர்முட்டி இல்லையா ?
காவற்கூடம் என்று எதன் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர் ?
காவற்கூடமும் தேர்முட்டியும் வேறுவேறா? வேறுவேறு இடங்களில் இருக்கின்றனவா ?

படத்தில் தெரியும் தெரு கீழமாசிவீதி.

சரி.

இதற்கு வலப்புறத்தில் சற்றுப் பள்ளமாக இருக்கும் பகுதியைப் பாருங்கள். அதுதான் பாண்டியன் அகழியை மூடியபகுதி.

ஐயா, இந்த இடம் அகழி இருந்து மூடப் பட்ட இடம் என்று எதன் அடிப்படையில் கூறுகின்றனர் ?
இதுதான் எனக்கு குழப்பமாக உள்ளது ஐயா.

வடக்குப்புறத்தில் இது பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டு, பின்னர் வடக்குப் பாண்டியன் அகில் தெரு ஆனது. இந்த அகில் தான் அகழி என்பதன் மரூஉ. கிழக்குப்பக்கம் இருந்த பள்ளம் நன்றாக மேவப்பட்டு இப்போது நெடுகக் கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழ்மாசிவீதியில் தேர்முட்டி அருகே நின்று இந்தப் படத்துடன் இன்றைய மதுரையை நான் ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறேன்.
> ப.பாண்டியராஜா
>

1974-78 ஆண்டுகளில் சுற்றிய இடங்கள். 
விளக்குத்தூண் அருகிலும் பெரும் பள்ளம் இருந்தது.
பின்னர் அந்த இடத்தைச் சிறுநீர் கழிப்பிடமாகக் கட்டினர்.

அன்பன்
கி. காளைராசன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 14, 2017, 11:45:41 AM10/14/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

வணக்கம்.
பார்வைக்கோடு படம் இணைத்துள்ளேன் ஐயா.

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

sketch-1507993531510.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 14, 2017, 11:45:41 AM10/14/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

வணக்கம்.
பார்வைக்கோடு படம் இணைத்துள்ளேன் ஐயா.

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

sketch-1507993531510.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 14, 2017, 12:24:42 PM10/14/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

வணக்கம் ஐயா.
ஐயா,
மேலும் ஒரு சிறிய ஐயம்.

காவற்கூடத்திற்கு மேற்கே உள்ள இடம் அகழி என்றால்,
அகழிக்கு வெளியே காவற்கூடம் இருந்ததா?
அகழிக்கு வெளியே காவற்கூடம் எதற்கு ?
அப்படி இருந்தாலும் நான்கு திசைகளிலும் (நான்கு மாசி வீதிகளிலும் ) காவற்கூடம் இருந்திருக்க வேண்டுமல்லவா ?

அன்பன்
கி. காளைராசன்

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pandiyaraja

unread,
Oct 15, 2017, 5:36:11 AM10/15/17
to மின்தமிழ்
ஐயா,
இந்த அகழி பாண்டியர் காலத்து அகழி. அதனைத் தூர்த்துவிட்டு, நகரை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில், புதிதாகக் கோட்டையும், நாயக்கர்களால் கட்டப்பட்டது. அவர்களின் அகழி இன்னும் வெளியே இருக்கும். அதனைத்தான் ஆங்கிலேயர்கள் தூர்த்து மாரட் வீதியென்றும், மேஸ்திரி வீதி என்றும் பெயரிட்டனர். இந்தக் காவற்கூடமும் நாயக்கர் காலத்தியது.
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 15, 2017, 12:58:37 PM10/15/17
to mintamil

வணக்கம்.


On 15-Oct-2017 3:06 PM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> ஐயா,
> இந்த அகழி பாண்டியர் காலத்து அகழி. அதனைத் தூர்த்துவிட்டு, நகரை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில், புதிதாகக் கோட்டையும், நாயக்கர்களால் கட்டப்பட்டது. அவர்களின் அகழி இன்னும் வெளியே இருக்கும். அதனைத்தான் ஆங்கிலேயர்கள் தூர்த்து மாரட் வீதியென்றும், மேஸ்திரி வீதி என்றும் பெயரிட்டனர்.

விளக்கத்திற்கு நன்றி ஐயா.

kanmani tamil

unread,
Oct 16, 2017, 5:43:28 AM10/16/17
to mint...@googlegroups.com
 பெரும்புலவர் இராசமாணிக்கனாரே சிறிது தவ்றிழைத்திருக்கிறார் என்பது என் கருத்து
ராசமாணிக்கனார் தனது ஐயத்தைக் கூறியிருக்கிறார் அவ்வளவே .அவரைப்போலவே மயிலை.சீனி.வேங்கடசாமியும் கூறியிருக்கிறார் .நக்கீரர் -கூடற் குடவயின் .........பரங்குன்று -எனப் பாடியிருப்பதை இருவரும் காரணம் காட்டுகின்றனர் .
மதுரைக்கு மேற்கே பரங்குன்று இருப்பதாக நக்கீரர் பாடியிருப்பதால் பண்டை மதுரை பழமதுரை என்ற இடத்தில் இருந்ததாக வி .கனகசபைப்பிள்ளையும் கருத்துரைக்கிறார் .வையை போக்கு மாறியுள்ளதால் இப்போது அவ்விடம் வடகரையில் உள்ளது என்றும் விளக்கமளிக்கிறார் .
பழமதுரை இன்றைய மதுரைமையப்பகுதியின் தென்கிழக்கே 6கல் தொலைவில் உள்ளது. 
ஆனால் 7ம் நூறறாண்டில் சம்பந்தர் பாடிய திருஆப்பனூர் இன்றும் வையை வடகரையில் செல்லூரில் உள்ளது.சம்பந்தர் வடகரையா தென்கரையா என்பது பற்றிப் பேசவில்லை.அதனால்  மா.இராசமாணிக்கனார்  ஆப்பனூரைத் தென்கரையில் இருப்பதாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகிறது 
.திருப்பூவணத்தைப் பாடும் தேவாரமும் அவ்வூர் வையைக்கரையில் இருந்ததாகவே பாடுகிறது.
சம்பந்தர் திருவேடகம் வையை வடகரையில் இருந்ததாகப் பாடுகிறார் .தேவாரம் பாடுவது போல் இன்றும் திருவேடகம் வையை வடகரையிலும் திப்பூவணமும் திருஆப்பனூரும் வையைக்கரையிலும் இருப்பதால் வையையின் போக்கில் மாற்றம் இல்லை என்பது உறுதி .
பழமதுரை என்பது இன்றைய பாண்டிகோயில் இருக்கும் பகுதி .இங்கு நடந்த அகழ்வாய்வில் சங்ககால எச்சம் எதுவும் கிடைக்கவில்லை என்பதை ஜி .சங்கரராஜுலு தன கட்டுரையில் சொல்லியுள்ளார் .இன்று பழமதுரையில் உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து பார்த்தாலும் திருப்பரங்குன்றம் நேர் மேற்கில் இல்லை.இதனால் மயிலை.சீனி.வேங்கடசாமியின் ஐயமும் வலுவற்றதாகிறது .
குடவயின் .....பரங்குன்று என்ற தொடரின் விளக்கமே நம்மைத் தெளிவுபடுத்தும் .கோணத்திசைகளைக் குறிப்பிடும் போது தலைமைத்திசையை - வயின் என்ற பின்னொட்டுடன்கூறுவதை பிற சங்க இலக்கியத்திலும் காணமுடிகிறது .
வடவயின் .....வேங்கடம் என்ற சங்க இலக்கியத் தொடருக்கு விளக்கம் கூறும் துரை அரங்கசாமி  வடக்கே ஒருபுறத்தில் உள்ள வேங்கடம் என்கின்றார் .
அதுபோல மேற்கே ஒருபுறத்தில் உள்ள பரங்குன்றம் என பொருள் கொள்ள வேண்டும் .இதனால் மா.இராசமாணிக்கனாரின் கருத்து வலுவிழக்கிறது .அவர் கூறுவது போல் அவனியாபுரத்தில் உள்ள கோயிலும் குளமும் பண்டைமதுரை அன்று .
கண்மணி 


> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 17, 2017, 11:10:48 AM10/17/17
to mintamil, Kalai Email, naga rethinam

வணக்கம்.


On 16-Oct-2017 3:13 PM, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:
>
>  பெரும்புலவர் இராசமாணிக்கனாரே சிறிது தவ்றிழைத்திருக்கிறார் என்பது என் கருத்து
> ராசமாணிக்கனார் தனது ஐயத்தைக் கூறியிருக்கிறார் அவ்வளவே .அவரைப்போலவே மயிலை.சீனி.வேங்கடசாமியும் கூறியிருக்கிறார் .நக்கீரர் -கூடற் குடவயின் .........பரங்குன்று -எனப் பாடியிருப்பதை இருவரும் காரணம் காட்டுகின்றனர் .
> மதுரைக்கு மேற்கே பரங்குன்று இருப்பதாக நக்கீரர் பாடியிருப்பதால்

நக்கீரர் பாடிய மதுரைக்கு (தற்போது கீழடி அருகே தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ள நகரம்) மேற்கே திருப்பரங்குன்றம் உள்ளது.
நக்கீரர் காலத்தில் இந்த மதுரையைக்  குலசேகரபாண்டியன் ஆண்டு வந்தான். இவன் தற்போதுள்ள மதுரையைப் புனர்நிர்மாணம் செய்து, இங்கிருந்த மக்களை யெல்லாம் மதுரையில் குடியமர்தியுள்ளான்.
(புவிப் படம் இணைத்துள்ளேன்)

பண்டை மதுரை பழமதுரை என்ற இடத்தில் இருந்ததாக வி .கனகசபைப்பிள்ளையும் கருத்துரைக்கிறார் .வையை போக்கு மாறியுள்ளதால் இப்போது அவ்விடம் வடகரையில் உள்ளது என்றும் விளக்கமளிக்கிறார் .

மேற்கண்டது தவறான விளக்கம்.
கீழடி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரைக் கருத்தில் கொண்டால் நக்கீரர் பாடியுள்ளது சரி எனப்படும்.

> பழமதுரை இன்றைய மதுரைமையப்பகுதியின் தென்கிழக்கே 6கல் தொலைவில் உள்ளது. 
> ஆனால் 7ம் நூறறாண்டில் சம்பந்தர் பாடிய திருஆப்பனூர் இன்றும் வையை வடகரையில் செல்லூரில் உள்ளது.சம்பந்தர் வடகரையா தென்கரையா என்பது பற்றிப் பேசவில்லை.அதனால்  மா.இராசமாணிக்கனார்  ஆப்பனூரைத் தென்கரையில் இருப்பதாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகிறது 
> .திருப்பூவணத்தைப் பாடும் தேவாரமும் அவ்வூர் வையைக்கரையில் இருந்ததாகவே பாடுகிறது.

இரண்டு பதிகங்கள் உண்டு.
1) "தென்திருப்பூவணமே" என முடியும் பதிகமானது வைகையின் வடகரையில் நின்று பாடியது.(ஒன்றாம் திருமுறை - இது ஒரு கோஷ்டி கானம்).
2) "அடிதொழ நன்மையாகுமே" என முடியும் பதிகமானது வைகையின் தென்கரையில் உள்ள கோயிலில் நின்று பாடியது.(மூன்றாம் திருமுறை - இது தனித்துப் பாடியது).

> சம்பந்தர் திருவேடகம் வையை வடகரையில் இருந்ததாகப் பாடுகிறார் .தேவாரம் பாடுவது போல் இன்றும் திருவேடகம் வையை வடகரையிலும் திப்பூவணமும்  திருஆப்பனூரும் வையைக்கரையிலும் இருப்பதால் வையையின் போக்கில் மாற்றம் இல்லை என்பது உறுதி .

திருப்பூவணம், மதுரை வைகையின் தென்கரையில் உள்ளன.
ஆப்பனூர் திருவேடகம் வைகையின் வடகரையில் உள்ளன.

> பழமதுரை என்பது இன்றைய பாண்டிகோயில் இருக்கும் பகுதி .

இது தவறு.

இங்கு நடந்த அகழ்வாய்வில் சங்ககால எச்சம் எதுவும் கிடைக்கவில்லை என்பதை ஜி .சங்கரராஜுலு தன கட்டுரையில் சொல்லியுள்ளார் .

இன்று பழமதுரையில் (கீழடி ) உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து பார்த்தாலும் திருப்பரங்குன்றம் நேர் மேற்கில் இருக்கும்.
(படம் இணைத்துள்ளேன்.)
புலவர்கள் மிகவும் சரியாகத்தான் பாடியுள்ளனர்.  கீழடி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நக்கீரர் கால மதுரை ஆகும்.

sketch-1508249568021.png

Pandiyaraja

unread,
Oct 18, 2017, 12:26:57 PM10/18/17
to மின்தமிழ்
திரு காளை அவர்களுக்கு,
மதுரை பற்றிய ஒரு நல்ல ஆவணப் படம் உள்ளது. அது நான்கு பகுதிகளாக உள்ளது. அவற்றில் மூன்றாவது பகுதி, பாண்டியர்காலக் கோட்டை பற்றிப் பேசுகிறது. அதனை இங்குக் காணலாம்,
ப.பாண்டியராஜா

>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to min...@googlegroups.com
>> > To unsubscribe from this group, send email to minTamil-...@googlegroups.com


>> > For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> > ---
>> > You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+...@googlegroups.com.


>> > For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>> --

>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to min...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to min...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 19, 2017, 11:37:57 AM10/19/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம் ஐயா.


On 18-Oct-2017 9:57 PM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> திரு காளை அவர்களுக்கு,
> மதுரை பற்றிய ஒரு நல்ல ஆவணப் படம் உள்ளது. அது நான்கு பகுதிகளாக உள்ளது. அவற்றில் மூன்றாவது பகுதி, பாண்டியர்காலக் கோட்டை பற்றிப் பேசுகிறது. அதனை இங்குக் காணலாம்,
> https://www.youtube.com/watch?v=ynnaNBW73wU
> ப.பாண்டியராஜா
>

படம் முழுவதும் பார்த்தேன்.  நன்றாக ஆவணப்படுத்தியுள்ளனர். அதில் கோட்டையை இடிக்கவிடாமல் மக்கள் தடுத்த வரலாற்றைச் சேர்க்காது விட்டுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே கோட்டையை இடித்து அந்த இடங்களைத் தங்களுக்கு ஆக்கிக் கொண்டனர் என்பதைப் பதிவு செய்துள்ளனர்.

ஐயா,
மதுரையில் வெளிவீதிகளுக்கும் மாரட்வீதிகளுக்கும் இடைப்பட்ட இடங்களில் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன.
இவை குலசேகரபாண்டியனால் கட்டப்பெற்று, பின்னாளில் விசயநகரப் பேரரசால் "புனர்நிர்மாணம் செய்து கட்டப்பட்டன" என்பது எனது கருத்து. இதற்குச் சான்றாதாரமாகத் திருவிளையாடல் புராணத்தைக் காட்டுகிறேன்.

சிலப்பதிகாரச் சான்றுகளின்படி, சிலம்பு காலத்தில் மதுரையாக இருந்தது கீழடி அருகே கண்டறியப்பட்டுள்ள மணவூராக இருக்குமோ என்ற ஐயம் வருகிறது.

எனவே, வெளிவீதிகளுக்கு உட்பட்ட, அகழியையும் கோட்டையும்  விசயநகரப் பேரரசு "புதிதாகக் கட்டட்பட்டன" என்பதற்குச் சான்றாதாரமாக கல்வெட்டுகளோ, இலக்கியக் குறிப்புகளோ, வரலாற்று ஆவணங்களோ  இருந்தால் அன்புள்ளம் கொண்டு அறியத் தருமாறு வேண்டுகிறேன் ஐயா.

Pandiyaraja

unread,
Oct 19, 2017, 1:13:53 PM10/19/17
to மின்தமிழ்
காளையாருக்கு,
இந்த ஆவணப்படம் தயாரித்தவர்களிடம் நீங்கள் கேட்கும் ஆதாரம் இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் மதுரைக்காரர்கள் என்று எண்ணுகிறேன். மதுரைக்குச் செல்லும்போது அவர்களைச் சந்திக்க முயல்கிறேன். நாயக்கர் வரலாறு என்ற புத்தகத்தைப் பார்த்தால் தெரியும்.
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Oct 19, 2017, 11:29:22 PM10/19/17
to மின்தமிழ்
அன்புள்ள காளையாருக்கு,
இந்தப் படத்தில் உள்ள கல்வெட்டுப் பலகை இருக்குமிடம் மதுரை கீழ ஆவணிமூலவீதிக்கு அருகில் அம்மன் சன்னதித் தெருவில் உள்ளது. இந்த இடத்தின் பெயர் விட்டவாசல். இது பாண்டியன் கோட்டையின் நுழைவுவாசல் என்கிரது இந்தக் கல்வெட்டு. நாயக்க மன்னர்கள் இடிக்காமல் விட்டுவிட்டதால் இது விட்ட வாசல் எனப்படுகிறது என்பர்.
அடுத்தமுறை மதுரைக்குச் செல்லும்போது இங்குச் சென்று பாருங்கள்.
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2017, 2:30:59 AM10/20/17
to mintamil
வணக்கம் ஐயா.

2017-10-20 8:59 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புள்ள காளையாருக்கு,
இந்தப் படத்தில் உள்ள கல்வெட்டுப் பலகை இருக்குமிடம் மதுரை கீழ ஆவணிமூலவீதிக்கு அருகில் அம்மன் சன்னதித் தெருவில் உள்ளது. இந்த இடத்தின் பெயர் விட்டவாசல். இது பாண்டியன் கோட்டையின் நுழைவுவாசல் என்கிரது இந்தக் கல்வெட்டு. நாயக்க மன்னர்கள் இடிக்காமல் விட்டுவிட்டதால் இது விட்ட வாசல் எனப்படுகிறது என்பர்.
அடுத்தமுறை மதுரைக்குச் செல்லும்போது இங்குச் சென்று பாருங்கள்.
ப.பாண்டியராஜா



On Thursday, October 19, 2017 at 10:43:53 PM UTC+5:30, Pandiyaraja wrote:
காளையாருக்கு,
இந்த ஆவணப்படம் தயாரித்தவர்களிடம் நீங்கள் கேட்கும் ஆதாரம் இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் மதுரைக்காரர்கள் என்று எண்ணுகிறேன். மதுரைக்குச் செல்லும்போது அவர்களைச் சந்திக்க முயல்கிறேன். நாயக்கர் வரலாறு என்ற புத்தகத்தைப் பார்த்தால் தெரியும்.
ப.பாண்டியராஜா

அருமை, நல்லதொரு பதிவு.
பாண்டியன் கோட்டையின் கிழக்கு வாயில் இதுதான் என்பதற்கான சரியான சான்றாதாரம் இது.

நானும் இனியொருமுறை மதுரை செல்லும் போது விட்டவாசல் சென்று பார்த்து வருகிறேன்.

மிக்க நன்றி ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2017, 3:01:36 AM10/20/17
to mintamil, pandiya raja, kanmani...@gmail.com, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Oru Arizonan, thiruppuvanam, Kalai Email
வணக்கம் ஐயா.


2017-10-14 13:13 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:


இது பழைய மதுரையின் படம். படத்தில் மையப்பகுதியில் தொலைதூரத்தில் இருப்பது திருமலை நாயக்கர் மகால். முன்புறத்தில் உயரமாக இருக்கும் காவற்கூடம் இன்றைக்கும் மதுரை கீழமாசிவீதியில் இருக்கிறது. படத்தில் தெரியும் தெரு கீழமாசிவீதி. இதற்கு வலப்புறத்தில் சற்றுப் பள்ளமாக இருக்கும் பகுதியைப் பாருங்கள். அதுதான் பாண்டியன் அகழியை மூடியபகுதி. வடக்குப்புறத்தில் இது பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டு, பின்னர் வடக்குப் பாண்டியன் அகில் தெரு ஆனது. இந்த அகில் தான் அகழி என்பதன் மரூஉ. கிழக்குப்பக்கம் இருந்த பள்ளம் நன்றாக மேவப்பட்டு இப்போது நெடுகக் கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழ்மாசிவீதியில் தேர்முட்டி அருகே நின்று இந்தப் படத்துடன் இன்றைய மதுரையை நான் ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறேன்.
ப.பாண்டியராஜா


மேலே உள்ள படமும்,
கிழே உள்ள படமும் (தேர்முட்டி) ஒரே இடமா?
 

ஒரே இடம் என்றால்,
சுவாமிகள் தேர் 300 ஆண்டுகள் பழைமையானது என்று கல்வெட்டு உள்ளதே!
300 வருடங்களாகத் தேர் ஓடிவரும் வீதியை அகழி இருந்த இடம் என எப்படிக் கொள்ள முடியும்?  




இந்தக் கல்வெட்டினால்   பாண்டியன் அகழியை மூடியபகுதி  மாசிவீதியாக உள்ளது என எவ்வாறு கருதுமுடியும்?

​எனவே,
பேராசிரியர் கண்மணி அவர்கள் குறிப்பிடவது போன்று, உள்ளே ஒருகோட்டையும் வெளியே ஒரு கோட்டையும் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளதா? 

ஐயா அவர்கள் அன்புள்ளம் கொண்டு விளக்கிடுமாறு வேண்டுகிறேன்.

kanmani tamil

unread,
Oct 20, 2017, 4:05:07 AM10/20/17
to kalair...@gmail.com, mintamil, pandiya raja, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Oru Arizonan, thiruppuvanam, Kalai Email
மதுரை நகரம் தாமரைபூ வடிவத்தில் இருப்பதாகவும் அதற்கு உள்கோட்டை
வெளிக்கோட்டை உண்டு என்று சாமிசிதம்பரானர் தன் நூலில் குறிப்பிடுகிறார்.
பரிபாடல் திரட்டு 7ம் பாட்டு மதுரையை தாமரைப்பூவுடன் ஒப்பிடுகிறது
.இப்பாடலை அடியொட்டியே சாமி.சிதம்பரனார் கருத்துரைத்துள்ளார்
பரிபாடல்திரட்டு காலத்தால் பிற்பிற்பட்டது என்னும் கருத்து இதனால்
வலுப்பெறுகிறது 2ம் பாண்டியப்பேரரசுக் காலத்தில் சிவன்கோவிலை மையமாக
வைத்து நகர் விரிவடைந்துள்ளது .

2017-10-20 12:31 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> வணக்கம் ஐயா.
>
>
> 2017-10-14 13:13 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>
>>
>> இது பழைய மதுரையின் படம். படத்தில் மையப்பகுதியில் தொலைதூரத்தில் இருப்பது
>> திருமலை நாயக்கர் மகால். முன்புறத்தில் உயரமாக இருக்கும் காவற்கூடம்
>> இன்றைக்கும் மதுரை கீழமாசிவீதியில் இருக்கிறது. படத்தில் தெரியும் தெரு
>> கீழமாசிவீதி. இதற்கு வலப்புறத்தில் சற்றுப் பள்ளமாக இருக்கும் பகுதியைப்
>> பாருங்கள். அதுதான் பாண்டியன் அகழியை மூடியபகுதி. வடக்குப்புறத்தில் இது
>> பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டு, பின்னர் வடக்குப் பாண்டியன் அகில் தெரு ஆனது.
>> இந்த அகில் தான் அகழி என்பதன் மரூஉ. கிழக்குப்பக்கம் இருந்த பள்ளம் நன்றாக
>> மேவப்பட்டு இப்போது நெடுகக் கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழ்மாசிவீதியில்
>> தேர்முட்டி அருகே நின்று இந்தப் படத்துடன் இன்றைய மதுரையை நான்
>> ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறேன்.
>> ப.பாண்டியராஜா
>>
>
> மேலே உள்ள படமும்,
> கிழே உள்ள படமும் (தேர்முட்டி) ஒரே இடமா?
>
>
> ஒரே இடம் என்றால்,
> சுவாமிகள் தேர் 300 ஆண்டுகள் பழைமையானது என்று கல்வெட்டு உள்ளதே!
> 300 வருடங்களாகத் தேர் ஓடிவரும் வீதியை அகழி இருந்த இடம் என எப்படிக் கொள்ள
> முடியும்?
>
>
>
>

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 20, 2017, 4:29:49 AM10/20/17
to mintamil
பரிபாடல் திரட்டு:

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர் பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம இன் துயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போல கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

kanmani tamil

unread,
Oct 20, 2017, 4:37:18 AM10/20/17
to mintamil
ஆங்கிலேயர் காலத்தில் கோட்டை இடிக்கப்படுவதற்கு முன்னர் அதன் ஒரு பகுதி
ஓவியமாக வரையப்பட்டு லண்டனில் படப்பிரதி ஆக்கப்பட்டது .தஞ்சை சரஸ்வதி
மஹால் நூல்நிலையத்தில் ஒரு தூணில் மாட்டப்பட்டுள்ளது .இப்படம் அதன் பிரதி
போலவே உள்ளது .
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
>
>
> --
> அன்புடன்,
>
> திருத்தம் பொன்.சரவணன்
> அருப்புக்கோட்டை.
> ------------------------------------------------------------------
> எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
> எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
> எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
> எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
> ----------------------------------------------------------------
> எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
> எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க:
> http://kuraluraikal.blogspot.com
> தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
OLdMadurai.jpg

kanmani tamil

unread,
Oct 20, 2017, 4:52:15 AM10/20/17
to mintamil
சில நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே மதுரை இடம்பெயர்ந்தது என்பது தங்கள் கருத்தா
சங்ககாலம் என்பதை கி.மு.3முதல் கி.பி.3வரை என்று கூறுவர் .இக்கருத்தை
ஏற்றுக்கொள்வோமானால் மதுரைக்காஞ்சி சுட்டும் மதுரையின் கோட்டை
கிட்டத்தட்ட 600ஆண்டுகாலம் இருந்திருக்கிறதே அதன் பின்னர் பரிபாடல்
திரட்டு தோன்றிய காலத்தில் பாண்டியன் நகரத்தை தாமரைப்பூ வடிவத்தில்
கோயிலை மையமாக வைத்துக் கட்டியிருக்கிறான் .
கண்மணி

kanmani tamil

unread,
Oct 20, 2017, 5:10:49 AM10/20/17
to mintamil
அகில் தெருவை மட்டும் அகழியுடன் ஒப்பிடுவது எனக்கென்னவோ ஏற்புடையதாக இல்லை ஐயா.
ஜே .பாத்திமா அவரகள் அகிழ்தெரு என்று தான் குறிப்பிட்டுள்ளார் .தவறாக
தட்டச்சு செய்தது எனது இயலாமை .நான் மின்தமிழுக்குப் புதியவளாய் இருப்பது
போல தட்டச்சுக்கும் புதியவள் .ஒரு எழுத்துப்பிழை இந்த இணையத்தில் இத்தனை
குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை .நிற்க.
அகழி >அகிழ்-உயிர் இடம் பெயரல் என்னும் உருபொலியன் விதிக்குஉட்பட்டது
.தமிழில் இது போன்ற மாற்றங்கள் பிறவும் உள்ளன .சிவிறி >விசிறி என்பது போல
.

kanmani tamil

unread,
Oct 20, 2017, 5:28:25 AM10/20/17
to mintamil
300 வருடங்களாகத் தேர் ஓடிவரும் வீதியை அகழி இருந்த இடம் என எப்படிக்
கொள்ள முடியும்?
சித்திரைத்திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படும் வரலாறே நாயக்கர்
காலத்தில் உருவானது தானே.இதில் தயக்கம் ஏற்பட காரணம் என்ன என்று
புரியவில்லை.

Pandiyaraja

unread,
Oct 20, 2017, 10:25:46 AM10/20/17
to மின்தமிழ்
காளையாரே!
நீங்கள் ஏதோ ஒரு முடிவைக் கற்பனை செய்துகொண்டு அதற்கேற்றவாறு உள்கோட்டை, வெளிக்கோட்டை என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். படம் பாண்டியனின் கோட்டை வாயில் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. அப்புறம் உள், வெளி என்பதெல்லாம் கற்பனை. இரண்டு கோட்டைகளுக்கு ஆதாரம் இல்லை.
ப.பாண்டியராஜா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2017, 12:41:09 PM10/20/17
to mintamil
வணக்கம் ஐயா.

2017-10-20 19:55 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
காளையாரே!
நீங்கள் ஏதோ ஒரு முடிவைக் கற்பனை செய்துகொண்டு அதற்கேற்றவாறு உள்கோட்டை, வெளிக்கோட்டை என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.
உள்கோட்டை வெளிக்கோட்டை என்பது நான் சொன்னதல்ல.
பேராசிரியர் கண்மணி அவர்கள் கூறியது.

திருமயத்தில் உள்கோட்டை, வெளிக்கோட்டை என இரண்டு கோட்டைகள் உண்டு.
பேராசிரியர் கண்மணி அவர்களின் கருத்தைப் படித்தபின்னர், திருமயத்தில் உள்ளது போன்று மதுரையிலும் இருந்திருக்குமோ என்பது எனது ஐயம்.

நான் புராணப் பாடற் கருத்துகளை மட்டுமே எனது உட்கருத்தாகக் கொண்டுள்ளேன்.  
புராணத்தில் பிழையிருக்காது, ஆய்வாளர்கள் பிழை செய்கின்றனர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எனது ஐயங்களில் தெளிவு பெறுவதற்காகக் கேட்கிறேன்.
எனது ஐயங்கள் தெளிவனால் புராணம் கூறுவது உண்மை என்றோ, அல்லது புராணம் கூறுவது பிழை என்றோ, அல்லது ஆய்வாளர்கள் கூறுவது உண்மை என்றோ, அல்லது ஆய்வாளர்கள் கூறுவது பிழை என்றோ எடுத்துக் கொள்வேன் ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2017, 12:46:58 PM10/20/17
to mintamil
வணக்கம்.

2017-10-20 13:59 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
பரிபாடல் திரட்டு:

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர் பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம இன் துயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போல கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே.
அருமையானதொரு பாடலை வாசிக்க அளித்தமைக்கு எனது நன்றிகள்,

Pandiyaraja

unread,
Oct 21, 2017, 1:26:06 AM10/21/17
to மின்தமிழ்
"அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்"
அரிய அழகுடைய பொன்பொகுட்டையே ஒப்ப மதுரையின் நடுவே அமைந்த எம் வேந்தனாகிய பாண்டியனது அரண்மனை
என்பது பெருமழைப்புலவர் உரை/ அதாவது இங்கு அண்ணல் கோயில் என்று குறிப்பிடப்படுவது பாண்டியன் அரண்மனை.
இதுவேதான் மற்ற உரையாசிரியர் கருத்தும்.
அதாவது இன்றைக்கு ஆலாவாயன் கோயிலாக இருப்பது அன்றைக்கு அரசன் மாளிகையாக இருந்திருக்கிறது.
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 21, 2017, 2:11:26 AM10/21/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

2017-10-21 10:56 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
"அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்"
அரிய அழகுடைய பொன்பொகுட்டையே ஒப்ப மதுரையின் நடுவே அமைந்த எம் வேந்தனாகிய பாண்டியனது அரண்மனை
என்பது பெருமழைப்புலவர் உரை/ அதாவது இங்கு அண்ணல் கோயில் என்று குறிப்பிடப்படுவது பாண்டியன் அரண்மனை.
இதுவேதான் மற்ற உரையாசிரியர் கருத்தும்.
அதாவது இன்றைக்கு ஆலாவாயன் கோயிலாக இருப்பது அன்றைக்கு அரசன் மாளிகையாக இருந்திருக்கிறது.
ப.பாண்டியராஜா

ஐயா, மதுரை கோயிலில் உள்ளது ஒரு சுயம்புலிங்கம்.  இதன் இடத்தை மாற்ற இயலாது.  இந்தச் சுயம்புலிங்கத்தை மையமாகக் கொண்டே கோயில் கருவறை மற்றும் மதுரைநகரின் வீதிகள் யாவும் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் மாற்றம் இல்லை. இதை  யாரும் மாற்றம் செய்யவும் முடியாது.

மற்றபடி, 
இந்தச் சுயம்புலிங்கத்தின் அருகேயே பாண்டியன் அரண்மனை இருந்தததா? அல்லது நாயக்கர் மகால் இருக்கும் இடத்தில் இருந்த பாண்டியர் அரண்மனையை இடித்துவிட்டு நாயக்கர் மகால் கட்டினார்களா? என்பது பற்றி எனக்கு ஆதாரபூர்வமாக ஏதும் தெரியாது ஐயா.

1843 ஆம் ஆண்டுஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர்.  மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்இதற்கான வழக்கு சென்னைநீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டதுமேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார்பிளாக்பர்னுக்கும்மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார்வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள்நியமிக்கப்பட்டார்கள்பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன.  (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு).  
 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதும் வாசிக்கக் கிடைத்தால் கூடுதலான ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும் ஐயா.

Pandiyaraja

unread,
Oct 21, 2017, 7:01:05 AM10/21/17
to மின்தமிழ்
அன்புமிக்க காளையாருக்கு,
இன்றைய மதுரை மீனாட்சியம்மன் கோவில்தான் அன்றைய சங்ககாலப் பாண்டியரின் அரண்மனை இருந்த இடம் என்பது என்னுடைய கருத்து அல்ல. அது என்னுடைய ஐயம். அதனை உறுதிப்படுத்தியவர்கள் இருவர். முதலாமவர் பேராசிரியர் சங்கரராஜுலு அவர்கள். அவரிடம் நான் ஓராண்டு தமிழ் பயின்றேன். அப்போது நண்பர் சரவணன் சுட்டிக்காட்டிய பரிபாடல் பகுதியைக் குறிப்பிட்டு அவர் இந்தக் கருத்தைக் கூறினார். அவர்தான் மேலப்பாண்டியன் அகிழ்தெரு பற்றியும் அப்போது கூறினார். அவரே அம்மன் சன்னைதித்தெரு விட்டவாசல் கல்வெட்டுபற்றியும் கூறினார். இதுபற்றி அடுத்துக் கூறியவர் மதுரைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல். நான் நெடுநல்வாடையில் வரும் பாண்டியன் அரண்மனை பற்றிய குறிப்புகளை அவரிடம் கூறியபோது அவர் சிரித்துக்கொண்டே கூறினார், "அதுதான் இப்போதைய மீனாட்சியம்மன் கோவில்". ஆக அந்த இரு தமிழறிஞர்களில் கருத்தை ஒட்டியே என்னுடைய கருத்தைச் சொன்னேன். அந்த இருவரும் இப்போது இல்லை. மற்றபடி தங்களின் மதநம்பிக்கைக்கு முரணான கருத்தை நான் பரப்புவதாக தயவுசெய்து எண்ணவேண்டாம்.
தங்கள் அன்புள்ள,
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 21, 2017, 10:10:26 AM10/21/17
to mintamil
வணக்கம் ஐயா.


2017-10-21 16:31 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புமிக்க காளையாருக்கு,
இன்றைய மதுரை மீனாட்சியம்மன் கோவில்தான் அன்றைய சங்ககாலப் பாண்டியரின் அரண்மனை இருந்த இடம் என்பது என்னுடைய கருத்து அல்ல. அது என்னுடைய ஐயம். அதனை உறுதிப்படுத்தியவர்கள் இருவர். முதலாமவர் பேராசிரியர் சங்கரராஜுலு அவர்கள். அவரிடம் நான் ஓராண்டு தமிழ் பயின்றேன். அப்போது நண்பர் சரவணன் சுட்டிக்காட்டிய பரிபாடல் பகுதியைக் குறிப்பிட்டு அவர் இந்தக் கருத்தைக் கூறினார். அவர்தான் மேலப்பாண்டியன் அகிழ்தெரு பற்றியும் அப்போது கூறினார். அவரே அம்மன் சன்னைதித்தெரு விட்டவாசல் கல்வெட்டுபற்றியும் கூறினார். இதுபற்றி அடுத்துக் கூறியவர் மதுரைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல். நான் நெடுநல்வாடையில் வரும் பாண்டியன் அரண்மனை பற்றிய குறிப்புகளை அவரிடம் கூறியபோது அவர் சிரித்துக்கொண்டே கூறினார், "அதுதான் இப்போதைய மீனாட்சியம்மன் கோவில்". ஆக அந்த இரு தமிழறிஞர்களில் கருத்தை ஒட்டியே என்னுடைய கருத்தைச் சொன்னேன். அந்த இருவரும் இப்போது இல்லை.

சுயம்புலிங்கத்தை இடம் மாற்ற முடியாது.  எனவே அதுவே மதுரையின் மையம். 
தாங்கள் குறிப்பிடும் இருவரும் பெரிதும் போற்றுதற்கு உரியவர்கள்.  
மதுரையில் உள்ளது சுயம்புலிங்கமாக இல்லாது இருந்தால்,  இவர்களது கூற்றை அப்படியே நானும் ஏற்றுக் கொள்வேன்.
கருத்துகள் மாறுபடுவதால், எது சரியானது என்று தெரிந்து கொள்வதற்காகவே விளக்கம் கேட்டேன் ஐயா.

மற்றபடி தங்களின் மதநம்பிக்கைக்கு முரணான கருத்தை நான் பரப்புவதாக தயவுசெய்து எண்ணவேண்டாம்.
தங்கள் அன்புள்ள,
ப.பாண்டியராஜா

வெளிவீதிகளுக்கும் மாரட் வீதிகளுக்கும் இடையே அகழியும் கோட்டையும் இருந்துள்ளது உண்மை.  இவை விஜயநகரப் பேரரசால் புதிதாக உருவாக்கப்பட்டனவா? அல்லது புதுப்பிக்கப்பட்டனவா? என்பதே என்து ஐயம்.

எல்லா தெய்வங்களையும் ஆன்றோர் சான்றோரையும் மதப்பாகுபாடு இன்றி வணங்கும் இயல்பினன் நான்.  
அகழியை ஆவணப் படுத்துவதில் மதநம்பிக்கை ஏதும் எனக்குச் சிறிதும் கிடையாது ஐயா.

kanmani tamil

unread,
Oct 23, 2017, 2:40:36 AM10/23/17
to mintamil
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்
நன்றி திரு.பொன் சரவணன் அவர்களே
இந்தப்பாடலைத் தட்டச்சு செய்ய மலைப்பாக இருந்தது .
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 23, 2017, 3:04:05 AM10/23/17
to mintamil
உள்ளே ஒருகோட்டையும் வெளியே ஒரு கோட்டையும் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளதா?
நாயக்கர் காலக் கோட்டை ஒன்றே ஒன்று தான் .அந்தக் கோட்டைக்கு இரண்டு
சுவர்கள் .நகரின் உட்புறத்தைப் பார்த்து அமைந்தது உட்கோட்டைச் சுவர்
.வெளியே அகழியை ஒட்டி அமைந்தது புறக்கோட்டைச்சுவர் .இரண்டு
சுவர்களுக்கும் இடையில் இருந்தது காவற்காடு .அடர்ந்த முள்மரக்காடு
-இப்போதைய பெருமாள் மேஸ்திரி வீதிகளும் மாரட் வீதிகளும் அவற்றைச் சூழ்ந்த
குடியிருப்புகளும் -படையெடுத்து வந்த எதிரிகளுக்கு சவாலாக இருந்த
காடு.(கே.இராஜய்யன் -history of madurai-p.180)புறக்கோட்டைச் சுவரை
அடுத்து அமைந்த அகழிகளின் மேல் இன்று வெளிவீதிகள் உள்ளன .

kanmani tamil

unread,
Oct 23, 2017, 3:48:30 AM10/23/17
to mintamil
அரிய அழகுடைய பொன்பொகுட்டையே ஒப்ப மதுரையின் நடுவே அமைந்த எம் வேந்தனாகிய
பாண்டியனது அரண்மனை
என்பது பெருமழைப்புலவர் உரை/ அதாவது இங்கு அண்ணல் கோயில் என்று
குறிப்பிடப்படுவது பாண்டியன் அரண்மனை.
இதுவேதான் மற்ற உரையாசிரியர் கருத்தும்.
அதாவது இன்றைக்கு ஆலாவாயன் கோயிலாக இருப்பது அன்றைக்கு அரசன் மாளிகையாக
இருந்திருக்கிறது.>
பரிபாடல் திரட்டு கூறும் அண்ணல் கோயில் திருமால் கோயில் என்று
தி.முருகரத்தினம் கூறுகிறார் .மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை போன்ற நகர்
என்று பாடப்பட்டமையால் இந்த எண்ணம் அவருக்குத் தோன்றியுள்ளது எனலாம் .இது
நகரின் அமைப்பை விளக்க எடுத்தாண்ட உவமை.அதன் காரணமாக அண்ணல் கோயில்
திருமால் கோயில் என்று கொள்வது பொருத்தமற்றது .
ச.சாம்பசிவன் அண்ணல் கோயில் மன்னனின் அரண்மனை என்கிறார் .2000ஆண்டு
காலமாக மதுரைக் கோயிலின் இருப்பிடத்தில் மாற்றம் நிகழவில்லை .ஏனெனில்
நாம் வழிபடும் லிங்கம் சுயம்புலிங்கம் அது ஒரு கடம்ப மரத்தின் படிவம்
siliconisationஎன்னும் வேதியல் மாற்றத்தால் கல்லானது .கடம்பவனக் காட்டில்
லிங்கத்தைப் பார்த்த தனஞ்சயன் என்னும் வணிகன் முதலில் அங்கே வழிபாட்டைத்
தொடங்கினான் என்று தான் மதுரைத் தலவரலாறும் கூறுகிறது .அதே
வழிபாட்டிடத்தை மையமாக வைத்தே பாண்டியன் நகரை நிர்மாணித்திருக்கிறான்
.அப்படியிருக்க கோயிலையே எப்படி அரண்மனையாக்கி குடியிருப்பான்? எனவே
இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை .அண்ணல் என்னும் சொல்லுக்கு தலைவன்
என்று ஒரு பொருள் இருப்பதாலும் கோயில் என்ற சொல் அரண்மனையையும்
குறிக்கும் என்பதாலும் சாம்பசிவனார் மனதில் இப்படி ஒரு எண்ணம்
தோன்றியுள்ளது .அவ்வளவே .
பொது மக்களிடம் செவிவழிச செய்தியாக மற்றோரு கருத்து நிலவுகிறது .கோயிலின்
கிழக்கே ஒரு பெரிய பூச்சந்தை முன்னர் இருந்தது .மாட்டுத்தாவணியை அடுத்த
வணிக வளாகம் தோன்றுவதற்கு முன்னால் வரை அது தான் பெரிய இடைஞ்சலான சந்தை
.அவ்விடம் பாண்டியன் அரண்மனை இருந்த இடம் என்று 33ஆண்டுகளுக்கு முன்னால்
கள ஆய்வு செய்தபோது கேள்விப்பட்டிருக்கிறேன் .இப்போதும் அங்கே ஒரு
காய்கறிச் சந்தை உள்ளது.பழைய பூச்சந்தையின் அமைப்பும்இக்காலக் கட்டிடம்
போல் இல்லை மிக உயரமாக காலத்தால் முற்பட்டது போல் தான் தோன்றும் .

kanmani tamil

unread,
Oct 23, 2017, 4:29:30 AM10/23/17
to mintamil
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதும் வாசிக்கக் கிடைத்தால்
கூடுதலான ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும் ஐயா.>
ஆளுநர் பிளாக்பர்ன் வருவாயத் துறைக்கு எழுதிய கடிதங்களின் பகுதிகளை
ஜெ.பாத்திமா அவர்கள் தனது ஆய்வேட்டில் எடுத்துக்காட்டியுள்ளார் .
பழைய மதுரை கெஜட்டில் இடம்பெற்றுள்ள மதுரையின் வரைபடத்தில் நாயக்கர்
கோட்டை இடம் பெற்றுள்ளது( இந்த இழையின் தொடக்கத்தில் திரு.காளைராசன்
இணைத்துள்ள2வது படம்போல் தான் அது இருந்தது .)அப்படத்திலுள்ள கோட்டையின்
வடக்குப்புறத்தில் இடையில் ஒரு திருப்பம் விரிகோணத்தில் உள்ளது.இன்று
கோட்டை இல்லையெனினும் அதைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ள வெளிவீதியின்
இடையில் அவ்வளைவான அமைப்பை இனம் காண முடிகிறது.modern lodge எனப்படும்
நகரப்பேருந்து நிற்குமிடத்தை அடுத்து வடக்கு வெளிவீதி வடக்குமுகமாகத்
திரும்பி சில கெஜ தூரம் சென்றபின் கிழக்கு முகமாகத்
திரும்புகிறது.மதுரைமாவட்ட மைய நூலகம் இத்திருப்பத்தின் முடிவிலேயே
இருக்கிறது .
கோட்டைச் சுவர்கள் தெற்கிலிருந்து மேற்கிலும், மேற்கிலிருந்து வடக்கிலும்
, வடக்கிலிருந்து கிழக்கிலும் 90டிகிரி நேர் கோணத்தில் திரும்புகின்றன
.ஆனால் கிழக்கிலிருந்து தெற்கில் திரும்பும் பொழுது மட்டும் சரிந்து
வளைவாகத் திரும்புகிறது .இன்றும் மதுரை நகரின் வெளி வீதிகளைச் சுற்றி
வரும்போது தெற்கு வெளிவீதி சரிவான மூலை அமைப்பைக் கொண்டே கிழக்கு
வெளிவீதியுடன் இணைகிறது .
.

Malarvizhi Mangay

unread,
Oct 23, 2017, 12:22:40 PM10/23/17
to mint...@googlegroups.com
தற்போது காய்கறிமார்க்கட்டும் இல்லை. ஒரு நாளைக்கு உதிரிப்பூ
வாங்கிக்கட்டி மூன்று நாட்கள் வைப்
போம்.

On 23-Oct-2017 2:25 pm, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kanmani...@gmail.com) Add cleanup rule | More info

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதும் வாசிக்கக் கிடைத்தால்
கூடுதலான ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும் ஐயா.>
ஆளுநர் பிளாக்பர்ன் வருவாயத் துறைக்கு எழுதிய கடிதங்களின் பகுதிகளை
ஜெ.பாத்திமா அவர்கள் தனது ஆய்வேட்டில் எடுத்துக்காட்டியுள்ளார் .
பழைய மதுரை கெஜட்டில் இடம்பெற்றுள்ள மதுரையின் வரைபடத்தில் நாயக்கர்
கோட்டை இடம் பெற்றுள்ளது( இந்த இழையின் தொடக்கத்தில் திரு.காளைராசன்
இணைத்துள்ள2வது  படம்போல் தான் அது இருந்தது .)அப்படத்திலுள்ள கோட்டையின்
வடக்குப்புறத்தில் இடையில் ஒரு திருப்பம் விரிகோணத்தில் உள்ளது.இன்று
கோட்டை இல்லையெனினும் அதைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ள வெளிவீதியின்
இடையில் அவ்வளைவான அமைப்பை இனம் காண முடிகிறது.modern lodge எனப்படும்
நகரப்பேருந்து நிற்குமிடத்தை அடுத்து வடக்கு வெளிவீதி வடக்குமுகமாகத்
திரும்பி சில கெஜ தூரம் சென்றபின் கிழக்கு முகமாகத்
திரும்புகிறது.மதுரைமாவட்ட மைய நூலகம் இத்திருப்பத்தின் முடிவிலேயே
இருக்கிறது .
கோட்டைச் சுவர்கள் தெற்கிலிருந்து மேற்கிலும், மேற்கிலிருந்து வடக்கிலும்
,  வடக்கிலிருந்து கிழக்கிலும் 90டிகிரி நேர் கோணத்தில் திரும்புகின்றன
.ஆனால் கிழக்கிலிருந்து தெற்கில் திரும்பும் பொழுது மட்டும் சரிந்து
வளைவாகத் திரும்புகிறது .இன்றும் மதுரை நகரின் வெளி வீதிகளைச் சுற்றி
வரும்போது தெற்கு வெளிவீதி சரிவான மூலை அமைப்பைக் கொண்டே கிழக்கு
வெளிவீதியுடன் இணைகிறது .
.


>>>> For more options, visit this group at
>>>> http://groups.google.com/group/minTamil
>>>> ---
>>>> You received this message because you are subscribed to the Google Groups
>>>> "மின்தமிழ்" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

>>>> For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 25, 2017, 12:28:32 PM10/25/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம் ஐயா.


On 20-Oct-2017 8:59 AM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> அன்புள்ள காளையாருக்கு,
> இந்தப் படத்தில் உள்ள கல்வெட்டுப் பலகை இருக்குமிடம் மதுரை கீழ ஆவணிமூலவீதிக்கு அருகில் அம்மன் சன்னதித் தெருவில் உள்ளது. இந்த இடத்தின் பெயர் விட்டவாசல். இது பாண்டியன் கோட்டையின் நுழைவுவாசல் என்கிரது இந்தக் கல்வெட்டு. நாயக்க மன்னர்கள் இடிக்காமல் விட்டுவிட்டதால் இது விட்ட வாசல் எனப்படுகிறது என்பர்.
> அடுத்தமுறை மதுரைக்குச் செல்லும்போது இங்குச் சென்று பாருங்கள்.
> ப.பாண்டியராஜா
>

விட்டவாசலில் உள்ள ஆங்கிலேயப் பொறியாளர் கல்வெட்டில் fort என்று உள்ளது.
பொறியாளருக்குப்
Fort என்பது வேறு,
Trench என்பது வேறு என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.

வெளிக்கோட்டை என்றால்

இரண்டும் அடுத்தடுத்து ஒட்டி இருக்கும் என்பதும், உள்கோட்டை என்றால் அகழி இல்லாமல் கோட்டை மட்டும் இருக்கும் என்பதும் தெரிந்திருக்கும்.

Trench என்ற வார்த்தை ஆங்கிலேயப் பொறியாளர் பயன்படுத்தாத காரணத்தினால், அவர் காலத்தில் இந்த இடத்தில் அகழி இருந்திருக்கவில்லை என்பது தெளிவு எனக் கருதுகிறேன் ஐயா.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தால் மதுரையின் வெளிவீதிக்  கோட்டை மற்றும் அகழி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும்.

viTTa vAsal.jpg

iraamaki

unread,
Oct 26, 2017, 3:26:26 AM10/26/17
to mint...@googlegroups.com
இன்றுநடக்கும் கீழடி ஆய்வுபற்றி இந்த இரு பேராசிரியர்களுக்குமே தெரியாது. (எனவே இருவரும் இற்றை மதுரையே பழம் மதுரை என்று எண்ணங் கொண்டிருந்திருக்கலாம்.) நான் சொல்வதற்கு அடிப்படைக் காரணம் பெருதகை (probability). (தற்கால ஐதராபாத்- செகந்திராபாத் போல்) ஒரு பெருநகரத்தின் 12 கி.மீ. தொலைவில் சமகாலத்தில் இன்னொரு நகர நாகரிகம் அமைய வாய்ப்புகள் குறைவு.  இருநகரங்கள் அப்படி இருந்திருந்தால் தமிழிலக்கியத்தில் அதைச் சொல்லாதிருந்திருப்பார்களா? கீழடி ஆய்வு தொடர்ந்தால், பழம் மதுரையின் முழுப்பரப்பும் புரியுமென்றே நான் நம்புகிறேன். 
 
என் கருதுகோள்
 
அழிந்துபோன பழைய மதுரையின் போல்மத்திலேயே இன்றைய மதுரை கடுங்கோனுக்கு அப்புறமெழுந்தது. இது சங்ககால மதுரையல்ல. ஒரேயொரு மாற்றம். அரசனின் அரண்மனைக்கு மாறாய் மீனாட்சியம்மன் கோயிலை நடுநாயகமாக்கி புது மதுரையைக் கடுங்கோனும் அவன் மகனும் எழுப்பி யிருக்கிறார். இறையனார் அகப்பொருளும் கடுங்கோன் காலத்திற்றான் எழுந்தது. அப்பொழுது தான் அங்கயற்கண்ணி சொக்கநாதர் தொன்மங்கள் தமிழரிடையே சமய உருவங்கொண்டு பெரிதாயின. அதற்குமுன் சங்க இலக்கியத்தில் இவை கிடையாது.  சிவநெறித் தாக்கம் கடுங்கோனுக்கு அப்புறமே எழுந்தது. நான் புரிந்துகொண்டவரை சிவநெறி என்ற ”நிறுவனப்படுத்தப்பட்ட சமய நெறி” 1700/1800 ஆண்டுக் காலத்ததே.  சங்ககாலத்தில் மதுராபதித் தெய்வம் பற்றிய கருத்தீடுகள் உறுதியாய் இருந்தன. கோயிலும் இருந்தது. ஆனால் மதுராபதியின் கோயில் ஊருக்கு நடுவில் என்று சிலம்பு சொல்வதில்லை. மதுராபதி தான் மீனாட்சியாய்ப் பின்னாற் புரிந்துகொள்ளப்பட்டாள். சிலம்பு படித்தாலே அது விளங்குகிறது.
 
எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி  புதியவூரோ அ
துபோல இற்றை மதுரை புதியவூர்.  (இன்றைக்கு இருக்கும் பல பெரியவூர்கள் பழைய பெரியவூர்களின் அருகில்தான் இருந்துள்ளன.  (இதுபற்றி நிறையச் செய்திகள் சொல்லலாம்.)
 
இதேபோல் பழைய சேரர் வஞ்சி (நான் கொங்குவஞ்சியை இதோடு குழப்பிக்கொள்வதில்லை திரு, நாக.கனேசன் அருள்கூர்ந்து உள்ளேபுகுந்து குழப்ப வேண்டாம். அது இந்த இழையை வேறெங்கோ கொண்டுசெல்லும்.) இற்றைக் கொடுங்களூருக்கு அருகில் சுள்ளியம்பேராற்றங்கரையில் இருந்திருக்க  வேண்டும். பழையவஞ்சி காணாதுபோனதால், இன்றுநாம் தடுமாறுகிறோம். அவ்வளவுதான். முசிறியை இற்றைப் பட்டினத்தில் கண்டெடுத்த தொல்லியலாளர் பழைய வஞ்சியையும் உறுதியாய்க் கண்டுபிடிப்பரென்றே நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.
Sent: Saturday, October 21, 2017 4:31 PM
Subject: Re: [MinTamil] மதுரை அகழியும் கோட்டையும்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 27, 2017, 8:36:21 AM10/27/17
to mintamil

விட்டவாசலில் உள்ள ஆங்கிலேயப் பொறியாளர் கல்வெட்டில் fort என்று உள்ளது.
பொறியாளருக்குப் 
Fort என்பது வேறு,
Trench என்பது வேறு என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.

வெளிக்கோட்டை என்றால்
இரண்டும் அடுத்தடுத்து ஒட்டி இருக்கும் என்பதும், உள்கோட்டை என்றால் அகழி இல்லாமல் கோட்டை மட்டும் இருக்கும் என்பதும் தெரிந்திருக்கும்.

Trench என்ற வார்த்தை ஆங்கிலேயப் பொறியாளர் பயன்படுத்தாத காரணத்தினால், அவர் காலத்தில் இந்த இடத்தில் அகழி இருந்திருக்கவில்லை என்பது தெளிவு எனக் கருதுகிறேன் ஐயா

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தால் மதுரையின் வெளிவீதிக்  கோட்டை மற்றும் அகழி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும்.>

விட்டவாசல் பாண்டியன் கட்டிய கோட்டையின் எச்சம் .அங்கே உட்கோட்டை ச்  சுவரும் புறக்கோட்டைச் சுவரும் இருந்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை . பாண்டியன் கோட்டைக்கு அகழி இருந்தது என்பதற்கு நான்கு தெருக்களின் பெயர்களே ஆதாரம் .அவ்வளவே .மாசி வீதிகள் அகழியின் மேல் அமைந்தன என்பதற்கும்ஆதாரம் எதுவும் இல்லை .

 நாயக்கர் கட்டிய கோட்டைக்கு அகழி  இருந்தது .ஆங்கிலேயர் ஆட்சியில் அது வெளிவீதியாக மாற்றம் பெற்றது .இதற்கு மதுரை மாவட்ட கெசட் ஆதாரம் தருகிறது .ஆளுநர் ப்ளாக்பர்ன் நகரை விரிவாக்க நினைத்த பொழுது குற்றவாளிகளை வைத்து வேலை வாங்க வழியில்லை .ஏனெனில் அப்போது பாம்பனில் பாலம் கட்டும் வேலை நடந்து கொண்டு இருந்தது .அதனால் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கென விலைபேசி குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவர்களே அதை இடித்து அகழியைத் தூர்த்து கட்டிடங்களையும் எழுப்பிக் கொள்ளும்படிஏற்பாடு செய்திருந்தார் .(b.s.பாலிகா -the madras district gazetteers-madurai-p.395)இதனால் தான்   மாசி  வீதிகளுக்கும் வெளி வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில்ஆங்காங்கு  குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஒருங்கு சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.

கண்மணி 



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 28, 2017, 7:46:35 PM10/28/17
to mintamil
வணக்கம் ஐயா.

2017-10-26 12:56 GMT+05:30 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
இன்றுநடக்கும் கீழடி ஆய்வுபற்றி இந்த இரு பேராசிரியர்களுக்குமே தெரியாது. (எனவே இருவரும் இற்றை மதுரையே பழம் மதுரை என்று எண்ணங் கொண்டிருந்திருக்கலாம்.)
ஆமாம் ஐயா.
மிகவும் சரியான கருத்து.
 
நான் சொல்வதற்கு அடிப்படைக் காரணம் பெருதகை (probability). (தற்கால ஐதராபாத்- செகந்திராபாத் போல்) ஒரு பெருநகரத்தின் 12 கி.மீ. தொலைவில் சமகாலத்தில் இன்னொரு நகர நாகரிகம் அமைய வாய்ப்புகள் குறைவு.  இருநகரங்கள் அப்படி இருந்திருந்தால் தமிழிலக்கியத்தில் அதைச் சொல்லாதிருந்திருப்பார்களா? கீழடி ஆய்வு தொடர்ந்தால், பழம் மதுரையின் முழுப்பரப்பும் புரியுமென்றே நான் நம்புகிறேன். 

குலசேகர பாண்டியன் ஆண்ட மணவூர் மிகப் பெரிய நகரம்.  அதுவும் ஒரு சிவன் கோயிலை மையமாகக் கொண்டே நிர்மாணிக்கப் பட்டிருந்திருக்கிறது என்பது எனது கருத்து.
​ 
 
என் கருதுகோள்
 
அழிந்துபோன பழைய மதுரையின் போல்மத்திலேயே இன்றைய மதுரை கடுங்கோனுக்கு அப்புறமெழுந்தது. இது சங்ககால மதுரையல்ல. ஒரேயொரு மாற்றம். அரசனின் அரண்மனைக்கு மாறாய் மீனாட்சியம்மன் கோயிலை நடுநாயகமாக்கி புது மதுரையைக் கடுங்கோனும் அவன் மகனும் எழுப்பி யிருக்கிறார். இறையனார் அகப்பொருளும் கடுங்கோன் காலத்திற்றான் எழுந்தது. அப்பொழுது தான் அங்கயற்கண்ணி சொக்கநாதர் தொன்மங்கள் தமிழரிடையே சமய உருவங்கொண்டு பெரிதாயின. அதற்குமுன் சங்க இலக்கியத்தில் இவை கிடையாது.  சிவநெறித் தாக்கம் கடுங்கோனுக்கு அப்புறமே எழுந்தது. நான் புரிந்துகொண்டவரை சிவநெறி என்ற ”நிறுவனப்படுத்தப்பட்ட சமய நெறி” 1700/1800 ஆண்டுக் காலத்ததே.  சங்ககாலத்தில் மதுராபதித் தெய்வம் பற்றிய கருத்தீடுகள் உறுதியாய் இருந்தன. கோயிலும் இருந்தது. ஆனால் மதுராபதியின் கோயில் ஊருக்கு நடுவில் என்று சிலம்பு சொல்வதில்லை. மதுராபதி தான் மீனாட்சியாய்ப் பின்னாற் புரிந்துகொள்ளப்பட்டாள். சிலம்பு படித்தாலே அது விளங்குகிறது.
 
எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி  புதியவூரோ அ
துபோல இற்றை மதுரை புதியவூர்.  (இன்றைக்கு இருக்கும் பல பெரியவூர்கள் பழைய பெரியவூர்களின் அருகில்தான் இருந்துள்ளன.  (இதுபற்றி நிறையச் செய்திகள் சொல்லலாம்.)
 
இதேபோல் பழைய சேரர் வஞ்சி (நான் கொங்குவஞ்சியை இதோடு குழப்பிக்கொள்வதில்லை திரு, நாக.கனேசன் அருள்கூர்ந்து உள்ளேபுகுந்து குழப்ப வேண்டாம். அது இந்த இழையை வேறெங்கோ கொண்டுசெல்லும்.) இற்றைக் கொடுங்களூருக்கு அருகில் சுள்ளியம்பேராற்றங்கரையில் இருந்திருக்க  வேண்டும். பழையவஞ்சி காணாதுபோனதால், இன்றுநாம் தடுமாறுகிறோம். அவ்வளவுதான். முசிறியை இற்றைப் பட்டினத்தில் கண்டெடுத்த தொல்லியலாளர் பழைய வஞ்சியையும் உறுதியாய்க் கண்டுபிடிப்பரென்றே நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.

ஐயா,
தங்களது கருத்து முற்றிலும் சரியே.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 28, 2017, 7:59:58 PM10/28/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

2017-10-27 18:06 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

விட்டவாசலில் உள்ள ஆங்கிலேயப் பொறியாளர் கல்வெட்டில் fort என்று உள்ளது.
பொறியாளருக்குப் 
Fort என்பது வேறு,
Trench என்பது வேறு என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.

வெளிக்கோட்டை என்றால்
இரண்டும் அடுத்தடுத்து ஒட்டி இருக்கும் என்பதும், உள்கோட்டை என்றால் அகழி இல்லாமல் கோட்டை மட்டும் இருக்கும் என்பதும் தெரிந்திருக்கும்.

Trench என்ற வார்த்தை ஆங்கிலேயப் பொறியாளர் பயன்படுத்தாத காரணத்தினால், அவர் காலத்தில் இந்த இடத்தில் அகழி இருந்திருக்கவில்லை என்பது தெளிவு எனக் கருதுகிறேன் ஐயா

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தால் மதுரையின் வெளிவீதிக்  கோட்டை மற்றும் அகழி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும்.>

விட்டவாசல் பாண்டியன் கட்டிய கோட்டையின் எச்சம் .அங்கே உட்கோட்டை ச்  சுவரும் புறக்கோட்டைச் சுவரும் இருந்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை . பாண்டியன் கோட்டைக்கு அகழி இருந்தது என்பதற்கு நான்கு தெருக்களின் பெயர்களே ஆதாரம் .அவ்வளவே .மாசி வீதிகள் அகழியின் மேல் அமைந்தன என்பதற்கும்ஆதாரம் எதுவும் இல்லை .

 நாயக்கர் கட்டிய கோட்டைக்கு அகழி  இருந்தது .

என்னுடைய ஒரே ஐயம் இதுதான்.
வெளிவீதிகளுக்கு ஒட்டி இருந்த அகழி கோட்டை இரண்டையும் விசயநகரப் பேரசு காலத்தில் நாயக்கர்கள் புதிதாகக் கட்டினரா? அல்லது ஏற்கனவே இருந்ததைப் புதுப்பித்தனரா?

இதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா?  அன்புடன் அறியத் தர வேண்டுகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அது வெளிவீதியாக மாற்றம் பெற்றது .இதற்கு மதுரை மாவட்ட கெசட் ஆதாரம் தருகிறது .ஆளுநர் ப்ளாக்பர்ன் நகரை விரிவாக்க நினைத்த பொழுது குற்றவாளிகளை வைத்து வேலை வாங்க வழியில்லை .ஏனெனில் அப்போது பாம்பனில் பாலம் கட்டும் வேலை நடந்து கொண்டு இருந்தது .அதனால் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கென விலைபேசி குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவர்களே அதை இடித்து அகழியைத் தூர்த்து கட்டிடங்களையும் எழுப்பிக் கொள்ளும்படிஏற்பாடு செய்திருந்தார் .(b.s.பாலிகா -the madras district gazetteers-madurai-p.395)இதனால் தான்   மாசி  வீதிகளுக்கும் வெளி வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில்ஆங்காங்கு  குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஒருங்கு சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.

கண்மணி 

(the madras district gazetteers-madurai-p.395) இதுஒரு pro British statement.   கோட்டையை இடிக்கக் கூடாது எனப் போராட்டம் செய்த மக்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.  அவர்களது கருத்துகளில் அகழி மற்றும் கோட்டையின் வரலாறு இருக்க வேண்டும், அந்த வரலாற்றின் அடிப்படையில்தான் அவர்கள் கோட்டையும் அகழியையும் அழிப்பதை எதிர்த்து இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

madras district gazetteers-madurai-p.395 தங்களிடம் இருந்தால் அன்புடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

N. Ganesan

unread,
Oct 28, 2017, 9:52:32 PM10/28/17
to மின்தமிழ்
Kalairasan wrote:
> ஒரே இடம் என்றால்,
> சுவாமிகள் தேர் 300 ஆண்டுகள் பழைமையானது என்று கல்வெட்டு உள்ளதே!
> 300 வருடங்களாகத் தேர் ஓடிவரும் வீதியை அகழி இருந்த இடம் என எப்படிக் கொள்ள முடியும்?  


தேர் 300 வருடம் என்றுதான் கல்வெட்டு கூறுகிறது.
300 வருடமாக தேர் அகழி இருந்த இடத்தில் ஓடிவர்கிறது எனச் சொல்லவில்லை.

தேரை நிறுத்த அண்மைக்காலத்தில் ஒரு ஷெட் போட்டிருக்கிறார்கள்.

பழங்கால ஓவியத்தில் தேர் ஷெட் இல்லை.

நா. கணேசன்

--

N. Ganesan

unread,
Oct 29, 2017, 10:40:51 AM10/29/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
மல்லல் மூதூர் மதுரை:
----------------

ஆன்பொருனை நதிக்கரையிலே (ஆன்பொருந்தம், ஆம்பிராவதி/சூதநதி) ஆன்நிலை அப்பர் கோயில் கொண்டுள்ள வஞ்சி மாநகரின் அகநகர் (downtown = கருவூர்) சங்க காலச் சேரமன்னர்கள் கொங்குநாட்டையும், பாலைக்காடு கணவாய் இணைத்த நடுக் கேரளத்தையும் ஆண்டன. அச்சேரர்க்கு தெற்கே ஆய் மன்னர்கள் குமரி, நெல்லைப் பகுதிகளில். வடகொங்கிலே அதிகமான்கள் (குதிரைமுகம் போன்ற பிரதேசங்கள்). All roads lead to Rome என்பதுபோல, வஞ்சி மாநகரின் அகநகரிலே இருந்த சேரர் அரண்மனையில் பல புலவர்கள் வாழ்ந்தார்கள். இந்த வஞ்சி downtown palace scholars-கு “கருவூர்” என்ற முன்னொட்டு இருப்பதைச் சங்கப் புலவர்கள் பெயரிலே காண முடிகிறது.

பழைய மதுரை பற்றிய முக்கியமான ஆய்வினைப் பேரா. ப. பாண்டியராசா தந்துள்ளார்கள்:
மல்லல் மூதூர் மதுரை,
On Monday, May 11, 2015 at 12:08:16 AM UTC-7, Pandiyaraja wrote:
அன்புடையீர்,

இங்கு நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சென்ற கட்டுரையில் தற்போதுள்ள மீனாட்சியம்மன் கோவிலின் படத்தைப்போட்டு, அன்றைக்கு இதுவே பாண்டியன் அரண்மனையாக இருந்திருக்கிறது என்று எழுதியிருந்தேன். இது என்னுடைய கருத்தா அல்லது தமிழறிஞர்கள் ஏற்றுக்கொண்ட கருத்தா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது (மின்தமிழில் அல்ல - . தனிப்பட்ட உரையாடகளில்). இக் கருத்து நான் 1985-இல் முதன்முதலாக நெடுநல்வாடையைப் படித்தபொழுதிலிருந்தே எனக்குள் உருவானது. பின்னர் 2005-இல் மதுரைக்காஞ்சியைப் படித்தபோது இது உறுதிப்பட்டது. எனவேதான் அவற்றை ஆதாரமாகக்கொண்டு இக் கருத்தை இங்கு வெளிப்படுத்தினேன். இப்போது இதுபற்றி இரு அறிஞர்கள் கருத்தையும் தங்கள் முன் வைக்கிறேன்.

1. மா.இராசமாணிக்கனார் - பத்துப்பாட்டு ஆராய்ச்சி - சாகித்திய அகாதெமி வெளியீடு - 2012 - பக்கம். 177.
"கோட்டையுள் வையையாற்றைப்போன்ற அகன்ற தெருக்கள் அமைந்திருந்தன. அரண்மனை நகரத்தின் நடுநாயகமாய் விளங்கியது".

2. முனைவர்.தமிழண்ணல், மதுரை, மதுரை மாநகர் - ஊரும் பேரும் - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், மதுரை, திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா - சிறப்பு மலர் - 08-04-2009 - பக்கம் 155
"மதுரை மாநகரின் மையத்தில் முன்பு  பாண்டியன் அரண்மனை இருந்தது. இப்போது ஆலவாய் அண்ணல் சொக்கலிங்கப் பெருமான் மீனாட்சியம்மை திருக்கோயில் உள்ளது"

இந்த இருவருமே மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்களாகப் பலகாலம் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முனைவர். தமிழண்ணல் இன்றும் மதுரையில் வாழ்கிறார்.

இவர்களின் கூற்றும் மிக அண்மைக்காலத்தில்தான் எனக்குக் கிடைத்தது. எனினும் எனது கருத்தை உறுதிப்படுத்த நான் சார்ந்திருப்பவை நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களே.
நன்றி,
ப.பாண்டியராஜா

----------

அப்போது பேரா. மலர்விழி எழுதிய குறிப்புப் பார்க்கவேண்டும். அதற்கு நான் எழுதிய மறுமொழி:
On Tuesday, May 12, 2015 at 8:30:52 PM UTC-7, malarmangay64 wrote:
> மதுரை சிம்மக்கல் பகுதியில் பழைய சொக்கநாதர் கோயில் எனசிறுகோயில் ஒன்றுண்டு.அதுவே மூலக்கோவில்.மதுரைமக்களின் தொன்மமும் (Myth) அதுதான்.

பாண்டியராஜா மகள் மீனாட்சி ஆனதால் நடுவே இருந்திருக்கும் மீனாட்சி கோயில். பின்னர் சொக்கநாதர் கோயில் அமைக்கப்பட்டதோ?

ஆதிசொக்கநாதர் கோயில்:
டாக்டர் ஜேபி திருவிளையாடற்புராணத்தில் பழைய சொக்கநாதர் கோயில்
பற்றிச் சொல்கிறார்:

தென்திரு ஆலவாய் கோயில் - இது பிற்காலத்தது எனலாம்.
(பிப். 2014 இழையில் குறிப்பிட்டது.)


-------------

என் கருத்து: மதுரைக் காஞ்சியில் ‘மழுவாள் நெடியோன்’ எனப்படும் லிங்க வடிவான (குடிமல்லம் விடங்கர் போல) இருந்த கோயில்
ஆதி சொக்கநாதர் கோயில். பாண்டியர்கள் அரண்மனை இப்போதைய மீனாட்சி கோயில். பல பழைய அரண்மனைகளில்
குலதெய்வ தேவதைக்குக் கோயில் இருக்கும். ராஜஸ்தானில் பார்க்கலாம். மைசூர் அரண்மனையில். முகவை ராமநாதபுரம்
சேதுபதி ராசன் அரண்மனையில் ராஜராஜேஸ்வரி, கொங்குநாட்டிலே பழயகோட்டை, ஊத்துக்குழி ஜமீன்களில், ....
இதுபோலவே, பாண்டியராஜா அரண்மனையில் அவர்கள் குலகொழுந்தாகிய மீனாட்சி அம்மைக்குச் சிறுகோயில் சங்க காலத்தில்
இருந்திருக்கும். சங்கம் மருவிய காலத்தில் சொக்கநாதருக்கும் கோயில் அமைத்துள்ளனர். ‘மழுவாள் நெடியோன்’ சொக்கநாதர்
கோயிலின் பெருமை மங்கிவிட்டது. இதனை புராணம் வாயிலாக பரஞ்சோதி முனிவர் indirect-ஆகக் குறிக்கிறார்.
சங்கப் புலவர்களும், இடைக்காடரும் தங்கியிருந்தனர் ஆதி சொக்கநாதர் கோயிலில். பாண்டியராஜன் போய்
புலவர்கள் பிணக்கைத் தீர்த்துவைத்து இப்போதைய சொக்கநாதர்-மீனாட்சி கோயிலுக்கு எல்லோரையும் அழைத்துவந்தான்
என ஒரு கதையை ‘இடைக்காடர் பிணக்குத் தீர்த்த படலம்’ என்று பாடியும் இருக்கிறார்.

The growth of Madurai Meenakshi temple complex from Pandya kings' palace is a textbook example of local goddes, a Kuladevata of Pandyas, getting assimilated
with the Great Goddess of India. And, probably the Adi Chokanatha temple is the "MakaravaaL Nediyon" temple referred to in Madurai-k-Kaanji long verse.
Makara vaaL neDiyon, the great god with Axe as the weapon, was around 500 BC, VaruNa of the Vedas, and slowly changing to the great god (Mahadeva of Hinduism), Shiva.
I have outlined this transformation in Linga worship in India across 45 centuries, see 16th World Sanskrit Conference (Bangkok, Thailand) article published.
How woul "Makara vaaL Nediyon" in Madurai - perhaps its locale was Adi Chokkanatha temple - have looked? Take a look at Figure. 12,

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 29, 2017, 11:03:53 AM10/29/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
should be "Mazhu vaaL neDiyOn". One form is the Anthropomorphic Axe (AA, known locally as Fan Stone (visiri-kal) ) huge monoliths of Pre-Sangam times in Mottur, Udayarnattam, Siddhannavasal, ...

N. Ganesan

unread,
Oct 30, 2017, 12:00:32 AM10/30/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com

இன்னொரு நூலில் இருந்து:

’தீபம்’ நா. பார்த்தசாரதி, பழந்தமிழர் கட்டடக் கலையும், நகரமைப்பும்,
தமிழ்ப் புத்தகாலயம், 1992, பக். 181,
” இயல் ஏழு

மதுரை நகரம்

பாண்டியர் தலைநகரமாயிருந்த மதுரை நகரின் அமைப்புத் தாமரைப்பூவின் அமைப்போடு ஒப்பிடப்பட்டுள்ளது. கட்டடக்கலை நகரமைப்பு முதலியவற்றை விவரிக்கும் மயமத நூலில் பத்மம் (தாமரை) என்பது நகரமைப்பு வகைகளுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. மதுரை நகருக்கும் அவ்விலக்கணம் பொருந்துகிறது.

சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடல்,

மதுரை நகரமானது திருமாலின் உந்தியில் அலர்ந்த தாமரை மலரை ஒக்கும்.

அந்த நகரத்துள்ள தெருக்கள் அம்மலரின் இதழ்களை ஒக்கும்.

பாண்டிய மன்னனது அரண்மனை அம்மலரின் நடுவில் உள்ள பொகுட்டை ஒக்கும். 

அந்நகரில் வாழும் தமிழ்க் குடிமக்கள் அத்தாமரை மலரின் தாதுக்களை ஒப்பர்.

அந்நகரைத் தேடிவரும் பரிசில் வாழ்நர் தாதுண்ண வரும் வண்டுகளை ஒப்பர்,” [...]


இதுபோலவே, பாண்டியராஜா அரண்மனையில் அவர்கள் குலக்கொழுந்தாகிய மீனாட்சி அம்மைக்குச் சிறுகோயில் சங்க காலத்தில்
இருந்திருக்கும். சங்கம் மருவிய காலத்தில் சொக்கநாதருக்கும் கோயில் அமைத்துள்ளனர். ‘மழுவாள் நெடியோன்’ சொக்கநாதர்
கோயிலின் பெருமை மங்கிவிட்டது. இதனை புராணம் வாயிலாக பரஞ்சோதி முனிவர் indirect-ஆகக் குறிக்கிறார்.
சங்கப் புலவர்களும், இடைக்காடரும் தங்கியிருந்தனர் ஆதி சொக்கநாதர் கோயிலில். பாண்டியராஜன் போய்
புலவர்கள் பிணக்கைத் தீர்த்துவைத்து இப்போதைய சொக்கநாதர்-மீனாட்சி கோயிலுக்கு எல்லோரையும் அழைத்துவந்தான்
என ஒரு கதையை ‘இடைக்காடர் பிணக்குத் தீர்த்த படலம்’ என்று பாடியும் இருக்கிறார்.

The growth of Madurai Meenakshi temple complex from Pandya kings' palace is a textbook example of local goddess, a Kuladevata of Pandyas, getting assimilated
with the Great Goddess of India. And, probably the Adi Chokanatha temple is the "MazhuvaaL Nediyon" temple referred to in Madurai-k-Kaanji long verse.
Mazhu vaaL neDiyon, the great god with Axe as the weapon, was around 500 BC, VaruNa of the Vedas, and slowly changing to the great god (Mahadeva of Hinduism), Shiva.

N. Ganesan

unread,
Oct 30, 2017, 12:30:04 AM10/30/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
"சிறப்புடைய மதுரையாகிய பேரூரானது திருமாலின் தொப்புளிலே பூத்த தாமரைப் பூவினைப் போன்றதாகும். அப்பூவின் அகவிதழ்களைப் போன்றவை அதன் தெருக்கள். அவ்விதழ்களின் நடுவே உள்ள அரிய தாமரைக் கொட்டையினைப் போல விளங்கியது, பெருமையிற் சிறந்தவனாகிய பாண்டியனின் அரண்மனை. அந்நகரிலேயிருக்கிற குடிமக்கள் குளிர்ந்த தமிழ்மொழியினைப் பேசுபவர்கள்.” [...]
பக். 45. முத்தமிழ் மதுரை, புலியூர்க் கேசிகன், மங்கை வெளியீடு, 2010

kanmani tamil

unread,
Oct 30, 2017, 2:19:52 AM10/30/17
to mintamil
<தற்போது காய்கறிமார்க்கட்டும் இல்லை. ஒரு நாளைக்கு உதிரிப்பூ
வாங்கிக்கட்டி மூன்று நாட்கள் வைப்>
அன்புடைய மலர்விழி ,
நான் உங்களை சரியாக அடையாளம் காண்கிறேனா ?இல்லையா ?என்று தெரியவில்லை .மதுரை சாந்திநிகேதன் குடியிருப்பு வளாகத்தில் உங்களை இருமுறை சந்தித்திருக்கிறேன் என்று நினைவு .சரியா?
கண்மணி 

kanmani tamil

unread,
Oct 30, 2017, 2:48:30 AM10/30/17
to mintamil
<இன்றுநடக்கும் கீழடி ஆய்வுபற்றி இந்த இரு பேராசிரியர்களுக்குமே தெரியாது. (எனவே இருவரும் இற்றை மதுரையே பழம் மதுரை என்று எண்ணங் கொண்டிருந்திருக்கலாம்.) நான் சொல்வதற்கு அடிப்படைக் காரணம் பெருதகை (probability). (தற்கால ஐதராபாத்- செகந்திராபாத் போல்) ஒரு பெருநகரத்தின் 12 கி.மீ. தொலைவில் சமகாலத்தில் இன்னொரு நகர நாகரிகம் அமைய வாய்ப்புகள் குறைவு.  இருநகரங்கள் அப்படி இருந்திருந்தால் தமிழிலக்கியத்தில் அதைச் சொல்லாதிருந்திருப்பார்களா? கீழடி ஆய்வு தொடர்ந்தால், பழம் மதுரையின் முழுப்பரப்பும் புரியுமென்றே நான் நம்புகிறேன்.> 
 ஐயா வணக்கம்.
கீழடியில் நடக்கும் ஆய்வும் அங்கு கிடைத்துள்ள பண்டைய எச்சங்களும் மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றன .என் பேரன்சென்ற ஆண்டில்  நேரில் சென்று பார்த்து 12நிழற்படங்கள் எடுத்துக் கொண்டு வந்து தந்துள்ளான்.அவற்றை மடலோடு இணைக்கும் உத்தியைக் கற்றுக் கொண்டபின் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு பெருநகரத்தின் 12கி.மீ.தொலைவில் இன்னொரு நகர நாகரிகம் அமையும் அளவிற்கு தமிழகம் மேன்மையுற்று இருந்தது என்பது தான் என்னுடைய கருத்து.
தமிழ் இலக்கியத்தில் ஆதாரம் -மணவூரைப பாண்டியன் தற்காலிகத் தலைநகராக்கி ஆண்டுவந்தானே .அதன் அருகில் தானே கீழடி இருக்கிறது . 
கண்மணி 

kanmani tamil

unread,
Oct 30, 2017, 7:21:19 AM10/30/17
to mintamil
<எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி  புதியவூரோ அ 
துபோல இற்றை மதுரை புதியவூர்.>
இன்றைய கூடல் அழகர் கோயிலை மேற்கெல்லையாகவும் கீழ் மதுரையை கிழக்கெல்லையாகவும் , 

சொக்கநாதர் சந்நிதியை வடகிழக்கு மூலையிலும் கொண்டு சங்ககால மதுரை இருந்தது.
காலந்தோறும் மதுரை வடக்கு நோக்கி விரிந்துள்ளது 
.வங்கியசேகரபாண்டியன் அண்ணல் கோயிலை  மையமாக வைத்து நகரை நிர்மாணித்த போது நகர் வடக்கே விரிவடைந்ததுடன் புறநகர்ப் பகுதிகளும் தோன்றின 
1).மேற்கெல்லையாக இருந்த கூடலழகர் கோயில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதியானது .(இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு இருந்தவளமுடையார் என்றுதான் பெயர்.பரிபாடல்" இருந்தையூர் அமர்ந்த செல்வ "என்று போற்றுகிறது.)
2)அதையடுத்துசுந்தரபாண்டியன் காலத்தில்  நடுவூர் என்னும் புறநகர்ப் பகுதி தோன்றியது  .இன்றைய இம்மையே நன்மை தருவார் கோயிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளும் நடுவூர் ஆகும்.இக்கோயிலில் உள்ள அம்மனுக்கு நடுவூர் நாயகி என்று பெயர்.
3,4,5,6)இவை தவிர வங்கியசேகரபாண்டியன் 4திசைகளில் நிர்மாணித்த 4கோயில்களும் அவ்வவற்றைச் சூழ்ந்த பகுதிகளும் 4புறநகர்ப் பகுதிகளாயின.இவைபற்றி இதே இழையில் முன்னர் ஒரு மடலில் விரிவாகப் பேசியிருக்கிறேன் .
7)இப்போது மயமதம் கூறிய விதிப்படி ஈசான்யத்தில் -வடகிழக்கு மூலையில் -சிவனுக்குரிய கோயில் அமைய வேண்டும் .என்பதற்கு ஏற்பத் தோன்றியுள்ளது வடதிருவாலவாய் .
    விஸ்வநாத நாயக்கர் நகரை விரிவாக்கிப் புதிய கோட்டை கட்டிய போது மேற்சுட்டிய7பகுதிகளில்முதல்  6பகுதிகள் மாசிவீதிகள் மூலம் இணைக்கப்பட்டன. நாலாபுறமும் நகர் விரிந்த போது வடக்கு நோக்கியும் விரிந்துள்ளது .ஆனால் பாண்டியன் கட்டிய காளிகோயில்   வடக்கு மாசி வீதியில் இணைந்தாலும் வடதிருவாலவாய் மாசிவீதியில் இணைய வழியில்லை ஆதலால் அது வடக்கு வாசலில் கோட்டைக்குள்ளே அடங்கியது.
.  ஆங்கிலேயர் நாயக்கர் கட்டிய கோட்டையைத் தகர்த்த பிறகு இது புதிதாகத் தோன்றியது அல்ல என்னும் உண்மை தோன்ற பழைய சொக்கநாதர் கோயில் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டது.நகர் நாலாபுறமும் விரிந்தது -ஆற்றை நோக்கியும் விரிந்தது.ஆற்றுக்கு அப்பாலும் விரிந்தது .
கண்மணி 

N. Ganesan

unread,
Oct 30, 2017, 10:10:30 AM10/30/17
to மின்தமிழ், vallamai
நல்ல தகவல்கள். நன்றி.

The Madurai Temple Complex, 1974 Kumbabhishkeam Souvenir - படித்துக் கொண்டுள்ளேன்.

கே. ஜி. கிருஷ்ணன், ஆர்க்கியாலஜிஸ்ட், மதுரை கோவிலின் கட்டிடங்களில்
12-ஆம் நூற்றாண்டுக்கு முந்தியன எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏ. கேசவன், B.E., மதுரை நகரின் வளர்ச்சி பற்றி நல்ல கட்டுரை எழுதியுள்ளார்.
1757, 1857, 1947, 1970 ஆண்டுகளில் மதுரைப் பரப்பளவு காட்டப்பட்டுள்ளது.

இரு கட்டுரைகளையும் பின்னர் இணைக்கிறேன்.

வரும் நவம்பர் 23-ஆம் தேதி ஹ்யூஸ்டனில் மதுரை மீனாட்சி குடமுழுக்கு தினம்.
1970-களில் வந்த மதுரை பட்டர்களில் தங்கம் பட்டர் 90+ எங்களோடு உள்ளார்கள்.
அவர் தம்பி ராஜரத்தின பட்டர் சொக்கேசன் திருவடி நிழல் எய்திவிட்டார்கள்.
அவர்கள் இருவரும் செய்யும் மீனாள் தமிழர்ச்சனை:
இதையெல்லாம் காட்டித்தான் யூனிகோடில் தமிழ்  பெற்றேன்.

நா. கணேசன்

ச. சாம்பசிவன், B.A., தமிழண்ணல், மா. ரா., தீபம் நா.பா., போலவே,
தாமரைப் பொகுட்டாக இருந்தது பாண்டியன் அரண்மனை என அவர் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளார்.

kanmani tamil

unread,
Nov 2, 2017, 4:28:07 AM11/2/17
to mintamil
<ஆன்பொருனை நதிக்கரையிலே (ஆன்பொருந்தம், ஆம்பிராவதி/சூதநதி) ஆன்நிலை அப்பர் கோயில் கொண்டுள்ள வஞ்சி மாநகரின் அகநகர் (downtown = கருவூர்) சங்க காலச் சேரமன்னர்கள் கொங்குநாட்டையும், பாலைக்காடு கணவாய் இணைத்த நடுக் கேரளத்தையும் ஆண்டன. அச்சேரர்க்கு தெற்கே ஆய் மன்னர்கள் குமரி, நெல்லைப் பகுதிகளில். வடகொங்கிலே அதிகமான்கள் (குதிரைமுகம் போன்ற பிரதேசங்கள்). All roads lead to Rome என்பதுபோல, வஞ்சி மாநகரின் அகநகரிலே இருந்த சேரர் அரண்மனையில் பல புலவர்கள் வாழ்ந்தார்கள். இந்த வஞ்சி downtown palace scholars-கு “கருவூர்” என்ற முன்னொட்டு இருப்பதைச் சங்கப் புலவர்கள் பெயரிலே காண முடிகிறது.>
இதுபற்றி வஞ்சி இழையில் பேசலாம்.என்னால் இந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை .ஒரு நாளைக்கு 2/3மடல்கள் தான் தட்டச்சு செய்ய இயல்கிறது.
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 2, 2017, 4:32:42 AM11/2/17
to mintamil

kanmani tamil

unread,
Nov 2, 2017, 4:59:57 AM11/2/17
to mintamil
 <நான் சொல்வதற்கு அடிப்படைக் காரணம் பெருதகை (probability). (தற்கால ஐதராபாத்- செகந்திராபாத் போல்) ஒரு பெருநகரத்தின் 12 கி.மீ. தொலைவில் சமகாலத்தில் இன்னொரு நகர நாகரிகம் அமைய வாய்ப்புகள் குறைவு.  இருநகரங்கள் அப்படி இருந்திருந்தால் தமிழிலக்கியத்தில் அதைச் சொல்லாதிருந்திருப்பார்களா? >
1)பாண்டியன் மணவூரைத் தாற்காலிகத் தலைநகராக்கினான் என்பதில் யாருக்கும் ஐயமில்லை .அப்படி இருக்கையில் மதுரையிலிருந்து 12கி.மீ.தொலைவில் இன்னொரு நகரம் இருப்பது சாத்தியம் தானே .
2)அன்றியும் -'அடி'என்னும் பின்னொட்டு அரசர் தங்குமிடத்தைக்  குறிப்பதைப்பிற இடப்பெயர்களிலும் காணமுடிகிறது.
(எ -டு) அரசரடி (மதுரையின் ஒரு புறநகர்ப் பகுதி .
3)மதுரையின் கிழக்கே கீழ்மதுரை இருப்பதைப் போல மணவூரின் கிழக்கே கீழடி.
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 2, 2017, 6:05:31 AM11/2/17
to mintamil
<1. மா.இராசமாணிக்கனார் - பத்துப்பாட்டு ஆராய்ச்சி - சாகித்திய அகாதெமி வெளியீடு - 2012 - பக்கம். 177.
"கோட்டையுள் வையையாற்றைப்போன்ற அகன்ற தெருக்கள் அமைந்திருந்தன. அரண்மனை நகரத்தின் நடுநாயகமாய் விளங்கியது".

2. முனைவர்.தமிழண்ணல், மதுரை, மதுரை மாநகர் - ஊரும் பேரும் - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், மதுரை, திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா - சிறப்பு மலர் - 08-04-2009 - பக்கம் 155
"மதுரை மாநகரின் மையத்தில் முன்பு  பாண்டியன் அரண்மனை இருந்தது. இப்போது ஆலவாய் அண்ணல் சொக்கலிங்கப் பெருமான் மீனாட்சியம்மை திருக்கோயில் உள்ளது"

இந்த இருவருமே மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்களாகப் பலகாலம் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முனைவர். தமிஅவர் அவர் ழண்ணல் இன்றும் மதுரையில் வாழ்கிறார்.>
மா.இராசமாணிக்கனாரை நான் சந்தித்தது இல்லை.பெரிய தமிழறிஞர் .அவர்மேல் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு.
முனைவர் தமிழண்ணல் என் ஆராய்ச்சிப் பணிக்கு பிள்ளையார் சுழி போட்டவர் .'சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் 'என்ற தலைப்பை வரையறுத்துக் கொடுத்தவர் .மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக மாணவர்களை அவர் நெறிப்படுத்திய சூழலில் கருத்தரங்குகளில் பயிற்சி பெற்றவள் நான் .என்னை நெறிப்படுத்தியவர் திருமதி.சக்திபெருமாள் .இருவருமே மாணவர்களிடம் சுய சிந்தனையையும் மெய்ப்பொருள் காணும் அறிவினையும் வளர்த்தவர்கள்.தற்போதுஅண்ணல் கோயில் பற்றிய என் கருத்து அவர்களது கருத்தினின்றும் மாறுபட்டிருப்பதை திறம்பட நிறுவ அவர்கள் வளர்த்துவிட்ட ஆய்வியல் நெறிதான் எனக்கு வழிகாட்டவேண்டும்.

அண்ணல் கோயில்பாண்டியன் அரண்மனையா?அல்லது சொக்கநாதர் சந்நிதியா?என்பதை முடிவு செய்யுமுன் செவ்வியல் காலத் தமிழகத்தில் வழிபடும் ஆலயங்கள் எத்தனை வகைப்பட்டு இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.(இளங்கோவடிகள் வரிசைப்படுத்தி இருக்கிறார்.)
சொக்கநாதர் ஆலயம் எந்த வகையில் அடங்கும் என்பதை அறுதியிடவேண்டும்.
மதுரைக்காஞ்சி இவ்வாலயத்தைப் பற்றிக் கூறும் செய்தி நம் ஆய்வோடு ஒத்துச் செல்கிறதா?என்று கண்ட பின்னரே முடிவு செய்ய வேண்டும் .அதுவரை அது அண்ணல் கோயில் என்றே இருக்கட்டும்.
கண்மணி  

Malarvizhi Mangay

unread,
Nov 2, 2017, 9:27:08 AM11/2/17
to mint...@googlegroups.com
கண்மணி அம்மா! வணக்கம் ! அதே மலர்விழிமங்கையர்க்கரசி தான்.நான் தான் தாங்கள் யாரென அறியாதிருந்து
விட்டேன்.
சுகந்தன்னே! 

On 02-Nov-2017 3:42 pm, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kanmani...@gmail.com) Add cleanup rule | More info

<1. மா.இராசமாணிக்கனார் - பத்துப்பாட்டு ஆராய்ச்சி - சாகித்திய அகாதெமி வெளியீடு - 2012 - பக்கம். 177.
"கோட்டையுள் வையையாற்றைப்போன்ற அகன்ற தெருக்கள் அமைந்திருந்தன. அரண்மனை நகரத்தின் நடுநாயகமாய் விளங்கியது".

2. முனைவர்.தமிழண்ணல், மதுரை, மதுரை மாநகர் - ஊரும் பேரும் - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், மதுரை, திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா - சிறப்பு மலர் - 08-04-2009 - பக்கம் 155
"மதுரை மாநகரின் மையத்தில் முன்பு  பாண்டியன் அரண்மனை இருந்தது. இப்போது ஆலவாய் அண்ணல் சொக்கலிங்கப் பெருமான் மீனாட்சியம்மை திருக்கோயில் உள்ளது"

இந்த இருவருமே மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்களாகப் பலகாலம் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முனைவர். தமிஅவர் அவர் ழண்ணல் இன்றும் மதுரையில் வாழ்கிறார்.>
மா.இராசமாணிக்கனாரை நான் சந்தித்தது இல்லை.பெரிய தமிழறிஞர் .அவர்மேல் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு.
முனைவர் தமிழண்ணல் என் ஆராய்ச்சிப் பணிக்கு பிள்ளையார் சுழி போட்டவர் .'சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் 'என்ற தலைப்பை வரையறுத்துக் கொடுத்தவர் .மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக மாணவர்களை அவர் நெறிப்படுத்திய சூழலில் கருத்தரங்குகளில் பயிற்சி பெற்றவள் நான் .என்னை நெறிப்படுத்தியவர் திருமதி.சக்திபெருமாள் .இருவருமே மாணவர்களிடம் சுய சிந்தனையையும் மெய்ப்பொருள் காணும் அறிவினையும் வளர்த்தவர்கள்.தற்போதுஅண்ணல் கோயில் பற்றிய என் கருத்து அவர்களது கருத்தினின்றும் மாறுபட்டிருப்பதை திறம்பட நிறுவ அவர்கள் வளர்த்துவிட்ட ஆய்வியல் நெறிதான் எனக்கு வழிகாட்டவேண்டும்.

அண்ணல் கோயில்பாண்டியன் அரண்மனையா?அல்லது சொக்கநாதர் சந்நிதியா?என்பதை முடிவு செய்யுமுன் செவ்வியல் காலத் தமிழகத்தில் வழிபடும் ஆலயங்கள் எத்தனை வகைப்பட்டு இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.(இளங்கோவடிகள் வரிசைப்படுத்தி இருக்கிறார்.)
சொக்கநாதர் ஆலயம் எந்த வகையில் அடங்கும் என்பதை அறுதியிடவேண்டும்.
மதுரைக்காஞ்சி இவ்வாலயத்தைப் பற்றிக் கூறும் செய்தி நம் ஆய்வோடு ஒத்துச் செல்கிறதா?என்று கண்ட பின்னரே முடிவு செய்ய வேண்டும் .அதுவரை அது அண்ணல் கோயில் என்றே இருக்கட்டும்.
கண்மணி  

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 2, 2017, 9:32:51 AM11/2/17
to mintamil
//இந்த இருவருமே மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்களாகப் பலகாலம் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முனைவர். தமிஅவர் அவர் ழண்ணல் இன்றும் மதுரையில் வாழ்கிறார்.>//

தமிழண்ணல் ஐயா 29.12.2015 ல் காலமாகி விட்டதாக விக்கிபீடியா சொல்கிறதே. அவர் வேறா?
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Malarvizhi Mangay

unread,
Nov 2, 2017, 9:45:46 AM11/2/17
to mint...@googlegroups.com
சரவணன் கூற்று சரியே.ஐயாவின் இறுதிக்கடன் வேளையில் அஞ்சலி
செலுத்தியள் அவரது மாணவி நான்.

N. Ganesan

unread,
Nov 2, 2017, 10:49:52 AM11/2/17
to மின்தமிழ், vallamai
2017-11-02 1:59 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
 <நான் சொல்வதற்கு அடிப்படைக் காரணம் பெருதகை (probability). (தற்கால ஐதராபாத்- செகந்திராபாத் போல்) ஒரு பெருநகரத்தின் 12 கி.மீ. தொலைவில் சமகாலத்தில் இன்னொரு நகர நாகரிகம் அமைய வாய்ப்புகள் குறைவு.  இருநகரங்கள் அப்படி இருந்திருந்தால் தமிழிலக்கியத்தில் அதைச் சொல்லாதிருந்திருப்பார்களா? >
1)பாண்டியன் மணவூரைத் தாற்காலிகத் தலைநகராக்கினான் என்பதில் யாருக்கும் ஐயமில்லை .அப்படி இருக்கையில் மதுரையிலிருந்து 12கி.மீ.தொலைவில் இன்னொரு நகரம் இருப்பது சாத்தியம் தானே .
2)அன்றியும் -'அடி'என்னும் பின்னொட்டு அரசர் தங்குமிடத்தைக்  குறிப்பதைப்பிற இடப்பெயர்களிலும் காணமுடிகிறது.
(எ -டு) அரசரடி (மதுரையின் ஒரு புறநகர்ப் பகுதி .
3)மதுரையின் கிழக்கே கீழ்மதுரை இருப்பதைப் போல மணவூரின் கிழக்கே கீழடி.
கண்மணி 

மணலூர் என்பது வேறு. மதுரை வேறு. மணலூர் பற்றிய செய்திகளை கீழடி ஆய்வுகள் என வரும் நியூஸ்கள் ஒன்றிலும் நான் கண்டேனில்லை.
மணலூர் இதிகாசங்களுடன் தொடர்புண்டு. சங்க காலப் பாடலும் உண்டு. வைஷ்ணவ சம்பந்தம் ஆனதால், திருவிளையாடற்புராண
ஆசிரியர் மணவூர் என கடையை மாற்றுகிறார். பசுமலை பற்றி அவர் எழுதிய புராணம் நேற்றுப் பார்த்தோம்.

பிற பின்!

நா. கணேசன்

kanmani tamil

unread,
Nov 3, 2017, 1:55:51 PM11/3/17
to mintamil
<கண்மணி அம்மா! வணக்கம் ! அதே மலர்விழிமங்கையர்க்கரசி தான்.நான் தான் தாங்கள் யாரென அறியாதிருந்து
விட்டேன்.
சுகந்தன்னே! >
சுகமே .மின்தமிழ் குழுமத்திற்குள் உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியை  அளிக்கிறது .உங்கள் துறையில் கற்பகம் ,உமாமகேஸ்வரி இருவரும் எப்படி இருக்கிறார்கள்?என்னுடன் ஸ்ரீகாளிஸ்வரியில்பணியாற்றியவர்கள்.நல்வாழ்த்துக்கள் .
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 4, 2017, 5:43:24 AM11/4/17
to mintamil
<எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி  புதியவூரோ அ 
துபோல இற்றை மதுரை புதியவூர்.  (இன்றைக்கு இருக்கும் பல பெரியவூர்கள் பழைய பெரியவூர்களின் அருகில்தான் இருந்துள்ளன.  (இதுபற்றி நிறையச் செய்திகள் சொல்லலாம்.)
 சங்ககால உறையூருடன் சிராப்பள்ளி இணைந்து பெருநகரமாகியுள்ளது .(சமணப்பள்ளி என்ற நிலை மாறிய பிறகு திரு --என்னும் முன்னொட்டு சேர்ந்து திருச்சிராப்பள்ளி ஆனது .பல புறநகர்ப் பகுதிகளும் இணைந்த மாநகரை இன்று திருச்சி என்று சுருக்கி அழைக்கிறோம் .)
சங்க கால மதுரையை பாண்டியன் புனர் நிர்மாணம் செய்த பொழுதே அதை வடக்கு நோக்கி விரிவாக்கி புறநகர்ப் பகுதிகளையும் உருவாக்கினான்.
விஸ்வநாதநாயக்கர் பாண்டியர் காலப் புறநகர்ப் பகுதிகளையெல்லாம் உள்ளடக்கி நகரை விரிவாக்கி புதிதாக ஒரு  கோட்டை கட்டினார் .
இடைக்காலத்தில் பல புறநகர்ப் பகுதிகள் தோன்றியமைக்கு திருவிளையாடற்புராணப் பாடலும் இன்றுள்ள நகர்ப்பகுதிகளும் ஆதாரங்களாகின்றன.
1)சீவன் முத்திபுரம் என்று மதுரைக்குப் பெயர் வரக் காரணமாக அமைந்தது வண்டியூர்த் தெப்பக்குளத்திற்கு மேற்கே உள்ள முக்தீஸ்வரர் கோயிலும் அதையடுத்த குடியிருப்புகளும் ஆகும்.
2&3)சமட்டிவிச்சாபுரம் என்ற மதுரையின்ம றுபெயரை அடியொட்டி இன்று காணப்படுவன சம்மட்டிபுரமும் வில்லாபுரமுமாம் .(விச்சாபுரம் என்ற பெயரே வில்லாபுரம் என மருவியுள்ளது.பொருள் புரியாமை /மறக்கப்பட்டமையே காரணமாம்.சமஷ்டிவித்யாபுரம் என்ற வடமொழிப் பெயரை தமிழ் மொழியியல்புக்கேற்ப சமட்டிவிச்சாபுரம் என திருவிளையாடற் புராண ஆசிரியர் பயின்றுள்ளார்.) 
நாயக்கர் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் தோன்றிய புறநகர்ப் பகுதிகள் பலமதுரைக்கோட்டையின் வரலாற்றைச் சொல்கின்றன.
4)கான்பாளையம் என்ற புறநகர்ப் பகுதியின் பெயருக்கு பின்வரும் வரலாற்றில் ஏதேனும் ஒன்று காரணமாகலாம் .
     1751ம்.ஆண்டு ஆலம்கான் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றினான் .(அவன் பாடியமைத்துத் தங்கிய இடம் )
    1755ல்.முஹம்மது யூசுப் கான்என்ற கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலர் 2000சிப்பாய்களுடன் மதுரைக்கோட்டையைக் கைப்பற்றினான். 
    இவன் மதுரை மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவன்.பிறப்பால் திருநெல்வேலி சைவப்பிள்ளை .குழந்தையாக இருந்தபோதே பெற்றோரை 
     இழந்த  இவனை ஒரு இஸ்லாமியன் யூசுப் கான்  என்று பெயரிட்டு வளர்த்தான்.வாலிபனானவுடன் கிழக்கிந்தியக் கம்பெனியில் சிப்பாயாகச் சேர்ந்தான் .     ஒரு பிரெஞ்சு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் .1756ல்.கோட்டையைச் செப்பனிட்டான்.ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பி விட்டான்.
    1757ல்.கெயலார்ட் என்னும் தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் கோட்டையை இருமுறை முற்றுகை இட்டனர்.பயனில்லை.
  யூசுப் கான் கோட்டையை மீண்டும் செப்பனிட்டான்.
    1757ன். இறுதியில் ஹைதர் அலி பல நாட்கள் மதுரைக்கோட்டையை முற்றுகையிட்டான்.அதன் பலத்தைப் பார்த்து பின்வாங்கினான் .
     1763ல்.தளபதி பிரெஸ்டனின் தலைமையில் பெரும்படை மதுரையைத் தாக்கியது.யூசுப் கான் வெடிமருந்தை சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டிப் பற்ற   வைத்து கோட்டையின் மேலிருந்து எதிரிகளின் மேல் வீசி எறியவைத்தான்பகைவர்  தோற்று ஓடினர். 
அதே ஆண்டில் செப்டெம்பர் 2ம்.நாள் தளபதி மான்சனின் தலைமையில் ஒரு தாக்குதல் நடந்தது .கோட்டையை கைப்பற்ற இயலவில்லை .
அதே மாதத்தில் 24ம்.நாள்  ஆங்கிலப்படையும் வாலாஜாப் படையும் சேர்ந்து வந்து தாக்கியும் மதுரைக்கோட்டையையும் யூசுப் கானையும் வெல்ல இயலவில்லை.
    1764ல்.மேஜர் டொனால்டு காம்பெல்தன் படையுடன் வந்து தாக்கி தோற்றுப் போனார் .
கான் சாகிபு என்று மக்கள் அழைத்த யூசுப் கானை அவனுக்கடியில் இருந்த பிரெஞ்சு தளபதி ஒருவன் வஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் மதுரைக்கோட்டை ஆங்கிலேயர் வசம் .வந்தது . (இவன் நினைவாகவும் கான்பாளையம் அப்பெயர் பெற்றிருக்கலாம்.இவ்வரலாற்றைத் தான் கமலஹாசன் திரைப்படமாக எடுக்க முனைந்து அது பாதியில் நின்று விட்டது. ) 
5)1754ல்.மாயனா ;நபிகானுடனும் மஹாதிமியாவுடனும் சேர்ந்து மதுரைக்கோட்டையைக் கைப்பற்றும் முன்னர் பாடியமைத்துத் தங்கிய இடமே மாப்பாளையம்என்று எண்ண இடமுள்ளது .                                                                                                                                                                                                                                                                        6,7)கோரிப்பாளையம் ,ஆரப்பாளையம் போன்ற பகுதிகளும் மதுரைக்கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்கிய வரலாற்றின் எச்சங்களாகக் கருத வாய்ப்புள்ளது.
கண்மணி 

Malarvizhi Mangay

unread,
Nov 4, 2017, 7:54:02 AM11/4/17
to mint...@googlegroups.com
கண்மணி அம்மா நலமே.இருவரும் நன்றாக உள்ளனர்.தங்களின் கருத்தாடல்கள் அருமை.

On 04-Nov-2017 3:16 pm, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kanmani...@gmail.com) Add cleanup rule | More info

<எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி  புதியவூரோ அ 
துபோல இற்றை மதுரை புதியவூர்.  (இன்றைக்கு இருக்கும் பல பெரியவூர்கள் பழைய பெரியவூர்களின் அருகில்தான் இருந்துள்ளன.  (இதுபற்றி நிறையச் செய்திகள் சொல்லலாம்.)
 சங்ககால உறையூருடன் சிராப்பள்ளி இணைந்து பெருநகரமாகியுள்ளது .(சமணப்பள்ளி என்ற நிலை மாறிய பிறகு திரு --என்னும் முன்னொட்டு சேர்ந்து திருச்சிராப்பள்ளி ஆனது .பல புறநகர்ப் பகுதிகளும் இணைந்த மாநகரை இன்று திருச்சி என்று சுருக்கி அழைக்கிறோம் .)
சங்க கால மதுரையை பாண்டியன் புனர் நிர்மாணம் செய்த பொழுதே அதை வடக்கு நோக்கி விரிவாக்கி புறநகர்ப் பகுதிகளையும் உருவாக்கினான்.
விஸ்வநாதநாயக்கர் பாண்டியர் காலப் புறநகர்ப் பகுதிகளையெல்லாம் உள்ளடக்கி நகரை விரிவாக்கி புதிதாக ஒரு  கோட்டை கட்டினார் .
இடைக்காலத்தில் பல புறநகர்ப் பகுதிகள் தோன்றியமைக்கு திருவிளையாடற்புராணப் பாடலும் இன்றுள்ள நகர்ப்பகுதிகளும் ஆதாரங்களாகின்றன.
1)சீவன் முத்திபுரம் என்று மதுரைக்குப் பெயர் வரக் காரணமாக அமைந்தது வண்டியூர்த் தெப்பக்குளத்திற்கு மேற்கே உள்ள முக்தீஸ்வரர் கோயிலும் அதையடுத்த குடியிருப்புகளும் ஆகும்.
2&3)சமட்டிவிச்சாபுரம் என்ற மதுரையின்ம றுபெயரை அடியொட்டி இன்று காணப்படுவன சம்மட்டிபுரமும் வில்லாபுரமுமாம் .(விச்சாபுரம் என்ற பெயரே வில்லாபுரம் என மருவியுள்ளது.பொருள் புரியாமை /மறக்கப்பட்டமையே காரணமாம்.சமஷ்டிவித்யாபுரம் என்ற வடமொழிப் பெயரை தமிழ் மொழியியல்புக்கேற்ப சமட்டிவிச்சாபுரம் என திருவிளையாடற் புராண ஆசிரியர் பயின்றுள்ளார்.) 
நாயக்கர் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் தோன்றிய புறநகர்ப் பகுதிகள் பலமதுரைக்கோட்டையின் வரலாற்றைச் சொல்கின்றன.
4)கான்பாளையம் என்ற புறநகர்ப் பகுதியின் பெயருக்கு பின்வரும் வரலாற்றில் ஏதேனும் ஒன்று காரணமாகலாம் .
     1751ம்.ஆண்டு ஆலம்கான் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றினான் .(அவன் பாடியமைத்துத் தங்கிய இடம் )
    1755ல்.முஹம்மது யூசுப் கான்என்ற கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலர் 2000சிப்பாய்களுடன் மதுரைக்கோட்டையைக் கைப்பற்றினான். 
    இவன் மதுரை மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவன்.பிறப்பால் திருநெல்வேலி சைவப்பிள்ளை .குழந்தையாக இருந்தபோதே பெற்றோரை 
     இழந்த  இவனை ஒரு இஸ்லாமியன் யூசுப் கான்  என்று பெயரிட்டு வளர்த்தான்.வாலிபனானவுடன் கிழக்கிந்தியக் கம்பெனியில் சிப்பாயாகச் சேர்ந்தான் .     ஒரு பிரெஞ்சு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் .1756ல்.கோட்டையைச் செப்பனிட்டான்.ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பி விட்டான்.
    1757ல்.கெயலார்ட் என்னும் தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் கோட்டையை இருமுறை முற்றுகை இட்டனர்.பயனில்லை.
  யூசுப் கான் கோட்டையை மீண்டும் செப்பனிட்டான்.
    1757ன். இறுதியில் ஹைதர் அலி பல நாட்கள் மதுரைக்கோட்டையை முற்றுகையிட்டான்.அதன் பலத்தைப் பார்த்து பின்வாங்கினான் .
     1763ல்.தளபதி பிரெஸ்டனின் தலைமையில் பெரும்படை மதுரையைத் தாக்கியது.யூசுப் கான் வெடிமருந்தை சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டிப் பற்ற   வைத்து கோட்டையின் மேலிருந்து எதிரிகளின் மேல் வீசி எறியவைத்தான்பகைவர்  தோற்று ஓடினர். 
அதே ஆண்டில் செப்டெம்பர் 2ம்.நாள் தளபதி மான்சனின் தலைமையில் ஒரு தாக்குதல் நடந்தது .கோட்டையை கைப்பற்ற இயலவில்லை .
அதே மாதத்தில் 24ம்.நாள்  ஆங்கிலப்படையும் வாலாஜாப் படையும் சேர்ந்து வந்து தாக்கியும் மதுரைக்கோட்டையையும் யூசுப் கானையும் வெல்ல இயலவில்லை.
    1764ல்.மேஜர் டொனால்டு காம்பெல்தன் படையுடன் வந்து தாக்கி தோற்றுப் போனார் .
கான் சாகிபு என்று மக்கள் அழைத்த யூசுப் கானை அவனுக்கடியில் இருந்த பிரெஞ்சு தளபதி ஒருவன் வஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் மதுரைக்கோட்டை ஆங்கிலேயர் வசம் .வந்தது . (இவன் நினைவாகவும் கான்பாளையம் அப்பெயர் பெற்றிருக்கலாம்.இவ்வரலாற்றைத் தான் கமலஹாசன் திரைப்படமாக எடுக்க முனைந்து அது பாதியில் நின்று விட்டது. ) 
5)1754ல்.மாயனா ;நபிகானுடனும் மஹாதிமியாவுடனும் சேர்ந்து மதுரைக்கோட்டையைக் கைப்பற்றும் முன்னர் பாடியமைத்துத் தங்கிய இடமே மாப்பாளையம்என்று எண்ண இடமுள்ளது .                                                                                                                                                                                                                                                                        6,7)கோரிப்பாளையம் ,ஆரப்பாளையம் போன்ற பகுதிகளும் மதுரைக்கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்கிய வரலாற்றின் எச்சங்களாகக் கருத வாய்ப்புள்ளது.
கண்மணி 

N. Ganesan

unread,
Nov 4, 2017, 10:08:49 AM11/4/17
to மின்தமிழ்
2017-11-02 6:45 GMT-07:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:
சரவணன் கூற்று சரியே.ஐயாவின் இறுதிக்கடன் வேளையில் அஞ்சலி
செலுத்தியள் அவரது மாணவி நான்.


தமிழண்ணல் ஹ்யூஸ்டன் வந்திருக்கிறார். என் மீது பிரியம் கொண்ட பேராசிரியர்.

பாண்டியராஜா ‘அண்ணல் கோயில்’ என்பது பாண்டியன் அரண்மனை என
எழுதிய தேதியில் தமிழண்ணல் உயிரோடு இருந்தார். அப் பழைய மடலை
முன்வரித்து, ச. சாம்பசிவனார், கேசிகன், தீபம் பார்த்தசாரதி, பேரா. பாண்டியராசா
தரும் தமிழண்ணல், ராஜமாணிக்கனார் போலவே சொல்வதைக் குறிப்பிட்டேன்.

தேமொழி

unread,
Nov 4, 2017, 5:01:14 PM11/4/17
to mint...@googlegroups.com


On Monday, October 30, 2017 at 4:21:19 AM UTC-7, kanmanitamilskc wrote:
<எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி  புதியவூரோ அ 
துபோல இற்றை மதுரை புதியவூர்.>
இன்றைய கூடல் அழகர் கோயிலை மேற்கெல்லையாகவும் கீழ் மதுரையை கிழக்கெல்லையாகவும் , 

சொக்கநாதர் சந்நிதியை வடகிழக்கு மூலையிலும் கொண்டு சங்ககால மதுரை இருந்தது.
காலந்தோறும் மதுரை வடக்கு நோக்கி விரிந்துள்ளது 
.வங்கியசேகரபாண்டியன் அண்ணல் கோயிலை  மையமாக வைத்து நகரை நிர்மாணித்த போது நகர் வடக்கே விரிவடைந்ததுடன் புறநகர்ப் பகுதிகளும் தோன்றின 
1).மேற்கெல்லையாக இருந்த கூடலழகர் கோயில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதியானது .(இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு இருந்தவளமுடையார் என்றுதான் பெயர்.பரிபாடல்" இருந்தையூர் அமர்ந்த செல்வ "என்று போற்றுகிறது.)
2)அதையடுத்துசுந்தரபாண்டியன் காலத்தில்  நடுவூர் என்னும் புறநகர்ப் பகுதி தோன்றியது  .இன்றைய இம்மையே நன்மை தருவார் கோயிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளும் நடுவூர் ஆகும்.இக்கோயிலில் உள்ள அம்மனுக்கு நடுவூர் நாயகி என்று பெயர்.
3,4,5,6)இவை தவிர வங்கியசேகரபாண்டியன் 4திசைகளில் நிர்மாணித்த 4கோயில்களும் அவ்வவற்றைச் சூழ்ந்த பகுதிகளும் 4புறநகர்ப் பகுதிகளாயின.இவைபற்றி இதே இழையில் முன்னர் ஒரு மடலில் விரிவாகப் பேசியிருக்கிறேன் .
7)இப்போது மயமதம் கூறிய விதிப்படி ஈசான்யத்தில் -வடகிழக்கு மூலையில் -சிவனுக்குரிய கோயில் அமைய வேண்டும் .என்பதற்கு ஏற்பத் தோன்றியுள்ளது வடதிருவாலவாய் .
    விஸ்வநாத நாயக்கர் நகரை விரிவாக்கிப் புதிய கோட்டை கட்டிய போது மேற்சுட்டிய7பகுதிகளில்முதல்  6பகுதிகள் மாசிவீதிகள் மூலம் இணைக்கப்பட்டன. நாலாபுறமும் நகர் விரிந்த போது வடக்கு நோக்கியும் விரிந்துள்ளது .ஆனால் பாண்டியன் கட்டிய காளிகோயில்   வடக்கு மாசி வீதியில் இணைந்தாலும் வடதிருவாலவாய் மாசிவீதியில் இணைய வழியில்லை ஆதலால் அது வடக்கு வாசலில் கோட்டைக்குள்ளே அடங்கியது.


காளிகோயில்கள்   ஊர் எல்லையில் அமைந்து ஊர் எல்லையை மறைமுகமாகக் குறிப்பவை.
புறநகர்கள் ஒன்றிணையும்  பொழுது அவை பெருநகரின் இடையில் (வழக்கத்திற்கு மாறாக) அமைந்துவிடுகிறது. 
உறையூர் வெக்காளி அம்மன்
சிதம்பரம் எல்லைக்காளி அம்மன் ஆகியோர் இன்னமும் ஊர் எல்லையில்தான் இருக்கிறார்கள். 

..... தேமொழி

kanmani tamil

unread,
Nov 5, 2017, 10:46:01 AM11/5/17
to mintamil
<madras district gazetteers-madurai-p.395 தங்களிடம் இருந்தால் அன்புடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.>
இந்த நூலை மதுரை மேலமாசி வீதியிலிருந்தசுற்றுலாத்துறை நூலகத்தில் பெற்று அங்கேயே அமர்ந்து குறிப்பு மட்டும் எடுத்தேன்.நூலை உடன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.அதற்குமேல் எனக்கு அப்போது தேவைப்படவும் இல்லை .மக்கள் எதிர்ப்பு குறித்து ஒரு தொடர் மட்டுமே இருந்தது.வேறு விவரம் எதுவும் இல்லை. 
கண்மணி 

2017-11-05 2:31 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, October 30, 2017 at 4:21:19 AM UTC-7, kanmanitamilskc wrote:
<எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி  புதியவூரோ அ 
துபோல இற்றை மதுரை புதியவூர்.>
இன்றைய கூடல் அழகர் கோயிலை மேற்கெல்லையாகவும் கீழ் மதுரையை கிழக்கெல்லையாகவும் , 

சொக்கநாதர் சந்நிதியை வடகிழக்கு மூலையிலும் கொண்டு சங்ககால மதுரை இருந்தது.
காலந்தோறும் மதுரை வடக்கு நோக்கி விரிந்துள்ளது 
.வங்கியசேகரபாண்டியன் அண்ணல் கோயிலை  மையமாக வைத்து நகரை நிர்மாணித்த போது நகர் வடக்கே விரிவடைந்ததுடன் புறநகர்ப் பகுதிகளும் தோன்றின 
1).மேற்கெல்லையாக இருந்த கூடலழகர் கோயில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதியானது .(இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு இருந்தவளமுடையார் என்றுதான் பெயர்.பரிபாடல்" இருந்தையூர் அமர்ந்த செல்வ "என்று போற்றுகிறது.)
2)அதையடுத்துசுந்தரபாண்டியன் காலத்தில்  நடுவூர் என்னும் புறநகர்ப் பகுதி தோன்றியது  .இன்றைய இம்மையே நன்மை தருவார் கோயிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளும் நடுவூர் ஆகும்.இக்கோயிலில் உள்ள அம்மனுக்கு நடுவூர் நாயகி என்று பெயர்.
3,4,5,6)இவை தவிர வங்கியசேகரபாண்டியன் 4திசைகளில் நிர்மாணித்த 4கோயில்களும் அவ்வவற்றைச் சூழ்ந்த பகுதிகளும் 4புறநகர்ப் பகுதிகளாயின.இவைபற்றி இதே இழையில் முன்னர் ஒரு மடலில் விரிவாகப் பேசியிருக்கிறேன் .
7)இப்போது மயமதம் கூறிய விதிப்படி ஈசான்யத்தில் -வடகிழக்கு மூலையில் -சிவனுக்குரிய கோயில் அமைய வேண்டும் .என்பதற்கு ஏற்பத் தோன்றியுள்ளது வடதிருவாலவாய் .
    விஸ்வநாத நாயக்கர் நகரை விரிவாக்கிப் புதிய கோட்டை கட்டிய போது மேற்சுட்டிய7பகுதிகளில்முதல்  6பகுதிகள் மாசிவீதிகள் மூலம் இணைக்கப்பட்டன. நாலாபுறமும் நகர் விரிந்த போது வடக்கு நோக்கியும் விரிந்துள்ளது .ஆனால் பாண்டியன் கட்டிய காளிகோயில்   வடக்கு மாசி வீதியில் இணைந்தாலும் வடதிருவாலவாய் மாசிவீதியில் இணைய வழியில்லை ஆதலால் அது வடக்கு வாசலில் கோட்டைக்குள்ளே அடங்கியது.


காளிகோயில்கள்   ஊர் எல்லையில் அமைந்து ஊர் எல்லையை மறைமுகமாகக் குறிப்பவை.
புறநகர்கள் ஒன்றினையும் பொழுது அவை பெருநகரின் இடையில் (வழக்கத்திற்கு மாறாக) அமைந்துவிடுகிறது. 

kanmani tamil

unread,
Nov 5, 2017, 11:49:24 AM11/5/17
to mintamil

<இன்று பழமதுரையில் (கீழடி ) உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து பார்த்தாலும் திருப்பரங்குன்றம் நேர் மேற்கில் இருக்கும்.
(படம் இணைத்துள்ளேன்.)
புலவர்கள் மிகவும் சரியாகத்தான் பாடியுள்ளனர்.  கீழடி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நக்கீரர் கால மதுரை ஆகும்>

இந்தக் கருதுகோளை ஏற்றுக்கொள்வதில் மூன்று  சிக்கல்கள் உள்ளன.

1)மா.இராசமாணிக்கனார் "கூடற்குடவையின் பரங்குன்று "என்ற தொடருக்குப் பொருள் கொள்ளும் போது -வயின் என்ற பின்னொட்டைத்  தவறுதலாகக்  கண்டுகொள்ளாமல் விட்டதனால்தான் மதுரை இடம் மாறி விட்டதோ என்ற ஐயம் அவருக்கு எழுந்தது.பின்வந்த ஆய்வாளர்களும் அவரது கருத்தை அப்படியே வழிமொழிந்தார்களே தவிர -வயின் என்ற பின்னொட்டைப் பெரிதாக யாரும் நோக்கவில்லை.ஆனால் "வடவயின் வேங்கடம்"என்ற தொடருக்கு உரையாசிரியர்  எழுதிய பொருள் மூலம் கோணத்திசை -அதாவது வடமேற்குத்திசை என்பது பொருத்தமாக அமையும்போது நாம் ஏன் -வயின் என்ற சொல்லைப் புறக்கணிக்க வேண்டும் ?தவிரவும் கூடலுக்குத் தென்மேற்கே உள்ள பரங்குன்று என்பது இன்றைய மதுரைக்கு 100%பொருத்தமாக அமையும் போது -வயின் என்ற சொல்லை நாம் தெரிந்தே புறக்கணித்தால் அது நாம் மீண்டும் செய்யும் தப்பு ஆகிவிடும்அல்லவா?.                                     

2)கீழடியை பண்டைய மதுரை என்று கொண்டால் கீழ்மதுரை எப்படி  தற்போதைய மதுரைக்குக் கிழக்கே அமைந்தது ?

3)பாண்டியன் மதுரையைப் புனர்நிர்மாணம் செய்த போது மணலூர்/மணவூரில் இருந்ததாகத் தானே நாம் போற்றும் புராணமும் சொல்கிறது.அது பண்டை மதுரை என்ற குறிப்பு எங்கும் இல்லாத போது நாம் ஏன் வலிந்து அதை மதுரை ஆக்க வேண்டும்?

பாண்டியனின் தாற்காலிகத் தலைநகர் ஒரு நகரமாக இருப்பதில் கேள்வி ஏன் எழுகிறது?தொல்லியல் எச்சங்கள் செழிப்பான நாகரிகம் இருந்ததன் அடை யாளம் தானே?இது மகிழ்ச்சிக்குரிய செய்தி தானே!

2000ஆண்டுகளுக்கும் மேலாக தான் இருந்த இடத்திலிருந்து மாறாமல் விரிவு பெற்று தலைநகர் என்ற பெருமையைத் தக்க வைத்துக் கொண்ட மதுரை போல் உலகில் வேறெங்காவது ஒரு நகரம் இருக்கிறதா?இல்லை என்கிறார் ஜெ.பி.எல்.ஷெனாய் .(mathurai the temple city )
கண்மணி  

N. Ganesan

unread,
Nov 5, 2017, 1:01:53 PM11/5/17
to மின்தமிழ், vallamai
2017-11-05 8:49 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

<இன்று பழமதுரையில் (கீழடி ) உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து பார்த்தாலும் திருப்பரங்குன்றம் நேர் மேற்கில் இருக்கும்.
(படம் இணைத்துள்ளேன்.)
புலவர்கள் மிகவும் சரியாகத்தான் பாடியுள்ளனர்.  கீழடி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நக்கீரர் கால மதுரை ஆகும்>

இந்தக் கருதுகோளை ஏற்றுக்கொள்வதில் மூன்று  சிக்கல்கள் உள்ளன.

1)மா.இராசமாணிக்கனார் "கூடற்குடவையின் பரங்குன்று "என்ற தொடருக்குப் பொருள் கொள்ளும் போது -வயின் என்ற பின்னொட்டைத்  தவறுதலாகக்  கண்டுகொள்ளாமல் விட்டதனால்தான் மதுரை இடம் மாறி விட்டதோ என்ற ஐயம் அவருக்கு எழுந்தது.பின்வந்த ஆய்வாளர்களும் அவரது கருத்தை அப்படியே வழிமொழிந்தார்களே தவிர -வயின் என்ற பின்னொட்டைப் பெரிதாக யாரும் நோக்கவில்லை.ஆனால் "வடவயின் வேங்கடம்"என்ற தொடருக்கு உரையாசிரியர்  எழுதிய பொருள் மூலம் கோணத்திசை -அதாவது வடமேற்குத்திசை என்பது பொருத்தமாக அமையும்போது நாம் ஏன் -வயின் என்ற சொல்லைப் புறக்கணிக்க வேண்டும் ?தவிரவும் கூடலுக்குத் தென்மேற்கே உள்ள பரங்குன்று என்பது இன்றைய மதுரைக்கு 100%பொருத்தமாக அமையும் போது -வயின் என்ற சொல்லை நாம் தெரிந்தே புறக்கணித்தால் அது நாம் மீண்டும் செய்யும் தப்பு ஆகிவிடும்அல்லவா?.                                     

2)கீழடியை பண்டைய மதுரை என்று கொண்டால் கீழ்மதுரை எப்படி  தற்போதைய மதுரைக்குக் கிழக்கே அமைந்தது ?

3)பாண்டியன் மதுரையைப் புனர்நிர்மாணம் செய்த போது மணலூர்/மணவூரில் இருந்ததாகத் தானே நாம் போற்றும் புராணமும் சொல்கிறது.அது பண்டை மதுரை என்ற குறிப்பு எங்கும் இல்லாத போது நாம் ஏன் வலிந்து அதை மதுரை ஆக்க வேண்டும்?

பாண்டியனின் தாற்காலிகத் தலைநகர் ஒரு நகரமாக இருப்பதில் கேள்வி ஏன் எழுகிறது?தொல்லியல் எச்சங்கள் செழிப்பான நாகரிகம் இருந்ததன் அடை யாளம் தானே?இது மகிழ்ச்சிக்குரிய செய்தி தானே!

2000ஆண்டுகளுக்கும் மேலாக தான் இருந்த இடத்திலிருந்து மாறாமல் விரிவு பெற்று தலைநகர் என்ற பெருமையைத் தக்க வைத்துக் கொண்ட மதுரை போல் உலகில் வேறெங்காவது ஒரு நகரம் இருக்கிறதா?இல்லை என்கிறார் ஜெ.பி.எல்.ஷெனாய் .(mathurai the temple city )
கண்மணி  


நன்றி, முனைவர் கண்மணி அவர்களே.

பெருமணலூர் என்று ஏராளமான கல்வெட்டுகளில் அழைக்கப்பெறும் மணலூர் இன்று நான்கைந்து கிராமங்களாக இருக்கிறது. ஆனால், ஒரு கல்வெட்டிலோ, எந்த ஒரு இலக்கியம், ஆவணத்திலுமோ மணலூரை “மதுரை” என்ற அழைப்பதில்லை.

காளைராசன் திருவிளையாடற்புராணத்தில் திருநகரம் கண்ட படலம் படித்தாரா எனத் தெரியவில்லை. அதில் பதினேழாம் நூற்றாண்டில்  மணவூர் என்று மணலூருக்கு புதுசாய்ப் பெயர் தரும் பரஞ்சோதியார் அதனை மதுரை என்று சொல்லியுள்ளாரா என காளைராசன் விளக்கவேண்டும்.

(4) தொல்காப்பியம், பொருளதிகார உரையில் மேற்கோள் காட்டப்பெறும் பழைய செய்யுள். கி.பி. 4-5ஆம் நூற்றாண்டாக இருக்கும். வடமொழி இதிகாசங்களிலே சொல்லப்படும் புராணத்துக்கான பழஞ்செய்யுள் இது. சங்க மருவிய காலம் (கிபி 4,5 நூற்றாண்டு). பரவலாக வழங்கும் இக்கதை வடமொழி, தெலுங்கு, கன்னட இலக்கியங்களில் மணலூர் பற்றிப் பிரசித்தமான மகாபாரதக் கதை. முழு சினிமாக்கள் திராவிட மொழிகளில் உண்டு. பழைய சங்கமருவிய காலச் செய்யுள் இதுதான்:

     பூண்டாழ் மார்பிற் பொருப்பிற் கோமான்
     பாண்டியன் மடமகள் பணைமுலைச் சாந்தம்
     வேறு தொடங்கிய விசய னெஞ்சத்
     தாரழ லாற்றா தைஇ யோகியிற்
     பொதியிற் சாந்த மெல்லாம் பொருதிரை
     முத்தினு முழங்கழற் செந்தீப்
     பொத்துவது போலும் புலம்புமுந் துறுத்தே
                                       -------------- தொல்காப்பியம், பொருளதிகாரத்தில் கண்ட மேற்கோள், நச்சர் தருவது.

பெருமணலூர் பற்றிய வேப்பத்தூரார்கள் எழுதிய கல்வெட்டுச் செய்திகளையும், மதுரை என எக்காலத்தும் மணலூரின் பெயர் இல்லாமை குறித்தும் எழுதவே இவ்விழை தொடங்கியுள்ளேன்: படித்தருளுக,
மணலூர் (பெருமணலூர், கீழடி)
 
15, 20 செய்திகள் மணலூர் பற்றிய வரலாற்றுக்கு தரவேணும். ந்யூஸ் மீடியாக்களில் ‘கீழடி’ என்று வருவதில் அவை ஒன்றுங் காணோம். மணலூர் (> மணவூர்) பழைய ஊர். இதனை மதுரை என யாரும் சொன்னதில்லை. இப்போது காளைராசன் மின்தமிழ் இ-மெயில்கள் தவிர. இதனை மதுரைக்கு சுனாமி வந்தது என்பதுபோலக் கொள்ளலாம்.

நா. கணேசன்


N D Logasundaram

unread,
Nov 5, 2017, 9:53:43 PM11/5/17
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, SivaKumar, Raji M, Seshadri Sridharan, Suresh Kumar, Thenee MK
​ அன்புநிறை கண்மணி  அவர்களுக்கும் மற்ற மாடலாருக்கும்  

நீங்கள் கேட்ட மதுரை மாவட்ட  ​ கெசட்டியர் பதிவிறக்கம் செய்து விட்டென் 
 அதனை இந்த கூகல் மடலில் இணைப்பா க  அனுப்பமுடியது அளவு வரம்பு 8 எம் பி மீறுகின்றது மேலும்  அதனில்  390 பக்கங்கள்தான் உள்ளன எப்படி 395 கிட்டும் ? இது வேறு பதி ப்பானால்  மொத்த நூலும் கொண்ட பக்கஎண்கள் மாறுபடலாம் 

மற்றும் சீரிய முறையில் நுணுகி ஆய்ந்து ஆய்வுக் கருத் துரைகளை வைக்கும்  தேமொழி,
 சுபாஷிணி  கோவை சுந்தரம் தேனீ சுரேசு இராமகி சேஷாத்திரி மற்றும் இங்கு நான் பெயர்
 கா ட்ட மறந்தவர்களுக்கும் பயன்படலாம்
மேலும் 
எல்லோருக்கும் கூகுளோரின் வசதிகள் கிட்டாது எனவே பெரிய அளவினதான  கோப்புகள் ஒருவருக்கு ஒருவர் எளிதாக பரிமாறிக்கொள்ள HTTP க்கு மாற்றாக  FTP Protocol வழியாக தனியாக   கணக்குத்தொடங்கி 
செயல் பட முடியும் அவ்வழி 10 ஆண்டுகளுக்கு முன்பே கூகுளார் பெரிதாக வளராநிலையில் நானும் கண்ணனும் தலபுராணங்கள் திட்டத்தில் கோப்புகள் பரிமாறிக்கொண்டோம் இதனில் என்ன இடர் என்றால் தனித்தனியாக இருவர் ஒருவருக்கு ஒருவரான தனித்தனி இணைப்பு பெறவேண்டும் (PEER 2 PEER ) எங்கும் 
இ வ்வழிதான் ஒருவர் தனக்கு சொந்தமானஇணைய தளத்தினுக்கு தொடர்பு கொள்கிறார்
இப்போதும்  இவை இலவசமா எனது பார்த்துக்கொள்க  ஒரு இ டத்தில் கிட்டாவிடினும் மற்ற பலப்பல
 இணைய இ லவச செயலிகளை நிரலிடும் பக்கங்களில் முயலுக 

இஃது மதுரை கெசட்டியார் கிட்டும் இணையப்பக்கங்கள் 

அல்லது 

நூ த லோ சு
மயிலை

kanmani tamil

unread,
Nov 5, 2017, 11:28:04 PM11/5/17
to mintamil
<நீங்கள் கேட்ட மதுரை மாவட்ட  ​ கெசட்டியர் பதிவிறக்கம் செய்து விட்டென் 
 அதனை இந்த கூகல் மடலில் இணைப்பா க  அனுப்பமுடியது அளவு வரம்பு 8 எம் பி மீறுகின்றது மேலும்  அதனில்  390 பக்கங்கள்தான் உள்ளன எப்படி 395 கிட்டும் ? இது வேறு பதி ப்பானால்  மொத்த நூலும் கொண்ட பக்கஎண்கள் மாறுபடலாம்>
Gazetteers Of India:Madras-Madurai-1960-B.S.Baliga-Government Of Madras.என்ற பதிப்பு தான் நான் கருத்து சேகரித்த நூல் ஆகும்.
Madras District Gazeteers-Madurai-1906-W.Francis-Superintendent,Government press,Madras என்ற நூலிலும் கோட்டை ,அகழி பற்றிய செய்திகள் படத்துடன் உள்ளன.
கண்மணி  
   

N. Ganesan

unread,
Nov 6, 2017, 12:06:12 AM11/6/17
to மின்தமிழ்


On Sunday, November 5, 2017 at 8:28:04 PM UTC-8, kanmanitamilskc wrote:
Gazetteers Of India:Madras-Madurai-1960-B.S.Baliga-Government Of Madras.என்ற பதிப்பு தான் நான் கருத்து சேகரித்த நூல் ஆகும்.

I thought this is the book you are referring to. None of B. S. Baliga's books are in the internet.

N. Ganesan

kanmani tamil

unread,
Nov 7, 2017, 1:04:03 PM11/7/17
to mintamil
  1751ம்.ஆண்டு ஆலம்கான் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றினான் .(அவன் பாடியமைத்துத் தங்கிய இடம் )
    1755ல்.முஹம்மது யூசுப் கான்என்ற கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலர் 2000சிப்பாய்களுடன் மதுரைக்கோட்டையைக் கைப்பற்றினான். 
    இவன் மதுரை மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவன்.பிறப்பால் திருநெல்வேலி சைவப்பிள்ளை .குழந்தையாக இருந்தபோதே பெற்றோரை 
     இழந்த  இவனை ஒரு இஸ்லாமியன் யூசுப் கான்  என்று பெயரிட்டு வளர்த்தான்.வாலிபனானவுடன் கிழக்கிந்தியக் கம்பெனியில் சிப்பாயாகச் சேர்ந்தான் .     ஒரு பிரெஞ்சு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் .1756ல்.கோட்டையைச் செப்பனிட்டான்.ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பி விட்டான்.
    1757ல்.கெயலார்ட் என்னும் தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் கோட்டையை இருமுறை முற்றுகை இட்டனர்.பயனில்லை.
  யூசுப் கான் கோட்டையை மீண்டும் செப்பனிட்டான்.
    1757ன். இறுதியில் ஹைதர் அலி பல நாட்கள் மதுரைக்கோட்டையை முற்றுகையிட்டான்.அதன் பலத்தைப் பார்த்து பின்வாங்கினான் .
     1763ல்.தளபதி பிரெஸ்டனின் தலைமையில் பெரும்படை மதுரையைத் தாக்கியது.யூசுப் கான் வெடிமருந்தை சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டிப் பற்ற   வைத்து கோட்டையின் மேலிருந்து எதிரிகளின் மேல் வீசி எறியவைத்தான்பகைவர்  தோற்று ஓடினர். 
அதே ஆண்டில் செப்டெம்பர் 2ம்.நாள் தளபதி மான்சனின் தலைமையில் ஒரு தாக்குதல் நடந்தது .கோட்டையை கைப்பற்ற இயலவில்லை .
அதே மாதத்தில் 24ம்.நாள்  ஆங்கிலப்படையும் வாலாஜாப் படையும் சேர்ந்து வந்து தாக்கியும் மதுரைக்கோட்டையையும் யூசுப் கானையும் வெல்ல இயலவில்லை.
    1764ல்.மேஜர் டொனால்டு காம்பெல்தன் படையுடன் வந்து தாக்கி தோற்றுப் போனார் .
கான் சாகிபு என்று மக்கள் அழைத்த யூசுப் கானை அவனுக்கடியில் இருந்த பிரெஞ்சு தளபதி ஒருவன் வஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் மதுரைக்கோட்டை ஆங்கிலேயர் வசம் .வந்தது . (இவன் நினைவாகவும் கான்பாளையம் அப்பெயர் பெற்றிருக்கலாம்.இவ்வரலாற்றைத் தான் கமலஹாசன் திரைப்படமாக எடுக்க முனைந்து அது பாதியில் நின்று விட்டது. )
சிறு திருத்தம்  
ஆலம்கான் பாடியமைத்துத் தங்கிய இடமே கான்பாளையம் .
யூசுப்கான் நினைவாக இன்றும் மதுரையில் உள்ள இடம் கான்சாமேடு ஆகும்.

கண்மணி 







தேமொழி

unread,
Nov 7, 2017, 2:31:06 PM11/7/17
to மின்தமிழ்
அன்றைய மதுரையும், இன்றைய மதுரையும் !-புலவர். ஆ.பழநி

http://apazhani.in/அன்றைய-மதுரையும்-இன்றைய/



தரவிறக்கிப் படிப்பது எளிதாக இருக்கக்கூடும் 

..... தேமொழி 
It is loading more messages.
0 new messages