Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

22 views
Skip to first unread message

ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன்

unread,
Nov 26, 2012, 2:46:15 PM11/26/12
to tamizhs...@googlegroups.com, anbudan, beyo...@googlegroups.com, Indian-Malaysian, namtamilar, thantha...@googlegroups.com, தமிழ் அமுதம், kee...@googlegroups.com, theyva-thamizh, beyout...@yahoogroups.com, paga...@googlegroups.com, Minthamil, che...@googlegroups.com
//தெரியவில்லை
தாலாட்டுப்பாட்டு
இன்றைய அம்மாவிற்கு !//

இன்றைய அம்மாவிற்கு
தாலாட்டுப் பாட்டு 
தெரியவில்லை

***
இதான் ஹைக்கூவா ?

ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன்

unread,
Nov 26, 2012, 11:10:46 PM11/26/12
to tamizhs...@googlegroups.com, ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன், anbudan, beyo...@googlegroups.com, Indian-Malaysian, namtamilar, thantha...@googlegroups.com, தமிழ் அமுதம், kee...@googlegroups.com, theyva-thamizh, beyout...@yahoogroups.com, paga...@googlegroups.com, Minthamil, che...@googlegroups.com
திரு இரவி அவர்களுக்கு,

படித்து விட்டுத்தான் பதில் சொல்லி இருக்கிறேன்.  நீங்கள் கருத்துகளை சொல்ல விரும்பினால் அவற்றை கருத்துகள் என்று சொல்லிவிடுங்கள். ஹைக்கூ என்று சொல்லிவிடாதீர்கள் தயவுசெய்து. நேரடியாகப் படிப்பதை தலைகீழாகப் படித்தால் அவை ஹைக்கூ ஆகிவிடுகிறதா ? இப்படி எழுதுவதால் உங்களின் ஹைக்கூ கவிதைகளின் தரத்தை நீர்த்துப் போகச் செய்கிறீர்கள் என்ற வருத்தத்தை நான் இங்கே பதிக்கிறேன்.

நல்ல ஹைக்கூ கவிதைகளை தேர்ந்தெடுத்துப் படியுங்கள். மூன்று வரிகளில் எழுதிவிடுவதால் மட்டுமே அது ஹைக்கூ ஆகிவிடாது.

அப்புறம் முக்கியமான ஒன்று. சமையல் நன்றாக இல்லை என்று குறை சொன்னால் "ஷெஃப்" நீங்களே சென்று சமைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல  மாட்டார். குறைகளைக் களைந்து நல்ல சமையலை அளிக்க வேண்டியது சமையற்கலைஞரின் வேலை. சாப்பிடுபவனுக்கு ரசித்து ருசித்து சாப்பிடுவது மட்டுமே வேலை.

சரி நீங்கள் கேட்டதற்காக நான் முயல்கிறேன். இதை ஹைக்கூ என்று நான் அழைக்கவில்லை. குறுங்கவிதை என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்கிறேன்.


காட்டினை விதைக்க
வானில் பறக்கின்றன
பறவைகள்.
***

அந்தி மழைச்சாரல்
கடவுளின் சாட்சி
வானவில்.
***

http://maravantu.blogspot.in/2005/06/blog-post_23.html

திரு சுஜாதா  :  ஜனவரி 1966 இல் கணையாழி இதழில் சில ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தொடர்ந்து ஜுனியர் விகடன் மற்றும் சில பத்திரிக்கைகளில் ஹைக்கூ குறித்து கட்டுரை வரைந்தார். ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் என்ற நுலை வெளியிட்டார். இந்த நூலில் ஹைக்கூ எழுதுவதற்கான சில வரைமுறைகளை மிகவும் எளிமையாக எடுத்துக் காட்டுடன் விளக்கியுள்ளார்.ஹைக்கூ கவிதையானது புரிதல் இல்லாமல் எழுதப்படுவதைக் கண்டு " ஹைக்கூ என்றொரு மூன்று வரி பாவச்செயல் " என்று சுஜாதா சமீபத்தில் ஆனந்தவிகடனில் எழுதியிருந்தார்.



On Tuesday, November 27, 2012 9:12:29 AM UTC+5:30, RRavi Ravi wrote:
கருத்துக்களைப் படியுங்கள் .சிந்தனை விதைக்க வில்லையா ?
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி .


உயிருள்ள
வண்ண விமானம்
வண்ணத்துப் பூச்சி !

தெரியவில்லை
தாலாட்டுப்பாட்டு
இன்றைய அம்மாவிற்கு !

பாறைகளுக்கு வைத்த வெடிகள் 
பழி வாங்கியது
குவாரி அதிபர்களை !

வழிபாட்டிற்கு  பயன்பட்டும்
மகிழவில்லை
மலர்கள் !

மின்தடை நீக்கிட
ஒரே வழி
சூரிய ஒளியே  வழி !

யானைகளுக்கு
புத்துணர்வு சரி
மனிதர்களுக்கு ?

வண்ணங்களில்
எண்ணங்கள்
ஓவியம் !

பறவைகள்
விட்ட விதைகள்
விருட்ச்சங்கள் !

சாதி மாறி
காதல்
உயிர்கள் பலி !

என்றும் இனிக்கும்
தேனிலவு
புகைப்படங்கள் !


2012/11/27 RRavi Ravi <erae...@gmail.com>
நன்றி .தாலாட்டுப் பாடும் நம் தமிழ்ப் பண்பாடு வழக்கொழிந்து வருகிறது என்பதை உணர்த்த எழுதியது .தாலாட்டுப் பாட்டு குழந்தையின்  தாய் மொழி அறிவுக்கு உரம் .நன் எழுதியது ஹைக்கூ இல்லை என்றால் விட்டு விடுங்கள். நீங்கள் சிறந்த ஹைக்கூ எழுதுங்கள் .

2012/11/27 ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் <jee...@gmail.com>

--
--
--------------------------------------கொஞ்சம் கவனியுங்கள்----------------------------------------------
 
கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?
அதை உலகறியச் செய்ய வாய்ப்பு தருகிறது உங்கள் பகலவன் இணையதளம்.நீங்களும் செய்தியாளராகலாம்!
 
பகலவன் தளத்திற்கு உங்கள் கட்டுரைகள்,பதிவுகள், கோப்புகள், மின்பதிவுகள்,உங்கள் மாவட்ட செய்திகள் வரவேற்கப்படுகின்றன. உங்களது படைப்புகளை ad...@pagalavan.org என்னும் முகவரிக்கு அனுப்பவும்.
 
தகாத படங்கள், பதிவுகள், கோப்புகள், மின்பதிவுகள்
பதிவுசெய்யப்படக்கூடாது.
 
நன்றி
பகலவன் குழுமம்
www.pagalavan.org
www.tamilpowerchat.com
ad...@pagalavan.org
 
 
 



--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

 











































































































--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

 








































































































N. Kannan

unread,
Nov 27, 2012, 4:11:45 AM11/27/12
to mint...@googlegroups.com
2012/11/27 ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் <jee...@gmail.com>:

> திரு இரவி அவர்களுக்கு,
>
> படித்து விட்டுத்தான் பதில் சொல்லி இருக்கிறேன். நீங்கள் கருத்துகளை சொல்ல
> விரும்பினால் அவற்றை கருத்துகள் என்று சொல்லிவிடுங்கள். ஹைக்கூ என்று
> சொல்லிவிடாதீர்கள் தயவுசெய்து. நேரடியாகப் படிப்பதை தலைகீழாகப் படித்தால் அவை
> ஹைக்கூ ஆகிவிடுகிறதா ? > நல்ல ஹைக்கூ கவிதைகளை தேர்ந்தெடுத்துப் படியுங்கள். மூன்று வரிகளில்

> எழுதிவிடுவதால் மட்டுமே அது ஹைக்கூ ஆகிவிடாது.


முன்பு மீரா ‘ஓம் சக்தி’ இதழின் இணையாசிரியராக இருந்த போது அதில் ஹைக்கூ
பற்றிய என் கட்டுரையொன்று வந்தது.

http://www.subaonline.net/nakannan/articles/haiku.html

அதில் ஹைக்கூ கவிதையின் வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது. இத்தனை
காலத்திற்குப்பின்னும் அக்கட்டுரைக்கு தேவை இருப்பது, நமது
வாசிப்புக்குறைவையே காட்டுகிறது!

நா.கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages