துவைக்காத ஆடைகளை தொடர்ந்து உடுத்தினால் உடல் முழுக்க ஒருவித வலையப்புண்கள் ஏற்படும். பல வண்ணங்களில் காணப்படும் அந்தப்புண்களுக்கு ‘வண்ணார்பற்று’ என்பது பழந்தமிழ் பெயர். பார்ப்பதற்கு வண்ணார்பற்று போலவே இருக்கும் பூச்சியை ‘வண்ணார்பூச்சி’ என்றும், ‘பற்றாம்பூச்சி’ என்றும் அழைத்தது, பிறகு ‘வண்ணாரப்பூச்சி’, ‘பட்டாம்பூச்சி’ என்று மருவியது.
”யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் மிகப்பெரிய வண்ணாத்திப்பூச்சி ஒன்றினை பிரதேசவாசிகள் நேற்று கண்டெடுத்துள்ளனர்.
10 சென்ரி மீட்டர் உயரமும் 18 சென்ரி மீட்டர் அகலமும் கொண்டதாக மண்ணிறத்தில் இவ் வண்ணாத்துப்பூச்சி காணப்படுகின்றது.”
பற்றாம்பூச்சி பாற்றை என Moths-கு பெயராகி உள்ளமை வெள்ளிடைமலை. பாற்றை என மலையாளிகள் அழைக்கும் பழஞ்சொல் தமிழில் பாத்தை:பாச்சை என்றாகியுள்ளது.
பாற்றை > பாத்தை/பாச்சை (தமிழ்), பாந்தை (> ஹாந்தெ - கன்னடத்தில்).
DEDR 4083 b. Ma. pāṟṟa moth. Ka. (Bark.) hānte id. Tu. pāntè butterfly; (B-K.) pāte, pānte id., moth.
கரப்பான் பூச்சிக்கும் Moth போல மண்ணிறம் இருப்பதாலும், பறக்க வல்லதாலும் பாச்சை (தமிழ்), பாற்றை (மலையாளம்) என்ற பெயருண்டு.
-----------------------------------------------
பாப்பா - பாவை ‘doll' - வண்ணாத்திப்பூச்சியின் பழந்திராவிடப் பெயர் (another Proto-Dravidian word for butterfly. Earlier one is paṟṟā )
DEDR 4083 (a) Ta. pāppātti butterfly. Ma. pāppātti id. Koḍ. pa·pïli id., moth. Go. pāpe (A. Y. Ch. Ph. S.) butterfly, (Ma.) grasshopper; (Tr.) pāpē butterfly; (W.) phāpe id., grasshopper; (Ph.) phāphe locust (Voc. 2189). Kur. paplā butterfly. Cf. 4084 Pe. pāmi.
பாப்பா, பாப்பு, பாப்பாத்தி - சிறு பெண்குழந்தையைக் குறிக்கும். பொம்மை போல் உள்ளதால். பாவை பாப்பா தொடர்புள்ள சொற்கள்.
கண்ணின் கருவிழிக்கு பாப்பா எனப் பெயர் உண்டு. கருமணியிற் பாவாய் நீ போதாய் (குறள்). பாப்பா = பாவை.
பாப்பா, பாப்பாத்தி, பாப்பாச்சி என்றும் வண்ணாத்திப்பூச்சிக்கு ஒரு பெயர்.பாப்பா = doll, பாவை.
இந்த சமயத்தில் "பாப்பா" (பாப்பா - ஸ்ரீ பாரதியாரின் இளைய குமாரி.) வந்து "பகவதிப் பாட்டு பாடட்டுமா?" என்றுகேட்டது. "பாடு பாடு" என்று ராகவ சாஸ்திரி தலையை ஆட்டினார். பாப்பா பாடுகிறது.
ஆ ஆ ஆ !
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்; - அவை நேரே இன்றெனக்குத் தருவாய்; - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்; - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும்; - இனி என்னைப் புதிய உயிராக்கி; - எனக் கேதும் கவலை யறச்செய்து; - என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்! ஹே! காளீ, வலிய சாமுண்டீ! - ஓங் காரத் தலைவி யென் னிராணீ!
இன்றும் குழந்தைகளைப் பாப்பாத்தி, பாப்பா என்னும் வழக்கம் கொங்குநாட்டில்பரவலாக உண்டு.
பிள்ளை உயர்திணை ஆண்பெண் பொதுப்பெயர்
பொ: ‘பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை’ என்று தொல்காப்பி யர்
கூறிய இளமைப் பெயரிரண்டில் பார்ப்பு என்பது திரிந்து பெண்டிர்க்குச்
சூட்டுப் பெயராதலும், பிள்ளை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுப்
பெயராதலும் நடைமுறை.
சா: பார்ப்பு-பாப்பு-பாப்பா=பாப்பாத்தி (குழந்தையம்மை) இவை இன்றும்
பெண் குழந்தையர்க்கு வழக்கிலுள. ஆண் பிள்ளை; பெண் பிள்ளை;
ஆண்பிளே,பெண்பிளே எனத்திரிந்து பெரியோரைக் குறித்தல் வழு.
ஆண்பிளைப் பிள்ளை,பெண் பிளைப் பிள்ளை என வருதல் மிகு வழு.
பிள்ளை என்பது தனித்துக்குறிக்கும் போது ஆணைச்சுட்டுவதும் உண்டு.
நா. கணேசன்
புதுமைப்பித்தன், மாகாவியம்:
- வண்ணாத்திப்பூச்சி போன்ற இயற்கை அழகை, உயிரிகளைப் பேசுகிறது.

=======================
அந்துப்பூச்சி (moth)=======================
பற்றாம்பூச்சி தொடர்பாக பாற்றை என Moths-கு பெயராகி உள்ளமை வெள்ளிடைமலை. பாற்றை என மலையாளிகள் அழைக்கும் பழஞ்சொல் தமிழில் பாத்தை:பாச்சை என்றாகியுள்ளது.
பாற்றை > பாத்தை/பாச்சை (தமிழ்), பாந்தை (> ஹாந்தெ - கன்னடத்தில்).
DEDR 4083 b. Ma. pāṟṟa moth. Ka. (Bark.) hānte id. Tu. pāntè butterfly; (B-K.) pāte, pānte id., moth.
கரப்பான் பூச்சிக்கும் Moth போல மண்ணிறம் இருப்பதாலும், பறக்க வல்லதாலும் பாச்சை (தமிழ்), பாற்றை (மலையாளம்) என்ற பெயருண்டு.