டாஸ்மாக்

879 views
Skip to first unread message

DEV RAJ

unread,
Nov 27, 2013, 5:27:58 AM11/27/13
to mint...@googlegroups.com
எல்.முருகராஜ்

மலைமீது உணவு இலவசமாக கிடைக்கும் ஆனால் வழியில் மினரல் வாட்டர் குடித்து பழகியவர்களுக்கு அந்த 
தண்ணீர் கிடைக்காது ஆகவே கையோடு எடுத்துச் செல்லுங்கள் என்ற அறிவுரையின்படி தண்ணீர் பாட்டிலுடன் 
மலையேறினேன். மலை ஏற, ஏற போட்டிருக்கும் சட்டையும் கையில் கொண்டு போன தண்ணீர் பாட்டிலும் கூட 
பெரும் சுமையாக இருந்தது. அப்போதுதான் கவனித்தேன் சுமார் 30 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் 
சிலிண்டரை தூக்கிக் கொண்டு அநாயசமாக ஒரு பெண் மலையேறிக் கொண்டு இருந்தார், படம் எடுக்கும் போது சிரித்தார்.
பேச்சியம்மாள் என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணின் சிரிப்பிற்கு பின் வேதனையான கதை இருந்தது.
டாஸ்மாக்கிற்கு பலியான குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.

ஒரு காலத்தில் உழைத்து தன்னையும், பிள்ளைகளையும் கவுரமாய் காப்பாற்றிவந்த கணவர் போதைக்கு 
அடிமையாகி, இப்போது டாஸ்மாக்கே கதி என்றாகிப் போனபின் பாதியில் நிற்கும் பிள்ளைகளின் படிப்பையும், 
பசியால் துடிக்கும் வயிற்றையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் பேச்சியம்மாளின் "தலை'யில் விழுந்தது.
மகாலிங்கம் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பலர் மேலே போய் அன்னதானம் செய்வார்கள், அதற்கான 
சமையல் சாதனங்கள் அரிசி காய்கறிகள் மற்றும் பக்தர்களின் உடமைகள் என்று சுமார் 30 கிலோ எடை 
கொண்டதாக பிரித்துக்கொண்டு மலையேறிப்போய் இறக்கி வைக்க வேண்டும். இதற்கு கூலியாக இருநூறு 
ரூபாய் வாங்கிக்கொள்கின்றனர்.

இதை செய்யும் பெண் சுமைகூலிகளில் ஒருவராக பேச்சியம்மாள் இருக்கிறார், இவரைப்போல சுமார் 
ஐம்பது பெண்கள் சுமைக்கூலிகளாக பக்தர்களின் சுமைகளை எதிர்பார்த்து அன்றாடம் அடிவாரமான 
தாணிப்பாறையில் காத்திருக்கின்றனர். நான்கு மணி நேரம் சுமையுடன் ஏறி இறக்கி வைத்து விட்டு 
திரும்பவேண்டும், வழியெங்கும் பரவி கிடக்கும் கரடு முரடான கற்களையும், முற்களையும் பார்த்து 
நடக்கவேண்டும், அப்படியே நடந்த போதும் கற்களில் பட்டு கால்களில் கொட்டும் ரத்தத்தை மண் 
போட்டு துடைத்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும், தாமதமானால் கூலி கொடுப்பதில் 
பிரச்னை செய்வார்கள், கொஞ்சம் கால் பிசகினாலே அதலபாதாளத்தில் விழவேண்டிய அபாயம். உண்டு, 
மழைக் காலங்களில் இந்த ஆபத்து இரண்டு மடங்காகும். இவ்வளவு சிரமமும் ஆபத்தும் இருந்தாலும் 
இந்த தொழிலை இந்த சுமையை சுமந்தாக வேண்டிய கட்டாயம். காரணம் குடும்பத்தின் வறுமையை 
சுமைப்பதைவிட இந்த தலைச் சுமையை ஒன்றும் சிரமமில்லை என்பது இவர்களது நியாயம்.
டாஸ்மாக் அரக்கனின் அசுரத்தனமான வளர்ச்சியால் இப்போது இந்த சுமைதூக்கும் தொழிலுக்கு வரும் 
பெண்கள் அதிகரித்து வருவதால் இந்த தொழிலுக்கும் போட்டி உண்டு. போட்டிகளைத் தாண்டி ஒருவருக்கு 
ஒரு நாளைக்கு ஒரு சுமை கிடைத்தாலே பெரிய விஷயம். பல நாட்கள் சுமை கிடைக்காமல் வெறும் 
தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு பிள்ளைகள் பசிக்காக கடன் வாங்கிக் கொண்டு திரும்பும் 
’பேச்சியம்மாக்களும்' உண்டு.

சதுரகிரி மலைப்பகுதியில் கடுமையான மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது என்றொரு 
செய்தியை பார்த்தபோது முன்பெல்லாம் சலனப்படாத மனதில் இப்போது வலி உண்டாகிறது.
எத்தனை "பேச்சியம்மாக்கள்' சுமை இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து திரும்பினரோ...


Innamburan S.Soundararajan

unread,
Nov 27, 2013, 5:32:50 AM11/27/13
to mintamil
'அநாயசமாக' என்று சொல்லமுடியாது. கடுமை உழைப்பு. குடியை கெடுக்கும் குடியை அரசு விற்பனை செய்வது அநாகரீகமாக இருக்கிறது.
இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

DEV RAJ

unread,
Nov 27, 2013, 5:55:56 AM11/27/13
to mint...@googlegroups.com
விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
டாஸ்மாக்

வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
டாஸ்மாக்

இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
டாஸ்மாக்


Geetha Sambasivam

unread,
Nov 27, 2013, 6:53:01 AM11/27/13
to மின்தமிழ்
கண்ணீர் வர வைத்த பதிவு.  பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் கூட டாஸ்மாக்கில் வாங்கிச் செல்வதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.  இது ஏற்கெனவே சமூகத்தைச் சீரழித்து வருகிறது.  ஒருபக்கம் குடி குடியைக் கெடுக்கும் என்ற போதனை, இன்னொரு பக்கம் விற்பனைக்கு உச்சவரம்பு விதிக்கும் அரசாங்கம்.  வேதனையான முரண்பாடுகள்.


2013/11/27 DEV RAJ <rde...@gmail.com>
எல்.முருகராஜ்



DEV RAJ

unread,
Nov 27, 2013, 6:58:33 AM11/27/13
to mint...@googlegroups.com
On Wednesday, 27 November 2013 17:23:01 UTC+5:30, myself wrote:
கண்ணீர் வர வைத்த பதிவு. 


அச்சில் ஏறாத அவலங்கள் பல


தேவ்



Subashini Tremmel

unread,
Nov 27, 2013, 7:11:56 AM11/27/13
to மின்தமிழ், Subashini Tremmel
மதுபானங்கள் ஏழை மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பு தெரிந்து அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.  

>>நான்கு மணி நேரம் சுமையுடன் ஏறி இறக்கி வைத்து விட்டு திரும்பவேண்டும், வழியெங்கும் பரவி கிடக்கும் கரடு முரடான கற்களையும், முற்களையும் பார்த்து நடக்கவேண்டும், அப்படியே நடந்த போதும் கற்களில் பட்டு கால்களில் கொட்டும் ரத்தத்தை மண் போட்டு துடைத்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும், 

இத்தனை சிரமத்தையும் தாங்கிக் கொண்டு பணி செய்கிறாள் இந்தப் பெண். கணவன் குடித்து விட்டு கிடக்கின்றான் என்றால் இத்தகைய ஆண்களை ஒரு வகையில் தண்டனைக்கு உள்ளாக்குவதே சரியாகத்தோன்றுகிறது. இவர்களை எல்லாம் பிடித்து சிறை போன்ற ஓரிடத்தில் வைத்து நன்கு வேலை வாங்க வேண்டும்.  குடிக்கு அடிமையான இத்தகைய மனிதர்களால் நடக்கின்ற அநியாயங்கள் பல.  மனைவியின் வேதனையும் குழந்தைகளின் கண்ணீரும் தேவையும் அறியாத இம்மனிதர்களை தண்டனை ஒன்று தான்  திருத்த முடியும். 

சுபா



2013/11/27 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Geetha Sambasivam

unread,
Nov 27, 2013, 7:12:48 AM11/27/13
to மின்தமிழ்
முற்றிலும் சரியே!


2013/11/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Nov 27, 2013, 10:44:22 AM11/27/13
to mintamil, Subashini Tremmel
வணக்கம்.

பார்ட்டி என்றால் குடிப்பது.
குடிப்பதற்காகவே பார்ட்டி வைப்பது.
பார்ட்டியில் கொடுத்தது போதவில்லை என்று பணம் கொடுத்துக் குடிப்பது.
குடிப்பதற்காகவே பணம் தேடுவது.
பணம் வேண்டும் என்று பொய் சொல்வது.
பொய் சொல்லியும் பணம் கிடைக்கவில்லை யென்றால் திருடுவது.....
இப்படி எத்தனையே காரணங்கள் உண்டு குடிப்பதற்கு.....

இந்தக் காரணங்களில் ஏதும் இல்லாமல்,
பழகத்திற்கு மட்டுமே அடிமையான ஒரு பல்கலைக்கழகப் பணியாளர் குடியால் சீரழிந்தார்.
குடும்பத்தினர் கூட்டிச் சென்று குடியை நிறுத்த மருந்து வாங்கிக் கொடுத்தனர்.
மருந்தைச் சாப்பிட்டுக் கொண்டே குடிக்கவும் செய்தார்.
பக்கவாதம் ஏற்பட்டுப் படுத்த படுக்கை ஆனார்.
பார்க்காத வைத்தியம் எல்லாம் பார்த்தாள் அந்தப் பத்தினித் தெய்வம்.
பக்கவாதம் பாதி சரியானது.
கைகள் கோல் ஊன்றக் கால்கள் நடக்க ஆரம்பித்தன.

நன்றாக நடக்க ஆரம்பித்ததும், நாக்குத் தட்டிவிட்டது.
குடிக்க ஆரம்பித்தார்.  
சக்கிவேல் என்ற காவலரின் உயிரை எமன் களவாடிச் சென்றுவிட்டான்.

குழந்தைகள் தந்தையில்லாது ஏங்கி நிற்கின்றன.
குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்திருந்தாலும் கருணையடிப்படையிலாவது வேலை கிடைக்கும்.

குடும்ப ஓய்வு ஊதியம் பெற்று,
குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்கிறாள் அந்தத் தாய்.

நல்லவேளை,
புண்ணிய பாரதபூமியில் பத்தினித் தெய்வங்கள் இன்னும் குடிக்க ஆரம்பிக்க வில்லை.

அன்பன்
கி.காளைராசன்


2013/11/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Nov 27, 2013, 12:14:38 PM11/27/13
to mintamil
நன்கு கூறினீர்கள் ஐயா. நான் ஒரு சமயம் ராணிபேட்டை அடுத்த குக்கிராமம் ஒன்றில் ஒரு மகளிர் தன்னார்வக்குழுவை சந்திக்கச்சென்றிருந்தேன். எனக்காக பாட்டுப்பாடி மகிழ்வித்தார்கள். அங்கு மகளிர் விதித்த மது விலக்கு கண்டிப்பான அமலிலிருந்தது. பின்னணி ஒரு கிழவி அளித்த விளக்கத்திலும்: 'என் கணவன் குடித்தே செத்தான்.'. நான் அசட்டுத்தனமாக 'அப்பறம்' என்று கேட்டு வைத்தேன். 'கொளுத்தினோம். அது வரை கொளுத்தாது பெரிது' என்றார். திகைத்துப்போனேன். பின்னர் அவ்வமைப்பின் மேலாளர் விளக்கம்: இவர்கள் ஆண்களை/கணவர்களை மிகவும் மதிப்பவர்கள். குடி அந்த பண்பையும் பலி வாங்கி விட்டது.'.

இன்னம்பூரான்

Nagarajan Vadivel

unread,
Nov 27, 2013, 12:42:09 PM11/27/13
to மின்தமிழ்
இந்த இழையின் தலைப்புக்கும் கருத்துக்கும் இடைவெளி உள்ளது என்பது என் காத்துட்டுக் கருத்து.  எல்லாக் குமுகத்திலும் குடிப்பழக்கம் வாழ்வோடு இணைந்ததாகவே உள்ளது.  தமிழர்களின் இலக்கிஅய் வெளிப்பாடுகள் தமிழகத்த்தில் ஆணுன் பெண்னும் மது அருந்தினார்கள் என்றே குறிப்பிடுகிறது.  செல்வச் செழிப்பில் உள்ள குமுகப் பிரிவுகள் வாழ்க்கையின் இனிமையை உணர கூடிக் களிக்க மது அருந்தும் பழக்கம் உதவியது.  மானுடவியலார் மது அருந்துவது மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதாகவும் அச்சத்தை சற்றே விலக்கிவைப்பதாகவும் இருப்பதால் குமுகக் குழுக்கள் குடித்து மகிழ்வது ஏற்றுக்கொண்ட வழக்கம் என்று கூறுகிறது. அதுபோன்றே சமய வழிபாடும் மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் அச்சத்தை விலக்குவதாகவும் உள்ளது என்று கூறினர்.  அவர்கள் மேலும் கூறுகையில் பதுவும் சமய வழிபாடும் ஒன்றுக்கொன்று தொடர்பிலிருப்பதை விளக்க முடியாமல் திகைத்து நிற்க வேண்டியுள்ளது என்று கூறுகின்றனர்

மதுவைப் பொருளாதார நோக்கில் உற்று நோக்கும்போது அது எளிதில் கிடைக்காத சூழலில் பொருளாதார வசதியில்லாதவர்களில் பெரும்பாலோர் குடிப்பதில்லை என்றும் சிலர் குடிக்க ஆங்காங்கே கள்ளச் சாராயம் காய்ச்சி விறுகும் தொழில் தழைத்து வளர்ந்து குடிக்க உதவுவதைத் தடுக்க அரசு எந்திரம் சிறப்பாகச் செயல்பட முடிவதில்லை என்றும் அறியமுடிகிறது

பொருளாதாரச் சீர்கேட்டுக்கும் உடல்நலத்துக்கும் கேடுவிளைக்கும் மதுப்பழக்கத்தை தடை செய்ய மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் பின்னர் அது தோல்வியடைந்தது என்று அரசே ஒத்துக்கொண்டதையும் நாம் அறிவோம்.  குடிப்பவர்களைத் தண்டிக்க அரசு முனைந்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் சட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பல குடிகாரர்கள் சிறையிலடைக்கப்பட்டபோது அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தாய்க்குலங்கள் போராடி அந்தச் சட்டம் விலக்கப்பட்டதும் தமிழ்நாட்டில் நடந்தது

அரசியலில் மிதவாதம் தீவிர வாதம் இருப்பதுபோல் குடிப்பதிலும் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் உண்டு.  குடித்தால் மட்டுமே கவிஞர்கள் காலத்தை எதிர்த்து நிற்கும் கவிதைகளைக் கவிஞர்கள் படைக்க முடியும்.  பட்டையடித்த பாரதியாரும் விஸ்கி அடித்த கண்னதாசனும் எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.  அவர்கள் குடித்தது தவறு என்று யாரும் கருதவில்லை.  பணக்காரகளும் பல்லாயிரக்கணக்கில் ஊதியம்பெரும் ஐதி ஆண்களும் பெங்களும் குடிப்பது தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேறத்துக்கு ஆதரமாக மைகிறது

சிக்கல் உருவாகும்  இடமே குடி குடியைக் கெடுக்கும் என்று அறியாது குடித்து குடி உடல் நலத்துக்கும் நாட்டுக்கும் கேடு என்ற வாசகத்தின் உண்மையை அறியாமல் குடிக்கும் குறிகாரகளால் ஏற்படும் சமூக அவலத்துக்கு தாஸ்மாக் துணைபோகிறது என்ற குற்றச்சாட்டுக்கு சரியான தீர்வு கிடைக்காத சூழ்ல் மட்டுமே

எனவே ஒட்டுமொத்தமாகக் குடியைத் தாக்குவதால டாஸ்மாக்கைத் தாக்குவதால் சிக்கலுக்குத் தீர்வுகாண இயலாது என்பதே என் காத்துட்டுக் கருத்து

கால் நூற்றாண்டுக்காலம் இடைவெளியில்லாமல் குடித்துக்  கடந்த பத்தாண்டுகளாகக் குடிக்காத குடிமகன் என்ற பெருமை உள்ளவர்களும் தமிழகத்தில் உண்டு

படிக்காப் புலவன்




2013/11/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 27, 2013, 1:02:54 PM11/27/13
to mint...@googlegroups.com
குடியால் சீரழிந்த குடும்பம் -

குடும்பம் நடத்த மனைவி மறுப்பு: 'குடிகார' கணவர் தற்கொலை



Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 27, 2013, 8:39:21 PM11/27/13
to Minthamil
குடியால் விளைந்திடும் கேடுகள் பற்றி எனது சில பழய பதிவுகள் இணைப்பில்.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


குடியால் விளைந்திடும் கேடுகள் பற்றிய எனது பழய பதிவுகள்.pdf

DEV RAJ

unread,
Nov 28, 2013, 2:49:51 AM11/28/13
to mint...@googlegroups.com
மக்களின் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகளுக்கு டாஸ்மாக் நிறுவனமே காரணமாக 
உள்ளதென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு காட்டமாக விளாசியுள்ளார்.


நெருப்பு வளையத்திற்குள் இருக்கும் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருப்பதால் பணக்காரர்கள் 
ஓரளவு வசதி படைத்தவர்கள் மது அருந்த வெளி மாநிலங்கள் தேடி சென்றாலும் ஏழை எளிய மக்கள் நிம்மதியாக 
மன நிறைவுடன் வாழ்க்கை வாழ்கிறார்கள். தங்கள் வருமானத்தை குறைந்த அளவு தங்கள் செலவிற்கு போக மீதியை 
தங்கள் குடும்பத்திற்கு வழங்குகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி வருமானத்தை மதுவிற்கு அழித்து விட்டு 
குடும்பத்தை வறுமையில் வாட விடுகிறார்கள். 



பெரிய மனுசாளுக தண்ணி அடிச்சா அவுக வருமானத்துல
கொஞ்சம் நட்டமாகும்; மத்தவிங்களுக்கு அப்படியில்ல.

இந்திரன் சோமரசம் அருந்தினான் எனும் கவிதைப்
புனைவும் படிக்க நன்றாக இருக்கிறது; ஆனால் இந்திராணியை
அது சீரழிக்கவில்லை. அவளது வாழ்க்கையில் 
தேவபோகத்துக்குக் குறைவில்லை.

பலபேசி என்ன ? குடியினால் தீமைதான்
தனி மனிதனுக்கும், குடும்பத்துக்கும், 
ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும்.

நெருப்பு வளையத்துக்குள் தனியாக எப்படி
நிற்பது என்று சாதுர்யமாகச் சமாதானம்
சொல்லிக்கொண்டிராமல் எல்லா அரசுகளும்
முனைந்து மதுவை ஒழித்து, வரவினங்களை
வேறு வகையில் ஈட்ட முயல வேண்டும்



தேவ்

Subashini Tremmel

unread,
Nov 28, 2013, 3:16:09 AM11/28/13
to மின்தமிழ்



2013/11/28 DEV RAJ <rde...@gmail.com>

மக்களின் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகளுக்கு டாஸ்மாக் நிறுவனமே காரணமாக 
உள்ளதென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு காட்டமாக விளாசியுள்ளார்.


நெருப்பு வளையத்திற்குள் இருக்கும் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருப்பதால் பணக்காரர்கள் 
ஓரளவு வசதி படைத்தவர்கள் மது அருந்த வெளி மாநிலங்கள் தேடி சென்றாலும் ஏழை எளிய மக்கள் நிம்மதியாக 
மன நிறைவுடன் வாழ்க்கை வாழ்கிறார்கள். தங்கள் வருமானத்தை குறைந்த அளவு தங்கள் செலவிற்கு போக மீதியை 
தங்கள் குடும்பத்திற்கு வழங்குகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி வருமானத்தை மதுவிற்கு அழித்து விட்டு 
குடும்பத்தை வறுமையில் வாட விடுகிறார்கள். 


நல்ல உதாரண கிராமங்கள்.
மக்களே அதன் பாதிப்பை உணர வேண்டும்.

தீபாவளி நேரத்தில் சில தமிழ் படங்களையும் நாடகங்களையும் பார்க்க நேரிட்டபோது  அதில் எப்படி சகஜமாக  மதுபானம் அருந்துவதை ஹீரோயிஸமாகக் காட்டுகின்றனர் என்று பார்த்து மனம் வேதனையடைந்தேன். மக்கள் முன்னேற்றத்துக்கான விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்ல மனம் வராத ஊடகங்கள் இவ்வகை தேவையற்ற விஷயங்களை வளர்க்கின்றன.

சுபா
 

பெரிய மனுசாளுக தண்ணி அடிச்சா அவுக வருமானத்துல
கொஞ்சம் நட்டமாகும்; மத்தவிங்களுக்கு அப்படியில்ல.

இந்திரன் சோமரசம் அருந்தினான் எனும் கவிதைப்
புனைவும் படிக்க நன்றாக இருக்கிறது; ஆனால் இந்திராணியை
அது சீரழிக்கவில்லை. அவளது வாழ்க்கையில் 
தேவபோகத்துக்குக் குறைவில்லை.

பலபேசி என்ன ? குடியினால் தீமைதான்
தனி மனிதனுக்கும், குடும்பத்துக்கும், 
ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும்.

நெருப்பு வளையத்துக்குள் தனியாக எப்படி
நிற்பது என்று சாதுர்யமாகச் சமாதானம்
சொல்லிக்கொண்டிராமல் எல்லா அரசுகளும்
முனைந்து மதுவை ஒழித்து, வரவினங்களை
வேறு வகையில் ஈட்ட முயல வேண்டும்



தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

DEV RAJ

unread,
Nov 28, 2013, 3:42:01 AM11/28/13
to mint...@googlegroups.com
On Thursday, 28 November 2013 13:46:09 UTC+5:30, Suba.T. wrote:
நல்ல உதாரண கிராமங்கள்.
 

மராட்டியச் சிற்றூர்கள்  முன்னேற்றப் பாதையில் :

ராளேகண் ஸித்தி -
 
ஹிவரே பாஜார் -

கி.காளைராசன்

unread,
Nov 28, 2013, 5:21:34 AM11/28/13
to mintamil
காரைக்குடியில் ஒரு குடியன்

காரைக்குடி பெரியார்சிலை ஒரு முக்கியமான இடம்.
அனைத்துச் சாலைகளும் சந்திக்கும் இடம்.
அனைத்துப் பேருந்துகளும் நிற்கும் இடம்.
பேருந்து நிறுத்திற்கு அருகிலேயே டாஸ்மாக்.
எதிரே புரோட்டாக் கடை.
சுக்காவருவல் சாப்பிடச் செல்லமுடியாமல் சுருண்டு விழுந்து கிடக்கிறான்.

Inline image 1

Inline image 2

பாவம் யார் பெற்ற பிள்(fill)ளையோ?
யாருக்குக் கல்லோ புல்(full)லோ?

அன்பன்
கி.காளைராசன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
Image2385.jpg
Image2386.jpg

Geetha Sambasivam

unread,
Nov 28, 2013, 6:48:49 AM11/28/13
to மின்தமிழ்
ஆமாம், அதிலும் காதல் தோல்வின்னா, ஹீரோ கட்டாயமாய்க் குடிக்கணும்.  இன்னிக்குப் பார்த்த ஒரு ஹிந்திப்படத்தில் கூட (சால்பாஜ்) ஶ்ரீதேவி ஹீரோவுடன் வரும் சண்டையில் குடிக்கிறதாகக் காட்டி இருக்காங்க. :( 


2013/11/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>


Nagarajan Vadivel

unread,
Nov 28, 2013, 10:19:56 AM11/28/13
to மின்தமிழ்
இதெல்லாம் 60 ஆண்டுகளுக்குமுன் திரைப்படங்களில் தொடங்கப்பட்ட மாயைகள்.  


அன்றிலிருந்து இன்றுவரை ஆடவர்கள் குடிப்பதும் பெண்கள் குடி என்றால் என்ன என்பது தெரிந்து அவர்களைத் திருத்தாமல் கண்னீரில் கரைந்துபோவதும் நிழல் நிஜம் ஆவதுபோல் மாறிவிட்டது

இன்றுவரை பெண்களுக்குக் குடித்தவனை அடையாளம் காணத் தெரியாமல் குடித்தவன் வலுவிழந்தவன் என்ற உண்மையை அறியாது அஞ்சுவதும் குடிக்க ஆதாரமாக இருக்கும் நல்ல கள்ள குடிநிலைகளையும் மூட ஒன்று சேரத் தெரியாமலும் வார்த்தை விளையாட்டோடு நின்றுவிடுவது வருந்தற்குரியது

அங்கொன்றும் இங்கொன்றுமென சில எதிர்ப்புக் குரல் எழும்பினாலும் அது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அன்றாடச் செய்திகளில் ஒன்றாகி மாயமாகிவிடுகிறது


படிக்காப் புலவன்


2013/11/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ஆமாம், அதிலும் காதல் தோல்வின்னா, ஹீரோ கட்டாயமாய்க் குடிக்கணும்.  இன்னிக்குப் பார்த்த ஒரு ஹிந்திப்படத்தில் கூட (சால்பாஜ்) ஶ்ரீதேவி ஹீரோவுடன் வரும் சண்டையில் குடிக்கிறதாகக் காட்டி இருக்காங்க. :( 


2013/11/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>


Subashini Tremmel

unread,
Nov 28, 2013, 10:52:56 AM11/28/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/11/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இதெல்லாம் 60 ஆண்டுகளுக்குமுன் திரைப்படங்களில் தொடங்கப்பட்ட மாயைகள்.  


அன்றிலிருந்து இன்றுவரை ஆடவர்கள் குடிப்பதும் பெண்கள் குடி என்றால் என்ன என்பது தெரிந்து அவர்களைத் திருத்தாமல் கண்னீரில் கரைந்துபோவதும் நிழல் நிஜம் ஆவதுபோல் மாறிவிட்டது

சமூக சூழலும் சிந்தனையும் கணவன் என்ன தவறு செய்தாலும் பொறுத்துக் கொண்டு செல்ல வேண்டும் பெண். பொறுத்தார் பூமி ஆள்வார் என சொல்லி சொல்லி மூளை சலவை செய்து வைத்திருந்தால் பெண்கள் என்ன தான் செய்வார்கள்? இத்தகைய கணவன் வாய்த்த எல்லா பெண்களுமே ஏதாவது ஒரு வகையில் குடியை கணவன் விடுவானா என்று தினம் தினம் எதிர்பார்க்கின்றார்கள். 

ஆனால் திருந்தாத கணவனை தண்டிக்கவும் வேண்டும்.  அவனால் தன் வாழ்வும் குழந்தைகள் நிலையும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் போது அவனை விரட்டி விடவும் வேண்டும் என்ற மனதை பெற சமூகமும் உதவ வேண்டும். சமூகம் என்ன சொல்லுமோ என பயந்து துன்பத்திலே உழலும் பல பெண்களை அரவணைக்கும் சமூகம் நம்மை சுற்றி இருக்கிறதா? 

மலேசியாவில் சில வருடங்களுக்கு முன்னர் பால்மரத்தோட்டத்தில் ஒரு சோக நிகழ்வு நடந்தது. 9 பிள்ளைகளுக்குத் தாய். தமிழர் குடும்பம். அவள் பால்மரம் வெட்டி சம்பாதிக்கும் பணத்தையும் அவன் பிடுங்கி குடித்து விடுவான். 2 சிறு பிள்ளைகள் பசியில் மண்ணைத் தின்று இறந்து விட்டனர். அக்குழந்தைகளுக்கு இறுதி கிரியை செய்ய அவளுக்கு பணம் இல்லாத நிலையில் சமூக அமைப்புக்குச் சொல்லி அச்சமூக அமைப்பு உதவியில் இறுதிக் கிரியைகள் நடந்தன.  என் தோழி இந்த சமூக நல நிறுவனத்தில் வேலை செய்பவர் என்பதால் அறிந்த விஷயம் இது.  இப்படி துன்புறுத்தும் கணவனை திருத்த முடியாத வேளையில் சமூக நல அமைப்புக்களின் வழியாக பல பெண்கள் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்கின்றனர். தமிழகத்தில் இத்தகைய விரிவான சேவையின் தேவை இருக்கின்றது.

சுபா

DEV RAJ

unread,
Nov 28, 2013, 11:10:36 AM11/28/13
to mint...@googlegroups.com
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடச் சென்ற பெண்கள்: துணை வட்டாட்சியரை சிறைபிடித்தனர்



பெண்கள் குழுவாக முயன்றால் முடியாதது இல்லை;
மகளிர்  காவல் நிலையமும் துணை செய்கிறது.
சில அரசியல் அமைப்புகளும் துணை செய்கின்றன.
தேவை விழிப்புணர்ச்சி

Nagarajan Vadivel

unread,
Nov 28, 2013, 12:42:12 PM11/28/13
to மின்தமிழ்

2013/11/28 DEV RAJ <rde...@gmail.com>

பெண்கள் குழுவாக முயன்றால் முடியாதது இல்லை;
மகளிர்  காவல் நிலையமும் துணை செய்கிறது.
சில அரசியல் அமைப்புகளும் துணை செய்கின்றன.
தேவை விழிப்புணர்ச்சி

​சக்திக்கு அப்பாற்பட்ட தீர்வுகளைக் காணத் தூண்டி அவர்கள் சிக்கலில் தவிக்கும்போது கண்டும் காணாமல் இருப்பதே அறிவார்ந்தவர்கள் பெரும்பாலும் பின்பற்றுவதாக உள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டும்

ஆந்திராவில் என்.டி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது அரசு உருவாக்கிய கொள்கை அடிப்படையில் கிராமந்தோறும் முதியோர் கல்விக் கூடங்கள் செயலுக்கு வந்தன.  பிரேஸில் நாட்டில் சர்வாதிகாரத்தை எதிர்த்து நிற்க கல்வியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய பாலோஃப்ரெய்ரி என்ற கல்வி அதிகாரி வருமையின் சின்னம் கொடுமைகளுக்கும் அடக்குமுறைக்கும் அடிபணிந்து அமைதி காப்பது.  நசுக்கப்பட்டு பொருளாதாரப் புதைகுழியில் சிக்கியவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கிறார்கள்.  அவர்களுக்கு அவர்களின் வலிமை என்ன உரிமை என்ன என்ற உணர்வு உருவாகக் கல்வி பயன்படவேண்டும்.  கல்வி வெறும் வார்த்தை அலங்காரங்களைப் பயன்படுத்துவதல்ல.  உரிமையை இழந்து அடிமையாக உள்ள மனிதனின் மெளனம் கலைத்து அவன் புற உலகை அதன் நிதர்சன் உண்மைகளை உணரச் செய்யும் மந்திரங்களாக மாற்ற வேண்டும் என்ற கருத்து உலகெங்கும் பரவியது.

இந்தப் புதிய கல்விமுறையால் கவரப்பட்ட களப்பணியாளர்கள் தென் ஆந்திராவில் பெண்களுக்கு அறிவொளியை ஏற்றி உரிமைகளையும் கடமைகளையும் சமூக விரோதச் சக்திகளையும் அடையாளம்காணும் திறனை வளர்க்கும் விதத்தில் கல்விஅறிவைத் தந்தனர்.  அதன் விளைவு கிராமங்களில் அரசு உரிமம்பெற்று நடந்த மதுக்கடைகளை மறியல் செய்து அந்தப் பெண்கள் கடைகளை மூட வைத்தனர்.  இந்த மதுவுக்கெதிரான போராட்டல் ஒரு பொது இயக்கமாக மாறுவதை உணர்ந்த அரசாங்கம் மதுக்கடைகளை மூடுவதற்குப் பதிலாக அந்த முதியோர் கல்வி நிறுவனங்களை மூடி இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவாகப் பெண்களின் விழிப்புணர்வுக்கு ஒரு தடா போட்டனர்

குமுகப் போராட்டத்தில் வல்லான் வகுப்பதே வாய்க்கால் என்பதுபோலவே அரசும் வல்லவர்களின் கைப்பாவையாக இயங்கும்வரை மாற்றுக்குரல் வலிவடைய வாய்ப்புக் கிடைப்பதில்லை.  அறிஞர் பெருமக்கள் எந்தப்பக்கமும் சேராமல் நடுநிலை வகுப்பதாகக் கூறி அமைதியாக இருப்பதன் மூலம் வல்லார்பக்கம் சாய்ந்து எளியோர் இயக்கங்கள் வலுவிழக்கக் காரணமாக ஆகிவிடுகிறார்கள்

சமூக அவலங்களும் சமூக அநீதிகளும் அதை எதிர்க்கும் வலியோர்க்கெதிரான எளியோர் போராட்டங்களும் குமுகப் பரமபத விளையாட்டில் பாம்பு ஏணி விளையாட்டில் ஆழ்ந்து ஈடுபட்டு வர்க்கப் போராட்டத்தை முடிவில்லாத தொடர்கதையாக மாற்றிவிடுகிறது.

படிக்காப் புலவன் கருநாகன்

DEV RAJ

unread,
Nov 28, 2013, 1:13:56 PM11/28/13
to mint...@googlegroups.com
The first liquor-free taluk in the state

An anti-liquor resolution was passed by 58 women in the gram sabha in Nandgane village, 
in Maharashtra, making Jawali the first liquor-free taluka in the state.

At a special gram sabha (people’s assembly) convened in Nandgane village, in Maharashtra’s 
Satara district, a resolution was passed on July 9, 2008, banning the sale of alcohol in the village. 
The resolution was passed by the 58 women who attended the gram sabha and voted 
unanimously for the ban. The gram sabha was conducted as per the law, according to the 
block development officer of Jawali taluka.

The women have had to face some opposition. Sunita Dalvi, sarpanch of Nandgane, 
says a former sarpanch prevented some of the women from attending the gram sabha. 
And the district convenor of the anti-liquor movement, Vilas Baba Jawal, was barred 
from entering the village.


DEV RAJ

unread,
Nov 28, 2013, 1:49:43 PM11/28/13
to mint...@googlegroups.com
On Thursday, 28 November 2013 23:12:12 UTC+5:30, மிஞ்ஞானி wrote:
ஆந்திராவில் ....
 

பிள்ளைகளும் சேர்ந்துகொண்டனர்.
பெத்தபஸ்புல கிராமத்தின் வெற்றிக்கதை -

இப்புடு க்ராமம் ப்ரசாந்தங்கா உந்தி


தேவ்

DEV RAJ

unread,
Nov 28, 2013, 10:15:31 PM11/28/13
to mint...@googlegroups.com
தமிழ்நாடு குடிகாரர்கள் நாடாக மாறி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் 

மதுவிலக்கு மூலம் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட மணல், கிரானைட் போன்ற கனிம வளங்களை அரசே ஏற்று நடத்தலாம். 
மணல் கொள்ளை மூலம் ஆண்டுதோறும் ரூ.2 ஆயிரம் கோடி தனியாருக்குச் செல்கிறது. சரியாக விற்பனை வரி வசூலித்தால் அரசுக்கு 
ஆண்டுதோறும் ரூ.8 ஆயிரம் கோடி கிடைக்கும். இதன் மூலம் அரசின் வருமானத்தைப் பெருக்கலாம்.

                                                                                                                                                                                                       - டாக்டர் ராமதாஸ் 

Nagarajan Vadivel

unread,
Nov 28, 2013, 10:47:16 PM11/28/13
to மின்தமிழ்
இதில் உள்ள இடியாப்பச் சிக்கல் ஒன்றை நாம் பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்.  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்காங்கே அபின் விற்பனை அமோகமாக நடந்துகொண்டிருந்தது.  கொள்கை அடிப்படையில் அபின் கடைகளை மூட முடிவெடுத்ததும் இதுவரை அபின் அருந்தியவர்கள் சடாரென்று அபினை நிறுத்தினால் அவர்களுக்கு உடல் ரீதியாக் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்ற மருத்துவ எச்சரிக்கை அடிப்படையில் அபின் போதைக்கு அடிமையானவர்களுக்கென்று சிறப்புக் கடைகள் திறக்கப்பட்டன

தமிழகத்தில் மொத்த மக்கட்தொகையில் 30% மொடாக்குடியர்கள் என்றும் தினம்தோறும் அவர்களால் தீர்த்த யாத்திரைக்காக டாஸ்மாக் செல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் முழு மதுவிலக்கை அமல்படுத்தினால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கப் பற்றி அரசிடம் சரியான திட்டம் இல்லை

நான் கள் வேண்டுவோர் கழகத் தலைவரிடம் பேசியபோது மாற்று ஏற்பாடாகக் கள் விற்பனையை அறிமுகப்படுத்தலாம் என்றார் அவர்.  கள் சங்ககாலத்திபிருந்து தமிழர்களாலும் தமிழச்சிகளாலும் விரும்பி ஏற்றுக்கொண்ட அயன் கந்தவிலாஸ் தமிழ் மது அந்நிய வாடை அடிக்காதது.  உடலுக்கு நலம் பயப்பது. உலகில் உள்ள மொத்த பனைமரங்களில் 80% தமிழகத்தில் உள்ளது.  உலகத் தமிழனின் உலகளாவிய பார்வையை விளக்கும் இலச்சினையே பனைமரதான் என்றும் பனங்கள் அருந்துவதன்மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று குறிப்பட்டார்

எனவே மது அருந்துவதை முற்றாக ஒழிக்க முடியாது என்றாலும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள் கலந்த செயற்கைச் சாராயத்திலிருந்து தமிழர்களை விடுவித்து இயற்கை அன்னை அளித்த கள் அருந்தி நலத்தோடு வாழல்லாம் என்ற கருத்தை கவனத்தில் கொளவேண்டும்

படிக்காப் புலவன் கருநாகன்


2013/11/29 DEV RAJ <rde...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Nov 29, 2013, 4:19:06 AM11/29/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/11/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>




இந்தப் புதிய கல்விமுறையால் கவரப்பட்ட களப்பணியாளர்கள் தென் ஆந்திராவில் பெண்களுக்கு அறிவொளியை ஏற்றி உரிமைகளையும் கடமைகளையும் சமூக விரோதச் சக்திகளையும் அடையாளம்காணும் திறனை வளர்க்கும் விதத்தில் கல்விஅறிவைத் தந்தனர்.  அதன் விளைவு கிராமங்களில் அரசு உரிமம்பெற்று நடந்த மதுக்கடைகளை மறியல் செய்து அந்தப் பெண்கள் கடைகளை மூட வைத்தனர்.  இந்த மதுவுக்கெதிரான போராட்டல் ஒரு பொது இயக்கமாக மாறுவதை உணர்ந்த அரசாங்கம் மதுக்கடைகளை மூடுவதற்குப் பதிலாக அந்த முதியோர் கல்வி நிறுவனங்களை மூடி இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவாகப் பெண்களின் விழிப்புணர்வுக்கு ஒரு தடா போட்டனர்

இது பற்றி நான் கேல்விபப்ட்டதில்லை. ஆனால் வாசிக்கும் போதே மன்ம் வெறுத்துப் போகின்றது இவ்வகை அரசியலை நினைக்கும் போது. 


குமுகப் போராட்டத்தில் வல்லான் வகுப்பதே வாய்க்கால் என்பதுபோலவே அரசும் வல்லவர்களின் கைப்பாவையாக இயங்கும்வரை மாற்றுக்குரல் வலிவடைய வாய்ப்புக் கிடைப்பதில்லை.  

உண்மை.
 
அறிஞர் பெருமக்கள் எந்தப்பக்கமும் சேராமல் நடுநிலை வகுப்பதாகக் கூறி அமைதியாக இருப்பதன் மூலம் வல்லார்பக்கம் சாய்ந்து எளியோர் இயக்கங்கள் வலுவிழக்கக் காரணமாக ஆகிவிடுகிறார்கள்.

உண்மை.
 
சுபா


சமூக அவலங்களும் சமூக அநீதிகளும் அதை எதிர்க்கும் வலியோர்க்கெதிரான எளியோர் போராட்டங்களும் குமுகப் பரமபத விளையாட்டில் பாம்பு ஏணி விளையாட்டில் ஆழ்ந்து ஈடுபட்டு வர்க்கப் போராட்டத்தை முடிவில்லாத தொடர்கதையாக மாற்றிவிடுகிறது.

படிக்காப் புலவன் கருநாகன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Nov 29, 2013, 4:23:08 AM11/29/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/11/29 DEV RAJ <rde...@gmail.com>
இவை மட்டுமல்ல. மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் பல தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும். அதிலும் இப்போதைய நிலையில் அதற்கு அதிகம் வாய்ப்புக்கள் உள்ளன. 

சுபா

 
                                                                                                                                                                                                       - டாக்டர் ராமதாஸ் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Nov 29, 2013, 4:56:40 AM11/29/13
to மின்தமிழ்
எல்லாவற்றையும் முன்னெடுத்துச் செல்லக் கூடிய நல்ல தலைவன் வேண்டும். :(


2013/11/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 29, 2013, 6:11:13 AM11/29/13
to mint...@googlegroups.com

இங்கிட்டு அடி பலமா வுளுது -


DEV RAJ

unread,
Dec 6, 2013, 8:51:06 AM12/6/13
to mint...@googlegroups.com

இந்த ஆண்டு பிப்ரவரி 25-ல், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை 
மார்ச் 31-க்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஆறுமாத 
காலம் அவகாசம் கேட்ட அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது மட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் 
இருக்கும் 504 மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஈரோடு அருகே பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவிகள் டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் 
எதிர்காலத்தை எண்ணி கவலை அடையச்செய்கிறது.



2.5 Million Alcohol-Related Deaths Worldwide- Annually

Based on the analyses of 100 individual country profiles, The World Health Organization (WHO) 
has released The Global Status Report on Alcohol and Health focused on analyzing available 
evidence on alcohol consumption, consequences and policy interventions at global, regional 
and national levels.

The harmful use of alcohol is a global problem which compromises both individual and social 
development. It causes harm far beyond the physical and psychological health of the drinker, 
including the harm to the well-being and health of people around the drinker. Alcohol is 
associated with many serious social and developmental issues, including violence, 
child neglect and abuse, and absenteeism in the workplace.




குடிப்பழக்கம் உலகளாவிய பிரச்னை என்றாலும் வளரும் நாடுகளுக்கு இது 
பன்முகப் பின்னடைவைத் தருகிறது.

ஓசி மது வழங்காத ஒரு டாஸ்மாக் ஊழியர் குடிமகன்களால் 
வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். குடிப் பழக்கத்தைக் கண்டித்த தாய் 
மகனால் கொல்லப்பட்டுள்ளார். தற்கொலைகளுக்கும் குடி காரணமாகி 
விடுகிறது. இது போன்றவை அன்றாட நிகழ்வுகளாகி நம்மை மரத்துப்
போகச் செய்து விட்டன 


தேவ்

கி.காளைராசன்

unread,
Dec 6, 2013, 11:24:55 AM12/6/13
to mintamil
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம். 

2013/12/6 DEV RAJ <rde...@gmail.com>
குடிப் பழக்கத்தைக் கண்டித்த தாய் 
மகனால் கொல்லப்பட்டுள்ளார்.
समर्थं वाऽसमर्थं वा कृशं वाप्यकृशं तथा।

रक्षत्येव सुतं माता नान्यः पोष्टा विधानतः।।

ஸமர்த²ம்ʼ வா(அ)ஸமர்த²ம்ʼ வா க்ருʼஸ²ம்ʼ வாப்யக்ருʼஸ²ம்ʼ ததா²|
ரக்ஷத்யேவ ஸுதம்ʼ மாதா நான்ய​: போஷ்டா விதா⁴னத​:||

தாயின் அன்பு தூய்மையானது. பிள்ளையிடம் குறை காணாதது. சமர்த்தோ, அசமர்த்தனோ ஒல்லியோ குண்டோ எப்படி இருந்தாலும் தாய் தன் பிள்ளையை ரட்சிக்கிறாள். அவளுக்கு ஈடாக வேறு எவராலும் இதை செய்ய முடியாது.

நன்றி - http://www.sangatham.com/articles/sanskrit-nuggets-1.html

அந்தத் தாயும் வெறுக்கும் ஒரே செயல் கள்ளுண்பது.

“ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி“ (923)

mariappan balraj

unread,
Dec 7, 2013, 8:37:19 AM12/7/13
to mint...@googlegroups.com
மஹாபாதத்தில் தேவர்களின் குருவான பிருஹஸ்பதியின் மகன் கசன் இறந்தவர்களைப் பிழைப்பிக்கும் ஸஞ்சீவினி வித்தையைக் கற்பதற்காக அஸுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடம் ஆயிரம் வருஷங்கள் குருவுக்குjf பணிவிடை செய்வதாக ஒப்பந்தம்.

இதுபற்றித் தெரிந்த அஸுரர்கள் பசுக்களை மேய்ப்பதற்காகச் சென்ற கசனைத் துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரையாகப் போட்டுவிடுவார்கள். தனது மகள் தேவயானியின் வேண்டுகோளுக்கிணங்க சுக்ராச்சாரியார் ஸஞ்சீவினி வித்தையைக் கொண்டு கசனைக் கூப்பிடுவார். நாயின் வாயைப் பிளந்து கொண்டு கசன் வெளிப்படுவான்.

பிழைத்த கசனை மறுபடியும் அஸுரர்கள் கொன்று அரைத்துக் கூழாக்கி சமுத்திரத்தில் கரைத்து விடுவார்கள். தேவயானியின் வேண்டுகோளுக்கிணங்க மறுபடியும் ஸஞ்சீவினி வித்தையைக் கொண்டு சுக்ராச்சாரியார் பிழைப்பித்துவிடுவார்.

மறுபடியும் அஸுரர்கள் கசனைக் கொன்று மாவாய்ப்பொடித்து மதுவிற் சேர்த்துச் சுக்ராச்சாரியாருக்குத் தெரியாமால் கொடுத்துவிடுவார். அவரும் தெரியாமால் குடித்துவிடுவார்.

தேவயானியின் வற்புறுத்தலால் மீண்டும் ஸஞ்சீவினி வித்தையைப் பிரயோகிப்பார். அப்போது அவருடைய வயிற்றிலிருந்து கசன் விவரத்தைச் சொல்வான். சுக்ராச்சாரியார் வயிற்றைப் பிளந்து கொண்டு வந்தால்தான் கசன் பிழைப்பான். ஆக சுக்ராச்சாரியார் இறந்தால்தான் கசன் பிழைப்பான். ஸஞ்சீவினி வித்தையை வயிற்றிலிருந்து படியே கசனுக்குக் கற்பிப்பார். ஸஞ்சீவினி வித்தையைப் பிரயோகிக்க கசன் சுக்ராச்சாரியார் வயிற்றைப் பிளந்துகொண்டு வெளியே வருவான். பிழைத்த கசன் ஸஞ்சீவினி வித்தையைப் பிரயோகித்து சுக்ராச்சாரியாரைப் பிழைக்க வைத்து விடுவான்.

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பில் இடம்பெறும் வரிகள்:

"அப்போது வித்வானும் மஹானுபாவரும் கவிபுத்ரருமான சுக்ராச்சார்யர், மதுபானத்தினால் ஏமாறுதலையும் மிகவும் பயங்கரமான பிரஜ்ஞாபங்கத்தையுமடைந்து தெரியாமையால் அவ்வளவு பிரியமான கசனைக் கூட மதுவுடன் தாம் குடித்ததை நினைத்துக் கோபத்துடன் எழுந்து பிராமணர்களுக்கு ஹிதத்தைச்செய்ய விரும்பி மத்யபானத்தைப் பற்றி வெறுப்புற்றவராக அடியில் வரும் வாக்கியத்தைச் சொன்னார்.

'இன்று முதல் எந்தப்பிராமணன் அறிவின்மையால் மத்யபானம் செய்வானோ அவன் மதிகெட்டுத் தர்மம்விட்டுப் ப்ரம்மஹத்தி செய்தவனாகி இந்த லோகத்திலும் பரலோகத்திலும் இகழப்படுபவனாவான். என்னால் எல்லா லோகங்களிலும் வரம்பாக நிலைநிறுத்தப்பட்ட இந்தப் பிராமண தர்மத்தைப்பற்றிய முடிவான சொல்லைக் குருக்களிடம் சாஸ்திரங்களைக் கேட்ட ஸாதுக்களான பிராமணர்களும் தேவர்களும் எல்லா ஜனங்களும் கேட்கக்கடவர்.' என்றார்."

அன்புள்ள
பா.மாரியப்பன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 18, 2014, 1:19:32 AM1/18/14
to mintamil
குடி உயிரையும், உறவையும் கெடுக்கும் என தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article5586014.ece


2013/11/27 DEV RAJ <rde...@gmail.com>
எல்.முருகராஜ்

மலைமீது உணவு இலவசமாக கிடைக்கும் ஆனால் வழியில் மினரல் வாட்டர் குடித்து பழகியவர்களுக்கு அந்த 
தண்ணீர் கிடைக்காது ஆகவே கையோடு எடுத்துச் செல்லுங்கள் என்ற அறிவுரையின்படி தண்ணீர் பாட்டிலுடன் 
மலையேறினேன். மலை ஏற, ஏற போட்டிருக்கும் சட்டையும் கையில் கொண்டு போன தண்ணீர் பாட்டிலும் கூட 
பெரும் சுமையாக இருந்தது. அப்போதுதான் கவனித்தேன் சுமார் 30 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் 
சிலிண்டரை தூக்கிக் கொண்டு அநாயசமாக ஒரு பெண் மலையேறிக் கொண்டு இருந்தார், படம் எடுக்கும் போது சிரித்தார்.
பேச்சியம்மாள் என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணின் சிரிப்பிற்கு பின் வேதனையான கதை இருந்தது.
டாஸ்மாக்கிற்கு பலியான குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.

ஒரு காலத்தில் உழைத்து தன்னையும், பிள்ளைகளையும் கவுரமாய் காப்பாற்றிவந்த கணவர் போதைக்கு 
அடிமையாகி, இப்போது டாஸ்மாக்கே கதி என்றாகிப் போனபின் பாதியில் நிற்கும் பிள்ளைகளின் படிப்பையும், 
பசியால் துடிக்கும் வயிற்றையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் பேச்சியம்மாளின் "தலை'யில் விழுந்தது.
மகாலிங்கம் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பலர் மேலே போய் அன்னதானம் செய்வார்கள், அதற்கான 
சமையல் சாதனங்கள் அரிசி காய்கறிகள் மற்றும் பக்தர்களின் உடமைகள் என்று சுமார் 30 கிலோ எடை 
கொண்டதாக பிரித்துக்கொண்டு மலையேறிப்போய் இறக்கி வைக்க வேண்டும். இதற்கு கூலியாக இருநூறு 
ரூபாய் வாங்கிக்கொள்கின்றனர்.

இதை செய்யும் பெண் சுமைகூலிகளில் ஒருவராக பேச்சியம்மாள் இருக்கிறார், இவரைப்போல சுமார் 
ஐம்பது பெண்கள் சுமைக்கூலிகளாக பக்தர்களின் சுமைகளை எதிர்பார்த்து அன்றாடம் அடிவாரமான 
தாணிப்பாறையில் காத்திருக்கின்றனர். நான்கு மணி நேரம் சுமையுடன் ஏறி இறக்கி வைத்து விட்டு 
திரும்பவேண்டும், வழியெங்கும் பரவி கிடக்கும் கரடு முரடான கற்களையும், முற்களையும் பார்த்து 
நடக்கவேண்டும், அப்படியே நடந்த போதும் கற்களில் பட்டு கால்களில் கொட்டும் ரத்தத்தை மண் 
போட்டு துடைத்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும், தாமதமானால் கூலி கொடுப்பதில் 
பிரச்னை செய்வார்கள், கொஞ்சம் கால் பிசகினாலே அதலபாதாளத்தில் விழவேண்டிய அபாயம். உண்டு, 
மழைக் காலங்களில் இந்த ஆபத்து இரண்டு மடங்காகும். இவ்வளவு சிரமமும் ஆபத்தும் இருந்தாலும் 
இந்த தொழிலை இந்த சுமையை சுமந்தாக வேண்டிய கட்டாயம். காரணம் குடும்பத்தின் வறுமையை 
சுமைப்பதைவிட இந்த தலைச் சுமையை ஒன்றும் சிரமமில்லை என்பது இவர்களது நியாயம்.
டாஸ்மாக் அரக்கனின் அசுரத்தனமான வளர்ச்சியால் இப்போது இந்த சுமைதூக்கும் தொழிலுக்கு வரும் 
பெண்கள் அதிகரித்து வருவதால் இந்த தொழிலுக்கும் போட்டி உண்டு. போட்டிகளைத் தாண்டி ஒருவருக்கு 
ஒரு நாளைக்கு ஒரு சுமை கிடைத்தாலே பெரிய விஷயம். பல நாட்கள் சுமை கிடைக்காமல் வெறும் 
தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு பிள்ளைகள் பசிக்காக கடன் வாங்கிக் கொண்டு திரும்பும் 
’பேச்சியம்மாக்களும்' உண்டு.

சதுரகிரி மலைப்பகுதியில் கடுமையான மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது என்றொரு 
செய்தியை பார்த்தபோது முன்பெல்லாம் சலனப்படாத மனதில் இப்போது வலி உண்டாகிறது.
எத்தனை "பேச்சியம்மாக்கள்' சுமை இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து திரும்பினரோ...


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

Dev Raj

unread,
Feb 11, 2014, 1:51:40 AM2/11/14
to mint...@googlegroups.com
இந்தியாவில் மதுபான தொழிற்சாலைகள் 1805ம் ஆண்டு கான்பூரில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அதன் நோக்கம் இராணுவ வீரர்களுக்கு ரம் தயாரிப்பதாக மட்டுமே இருந்தது ஆனால் இன்றோ நிலை வேறு மதுபானம்  பெருந்தொழிலாக மாறி உள்ளது.

(சாராய) மதுபான உற்பத்தி இரண்டாம் உலகப்போருக்குப் பின் அதிகரித்தது. ஏனெனில், சர்க்கரை தொழிற்சாலைகள் மதுபான உற்பத்தியைத் தொடங்கியதுதான் மதுபான உற்பத்தித் திறனை பெருக்கியது. இந்தியாவில் மகாராட்டிரா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் சர்க்கரை ஆலைகளை அதிகமாக நிறுவி அதில் இருந்து தேவைக்கு அதிகமான சர்க்கரை உற்பத்தியை ஆங்கில அரசு உருவாக்கியது. இதனால் சர்க்கரையின் கூட்டுப் பொருளான வெல்லப்பாகு அதிகமாகி தேக்கநிலை உண்டானது.

இந்த வெல்லப்பாகு சுற்றுச்சூழல் பாதிப்பை உண்டாக்கியது. அதனை சரிசெய்ய உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் சேர்ந்து ஒரு கூட்டுக்குழுவை அமைத்தன.அதன் முடிவாக வெல்லப்பாகில் இருந்து எத்தனால் தயாரித்து, அதனை 5 முதல் 10 சதவீதம் பெட்ரோலுடன் கலக்க அந்த நான்குபேர் கொண்ட குழு  பரிந்துரை செய்தது.

1993-ஆம் ஆண்டு முதல் வெல்லப்பாகு தேக்கநிலை சரிசெய்யப்பட்டது. ஆனால், எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படவில்லை, மாறாக எத்தனாலில் இருந்து மதுபானங்களை உருவாக்க கற்றுக்கொண்டது நமது அரசாங்கம். இதன் இன்றைய விளைவே அரசு மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் மதுபான தொழிற்சாலைகள்.

இன்றைய இளையதலைமுறையினரிடம் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மதுவினால் குற்றங்களும், குற்றவியல் வழக்குகளும், வாகன விபத்துகளும், உயிர் இழப்புகளும் அதிகரித்து இன்று 27% மரணங்கள் மதுப்பழக்கத்தால் ஏற்பட்டவை என்று 2012ம் ஆண்டின் அறிக்கை பறைசாற்றுகிறது.

சர்க்கரை ஆலைகளில் இருந்து பெறப்படும் எத்தனாலை, பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க முடியும், மேலும் கரிம எரிபொருட்களால் வெளியிடப்படும் கார்பன்டை ஆக்ஸைடு (CO2) கரியமிலவாயு அளவுகளை 90% இந்த எத்தனால் கலந்த எரிபொருள் குறைக்கிறது. இதனால் பிரேசில் 20% முதல் 25%ம் USA கலிபோர்னியாவில் 30% முதல் 40%ம் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து உபயோகிக்கின்றனர்.


http://siragu.com/?p=12314

Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 11, 2014, 2:11:05 AM2/11/14
to Minthamil
"ஒங்க மாப்ளெ எப்பிடி இருக்காருங்க?"

"அவருக்கென்ன குடியும் குடுத்தனமுமா இருக்காரு."

"சந்தோசமான செய்தீன்னு சொல்லுங்க.  ஒங்க பொண்ணு குடுத்து வெச்சவ."

"என்னத்தெக் குடுத்து வெச்சவ?  இருபத்து நாலு மணி நேரத்துலெ பன்னெண்டு மணி நேரம் மாப்ளெ தண்ணீலெ மொதெக்குறாரு.  பாக்கி மன்னெண்டு மணி நேரம் தூக்கத்துலெ கெட்க்காரு.  நரகங்க அவொ வாள்க்கெ."




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

Dev Raj

unread,
Feb 14, 2014, 2:40:08 PM2/14/14
to mint...@googlegroups.com
தமிழகத்தில் இலக்கு வைத்து "டாஸ்மாக்'கில் மது விற்பனை நடக்கிறது. இதனால், குடிகாரர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருத்துக்கொண்டே போகிறது. இதனால், பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. அவர்களது வாழ்க்கையை பாதுகாக்க, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தியே இந்த போராட்டம் நடைபெறுகிறது. மாநிலம் 
முழுவதிலும் இருந்து, 50 ஆயிரம் பெண்கள், இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.

                                                                                                                                                                                                                                              - வானதி ஸ்ரீநிவாசன்

செல்வன்

unread,
Feb 14, 2014, 2:55:08 PM2/14/14
to mintamil
இன்றைய தமிழக பட்ஜெட் தாக்கல் ஆகியுள்ளது

127,000 கோடி மொத்த வருவாய்

மூச்சை பிடித்து கொள்ளவும்...ரெடியா?

அதில் 48,000 கோடிக்கு இலவசங்கள் மட்டுமே..கிரைண்டர், மிக்சி, டிவி என

டாஸ்மாக் மூலம் தான் தமிழக அரசு இந்த இலவசங்களுக்கு வருவாய் ஈட்டுகிறது. டாஸ்மாக் மூலம் வரியாக மட்டும் 22,000 கோடி பக்கம் கிடைத்துள்ளது. அதுபோக மதுபான விற்பனையில் வரும் லாபம் எல்லாம் தனி

தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம் 8ல் இருந்து 4% ஆக விழுந்ததாக இன்னொரு செய்தி கூறுகிறது

தமிழக தொழிற்சாலைகள் பலவும் கர்னாடகாவுக்கு இடம் மாறி வருகின்றன


-- 
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 14, 2014, 9:30:05 PM2/14/14
to Minthamil
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப் போர் வலுத்திருந்த காலத்தி வந்த ஒரு நகைச் சுவைத் துணுக்கு:

ஓரு கம்யூனிஸ்ட் பேச்சாளர் மேடையேறிப் பேசிக் கொண்டிருந்தார், "இவ்வாண்டு நம் அரசு உங்கள் அனைவருக்கும் ஒரு சைக்கிள் இலவசமாகத் தந்திடும்.  அடுத்த ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிள்.  அதற்கு அடுத்த ஆண்டு ஒரு கார் என அரசு மக்கள் நலப் பணிகள் செய்திடும்."

கூட்டத்தில் ஒருவர் கேட்டார், "கார் கிடக்கட்டும்.  எங்களுக்கு உண்ண ரொட்டி கிடைப்பதில்லை.  காரை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய?" என்று.

பேச்சாளர் சொன்னார், "உங்களிடம் கார் இருந்தால் அடுத்த ஊரில் ரொட்டிக்காக மக்கள் நின்றிடும் க்யூ வரிசயில் முக்ஹலாவதாகச் சென்று நின்றிடலாமே" என்று.

டாஸ்மாக்குக் கடைகளால் மக்கள் அடைந்திடும் ஆனந்த நிலையை மறந்திடுறீர்களே?

இதோ இணைப்பில் உள்ள இவர்களைப் பாருங்கள்:




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
குடியால் விளைந்திடும் கேடுகள் பற்றிய எனது பழய பதிவுகள்.pdf

Subashini Tremmel

unread,
Feb 15, 2014, 3:16:23 PM2/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
போராட்டம் மட்டும் செய்து இதனை போக்க முடியாது. 
சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

Dev Raj

unread,
Feb 15, 2014, 3:35:38 PM2/15/14
to mint...@googlegroups.com
On Saturday, 15 February 2014 12:16:23 UTC-8, Suba.T. wrote:
2014-02-14 20:40 GMT+01:00 Dev Raj <rde...@gmail.com>:
தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. அவர்களது வாழ்க்கையை பாதுகாக்க, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தியே இந்த போராட்டம் நடைபெறுகிறது. மாநிலம் 
முழுவதிலும் இருந்து, 50 ஆயிரம் பெண்கள், இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.

                                                                                                                                                                                                                                              - வானதி ஸ்ரீநிவாசன்

போராட்டம் மட்டும் செய்து இதனை போக்க முடியாது. 
 

உண்மைதான். ஆனாலும் அரசியல் கட்சிகள் இதில் காட்டும் கரிசனம்
பாராட்டுக்குரியது என்றே தோன்றுகிறது. அதற்கு உள்நோக்கம் கற்பிக்கவும்
வழியுள்ளது என்றாலும். செல்வன் சார் சொல்வதும் சரியே. கண்ணெதிரே
பல குடும்பங்கள் சீரழிவது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது


தேவ்

Dev Raj

unread,
Mar 12, 2014, 9:47:28 PM3/12/14
to mint...@googlegroups.com
"சாமி..இப்போ...ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க.
தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க...."

ரஸ்தாளி வாழைப்பழத் தார்கள். இரண்டு தார்கள்.
ஒவ்வொன்றிலும் பத்துப் பன்னிரண்டு சீப்புகள்
இருக்கும். ஒரு தாரை, இரண்டு பேர்கள் சுமக்க
வேண்டியிருந்தது. கனம் என்பதால் மட்டும் இல்லை.
பெரியவாள் திருமுன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்
வரையிலாவது பழங்கள் நசுங்காமல் இருக்கவேண்டும்!

சிவாஸ்தானத்தில் பெரியவாள் தங்கியிருந்தபோது
காட்டுப்புதூர் செல்வந்தரான ஒரு பக்தர்,மிகவும்
ஆர்வத்துடன் கொண்டு வந்த காணிக்கை,அந்த
வாழைத்தார்கள். அவருடன் பேசி, பிரசாதம்
கொடுத்து அனுப்பியபின்,ஒரு சிஷ்யரைக்
கூப்பிட்டார்கள், பெரியவாள்.

"இரண்டு தார்களையும் ஜாக்கிரதையாக எடுத்து
உள்ளே வை. பழங்களைப் பாரேன்! - எவ்வளவு
மொழு மொழுன்னு இருக்கு!...ஒரு பழம்
சாப்பிட்டால் போதும். சாப்பாடே தேவையில்லை!..
நாலு நாளைக்கு உங்களுக்கெல்லாம் கவலையில்லை!".

இல்லை. இந்த மாதிரி,பெரியவா உத்திரவிடவில்லை!

"....டேய்!..ரெண்டு தாரையும் கொண்டு போய்...
வாசல்லே புளியமரம் இருக்கு பாரு? அதன்
கிளையிலே,கைக்கு எட்டுகிற மாதிரி தொங்க விடு.."

(அநியாயம்..அக்ரமம்...பெரியவா இப்படியெல்லாம்
எங்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது. நான் இதை
பலமாகக் கண்டிக்கிறேன் - என்று வாயைத் திறந்து
சொல்லவே முடியாது என்பதிருக்கட்டும்,
மனத்தால் எண்ணிப் பார்க்கக்கூட முடியாது)

சிவாஸ்தானம் - தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த
மக்கள் மிகவும் வறுமையில் உழல்பவர்கள்.
பொறுப்பில்லாத பல ஆண்கள், நன்றாகக்
குடித்துவிட்டுப் பசியோடு வீட்டுக்குப் போய்,
அங்குள்ள பெண்டு பிள்ளைகளைப் பயங்கரமாக
அடித்து நொறுக்குவார்கள்.

வாழைத் தார் கட்டிய அன்று, அவ்வழியாகப்
போனவர்கள் ஒவ்வொரு வாழைப்பழம் பிய்த்துத்
தின்றுவிட்டுப் போனார்கள். வயிற்றுப் பசி
வெகுவாகக் குறைந்து விட்டதால், வீட்டில்
அடி - அமர்க்களம் அளவாகவே இருந்தது.

மறுநாள், நிரந்தரமான ஓர் உத்திரவு பிறப்பித்தார்கள்,
பெரியவாள்;

"அடியார்கள் சமர்ப்பிக்கும் வாழைச் சீப்புகளைப்
புளியமரத்துக் கிளையில் தொங்க விட வேண்டும்!"

சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு. அந்த
கிராமப் பிரமுகர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார்.

"சாமி..இப்போ...ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க.
தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க....
குடிசையிலே பொம்பளைங்க சந்தோசமா இருக்காங்க.."

மாற்றத்துக்குக் காரணம் வாழைப்பழங்களா? இல்லை
பெரியவாளின் வார்த்தைப் பழங்களா?

எதுவாகவோ இருக்கட்டும். இனிமேல் அந்தப் பகுதியில்
பழம் + கள் தலைகாட்டாது, தானே!


சொன்னவர் : ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்: டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு : வரகூரான் நாராயணன்.

Face book
















































Tthamizth Tthenee

unread,
Mar 12, 2014, 10:00:24 PM3/12/14
to mint...@googlegroups.com
பழத்திலிருந்தும்  கள் எடுப்பார்கள்

நடமாடும் தெய்வம்   என்றழைக்கப்படும்    பெரியவா  பழத்தைத் தொங்க விட்டே   மனிதர்களிடமிருந்து   கள்ளெடுத்துவிட்டாரே!

கள்ளைக் களையெடுத்துவிட்டாரே !  :)


அன்புடன்
தமிழ்த்தேனீ



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Mar 14, 2014, 1:15:59 AM3/14/14
to mint...@googlegroups.com
On Wednesday, 12 March 2014 19:00:24 UTC-7, தமிழ்த்தேனீ wrote:
கள்ளைக் களையெடுத்துவிட்டாரே !  :)

ஆம், ஐயா.
‘வஸந்தவத் லோகஹிதம் சரந்த: ’ எனச்
சான்றுகள் பகரும் வண்ணம் இனிய இளவேனிற்
காலம்போல உயிர்களுக்கு நன்மை செய்வோராக
மஹான்கள் உலகில் சஞ்சரிக்கின்றனர்


தேவ்

Dev Raj

unread,
Jun 28, 2014, 2:29:03 AM6/28/14
to mint...@googlegroups.com
தமிழகத்தில் மதுசாலைகளும், பாட சாலைகளும் -

ஊட்டியில் டாஸ்மாக் :













Tthamizth Tthenee

unread,
Jun 28, 2014, 3:42:52 AM6/28/14
to mint...@googlegroups.com
  அரசுப் பள்ளிகளிலிருந்து வருமானம் வருவதை விட   பல ஆயிரம் மடங்கு  டாஸ்மாக் கிலிருந்து வருகிறதே  !

வருமானம் வந்தால்தானே  சொத்துகள் சேர்க்க முடியும்?

கல்வி, மற்றும் நம் வருங்காலத் தூண்களாகிய  மாணவச் செல்வங்கள் எப்படிப் போனாலென்ன

அவர்களால்  ஏதேனும் வருமானம் வருகிறதா?

நான் பார்த்த வரையில்   டாஸ்மாக் கடைகளிலும்    மருத்துவ மனைகளிலும் இருக்கும் கூட்டம்  வேறு எங்குமில்லையே

அன்புடன்
தமிழ்த்தேனீ



அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்

தமிழ்த்தேனீ

Dev Raj

unread,
Jun 28, 2014, 5:06:40 PM6/28/14
to mint...@googlegroups.com
ஆம், தேனி ஐயா.

பார்கள் பள பளக்கின்றன; பள்ளிகள் பாழடைந்துள்ளன.
டாஸ்மாக் கடை இடமாற்றக் கோரிக்கை செய்தவர் கைது
செய்யப்படுகிறார் -

மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி கைது



தேவ்

Thirumoorthy Kasi

unread,
Jun 28, 2014, 11:32:15 PM6/28/14
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா 


--

Dev Raj

unread,
Jun 28, 2014, 11:35:33 PM6/28/14
to mint...@googlegroups.com
On Saturday, 28 June 2014 00:42:52 UTC-7, தமிழ்த்தேனீ wrote:
  ........  டாஸ்மாக் கடைகளிலும்    மருத்துவ மனைகளிலும் இருக்கும் கூட்டம்  வேறு எங்குமில்லையே


நீங்கள் மருத்துவமனை என்றதும் உருகுவே நாட்டு அதிபர் Jose Mujica நினைவுக்கு வருகிறார் -

Pepemujica2.jpg


எளிய வாழ்க்கைமுறையை மேற்கொண்டு தம் ஊதியத்தின் பெரும்பகுதியை
நன்கொடையாகக் கொடுத்துவிடுகிறார்.

அரசு பொதுமருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறுகிறார்.
அந்நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள். தரமான தலைமை, தரமான சிகிச்சை 


தேவ்
Jose Mujica.jpg

Suba.T.

unread,
Jul 15, 2014, 6:19:48 AM7/15/14
to மின்தமிழ், Subashini Tremmel


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Jul 20, 2014, 8:49:29 PM7/20/14
to mint...@googlegroups.com
சட்ட மாணவி நந்தினியின் போராட்டம் -

தொடர் போராட்டங்களினால் அரசின் செவிட்டுச் செவியில் சங்கு ஊதிப் பார்ப்பது எனத் தம் தந்தையுடன் நீண்ட நெடிய போராட்டத்திற்காய்க் கிளம்பிவிட்டார் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. கைதுகளையும் முட்டுக்கட்டைகளையும் கடந்து இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றார். நீறு பூத்த நெருப்பாக இப்போராட்டம் வெடித்து அதன் அக்னிச் சூட்டில் மது அரக்கன் கருகிவிடமாட்டானா? என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் நந்தினியைச் சந்திக்க மதுரைக்கேகினோம். தந்தை ஆனந்தனுடன் சமரசத்திற்கான நேர்காணலை நேர்த்தியுடன் தெளிவுடன் தொடர்கிறார் நந்தினி.

இடதுசாரிகளும் மதுவை ஆதரிக்கின்றார்களே... கவனிக்கின்றீர்களா...?

யார் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் குற்றம் குற்றமே..! டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் கூறுகின்றார்கள். இதில் தொழிலாளியின் நலம் எதுவுமில்லை. டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாற்றுப் பணிகளை வழங்கக் கோரி இருக்கலாம். டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோருவது டாஸ்மாக்கை நிரந்தரப்படுத்து என்பதுதான் அதன் அர்த்தம். எந்தத் தொழிலாளி, பாட்டாளி வர்க்கத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்கிறார்களோ.. அவர்களின் அன்றாடக் கூலியை மதுவின் மூலம் அரசு வம்படியாகப் பிடுங்கிக் கொள்கிறது. மட்டுமில்லை உழைக்கும் வர்க்கத்தை நாசப்படுத்துவதும் இந்த மது அரக்கன்தான். மதுவை ஒழிக்க முன்வரவேண்டிய இடதுசாரிகள் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது வேதனையானது. துயரமானது.

இந்தியா முழுவதிலும் தடை செய்தால்தான் தமிழகத்திலும் மதுஒழிப்பு சாத்தியம் என்பது சரியா..?

மதுவிலக்கு மாநில அரசு முடிவு செய்யவேண்டிய விஷயம். இந்தியாவில் தடைசெய்தால்தான் மாநிலத்திலும் தடை செய்வோம் என்றால் மாநில சுயாட்சிக்கு என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? 1971 வரை மது தடைசெய்யப்பட்ட மாநிலமாகத்தான் தமிழகம் இருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்திக்கொண்டு அவருடைய கொள்கைக்கு எதிராக மது வியாபாரம் செய்கின்றனர். அ.தி.மு.க ஏதாவது திட்டம் கொண்டுவந்தால் அடுத்துவரும் திமுக அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விடும். திமுக கொண்டுவந்த புதிய சட்டமன்றம், அண்ணா நூலகம், உழவர் சந்தை, சமத்துவபுரம் என்று  எத்திட்டத்தையும் அடுத்து வரும் அதிமுக அத்தனை திட்டங்களையும் கடாசிவிடும். ஆனால் என்ன ஒற்றுமை பாருங்கள். மது விற்பதில் மட்டும் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவதை..! டாஸ்மாக்கைத் திறந்தது அதிமுக; அதற்காகவாவது திமுக அதை இழுத்து மூடியிருக்கலாம். கலைஞர்தான் மதுவிலக்கை உடைத்து மது ஆறு பெருக்கெடுத்து ஓடச்செய்தவர். கலைஞர் கொண்டுவந்ததை அதிமுக ஆதரிக்கலாமா? அதற்காகவாவது மதுவைத் தடைசெய்திருக்கலாம் இல்லையா....!?

உங்கள் போராட்டத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் எப்படி இருக்கின்றன..?

மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கின்றது. நான் படிக்கின்ற சட்டக்கல்லூரி மாணவர்களும் உறுதுணையாக இருக்கின்றார்கள். மதுவை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும் வைகோ, தமிழருவி மணியன், டாக்டர் ராமதாஸ் போன்றோர் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவிக்கின்றார்களே தவிர இதை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்வதில் முனைப்புக் காட்டவில்லை. மதுவுக்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் ஓரணியில் திரண்டாலே இந்த மதுவை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் அரசியல்வாதிகள் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள்தானே....! எங்களுடைய போராட்டங்கள் குறித்து ஊடகங்களில் செய்தி வந்தாலும் கூட போதிய முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்களில் இச்செய்திகள் இன்னும் அழுத்தம் பெறுமானால் இது மக்கள் போராட்டமாக மாற வாய்ப்பு இருக்கின்றது. இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எங்கள் போராட்டங்களில் கலந்து கொள்வதுண்டு. கடந்த ஆண்டு முஸ்லிம் கட்சியின் தலைவர் ஒருவர் எங்களைச் சந்தித்து ரமளான் முடியட்டும். உங்கள் போராட்டத்தை நாங்கள் வீரியமாக்குகின்றோம் என்றார்கள். இதோ அடுத்த ரமளானும் வந்துவிட்டது. அவர்கள் வரவில்லை. எல்லாருக்கும் நிறைய வேலைகள் இருக்கும். அதே வேளையில் இது தலையாயப் பணி இல்லையா..? நாங்கள்தான் முன்நின்று நடத்தவேண்டும் என்பதில்லை. தகுதியானவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லட்டும். எப்படியாவது மது ஒழிந்தால் சரி..!


மதுவை முற்றாக ஒழித்துவிட முடியும் என்று நம்புகின்றீர்களா...?

நிச்சயமாக...! மது இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும். மதுவற்ற நாடாக இந்தியா மாறும். அதற்கான போராட்டவிதை என்றோ தூவப்பட்டு விட்டது. நாங்கள் அதில் இணைந்துள்ளோம். சமூக நலனிலும், நாட்டு நலனிலும் அக்கரை கொண்டவர்கள் ஒரணியில் இணையும் போது மதுவை இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் ஒழித்தே தீருவோம்.

சந்திப்பு: வி.எஸ்.முஹம்மது அமீன்  
நன்றி : சமரசம் ஜுலை 2014.

Tthamizth Tthenee

unread,
Jul 21, 2014, 1:55:15 AM7/21/14
to mint...@googlegroups.com
நாட்டின்  வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கும்  மதுவை ஒழித்தால் அரசுக்கு வருமானம் குறைந்துவிடும் அபாயம் உள்ளது, அதனால்தான் பூரண மது விலக்கை கொண்டு வர அரசு தயங்குகிறது

மதுவினால் கிடைக்கும் வருமானத்தை மற்ற வேறு ஏதேனும்  மாற்று வழியால் கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கை வந்தால் ஒழிய   பூரண மது விலக்கு  சாத்தியமே இல்லை என்பது  உணரப்பட்ட உண்மை


ஆனால்  அரசுக்கு வருமானம் கொண்டு வரும் மதுவினால் நாட்டிலே  பல துறைகளில்  அன்றாடம் பணி புரிவோர்   மதுவின் ஆளுமைக்குட்பட்டு   இரவிலே மதுகுடிப்பதால் மறு நாள் அதன் தாக்கத்திலே  மூளை மந்தமாய்  செய்கின்ற தொழிலிலே கவனமின்றி தவறு தவறாக பணி புரிவதால்தான்    ரெயில்கள் நேர்க்கு நேர் மோதுகின்றன, சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன,  பேருந்துகள் பின்னால் வந்து இடிக்கின்றன,  பல முக்கியமான பணிகளில்  தவறுகள் நடக்கின்றன,  சிறுமிகள் கற்பழிக்கப் படுகிறார்கள்,  கல்வி கெட்டுப் போகிறது, சிறுவர்கள் இளம் வயதிலேயே கெட்டுப்போகிறார்கள்,

ஆக ஒட்டு மொத்தமாய் நாட்டிற்கு  இழப்புகள் ஏராளமாய்ப் பெருகி வருவது இந்த மதுவினால்தான் என்பதில் ஐயமே இல்லை

ஆகவே  மது குடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது  என்று எழுதி ஒட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்னும் மடமையை ஒழித்து,  மதுவை உற்பத்தி செய்வதை நிறுத்தி  மது குடிப்பவர்களை திருத்தி, மதுவை தயாரிப்பதை நிறுத்தி  நாட்டை  மதுவின்  போதையிலிருந்து மீட்டாலே   நாடு வளரும், நாட்டின் பொருளாதாரம் வளரும்

"நீர்த் தேக்கத்திலே  இருக்கும் ஓட்டையை அடைக்காமல்  மேலும் மேலும் நீர் வரத்துக்காக பாடு படுவதைப் போன்றதே  மதுவை அரசே தயாரிப்பதும் விற்பதும்  "

நாங்கள் தயாரிப்போம்   நீங்கள் குடிக்காதீர்கள்  என்று சொல்வது  மிகவும் அபத்தமான செயல்

மதுவை முற்றிலுமாக  நாட்டை விட்டொழித்து   நாட்டின் வளர்ச்சிக்கு  வித்திடவேண்டும் அரசு  என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை

   தாம் ஈட்டும்  பொருளை மதுவை வாங்கிக் குடிப்பதில் செல்வழித்து  தள்ளாடிக்கொண்டே  சாலையில் பேருந்து ஓட்டுபவர்களும் , ஆட்டோ ஓட்டுபவர்களும், இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டியவர்களே மதுவைக் குடித்துவிட்டு தொழிலை சரிவரக் கவனிக்காமல் தள்ளாடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை அன்றாடம் கவனிக்கும் பொது மக்கள் நன்கு அறிவர்

பொது மக்களே அறிந்திருக்கும் இந்த  அவலத்தை அரசு கண்டு கொள்ளாமல் இருக்கும் அவலம்  நாட்டை  பலவீனமாக்கும் ஒரு செயல்

ஆகவே மதுவை முற்றிலுமாக ஒழித்து  நாட்டின்  மயக்கத்தை நீக்கி   தெளிவை ஏற்படுத்தி  முன்னேற்றப் பாதையில் நம் நாட்டை வழி நடத்த   பாடுபடவேண்டும்  எனது முழு ஆதரவு    மதுவை முற்றிலும் ஒழிக்கும்  இந்த  திட்டத்துக்கு  எப்போதும் உண்டு

அன்புடன்

தமிழ்த்தேனீ 
அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ

--

Ranganathan Venkatachariar

unread,
Jul 21, 2014, 2:36:04 AM7/21/14
to mint...@googlegroups.com

Very nice documents please published

Dev Raj

unread,
Jul 21, 2014, 3:23:47 PM7/21/14
to mint...@googlegroups.com
On Sunday, 20 July 2014 22:55:15 UTC-7, தமிழ்த்தேனீ wrote:
நாட்டின்  வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கும்  மதுவை ஒழித்தால் அரசுக்கு வருமானம் குறைந்துவிடும் அபாயம் உள்ளது, அதனால்தான் பூரண மது விலக்கை கொண்டு வர அரசு தயங்குகிறது
மதுவினால் கிடைக்கும் வருமானத்தை மற்ற வேறு ஏதேனும்  மாற்று வழியால் கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கை வந்தால் ஒழிய   பூரண மது விலக்கு  சாத்தியமே இல்லை என்பது  உணரப்பட்ட உண்மை


மாணவி நந்தினி :

அரசுக்கு வருமானம் என்பது மூளைச்சலவை. சாராயத்தைக் கொடுத்துக் கணவனிடமிருந்து காசு பறிப்பார்கள். வீட்டுக்கு ஆடு, மாடு கொடுப்பார்களாம். உங்களிடம் இலவசம் கேட்டது யார்? அரசுக்கு வருமானத்திற்கு வேறு வழியே இல்லையா? கிரானைட் கற்களைத் தனியார் சுரண்டி விற்கிறார்களே... அரசு கிரானைட், தாது மணல்களை எடுத்து வருமானம் பார்க்கட்டுமே...! ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி, 60 ஆயிரம் கோடிக்கு குடிக்கிறார்கள் மக்கள். மதுவைத் தடைசெய்தால் அந்த 50ஆயிரம், 60ஆயிரம் கோடியைத் தொழிலில் போடுவார்கள். வீடு கட்டுவார்கள். அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்தாலும் அது அரசுக்கு நன்மையைத்தானே தரும். இன்னும் தெளிவாய்ச் சொல்வதானால் அரசுக்குக் கூடுதல் பணம் கிடைக்கும். குடியினால் ஏற்படும் விபத்துகளில் அரசுக்கு ஆகும் செலவு எவ்வளவு? குடியினால் குடல் வெந்து மருத்துவமனைகளில் செத்து மடியும் மக்களுக்கான மருத்துவச் செலவு எவ்வளவு? எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் மதுவினால் அரசுக்கு பெரும் நஷ்டம் என்பதுதான் நிதர்சனம். 

Suba.T.

unread,
Jul 21, 2014, 3:38:54 PM7/21/14
to மின்தமிழ், Subashini Tremmel
நல்லதொரு பகிர்வு.

இவ்வகை துணிவும் மன தைரியமும் முயற்சியும் நிச்சயம் வெற்றியைத் தரும்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Tthamizth Tthenee

unread,
Jul 22, 2014, 12:05:34 AM7/22/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel
மாணவி  நந்தினிக்கு  ஆசிகள்

நானும் இக்கருத்தையே வலியுறுத்தி உள்ளேன்



"  நாட்டின்  வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கும்  மதுவை ஒழித்தால் அரசுக்கு வருமானம் குறைந்துவிடும் அபாயம் உள்ளது, அதனால்தான் பூரண மது விலக்கை கொண்டு வர அரசு தயங்குகிறது
மதுவினால் கிடைக்கும் வருமானத்தை மற்ற வேறு ஏதேனும்  மாற்று வழியால் கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கை வந்தால் ஒழிய   பூரண மது விலக்கு  சாத்தியமே இல்லை என்பது  உணரப்பட்ட உண்மை"


ஆனால்  அரசுக்கு வருமானம் கொண்டு வரும் மதுவினால் நாட்டிலே  பல துறைகளில்  அன்றாடம் பணி புரிவோர்   மதுவின் ஆளுமைக்குட்பட்டு   இரவிலே மதுகுடிப்பதால் மறு நாள் அதன் தாக்கத்திலே  மூளை மந்தமாய்  செய்கின்ற தொழிலிலே கவனமின்றி தவறு தவறாக பணி புரிவதால்தான்    ரெயில்கள் நேர்க்கு நேர் மோதுகின்றன, சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன,  பேருந்துகள் பின்னால் வந்து இடிக்கின்றன,  பல முக்கியமான பணிகளில்  தவறுகள் நடக்கின்றன,  சிறுமிகள் கற்பழிக்கப் படுகிறார்கள்,  கல்வி கெட்டுப் போகிறது, சிறுவர்கள் இளம் வயதிலேயே கெட்டுப்போகிறார்கள்,

ஆக ஒட்டு மொத்தமாய் நாட்டிற்கு  இழப்புகள் ஏராளமாய்ப் பெருகி வருவது இந்த மதுவினால்தான் என்பதில் ஐயமே இல்லை

ஆகவே  மது குடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது  என்று எழுதி ஒட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்னும் மடமையை ஒழித்து,  மதுவை உற்பத்தி செய்வதை நிறுத்தி  மது குடிப்பவர்களை திருத்தி, மதுவை தயாரிப்பதை நிறுத்தி  நாட்டை  மதுவின்  போதையிலிருந்து மீட்டாலே   நாடு வளரும், நாட்டின் பொருளாதாரம் வளரும்

"நீர்த் தேக்கத்திலே  இருக்கும் ஓட்டையை அடைக்காமல்  மேலும் மேலும் நீர் வரத்துக்காக பாடு படுவதைப் போன்றதே  மதுவை அரசே தயாரிப்பதும் விற்பதும்  "

நாங்கள் தயாரிப்போம்   நீங்கள் குடிக்காதீர்கள்  என்று சொல்வது  மிகவும் அபத்தமான செயல்

மதுவை முற்றிலுமாக  நாட்டை விட்டொழித்து   நாட்டின் வளர்ச்சிக்கு  வித்திடவேண்டும் அரசு  என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ
அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ

Dev Raj

unread,
Jul 22, 2014, 1:19:52 AM7/22/14
to mint...@googlegroups.com
அதே மாணவி தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் -

அனுப்புநர்: 
ஆ.நந்தினி, 
நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல், 
அரசு சட்டக்கல்லூரி, 
மதுரை-625020.

பெறுநர்: 
செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள், 
தமிழக முதல்வர் & 
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர், 
81/36 போயஸ் கார்டன், 
சென்னை-600086.

தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்.

மதுவால் அப்பாவைப் பறிகொடுத்த 100 மாணவர்களோடு உங்களை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 01.11.2013 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு தங்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது. நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது? தூக்குதண்டனை கூடப் போதாது. அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.


இப்படிக்கு,
ஆ.நந்தினி.

நகல்: 
1. திரு.மு.கருணாநிதி அவர்கள்,முன்னாள் தமிழக முதல்வர். 
2. தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள். 
3. ஊடகங்கள். 
4. தமிழக மக்களுக்கு.


Suba.T.

unread,
Jul 22, 2014, 3:03:05 AM7/22/14
to மின்தமிழ், Subashini Tremmel
தொடரட்டும் இவ்வகை முயற்சிகள்.
இளைஞர் சமூகத்தால் தான் பெரிய அளவில் சமுதாயத்தில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்ட முடியும்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Jul 22, 2014, 7:30:55 PM7/22/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
On Tuesday, 22 July 2014 00:03:05 UTC-7, Suba.T. wrote:
தொடரட்டும் இவ்வகை முயற்சிகள்.
இளைஞர் சமூகத்தால் தான் பெரிய அளவில் சமுதாயத்தில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்ட முடியும்.
 

Sex crimes, violence, murders and accidents :
 
The widespread liquor consumption in the state has directly contributed to the rapid increase of murders, assault on women, sex crimes and road accidents.
 
Not a day passes without drunken men beating their wives  and indulging in violence and murders. The entire social fabric of the state has undergone a deep change for the worst.
 
The disturbing and nauseating news of drunken teachers molesting the girl students, drunken father mis behaving with his daughters and drunken men causing accidents and killing the innocent passers by on the roads have become too frequent.
 
With the liquor consumption increasing in the state at alarming level of around  20 percent  per annum, Tamil Nadu’s future itself has become a question mark.




Tamil Nadu government has no respect for the views of Tiruvalluvar, Gandhiji , Periyar and Anna :
 
The great saint Tiruvalluvar has stressed the importance of avoiding liquor consumption under the chapter “Kallunnamai” 
 
Mahatma Gandhi said very strongly that if he were to be the dictator for one day, he would have closed down all the liquor shops in one stroke. Mr.C.N.Annadurai repeatedly stressed the need for avoiding liquor consumption.  Periyar  (Mr.E.V.Ramaswamy ) advocated prohibition.
 
The dravidian parties in Tamil Nadu who swear by the name of Periyar and Anna have ignored  the advice of these great sons of Tamil Nadu. Obviously, the ministers in the Tamil Nadu government  do not show the respect that these leaders deserve, apart from garlanding their statues on their birthdays and death anniversaries and  posing for the photographs.
 
Why not the Tamil Nadu government remove the photographs of Gandhiji , Periyar and Anna from the government offices and secretariat, since it is acting in a way totally contradictory to their preachings?


Dev Raj

unread,
Aug 26, 2014, 5:12:02 AM8/26/14
to mint...@googlegroups.com
சமீபத்தில் திருநெல்வேலி கிராமங்களில் பயணம் செய்தேன். ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்கள் முழுமையாகவே குடிகாரர்களாகி , பார்வைத் திறன் இழந்து , வெயிலில் நின்று வேலைசெய்ய முடியாதவர்களாக வீணே இருக்கிறார்கள். பெண்களின் உழைப்பில் வாழ்க்கை நகர்கிறது. தமிழகத்துக்கு பிகாரிகள் வேலைக்கு வருவதற்குக் காரணம் இங்கே வேலை மலிந்திருப்பது அல்ல. இங்குள்ள ஆண்களால் வேலைசெய்ய முடியாதென்பதே. 

குடி இன்று தமிழகத்தில் ஒரு கேளிக்கை அல்ல. ஒரு தீய பழக்கம் அல்ல. ஒரு மாபெரும் சமூகநோய்.

Geetha Sambasivam

unread,
Aug 26, 2014, 5:14:38 AM8/26/14
to மின்தமிழ்
:(


--

S NEELAKANTAN

unread,
Aug 26, 2014, 5:30:33 AM8/26/14
to mintamil
நான் தமிழ் நாட்டில் வேலை நிமித்தம் கோவை , ஈரோடு, சேலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்பாலைகளுக்கு சென்றிருக் கிறேன்  நூற்பாலைகளில் வேலை செய்வதற்கு ஆண்கள் வர மறுக்கிறார்கள் அம்மா உணவகத்தில் தின் றுவிட்டு டாஸ்மார்க்க் சாராயத்தை குடித்துவிட்டு சீரழிந்து கிடக்கிறார்கள் வேலை செய்வதற்கு பீகார் ஒரிஸ்ஸா மாநிலத்திலிருந்து ஆட்களை நிர்வாகம் கொண்டுவருகிறார்கள் அவர்களுக்கு இருக்க இடம் சாப்பாடு கொடுத்து அவர்களை வேலை வாங்குகிறார்கள். அவர்களும் நன்றாக வேலை செய்கிறார்கள்  இப்படி இருந்தால் தமிழகம் மற்றும் தமிழக ஆண்கள் குடித்து குட்டிச்சுவராக போகத்தான் போகிறார்கள். திராவிட ஆட்ச்சியாளர்களால் தமிழகம் சீரழிந்துவீட்டது. குடி என்ற சமூக நோய் தமிழகத்தை சீ ரழித்துவிட்டது 

நீலக்ணடன் (செம்பூர் நீலு ) 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

N. Ganesan

unread,
Aug 26, 2014, 5:35:39 AM8/26/14
to mint...@googlegroups.com


On Tuesday, August 26, 2014 2:30:33 AM UTC-7, Chembur Neelu wrote:
நான் தமிழ் நாட்டில் வேலை நிமித்தம் கோவை , ஈரோடு, சேலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்பாலைகளுக்கு சென்றிருக் கிறேன்  நூற்பாலைகளில் வேலை செய்வதற்கு ஆண்கள் வர மறுக்கிறார்கள் அம்மா உணவகத்தில் தின் றுவிட்டு டாஸ்மார்க்க் சாராயத்தை குடித்துவிட்டு சீரழிந்து கிடக்கிறார்கள் வேலை செய்வதற்கு பீகார் ஒரிஸ்ஸா மாநிலத்திலிருந்து ஆட்களை நிர்வாகம் கொண்டுவருகிறார்கள் அவர்களுக்கு இருக்க இடம் சாப்பாடு கொடுத்து அவர்களை வேலை வாங்குகிறார்கள். அவர்களும் நன்றாக வேலை செய்கிறார்கள்  இப்படி இருந்தால் தமிழகம் மற்றும் தமிழக ஆண்கள் குடித்து குட்டிச்சுவராக போகத்தான் போகிறார்கள். திராவிட ஆட்ச்சியாளர்களால் தமிழகம் சீரழிந்துவீட்டது. குடி என்ற சமூக நோய் தமிழகத்தை சீ ரழித்துவிட்டது 

நீலக்ணடன் (செம்பூர் நீலு ) 

இது முழுக்க உண்மை. என் உறவினர்கள் பல நூற்பாலைகளை கோவை மாவட்டத்தில் நடத்துகிறார்கள்.
ஒரிசா, பீகார் ஆட்கள் இல்லையென்றால் இழுத்து மூடவேண்டியதுதான்.

நா. கணேசன்

Dev Raj

unread,
Aug 28, 2014, 4:57:10 PM8/28/14
to mint...@googlegroups.com
Prohibition comes to the Indian state of Kerala

Hundreds of bars selling alcohol in the popular Indian tourist spot of Kerala will soon be receiving notices to close within 15 days - it is part of the state government's attempt to ban the sale and consumption of liquor. 

Kerala's state government has decided to make the region an alcohol-free zone within the next 10 years - a tough task in a state that tops India's national liquor consumption index at more than eight litres per person per year.

Dev Raj

unread,
Sep 9, 2014, 5:52:00 AM9/9/14
to mint...@googlegroups.com
நள்ளிரவில் மாவட்ட  ஆட்சியரிடம் புகார் -
ஓ எம் ஆர் ரம்ல ஒரு வாரமா கிக் இல்லை.

வருங்காலக் குடிமக்களால் குடி வருவாய்
பெருகும் - சகாயம் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் 
அரசு அலுவலர்கள்


Dev Raj

unread,
Oct 13, 2014, 5:15:12 AM10/13/14
to mint...@googlegroups.com

Oru Arizonan

unread,
Oct 13, 2014, 3:32:11 PM10/13/14
to mint...@googlegroups.com
It is hight time such "binge-drinking festivals" that corrode our young generation's brains were stopped.

oru Arizonan

On Mon, Oct 13, 2014 at 2:15 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 13, 2014, 3:33:10 PM10/13/14
to mint...@googlegroups.com
sorry, it is high time, not hight time.  my fingers travelled so fast, it pressed two buttons together.

Dev Raj

unread,
Nov 29, 2014, 4:48:09 AM11/29/14
to mint...@googlegroups.com
டாஸ்மாக் மது விற்பனையை  அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தி முடித்த 
11ம் ஆண்டு நிறைவுநாளுக்கான சிறப்புப் பதிவு.

TASMAC is doing the retail business also successfully with effect from 29.11.2003.

டாஸ்மாக் ஊழல் 


டாஸ்மாக் ஃபோடோ காலரியில் குடித்துவிட்டு விழுந்துகிடக்கும்
குடிமகன்களின் புகைப்பட இணைப்பையும் அரசு வெளியிடலாம்.
தனிப் பக்கம் ஒன்றில் குடியின் கொடுமையால் கணவனைப்
பறிகொடுத்த இளம்பெண்களின் பட்டியலையும் வெளியிடலாம்.


Tamil Nadu has third most drunken driving deaths

Suba.T.

unread,
Nov 29, 2014, 4:51:49 AM11/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-11-29 10:48 GMT+01:00 Dev Raj <rde...@gmail.com>:

டாஸ்மாக் ஃபோடோ காலரியில் குடித்துவிட்டு விழுந்துகிடக்கும்
குடிமகன்களின் புகைப்பட இணைப்பையும் அரசு வெளியிடலாம்.
தனிப் பக்கம் ஒன்றில் குடியின் கொடுமையால் கணவனைப்
பறிகொடுத்த இளம்பெண்களின் பட்டியலையும் வெளியிடலாம்.

​ஆம். சரியான பரிந்துரை. 
சுபா

Dev Raj

unread,
Dec 5, 2014, 7:28:10 AM12/5/14
to mint...@googlegroups.com



தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கோரி, கன்யாகுமரி தொடங்கித் தமிழகம் முழுவதும் சைக்கிள் யாத்திரை மேற்கொண்டுள்ள 

ABVP (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) தேசபக்தர்கள் 9 பேரையும் வாழ்த்துவோம்.

இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிப்போம்


தேவ்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 5, 2014, 10:31:39 AM12/5/14
to mintamil

வணக்கம் .
ஊருக்கு நான்கு இளைஞர் இவர்கள் போல் இருந்தால் போதும்.

--

Oru Arizonan

unread,
Dec 5, 2014, 11:38:19 AM12/5/14
to mint...@googlegroups.com
மிகவும் நல்ல செய்தி.  குடிப்பழக்கம் ஒழியவேண்டும். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதரைக் கடிப்பதுபோல் நாம் போற்றும் மகளிரையும் அடிமைப்படுத்தி ஆட்டி வைக்கத துவங்கி விட்டதே இக்குடிப் பழக்கம்!

பணத்திற்காகப் பண்பை விலை பேசாமல், தமிழக அரசு இவ்விஷயத்தில் முடிவு எடுக்கவேண்டும். இலவசப் பொருள்களை நிறுத்தினாலே போதும்.  இழப்பை ஈடுசெய்து விடலாம்.  மக்களும் குடியில் மிச்சப்படுத்தும் பணத்தைக்கொண்டு இப்பொழுது இலவசமாகப் பெரும் பொருள்களை விலைக்கு வாங்கி, பெருமைப்படலாம்.
ஒரு அரிசோனன்

Suba.T.

unread,
Jan 2, 2015, 3:10:00 AM1/2/15
to மின்தமிழ், Subashini Tremmel


டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டம்: 19–வது முறையாக கைதான சட்டக்கல்லூரி மாணவி

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டம்: 19–வது முறையாக கைதான சட்டக்கல்லூரி மாணவி



திண்டுக்கல், ஜன.1–

மதுரை கே.புதூரை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் நந்தினி (வயது22). மதுரை சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் மதுவுக்கு எதிராக போராட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அரசு மதுபானக்கடைகளை மூடக்கோரி தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் வீட்டுமுன் உண்ணாவிரதம் இருக்கபோவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலை நத்தம் அருகே வேம்பார்பட்டியில் உள்ள அமைச்சர் வீட்டுமுன் உண்ணாவிரதம் இருக்க மாணவி நந்தினி, தந்தை ஆனந்தனுடன் வந்தார். போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவி நந்தினி ஏற்கனவே 18 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் மதுரை சட்டக்கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம், மதுரை கலெக்டர் அலுவலகம், திருப்பத்தூர், சேலம், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது தந்தை ஆனந்தன் வேளாண்மை பொறியியல் துறையில் இளநிலை பொறியாளாராக வேலை பார்த்து வந்தார். மகளின் மதுவுக்கு எதிரான போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவரும் மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மதுவை அரசே விற்பதால் மதுகுடிப்பது ஒரு கலாச்சாரமாக பரவி உள்ளது. மதுவிற்பனையை நிறுத்த அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. நீதிமன்றமும் மது விற்பதை தடை செய்யாமல் வெறுமனே அரசுக்கு அறிவுரை மட்டுமே வழங்குகிறது. அதனால் மதுவை ஒழிக்க மக்கள் மன்றத்தில் போராடுகிறோம் என்றார். 


செல்வன்

unread,
Jan 2, 2015, 3:22:05 AM1/2/15
to mintamil
மாணவி நந்தினிக்கு ஊடக ஆதரவு இல்லை என்பது வருத்தத்துக்கு உரியது

Dev Raj

unread,
Jan 13, 2015, 12:35:10 PM1/13/15
to mint...@googlegroups.com
'இந்து இளைஞர் எழுச்சிப் பேரவை’ அமைப்பினரின்
முயற்சி -

Oru Arizonan

unread,
Jan 13, 2015, 6:40:01 PM1/13/15
to mintamil
இது எனக்கு KKK (கு க்ளக்ஸ் கிளான்)காக ACLU (அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன்) நீதிமன்றத்தில் ஆஜரானத்தை நினைவூட்டுகிறது.
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 13, 2015, 7:10:42 PM1/13/15
to mintamil

வணக்கம் ஐயா.


On 13-Jan-2015 11:05 pm, "Dev Raj" <rde...@gmail.com> wrote:
>
> 'இந்து இளைஞர் எழுச்சிப் பேரவை’ அமைப்பினரின்
> முயற்சி -
>

நாடு நலம் பெற இவர்களின் முயற்சி வெற்றி பெறட்டும்.

Oru Arizonan

unread,
Jan 13, 2015, 10:01:40 PM1/13/15
to mintamil
//இது எனக்கு KKK (கு க்ளக்ஸ் கிளான்)காக ACLU (அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன்) நீதிமன்றத்தில் ஆஜரானத்தை நினைவூட்டுகிறது.//

நான் அமெரிக்க ஞாபகத்தில் ஒற்றைச் சொற்றொடரை எழுதிவிட்டேன்.  எனவே விளக்கம் தருகிறேன்.

1.  KKK (கு க்ளக்ஸ் கிளான்) என்பது அமெரிக்காவில் இருக்கும் ஒரு வெறுப்பு அணி.  வெள்ளைக் கிறித்தவர்கர்களைத் தவிர அனைவரையும் வெறுக்கும் ஒரு அணி.  அது செய்த அட்டூழியங்கள் ஏராளம்.

2.  ACLU (அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன்) சிறுபான்மையர் மற்றும் அனைவரின் உரிமைக்காகப் போராடும் அணி.  அது KKK க்கு எதிராக பல வழக்குகளைத் தொடுத்து சிறுபான்மையருக்கு வெற்றிதேடித் தந்துள்ளது.

3.  ஒரு சமயம் KKK ஜியார்ஜியா மாநிலத்தில் ஒரு சாலையைத் தத்து எடுக்க முயன்றபோது பலத்த எதிர்ப்பு எழுந்தது.  அச்சமயம் ACLU, நீதிமன்றத்தில் KKK வுக்காக, அவர்களின் உரிமைக்காக வாதாடியது.


4.  மது விற்பனையை எதிர்த்துப்போராடுவது ஒரு நல்ல செயல்.  மக்களைக் காக்கவேண்டிய காவல்துறையே, மதுக்கடைகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் செய்தியைப் படித்ததும், எனக்கு KKK (டாஸ்மார்க் கடைகள்), மற்றும் ACLU (காவல்துறை) நினைவு வந்தது.

ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Jan 13, 2015, 10:25:17 PM1/13/15
to mintamil
எசிஎல்யு இப்பல்லாம் தீவிரவாதிகளின் உரிமைக்கு தான் போராடுகிறார்கள்.

ஜெயிலில் அடைக்கபட்டிருக்கும்  தீவிரவாதிகளுக்கு கூட்டுபிரார்த்தனை நடத்த அனுமதிக்காதது அவர்கள் மத உரிமையை மீறும் செயல் என ஒருவழக்கு. அதில் தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி ஏசிஎல்யு ஆஜர். கூட்டுபிரார்த்தனை எனும் பெயரில் சதிசேயல்களில் ஈடுபட்டால் என்ன செய்வது? ஆனால் ஏசிஎல்யூவுக்கு அதைப்பற்றீ என்ன கவலை?

Oru Arizonan

unread,
Jan 13, 2015, 10:55:11 PM1/13/15
to mintamil
நானும் அதைத்தான் சொல்கிறேன்.  காக்கவேண்டிய காவல்துறையினரே தீமைக்குத் துணைபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளதல்லவா!

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 14, 2015, 12:46:55 AM1/14/15
to mintamil
வணக்கம்.

2015-01-14 8:54 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
எசிஎல்யு இப்பல்லாம் தீவிரவாதிகளின் உரிமைக்கு தான் போராடுகிறார்கள்.

ஜெயிலில் அடைக்கபட்டிருக்கும்  தீவிரவாதிகளுக்கு கூட்டுபிரார்த்தனை நடத்த அனுமதிக்காதது அவர்கள் மத உரிமையை மீறும் செயல் என ஒருவழக்கு. 
அறவாழிகளுக்குத்தான் மதஉரிமை யெல்லாம்.
குற்றவாளிகளுக்குத் தண்டனை மட்டுமே.

அன்பன்
கி.காளைராசன்

Dev Raj

unread,
Jan 27, 2015, 8:21:24 AM1/27/15
to mint...@googlegroups.com
போதையின் கோரப்பிடியில்  இளைய தலைமுறை -


வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும்!


shylaja

unread,
Jan 27, 2015, 8:40:50 AM1/27/15
to mintamil
பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது  இளைய சமுதாயம் எங்கே போகிறது?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



Tthamizth Tthenee

unread,
Jan 27, 2015, 9:57:18 AM1/27/15
to mint...@googlegroups.com
​இளைய  சமூதாயம்  எங்கே போய்க் கொண்டிருக்கிறது  என்பது இந்தப் படத்தைப் பார்த்ததும்  நிதர்சனமாகத் தெரிகிறது


சாராயக் கடைகளை மூடினால் ஒழிய ,  மதுவை  ஒழித்தால் ஒழிய   நாடு முன்னேற  சாத்தியமே இல்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



Nagarajan Vadivel

unread,
Jan 27, 2015, 10:08:32 AM1/27/15
to mint...@googlegroups.com

2015-01-27 20:26 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
சாராயக் கடைகளை மூடினால் ஒழிய ,  மதுவை  ஒழித்தால் ஒழிய   நாடு முன்னேற  சாத்தியமே இல்லை

​அப்படியெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒருநாளக்குள் முடியும் காரியமல்ல.மிடாக்குடியர்களாகிப்போன மூன்றில் ஒரு பகுதி தமிழர்களைக் குடியை மறக்கச்செய்ய வேண்டும்.  ஒருமுறை போதைக்கடிமையானவர்கள் உடனே குடியை நிறுத்தினாலுடம்புக்குக் கேடு விளையும்.  அதனால்தான் கள் வேண்டுவோர் கழகம் நச்சுப்பொருள் கலந்தடாஸ்மாக் கடையைவிட்டு நல்ல பொருள் கலந்த கள்ளை உண்ண அரசு ஆவன செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறது

எலியோன்
ள் 

Innamburan S.Soundararajan

unread,
Jan 27, 2015, 10:19:15 AM1/27/15
to mintamil
ள் 

அது என்ன 'ள்'?
எளியோன்

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2015, 10:24:17 AM1/27/15
to மின்தமிழ்

2015-01-27 20:48 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
அது என்ன 'ள்'?

​இளமையில் கல்

எலியோன்

Innamburan S.Soundararajan

unread,
Jan 27, 2015, 10:27:24 AM1/27/15
to mintamil
சிரித்து மாளல்லே.

Tthamizth Tthenee

unread,
Jan 27, 2015, 10:47:44 AM1/27/15
to mint...@googlegroups.com
இளமையில்  கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




Innamburan S.Soundararajan

unread,
Jan 27, 2015, 8:49:14 PM1/27/15
to mintamil
துடிப்புடன் எழுதினாலும் பொடி வைத்து எழுதுவது மரபு!

Dev Raj

unread,
Jan 30, 2015, 2:40:40 PM1/30/15
to mint...@googlegroups.com
மகளிருக்கு இட ஒதுக்கீடு -


செல்வன்

unread,
Jan 30, 2015, 3:22:11 PM1/30/15
to mintamil
மகளிருக்கு தனி சாராயக்கடை திறக்கவேண்டும்.

குடித்துவிட்டு ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் இருந்தால் பெண்களை அவர்கள் பலாத்காரம் கூட செய்யலாம். அதனால் மகளிர் மதுபானக்கடைகளை திறந்து பெண்கள் பாதுகாப்புக்கு அரசு ஆவனசெய்ய வேண்டும்.

On Fri, Jan 30, 2015 at 1:40 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
மகளிருக்கு இட ஒதுக்கீடு -


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Jan 30, 2015, 8:21:27 PM1/30/15
to மின்தமிழ்
கொடுமை! கொடுமை!  இதெல்லாம் எங்கே போய் நிற்குமோ! தெரியலை!  அரசோ தூங்கிக் கொண்டிருக்கிறது!

Innamburan S.Soundararajan

unread,
Jan 31, 2015, 12:48:57 AM1/31/15
to mintamil
குடித்துவிட்டு ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் இருந்தால் பெண்களை ஆண்குடியர்களும், ஆண்களை பெண் குடியர்களும் பலாத்காரம் கூட செய்யலாம்/ 
--

Nagarajan Vadivel

unread,
Jan 31, 2015, 1:10:03 AM1/31/15
to மின்தமிழ்
இது அதீதக் கற்பனை. மொடாக்குடியர்களென்றால் தலையும் தெரியாது வாலும் தெரியாது நடக்கக்கூட முடியாமல் சுருண்டுவிடுகிறார்க<.  அப்புறம் எங்கே மன்மதக் கலையைத் தீவிரமாகச் செயல்படுத்துவது

குடிப்பது என்பது ஒரு கலை அது குமுகத்தில் னேட்டுக்குடியிலும் பன்னாட்டு வணிகத்திலும் சர்வ சாதாரணம்.  ஒரு காலத்தில் மென்பொருள் உருவாக்கப் பணிக்காகச் சென்னையிலிருந்து சென்றவர்கள் குடிக்கமாட்டேன் என்கிறார்கள் என்ற புகார் இருந்தது.  தமிழ்நாட்டில் தனியார் மேலாண்மைக் கல்வியில் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்களோ இல்லையோ புதியவர் சந்திப்பு பழைய மாணவர் சந்திப்பு என்று நானாவித சந்திப்புகளை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஏற்பாடு செய்து மாணவ மாணவிகளுக்குக் குடிக்கக் கற்றுக்கொடுக்கிறார்கள்

டாஸ்மாக் கலாச்சாஅரம் என்பது தமிழ்க்குடிமக்களின் மாலை மயக்கத்துக்கான கூடிக்களிக்கும் திருவிழாவில் கொஞ்சம் மட்டமான உட்பிரிவு.  கிளப்புகளிலும் தூதரகப் பார்ட்டிகளிலும் உயர்குடித் தாய்க்குலங்கள் கலந்துகொண்டு பட்டையைக்கிளப்புவதெல்லாம் அதிகம்பேருக்குத் தெரிவதில்லை.  அங்கெல்லாம் எதுவும் விவகாரமான வில்லங்கள் நடப்பதாக யாரும் வெளியில் வந்து சொல்வதில்லை

தனியார் பார்கள் இருந்தபோது இதெல்லாம் நடக்கவில்லை எல்லாம் அரசு நடத்த ஆரம்பித்தபின்தான் எல்லாப் பிரச்சினைகளும் என்று கூறுவது முழு பாட்டிலைச் சோற்றில் மறைப்பதுபோலாகும்

எலியோன்

எலியோன்

Innamburan S.Soundararajan

unread,
Jan 31, 2015, 1:19:46 AM1/31/15
to mintamil
கிளப்புகளிலும் தூதரகப் பார்ட்டிகளிலும் உயர்குடித் தாய்க்குலங்கள் கலந்துகொண்டு பட்டையைக்கிளப்புவதெல்லாம் அதிகம்பேருக்குத் தெரிவதில்லை.  அங்கெல்லாம் எதுவும் விவகாரமான வில்லங்கள் நடப்பதாக யாரும் வெளியில் வந்து சொல்வதில்லை

! ஆமாங்க ! 

Dev Raj

unread,
Feb 2, 2015, 1:42:23 PM2/2/15
to mint...@googlegroups.com
'வேணுவனம் ‘ சுகா -

குடிப்பது குறித்த கூச்சத்தை, அதை ஒரு குற்றமாகக் கருதி, வெளியே தெரியாமல் மறைத்து வைத்திருந்த முந்தைய தலைமுறையினரைப் பார்த்திருக்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்பு சாலிகிராமத்துத் தெரு ஒன்றில் பள்ளிச் சீருடையிலிருந்த ஒரு சிறுவன், தூரத்தில் நின்று கொண்டிருந்த அவனது நண்பனொருவனைப் பார்த்து உரத்த குரலில், ‘மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்’ என்று புகழ் பெற்ற ஒரு தமிழ்த்திரைப்படத்தின் வசனத்தைச் சொல்லிக் கத்தினான். எனது மகனை விட ஓரிரு வயதே அதிகமாக உள்ள அந்தச் சிறுவன்தான், கடந்த இருபதாண்டுகளில் முதன் முறையாக நான் திரைப்படத்துறையில் இருப்பவன் என்பதை நினைத்து என்னை வெட்கித் தலைகுனியச் செய்தவன்.

ராம் காமேஸ்வரன்

unread,
Feb 2, 2015, 2:17:09 PM2/2/15
to mint...@googlegroups.com

குடிப்பழக்கத்தால் திராணியற்ற சமூகம் : சினிமா இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1174313

திருநெல்வேலி:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் கரிசல் திரைவிழா துவங்கியது. 10வது ஆண்டு விழாவினை திரை இயக்குனர் சீனு ராமசாமி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். அவர் பேசுகையில், சினிமாவிற்கு வரும் இளைஞர்களுக்கு துறை மீதான அதீத ஆர்வம், காதல், தரமான இலக்கிய வாசிப்பு ஆகியன இருக்கவேண்டும்.உலகப்படம் என்று தனியாக எதுவும் இல்லை. வாழ்வியல் முறை எவ்வளவு யதார்த்தமாக, ஆழமாகப் பதிவு செய்யப்படுகிறதோ அதுதான் உலகத்தரம் பெறுகிறது.திரைப்படத்தினை தணிக்கை செய்கையில் ஆபாசம், வன்முறை காட்சிகள் நீக்கப்படுவதைப் போல புரட்சிகரமான கருத்துக்களும் நிராகரிக்கப்படுகின்றன.சத்திய ஜித் ரே போன்றோரை கொண்ட இந்திய சினிமாத் துறையில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகி நமது திறமையினைப் பறைசாற்றுகின்றன. "நாயக பிம்பம்' எனும் படிமம் அதிகரித்து, யதார்த்த சினிமாக்கள் குறைந்து கதாநாயகனைத் தூக்கி நிறுத்தும் படங்கள் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. "குடிப்பழக்கத்தின் காரணமாக கலாச்சாரம் எனும் முதுகெலும்பு உடைக்கப்பட்ட சமூகம் அநீதியை எதிர்க்கும் திராணியற்றிருக்கிறது. எனவே எனது படங்களில் குடிநோய்க்கு எதிரான காட்சிகளை அமைக்கிறேன்" என்றார். பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, தொடர்பியல் துறைத் தலைவர் கோவிந்தராஜு, பேராசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் நாகரத்தினம் வரவேற்றார். மாணவி அபிநயா நன்றி கூறினார்.போட்டியாளர்களின் குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நடுவராக 'தமிழ் ஸ்டூடியோ' அருண் பங்கேற்று மாணவர்களோடு கலந்துரையாடினார். ஓவியப்போட்டி, கொலாஜ், சிறந்த பத்திரிகையாளர், சிறந்த வானொலி அறிவிப்பாளர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.


On Monday, February 2, 2015 at 1:42:23 PM UTC-5, Dev Raj wrote:

Dev Raj

unread,
Feb 20, 2015, 3:38:13 AM2/20/15
to mint...@googlegroups.com
சரிநிகர் சமானமாக வீழ்வமிந்த நாட்டிலே !!

தேமொழி

unread,
Feb 20, 2015, 4:29:50 AM2/20/15
to mint...@googlegroups.com


On Friday, February 20, 2015 at 12:38:13 AM UTC-8, Dev Raj wrote:
சரிநிகர் சமானமாக வீழ்வமிந்த நாட்டிலே !!

திருச்சி ஜங்சன் பகுதிகளில் நேற்று மாலை சிவகாமி என்ற பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போதையில் நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்து கிடந்தார். போலீஸாரும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். நீண்ட நேரத்திற்கு பின் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண், கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் சரக்கு வாங்கி குடிப்பது வழக்கமாம். நேற்று காசு அதிகமாக கிடைத்ததால் கொஞ்சம் ஓவராக போயிடுச்சு என்று போதை தெளியாமல் உளறி இருக்கிறார். 
It is loading more messages.
0 new messages