மிக சுவாரசியமான நாக.இளங்கோவனின் கதையாடல் எனக்கு நான் முன்பு பார்த்த
ஒரு ஆங்கிலப்படத்தை நினைவுபடுத்தியது. இயக்கம் இத்தாலியப் பெயர் கொண்ட
ஒருவர். கதை இயேசு மறைந்த சில வருடங்களில் நடப்பது. இயேசு என்கின்ற நபர்
உண்மையிலேயே இருந்தாரா? என அறிய முயலும் ஒருவன் தேடித்தேடி கடைசியில்
அப்படி ஒருவர் இருந்தார் என்று யோகிக்க முடிகிறதே தவிர
நிரூபிக்கமுடியவில்லை என்று முடியும். மிக நேர்த்தியான படம்.
இளங்கோவடிகளுக்கு கதை வருவதற்குள் கண்ணகி தெய்வமாகிவிடுகிறாள்.
சரித்திரம் நாம் நினைப்பதைவிட வேகமாக நகர்கிறது.
இக்காப்பியம் தோன்றிய காலமும் ஏறக்குறைய இயேசு காவியம் தோன்றிய காலக்கட்டம்தானே!
கண்ணன்
பொதுவாக மூவேந்தர் தேசங்களை மலைகளும் காடுகளும் பிரித்திருப்பதை சிலம்பில் வெகு அழகாக இளங்கோ கோடி காண்பிதுள்ளார். கவுந்தி அடிகள் கோவலனையும், கண்ணகியையும் மதுரைக்கு அழைத்து வரும் படலத்திலேயே இந்த தொலைவுக் கணக்கும், போகும் பாதகளின் கடினமும் இளங்கோ அழகாகவே சொல்வது புரிகிறது.
அது சரி! கண்ணகி வளையல் உடைத்ததை எழுதி இருக்கிறீர்கள்! கணவன் இறந்தபிறகு மனைவி வளையல் உடைப்பது என்பது அப்போதே உள்ளதோ?
வஞ்சியில் பறை அடித்தால் வடநாட்டு மன்னர்களின் ஒற்றர்கள் தம் அரசுக்கு தெரிவிப்பர் என்றால் மதுரை எரிந்தது முதல் நடந்தது யாவும் சேரனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். ஆனால் அவருக்கு தெரியவில்லை. சாத்தனார்தான் நடந்த கதையை சொல்லுகிறார்.எனவே குறவர்களின் செவிவழி கதையை இளங்கோ காப்பியம் ஆக்கி இருக்கலாம்.
இக்காப்பியம் தோன்றிய காலமும் ஏறக்குறைய இயேசு காவியம் தோன்றிய காலக்கட்டம்தானே!
கண்ணன்
* மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறிழைப்ப (நீதியினின்றும் நீங்கிய கோலையுடைய பாண்டியன் தவறு செய்ய);
* முறைஇல் அரசன் (நீதியற்ற இவ்வரசன்);
* பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறிழைப்ப (பாரோர் பழிச்சொல் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவறிழைப்ப);
* தேரா மன்னா! (ஆராய்ச்சி இல்லாத மன்னனே!);
இவ்வாறெல்லாம் மதுரை நகர் வழியே வரும்போதும் பாண்டியனைச் சந்தித்த போதும் நேரிடையாகவே சாடுகிறாள்; வசை பாடுகிறாள். ஆனால் வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதையிலே,
அந்தத் தென்னவனை - மன்னவனை - பாண்டியனை - அரசனை - அக்கொற்கைவேந்தனை, தன் தந்தையாகத் தத்து எடுத்துக் கொள்கிறாள். தான் அவன் தன் மகள் என்று பெருமையாகச் சொல்லுகிறாள். இளங்கோ அடிகள் செய்த மாபெரும் புரட்சி இது. பெரியவர்கள், சிறியவர்களைத் தத்து எடுத்துக் கொள்வதுதான் மரபு. ஆனால் வயதிலே சிறியவளான கண்ணகி இறந்துபோன ஒருவனை தன் தந்தையாக தத்து எடுத்துக் கொள்வது-மரபை மீறிய செயல்.
இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன என்று பார்ப்பதற்கு முக்கியமான இடம் வழக்குரை காதை. கண்ணகியும் - பாண்டியனும் முதல் முதல் சந்திக்கின்ற நிகழ்வு. இது போன்ற ஒரு காட்சியை இது வரைக்கும் உலகத்திலுள்ள எந்த ஒரு காப்பிய ஆசிரியரும் செய்தது கிடையாது. இனிமேல் செய்யவும் முடியாது. முதன் முதலாக கண்ணகியை அரண்மனையிலே பார்த்த உடனேயே அவனுக்குள் ஏற்பட்ட மாற்றம் என்ன?
தூசு படிந்த மேனியைப் பார்த்தான் - விரித்த கருங்குழலைப் பார்த்தான் - அவள் கையில் ஒற்றைச் சிலம்பைப் பார்த்தான் - கண்களைப் பார்த்தான்-அந்தக் கண்களில் இருந்து பெருகி வரும் கண்ணீரைப் பார்த்தான். இத்தனையும் பார்த்தவுடன், தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்டான்.
மேலும் அவளைப் பார்த்து "நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோ நீ மடக் கொடியோய்," என்று மிகவும் அடக்கமாக, அரசன் என்கிற அதிகாரத் தோரணை இல்லாமல் அவளிடத்திலே கேட்கிறான். இதைக்கேட்ட கண்ணகிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கோபம் வந்தது. காரணம் பழக்கத்தின் காரணமாக, தன்னைப் பன்மையிலே விளித்தவனை - எம்முன் என்று சொன்னவனைப் பார்த்து உடனேயே "தேரா மன்னா," என்றுதான் அவனை அவள் விளித்தாள்.
தன் ஊர், தன் பெயர், தான் வந்த காரணம் மற்றும் தான் பெற்ற துன்பத்தைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியவள், அதைச் சொல்வதற்கு முன்பாக தான் வாழ்ந்த பகுதியின் மன்னன் வழங்கிய இரண்டு தீர்ப்புகளை மேற்கோளாகக் கூறிவிட்டு பிறகுதான் அவ்வூரில் பிறந்தவள் என்றும் மற்றவற்றையும் சொல்லுகிறாள். இந்தத் தீர்ப்புகள்தான் பாண்டியனைச் சிந்திக்க வைத்தது. தீர்ப்பைக் கேட்ட பாண்டியன், அந்தத் தீர்ப்பைப் பற்றியே சிந்தித்துக் கொண்டுதான் முழுவதும் பேசுகிறான். அப்படிப்பட்ட அந்த தீர்ப்புகள்தான் என்ன?
முதலாவதாக,
இரண்டாவதாக,
மனுநீதிச் சோழனின் தீர்ப்பு பாண்டியனை மிகவும் பாதிக்கிறது. ஆறறிவு பெறாத அந்தத் தாய்ப்பசுவுக்கு, ஆராய்ச்சி மணியை அடித்தால் மன்னன் வெளியே வருவான், நீதி தருவான் என்று தெரிந்திருக்கிறதே; கன்றை உயிருடன் மீட்டுச் செல்ல முடியாது என்பது தெரிந்தும் வேறு எந்தக் காரணத்துக்காக ஆராய்ச்சி மணி அடித்தது. தனக்குத் துன்பம் இழைத்தவன் தன் கன்றைப் போலவே சாகவேண்டும் என்கிற பழிவாங்கும் எண்ணம் அத்தாய்க்கு எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட சோழன் தன் மகனைக் கொன்றான்.
இந்தத் தீர்ப்புகள்தான் பாண்டியனை நிலைகுலையச் செய்தன. தான் தவறு செய்துவிட்டதாகவே வைத்துக் கொண்டாலும் தன் கணவனை மறுபடியும் உயிர்ப்பித்து கூட்டிச்செல்ல கண்ணகி வரவில்லை. பழிக்குப்பழி என்கிற ஓர் எண்ணம் அவள் இதயத்திலே எங்கோ ஓரத்திலே இருப்பதை உணர்ந்தான்.
திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மனுநீதிச் சோழனது நாட்டின் பெண்தானே அவள்! இப்போது பாண்டியன் ஒரு முடிவுக்கு வருகிறான். தான் மடியவேண்டும் அவள் கணவன் கோவலனைப் போல, தான் மன்னனானபடியால் தண்டனையை யார் நிறைவேற்றுவார்கள்? தனக்குத்தானே தண்டனையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று தன் ஆன்மாவுக்கு ஆணையிட ஆயத்தம் ஆகிறான். வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு கடமைக்காக இரண்டொரு வார்த்தைகள் பேசுகிறான்.
தன்னைக் கள்வன் என்று குற்றம் சுமத்த வேண்டும். அப்போதுதான் அவன் நாட்டின் சட்டம் "கள்வனை கோறல் வெள் வேல் கொற்றம்," நிறைவேற்ற முடியும் என்று முதலிலேயே சொன்ன தண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்கிறான்.
மன்னனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவள் கோப்பெருந்தேவி. தென்னவன் மாண்டு வீழ்ந்தான். அவன் மனைவி கோப்பெருந்தேவி குலைந்தனள். "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்," என்று இணையடி தொழுது வீழ்ந்தனள்.
கண்ணகி, வழக்காடினாள் - வழக்கின் முடிவிலே மன்னன் மடிந்தான். இப்போது தன்நிலை திரும்புகிறாள். கோப்பெருந்தேவி வீழ்ந்ததைப் பார்த்து அவள் இறந்துவிட்டாள் என்பதைத் தெரியாத கண்ணகி, பேரரசனான பாண்டியன் தேவியே! கணவனை இழந்த தீவினை உடைய நான், இப்போது ஒன்றையும் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். எனினும் ஒன்றை மட்டும் உணர முடிகிறது. பிறன் ஒருவனுக்கு முற்பகலில் கேடு செய்தவன், தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காண்பான் என்று சொல்லுகிறாள்.
"பதிகத்திலே சொன்ன" ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதை புரிந்து கொண்டவளாக படைக்கப்படுகிறாள் கண்ணகி. தனது கணவன் இறந்தது பாண்டியன் தவறிழைத்ததனால் இல்லை, அது அவன் முன் வினைப்பயன், என்று மேலும் பண்டைச் சாபம் பலித்ததன் விவரங்களைச் சொல்லுகிறாள். மேலும் செம்மையில்லோர்க்குச் செய்தவம் உதவாது என்றும் சொல்லுகிறாள்.
முற்பிறவியில் செய்த தீவினை பயன் தரும் காலம் வந்தால், செம்மையான உள்ளம் இல்லாதவர்க்கு செய்த தவமும் உதவாது என்று சொல்லுகிறாள்.