30-10-2013 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

46 views
Skip to first unread message

Prasannam Narayanaswamy

unread,
Oct 29, 2013, 9:06:12 AM10/29/13
to mint...@googlegroups.com

30-10-2013
திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 Inline images 1
 
அன்புடன்
திருச்சி நா.பிரசன்னா
என்னுடைய மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க
English:
http://www.slideshare.net/nprasannamenglish                     Tamil:
http://www.slideshare.net/nprasannamtamil                       
Hindi:
http://www.slideshare.net/nprasannamhindi                       Malayalam:
 
My Facebook:  n.pra...@gmail.com, and
      iampr...@yahoo.co.in


301013t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Oct 29, 2013, 7:46:29 PM10/29/13
to mint...@googlegroups.com
Subject: லைப்ஸ்டைல் மாறாமல் அது மாறாது




From Kizer Omar

லைப்ஸ்டைல் மாறாமல் அது மாறாது

சர்க்கரை வியாதி பெருமளவில் பரவ காரணம் தவறான டயட் அறிவுரை, குப்பை உணவு ஆகியவை.

துரதிர்சக்டவசமாக நவீன மருத்துவம் அறிவியலுக்கு வியாதியை குணமாக்குவதில்லை. வியாதிகளை மேலாண்மை மட்டுமே செய்து வருகிறது. "எனக்கு டயபடிஸ் இருக்கு" என மருத்துவர்களிடம் போனால் அவர்கள் உங்கள் டயபடிசை கட்டுக்குள் வைத்து இருப்பார்கள். துவக்கத்தில் மெட்மார்பின் மாதிரி சர்க்கரை மாத்திரை கொடுப்பார்கள். "அரிசியை குறை, சப்பாத்தி சாப்பிடு" என்பது போன்ற விஞ்ஞானத்துக்கு முரணான டயட் அறிவுரைகளை கொடுப்பார்கள். அதன்பின் மாதா, மாதம் செக்கப்புக்கு போவீர்கள். சுகர் இறங்கின பாடில்லை. ஏறும். அதன்பின் மெதுவாக "இன்சுலின் டிபண்டண்ட் டயபடிக் ஆகிவிடீர்ர்கள்" என சொல்லி இன்சுலின் ஊசி போட சொல்லுவார்கள். அதன்பின் தினம் 1 ஊசி என்பது 4 ஊசி ஆகும்.

இந்த நிலையில் சர்க்கரை வியாதி உங்கள் கிட்னியை பதம்பார்த்து நெப்ரோபதியை வரவழைக்கும். அதன்பின் டயலசிஸ் செய்யணும். அதன்பின் கிட்னிமாற்று சிகிச்சை. அதன்பின் மாதா மாதம் விசிட்

ஆக துவக்கத்தில் ப்ரிடயாப்டிஸுடன் மருத்துவமனையில் சேர்ந்த ஒருவர் 10, 20 வருடத்தில் ஆயிரகணக்கான டாக்டர் விசிட், எக்ஸ்ரே, ஸ்கான், டயாலிஸி, அறுவை சிகிச்சை என சாகும் கடைசி நிமிடம் வரை மருத்துவரையும், மருந்து கம்பனிகளையும், ஸ்கான், எக்ஸ்ரே, டயாலிசிஸ் சென்டர் என பலரையும் வாழவைக்கும் காமதேனுவாக மாற்றிவிடுகிறார்.

சர்க்கரை வியாதி மட்டும் இல்லையெனில் பல மருந்துகம்பனிகள் இழுத்து மூடபட்டும். பல பேர் பிழைப்பு போய்விடும்.
 அதனால் சர்க்கரையை குணமாக்குவதை விட வியாதியை மேலாண்மை செய்து சர்க்கரை வியாதியை குணமாக்காமல், நோயாளியை சாகவும் விடாமல் சமாளிப்பது தான் நவீன மருத்துவத்தின் வேலை.

இந்த சைக்கிள்கேபில் "சர்க்கரையை குணமாக்குகிறேன்" என சொல்லி மாற்று மருத்துவங்கள், சாமியார்கள் உலா வருகிறார்கள். மருந்து தின்று அலுத்துபோய் "எதை தின்றால் பித்தம் தெளியும்" என்ற நிலையில் இருப்பவர்கள் அவர்களை நம்பி போய் காசை தொலைக்கிறார்கள். அவர்களும் "இந்த கசாயத்தை குடி, அதை குடி" என எதையோ அரைத்து கொடுத்து அதை மக்களும் தின்று வியாதி குணமாகாமல் துன்பபடுகிரார்கள்.

சர்க்கரை ஏன் வருகிறது? அதை எப்படி குணமாக்குவது?டயபடிசுக்கு என்ன காரணம் என்பது பலவருடமாக 20ம் நூற்ராண்டு மருத்துவர்களை வாட்டி வந்த குழப்பம். தம் இயற்கையான பாரம்பரிய உணவை உண்ட ஆதிகுடிகள் டயபடிஸ் முதல் அனைத்து நாக்ரிக மனிதனின் வியாதிகளில் இருந்தும் விடுதலை அடிந்துள்ளார்கள். ஆனால் "நாகரிகமயம்" அவர்களை தாக்கொய பின் நாகரிக மனிதனின் வியாதிகள் அவர்களையும் வந்து அடைகின்றன. 6நியூசி மாவோரி பழங்குடியினர் ஒரு உதாரணம். 60களில் நியூஸிலாந்து பழங்குடியினரான மாவோரிகள் பெருமளவில் டயபடிஸ், கொலஸ்டிரால், மாரடைப்பு, தொப்பை ஆகியவற்றால் பாதிப்படைந்திருந்தனர். பெண்களில் சுமார் 60% பேர் குண்டாக இருந்தனர். அவர்கள் உணவு பெரும்பாலும் நியூசி அரசு ரேஷன் மூலம் கிடைத்த விலைகுறைவான கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பிய உணவுதான் (ரொட்டி, மாவு, பிஸ்கட்டுகள், சீரியல்கள்). கணக்கு போட்டதில் ஒரு மாவோரி வருடம் ஒன்றுக்கு 70 கிலோ சர்க்கரையை இந்த உணவுகள் மூலம் மட்டுமே பெற்றது தெரிய வந்தது. (தினம் 200 கிராம் தானியம்,பழம், உண்டால் வருடம் 70 கிலோ சர்க்கரை நம் உணவிலும் சேரும்.) 

.டயபடிஸ் அல்லாத வேறு வியாதிகளை ஆராய்ந்து வந்தவர்களும் அது சர்க்கரையுடன் தொடர்பு கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். உதாரணமாக உலகயுத்த காலத்தில் ஹாங்காங் சிறைகளில் கைதியாக அடைபட்டிருந்த க்ளீவ் எனும் மருத்துவர் அங்கிருந்த சிறைகைதிகள் ஒருவர் விடாமல் அல்சர் வியாதியால் பாதிக்கபட்டிருந்ததை அறிந்தார். யுத்த காலத்தில் மாமிசம் கிடைக்காததால் கைதிகளுக்கு வெறும் அரிசி உணவு மட்டுமே தினம் மூன்று வேளை வழங்கப்பட்டது. யுத்தம் தீவிரமாகி வெள்ளை அரிசி கிடைப்பது நின்று கைதிகளுக்கு விலை குறைந்த மட்டமான பழுப்பு அரிசியும், கம்பு, பார்லி முதலிய தானியங்களும் வழங்கபட்டன. பல சமயங்களில் அவர்களுக்கு உணவு கூட வழங்கபடவில்லை. ஆனால் அதிசயிக்கதக்க முறையில் வெள்ளை அரிசி சப்ளை நின்றவுடன் கைதிகளில் பெரும்பாலானோருக்கு இருந்த அல்சர் மாயமாக மறைந்தது.

.யுத்தம் முடிந்து விடுதலை ஆன மருத்துவர் க்ளீவ் அல்சரை பற்றி ஆராய்வதை வாழ்நாள் லட்சியமாக கொன்டார். உலகெங்கும் இருந்த மருத்துவர்களுக்கு கடிதம் எழுதி அல்சர் நோயாளிகளின் உனவை பற்றிய தகவலை திரட்டினார். 1962ம் வருடம் அந்த கடிதங்கலை தொகுத்து நூலாக வெளியிட்டார். அதில் பக்கம், பக்கமாக மருத்துவர்கள் கூறியதன் சாராம்சம் இதுதான்: எங்கெங்கு எல்லாம் ரொட்டியும், மாவும், வெள்ளை அரிசியும் மக்களின் பிரதான உணவாக உள்ளதோ அங்கே எல்லாம் பெப்டிக் அல்சர் மக்களை படாதபாடு படுத்துகிறது என்பதும் இந்த உனவுகளை உண்ணாதவர்களுக்கு அல்சர் இல்லை என்பதும்.

.ஆக க்ளீவ் தன் நூலில் கூறுவது இதைத்தான். உலகில் பலநாடுகளில் மக்களின் பாரம்பரிய உணவுகள் மேற்கத்தியமயமாதலின் தாக்கத்தால் மாவு, மில் அரிசி, சர்க்கரை முதலியவை சேர்க்கபட்டு உருமாற்றம் அடைந்துவிட்டன. (மில் வெள்ளை அரிசி நம் தொன்மை உணவான இட்லியை வெள்ளை நிறமாக்கியதை நினைவில் கொள்ளலாம்). மக்களின் பாரன்ம்பரிய உணவுகள் நாகரிகமடைந்ததும் நாகரிக மனிதனின் வியாதிகளான டயாப்டிஸ், அல்சர் முதலியவை அவர்களையும் வந்து அடைந்துவிட்டன. என்னதான் சத்துமிகுந்த உணவாக இருந்தாலும் அதில் சர்க்கரை, மாவு, ரொட்டி, அரிசி முதலியவற்றை சேர்த்தால் அதன்பின் அந்த உள்ள வைட்டமின், மினரல், புரதம் எதுவுமே பொருட்டு அல்ல. அத்தகைய உணவு அதன்பின் அம்மக்களை டயபடிசுக்கும் பிற வியாதிகளுக்கும் இட்டுசெல்லும்.

ஆக உணவால் வந்த வியாதி, மருந்தால் போகாது. டயபடிஸ் ஒரு லைப்ஸ்டைல் வியாதி. லைப்ஸ்டைல் மாறாமல் அது மாறாது


2013/10/29 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
301013t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Oct 29, 2013, 8:05:31 PM10/29/13
to mint...@googlegroups.com

 

/ ஆறாம் பாகம் / (6 / 6)

ஐந்தாம் பகுதி ஏற்கனவே அனுப்பிவிட்டேன், இத்துடன் முடிந்த்து

 

கீழ்க்கண்ட தலைப்புகளில் உள்ள Tamil PDF Files கோப்பினை இணைத்துள்ளேன்.

பிரிண்ட் எடுத்து படியுங்கள்முடிந்தது

 

61. முட்டாளாக இருந்து புத்திசாலித்தனமாக வாழ்வது எப்படி?

62. முதலில் கவனமாக கேளுங்கள்

63. முதுமே தேடும் ஆதரவு

64. வயதில் பெரியோர் வாழ்த்தட்டும்

65. வாழ்க்கை ஓர் ஆனந்தப் பயணம்

66. வாழ்க்கைப் பாடம்

67. வித்தியாசமான வாழ்வு கைவசப்பட வேண்டுமா?

68. விவேகமான விவசாயி

69. வீட்டை சுற்றி பயணம் செய்யுங்கள்

70. வேடிக்கையானது மட்டுமல்ல விவரமானதும் கூட

71. வேற்றுமையின் நேர்மையான எதிர்பக்கம்

72. நானும் என் அப்பாவும்

 

 

 

அன்புடன்

திருச்சி பிரசன்னா

9941505431. 9488019015

என்னுடைய 4 மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க

English:

http://www.slideshare.net/nprasannamenglish                     

Tamil:

http://www.slideshare.net/nprasannamtamil                       

Hindi:

 http://www.slideshare.net/nprasannamhindi                      

Malayalam:

http://www.slideshare.net/nprasannammalayalam   

 

My Facebook:  n.pra...@gmail.com, and

      iampresanam@

 

Tamil PDF Files கோப்புகளின் சுருக்கம் .

 

1, அடித்தளம்

2. அம்மா சொன்ன 8 பொய்கள்

3. அருகிவரும் உறவுகள்

4. அறியாத விசயங்கள் பகுதி 8

5. அறியாத விசயங்கள் பகுதி 11

6. அறிவைத் தேடுவோம்

7. அன்பின் குரல்

8. அன்பெனப்படுவது யாதெனில்

9. அன்றும் இன்றும் 6 தவறுகள்

10. அன்னையரே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்

11, ஆங்கில விரிவாக்கம்

12. ஆசிரியர் மாணவர்கள்

13. ஆலயங்கள் பற்றிய அற்புதமான உண்மைகள்

14. ஆறு சுவைகள்

15. 20 ரூபாய் தந்த இன்ப அதிர்ச்சி

16. இறைவன் இருக்கின்றானா

17. இறைவன் நடமாடும் இடங்கள்

18. இன்றைய குழந்தை நாளைய உலகம்

19, உருளைக் கிழங்கு சிப்ஸ் உணர்த்தும் உண்மைகள்

20. உறையூர் பஞ்சவர்ண சாமி கோவில் பற்றி

21. எளிதானதும்  கடினமானதும்

22, எறிய வேண்டாமே ஆக்க பூர்வமாக பயன்படுத்துவோமே

23. என் மகன் /    (பணியிலிருந்து  ஓய்வு பெறப்போகிறவர்கள்  கட்டாயம்

                   படியுங்கள்)

24. கடவுள் எங்கும் இருக்கிறார்

25. கடவுளின் திட்டம்

26. கணக்கோடு பிணக்கு ஏனோ

27. கதை ஒன்று அறிவுரைகள் பல

28. கிண்டர் கார்டன் என்றால் என்ன

29. கொடுத்த பாலுக்கு கிடைத்த பலன்

30. கொடுப்பதே கலை

31. சகிப்புத் த்ன்மை

32. சந்தோஷத்தை  பெருகச் செய்யும் வழி

33. சாஸ்திரப்படி  வாழ்வோம்

34. சிரார்த்தம்

35. சொல்லிச் செல்லலாமே

36. கெட்ட கொழுப்பு என்றால் என்ன

37. தமிழ் விரிவாக்கம்

38. தர்க்கப்படியும், சட்டப்படியும்

39. தவறாகப் புரிந்து கொள்ளுதல்

40. தவிர்க்க முடியாதவற்றை தாங்கும் வழிகள்

 

41. தாய்மையின் தாக்கம்

42. திசை தொப்புள் கொடி உறவுகள்

43. நடந்த்து நடந்த்தாகவே இருக்கட்டும்

44. நமது சந்த்திகள்

45. நமது நலம் விரும்பிகளை கைகூப்பி வணங்குவோம்

46. நமது வம்சாவளியினரின் உரிய பெயர்கள்

47. நம்மை நாமே தாழ்த்திக் கொள்வோம்

48. நல்ல தொடுதல் சரி கெட்ட தொடுதல் சரியல்ல /

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் சொல்லி    

       தரவேண்டியது

49. நாராயணீயம் ஸ்லோசம்

50. நோக்கத்தின் தாக்கம்

51. பணம் உங்களுடையது, ஆனால் செல்வம் நாட்டினுடையது

52. பிரச்சினையிலிருந்து விடுபடுவது எப்படி?

53. பிறந்தநாள் அட்டவணை

54. புத்தரின் அறிவுரை

54. புனித மனதும் ஆத்மாவும் போதும் கடவுளைக் காண

55. பூவும் பொட்டும்

56. பேசுங்கள் இப்படி பேசுங்கள்

57. பேரம் பேசாதீர்கள்

58. பொன் மொழிகள்

59. மறைந்த மற்றும் மறந்த உறவுகள்

60. மாண்டி சோரி  என்றால் என்ன?

61. முட்டாளாக இருந்து புத்திசாலித்தனமாக வாழ்வது எப்படி?

62. முதலில் கவனமாக கேளுங்கள்

63. முதுமே தேடும் ஆதரவு

64. வயதில் பெரியோர் வாழ்த்தட்டும்

65. வாழ்க்கை ஓர் ஆனந்தப் பயணம்

66. வாழ்க்கைப் பாடம்

67. வித்தியாசமான வாழ்வு கைவசப்பட வேண்டுமா?

68. விவேகமான விவசாயி

69. வீட்டை சுற்றி பயணம் செய்யுங்கள்

70. வேடிக்கையானது மட்டுமல்ல விவரமானதும் கூட

71. வேற்றுமையின் நேர்மையான எதிர்பக்கம்




2013/10/30 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
301013t.jpg
முட்டாளாக இருந்து புத்திசாலித்தனமாக வெற்றி பெறுங்கள்.pdf
வேடிக்கையானது மட்டுமல்ல விவரமானதும் கூட.pdf
வேற்றுமையின் நேர்மையான எதிர்பக்கம்.pdf
முதலில் கவனமாக கேளுங்கள்.pdf
முதுமை தேடும் ஆதரவு.pdf
வயதில் பெரியோர் வாழ்த்தட்டும்.pdf
வாழ்க்கை ஓர் ஆனந்தப் பயணம்.pdf
வாழ்க்கைப் பாடம்.pdf
வித்தியாசமான வாழ்வு கைப்படவேண்டுமா.pdf
விவேகமான விவசாயி.pdf
வீட்டை சுற்றி பயணம் செய்யுங்கள்.pdf

Prasannam Narayanaswamy

unread,
Oct 30, 2013, 8:11:44 AM10/30/13
to mint...@googlegroups.com

31-10-2013

திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 

 Inline images 1

அன்புடன்

திருச்சி நா.பிரசன்னா

என்னுடைய மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க

English:

http://www.slideshare.net/nprasannamenglish                     Tamil:

http://www.slideshare.net/nprasannamtamil                       

Hindi:

http://www.slideshare.net/nprasannamhindi                       Malayalam:

http://www.slideshare.net/nprasannammalayalam   

 

My Facebook:  n.pra...@gmail.com, and

      iampr...@yahoo.co.in,

 




2013/10/30 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
311013t.jpg
301013t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Oct 30, 2013, 6:37:48 PM10/30/13
to mint...@googlegroups.com
Subject: MEDICINE FOR LIFE
To: sivan <jks...@vsnl.com>



ஜீரணிக்க  ஒரு  தீபாவளி  மருந்து  -- ( 4 மாத்திரை  

ஒரு உம்மை  சொல்லியே  ஆகணும்.

1.  நட்பு  இருக்கிறதே. அதை  ரொம்ப  ஜாக்ரதையாகவே  தேடணும்.   கொஞ்சம் சாமர்த்தியம்  இல்லாம  நண்பனை  சம்பாதிப்பதால்  ஆபத்துகள்  அதிகம்.  அவனுடைய  பழக்க வழக்கங்கள்,  எண்ணங்கள்  உன்னை  சாப்பிட்டு விடும்.  எதிர்மறையாகவே எதையும்  நோக்குபவன்,  எதையும் சந்தேகப்படுபவன்,  தன்னம்பிக்கை  இல்லாதவன்,  எதற்கும் பயந்தவன்  கடவுள்  மேல்  நம்பிக்கை  இல்லாதவன்  என்று  எப்படியெல்லாமோ  நண்பர்களை  ரகம்  பிரிக்கலாம்.  அவன் நெருங்கிய நண்பனாக  இருந்தால் நீ உன்னை  இழந்து  அவன் போலவே  ஆகிவிடுவாய்.  தைர்யசாலி,  புத்திகூர்மை,  தன்னம்பிக்கையோடு  கடவுள் நம்பிக்கை, சுறுசுறுப்பு, வெற்றியே  தேடி உழைத்து  பெறுபவன், போன்ற  தன்மையுடைவன்  உனக்கு நண்பனாக  வைத்தால்  நீ  கொடுத்து வைத்தவன்.  உன்னிடம்  இருக்கும்  தன்னம்பிக்கை,  தைர்யம்  போன்றவை  அவனால்  மேலும்  பலப்படுமே. வெற்றி எதிலும்  பெறுவாயே. நண்பன்  அமைவதெல்லாம்  இறைவன்  கொடுத்த வரம்  என்று  வேண்டுமானால்  வைத்துக்கொள்வோமே. 


உத்தியோகம்  -   இது இரண்டாவது விஷயம்  --  நீ  தலையெடுப்பது  என்று  ஏற்பட்டால்.  உடனே  உன்னை  கவர்வது,  அதாவது கொஞ்சம்  சம்பளம்   கூட  என்று  ஒரு உத்தியோகம்  கிடைக்கிறது என்று  வைத்துகொள்வோம். அதே  நேரத்தில்   ஸ்திரமான  ஒரு  உத்தியோகம். அதில் சேர்ந்தால்  போகப் போக  மேலே  கொண்டு விடும்,  என்று  நிச்சயம்  தெரிந்தால்.  சம்பளம் கொஞ்சம்  கம்மி  என்றாலும்  பின்னால்  உனக்கு  கிடைக்கப்போகும்,  மரியாதை,  உயர்வு, அதிகாரம், மற்ற  லாபங்கள்  இவற்றை  அனுசரிக்க  வேண்டும்.  தினமும்  குளித்துவிட்டு  சட்டை மாற்றுவது போல  ஒரு  உத்த்யோகத்துக்கு  தலை முழுகிவிட்டு  ஈரம்  காய்வதற்குள்  மற்றொரு உத்தியோகம்  சேர்பவர்களை  நிறைய  பார்க்கிறோமே.  இப்போதைக்கு  சில  ரூபாய்  நோட்டுகள்  சௌகர்யமாக  தோன்றும்.  பின்னர்  அவதி நிச்சயம்.  பிற்காலத்தில்  இப்படி  ஈயாக  சுற்றி அலைந்தவர்கள்  அவஸ்தைப்பட்டு  தனது  அவசர  முடிவுக்கு  வருந்துபவர்கள்  அநேகம். 

எண்ணம்  அமைதியாக  இல்ல்லாமல்  உள்ளே  புயல்  உருவாகும்போது  உடல்  பாதிக்கப் படுகிறதே.   பேர்  தெரியாத  நோய்கள்  எல்லாம்  மேலை நாட்டிலிருந்து  சல்லிசாக  நமது  டாக்டர்களுக்கு  வந்து சேர்கிறதே.  அந்த காலத்தில்  சகலமும்  பித்தம்  வாதம்  கபம்  மூன்றிற்குல்லேயே  அடக்கமாக  இருந்து  குணப்பட்டது.  மனம்  கெட்டால்  உடல்  தானாக இப்போது  கெடுகிறதே.  முப்பது  வயதிற்குள்ளே  முன்னூறு  வியாதிகள்.  உடல்  தளர்ச்சி.  பாடு பட்டு  தூக்கமின்றி  உழைத்த பணம்  வெகு  எளிதில்  உடலை  சீர் படுத்த  காணாமல்  போகிறதே.  பாவம்  இந்த கால  இளைஞர்கள். மன  உளைச்சல்  அவர்களை  தின்று விடுகிறது. பணம்  பாக்கெட்டில்  நிறைந்தால்  மட்டும்  போதுமா?  வாழ்க்கை  நீண்ட  ஆயுளை  அடிப்படையாக  கொண்டது.  அதை  சிந்தித்து  செய்வன  திருந்தச் செய்யவேண்டாமா. அமைதி  உள்ளத்தில்  இடம் பிடிக்கட்டும்.  சிந்தனை  தெளிவாக  இருக்கட்டும்.  மற்றவர்களோடு   ஒப்பிடாமல்,  உனக்கு  எது  தேவை, எது உன்  உள்ளத்திற்கும்  உடலுக்கு  ஏற்றது  என்ற  தேர்வு சந்தோஷத்தை உனக்கு  மட்டுமல்ல, உன்னைச் சேர்ந்தவர்களுக்கும்  அளிக்குமே.  அவசர  முடிவு  ஆபத்தை அல்லவோ  அருகில் அழைக்கிறது. 


உறவு --    இது  மூன்றாவது விஷயம்  ரொம்ப  முக்யமானதும்  கூட.   உறவு  தான்  உன்  வாழ்க்கை  என்ற  கட்டிடத்தின்  அஸ்திவாரம்  என்று  புரிந்துகொள்.  உறவு  உன்னை மட்டுமல்ல  உன்னைச் சேர்ந்தவர்களையும்  பாதிப்பது.  ஒரு  தவறான  முடிவினால்  ரெண்டு பேர்  வாழ்க்கையும்  அந்தரத்தில்  நிற்கும்.   அதே  சமயம்  உன்னுடைய  தேர்வு  நல்ல  உறவாக  அமைந்தால்  அது  ரெண்டு பேர் மட்டுமல்ல  அவர்களின் சுற்றத்தையும்  மகிழ்விக்கும்  மேஜிக்  செய்யக்கூடியது.  அப்போது  உன் சந்தோஷம்  ரெட்டிப்பாக  மாறுமே.  உன்னிடம்  இருந்து  கிளம்பும் சந்தோஷம்  பலமடங்கு  பெரிதாகி  உன்னையே  வந்து சேர்ந்து  உன்னை  எங்கோ  உயர்த்தி விடுமே.  வினை விதைத்தவன்  வினை  அறுப்பான்  என்று  தெரியாமலா  நம்  முன்னோர்கள்  சொல்லி வைத்தார்கள்.  உறவின்  ஆரம்ப காலத்தில்  ஆசை, ஆவல்  எல்லாம்  உன்  ;கண்ணை  மறைத்து விடும்.  மதியை  மழுங்கச் செய்து விடும். தப்பித்துக் கொள்ள வேண்டும்.  நிதானமாக,  சரியாக    கவனித்து, தீர்மானித்து, மன நிலையை  நன்றாக புரிந்துகொண்டு  உறவில்  நுழைந்தவனுக்கு  அதால்  வரும்  துன்பம்   ஒன்றுமில்லை என்று சொல்வதை விட  ரொம்ப குறைச்சல்.  சரி பண்ணக்கூடிய  அளவில்  கைவிட்டுப் போகாதது என்று  எடுத்துக்கொள்ளலாம்.  எனவே  மூளையை  சரியாக  பயன் படுத்திக்கொள்.


4. எதிர்கொள்ளல்  --  '' வருவதை  எதிர்கொள்ளடா' --    கர்ணனிடம்  கிருஷ்ணன்  சொன்னதை  நினைவு கொள்ள வேண்டும்.  

இதை நிறைய பேர்  லட்சியம்  செய்வதில்லை.  வாழ்க்கை  என்பது உனக்கு என்னவெல்லாம் சோதனை வந்தது, வந்திருக்கிறது, வரப்போகிறது  என்று அலட்டிக்கொள்வதை விட்டு,  வந்த , வந்திருக்கின்ற, வரப்போகும்  சோதனைகளை  எப்படி  எதிர்கொண்டாய், எதிர் கொகிறாய்,  எதிர் கொள்வாய்  என்று  சிந்தித்து  அதை  சமாளிப்பது  உன் வாழ்க்கை யாகும்.  இந்த  சக்தியை  உன் கைக்கடக்கமாக  கட்டுக்கோப்பில்  வைத்துக்கொண்டாயானால்  நீ  தான்  ராஜா.  சந்தர்ப்ப  சூழ்நிலைகள் மேல்  வீண்  பழி  போட  மாட்டாய். 




2013/10/30 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
311013t.jpg
301013t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Oct 30, 2013, 7:05:15 PM10/30/13
to mint...@googlegroups.com
முக்கிய செய்திகள்.com'sphoto.
கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கி
கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!.
எச்சரிக்கை! ! ! !

அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.

நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!.

நீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் வழியை கையாளுகின்றனர் இது அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு (DEPATURE) நேரத்தில், பயணி குடிபுகல் (IMMIGRATION OFFICER) அதிகாரியை கவனிக்காமல் இருக்கும் தருணத்தில் வெளியேற்றம் (EXIT) முத்திரை பதித்து இலாவகமாக உங்களது கடவுச்சீட்டின் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு அனுப்பிவிடுகின்றார். மேலும் பயணி குடிபுகல்/குடியேற்றல் மேசையைவிட்டு அகன்றதும் தனது கணினிமூலம் பயணியின் முழு விவரத்துடன் புகார் தெரிவித்து விடுகின்றார், இப்பொழுது இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குடிபுகல்/குடியேற்றல் அலுவலர் கணினியில் பயணிகளின் கடவுச்சீட்டின் என்னை தட்டினால் பயணிகளின் முழு விவரப் பட்டியல் கிடைக்கும் அதில் சிகப்பு கொடி அடையாளமிட்டு மிளிரும். இதுபோன்று பயணிகளிடம் பணம் பறிக்கும் உத்தியை கையாளுகின்றனர்.

அந்த பயணி மீண்டும் வருகைத் தரும்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

அந்த பயணி வெளிநாட்டில் எத்தனை ஆண்டு வேலைசெய்தார், அவரது வருமானம், அவர் செய்யும் வேலை போன்றவைகள் விசாரிக்கப்படும், இதில் சட்டம் பேசும் அப்பாவிகள் , இந்தியாவில் உண்மையான நீதி கிடைக்கும் என நம்பும் அப்பாவிகள் நிலைதான் பரிதாபம் அவரின் எதிர்காலம் பாழ்படுத்தப்படும். இதற்காக அவரிடம் குடிபுகல் அதிகாரிகளும், காவலர்களும் பேரம் பேசி பணத்தை கறந்துவிடுவார்கள்.

தயவு செய்து அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் உங்களது கடவுச்சீட்டை விமான நிலைய குடிபுகல்/ சுங்கம் மேசையில் உள்ள அலுவலரிடம் கொடுக்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள், உங்களது பார்வையை திசைத்திருப்பும் நோக்கத்தில் அந்த அலுவலர் நடந்து கொண்டாலும் உங்களது பார்வையை தவறவிடாதீர்கள்.

மேலும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடம் தெரிவியுங்கள். இதுபோன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 20 - 30 சம்பவங்கள் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா ஜித்தா (சவுதி அராம்கோ) வில் வேலைபார்க்கக் கூடிய ஹைதராபாத் சகோ. ஆரிபுதீன் தனது குடும்பம்பத்தினர் ஆறு உறுப்பினர்களுடன் அமெரிக்கா செல்ல விசா கிடைத்து நமது நாட்டின் ஹைதராபாத் வழியாக செல்ல எண்ணி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து, ஒருமாத காலம் தங்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக அமேரிக்கா சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்காவை அடைந்து குடிபுகல் செய்யும்போது அவர் மனைவியின் கடவுச்சீட்டில் அமெரிக்காவிற்கான விசா பக்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து அவர்கள் அனைவரும் திருப்பிவிடப்பட்டனர். அவர்கள் மும்பை வந்தடைந்தவுடன் மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர், கடந்த இரண்டு மாதகாலமாக கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும், குடிபுகல் அலுவலகத்திற்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர்.நினைத்துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது எவ்வாறெல்லாம் குடிபுகல் அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக தன தாய்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றார்கள் என்பது.

பாம்பே மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் ௨௦-௩௦ இதுபோன்ற பாஸ்போர்ட்டின் நடு பக்கங்கள் கிழிக்கப்படும் நிகழ்வுகள் மேற்கூறிய விமான நிலையங்களில் நடைபெறுவதாகவும், இதில் சிலருக்கு இந்த சம்பவம் யாரால், எப்பொழுது நடைபெற்றது என்பதே கூட தெரிவதில்லை. இதுபோன்ற
கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!. எச்சரிக்கை! ! ! !  அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும். நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!. நீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் வழியை கையாளுகின்றனர் இது அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு (DEPATURE) நேரத்தில், பயணி குடிபுகல் (IMMIGRATION OFFICER) அதிகாரியை கவனிக்காமல் இருக்கும் தருணத்தில் வெளியேற்றம் (EXIT) முத்திரை பதித்து இலாவகமாக உங்களது கடவுச்சீட்டின் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு அனுப்பிவிடுகின்றார். மேலும் பயணி குடிபுகல்/குடியேற்றல் மேசையைவிட்டு அகன்றதும் தனது கணினிமூலம் பயணியின் முழு விவரத்துடன் புகார் தெரிவித்து விடுகின்றார், இப்பொழுது இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குடிபுகல்/குடியேற்றல் அலுவலர் கணினியில் பயணிகளின் கடவுச்சீட்டின் என்னை தட்டினால் பயணிகளின் முழு விவரப் பட்டியல் கிடைக்கும் அதில் சிகப்பு கொடி அடையாளமிட்டு மிளிரும். இதுபோன்று பயணிகளிடம் பணம் பறிக்கும் உத்தியை கையாளுகின்றனர். அந்த பயணி மீண்டும் வருகைத் தரும்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். அந்த பயணி வெளிநாட்டில் எத்தனை ஆண்டு வேலைசெய்தார், அவரது வருமானம், அவர் செய்யும் வேலை போன்றவைகள் விசாரிக்கப்படும், இதில் சட்டம் பேசும் அப்பாவிகள் , இந்தியாவில் உண்மையான நீதி கிடைக்கும் என நம்பும் அப்பாவிகள் நிலைதான் பரிதாபம் அவரின் எதிர்காலம் பாழ்படுத்தப்படும். இதற்காக அவரிடம் குடிபுகல் அதிகாரிகளும், காவலர்களும் பேரம் பேசி பணத்தை கறந்துவிடுவார்கள். தயவு செய்து அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் உங்களது கடவுச்சீட்டை விமான நிலைய குடிபுகல்/ சுங்கம் மேசையில் உள்ள அலுவலரிடம் கொடுக்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள், உங்களது பார்வையை திசைத்திருப்பும் நோக்கத்தில் அந்த அலுவலர் நடந்து கொண்டாலும் உங்களது பார்வையை தவறவிடாதீர்கள். மேலும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடம் தெரிவியுங்கள். இதுபோன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 20 - 30 சம்பவங்கள் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா ஜித்தா (சவுதி அராம்கோ) வில் வேலைபார்க்கக் கூடிய ஹைதராபாத் சகோ. ஆரிபுதீன் தனது குடும்பம்பத்தினர் ஆறு உறுப்பினர்களுடன் அமெரிக்கா செல்ல விசா கிடைத்து நமது நாட்டின் ஹைதராபாத் வழியாக செல்ல எண்ணி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து, ஒருமாத காலம் தங்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக அமேரிக்கா சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்காவை அடைந்து குடிபுகல் செய்யும்போது அவர் மனைவியின் கடவுச்சீட்டில் அமெரிக்காவிற்கான விசா பக்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து அவர்கள் அனைவரும் திருப்பிவிடப்பட்டனர். அவர்கள் மும்பை வந்தடைந்தவுடன் மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர், கடந்த இரண்டு மாதகாலமாக கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும், குடிபுகல் அலுவலகத்திற்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர்.நினைத்துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது எவ்வாறெல்லாம் குடிபுகல் அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக தன தாய்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றார்கள் என்பது. பாம்பே மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் ௨௦-௩௦ இதுபோன்ற பாஸ்போர்ட்டின் நடு பக்கங்கள் கிழிக்கப்படும் நிகழ்வுகள் மேற்கூறிய விமான நிலையங்களில் நடைபெறுவதாகவும், இதில் சிலருக்கு இந்த சம்பவம் யாரால், எப்பொழுது நடைபெற்றது என்பதே கூட தெரிவதில்லை.


As received from Facebook, Trichy Prasannan

முகநூலிலிருந்து எடுக்கப்பட்டதுதிருச்சி பிரசன்னா



2013/10/31 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
301013t.jpg
311013t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Oct 31, 2013, 7:50:21 AM10/31/13
to mint...@googlegroups.com

01-11-2013

திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 Inline images 1

 

அன்புடன்

திருச்சி நா.பிரசன்னா

என்னுடைய மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க

English:

http://www.slideshare.net/nprasannamenglish                     Tamil:

http://www.slideshare.net/nprasannamtamil                       

Hindi:

http://www.slideshare.net/nprasannamhindi                       Malayalam:

http://www.slideshare.net/nprasannammalayalam   

 

My Facebook:  n.pra...@gmail.com, and

      iampr...@yahoo.co.in



2013/10/31 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
311013t.jpg
11113t.jpg
301013t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Nov 1, 2013, 9:43:28 PM11/1/13
to mint...@googlegroups.com

02-11-2013

11113t.jpg
21113t.jpg
301013t.jpg
311013t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Nov 2, 2013, 8:36:47 PM11/2/13
to mint...@googlegroups.com

03-11-2013

திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 

 Inline images 1

அன்புடன்

திருச்சி நா.பிரசன்னா

என்னுடைய மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க

English:

http://www.slideshare.net/nprasannamenglish                     Tamil:

http://www.slideshare.net/nprasannamtamil                       

Hindi:

http://www.slideshare.net/nprasannamhindi                       Malayalam:

http://www.slideshare.net/nprasannammalayalam   

 

My Facebook:  n.pra...@gmail.com, and

      iampr...@yahoo.co.in



2013/11/2 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
11113t.jpg
311013t.jpg
21113t.jpg
301013t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Nov 3, 2013, 7:16:10 PM11/3/13
to mint...@googlegroups.com
Subject: VIRTUES



                                                                மனிதனின்  எட்டு  குணங்கள் 


ஒருவனை  மற்றவன்  அவன்  ஒரு  குணம் கெட்டவன்  என்கிறோம்.  உண்மையிலேயே  அவன்  குணம்   நமக்கு தெரியுமா? 
அவனை விடுங்கள்.  நமக்கே  நமது  குணம் என்ன என்று  தெரியுமா ?  ஒரு நாள்  இருப்பது போல்,  ஏன்  ஒரு  நிமிஷத்துக்கு  முன்னால்  இருந்ததுபோல்  அடுத்த  நிமிஷம்  நாம்  இல்லையே.  அதற்குள்  எத்தனை  எண்ணங்களில்  சிக்கி  மனது  மாறி விடுகிறது.

அது சரி.  இந்த  குணங்கள்  என்பது  யாவை?   அவற்றை  எட்டாக  பிரித்து வைத்திருக்கிறது  நமது  சாஸ்த்ரங்கள் .  இதைப் பற்றி  மஹா  பெரியவா  சொன்னதை  கொஞ்சம்  சுருக்கி  என்னால் முடிந்தவரை  புரியும்படியாக  கொடுத்திருக்கிறேன்.   புரிகிறதா என்று  பாருங்கள்.

தயை, க்ஷாந்தி, அநஸூயை, சௌசம், அநாயாசம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருஹா என்பவை அஷ்ட (எட்டு) குணங்கள்.

(1) 'தயை' என்பது ஸர்வபூதங்களிடமும் அன்பு, அருளுடைமை.   
 நமது  வாழ்க்கையில்  நாம்  பெரும்   நிறைந்த பலன், பெரிய ஆனந்தம் எல்லாமே பிற உயிரிடம்  அன்பு செலுத்துவது தான்.  அதுதான் அஸ்திவாரம், (முதுகெலும்பு) .

(2) 'க்ஷாந்தி' என்றால் பொறுத்துக் கொள்வது. நமக்கு வியாதி, விபத்து, தாரித்ரியம் முதலானவற்றால் உண்டாகிற கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வது ஒன்று. கஷ்டத்துக்கு  நமக்கு  என்ன  பஞ்சம்.  மேலே  மேலே தான்  வந்து கொண்டே இருக்கிறதே.  நமக்கு ஒருத்தர் கஷ்டத்தைக் கொடுக்கிறபோது அவரையும் மன்னித்து அன்பைக் காட்டுவது இன்னொருவிதப் பொறுமை. இது  உண்மையில்  நாம்  செய்ய  முயற்சிக்காத  ஒரு  காரியம்.  இதை  முதலில்   பழக்கம்  பண்ணிக்கொள்ள வேண்டும். 

(3) 'அநஸூயா  என்பது அத்ரி மஹரிஷியின் பத்னியான மஹாபதிவிரதையின் பேர்.  உங்களுக்கு  தெரிந்திருக்கலாம். இல்லையென்றால்  இப்போது  தெரிந்து கொள்ளவும்.  அஸுயை (பொறாமை)  இல்லாதவள் அநஸூயை. (அநுஸூயை என்றால்  வேறு  அர்த்தமாகிவிடும். ) நம்மைவிட ஒருத்தன் நல்ல நிலையில் இருந்தால் வயிற்றெரிச்சல் படக்கூடாது.  இருந்தால்  போராமைக்குப் பதிலாக  பெருமை பாடுவோமே.  ''அவன்  நம்ம  பையன்.  நன்னா  இருக்கான் '' இப்படி சில பேர்  சொல்லிக் கேட்டதில்லையா. பொறைமையின்மைதான் அநஸூயை.

முதலில் சொன்ன அன்பு எல்லாரிடமும் காட்ட , இருக்க  வேண்டியது.
 இரண்டாவதாகச் சொன்ன பொறுமை  நமக்கு  இடைஞ்சல்,தப்புப் பண்ணுகிறவனிடம் இருக்க வேண்டிய  குணம்.
பொறாமையின்மை நம்மைவிட மேல் ஸ்தானத்திலிருக்கிறவனிடம்,  உயர்ந்திருக்கிறவனிடம்,  (நம்மைக் காட்டிலும் யோக்யதையில் குறைந்தவனாக இருந்தாலும்கூட)  நமக்குமேல் ஸ்தானத்துக்குப் போய்விட்டான் என்றால் அஸூ¨யைப்படக் கூடாது. 'பூர்வ ஜன்மாவில் நம்மைவிடப் புண்ணியம் பண்ணியிருப்பான்.  ஏதோ  அதிருஷ்டம்  என்று  அவனைக்கருதவேண்டும். பகவான் அருள் அவனுக்கு  இருக்கிறதோ என்னவோ'  என்று மனஸைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

(4) சௌசம் என்பது 'சுசி' என்பதை வைத்து வைத்து ஏற்பட்டது. 'சுசி' என்றால் சுத்தம். ஸ்நானம், மடி வஸ்திரம், ஆஹார நிர்ணயம் முதலான ஆசாரங்கள் எல்லாம் 'சௌசம்' என்பதில் வரும்'(ரயிலில்  கழிவிடத்திற்கு  ''ஸௌசாலயா'' என்று டாய்லட்டுக்கு இந்தியில்  பேர் போடுவதை  பார்த்திருப்பீர்களே.    சுத்தமாக  வைத்துக்கொள்ள வேண்டிய  இடம் --  ஆனால் நாம்  அவ்வாறு  செய்வதில்லையே) . 'சுத்தம் சுகம் தரும். சுத்தம் சோறு போடும்' என்று நிறைய  படிக்கிறோம்,சொல்கிறோம், எழுதுகிறோம்  அதோடு  சரி. வெளியிலே நன்றாக சுத்தமாக இருக்கிறவனைப் பார்த்தாலே நம் மனஸுக்கும் சுத்தமாயிருக்கும்.  அவனிடம்  ஒரு  அன்பு, மரியாதை மதிப்பு எல்லாம்  ஏற்படுமே. .

 ஐந்து தர்மங்களை மநு சொல்கிறபோதும முதலில் அஹிம்ஸை, அப்புறம் ஸத்யம், அப்புறம் பிறர் பொருளில் ஆசையின்மை (அஸ்தேயம் - திருடாமலிருப்பது என்பது நேர் அர்த்தம்) என்ற மூன்றைச் சொல்லி, நாலாவதாக இந்த 'சௌசம்', கடைசியாக இந்திரிய நிக்ரஹம் (புலனடக்கம்) என்கிறார்.

(5) 'அநாயாஸம்' என்பது ஆத்ம குணங்களில் அடுத்தது. ஆயாஸத்துக்கு எதிர்ப்பதம் அநாயாஸம். 'லைட்'டாக  எடுத்துக்கொள்வது. '' இந்த  டெண்டுல்கர்  எப்படி அனாயாசமாக  நூறு  அடிச்சான்யா''  -- '' ஆயாஸம் ''இல்லாமல், அதாவது எதையுமே ஒரு சுமையாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படாமல், லைட்டாக லேசாக அதை  அணுகுவது  அநாயாஸம். எப்போதும் 'உர்'ரென்று இருந்துகொண்டு, வாழ்க்கையில் ''எல்லாமே  கஷ்டம்''  என்று புலம்பி, நொந்து கொள்ளாமல்,  கடுமையாக தீவிரத்தோடு  செய்யாமல், நிம்மதியோடு லேசாகச் செய்வது.  இப்படிச் செய்வதாலேயே ஆயாஸப் பட்டுக்கொண்டு செய்வதைவிடப் பலமடங்கு சுலபமாகவே (டென்ஷன்  இல்லாமலே)  வேலைசெய்து விடலாம். பதட்டமில்லாமல் பண்ணுவது அநாயாஸம். "பட பட" என்று செய்தால் நம்மையும் கசக்கிக் கொண்டு மற்றவர்களையும் நசுக்கிக்  கொள்வது தான் மிஞ்சும் .  காரியம்  நகராது. 

அநாயாஸம்  சாதாரண  விஷயமல்ல. அது ஒரு ரொம்ப மகத்தானது.  (குணசீலம்) . அலட்டிக் கொள்ளாமல் இருக்கிற குணம் அநாயாஸம். தானும் சிரமப்படாமல், மற்றவர்களையும் சிரமப்படுத்திக் கொண்டிராமல் இருப்பது அநாயாஸம்.  நாம்  இது மாதிரி  இருக்கும் ஒன்றிரண்டு  பேரை  லட்சியம் செய்வதில்லையே. 

அநேக கர்மாநுஷ்டானங்கள்  உடம்பால் சிரமப்பட்டு செய்யவேண்டியிருக்கிறது.  சிராத்தம்  என் றால் மத்யான்னம் இரண்டு மணி, மூன்று மணி வரை பட்டினி கிடக்க வேண்டும். ஒரு யாகம் என்றால் அதில்  நிறைய சரீர சிரமம்  இருக்கிறது.  அப்படியும்  நிறைய பேர்  சந்தோஷத்தோடு  அதில்  ஈடு படுவது  மதிக்கப்பட வேண்டிய  விஷயம்.  சிரமம  என்றால்  உடம்பினால் மட்டும் அல்ல. மனஸினால் சிரமப்படாமலிருப்பதைத்தான் முக்கியமாக  குறிப்பிடுகிறேன்.  எந்தக் காரியமானாலும் விக்கினங்கள்,  தடைகள், ஏதாவது வரத்தான் வரும்.  அதற்காக  மனஸை கலங்க விடாமல்  திட சித்தத்தோடு  ஈடு பட வேண்டும்.  எல்லாம் பகவான்  செயல்  என்று, மனஸிலே பாரமில்லாமல் இருக்கவேண்டும். ஸங்கீத வித்வான் அநாயஸாமாக உச்ச்சச்தாயிலே  ஆலாபனை  பண்ணினார் என்றால் என்ன அர்த்தம்?   கஷ்டத்தையே  அமுக்கி  தனக்கு  சாதகமாக்கி, ஸுலபமாக்கிக் கொண்டு விட்டார் என்றுதானே அர்த்தம்? சிரமமான வாழ்க்கையை அப்படிப் பண்ணிக்கொள்வதுதான் 'அநாயாஸம்'.

(6) 'மங்களம்' என்றால் திருப்தி ,சுகம். ஆனந்தமாக - அதிலேயே ஒரு கம்பீரத்தோடு தூய்மையோடு ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதுதான் மங்களம். எதற்கெடுத்தாலும் சள்ளென்று எரிந்து விழுந்து கொண்டோ, இன்றி , 'ஆஹா' என்று எப்போதும் ஸந்தோஷமாக இருக்கவேண்டும். இதுதான் இந்த  உலகிற்கே நாம் செய்கிற பெரிய ஒத்தாசை, பெரிய தொண்டு.   பணத்தை வாரிக் கொடுப்பதை விட, வேறு  ஸர்வீஸ்கள் பண்ணுவதை விட, நாம் போகிற இடமெல்லாம் நம் மங்களத்தாலேயே ஆனந்தத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பதுதான் மற்ற ஜீவர்களுக்குப் பெரிய தொண்டு. 'லைட்'டாக, லேசாக எதையும் ஸாதிப்பது அநாயாஸம். போகிற இடமெல்லாம் நாமே ஒரு 'லைட்' (தீபம்) மாதிரி ஒளியை, ஆனந்தத்தைக் கொடுப்பது 'மங்களம்'. நாம் ஒரு இடத்துக்குப் போனால் தான்  தான்  ரொம்ப  யோக்கியம் மாதிரி,  எல்லாம்  தெரிந்தவன்  மாதிரி  மற்றவர்களை  'குற்றம் கண்டு பிடிக்க வந்துவிட்டான்' என்று சொல்லாத படி,  அருமையான  ஆளு,  எப்பவும்  எல்லோரோடும்  ஜாலியா,  சிரிச்சுண்டே ,சந்தோஷமா இருக்கிற ஆசாமி, வந்தாலே  களை  கட்டுகிறது.  என்று  சொல்லும்படியா இருப்பது.   எங்கும்  நாம்  சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும். நாமும் மங்களமாக இருந்து கொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும்.

(7) 'அகார்ப்பண்யம்' -   லோபித்தனம், கருமித்தனம் இல்லாமல் தான தர்ம சிந்தையோடு இருப்பது அகார்ப்பண்யம். மனஸார வாரிக் கொடுக்கிற குணம் வேண்டும்.

அர்ஜுனன் ரொம்பவும் மனசொடிஞ்சு  தளர்ந்து போய்  தேர்த்தட்டிலே உட்கார்ந்து, 'யுத்தம் பண்ண மாட்டேன்' ஆளை விடு என்று அழுதபோது அவனுக்கு 'கார்ப்பண்ய தோஷம்' ஏற்பட்டதாக கீதையில் வருமே.  அந்த இடத்தில் 'தன்னையே ரொம்பவும் தாழ்த்திக் கொண்டு தீனமாகப் போய்விட்டவன்' என்று அர்த்தம். தன் விஷயத்திலேயே தான் லோபியாகி விட்டான் என்று அர்த்தம்.

"அகார்ப்பண்யம்" என்றால் இப்படி தீனனாக, நோஞ்சானாக, கையாலாகாதவனாக  இல்லாமல் தீரனாக, நல்ல உத்ஸாஹ புருஷனாக, மனஸ்வியாக இருப்பது என்றாகும்.

(8) 'அஸ்ப்ருஹா' --   அஷ்டகுணத்தில் கடைசி. 'ஸ்ப்ருஹா' என்றால் பற்றின்மை, ''ஆசையின்மை'' . அத்தனை  கெட்டதுக்கும்  ஆணி வேராக இருப்பது ஆசைதான். ஆனால் அதை அடியோடு வெட்டுவதுதான் முடியவில்லை.  ஸம்ஸ்காரங்களைப் பண்ணி பண்ணி, அவற்றோடு அஷ்ட குணங்களையும் சேர்த்துச் சேர்த்து அப்பியாஸம் பண்ணிக் கொண்டு போகும்போது கடைசியில் இந்த ஆசையின்மை, பற்றின்மை, 'அஸ்ப்ருஹா'என்பது பூர்த்தியாக அநுபவத்தில் வருகிறது.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"  - என்று வள்ளுவர் சொன்னார்.

'இப்படி ஈச்வரன் என்ற பற்றற்றானைப் பற்றிக் கொண்டு மற்றப் பற்றுகளை விட்டுவிட்டால் மட்டும் போதாது. அப்புறம் அந்த ஈச்வரனுடனும் பற்றைக் கத்தரித்து விடவேண்டும்' என்று இன்னும் ஒருபடி மேலே போய்விட்டார் திருமூலர்:

"ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்"

ஆசையைத்தான் தாகம் (வேட்கை) என்று புத்தர் சொன்னார். "ஜலம் வேணும் வேணும்" என்று தாகத்தில் பறக்கிற மாதிரி ஆசை வாய்ப்பட்டுப் பறப்பதை 'திருஷ்ணா' என்பார்கள். பிராகிருதத்தில் இதையே 'தன்ஹா' என்று புத்தர் சொன்னார். ஆசையைப் போக்கடித்துக் கொள்வதுதான் புத்தருடைய முக்கியமான உபதேசம். இது அஷ்ட குணங்களில் கடைசி. முதலில் சொன்ன தயை(love) தான் கிறிஸ்து மதத்துக்கு ஜீவநாடி.

இப்படி ஒவ்வொன்றை ஒவ்வொரு மதத்தில் ரொம்பவும் அழுத்தம் கொடுத்துச் சொன்னாலும் இந்த அஷ்ட குணங்களையுமேதான் கிறிஸ்து, புத்தர், நபி , நானக், ஜொராஸ்த்ரர், கன்ஃபூஷியஸ், இன்னும் என்னென்ன மதங்கள் இருக்குமோ அவை எல்லாவற்றின் ஸ்தாபகர்களும் சொல்லியிருக்கறார்கள். நேராக அவர்கள் இந்த எட்டைச் சொல்லாமலிருந்தாலுங்கூட மநுஷ்யனானவன் இந்த குணங்கள் இல்லாமலிருப்பதை எந்த மதஸ்தாபகரும் ஆதரித்திருக்க மாட்டார் என்பது நிச்சயம்.





2013/11/4 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>

04-11-2013

திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 Inline images 1

 

அன்புடன்

திருச்சி நா.பிரசன்னா

என்னுடைய மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க

English:

http://www.slideshare.net/nprasannamenglish                     Tamil:

http://www.slideshare.net/nprasannamtamil                       

Hindi:

http://www.slideshare.net/nprasannamhindi                       Malayalam:

http://www.slideshare.net/nprasannammalayalam   

 

My Facebook:  n.pra...@gmail.com, and

      iampr...@yahoo.co.in



2013/11/3 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
311013t.jpg
11113t.jpg
301013t.jpg
21113t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Nov 3, 2013, 7:11:56 PM11/3/13
to mint...@googlegroups.com

04-11-2013

திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 Inline images 1

 

அன்புடன்

திருச்சி நா.பிரசன்னா

என்னுடைய மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க

English:

http://www.slideshare.net/nprasannamenglish                     Tamil:

http://www.slideshare.net/nprasannamtamil                       

Hindi:

http://www.slideshare.net/nprasannamhindi                       Malayalam:

http://www.slideshare.net/nprasannammalayalam   

 

My Facebook:  n.pra...@gmail.com, and

      iampr...@yahoo.co.in



2013/11/3 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
11113t.jpg
301013t.jpg
21113t.jpg
311013t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Nov 4, 2013, 7:50:35 PM11/4/13
to mint...@googlegroups.com


05-11-2013

திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 Inline images 1

 

அன்புடன்

திருச்சி நா.பிரசன்னா

என்னுடைய மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க

English:

http://www.slideshare.net/nprasannamenglish                     Tamil:

http://www.slideshare.net/nprasannamtamil                       

Hindi:

http://www.slideshare.net/nprasannamhindi                       Malayalam:

http://www.slideshare.net/nprasannammalayalam   

 

My Facebook:  n.pra...@gmail.com, and

      iampr...@yahoo.co.in



2013/11/4 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
21113t.jpg
11113t.jpg
311013t.jpg
51113t.jpg
301013t.jpg

Prasannam Narayanaswamy

unread,
Nov 5, 2013, 7:48:53 PM11/5/13
to mint...@googlegroups.com



06-11-2013

திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்

 

Inline images 1

அன்புடன்

திருச்சி நா.பிரசன்னா

என்னுடைய மொழி படைப்புகளை இந்த இணைப்பில் காண்க

English:

http://www.slideshare.net/nprasannamenglish                     Tamil:

http://www.slideshare.net/nprasannamtamil                       

Hindi:

http://www.slideshare.net/nprasannamhindi                       Malayalam:

http://www.slideshare.net/nprasannammalayalam   

 

My Facebook:  n.pra...@gmail.com, and

      iampr...@yahoo.co.in




2013/11/5 Prasannam Narayanaswamy <n.pra...@gmail.com>
311013t.jpg
301013t.jpg
11113t.jpg
51113t.jpg
21113t.jpg
61113t.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages