அகத்தியர்

201 views
Skip to first unread message

நினா.கண்ணன்

unread,
Aug 25, 2008, 9:07:33 AM8/25/08
to tamil2friends, muththamiz, minT...@googlegroups.com, annamal...@googlegroups.com, anb...@googlegroups.com, panb...@googlegroups.com

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும்,

மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.

அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி "அகத்தியம்" என்னும் நூலை இயற்றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் "வாதாபே ஜீர்ணோ பவ" என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் 'காக உரு' கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.

இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள 'உழவர் கரை'யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி 'அகத்தீஸ்வரம்' என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.
 
மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

நிவேதனம்
பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக "ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!" என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

அகத்திய முனிவரின் பூசா பலன்கள்
1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2. கல்வித்தடை நீங்கும்.
3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4. முன்வினை பாவங்கள் அகலும்.
5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும்.
9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
 
 
 
 
என்றும் அன்புடன்
 
நினா.கண்ணன்.
 
தமிழர் வாழ்வும்,தமிழும் மேன்மை பெற்றிடல் வேண்டும்.




Hari Krishnan

unread,
Aug 25, 2008, 11:20:36 AM8/25/08
to minT...@googlegroups.com


2008/8/25 நினா.கண்ணன் kann...@gmail.com



வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு
 
மன்னிக்கவும்.  வாதாபி, இல்வலன்.
 
--
அன்புடன்,
ஹரிகி.

annamalai sugumaran

unread,
Aug 28, 2008, 1:42:11 AM8/28/08
to minT...@googlegroups.com
அகத்தியர் பற்றி நான் வடக்கு வாசல் என்ற  டெல்லியில்  இருந்து உலக தமிழர்களுக்கு வரும் மாத இதழில் எழுதிய கட்டுரை .மின் தமிழ் குக்ழுவினரின் மேலான பார்வைக்கு
 
 
அகத்தியர் வாழ்ந்த சித்தர்கள் பூமிதான் புதுச்சேரியா?
 
ஏ.சுகுமாரன்
 
சமீபத்தில் தான் பாண்டிச்சேரி மாநிலம், புதுச்சேரி மாநிலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இன்றும் அந்த மாநிலத்தின் தலை நகரத்தை பாண்டிச்சேரி என அழைப்பதா? புதுச்சேரி என அழைப்பதா? என்பது இன்னும் அரசால் தெளிவு படுதப்படவில்லை புதுச்சேரி என்பது புதியதாக ஏற்பட்ட குடியிருப்பு என ஒரு பொருள் கூறப்படுகிறது, ஆனால் இது ஆதியில் வேதபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும், சித்தர்களில் தலை சிறந்த முதல் சித்தர் அகத்தியர் இங்கு வாழ்ந்திருந்ததாகவும் அதனால் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் புதுச்சேரி என்றபெயர் எப்படி அந்த பழைய நிகழ்ச்சிகளுடன் ஒத்துப் போகும் என்ற சந்தேகம் வருகிறதல்லவா.
ஆனால் புதுச்சேரி மிக நீண்ட காலம் கடலில் மூழ்கி இருந்து பின்; சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் வெளி வந்ததால் அது புதுச்சேரி என்று அழைக்கப் பட்டிருக்கலாம். ஏனெனில் இந்த புதுச்சேரியை பண்டைய அயல்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் பெரி ப்ளுஸ் என்றநூலில் பொதுக்கே எனவும், தாலமி எழுதிய நூலில் பொதுகா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த புதுவைப் பகுதி அந்த காலத்தின் சமீபத்தில் தான் கடலில் இருந்து மீட்டு இருத்தல் வேண்டும்.

ஆனால் கடலில் மூழ்கி இருந்ததற்கு சாட்சியாக புதுச்சேரிப் பகுதி சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் வாழ்ந்து இருந்ததற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. புதுவையின் அருகில் உள்ள பொம்மையர் பாளையத்தில் கிடைத்த பழைமை வாய்ந்த மனித எலும்புக்கூட்டை அறிவியல் முறைப்படி ஆய்ந்ததில் அதன் காலம் ஒன்றறை லட்சம் ஆண்டுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே அதற்கு முன்பிருந்தே மனிதர்கள் புதுச்சேரி பகுதியில் வாழ்ந்துள்ளது தெரிகிறது. இதனால் உலகில் மனிதன் முதல் முதலில் வாழத்தொடங்கிய இடங்களில் ஒன்றாக புதுச்சேரியைக் கருதலாம்.

எனவே அகத்தியர் இங்கு வாழ்ந்ததை நாம் வெறும் கதையாக புறம் தள்ளத் தேவையில்லை.

மேலும் இந்தப் புதுச்சேரிப் பகுதியின் பழமையை நிலைநிறுத்த மிக அருமையான சான்றுகளும் கிடைத்துள்ளன. புதுச்சேரியின் அருகே உள்ள திருவக்கரை என்ற ஊர் பழமையிலும் பழைமை வாய்ந்ததாகும்.##Pg##

சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரங்களின் படிவப்பாறையை வடிவங்கள் (Fossilized Trees) அங்கு அதிகமாக கிடைத்துள்ளது. இதேப் போன்ற மரப்படிவங்கள் புதுவையின் அருகில் உள்ள காலாப்பட்டிலும் கிடைத்துள்ளன.

மேலும் திருவக்கரையில் பெருங்கற்கால மனிதனின் சவக்குழியில் கற்களை வட்டமாக அடுக்கி வைத்து இருந்ததையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமைப்பை திட்டை என்று கூறுவார்கள். மேலும் புதுவையின் அருகில் உள்ள சுத்துக்கேணியிலும் புழைக்குழிகள் பெருங் கற்காலத்தை சேர்ந்தவை (Megalitlioc Period) என்று கண்டறியப் பட்டுள்ளது.

எனவே மனிதனின் மிகப் பழமையான வாழிடமாக இந்தப் பகுதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வந்திருக்கிறது. ஓன்றறை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை மனிதன் இங்கு வாழ்ந்த சான்றுகள் கிடைத்துள்ளது. பின் லெமோரியா கண்டம், குமரிக்கண்டம் ஆகியவை கடல்கோள் ஏற்பட்டதால் அழிந்தபோது புதுச்சேரியின் பெரும் பகுதியும் கடலினுள் சென்றுள்ளது. அந்த சமயத்தில் இதன் பெயர் வேதபுரி ஆகவோ அகத்தீஸ்வரமாகவே இருந்திருக்கலாம்.

பின்பு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இந்தப்பகுதி கடலில் இருந்து மீண்டு அங்கே மக்கள் குடியேறத் துவங்கி உள்ளனர். அந்தச் சமயத்தில் இது புதுச்சேரி என அழைக்கப்பட்டுள்ளது. அயல் நாட்டவர்களும் இந்தப்பகுதியை புதுவை எனப் பொருள் படும் வகையில் "புதுகே' என அழைத்துள்ளனர்.

அதன் பிறகு ரோமானியப் பேரரசன் அகஸ்தஸ் காலத்தில் ரோமானியர்கள் பெரும் கும்பல் கும்பலாக புதுவையின் மிகச்சிறந்த துறைமுகமாக அப்போது விளங்கி வந்த அரிக்கமேட்டில் தங்கள் கிடங்குகளை அமைத்து வாணிபம் செய்துள்ளனர். இந்த பேரரசனது காலம் கி.மு.23ல் தொடங்குகிறது. எனவே இந்தத் துறைமுகம் கடலில் இருந்து மீண்டு, அதன் பெருமையை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் பெற்றிருக்கலாம்
இங்கு இவைகளின் சான்றாக அகஸ்டஸ் தலை பொறித்த காசுகளும். மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. இங்கிருந்து அவுரி என்ற சாயமும், துணிவகைகளும், மணிகள், வைரங்கள் முதலியன ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. இறக்குமதி பெருவாரியாக நடைபெற்ற பொருள் என்னவென்று தெரிந்தால் வியப்படைவீர்கள். ஆம் மிகப் பெருவாரியாக ரோமானிய மது இறக்குமதி செய்யப்பட்டு, வியாபாரம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த மது இறக்குமதி பிரஞ்சு ஆட்சி முடியும் வரை தொடர்ந்தது. இந்த மதுக் குப்பிகளைக் கொடுத்தே பல ஆட்சிகளை பிரஞ்சுக்காரர்கள் உரிமையை பெற்றனர்.

எனவே இத்தனை நீண்டகால மனித வாழ்விடத்தில் மனிதனின் இயற்கையான குணாதீசியங்கள் அதிர்வுகளால் அடர்த்தியாய் வியாபித்திருப்பதில் ஆச்சிரியம் இல்லை. இத்தனை நீண்ட நெடிய இந்த மனித குல வாழ்வில் அவர்கள் எத்தனை எத்தனை அனுபவ மனக்குமுறல்கள், ஆசைகள், அபிலாட்சைகள் இங்கு அடர்த்த?991;ாய் வியாபித்துள்ளது. எனவே இது ஒரு தீவிர கவர்ச்சியுடன் அங்கு வருபவர்களை இங்கேயே தங்கச் செய்யும் மாட்சியுடன் அமைந்துள்ளது.

இத்தகு பெருமை மிகு புதுவையில் அகத்தியரின் வாழ்விற்குப் பிறகு வாழையடி வாழையாய் சித்தர் பரம்பரை இப்புனித ஆன்மீக பூமியில் வாழ்ந்து வருகின்றது. நமது அறிவுக்கு எட்டியவரை அருட்பிரகாச வள்ளலார் இங்கு பலமுறைவந்தததாக தெரிகிறது, வங்காளத்தில் இருந்து அரவிந்தரை இந்த புனித பூமியின் காந்தசக்திதான் இங்கு வாழ இழுத்தது. அதைத் தொடர்ந்து பிரான்சு நாட்டில் இருந்து வந்த அன்னை இங்கு வாழ்ந்து மறைந்தும் இன்னும் அருள் பாவித்து வருகிறார். மேலும் கழுவெளிசித்தர், சிவஞான பாலசித்தர், பாலயசுவாமிகள், தொன்னை காது சுவாமிகள், அழகர் சுவாமிகள், சித்தானந்த சுவாமிகள், சக்திவேல் பரமானந்த குரு சுவாமிகள், ராம்பரதேசி சுவாமிகள், அக்காசுவாமி, கம்பளி ஞான தேசிகர், பகவந்த சுவாமி, கதிர்வேல் சுவாமிகள், சாந்தாநந்த சுவாமிகள், தயானந்த சுவாமிகள், சட்டி சுவாமிகள், மண்ணுருட்டி சுவாமிகள், கோவிந்த சுவாமிகள் போன்ற புனித ஆத்மாக்கள் வாழ்ந்து இன்னும் அருள் பாவிக்கும் புனித பூமிதான் புதுவை.

இன்னும் சொல்லப் போனால் நமது முண்டாசுக் கவிஞர் பாரதி தன்னையே ஒரு சித்தராகத் தானே கூறிக் கொண்டார்? அவரது பல ஆன்மீக படைப்புகள் இப்புனித பூமியில் தான் நடைபெற்றது. புதுவையின் பல முகங்களில் அதன் முக்கிய முகம் அதன் ஆன்மீகத்தாக்கம் தான். புதுவை ஒரு ஞான பூமி தான். தற்போது அரவிந்தர் மற்றும் அன்னையின் அருள் சக்தியின் இருப்பிடமாக உள்ள அரவிந்தர் ஆசிரமம் இருக்கும் இடத்தில் தான் அகஸ்தியர் தனது வேதபுரியை அமைத்திருந்ததாக நம்பப்படுகிறது. பொதுவாகவே சித்தர்களும், ஞானிகளும் அடங்கிய, புழங்கிய இடங்களை நாடி குவியல் குவியலாகப் பொருளும், கும்பல் கும்பலாக மக்கள் கூட்டமும் கூடுவது இயற்கை தான்.
 
 
 
 

 
 



--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY  INDIA
  MOBILE 09345419948

venkatram dhivakar

unread,
Aug 28, 2008, 2:51:47 AM8/28/08
to minT...@googlegroups.com
>>>>>>>>>மேலும் இந்தப் புதுச்சேரிப் பகுதியின் பழமையை நிலைநிறுத்த மிக அருமையான சான்றுகளும் கிடைத்துள்ளன. புதுச்சேரியின் அருகே உள்ள திருவக்கரை என்ற ஊர் பழமையிலும் பழைமை வாய்ந்ததாகும்.
 
You are right Thiru Sukumaran. We were here in last Monday (2 days back) to have dharshan of Kaali in the Mid-day. Oldest Temple in the region. Though some Temple records says that Athithya Chola (9th Century) built the temple towers of Kaali and Chandra Mouleeswara-Vadivaambikai, the original temple must have been still older.
 
This place has lot of sources. A proper team of Research scholars should go there and spend time to get more records. There are some inscriptions that Chola King and Sivanadiyaar Kandarathithaa (10th century) visited the temple and his wife Sembian Mahadevi helped for some more constructions. The temple itself is unique. The Garbagruha where Linga roopa of Shiva-Vishnu-Brahma were installed, has many sources of information, if properly researched.
 
We have good scholars and experts in doing research to find out the oldest traditions of us. Government or Non-Government organisations should form a committee,  (with impartial outlook), allot liberal financial commitments  to get more details.
 
Dhivakar

 
Reply all
Reply to author
Forward
0 new messages