ஆபிரகாம் பண்டிதரும் தொல்காப்பியமும் ...

58 views
Skip to first unread message

rajam

unread,
Aug 1, 2018, 11:27:13 PM8/1/18
to தமிழ் மன்றம், mintamil, vallamai, 'Kandy Palanisamy' via தமிழ் இலக்கியம்
என்ன … அப்துல் காதர் அமாவாசை கொண்டாடுகிறாரா என்று வியக்கிறீர்களா?! ;-)

வணக்கம் நண்பர்களே. தமிழிசைப்பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமே. 

தமிழிசையைப் பற்றிய மிக அருமையான நூல் ஒன்றைப் படைத்த ஆபிரகாம் பண்டிதரின் பிறந்தநாள் ஆகஸ்ட்-2 என்று தெரிந்தது. 

ஆபிரகாம் பண்டிதரைப் பற்றிக் கல்லூரிக்காலத்தில்தான் தெரிந்துகொண்டேன். ஆனால் தீவிரமான ஆராய்ச்சியிலெல்லாம் ஈடுபடவில்லை. அந்தக்காலத்துத் துடிப்பு எல்லாம் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலும் கல்லூரியளவிலும் முதன்மையாகத் தேறவேண்டும் என்பதுவே!!! ;-)

++++++++++

பின்னணி
—————
கடந்த இரண்டு ஆண்டுகளாக இளங்கோ இராமவர்மாவின் இசையைத் தினமும் கேட்டுக்கொண்டிருப்பதால் அவருக்கு ஒரு கேள்வியை அனுப்பினேன் — ‘மீனாட்சி மேமுதம் தேஹி’ என்ற பாட்டில் அவருடைய குரு பாலமுரளியவர்கள் ஏன் ஓரிடத்தில் இன்னவாறு பாடுகிறார்? அதற்கு வர்மா அவர்கள் அனுப்பிய பதில்: பாடலை இயற்றிய முத்துசாமி தீட்சிதர் வாழ்ந்தது 200-ஆண்டுகளுக்குமுன்; பாலமுரளியவர்கள் பாடிய காலத்துக்குள் இரண்டு ‘கமகங்கள்’ வழக்கிழந்து போயின. 

புரிந்தும் புரியாமலும் இந்தக் குறுகுறுப்பில் இருந்தேன். 

அண்மையில் திடீரென்று ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கர்ணாமிர்தசாகரம் என்ற நூலைப் படிக்க ஆவல் உண்டானது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் கிடைக்கும் இந்த நூலை மேயத்தொடங்கினேன். 

ஆதி இசைகள்: “நரப்படைவாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத்தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்றாகிய ஆதி இசைகள்” என்ற பகுதியைப் படித்தபோது அசந்துபோனேன்.  ஆதி இசைகள் 11,991?

++++++++++

என்னைப் பொருத்த அளவில் ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிருதசாகரம் ஓர் அருமையான நூல்! எப்பவும்போல வேறு சிலருக்கு வேறுபல மாற்றுக்கோணக்கருத்துகள் இருக்கலாம்!

ஆபிரகாம் பண்டிதரின் நூலின் உள்ளடக்கம் அனைத்தும் எனக்குப் புரியவில்லை.  :-(

புரிபடும்போல இருப்பதாக நான் நினைக்கும் சில குறிப்புகளை மட்டும் இங்கே சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

++++++++++

பழந்தமிழின் ஏழிசை யாவையெனப் பலரும் அறிவர்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். 

எனக்கு வியப்புத் தந்த செய்தி: இந்த ஏழிசைகள் பிறக்கும் இடங்களாக ஆபிரகாம் பண்டிதர் சுட்டியிருக்கும் இடங்களுக்கும் தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் இடங்களாகத் தொல்காப்பியர் சுட்டியிருக்கும் இடங்களுக்கும் உள்ள ஒற்றுமை!  

ஆபிரகாம் பண்டிதர் குறிப்பிட்டபடி … 

பழந்தமிழ் இசைஇக்காலப் பெயர்பிறக்கும் இடம் 
—————————————————————————————————

குரல்முதல் சுரம் (ச) சட்சமம்மிடறு 

துத்தம்இரண்டாம் சுரம் (ரி) ரிஷபம்நா

கைக்கிளைமூன்றாம் சுரம் (க) காந்தாரம்அண்ணம்

உழைநான்காம் சுரம் (ம) மத்திமம்சிரம் 

இளிஐந்தாம் சுரம் (ப) பஞ்சமம்நெற்றி

விளரிஆறாம் சுரம் (த) தைவதம்நெஞ்சு 

தாரம்ஏழாம் சுரம் (நி) நிஷாதம்மூக்கு


அதோடு பெருந்தானம் எட்டு என்கிறார்: நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலை



தொல்காப்பியர்வழி வரும் வழக்கு

உந்தியிலிருந்து பிறக்கும் காற்று, தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் ஆகிய எட்டு இடங்களில் நிலைத்து நின்று பேசுபவரின் முயற்சியால் பேச்சொலிகளாய் வெளிவருகின்றன. 

தொல்காப்பியர் குறிப்பிடும் பேச்சொலிகள் தமிழின் உயிரொலிகள் 12-உம்  (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) மெய்யொலிகள் 18-உம் (க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன). தொல்காப்பியத்தின் பிறப்பியலில் விளக்கம் காணலாம். 

++++++++++

ஓர் ஒப்பீட்டு முயற்சி
———————————-

தலை உழை (ம)

மிடறு குரல் (ச)

நெஞ்சு விளரி (த)

பல் 

இதழ் 

நா துத்தம் (ரி)

மூக்கு தாரம் (நி)

அண்ணம் கைக்கிளை (க) 

விடுபட்டுப்போனதை என் இளைய தலைமுறையினர் தொடர்வார்களாக. நன்றி.

++++++++++

அன்புடன்,
ராஜம் 

Suba

unread,
Aug 2, 2018, 3:18:16 AM8/2/18
to மின்தமிழ், rajam, Subashini Kanagasundaram
வணக்கம் ராஜம் அம்மா. நலமா?

ஆப்ரஹாம் பண்டிதர் பற்றி கடந்த சில ஆண்டுகளில் ஒரு சிலர் குறிப்பிட்டு கேள்விப்பட்டிருக்கின்றேன்.  அவரது இசைஅ ஆய்வுகள் ஏன் பெரிதாகப் பேசப்படாமல் போயின என்பது கேள்வி. அதுமட்டுமன்றி இசை பற்றிய பேச்சுக்களில் யாரும் அவரது பெயரையும் குறிப்பிட்டு பேசுவதுமில்லை.

பழந்தமிழ் இசை - விளக்கம் நன்றாகத் தொடங்கியுள்ளது.  ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிருதசாகரம்  நூலை உங்கள் எழுத்தில் தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள். மிக்க நன்றி

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Dr.Chandra Bose

unread,
Aug 2, 2018, 5:38:32 AM8/2/18
to mint...@googlegroups.com
ஆபிரஹாம் பண்டிதரின் கர்ணாமிருதசாகரம் என்னும் நூல் தமிழ்மண் பதிப்பகத்தால் மீளப் பதிப்பாக வெளியிடப்பட்டது. ஆபிரஹாம் பண்டிதரின் குடும்பத்தைச் சார்ந்த திருமதி முனைவர் அமுதா பாண்டியன், ஆங்கிலப் பேராசிரியர் கர்ணாமிருத சாகரம் நூல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

பெ.சந்திர போஸ்
சென்னை

rajam

unread,
Aug 3, 2018, 10:17:26 PM8/3/18
to Suba, மின்தமிழ்
வணக்கம் சுபா. தமிழ்நாட்டுக்குப் போய்வந்தீர்களா? கேரளாவில் நல்ல மழை என்று கேள்விப்பட்டேன். 

ஆமாம் சுபா, ஆபிரகாம் பண்டிதரின் நூலைப் பற்றிப் பலரும் பேசாதிருப்பது வியப்பைத் தருகிறது. எனக்குத் தெரிந்த கிறித்துவக் குடும்பங்களிலேயே இது பற்றித் தெரிந்திருக்கவில்லை. அங்கேயாவது … கிறித்துவக்கோயில்களில் புழங்கும் பியானோ இசை தமிழிசையை மறைத்திருக்கும் என்று ஊகிக்கலாம். என் நண்பர்களின் வீடுகளில் பியானோ இசைதான். சில ஆண்டுகளுக்குமுன் நான் தூண்டித்துருவிக் கேட்டபோது ஒரு தோழி சொன்னார்: ஓ நீ சங்கீர்த்தனம் பற்றிக் கேட்கிறாயா, அதைப் பற்றி விசாரிக்கிறேன். ;-) அண்மையில் ஒரு தோழி இனிமேல்தான் ஆபிரகாம்  பண்டிதரைப் பற்றிப் படிக்கவேண்டும் என்றார். 

இப்படிக் கிறித்துவர்களே ஆபிரகாம் பண்டிதரை அம்போ என்று விட்டுவிட்டிருக்கையில் … பிறரிடம் என்னத்தை எதிர்பார்ப்பது? இவர்களெல்லாம் நல்ல செல்வ வளம் மிக்கவர்கள். நினைத்தால் என்னவும் செய்யலாம்! 

தமிழகப்பள்ளிகள், கல்லூரிகளில் பாடத்திட்டம் எவ்வழியோ அவ்வழியே ஆசிரியர்களின் கற்பித்தலும் மாணவர்களின் பயிற்சியும். மாணவர் ஆசிரியர் எவரையும் குறைசொல்லக்கூடாது. நான் குறைசொல்ல மாட்டேன்!

தமிழ் முதுகலை வகுப்பில் பயின்றவர்களுக்காவது ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புப் போன்ற அரிய கையேடுகள் அறிமுகமாகும். மற்றவருக்கு? அயோத்திதாசர் நூலைப்போலவே, ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பைப்போலவே, ஆபிரகாம் பண்டிதரின் நூலும் கண்மறைவாகப் போய்விட்டது … தமிழருக்கு இழப்பு.  

மேடைப்பேச்சுக்காக, பட்டிமன்றத்துக்காக, … பொதுவாக mass appeal-உக்காக … ஏதோ ஒரு வெறியின்  வெளிப்பாட்டுக்காக … பாரதி, பாரதிதாசனையே ‘தாசித்து'க்கொண்டிருந்தால் தமிழின் நிலைமை இப்படித்தான் போகும். 

நல்லவேளை எனக்கு வயதாகிவிட்டது. 1960 முதல் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தக் கண்றாவிகளையெல்லாம் மெல்ல மெல்ல மறந்துகொண்டிருக்கிறேன்! ;-) 

++++++++++

ஆபிரகாம் பண்டிதரின் நூலின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்கிறேன். எழுத்துநடை (prose style), கருத்துவெளியீட்டுமுறை (presentation of ideas) … இன்னபிறவற்றில் சிக்கல். இதே தடங்கலைத்தான் ஈ.வே.ரா-வின் 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற நூலை மொழிபெயர்க்க முயன்றபோதும் எதிர்கொண்டு கைவிட்டேன். 

யாராவது விரும்பினால், இந்த அருமையான நூலைப்பற்றிய உங்கள் கருத்துகளை இந்தக் குழுமத்தில் பகிர்ந்துகொள்ளவும்.

அன்புடன்,
ராஜம்

Jean-Luc Chevillard

unread,
Aug 4, 2018, 8:16:43 AM8/4/18
to mint...@googlegroups.com, rajam, Suba
அன்பின் VSR,

ஆபிரகாம் பண்டிதர் வட்டப்பாலையையும் திரிகோணப்பாலையையும் சதுரப்பாலையையும் பற்றி எழுதியதை என்னாலே ஏற்றுக்கொள்ள முடியாது

இந்தப் பக்கத்தைப் படித்துப் பாருங்கள்

http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=166&pno=1001

அன்புடன்

-- ழான் ‍[Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages