"கன்னித்தமிழ்" பற்றி ...

414 views
Skip to first unread message

rajam

unread,
Dec 3, 2011, 12:02:17 PM12/3/11
to மின்தமிழ், Kannan Natarajan
முகப்புரை
--------------
நேற்று (கலிபோர்னியாவில் நவம்பர் 2, 2011) திரு கண்ணன் நடராசன் அவர்கள் மின்தமிழில் இட்ட ஒரு பதிவு தினமணியில் வெளிவந்த சாமி சிதம்பரனார் அவர்களின் கட்டுரை. அந்தக் கட்டுரையில் தமிழின் புகழ் பாடப்பட்டிருந்தது. அதில் பயன்படுத்தப்பட்ட "கன்னித்தமிழ்" என்ற சொல்லாட்சியின் பொருளை வினவினேன். அது தொடர்பாக இந்தப் புதிய இழையைத் தொடங்குகிறேன்.

முன் குறிப்பு
---------------
தமிழ் மொழிமேல் எனக்குத் தனிப்பட்ட முறையில் இருக்கும் அன்பை/காதலை/காமத்தை/மதிப்பை/பெருமிதத்தைப் பற்றி யாரும் ஐயுறத் தேவையில்லை; ஐயுற்றால் வம்பு! :-)
கேள்விகள்
---------------
1. "கன்னித்தமிழ்" என்ற சொல்லாட்சியை யார் எப்போது எங்கே முதன் முதலில் பயன்படுத்தினார்கள், நினைவில் இருக்கிறதா? (இதற்கு விடை முன்பு ஒருமுறை மின்தமிழிலோ அல்லது CTamil-இலோ சொல்லியிருந்தேன்.)
2. பாரதியாரே "எங்கள் தாய்" என்ற பாடலில் "கன்னி" "தாய்" என்ற இரண்டு பொருளையும் சேர்த்துப் பயன்படுத்தியிருப்பார். அதையும் பார்க்கவும்.  
3. "கன்னி"க்கும் "தாய்க்கும்" என்ன தொடர்பு?  

4. பிறமொழிச் சொற்கள் கலவாத தமிழ்தான் "கன்னித்தமிழ்" என்றால் .... மணிமேகலை போன்ற காப்பியங்களைக் கிழித்து எறிந்துவிடவேண்டும்; அவை தமிழ்க் காப்பியங்கள் என்று சொந்தம் கொண்டாட முடியாது. அதைச் செய்யத் தயாராக இருக்கிறோமா?
5. எவை "பிறமொழிச் சொற்கள்" என்று உறுதியாக நிறுவிக்காட்ட எத்தனைப்பேருக்கு மொழியறிவின் ஆழம் இருக்கிறது? ளெனக்குத் தெரியும் என்று களத்தில் இறங்குகிறவர்கள் எந்த அளவுகோலைப் பயன்படுத்துகிறார்கள்? அதைப் பற்றித் தெளிவாகச் சொல்லுகிறார்களா?

எல்லாவற்றிற்கும் மேலாக ... 
6. "கன்னித்தமிழ்" என்று சொல்வதினால் என்ன பயன் பெறுகிறோம்? 
பின் குறிப்பு
---------------
பிற நூல்களிலிருந்து ஒத்தி ஒட்டி ஆடும் விளையாட்டு வேண்டாம். இங்கே படித்துப் பயன்பெறுகிறவர்களின் நேரத்தைக் கருதி, உங்கள் கருத்துகளைச் சுருக்கமாகவும், நேரிடையாகவும், நக்கல்/கிண்டல் இல்லாமலும் பகிர்ந்துகொண்டால் .... இளைய தலைமுறைக்கு நல்லது.
நன்றியுடன்,
ராஜம்

Nagarajan Vadivel

unread,
Dec 3, 2011, 12:39:51 PM12/3/11
to mint...@googlegroups.com
கன்னித்தமிழ் என்ற சொல் நிச்சயமாக மணிமேகலை படைக்கப்பட்ட காலத்துக்குப் பொருந்தாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

http://books.google.com/books?id=ERq-OCn2cloC&printsec=frontcover&dq=history+of+tamils+from+earliest+times+to+600+ad&hl=en&ei=7FnaTrn4LMmqrAebwqzjDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC8Q6AEwAA#v=onepage&q&f=false

tamil1.jpg

வேற்று மொழியின் தாக்கமும் கலப்பும் இல்லாமல் (அழிந்ததுபோக) கிடைத்திருக்கும் தமிழ் வளங்களை கன்னித் தமிழ் அல்லது தனித் தமிழ் என்று குறிப்பிடுவதாகக் கருதுகிறேன்
தமிழ் வேற்றுமொழியுடன் புணர்ந்து மொழிமாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் வழங்கி வந்த மொழி அதன் கன்னிப் பருவ காலத்தில் வழக்கில் இருந்த மொழி இலக்கிய வளங்களைக் குறிப்பதாகக் கன்னித் தமிழ் என்ற சொல்லைக் கருதலாம்
நாகராசன்

2011/12/3 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

tamil1.jpg

OAGAI NATARAJAN

unread,
Dec 3, 2011, 1:23:37 PM12/3/11
to mint...@googlegroups.com
//4. பிறமொழிச் சொற்கள் கலவாத தமிழ்தான் "கன்னித்தமிழ்" என்றால் .... மணிமேகலை போன்ற காப்பியங்களைக் கிழித்து எறிந்துவிடவேண்டும்; அவை தமிழ்க் காப்பியங்கள் என்று சொந்தம் கொண்டாட முடியாது. அதைச் செய்யத் தயாராக இருக்கிறோமா?//
 
மணிமேகலை ஒரு கன்னித்தமிழ் காப்பியம் இல்லை என்று சொல்லிவிட வேண்டியதுதானே, அதற்காக ஏன் கிழித்துவிடவேண்டும் என்றெல்லாம் சொல்கிறீர்கள்? ஏன் இந்த வன்முறை சொல்லாடல்?
 
//6. "கன்னித்தமிழ்" என்று சொல்வதினால் என்ன பயன் பெறுகிறோம்? //
 
தமிழ் மொழியின் மிகப் பெரும்பான்மையான வினைச்சொற்களும் இலக்கணமும் மற்ற இந்திய மொழிகளைப்ப்போல் வடமொழி தாக்கமில்லாமல் இருக்கின்றன. இந்தத் தனித்தன்மையைக் கருதினால் கன்னித் தமிழ் என்ற விவரிப்பு பொருத்தமாகத்தான் இருக்கிறது.
 
 
 
 

விஜயராகவன்

unread,
Dec 3, 2011, 1:54:07 PM12/3/11
to மின்தமிழ்
On Dec 3, 7:23 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
>
> தமிழ் மொழியின் மிகப் பெரும்பான்மையான வினைச்சொற்களும் இலக்கணமும் மற்ற இந்திய
> மொழிகளைப்ப்போல் வடமொழி தாக்கமில்லாமல் இருக்கின்றன.


இது எவ்வளவு தூரம் உண்மை ? உதாரணமாக பெங்காலியை எடுத்துக் கொள்ளுங்கள்.
பெங்காளியில் இது உண்மையா?


நீங்கள் சொல்வது போல் இருந்தால், ஏன் தனித்தமிழர்கள் இவ்வளவு மாரடித்துக்
கொள்கின்ரனர் ? ஏன `கலப்பு` என்று - வடமொழி கலப்பு, ஆங்கில கலப்பு, உருது
கலப்பு என பல எதிர்ப்புகள் வருகின்றன.?


இந்தத் தனித்தன்மையைக்
> கருதினால் கன்னித் தமிழ் என்ற விவரிப்பு பொருத்தமாகத்தான் இருக்கிறது.

கன்னித்தமிழ் ஒரு கற்பிதம் - சிலரின் கற்பிதம். அது தமிழ் அல்ல.

வகொவி

DEV RAJ

unread,
Dec 3, 2011, 2:08:26 PM12/3/11
to மின்தமிழ்
கன்னித்தமிழ் என்றால் தனித்தமிழ் எனும் புரிதலில்
சில கருத்துகள் :

இயல், இசை, நாடகம் என்பவை 'முத்தமிழ்' என
வரையறை செய்யும்போதே நாடகம் எனும் வடசொல்
கலந்து விடுகிறது.

"இயலிசை நாடகம் எங்கும் விளங்க
பல நூலாய்ந்த பண்டிதர் சிலரை
கவிபல விளங்கக் காசினியோர்க்கு...."

இக்கல்வெட்டுச் செய்தியின் வரிதோறும்
வடமொழிக்கலப்பு.

தமிழில் நாடகநூல் இல்லாத குறையைப்போக்க
உருப்பெற்ற 'மனோன்மணீயம்' தமிழ்ப் பெயரா ?
கன்னித்தமிழில் ஒரு பெயர் சூட்டியிருக்கலாம்.

மொழிப்பற்று என நினைத்துக்கொண்டு மொழி
அரசியலில் பலரும் மாட்டிக்கொண்டு
விட்டனர்; அதிலிருந்து விடுபட்டாலன்றித்
தெளிவு பெறுதல் கடினம்

தேவ்


OAGAI NATARAJAN

unread,
Dec 3, 2011, 2:09:06 PM12/3/11
to mint...@googlegroups.com
On Sun, Dec 4, 2011 at 12:24 AM, விஜயராகவன் <vij...@gmail.com> wrote:
On Dec 3, 7:23 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
>
> தமிழ் மொழியின் மிகப் பெரும்பான்மையான வினைச்சொற்களும் இலக்கணமும் மற்ற இந்திய
> மொழிகளைப்ப்போல் வடமொழி தாக்கமில்லாமல் இருக்கின்றன.


இது எவ்வளவு தூரம் உண்மை ? உதாரணமாக பெங்காலியை எடுத்துக் கொள்ளுங்கள்.
பெங்காளியில் இது உண்மையா?
 
பெங்காலியைய் அவர்கள் கன்னி பெங்காலி என்று அழைத்துக் கொள்வதில் நமக்கு என்ன தயக்கம்?
 
 


நீங்கள் சொல்வது போல் இருந்தால், ஏன் தனித்தமிழர்கள் இவ்வளவு மாரடித்துக்
கொள்கின்ரனர் ? ஏன `கலப்பு` என்று - வடமொழி கலப்பு, ஆங்கில கலப்பு, உருது
கலப்பு என  பல எதிர்ப்புகள் வருகின்றன.?
 
 
மாரடித்துக் கொள்கிறார்களா?
உங்கள் கண்களுக்கு அப்படித் தெரிகிறதா?
எங்கோ தவறு நடக்கிறது.
 
 
 


இந்தத் தனித்தன்மையைக்
> கருதினால் கன்னித் தமிழ் என்ற விவரிப்பு பொருத்தமாகத்தான் இருக்கிறது.



கன்னித்தமிழ் ஒரு கற்பிதம் - சிலரின் கற்பிதம். அது தமிழ் அல்ல.
 
 
கன்னித்தமிழ் என்பது தமிழின் தன்மையினால் வந்த ஒரு விவரிப்பு.
 



வகொவி

rajam

unread,
Dec 3, 2011, 2:22:37 PM12/3/11
to mint...@googlegroups.com, OAGAI NATARAJAN
ஓகை நடராசன் ஐயா, வணக்கம்! முதலில் என் அடிப்படைக் கேள்விக்கு விடை தந்தால் மகிழ்வேன்:
தங்கள் கருத்துப்படி ... "கன்னித்தமிழ்" என்றால் என்ன? விளக்குவீர்களா? அதன் பின்னரே பிற கருத்துரையாடல்களுக்குப் பொருள் கிடைக்கும்.
Now, I'm taking the liberty of saying something that may not be suitable for some folks in this audience, in which case kindly ignore my current posting. "Virginity" is defined by the presence of a physical organ in a human female body, and that is called "hymen." As long as that "hymen" is intact in a female body, she is considered a "virgin." Once that hymen is poked by an external source, such as for example during a sexual intercourse, she is considered to have lost her virginity. Did Tamil go through such intercourse?
இதற்கு விடை சொல்லுமுன் ... "கன்னித்தமிழ்" என்பதற்குத் தங்கள் சொந்த விளக்கமும் தந்து உதவினால் மகிழ்வேன். 

நன்றியுடன்,
ராஜம்

விஜயராகவன்

unread,
Dec 3, 2011, 2:22:41 PM12/3/11
to மின்தமிழ்
On Dec 3, 8:09 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:

> On Sun, Dec 4, 2011 at 12:24 AM, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> > On Dec 3, 7:23 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
>
> > > தமிழ் மொழியின் மிகப் பெரும்பான்மையான வினைச்சொற்களும் இலக்கணமும் மற்ற
> > இந்திய
> > > மொழிகளைப்ப்போல் வடமொழி தாக்கமில்லாமல் இருக்கின்றன.
>
> > இது எவ்வளவு தூரம் உண்மை ? உதாரணமாக பெங்காலியை எடுத்துக் கொள்ளுங்கள்.
> > பெங்காளியில் இது உண்மையா?
>
> பெங்காலியைய் அவர்கள் கன்னி பெங்காலி என்று அழைத்துக் கொள்வதில் நமக்கு என்ன
> தயக்கம்?


கேள்வி அதல்ல. கேள்வி பெங்காலியர் அவர்தம் தாய்மொழியை எப்படி அழைக்கலாம்
என்பதல்ல.


தமிழில் பிறமொழி தாக்கமில்லை என்ற உங்கள் அசெர்ஷன் பெங்காலிக்கு ஏன்
பொருந்தாது?

> > நீங்கள் சொல்வது போல் இருந்தால், ஏன் தனித்தமிழர்கள் இவ்வளவு மாரடித்துக்
> > கொள்கின்ரனர் ? ஏன `கலப்பு` என்று - வடமொழி கலப்பு, ஆங்கில கலப்பு, உருது
> > கலப்பு என  பல எதிர்ப்புகள் வருகின்றன.?
>
> மாரடித்துக் கொள்கிறார்களா?
> உங்கள் கண்களுக்கு அப்படித் தெரிகிறதா?
> எங்கோ தவறு நடக்கிறது.


எனக்கு என்ன தெரிந்ததோ , நீங்கள் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
நெருப்பில்லாமல் புகையாது, அரிப்ப்பில்லாமல் சொறியாது என்பது போல்,
தமிழில் பிறமொழி தாக்கம் இல்லை என்றால், ஏன் தனித்தமிழர்கள் கண்ணீர்
விடுகின்றனர் ? நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் Can Tamil do it?
என்ற இழையே வந்திருக்காது

> > இந்தத் தனித்தன்மையைக்
> > > கருதினால் கன்னித் தமிழ் என்ற விவரிப்பு பொருத்தமாகத்தான் இருக்கிறது.
>
> > கன்னித்தமிழ் ஒரு கற்பிதம் - சிலரின் கற்பிதம். அது தமிழ் அல்ல.
>
> கன்னித்தமிழ் என்பது தமிழின் தன்மையினால் வந்த ஒரு விவரிப்பு.

அந்த ”தன்மை” கற்பனை.

வகொவி

விஜயராகவன்

unread,
Dec 3, 2011, 2:28:46 PM12/3/11
to மின்தமிழ்
On Dec 3, 8:22 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> her virginity. Did Tamil go through such intercourse?

Tamil did not go through such an intercourse. Tamil started (literary)
career AFTER such intercourse.

Pre-intercourse Tamil is only a logical contruct, it does not and did
not exist in history.


Vijayaraghavan

rajam

unread,
Dec 3, 2011, 2:33:48 PM12/3/11
to mint...@googlegroups.com

:-) :-) :-)


> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-

> unsub...@googlegroups.com

OAGAI NATARAJAN

unread,
Dec 4, 2011, 3:59:31 AM12/4/11
to rajam, mint...@googlegroups.com

ராஜம் அவர்களே,
 
கன்னித்தமிழ் என்பதை உவமையாகுபெயர் என்பதாக நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.
 
 தனக்கென ஒரு தனி நெடுங்கணக்கைக் கொண்டு தமிழ் மொழியின் மிகப் பெரும்பான்மையான வினைச்சொற்களும் இலக்கணமும் மற்ற இந்திய மொழிகளைப்ப்போல் வடமொழி தாக்கமில்லாமல் இருக்கின்றன. தமிழ் மொழி உச்சரிப்பு மிகவும் தனித்தன்மையானது. இந்தத் தனித்தன்மையைக் கருதினால் கன்னித் தமிழ் என்ற விவரிப்பு  சமைந்த பொழுதில் இருந்த வண்ணமே இருந்துகொண்டிருக்கும் கன்னியின் தன்மை போல இன்றும் இருந்துகொண்டிருக்கும் தன்மைக்கு ஒப்பாக இருப்பதாலும் ஒப்பீட்டளவில் மற்ற இந்திய மொழிகளைப் போல் அல்லாமல் குறிப்பாக மற்ற தென்னிந்திய மொழிகளைப் போலல்லாமல் வடமொழியின் தாக்கத்தை மிகக் குறைந்த அளவில் கொண்டிருப்பதாலும் இந்த உவமை பொருத்தமாக இருக்கிரது என்பது என் கருத்து.
 
இதில் உங்கள் மறுதலிப்பாக நான் புரிந்துகொள்வது என்னவென்றால் ஒற்றை அயல்மொழிச்சொல் கூட இல்லாமல் இருந்தால் மட்டுமே கன்னித்தமிழ் என்று அழைக்கமுடியும் என்பது உங்கள் கருத்தாக இருக்கிறது என்பதுதான். நீங்கள் ஏன் இவ்வளவு கறாராக இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. மேலும் ஒரு தன்மை உவமை  நூற்றுக்குநூறு பொருந்த வேண்டிய அவசியமும் இல்லை.
 
ஓகை.

விஜயராகவன்

unread,
Dec 4, 2011, 7:17:31 AM12/4/11
to மின்தமிழ்
ஓகையாரே

உங்கள் விளக்கத்தை பார்த்தால், கன்னித்தமிழ் எனும்போது, நீங்கள் தமிழைப்
பற்றி மட்டும் பேசவில்லை; அதே மூச்சில் சமஸ்கிருதம், இந்திய மொழிகள்
(25 ? 2000?) பற்றியும் பேசுகிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் இந்திய
மொழிகளைப்பற்றிய ஒரு மொழியியல் கணக்கீடு மனதில் வைத்துப் பேசுகிறீர்கள்.

அப்படியாவது ஒரு “தன்மை”யை கண்டுபிடிக்க வேண்டுமா?


கன்னித்தமிழ் என நீங்கள் சொல்வது தமிழைப் பற்றிய நேரடி அனுபவம்,
subjective experience ஐ சொல்லவில்லை . ஒரு ஒப்பீடு மொழியியல் கணக்கைதான்
சொல்கிறீகள். அந்த மொழியியல் சரியா, தப்பா என்பது இன்னொறு விஷயம்.


ஒருவர் மற்றொருரிடம் என்னை நல்லவன் என நம்புங்கள் என்றார். இரண்டாம் ஆள்
நீங்கள் 5 கொலை செய்து விட்டீர்களே , எப்படி நீங்கள் நல்லவராக முடியும்
என்றார். முதல்வர் என் நண்பர்கள் 20 கொலைகளை செய்தவர்கள், அவர்களுடன்
ஒப்பிடும்போது நான் நல்லவந்தானே என்றாராம். அப்படி இருக்கிறது
`கன்னித்தமிழ்` நோக்கு.


வகொவி

(பிகு: கன்னித்தமிழே 50% சமஸ்கிருதம்)


On Dec 4, 9:59 am, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> ராஜம் அவர்களே,
>
> கன்னித்தமிழ் என்பதை உவமையாகுபெயர் என்பதாக நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.
>
>  தனக்கென ஒரு தனி நெடுங்கணக்கைக் கொண்டு தமிழ் மொழியின் மிகப் பெரும்பான்மையான
> வினைச்சொற்களும் இலக்கணமும் மற்ற இந்திய மொழிகளைப்ப்போல் வடமொழி
> தாக்கமில்லாமல் இருக்கின்றன. தமிழ் மொழி உச்சரிப்பு மிகவும் தனித்தன்மையானது.
> இந்தத் தனித்தன்மையைக் கருதினால் கன்னித் தமிழ் என்ற விவரிப்பு  சமைந்த
> பொழுதில் இருந்த வண்ணமே இருந்துகொண்டிருக்கும் கன்னியின் தன்மை போல இன்றும்
> இருந்துகொண்டிருக்கும் தன்மைக்கு ஒப்பாக இருப்பதாலும் ஒப்பீட்டளவில் மற்ற
> இந்திய மொழிகளைப் போல் அல்லாமல் குறிப்பாக மற்ற தென்னிந்திய மொழிகளைப்
> போலல்லாமல் வடமொழியின் தாக்கத்தை மிகக் குறைந்த அளவில் கொண்டிருப்பதாலும் இந்த
> உவமை பொருத்தமாக இருக்கிரது என்பது என் கருத்து.
>
> இதில் உங்கள் மறுதலிப்பாக நான் புரிந்துகொள்வது என்னவென்றால் ஒற்றை
> அயல்மொழிச்சொல் கூட இல்லாமல் இருந்தால் மட்டுமே கன்னித்தமிழ் என்று
> அழைக்கமுடியும் என்பது உங்கள் கருத்தாக இருக்கிறது என்பதுதான். நீங்கள் ஏன்
> இவ்வளவு கறாராக இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. மேலும் ஒரு
> தன்மை உவமை  நூற்றுக்குநூறு பொருந்த வேண்டிய அவசியமும் இல்லை.
>
> ஓகை.
>
>
>
> On Sun, Dec 4, 2011 at 12:52 AM, rajam <ra...@earthlink.net> wrote:
> > ஓகை நடராசன் ஐயா, வணக்கம்! முதலில் என் அடிப்படைக் கேள்விக்கு விடை தந்தால்
> > மகிழ்வேன்:

> >   *தங்கள் கருத்துப்படி ... "கன்னித்தமிழ்" என்றால் என்ன? விளக்குவீர்களா?*அதன் பின்னரே பிற கருத்துரையாடல்களுக்குப் பொருள் கிடைக்கும்.


> >  Now, I'm taking the liberty of saying something that may not be suitable
> > for some folks in this audience, in which case kindly ignore my current
> > posting. "Virginity" is defined by the presence of a physical organ in a
> > human female body, and that is called "hymen." As long as that "hymen" is
> > intact in a female body, she is considered a "virgin." Once that hymen is
> > poked by an external source, such as for example during a sexual
> > intercourse, she is considered to have lost her virginity. Did Tamil go
> > through such intercourse?
> >  இதற்கு விடை சொல்லுமுன் ... "கன்னித்தமிழ்" என்பதற்குத் தங்கள் சொந்த
> > விளக்கமும் தந்து உதவினால் மகிழ்வேன்.
>
> > நன்றியுடன்,
> > ராஜம்
> >    On Dec 3, 2011, at 10:23 AM, OAGAI NATARAJAN wrote:
>
> >  //4. பிறமொழிச் சொற்கள் கலவாத தமிழ்தான் "கன்னித்தமிழ்" என்றால் ....
> > மணிமேகலை போன்ற காப்பியங்களைக் கிழித்து எறிந்துவிடவேண்டும்; அவை தமிழ்க்
> > காப்பியங்கள் என்று சொந்தம் கொண்டாட முடியாது. அதைச் செய்யத் தயாராக
> > இருக்கிறோமா?//
>
> > மணிமேகலை ஒரு கன்னித்தமிழ் காப்பியம் இல்லை என்று சொல்லிவிட வேண்டியதுதானே,
> > அதற்காக ஏன் கிழித்துவிடவேண்டும் என்றெல்லாம் சொல்கிறீர்கள்? ஏன் இந்த வன்முறை
> > சொல்லாடல்?
>

> >  //6. "கன்னித்தமிழ்" என்று சொல்வதினால் என்ன *பயன்* பெறுகிறோம்? //

> >>  6. "கன்னித்தமிழ்" என்று சொல்வதினால் என்ன *பயன்* பெறுகிறோம்?


> >>  பின் குறிப்பு
> >> ---------------
> >> பிற நூல்களிலிருந்து ஒத்தி ஒட்டி ஆடும் விளையாட்டு வேண்டாம். இங்கே

> >> படித்துப் பயன்பெறுகிறவர்களின் நேரத்தைக் கருதி, உங்கள் கருத்துகளைச் *
> >> சுருக்கமாகவும்*, *நேரிடையாகவும்*, *நக்கல்*/*கிண்டல்* *இல்லாமலும்*பகிர்ந்துகொண்டால் .... இளைய தலைமுறைக்கு நல்லது.


> >>  நன்றியுடன்,
> >> ராஜம்
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

செல்வன்

unread,
Dec 4, 2011, 7:21:52 AM12/4/11
to mint...@googlegroups.com
கன்னித்தமிழ் என்பது பொருளற்ற சொற்றொடர். இதுமாதிரி நிறைய சொல்லிகொண்டு இருப்பார்கள்.அர்த்தம் புரிந்து தான் சொல்கிறார்களா என்பதே சந்தேகமா இருக்கும்

"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு"

அப்படி தனியாக தமிழருக்கும் மட்டும் இருக்கும் குணம் என்ன என ஒரு குழுமத்தில் கேட்டுபார்த்ததில் யாருக்கும் தெரியலை."விருந்தோம்பல்,வீரம்" என உலகம் முழுக்க பொதுவான குணங்களை தான் பட்டியல் போட்டார்கள்.

--
செல்வன்

தாயுடன் தந்தையின் பாதம் என்றும் தலை வணங்காதவன்
நாள் தவறாமல் கோவிலில் சென்று என்ன காண்பான்?
நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ
?





Tthamizth Tthenee

unread,
Dec 4, 2011, 7:30:27 AM12/4/11
to mint...@googlegroups.com
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்
 
என்கிறார்களே, அப்படிபட்ட தமிழை  இன்னமும் கன்னித் தமிழ் என்று கூறிக்கொண்டே இருந்தால்  அது சரியாகுமா?
 
மூத்த தமிழ் ?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/12/4 செல்வன் <hol...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 4, 2011, 7:45:06 AM12/4/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
2011/12/4 செல்வன் <hol...@gmail.com>
..


"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு"

அப்படி தனியாக தமிழருக்கும் மட்டும் இருக்கும் குணம் என்ன என ஒரு குழுமத்தில் கேட்டுபார்த்ததில் யாருக்கும் தெரியலை."விருந்தோம்பல்,வீரம்" என உலகம் முழுக்க பொதுவான குணங்களை தான் பட்டியல் போட்டார்கள்.

ரசித்தேன் :-)

சரி பட்டியலில் வேறு என்னென்ன இருந்தன.. கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள் செல்வன்.

சுபா
 

--
செல்வன்

தாயுடன் தந்தையின் பாதம் என்றும் தலை வணங்காதவன்
நாள் தவறாமல் கோவிலில் சென்று என்ன காண்பான்?
நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ
?




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2011, 8:03:34 AM12/4/11
to mint...@googlegroups.com
அன்புடை ராஜம் அம்மா
கன்னித் திரையை அடிப்படையாகக் கொண்டு விர்ஜினிட்டியை நிறுவதில் சிக்கலுண்டு.  கடினமான உடல் உழைப்பால் சைக்கிள் ஓட்டுவதாலும் கிழிய வாய்ப்புண்டு.  கற்பழிப்பு என்பதும் இன்றைய இந்தியாவில் காயத்தை வைத்தே நிறுவப் படுகிறது.  எனவே வேறுமொழியால் அல்லது மொழியில் தொடர்ச்சியான பயன்பாட்டால் அது கன்னித் தன்மையை இழந்து விடுகிறது என்பது ஒரு வாதம்.  ஒரு பெண்ணின் வளர்ச்சியில் கன்னிப் பருவம் என்று ஒரு வளர்ச்சிப் படிநிலையைகுறிப்பிடுவர்.
கன்னித் தமிழ் என்பது தமிழின் பிறமொழிக் கலப்பில்லாத வழங்கப்பட்ட காலத்தைக் குறிப்பிதுவதாக நான் கருதுகிறேன்.  மேலும் தொன்மங்களில் ஆணுடன் தொடர்பில்லாமல் கன்னியர் குழந்தை பெற்றுக் கொள்வதும் அவர்களே இறைவன் அல்லது இறைநிலை அடைவதாகவும் குறிப்பிடுவர்.  கிறித்துவத்தில் கன்னி மேரி என்ற குறிப்பு அவர் கன்னியாக இருந்து குழந்தை பெற்றுக்கொண்டதுபோல் வேற்று மொழிகளில் தாக்கத்தால் தன் தன்மையை இழந்து விடவில்லை என்றும் கருத இடமுண்டு
நாகராசன்

2011/12/4 rajam <ra...@earthlink.net>

N. Ganesan

unread,
Dec 4, 2011, 8:22:24 AM12/4/11
to மின்தமிழ்

On Dec 4, 4:17 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> (பிகு: கன்னித்தமிழே 50% சமஸ்கிருதம்)
>

how?

N. Ganesan

விஜயராகவன்

unread,
Dec 4, 2011, 8:28:14 AM12/4/11
to மின்தமிழ்
கன்னி < கன்யா

வகொவி

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2011, 8:33:04 AM12/4/11
to mint...@googlegroups.com
உண்மை.  கன்னி என்பது சமஸ்கிரிதச் சொல். அதனால் பிற்காலத்தில் கன்னித் தமிழ் தனித்தமிழானது
நாகராசன்

2011/12/4 விஜயராகவன் <vij...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Dec 4, 2011, 8:35:31 AM12/4/11
to மின்தமிழ்

On Dec 4, 5:28 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> கன்னி < கன்யா
>
> வகொவி

what about > sign?

7 kannimaar, kannu-kutti, ... are they from Sanskrit?

N. Ganesan

> > N. Ganesan- Hide quoted text -

N. Ganesan

unread,
Dec 4, 2011, 8:36:51 AM12/4/11
to மின்தமிழ்

On Dec 4, 5:33 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> உண்மை.  கன்னி என்பது சமஸ்கிரிதச் சொல். அதனால் பிற்காலத்தில் கன்னித் தமிழ்
> தனித்தமிழானது
> நாகராசன்
>

Are you sure, professor?

Anbudan,
Ganesan

> 2011/12/4 விஜயராகவன் <viji...@gmail.com>


>
>
>
> > கன்னி < கன்யா
>
> > வகொவி
>
> > On Dec 4, 2:22 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> > > On Dec 4, 4:17 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > > > (பிகு: கன்னித்தமிழே 50% சமஸ்கிருதம்)
>
> > > how?
>
> > > N. Ganesan
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2011, 8:40:32 AM12/4/11
to mint...@googlegroups.com
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D


கன்னித் தமிழ்

பொருள்

கன்னித் தமிழ்

விளக்கம்

பிறமொழிச் சொற்கள், வழக்குகள் கலவாத தனித்தமிழைக் குறிக்கும். கன்னி என்பது வடமொழி வழக்கு என்பதால் தனித் தமிழ் என்ற வழக்கு நடைமுறைப்படுத்தப்பெற்றது.

நாகராசன்



2011/12/4 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

விஜயராகவன்

unread,
Dec 4, 2011, 8:47:12 AM12/4/11
to மின்தமிழ்
7 kannimaar is 7 kanyas i.e. 7 virgins - a legend found in many
cultures.

kannukutti comes from கன்று - இளம் (உம்-கன்றுப்பயிர்)

பேச்சில் ந்று ன்னு அல்லது ண்ணு ஆவதை எங்கோ விவாத்தித்து இருக்கிறோம்.

வகொவி

> > - Show quoted text -- Hide quoted text -

DEV RAJ

unread,
Dec 4, 2011, 8:49:08 AM12/4/11
to மின்தமிழ்
கந்யா -> கந்யகா (கந்யிகா) -> கன்னிகை -> கன்னி
10 வயதுக்குட்பட்ட சிறுமி
அக்ஷத யோநி, குமாரி - என்றும் பொருள்
கூறப்படுகிறது.

கநிஷ்ட: - அனைவரிலும் சிறிய மகன்
கநீநிகா - சிறு விரல்

கநீயஸ் - சிறியதைக் குறிப்பது;
அனைத்துக்கும் 'கந்' வேர்

ஐயாவ பாத்தாதான் கோடு போட்டு
எளுத தோணுது


தேவ்

On Dec 4, 6:36 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Dec 4, 5:33 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
> wrote:
>
> > உண்மை.  கன்னி என்பது சமஸ்கிரிதச் சொல். அதனால் பிற்காலத்தில் கன்னித் தமிழ்
> > தனித்தமிழானது
> > நாகராசன்
>
> Are you sure, professor?
>
> Anbudan,
> Ganesan
>
>
>
>
>
>
>
> > 2011/12/4 விஜயராகவன் <viji...@gmail.com>
>
> > > கன்னி < கன்யா
>
> > > வகொவி
>
> > > On Dec 4, 2:22 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> > > > On Dec 4, 4:17 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > > > > (பிகு: கன்னித்தமிழே 50% சமஸ்கிருதம்)
>
> > > > how?
>
> > > > N. Ganesan
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage

> > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like


> > > to visit our Muthusom Blogs at:

> > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at

> > >http://groups.google.com/group/minTamil-Hide quoted text -

rajam

unread,
Dec 4, 2011, 12:20:55 PM12/4/11
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
அன்புடைய பேராசிரியர் ஐயா,
1. "கன்னித்தமிழ்" என்ற சொல்லை மேடையிலும் அங்குமிங்கும் முழங்குகிறவர்கள் எப்போது அந்தச் சொல்லாட்சி திட்டவட்டமாகத் தமிழில் புழங்கலாயிற்று என்று சொல்ல ஏன் தயங்குகிறார்கள்? அவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 

2. நீங்கள் குறிப்பிடும் அறிவியல் உண்மையும் ("கன்னித்திரை" பற்றி) கன்னி மேரி பற்றிய தொன்மமும் எனக்கு அறிமுகமே. அதைப் புரிந்துகொள்வதில் எனக்குச் சிக்கல் இல்லை.

3.  

கன்னித் தமிழ் என்பது தமிழின் பிறமொழிக் கலப்பில்லாத வழங்கப்பட்ட காலத்தைக் குறிப்பிதுவதாக நான் கருதுகிறேன்.  

அந்தக் காலம் எது, அப்போது தமிழ் எப்படி இருந்தது என்று யாரால் உறுதியாகச் சொல்லமுடியும்? சரி, அப்படி ஒருவகைத் தமிழ் இருந்திருந்தால் ... அதே தமிழைத்தான் இன்றைக்கும் "கன்னித்தமிழ்" என்று குறிப்பிடுகிறார்களா?
4. எல்லாத்தெயும் புறக்கணித்தாலும் என் கேள்விக்கு விடை வேண்டும்: "கன்னித்தமிழ்" என்று புகழ் பாடுவதினால் என்ன பயன்?
அன்புடன்,
ராஜம்

Innamburan Innamburan

unread,
Dec 4, 2011, 1:38:45 PM12/4/11
to mint...@googlegroups.com
1. ஆம்.
4..இல்லை.



Samy

unread,
Dec 4, 2011, 9:41:23 AM12/4/11
to மின்தமிழ்
கன்னி என்பதற்கு virgin என்று நேரடி பொருள் கொண்டு
அதற்கு உடல்ரீதியான விளக்கம் கொடுதிருக்கிறீர்கள்.
கன்னித்தன்மை என்றாலே எல்லாருக்கும் விளங்குமே!!
இங்கும் அதை அறியாத சிறுவர்கள் இருப்பார்களென்று
எண்ணி விலாவாரி விளக்கம் கொடுத்திருக்கின்றீர் போலும்: -))
இதையே தமிழில் கொடுதிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

கன்னி என்பதை கன்னித்தன்மை என்று பொருள் கொள்ளாமல்
இளமையான என்று பொருள் கொண்டால் இளமை மாறத தமிழ்.
ஆண்டு பலவானாலும் சில மொழிகளைப் போல்மூப்பெய்தி
வழக்கொழிந்து போகாமல் இன்றும் இளமையாக பயன்பாட்டில்
உள்ள மொழியென்று பொருள் கொள்ளவேண்டும்.

தமிழென்றாலே சிலருக்கு கசக்கிறது
அதைப் பாராட்டி விட்டாலோ
உடலே எரிகிறது.
அதற்கு நாம் என்ன செய்யமுடியும்.: -))
சாமி

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com


> > For more options, visit this group athttp://groups.google.com/
> > group/minTamil
>
> > --

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you
> > may like to visit our Muthusom Blogs at: http://

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com

rajam

unread,
Dec 4, 2011, 2:40:50 PM12/4/11
to mint...@googlegroups.com, Samy

On Dec 4, 2011, at 6:41 AM, Samy wrote:

கன்னி என்பதற்கு virgin  என்று நேரடி பொருள் கொண்டு
அதற்கு உடல்ரீதியான விளக்கம் கொடுதிருக்கிறீர்கள்.
கன்னித்தன்மை என்றாலே எல்லாருக்கும் விளங்குமே!!
இங்கும் அதை அறியாத சிறுவர்கள் இருப்பார்களென்று
 எண்ணி விலாவாரி விளக்கம் கொடுத்திருக்கின்றீர் போலும்: -))
இதையே தமிழில் கொடுதிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஐயா,
மன்னிக்கவும். "கன்னித்தமிழ்" என்பதற்கு என்ன பொருள் என்று நான் கேட்டேன். யாரும் நேரடியான மறுமொழி தரவில்லை. அதனால் ஒரு தொடக்கம். அவ்வளவே. அதை மறுங்கள், எனக்குக் கவலையில்லை. 


 கன்னி என்பதை கன்னித்தன்மை என்று பொருள் கொள்ளாமல்
இளமையான என்று பொருள் கொண்டால் இளமை மாறத தமிழ்.
 ஆண்டு பலவானாலும் சில மொழிகளைப் போல்மூப்பெய்தி
 வழக்கொழிந்து போகாமல் இன்றும் இளமையாக பயன்பாட்டில்
உள்ள மொழியென்று பொருள் கொள்ளவேண்டும்.
இந்தப் பொருளுரை என் அறிவுக்குப் பொருந்திவரவில்லை. "சில மொழிகளைப்போல் மூப்பெய்தி" "இன்றும் இளமையாக" என்றால் என்ன பொருள்?  "பயன்பாட்டில் உள்ள மொழி" என்றால் இன்று பயன்பாட்டில் உள்ள மொழிகள் பல்லாயிரக்கணக்காணவையே!



தமிழென்றாலே சிலருக்கு கசக்கிறது
அதைப் பாராட்டி விட்டாலோ
 உடலே எரிகிறது.

இந்த மாதிரி உணர்ச்சிவசப்பட்டுப் பேசி, இந்தக் கூட்டத்தில் என்னைச் சேர்த்தால் உங்களைத் தமிழன்னை மன்னிக்கமாட்டாள்! சொல்லிவிட்டேன்! உங்கள் பின்புலம் எனக்குத் தெரியாததால் இவ்வளவுதான் இப்போதைக்கு என்னால் சொல்லமுடியும்.

அதற்கு நாம் என்ன செய்யமுடியும்.: -))
முதல்படியாக ... "கன்னித்தமிழ்" என்ற சொல்லாட்சி எப்போது வழ்க்கிற்கு வந்தது என்று தெரிந்து பிறருக்குச் சொல்லி உதவுங்கள்; அது நல்லது.  

சாமி

அன்புடன்,
ராஜம்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 3:01:13 PM12/4/11
to mint...@googlegroups.com, rajam, Kannan Natarajan
Dear VSR,

according to Santhi Sadhana's தமிழ் இலக்கியப் பேரகராதி, volume 2, page 655,
we find the expression கன்னித் தமிழ்
in side the பெரிய புராணம் in verse 3833.

I see inside the single volume edition of the பன்னிரு திருமுறை
by ச.வே.சு.
that the verse reads:

இவ்வாறு ஒஞுகும் நாளின்கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்
மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய் வார் கன்னித் தமிழ்நாட்டுத் திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள்
இறைௌ்ச முறைமையால் நினைந்தார்

According to the Santhi Sadhana's தமிழ் இலக்கியப் பேரகராதி,
the expression கன்னித் தமிழ்நாடு
means பாண்டிய நாடு.

This seems to mean that the expression refers to your native place ;-)

I hope this partly answers your question

அன்புடன்

-- Jean-Luc




On 03/12/2011 18:02, rajam wrote:
முகப்புரை
--------------
நேற்று (கலிபோர்னியாவில் நவம்பர் 2, 2011) திரு கண்ணன் நடராசன் அவர்கள் மின்தமிழில் இட்ட ஒரு பதிவு தினமணியில் வெளிவந்த சாமி சிதம்பரனார் அவர்களின் கட்டுரை. அந்தக் கட்டுரையில் தமிழின் புகழ் பாடப்பட்டிருந்தது. அதில் பயன்படுத்தப்பட்ட "கன்னித்தமிழ்" என்ற சொல்லாட்சியின் பொருளை வினவினேன். அது தொடர்பாக இந்தப் புதிய இழையைத் தொடங்குகிறேன்.

முன் குறிப்பு
---------------
தமிழ் மொழிமேல் எனக்குத் தனிப்பட்ட முறையில் இருக்கும் அன்பை/காதலை/காமத்தை/மதிப்பை/பெருமிதத்தைப் பற்றி யாரும் ஐயுறத் தேவையில்லை; ஐயுற்றால் வம்பு! :-)
கேள்விகள்
---------------
1. "கன்னித்தமிழ்" என்ற சொல்லாட்சியை யார் எப்போது எங்கே முதன் முதலில் பயன்படுத்தினார்கள், நினைவில் இருக்கிறதா? (இதற்கு விடை முன்பு ஒருமுறை மின்தமிழிலோ அல்லது CTamil-இலோ சொல்லியிருந்தேன்.)
2. பாரதியாரே "எங்கள் தாய்" என்ற பாடலில் "கன்னி" "தாய்" என்ற இரண்டு பொருளையும் சேர்த்துப் பயன்படுத்தியிருப்பார். அதையும் பார்க்கவும்.  
3. "கன்னி"க்கும் "தாய்க்கும்" என்ன தொடர்பு?  

4. பிறமொழிச் சொற்கள் கலவாத தமிழ்தான் "கன்னித்தமிழ்" என்றால் .... மணிமேகலை போன்ற காப்பியங்களைக் கிழித்து எறிந்துவிடவேண்டும்; அவை தமிழ்க் காப்பியங்கள் என்று சொந்தம் கொண்டாட முடியாது. அதைச் செய்யத் தயாராக இருக்கிறோமா?
5. எவை "பிறமொழிச் சொற்கள்" என்று உறுதியாக நிறுவிக்காட்ட எத்தனைப்பேருக்கு மொழியறிவின் ஆழம் இருக்கிறது? ளெனக்குத் தெரியும் என்று களத்தில் இறங்குகிறவர்கள் எந்த அளவுகோலைப் பயன்படுத்துகிறார்கள்? அதைப் பற்றித் தெளிவாகச் சொல்லுகிறார்களா?

எல்லாவற்றிற்கும் மேலாக ... 
6. "கன்னித்தமிழ்" என்று சொல்வதினால் என்ன பயன் பெறுகிறோம்? 
பின் குறிப்பு
---------------
பிற நூல்களிலிருந்து ஒத்தி ஒட்டி ஆடும் விளையாட்டு வேண்டாம். இங்கே படித்துப் பயன்பெறுகிறவர்களின் நேரத்தைக் கருதி, உங்கள் கருத்துகளைச் சுருக்கமாகவும், நேரிடையாகவும், நக்கல்/கிண்டல் இல்லாமலும் பகிர்ந்துகொண்டால் .... இளைய தலைமுறைக்கு நல்லது.
நன்றியுடன்,
ராஜம்

--

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 3:08:20 PM12/4/11
to mint...@googlegroups.com, rajam, Kannan Natarajan
ERRATUM (correcting 2 typos):

இவ்வாறு ஒழுகும் நாளின்கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்

மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய் வார் கன்னித் தமிழ்நாட்டுத் திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார்


*****************************

rajam

unread,
Dec 4, 2011, 3:11:00 PM12/4/11
to mint...@googlegroups.com
Dear JLC,

Thanks much for the reference from Santhi Sadhana's தமிழ் இலக்கியப் பேரகராதி! There's a reference still earlier than this one (about which I wrote a while ago here or in CTamil, I forget). Let's see who would dig it out.

In any case, my question is directed at the root meaning of the expression "கன்னித்தமிழ்." Let's see who can satisfy my thirst!

:-) :-) :-)

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 3:19:31 PM12/4/11
to mint...@googlegroups.com, rajam, Kannan Natarajan
Apart from that,
it seems that

திருமங்கையாழ்வார் has used the expression கன்னி மதிள் in PTM 6-7-20

ஐங்குறுநூறு (7:8) has கன்னி விடயல்.

Also,
you may remember that, while commenting on TC27c,
சேனாவரையர் says.

<QUOTE>
taṉ= iṉam muṭittal eṉpataṉāṉ {eruttai um āvai um}, {entai vantāṉ, emmaṉṉai vantāḷ} eṉa uyartiṇai ā ~uyarttu vaḻaṅkal um, oṉṟu eṉa muṭittal eṉpataṉāl
«kaṉṉi ñāḻal»,
{{[// cilappatikāram:7_((9))_2]}}
«kaṉṉi eyil» eṉa aḵṟiṇai āy-niṉṟu uyartiṇai vāypāṭṭāl kūṟa+-paṭutal -um, paṇpu koḷ peyar+ koṭai, vaḻakkiṉ akattu um, {perum^ koṟṟaṉ, perum^ cāttaṉ} eṉa il kuṇam aṭuttu uyar col= āy varutal um^ koḷka.
</QUOTE>

((there is a French translation for that on page 83 inside my 1996 book))

Cheers

-- Jean-Luc


**********************************************

ERRATUM (correcting 2 typos):

இவ்வாறு ஒழுகும் நாளின்கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்

மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய் வார் கன்னித் தமிழ்நாட்டுத் திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார்


*****************************

rajam

unread,
Dec 4, 2011, 3:36:28 PM12/4/11
to Jean-Luc Chevillard, மின்தமிழ்
Why go that late?

There's "கன்னிமை கனியாக் கைக்கிளை" ... in பரிபாடல்

But my main concern is to understand the root meaning of கன்னித்தமிழ். I still need to quench my thirst in that aspect! :-) :-) :-) 

rajam

unread,
Dec 4, 2011, 3:39:47 PM12/4/11
to மின்தமிழ், Jean-Luc Chevillard
Also, check out "yāpparuṅkalakkārikai" and its commentary. Somewhere there you'll find கன்னித் தமிழ்.

Begin forwarded message:

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 3:51:43 PM12/4/11
to mint...@googlegroups.com, rajam, Hari Krishnan, N Kannan
Dear VSR,

I do not know whether that answers your question but
on page 772 inside the 1993 edition of the திவாகரம் (second volume)

there is a verse (numbered 36, which reads

இன்னாங் கோசை நடுக்க மச்சம்
கன்னித் தமிழோர் கம்பலை யென்ப.

This might  fit with the PP reference,
as describing a specific linguistic usage of the inhabitant of Pāṇṭiya Nāṭu.

See also what the Tamil Lexicon writes, on page 833, at the entry கன்னி நாடு.

"http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:6245.tamillex"

***************************************

கன்னிநாடு kaṉṉi-nāṭu

, n. < id. +. The Pāṇḍya country, which was, according to tradition, once ruled by a virgin princess, Taṭātakai, identified with the goddess Mīṉākṣī; பாண்டிநாடு. கன்னிநாட்டு நல்வினைப்பயத்தாற் கேட்பார் (பெரியபு. திருஞான. 605).


*****************************************

I hope this is useful

-- Jean-Luc

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 3:54:35 PM12/4/11
to rajam, மின்தமிழ்
Dear VSR,

I think I have just answered.

I wonder whether you will accept my answer.
(BTW, do YOU use the word கம்பலை in that sense,
originating from that region ...
:-)

Best wishes

-- Jean-Luc

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 4:05:14 PM12/4/11
to rajam, மின்தமிழ், Hari Krishnan, N Kannan
Dear VSR,

yes indeed,
but in fact this points in the same direction (i.e. towards Pāṇṭiya Nāṭu)

The verse reads:

2. (1) தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்
    கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
    யானா நடாத்துகின் றேனென் (2) றெனக்கே நகைதருமால்
    ஆனா வறிவி னவர்கட் கென் னாங்கொலென் னாதரவே.

The two footnotes in UVS edition say:

(1) மீனவன் பாண்டியன்;
கேட்ப - கேட்கத் தக்கதாக.
கன்னி - அழிவின்மை.
நூல் - இலக்கணம்.
நடாத்துதுல் - நிகழ்த்துதல் ;
'நவநீத னடத்தினனே' (நவநீதப் சிறப்.). என் ஆதரவு எனக்கே நகைதரும்;
அறிவின் அவர்கட்கு என்னாங் கொல்?'
பாண்டியன் அகத்தியர்பால் நூல் கேட்டமை அன்றகத்தியன்வாய் உரைதரு தீந்தமிழ் கேட்டோன்' (பாண்டிக்.)

(2) 'நன்னா வலர்முக நகைநாணாமே, என்னாலியன்றவை யியற்று மிந்நூலுன்' (நன். சங்கர, உரைச்சிறப. 15-6)

Therefore apparently it makes sense to have a look at the Pāṇṭik kōvai.

Cheers

-- Jean-Luc (Paris)

rajam

unread,
Dec 4, 2011, 7:14:04 PM12/4/11
to mint...@googlegroups.com, Jean-Luc Chevillard
Dear JLC, 


yes indeed, 

That was the reference (from kārikai) that I had given sometime ago (and was obviously forgotten!). Anyway, I think the key to understanding the initial/original significance of the usage கன்னித்தமிழ் is in this kārikai

1. U.V.S cleverly skips interpreting the phrase கன்னித்தமிழ்! What he says (கன்னி = அழிவின்மை; நூல் = இலக்கணம்) does not help much. Does it? Not to my understanding.

2. I don't think the location "pāṇṭiya nāṭu" is relevant here to understanding the root meaning of the term கன்னித்தமிழ். 

3. Perhaps, references such as "kavēra kaṉṉi" (in Manimekalai), "kāviri," and "akattiyaṉ" would help. The entire legend of akattiyaṉ -- kāviri river being dumped from his கமண்டலம், akattiyaṉ teaching Tamil, kāviri was the 'kaṉṉi" (daughter) of someone called kavēraṉ, etc., etc. -- is certainly intriguing and perhaps might have been the source of the coinage கன்னித்தமிழ். 

Best,
--vsr

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 8:23:16 PM12/4/11
to mint...@googlegroups.com, rajam
Dear VSR,

you write

<QUOTE>
2. I don't think the location "pāṇṭiya nāṭu" is relevant here to understanding the root meaning of the term 
கன்னித்தமிழ்.
</QUOTE>

My personal HYPOTHESIS (current impression)
is that trying to find some intrinsic meaning
for the expression "
கன்னித்தமிழ்"
is somehow making a WRONG SPLITTING.

(AB)C instead of A(BC).

[where (AB)C = "(கன்னித் தமிழ்) நாடு"
while A(BC) = "கன்னித் (தமிழ் நாடு)"

I may of course be completely wrong,
but I believe one should follow one's intuitions.
and try to falsify them [à la Popper] ...

I (currently/temporarily) believe [as a WORKING hypothesis] that :
the expression (கன்னித் தமிழ்) is meaningless if it is supposed to make a statement on the Tamil language
(phrased otherwise, it is anachronistic to link Tamil and the word Kaṉṉi [கன்னி])

BUT
the expression "கன்னித் (தமிழ் நாடு)" is meaningful as a GEOGRAPHICAL characterization
and somehow points to the time when the Pandiya country was not yet Shaiva,
but was the zone of influence of a "Virgin Goddess"
(and, in that sense, the expression "Kanyakumari district"
((and ALSO "Kanyakumari Tamil"))
somehow continues that type of designation, even NOW).

The people who created the modern Shaiva syncretism were very clever
in incorporating the goddess into what was to become what now exists
(just like the people who invented the Christian religion were clever in incorporating
pagan festivals such as Christmas into Christianity).

And it is quite possible that the vaiṣṇava-s had the same idea
and that both the devotees of Cuntarar and the devotees of Aḻakar
competed for having their favorite god being called "Cokkar"
BUT IN THE end it was ŚIVA who became the husband
and Viṣṇu had to content himself with being his brother-in-law.

But whatever be the case,
Kalittokai-1
seems to tell us that the Godess is more important than the God,
because he would not be able to dance without her:

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடும் கூளி
மாறா போர் மணி மிடற்று எண்கையாய் கேள் இனி

படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடும் கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாள் ஓ

மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடும் கால் பணை எழில் அணை மெல் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாள் ஓ

கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும் கால்
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாள் ஓ

என ஆங்கு

பாணி உம் தூக்கு உம் சீர் உம் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி

To me,
this looks like a VERY VERY POLITE way of telling the newly arrived God
that he would be unable to PERFORM anything
without the Goddess who was there before him
and whom he was lucky to marry.
(Macho men should be flattered :-)

I think that most occurrences of கன்னி
in literature are probably to be reinterpreted
as allusion to (unmarried/virgin) Goddess cult.
(and that may include the expression "கன்னி நறு ஞாழல்"
found in the verse number (9) inside கானல்வரி
[சிலப்பதிகாரம், 7).

I don't think கன்னி has anything to do with the Tamil language.

The syntagm "கன்னித்தமிழ்" is a late reinterpretation of something which initially had a different meaning.

This is my current working hypothesis

What do you say to that?

அன்புடன்

-- jlc (Paris)

Narayanan Kannan

unread,
Dec 4, 2011, 8:40:25 PM12/4/11
to Jean-Luc Chevillard, mint...@googlegroups.com, rajam
2011/12/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:

> And it is quite possible that the vaiṣṇava-s had the same idea
> and that both the devotees of Cuntarar and the devotees of Aḻakar
> competed for having their favorite god being called "Cokkar"
> BUT IN THE end it was ŚIVA who became the husband
> and Viṣṇu had to content himself with being his brother-in-law.
>


Hello Jean

Pretty interesting hypothesis :-)

I presume you might have read what Srirangam Mohanarangan has written
here in MinTamil about kUdal mAnagar as abode of Vishnu from
Paripadal. In the lotus arrangement of Madurai not Meenakshi Koil but
a Vishnu temple was at the center. Hence I doubt when one refers to
Madurai, it necessarily mean koRRavai/meenakshi etc. (thus doubting
your above mentioned claim)

However, it is plausible that Panidiya kingdom was referred as
kannitamilnadu based on tatAthagai piratti as a ruler. In fact it adds
further strength to my theory of a Pandiya Queen arriving on the
shores of Korea establishing another Pandiya out post in the far east.
Even now, the so called, 'Ajumma' of Korea (elderly ladies) dominate
the otherwise male chauvinistic society. It is similar to ,' meenakshi
Adchi' in Madurai, meaning matriarchal society or female dominated
society.

Kannan

rajam

unread,
Dec 4, 2011, 8:42:59 PM12/4/11
to mint...@googlegroups.com, Jean-Luc Chevillard
Dear JLC,


I don't think கன்னி has anything to do with the Tamil language. 


That's precisely what I want(ed) folks to understand! 



The syntagm "கன்னித்தமிழ்" is a late reinterpretation of something which initially had a different meaning. 

This is my current working hypothesis

What do you say to that?


Right on track! 

However, one/we must be prepared to understand/analyze the term கன்னித்தமிழ் in isolation -- whether it is or is not followed by the term நாடு, so that (AB)C vs. A(BC) confusion does not arise. People don't think this deeply, but just flippantly use கன்னித்தமிழ் as an emotional "stock phrase." If you ask for the meaning of the term they get annoyed and lose focus! sigh.

அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Dec 4, 2011, 8:54:32 PM12/4/11
to mint...@googlegroups.com, Jean-Luc Chevillard
Fact/Fiction/Legend: "tatAthagai piratti" is a "phase" / "snapshot".
Once she is married to Shiva, she is not a "kaṉṉi" anymore.

Referring to that transitory state to a "living language" does not
make sense.

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-

> unsub...@googlegroups.com

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 9:20:44 PM12/4/11
to mint...@googlegroups.com, Narayanan Kannan, rajam, srirangammohanarangan v
Dear Kannan,

however much I would like to read every thread,
I am not capable of doing that.
(you can read Modern Tamil ten times faster than me
(or maybe twenty times :-) ) )

I have not read the messages about Madurai by Rangan
(although I might try to do that some day)
[[I keep every message on my hard disk:
I currently have 135 413 messages from MinTamil inside my Thunderbird
folders ...]]

My current working hypothesis is that,
-- first there was a goddess (or several goddesses)
-- then the Brahmins came and brought Viṣṇu with them
-- there were also buddhists and jains and a kind of peaceful coexistence
-- someday, there was a Śaiva revolution and the consequence was a
progressive taking over (by the shaivas) of the dominant position.

When the Tolkāppiyam was composed, Viṣṇu was more visible than Śiva.

The same is true for the Kuṟaḷ.

The Cilappatikāram must have been composed before the Śaiva revolution,
when śiva was a powerful outsider but not the dominant figure.

We all must make working hypotheses in order to make sense with complex
data.

அன்புடன்

-- ழான் (Paris)

Narayanan Kannan

unread,
Dec 4, 2011, 9:32:54 PM12/4/11
to Jean-Luc Chevillard, mint...@googlegroups.com, rajam, srirangammohanarangan v
2011/12/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:

> My current working hypothesis is that,
> -- first there was a goddess (or several goddesses)
> -- then the Brahmins came and brought Viṣṇu with them
> -- there were also buddhists and jains and a kind of peaceful coexistence
> -- someday, there was a Śaiva revolution and the consequence was a
> progressive taking over (by the shaivas) of the dominant position.
>


Dear Jean:

Though I'm not an expert like you on Sangam, I still question your
assumption that "first there was a goddess (or several goddesses)". In
the pantheon of Gods in "ainthinnai", koRRavai does not appear. She
appears much later when 'pAlai' emerges. Do you think that worship of
a Goddess appeared first in a male chauvinistic Tamil society? or are
we (Tamils) matriarchal to begin with?

Kannan

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 9:34:26 PM12/4/11
to rajam, mint...@googlegroups.com, N Kannan
Dear VSR,
dear Kannan,

is the ஆரவல்லி சூரவல்லி கதை popular in Tamil Nadu?

I bought some "பெரிய எழுத்து" booklets in the eighties
and found them quite fascinating.

And of course the link with the Mahabharata characters is quite interesting.

-- Jean-Luc (Paris)

>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this

>> group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to

>> minTamil-u...@googlegroups.com

Narayanan Kannan

unread,
Dec 4, 2011, 9:44:39 PM12/4/11
to Jean-Luc Chevillard, rajam, mint...@googlegroups.com
2011/12/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:

> Dear VSR,
> dear Kannan,
>
> is the ஆரவல்லி சூரவல்லி கதை popular in Tamil Nadu?
>

Yes, I suppose!

It would be interesting to see whether any point in human evolution
that female dominated the society? In certain species of animals such
as Hyena and elephants, female domination is critical in maintaining
the group structure.

I'm particularly interested in your theory if women were powerful in
Sangam period, could they participate in battles and sea travels?

Kannan

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 9:52:58 PM12/4/11
to Narayanan Kannan, mint...@googlegroups.com, rajam, srirangammohanarangan v
Dear Kannan,

it is quite possible that I am biased
and have a personal preference for Goddesses ;-)

I cannot exclude that possibility.

Anyhow, I have to go to bed (time is 3:50 here in Paris).

I'll try to dream of a plausible answer while sleeping :-)
[but don't blame me if I just sleep ..]

Best

-- Jean-Luc (Paris)

P.S. "paalai" is here, right from the beginning, but it simply does not
have a name!

Also, just re-read the வேட்டுவவரி (12th canto inside the சிலப்பதிகாரம்);
it contains a lot of very interesting material.

rajam

unread,
Dec 4, 2011, 9:59:55 PM12/4/11
to mint...@googlegroups.com, Narayanan Kannan, srirangammohanarangan v
Dear JLC & Kannan,

I appreciate your individual adoration for personal deities and goddesses! :-) God bless you! However, I hope you both would care to bring back this thread to my original question: "What is the root meaning of the term கன்னித்தமிழ் when used today in the modern world?"

Thanks and regards,
rajam

Mohanarangan V Srirangam

unread,
Dec 4, 2011, 10:01:08 PM12/4/11
to mint...@googlegroups.com
>>>According to the Santhi Sadhana's தமிழ் இலக்கியப் பேரகராதி,
the expression கன்னித் தமிழ்நாடு
means பாண்டிய நாடு.<<<< 


A wild guess --- 

Kannit thamizh nAdu -- spinster Tamil land --> unconquered territory -- land not overpowered by others 

From this imperialistic usage the epithet for unconquered, viz., 'kanni' was transported to the language register and used for the language spoken in such a land. Later the adjective for language might have gained a meaning of its own. 

The guess may be wrong. It is only a guess, thanks to Mr Jean and Madam Rajam. 

***


2011/12/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

Jean-Luc Chevillard

unread,
Dec 4, 2011, 10:04:37 PM12/4/11
to mint...@googlegroups.com, Narayanan Kannan, rajam
Dear Kannan,

being powerful as a SYMBOL (a God belongs to the symbolic realm)
is not the same as being powerful in REAL life;

As we all know, women are essential/central/... in REAL life.

But why should they want to fight?

Better leave that to uncivilized idiots (such as are men) ;-)

And it is even better if the fighting takes place mostly in stories.

The first step in civilization is to replace actual war
by poems about war!

-- Jean-Luc (Paris)

rajam

unread,
Dec 4, 2011, 10:06:04 PM12/4/11
to mint...@googlegroups.com, srirangammohanarangan v
On Dec 4, 2011, at 7:01 PM, Mohanarangan V Srirangam wrote:

>>>According to the Santhi Sadhana's தமிழ் இலக்கியப் பேரகராதி,
the expression கன்னித் தமிழ்நாடு
means பாண்டிய நாடு.<<<< 


A wild guess --- 

Kannit thamizh nAdu -- spinster Tamil land --> unconquered territory -- land not overpowered by others 

From this imperialistic usage the epithet for unconquered, viz., 'kanni' was transported to the language register and used for the language spoken in such a land. Later the adjective for language might have gained a meaning of its own. 

The guess may be wrong. It is only a guess, thanks to Mr Jean and Madam Rajam. 

***


We still need to decipher the usage WITHOUT the mention of a "land." 
"Kannit thamizh nAdu " is NOT an ideal example. The first example is just "கன்னித்தமிழ்."
So, go for it and let me have your say! Thanks! 

N. Ganesan

unread,
Dec 4, 2011, 10:18:36 PM12/4/11
to மின்தமிழ்

On Dec 4, 8:52 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> Dear Kannan,
>
> it is quite possible that I am biased
> and have a personal preference for Goddesses ;-)
>
> I cannot exclude that possibility.
>

A reference to Pandya's daughter much older than Paripatal:

"Megasthenes, writing c. 300 B.C., refers to the Pāṇḍya country when
speaking of the Indian Heracles:

this Heracles ... had only one daughter. Her name was Pandaea
[Pandaiē], and the country in which she was born, the government of
which Heracles entrusted to her, was called Pandaea after the girl....
Some other Indians tell of Heracles that, after he had traversed every
land and sea, and purged them of all evil monsters, he found in the
sea a new form of womanly ornament... the sea margarita [pearl] as it
is called in the Indian tongue. Heracles was in fact so taken with the
beauty of the ornament that he collected this pearl from every sea and
brought it to India to adorn his daughter ... among the Indians too
the pearl is worth three times its weight in refined gold. (Arrian,
Indica 8,6-13, trans. Brunt 1983: 329-31)"

N. Ganesan

> Anyhow, I have to go to bed (time is 3:50 here in Paris).
>
> I'll try to dream of a plausible answer while sleeping :-)
> [but don't blame me if I just sleep ..]
>
> Best
>
> -- Jean-Luc (Paris)
>
> P.S. "paalai" is here, right from the beginning, but it simply does not
> have a name!
>
> Also, just re-read the வேட்டுவவரி (12th canto inside the சிலப்பதிகாரம்);
> it contains a lot of very interesting material.
>
> On 05/12/2011 03:32, Narayanan Kannan wrote:
>
>
>
>
>
>
>

> > 2011/12/5 Jean-Luc Chevillard<jeanluc.chevill...@gmail.com>:

rajam

unread,
Dec 4, 2011, 10:22:54 PM12/4/11
to mint...@googlegroups.com, Jean-Luc Chevillard, N. Kannan, srirangammohanarangan v
Instead of dilly-dallying ... can you ALL please bring this thread to my ORIGINAL QUESTION: "WHAT THE HECK DOES கன்னித்தமிழ் MEAN WHEN PEOPLE USE IT NOW?"
THANK YOU!

Raja sankar

unread,
Dec 4, 2011, 11:59:32 PM12/4/11
to mint...@googlegroups.com
Dear Rajam,

I hope you know the incident in that Story. When Meenakshi met Shiva, one of her breasts vanished. So, I think, it telling us indirectly that she is no longer kanni after she met shiva.

Second, even if that says about land, that part of the land is conquered by others. Velirs of other parts of the land had say about state affairs, that is another reason of 5 pandya princes ruling in different parts of the land.

In any way, associating the term kanni to a language doesn't fit.

ராஜசங்கர்

2011/12/5 rajam <ra...@earthlink.net>

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2011, 1:48:38 AM12/5/11
to mint...@googlegroups.com
கண்ணை உருட்டி மிரட்டி கன்னித் தமிழ் என்பதே அசிங்கம் என்று ஒரே போடாய்ப் போட்டு வாய்ப்பூட்டு போட்டுவிட்டீர்கள்.
இப்போது கன்னித் தமிழ் தமிழ் இசைப் பாடல்களில்

http://www.youtube.com/watch?v=ypgwtbtRXNc

எதோ கன்னித் தமிழ் என்று வாய்ப் பந்தா செய்து வந்ததுக்கும் தடா போட்டாச்சு
இப்புடியே நீங்க போலீஸ் வேலை பார்த்தா தமிழைச் சொல்லிச் சம்பாரிக்க முடியாது போயிடுமே சிலருக்கு
என் நிலை கன்னித் தமிழ் தனித் தமிழைக் குறிப்பதுவே
எனக்குத் தெரிந்து தனித் தமிழ் பேசிய இருவர்
1. சாத்தையா என்ற தமிழ்க் குடிமகன்.  அவர் தனித் தமிழில் பேசுவார். ஆனால் மற்றவர்கள் கலப்பு மொழி பேசினால் தனித் தமிழில் பேசுமாறு வற்புறுத்தியதில்லை
2. எனது இளவல் - தங்கராஜன் என்ற பெயரைப் பொன்னரசன் என்றூ மாற்றிக்கொண்டு தனித் தமிழ் பேசுபவர்.  அவரது பணி ஆங்கிலப் பேராசிரியர்.  வகுப்பறையில் ஆங்கிலம் நடத்துவார் வெளியில் தனித் தமிழில் பேசுவார். 
இப்போது கன்னித் தமிழர்கள் தனித் தமிழ் பற்றாளர்களாகத் தமிழகத்தில் இப்பவும் இருக்கிறார்கள். 
நாகராசன்

2011/12/5 rajam <ra...@earthlink.net>

Hari Krishnan

unread,
Dec 5, 2011, 3:36:24 AM12/5/11
to mint...@googlegroups.com


2011/12/5 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கண்ணை உருட்டி மிரட்டி கன்னித் தமிழ் என்பதே அசிங்கம் என்று ஒரே போடாய்ப் போட்டு வாய்ப்பூட்டு போட்டுவிட்டீர்கள்.
இப்போது கன்னித் தமிழ் தமிழ் இசைப் பாடல்களில்

இந்த இழையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்.  கன்னித் தமிழ், கன்னித் தமிழ்நாடு போன்ற பிரயோகங்கள் எப்போதிலிருந்து இலக்கிய ஆட்சிக்குள் வந்திருக்கலாம் என்று இந்த இழை தொடங்கிய நாளாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  முதலில் கவனத்துக்கு வந்தவன் பாரதி.  

பாரதி ‘கன்னி’ என்ற அடையால் குறிப்பிடுவது பாரதநாடு மொத்தத்தையும்.  எடுத்துக்காட்டாக,

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயங்கள் தாய் - இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள்எங்கள் தாய். 

இதைத் தவிர, கண்ணம்மாவை ‘பொன்னைய நிகர்த்த மேனி’ பாடலில்

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா

நித்ய கன்னி என்றொரு ஆட்சியையும் பயன்படுத்துகிறான்.  ஆனால், தமிழையோ, தமிழ்நாட்டையோ கன்னி என்ற அடையால் குறித்திருக்கும் பாடல் எதுவும் இல்லையென்றே தோன்றுகிறது.  குறைந்தது, தற்போது நினைவில் தட்டுப்படவில்லை.

பிறகு, கன்னித் தமிழ்நாடு என்ற ஆட்சி எவ்வளவு தொன்மையானது என்பதை டிஜிடல் ஸர்ச் மூலமாகப் பிடிக்கலாம் என்று நினைத்ததில் இது சிக்கியது:

மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப் 
பார்த்திபர் பிறரும் தத்தம் பதிதொறும் வரவு நோக்கித் 
தேர்த்திகழ் அனிகத் தோடும் சென்று எதிர் முகமன் செய்யத்
தார்த் திரு மார்பன் கன்னித் தண் தமிழ் நாடு சார்ந்தான்.

திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், மேருவைச் செண்டால் அடித்த படலம்.

தமிழ் வர்ச்சுவல் யுனிவர்சிடியில் இந்தப் பாடலுக்கான ந மு வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை உள்ளது: 

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் 
உரை


மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்
பார்த்திபர் பிறருந் தத்தம் பதிதொறும் வரவுநோக்கித்
தேர்த்திக ழனிகத் தோடுஞ் சென்றெதிர் முகமன் செய்யத்*
தார்த்திரு மார்பன் கன்னித் தண்டமிழ் நாடு சார்ந்தான்.

     (இ - ள்.) மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க 
தேயப் பார்த்திபர் பிறரும் - மத்திம நாட்டு மன்னரும் விராடநாட்டு 
மன்னரும் மாளவநாட்டு மன்னரும் தெலுங்க நாட்டு மன்னரும் ஏனை 
மன்னர்களும், தத்தம் பதிதொறும் - தம் தம் நகரங்கள் தோறும், 
வரவு நோக்கி - (தனது) வருகையை எதிர்நோக்கி, தேர்திகழ் 
அனிகத் தோடும் சென்று எதிர் முகமன் செய்ய - தேருடன் 
விளங்கும் சேனைகளோடும் கென்று எதிர்கொண்டு உபசாரஞ் 
செய்ய (அதனையேற்று), தார் திருமார்பன் - மாலை யணிந்த 
அழகிய மார்பினையுடைய உக்கிர குமாரன் தண் தமிழ் கன்னி நாடு 
சார்ந்தான் - தண்ணிய தமிழ் (வழங்கும்) பாண்டி நாட்டை 
அடைந்தான் எ-று.

     மாத்திமர் முதலியவற்றில் எண்ணும்மை விரிக்க. எதிர் - எதிர் 
கொண்டென்க.
கன்னித் தமிழ் - அழியாத தமிழ், இளமை மாறாத 
தமிழ் எனத் தமிழுக்கு அடையாக்கலுமாம்
. (35)


மாறாத இளமை என்ற பொருள் வருகிறது.  பாரததேவியை பாரதி பாடியிருப்பதிலும் 

(யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயங்கள் தாய் - இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள்எங்கள் தாய். )

இதே பொருள் பயின்று வரக் காணலாம்.  ழான், ராஜம் அவர்களுடைய கேள்வியை நான் சரியாகப் புரிந்துகொண்டிருந்தால் இந்த மேற்கோள்கள் பயன்படலாம்.  குறிப்பாக ழான் எழுப்பும் கேள்விகள் எனக்குச் சரியாக விளங்கவில்லை.

கொற்றவையும் துர்க்கையும், போருக்குரிய கடவுளராகவே கருதப்பட்டிருக்கின்றனர்.  பாரதப் போருக்கு முன்னால் அர்ஜுனனுக்கு, கிருஷ்ணன் துர்க்கா ஸ்தோத்திரம் சொல்லிக் கொடுப்பதைக் காணலாம்.  எனவே, War Goddess என்ற கருதுகோள் இந்திய நாடு முழுமைக்கும் உரியதாகிறது.

ழான் அவர்கள் தன்னுடைய வினாக்களைச் சற்றுத் தெளிவுபடுத்தினால் அந்த வகையில் சிந்திக்க ஏதுவாகும்.

நன்றி.  பொருத்தமில்லாத பேச்சுளைப் பேசியிருந்தால் மன்னிக்கவும். :)

--
அன்புடன்,
ஹரிகி.

Jean-Luc Chevillard

unread,
Dec 5, 2011, 5:22:21 AM12/5/11
to mint...@googlegroups.com, Hari Krishnan
Dear Hariki,

I won't have time to take part in this thread (or in other threads)
for quite some time.

thanks for your quotations.

If what I said was unclear,
it is probably because I am trying to imagine
a situation about which too little is known.

What was Tamil Nadu like
when the பன்னிரு திருமுறை
and the நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
had not yet been composed
and when all the temples that exist now had not yet been built?

But these are probably not questions
which can be asked on a mailing list
because many people may not like the idea
that the specific gods whom they worship have had a beginning
(பிறப்பதுமில்லை மூப்பதுமில்லை)
and that their ancestors did things differently.

And the same thing applies to languages

Best wishes

-- ழான் (Paris)

N. Ganesan

unread,
Dec 5, 2011, 7:25:05 AM12/5/11
to மின்தமிழ்

On Dec 5, 2:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/12/5 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
> > கண்ணை உருட்டி மிரட்டி கன்னித் தமிழ் என்பதே அசிங்கம் என்று ஒரே போடாய்ப்
> > போட்டு வாய்ப்பூட்டு போட்டுவிட்டீர்கள்.
> > இப்போது கன்னித் தமிழ் தமிழ் இசைப் பாடல்களில்
>
> இந்த இழையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்.  கன்னித் தமிழ், கன்னித்
> தமிழ்நாடு போன்ற பிரயோகங்கள் எப்போதிலிருந்து இலக்கிய ஆட்சிக்குள்
> வந்திருக்கலாம் என்று இந்த இழை தொடங்கிய நாளாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
>  முதலில் கவனத்துக்கு வந்தவன் பாரதி.
>
> பாரதி ‘கன்னி’ என்ற அடையால் குறிப்பிடுவது பாரதநாடு மொத்தத்தையும்.
>  எடுத்துக்காட்டாக,
>
> தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
> சூழ்கலை வாணர்களும் - இவள்
> என்று பிறந்தவள் என்றுண ராத
> இயல்பின ளாம் எங்கள் தாய்.
>
> யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
> ளாயினு மேயங்கள் தாய் - இந்தப்

> *பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
> *
> *பயின்றிடு வாள்எங்கள் தாய்*.


>
> இதைத் தவிர, கண்ணம்மாவை ‘பொன்னைய நிகர்த்த மேனி’ பாடலில்
>
> பொன்னையே நிகர்த்த மேனி
> மின்னையே நிகர்த்த சாயல்

> பின்னையே *நித்ய கன்னியே*


> கண்ணம்மா
>
> நித்ய கன்னி என்றொரு ஆட்சியையும் பயன்படுத்துகிறான்.  ஆனால், தமிழையோ,
> தமிழ்நாட்டையோ கன்னி என்ற அடையால் குறித்திருக்கும் பாடல் எதுவும் இல்லையென்றே
> தோன்றுகிறது.  குறைந்தது, தற்போது நினைவில் தட்டுப்படவில்லை.
>

குயில்பாட்டில்.

நா. கணேசன்

> பிறகு, கன்னித் தமிழ்நாடு என்ற ஆட்சி எவ்வளவு தொன்மையானது என்பதை டிஜிடல்
> ஸர்ச் மூலமாகப் பிடிக்கலாம் என்று நினைத்ததில் இது சிக்கியது:
>
> மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்
> பார்த்திபர் பிறரும் தத்தம் பதிதொறும் வரவு நோக்கித்
> தேர்த்திகழ் அனிகத் தோடும் சென்று எதிர் முகமன் செய்யத்

> தார்த் திரு மார்பன் *கன்னித் தண் தமிழ் நாடு *சார்ந்தான்.


>
> திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், மேருவைச் செண்டால் அடித்த படலம்.
>
> தமிழ் வர்ச்சுவல் யுனிவர்சிடியில் இந்தப் பாடலுக்கான ந மு வேங்கடசாமி
> நாட்டாரவர்கள் உரை உள்ளது:
>
> நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்
> உரை
>

> *மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்


> பார்த்திபர் பிறருந் தத்தம் பதிதொறும் வரவுநோக்கித்
> தேர்த்திக ழனிகத் தோடுஞ் சென்றெதிர் முகமன் செய்யத்*

> தார்த்திரு மார்பன் கன்னித் தண்டமிழ் நாடு சார்ந்தான்.*
>
>     * (இ - ள்.)* மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க


> தேயப் பார்த்திபர் பிறரும் - மத்திம நாட்டு மன்னரும் விராடநாட்டு
> மன்னரும் மாளவநாட்டு மன்னரும் தெலுங்க நாட்டு மன்னரும் ஏனை
> மன்னர்களும், தத்தம் பதிதொறும் - தம் தம் நகரங்கள் தோறும்,
> வரவு நோக்கி - (தனது) வருகையை எதிர்நோக்கி, தேர்திகழ்
> அனிகத் தோடும் சென்று எதிர் முகமன் செய்ய - தேருடன்
> விளங்கும் சேனைகளோடும் கென்று எதிர்கொண்டு உபசாரஞ்
> செய்ய (அதனையேற்று), தார் திருமார்பன் - மாலை யணிந்த
> அழகிய மார்பினையுடைய உக்கிர குமாரன் தண் தமிழ் கன்னி நாடு
> சார்ந்தான் - தண்ணிய தமிழ் (வழங்கும்) பாண்டி நாட்டை
> அடைந்தான் எ-று.
>
>      மாத்திமர் முதலியவற்றில் எண்ணும்மை விரிக்க. எதிர் - எதிர்
> கொண்டென்க. கன்னித் தமிழ் - அழியாத தமிழ், இளமை மாறாத
> தமிழ் எனத் தமிழுக்கு அடையாக்கலுமாம். (35)
>
> மாறாத இளமை என்ற பொருள் வருகிறது.  பாரததேவியை பாரதி பாடியிருப்பதிலும்
>
> (யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
> ளாயினு மேயங்கள் தாய் - இந்தப்

> *பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
> *
> *பயின்றிடு வாள்எங்கள் தாய்*. )

N. Ganesan

unread,
Dec 5, 2011, 7:26:41 AM12/5/11
to மின்தமிழ்

On Dec 5, 4:22 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> Dear Hariki,
>
> I won't have time to take part in this thread (or in other threads)
> for quite some time.
>
> thanks for your quotations.
>
> If what I said was unclear,
> it is probably because I am trying to imagine
> a situation about which too little is known.
>
> What was Tamil Nadu like
> when the பன்னிரு திருமுறை
> and the நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
> had not yet been composed
> and when all the temples that exist now had not yet been built?
>
> But these are probably not questions
> which can be asked on a mailing list
> because many people may not like the idea
> that the specific gods whom they worship have had a beginning
> (பிறப்பதுமில்லை மூப்பதுமில்லை)
> and that their ancestors did things differently.
>
> And the same thing applies to languages
>
> Best wishes
>
> -- ழான் (Paris)
>

we can take these in your CTamil list.

NG

N. Ganesan

unread,
Dec 5, 2011, 7:34:34 AM12/5/11
to மின்தமிழ்

On Dec 3, 1:28 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Dec 3, 8:22 pm, rajam <ra...@earthlink.net> wrote:
>
> > her virginity. Did Tamil go through such intercourse?
>
> Tamil did not go through such an intercourse. Tamil started (literary)
> career AFTER such intercourse.
>
> Pre-intercourse Tamil is only a logical contruct, it does not and did
> not exist in history.
>
> Vijayaraghavan

Deep penetration happened both in sanskrit (say, bharatmata)
and in tamil (say, tamil thaay) & starts some 3500 years ago in Indus
region (esp. Sindh, Gujarat regions). The technologies of religion,
agriculture spread southward say from 800 BC to Tamizakam, Lanka.
Those northeners carry much culture and technology, these vELir sites
are in Porunthal, Adhiccanallur, Kodumanam, Kolli hills, Kollam,
Halebid (dvAra samudram), BelgAm (= vEL grAma), ...

Nagarajan's wiki quotation does not prove to me that
kan22ni is from Sanskrit kan2yA. The primary meaning
seems to be "daughter" in Tamil then shifted to "little girl".
Cf. kan2Ru < kal-/karu.

I will write in a separate thread mail.

N. Ganesan

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2011, 8:30:33 AM12/5/11
to mint...@googlegroups.com
ஐயா சாமி
கண்ணைக் கட்டுதே.  சம்ஸ்கிரிதம் கலக்காத தமிழே தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்பது உங்கள் வாதமா? 

Deep penetration happened both in sanskrit (say, bharatmata) and in tamil (say, tamil thaay) & starts some 3500 years ago in Indus
region (esp. Sindh, Gujarat regions). The technologies of religion, agriculture spread southward say from 800 BC to Tamizakam, Lanka.
Those northeners carry much culture and technology, these vELir sites are in Porunthal, Adhiccanallur, Kodumanam, Kolli hills, Kollam,
Halebid (dvAra samudram), BelgAm (= vEL grAma), ...


கணேசர் ஐயா கன்னின்னு சொன்னா கண்டதுண்டமா வெட்டிப்புடுவேன் என்று மதுரைக்காரம்மா விரட்டிக்கிட்டுருக்காங்கோ.  இப்ப நீங்க பாரத மாதா தமிழ்த் தாய்னு ரெண்டு பிட்டைப் போடறீங்களே நாயமா

இப்பதான் எனக்கு ஒரு இனைய இணைப்பு  நினைவுக்கு வந்தது.  நீங்க ஒரு விஞ்ஞானி முனைவர்தானுங்களே.  வர வர மின் தமிழ் உலக இணையதள் வரலாற்றில்முதல் முறையாக என்ற ரேஞ்சில் அதிரடித் தகவல்களை தமிழ்த் திரைப்படங்கள்போல் திகில் காட்சியாக கானா உலகநாதன் வாலைமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம் ரேஞ்சில் சொல்றாய்ங்களே.

Once, Newton came to India and watched a few Tamil movies that had his head spinning. He was convinced that all his logic and laws in physics were just a huge pile of junk and apologized for everything he had done.

In the movie of Rajanikanth, Newton was confused to such an extent that he went Paranoid. Here are a few scenes ---

1) Rajanikanth has a Brain Tumor which, according to the doctors can't be cured and his death is imminent. In one of the fights, our great Rajanikanth is shot in the head. To everybody's surprise, the bullet passes through his ears taking away the tumor along with it and he is cured! Long Live Rajanikanth!

2) In another movie, Rajanikanth is confronted with 3 gangsters.Rajanikanth has a gun but unfortunately only one bullet and a knife. Guess, what he does?

He throws the knife at the middle gangster & shoots the bullet towards the knife. The knife cuts the bullet into 2 pieces, which kills both the gangsters on each side of the middle gangster & the knife kills the middle one.

3) Rajanikanth is chased by a gangster. Rajanikanth has a revolver but no bullets in it. Guess, what he does. Nah? not even in your remotest imaginations.

He waits for the gangster to shoot. As soon as the gangster shoots, Rajanikanth opens the bullet compartment of his revolver and catches the bullet. Then, he closes the bullet compartment and fires his gun.

Bang... the gangster dies...

This was too much for our Newton to take! He was completely shaken and decided to go back. But he happened to see another movie for one last time, and thought that at least one movie would follow his theory of physics. The whole movie goes fine and Newton is happy that all in the world hasn't changed.

Oops, not so fast!

The 'climax' finally arrives.

Rajanikanth gets to know that the villain is on the other side of a very high wall. So high that Rajanikanth can't jump even if he tries like one of those superman techniques that our heroes normally use. Rajanikanth has to desperately kill the villain because it's the climax. (Newton dada is smiling since it is virtually impossible?)

Rajanikanth suddenly pulls two guns from his pockets. He throws one gun in the air and when the gun has reached above the height of the wall, he uses the second gun and shoots at the trigger of the first gun in air. The first gun fires off and the villain is dead.

Newton commits suicide...


நாகராசன்


2011/12/5 N. Ganesan <naa.g...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 5, 2011, 8:49:27 AM12/5/11
to mint...@googlegroups.com


2011/12/5 N. Ganesan <naa.g...@gmail.com>

> நித்ய கன்னி என்றொரு ஆட்சியையும் பயன்படுத்துகிறான்.  ஆனால், தமிழையோ,
> தமிழ்நாட்டையோ கன்னி என்ற அடையால் குறித்திருக்கும் பாடல் எதுவும் இல்லையென்றே
> தோன்றுகிறது.  குறைந்தது, தற்போது நினைவில் தட்டுப்படவில்லை.
>

குயில்பாட்டில்.

நா. கணேசன்

நன்றி.  ஆனால் குயில் பாட்டில் கன்னி என்ற சொல் பயின்றுவரும் மூன்று இடங்களிலும் அது குயிலுக்கு அடைமொழியாகப் பயன்பட்டுள்ளது.   செந்தமிழ்த் தென்புதுவை என்னும திருநகர்; மூன்று தமிழ்நாட்டில்;  ஆன்ற தமிழ்ப்புலவீர் என்று தமிழ் என்ற சொல்லும் மூன்றே இடங்களில்தான் ஆளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைக் கன்னியாகக் குறித்திருப்பது எங்கே என்பதைச் சொல்ல முடிந்தால், உபாசாரத்துக்காக இல்லை, உண்மையிலேயே அதற்குரிய நன்றியுடையவனாக இருப்பேன்.

விஜயராகவன்

unread,
Dec 5, 2011, 9:21:15 AM12/5/11
to மின்தமிழ்
On Dec 5, 2:30 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> ஐயா சாமி
> கண்ணைக் கட்டுதே.  சம்ஸ்கிரிதம் கலக்காத தமிழே தமிழ்நாட்டில் இருந்ததில்லை
> என்பது உங்கள் வாதமா?

உங்களுடைது, எதிர்வாதமாக இருந்தால், தரவுகளையும் பனுவல்களையும்
கொண்டுவாங்கள்.

சம்ஸ்கிரிதம் கலக்காத தமிழ் தரவுகளை கையில் வைத்துக் கொண்டு மற்றவர்களை
வஞ்சிக்காதீர்கள்.

வகொவி


விஜயராகவன்

unread,
Dec 5, 2011, 9:35:14 AM12/5/11
to மின்தமிழ்
On Dec 5, 7:48 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> கண்ணை உருட்டி மிரட்டி கன்னித் தமிழ் என்பதே அசிங்கம் என்று ஒரே போடாய்ப்
> போட்டு வாய்ப்பூட்டு போட்டுவிட்டீர்கள்.

ரொம்ப இன்னொசெண்ட் விக்டிமாக நினைக்க வேண்டாம். வி.எஸ். ராஜத்தின்
கேள்விகள் வேறு , அதுயார் வாய்லேயும் எதுக்கும் பூட்டி போடவில்லை.

கேள்விகள் உங்கள் நினைவுக்கு

http://groups.google.com/group/mintamil/msg/56d9dc16135eb736


> என் நிலை கன்னித் தமிழ் தனித் தமிழைக் குறிப்பதுவே


விளக்கத்துக்கு நன்றி


> எனக்குத் தெரிந்து தனித் தமிழ் பேசிய இருவர்
> 1. சாத்தையா என்ற தமிழ்க் குடிமகன்.  அவர் தனித் தமிழில் பேசுவார். ஆனால்
> மற்றவர்கள் கலப்பு மொழி பேசினால் தனித் தமிழில் பேசுமாறு வற்புறுத்தியதில்லை
> 2. எனது இளவல் - தங்கராஜன் என்ற பெயரைப் பொன்னரசன் என்றூ மாற்றிக்கொண்டு தனித்
> தமிழ் பேசுபவர்.  அவரது பணி ஆங்கிலப் பேராசிரியர்.  வகுப்பறையில் ஆங்கிலம்
> நடத்துவார் வெளியில் தனித் தமிழில் பேசுவார்.
> இப்போது கன்னித் தமிழர்கள் தனித் தமிழ் பற்றாளர்களாகத் தமிழகத்தில் இப்பவும்
> இருக்கிறார்கள்.
> நாகராசன்

இந்த இருவரும் எங்கெங்கு தனித்தமிழில் பேசிக் கொள்வர்? அவர்கள்
குழைந்தயிடம்? அவர்கள் “தனித்தமிழின்” சாம்பிள் கிடைக்குமா????

பொன்னாரசன் என்பதில் அரசன் பிராக்ரித் / சமஸ்கிருதத்திலிருந்தே
வருவதாச்சே? ஏன் பொற்கோ என பேர் வைக்கவில்லை.


கலப்படமில்லாத “தனித்தமிழ்” பேசுவது நாடகம்தான் - அதுவும் சில இடங்களில்.
அதிலேயும் எது “தனித்தமிழ்” என பார்க்கலாம்


வகொவி

செல்வன்

unread,
Dec 5, 2011, 9:45:06 AM12/5/11
to mint...@googlegroups.com


2011/12/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>
ரசித்தேன் :-)

சரி பட்டியலில் வேறு என்னென்ன இருந்தன.. கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள் செல்வன்.


வீரம் என்றனர்
விருந்தோம்பல் என்றனர்
வந்தாரை வாழவைக்கும் குணமென்றனர்
நீதி என்றனர்,
அறம் என்றனர்
அன்றிலங்கை பற்றி எரிந்ததால்
ஒற்றுமையின்மை,
தொப்புள்கொடி உறவுகளை
சாகவிடுதல் என்றொருவர் கசப்புடன் பகர்ந்தார்
ரசினியெனும் மாயையில் மயங்கி கிடக்கும்
குணமென்றொருவர் கோபித்தார்
நடிகைகள் பின்செல்வதை
நல்லோர் ஒருவர் கடிந்தார்
அனைத்தும் தனிகுணமா
உலகின் பொதுகுணமா
என நான் வினவியதற்கு
பதிலில்லை இதுவரை

--
செல்வன்

தாயுடன் தந்தையின் பாதம் என்றும் தலை வணங்காதவன்
நாள் தவறாமல் கோவிலில் சென்று என்ன காண்பான்?
நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ
?





Nagarajan Vadivel

unread,
Dec 5, 2011, 10:21:25 AM12/5/11
to mint...@googlegroups.com
எதிர்வாதம் 1
http://books.google.co.in/books?id=sqBjpV9OzcsC&pg=PA38&dq=tamil+without+sanskrit&hl=en&ei=k9XcTsqsNobRrQfavrTrDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDgQ6AEwAA#v=onepage&q=tamil%20without%20sanskrit&f=false

tamil1.jpgtamil2.jpg


எதிர்வாதம் 2

http://books.google.co.in/books?hl=en&lr=&id=ERq-OCn2cloC&oi=fnd&pg=PA160&dq=history+of+ancient+tamil+kings&ots=FrZknBKrET&sig=cgaD0IDwHULcHnCCZpILd16icu8#v=onepage&q=history%20of%20ancient%20tamil%20kings&f=false

tamil4.jpgtamil5.jpgtamil7.jpgtamil8.jpg

விதண்டாவாதம்
எல்லாம் சரிங்க.  தமிழ்நாட்டு மறவர்கள் பூமராங்கைப் போரில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்கள்.  நீங்க தமிழ் சமஸ்கிரிதக் கலப்பு பற்றீ சமஸ்கிரிதம் தமிழ் இரவல் பெற்ற கருத்து வளங்களைப் பற்றிப் பேசவே மாட்டேன் என்கிறீர்களே.  தமிழ் சமஸ்கிரிதத்துடன் புணரவில்லை தனித்தமிழ் போல் சமஸ்கிரிதம் என்றென்றும் கலப்பில்லாத தனிமொழி என்பது உங்கள் வாதமா?  அப்படி இருந்தால் நீங்களும் மறைக்காமல் உங்கள் ஆதாரங்களை எடுத்து விடுங்களேன்
நாகராசன்

2011/12/5 விஜயராகவன் <vij...@gmail.com>
tamil8.jpg
tamil4.jpg
tamil2.jpg
tamil1.jpg
tamil5.jpg
tamil7.jpg

Vij

unread,
Dec 5, 2011, 11:11:11 AM12/5/11
to mint...@googlegroups.com
ஐயா நாகராசர்
 
உங்கள் “தனித்தமிழ்”  தரவுகள் இப்படி இருக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
 
 
நீங்கள் கொடுத்திருப்பது ஆங்கிலம் போல் இருக்கு. மற்றவர்கள்   அதை ஊர்ஜிதப்படுத்தலாம்.   எதோ திருக்குறள், அதுக்கு முன்னாடி குறள்கள், இதைப்போல் எதோ எதிர்பார்த்தால், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில அபிப்பிராயங்கள் கிடைக்கின்றனர்.
 
 
ஒரு வேளை இங்கிலாந்தில்தான் தனித்தமிழ் அதாவது கன்னித்தமிழ் இருந்ததோ??
 
 
வகொவி
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
tamil1.jpg
tamil2.jpg
tamil4.jpg
tamil5.jpg
tamil7.jpg
tamil8.jpg

rajam

unread,
Dec 5, 2011, 11:20:10 AM12/5/11
to mint...@googlegroups.com, Hari Krishnan
இந்தப் பதிவு ஹரிகி கேட்ட கேள்விக்காக:
-----------------------------------------------

அன்பின் ஹரி,

தமிழ்நாட்டைக் கன்னியாகக் குறித்திருப்பது எங்கே என்பதைச் சொல்ல முடிந்தால், உபாசாரத்துக்காக இல்லை, உண்மையிலேயே அதற்குரிய நன்றியுடையவனாக இருப்பேன்.

இந்த இழையின் பதிவுகள் அனைத்திலும் தொடக்கத்திலிருந்து நான் கொடுத்திருக்கும் குறிப்புகளில் உங்கள் கேள்விக்கு விடை இருக்கலாம்:

1. முதல் முதலில் யாப்பருங்கலக் காரிகையில் "கானார் மலயத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ்நூல்" என்று வருகிறது.

2. அதைவைத்தும், மணிமேகலையில் "கவேர கன்னி" என்று காவிரியைக் குறித்திருப்பதும், அகத்தியன் தமிழ் பரப்பிய நம்பிக்கை தமிழகத்தில் ஒருகாலத்தில் இருந்ததும் கொண்டு ... என் ஊகம் இது: இந்தக் "கன்னித்தமிழ்" என்பது அகத்தியனால் பரப்பப்பட்ட தமிழ் என்ற பொருளில் முதலில் தொடங்கியிருக்கவேண்டும்.

3. ழான் கொடுத்த குறிப்பு பெரியபுராணத்திலிருந்து: "கன்னித் தமிழ் நாட்டுத் திருமாமதுரை முதலான ... மூதூர்கள்"
4. மேற்கண்ட குறிப்பு (#3) பிற்காலத்தது என்று நான் சொன்னேன்.

5. என் முதல் கேள்வி எங்கோ தள்ளப்பட்டுவிட்டது. "கன்னித்தமிழ்" என்றால் அடிப்படைப் பொருள் என்ன என்று கேட்டேன். அதற்கு நேரிடையான விளக்கம் கிடைக்கவில்லை. "இளமைத் குன்றாத தமிழ்" "தனித் தமிழ்" என்று சொல்லிவருகிறார்கள். அது எனக்கு ஏற்புடைத்தாக இல்லை.
அன்புடன்,
ராஜம்



Nagarajan Vadivel

unread,
Dec 5, 2011, 11:20:43 AM12/5/11
to mint...@googlegroups.com
அடடா
நான் ஒரு மடச் சாம்பிரானி
உங்களைப் போன்ற அறிஞர்கள் தூங்காமல் தூங்கி பதில் சொல்லாமல் நழுவுவது தெரிந்து நான்என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்
நீங்கள் ஆதாரம் கேட்டீர்கள் கொடுத்தேன்.  நீங்க சொல்லித்தான் தெரியுது அவர்கள் தமிழர்களே அல்ல.  ஆங்கிலம் போன்ற (உங்களுக்குப்) புரியாதமொழியில் அவர்கள் எழுதியதைக் கொடுத்துவிட்டேன்
அருள் கூர்ந்து இந்த அறிவிலியை மன்னித்து விடுங்கள்
நாகராசன்

2011/12/5 Vij <vcv...@hotmail.com>
tamil7.jpg
tamil4.jpg
tamil8.jpg
tamil5.jpg
tamil2.jpg
tamil1.jpg

Samy

unread,
Dec 5, 2011, 9:41:50 AM12/5/11
to மின்தமிழ்
அம்மா,
> இந்த மாதிரி
> உணர்ச்சிவசப்பட்டுப்
> பேசி, இந்தக் கூட்டத்தில்
> என்னைச் சேர்த்தால்
> உங்களைத் தமிழன்னை
> மன்னிக்கமாட்டாள்!
> சொல்லிவிட்டேன்! உங்கள்
> பின்புலம் எனக்குத்
> தெரியாததால் இவ்வளவுதான்
> இப்போதைக்கு என்னால்
> சொல்லமுடிய
இதை நன் உங்களைக் குறித்து எழுதியதல்ல.
இங்கு தமிழ் அதுவும் தனித்தமிழென்றாலே அது
போன்று ஒன்றுமில்லை, கலப்பில்லா தமிழை
நினைத்தாலே வெறியர்கள், ஒதுக்கப் பட
வேண்டியவர்களென்று கூறியும், நக்கல்
அடித்துக்கொண்டும் இருகின்றார்களே
அவர்களைக் குறித்து கூறியது. இதனால்
உங்கள் மனம் புண்பட்டிருந்தால்
மன்னித்துவிடவும்.
> இளமையாக" என்றால் என்ன
> பொருள்?
> "பயன்பாட்டில் உள்ள மொழி"
> என்றால் இன்று
> பயன்பாட்டில் உள்ள
> மொழிகள்
> பல்லாயிரக்கணக்காணவையே!
மிகப் பழமையான மொழியாக இருந்தாலும்
இன்றும் இளமை மாறாமல் பயன்பாட்டிலுள்ள
மொழியென்ற பொருளில் கூறினேன்.
நான் தமிழ் தமிழில் புலமை பெற்றவனல்லன்.
அவ்வளவு இலக்கியப் பழக்கமும் கிடையாது.
இணையவழியாக யறிந்ததில் கன்னித்தமிழுக்கு
கிடைத்த பல பொருள்களில் ’இன்றும் இளமை
மாறத மொழி’ உங்கள் வினாவிற்கு ஏற்ற
விடையாக தோன்றியது அதையே எழுதினேன்.
உங்கள் வினா விற்குப் பிறகு ‘கன்னித் தமிழ்’ பற்றிய புரிதலில் நல்ல
தெளிவு வரும் என்பதில் ஐயமில்லை
நன்றி
சாமி


On Dec 5, 12:40 am, rajam <ra...@earthlink.net> wrote:
> On Dec 4, 2011, at 6:41 AM, Samy wrote:
>
>
>
> > கன்னி என்பதற்கு virgin
> > என்று நேரடி பொருள் கொண்டு
> > அதற்கு உடல்ரீதியான
> > விளக்கம்
> > கொடுதிருக்கிறீர்கள்.
> > கன்னித்தன்மை என்றாலே
> > எல்லாருக்கும் விளங்குமே!!
> > இங்கும் அதை அறியாத
> > சிறுவர்கள்
> > இருப்பார்களென்று
> >  எண்ணி விலாவாரி
> > விளக்கம்
> > கொடுத்திருக்கின்றீர்
> > போலும்: -))
> > இதையே தமிழில்
> > கொடுதிருந்தால்
> > இன்னும் சிறப்பாக
> > இருந்திருக்கும்.
>
> ஐயா,


>
> மன்னிக்கவும்.

> "கன்னித்தமிழ்" என்பதற்கு
> என்ன பொருள் என்று நான்
> கேட்டேன். யாரும்
> நேரடியான மறுமொழி
> தரவில்லை. அதனால் ஒரு
> தொடக்கம். அவ்வளவே. அதை
> மறுங்கள், எனக்குக்
> கவலையில்லை.
>
>
>
> >  கன்னி என்பதை
> > கன்னித்தன்மை என்று
> > பொருள் கொள்ளாமல்
> > இளமையான என்று பொருள்
> > கொண்டால் இளமை மாறத தமிழ்.
> >  ஆண்டு பலவானாலும் சில
> > மொழிகளைப் போல்மூப்பெய்தி
> >  வழக்கொழிந்து போகாமல்
> > இன்றும் இளமையாக
> > பயன்பாட்டில்
> > உள்ள மொழியென்று பொருள்
> > கொள்ளவேண்டும்.
>
> இந்தப் பொருளுரை என்
> அறிவுக்குப்
> பொருந்திவரவில்லை. "சில
> மொழிகளைப்போல்
> மூப்பெய்தி" "இன்றும்
> இளமையாக" என்றால் என்ன
> பொருள்?
>   "பயன்பாட்டில் உள்ள மொழி"
> என்றால் இன்று
> பயன்பாட்டில் உள்ள
> மொழிகள்
> பல்லாயிரக்கணக்காணவையே!
>
>
>
> > தமிழென்றாலே சிலருக்கு
> > கசக்கிறது
> > அதைப் பாராட்டி விட்டாலோ
> >  உடலே எரிகிறது.
>
> இந்த மாதிரி
> உணர்ச்சிவசப்பட்டுப்
> பேசி, இந்தக் கூட்டத்தில்
> என்னைச் சேர்த்தால்
> உங்களைத் தமிழன்னை
> மன்னிக்கமாட்டாள்!
> சொல்லிவிட்டேன்! உங்கள்
> பின்புலம் எனக்குத்
> தெரியாததால் இவ்வளவுதான்
> இப்போதைக்கு என்னால்
> சொல்லமுடியும்.
>
> > அதற்கு நாம் என்ன
> > செய்யமுடியும்.: -))
>
> முதல்படியாக ...
> "கன்னித்தமிழ்" என்ற
> சொல்லாட்சி எப்போது
> வழ்க்கிற்கு வந்தது
> என்று தெரிந்து
> பிறருக்குச் சொல்லி
> உதவுங்கள்; அது நல்லது.
>
> > சாமி


>
> அன்புடன்,
> ராஜம்
>
>
>

> > On Dec 4, 12:22 am, rajam <ra...@earthlink.net> wrote:
> >> ஓகை நடராசன் ஐயா, வணக்கம்!
> >> முதலில் என் அடிப்படைக்
> >> கேள்விக்கு விடை தந்தால்
> >> மகிழ்வேன்:
>
> >> தங்கள் கருத்துப்படி ...
> >> "கன்னித்தமிழ்" என்றால்
> >> என்ன? விளக்குவீர்களா?
> >> அதன் பின்னரே பிற
> >> கருத்துரையாடல்களுக்குப்
> >> பொருள் கிடைக்கும்.
>
> >> Now, I'm taking the liberty of saying something that may not be
> >> suitable for some folks in this audience, in which case kindly ignore
> >> my current posting. "Virginity" is defined by the presence of a
> >> physical organ in a human female body, and that is called "hymen." As
> >> long as that "hymen" is intact in a female body, she is considered a
> >> "virgin." Once that hymen is poked by an external source, such as for
> >> example during a sexual intercourse, she is considered to have lost


> >> her virginity. Did Tamil go through such intercourse?
>

> >> இதற்கு விடை சொல்லுமுன் ...


> >> "கன்னித்தமிழ்"

> >> என்பதற்குத் தங்கள்
> >> சொந்த விளக்கமும் தந்து
> >> உதவினால் மகிழ்வேன்.
>
> >> நன்றியுடன்,
> >> ராஜம்
>
> >> On Dec 3, 2011, at 10:23 AM, OAGAI NATARAJAN wrote:
>
> >>> //4. பிறமொழிச் சொற்கள்


> >>> கலவாத தமிழ்தான்
> >>> "கன்னித்தமிழ்" என்றால் ....
> >>> மணிமேகலை போன்ற
> >>> காப்பியங்களைக்

> >>> கிழித்து


> >>> எறிந்துவிடவேண்டும்; அவை
> >>> தமிழ்க் காப்பியங்கள்
> >>> என்று சொந்தம் கொண்டாட
> >>> முடியாது. அதைச் செய்யத்

> >>> தயாராக இருக்கிறோமா?//
>
> >>> மணிமேகலை ஒரு
> >>> கன்னித்தமிழ் காப்பியம்
> >>> இல்லை என்று சொல்லிவிட
> >>> வேண்டியதுதானே, அதற்காக
> >>> ஏன்
> >>> கிழித்துவிடவேண்டும்
> >>> என்றெல்லாம்
> >>> சொல்கிறீர்கள்? ஏன் இந்த
> >>> வன்முறை சொல்லாடல்?
>
> >>> //6. "கன்னித்தமிழ்" என்று


> >>> சொல்வதினால் என்ன பயன்

> >>> பெறுகிறோம்? //
>
> >>> தமிழ் மொழியின் மிகப்
> >>> பெரும்பான்மையான
> >>> வினைச்சொற்களும்
> >>> இலக்கணமும் மற்ற இந்திய
> >>> மொழிகளைப்ப்போல்
> >>> வடமொழி தாக்கமில்லாமல்
> >>> இருக்கின்றன. இந்தத்
> >>> தனித்தன்மையைக்
> >>> கருதினால் கன்னித் தமிழ்
> >>> என்ற விவரிப்பு
> >>> பொருத்தமாகத்தான்
> >>> இருக்கிறது.


>
> >>> On Sat, Dec 3, 2011 at 10:32 PM, rajam <ra...@earthlink.net> wrote:
> >>> முகப்புரை
> >>> --------------
> >>> நேற்று (கலிபோர்னியாவில்
> >>> நவம்பர் 2, 2011) திரு கண்ணன்
> >>> நடராசன் அவர்கள்
> >>> மின்தமிழில் இட்ட ஒரு

> >>> பதிவு தினமணியில்


> >>> வெளிவந்த சாமி
> >>> சிதம்பரனார் அவர்களின்
> >>> கட்டுரை. அந்தக்

> >>> கட்டுரையில் தமிழின்
> >>> புகழ்


> >>> பாடப்பட்டிருந்தது.
> >>> அதில் பயன்படுத்தப்பட்ட

> >>> "கன்னித்தமிழ்" என்ற


> >>> சொல்லாட்சியின் பொருளை
> >>> வினவினேன். அது தொடர்பாக
> >>> இந்தப் புதிய இழையைத்
> >>> தொடங்குகிறேன்.
>
> >>> முன் குறிப்பு
> >>> ---------------
> >>> தமிழ் மொழிமேல் எனக்குத்
> >>> தனிப்பட்ட முறையில்
> >>> இருக்கும் அன்பை/காதலை/
> >>> காமத்தை/மதிப்பை/
> >>> பெருமிதத்தைப் பற்றி
> >>> யாரும் ஐயுறத்
> >>> தேவையில்லை; ஐயுற்றால்
> >>> வம்பு! :-)
> >>> கேள்விகள்
> >>> ---------------

> >>> 1. "கன்னித்தமிழ்" என்ற


> >>> சொல்லாட்சியை யார்
> >>> எப்போது எங்கே முதன்
> >>> முதலில்
> >>> பயன்படுத்தினார்கள்,
> >>> நினைவில் இருக்கிறதா?
> >>> (இதற்கு விடை முன்பு
> >>> ஒருமுறை மின்தமிழிலோ
> >>> அல்லது CTamil-இலோ
> >>> சொல்லியிருந்தேன்.)
> >>> 2.
>

> ...
>
> read more »

ARTHANARI RAMASAMY

unread,
Dec 5, 2011, 10:17:17 AM12/5/11
to mint...@googlegroups.com
கன்னி தமிழ்
கன்னி பெண்

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்

ஏன் விவாதம் : திருமணம் ஆகாத இளமையுடன் இருக்கும் பெண்
தமிழ் இளமை குறையாத வனப்பு மிக்க பெண் போன்றவள்

போதுமடா சாமீ

 



2011/12/5 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
HORIZONS
25/2 POSTAL COLONY
COLLEGE ROAD
TIRUPUR 641602

rajam

unread,
Dec 5, 2011, 11:46:11 AM12/5/11
to mint...@googlegroups.com, ARTHANARI RAMASAMY

On Dec 5, 2011, at 7:17 AM, ARTHANARI RAMASAMY wrote:

கன்னி தமிழ்
கன்னி பெண்

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்

ஏன் விவாதம் : திருமணம் ஆகாத இளமையுடன் இருக்கும் பெண்
தமிழ் இளமை குறையாத வனப்பு மிக்க பெண் போன்றவள்

போதுமடா சாமீ
இப்படி அலுப்புத் தட்டினால் இழையில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கலாமே! :-)

rajam

unread,
Dec 5, 2011, 11:49:57 AM12/5/11
to mint...@googlegroups.com, ARTHANARI RAMASAMY
இந்த இழையின் பதிவுகள் அனைத்திலும் தொடக்கத்திலிருந்து நான் கொடுத்திருக்கும் குறிப்புகளில் உங்கள் கேள்விக்கு விடை இருக்கலாம்:


1. முதல் முதலில் யாப்பருங்கலக் காரிகையில் "கானார் மலயத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ்நூல்" என்று வருகிறது.


2. அதைவைத்தும், மணிமேகலையில் "கவேர கன்னி" என்று காவிரியைக் குறித்திருப்பதும், அகத்தியன் தமிழ் பரப்பிய நம்பிக்கை தமிழகத்தில் ஒருகாலத்தில் இருந்ததும் கொண்டு ... என் ஊகம் இது: இந்தக் "கன்னித்தமிழ்" என்பது அகத்தியனால் பரப்பப்பட்ட தமிழ் என்ற பொருளில் முதலில் தொடங்கியிருக்கவேண்டும்.


3. ழான் கொடுத்த குறிப்பு பெரியபுராணத்திலிருந்து: "கன்னித் தமிழ் நாட்டுத் திருமாமதுரை முதலான ... மூதூர்கள்"

4. மேற்கண்ட குறிப்பு (#3) பிற்காலத்தது என்று நான் சொன்னேன்.


5. என் முதல் கேள்வி எங்கோ தள்ளப்பட்டுவிட்டது. "கன்னித்தமிழ்" என்றால் அடிப்படைப் பொருள் என்ன என்று கேட்டேன். அதற்கு நேரிடையான விளக்கம் கிடைக்கவில்லை. "இளமைத் குன்றாத தமிழ்" "தனித் தமிழ்" என்று சொல்லிவருகிறார்கள். அது எனக்கு ஏற்புடைத்தாக இல்லை.

அன்புடன்,
ராஜம்

On Dec 5, 2011, at 7:17 AM, ARTHANARI RAMASAMY wrote:

கன்னி தமிழ்
கன்னி பெண்

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்

ஏன் விவாதம் : திருமணம் ஆகாத இளமையுடன் இருக்கும் பெண்
தமிழ் இளமை குறையாத வனப்பு மிக்க பெண் போன்றவள்

போதுமடா சாமீ
இப்படி அலுப்புத் தட்டினால் இழையில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கலாமே! :-)

Innamburan Innamburan

unread,
Dec 5, 2011, 11:50:34 AM12/5/11
to mint...@googlegroups.com
அவர் அர்த்தநாரி பக்கமோல்லியோ!


2011/12/5 rajam <ra...@earthlink.net>

Dhivakar

unread,
Dec 5, 2011, 11:57:05 AM12/5/11
to mint...@googlegroups.com
கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம் (கண்ணதாசன்)

கவிஞர் சொல்படி திருவாசகம் தனித் த்மிழில் எழுதப்பட்டதாகக் கொள்ளமுடியுமோ? 

கன்னியாகுமர் அம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கன்யகா (வடமொழியில்) இவையெல்லாம் சாதாரணமாக ஒரு பெண்பால் தன்மையாக எடுத்துக் கொள்ளமுடியுமே தவிர வேறென்ன சிறப்புத் தன்மை இருக்கிறது? என் சிற்றறிவுக்குப் பொருத்தமட்டில் கன்னித்தமிழ் என்றாலும் தாய்த் தமிழ் என்றாலும் தமிழன்னை கொடுத்த தமிழ் என்றாலும் ஒன்றுதான். 

கன்னிப்பெண் என்றால் கல்யாணமாகாத பெண் என்று சொல்வதை விட இளமை குன்றாத பெண் என வருவது ஒரு பெண்ணுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். மொழிக்கு இப்படிக் கொள்வது சாத்தியப்படவில்லை. பெண்ணும் மொழியும் ஒன்றுதானா? இல்லவே இல்லை.

கன்னித் தமிழ் என்றால் அது தாய்த் தமிழ்தான் என்று கூவவேண்டும்போல உள்ளது. தாயே கன்னிகா பரமேஸ்வரி! கன்யாகுமரி அம்மே! நீ வந்து பதில் சொல்வாயா?

திவாகர்

2011/12/5 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Dec 5, 2011, 11:59:22 AM12/5/11
to mint...@googlegroups.com, Dhivakar V
இந்த இழையின் பதிவுகள் அனைத்திலும் தொடக்கத்திலிருந்து நான் கொடுத்திருக்கும் குறிப்புகளில் உங்கள் கேள்விக்கு விடை இருக்கலாம்:


1. முதல் முதலில் யாப்பருங்கலக் காரிகையில் "கானார் மலயத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ்நூல்" என்று வருகிறது.


2. அதைவைத்தும், மணிமேகலையில் "கவேர கன்னி" என்று காவிரியைக் குறித்திருப்பதும், அகத்தியன் தமிழ் பரப்பிய நம்பிக்கை தமிழகத்தில் ஒருகாலத்தில் இருந்ததும் கொண்டு ... என் ஊகம் இது: இந்தக் "கன்னித்தமிழ்" என்பது அகத்தியனால் பரப்பப்பட்ட தமிழ் என்ற பொருளில் முதலில் தொடங்கியிருக்கவேண்டும்.


3. ழான் கொடுத்த குறிப்பு பெரியபுராணத்திலிருந்து: "கன்னித் தமிழ் நாட்டுத் திருமாமதுரை முதலான ... மூதூர்கள்"

4. மேற்கண்ட குறிப்பு (#3) பிற்காலத்தது என்று நான் சொன்னேன்.


5. என் முதல் கேள்வி எங்கோ தள்ளப்பட்டுவிட்டது. "கன்னித்தமிழ்" என்றால் அடிப்படைப் பொருள் என்ன என்று கேட்டேன். அதற்கு நேரிடையான விளக்கம் கிடைக்கவில்லை. "இளமைத் குன்றாத தமிழ்" "தனித் தமிழ்" என்று சொல்லிவருகிறார்கள். அது எனக்கு ஏற்புடைத்தாக இல்லை.

அன்புடன்,
ராஜம்

Geetha Sambasivam

unread,
Dec 5, 2011, 3:13:42 PM12/5/11
to mint...@googlegroups.com
தமிழ்த் திரைப்படங்கள்போல் திகில் காட்சியாக கானா உலகநாதன் வாலைமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம் ரேஞ்சில் சொல்றாய்ங்களே. //



2011/12/5 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
ஐயா சாமி
கண்ணைக் கட்டுதே.  சம்ஸ்கிரிதம் கலக்காத தமிழே தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்பது உங்கள் வாதமா? 

Deep penetration happened both in sanskrit (say, bharatmata) and in tamil (say, tamil thaay) & starts some 3500 years ago in Indus
region (esp. Sindh, Gujarat regions). The technologies of religion, agriculture spread southward say from 800 BC to Tamizakam, Lanka.
Those northeners carry much culture and technology, these vELir sites are in Porunthal, Adhiccanallur, Kodumanam, Kolli hills, Kollam,
Halebid (dvAra samudram), BelgAm (= vEL grAma), ...


கணேசர் ஐயா கன்னின்னு சொன்னா கண்டதுண்டமா வெட்டிப்புடுவேன் என்று மதுரைக்காரம்மா விரட்டிக்கிட்டுருக்காங்கோ.  இப்ப நீங்க பாரத மாதா தமிழ்த் தாய்னு ரெண்டு பிட்டைப் போடறீங்களே நாயமா

இப்பதான் எனக்கு ஒரு இனைய இணைப்பு  நினைவுக்கு வந்தது.  நீங்க ஒரு விஞ்ஞானி முனைவர்தானுங்களே.  வர வர மின் தமிழ் உலக இணையதள் வரலாற்றில்முதல் முறையாக என்ற ரேஞ்சில் அதிரடித் தகவல்களை தமிழ்த் திரைப்படங்கள்போல் திகில் காட்சியாக கானா உலகநாதன் வாலைமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம் ரேஞ்சில் சொல்றாய்ங்களே.


360.gif

rajam

unread,
Dec 5, 2011, 3:32:45 PM12/5/11
to மின்தமிழ், Nagarajan Vadivel, Subashini Kanagasundaram, N. Kannan
மதிப்பிற்குரிய பேராசிரியரின் "ஜோக்"கும் (?) கீதாவின் "ஸ்மைலியின்" பொருளும் உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை -- நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை.
மிகவும் கருத்துடன் ... என் நேரமெல்லாம் செலவழித்து ... இலக்கியத்தையும் ஆய்வுப்பொருளையும் இந்த மின்தமிழில் ஓராண்டுக் காலமாகப் பகிர்ந்துகொண்டுவரும் நான் ஒரு பெரிய முட்டாள், பைத்தியம், எனக்கு என் நேரத்தை எங்கே  பயனுள்ள முறையில் செலவிடவேண்டும் என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன். அலுக்கிறது. 

Begin forwarded message:

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
Date: December 5, 2011 12:13:42 PM PST
--

N. Ganesan

unread,
Dec 5, 2011, 3:38:37 PM12/5/11
to மின்தமிழ்

On Dec 5, 12:13 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> தமிழ்த் திரைப்படங்கள்போல் திகில் காட்சியாக கானா உலகநாதன் வாலைமீனுக்கும்
> விலங்குமீனுக்கும் கல்யாணம் ரேஞ்சில் சொல்றாய்ங்களே. //
>

> [?][?][?][?]

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்
-மீனவரைக் கேளுங்க.

நா. கணேசன்

rajam

unread,
Dec 5, 2011, 3:42:22 PM12/5/11
to mint...@googlegroups.com
திரு. கணேசன் ... உங்களூக்கு
என்று தனி இழை
தொடங்கிவிட்டீர்களே ...
அங்கே போய்
விளையாடுங்கள். நான்
தொடங்கிய இந்த இழையைச்
சுத்தமாகக் கொண்டுபோக
விரும்புகிறேன். நன்றி!
வணக்கம்!
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
Dec 5, 2011, 3:53:46 PM12/5/11
to mint...@googlegroups.com
வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்பது ஒரு திரைப்படத்தின் பாடல் அம்மா.  சென்னை கானா பாடல்கள் என்பார்கள் இதை.  கானா உலகநாதன் என்பவர் இந்தப் பாடலின் மூலம் பிரபலம் ஆனார்.  மீனவர்களின் நாடோடிப் பாடல் என்றும் கேள்வி. நானும் பாடலைக் கேட்டிருக்கிறேன்.  நல்ல ராகம், குரல் வளம்.  மற்றப்படி படமோ, எந்தப்படம் என்றோ தெரியாது.  பாடல் கொஞ்ச காலம் முன்னர் தமிழ்நாட்டின் தேசிய கீதமாக இருந்தது. இப்போக் கொலவெறி கொலவெறிடீ பாடல் தேசிய கீதமாம்.  இதுவும் படமே இன்னும் வரலைனு கேள்வி. 

2011/12/5 rajam <ra...@earthlink.net>
மதிப்பிற்குரிய பேராசிரியரின் "ஜோக்"கும் (?) கீதாவின் "ஸ்மைலியின்" பொருளும் உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை -- நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை.
மிகவும் கருத்துடன் ... என் நேரமெல்லாம் செலவழித்து ... இலக்கியத்தையும் ஆய்வுப்பொருளையும் இந்த மின்தமிழில் ஓராண்டுக் காலமாகப் பகிர்ந்துகொண்டுவரும் நான் ஒரு பெரிய முட்டாள், பைத்தியம், எனக்கு என் நேரத்தை எங்கே  பயனுள்ள முறையில் செலவிடவேண்டும் என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன். அலுக்கிறது. 

Begin forwarded message:

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
Date: December 5, 2011 12:13:42 PM PST
Subject: Re: [MinTamil] Re: "கன்னித்தமிழ்" பற்றி ...

தமிழ்த் திரைப்படங்கள்போல் திகில் காட்சியாக கானா உலகநாதன் வாலைமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம் ரேஞ்சில் சொல்றாய்ங்களே. //



360.gif
360.gif
360.gif
360.gif
360.gif

rajam

unread,
Dec 5, 2011, 3:56:33 PM12/5/11
to mint...@googlegroups.com
சரி கீதா, விளக்கத்துக்கு நன்றி! ஆனால் அதற்கும் என் பதிவுக்கும் என்ன தொடர்பு? நான் ஏன் என் நேரத்தைச் செலவழித்து இப்படி என் உடல் நலத்தையும் கெடுத்துக்கணும் -- கண்ட மாதிரி சினிமாக் கதை சொல்ல இங்கே நான் வரலெ. 

On Dec 5, 2011, at 12:53 PM, Geetha Sambasivam wrote:

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்பது ஒரு திரைப்படத்தின் பாடல் அம்மா.  சென்னை கானா பாடல்கள் என்பார்கள் இதை.  கானா உலகநாதன் என்பவர் இந்தப் பாடலின் மூலம் பிரபலம் ஆனார்.  மீனவர்களின் நாடோடிப் பாடல் என்றும் கேள்வி. நானும் பாடலைக் கேட்டிருக்கிறேன்.  நல்ல ராகம், குரல் வளம்.  மற்றப்படி படமோ, எந்தப்படம் என்றோ தெரியாது.  பாடல் கொஞ்ச காலம் முன்னர் தமிழ்நாட்டின் தேசிய கீதமாக இருந்தது. இப்போக் கொலவெறி கொலவெறிடீ பாடல் தேசிய கீதமாம்.  இதுவும் படமே இன்னும் வரலைனு கேள்வி. <360.gif><360.gif><360.gif>

2011/12/5 rajam <ra...@earthlink.net>
மதிப்பிற்குரிய பேராசிரியரின் "ஜோக்"கும் (?) கீதாவின் "ஸ்மைலியின்" பொருளும் உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை -- நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை.
மிகவும் கருத்துடன் ... என் நேரமெல்லாம் செலவழித்து ... இலக்கியத்தையும் ஆய்வுப்பொருளையும் இந்த மின்தமிழில் ஓராண்டுக் காலமாகப் பகிர்ந்துகொண்டுவரும் நான் ஒரு பெரிய முட்டாள், பைத்தியம், எனக்கு என் நேரத்தை எங்கே  பயனுள்ள முறையில் செலவிடவேண்டும் என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன். அலுக்கிறது. 

Begin forwarded message:

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
Date: December 5, 2011 12:13:42 PM PST
Subject: Re: [MinTamil] Re: "கன்னித்தமிழ்" பற்றி ...

தமிழ்த் திரைப்படங்கள்போல் திகில் காட்சியாக கானா உலகநாதன் வாலைமீனுக்கும் விலங்குமீனுக்கும் கல்யாணம் ரேஞ்சில் சொல்றாய்ங்களே. //

<360.gif><360.gif><360.gif><360.gif>


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--

Geetha Sambasivam

unread,
Dec 5, 2011, 4:01:37 PM12/5/11
to mint...@googlegroups.com
உண்மை அம்மா. ஆனால் பேராசிரியர் சொன்ன விதம் ஹாஸ்யமாக இருந்ததால் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.  உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.  இந்த இழையின் மூலம் பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.  நன்றி அம்மா.   மன்னிக்கவும். 

2011/12/5 rajam <ra...@earthlink.net>
35B.gif

Jean-Luc Chevillard

unread,
Dec 5, 2011, 4:18:48 PM12/5/11
to mint...@googlegroups.com, rajam, Hari Krishnan
Dear VSR,

you seem to have forgotten
in your list
the verse I quoted yesterday,
which refers to a category of people called

"கன்னித் தமிழோர்"

I wrote yesterday

<QUOTE>
I do not know whether that answers your question but
on page 772 inside the 1993 edition of the திவாகரம் (second volume)

there is a verse (numbered 36, which reads

இன்னாங் கோசை நடுக்க மச்சம்
கன்னித் தமிழோர் கம்பலை யென்ப.

This might  fit with the PP reference,
as describing a specific linguistic usage of the inhabitant of Pāṇṭiya Nāṭu.

</QUOTE>

-- Jean-Luc (Paris)

N. Ganesan

unread,
Dec 5, 2011, 4:21:08 PM12/5/11
to மின்தமிழ்

On Dec 5, 1:18 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> Dear VSR,
>
> you seem to have forgotten
> in your list
> the verse I quoted yesterday,
> which refers to a category of people called
>
> "கன்னித் தமிழோர்"
>
> I wrote yesterday
>
> <QUOTE>
> I do not know whether that answers your question but
> on page 772 inside the 1993 edition of the திவாகரம் (second volume)
>
> there is a verse (numbered 36, which reads
>
> இன்னாங் கோசை நடுக்க மச்சம்
> கன்னித் தமிழோர் கம்பலை யென்ப.
>
> This might  fit with the PP reference,
> as describing a specific linguistic usage of the inhabitant of Pāṇṭiya Nāṭu.
>

Thanks, JLC.

N. Ganesan

> </QUOTE>
>
> -- Jean-Luc (Paris)
>

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2011, 8:54:46 PM12/5/11
to mint...@googlegroups.com
அன்புடை ராஜம் அம்மா
இது ஜோக் அல்ல.  நான் சிரித்துக்கொண்டே அழுகிறேன். அவ்வளவுதான்.  இங்கிருந்து போகவேண்டிய முதல் ஆள் நான் தான். ஆனால் நான் பல்லைக் கடித்துக்கொண்டு தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்

சில நேரம் இந்த மின் தமிழ்க் கப்பல் சுக்கான் இல்லாத கப்பல் போல் முன் நோக்கிச் செல்லாமல் சுற்றிச் சுற்றி வருவது தெரிந்ததே.
நீங்கள் ஒரு வினாவை அறிஞர்கள் அறிவாய்ந்து விடையளிப்பார்கள் என்ற எண்ணத்தில் இடுகிறீர்கள்.  அதற்க்குப் பதிலாகச் சில பின்னுட்டங்கள்.  அவை உங்களின் நாடலுக்கு மாறி இருப்பதை உணர்ந்து வருந்துகிறீர்கள்.

நான் சொல்ல வந்தது எளிய கருத்து.  கலப்பதற்குமுன் ஒரு தனித்தன்மை தமிழுக்கு இருந்தது.  கலப்பை விரும்பாதோர் தங்களுக்கு விருப்பமான முறையில் தங்களுக்குள் பேசிக்கொள்ள முனைவது ஒரு குற்றமா?  தமிழ்க் குடிமகன் அவர் வீட்டில் குழந்தைகளுடன் எப்படிப் பேசினார்? நீங்கள் எழுதுவது ஆங்கிலம் போல் தோன்றுகிறது என்றெல்லாம் கேள்விகள்?
ஆங்கிலோ இந்தியர்களைப் பற்றி அரசியல் பேச்சாளர் தீப்பொறி சத்தியமூர்த்தி அவர்கள் ஒருமுறை
They are the moving monuments of British prostitution in India
என்று சொன்னார்.  இனி நானும்
Tamil is the moving monument of Sanaskrit prostitution
என்று சொல்லிவிட்டுப் போகிறேன்
இன்னொரு அரசியல்வாதி
I am privileged to represent a small community where men lack integrity and women lack chastity என்று சொன்னார்
இனி நானும் பக்குவம் பெறாத கற்பிழந்த மொழி என் தாய்மொழி என்றுசொல்லிக் கொள்கிறேன்
நான் கன்னித் தமிழ் என்று சொன்னது என் கருத்தல்ல.  அதுபற்றி எனக்குத் தெரிந்த மேற்கோள்களை மட்டுமே நான் குறிப்பிட்டிருந்தேன்
இங்கே மறைமுகமான இனவாதம் மொழி பேதம் தலை விரித்தாடுகிறது. இந்தத் தளம் அதற்கே பயன் படட்டும் என்று நீங்கள் விட்டுவிடுவீர்களா?
இது தென்னாட்டு சமஸ்கிரிதத்துக்கும் தமிழுக்கும் காலம் காலமாக் நடக்கும் உள்நாட்டுப் போர்.  வடபுல சமஸ்கிரிதத்துக்கும்  தமிழுக்கும் நடைபெறும் போராட்டமல்ல இது. 
தமிழ் நாட்டில் பிறந்த தென்னாட்டு சமஸ்கிரித வெறியர்களும் தனித் தமிழ் வெறியர்களும் இத் தளத்தைத் தவறான நோக்குடன் பயன் படுத்துவது என்ன நன்மையை விளைவிக்கப் போகிறது?
என்னைத் தனித் தமிழ் வெறியன் என்று புட்டிக்குள் அடைக்கும் வேலை வேண்டாம்.  மொழி கடந்து இனம் கடந்து மதம் கடந்து கலப்புத் திருமணம் செய்துகொண்ட என்னை இங்கே திரும்பத் திரும்ப தனித் தமிழன் என்று சொல்வது வெட்கக் கேடு
கடலில் வாழும் மீன்கள் ஒரு குமுகம் அதில் கலப்பு என்பது மகிழ்ந்து கொண்டாடும் நிகழ்வு என்பதை விளக்குவது இந்தப் பாடல்
http://www.youtube.com/watch?v=0PTumzXwFrM&feature=related
நாகராசன்

2011/12/6 rajam <ra...@earthlink.net>

Hari Krishnan

unread,
Dec 5, 2011, 9:18:05 PM12/5/11
to mint...@googlegroups.com

011/12/5 Samy <pa.s...@gmail.com>

கன்னி தமிழ்
கன்னி பெண்

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்
அப்படி ஒப்பிடவேண்டிய அவசியமே இல்லை.  கண்ணப்ப நாயனார் வேட்டைக்குப் போனார்.  அது கன்னிவேட்டை என்று பெரியபுராணத்தில் சொல்லப்படுகிறது.  நாடாளு மன்றம், சட்ட மன்றங்களில் பேசப்படும் முதல் பேச்சு கன்னிப் பேச்சு.  ஆங்கிலத்தில், Maiden speech, maiden attempt என்றெல்லாம் சொல்வதில்லையா?  (ஆங்கிலத்தில் அப்டி  சொல்றாங்களா?  அப்ப அது நிச்சயம் கரெக்டாதான் இருக்கணும்.  :D)

கன்னித் தமிழையும் தனித்தமிழையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.  அதற்காக தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் செய்யும் பீமன் உருட்டிய கீசகப் பிண்டத்தையும் உருட்ட வேண்டாம்.  

Raja sankar

unread,
Dec 5, 2011, 9:28:41 PM12/5/11
to mint...@googlegroups.com
மொத வாட்டி பேசுனா கன்னிப்பேச்சுன்னா இரண்டாவது வாட்டி பேசுனா கற்பிழந்த பேச்சா?

என்ன கொடுமை இது?

Maiden = கன்னி மொழி பெயர்த்த அறிவாளி யாரோ? Waterfall=நீர்வீழ்ச்சி என மொழிபெயர்த்த அறிவாளி போல் .

ராஜசங்கர்


2011/12/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 5, 2011, 9:50:01 PM12/5/11
to mint...@googlegroups.com


2011/12/6 Raja sankar <errajasa...@gmail.com>

மொத வாட்டி பேசுனா கன்னிப்பேச்சுன்னா இரண்டாவது வாட்டி பேசுனா கற்பிழந்த பேச்சா?

:))))

And draw an equivalent to a maiden-over please!

Shall we call an over in which a batsman sends the ball to a boundary or sixer as raped over!   And then how about an over in which the batsman sends all the balls to six!  :))

Dhivakar

unread,
Dec 6, 2011, 5:41:31 AM12/6/11
to mint...@googlegroups.com
எல்லாவற்றிற்கும் மேலாக ...
6. "கன்னித்தமிழ்" என்று சொல்வதினால் என்ன பயன் பெறுகிறோம்?

இதுதானே கேள்வி?

ஒரு பயனும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை இத்தன்மை மாதர்தமை பெருமை செய்ய புலவர்களால்
கொடுக்கப்பட்ட ஒரு புகழ்ச் சொல். கன்னி என்றாலும் அன்னை என்றாலும்,
எல்லாம் ஒன்றாகத்தான் அந்தக் காலத்தில் பொருள் கொண்டிருக்கப்படவேண்டும்.

தெலுங்கில் கூட மொழியை கன்யா என்று அடைமொழி கொடுத்து ஒரு பாடல்
கேட்டிருக்கிறேன். தேடிக்கொண்டிருக்கிறேன். அதே போல நதியைக் கூட கன்யை
(கன்னி) என்பார்கள் தெலுங்கில், தல்லி (தாய்) என்பார்கள். கன்யை
கிருஷ்ணவேணி எனத் தொடங்கும் தெலுங்குப் பாடல் முழுவதும் கேட்டுப் பதிவு
செய்ய முயல்கிறேன். தெலுங்குக் காரர்கள் கோதாவரி நதியை கோதாவரி தல்லி
என்றும், கிருஷ்ணை நதியை கன்யை கிருஷ்ணவேனி என்றும் அழைப்பது உண்டு.
(சந்தியா காலமுலோ கன்யா கிருஷ்ணவேணி அதிக காமத்துடன் கடலரசனை நோக்கிப்
பாய்கிறாள் - என்று அந்தக் கவிதையின் பொருள் வரும்).

கன்னிகா பரமேஸ்வரி கோயில்கள் இங்கு மிகப் பிரபலம். வைஸ்யர்களின் குல
தெய்வம் கன்னிகா பரமேஸ்வரியைப் பற்றிய கதைகள் பல உண்டு. பராசக்தியின்
வடிவமாக கன்னிகா பரமேஸ்வரியைக் கொண்டாடுவார்கள்.

தெலுங்குப் புலவர் ஒருவரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, கன்யா
என்றால் திருமணமாகாத பெண் என்று சமீபத்தில் காலமாற்றத்தால் ஏற்பட்டது
என்றும் கன்யா என்றால் ‘சிறந்த’ என்பது போல ஒரு சிறப்பு
வார்த்தையாகத்தான் அந்நாளில் பொருள் கொண்டிருக்கவேண்டும் என்றும்
சொன்னார். கன்னிகா பரமேஸ்வரியின் திரு உருவச் சிலையை பராசக்தியாகத்தான்
நினைத்து வழிபடுகிறோம் என்றார். அப்படியானால் லோகமாதா திருமணமாகாதவளா
எனத் திருப்பி என்னைக் கேட்டார்.

கன்னி முதலில் தமிழ்ச் சொல்லா அல்லது வடமொழிச் சொல்லா என்பது கூட
குழப்பமாகத்தான் இருக்கிறது.
வேர்ச் சொல் ஆராய்வில் ஈடுபட்டால் முடிவில் வம்புதான் வரும்..

திவாகர்


Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Vij

unread,
Dec 9, 2011, 7:25:32 PM12/9/11
to mint...@googlegroups.com
>Sent: Monday, December 05, 2011 4:21 PM
> தமிழ் சமஸ்கிரிதத்துடன் புணரவில்லை தனித்தமிழ் போல் சமஸ்கிரிதம் என்றென்றும் கலப்பில்லாத தனிமொழி என்பது உங்கள் வாதமா?  >அப்படி இருந்தால் நீங்களும் மறைக்காமல் உங்கள் ஆதாரங்களை எடுத்து விடுங்களேன்
>நாகராசன்
 
நாகராசரே
 
தமிழ் சமஸ்கிருதத்துடன் நேரடியாக புணர்ந்ததாக மொழியியலாளர் சொல்லவில்லை – ஆனால் அப்படி நடக்கவில்லை எனவும் நான் சொல்லவில்லை.
 
திராவிட மொழிக் குடும்பத்திடமிருந்து சமஸ்கிருதத்திர்க்கு என்ன வார்த்தைகள் சென்று இருக்கலாம் என ஒரு மொழியியலாளர் சொல்கிறார். அவர் பெயர் பதிராஜு க்ருஷ்ணமூர்த்தி. இன்றைய திராவிட மொழியியல் துறையில் அவர்தான் பீஷ்மர்.
 
அவருடைய 2003 பிரசுரிக்கப்பட்ட `ட்ரவிடியன் லேங்குவேஜெஸ்` என்ற புஸ்தகத்தில் இருந்து ஒரு பக்கம் – முக்கியமாக புரோடொ திராவிட மொழியில் இருந்து இந்தோ-ஆர்யன் மொழிக்கு போயிருப்பதின் ஒரு சாம்பிள்.
 
உங்கள் கேள்வி தமிழில் இருந்து என்ன சமஸ்கிருதத்திற்கு சென்றது என்பது , ஆனால் நான் கொடுப்பது மொழியியல் அடிப்படையில் ப்ரோடோ-த்ரவிடியனில் இருந்து இந்தோ-ஆரியனுக்கு என்ன என்பது.  இங்கே இந்தோ-ஆர்யன் என்பது வேதகால மொழியை அல்ல, அதற்கு பின் வந்த பாணினியினால் சீராக்கப்பட்ட சமஸ்க்ருதம்
 
 
 
வகொவி
new1.pdf

N D Logasundaram

unread,
Dec 10, 2011, 4:35:28 AM12/10/11
to mint...@googlegroups.com
திருவாளர் மோகனரங்கம் அவர்களுக்கு
கன்னித் தமிழ்நாடு பற்றி வேறு ஒரு இழையில் கன்னி நாடு என்றால் பாண்டிய நாடு
என்பதை உறுதி செய்து காட்டியுள்ளதைப்  பார்த்தீர்களா?  சான்றுகளும் காரணமும் வைத்துள்ளேன்
உங்கள் ஐயத்திற்கு மூலம் ஓர் உயிர்  தன் மனதில் உள்ளதை வைத்து மட்டும்  பார்க்கும் பார்வை
இதைத் தன் ழான் அவர்களுக்கு முகப்பக்கி எழுதிய மடலில் 'புத்தி' என்னும் சைவ சித்தாந்தச்
சொல் தனைக் காட்டி விளக்கியுள்ளேன். ஓர் மொழிக்கு கால  மாறுபாட்டினால்  பலபொருள்கள்
விளைவது இயல்பு/பரிணாம வளர்ச்சி  பிற்காலப்  பொருளாகிய கன்னித்தன்மை (virginity) தனை
முற்கால சொல்லுடன் பிணைத்துப் பர்துள்ளமை தான்  ஐயதிற்குக் காரணம். இக்கருத்தையும்
அங்கே வைத்துள்ளேன் 
 
 You are well aware of about the psychiatric healer in a psychoanalysis he/she has to go over to the depth
in time sacle to origin of the problem concerned so that real cure can be prescribed 
 
அன்புள்ள
நூ த லோ சு
மயிலை


2011/12/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
>>>According to the Santhi Sadhana's தமிழ் இலக்கியப் பேரகராதி,
the expression கன்னித் தமிழ்நாடு
means பாண்டிய நாடு.<<<<
 
A wild guess --- 
Kannit thamizh nAdu -- spinster Tamil land --> unconquered territory -- land not overpowered by others 

From this imperialistic usage the epithet for unconquered, viz., 'kanni' was transported to the language register and used for the language spoken in such a land. Later the adjective for language might have gained a meaning of its own. 

The guess may be wrong. It is only a guess, thanks to Mr Jean and Madam Rajam. 

***


2011/12/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
Dear VSR,

according to Santhi Sadhana's தமிழ் இலக்கியப் பேரகராதி, volume 2, page 655,
we find the expression கன்னித் தமிழ்
in side the பெரிய புராணம் in verse 3833.

I see inside the single volume edition of the பன்னிரு திருமுறை
by ச.வே.சு.
that the verse reads:

இவ்வாறு ஒஞுகும் நாளின்கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்
மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய் வார் கன்னித் தமிழ்நாட்டுத் திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள்
இறைௌ்ச முறைமையால் நினைந்தார்

According to the Santhi Sadhana's தமிழ் இலக்கியப் பேரகராதி,
the expression கன்னித் தமிழ்நாடு
means பாண்டிய நாடு.

This seems to mean that the expression refers to your native place ;-)

I hope this partly answers your question

அன்புடன்

-- Jean-Luc




On 03/12/2011 18:02, rajam wrote:
முகப்புரை
--------------
நேற்று (கலிபோர்னியாவில் நவம்பர் 2, 2011) திரு கண்ணன் நடராசன் அவர்கள் மின்தமிழில் இட்ட ஒரு பதிவு தினமணியில் வெளிவந்த சாமி சிதம்பரனார் அவர்களின் கட்டுரை. அந்தக் கட்டுரையில் தமிழின் புகழ் பாடப்பட்டிருந்தது. அதில் பயன்படுத்தப்பட்ட "கன்னித்தமிழ்" என்ற சொல்லாட்சியின் பொருளை வினவினேன். அது தொடர்பாக இந்தப் புதிய இழையைத் தொடங்குகிறேன்.

முன் குறிப்பு
---------------
தமிழ் மொழிமேல் எனக்குத் தனிப்பட்ட முறையில் இருக்கும் அன்பை/காதலை/காமத்தை/மதிப்பை/பெருமிதத்தைப் பற்றி யாரும் ஐயுறத் தேவையில்லை; ஐயுற்றால் வம்பு! :-)
கேள்விகள்
---------------
1. "கன்னித்தமிழ்" என்ற சொல்லாட்சியை யார் எப்போது எங்கே முதன் முதலில் பயன்படுத்தினார்கள், நினைவில் இருக்கிறதா? (இதற்கு விடை முன்பு ஒருமுறை மின்தமிழிலோ அல்லது CTamil-இலோ சொல்லியிருந்தேன்.)
2. பாரதியாரே "எங்கள் தாய்" என்ற பாடலில் "கன்னி" "தாய்" என்ற இரண்டு பொருளையும் சேர்த்துப் பயன்படுத்தியிருப்பார். அதையும் பார்க்கவும்.  
3. "கன்னி"க்கும் "தாய்க்கும்" என்ன தொடர்பு?  

4. பிறமொழிச் சொற்கள் கலவாத தமிழ்தான் "கன்னித்தமிழ்" என்றால் .... மணிமேகலை போன்ற காப்பியங்களைக் கிழித்து எறிந்துவிடவேண்டும்; அவை தமிழ்க் காப்பியங்கள் என்று சொந்தம் கொண்டாட முடியாது. அதைச் செய்யத் தயாராக இருக்கிறோமா?
5. எவை "பிறமொழிச் சொற்கள்" என்று உறுதியாக நிறுவிக்காட்ட எத்தனைப்பேருக்கு மொழியறிவின் ஆழம் இருக்கிறது? ளெனக்குத் தெரியும் என்று களத்தில் இறங்குகிறவர்கள் எந்த அளவுகோலைப் பயன்படுத்துகிறார்கள்? அதைப் பற்றித் தெளிவாகச் சொல்லுகிறார்களா?

எல்லாவற்றிற்கும் மேலாக ... 
6. "கன்னித்தமிழ்" என்று சொல்வதினால் என்ன பயன் பெறுகிறோம்? 
பின் குறிப்பு
---------------
பிற நூல்களிலிருந்து ஒத்தி ஒட்டி ஆடும் விளையாட்டு வேண்டாம். இங்கே படித்துப் பயன்பெறுகிறவர்களின் நேரத்தைக் கருதி, உங்கள் கருத்துகளைச் சுருக்கமாகவும், நேரிடையாகவும், நக்கல்/கிண்டல் இல்லாமலும் பகிர்ந்துகொண்டால் .... இளைய தலைமுறைக்கு நல்லது.
நன்றியுடன்,
ராஜம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N D Logasundaram

unread,
Dec 10, 2011, 5:10:01 AM12/10/11
to mint...@googlegroups.com
anpulla VC Vijay (வகொவி)
அவர்களுக்கு
"இந்தோ-ஆர்யன் என்பது வேதகால மொழியை அல்ல,
அதற்கு பின் வந்த பாணினியினால் சீராக்கப்பட்ட சமஸ்க்ருதம்"
ஏறக்குறைய ஒரு ஆண்டிற்குமுன்  சென்னை பொதிகைத்
தொலைக் காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் மயிலை விவேகாந்தா கல்லுரி
வடமொழி விரிவுரையாளர் (முன்னாள்?) ஒருவர் (பெயர் நினைவில்லை
திருவல்லிக்கேணி வாழ் வைணவப் பெரியவர் ) அவர்  பாரதி நூல்களைப்
பற்றி  பேச்சு.  ஓர் கருத்தை குறிப்பிட்டு விளக்கும்போது பாணினி தான்
இயற்றிய இலக்கண நூலில் யாங்கணும் சமஸ்க்ரிதம் என்னும் சொல்லைப்
பயன் கொள்ளவே இல்லை   மற்றும் அவர்வாழ்த்த காலத்தில் இருந்த
ஒரு மொழியைத் தான்  சீர் திருத்த நினைத்தார் எனக் குறிப்பிட்டு மேலும்
தன் உரையைத் தொடர்ந்தார் 
உங்களுக்கு தெரிந்தவரை சமஸ்க்ரிதம் என்னும் சொல் முதல் முதலில்
யாரால் எப்போது பயன் கொள்ளப் பட்டது எனக் காட்டமுடியுமா ?
தனி இழை ஆக்காமல் இதனிலேயே வைத்துள்ளமை தவறில்லை என
நினைகின்றேன் 
நூ த லோ சு  

 

 


 
2011/12/10 Vij <vcv...@hotmail.com>

--

Mohanarangan V Srirangam

unread,
Dec 10, 2011, 6:04:45 AM12/10/11
to mint...@googlegroups.com
Thanks Sir. I am not seeing the threads regularly due to comp problems. Sorry Sir. 

***


2011/12/10 N D Logasundaram <selvi...@gmail.com>

விஜயராகவன்

unread,
Dec 10, 2011, 6:23:25 AM12/10/11
to மின்தமிழ்
On Dec 10, 11:10 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> anpulla VC Vijay (வகொவி)
> அவர்களுக்கு
> "இந்தோ-ஆர்யன் என்பது வேதகால மொழியை அல்ல,
> அதற்கு பின் வந்த பாணினியினால் சீராக்கப்பட்ட சமஸ்க்ருதம்"
> ஏறக்குறைய ஒரு ஆண்டிற்குமுன்  சென்னை பொதிகைத்
> தொலைக் காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் மயிலை விவேகாந்தா கல்லுரி
> வடமொழி விரிவுரையாளர் (முன்னாள்?) ஒருவர் (பெயர் நினைவில்லை
> திருவல்லிக்கேணி வாழ் வைணவப் பெரியவர் ) அவர்  பாரதி நூல்களைப்
> பற்றி  பேச்சு.  ஓர் கருத்தை குறிப்பிட்டு விளக்கும்போது பாணினி தான்
> இயற்றிய இலக்கண நூலில் யாங்கணும் சமஸ்க்ரிதம் என்னும் சொல்லைப்
> பயன் கொள்ளவே இல்லை   மற்றும் அவர்வாழ்த்த காலத்தில் இருந்த
> ஒரு மொழியைத் தான்  சீர் திருத்த நினைத்தார் எனக் குறிப்பிட்டு மேலும்
> தன் உரையைத் தொடர்ந்தார்
> உங்களுக்கு தெரிந்தவரை சமஸ்க்ரிதம் என்னும் சொல் முதல் முதலில்
> யாரால் எப்போது பயன் கொள்ளப் பட்டது எனக் காட்டமுடியுமா ?
> தனி இழை ஆக்காமல் இதனிலேயே வைத்துள்ளமை தவறில்லை என
> நினைகின்றேன்
> நூ த லோ சு


நூதலோசு ஐயா

பாணினி வேத மொழியை சந்தஸ் என அழைத்தார். , அதாவது பிசகாமல் உச்சரித்து மத
சடங்குகளை செய்வது. (இது ஆங்கில Chant என்பதன் cognate. இதில்
இருந்துதான் தமிழிலும் சந்தம் என்ற சொல்லும் வருகிறது )

எப்பொழுது சமஸ்கிருதம் என்பது நாம் இப்போது புரிந்துகொண்டிருக்கும்
மொழியை குறிப்பது என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. விகிபீடியா படி
மனுஸ்ம்ரிதி, மஹாபாரதத்தில்தான் முதலில் ப்ரயோகம் இருக்காம்

As a term for "refined or elaborated speech" the adjective appears
only in Epic and Classical Sanskrit, in the Manusmriti and in the
Mahabharata.


வகொவி

N. Ganesan

unread,
Dec 10, 2011, 6:58:23 AM12/10/11
to மின்தமிழ்


மோனியர்-வில்லியம்ஸ் அகராதி
சிட்சை (இலக்கண நூல்), பரதரின் நாட்டிய சாத்திரம், தசரூபம் இவை
சம்ஸ்க்ருதம் = மொழி என்ற பொருளில் பயில்கின்றன என்கிறது.

ருத்ரதாமன் கல்வெட்டு கிபி 150-ல் சம்ஸ்க்ருத மொழி முதலில் வருகிறது
என்பார்கள். எனவே சம்ஸ்கிருதம் பாஷை என்ற பொருளில்
கிறித்து பிறந்த முதல் 3 நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Dec 10, 2011, 7:11:45 AM12/10/11
to mint...@googlegroups.com
கணேசர் ஐயா
தென்னாட்டு சமஸ்கிரிதம் பற்றி நீங்கள் அதிகம் எழுத வேண்டும்.  நான் காசியிலும் சென்னையிலும் வழங்கும் சமஸ்கிரிதத்தைக் கேட்டிருக்கிறேன்.  காசிப் பண்டிதர்கள் நாலு வேதங்களையும் இசை நயத்தோடு ஓதுவார்கள்.  தமிழ்நாட்டில் ஒரே தொனியில் மந்திரம் ஓதுவார்கள்
தென்னாட்டில் கிரந்தம் வழியாக சமஸ்கிரித ஆகம வழிபாட்டு மந்திரங்களை சமஸ்கிரிதப் புலமை இல்லாதவர்கள் கற்று இறை வழிபாடு நடத்த உதவியது.  அதுபோலவே சமஸ்கிரித தமிழ் வளங்லகள் கடல் கடந்து பரவவும் தென்னாட்டு சமஸ்கிரிதமான கிரந்தம் பயன் பட்டது
கிரந்தம் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி பற்றி ஆவண் அடிப்படையிலான தொகுப்பை நீங்கள் உருவாக்க வேண்டும்
நாகராசன்


2011/12/10 N. Ganesan <naa.g...@gmail.com>

N D Logasundaram

unread,
Dec 11, 2011, 12:04:05 AM12/11/11
to mint...@googlegroups.com
அன்புள்ள கணேசன் அவர்களுக்கு
 "ருத்ரதாமன் கல்வெட்டு கிபி 150-ல் சம்ஸ்க்ருத மொழி முதலில்"
 கல்வேடியலாளர்கள் தான் அதனை தற்கால வழங்கலாக
(ஜுனகாத்) ருத்ரதாமன் கல்வெட்டின் மொழி சமஸ்க்ரிதம் என்கின்றனர்
கிடைதுள்ளதில் முதல்  சமஸ்க்ரித கல்வெட்து இது என்பர்
இந்த  ருத்ரதாமன்தான்   யவநேஸ்வரா என்பனைக் கொண்டு கிரேக்க
மொழியிலிருந்து  இந்திய  ஜாதக    உலகை    உருவாகினான்.  இந்த
ருத்ரதாமன் தான் மணந்து இந்துவாக மாறினான் எனும்  கருத்தும்
கண்டேன்     
நான் கேட்பது சமஸ்க்ரிதம் என்னும் சொல்லை
யார் முதலில் பயன்கொண்டனர் என்பது
 
 நூ த லோ சு
மயிலை

2011/12/10 N. Ganesan naa.g...@gmail.com

DEV RAJ

unread,
Dec 11, 2011, 4:09:26 AM12/11/11
to மின்தமிழ்
On Dec 11, 10:04 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
>>>......சமஸ்க்ரிதம் என்னும் சொல்லை யார் முதலில் பயன்கொண்டனர் .......<<<


ஆஞ்ஜநேயர் மரக்கிளையில் மறைந்து கொண்டு
அன்னையிடம் எந்த மொழியில் பேசலாம் என ஆலோசிப்பது -

अहम् हि अतितनुः चैव वानरः च विशेषतः।
वाचम् च उदाहरिष्यामि मानुषीम् इह सम्स्कृताम्॥ ५-३०-१७

அஹம் ஹி அதிதநு​: சைவ வாநர​: ச விஶேஷத​:|
வாசம் ச உதா³ஹரிஷ்யாமி மாநுஷீம் இஹ *ஸம்ஸ்க்ருதாம்*|| 5-30-17

(வால்மீகி ராமாயணம் ; ஸுந்தர காண்டம் - 30ம் ஸர்கம் )

வாச் (வாக்) பெண்பாலானதால் 'ஸம்ஸ்க்ருதாம்' என ஆகாராந்தமானது


தேவ்

On Dec 11, 10:04 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> அன்புள்ள கணேசன் அவர்களுக்கு
>  "ருத்ரதாமன் கல்வெட்டு கிபி 150-ல் சம்ஸ்க்ருத மொழி முதலில்"
>  கல்வேடியலாளர்கள் தான் அதனை தற்கால வழங்கலாக
> (ஜுனகாத்) ருத்ரதாமன் கல்வெட்டின் மொழி சமஸ்க்ரிதம் என்கின்றனர்
> கிடைதுள்ளதில் முதல்  சமஸ்க்ரித கல்வெட்து இது என்பர்
> இந்த  ருத்ரதாமன்தான்   யவநேஸ்வரா என்பனைக் கொண்டு கிரேக்க
> மொழியிலிருந்து  இந்திய  ஜாதக    உலகை    உருவாகினான்.  இந்த
> ருத்ரதாமன் தான் மணந்து இந்துவாக மாறினான் எனும்  கருத்தும்
> கண்டேன்
> நான் கேட்பது சமஸ்க்ரிதம் என்னும் சொல்லை
> யார் முதலில் பயன்கொண்டனர் என்பது
>
>  நூ த லோ சு
> மயிலை
>

> 2011/12/10 N. Ganesan naa.gane...@gmail.com

N. Ganesan

unread,
Dec 11, 2011, 4:12:31 AM12/11/11
to மின்தமிழ்

On Dec 10, 11:04 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> அன்புள்ள கணேசன் அவர்களுக்கு
>  "ருத்ரதாமன் கல்வெட்டு கிபி 150-ல் சம்ஸ்க்ருத மொழி முதலில்"
>  கல்வேடியலாளர்கள் தான் அதனை தற்கால வழங்கலாக
> (ஜுனகாத்) ருத்ரதாமன் கல்வெட்டின் மொழி சமஸ்க்ரிதம் என்கின்றனர்
> கிடைதுள்ளதில் முதல்  சமஸ்க்ரித கல்வெட்து இது என்பர்
> இந்த  ருத்ரதாமன்தான்   யவநேஸ்வரா என்பனைக் கொண்டு கிரேக்க
> மொழியிலிருந்து  இந்திய  ஜாதக    உலகை    உருவாகினான்.  இந்த
> ருத்ரதாமன் தான் மணந்து இந்துவாக மாறினான் எனும்  கருத்தும்
> கண்டேன்
> நான் கேட்பது சமஸ்க்ரிதம் என்னும் சொல்லை
> யார் முதலில் பயன்கொண்டனர் என்பது
>

ஐயா,

சம்ஸ்க்ருதம் என்ற சொல்லை யார் முதலில் பயன்படுத்தினர் என்று
உறுதியாகச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை.

எந்த நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது எனப்பார்க்க முடியும்.
அதற்கு மோனியர்-வில்ல்யம்ஸ் அகராதிப் பட்டியல் கொடுத்துள்ளேண்.

நா. கணேசன்


>  நூ த லோ சு
> மயிலை
>

> 2011/12/10 N. Ganesan naa.gane...@gmail.com

Reply all
Reply to author
Forward
0 new messages