பாரதிதாசன் பிறந்த நாள்.

415 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Apr 29, 2016, 8:49:23 AM4/29/16
to mint...@googlegroups.com
இன்று பாவேந்தர்  பாரதிதாசன் பிறந்த நாள். ஒவ்வொரு  நிறைநிலா  மாலையிலும் நினைவில்  வந்து மகிழ்விக்கும்  அவரது  கவிதை . பள்ளி  நாட்களில் படித்தது. 


நீலவான்  ஆடைக்குள் உடல் மறைத்து 

நிலாவென்று  காட்டுகின்றாய்  ஒளி  முகத்தை 

கோலம் முழுதும் காட்டிவிட்டால் 

 காதல்  கொள்ளையிலே இவ்வுலகம்  சாமோ 

வானச் சோலையிலே  பூத்த தனிப் பூவோ நீதான் 

சொக்க வெள்ளிப் பாற் குடமோ   அமுத ஊற்றோ 

காலை எழுந்த செம்பரிதி கடலில் மூழ்கி 

கனல் மாறி  குளிர்ந்தெழுந்த ஒளிப் பிழம்போ.



moon.png
kanaka.png

இறையடியான்

unread,
Apr 29, 2016, 9:25:58 AM4/29/16
to mintamil
சங்கே முழங்கு சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள்,

கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்.


-பாரதிதாசன்

சரியாத்தான் பேரு வச்சிக்கிட்டாரு


யேசுராஜன்

truth is pathless land

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Singanenjam Sambandam

unread,
Apr 29, 2016, 12:38:45 PM4/29/16
to mint...@googlegroups.com

###பாரதிதாசன் 

சரியாத்தான் பேரு வச்சிக்கிட்டாரு###

1975 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். எங்கள் அண்ணாமலை பல்காளைக் கழகத்தின் செனட் அரங்கில்  கூட்டம் ஒன்று நடந்த் கொண்டிருந்தது. பேராசிரியர்  வ.சுப. மாணிக்கம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.  பாரதிதாசன் பற்றி பேசச் வந்தது. "  பாட்டெல்லாம் நன்றாக இருக்கிறது. பொருளும் நன்றாக இருக்கிறது.  இளைஞர்கள் விரும்பிப் படிக்கிறார்கள்..எல்லாம் சரி, பெயரில், அது என்ன "தாசன் ".... பாரதியை மிகவும் பிடிக்கும் என்பதைக் காட்ட , " பாரதி அடியான்" என்று வைத்துக் கொள்ளலாமே.  சிவனடியான் என்று பேரில்லையா, அதபோல." 

நான் கையை  உயர்த்தினேன். ஒரு , முறை முறைத்தார். . ஏற்கனவே  அவரிடம்  இரு முறை  வாங்கிக் கட்டிகொண்டது  நினைவிற்கு வரவே அடங்கி விட்டேன்,

மாணிக்கனார் அவர்களுக்கு தூய தமிழ் மீது   அவ்வளவு பற்று.

VSP.png

Suba

unread,
Apr 29, 2016, 1:00:45 PM4/29/16
to மின்தமிழ்
​​
வீறுடன் நில்

விழுவது இயல்பு வெட்கப் படாதே
   வீறுடன் நின்றிடுவாய்!
அழுபவன் கோழை அச்சத் தியல்பு 
   தாழ்வை அகற்றிடுவாய்!
தொழுவதும் பாரை சோம்பல் பார்ப்பையா?
   தொழிலாளியைத் தொழுவாய்!
முழுமையாம் உலகை முன்னேறச் செய்
   முரண்களை வென்றிடுவாய்!

-பாரதிதாசன் கவிதை


Singanenjam Sambandam

unread,
Apr 29, 2016, 1:08:36 PM4/29/16
to mint...@googlegroups.com
அறிவினை  விரிவு செய்.....அகண்டமாக்கு 

விசாலப் பார்வையால்  விழுங்கு மக்களை.....

N. Ganesan

unread,
Apr 30, 2016, 2:48:18 PM4/30/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Friday, April 29, 2016 at 10:08:36 AM UTC-7, singanenjan wrote:
அறிவினை  விரிவு செய்.....அகண்டமாக்கு 

விசாலப் பார்வையால்  விழுங்கு மக்களை.....

akaramuthala.in தளத்தில் இரண்டு கவிதைகள் ஈர்த்தன:

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!

நீயே,
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!
ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை!
வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில்
செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை!

உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம்
இறவா மொழியால் எழுந்திடப் பாடினை!
ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி
முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில்
தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை!

கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை!
புதுவை பொரித்த புரட்சிக் குயிலே!
எதுவும் யாரும் இணையுனக் கில்லை!
‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர்
வினைசா வெனின்அச் சாநாள் திருநாள்’

‘புலவர்க்குக் கைவேல் பூந்தமிழ்’ என்றனை!
நலங்கெடுப் பார்எலாம் நடுங்கிட இயங்கினை!
“சிறுத்தையே, புலியே, சீயமே, சிம்புளே!
திருப்பு முகத்தை! திறந்திடு விழியை!
மொழிப்பற் றுற்றே விழிப்புற் றெழுக!

அழிப்புறுந் தமிழை பழிப்பறக் காப்பாய்!”
எனத்தமி ழிளைஞரை ஏவினை! இக்கால்
இழிதுன் பில்தமிழ்! இடிக்குரல் ஆர்த்தே
பழியறக் காத்திட, பகைவே ரறுத்திட
யாருங் காண்கிலேன், எழிற்பா வேந்தே!

தீருமோ இத்துயர் தெரியேன்
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கியே!

(விழுப்புரம் “பாவேந்தர் பேரவை”யின் பொறுப்பாண்மையர் உயர்திரு. உலகதுரை, பாவேந்தர் சிலை திறப்பின்பொழுது வெளியிடவிருக்கும் மலருக்காகப் பாடல் எழுதித் தருமாறு ஏறத்தாழ ஈராண்டிற்கு முன்னர் கேட்டபோது எழுதித்தந்த பாடல்)

தமிழ நம்பி


தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! - கவிக்கோ ஞானச்செல்வன்

தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க!

நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல
    நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை
ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே
    ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்!
பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப்
    பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று
போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப்
    புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்! 


மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும்
    மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன்றில் றில்லை!
சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம்
    தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை!
மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ?
    மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும்
செங்கரும்பும் நறும்பாலும் தேனும் பாகும்
    செந்தமிழ்க்கு நிகராமோ என்ற மேலோர்!


தமிழியக்கம் எனும்கனலைத் தமிழர் நெஞ்சில்
     தழைத்தெரியச் செய்ததனால் தமிழர் இன்று
தமிழ்வாழ்வு காணுதற்கு முயலு கின்றோம்!
     தம்மானம் காக்கின்ற உணர்வு பெற்றோம்!
தமிழியக்கம் எனும்தீயால் தமிழ்ப்பற்று றில்லாத்
     தருக்கர்தம் செருக்கெல்லாம் பொசுங்கக் கண்டோம்!
தமிழியக்கம் கண்டதொரு தமிழின் நல்ல
     தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! (1968)

கவிக்கோ ஞானச்செல்வன்

N. Ganesan

unread,
Apr 30, 2016, 2:59:09 PM4/30/16
to மின்தமிழ், vallamai, மு இளங்கோவன், Karanthai Jayakumar, pollachinasan


On Friday, April 29, 2016 at 5:49:23 AM UTC-7, singanenjan wrote:
இன்று பாவேந்தர்  பாரதிதாசன் பிறந்த நாள். ஒவ்வொரு  நிறைநிலா  மாலையிலும் நினைவில்  வந்து மகிழ்விக்கும்  அவரது  கவிதை . பள்ளி  நாட்களில் படித்தது. 



குழைந்தையர் பிறந்தால் உடனே எனக்குத் துணைகொடுக்கும் ஒரு பாட்டு பாரதிதாசன் தந்தது:

குழந்தை

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ?
பாரீர் அள்ளிப் பருகமாட் டோமோ?
செம்பவ ழத்து சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!


அவரது வாழ்க்கையை புலவர் ந. இராமநாதன் அவர்களுக்குச் சொல்லியது.
பெரியார் நூலகத்தை அமைத்து அங்கே வாழ்ந்தவர் புலவர் ந. இராமநாதன்.
கரந்தைத் தமிழ்ச் சங்கப் பேராசிரியர். நான் வேண்டப் பேரா. மு. இளங்கோவன்
பாரதிதாசனின் தன்வரலாற்றகவலைத் தந்துள்ளார். படித்து மகிழ்க. ~NG

நானோர் பாவேந்தன்…


பாவேந்தர் பாரதிதாசன்(படம் வரைந்தவர்: ஓவியர் புகழேந்தி)

பாவேந்தர் பாரதிதாசன் தம்மைப் பற்றி எழுதிய பாடல்

தமிழி லக்கணம் தமிழி லக்கியம்
எனக்குச் சொல்லிக்கொடுத்தவர், புதுவைத்
திருப்புளி சாமி ஐயா, செந்தமிழ்
இருப்பே என்னும் பங்காரு பத்தர்,
புலவர்க்குப் புலமை ஈந்து நிலவு
பெரும்புகழ்ப் பெரிய சாமிப் பிள்ளை
என்பவர் ஆவர். இவர்களின் அருளினால்
பதினே ழாண்டும் பற்றா இளையேன்
நாற்பது புலவர் தேர்வில் முதலாத்
தெரிவு பெற்றேன். காரைக்காலின்
ஒரு பகுதியான நிரவியில் ஓர் இடம்
அந்த இடத்தை அடையக் கருதிப்
புலவர் பல்லோர் போட்டியிட்டனர்.
யானும் பதினெட்டாண் டெய்தினேன். ஆயினும்
இளையன் ஆதலால் அவன் அவ்விடத்தை
அடைதல் ஆகாதென்றனர் ஆள்வோர்.
ஆயினும் நானே அதனை அடையச்
சட்டங் காட்டித் தடைகளை நீக்கி
அன்றுஎனை நிரவி ஆசிரியன் ஆக்கினார்.
அவர் யார்? கல்வித்துறைச் செயலாளர்
பொய்இலா ராகிய “கையார்” என்க.

முப்பத் தேழாண் டலுவல் பார்த்தேன்.
ஓய்வு பெற்றேன் ஊதியப் பேற்றுடன்.
அலுவலில் இருந்த அத்தனை நாளிலும்
அறவழி தவறிய அதிகாரிகளின்
எதிர்ப்பிலா நேரமே இல்லை; அக்கடலை
வென்று நீந்தா வேளையே இல்லை.
அலுவல் கால நிலை இது. ஆயினும்,
ஆசை பற்றிய தமிழின் தொண்டில்
ஒட்டிய என்உளம் வெட்டினும் பிரியாது.

வெண்பா முதலிய எழுதும் என்கை;
வண்ணம் பாடிக் கொண்டிருக்கும் வாய்!
முப்பதாண்டு முடியும் வரைக்கும்நான்
எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்?
கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச்
“சுடச்சுட அவன்அருள் துய்ப்பீர்” என்னும்!
ஆயினும் கடவுளுருவம் அனைத்தையும்
தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்!

பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்
காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச்
சுப்பிரமணிய பாரதி தோன்றியென்
பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்.
நானும் அவர்க்கே எழுத்தியல் உதவுமோர்
தொண்டினால் அவர்க்கும் புலவர்க்கும் தோன்றும்
சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன்.

முட்புதர்க் களாப்பழம் அதனில் மொய்க்கும்
கட்புலம் போல என்றன் உள்ளம்
சாதி என்பதோர் இடரைத் தவிர்த்தும்
சழக்கே என்பதோர் பெரும்படை தாக்கியும்
இளைஞர்களுக்குத் தமிழ்நலம் தந்து ஆசிரியர்
ஆக்குமோர் தொண்டினை நோக்கி நடந்தது.
நல்லாசிரியன்மார் நல்லாசிரியைமார்
பல்லோர் என்னிடம் பயின்றவர் இன்றும்
அலுவலில் அழகுற வாழ்கின்றார்கள்.

திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால்
கொலைமுதற் பற்பல குற்றம் சுமந்த
மாசிலா மனத்து மாடசாமியும்
அன்புறு பாரதி அரவிந் தர்முதல்
வன்முறையுடையரால் வருந்துவார்க்கு உதவியாய்ப்
பன்முறைப் புதுவையில் செத்துப் பிழைத்தேன்.
மக்கள்நலம் காத்தல் கண்டு ஆளவந்தார்
எக்கேடு சூழினும் அஞ்சேன்.ஒருநாள்
சிறைக்கதவு திறக்கப்பட்டது; சென்றேன்;
அறைக்கதவு புனிதப்பட்டது மீண்டேன்.
புதுவை அரசியற் போரில் இறங்குவேன்;
இதைவையேன் எனில் அதை விட்டுவையேன்.
நாய்பல நாற்புறம் வாய்திறக்கினும்
தாய்மொழித் தொண்டும் தவறியதில்லை.

நன்றி மறந்தவர் இன்று வரைக்கும்
குன்று கொணர்ந்து தூற்றுவர்; நன்றெனப்
பட்டதைச் செய்வேன்; பகைவருக்கு அஞ்சேன்.
வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் பிறரைத்
தூக்கிவிடுவதில் சோர்ந்ததே இல்லை.

படிப்புத் தந்தேன் சோறுதந்தேன்தலை
எடுக்கச் செய்தேன்; என்தலைதனை அவன்
அறுக்க முயன்ற போதும் சிரித்தேன்;
குறுக்கிற் பாய்ந்தும் பெரியவன் ஆகட்டும்
என்று நினைத்திருக்கின்றேன். இன்றும்!

என்கை பற்றி எழுந்து, பின்என்னையே
துன்புறுத்தும் பிள்ளைகள் பற்றிய
கதைகள் பலஉள. தடைகள் கணக்கில;
எதையும் தாண்டி இந்நாள் எழுபதாம்
ஆண்டினை ஈளைநோய் அங்காந்த வாயையும்
தாண்டி அடைந்தேன்; சாவு தோற்றது!
மெய்யே! ஆயினும் மெய்இலா உலகில்
என்னை இன்னும் வாழச் சொன்னார்
புலவர் இராம நாதன் அவர்கள்!

நானோர் பாவேந்தன் என்பதை
நானிலத் தமிழர் நன்றே அறிவர்.
என்பாட்டுச் சுவையில் ஈடுபட்டவர்
நோக்கினால் நூற்றுக்கு நாற்பதின்மர்.
என்நடை தம்நடை; என்யாப்புத் தம்யாப்பென்று
இந்நாள் எழுந்துள பாவலர் தம்மை
எண்ணினால் இருப்பவர் தம்மில் நூற்றுக்குத்
தொண்ணூற் றொன்பது பேர்எனச் சொல்லுவர்.

திரைப்படப் பாட்டும் பேச்சும் செய்பவர்
இருப்பிடம் என்றன் நூல்களின் இருப்பிடம்!
அவரால் வெளிவந்துள்ள திரைப்படம்
என்நூற் சொல்லை மாற்றியது குறிப்பிடும்!
பழியே தவர்மேல்? என்நூல் அல்லது
வழியேதவர்க்கு? கற்பனை ஏது?
கட்சித் தலைவர்தம் கட்சிக் குழந்தையின்
தொட்டில் ஆட்டப் பாடிய பாட்டும்
வளர்க்கப் பாடி வந்த பாட்டும்
என்பாட்டாகும்! என்பாட்டுக்குப்
பின்பாட்டுப் பாடினோன் அதனைத் தன்பாட்டு
என்று இயம்பும்-இது குன்றின் விளக்காம்!
எனினும் நாட்டுப்பற்றுள நல்லவர்
மிகப்பலர் என்றன் பாட்டின் மேன்மையை
உணர்ந்து சிலசொல் உரைத்த துண்டு.
முட்டுக் கட்டை இட்டதில்லை
மற்றும் தமிழே உயிரென வாழும்
தோழர் சில்லோர் வாழ்வின் பயனென
என்பாட்டுக்களை என்றன் நூல்களை
வரப்படுத்தி முறைப்பட வாய்விட்டு
வீட்டிலும் கூட்டந்தன்னிலும் மிக்க
ஒழங்குறப் பாடுகின்றதும் உண்மையே.

ஒருநாள் ஓரிலக்கம் மக்கள் கூடிக்
கால் இலக்கம் வெண்பொற்காசும்
பொன்னின் ஆடையும் ஈந்ததும் பொய்யன்று.
இவர்களன்றி மேல்நான் இயம்பிய
இழிந்தோர் என்னை ஒழிக்கத் தமிழையே
ஒழிக்கவும் தயங்கா உள்ளம் படைத்தவர்.

புலவர் இராம நாதன் அவர்கள்
தமது பெருந்தமிழ்ப் புலமையால் தாவி
என்றன் நூல்கள் அனைத்தையும் எடுத்துக்
"கவிஞரும் காதலும்" எனப்பெயர் கொடுத்துத்
திறனாய்வு வையம் காணச்செய்தார்.
நான்காணும்அவர் நல்ல எண்ணம்
என்றன் எழுபதாம் ஆண்டின் பின்னும்
நன்றுநான் இன்பமாய் வாழ்வதற்கான
நோற்றலின் ஆற்றல் தருவதாம்! வள்ளுவர்
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கென் றருளினார்.
புலவர் இராம நாதனார் நூல்பல
உலகினுக் களித்துல குளவரை வாழ்கவே.

(01.03.1960 ஆம் நாளன்று பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இந்தப்பாடல் தஞ்சைப் பேராசிரியர் புலவர் ந.இராமநாதனார் எழுதிய "கவிஞரும் காதலும்" நூலுக்கான வாழ்த்துப்பாவாகும். அனைவருக்கும் பயன்படும் வகையில் பாவேந்தர் பிறந்தநாளான இன்று(29.04.2012) தட்டச்சிட்டு இணையத்தில் பதிகின்றேன் - மு. இளங்கோவன் 

Rathinam Chandramohan

unread,
Apr 30, 2016, 10:39:21 PM4/30/16
to mint...@googlegroups.com

Azhagana arumaiyana pathivu

இறையடியான்

unread,
May 2, 2016, 12:34:00 AM5/2/16
to mintamil
அருமையாக அனைவரும் எழுதி செல்கிறீர்கள்

மானிட இனத்தை ஆட்டை வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாட்டில்வைப்பேன்னு
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைன்னு சொன்ன கண்ணதாசன் வரிகள் பாரதிதாசனுக்கு பொருந்தும்

யேசுராஜன்

truth is pathless land

N. Ganesan

unread,
May 2, 2016, 1:08:58 AM5/2/16
to மின்தமிழ், vallamai, Santhavasantham


On Sunday, May 1, 2016 at 9:34:00 PM UTC-7, இறையடியான் wrote:
அருமையாக அனைவரும் எழுதி செல்கிறீர்கள்

மானிட இனத்தை ஆட்டை வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாட்டில்வைப்பேன்னு

ஆட்டை என்றால் இணையத்தமிழில் பொருள் வேறு. தேடிப் பாருங்கள், ஸ்ரீ யேஸுராஜன்.
 
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைன்னு சொன்ன கண்ணதாசன் வரிகள் பாரதிதாசனுக்கு பொருந்தும்

பாரதிதாசன் மரணம் அடைந்தபின் சவத்தை எடுத்துவந்தது கண்ணதாசன் கார்தான்.
பாரதிதாசனுக்கு ஒரு ஆசை, கடைசிவரை நிறைவேறவில்லை. விமானத்தில் ஒருமுறை பறந்துபார்க்கணும் என்று.
யாரும் செய்யவில்லை.

நா. கணேசன்

இறையடியான்

unread,
May 2, 2016, 1:14:59 AM5/2/16
to mintamil
//மானிட இனத்தை ஆட்டை வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாட்டில்வைப்பேன்னு//

பெரியவர்கள் மன்னிக்கனும் ஆட்டிவைப்பேன்னு தட்டச்சு பண்ண நினைத்து ஆட்டை என்று எழுதிட்டேன்

யேசுராஜன்

truth is pathless land

இறையடியான்

unread,
May 2, 2016, 1:19:15 AM5/2/16
to mintamil
/நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல

    நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை
ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே
    ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்!//

இந்த வரிகள் கவர்ந்தன என்னை

தமிழை மொழியாய் கொண்டவர் பலர்
தமிழை உயிராய் கொண்டவர் சிலர்
தாயை தமிழை போன்றியுயிர் பெற்றோர் சிலர்
சிலரது வாழ்வே தமிழன் வரலாறு -
அச்சிலரதுவாழ்வே  கலங்கரை விளக்கு

யேசுராஜன்

truth is pathless land

N. Ganesan

unread,
May 2, 2016, 1:21:35 AM5/2/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

"பாரதி விட்டுச்சென்ற சொத்து' "புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன்! 

By மு.பரமசிவம் (தினமணி, 2011)
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா, காடு கமழும் கற்பூரச் சொற்கோ! கற்பனையின் ஊற்றாம், கதையின் புதையல், அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற் படரும் சாதிப்படை மருந்து, மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன், அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன். என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன் தமிழால், பாரதி தகுதி பெற்றதும்; தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்!'

இவைதான் பாரதியார் பெயரில் பாரதிதாசன் வைத்திருந்த அன்பின் அடையாளம்; பாசத்தின் முத்திரை!

1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி புதுச்சேரி கனகசபை-இலக்குமி அம்மை பெற்றோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம்.

15-வது வயதில் கவி புனையும் ஆற்றல் பெற்ற சுப்புரத்தினம், 1908-இல் புதுச்சேரியில் வேணு நாயக்கர் இல்லத்தில் பாரதியாரைக் காணும் வாய்ப்பைப் பெற்றார்.

பாரதியின் மீசையும் கம்பீரமும் சுப்புரத்தினத்துக்கு, பாரதி கடவுள் -பரமசிவனாகக் காட்சியளித்தார். அச்சமயத்தில் பாடியதுதான் "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற பாடல்.

அக்காலகட்டத்தில் புதுச்சேரியில் தங்கி, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட பகவான் அரவிந்தர், வ.வே.சு. ஐயர் போன்றவர்களுடன் நெருக்கமும் பழக்கமும் ஏற்பட்டது. அதோடு பாரதியார் நடத்திய "இந்தியா' பத்திரிகைக்கு மறைமுகமாக வேலைகள் செய்துவந்தார்.

பாரதியார் பெயரில் கொண்டிருந்த மரியாதை காரணமாக சுப்புரத்தினம் என்ற தன் பெயரை "பாரதிதாசன்' என்று மாற்றிக்கொண்டார். அதற்கு நண்பர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும், கடைசிவரை பாரதிதாசன் என்ற பெயரை மாற்றிக் கொள்ளவேயில்லை.

திருபுவனை என்னும் ஊரில் ஆசிரியராக இருந்த பாரதிதாசன், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, பின்னர் விடுதலை அடைந்தார்.

1921-இல், பழனியம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். தேசிய இயக்கம் தீவிரமாக இருந்த காலத்தில் கதர்த் துணியைத் தெருத்தெருவாக விற்பனை செய்தார்.

1929-இல் பெரியார் ஈ.வெ.ராவுடன் தொடர்பு ஏற்பட்டது. பெரியார் நடத்திய "குடியரசு' இதழில் கதை, கட்டுரை, கவிதை எழுதத் தொடங்கினார். இந்தியாவிலேயே முதன்முதலில் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய பாடல் எழுதிய ஒரே கவிஞர் பாரதிதாசன்தான் என்ற பாராட்டையும் பெற்றார்.

 அத்தொடர்புக்குப் பின்னணி, காந்தியைச் சந்தித்த பாரதி, ""அரிஜனங்கள் இழிநிலைக்குப் பரிகாரமாக உங்கள் போராட்டத்தில் இடம் உண்டா?'' என்று கேட்ட பாரதிக்கு, ""முதலில் விடுதலை; அரிஜனங்கள் பிரச்னை காத்திருக்க வேண்டும்'' என்னும் காந்தியின் பதில்கேட்டு, ""அத்தகைய அரசியல் விடுதலை எனக்குத் தேவையில்லை'' என்னும் அழுத்தமான குரலே பாரதியை தேசியத்திலிருந்து விலக்கிவைத்தது. பாரதியின் வழியை பாரதிதாசனும் பின்பற்றினார். பெரியாருடன் தொடர்புகொண்ட பாரதிதாசன், தமிழினத்தைப் பற்றி, தன்மானத்தைப் பற்றி, தமிழ்மொழியைப் பற்றி "தமிழியக்கம்' என்ற நூலை எழுதினார்.

1934-இல் "இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்னும் நாடகத்தை எழுதி, பெரியார் தலைமையில் அரங்கேற்றினார்.

1946-இல் கவிஞர் பாரதிதாசன் பற்றி, முல்லை முத்தையா முதன் முதலாக அறிஞர், புலவர், கவிஞர், மறுமலர்ச்சி எழுத்தாளர் ஆகியோரிடமிருந்து பெருமுயற்சி எடுத்து கட்டுரை, கவிதை, வாழ்த்துரை ஆகியவற்றைச் சேகரித்து "புரட்சிக் கவிஞர்' என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். அந்நூல் நான்கு பதிப்புகள் கண்டது. முல்லைப் பதிப்பகத்தார் கவிஞருக்கு நிதி திரட்டி அளிப்பதற்காகக் கவிஞரிடம் அபிமானம் கொண்ட பலர் சேர்ந்து குழு அமைத்தனர். அக்குழுவுக்கு அறிஞர் அண்ணா பொருளாளராகவும், முல்லை முத்தையா செயலாளராகவும் இருந்தனர்.

அதே ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி சென்னை பச்சையப்பன் விளையாட்டுத் திடலில், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கவிஞருக்கு இருபத்தையாயிரம் ரூபாய் நிதி அளித்து, பொன்னாடை போத்திக் கெüரவிக்கப்பட்டது. அதை அறிஞர் அண்ணா சிறப்பாகச் செய்தார்.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், சில தேசியக் கலைஞர்கள் அதற்கு மேல் எழுதுவதற்குத் தூண்டுதலோ, தத்துவச் சரக்கோ அற்றுப்போன காலத்திலும் இவர் தொடர்ந்து மக்களுக்காக எழுதிவந்தார். அதனாலேயே நாட்டில் எழுந்த அத்தனை வாதங்களும் கருத்துப் போர்களும் மோதல்களும் இவரது இலக்கியத்தில் மிகுந்த அழுத்தத்துடன் தமது முத்திரையைப் பதித்தன.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டில் ஏழை எளிய மக்களுக்குச் சுதந்திரம் இல்லாததைக் கண்ட பாரதிதாசன், விசாலப்பார்வையுடன் உலகப்பனைப் பாடுகிறாய்.

ஆடுகிறாய் உலகப்பா யோசித்துப்பார்! 
ஆர்ப்பாட்டக்காரர் இதை ஒப்பாரப்பா! 
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன் 
செகத்தப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான் 
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் 
உதையப்பராகி விட்டால், ஓர்நொடிக்குள் 
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி 
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!

இப்படி எழுதிய பிறகு, பாரதிதாசன், ஏழை எளிய உழைப்பாளிகள் மனதில் இடம்பெற்றார். மேலும், "குடும்ப விளக்கு' (ஒருநாள் நிகழ்ச்சி), "குடும்ப விளக்கு' (விருந்தோம்பல்), "குடும்ப விளக்கு' (திருமணம்), "குடும்ப விளக்கு' (மக்கட்பேறு), "குடும்ப விளக்கு' (முதியோர் காதல்) என ஐந்து நூல்கள் எழுதி தமிழர்கள் குடும்பத்தில் நிகழும் ஐந்து வகையான நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு ஐந்திணை காவியம்போல் படைத்தார்.

பாரதிதாசன் படைப்புகளில் "குடும்ப விளக்கு' சிறப்பான படைப்பு என்பது அறிஞர்களின் கருத்து. இதுபோல் 62 அரிய படைப்புகளைப் படைத்துள்ளார் பாரதிதாசன். அவற்றுள் சில திரைப்படங்களாக வந்துள்ளன. அவருடைய திரைப்படங்களில் "பொன்முடி', "வளையாபதி' போன்றவை சிறப்பானவை - குறிப்பிடத்தக்கவை.

சங்கே முழங்கு, தமிழுக்கு அமுதென்று பேர், துன்பம் நேர்கையில் யாழெடுத்து, வேரில் பழுத்த பலா - இவையெல்லாம் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்கள். இன்றளவும் பலரது மனதிலும் நினைவிலும் நீங்கா இடம்பிடித்த செந்தமிழ்ப் பாடல்கள்.

1962-இல் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், சென்னையில் மூதறிஞர் ராஜாஜியால் கவிஞருக்குப் பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கப்பட்டது.

1963-இல் "பாண்டியன் பரிசு' நூலை திரைப்படமாக்க முயன்றார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. தமிழை அமுதமாகக் கருதி பலவாறு பாடிய அந்தக் குயில் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி மண்ணுலகைவிட்டுப் பறந்தது. வரவிருக்கும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வது சாலப்பொருந்தும். பாரதிதாசனைப் பற்றிக் கூறவேண்டுமானால் இக்கட்டுரை ஒன்று போதாது. காவியமே படைக்கவேண்டும்.

பாரதிதாசன் வாழ்ந்த காலத்திலேயே சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன், ""பாரதியார் தமிழுக்கு விட்டுச்சென்ற சொத்து பாரதிதாசன்'' என்று கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழுக்குக் கிடைத்த அந்த அழியாச் சொத்தை பாதுகாப்பது நமது தலையாய கடமை.

N. Ganesan

unread,
May 2, 2016, 1:24:32 AM5/2/16
to வல்லமை, mint...@googlegroups.com, Santhavasantham
பாரதிதாசனைக் கவிஞனென பாரதியார் அறிமுகஞ்செய்கிறார்:
'எழுக! நீ புலவன்!'

பாரதி

இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார்; கைக்கோள ஜாதி; ஒட்டக்கூத்தப் புலவர்கூட அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன்.

இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார். ஆதலால் வெளிப்படுத்தவில்லை.

தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது. "இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு ஸந்தோஷம். எப்போதும் வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?" என்றது. "கவிராயரே, என்ன விஷயம் கேட்க வந்தீர்?" என்று தராசு கேட்டது. 
"எனக்குக் கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை. அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன். அந்த விஷயமாகச் சில வார்த்தைகள் கேட்க வந்தேன்" என்று கவிராயர் சொன்னார். "இதுவரை பாடின பாட்டுண்டானால் சொல்லும்" என்று தராசு கேட்டது.

"இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை" என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.

"மாதிரி சொல்லும்" என்றது தராசு.

புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

"காளை யொருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அம்மை
தோளசைத் தங்கு நடம் புரிவாள் - இவன்
தொல்லறி வாளர் திறம் பெறுவான்.
ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா! - தம்பி
ஏழு கடலவள் மேனியடா!
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - எங்கள் 
தாயின் கைப் பந்தென வோடுமடா!
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து 
கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ ?
மங்கை நகைத்த ஒலியதுவாம் - அவள்
வாயிற் குறுநகை மின்னலடா!"

தராசு கேட்டது: "புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?"

கவிராயர்: "இன்னும் படிக்கவில்லை; இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்."
தராசு: "சரிதான் ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்."

இங்ஙனம் வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில் சீட்டிக் கடை ஸேட் வந்தார். . . .

கவிராயர் தராசை நோக்கி, "நம்முடைய ஸம்பாஷணைக்கு நடுவிலே கொஞ்சம் இடையூறுண்டாயிற்று" என்றார்.

தராசு சொல்லுகிறது: "உமக்கும் அதுதான் காணும் வார்த்தை. நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்."

அப்போது புலவர் தராசை நோக்கி: "நீயே எனது குரு" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.

தராசு: "எழுக! நீ புலவன்!" என்றது.

தேமொழி

unread,
May 2, 2016, 1:36:54 AM5/2/16
to மின்தமிழ்
///
 நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்
///

என்ன அருமையான கொள்கை!!!!!  
தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்
மிக நல்ல, எழுத்தாளர் அனைவரும் பின்பற்றவேண்டிய ஓர் அறிவுரை. 

இக்கொள்கையைப் பின்பற்றியவரும், அவரது தாசரும் இன்றும்  மக்கள் மனதில் நிற்கும் காரணம் புரிகிறது.


..... தேமொழி

N. Ganesan

unread,
May 2, 2016, 1:43:56 AM5/2/16
to மின்தமிழ், vallamai, Santhavasantham


On Sunday, May 1, 2016 at 10:36:54 PM UTC-7, தேமொழி wrote:
///
 நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்
///

என்ன அருமையான கொள்கை!!!!!  
தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்
மிக நல்ல, எழுத்தாளர் அனைவரும் பின்பற்றவேண்டிய ஓர் அறிவுரை. 

இக்கொள்கையைப் பின்பற்றியவரும், அவரது தாசரும் இன்றும்  மக்கள் மனதில் நிற்கும் காரணம் புரிகிறது.


பாரதியைப் பற்றி அவரது தாசன் சொல்லிய பாடல்களைப் படிக்கலாம், அனைத்தும் அருமை.
 
தமிழை, தமிழரை Age of Myth-லிருந்து நவீன விஞ்ஞான உலகிற்கு அழைத்துவர முயன்ற இரு பெருங்கவிகள்.

நா. கணேசன்



N. Ganesan

unread,
May 2, 2016, 1:56:09 AM5/2/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, Dr. Y. Manikandan, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu
ஜேம்ஸ் கஸின்ஸ் என்னும் ஐரிஷ் கவிஞர் பாராட்டும், அதனைத் தமிழில்
தந்த பாரதிதாசனும். பேரா. ய. மணிகண்டன் கண்டு வெளியிட்டுள்ளார் இன்று.

கண்டுபிடிக்கப்பட்ட அரிய ஆவணம்!


முதன்முதலில் எழுத்துப்பட பாரதி கவிதை உயர்ந்தது என்று எடுத்துக்காட்டியவர் பாரதிதாசன்

இந்திய அளவில் பாரதியின் இடம்குறித்த முதல் தமிழ்ப்பதிவு மகாகவி பாரதியைத் ‘தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவன்’ எனவும், ‘பாரத நாட்டின் கவிஞன்’ எனவும், ‘உலக கவி’ எனவும் முதலில் கவிதையில் போற்றி எழுதியவர் பாரதிதாசன். அவர் 75 ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதை இயக்க ‘நகரதூதன்’ இதழில் எழுதிய கட்டுரையில் ஒரு செய்தியைப் பதிவுசெய்திருந்தார்.

பல்லாண்டுகளுக்கு முன் பெல்ஜியக் கவிஞர் வெர்ஹேரன் இறந்தபோது, ‘சுதேசமித்திரன்’ இதழில் தாம் ஒரு கட்டுரையை எழுதியிருந்ததாகவும், அந்தக் கட்டுரையுள் தமிழ்நாட்டில் பாரதி உயர்ந்த கவி என்பதை விளக்கிக் காட்டியதாகவும், அதுவே பாரதி கவிதை உயர்ந்தது எனத் தமிழில் எழுதப்பட்ட முதல் பதிவு எனவும், முதன்முதலில் எடுத்துக்காட்டியவன் நான்தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

“பாரதியார் அநேக வருஷங்களாகக் கவிதை ருசியாக எழுதிவருவது தெரிந்திருந்தும், வி.வி.எஸ். ஐயர் அவரைப் பாராட்ட வேண்டியதிருக்க ‘அநேக நூற்றாண்டாகத் தமிழ்நாட்டில் கவிதை தோன்றவில்லை’ என்று பத்திரிகையில் எழுதினார். அதையடுத்து, அயர்லாந்தில் வெர்ஹேரன் கவி இறந்தார். அதுபற்றி நான் சுதேசமித்திரனில் அப்போது ஓர் கட்டுரை எழுதினேன். அதில் தமிழ்நாட்டில் பாரதி உயர்ந்த கவி என்பதை விளக்கிக் காட்டினேன். முதன்முதலில் எழுத்துப்பட பாரதி கவிதை உயர்ந்தது என்று எடுத்துக்காட்டியவன் நான்தான்.’ (நகரதூதன், 15-09-1940)

எங்கே அந்த எழுத்து?

பாரதிதாசன் இப்படிச் சொல்லியுள்ள போதிலும் பாரதிதாசனின் எழுத்துகளாக இதுவரை வெளிவந் துள்ளவற்றில் அப்படியொரு எழுத்து இடம்பெறவில்லை.

நான் மேற்கொண்ட தேடலில், பாரதிதாசன் ‘சுதேசமித்திரன்’ இதழில் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்த அந்தக் கட்டுரையைக் கண்டெடுத்துள்ளேன். ‘நகரதூதன்’ இதழில் குறிப்பிட்டிருந்தபடி வெர்ஹேரன் இறந்தபோது அவரால் எழுதப்பட்ட கட்டுரை அது. அந்தக் கட்டுரை வெளிவந்து சரியாக 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் அது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாரதியின் மீது செல்வாக்குச் செலுத்திய கவிஞர்களுள் ஒருவர் எனக் கைலாசபதி முதலியோரால் குறிப்பிடப்படும் வெர்ஹேரன் பற்றி, பாரதியாரால் உரைநடையில் குறிப்பிடப்பட்ட கவிஞர்களுள் ஒருவராகிய வெர்ஹேரன் பற்றி பாரதியாரின் சமகாலத்திலேயே பாரதியார் தொடர்ந்து எழுதும் ‘சுதேசமித்திரன்’ இதழிலேயே பாரதிதாசனும் எழுதியிருக்கின்றார். இன்னுமொரு சிறப்பு பாரதிதாசனின் வெர்ஹேரன் குறித்த கட்டுரையும், பாரதியாரின் ‘ வைஷ்ணவம்’ என்னும் கட்டுரையும் சுதேசமித்திரன் இதழில் ஒரே பக்கத்தின் மேற்பகுதியில் பாரதி கட்டுரை, கீழ்ப்பகுதியில் பாரதிதாசன் கட்டுரை என இடம்பெற்றிருந்தன. 1917 ஜனவரி 3 அன்று இவை வெளிவந்திருந்தன.

முதல் பதிவு ஒரு ஆய்வு

தாம் எடுத்துக்காட்டி ‘சுதேசமித்திர’னில் எழுதியதே ‘பாரதியார் உயர்ந்த கவி’ எனத் தமிழில் எழுதப்பட்ட முதல் பதிவு என்று பாரதிதாசன் கூறியிருப்பது எண்ணத்தக்கதாக அமைகிறது.

பாரதி வாழ்ந்த காலத்தில் அவரைப் போற்றி எழுதப்பெற்றவையாக மு.ராகவையங்கார், பரலி சு.நெல்லையப்பர், ராஜாஜி, ஏ.வி.சுப்பிரமணிய ஐயர், வ.வெ.சு.ஐயர் ஆகியோரின் எழுத்துகள் முதல்நிலையில் காட்சியளிக்கின்றன. ராகவையங்கார் பாரதியாரைப் பாராட்டி எழுதியது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலின் மதிப்புரை (1908). நூல் மதிப்புரை என்னும் நிலையிலும், இனிய கவிகள் பாட வல்லவர் பாரதியார் எனக் குறிப்பிடும் நிலையிலும் அமைந்தது இது. பாரதியை உச்சநிலையில் வைத்துப் பாராட்டி எழுதப்பட்ட ஏ.வி.சுப்பிரமணிய ஐயரின் கட்டுரையானது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அன்னிபெசன்ட் நடத்திய ‘நியூ இந்தியா’ பத்திரிகையில் அது 1919-ல் வெளிவந்தது. ‘மறுமலர்ச்சிக் கவிஞர்’ என்னும் தலைப்பில் வ.வே.சு.ஐயர் எழுதிய கட்டுரை 1918 ‘சுதேசமித்திரன் வருஷ மல’ரில் வெளிவந்தது. ராஜாஜியின் குறுங்கட்டுரையோ 1916-ல் அன்னிபெசன்ட் நடத்திய ‘காமன்வீல்’ இதழில் வெளிவந்ததாயினும் ஆங்கிலத்தில் அமைந்தது. பரலி சு.நெல்லையப்பரின் மிகச் சிறந்த பதிவுகள் 1917 ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில்தான் கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு ஆகிய நூல்களின் முகவுரைகளாக இடம்பெற்றன. இவை நூலைப் பதிப்பித்தவர் கூறியவை என்னும் நிலையில் அமைவன.

இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும்போது பாரதியார் உயர்ந்த கவி எனக் குறிப்பிடும் பகுதியைக் கொண்ட, 1917 ஜனவரி 3 அன்று வெளிவந்த பாரதிதாசனின் கட்டுரையே பாரதியைச் சிறப்பித்துக் கூறும் முதற்பதிவு என்று கொள்ளத் தோன்றுகின்றது.

பாரதிதாசன் சொல்லவில்லை

Mirra Alfassa’s sketch of James Cousins.Photo: Courtesy Sri Aurobindo Ashram Archives, Puducherryதமிழில் எழுதப்பட்ட பதிவுகளுள் பாரதி உயர்ந்த கவி எனத் தெரிவிக்கும் பகுதி பாரதிதாசன் கட்டுரையில்தான் முதன்முதலில் இடம்பெற்றுள்ளது எனினும், அக்கருத்து பாரதிதாசனின் சொந்தக் கருத்தாக இடம்பெறவில்லை. அவரே நான் ‘எடுத்துக்காட்டினேன்’ என்று சொல்வதற்கேற்ப அயர்லாந்தின் சிறந்த கவிஞராகவும் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் உள்ள இம்பீரியல் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராக விளங்கியவருமாகிய ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் கூற்றே பாரதிதாசனின் கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கஸின்ஸ், பாரதியின் கவிதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருமாவார்.

அன்னிபெசண்ட் நடத்திய ‘காமன்வீல்’ இதழில் 1916 டிசம்பர் 8 அன்று வெர்ஹேரன் குறித்து அவர் மறைவையொட்டி கஸின்ஸ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் பல செய்திகள் பாரதிதாசனால் தமிழில் ‘வெர்ஹேரன் என்ற பெல்ஜியக் கவிராயர்’ என்னும் தலைப்பிலான கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. ‘சுதேசமித்திரன்’ இதழில் கட்டுரையாளர் பெயர், பாரதிதாசனின் இயற்பெயர் அடிப்படையில் அக்காலத்தில் அவர் பயன்படுத்திய வடிவமாகிய ‘கனகசுப்பரத்தினம்’என இடம்பெற்றிருந்தது. ஆங்கிலப் புலமை அதிகமற்ற பாரதிதாசன், ஆங்கிலம் அறிந்த பாரதியின் நண்பர்களால் கஸின்ஸ் கட்டுரையைப் பயின்று தமிழில் எழுதியிருக்க வேண்டும்.

வெர்ஹேரன் மறைவையொட்டி எழுதிய கட்டுரையில், அவருடைய சிறப்பைச் சொல்ல வருகையில் இந்தியாவின் சிறந்த கவிஞர்களாக நால்வரையும் அவர்தம் கவிதைப் போக்கையும் கஸின்ஸ் குறிப்பிடுகின்றார். தாகூர், அரவிந்தர், சரோஜினி நாயுடு, பாரதி ஆகிய நால்வரே அவர் சுட்டும் கவிஞர்களாவர். இதில் இடம்பெறும் தமிழ்க் கவிஞர் பாரதி மட்டுமே. பாரதியைப் போற்றி அமைந்துள்ள இந்தப் பகுதியைத் தமிழுலகம் நன்கறிந்த ‘சுதேசமித்திரன்’ இதழின் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே பாரதிதாசன் கஸின்ஸ் எழுதிய கட்டுரையைப் பெரிதும் தழுவித் தமது கட்டுரையைப் படைத்திருக்கின்றார்.

பாரதிதாசன் கட்டுரை வெளிவந்த சில ஆண்டுகள் கழித்து, ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் இந்தப் பகுதியைப் பாரதியின் துணையோடு பாரதியின் தொடர்புடையோர் தாம் வெளியிட்ட பாரதி நூல்களின் பிரசுரம் பற்றிய ‘தமிழ் வளர்ப்புப் பண்ணை’ அறிக்கையில் (1920) ஆங்கிலத்திலும் தமிழ் மொழிபெயர்ப்பிலுமாக அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியின் மொழிபெயர்ப்பை பாரதியே செய்திருக்கலாம்.

தலைசிறந்தவர்களில் ஒருவர்

இந்தியாவின் சிறந்த கவிஞர் நால்வருள் ஒருவராக, தாகூர், அரவிந்தர், சரோஜினி நாயுடு ஆகியோரோடு இணைத்து எண்ணத்தக்க ஒருவராக பாரதி விளங்குவதை முதலில் ஆங்கிலத்தில் எழுதி விளக்கியவராக ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் திகழ்கின்றார். அதனைத் தம் தமிழ்க் கட்டுரையின் வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டிய முதலாமவராக பாரதிதாசன் விளங்குகின்றார். பாரதியார் மீது 1917-லேயே பாரதிதாசன் கொண்ட ஈடுபாட்டையும், ‘சுதேசமித்திர’னுக்குக் கட்டுரைகள் எழுதும் திறத்தையும், உலகக் கவிஞர்களுள் ஒருவராகிய வெர்ஹேரன் பற்றி அறிந்துகொண்ட நிலையையும் உணர்த்துவதாக பாரதிதாசனின் கட்டுரை அமைகின்றது!

கட்டுரையாளர் பேராசிரியர் - தலைவர் (பொ.), 
தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம். 
தொடர்புக்கு: v.y.man...@gmail.com

இன்று பாரதிதாசனின் 126 - வது பிறந்த நாள்

மோடார் வண்டியிலும் கவிதையுண்டு

பாரதியியலிலும் பாரதிதாசனியலிலும் முக்கியமான படைப்பாக, ஆவணப் பதிவாகத் திகழும் இதனை, முதன்முறையாக இன்றைய தமிழுலகம் பாரதிதாசனின் 126-ம் பிறந்த நாளான இன்று கண்டு மகிழும் வண்ணம் இங்கே வெளியிடப்பெறுகிறது.

வெர்ஹேரன் என்ற பெல்ஜியக் கவிராயர்

கனகசுப்பரத்தனம்

சில வாரங்களின் முன்பு பிரான்ஸு தேசத்திலுள்ள ‘ரூவன்’பட்டணத்தில், ரயில் வண்டி அதிவேகமாக ஓடும்போது அதில் ஏறப் போய்த் தவறி விழுந்து, ‘வெர்ஹேரன்’ என்ற கவிராயர் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது.

இப்புலவரின் தெளிவை வியந்து சென்னை ‘காமன்வீல்’ பத்திரிகையில் ‘ஜேம்ஸ் கஸின்ஸ்’ என்ற ஐர்லாந்து தேசத்துப் புலவர் நல்லதொரு லிகித மெழுதியிருக்கிறார்.

பெல்ஜியம் தேசத்தில் ஆன்ட் வெர்ப் நகரத்தருகேயுள்ளதொரு சிறிய கிராமத்தில் அறுபத்தொரு வருஷங்களுக்கு முன்னே, (1855) வெர்ஹேரன் பிறந்தார். அதே ஜில்லாவிலேதான் மகா கீர்த்திமானாகிய மாரிஸ் மெடர்லிங்க் என்ற வித்வானும் பிறந்தார்.

வெர்ஹேரன் இலக்கியத் தொழிலிலே தலையிட்ட காலம் தாமே கீர்த்திகொண்டு தனிச்சுடராக நிற்பதற்குத் தகுந்த காலமில்லை. ஏற்கெனவே, ரோஸெத்தி, ரஸ்கின் என்ற ஆங்கிலேய வித்வான்களின் நெறியை அனுஸரித்து பெல்ஜியம் தேசத்தில் புதிய இலக்கிய முறை தோன்றி நடைபெற்றது. இம்முறை அவ்விடத்தாரால் ‘ரியலிஸம்’அதாவது ‘ப்ரத்யக்ஷ நெறி’ என்று சொல்லப்படுவது. அதென்ன முறை என்றால், கண்டதே காக்ஷி கொண்டதே கோலம் என்று நம்பி, ஏறக்குறைய ஆத்மா இல்லையென்று பாவனை செய்வது.

இளமையில் வெர்ஹேரன் சிற்றின்பங்களில் மூழ்கினார். பிறகு, கண்ணை விழித்தார். வலிமைக் கொள்கையிலே சேர்ந்தார். ஆத்மாவை வணங்கவில்லை. சக்தியை வணங்கினார். மோடார் வண்டியிலும் கவிதை யுண்டென்று வெர்ஹேரன் சொன்னார்.

கஸின்ஸ் எழுதுகிறார் அந்த காமன்வீல் பத்திரிகையில் - பொருளின் வெளி வடிவத்திலே அழகு காண்பது காட்சியன்று. பொருளின் இயல்பிலே அழகு காண வேண்டும். எந்தப் பொருளிலும் வடிவத்துக்குள்ளே வந்து ஒன்று நிற்கிறது. வடிவத்தைக் கருதாது வஸ்துவை நேரிடப் பார்ப்பதே காட்சியாம். வெர்ஹேரன் விடுதலைக் கற்பனைக்கு மிகவும் சமீபத்திலே வந்துவிட்டான்.

ஆனால், பாரதக் கவிராயராகிய ரவீந்திரநாத் டாகுர், ஸரோஜினி நாயுடு, அரவிந்த கோஷ், சி.சுப்பிரமணிய பாரதி இந்த நால்வரும், இவர்களைப் போலே, ஏரின் (ஐர்லாந்து) தேசத்திருப்போரும், செய்திருக்கும் ‘கவிதை’சாலவும் பெரிது. ‘ஏன்?’ எனில் இவர்கள் அழகுத் தெய்வத்தை நேரே கண்டனர்! கண்டதைக் கண்டபடி பாட்டாலே சொல்லினர்! பெல்ஜியம் தேசத்தார் கொண்டாடிய ‘ப்ரத்யக்ஷ மின்றி’க் கவிதையெல்லாம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூலைப் படித்துப் பாரீர்! பிறகு ஏரின் தேசத்துக் கவிராயனாகிய A E (என்ற குறிப் பெயருடையான்) பாடிய பின்வரும் செய்யுளைப் படித்துப் பாரீர்!

காதல்

காதலிப் பெண்ணே; 
உள்ளத் திடையே கனவுற வேண்டும். 
காதல் முன்பு காட்சி பின்பு 
நின்னிடையுள்ள பரம்பொருள் காண்பேன் 
நின்னை அதன்பின் வணங்குவேன், 
நீ செயும் செய்கையிலெல்லாம், 
நினது தெய்வ - இயல் காண்பேன். 
நினதழகைக் கருதேன். ‘திருவனை’
வணங்குவேன்.

(சுதேசமித்திரன், 3 ஜனவரி 1917 ப. 6)

Singanenjam Sambandam

unread,
May 2, 2016, 3:25:16 AM5/2/16
to mint...@googlegroups.com
பாரதிதாசனின் வரலாற்றை தந்த  நண்பர் கணேசனாருக்கு  நன்றி. 

அரிய  கட்டுரையை அளித்த  அன்பருக்கும் நன்றி. 

"தமிழரின் உயிர் நிகர் தமிழ் நிலை தாழ்ந்ததால் 

தமிழகம்  தமிழுக்கு  தகும்  உயர்வளிக்கும் 

தலைவனை  எண்ணி  தவங்கிடக்கையில் 

இலகு பாரதிப்  புலவன் தோன்றினான் 
.
(பாரதி பற்றி  அவரின் தாசன்)

"ஒருமுறை பாரதி அரவிந்தரோடு  உரையாடிக் கொண்டிருக்கையில் , ஒரு பிரஞ்சு  அன்பர் , பிரஞ்சு பாடல் ஒன்றை பாடி, இது போன்ற நயம் மிக்க பாடல் வேறு  எந் மொழியிலும்  இல்லை இல்லை  என்று பெருமைப் பட்டுக் கொண்டாராம்.  வீடு திரும்பிய பாரதி , பாரதிதாசானைக் கண்டு  " சுப்பு , நம் தமிழில் இப்படிப் பாடலில் லையா", என வருத்ததோடு  கேட்க, " ஏன் இல்லை " எனச் சொன்ன சுப்பு ரத்தினம் , தன ஆசானோடு அரவிந்தர் இல்லம் சென்று, அந்த பிரஞ்சு பாடலுக்கு நிகரான பாடல் ஒன்றைப் பாடி  அனைவரையும்  அதிசயிக்க வைத்தாராம்." 

இது  உண்மையா? 






--

இறையடியான்

unread,
May 2, 2016, 4:08:23 AM5/2/16
to mintamil
//நின்னிடையுள்ள பரம்பொருள் காண்பேன் 
நின்னை அதன்பின் வணங்குவேன்,//

இடை இல்லை அதை போல கடவுளும் இல்லை என்கிறாரா

யேசுராஜன்

truth is pathless land

தேமொழி

unread,
May 2, 2016, 4:17:36 AM5/2/16
to மின்தமிழ்
புதிய வகையில் பொருள் சொல்வதில் திருத்தம் பொன் சரவணனுக்கு ஒரு போட்டியாளர் உருவாகிறாரோ!!!


..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

இறையடியான்

unread,
May 2, 2016, 4:55:54 AM5/2/16
to mintamil
அதான் அர்த்தம் தேமொழி அந்த பெண்ணுக்கு இடை இல்லை அதே போல கடவுளும் இல்லை என்பதால் இரண்டையும் சேர்த்துட்டார்னு நினைக்கிறேன்

காதலிப் பெண்ணே; 
உள்ளத் திடையே கனவுற வேண்டும். 
காதல் முன்பு காட்சி பின்பு 
நின்னிடையுள்ள பரம்பொருள் காண்பேன் 
நின்னை அதன்பின் வணங்குவேன், 
நீ செயும் செய்கையிலெல்லாம், 
நினது தெய்வ - இயல் காண்பேன். 
நினதழகைக் கருதேன். ‘திருவனை’
வணங்குவேன்.

காதல் முன்பு காட்சி பின்பு என்ற வரிக்கு பிறகு

நின்னிடையுள்ள பரம்பொருள் காண்பேன் 

வேறு அர்த்தம் உள்ளதான்னு திருத்தம் சரவணன் சொல்லுவார் என நம்புகிறேன்

யேசுராஜன்

truth is pathless land

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
May 2, 2016, 8:29:16 AM5/2/16
to mint...@googlegroups.com
இந்த  இடையோடு   இறைவனை ஒப்பிடுவது கம்பனது காவியத்திலேயே உள்ளது. " இந்த பெண்களுக்கு இடை உண்டா இல்லையா என விவாதிப்பது , இறைவன் உண்டா இல்லையா  என்று விவாதிப்பதற்கு  ஒப்பாக உள்ளது" என்கிறாராம் கம்பர். பாட்டு எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும். 

" பொய்யோ  எனும் இடையாளொடும் இளையானொடும்  போனான் -அவன் 
 மையோ   மரகதமோ மறிகடலோ மழை முகிலோ 
 ஐயோ..........

கற்பனையில் காணும்போது  இந்தக் காட்சியும்  வெகு அழகாக  இருக்கும்.

இறையடியான்

unread,
May 2, 2016, 8:32:21 AM5/2/16
to mintamil
சூப்பர் சார் அதான் எங்கோ பள்ளி கூடத்தில் தமிழாசிரியை சொன்னது ஞாபகத்தில் இருந்தது எனக்கும் ஆனால் அது கம்பரான்னு ஞாபகமில்லை

யேசுராஜன்

truth is pathless land

N. Ganesan

unread,
May 2, 2016, 9:10:24 AM5/2/16
to மின்தமிழ், vallamai


On Monday, May 2, 2016 at 5:29:16 AM UTC-7, singanenjan wrote:
இந்த  இடையோடு   இறைவனை ஒப்பிடுவது கம்பனது காவியத்திலேயே உள்ளது. " இந்த பெண்களுக்கு இடை உண்டா இல்லையா என விவாதிப்பது , இறைவன் உண்டா இல்லையா  என்று விவாதிப்பதற்கு  ஒப்பாக உள்ளது" என்கிறாராம் கம்பர். பாட்டு எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும். 

" பொய்யோ  எனும் இடையாளொடும் இளையானொடும்  போனான் -அவன் 
 மையோ   மரகதமோ மறிகடலோ மழை முகிலோ 
 ஐயோ..........

கற்பனையில் காணும்போது  இந்தக் காட்சியும்  வெகு அழகாக  இருக்கும்.



இதே போல புகழேந்திப் புலவரும்:
கொய்த மலரைக் கொடுங்கையி னால்அணைத்து
மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவைஇடைக்கு
ஆதாரம் இன்மை அறிந்து
                                                       - நளவெண்பா

எல்லாம் சரி. பாரதிதாசன் கருத்தை கவிச்சக்கரவர்த்தி ஒருவர் 900 ஆண்டுகளுக்கு முன்னரே
அழகாகத் தமிழில் பாடியுள்ளார். அந்நூல் பற்றித் தெரியுமா? இந்தியாவின் தத்துவ தரிசனங்களில்
ஒன்றான லோகாயதத்தை சொல்லும் நூல். தேமொழி போன்றோர் உரை எழுதவேண்டும்.

நா. கணேசன்


 
2016-05-02 14:25 GMT+05:30 இறையடியான் <yesura...@gmail.com>:

கவி.செங்குட்டுவன்

unread,
May 2, 2016, 10:05:42 AM5/2/16
to mint...@googlegroups.com
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://kalvikoyil.blogspot.in
                     http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/



Singanenjam Sambandam

unread,
May 2, 2016, 1:05:39 PM5/2/16
to mint...@googlegroups.com
செங்குட்டுவன்,  "பொங்கல்  வாழ்த்து",   " மகிழ்ச்சிப்  பொங்கல் "  என்றெல்லாம் எழுதாமல்," HAPPY PONGAL " என்று ஆங்கிலத்தில் எழத வேண்டாமே...... " தமிழுக்காக நாம் ஒன்றும் செய்ய வேண்டாம், செய்வதை தமிழில் செய்வோம்".  நீங்கள்  எழுத்தறிவிக்கும்  இறைவன். பிள்ளைகளுக்குத்   தாய்மொழிப் பற்றை நீங்கள்தான் ஊட்ட வேண்டும்....வளர்க்க வேண்டும்.

N. Ganesan

unread,
May 2, 2016, 4:18:01 PM5/2/16
to மின்தமிழ்


2016-05-02 7:05 GMT-07:00 கவி.செங்குட்டுவன் <kavi.sen...@gmail.com>:


உங்கள் பள்ளியில் புரட்சிக் கவிஞரின் விழா சிறப்பாக நடந்தது என அறிய மகிழ்ச்சி.
பலரும் பாரதிதாசன், பாரதி, ... மறந்திட்ட காலம் இது.

நா. கணேசன்
 


2016-05-02 18:40 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Monday, May 2, 2016 at 5:29:16 AM UTC-7, singanenjan wrote:
இந்த  இடையோடு   இறைவனை ஒப்பிடுவது கம்பனது காவியத்திலேயே உள்ளது. " இந்த பெண்களுக்கு இடை உண்டா இல்லையா என விவாதிப்பது , இறைவன் உண்டா இல்லையா  என்று விவாதிப்பதற்கு  ஒப்பாக உள்ளது" என்கிறாராம் கம்பர். பாட்டு எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும். 

" பொய்யோ  எனும் இடையாளொடும் இளையானொடும்  போனான் -அவன் 
 மையோ   மரகதமோ மறிகடலோ மழை முகிலோ 
 ஐயோ..........

கற்பனையில் காணும்போது  இந்தக் காட்சியும்  வெகு அழகாக  இருக்கும்.



இதே போல புகழேந்திப் புலவரும்:
கொய்த மலரைக் கொடுங்கையி னால்அணைத்து
மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவைஇடைக்கு
ஆதாரம் இன்மை அறிந்து
                                                       - நளவெண்பா

எல்லாம் சரி. பாரதிதாசன் கருத்தை கவிச்சக்கரவர்த்தி ஒருவர் 900 ஆண்டுகளுக்கு முன்னரே
அழகாகத் தமிழில் பாடியுள்ளார். அந்நூல் பற்றித் தெரியுமா? இந்தியாவின் தத்துவ தரிசனங்களில்
ஒன்றான லோகாயதத்தை சொல்லும் நூல். தேமொழி போன்றோர் உரை எழுதவேண்டும்.

நா. கணேசன்


--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://kalvikoyil.blogspot.in
                     http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/



Reply all
Reply to author
Forward
0 new messages