மணிமேகலைக் காப்பியக் கதைகள் -- பகுதி 4

4,150 views
Skip to first unread message

rajam

unread,
Dec 17, 2010, 8:25:32 PM12/17/10
to மின்தமிழ், Narayanan Kannan, Subashini Tremmel

இதற்கு முன் அமுதசுரபி எப்படி மணிமேகலை கைக்கு வந்தது என்று பார்த்தோம். அதைக் கொண்டு அவள் என்ன செய்தாள் என்பதை இனிப் பார்க்க வேண்டும்.
மணிமேகலைக் காப்பியம் பல கிளைக்கதைகளை உள்ளடக்கியது. 

அடிப்படைக் கதை மேற்கொண்டு செல்ல இரண்டு பெண்களப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த இரண்டு பெண்கள் ஆதிரை என்பவளும் காயசண்டிகை என்பவளும்.
ஆதிரைதான் அமுதசுரபியில் முதலில் பிச்சை இடுகிறாள். அது பலரின் பசியைப் போக்குவதைப் பார்த்த காயசண்டிகை மணிமேகலை கையிலிருந்து பிச்சை பெறுகிறாள். இந்த இரண்டு பெண்களும் கதையோட்டத்துக்குத் தேவையானவர்கள்.
இந்தப் பகுதியில் ஆதிரை பற்றிப் பார்ப்போம்.
(குறிப்பு: இதற்கு முந்திய பகுதிகளில் எழுந்த கேள்விகளை நான் மறக்கவில்லை. கூடிய விரைவில் எனக்குத் தெரிந்த மறுமொழி தருகிறேன்.)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++

மணிமேகலை: ஆதிரையின் கதை
-------------------------------------
அமுதசுரபி மணிமேகலை கைக்கு வந்தது பற்றிப் பார்த்தோம். 

அமுத சுரபியின் சிறப்பு ... அதில் இடப்பட்ட பிச்சை எடுக்க எடுக்கக் குறையாதது. அதிலிருந்து வாங்குபவர்களின் கைதான் வாங்கி வாங்கி வருத்தம் அடையுமாம்! 

ஆனால் ... அதில் யாராவது பிச்சை இடவேண்டுமே.

அமுதசுரபியில் பிச்சை இட்டவள் ஆதிரை. முதல் பிச்சை ஏற்றவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் பிச்சை ஏற்ற ஒருத்தியின் பெயர் தெளிவாகத் தெரிகிறது. இவள் பெயர் காயசண்டிகை. (பின்னால் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பவனே மணிமேகலையை விரும்பும் உதயகுமரனைக் கொன்றுவிடுகிறான். அதைப் பிறகு பார்ப்போம்.)

இந்தப் பகுதியில் ஆதிரை பற்றிப் பார்ப்போம்.


ஆதிரையின் கதை
---------------------
ஆதிரையின் கணவன் சாதுவன். சாதுவன் ஆதிரையை விட்டுவிட்டு ஒரு கணிகையிடம் போய்ச் சேர்ந்து தன் உணவுக்கு அவள் கையை நம்பி வாழ்கிறான். அப்போதும் வட்டாடல், சூதாடல் இவைகளில் பொருள் எல்லாவற்றையும் இழக்கிறான். கணிகையும் அவனை விரட்டிவிடுகிறாள். 

பிறகு சாதுவன் வணிகம் காரணமாகக் கடலில் செல்லும் மக்களோடு தானும் போகிறான். கடல் காற்றின் வீச்சால் அவன் போன கலம் சிதைகிறது. ஒடிந்த மரம் ஒன்றைப் பற்றிக்கொண்டு சாதுவன் அலைகளில் மிதக்கிறான். நக்க சாரணர்களாகிய நாகர்கள் வாழுகின்ற மலைப் பக்கம் போய்ச் சேர்கிறான். நாகர்கள் கையில் அகப்படுகிறான்.

இங்கே ஊரில் ... கலம் உடைந்து இறந்தவர்களுடன் சாதுவனும் இறந்துவிட்டான் என்று ஆதிரை கேள்விப்படுகிறாள். கணவன் இறந்ததால் தீக் குளிக்க விரும்பி, சுடுகாட்டில் தீ வளர்த்துத் தீக்குளிக்க முயல்கிறாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. அவள் உடுத்த கூறை எரியவில்லை; பூசிய சந்தனமும் சூடிய மாலையும் நிறம் வாடவில்லை. அவள் தாமரையின் நடுவே திகழும் திருவைப் போலப் பொலிகிறாள். "தீயும் கொல்லாத் தீவினையாட்டி நான். என்ன செய்வேன்!" என்று புலம்புகிறாள்.

அப்போது அசரீரி ஒன்று சொல்கிறது: "உன் கணவனைக் கடல் அலைகள் நக்க சாரணர் நாகர் வாழும் மலைப்பக்கம் சேர்த்திருக்கின்றன. பல ஆண்டுகள் அங்கே தங்கமாட்டான். சந்திர தத்தன் என்னும் வாணிகனின் கப்பல் வரும்போது அவனும் வருவான். துன்பப்படாதே!"

ஆதிரையின் அழுகை நிற்கிறது. பொய்கையில் குளித்து எழுந்தவளைப் போல எழுந்திருந்து தன் வீடு செல்கிறாள். அதுமுதல் பிற பத்தினிப் பெண்டிரும் அவளைத் தொழுகின்றனர்.

"புண்ணியம் முட்டாள்; பொழி மழை தரூஉம்
அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்"

[சுருக்கமான பொருள்: புண்ணியத்துக்குக் குறைவு இல்லாதவள் ஆனாள். மழை பொழிவிக்கும் பெருமையை உடைய பத்தினிப் பெண்டிரும் விரும்பித் தொழுகின்ற பெருமையை அடைந்தாள்.]

நாகர் வாழும் மலையில் சாதுவன்
--------------------------------------
நாகர் வாழும் மலையில் அலைகளால் சேர்க்கப்பட்ட சாதுவன் கடலில் பட்ட துன்பத்தால் வருந்தித் துயிலில் ஆழ்ந்துவிடுகிறான். அவனைக் கண்ட நக்க சாரணர்கள் அவன் ஊனைத் தின்னலாம் என்று நினைத்து அவனை எழுப்புகிறார்கள். 

"ஊன் உடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும்"

[சுருக்கமான பொருள்: ஊன் உடைய இந்த உடம்பு நமக்கு உணவு என்று சொல்லி அவனை எழுப்ப... .]

சாதுவனுக்கு அவர்களுடைய மொழி விளங்குகிறது. 

"... அவர் பாடை மயக்கு அறு மரபின்
கற்றனன் ஆதலின்"

[சுருக்கமான பொருள்: அவர்களுடைய மொழியை நன்கு கற்று அறிந்தவன் ஆதலின்...]

அவர்களுடன் உரையாடுகிறான். அவர்கள் அவனைத் தங்கள் "குரு மகனிடம்" கூட்டிச் செல்லுகிறார்கள். 

அங்கே ... கள் நிறைந்த பானை, புலால் நாற்றம், காய்ந்துகொண்டிருக்கும் வெள்ளை எலும்புகள் இவை பரவிய ஓர் இருக்கையில் ... நாகர்களின் தலைவன் தன் பெண்டுடன் இருக்கும் காட்சி ஓர் ஆண் கரடி தன் பெண் கரடியோடு இருப்பதைப் போலத் தோன்றுகிறது.

அவனையும் தன் பேச்சினால் சாதுவன் பிணித்துவிடுகிறான்! பிறகு மரநிழலில் இளப்பாறியதும், அவனுக்கு ஓர் இளைய நங்கையையும் வெங்கள்ளையும் ஊனையும் கொடுக்குமாறு நாகர் தலவன் தன் மக்களிடம் சொல்கிறான். அது வேண்டாம் என்று சாதுவன் மறுக்கிறான். 

நாகர் தலைவனோ, "பெண்டிரும் உண்டியும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் மக்களுக்கு வேறு என்ன பயன் உண்டு? உண்டானால் எங்களுக்குக் காட்டு" என்று கேட்கிறான்.

சாதுவன் மறுமொழியாக நல்லறம் என்றால் என்ன என்று எடுத்துச் சொல்கிறான்.

"மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்!
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்
கண்டனையாகு ..."

[சுருக்கமான பொருள்: மயக்கத்தை உண்டாக்கும் கள், உயிர்க்கொலை இந்த இரண்டையும் குற்றமற்ற மக்கள் தவிர்த்தார்கள். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதும் ... உறங்குவதும் உறக்கத்திற்குப் பின் விழிப்பதும் போலவே. இந்த உண்மையினால் ... நல்லறத்தைச் செய்பவர்கள் நல்லுலகை அடைவார்கள்; நல்லது அல்லாதவற்றைச் செய்பவர்கள் கொடிய நரகத்தை அடைவார்கள். அதனால் அறிவுடையோர் இவைகளைத் தவிர்த்தார்கள்.]

சாதுவனின் "நல்லறம்" பற்றிய பேச்சு நாகர் தலைவனுக்குப் பெரும் சிரிப்பைத் தருகிறது. எனவே அவன் சாதுவனிடம் கேட்கிறான்:

"உடம்பை விட்டு ஓடிப் போகும் உயிர் இன்னோர் உருவம் கொண்டு இன்னோர் உடம்பில் புகும் என்று சொன்னாய். அந்த உயிர் எப்படிப் போய்ப் புகும் என்று சொல்லு."

சாதுவன் மறுமொழியாகச் சொல்கிறான்:

"உயிரோடு வாழும்போது உடலுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் உயிர் போனவுடன், அந்த உடம்பை வெட்டி எரித்தாலும் அந்த உடலுக்கு உணர்ச்சியில்லை. அதனாலேயே அந்த உடம்பை விட்டு வெளியேறியது ஒன்று உண்டு என்று தெரிந்துகொள். போனவர்களுக்கு எங்கே புகலிடம் என்பதை நான் மட்டுமல்ல, எல்லோரும் அறிவார்கள். உடம்பை இங்கேயே வைத்துவிட்டு உயிர் பல காவதம் செல்வதைக் கனவு காணும்போதுகூடத் தெரிந்துகொள்ளலாமே! அப்படித்தான், உடம்பை விட்டுப் போன உயிரும் தான் செய்த வினைக்கு ஏற்றபடி அமைந்த ஓர் உடம்பில் புகுகிறது. இதை நீ தெளிவாகத் தெரிந்துகொள்."

இப்படிச் சாதுவன் சொன்னதைக் கேட்ட நாகர் தலைவன் "நல்லது அறிந்த அந்தச் செட்டி"யின் கால்களில் விழுந்து கேட்கிறான்:

"கள்ளையும் ஊனையும் தவிர்த்தால், இந்த உடம்பில் உள்ள உயிரைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியவில்லை. இறக்கும் வரை எங்களுக்கு ஏற்ற நல்லறத்தை எடுத்துச் சொல்லவேண்டும்."

சாதுவன் அவர்களுக்கு நல்ல வழியில் வாழ்வது எப்படி என்று சொல்கிறான்.

"உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிக"

[சுருக்கமான பொருள்: கலம் ("கப்பல்") உடைந்து உயிர் தப்பி இங்கே யாரும் வந்து சேர்ந்தால், அவர்களைக் கொல்லவேண்டாம். அவர்களுடைய அருமையான உயிரைக் காப்பாற்ற வேண்டும். முதுமை அடைந்து இறந்துபோகும் விலங்குகளைத் தவிர்த்து வேறு எந்த உயிர்களையும் (உண்ணுவதற்காகக்) கொல்ல வேண்டாம்.]

நாகர் தலவன் நன்றி காட்டுகிறான்:
"ஈங்கு எமக்கு ஆகும் இவ்-அறம் செய்கேம் ;
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க"
[சுருக்கமான பொருள்: இங்கே நாங்கள் எங்களுக்குத் தகுந்த அறத்தைச் செய்வோம். அங்கே உனக்கு உதவும் அருமையான பொருள் இதோ!]
"பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை
உண்டேம்; அவர்தம் உறு பொருள் ஈங்கு இவை;
விரை மரம் மென் துகில் விழுநிதிக் குப்பையோடு
இவை இவை கொள்க"

[சுருக்கமான பொருள்: நெடுங்காலமாகக் கலம் கவிழ்ந்து வந்த மக்களை நாங்கள் உண்டிருக்கிறோம். அவர்களிடமிருந்து நாங்கள் எடுத்த பொருள்கள் இவை. மணம் நிறைந்த மரம், மெல்லிய துகில், நிறையப் பணம் (?) ... இவைகளை எடுத்துக்கொள்.]

அந்தப் பொருள்களைச் சாதுவன் எடுத்துக்கொண்டு சந்திரதத்தன் என்னும் வாணிகனின் வங்கம் வந்தபோது அதில் ஏறித் தன் ஊர் வந்து சேருகிறான்.


சாதுவன் ஆதிரையுடன் சேர்தல்
-------------------------------------
உயிரோடும் பொருட்களோடும் ஊர் திரும்பிய சாதுவன் தன் மனைவி ஆதிரையுடன் சேர்ந்து வாழ்ந்து நல்ல பல தானங்களும் செய்கிறான்.

இப்படிப்பட்ட சிறப்புடையவளே ஆதிரை.
மணிமேகலைக்கு ஆதிரை பிச்சை இடுதல்
------------------------------------------------

காயசண்டிகை மணிமேகலையிடம் ஆதிரை பற்றிச் சொல்லி, அந்தப் பத்தினியிடமிருந்து மணிமேகலை அமுதசுரபியில் பிச்சை வாங்கவேண்டும் என்று சொல்கிறாள்.

அதன் படியே ... மணிமேகலை தன் கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியபடி ஆதிரையின் வீட்டுல் வாயிலில் "புனையா ஓவியம்" போல நிற்கிறாள்.
ஆதிரை அவளைத் தொழுது வலம் வந்து, துன்பம் நீக்கும் வகையில், "பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக" எனச் சொல்லி அமுதசுரபியின் அகன்ற உட்புறம் நிறைய ஆருயிர் மருந்தாகிய பிச்சையை இட்டாள்!

+++++++++++++++++++++++++++++++++
மேலே உள்ள கடைசிப் பகுதியை எழுதியபோது ... கண்கள் கசிந்து நெடுநேரம் எழுத்தைத் தொடர முடியவில்லை...
இங்கே பல கேள்விகள் வரும்: காயசண்டிகை யார்? அவள் எங்கேயிருந்து வந்தாள்? எப்படி மணிமேகலையைப் பார்த்தாள்? அவளுக்கு எப்படி ஆதிரையைப் பற்றித் தெரியும்? ... இன்ன பல.
ஒவ்வொன்றாகப் பிறகு பார்ப்போம்.
அன்புடன்,
ராஜம்






Mohanarangan V Srirangam

unread,
Dec 17, 2010, 8:34:35 PM12/17/10
to mint...@googlegroups.com
அருமையாகக் காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள் 
நன்றி. வகுப்பில் முதன்முதலில் ஆசிரியர் நடத்தக் கேட்ட பொழுது எழுந்த சித்திரங்களும், 
உணர்வுகளும் நினைவில் எழுகின்றன. 
***

2010/12/18 rajam <ra...@earthlink.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Krishnan S

unread,
Dec 17, 2010, 8:46:54 PM12/17/10
to mint...@googlegroups.com
அன்புள்ள் ராஜம் அவர்களுக்கு,
வணக்கம்.
நல்லதொரு படைபினை தந்துள்ளீர்கள்.
இப்படி ஒரு நயமான இலக்கிய படைப்பைப் படிக்கும் போது
மனம் இலகுவாகிறது. மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது
தொடர்க.
அன்பொடு,
கிருஷ்ணன்
சிங்கை


2010/12/18 rajam <ra...@earthlink.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

N. Kannan

unread,
Dec 17, 2010, 9:19:40 PM12/17/10
to mint...@googlegroups.com
மிக அற்புதமான வருணனை. இப்படிச் சொல்லிக் கொடுத்தால்தான் ‘தமிழுக்கு
அமுது என்று பேர்” :-))

நிறைய தொடர் எண்ணங்கள் ஓடுகின்றன. அதைச் சொல்வதால் திசை திருப்புகிறேன்
என்று எண்ண வேண்டா!

//பிறகு சாதுவன் வணிகம் காரணமாகக் கடலில் செல்லும் மக்களோடு தானும்


போகிறான். கடல் காற்றின் வீச்சால் அவன் போன கலம் சிதைகிறது. ஒடிந்த மரம்
ஒன்றைப் பற்றிக்கொண்டு சாதுவன் அலைகளில் மிதக்கிறான். நக்க சாரணர்களாகிய
நாகர்கள் வாழுகின்ற மலைப் பக்கம் போய்ச் சேர்கிறான். நாகர்கள் கையில்

அகப்படுகிறான்.//

நிர்வாணமான இந்தக் காட்டு மனிதர்கள் எங்கிருந்தார்கள்?
மீண்டும் கடல் பயணம் வருகிறது. அவன் செட்டியார் என்பதால் வணிகம் காரணமாக
கீழ்த்திசை நோக்கிப் பயணிக்கிறான் என்று கொள்ளலாம். மிகச் சமீபத்தில் கூட
நரமாமிசம் உண்ணும் பழங்குடிகள் இந்தோனீசியாவில் இருப்பதாக சேதிகள் வந்தன.
இவர்களை ஏன் ‘சாரணர்’ என்கிறது மணிமேகலை? புரியவில்லை.

//அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்//

இருவினையும் வேண்டாம் என்று சொல்வோர் அறவோர். இராமகாதையில், இராமனிடம்
சரணடையும் ரிஷிகளை இருவினைப்பயன்களையும் அர்ப்பணம் செய்துவிடுவதாகச்
சொல்வார்கள். அக்கௌண்ட் பாலன்ஸ் நில் (கணக்கில் இருப்பு இல்லை) என்றாகிற
போது மறுபிறப்பு இல்லை என்பது மிகப்பண்டையக் கொள்கை என்று தெரிகிறது. அதை
எப்படிச் செய்வது என்பதில் சமணம், பௌத்தம், வைதீக மார்க்கங்கள்
வேறுபடுகின்றன போலும்!

//"உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்


அடு தொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ்வுயிர் மாட்டும்

தீத்திறம் ஒழிக"//

இதை இந்திய தத்துவங்களின் கீழத்திய ஆளுமையின் குறியீடாகக் கொள்ளலாமோ?
சநாதன தர்மத்திலிருந்து பௌத்த வேர்கள் பரவும் காலமோ?

சுவாரசியமான இடுகை. நிறையத் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி உடையோம்!

க.>

2010/12/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Dec 17, 2010, 9:42:49 PM12/17/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
கடைசி பகுதி எழுதும் போது உங்கள் கண்கள் கசிந்ததும், எழுத்தைதொடர
முடியாமல் போனதும் எனக்கு புரிகிறது, ராஜம். 'பாத்திரம் அறிந்து பிச்சை
இடு' எளிதாக சொலவடை ஒன்று சொல்லிவிட்டார்கள், தமிழ் பெருமக்கள்.
காயசண்டிகை அளித்த அறிவுரையும், ஆதிரை அளித்த பிச்சையும், அந்த 'புனையா
ஓவியம்' ' "பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக" என்ற ஆசியுடன் பெற்ற பிச்சை
தான், இன்று வரை மனித இனத்தை போஷித்து பாதுகாக்கிறது.
இங்கு என் கருத்து எழுத கிடைத்த பிச்சையையும் போற்றுகிறேன். '...நல்லறம்

செய்வோர் நல்லுலகு அடைதலும்
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்..' என்ற வரிகளை மறக்க இயலாது.
நன்றி, வணக்கம்
இன்னம்பூரான்

Nagarajan Vadivel

unread,
Dec 17, 2010, 10:20:31 PM12/17/10
to mint...@googlegroups.com
ஏற்கனவே எழுதியபோது நாகர்கள் பற்றிக்குறிப்பிட்டு அடைப்புக்குள் நான் கவனிக்க என்று ராஜம் அம்மா குறிப்பிட்டார்.  நாகர் என்போர் இன்றைய இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வாழ்ய்ம் நாகர்கள் அல்ல என்று நான் மறைந்த தமிழ்ப் பேராசிரியர் சஞ்சீவுடன் பேசும்போது தெரிவித்திருந்தேன்.  திராவிட நாட்டின் எல்லைகளையும் அதில் அங்கம் பெற்ற நாடுகளையும் குறிப்பிடும்போது கிழக்கில் உள்ள கலிங்கம் திராவடத்தின் ஒரு அங்கஆக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அங்கு நிறையப் பழங்குடிகள் வாழ்ந்தனர் என்றும் அவ்ர்களில் நாகர் என்ற ஒரு பிரிவி இருந்ததாகவும் குறிப்பு உண்டு.  கலிங்கத்தில் வாழ்ந்த ஒரு பழங்குடி இனம் இடம் பெயர்ந்து இலங்கை சென்றது என்ற குறிப்பும் அதனால் அங்கு வாழ்ந்தோர் நாகர் என்று கருதி அவ்வாறே அழைக்கப்பட்டதும் உண்டு.  கரை ஒதுங்கும்போது கீழைக்கரையில் கலிங்கத்தை அடைந்து நாகர் மத்தியில் இருந்திருக்கலாம் அலல்து இலங்கை சென்று நாகர் மத்தியில் இருந்திருக்கலாம் என்று அனுமானிக்கத்தோன்றுகிறது.
தெளிவான கதை ஓட்டம் நிகழ்வு பற்றிய எளிமையான படப்பிடிப்பு
காவிய ஆசிரியரின் எண்ண ஓட்டத்தின் தெள்ளத்தெளிவான உரைநடை வெளிப்பாடு
நாகராசன்

2010/12/18 N. Kannan <navan...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 17, 2010, 10:56:40 PM12/17/10
to mint...@googlegroups.com
பண்டைத்தமிழர் வாழ்வில் வளமும் வறுமையும் மாறி மாறி நிகழ்வதும் மாரியின்மையும் வெள்ளப்பெருக்கும் என்று இயற்கையின் சீற்றத்தால் வாழ்வுநிலை தடுமாறும்போது அடிப்படைத்தேவையான உண்டிகொடுப்பது ஒரு இன்றியமையாத பணி. இக்கால கட்டத்தில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது பஞ்சத்தில் உழலும் நெஞ்சத்தில் இறை உணர்வு தழைக்காது என்பதை வலியுறுத்தும். 
பெளத்தம் இக்கரையில் இருந்து அக்கரை செல்ல இரண்டு மிதவகளைக் கருவியாகக் காட்டியுள்ளது.  ஒன்று சிறியது  தனி மனிதன் பயனம் செய்ய உகந்தது.  தனி மனிதன் பிறவிப் பெருங்கடல் கடக்கப் பயன்படுவது
மற்றொன்று பலபேர் பயனம் செய்யும் பெரிய மிதவை.  தான் மட்டுமின்றி மற்றவர்களையும் கரை சேர்க்கும் வையகப் பரிவுடன் செயல்படுவது
மணி மேகலை காலத்தில் தமிழக பெளத்தம் ஹிராயான மஹாயன இருவழிப்ப் பாதையில் எப்பபாதையை வலியுறுத்தியது?
நாகராசன்
2010/12/18 rajam <ra...@earthlink.net>

kalairajan krishnan

unread,
Dec 18, 2010, 1:15:29 AM12/18/10
to mint...@googlegroups.com
அக்கா ராஜம் அவர்களுக்கு வணக்கம்,

அக்கா, ​தொடர்ந்து படித்து வருகி​றேன்
தம்பி
கா​ளை



--
​திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

Subashini Tremmel

unread,
Dec 18, 2010, 2:48:40 AM12/18/10
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
ராஜம் அம்மா,
 
இந்த இழையே ஒரு அமுத சுரபி தான். அள்ள அள்ளக் குறையாது கதைகளை, இலக்கியச் சுவைகளை தந்து கொண்டிருக்கின்றீர்கள். மிக்க நன்றி.
 
-சுபா

2010/12/18 rajam <ra...@earthlink.net>

Subashini Tremmel

unread,
Dec 18, 2010, 3:01:43 AM12/18/10
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
4ம் பகுதி - இங்கே மரபு விக்கியில் இணைக்கப்பட்டுள்ளது.
-சுபா

Geetha Sambasivam

unread,
Dec 18, 2010, 3:32:28 AM12/18/10
to mint...@googlegroups.com
இங்கே ஊரில் ... கலம் உடைந்து இறந்தவர்களுடன் சாதுவனும் இறந்துவிட்டான் என்று ஆதிரை கேள்விப்படுகிறாள். கணவன் இறந்ததால் தீக் குளிக்க விரும்பி, சுடுகாட்டில் தீ வளர்த்துத் தீக்குளிக்க முயல்கிறாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. அவள் உடுத்த கூறை எரியவில்லை; பூசிய சந்தனமும் சூடிய மாலையும் நிறம் வாடவில்லை. அவள் தாமரையின் நடுவே திகழும் திருவைப் போலப் பொலிகிறாள். "தீயும் கொல்லாத் தீவினையாட்டி நான். என்ன செய்வேன்!" என்று புலம்புகிறாள்.//

பழைய ஆநந்த விகடனில் இந்தக் காட்சி  ஓவியர் ஸிம்ஹா அவர்களால் சித்திரிக்கப்பட்டிருந்ததாய் ஓர் நினைவு. முதலில் சிலப்பதிகாரக் காட்சிகளும், பின்னர் மணிமேகலையும் இடம்பெற்றிருந்தது என எண்ணுகிறேன்.  எழுதியவர் பேராசிரியர் அ.சீ.ரா. அவர்களா?? நினைவில் இல்லை.

மீண்டும் என்னுடைய தமிழாசிரியர் செல்வி நல்லையாவின் வகுப்பில் இருந்த உணர்வு. நன்றி.  அம்மா. இப்படித் தான் அவங்களும் அருமையான விளக்கங்களோடு சொல்லிக் கொடுத்தாங்க.



2010/12/18 rajam <ra...@earthlink.net>

இங்கே ஊரில் ... கலம் உடைந்து இறந்தவர்களுடன் சாதுவனும் இறந்துவிட்டான் என்று ஆதிரை கேள்விப்படுகிறாள். கணவன் இறந்ததால் தீக் குளிக்க விரும்பி, சுடுகாட்டில் தீ வளர்த்துத் தீக்குளிக்க முயல்கிறாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. அவள் உடுத்த கூறை எரியவில்லை; பூசிய சந்தனமும் சூடிய மாலையும் நிறம் வாடவில்லை. அவள் தாமரையின் நடுவே திகழும் திருவைப் போலப் பொலிகிறாள். "தீயும் கொல்லாத் தீவினையாட்டி நான். என்ன செய்வேன்!" என்று புலம்புகிறாள்.


அன்புடன்,
ராஜம்





Geetha Sambasivam

unread,
Dec 18, 2010, 3:33:48 AM12/18/10
to mint...@googlegroups.com
ஆதிரை அவளைத் தொழுது வலம் வந்து, துன்பம் நீக்கும் வகையில், "பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக" எனச் சொல்லி அமுதசுரபியின் அகன்ற உட்புறம் நிறைய ஆருயிர் மருந்தாகிய பிச்சையை இட்டாள்! //

நிஜமாவே கண்ணீர் தான் வருது.  அதுவும் ஒரு கோடியில் பசியால் வருந்தும் மக்களை நினைக்கையில், இந்த அமுதசுரபி கிடைக்காதானு தான் தோணுது. 

2010/12/18 rajam <ra...@earthlink.net>


ஆதிரை அவளைத் தொழுது வலம் வந்து, துன்பம் நீக்கும் வகையில், "பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக" எனச் சொல்லி அமுதசுரபியின் அகன்ற உட்புறம் நிறைய ஆருயிர் மருந்தாகிய பிச்சையை இட்டாள்!

+++++++++++++++++++++++++++++++++
மேலே உள்ள கடைசிப் பகுதியை எழுதியபோது ... கண்கள் கசிந்து நெடுநேரம் எழுத்தைத் தொடர முடியவில்லை...
இங்கே பல கேள்விகள் வரும்: காயசண்டிகை யார்? அவள் எங்கேயிருந்து வந்தாள்? எப்படி மணிமேகலையைப் பார்த்தாள்? அவளுக்கு எப்படி ஆதிரையைப் பற்றித் தெரியும்? ... இன்ன பல.
ஒவ்வொன்றாகப் பிறகு பார்ப்போம்.
அன்புடன்,
ராஜம்






Nagarajan Vadivel

unread,
Dec 18, 2010, 4:34:11 AM12/18/10
to mint...@googlegroups.com
ஏழையின் வீட்டுக்குழந்தை ஒரு கவளம் சோற்றுக்காக அழும்போது பணக்காரன் வீட்டுக் குழந்தை நெய்யப்பம் உண்டு மகிழ்கிறது. ரத்தத்தால் அடித்துத் திருத்தினால் ஒழிய இந்தச் சமுதாயத்தைத் திருத்த முடியாது என்று பொங்கிய இற்றை நாள் கவிஞனுக்கும் மானுடத்தின் அடிப்படைத்தேவையான உணவு கொடுப்பது இறைப்பணி என்ற  பாத்திரம் படைத்த அற்றை நாள் கவிஞனுக்கும் இடையே உள்ள வன்மையும் மென்மையும் தெரிகிறது
பசியுடன் இருக்கும் உள்ளத்துக்கு பகவத் கீதை புரியாது என்ற காந்தியாரின் நாட்டில் உணவூட்ட உள்ள பணம் கையூட்டாய்ப் போவதும் ஏழ்மையில் செம்மையும் செல்வத்தில் எளிமையுமாய் இருந்த வாழ்வியல் மரபு ஏழை இன்னும் ஏழையாகவும் பணக்காரன் மேலும் பணக்காரனாகவும் ஆகும் நிலைக்கு வந்துவிட்டது.
பண்னாட்டு வணிகவியல் நம் வாழ்வியல் மரபை வேரறுக்கும் கோரமுகம் கொண்டு இந்திய ஏழ்மையின் மாண்பைச் சிதைக்கும் இக்காலகட்டத்தில்  கோடிக்கணக்கான  இந்தியர் பசிப்பிணியில் இருக்கும்போது இது போன்ற காப்பிய மலரும் நினைவுகள் ஈரமில்லாத கண்களுடன் சமுதாயத்தைப் பார்க்கும் பார்வையை மாற்றி கையது கொண்டு மெய்யது பொத்திக் காலதுகொண்டு மேலது தழுவி பேளழையுள் இருக்கும் பான்பென இருக்கும் ஏழையாளன் மீது ஆள்வோரும் மேலோரும் நூலோரும் அருட் பார்வைகொள்ள உதவும்
அன்புடன்
நாகராசன்


2010/12/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Kannan

unread,
Dec 18, 2010, 4:49:19 AM12/18/10
to mint...@googlegroups.com
It would be interesting to know whether Cannibals lived in Sri Lanka
(especially in Nagar (nayinar thivu) island) before?

It is more interesting that this character in Manimekalai spoke their
language! It tells that a part of Tamil Sri Lanka spoke a different
language then (if we presume that it happened in Sri Lanka).

It could be Orissa. But then why should a guy from Tamilnadu goes to
Orissa to depart to Java?

my 2 cents on this :-)
K.>

2010/12/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Dec 18, 2010, 5:06:53 AM12/18/10
to mint...@googlegroups.com
Thanks
There are studies available in Srilanka.  We have to search
The mercantile navigation in the main sea route.  I have enough information from Dutch East India company records about the voyages made. For example the logistics for a Buddha evangelist starts from Pataliputra during manimekali period he has to depend on the voyages planned by the merchant navy.  He has to reach kalingapatnam, mamallaipatnam kaverippumpatnam thirikonamalle to got to South East Asia by sea.  These are the well kown ports and starting point for the navigating vessels. 
There is a partly damaged script hinting the existence of Tamil merchants guild at Java.  When there is a shipwreck the person will be swept to east coast as a possibility.  The data from Thailand will throw more light on this than searching here in Tamilnadu.  srilanka will be another place to source the document.  However prudence in the form of internal and external criticism will be a must
As far as the languages are concerned the language spoken by Nagas may be from a language of Non Dravidian origin
I hope this will be of help
Nagarajan

2010/12/18 N. Kannan <navan...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages