
தமிழ் - அழகான மொழி என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தனது உரையில் குறிப்பிட்டார்.
ஆளுநரின் உரை விபரம்:-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்த முயற்சிகளை மேற்கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் அழகான மொழி ஆகும். நான் பேராசிரியர் நன்னனிடம் தமிழ் கற்றேன்.
உலகில் 55 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது.
இந்த மாநாட்டுக்கான இலச்சினையில் "பிறப்பால் எல்லா உயிரும் ஒன்றே" என்ற சிறந்த கருத்துடன் உருவாக்கிய முதல்வரை பாராட்டுகிறேன்.
திருவள்ளுவரின் கருத்துக்கள் உலக மக்கள் அனைவருக்கும் எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளது.
திருக்குறள் தமிழுக்கு சிகரமாக உள்ளது. கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் ஆகியவை தமிழுக்கு பொன் ஆபரணமாக திகழ்கின்றன.
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அதன் வீச்சு, செழுமை, வேற்று மொழி கலவாத தனித்தன்மை ஆகியவற்றை சார்ந்துள்ளது. அந்த வகையில் தமிழ் காலத்தை கடந்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
உலகளவில் தமிழ் படிப்புகள் மற்றும் ஆய்வுகள் மேலும் விரிவடைய இந்த செம்மொழி மாநாடு நிச்சயம் வழியமைக்கும் என்று நம்புகிறேன்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மாநாட்டை நடத்திய முதல்வர் கருணாநிதிக்கும் தமிழக அரசுக்கும் மற்றும் இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பேசினார்.

உலக மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் புத்தகம் வெளியிட தமிழக முதல்வர் மு.கருணாநிதி உதவ வேண்டும் என்று இலங்கை தமிழ் அறிஞர் கா.சிவத்தம்பி கேட்டுக் கொண்டார்.
செம்மொழி மாநாட்டில் அவர் பேசியது:-
முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.
இந்தியவின் இலக்கிய, கலாச்சார மரபுகளையும், இன்றைய கணினியுக சொல்லாட்சியையும் பெற்ற ஓரே மொழி தமிழ் மொழி மட்டுமே. இத்தகு தமிழ் மொழியின் பெருமை உலக மக்களுக்குத் தெரிய வேண்டும். உலகம் அறிய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள நாட்டு மக்கள் அனைவரும் தமிழின் பெருமைகளை அறியும் வகையில் உலக மொழிகளில் தமிழின் மாண்பை விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் எழுதப்பட வேண்டும். அப்புத்தகம் எல்ல உலகமொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும். இப்பணியை முதல்வர் கருணாநிதி செய்ய வேண்டும்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உலகப் பொது நோக்கினைக் கொண்ட ஒரே மொழி தமிழ். ஆதலால், இம்மொழியின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்ல முதல்வர் கருணாநிதி உடனடி நடவடிக்கை செய்ய வேண்டும்.
இவ்வாறு சிவதம்பி பேசினார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நேற்று (23/06/10) காலை துவங்கியது.
மாலையில்,
தமிழர்களின் பழங்கால வாழ்க்கை முறை, கலை,பண்பாட்டை நினைவூட்டும் "இனியவை
நாற்பது" அலங்கார வாகன அணிவகுப்பு அவினாசி ரோடு இலட்சுமி மில் சந்திப்பில்
மாலை 3.50 மணிக்கு துவங்கியது.
வாகன ஊர்வலத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார். போலீஸ் டி.ஜி.பி.,இலத்திகா சரண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,இராதாகிருஷ்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு, ஐ.ஜி.,சிவனாண்டி ஆகியோர் தலைமையில் போலீஸ் அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட போலீசார் முன் செல்ல, மங்கள இசையுடன் 40 அலங்கார வாகன அணிவகுப்பு புறப்பட்டது.அலங்கார வாகனங்களுக்கு இடையே கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் தமிழர்களில் வீர விளையாட்டான சிலம்பாட்டம், வாள் வீச்சுடன் ஊர்வலம் நகர்ந்தது.
அணிவகுப்பை, அவினாசி ரோட்டின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று ஆர்வமாக கண்டு வியந்தனர்.அணிவகுத்த அலங்கார வாகனங்கள்;
01. மங்கள இசை ஊர்தி:- இசைக்கலைஞர்கள் மங்கள இசை முழங்கி வருகின்றனர்.
02.
மலைக்கு எல்லோரும் எல்லாமும் சமம்:- குறிஞ்சி நிலக் காட்சி.
03 .காதல்
உணர்வு பறவைக்கும் உண்டு:- முல்லை நிலக் காதல் காட்சி.
04. ஜாதி
வேற்றுமையில் குடும்பம் காக்கும் ஒற்றுமை:- மருதம் நிலக்காட்சி.
05. வாளை
மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்:- நெய்தல் நிலக் காட்சி.
06.
வேட்டுவர் பாணர்க்கு விருந்தோம்பல்:- பாலை நிலக் காட்சி.
07. சண்டைக்
கலைஞர்கள்: பண்டைக் கால தமிழர்களின் வீரத்தை எடுத்துரைக்கும் சண்டைக் காட்சி.
08.
புறநானூற்றுத்தாய்:- போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் மகனின் நெஞ்சில்
அம்பு பாய்ந்திருப்பதை கண்டு ஆனந்தக் கண்ணீர் விடும் தாய்.
09. மறக்குடியே
தமிழ்க்குடி:-"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி
தமிழ்க்குடி" என்ற புறப்பொருள் வெண்பா காட்சி.
10. தமிழகக் கலை
வளர்ச்சி:- தமிழக கட்டட, சிற்பக்கலைகளை பறைசாற்றும் காட்சி.
11.
புதியதோர் உலகம் செய்வோம்:- நவீன விஞ்ஞான வளர்ச்சியை காட்டும் தமிழ்
அறிவியல் காட்சி.
12. கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார்:- இவர்களின் நட்பை
விளக்கும் காட்சி.
13. மனுநீதி சோழன்:- கன்று குட்டிக்காக நீதி கேட்கும்
பசு, கன்றின் உயிருக்கு ஈடாக தன் மகனை தேர் சக்கரத்துக்கு பலியிட்ட
மனுநீதி சோழனின் நீதி தவறாத காட்சி.
14. மயிலுக்கு போர்வை வழங்கி பேகன்:- குளிரில் நடுங்கும் மயிலுக்கு பட்டு அங்கவஸ்திரம் கொடுத்த மன்னன் பேகனின்
வள்ளல் காட்சி.
15. கவரி வீசிய காவலன்:- புலவர் மோசிகீரணாருக்கு மன்னன்
கவரி வீசும் வரலாற்றுக் காட்சி.
16. முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல்
பாரி:- முல்லைக்கொடிக்கு படர தேர் கொடுத்த வள்ளல் பாரியின் கொடை சிறப்பை
விளக்கும் காட்சி.
17. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான்:- நீண்ட
ஆயுள் தரும் கருநெல்லிக்கனியை, அவ்வைக்கு கொடுத்து தமிழ் வளர்ச்சிக்கு தன்
பங்களிப்பை செய்த அதியமானின் அற்புதக் காட்சி.
18. பொற்கை பாண்டியன்:-
தவறுதலாக, பெண்ணின் மானத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, தன் கையையே
வெட்டி தண்டனை கொடுத்த பாண்டிய மன்னனின் காட்சி.
19. மிருகங்கள் நடை:-
குதிரை, சிங்கம், புலி, யானை, சிறுத்தை சிற்பங்கள் அடங்கிய காட்சி.
20.
சிலம்பு வஞ்சினமாலை:- தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மதுரையை எரித்த
கண்ணகியின் ஆவேசக்காட்சி.
21. உணவளித்தலின் உயர்வு:- அட்சயப் பாத்திரம்
மூலம், பசியென்று வந்தோருக்கெல்லாம், மணிமேகலை உணவளித்தக் காட்சி.
22.
போர்க்கோலத்தில் வேலுநாச்சியார்:- வெள்ளையரை எதிர்த்து, வீரமங்கை
வேலுநாச்சியார், வாளேந்தி போருக்கு செல்லும் காட்சி.
23. போரில்
பெண்களின் பங்களிப்பு:- போரில் காயம்பட்ட வீரர்களுக்கு பெண்கள் பணிவிடை
செய்யும் காட்சி.
24. மரம் உடன்பிறந்தவளாகிறது:- மரத்துக்கும் உயிர்
உள்ளதை விளக்கும் பசுமை நிறந்த இலக்கிய காட்சி.
25. ஜாதி, மத பேதமற்ற
காதல் காட்சி:- காதலுக்கு ஜாதி, மத பேதமில்லை என்பதை விளக்கும் காட்சி.
26.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்:- உலகம் உழவனின் விவசாயத்தை சார்ந்தே உள்ளது
என்பதை உணர்த்தும் காட்சி.
27. திருக்குற்றாலக் குறவஞ்சி:- குற்றால மலையின்
பெருமை, சிறப்புகளை விளக்கும் காட்சி.
28. ஜாதி, மத வேறுபாடற்ற தமிழ்
மன்னனின் புரட்சி:- இந்திய சுதந்திரத்துக்காக போராடிய மன்னர்களின்
சிற்பங்கள்.
29. கூத்தர், பாணர், சான்றோருடன் இருக்கும் மன்னன்:- தமிழ்
மன்னர்களின் ஆட்சியில் கூத்தர்கள், பாணர்கள் மற்றும் சான்றோர்களின்
பங்களிப்பை விளக்கும் காட்சி.
30. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்:-
சிற்பத் தொழிலாளி தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் காட்சி.
31. வண்ணங்கள்
வேறுபட்டாலும், மானுடர் ஒன்றுதான்:- நிறத்தால் வேறுபட்டாலும், மனிதர்கள்
வேறுபடுவதில்லை என்பதை விளக்கும் காட்சி.
32. கிராமிய நடனம்:- இந்த
ஊர்தியில் நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வலம் வருகின்றனர்.
33.
கிராமிய மனம்:- காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் குடிசையும், உழவனும் உள்ள
கிராமியக்காட்சி.
34. சங்கே முழங்கு:- தமிழ் பெருமையை பறைசாற்றும்
காட்சி அமைப்புகள்.
35. நடனக் கலைஞர்கள்:- இதில், சினிமா நடனக்கலைஞர்கள்
நடனமாடி வருகின்றனர்.
36. காக்கை குருவி எங்கள் ஜாதி:- மகாகவி பாரதியை
காக்கை, குருவிகள் சுற்றி நிற்கும் காட்சி.
37. பகிர்ந்து உண்:- பகிர்ந்து உண்டு வாழும் தத்துவம் அடங்கிய காட்சி.
38. காலத்தை வென்று
நிற்கும் வரலாற்று சின்னம்:- இதில், தஞ்சை பெரியகோவிலும், திருவள்ளுவர்
கோட்ட தேர்வடிவமும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
40. ஊர்வலத்தில்
இறுதியாக வந்த இரு ஊர்திகளில் இருந்து செலுத்தப்பட்ட லேசர் ஒளிக்கற்றைகள்
வானத்தில் அழகிய காட்சிகளை வடிவமைத்தபடி வந்தன.
நன்றி:- தினமலர்






உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து 9வது தமிழ் இணைய மாநாடு ஜூன் 23 முதல் 27 வரை கோவை, தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. முதல் நாளான 24 ஜூன் 2010 இன்று, காலை 12.00 மணிக்கு தமிழ் இணைய முகப்பரங்கத் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழக அமைச்சர் பூங்கோதை வரவேற்புரை ஆற்றினார்.
“தமிழக முதல்வர் தொலைநோக்குப் பார்வையோடு இணையத்தில் தமிழ் மொழி வளர்ச்சி அடையவேண்டியதன் தேவையை உணர்ந்து, தமிழ் இணைய மாநாட்டையும் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடத்த அறிவுறுத்தினார்”, என்பதை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார்.
பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையுரை நிகழ்த்தினார்.
“தொழில்நுட்பத்தில் கருத்துவேறுபாடுகள் இருப்பது இயற்கையே. எந்த ஒரு துறையின் வளர்ச்சிக்கும் இந்தக் கருத்து வேறுபாடுகள் அவசியமே. ஆனாலும், வந்திருக்கும் அறிஞர் பெருமக்கள் மனத்தில் கொள்ளவேண்டியது ஒன்றுதான். நாம் அனைவரும் இணைந்திருப்பது செம்மொழி தமிழுக்காக. இதனை உணர்ந்து, கருத்து வேறுபாடுகள், வளர்ச்சியை நோக்கிச் செல்லுமாறு செலுத்துவது நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். தமிழ் இணைய மாநாடு 2010ல் வழங்கப்படும் கட்டுரைகளும் அந்தக் குறிக்கோளை நோக்கியே செல்லவேண்டும்” என்றார் பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன்.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் குறுவட்டுகளை மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட, சிங்கப்பூர் அரசின், மூத்த துணை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்தக் குறுவட்டுகளில் ஒன்றில் இலவச தமிழ் மென்பொருள்களும் எழுத்துருக்களும் உள்ளன. மற்றொன்று, குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்கான எடு-பாஸ் தமிழ் நிரல் நிறுவல் குறுவட்டு ஆகும். செம்மொழி வளாகத்தில் இந்தக் குறுவட்டுகள் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அதற்கான தகவல் தொடர்புக் கொள்கை மத்திய அரசின் கையில்தான் இருந்தது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்தான் மாநில அரசே நேரடியாக மொழி தொடர்பான இந்தக் கொள்கைகளைத் தீர்மானிக்க முயற்சிகளை மேற்கொண்டார். அதில் வெற்றியும் அடைந்தார். இனி வரும் காலங்களில் தமிழ் மொழி தொடர்பான அனைத்துத் தகவல் தொழில்நுட்பத் தேவைகளுக்கும் கொள்கைகளுக்கும் மத்திய அரசு எல்லா விதங்களிலும் துணையாக இருக்கும்” என்பதை மத்திய அமைச்சர் ஆ. இராசா தனது பேச்சின்போது தெரிவித்தார்.
தமிழ் இணைய மாநாடு பற்றிய அறிமுக உரையை முனைவர் வாசு அரங்கநாதன்,
பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா அவர்கள் அளித்தார்.
“தமிழ் இணைய மாநாடுகளும் உத்தமம் அமைப்பும் சிங்கப்பூரில்தான் உதயம் ஆயின. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் அரசுதான் உத்தமத்துக்கான செயல் அலுவலகம் நடத்த இடமும் நிதி வசதியும் செய்துகொடுத்தது. செம்மொழி மாநாட்டுடன் முதல் முறையாக தமிழ் இணைய மாநாடும் சேர்ந்து நடப்பது ஒரு வரலாற்று நிகழ்வு. இது தமிழ் இணைய மாநாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு” என்றார்.
தொடர்ந்து விழாப் பேருரையை சிங்கப்பூரின் மாண்புமிகு மூத்த துணை
அமைச்சர் திரு எஸ். ஈஸ்வரன் அவர்கள் நிகழ்த்தினார்.
“இப்போதுள்ள இளைஞர்களை தமிழை நோக்கிக் கவர்வதற்கு, இன்றைய இளைஞர்களுக்கு எவை பிடித்தமானவையாக இருக்கின்றனவோ, அந்தத் துறைகளில் தமிழைப் புகுத்தவேண்டியது அவசியமாகிறது. சிங்கப்பூரில் உள்ள தமிழ் வாரிசுகளுக்கு வெளி இடங்களில் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வாய்ப்புகள் குறைவானவையாகவே உள்ளன. இதனைச் சரி செய்ய சிங்கப்பூர் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்றார்.
இறுதியாக, உத்தமம் அமைப்பின் தலைவர் திரு தி.ந.ச. வெங்கடரங்கன் அவர்கள் நன்றி கூறினார்.
மதிய உணவுக்குப்பின் நான்கு அரங்கங்களில் கட்டுரை படைத்தலும், ஓர் அரங்கில் நிபுணர் ஒருவரோடு உரையாடலுமாக தமிழ் இணைய மாநாடு 2010 தொடங்கியது.
எழுத்தாளர் சுஜாதா அரங்கில் "கணினி வழி தமிழ் கற்றல்" என்ற
தலைப்பின்கீழாக நான்கு கட்டுரைகள் படைக்கப்பட்டன.
“மடிக்கணினியில்
கன்னித்தமிழ் – ஒரு கற்றல் அனுபவம்” என்ற தலைப்பில் பேசிய சிங்கப்பூர்
கிரசண்ட் பெண்கள் பள்ளி ஆசிரியர் சம்பந்தம் மோகன், எப்படி அவர்களுடைய
பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முற்றிலும் மடிக்கணினியைப் பயன்படுத்தி
பேச்சாற்றல், எழுத்தாற்றல் முதலிய திறமைகளை வளர்க்கிறார்கள் என்பதை
விளக்கிப் பேசினார்.
“மாணவர்கள் தாங்கள் பேசுவதைக் கணினியில் ஒளிப்பதிவு செய்து, அதனை ஒலி, ஒளி வடிவில் பிறர் கேட்குமாறும் பார்க்குமாறும் வெளியிடுகிறார்கள். வாரம் மூன்று நாள்கள், கட்டாயத் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன” என்றார். இந்தச் செயல்களுக்கென அவர்கள் பயன்படுத்தும் மென்பொருள்கள் பற்றியும் அவர் விளக்கிக் காட்டினார்.
முரசொலி மாறன் அரங்கில், பார்வையாளர்களுடனான கலந்துரையாடலில்
மலேசியாவின் கணினி வல்லுனர் முத்து நெடுமாறன் பங்கேற்றார்.
“இன்றைக்கு
வணிகரீதியில் தமிழ்க் கணிமைக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், மேலும்
மேலும் தமிழ்ப் பயனர்கள் கணினிகளைப் பாவிக்கத் தொடங்கியிருப்பதால், வரும்
காலங்களில் தமிழ்க் கணிமை வணிகரீதியாகவும் வெற்றி அடைய நிறைய வாய்ப்புகள்
உள்ளன” என்றார்.
முத்து நெடுமாறன், பல்வேறு தெற்காசிய மொழிகளுக்கு எழுத்துருக்களையும் மென்பொருள்களையும் உருவாக்குபவர். அந்தப் பின்னணியில், தமிழ் மொழி எழுத்துருக்களை உருவாக்குவதில் உள்ள உயர் தொழில்நுட்பத்தை விளக்கியதோடு, தரமான தமிழ் எழுத்துருக்களை உருவாக்குவது எப்படி என்பதற்கு பல குறிப்புகளைக் கொடுத்து உதவினார். அவர் கைப்பேசிகளுக்கு என்று உருவாக்கிய செல்லினம் என்ற தமிழ் மென்பொருள் பற்றி விளக்கம் கொடுத்தார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil








> “தமிழை - அமுதத் தமிழ், இன்பத் தமிழ், இனிமைத்தமிழ், கனித்தமிழ், கன்னித் தமிழ், கன்னல் தமிழ், சங்கத் தமிழ், தங்கத் தமிழ், தனித்தமிழ், தாய்த்தமிழ், செந்தமிழ், செழுந்தமிழ், சுந்தரத் தமிழ், தூய தமிழ், தெள்ளு தமிழ், தேன்தமிழ், தேமதுரத்தமிழ், பைந்தமிழ், படைத்தமிழ், பொற்றமிழ், நற்றமிழ், மங்காத்தமிழ், மாத்தமிழ், முத்தமிழ், வாழும்தமிழ், வளரும்தமிழ், வற்றாத்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வெற்றித்தமிழ் - என்றெல்லாம் புலவர்களும் அறிஞர்களும், போற்றிப் புகழ்ந்துரைத்து இருக்கின்றார்கள்.”இந்தத் தமிழ்-கள் எல்லாம் எங்கு கிடைக்கும்? எனக்கென்னவோ நேற்று ‘இனியவை நாற்பது ஊர்வலத்தைப் பார்த்த் பிறகு, இப்போது வாழ்வது சங்கத்தமிழ் தான். அதற்குப் பின் தமிழ் வாழ்வதன் அடையாளத்தையே காணோம் என்று தான் தோன்றிற்று.
:-(
அட:-)
பாராட்டுக்கள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil





கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கொடிசியா வளாகத்தில் பல்வேறு தலைப்புகளில், தமிழ் ஆய்வரங்குகள் நடந்து வருகின்றன. கொடிசியாவில் உள்ள சாத்தனார் அரங்கில், "சங்க கால பாண்டிய மன்னர்களின் தலை உருவம் பொறித்த நாணயங்கள்",என்ற தலைப்பில், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நேற்று (26/06/10) காலை பேசினார்.
அவர் பேசுகையில், சங்க கால மன்னர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் வெளியிட்டது போல், பாண்டிய மன்னர் தலை பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டிருக்கிறார். இதுவரை வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளில் சங்ககால பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட தலை பொறிக்கப்பட்ட நாணயங்களின் பின்புறம் மீன் சின்னம் இல்லாமல் இருந்தது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாணயத்தில் மீன் சின்னம் இருப்பதை விளக்கினார், ஆசிரியர்.ஆய்வரங்கில் பார்வையாளராக பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "சோழ மன்னர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா, கண்டுபிடிக்கப்பட்டவை வெளியிடப்பட்டுள்ளதா,'' என தினமலர் ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினார்.
அவருக்கு பதில் அளித்த ஆசிரியர், "சங்ககால சோழ மன்னர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம், டச்சு நாட்டு தொல்லியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டு, இலண்டனில் இருந்து வெளியாகும் நாணயவியல் பத்திரிகையில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. அவர், "சங்ககால நாணயங்கள்" என்ற என்னுடைய ஆங்கில நூலில் வெளியாகி இருந்த புலிச்சின்னத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த மன்னர் தலை குறித்த நாணயத்தின் பின்புறம் உள்ள புலிச்சின்னத்தை ஒப்பிட்டு சோழ மன்னர் வெளியிட்ட சங்ககால நாணயம் என கட்டுரை எழுதி உள்ளார். இவரால் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் தங்கள் காசுகளில் தங்களின் தலை உருவத்தை பொறித்திருக்கிறார்கள் என்று உறுதியாகிறது,'' என்றார்.ஆய்வரங்கில், சங்க இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்த நிபுணரும், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முன்னாள் முதல்வருமான கணபதி ஸ்தபதி, "ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்புகளால், சங்க இலக்கியங்கள் தோன்றிய காலமும், நாணயங்கள் வெளியிடப்பட்ட காலமும் அறிய முடிந்துள்ளது. பல நாணயங்களை கண்டறிந்து, ஆய்வு மேற்கொண்டு, சமூகத்துக்கு தெரியப்படுத்திய தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை கவுரப்படுத்த வேண்டும்,'' என்று பேசினார்.
தொல்காப்பியர் அரங்கு:- மாநாட்டின் ஆய்வரங்க நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பகல் 2 மணிக்கு தொல்காப்பியர் அரங்கில், "சங்ககாலம்:- அண்மைக்கால ஆய்வு நிலைகள்" என்ற தலைப்பில் கலந்தாய்வரங்கம் நடைபெற்றது. ஜார்ஜ் எல்.ஹார்ட் தலைமை வகித்தார்.
* அமைச்சர்கள் பெரியசாமி, வேலு, சுரேஷ்ராஜன் உட்பட அனைத்து அமைச்சர்கள்,
வி.ஐ.பி.,களும் அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்தனர். அடையாள
அட்டையை கழுத்தில் மாட்டியிருந்த இன்னொரு முக்கிய வி.வி.ஐ.பி., ஸ்டாலின்.
* அமைச்சர் நேரு, சட்டைப் பையில் அடையாள அட்டையை வைத்திருக்க, வைரமுத்து,
கனிமொழி உள்ளிட்டோர் அட்டையை பொருட்படுத்தவில்லை.
* வி.ஐ.பி.,களுக்கான பகுதியில் மட்டும் மின்விசிறி
பொருத்தப்பட்டிருந்தது.
* காலை 10.07 மணிக்கு பின்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும்
திடீரென முன்னோக்கி ஓடினர். முன்பகுதி அதுவரை காலியாக விடப்பட்டிருந்தது.
சிலர் மரத்தடுப்புகளின் மீது ஏறியும், குனிந்தும் முண்டியடித்தபடி
ஆயிரக்கணக்கானோர் சென்றனர். போலீசார் தடுக்கவோ, ஒழுங்குபடுத்தவோ
முனையவில்லை. குடியரசுத் தலைவர் பங்கேற்றும் விழாவில், விழா தொடங்க 20
நிமிடங்களே இருந்த நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருப்பின், நிலைமை
மோசமாகி இருக்கும்.
* சரியாக காலை 10.26 மணிக்கு மேடைக்கு சிறப்பு விருந்தினர்கள் அழைத்து
வரப்பட்டனர். அதுவரை ஒலிபரப்பப்பட்ட மைய நோக்குப்பாடல் நிறுத்தப்பட்டு,
நாதஸ்வர இன்னிசை துவங்கியது.
* முதுமுனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி சக்கர நாற்காலியில் அழைத்து
வரப்பட்டார். நாதஸ்வர இன்னிசையில் வாசிக்கப்பட்ட "மகா கணபதி' பாடலை
தாளமிட்டு ரசித்தார்.
* காலை 10.29 அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மேடையில் அமர
வைக்கப்பட்டிருக்க நிதியமைச்சர் அன்பழகன் அவர்களை மரியாதை நிமித்தமாக
கைகுலுக்கி வரவேற்றார்.
* சரியாக 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மேடைக்கு சக்கர நாற்காலியில்
அழைத்து வரப்பட்டார்; கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவும் அதேசமயம்
மேடைக்கு வந்தார். முதல்வர் வந்ததும் "தமிழ் மொழி வாழ்க, செம்மொழி வாழ்க'
என முதல்வரை வாழ்த்தும் வகையிலான பாடல் இசைக்கப்பட்டது.
* ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 10.32 மணிக்கு வழக்கமான பாரம்பரிய உடையில்
மேடைக்கு வந்தார்.
* ஜனாதிபதிக்கு பொன்மஞ்சள் நிறத்திலான பொன்னாடையை முதல்வர் வழங்கினார்.
* முதன்முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது; முதல்வர் உட்பட அனைவரும்
எழுந்து நின்றனர். முதுமையின் காரணமாக சிவத்தம்பி மட்டும் நாற்காலியிலேயே
அமர்ந்திருந்தார்.
* அதைத்தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்தை, சீர்காழி சிவசிதம்பரம்
பாடினார். தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க அறிவுறுத்திய அறிவிப்பாளர்,
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதுபோன்று சொல்லாததால், பொதுமக்கள் அமர்ந்து
கொண்டே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.
* தேசிய கீதத்தை நின்றபடி பாடிய முதல்வர், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும்
போது, அமர்ந்து விட்டார்; சிவத்தம்பியும் அமர்ந்தே இருந்தார்.
* காலை 10.42 மணிக்கு துணைமுதல்வர் ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
* துணைமுதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டதும், மாநாட்டுப் பந்தலில் உற்சாகச்
சலசலப்பு.
* ஜனாதிபதியை தமிழக மக்கள் சார்பிலும்; கவர்னரை, விழா தலைமைக்குழு
சார்பிலும்; முதல்வரை தமிழக மக்கள் சார்பிலும் வரவேற்றார்.
வரவேற்புக்குழு சார்பில் அமைச்சர்கள், மக்கள் பிரதிகள், மொழி
வல்லுனர்கள், பொதுமக்களை வரவேற்றார். அவரின் வரவேற்பு பட்டியலில்
பத்திரிகையாளர்கள் மட்டும் ஏனோ "மிஸ்ஸிங்'
* ஸ்டாலின் பேசும் போது, தேவநேயப்பாவாணரின் தமிழ் இனிமை, புதுமை என "மை'
விகுதி அமையும்படி பேச, அரங்க முழுவதும் கரகோஷம். ஒண்டமிழ், தண்டமிழ்,
தேன்தமிழ், தீந்தமிழ் என அடுத்தடுத்து தமிழை எப்படி எல்லாம்
சிறப்பிக்கின்றனர் என அடுக்கு மொழியில் பேச, அரங்கத்தினரோடு, முதல்வரும்
ரசித்துக் கேட்டார்.
* ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு துணைமுதல்வர் நினைவுப்பரிசு வழங்க,
மற்றவர்கள் அமர்ந்தபடி பெற்றுக் கொண்டனர். அன்பழகன், ஜார்ஜ்ஹார்ட்
மட்டும் எழுந்து நின்று பெற்றுக் கொண்டனர்.
* ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா, சிவத்தம்பி, குழந்தைசாமி என சிறப்பு
விருந்தினர்கள் ஐந்து நிமிடங்களுக்குள் தங்களின் வாழ்த்துரையை முடித்துக்
கொண்டனர்.
* வெளிநாட்டு அறிஞர்கள் தமிழில் வணக்கம் சொன்னபோது, அரங்கத்தில் மீண்டும்
கரவொலி; குழந்தைசாமி தவிர, மற்ற மொழி அறிஞர்கள் பெரும்பாலும்
ஆங்கிலத்தில் பேசினர்.
* குழந்தைசாமியின், "விருந்துக்கு பெயர் பெற்றது தமிழர் பண்பாடு; கொங்கு
மண்டலம் அதில் கவிஞர் வைரமுத்து பேசும் போது, "முதல்வர் கருணாநிதி
பாட்டாளிகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு, கூட்டாளிகளை உள்ளங்கையில்
வைத்துக் கொண்டு இருவரையும் கசக்காமல் மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறார்'
* , கோவையையும் ஐந்து நிலங்களையும் இணைத்து . குறிஞ்சிக்கு ஆனைமலை
மலைகள்; முல்லைக்கு நீலகிரி மலைகள்; மருதத்திற்கு மருத மலை; நெய்தலுக்கு
நெசவாளிகள்; பாலைக்கு நூற்பாலைகள்'
* தூறல் மழை பெய்ததால், மழையையும் மாநாட்டையும் இணைத்து வைரமுத்து கவி
பாடினார். "பந்தல் நனைந்தால் கார் மேகம் பொறுப்பு; பந்தலுக்குள் நனைந்
ததால் கவிஞர்கள் பொறுப்பு' என்று கவி நயத்தில் பேசினார
நன்றி; செம்மொழி நட்டு துளி ; தினமலர் வலைத்தளம்
On Jun 25, 5:42 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *கண்ணகியை ஆராயும் கிரேக்க அறிஞர் *
>
> கிரீசிலிலுள்ள தெஸ்ஸலோனிகி பல்கலைக்கழகப் பேராசிரியரும் மொழியியல் அறிஞர்
> ஆன்ட்ரியாஸ் கடானிஸ் கண்ணகியைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.
>
> இது குறித்து அவர் தெரிவித்த போது, "நான் தமிழகத்துக்கு இதற்கு முன்
> வந்துள்ளேன். மாணவர்களுக்கு, பல வகுப்புகள் எடுத்துள்ளேன் இங்குள்ளவர்கள்
> அன்பானவர்கள். எனக்குத் தமிழ் தெரியாது. ஆனால் தமிழ் பற்றி படிக்கிறேன்.
> சிலப்பதிகாரம் பற்றி ஆங்கில வழியில் படித்து வருகிறேன்.
>
> நான் கண்ணகியைப் பற்றியும் கிரேக்கத்தில் வாழ்ந்த அன்டிகோனே பற்றியும்
> ஆராய்ந்து வருகிறேன்.
>
> இருவரும் ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்டவர்கள் என்பது என் ஆய்வில் தெரிய
> வருகிறது.
>
> இந்த மாநாட்டில் அது பற்றி தெரிவிக்க வந்துள்ளேன்.
>
> இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* அமைச்சர் நேரு, சட்டைப் பையில் அடையாள அட்டையை வைத்திருக்க, வைரமுத்து,
கனிமொழி உள்ளிட்டோர் அட்டையை பொருட்படுத்தவில்லை.
* வி.ஐ.பி.,களுக்கான பகுதியில் மட்டும் மின்விசிறி பொருத்தப்பட்டிருந்தது.
* காலை 10.07 மணிக்கு பின்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும்
திடீரென முன்னோக்கி ஓடினர். முன்பகுதி அதுவரை காலியாக விடப்பட்டிருந்தது.
சிலர் மரத்தடுப்புகளின் மீது ஏறியும், குனிந்தும் முண்டியடித்தபடி
ஆயிரக்கணக்கானோர் சென்றனர். போலீசார் தடுக்கவோ, ஒழுங்குபடுத்தவோ
முனையவில்லை. குடியரசுத் தலைவர் பங்கேற்றும் விழாவில், விழா தொடங்க 20
நிமிடங்களே இருந்த நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருப்பின், நிலைமை
மோசமாகி இருக்கும்.

