எனது ஆய்வுக்கட்டுரையின் பதிப்பு

445 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Sep 15, 2020, 4:40:20 AM9/15/20
to mintamil
இன்று வல்லமை இதழில் வெளியாகி இருக்கும் எனது ஆய்வுக்கட்டுரை "பொறையாற்றுக் கிழானும் கோமான் பெரியனும்".

கட்டுரையை வாசிக்க.....
https://www.vallamai.com/?p=99036  
  
 ச.கண்மணி கணேசன் 

mknp...@gmail.com

unread,
Sep 16, 2020, 8:47:18 AM9/16/20
to மின்தமிழ்
வெகு நாட்களாக பேரா. கண்மணி அவர்களின் படைப்புகளும் கலந்துரையாடலும் மின் தமிழில் காண இயலாமல் இருந்தது ஒரு குறையாக இருந்தது. தங்களின் படைப்புகளை மீண்டும் காண்கையில் மகிழ்ச்சியளிக்கின்றது.

மு. கமலநாதன்

இசையினியன்

unread,
Sep 16, 2020, 12:47:06 PM9/16/20
to மின்தமிழ்
புதிய படைப்புகளை காண ஆவலாய் உள்ளேன்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 17, 2020, 7:06:27 AM9/17/20
to mintamil
ஒதுங்குதல், சேருதல், மௌனித்தல், ஒலித்தல், ஒதுக்கப்படல் இவையெல்லாம் மடலாடுதல் குழுக்களில் அப்போதைக்கப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

வாழ்க!

சொ.வினைதீர்த்தான்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2dd1b342-1083-4fe7-bf61-17a6dfc38267n%40googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 7, 2020, 12:26:01 PM10/7/20
to mintamil
'தமிழ் மொழியும் இலக்கியமும்' என்ற  பன்னாட்டு மின்ஆய்விதழில் (IJTLLS) 15.07.2020 அன்று பதிப்பிக்கப் பட்டிருக்கும் என் ஆய்வுக்கட்டுரை:
                                                            "தாமான் தோன்றிக்கோன் - முல்லைத்திணை மாந்தர் தலைவன் "
கட்டுரையைப் படிக்க --->

Sk 

On Sat, Sep 26, 2020 at 11:18 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

kanmani tamil

unread,
Oct 22, 2020, 5:00:03 AM10/22/20
to mintamil
மதுரையிலிருந்து வெளியாகும் உலகத்தமிழ் என்னும் காலாண்டு ஆய்விதழின் ஜூலை மாத வெளியீட்டில் இடம்பெற்று இருக்கும் என்னுடைய கட்டுரை 'நற்றிணை உழவன் உண்ட சத்துணவு'
சுட்டியைக் கொடுப்பதற்கு முன் என் கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏனென்றால் அந்தப் பதிப்பு ரொம்பவே சுமாராக இருக்கிறது. நான் இணைத்திருந்த மூன்று படங்களையும் போடாமல்; சம்பந்தமே இல்லாத கம்மஞ்சோறு படத்தைப் போட்டிருப்பது மட்டுமில்லாமல் தேவை இல்லாத இடத்தில் எல்லாம் க்,ச் சேர்த்துக் கடுப்பேற்றி இருக்கிறார்கள்.   


  

     

முன்னுரை:

பண்டைத்தமிழரின் காலைஉணவு பற்றிய இக்கட்டுரைக்கு அடிப்படையாக  அமைவது நற்றிணை பா-60ல் உழவன் அதிகாலையில் உண்ணும் பொம்மலும் மிளிர்வையும் ஆகும்.  பொம்மல் என்றால் என்ன? மிளிர்வை என்னும் பெயர் எதற்குரியது? அவற்றின் ஊட்டச்சத்து என்ன என்று அறிவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். 

 

நற்றிணைப் பாடலும் செய்தியும்:

விடியுமுன்னர் உழவன் தன் மனைவியரோடு வயலுக்குப் பணியாற்றக் கிளம்புகிறான். கிளம்பும் முன்னர் வயிறார உண்கிறான். ஏனெனில் அன்று அவன் நாற்று நடவேண்டும். அதுவும் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வேலையைத் தொடங்கினால் வெயிலேறும் வரை ஓய்விற்கோ உணவிற்கோ வழியில்லை என்பது பின்வரும் பாடற்பகுதி மூலம் தெளிவாகிறது.

“மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின் 

பெருநீர் பல்கூட் டெருமை உழவ 

கண்படை பெறாது தண்புலர் விடியல் 

கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு 

புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு 

கவர்படு கையை கழும மாந்தி” என்கிறார் தூங்கலோரியார்.

 எனவே பருத்த வரால்மீன் துண்டுகளின் மிளிர்வையுடன் ‘புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோற்றைத் தன் கவர்த்த கைகளால் அரித்தெடுத்துண்டு; பின்னர் 'மாந்து’கிறான். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரையில் ‘உணவுக்குரிய அரிசியால் ஆக்கிய மிக்க சோற்றுத்திரளை விருப்பமிக்க கையை உடையனாய் நிறைய மயக்கமேற உண்டு’ என்கிறார்.  

பொம்மல் பெருஞ்சோறு எது?

’பொம்மல் பெருஞ்சோறு’ என்ற சொற்றொடரில் பொம்மல் எனும் சொல் பெருஞ்சோறு என்னும் பண்புப்பெயர்த் தொடருக்கு அடையாக அமைந்துள்ளது. இங்கே ஒருபொருட் பன்மொழியாக பொம்மல் சோற்றைக் குறிக்கும் எனக் கொள்ள வழியில்லை. ஏனெனில் கடலைக்   குறிப்பிடும்போது “பொம்மல் படுதிரை” எனவும் (நற்றிணை- 96& அகநானூறு- 200), பெண்ணைக் குறிப்பிடும் போது “பொம்மல் ஓதி” எனவும் (நற்றிணை- 71,129, 252, 274, 293; குறுந்தொகை- 191, 379& அகநானூறு- 65, 214, 221, 257, 311, 353) தொகைநூல்களில் பல இடங்களில் பயின்று வருவதைக் காண இயல்கிறது. கடலலையைக் குறிக்குமிடத்தும், பெண்ணின் கூந்தலைக் குறிக்குமிடத்தும் ‘பொம்மல்’ பெயரடையாக வருவதால் சோற்றைக் குறிக்குமிடத்திலும் அது பெயரடையே எனல் திண்ணம். எல்லா இடங்களிலும் ‘பொலிந்த’ என பின்னத்தூர் நாராயண சாமி ஐயரும், நாவலர் வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு வேகடாசலம் பிள்ளையும் ஒருங்கு  பொருள் உரைக்கின்றனர்.

பொம்மல் ஓதி = பொலிந்த கூந்தல் எனல் பொருத்தமே.

பொம்மல் படுதிரை = பொலிந்த படுதிரை என்பது பொருந்தவில்லை .

கழகத் தமிழகராதி ‘பொம்மல்’ எனும் சொல்லுக்குப் ‘பூரித்த’, ‘பொருமிய’ எனும் பொருளையும் சொல்கிறது(ப.- 716). தமிழ்மொழி அகராதி  ‘பொருமல்’, ‘பொலிவு’ என்ற பொருள்களைத் தருகிறது (ப.- 1075). 

பொம்மல் படுதிரை = பூரித்த/ பொருமிய  படுதிரை எனல் 

பொருத்தமே. ஏனெனில் கடல் அலைகள் பூரித்துப் பொங்கி கரையை மோதுகின்றன. அவ்வாறாயின் ‘பொம்மல் பெருஞ்சோறு’ எனும் தொடரின் பொருள் யாது? பூரித்த/ பொருமிய சோறு எப்படி உண்டாகும்? கேள்விகட்கு உரிய பொருள் பாடலிலேயே உள்ளது. உழவன் விடியுமுன் உண்டுவிட்டு வேலைக்குக் கிளம்புகிறான். அவன் மனைவியர் முதல்நாள் ஆக்கி நீரில் ஊறவைத்த சோற்றையே உண்ண இயலும். நீர்ச்சோறு பூரித்துப் பொருமி இருப்பது இயற்கை. நீரில் ஊறியதால் சோறின் கொள்ளளவு கூடி; மென்மையாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டில் நீராகாரம் என்று வழங்கிய பழைய சோறு தான் சங்க காலப் ‘பொம்மல் பெருஞ்சோறு’. இதனை மேலும் ஒரு சான்றால் நிறுவலாம்.    

“குரூஉக்கண் இறடிப் பொம்மல்” (மலைபடுகடாஅம் அடி- 169) 

என்ற அடிக்கு  உரை கூறும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் ‘நிறம் மிக்குத் தோன்றும் தினையின் சோறு’ என்கிறார். ‘இறடி’ என்பது தினை. இறடிப் பொம்மல் தினையின் சோறு எனப் பொருள் கொள்கிறார்.  புன்செய்த் தானியங்களின் உணவை  நீரில் அல்லது மோரில் கரைத்து உண்ணும் வழக்கமே இன்றும் நிலவுகிறது. சங்க காலத்திலும் அவ்வாறு கரைத்து உண்ணும் வழக்கம் தான் இருந்தது என்பதற்குப் புறநானூறு சான்று பகர்கிறது. 

கரும்பனூர் கிழான் பற்றி நன்னாகனார் பாடுங்கால்; அவன் நாட்டில் கூலம் விளைந்தது என்னும் செய்தியை,

“இருநிலம் கூலம் பாறக் கோடை” எனும் அடியில் கூறுகிறார். 

அத்துடன் பாலில் கரைத்தோ, அல்லது பாகில் கலந்தோ புன்செய்த் தானிய உணவைத் தந்து விருந்தயர்வான் என்பதை, 

.”பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்

அளவுபு கலந்து மெல்லிது பருகி

விருந்துறுத்து”(புறம்- பா- 381) எனும் அடிகளால் உரைக்கிறார். 

இதனால் கூத்தராற்றுப்படையின் தினை உணவும் கரைத்துக் குடிக்கக் கூடியது எனல் பெற்றோம். முடிவாக பொம்மல் என்பது நீரில் கரைத்த / ஊறவைத்த உணவு என்பது உறுதிப்படுகிறது. 

அது நீராகாரமாக இருந்ததால் தான் உழவன் ‘மாந்து’வதாகக் குறிக்கிறார் புலவர். அது மட்டுமன்று; “கவர்படு  கையை கழும” எனும் தொடர் அவன் தனது விரல்களால் சோற்றினை அரித்து எடுத்து மிளிர்வையோடு உண்கிறான் என்பதைப் புலப்படுத்துகிறது (பார்க்க- படங்கள்1& 2).

(தொடரும்)


kanmani tamil

unread,
Oct 22, 2020, 5:15:02 AM10/22/20
to mintamil


படம்- 1 நீரூற்றிய சோறு         படம்-2 பொம்மலான சோறு                    படம்- 3 பொம்மலும் மிளிரவையும் 

மிளிர்வை - விளக்கம் யாது?

“கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வை” இன்றைய தமிழில்  

வரால் மீனின் குழம்பு என்பது வெளிப்படை. இன்றும் முந்தைய நாள் வைத்த மீன்குழம்பே ருசி மிகுந்தது என்னும் கொள்கை பரவலாக உண்டு. ‘முள்ளும் மலரும்’ திரைப் படத்தில் இடம்பெறும்,

“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு; நெய் மணக்கும் கத்திரிக்கா

நேத்து வச்ச மீன்குழம்பு என்னை இழுக்குதையா“ என்னும் 

பாடல் சான்று. ஆனால் மிளிர்வை என்ற சொல்லின் சிறப்புப் பொருள் என்ன?; என்பது ஆய்விற்குரியது. 

பால் விட்டு உண்ணும் உணவு  பாலின் மிதவை என்று  பண்டைத்

தமிழில் பெயர் பெறுகிறது.(மலைபடுகடாஅம்- அடி- 417, அகநானூறு- பா-37) தயிர் விட்டு உண்ணும் உணவு  தயிரின் மிதவை ஆகும் (அகநானூறு- பா- 340& புறநானூறு- பா- 215). நீர்ச்சோறாகிய பொம்மல் பெருஞ்சோற்றில் மீன் குழம்பை ஊற்றிப் பிசைந்து மிசைய வழியில்லை. ஏனெனில் அவ்வுணவு மாந்த வேண்டிய அளவு நீர் மிகுந்து உள்ளது. எனவே வரால் மீனின் பருத்த துண்டுகள் மட்டுமே பக்க உணவாக முடியும். அத்துண்டுகளின் மிதவை மிளிர்வையாக மாறுகிறது; அதாவது ‘சொட்டானம்’ ஆகிறது. சொட்டானம் என்பது கையில் எடுக்கும் சோற்றுக்  கவளத்தில் ஒரு சிறு குழிவினை உருவாக்கி அதில் ஆனத்தை ஊற்றி உண்ணும் முறை ஆகும் (பார்க்க- படம்- 3).

பொம்மல் பெருஞ்சோற்றின் ஊட்டச்சத்து: 

இன்று பழையசாதம் என்று அழைக்கப்படும் சங்ககாலப் பொம்மல் பெருஞ்சோற்றை முதல்நாள் ஆக்கிப் புளிக்க வைப்பதால் தேவையான தாதுச்சத்துக்களான கால்சியம், மெக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், செலினியம் அனைத்தும் உள்ளன. செலினியம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் திறன் வாய்ந்தது. (Mineral nutrients of ‘pazhaya sadham’: A traditional fermented food of Tamil Nadu, India.- P. Praveen Kumar&co)

அமெரிக்க ஊட்டச்சத்துக் குழுமம் (American Nutrition Association) பழைய சோற்றினால் விளையும் நன்மைகளை வரிசைப்படுத்துகிறது.

  1. உடல் தெம்பாகவும்; நாள் முழுதும் சுறுசுறுப்பாகவும்  இருக்கலாம்.  

  2. உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மிகுதியாக உருவாகும்.

  3. உடலுக்குத் தீமை செய்யும் மிகைச்சூடு சமன்படுத்தப்படுவதால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

  4. நார்ச்சத்து மிகுந்த உணவாகையால் மந்தம் நீங்கிச் சோர்வு அகலும்.

  5. இரத்த அழுத்தம் சீராகி; பதட்டநிலை குறையும். 

  6. ஒவ்வாமைச் சிக்கல்களும், தோல் வியாதிகளும் குறையும்.

  7. இளமையான தோற்றம் பெற இயலும்.

  8. உடலுக்குள் இருக்கும் எல்லாப் புண்களும் ஆறும்.

  9. புது நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.

  10. வைட்டமின் B12 மிகுதி

  11. காபி, தேநீருக்கு அடிமையாவதைத் தவிர்க்க இயலும்.

பக்கஉணவாக உழவன் உண்ட வரால்மீனில் அடர்த்தியற்ற கொழுப்பு அமிலங்களும், கால்சியம் தாதுவும் மிகுதி.

 மேற்சுட்டிய ஆய்வுமுடிபுகளின்படி உழவன் உண்ட பொம்மலும் மிளிர்வையும் உடலுக்கு நலமும் ஊட்டமும் தரவல்லன என்பதுடன்; புற்றுநோய் உருவாகாமல் இருக்க வழிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. வயிற்றுக்கோளாறும் மந்தமும் நீங்கி; இரத்த அழுத்தம் சீராகி; ஒவ்வாமை, நோய்த்தொற்று, தோல் வியாதிகள் இன்றி; உடலுக்குள் புண்களின்றி; இளமை வேகத்துடன் சுறுசுறுப்பாக வேலைசெய்ய ஏதுவாக அவனது காலைஉணவு அமைந்தது 

முடிவுரை:

உழவனின் காலைஉணவு பழைய சோறும் சொட்டானமும் ஆகும். நீர்ச்சோற்றுக்குச் சொட்டானம் ஊற்றி உண்ணும் 2000 ஆண்டுக் காலப் பாரம்பரியம் தலைமை சான்ற சத்துணவு முறையாகும். மிளிர்வை என்னும் தொகைநூலின் சொற் பயன்பாடு இன்று ‘சொட்டானம்’ என்று வழங்குகிறது.

துணைநூற்பட்டியல் 

  1. கழகத் தமிழகராதி கழகப் புலவர் குழுவினர் தொகுத்தது- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு- 1999- 15ம் பதிப்பு 

  2. தமிழ்மொழி அகராதி- நா.கதிரைவேற் பிள்ளை திருத்தியது- 6ம் பதிப்பு- Asian Educational Services, New Delhi. Madras-1998 

  3. Mineral nutrients of ‘pazhaya sadham’: A traditional fermented food of Tamil Nadu, India. P. Praveen Kumar&co- Department of Siddha Medicine, Faculty of Sciences, Tamil University, Thanjavur-10, India. 

  4. Mineral nutrients of ‘pazhaya sadham’: A traditional fermented food of Tamil Nadu, India.- P. Praveen Kumar&co)

(https://academicjournals.org/article/article1379675511_Kumar%2520et%2520al.pdf)

(https://www.quora.com/How-good-is-Pazhaya-soru-Fermented-Rice-for-breakfast)

http://tamilconcordance.in/TABLE-sang.html

முற்றும் 

சக 

இக்கட்டுரைக்குரிய சுட்டி --->

kanmani tamil

unread,
Nov 8, 2020, 1:03:46 AM11/8/20
to mintamil
இப்போது கட்டுரையில் நான் அனுப்பிய படங்கள் சரியாக மாற்றப்பட்டு விட்டன. 

ஒரு தொலைபேசி அழைப்புக்கும் இரண்டு மின்மடல்களுக்கும் தகுந்த எதிர்வினை கிடைத்தது. நிம்மதி. 
சக 

kanmani tamil

unread,
Nov 24, 2020, 9:20:50 AM11/24/20
to mintamil
கல்வியியல் மாநாட்டில் நான் வாசித்த கட்டுரை பதிப்பிக்கப் பட்டுள்ளது. கட்டுரையை வாசிக்க ...

kanmani tamil

unread,
Dec 12, 2020, 1:27:21 PM12/12/20
to mintamil
மலேசியாவில் இருந்து வெளியாகும் 'வளர்தமிழ்' என்னும் மின்ஆய்விதழில் பதிப்பிக்கப் பட்டிருக்கும் என் ஆய்வுக்கட்டுரை 
                                                                                   "பாடல் பெற்ற கிழார்கள்" 
கட்டுரையை வாசிக்க... இங்கே சொடுக்கவும்.
சக   

kanmani tamil

unread,
Dec 20, 2020, 1:01:43 PM12/20/20
to mintamil

தமிழ்ப் பேராய்வு' ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை- "தொல்தமிழகத்து அரசியலில் நன்னன்"
கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும் 


சக 

kanmani tamil

unread,
Jan 10, 2021, 3:33:22 AM1/10/21
to mintamil
Journal of Indian Studies மின் ஆய்விதழில் வெளியாகி இருக்கும் எனது ஆய்வுக்கட்டுரை "Critical Evaluation of the Narrative Song of Muththaalamman"
கட்டுரையை வாசிக்க...

kanmani tamil

unread,
Mar 1, 2021, 1:18:51 AM3/1/21
to mintamil
இன்று வல்லமை இதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை; "கரும்பனூர் கிழான் அளித்த விருந்து".

கட்டுரையை வாசிக்க ...                       

kanmani tamil

unread,
Apr 12, 2021, 11:03:03 AM4/12/21
to mintamil
இன்று வல்லமை இதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை : 
"அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்"  

கட்டுரையை வாசிக்க ...

kanmani tamil

unread,
May 5, 2021, 7:12:30 AM5/5/21
to mintamil
  இன்று வளர்தமிழ் மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை "பெண்ணிய நோக்கில் புறநானூற்று மகட்பாற் காஞ்சிப் பாடல்கள்" - கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
சக 

kanmani tamil

unread,
Jul 31, 2021, 12:23:29 PM7/31/21
to mintamil
தமிழ்ப் பேராய்வு மின்ஆய்விதழில் இன்று வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரைப் பதிப்பு: "பண்டைத்தமிழர் உணவில் புழுக்கும் சூட்டும்"


சக 

kanmani tamil

unread,
Aug 1, 2021, 5:42:46 AM8/1/21
to mintamil

Journal of indian studies மின்ஆய்விதழில்  இன்று வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை: Features Differentiating Venthar, Velir and Tinaimanthar. கட்டுரையை வாசிக்கத் தொடுப்பு பின்வருமாறு:


சக 

kanmani tamil

unread,
Aug 23, 2021, 12:07:05 PM8/23/21
to mintamil
இன்று 'இனம்' மின் ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை "தொகைஇலக்கியத்துக் கிளையும் ஆயமும் - ஒப்பியல் பார்வை". கட்டுரைக்குரிய தொடுப்பு https://storage.googleapis.com/inamtamil-cdn/Articles/inamtamil-cdn-data/
சக 

kanmani tamil

unread,
Aug 27, 2021, 8:36:50 AM8/27/21
to mintamil
  ஏப்ரல் மாத 'உலகத்தமிழ்' காலாண்டு மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் ஆய்வுக்கட்டுரை 

"அகஇலக்கியப் பாத்திரங்களுள் அகவன்மகளும் முதுவாய்ப் பெண்டும்- ஒரு ஒப்பீடு" 

கட்டுரையை வாசிக்க: 

http://ulagatamil.in/அக-இலக்கியப்-பாத்திரங்க


http://ulagatamil.in/ஏப்ரல்-காலாண்டிதழ்-12/


சக 

kanmani tamil

unread,
Sep 22, 2021, 4:47:59 AM9/22/21
to mintamil
மார்ச் 30ம் தேதி ஃபிரான்ஸில் இருந்து இணையவழி நடத்திய மாநாட்டில் நான் ஆற்றிய உரைப்பொழிவின் சில்லுக் காட்சி ... (இணைப்பில்)
சக 
The Mango Tree of Vel Nannan.pptx

kanmani tamil

unread,
Nov 24, 2021, 3:43:43 PM11/24/21
to mintamil
இன்று 'இனம்' மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை "தொகை இலக்கியத்தில் 'தமர்' காட்டும் சமூகப்பிரிவினை". கட்டுரையை வாசிக்க:
சக 

RM S Viswanathan

unread,
Nov 25, 2021, 3:45:23 AM11/25/21
to mint...@googlegroups.com, S Viswanathan

நல்ல ஒரு கட்டுரை

.... வாழ்த்துக்கள்.

இதையும் கொஞ்சம் காண்க..... மேலும் ஒரு செய்தியாக இதை பகிர்கிறேன்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--
Thanks & Regards,

------------------------------------------------------------------
S. Viswanathan
Chennai

------------------------------------------------------------------

kanmani tamil

unread,
Dec 17, 2021, 9:46:29 PM12/17/21
to mintamil
JTS மின்ஆய்விதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை 'தொகை இவக்கியத்தில் மகப்பேறு தொடர்பான நாட்டார் வழக்காறுகள்'. 
கட்டுரையை வாசிக்க:https://ejournal.upsi.edu.my/index.php/JTS
சக

On Thu, 25 Nov 2021, 3:24 pm RM S Viswanathan, <rmsv...@gmail.com> wrote:
Yes.

RMSV

On Thu, Nov 25, 2021 at 2:55 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பாராட்டுக்கு நன்றி. 
அதுவும் நான் எழுதிய கட்டுரை தான் 
சக 

RM S Viswanathan

unread,
Dec 18, 2021, 2:44:58 AM12/18/21
to mint...@googlegroups.com

kanmani tamil

unread,
Dec 27, 2021, 3:14:53 AM12/27/21
to mintamil
உலகத்தமிழ் அக்டோபர் காலாண்டு மின்ஆய்விதழில்

"தொகையிலக்கியத்தில் பெண்ணின் தமர்- மணவினைக்கு முன்னும் பின்னும்

என்ற என் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும் 

                                          
ச.க 

kanmani tamil

unread,
Jan 11, 2022, 3:27:06 AM1/11/22
to mintamil
மே மாதம் வல்லமை இதழில் வெளியாகி இருக்கும் என் கட்டுரை "தொகை இலக்கியத்தில் வானியல் குறிப்புகள் பெறும் இடம் "

கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்: https://www.vallamai.com/?p=102427
சக 

kanmani tamil

unread,
Jan 22, 2022, 1:25:55 AM1/22/22