இருகுறள் வெண்பா.. ! ஒருபொருள் நன்பா.....! (1)

13 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Oct 12, 2009, 12:02:24 PM10/12/09
to Groups
அன்பின் உள்ளங்களே ,
 
வெண்பாவில் (எனக்கு ) ஒரு புதிய முயற்சி.
ஒர் இருகுறள் வெண்பாவில் முதல் குறள் திருவள்ளுவரிடம் இருந்து பெற்று ,
தொடரும் குறளில் அதற்கு எளிமையாய் விளக்கம் தர முயன்றிருக்கிறேன் .
 
முதல் குறலின் ஈற்றுக்கும் ( ஓரசை எனில்)  வரும் குறளின் முதலுக்கும் எப்படி தளை கொள்வது எனத் தெரியவில்லை.
 
ஆர்வக்கோளாரில் செய்திருக்கிறேன் ,
தவறெனில் சுட்டிக் காட்டுங்கள் .
 
 
 
அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :
 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - பகலுக்கு
ஆதவனாம்; பூவுலகுக்(கு) ஆண்டவனாம்; பேசுகின்ற
வார்த்தைக்கு என்றும் தமிழ்
 
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் - முற்றும்
அறிந்தோர்; கடவுள்தாள் ஏற்காதோர்; எல்லாம்
தெரிந்தும் தெரியா தவர்
 
 
அதிகாரம் 02 : வான் சிறப்பு :
 
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று - வானிலிருந்(து)
மண்ணுயிரின் வாழ்வுயர   மண்புகும் ;  இவ்வுலகுக்(கு)
என்றும் அமுதாம் மழை
 
  
அதிகாரம் 10 : இனியவை கூறல் : 
 
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று - இனிமேல்
எதனால்  கலகம் உலகில்; அதனால்
இதமாகப் பேசிப் பழகு

 
 
--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

sk natarajan

unread,
Oct 12, 2009, 9:43:21 PM10/12/09
to thera...@googlegroups.com, tamil, thamizh...@googlegroups.com, tamizh...@googlegroups.com, thiruvi...@googlegroups.com, tam...@googlegroups.com, anb...@googlegroups.com, pals...@googlegroups.com, தமிழ் பிரவாகம், panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, mintamil
ஐயா இது நான் அறியாதத்துறை
எனினும்  வாழ்த்துகள்  துரை
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2009/10/12 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

v4vijayakumar

unread,
Oct 12, 2009, 11:35:44 PM10/12/09
to மின்தமிழ்
On Oct 12, 9:02 pm, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
...

> முதல் குறலின் ஈற்றுக்கும் ( ஓரசை எனில்)  வரும் குறளின் முதலுக்கும் எப்படி
> தளை கொள்வது எனத் தெரியவில்லை.
...

நீங்கள் சொல்ல வேண்டியதை முதலில் சொல்லி, பின் குறள் ஈற்றடிகளாக
அமையுமாறு அமைக்கலாம். இது போலவே ஒரு செய்யுள் நூல் உள்ளது, பெயர்
நினைவிற்கு வரவில்லை.

Hari Krishnan

unread,
Oct 13, 2009, 12:00:22 AM10/13/09
to mint...@googlegroups.com


2009/10/13 v4vijayakumar <vijayakuma...@gmail.com>
குறளைப் பின்னிரண்டு அடிகளாக அமைத்து நிறையபேர் இப்படிப்பட்ட வெண்பாக்களை இயற்றியிருக்கிறார்கள்.  ஆங்காணும் என்று கூகிளில் தேடவும்.  இரட்டைப் புலவர்கள் பாடிய பாடல் ஒன்றைப் பற்றி நான் எழுதிய கட்டுரை கிடைக்கலாம்.  பின்னரண்டு அடிகளும் திருக்குறள்.  வெண்பாவில் மட்டுமல்லாமல் விருத்தத்திலும் இவ்வாறு செய்யும் வழக்கமும் உண்டு.  கம்பராமாயணத்திலேயே நிறைய குறட்பாக்கள் இந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.  விருத்தத்தின் ஓட்டத்துக்காக ஒருசில சீர்களை மாற்றி அமைத்துக் கொள்வார்கள். 

குறள் இயற்றப்பட்டும் 2000 ஆண்டுகள் கடந்துவிட்டன.  அது இயற்றப்பட்டதற்குப் பின்னால் இயற்றப்பட்ட அத்தனை நூல்களின் மேலும் தன் ஆளுமையை அது செலுத்தியவண்ணமாகத்தான் இருக்கிறது. எனவே, இப்படிப்பட்ட முயற்சிகள் தொன்றுதொட்டு நடந்து வந்திருப்பதில் வியப்பேதும் இல்லை.   



--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Oct 13, 2009, 1:03:27 AM10/13/09
to மின்தமிழ்
Oct 13, 9:00 am, Hari Krishnan
*குறளைப் பின்னிரண்டு அடிகளாக அமைத்து....*

கூகிளில் தேடுமுன் ஒரு தடவை த ம அ கட்டளைப் பகுதியில்
இடம்பெற்றுள்ள ‘இரங்கேச வெண்பா’பார்க்கவும்.

http://bharani.dli.ernet.in/thf/text/ebook/general/evenpa.pdf

அன்புடைமை

வெற்பின் சிறகரிய செந்நென்பளித்து முனி
இப்புவியைக்காத்தான் இரங்கேசா - நற்புகழாம்
அன்பிலாரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

(முனி - ததீசி முனிவர்)

இந்திரனுக்கு வலிமை வாய்ந்த ஆயுதம் ஒன்று தேவைப்பட்டபோது
ததீசி முனிவர் தம் முதுகெலும்பை அளித்தார்; குறளுடன் வெகு இயல்பாகப்
பொருந்தும் நிகழ்ச்சி.


தேவ்

N. Kannan

unread,
Oct 14, 2009, 6:02:06 AM10/14/09
to mint...@googlegroups.com
2009/10/13 devoo <rde...@gmail.com>:

> Oct 13, 9:00 am, Hari Krishnan
> *குறளைப் பின்னிரண்டு அடிகளாக அமைத்து....*
>
> கூகிளில் தேடுமுன் ஒரு தடவை த ம அ கட்டளைப் பகுதியில்
> இடம்பெற்றுள்ள ‘இரங்கேச வெண்பா’பார்க்கவும்.
>
> http://bharani.dli.ernet.in/thf/text/ebook/general/evenpa.pdf


நன்றி தேவ்! உங்களைப் போன்ற ஆர்வலர்கள் நிறையத்தேவை.
கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages