ஆக.1, துபாய் வளைகுடா தமிழ்ச் சங்கம் சார்பில் இணையவழி நினைவேந்தல் நிகழ்ச்சி
துபாய், வளைகுடா தமிழ்ச் சங்கம் சார்பில் ரிசர்வ் வங்கியின் ஓய்வு பெற்ற தென்மண்ட பிராந்திய இயக்குநர் மறைந்த டாக்டர் ஜெ. சதக்கத்துல்லா மறைவையொட்டி இணையவழி நினைவேந்தல் நிகழ்ச்சி 01.08.2026 காலை 10 மணிக்கு
அமீரக நேரப்படி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஏ.எம்.எஸ். பொறியியல் கல்லூரியின் ஆலோசகர் பேராசிரியர் அ. முகமது அப்துல் காதர், ஏ.எம்.எஸ். கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் ஹெச். முகமது சாலிஹ், சென்னை வொர்க்பிரீக்ஸ் பிசினஸ் ஸ்கூலின் தலைமை செயல் அதிகாரி சயீத் நசுருல்லா, கோயெட் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சி. சீனிவாசன், வளைகுடா தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் உரை நிகழ்த்துகின்றனர்.
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து ரிசர்வ் வங்கியின் பெரிய பொறுப்பை வகித்த டாக்டர் ஜெ. சதக்கத்துல்லாவின் மறைவு தமிழ் சமூகத்துக்கு பெரும் இழப்பாகும்.
அவருக்காக நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உலகளாவிய தமிழ் சமூகத்தினர் பங்கேற்று அவரது
சிறப்புக்களை நினைவு கூற வேண்டும்.
ஜூம் மீட்டிங் ஐடி : 815 2018 9256
பாஸ்கோட் : 581841