ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்

1,045 views
Skip to first unread message

Swarna Lakshmi

unread,
Aug 19, 2010, 11:06:49 AM8/19/10
to mint...@googlegroups.com
நண்பர்களே!!
 
நாளை வரலக்ஷ்மி விரதம். இது கர்னாடகாவிலும், ஆந்திராவிலும், தமிழகத்திலும் மிக உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. வருடாந்திரமாக பெண்கள் செய்யும் பூஜைகள் சிலதே. அதிலும், ஆழ்ந்து செய்யும் பண்டிகைகளில் ஒன்று இது. வேலை முதுகை ஒடித்து விடும் தான், ஆனாலும் பூஜை செய்யும் போதும் செய்து முடித்த பிறகும் உண்டாகும் அமைதிக்கு எதுவுமே இணையில்லை. மிகவும் ஸ்ரத்தையோடு செய்ய வேண்டும் என்பதே அடிப்படை.
 
இதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியாது. திருமணமான பெண்கள், ஒரு குரு முகமாக எடுத்துக்கொண்டே செய்ய வேண்டும். க்ருஹ ல‌க்ஷ்மியான மருமகள், திருமணமான முதல் வருடத்தில் தீ‌க்ஷை பெற்றுக்கொள்வதானால் எந்த தமிழ் மாதத்தில் இப்பண்டிகை வந்தாலும் பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், எந்த வருடத்தில் ஆவணி மாதத்தில் வருகிறதோ அப்போது தான் எடுத்துக்கொள்ள முடியும். சாதாரணமாக, நீண்ட வருடங்களாக பூஜை செய்து வரும், இவ்விரதத்தின் தாத்பரியம் நன்கு அறிந்த ஒரு பெண்ணையே குருவாக வரித்து அவர் வந்து பூஜை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்கிறதை வைத்துத் தான், இம்மி பிசகாமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். தீக்ஷை பெற்றுக்கொண்ட பிறகு வாழ்நாள் முழுதும் செய்யும் பண்டிகை. ஏதாவது தவிர்க்க முடியாத காரணத்தால் செய்ய முடியாது போனால், அடுத்த வெள்ளிக்கிழமை செய்யலாம்.
 
வரம் தரும் லக்ஷ்மி என்பதால் வரலக்ஷ்மி. மிகவும் பக்தி ச்ரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) செய்வார்கள். மற்ற நாட்களில் எப்படியிருந்தாலும் இந்த ஒரு நாள் மற்ற கவலைகளை கஷ்டங்களை மறந்து, அம்பிகையை ஆத்மார்த்தமாக, தன் வீட்டுப்பெண்ணாக பாவித்து செய்வார்கள். தனக்கு ஒரு மகள் இருந்தால் அவளை எப்படியெல்லாம் ஆராதிப்பார்களோ அது போல் வரல‌க்ஷ்மியை தன் செல்ல மகளாக பாவித்து, அலங்காரம் செய்து, விதவிதமான உணவு வகைகளை நைவேத்யம் செய்து, பூச்சூட்டி, புத்தாடை புனைந்து, உயிருக்கு உயிராகக் கண்ணுக்கு கண்ணாக வரித்து பூஜிப்பார்கள்.
 
எத்தனை ஏழ்மையிலும் தன்னால் முடிந்த வரை பக்தியுடன் இப்பூஜை செய்பவர்களுக்கு அவள் நிச்சயம் அருள் பொழிவாள் - அப்போது கஷ்டப்பட்டாலும், தர்மத்துக்கே இறுதியில் வெற்றி என்பது போல, நிச்சயம் வருங்காலம் வளமானதாக இருக்கும். இது பணத்தினால் வரும் கஷ்டமாக இருந்தாலும் சரி, வேறு எந்த காரணமாக இருந்தாலும் சரி, அவள் கைவிடுவதேயில்லை. நடுவில் கடந்து போகும் காலங்களும் எப்படியோ அதிக கஷ்டம் தெரியாமல் போய்விடும்.
 
இப்பண்டிகை எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள எளிமையான வழி இருக்கிறது. அது பெரும் மகானான முத்துஸ்வாமி தீக்ஷிதர் சொல்லி விட்டுப்போன வழி.
 
ஸ்ரீ ராகக் கீர்த்தனையான ”ஸ்ரீவரலக்ஷ்மி நமஸ்துப்யம்” மிக அற்புதமான கீர்த்தனை.
 
அதில் தான் தெளிவாகச் சொல்கிறார்
 
”ஸ்ராவண பெளர்ணமி பூர்வஸ்த்த சுக்ர வாரே” என்று. ஸ்ராவண (ஆவணி) மாதத்து பெளர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக் கிழமைக்கு உரியவளே என்று பொருள். முழுப்பாடலையும் இங்கே கேட்கலாம்.
 
”வரலக்ஷ்மி, ராவே மாயிண்டிகி” என்ற தெலுங்குப் பாடலும் புகழ்பெற்றது - அது இங்கே . ”வாடி” என்றழைப்பது, வாத்சல்யத்தையே காட்டுகிறது - ”ராரா மா இண்டி தாக”, என்று ராமரை தியாகராஜர் கூட அழைக்கிறார் அல்லவா!!
 
முதல் நாளே கலசத்தை தயார் செய்து மாவிலை சாற்றி, தேங்காய் வைத்து, அம்பாள் முகத்தை வைத்து, அலங்காரங்கள் செய்து, அடுத்த நாள் காலையில் குளித்து தன்னையும் நன்றாக அலங்கரித்துக் கொண்டு, அம்பிகையை வீட்டு வாசலில் இருந்து உள் அழைத்து வருவார்கள். பின் வகைவகையான கொழுக்கட்டைகள், சர்க்கரைப் பொங்கல், வடை, பச்சரிசி இட்லி, விதவிதமான பழங்கள், ஆகியவற்றை தயார் செய்து கொண்டு, பதினாறு விதமான உபசாரங்களை (ஆராதனைகள்) செய்வார்கள். விதவிதமான நாமாவளிகள், பாடல்கள் ஆகியவற்றினால் ஆராதித்து, நைவேத்யம் செய்து, சுமங்கலிப்பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் தருவார்கள். மாலையில் விளக்கேற்றி பாடல்களாலும், ஸ்தோத்திரங்களாலும் துதிப்பார்கள். மறு நாள் காலை மறு  பூஜை செய்து, மாலையில் மீண்டும் ஆராதனைகள் செய்து, இரவு பிரியாவிடை அளிப்பார்கள். அவள் எங்கேயும் செல்ல மாட்டாள். வீட்டில் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்திலேயே அவளை ஐக்கியம் செய்வார்கள். ஏதோ நம் வீட்டுக் குழந்தை நம்மை விட்டு வெளியூர் போவது போல் இருக்கும். சுற்றத்தார்கள் நண்பர்கள் என அனைவரையும் அழைப்பார்கள்.நட்பும், உற்சாகமும், அன்பும், ஆனந்தமும் ததும்பும் பண்டிகை இது.
 
பூஜையை குரு முகமாக எடுத்துக்கொள்ளாதவர்கள், அம்பிகை மேல் இருக்கும் பலவிதமான பாடல்களினால், பதிகங்களினால் அவளை ப்ரார்த்தனை செய்யலாம். இல்லாவிட்டால் மனதை ஒருமுகப்படுத்தி அவளை சில நிமிடங்கள் தியானிக்கலாம்.
 
எல்லா மதங்களிலும் அன்பே முதன்மையானது - அதுவே இறுதியானதும் கூட. அந்த அன்பை பெருக்கி வெளிப்படுத்தும் பல வகையான வழிகளில் இவ்வாறான பண்டிகைகளும் ஒன்று தானே.
 
அன்புடன்
ஸ்வர்ணா

srirangammohanarangan v

unread,
Aug 19, 2010, 11:20:26 AM8/19/10
to mint...@googlegroups.com
நல்ல அழகான இடுகை. இதுபோல் அப்பப்ப பண்டிகைகளைப் பற்றி
எழுதுங்க. இல்லை இப்பவே தொடர்ச்சியா எழுதினாலும் சரி.
ஒரு நல்ல தொகுப்பாக இருக்கும்.
:--))

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Aug 19, 2010, 11:31:21 AM8/19/10
to mint...@googlegroups.com
நல்லா இருக்கு ஸ்வர்ணா, கூடவே "பாக்யாத லக்ஷ்மி பாரம்மா!" பாட்டையும் சேர்க்க மறந்துட்டீங்களோ? எங்க வீட்டு வழக்கப்படி முதல்முறை வரலக்ஷ்மி விரதம் ஆவணியில் வரச்சே தான் எடுத்துக் கொடுப்பாங்க. ஆடிக் கடைசி வெள்ளியெனில் ஆவணி முதல் வெள்ளி நல்ல நாளா இருந்தா எடுத்துக் கொடுக்கும் வழக்கம் உண்டு. அம்மன் முகம் சுவற்றிலே வரைஞ்சு அதுகிட்டேயே மண்டபம் அமைப்பாங்க. முதல் நாள் மாலையே அம்மனை அழைப்பது என்று வீட்டின் தலைவாசலுக்கு அருகே மாக்கோலம் போட்டு அம்மனை அழைக்க எல்லா ஏற்பாடுகளும் பண்ணி, ஸ்வாமிக்கும் விளக்கு ஏற்றி, அம்மனை அழைக்க ஒரு பலகையிலும் கோலம் போட்டு அதில் அம்மனைக் கலசத்தோடு வைப்பார்கள்.

சாயந்திரம் அந்தியும், சந்தியும் கூடும் நேரமே அம்மனை அழைப்பது வழக்கம். வெண்பொங்கல் செய்து, தாளகக் குழம்பும், கருவடாமும் பொரிப்பார்கள். அது தான் அன்றைய நிவேதனம். மறுநாள் காலையில்/ (ஆனால் பழைய வழக்கப்படி மாலையில் மாடுகள் வீடு திரும்பும் நேரம் தான் இந்தப் பூஜை பண்ண வேண்டும் என்றும், அன்று முழுதும் அம்மனைத் துதித்த வண்ணமே இருக்கவேண்டும் எனவும் என் அம்மா சொல்வாங்க. பலரும் அப்படிப் பண்ணியும் பார்த்திருக்கேன். இப்போல்லாம் காலம்பரயே முடிச்சுடறாங்க. வெற்றிலை, பாக்கும் காலையிலேயே கூப்பிட்டுக் கொடுத்துடறாங்க. இரண்டு நாளெல்லாம் கொண்டாடறதில்லை.)  பூஜை, வழிபாடுகள். ஐந்து வகைக் கொழுக்கட்டை. தேங்காய், கடலைப்பருப்பு, உளுந்து, எள், பாசிப்பருப்பு போன்றவற்றில் தனித்தனியாய்ப்பூரணம் செய்வார்கள். உளுந்து மட்டும் காரம், மற்றவை வெல்லம் சேர்த்த பூரணம். தவிர இட்டிலி, அப்பம், வடை, பாயாசம் போன்றவையும் உண்டு. பூஜை முடிஞ்சதும், மஞ்சள் கயிற்றுக்கும் பூஜைகள் செய்து அவற்றைவலக் கையில் மணிக்கட்டுக்கு அருகே கட்டிக் கொள்வோம். நோம்பு இல்லாதவர்களும் கட்டிக்கொள்ளும் வழக்கமும் உண்டு.

மறுநாள் மாலைதான் பொதுவாக அம்மனை வைத்துப் பாடிச் சுண்டல் செய்து நிவேதனம் கொடுத்து, சுமங்கலிகளை அழைத்து வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், தேங்காய், சுண்டல் வைத்துக் கொடுத்து, இயன்றவர்கள் ரவிக்கைத்துணியும் கொடுப்பாங்க. அம்மனைப் பாட்டோடு அரிசிப் பானைக்குள் கொண்டு சேர்ப்பார்கள். ம்ம்ம்ம்ம், சின்ன வயசில் ஒவ்வொரு வரலக்ஷ்மி விரதத்திற்கும் புதிய பாவாடை, சட்டை உண்டு எனக்கு. பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். நன்றி ஸ்வர்ணா.

2010/8/19 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

devoo

unread,
Aug 19, 2010, 11:54:54 AM8/19/10
to மின்தமிழ்
"ஸௌபாக்யத லக்ஷ்மி பாரம்ம"

http://www.youtube.com/watch?v=yxzAloARwGk&feature=related


தேவ்

On Aug 19, 10:31 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:

> 2010/8/19 Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com>

> ...
>
> read more »

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Aug 19, 2010, 12:46:05 PM8/19/10
to mint...@googlegroups.com

என்னுடைய தாயாரின் நினைவு அதிகமானது.

மஹா அமர்க்களமாக எங்கள் வீட்டில் இந்தப் பண்டிகை நடக்கும்.

சிறுவயதில் பாக்யா த லக்ஷ்மி பாரம்மா... அக்காவுடன் சேர்ந்து நானும் பாடியிருக்கிறேன்.  அன்று வீட்டில் கிடைக்கும் ஒப்பட் (போளி) சாப்பிட்ட பிறகு அநியாயமாகத் தூக்கத்தை வரவழைக்கும்.  பால் மற்றும் சர்க்கரைப் பொடியுடன் கலந்தடித்து பட்டையைக் கிளப்புவோம்.  (எண்ணிக்கை இல்லாமல் ஒப்பட்டை வெளுப்பதால் மறுநாள் நிகழும் பின் விளைவுகள் எத்தனை அதி பயங்கரமாக      இருந்தாலும் கவலைப்படாத வீர இனம்  கன்னட மாத்வர்களுடயது)

கன்னட ராயர்கள் வீட்டில் கல்யாணத்துக்கு இணையாக செய்யப்படும் பண்டிகை இது.  இப்போதும் அறுபது வயதுக்கு மேலும் என்னுடைய நான்கு அக்காக்களில் மூன்று பேர் (ஒரு அக்கா விதவை) இப்போதும் அண்ணா வீட்டில், அதாவது அப்பா கட்டிய வீட்டில் கிருஷ்ணகிரியில் கொண்டாடுவார்கள்.

இந்த வருஷ ஒப்பட் எனக்கு டெல்லியில் - யாராவது ஒரு ராயர் வீட்டில்.

அன்புடன்

பென்னேஸ்வரன்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/8/19 devoo <rde...@gmail.com>

geeyes

unread,
Aug 19, 2010, 1:12:08 PM8/19/10
to மின்தமிழ்

’சௌபாக்யதலக்ஷ்மி பாரம்ம’ எனும் ஸ்ரீபுரந்தரதாசரின் பாட்டை
1. பண்டிட் பீம்சேன் ஜோஷி 2. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
பாடிக்கேட்க இங்கே செல்லவும் -

http://meerasubbarao.wordpress.com/2007/11/01/lyrics-for-bhagyada-lakshmi-baramma/

இங்கே எழுத்திலும் வீடியோவிலும் இருக்கிறது.

இந்த பூஜைக்கும் காரடையான் நோன்பிற்கும் உள்ள தொடர்பு என்ன.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

செல்வன்

unread,
Aug 19, 2010, 2:28:19 PM8/19/10
to mint...@googlegroups.com
எங்க வீட்டில் ஒவ்வொரு ஆடிமாதமும் எதாவது வெள்ளிகிழமை வரலட்சுமி பூஜை நடக்கும்.என் அம்மா இதை செய்ததில்லை.தங்கமணி தான் ஆரம்பித்து வைத்தார்.எனக்கு கல்யாணமானது முதல் இன்றுவரை ஒவ்வொரு ஆடிமாதமும் இந்த பூஜை தவறாமல் நடக்கும்.

எனது வட இந்திய நண்பர்கள் கர்வாசோத் என்ற பெயரில் இதை ஷ்ரவன் மாசம் கொண்டாடுவார்கள்.நாள் முழுக்க சாப்பிடாமல் விரதம் இருந்து பூஜை செய்வார்கள் என கேள்விபட்டிருக்கிறேன்.என்னை ஒருக்கா பூஜைக்கு கூப்பிட்டார்கள்.லேட்டா போய் சாப்பிட்டுட்டு மட்டும் வந்தேன்:-)

எங்க வீட்டுல வரலட்சுமி விரதத்துக்கு புது புடவை எடுக்கணும்.அமெரிக்காவில் புடவை வாங்கமுடியாது என்பதால் இந்தியாவிலிருந்து மாமியார் வாங்கி அனுப்புவார்கள்.புடவையும், வளையலும் பார்சலில் வந்ததும் பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கும். ஒன்பது திருமணமான பெண்களையும் அவரது குடும்பத்தையும் வீட்டுக்கு அழைப்போம்.அனைவரும் அன்று விரதம் இருப்பார்களாம்.ஆந்திரா, கர்னாகடகாவிலும் கொண்டாடுவார்கள் என்பதால் மூன்று மாநிலத்தையும் சேர்ந்த குடும்பங்களை இந்த வருடம் அழைத்தோம்.

அபார்ட்மெண்ட் வாசலில் கோலம் போட்டு மாவிலை கட்டியது புதிய அனுபவம்..அண்டைவிட்டார்கள் பலர் இது என்ன என ஆர்வமுடன் கேட்டுவிட்டு சென்றார்கள்.

photo-20.JPG

photo-19.JPG


லக்ஷ்மி முகத்தை தேங்காயில் பொருத்தி மஞ்சள் தடவி பூஜை செய்தார்கள்.கணவர்கள் எல்லோரும் ஹாலில் டிவி பார்த்துகொண்டிருந்தோம்:-)அப்புறம் தீர்த்தம் பிரசாதம் வாங்கிட்டு சுண்டல்,பொங்கல்,புளியோதரையை ஒரு கை பார்த்தோம்:-)..பிரசாதம் தான் எந்த பூஜையிலும் ஆவலுடன் எதிர்பார்க்கபடும் ஐட்டம்.

லட்சுமிக்கு வலப்புறம் இருப்பது துளசி செடி.மில்வாக்கி கோயிலில் விற்றார்கள்.குளிர்காலத்தில் வெளியே மைனஸ் 20 டிகிரி குளிர் இருக்கணும்.உள்ளே வெச்சு வெயிலை அப்பப காட்டி பத்திரமா பாதுகாக்கணும்

photo-18.JPG


photo-17.JPG
--
செல்வன்

www.holyox.blogspot.com


"ஒரு பணக்காரனையும், அவனது வசதியான வாழ்வையும் காணும் கம்யூனிஸ்ட் "எந்த மனிதனுக்கும் இத்தனை வசதி இருக்க கூடாது" என நினைப்பான்.இதையே ஒரு முதலாளித்துவவாதி பார்த்தால் "எல்லா மனிதருக்கும் இதே போன்ற வசதியான வாழ்க்கை வேண்டும்" என நினைப்பான் " - பிலிப்ஸ் ஆடம்ஸ்

photo-19.JPG
photo-18.JPG
photo-17.JPG
photo-20.JPG

geeyes

unread,
Aug 19, 2010, 1:05:38 PM8/19/10
to மின்தமிழ்

’சௌபாக்யதலக்ஷ்மி பாரம்ம’ எனும் ஸ்ரீபுரந்தரதாசரின் பாட்டை
1. பண்டிட் பீம்சேன் ஜோஷி 2. MS

N. Kannan

unread,
Aug 19, 2010, 6:50:01 PM8/19/10
to mint...@googlegroups.com
இப்போதெல்லாம் காலையில் லக்ஷ்மி சுப்ரபாதம் கேட்கிறேன். அன்னையே நம் கைப்பிடித்துணை. புருஷாகாரம். ஐயனின் முன் நிற்க நமக்கு எத்தகுதியும் இல்லை என்பதால் அம்மா கையைப் பிடித்து முன் அழைத்து நிற்க வைப்பதால் ஏதோ நமக்கும் அருள் மழை பொழிகிறது. அவள் இல்லையேல் நிழலற்ற பாறை நாம். வெய்யிலும், மழையும் நம் தலை மேலே!
 
மறக்காமல் படங்கள் எடுங்கள் (செல்வன் செய்திருப்பது போல). கூட்டுப் பிரார்த்தனைப் படங்களும்..முடிந்தால். அன்னையின் உவப்பறிந்து ஏதும் செய்க.
 
நன்றி.
 
க.>

2010/8/20 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

Innamburan Innamburan

unread,
Aug 19, 2010, 7:57:10 PM8/19/10
to mint...@googlegroups.com
ரொம்ப சந்தோஷம். செல்வனை விட தங்கமணி சமத்து.
இன்னம்பூரான்

2010/8/20 N. Kannan <navan...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Aug 20, 2010, 3:15:14 AM8/20/10
to mint...@googlegroups.com
அன்புள்ள ஸ்வர்ணா,
 
வரலஷ்மி விரதத்தை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். தீஷை பெற்றுக் கொண்டு செய்வது என்பது எனக்கு புதிய செய்தி.
மரபு விக்கியில் இந்தக் கட்டுரையை இணைத்து வைப்போம்.
 
-சுபா

 
2010/8/19 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

செல்வன்

unread,
Aug 20, 2010, 3:20:10 AM8/20/10
to mint...@googlegroups.com


2010/8/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ரொம்ப சந்தோஷம். செல்வனை விட தங்கமணி சமத்து.

உண்மைதான் ஐயா..:-)


--
செல்வன்

www.holyox.blogspot.com


"ஒரு பணக்காரனையும், அவனது வசதியான வாழ்வையும் காணும் கம்யூனிஸ்ட் "எந்த மனிதனுக்கும் இத்தனை வசதி இருக்க கூடாது" என நினைப்பான்.இதையே ஒரு முதலாளித்துவவாதி பார்த்தால் "எல்லா மனிதருக்கும் இதே போன்ற வசதியான வாழ்க்கை வேண்டும்" என நினைப்பான் " - பிலிப்ஸ் ஆடம்ஸ்

devoo

unread,
Aug 20, 2010, 5:36:23 AM8/20/10
to மின்தமிழ்
*புருஷாகாரம்*

புருஷகாரம் சரி; அச்செயலால் பரமனின் சீற்றத்தை மாற்றி அருள்கிறார்
தாயார்.

புருஷ + ஆகாரம் -> புருஷாகாரம் (ஆணின் வடிவம்)
மார்தவமே வடிவு கொண்ட திருமாமகளாருக்கு இது வேண்டாம்


தேவ்


On Aug 19, 5:50 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இப்போதெல்லாம் காலையில் லக்ஷ்மி சுப்ரபாதம் கேட்கிறேன். அன்னையே நம்
> கைப்பிடித்துணை. புருஷாகாரம். ஐயனின் முன் நிற்க நமக்கு எத்தகுதியும் இல்லை
> என்பதால் அம்மா கையைப் பிடித்து முன் அழைத்து நிற்க வைப்பதால் ஏதோ நமக்கும்
> அருள் மழை பொழிகிறது. அவள் இல்லையேல் நிழலற்ற பாறை நாம். வெய்யிலும், மழையும்
> நம் தலை மேலே!
>
> மறக்காமல் படங்கள் எடுங்கள் (செல்வன் செய்திருப்பது போல). கூட்டுப்
> பிரார்த்தனைப் படங்களும்..முடிந்தால். அன்னையின் உவப்பறிந்து ஏதும் செய்க.
>
> நன்றி.
>
> க.>
>

> 2010/8/20 Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com>

N. Kannan

unread,
Aug 20, 2010, 5:43:58 AM8/20/10
to mint...@googlegroups.com
Oops...!
 
உண்மைதான், இனிமேல் தமிழ்ப் பதங்களையே சரியாய் உபயோகிக்கக் கற்றுக்கொள்கிறேன். புருஷகாரம் என்பதன் தமிழ்ச்சொல் என்ன? மடைமாற்று மங்கை?
 
நன்றி.
 
க.>

2010/8/20 devoo <rde...@gmail.com>

Swarna Lakshmi

unread,
Aug 20, 2010, 11:58:25 AM8/20/10
to mint...@googlegroups.com
பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி. கீதா, நீங்கள் சொல்வது சரிதான் -  நான் முடிந்தவரை பழைய முறையில் தான் செய்கிறேன். மூன்று நாட்கள் அல்ல - இரண்டு நாட்கள். நேற்றைக்கு இரவு கலசத்தை தயார் செய்து வைத்ததோடு சரி - நைவேத்யம் பூஜை எல்லாம் இல்லை. இன்று காலையில் தான் வீட்டுக்குள் அழைத்தேன் (நீங்கள் சொல்லியிருக்கும் விதம் தான்). பின் 5 வகை கொழுக்கட்டைகள், சர்க்கரைப்பொங்கல், வடை, அதிரசம். இட்லி எல்லாம் செய்து விட்டு நான் பூஜை ஆரம்பிக்கும் போது 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது (ராகுகாலம் கழிந்த பின்). முடிக்கும் போது மூன்று மணி. ப்ராணப்ப்ரதிஷ்டை செய்து முழுதாக செய்வதால் லலிதா சகஸ்ர நாமத்தோடு எனக்கு நேரம் ஆகி விடும். ஆனால், மிக நன்றாக இருந்தது. இப்போது தான் இரவு பூஜை எல்லாம் முடித்து விட்டு நைவேத்யம் ஆரத்தி எடுத்து விட்டு வந்தேன். ஆவாஹனத்துக்கு முன்னும் ஆரத்திக்குப் பின்னும் புகைப்படங்கள் எடுக்க முயன்றேன் - மிக நன்றாக வரவில்லை என நினைக்கிறேன் - நாளைக்கு தான் பார்க்க வேண்டும். இந்த முறை நான் ஆசைப்பட்ட எல்லாப் பூக்களும் கிடைத்தன. தாமரை, அல்லி, தாழம்பூ, மற்ற பல வித மலர்கள் என்று சந்தோஷமாக இருந்தது.
 
செல்வன், நீங்கள் அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்து மிக சந்தோஷமாக இருந்தது. ஆந்திரர்களும் இது போல நிற்க வைத்து புடவை அணிவித்து தான் செய்கிறார்கள். பூஜை நீண்டதாக இருப்பதில்லை. தமிழகத்திலும் நிறைய பேர் முகம் வைக்காமல் சுவற்றிலோ வெள்ளி அல்லது செம்பு கலசத்தில் சுண்ணாம்பு பூசி, மையினால் அழகாக முகம் வரைந்து கண் மூக்கு எல்லாம் ஒட்டவைத்து பூஜை செய்வார்கள். கர்னாடகத்தில் சிலர் வைக்கும் முகம் சற்று வித்யாசமாக இருக்கிறது.
 
ஸந்தானம், வரலக்ஷ்மி விரதம் பொதுவாக குடும்பமும் சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்றும், அதைவிட முக்யமாக பக்தி, முக்திக்காகவும் செய்யப்படுகிறது. காரடையான் நோன்புக்கு காதலும், கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணமும் மட்டுமே காரணம். நான் விரிவாகவும் மிக ஆசையோடும் செய்யும் இன்னொரு பண்டிகை அது - காரணம் அது காமாக்ஷியை தேவதையாகக் கொண்டு செய்வது - அவள் எனக்கு இஷ்ட தெய்வம். சற்று நேரம் கிடைக்கும் போது விரிவாக இப்பண்டிகையைப்பற்றியும் எழுதுகிறேன் - நைவேத்யங்களுடன் :). சாவித்ரி இந்த விரதத்தை செய்து தான் எமனுடன் போராடி சத்யவானின் உயிரை மீட்டாள். காட்டில் வேறு ஏதும் விசேஷமாகக் கிடைக்காததால், வெல்ல அடையும் (அரிசி மாவும் வெல்லமும் சேர்ந்தது) கார அடையும் செய்து பூஜை செய்தாள். அதனால் காரடையான் நோன்பு. நோன்பு நோற்கும் போது வேறு எந்த உணவும் (cofee tea எல்லாம் உள்ளே போகும்) சாப்பிட மாட்டோம். அந்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மாசியும் பங்குனியும் சேரும் போது பூஜை செய்வோம்.
 
“உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன் - என் கணவன் எனைவிட்டு ஒரு நாளும் பிரியாத வரம் தருவாய்” என்று வேண்டிக்கொண்டு மஞ்சள் சரட்டைக் கழுத்தில் கட்டிக்கொள்வோம்.
 
நாளை வரலக்ஷ்மி புகைப்படங்களை அனுப்ப முயற்சிக்கிறேன்.
 
நன்றி
ஸ்வர்ணா


From: geeyes <gmsan...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Thu, 19 August, 2010 10:42:08 PM
Subject: [MinTamil] Re: ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2010, 12:26:56 PM8/20/10
to mint...@googlegroups.com

purusa means atman. Though there are two disticnt philosophies from Aryan and pre-Aryan, their common goal is the attainment of moksa.  The principle link between these two traditions have been the doctrine that self-surrender (bhakti) should be practiced as a preliminary step to self-detachment. Varalakshmi poojai is one such step of self-surrender.  I am afraid that purusha is not male form but the life-monad atman
Nagarajan



2010/8/20 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

geeyes

unread,
Aug 20, 2010, 12:59:24 PM8/20/10
to மின்தமிழ்

திருமதி.ஸ்வர்ணா,

தங்கள் விளக்கத்திற்கு நன்றி. சில குடும்பத்தினர், இரண்டில் ஒன்றைமட்டும்
கொண்டாடுகின்றனர். அதனால்தான் கேட்டேன்.
---------------------------------------------------------------------------------------------


வரலக்ஷ்மி விரதம் பொதுவாக குடும்பமும் சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும்
என்றும், அதைவிட முக்யமாக பக்தி, முக்திக்காகவும் செய்யப்படுகிறது.
காரடையான்
நோன்புக்கு காதலும், கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணமும் மட்டுமே
காரணம்.

---------------------------------------------------------------------------------------------

ஆகவே, வரலக்ஷ்மி விரதத்திற்குள் காரடையான் நோன்பின் தத்துவமும் ஒரு
பிரதான அங்கமாக ஐக்கியமாகியிருக்கிறது என்று கொள்ளலாம்.

’குடும்பமும் சமுதாயமும் நன்றாக இருக்கவேண்டும்’ என்ற நோக்குடன் செய்கிற
எதுவுமே பண்டிகைதான். கொண்டாட்டம்தான், அனைவருக்கும் வரலக்ஷ்மி விரதப்
பண்டிகை வாழ்த்துகள் !

devoo

unread,
Aug 20, 2010, 1:33:33 PM8/20/10
to மின்தமிழ்
>> purusa means atman. ............. I am afraid that

purusha is not male form but the life-monad atman <<


உங்கள் இடுகைக்கு நன்றி
पुरुष: - नर , मनुष्य, मानव, व्यक्ति
புருஷன் - நரன், மனிதன், நபர்

இந்தப் பொருள்கள் தவிர -

(நவத்வார ) புர்யாம் சேதே இதி ‘புருஷ:’
(ஒன்பது வாயில்கொண்ட) நகரில் உறைவதால் ‘புருஷன்’
என்றும் பொருள் தருகிறது. பேச்சு வழக்கில் ‘கணவன்’ என்பதற்கும் புருஷன்
என்கின்றனர்.

இங்கு வைணவ மரபை ஒட்டிப் பொருள்கொள்வதே முறை. ’புருஷகாரம்’ என்பதற்கு
அவர்கள் ‘பரிந்துரைத்தல்’ என்றே பொருள் கொள்வர். அதை ஒட்டிப் பொருள்
கூறப்பட்டது. ஆகாரம் என்றால் வடிவம். ’ப்ரச்னை பூதாகாரமாக
வடிவெடுத்தது’ என்று எழுதுவதைப் பார்க்கிறோம்.

’அக்நி’ என்றால் நெருப்பு; அதையே பரம்பொருளைச் சுட்டும் வகையில் நீட்டி
வ்யுத்பத்தி கூறிப் பொருள் கொள்வதற்கும் வடமொழி இலக்கண அமைப்பு இடம்
தருகிறது. இடம் நோக்கிப் பொருள் கொள்க.

உப்பு ஆய்வகத்துக்குள் போனால் சோடியம் க்ளோரைட், அதுவரை சாதா உப்பு


தேவ்


On Aug 20, 11:26 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

srirangammohanarangan v

unread,
Aug 20, 2010, 2:55:51 PM8/20/10
to mint...@googlegroups.com
புருஷகாரம் --  மனித வலிமை
 
இது சாதாரண பொருள்.
 
புருஷ காரம் >< தெய்வக்ருதம் 
 
இது மனித யத்தனத்தால் இயற்றப்படும் கார்யத்திற்கும், தெய்வத்தால் நடக்கும் கார்யத்திற்கும் வேறுபடுத்தும் பொருளில் புருஷ காரம் பொருள் மாறுகிறது. இந்த நிலையிலேயே புருஷ: என்றால் ஆண்பால் என்ற பொருள் சாயை மாறி, புருஷ: என்றால் agent  என்ற பொதுப்பொருள் வந்துவிடுகிறது. 
 
(ஒப்பிடுக -- தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்.) 
 
பிறகு ஒருவரிடம் காரியம் கொள்ளும் போது அவரைக் காரியம் செய்ய உன்முகராக ஆக்குவதற்கு வேறு ஒருவரைக் கடகராகக் கொள்ளும் போது அவர் செய்யும் கடகத்திற்கும் புருஷகாரம் என்ற  பொருள் விரிவு ஏற்பட்டது. 
 
இவ்வளவு பொருள் விரிவு ஏற்பட்ட பின்னரே ஸ்ரீவைஷ்ணவம் புருஷகாரம் என்ற பதத்தை பொதுப்பொருளில் தத்வ பரமாக mediatrix என்ற அர்த்தத்தில் ஆள்கிறது. 
 
இந்த பதத்திற்கு இந்தப் பொருள் ஸ்ரீவைஷ்ணவம் தன் சௌகர்யத்திற்காக ஸ்ருஷ்டித்தது அன்று.  
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

devoo

unread,
Aug 21, 2010, 12:15:44 AM8/21/10
to மின்தமிழ்
>> ஒருவரிடம் காரியம் கொள்ளும் போது அவரைக் காரியம் செய்ய உன்முகராக
ஆக்குவதற்கு வேறு ஒருவரைக் கடகராகக் கொள்ளும் போது அவர் செய்யும்
கடகத்திற்கும் புருஷகாரம் என்ற பொருள் விரிவு ஏற்பட்டது.<<

புருஷகாரத்திற்கு மனித முயற்சி என்று மட்டும் கோசங்களில் பொருள் அறிய
முடிகிறது. விரிவான இந்த அழகிய கருத்திற்கான வ்யுத்பத்தியையும் இடம்
பெறச் செய்ய வேண்டும்


தேவ்


On Aug 20, 1:55 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

Tthamizth Tthenee

unread,
Aug 21, 2010, 6:38:11 AM8/21/10
to mint...@googlegroups.com
ஆமாம் ஒரு சந்தேகம்
 
பெண்கள்  தங்கள் புருஷனுக்காக  வேண்டிக்கொள்ளும் பண்டிகைகள்
 
சைவத்தில்  வரலக்‌ஷ்மி விரதம், வைஷ்ணவத்தில்   காரடையான் நோன்பு, மற்றும் கன்னுப்பிடி வைத்தல் போன்றவை உள்ளன
 
மனைவியின் நலனுக்காக  புருஷன் வேண்டிக்கொள்ளும் ஏதாவது ஒரு பண்டிகை உள்ளதா?
 
சம உரிமை கேட்கும் பெண்டிர் இதை கவனிக்க வேண்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

devoo

unread,
Aug 21, 2010, 7:03:41 AM8/21/10
to மின்தமிழ்
அதுதான் ஆண்மகன் தாலி அணிவிக்கும்போது மொத்தமாக வேண்டிக் கொள்கிறானே
-
‘ ஸுபகே ! மம ஜீவந ஹேதுநா அநேந தந்துநா கண்டே பத்நாமி; சரதாம்
சதம் த்வம் ஜீவ ‘

பேறுகள் நிறைந்த மங்கையே ! என் நல்வாழ்வுக்காக இந்த மங்கலநாணை உன்
கழுத்தில் கட்டுகிறேன்; நீயும் (இதைக் கட்டிக்கொண்டு ) நூறாண்டு வாழ்.
(உன்னோடு நானும் வாழ்கிறேன்)

சம உரிமை கோரிப்பெறும் அளவில் பெண்களின் நிலை இல்லை; இவன் செய்யும்
நற்செயல்களின் பலன்களில் பாதி தன்படியே அவளைச் சேர்ந்து விடுகிறது. இவன்
செய்யும் பாவங்களின் பயன் அவளைச்சாரா; அவள் பாவம் செய்தால் மட்டும்
இவனுக்குப் பங்கு உண்டு.

இந்த ஏற்பாட்டை எதிர்த்து ஆண்கள்தான் கொடிபிடிக்க வேண்டும்


தேவ்

> > > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to


> > visit
> > > > our
> > > > > > Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > > > To unsubscribe from this group, send email to
>

> ...
>
> read more »

Tthamizth Tthenee

unread,
Aug 21, 2010, 7:12:10 AM8/21/10
to mint...@googlegroups.com
நற்செயல்களின் பலன்களில் பாதி தன்படியே அவளைச் சேர்ந்து விடுகிறது,
அவள் பாவம் செய்தால் மட்டும்
இவனுக்குப் பங்கு உண்டு.
 
 
ஆனால்  தன் தர்ம பத்தினியை  கூட வைத்துக்கொண்டு  செய்யும் காரியங்களில் மட்டுமே  முழுப்பலனும் கிடைக்கும்  ஆண்மகனுக்கு
 
அதுதான்  உயரிய தகுதி, இந்த ஒரு காரணத்துக்காகவே  சகதர்மிணியின் நலனுக்காக வேண்டிக்கொள்ளும் பண்டிகை  உருவாக்க வேண்டும்
 
திருமண நேரங்களில் கூறும் மந்திரங்களின் பொருள் புரிந்துகொள்கிறார்களா   ஆண்கள் ,
 
இதைக் கட்டிக்கொண்டு ) நூறாண்டு வாழ்.
(உன்னோடு நானும் வாழ்கிறேன்)
 
 
உன்னோடு நானும் வாழ்கிறேன்  என்கிறானே தவிர  தான் கட்டும் திருமாங்கல்யமே  அவளுக்கு எல்லாவித தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுமா,அதையும் தாண்டி  தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் மனதைப் புரிந்து சுயநலத்தை மறந்து அவளுக்காக  வாழும் எத்தனை கணவன்மார்கள் இருக்கிறார்கள்?
 
நமக்காகவே வாழும்  தர்ம பத்தினிகளுக்கு  ஜே!
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ

Geetha Sambasivam

unread,
Aug 21, 2010, 7:38:04 AM8/21/10
to mint...@googlegroups.com
வைஷ்ணவத்தில்   காரடையான் நோன்பு, //

தேனீயாரே, தப்பு, காரடையான் நோன்பு அனைவருக்கும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் வடநாட்டில் கூட சாவித்திரி விரதம் என்று ஆவணி மாசம்(?) கொண்டாடுவாங்க. வைணவர்களுக்கு மட்டும்னு இல்லை.

2010/8/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 21, 2010, 7:38:55 AM8/21/10
to mint...@googlegroups.com
கனுப்பொடி வைத்தலும் எல்லாருக்குமே உண்டு. நாங்களும் கனுப்பொடி வைப்போம். திருக்கார்த்திகை கூட சகோதரர்கள் வாழ்வுக்காக என்று மதுரைப் பக்கங்களில் சொல்வதுண்டு.

2010/8/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஆமாம் ஒரு சந்தேகம்

srirangammohanarangan v

unread,
Aug 21, 2010, 7:49:51 AM8/21/10
to mint...@googlegroups.com
இதில் எங்கு சைவ வைஷ்ணவ பேதம் இருக்கிறது?

Tthamizth Tthenee

unread,
Aug 21, 2010, 7:54:38 AM8/21/10
to mint...@googlegroups.com
இதில் எங்கு சைவ வைஷ்ணவ பேதம் இருக்கிறது?
 
நாராயணா!
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 

Geetha Sambasivam

unread,
Aug 21, 2010, 7:55:08 AM8/21/10
to mint...@googlegroups.com


2010/8/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>
360.gif

devoo

unread,
Aug 21, 2010, 7:58:07 AM8/21/10
to மின்தமிழ்
பெண்ணுரிமை - ஆணுரிமை; சைவம் - வைஷ்ணவம் என்று எதையாவது கிளப்பினால்தானே
பொழுது போகும் !


தேவ்

On Aug 21, 6:49 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> இதில் எங்கு சைவ வைஷ்ணவ பேதம் இருக்கிறது?
>

> ...
>
> read more »

Tthamizth Tthenee

unread,
Aug 21, 2010, 7:58:45 AM8/21/10
to mint...@googlegroups.com
பெண்களுக்காக 
 இவ்வளவு பரிந்து எழுதுகிறேன்
 
தாய்மார்களின்  ஏகோபித்த ஆதரவுக்கரம்  நீளுமென்று
 
கீதாம்மா  என்னவென்றால்   ):  குறி போடுகிறார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
360.gif

Geetha Sambasivam

unread,
Aug 21, 2010, 8:01:03 AM8/21/10
to mint...@googlegroups.com


2010/8/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
360.gif

srirangammohanarangan v

unread,
Aug 21, 2010, 8:02:33 AM8/21/10
to mint...@googlegroups.com
போட்ட குறி தப்பாது :--))

Tthamizth Tthenee

unread,
Aug 21, 2010, 8:13:31 AM8/21/10
to mint...@googlegroups.com
குறி சொல்வதில் கெட்டிக்காரப் பெண்கள்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 8/21/10, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ

Nagarajan Vadivel

unread,
Aug 21, 2010, 8:28:19 AM8/21/10
to mint...@googlegroups.com
aஎன்னுடைய அமெரிக்க மாணவர்கள் பல கருத்து விளக்கங்களைக் கேட்பதுண்டு
அவர்களின் கேள்வி
சநாதன தர்மத்தில் வர்னாஸ்ரமத்தில் பெண்டிரின் சமுதாய நிலை என்ன?  ஆண்களுக்கு நான்கு வர்ணம் உண்டு.  ஆனால் பெண்களுக்கு ஒரு வர்ணம்தான் உண்டு.  அவர்கள் சூத்திரர்கள் என்பது உண்மையா? இறை வண்க்கத்துகு உரிய கடவுளர்களில் சக்தியை மூன்றாம் நிலையில் வைத்திருப்பது உண்மையா?  ஸ்வாமி விவேகானந்தர் எழும் யுகம் கோடிக்கணக்கான சூத்திரர் உலகு என்று சொன்னது அடிமைத்தளையை முறித்து எழும் பெண்குலத்தையா?
நாகராசன்

2010/8/21 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Tthamizth Tthenee

unread,
Aug 21, 2010, 8:34:01 AM8/21/10
to mint...@googlegroups.com
சூத்திரர் உலகு
 
சூத்திரம்   முறையாகப் போடாத  காற்றாடி ஒழுங்காகப் பறக்காது
 
சூத்திரம் இல்லாமல்  சாத்திரம் இல்லை
 
ஒரு வேளை விவேகானந்தர்      எழும் யுகம்  கோடிக்கணக்கான சூத்திரர் உலகு  என்று 
கணிதமில்லாமல்  உலகு இல்லை என்பதை வலியுறுத்தி  சொல்லி இருக்கலாம்
 
சூத்திரம் என்பது  நுணுக்கம்
 
ஆகவே நுணுக்கம் நிறைந்த  கோடிக்கணக்கானோர்  தோன்றி அதன் மூலமாக எழும் யுகம் என்று உணர்த்தி இருக்கலாம்
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ

Nagarajan Vadivel

unread,
Aug 21, 2010, 8:40:33 AM8/21/10
to mint...@googlegroups.com
In English "sudhra"
Nagarajan

2010/8/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 21, 2010, 10:54:22 AM8/21/10
to mint...@googlegroups.com
வர்ணாசிரமம் என்பதே தவறாய்ப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.

2010/8/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Swarna Lakshmi

unread,
Aug 23, 2010, 12:23:35 AM8/23/10
to mint...@googlegroups.com
ஆஹா!! எனக்கு பிடித்த topic  நான் இல்லாமலா! hold on please  வருகிறேன், வருகிறேன், விரைவில் வருகிறேன்
 
ஸ்வர்ணா


From: devoo <rde...@gmail.com>

To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Sat, 21 August, 2010 4:33:41 PM
Subject: [MinTamil] Re: ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Swarna Lakshmi

unread,
Aug 23, 2010, 12:20:53 PM8/23/10
to mint...@googlegroups.com
எத்தனை நேரம் முயற்சி செய்தும் அம்பாள் முகம் மட்டும் சரியாக வரவேயில்லை. சில புகைப்படங்களை அனுப்பியுள்ளேன்.
 
நன்றி
ஸ்வர்ணா


From: Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 20 August, 2010 9:28:25 PM
Subject: Re: [MinTamil] Re: ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்
mangalaarthi.JPG
varalakshmi1.jpg
varalakshmi2.JPG
varalakshmi3.JPG

N. Kannan

unread,
Aug 23, 2010, 6:18:32 PM8/23/10
to mint...@googlegroups.com
2010/8/24 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:

> எத்தனை நேரம் முயற்சி செய்தும் அம்பாள் முகம் மட்டும் சரியாக வரவேயில்லை. சில
> புகைப்படங்களை அனுப்பியுள்ளேன்.


மிக நன்றாக அலங்காரம் செய்துள்ளீர்கள்!

அம்பிகையை (அன்னையை)ச் சரண் புகுந்தால் இனிய வரம் தருவாள்! என்கிறானே
பாரதி. கொஞ்சம் பிரசன்னமாக இருக்கச் சொல்லி எடுக்க வேண்டியதுதானே :-))

விளக்குகளுக்கு எண்ணெய் செலவு மிச்சம் போல (மின்சாரம் அதைவிட மலிவோ?) ;-)

படங்களுக்கு நன்றி.

க.>

Swarna Lakshmi

unread,
Aug 24, 2010, 12:50:01 AM8/24/10
to mint...@googlegroups.com
>>விளக்குகளுக்கு எண்ணெய் செலவு மிச்சம் போல (மின்சாரம் அதைவிட மலிவோ?) ;-)
 

விளக்கேற்றப்பட்டிருக்கிறது கண்ணன் - இருட்டாக இருக்கிறது என்கிறீர்களா??!!


From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tue, 24 August, 2010 3:48:32 AM

Subject: Re: [MinTamil] Re: ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்

N. Kannan

unread,
Aug 24, 2010, 1:30:27 AM8/24/10
to mint...@googlegroups.com
2010/8/24 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:

>>>விளக்குகளுக்கு எண்ணெய் செலவு மிச்சம் போல (மின்சாரம் அதைவிட மலிவோ?) ;-)
>
> விளக்கேற்றப்பட்டிருக்கிறது கண்ணன் - இருட்டாக இருக்கிறது என்கிறீர்களா??!!

படத்தில் இடது பக்கம் இருக்கும் விளக்கு மின்சாரத்தில் ஒளிரும்
குத்துவிளக்கு போல் தென்பட்டது. அதுதான் கேட்டேன். எண்ணெய் பிசுக்கு
இல்லாமல், எல்லாம் மின்சாரமயமாகிவிட்டதோ என்ற சந்தேகத்தில் கேட்டேன்.
தவறெனில் திருத்துக!

க.>

Innamburan Innamburan

unread,
Aug 25, 2010, 6:57:56 AM8/25/10
to mint...@googlegroups.com
கண்னன் கேமராமேன் ஆகிவிட்டார் அல்லவா. அப்படித்தஅன் தோன்றும்.

2010/8/24 N. Kannan <navan...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 25, 2010, 7:10:29 AM8/25/10
to mint...@googlegroups.com
இப்போது பரவாயில்லையா பாருங்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
varalakshmi2.JPG
varalakshmi3.JPG

N. Kannan

unread,
Aug 25, 2010, 8:30:40 AM8/25/10
to mint...@googlegroups.com
2010/8/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> இப்போது பரவாயில்லையா பாருங்கள்
>
என்ன சார்! போட்டோ ஷாப் வேலையா? :-)
தாயார் நன்றாகத் தெரிகிறார். அலங்காரம் அற்புதம்.
விளக்கின் ஒளி கண்ணைக்கூச வைக்கிறது.
ஸ்வர்ணா எப்படி இப்படத்தை எடுத்தார்? ஒளிப்பாய்சலுடனா? இல்லையா?
விளக்கின் பிரகாசமே என்னை அது மின்சார விளக்கோ என்று கேட்க வைத்தது.
எண்ணெய் விளக்கின் ஒளி வித்தியாசமாக (அழகாக) இருக்கும்!

க.>

N. Kannan

unread,
Aug 25, 2010, 8:36:10 AM8/25/10
to mint...@googlegroups.com
2010/8/25 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> கண்னன் கேமராமேன் ஆகிவிட்டார் அல்லவா. அப்படித்தஅன் தோன்றும்.
> இ

சார்! 80களில் கேமிராவும் கையுமாக ஐரோப்பா முழுவதும் அலைந்திருக்கிறேன்.
அப்போது மேனுவல் நிக்கான் (செமி ஆட்டமேடிக்). அதை என் பெண் அருங்காட்சிப்
பொருள் என்று வாங்கிக்கொண்டு விட்டாள். ஆயிரக்கணக்கான ஸ்லைடுகள்,
தென்னாங்கூர் அக்கா வீட்டுப் பரணில் (உருப்படியாக இருக்குமா?). பின்
டிஜிட்டல் ஈரா ஆரம்பித்தவுடன், கேமிரா மாறி, மாறி, இப்போது சாம்சுங்
கைப்பிடிக் கேமிரா. மைக்ரோசாப்ஃட் செய்த புரட்சி, இப்போது கேமிராவின்
அனைத்தும் மென்பொருள் ஆணையில் நடக்கிறது. பொத்தானை மட்டும் அழுத்தினால்
போதும்! இந்த வேடிக்கையைத்தான் தற்போது ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
கொஞ்ச காலம் ஓடும் (பாப்பாவிற்கு சொப்பின் மீது ஆவல் உள்ளவரை!).

க.>

Tthamizth Tthenee

unread,
Aug 25, 2010, 9:15:10 AM8/25/10
to mint...@googlegroups.com
மைக்ரோசாப்ட் பிக்சர் மேனேஜெரில் போட்டு எடிட்டிங் சென்று  ப்ரைட்னெஸ் அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Swarna Lakshmi

unread,
Aug 25, 2010, 11:13:43 AM8/25/10
to mint...@googlegroups.com
brightness, contrast adjust செய்திருக்கிறீர்கள் இல்லையா!! கொஞ்சம் பரவாயில்லை. நன்றி.
 
கண்ணன், நீங்கள் சொல்லியது சரி - அங்கே நட்சத்திர தீபத்தைப் போன்ற ஒரு மின்விளக்கு இருக்கிறது. இரவு நேரத்தில் அம்பாளை இருட்டில் வைக்க வேண்டாம் என்று இதை வைத்திருக்கிறேன். படம் எடுக்கும் போது எனக்கு ஒளியை சரியாக மேம்படுத்தத் தெரியவில்லை. ஒரு வேளை இந்த வெளிச்சமும் இருந்தால் நன்றாக இருக்குமோ என்று ஆன் செய்தேன்.
 
உண்மையில், இன்னும் light and angle management பிடிபடவில்லை - யாராவது சொல்லித்தந்தால் பரவாயில்லை :))
நன்றி
ஸ்வர்ணா

From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 25 August, 2010 4:40:29 PM

srirangammohanarangan v

unread,
Aug 25, 2010, 11:15:54 AM8/25/10
to mint...@googlegroups.com
வெண்பா என்னாச்சு? வெண்பா பாடம் என்னாச்சு? என்னாச்சு? னாச்சு? ஆச்சு? சு?

Swarna Lakshmi

unread,
Aug 25, 2010, 11:29:32 AM8/25/10
to mint...@googlegroups.com
ஹி ஹி - கொஞ்சம் வேலை ஜாஸ்தி சார் - அது தான் காணாமல் போயிட்டேன். பொறுத்து அருளணும்.


From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 25 August, 2010 8:45:54 PM

Swarna Lakshmi

unread,
Aug 25, 2010, 12:17:45 PM8/25/10
to mint...@googlegroups.com
flash எப்படியோ ஆன் ஆகி விட்டது - அதை அணைக்க தெரியவில்லை - manual பார்க்க வேண்டும். அன்றைக்கு பூஜை நேரத்தில் நீண்ட நேரம் ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. 2 குத்து விளக்குகளும் எண்ணைய் விளக்குகளே - ஆனால், நீங்கள் சொல்கிற அழகு ஏனோ வரவில்லை. நான் சென்ற வருடம் பழைய கேமராவில் கார்த்திகை தீபத்துக்கு எடுத்த படங்களை அனுப்புகிறேன் - அது இன்னும் அழகாக வந்திருக்கிறது.
ஸ்வர்ணா

From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 25 August, 2010 6:00:40 PM

Subject: Re: [MinTamil] Re: ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்

Innamburan Innamburan

unread,
Aug 25, 2010, 12:35:08 PM8/25/10
to mint...@googlegroups.com
1. வெண்பா பாடம் தொடருட்டுமே.
2. ஃப்ளாஷ்ஷை அணைக்கக்கூடாது, உருவகம் என்று பேச்சுப்படின்.
இன்னம்பூரான்

2010/8/25 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

Swarna Lakshmi

unread,
Aug 25, 2010, 1:15:29 PM8/25/10
to mint...@googlegroups.com
வரலக்ஷ்மி விரதம், காரடையான் நோன்பு இரண்டுமே பொதுவானது - சைவ வைஷ்ணவ பேதம் இல்லை.
 
(விஷ்ணு தன் மார்பில் சோமாஸ்கந்தரை வைத்து வழிபட அவனுடைய சுவாசத்தினால் அது அஜபா நடனமாயிற்றே  - இவன் அறிதுயில் கொண்டபோதே அவன் அஜபா நடனம் கொண்டான் - அவன் ஆத்மானுபவம் கொண்ட போது இவன் காளிங்க நர்த்தனம் செய்தான் - சைவமாவது வைஷ்ணவமாவது?? ”உன் ஆடலைக்காண தில்லை அம்பலத்திறைவனும், தன் ஆடலை விட்டு இங்கு கோகுலம் வந்தான்” என்பாரே ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், ஆடாது அசங்காது வா என்ற மத்யமாவதி கிருதியில்... எல்லாம் அவன் நர்த்தனமே!!)
 
1. வரலக்ஷ்மி விரதம் - குடும்ப நலனுக்காக - சமுதாயத்துக்காக
2. காரடையான் நோன்பு - கணவன் நலனுக்காக
3. கணுப்பிடி வைத்தல் - சகோதர சகோதரிகள் - சொந்தங்கள் சூழ வாழ்வதற்காக - “காக்கா கூட்டம் குருவிக்கூட்டம் போல குடும்பம் வாழ வேண்டும்” என்று வேண்டிக்கொண்டே நைவேத்யம் செய்வார்கள்.
 
>>சநாதன தர்மத்தில் வர்னாஸ்ரமத்தில் பெண்டிரின் சமுதாய நிலை என்ன?  ஆண்களுக்கு நான்கு வர்ணம் உண்டு.  ஆனால் பெண்களுக்கு ஒரு வர்ணம்தான் உண்டு.  அவர்கள் சூத்திரர்கள் என்பது உண்மையா? இறை வண்க்கத்துகு உரிய கடவுளர்களில் சக்தியை மூன்றாம் நிலையில் வைத்திருப்பது உண்மையா? 
 
நான் அறிந்த வரை வர்ணாச்ரம தர்மம் எல்லா மக்களுக்கும் பொதுவானது - ஆண் பெண் பேதமில்லை. சமுதாயத்தை செய்யும் - செய்ய வேண்டிய கடமைகளுக்கேற்ப பிரித்து - வர்ண தர்மம் என்று வைத்திருக்கிறது. ஆண்கள் கடமையாற்ற வேண்டியவர்கள், பெண்கள் குடும்பத்தைப் பேணி, கணவனுடைய கடமைகளுக்கு உதவ வேண்டியது. கற்பதைப் பொறுத்த வரை குருகுல கல்வி போன்றவை ஆணுக்கே - பெண் வீட்டிலிருந்தே கற்பாள் - பல பெண்கள் நிறைந்த கல்வி அறிவுடன் திகழ்ந்தார்கள், எல்லா வருணத்திலும். தன் வர்ணத்தை சேர்ந்தவரையே மணப்பதற்கு தன் பெற்றோருடைய கடமைகளை பார்த்துப் பழக்கப்பட்ட பெண் ஆணுடைய கடமைகளை நிறைவேற்ற உதவுவாள் என்பதும் முக்கிய காரணம். கணவனுடைய கடமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. அவரவர் குல தர்மம், வர்ண தர்மம் ஆகியவற்றை பின்பற்ற, மனைவி அவனுக்கு inspirationஆக இருக்கிறாள். அவளுக்கென்று தனியாக ஒன்றும் தர்மங்கள் சொல்லப்படவில்லை என்று நினைக்கிறேன் - பெற்றவர்கள் தர்மம் அவளுக்கு இல்லை - கணவனுடைய தர்மம் தான் செல்லுபடியாகும். ஆனால், வாழ்க்கைக்கு அடிப்படையாக சிலவற்றை சொல்லியிருக்கிறது - அவற்றில் ஒன்று மங்களகரமாக இருப்பது - நகைகளை அணிவது என்று பொருளல்ல - பெண் அரவணைத்து செல்ல வேண்டியவள் என்பதனால் பல விதமான soft skills பற்றி பேசப்படுகிறது.
 
தர்ம சாஸ்திரம், பின்பற்ற வேண்டிய பல தர்மங்களில், வர்ண தர்மம், குல தர்மம் என்னும் வரிசையில், தெரியாத விஷயங்களில் குழப்பங்கள் இருந்தால், நான்காம் வருணத்தவரையும், பெண்களையும் கேட்க வேண்டும் என்கிறது. இவர்கள் நடைமுறை அறிவு நிரம்பப் பெற்றவர்கள் என்பதால். இங்கே இவர்கள் இருவரையும் கீழாக தயவு செய்து நோக்காதீர்கள் - வருணாச்ரம தர்மத்தை மிக தப்பாக புரிய வைத்து விட்டார்கள் - பல விதமான நல்ல விஷயங்களுக்கு அடிப்படை இத்தர்மம். விரிவுக்கஞ்சியும், கட்டுக்கோப்பாக சொல்ல முடியுமா என்ற அச்சத்தினாலும் இங்கே எழுத முடியவில்லை - நன்றாக அறிந்து கொள்ள இங்கே பாருங்கள் (இன்னும் நிறைய இருக்கிறது). வர்ணம் மாற முடியுமா - genuine ஆக இருந்தால் முடியும் - விச்வாமித்ரரின் கதை இதைத்தானே சொல்கிறது. ஆனால் எப்போது எப்படி மாறலாம் என்பதற்கு விதிகள் உண்டென்று நினைக்கிறேன் - சமுதாய நலன் முதன்மையானது என்பது இந்த விதிகளைப்பார்த்தால் புரிகிறது. அறிவுக்கும் அறிதலுக்கும் தடைகள் இல்லை. ஆனால், பின்பற்றுவதற்கு சில தடைகள் உண்டு - இது தடைகள் என்பதைவிட தகுதியை உருவாக்கும் படிக்கல் என்பதே சரி.
 
சக்தியை மூன்றாம் இடத்தில் வைத்திருக்கிறதா??!! ஆதிசக்தியில் இருந்து தோன்றுபவர்களே முத்தேவிகளும் முத்தேவர்களும் என்பதல்லவா சாக்தத்தின் கருத்து - சக்தியில்லையேல் (energy) சிவன் (matter) சவமல்லவோ?? இதை அறிவியலும் matter and energy  என்று ஒத்துக்கொண்டு விட்டார்களே!!??
 
தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
 
நன்றி
ஸ்வர்ணா

From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sat, 21 August, 2010 5:19:51 PM

Subject: Re: [MinTamil] Re: ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்

இதில் எங்கு சைவ வைஷ்ணவ பேதம் இருக்கிறது?

On 8/21/10, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
ஆமாம் ஒரு சந்தேகம்
 
பெண்கள்  தங்கள் புருஷனுக்காக  வேண்டிக்கொள்ளும் பண்டிகைகள்
 
சைவத்தில்  வரலக்‌ஷ்மி விரதம், வைஷ்ணவத்தில்   காரடையான் நோன்பு, மற்றும் கன்னுப்பிடி வைத்தல் போன்றவை உள்ளன
 
மனைவியின் நலனுக்காக  புருஷன் வேண்டிக்கொள்ளும் ஏதாவது ஒரு பண்டிகை உள்ளதா?
 
சம உரிமை கேட்கும் பெண்டிர் இதை கவனிக்க வேண்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

 
On 8/21/10, devoo <rde...@gmail.com> wrote:
>>  ஒருவரிடம் காரியம் கொள்ளும் போது அவரைக் காரியம் செய்ய  உன்முகராக
ஆக்குவதற்கு வேறு ஒருவரைக் கடகராகக் கொள்ளும் போது அவர் செய்யும்
கடகத்திற்கும் புருஷகாரம் என்ற  பொருள் விரிவு ஏற்பட்டது.<<


புருஷகாரத்திற்கு மனித முயற்சி என்று மட்டும் கோசங்களில்  பொருள் அறிய
முடிகிறது.  விரிவான  இந்த அழகிய  கருத்திற்கான  வ்யுத்பத்தியையும் இடம்

பெறச் செய்ய வேண்டும்


தேவ்


On Aug 20, 1:55 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> புருஷகாரம் --  மனித வலிமை
>
> இது சாதாரண பொருள்.
>
> புருஷ காரம் >< தெய்வக்ருதம்
>
> இது மனித யத்தனத்தால் இயற்றப்படும் கார்யத்திற்கும், தெய்வத்தால் நடக்கும்
> கார்யத்திற்கும் வேறுபடுத்தும் பொருளில் புருஷ காரம் பொருள் மாறுகிறது. இந்த
> நிலையிலேயே புருஷ: என்றால் ஆண்பால் என்ற பொருள் சாயை மாறி, புருஷ: என்றால்
> agent  என்ற பொதுப்பொருள் வந்துவிடுகிறது.
>
> (ஒப்பிடுக -- தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்.)
>
> பிறகு ஒருவரிடம் காரியம் கொள்ளும் போது அவரைக் காரியம் செய்ய

> உன்முகராக ஆக்குவதற்கு வேறு ஒருவரைக் கடகராகக் கொள்ளும் போது அவர் செய்யும்
> கடகத்திற்கும் புருஷகாரம் என்ற  பொருள் விரிவு ஏற்பட்டது.
> > > > > > நாளை வரலக்ஷ்மி விரதம்.

>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>

>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Aug 25, 2010, 7:45:57 PM8/25/10
to mint...@googlegroups.com
விடிகாலையில் தங்கக்குவியல் மின்னுகிறது. 'இங்கே' ஃபாண்ட் ப்ராப்ளெம்.
இன்னம்பூரான்

2010/8/25 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
வரலக்ஷ்மி விரதம், காரடையான் நோன்பு இரண்டுமே பொதுவானது - சைவ வைஷ்ணவ பேதம் இல்லை.

N. Kannan

unread,
Aug 25, 2010, 9:14:29 PM8/25/10
to mint...@googlegroups.com
2010/8/26 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:

> கண்ணன், நீங்கள் சொல்லியது சரி - அங்கே நட்சத்திர தீபத்தைப் போன்ற ஒரு
> மின்விளக்கு இருக்கிறது. இரவு நேரத்தில் அம்பாளை இருட்டில் வைக்க வேண்டாம்
> என்று இதை வைத்திருக்கிறேன். படம் எடுக்கும் போது எனக்கு ஒளியை சரியாக
> மேம்படுத்தத் தெரியவில்லை. ஒரு வேளை இந்த வெளிச்சமும் இருந்தால் நன்றாக
> இருக்குமோ என்று ஆன் செய்தேன்.
>
> உண்மையில், இன்னும் light and angle management பிடிபடவில்லை - யாராவது
> சொல்லித்தந்தால் பரவாயில்லை :))

பொதுவாக இயற்கையான வெளிச்சத்தில் operture பெரிதாகப் பண்ணி (அதிக ஒளி
ஊடுபாய்தல்) எடுப்பதே சிறந்தது. அதாவது பிளாஸ் இல்லாமல் எடுப்பது.
பிரச்சனை என்னவெனில் film ன் ISO கூடும். ஸ்டாண்ட் வேண்டியிருக்கும்.
பிளாஸ் அடிக்கும் போது செயற்கை ஒளி பாய்வதால் படத்தின் தரம் உடனே
மாறிவிடும். ஆனால் எளிது ;-) பிளாஸ் சில நேரங்களில் தேவை. உதாரணமாக
வெளிச்சம் பின்னாலிருந்து வருகிறது எனில் முகம் கருப்படித்துவிடும்.
அப்போது, ஒளி தேவை. பெரும்பாலும் பிளாஸ் வேண்டுமா, வேண்டாமா? எனத்
தீர்மானிக்கும் பொத்தான் தெளிவாக இருக்குமே? என்ன கேமிரா?

அந்தக் குட்டி விளக்கு மின்சார விளக்கென்று தெரிந்தது. அதனால்தான் கேட்டேன்.

இவ்வளவு பெரிய பூஜைக்குப் பிறகு உங்களுக்கு ஓய்வு கிடைத்து எடுத்ததே
பெரிது. அதை நான் மிகவும் மதிக்கிறேன். எதோ ’ஔவை சண்முகி’ படத்தில்
வருகிற மாதிரி மாமிகள் கூட்டம் இருக்குமென்று எதிர்பார்த்தேன் :-))

க.>

Dhivakar

unread,
Aug 26, 2010, 12:51:55 AM8/26/10
to mint...@googlegroups.com
ஸ்வர்ணா,


>>”உன் ஆடலைக்காண தில்லை அம்பலத்திறைவனும், தன் ஆடலை விட்டு இங்கு கோகுலம் வந்தான்” என்பாரே ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், ஆடாது அசங்காது வா என்ற மத்யமாவதி கிருதியில்... எல்லாம் அவன் நர்த்தனமே!!)<<

திருமதி சீதாலக்‌ஷ்மி, இசைப் பேரறிஞர். தற்சமயம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி இசைப் பேராசிரியை. என்னுடைய கேள்வி அவரிடம் கேட்டது மேற்கண்ட பாடலினைப் பற்றிதான்.

சிதம்பரத்தில் ஆடும் ஈசனின் தத்துவமே ‘அவன் ஆட ஆட உலகமே இயங்குகிறது’ எப்போது ஆடலை நிறுத்திவிட்டானோ அப்போது உலகம் ஒடுங்கிவிடும்... (மேலும் வேண்டுமானால் ஆனந்த குமாரசுவாமியின் நடராஜதத்துவத்தில் படிக்கலாம்). அப்படி இருக்கும்போது, ஊத்துக்காட்டார், அனைத்தும் அறிந்த ஞானி எப்படியம்மா இப்படி எழுதினார்..

திருமதி சீதாலக்‌ஷ்மி :- ஆமாம்.. எப்படி எழுதினார்.. சரி சரி.. பாடலின் கதாநாயகன் கண்ணன்.. அவனுக்காக சற்று கற்பனையைக் கொஞ்சம் தூவி விட்டிருப்பாரோ என்னவோ..

just for the sake of minute thinkings..

Dhivakar

2010/8/25 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Swarna Lakshmi

unread,
Aug 26, 2010, 1:02:34 AM8/26/10
to mint...@googlegroups.com
அது தானே!! :))
 
>>இவன் அறிதுயில் கொண்டபோதே அவன் அஜபா நடனம் கொண்டான் - அவன் ஆத்மானுபவம் கொண்ட போது இவன் காளிங்க நர்த்தனம் செய்தான்
 
அதாவது, இவர் ஆட அவர் rest எடுத்துக்கறார், அவர் ஆட இவர் relax  பண்ணிக்கறார். சிவனாக இருக்கும் பிரம்மம் ஆடினால் என்ன விஷ்ணுவாக இருக்கும் ப்ரம்மம் ஆடினால் என்ன - மொத்தத்தில் ஆட்டம் இருக்கிறது, பரபிரம்மம் ஆடுகிறது - பிரபஞ்சமும் தன் ஆட்டத்தைத் தொடர்கிறது...
அதனால் தான் ஹரியும் ஹரனும் ஒண்ணு என்கிறேன்.. அத்வைதம். :)))
 
ஸ்வர்ணா

From: Dhivakar <venkdh...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thu, 26 August, 2010 10:21:55 AM

Dhivakar

unread,
Aug 26, 2010, 1:09:58 AM8/26/10
to mint...@googlegroups.com
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையம்மா..
நீங்கள் அந்தக் குறிப்பிட்ட வரியை எழுதியவுடன் என் கேள்வி நினைவுக்கு வந்தது. பகிர்ந்துகொண்டேன். அவ்வளவே..

தி

2010/8/26 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Geetha Sambasivam

unread,
Aug 26, 2010, 1:10:18 AM8/26/10
to mint...@googlegroups.com
சுருக்கமான விளக்கம் நல்லா இருக்கு ஸ்வர்ணா, நான் எழுதணும்னு எழுதணும்னு யோசிச்சு, யோசிச்சு, முடிவு எடுக்கத் தயங்கிய ஒரு விஷயம் இது. ரொம்ப நன்றிம்மா. உண்மைதான் சக்தியை எந்த இடத்திலும் குறைச்செல்லாம் சொல்லவில்லை. பலருக்கும் சரியாகப் புரிஞ்சுக்கத் தெரியலை. வர்ணாசிரமம் என்பதையே தவறான பார்வையில் பார்க்கத் தொடங்கி முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் பெரும்பாலோருக்கு  இதில் தெளிவு வரவில்லை.

2010/8/25 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
320.gif

Dhivakar

unread,
Aug 26, 2010, 1:16:13 AM8/26/10
to mint...@googlegroups.com
>>நான் எழுதணும்னு எழுதணும்னு யோசிச்சு, யோசிச்சு, முடிவு எடுக்கத் தயங்கிய ஒரு விஷயம் இது. <<

தயக்கம் தவிர்க்கவும். தெளிவு உள்ளபோது எல்லோரும் அறியவேண்டிய விஷயம் எனும்போது, அவசியம் எழுதியே ஆகவேண்டும்..

ஊ உ
திவாகர்

2010/8/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

320.gif

Tthamizth Tthenee

unread,
Aug 26, 2010, 1:34:50 AM8/26/10
to mint...@googlegroups.com
உன் ஆடலைக்காண தில்லை அம்பலத்திறைவனும், தன் ஆடலை விட்டு இங்கு கோகுலம் வந்தான்”

 

தான் ஆடுவதைக் காண  தானே வந்தான் போலிருக்கிறது
 
தானாடாவிட்டாலும்   தசையாடும் என்பார்கள்
 
அது போல்     கிருஷ்ணன்  ஆடும்போது   சிவன் தன் ஆடலை விட்டு கோகுலம் வந்தான்
 
 தொடர் ஓட்டம் என்பார்களே  அது போல    கிருஷ்ணன்  ஆடத்  தொடங்கியவுடன்  சிவன் தன் ஆட்டத்தை சற்றே  நிறுத்தி
 கிருஷ்ணனின் ஆட்டத்தை  ரசித்துவிட்டு  மீண்டும்  தன் ஆட்டத்தை  தொடர்கிறார்
 
ஹூம்  அவங்களுக்கு தெரியுது   அவங்க ரெண்டு பேர்லே  யாரு ஆடினாலும் ஒரே   விளைவுதான்னு
 
 
ரெண்டு பேரு ஆடும் போதும்     சக்திதான் ஆடுது
 
அதுனாலே   எப்பவுமே  ஆடாட்டாலும்  ஆடினாலும்   சக்தி ஆட்டம் நிறுத்தப்படுவதே இல்லை
320.gif

devoo

unread,
Aug 26, 2010, 2:36:32 AM8/26/10
to மின்தமிழ்
>>சிதம்பரத்தில் ஆடும் ஈசனின் தத்துவமே ‘அவன் ஆட ஆட உலகமே இயங்குகிறது’ எப்போது ஆடலை நிறுத்திவிட்டானோ அப்போது உலகம் ஒடுங்கிவிடும்... (மேலும் வேண்டுமானால் ஆனந்த குமார சுவாமியின் நடராஜதத்துவத்தில் படிக்கலாம்). அப்படி இருக்கும்போது, ஊத்துக்காட்டார், அனைத்தும் அறிந்த ஞானி எப்படியம்மா இப்படி எழுதினார்<<

'நந்த துவாரே ஏக் ஜோகீ ஆயோ, சிங்கீ நாத பஜாயோ...’

கவி ஸூர்தாஸ் காசியிலிருந்து சிவபெருமான் கோகுலத்திற்குக் கண்ண னைக் காண
வருவதாகப் பாடியுள்ளார்; யசோதை அவரது தோற்றம் கண்டு அஞ்சுவதையும்,
கண்ணனைக் காண்பிக்க மறுப்பதையும் சுவைபட வர்ணித் திருப்பார். இவரும் அதை
அடியொற்றி தில்லை இறைவன் கோகுலம் வந்த தாகப் பாடியிருக்கலாம்.

ஸூர்தாஸின் ‘நிஸ் திந் பரஸத் நைந் ஹமாரே..’ எம் எஸ் அம்மா பாடியிருப்பது
அருமையாக இருக்கும்

தேவ்


On Aug 26, 12:02 am, Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com> wrote:
> அது தானே!! :))
>
> >>இவன் அறிதுயில் கொண்டபோதே அவன் அஜபா நடனம் கொண்டான் - அவன் ஆத்மானுபவம் கொண்ட
> >>போது இவன் காளிங்க நர்த்தனம் செய்தான்
>
> அதாவது, இவர் ஆட அவர் rest எடுத்துக்கறார், அவர் ஆட இவர் relax  பண்ணிக்கறார்.
> சிவனாக இருக்கும் பிரம்மம் ஆடினால் என்ன விஷ்ணுவாக இருக்கும் ப்ரம்மம் ஆடினால் என்ன
> - மொத்தத்தில் ஆட்டம் இருக்கிறது, பரபிரம்மம் ஆடுகிறது - பிரபஞ்சமும் தன்
> ஆட்டத்தைத் தொடர்கிறது...
>
> அதனால் தான் ஹரியும் ஹரனும் ஒண்ணு என்கிறேன்.. அத்வைதம். :)))
>
> ஸ்வர்ணா
>
> ________________________________

> From: Dhivakar <venkdhiva...@gmail.com>


> To: mint...@googlegroups.com
> Sent: Thu, 26 August, 2010 10:21:55 AM
> Subject: Re: [MinTamil] Re: ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்
>
> ஸ்வர்ணா,
>
> >>”உன் ஆடலைக்காண தில்லை அம்பலத்திறைவனும், தன் ஆடலை விட்டு இங்கு கோகுலம் வந்தான்”
> >>என்பாரே ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், ஆடாது அசங்காது வா என்ற மத்யமாவதி
> >>கிருதியில்... எல்லாம் அவன் நர்த்தனமே!!)<<
>
> திருமதி சீதாலக்‌ஷ்மி, இசைப் பேரறிஞர். தற்சமயம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி
> இசைப் பேராசிரியை. என்னுடைய கேள்வி அவரிடம் கேட்டது மேற்கண்ட பாடலினைப் பற்றிதான்.
>
> சிதம்பரத்தில் ஆடும் ஈசனின் தத்துவமே ‘அவன் ஆட ஆட உலகமே இயங்குகிறது’ எப்போது ஆடலை
> நிறுத்திவிட்டானோ அப்போது உலகம் ஒடுங்கிவிடும்... (மேலும் வேண்டுமானால் ஆனந்த
> குமாரசுவாமியின் நடராஜதத்துவத்தில் படிக்கலாம்). அப்படி இருக்கும்போது,
> ஊத்துக்காட்டார், அனைத்தும் அறிந்த ஞானி எப்படியம்மா இப்படி எழுதினார்..
>
> திருமதி சீதாலக்‌ஷ்மி :- ஆமாம்.. எப்படி எழுதினார்.. சரி சரி.. பாடலின் கதாநாயகன்
> கண்ணன்.. அவனுக்காக சற்று கற்பனையைக் கொஞ்சம் தூவி விட்டிருப்பாரோ என்னவோ..
>
> just for the sake of minute thinkings..
>
> Dhivakar
>

> 2010/8/25 Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com>

> ...
>
> read more »

Swarna Lakshmi

unread,
Aug 26, 2010, 10:54:40 AM8/26/10
to mint...@googlegroups.com
என்ன கீதா நன்றியெல்லாம்.
 
இதைப்பற்றி பேச பல பேர் தயங்குகிறார்கள் தான். ஆனால், நம் மரபு சார்ந்த கலை, அறிவியல், கணிதம், வாழ்க்கைமுறை, மற்ற பெருமைகள் எல்லாம் நம் தர்ம சாஸ்திரம் என்கிற ஆழ்கடலில் விளைந்த முத்துக்கள் அல்லவா!! அவையெல்லாம் இல்லாவிட்டாலும் தர்மத்தை அறிய வேண்டும் அல்லவா!! பின்பற்ற முடிகிறதோ இல்லையோ இப்படியெல்லாம் இருக்கிறது என்றாவது தெரிய வேண்டும் அல்லவா!! நாம் மட்டுமல்லாமல் வரும் சந்ததியினருக்கும் அறிய ஒரு வாய்ப்பை அமைத்துத் தர வேண்டும்...
 
நம் மரபின் ஜீவ நாடி தர்மங்களே!! அதைப்பற்றி பேச நாம் தயங்கும் நிலையே வருந்துதற்குரியது. தூற்றுவார் தூற்றட்டும்னு நாம் தைரியமாக இதைப்பற்றி பேசவேண்டும். இது சான்றோர்கள், மரபை மதிப்பவர்கள் நிறைந்த சபை - பொறுமையாக எதையும் ஆழ நோக்கும் சபை - இங்கே பேச முடியவில்லை எனில் வேறெங்கே பேச முடியும். இதை ஒரு தனி இழையாக நாம் பேச வேண்டும் - மேற்கோள்கள் காட்டி விவாதிக்க வேண்டும் - இதுவே நம் கலாசாரத்தின் முதுகெலும்பு. மனு சாஸ்திரமும், வேதாகமங்கங்களும், மற்ற தர்ம நூல்களும் என்ன சொல்கின்றன என்று ஆராய வேண்டும்.
 
மதம், ஜாதி போன்ற வேறுபாடுகள் புற்று போல அற்புதமான விஷயங்களை பாதித்து விட்டன. இல்லை, பிரச்சனை வரலாம், வேண்டாம் - இதைப்பற்றி பேச இது சரியான இடம் இல்லை என்று எல்லோரும் எண்ணினால், விட்டு விடலாம்.
 
நன்றி
ஸ்வர்ணா

 

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thu, 26 August, 2010 10:40:18 AM

N. Kannan

unread,
Aug 26, 2010, 11:34:05 PM8/26/10
to mint...@googlegroups.com
2010/8/26 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

> நம் மரபின் ஜீவ நாடி தர்மங்களே!! அதைப்பற்றி பேச நாம் தயங்கும் நிலையே வருந்துதற்குரியது. தூற்றுவார் தூற்றட்டும்னு நாம் தைரியமாக இதைப்பற்றி பேசவேண்டும். இது சான்றோர்கள், மரபை மதிப்பவர்கள் நிறைந்த சபை - பொறுமையாக எதையும் ஆழ நோக்கும் சபை - இங்கே பேச முடியவில்லை எனில் வேறெங்கே பேச முடியும். இதை ஒரு தனி இழையாக நாம் பேச வேண்டும் - மேற்கோள்கள் காட்டி விவாதிக்க வேண்டும் - இதுவே நம் கலாசாரத்தின் முதுகெலும்பு. மனு சாஸ்திரமும், வேதாகமங்கங்களும், மற்ற தர்ம நூல்களும் என்ன சொல்கின்றன என்று ஆராய வேண்டும்.
>

வழி மொழிகிறேன்!
அதைத்தான் மின்தமிழ் வெவ்வேறு வடிவில் செய்து கொண்டு இருக்கிறது.
வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்க!

க.>

kalairajan krishnan

unread,
Aug 27, 2010, 3:58:12 AM8/27/10
to mint...@googlegroups.com
On 8/26/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
2010/8/26 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

> நம் மரபின் ஜீவ நாடி தர்மங்களே!! அதைப்பற்றி பேச நாம் தயங்கும் நிலையே வருந்துதற்குரியது. தூற்றுவார் தூற்றட்டும்னு நாம் தைரியமாக இதைப்பற்றி பேசவேண்டும். இது சான்றோர்கள், மரபை மதிப்பவர்கள் நிறைந்த சபை - பொறுமையாக எதையும் ஆழ நோக்கும் சபை - இங்கே பேச முடியவில்லை எனில் வேறெங்கே பேச முடியும். இதை ஒரு தனி இழையாக நாம் பேச வேண்டும் - மேற்கோள்கள் காட்டி விவாதிக்க வேண்டும் - இதுவே நம் கலாசாரத்தின் முதுகெலும்பு. மனு சாஸ்திரமும், வேதாகமங்கங்களும், மற்ற தர்ம நூல்களும் என்ன சொல்கின்றன
 
இதுவே சங்கம். நீவீரே சங்கத் தமிழர்,  வாழிய பல்லாண்டு.
 
அன்பன்
கி. காளைராசன்,

--
அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

Tthamizth Tthenee

unread,
Aug 27, 2010, 7:20:55 AM8/27/10
to mint...@googlegroups.com
உண்மை !!!!!
 
 
நேர்மையான  மனோதைரியம் இருப்பவர்களால் மட்டுமே முடியும்
 
தொடருவோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
 
 
 


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Reply all
Reply to author
Forward
0 new messages