ஆயிரம் சேர்கள் - காணிக்கை - அதிசியக்க வைத்த சேட்டு முனியப்பன் சாமி

9 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Jan 19, 2022, 9:11:59 AM1/19/22
to

Thanks & Regards,

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
WHATSAP  : 08056240653


ஆயிரம் சேர்கள் - காணிக்கை - அதிசியக்க வைத்த சேட்டு முனியப்பன் சாமி

ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி  - இதமான அருவி குளியல்

 மூன்று மலைகளும் நான்கு நாட்களும்

  இரண்டாவது  மலை - வெள்ளி மலை -அடர்ந்த காடுகளின் வழியே இயற்கையை ரசித்த பயணம் 

 மூன்று நீர்விழ்ச்சிகளில் உற்சாக குளியல் 

 

கொல்லிமலை டூ ஆத்தூர்

                                             இரண்டாம் நாள் அதிகாலையில் கொல்லிமலையில் இருந்து கிளம்பி மீண்டும்  நாங்கள் சென்ற வழியிலேயே மீண்டும் திரும்பி தம்மம்பட்டி வந்தடைந்தோம் . தம்மம்பட்டியில் காலை உணவை முடித்து கொண்டு அங்கிருந்து நேராக ஆத்தூர் சென்றோம். ஆத்தூரில் நண்பர்கள் ஸ்ரீபத் மற்றும் கிரி ஆகியோரை சந்தித்து, அவர்கள் இருவரும் டூவீலரில் எங்களுடன் வந்தார்கள். நாங்கள் காரில் சென்றோம். அவர்கள் எங்களுக்கு  முன்பாக வழி காண்பித்துக் கொண்டே டூவீலரில் சென்றார்கள்.

நண்பர்கள் ஸ்ரீபத் ,கிரி உதவியுடன் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியை அடைதல் :

                    நண்பர்களின் உதவியுடன் ஆத்தூரில் இருந்து பல கிராமங்களை கடந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனைவாரி முட்டல் என்கிற வனக்காடுகள் அடங்கிய பகுதிக்கு சென்றோம். ஆனைவாரி முட்டல் என்பது மிகவும் பரந்த, அடர்ந்த வனப்பகுதி ஆகும். அங்கே சுமார் 10 கிலோ மீட்டருக்கும் மேலாக பயணம் செய்து அருவியில் குளித்தோம். அருவி  குளியல் என்றால் மிகவும் அருமையான தண்ணீர். நல்ல குளிர்ந்த நீர். வேகமாக வந்து விழும் நீர். ஆனால் நன்றாக பாதுகாப்பாக கம்பிகளை அமைத்து பெருவாரியான மக்கள் ஒரே நேரத்தில் குளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள். 

 ஆனைவாரி முட்டலில் படகு பயணம் :

                                  ஆனைவாரி முட்டல் பகுதியில் நீண்ட நேரம் அங்கே நாங்கள் குளித்து விட்டு, அங்கிருந்து மீண்டும் சென்ற வழியாகவே திரும்பி சிறுவர்கள் விளையாடுவதற்கும், நாம் அனைவரும் சாப்பிடுவதற்கும், படகு பயணம் செய்வதற்கும் நல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர். மிகப் பெரிய ஏரியை காட்டுப்பகுதிக்குள் உருவாக்கியிருந்தார்கள். அங்கிருந்த அலுவலர்களிடம் பேசியபோது , சுமார் 25 கிலோமீட்டர் அடங்கிய இந்த வனப் பகுதியில் எந்தவிதமான மக்களும் வசிக்கவில்லை என்று தெரிவித்தார். முழுவதுமே காடுதான் என்று தெரிவித்தார். எனவே அங்கு அருவியில்  வரக்கூடிய தண்ணீர் மிக நல்ல நீர் என்றும் தெரிவித்தார்.

சிறுவர்களும்,பெரியவர்களும் விளையாட நல்ல இடம் :

                                              படகுக் குழாமும் முழுவதும் பெருவாரியான ஆட்கள் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனைவாரி முட்டல் வனசரகத்தில் தங்குவதற்கும் முன்பு ஏற்பாடுகள் செய்து இருந்ததாக தெரிவித்தார்கள். ஆனால் நம் மக்கள் பலர் அங்கு சென்று தேவையில்லாத சில செயல்களைச் செய்ததால் தற்போது தங்கும் விடுதிகள் மூடப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். தங்கும் விடுதிகள் வனத்துறையினரின் சார்பாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள். சுமார் 20 நிமிடங்கள் படகு  பயணம் சென்று விட்டு , நாம் மீண்டும் திரும்பி வந்தோம். 

 ஒரு நாள் டூர் செல்ல ஏதுவான இடம் :

                                                ஆனைவாரி முட்டலுக்கு   நல்ல சாப்பாடு எடுத்துச் செல்லலாம். அங்கே பெருவாரியான மரங்கள் அமைந்துள்ளன. மரங்களின் நிழல்கள் மிக அருமையாக உள்ளன .அவற்றின் அருகே நாம் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏதுவாக பல சிமெண்ட் பலகைகளையும் அமைத்து உள்ளார்கள். சிறுவர்களும், பெரியவர்களும் விளையாடுவதற்கு ஏராளமான விளையாட்டு பகுதிகளையும் அமைத்து விளையாட்டுப் பொருட்களையும் வைத்துள்ளார்கள். எனவே ஒரு நாள் முழுவதும் நாம் அங்கே தங்கி நம்மை உற்சாகப் படுத்திக்கொள்ள முடியும் என்பதே உண்மை .காலையில் சென்றோமானால் குளித்துவிட்டு, படகுப் பயணம் சென்று விட்டு, சாப்பிட்டுவிட்டு மீண்டும் நன்றாக விளையாடிவிட்டு மாலை அங்கிருந்து நாம் கிளம்பலாம். ஆனால் நாங்களோ மூன்று மலைகளும் நான்கு நாட்களும் என்று சென்றதால் மதியம் அங்கிருந்து கிளம்பி நேராக வட சென்னிமலை முருகன் கோயிலை அடைந்தோம். 

 வட சென்னிமலை முருகன் கோயிலை அடைதல் :

                    ஆத்தூரிலிருந்து தலைவாசல் செல்லும் வழியில் வட சென்னிமலை கோயில் உள்ளது. வட சென்னிமலை கோயிலுக்கு சென்று அங்கே சாமி தரிசனம் செய்யலாம் என்று எண்ணினோம். ஆனால் மதிய நேரம் சென்றதால் சாமி தரிசனம் பிறகு செய்யலாம் என்று வாசலை பார்த்து விட்டு மீண்டும் அங்கிருந்து கிளம்பி தலைவாசல் பயணமானோம். 

 தலைவாசலில் மதிய உணவு :

                 தலைவாசலில் டோல்கேட் அருகே ஹோட்டலில் மதியம் நல்ல உணவை முடித்து விட்டு அங்கிருந்து நேராக சின்னசேலம் பைபாஸ்  சென்றோம். சின்னசேலம் பார்டரில் எங்களை அயன் சரவணன் அவர்கள் வரவேற்றார்கள். அவர்களிடம் நீண்ட நாட்களாக தொலைபேசியில் மட்டுமே பேசி வருகின்றேன். அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்தபோதிலும் எங்களது வருகையை அறிந்து மதிய வேளையில் சின்னசேலத்தில் இருந்து கிளம்பி சில கிலோமீட்டர்கள் கடந்து எங்களை சந்தித்து மகிழ்ச்சியுடன் எங்களுக்கு வாழ்த்து சொல்லி சென்றார்கள் .

 கோமுகி அணைக்கு செல்லுதல் :

                       சின்னசேலத்திலிருந்து  நாங்கள் கச்சராபாளையம் வழியாக கோமுகி அணையை  அடைந்தோம். கச்சராபாளையம் தான் நான் ஆறாம் வகுப்பு வரை படித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கநேந்தல் வழியாக கோமுகி  அணையை சென்றடைந்தோம். கோமுகி அணை மிக அருமையாக கற்களால் கட்டப்பட்டு இருந்தது. கோமுகி அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக கிடந்தது. அந்த தண்ணீர் உள்ள பகுதியை நன்றாக பார்வையிட்டோம். சில மணி நேரங்கள் அங்கே எங்களது நேரத்தை செலவு செய்தோம்.குரங்குகள்  அதிகமாக தொந்தரவு செய்தது. எனவே குரங்குகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

 காடுகளின் நடுவே இயற்கையை ரசித்தவாறே வெள்ளிமலை நோக்கி பயணம் :

                     கோமுகி அணையிலிருந்து நாங்கள் மீண்டும் அடர்ந்த காட்டுப் பகுதியின் வழியாக வெள்ளி மலையை நோக்கிச் சென்றோம். வெள்ளிமலை செல்லும் வழியில் மற்றொரு அருவி  இருப்பதாக தெரிவித்தார்கள். பெரியாறு அருவி அதன் வழியில் இருந்தது. 

 பெரியார் நீர்வீழ்ச்சி :

                          பெரியார் அருவியில் குளிப்பது மிகவும் சுகமானது. ரூபாய் 10 டிக்கெட் வனத்துறையால் வசூலிக்கப்படுகிறது . மிக அருமையான ஒரு குளியல். நல்ல பாதுகாப்பான இடமும், நல்ல குளிர்ந்த நீர். கூட்டம் அதிகமில்லை. சாலையின் மையத்திலேயே அருவி அமைந்துள்ளது. எனவே பெரியார் நீர்வீழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது .

 வெள்ளிமலை பூங்காவை அடைதல் :

              பெரியார் நீர்வீழ்ச்சியிலிருந்து நாங்கள் வெள்ளி மலை நோக்கிச் சென்றோம்.அடர்த்த காடுகளின் நடுவே எங்களின் பயணம் அமைந்தது. வெள்ளி மலையில் படகு குழாம் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான மிக அருமையான பகுதி என்று நல்ல பகுதிகள் அங்கே அமைந்திருந்தது . அதனில் சில மணி நேரங்கள் எங்களது நேரத்தை நன்றாக செலவழித்து எங்களை உற்சாகப் படுத்திக் கொண்டு அங்கிருந்து நாங்கள் மீண்டும் கருமந்துறை நோக்கி பயணித்தோம்.

 மேகம் நீர்வீழ்ச்சி :

                        வெள்ளிமலை நோக்கி செல்லும்போது மேகம் நீர்வீழ்ச்சியை பார்த்தோம்.அது மிக நீண்ட தூரம் நடந்து சென்று குளிக்க வேண்டி இருக்கும் என்பதால் வெள்ளிமலை நோக்கி பயணித்தோம். முதலில் வெள்ளி மலையில் சென்று நண்பர்கள் ஸ்ரீபத் மற்றும் கிரி ஆகியோருடன் தேனீர் அருந்தி விட்டு அங்கிருந்து கிளம்பலாம் என்று எண்ணினோம். 

 மாலையில் சூடான பரோட்டா :

                     வெள்ளிமலை மிகவும் சிறிய ஊர். அங்கே மாலையில் புரோட்டா மிகவும் சூடாக வழங்கப்படுகிறது. தேனீரும் மிக நன்றாக இருந்தது. அங்கிருந்து நண்பர்கள் வலதுபக்கம் திரும்பி அவர்களது ஊரான தியாக துருவத்தை நோக்கி பயணித்தார்கள். நாங்கள் இடது பக்கம்  கருமந்துறை நோக்கி பயணித்தோம். கருமந்துறையில் நண்பர்கள் கண்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உதவியுடன் ரூம்  முன்பே பேசி வைத்திருந்தோம். 

கருமந்துறை செல்லும் வழியில் ஓடை குளியல் :

                      கருமந்துறை செல்லும் வழியில் சேட்டு முனியப்பன் கோயில் உள்ளது. சேட்டு  முனியப்பன் கோயிலுக்கு எதிர்திசையில் மிக அருமையான அருவி  போன்று, ஆனால் மிக அருமையான ஓடை பெரிய அளவில் ஓடுகிறது. அங்கே ஒரு குளியல் குளித்து விட்டு, சேட்டு முனியப்பன் தரிசித்துவிட்டு ,நாங்கள் கிளம்ப தயாரானோம்.

  வியக்க வைத்த சேட்டு முனியப்பன் சாமி :

                  சேட்டு முனியப்பன் சாமியை  மிகப்பெரிய ஒரு உருவத்தை வைத்து இருக்கின்றார்கள். மேலும் அங்கே ஆயிரக்கணக்கான சேர்கள் உள்ளன. பல கடவுளுக்கு பல மாதிரியான நேர்த்திக்கடன் அளிப்பார்கள் . ஆனால் இங்கே உள்ள சேட்டு  முனியப்பனுக்கு ஆயிரக்கணக்கான சேர்களை  காணிக்கையாக படைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து இரவு நேரத்தில் நாங்கள் கருமந்துறை சென்று அடைந்தோம். 

 கருமந்துறையில் தங்கல் : - புதிய அனுபவம் 

             கருமந்துறையில் தங்கும் அறை மிகவும் சுமார்தான் என்றாலும் எங்களுக்கான அந்தத் தேடலில் அது ஒரு பெரிய நிகழ்வாக தெரியவில்லை. கருமந்துறையில் இரவு உணவை அருந்தி விட்டு, அங்கேயே தங்கியும் மீண்டும் நாங்கள் அடுத்த நாள் எந்த மலையை நோக்கிச் சென்றோம் என்பதை மிக விரைவில் காணலாம். 

 நாள் முழுவதும் டூ வீலர் பயணம் :

                                     வெள்ளிமலை  பயணத்தில் எங்களுடன் தொடர்ந்து நண்பர் ஸ்ரீபத் மற்றும் கிரி ஆகியோர்  டூவீலரில் எங்களுடன்  நாள் முழுவதும் பயணம் செய்தார்கள். எங்களுக்கு அனைத்து வழிகளையும் காண்பித்து, அனைத்து இடங்களையும் எங்களுக்கு தெளிவாக விளக்கினார்கள். அவர்களது உதவி எங்களால் மறக்க முடியாதது . 

 நண்பர்களுக்கு நன்றிகள் பல :

                                                    நண்பர்கள்  கண்ணன் , தும்பல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும்  மிகப்பெரிய அளவில் எங்களுக்கு உதவி செய்தார்கள். வெள்ளிமலை, கருமந்துறை போன்ற பகுதிகளை பலரும் அறிந்திராத நேரத்தில் எங்களால் இந்தப் பகுதிகளுக்கு செல்வதற்கு இவர்களது உதவி நல்ல முறையில் இருந்தது என்பதை நான் இங்கே நினைத்துப் பார்க்கின்றேன். நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

 

இனிதே இரண்டாவது நாள் பயணத்தை நிறைவு செய்து, மறுநாள் காலை அடுத்த மலையை நோக்கி சென்றோம்.வெகு விரைவில் ...........

 

 

அன்புடன் 

லெ .சொக்கலிங்கம்,

காரைக்குடி.

 

முதல் மலை பயண அனுபவம் தொடர்பான தகவலை படிக்க இதனுடன் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 

 https://kalviyeselvam.blogspot.com/2021/10/3.html#more

 

 

 

 

 

 



IMG_6274.JPG
IMG_6314.JPG
IMG_6324.JPG
IMG_6293.JPG
IMG_6325.JPG
IMG_6257.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages