1. மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 1356 -1360 : இலக்குவனார் திருவள்ளுவன்

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 2, 2026, 6:17:58 PM (2 days ago) May 2
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

ஃஃஃ      அகரமுதல     இலக்குவனார் திருவள்ளுவன்      03 May 2026      t


(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : தொடர்ச்சி)

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13

இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1

இந்தி எதிர்ப்புப்போராட்டங்களை அறியும் நாம் அது வந்த வழியான அரசியல் யாப்பு நிலைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அரசமைப்பு அவைக்கான முதல் கோரிக்கை தன்னாட்சிக்கட்சியால் (Swaraj Party) 03.05.1934 அன்று எழுப்பப்பட்டது. இது வெள்ளைத்தாள் முன்மொழிவுகளை மறுத்தது. இஃது இந்திய அரசு சட்டம் 1935 இல் இணைக்கப்பட்டது.

அரசு செயலர் பிரடெரிக்கு பெத்திக்கு இலாரன்சு(Frederick Pethick Lawrence),    வயவர் இசுதான்போர்டு கிரிப்புசு(Sir Stanfford Cripps),   ஏ.வி. அலெக்குசாண்டர்(A.V. Alexander) ஆகிய இரண்டு அமைச்சர்கள், அடங்கிய அமைச்சுத்தூதுக் குழு வகுத்தளித்த திட்டம்; அமைச்சுத்  தூதுத்திட்டம், 1946 என்று அழைக்கப்படும் இதுவே இந்திய அரசியல் யாப்பு அவையை உருவாக்கியது. இவ்வவை, இந்திய விடுதலைச் சட்டம் 1947, பிரிவு 8இன் கீழ் ஏற்கப்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ், 1946ஆம் ஆண்டு மாகாணச்சட்ட அவைகளின் உறுப்பினர்கள், மாற்றத்தக்க ஒற்றை வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூடுதலாகத், தன்னரசு இளவரசர்களை அரசியல் யாப்பவையில் சேர்க்கப் பேச்சும் நடந்தது. யாப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் பெரும்பான்மையர் ஆண் இந்துக்கள். என்ற போதும்,  எல்லா முதன்மை மதக் குழுக்களிலிருந்தும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் குறைந்தது இருவர் வீதம் 15 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

80% அவை உறுப்பினர்கள் பேராயக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் கட்சிக்குள்ளேயே வேற்றுமை இருந்தது. இதன் காரணமாக யாப்பு அவையில் சமவுடைமை, தாராளமயம், பழமைவாதம் கருத்துகளின் சார்பு இருந்தது. நாடாளுமன்ற மைய அவையாக இப்போது அழைக்கப்படுகின்ற அரசியல் யாப்பு அவையில் முதன்முறையாக 09.12.1946 அன்று அரசியல்யாப்புக் குழு கூடியது. பதிவேட்டில் கையொப்பமிட்டுச்,  சான்றாவணம் அளித்த 207 உறுப்பினர்கள் வருகைபுரிந்திருந்தனர்.

திசம்பர் 1947 இல் யாப்பு அவையில் 299 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களுள் 229பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், 12 பேர் மாகாண அரசர்கள்/இளவரசர்கள், 70 பேர் தன்னாட்சி அரசுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்டவர்கள். இம்மன்றத்தில் மொழிகள் குறித்த காரசார விவாதம் நடைபெற்றது.

இந்திய அரசியல் யாப்பு 26.01.1950 இல் நடைமுறைக்கு வந்தது.

இஃது ஏற்றுக் கொள்ளப்பட்ட நேரத்தில், யாப்பு 22 பகுதிகளையும் 396 கூறுகளையும் 8 அட்டவணைகளையும்  145,000 சொற்களையும் கொண்டிருந்தது. உலகிலேயே இது மிக நீண்ட யாப்பாகும்.

யாப்பிலுள்ள ஒவ்வொரு கூறும் யாப்பு அவை உறுப்பினர்களால் 11 அமர்வுகளில் 167 நாள்களில் 2 ஆண்டுகள் 11 திங்களில் விவாதிக்கப்பட்டதாகும்.

அரசியலமைப்பை எழுத வேண்டிய மொழி, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குரிய மொழி, புதிய குடியரசுக்கான ‘தேசியமொழி’ போன்ற செய்திகள் மிகவும் அனல்பறக்க விவாதிக்கப்பட்டன.

இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு இராய் (சாத்திரி), ஆர்.வி. துலேகர், பாலகிருட்டிண (சருமா), புருசோத்தம் தாசு தாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத்து குகா (பீகார்), அரி வினாயக்கு படசுகர் (மும்பை), சேத்து கோவிந்து தாசு (மத்திய மாகாணம்) ஆகியோர் ஒரு பக்கம் பல இந்தி ஆதரவு சட்ட வரைவுகளைக் கொண்டுவந்து இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர்.

 10.12.1946 அன்று துலேகர் “இந்துத்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துத்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்” என்று முழங்கினார்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

++

வெருளி நோய்கள் 1356 -1360 : இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ    அகரமுதல      இலக்குவனார் திருவள்ளுவன்      03 May 2026      



(வெருளி நோய்கள் 1351 -1355 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1356 -1360

  1. தேநீர் வெருளி – Sagiouphobia

தேநீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேநீர் வெருளி.
தேநீர் அருந்துவதால் செரிமானப் பாதிப்பு ஏற்படும், பித்தம் மிகுந்து நலக்கேடு வரும், உண்பதற்கு ஒரு மணி நேர இடைவெளியின்றி முன்போ பின்போ தேநீர் அருந்துவது உடலுக்குக் கேடு என்பன போன்ற காரணங்களால் தேநீர் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
sagiou என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தேநீர் எனப் பொருள்.
காண்க: தேநீர் ஆக்க வெருளி(fronsophobia
00

  1. தேநீர்க் குவளை வெருளி – Flitzanisagiouphobia

தேநீர்க் குவளை குறித்த வரம்பற்ற பேரச்சம் தேநீர்க் குவளை வெருளி.
இந்தியாவில் தீண்டாமையின் குறியீடாகத் தேநீர்க்குவளை உள்ளது. எனவே, ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தேநீர்க் குவளை வெருளி ஏற்படுகிறது.
குவளை வெருளி(cuppaphobia) உள்ளவர்களுக்குத் தேநீர்க் குவளை வெருளி வரும வாய்ப்பு உள்ளது.
Flitzani என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குவளை பொருள்.
sagiou என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தேநீர் எனப் பொருள்.
00

  1. தேநீர்ப் பை வெருளி – D🚲bgophobia

தேநீர்ப் பை குறித்த வரம்பற்ற பேரச்சம் தேநீர்ப் பை வெருளி.
காண்க: தேநீர் ஆக்க வெருளி(fronsophobia), தேநீர் வெருளி(Sagiouphobia)
00

  1. தேரை வெருளி-Bufonophobia

தேரைஅல்லது தேரையினம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் தேரை வெருளி
தேரை(10) என்னும் உயிரினமும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
bufo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தேரை.
00

  1. தேர்வு வெருளி -Testophobia

தேர்வு, சோதனை, கூறாய்வு முதலானபற்றிய அளவுகடந்த பேரச்சம் தேர்வு வெருளி.
கூறாய்வு வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன். தேர்வு வெருளி என இப்பொழுது குறித்துள்ளேன்.
தேர்வு வெருளி தன்னம்பிக்கையைத் தகர்க்கிறது. சில நேரம் தற்கொலைக்குத் தூண்டுதலாகவும் அமைகிறது.
தேர்வில் வெற்றியை இலக்காகக் கொண்டு முயல வேண்டும். அதே நேரம், தோல்வி வந்தாலும் தாங்கும் மனப்பக்குவம் வேண்டும். எனினும் பிறர் கேலிக்கு ஆளாக நேரிடும், குடும்பத்தினர், ஆசிரியர் ஆகியோரின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும், பிறர் ஏளனமாக எண்ணுவர் என்பன போன்ற கவலைகளாலும் அச்சத்தாலும் தோல்வியை எதிர்கொள்ளும் மனஉறுதியை இழந்து விடுகின்றனர். இதனால் தோல்வி வெருளி வருகிறது.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages