





http://www.cimpad.org/index.php/component/k2/item/106-berhanu-mengistu
..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஏற்போர் ஏற்க ஏற்க மறுப்போர் ஒதுக்கி விலக...
மேற்படி தாரகமந்திரம் மட்டுறுத்தப்படாவிடின், நல்லதே நடக்கும். தற்கால மின் தமிழ் கார்வார் அக்காலம் இருந்திருந்தால், சிலப்பதிகாரமும், கலித்தொகையும், பின்னர் திருவிளையாடல் புராணமும், பாரதியாரும், தி.ஜானகிராமனும், ஜெயகாந்தனும், ஞானியும், மற்றும் பலரும் ஒழித்துக்கட்டப்பட்டிருப்பார்கள்.
மீள்பதிவு கீழே:
அன்றொரு நாள்: ஏப்ரல் 10:
திரைகடலோடிய இந்தியா!
‘...ஏடன் நகரத்தில் கலோனிய ஆட்சி புரிந்தது, இந்திய அரசு என்பது ‘ஏடாகூடமான பேச்சாக’த் தோன்றினால்...! என்று அன்றொரு நாள்: ஜனவரி:19:ஏடாகூடம்! இழையில் கூறப்பட்டதின் தொடர்பாக, இன்று எத்தியோப்பியா (அபிசீனியா) போகப்போகிறோம். தொன்மையும், வளமும், இனம், மொழி, கலாச்சார வித்தியாசங்கள் (80 வகை தொகைகள்) நிறைந்த நன்னாடு. இயற்கை வளமும், கானகங்களும், மலையும், மடுவும், பழங்கால நாகரீகமும் நிறைந்த பூமி. தொன்று தொட்டு வரும் கிருத்துவ சமயத்தின் ஆளுமை. புராணங்களில் பேசப்படும் மஹாராணி ஷேபாவின் பிரதேசம்.
இந்தியாவின் மொகலாய சாம்ராஜ்யத்தின் இறுதி நாட்களில், தடியெடுத்தவன் எல்லாம் தாண்டவராயர்களான மாதிரி, எத்தியோப்பாவிலும் 1769 -1855 காலகட்டத்தில் மூலைக்கொரு மகராசா வந்து, ராஜ்யத்தைக் குலைத்து, நாட்டாண்மையும், கட்டைபஞ்சாயத்தும் செய்து கொண்டிருந்தனர். 1855ல் லிஜ் காசா ஹைலு ( அருமையான பெயர்!) என்பவர் தன்னை சக்ராதிபதி திவொட்டரோஸ் II (தியோடர்?) என்று முடி சூட்டிக்கொண்டு, வரிசையாக எதிரிகளை வீழ்த்தி, பகை தேடிக்கொண்டார். நல்ல மனிதர். சோம்பேறி பிரபுக்களை உதைத்து, ஏழை பாழைக்கு உதவினார். அடிமை வணிகத்தை ஒழிப்பதில் கணிசமான வெற்றி. பிரஜை விரும்பிய ராஜா. ராணுவத்தை துப்பாக்கி, தளவாடங்கள் வாங்கி, தடபுடல் செய்ய பார்த்தார் மாவீரன். எல்லாம் தெரியும், ராஜ தந்திரத்தைத் தவிர. போறாக்குறைக்கு ஆத்திரக்காரன். அதனாலே புத்தி மட்டு. அதான் சாக்கு என்று திரைகடலோடி, இந்தியா எத்தியோப்பியாவை தாக்கியது. நடந்த கதை கேளும்.
மஹராசாவுக்கு விளையாட்டுத்தோழர்கள், சிங்கங்கள்! மனுஷனுக்கு போறாத காலம். போயும்,போயும், ஆங்கிலேயனிடம் டெக்னிக்கல் உதவி நாடினார். சிவப்பு நாடா அவருக்கு மகத்தான உதவி செய்தும், மாட்டிக்கொண்டார். கர்மவினையோ? அவர் விக்டோரியா மஹாராணிக்கு துப்பாக்கி செய்யும் முறையஒ சொல்லிக்கொடுக்க ஆள் அனுப்பச்சொல்லி, கனிவுடன் கடிதம் எழுதி, அக்காலமே அங்கு தூதுராக குந்தியிருந்த கேப்டன் சார்லஸ் டங்கன் கேமரானிடம் கொடுத்து, நேரில் கொடுத்து வருக என்று ஆணையிட்டார். ஆனால், இங்கிலாந்தின் வெளியுறவு (உறவா) துறை, வீண் செலவு வேண்டாம், அனுப்பி வைய் என்றனர். அவரை சூடானுக்கு அனுப்பினர். திரும்பிய கேமரானை, சினம் கொண்டு, ஜெயிலில் போட்டார், நம்ம திவொட்டரோஸ் II. இங்கிலாந்தின் வெளியுறவு (உறவா) துறை கடிதத்தை ‘pending’ லெ போட்டு (இந்த ‘pending’ பற்றி நானூறு பக்கம் எழுதலாம், சுவை கூட்டி, கூட்டி!), ராணி கிட்ட அனுப்பாமல், ஒரு வருடம் வைத்திருந்து,’ மறந்துட்டோமே! அபிசீனியா இந்திய கலோனிய பிரிட்டீஷ் ராஜ் அடியில் அல்லவா வருகிறது’ என்று, அதை இந்தியா பக்கம் திருப்பி விட்டனர். ‘அப்பனுக்கு மேலெ பிள்ளை’ என்ற சொலவடைக்கொப்ப, மஹா கனம் பொருந்திய இந்திய கலோனிய அரசு அந்த கடிதத்தை ‘not even pending!’ என்று ஒதுக்கி விட்டது. இரு வருடங்கள் ஓடின. இருக்கற வெள்ளைக்காரன் எல்லாரையும் ஜெயிலில் போட்டு வதைத்தாரு, சக்ராதிபதி திவொட்டரோஸ் II.
மூன்று வருடங்கள் ஓடின. ராணியம்மா, ‘நம்ம ஆளுங்களை விட்டுடு’ என்ற மிரட்டல் கடிதத்தை. ஹோர்மஸ்ட் ரஸ்ஸம் என்பரின் தலைமையில் ஒரு படையுடன் அனுப்பி வைத்தாள், பெரிய ராஜதந்திரியை போல. எல்லாரையும் ஜெயிலில் போட்டுட்டாரு, சக்ராதிபதி திவொட்டரோஸ் II. இப்போ தான் ரோஷம் வந்தது, பிரிட்டீஷ் கலோனிய அரசுக்கு. ராபெர்ட் நேப்பியர் தலைமையில், இந்தியாவிலிருந்து, ஆங்கிலேயரும், இந்தியர்களும் 30 ஆயிரம் கொண்ட படை ஒன்று அபிசீனியா வந்து, உலக வழக்கத்திற்கு இணங்க, துரோகிகள், உதவியுடன், அரோக்யா என்ற இடத்தில், சக்ராதிபதி திவொட்டரோஸ் II யை தோற்கடித்தது. இன்றைய தினம். வருடம் 1868. நேப்பியர் கெளரவமாக நடத்துவேன் என்றார். ஆனால், அவரோ, தன்மானம் தலை தூக்க, தன்னை சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி ஏது? ரஸ்ஸம் மூலம் ராணியம்மா அனுப்பிய பிஸ்டல்! கர்மவினை எப்படியெல்லாம் இயங்குது, பாருங்கோ!
வாகை சூடிய படை காவற்காட்டை அழித்தது; கோட்டையை இடித்தது; ஊரை கொளுத்தியது: பழமை வாய்ந்த மாதாகோவில்களையிம் அழித்தது. அஃறிணை மீது பழி வாங்கும் கயவாளிக்கூட்டம். இன்றளவும் சக்ராதிபதி திவொட்டரோஸ் II எத்தியோப்பிய மக்களால் மதிக்கப்படுகிறார்.
இன்னம்பூரான்
10 04 2012
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/ST-Theodore.jpg/300px-ST-Theodore.jpg
![]()
கருத்தைப்படிப்பவர் ஏற்கவும் செய்வார்கள், மறுக்கவும் செய்வார்கள்; இருவருமே கருத்துப்பதிவார்கள். எனவே, மறுப்போரை ஒதுக்கி விலகச் சொல்வது, கருத்தாடலுக்கே வழியின்றிச் செய்துவிடுகிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆனால் ஏற்க மறுப்போர் ஒதுக்கி விலகவேண்டுமா என்ன? சான்றுடன் மறுப்பு வைக்கலாம் அல்லவா?








எத்தியோப்பிய இஞ்சிரா ரொட்டி, அதற்கு கொடுக்கப்டும் பருப்பு/கீரை கர்ரி, உணவை கையால் உண்ணும் அவர்கள் வழிமுறை எல்லாமே தமிழகத்தை நினைவுபடுத்தும்
எத்தியோப்பிய உணவகங்களில் ஒரே தட்டில் குடும்பமாக உண்டு அமரும் வகையில் இருக்கும். தமிழருக்கும், எத்தியோப்பியருக்கும் நெருங்கிய வாணிக தொடர்பு உண்டு. தமிழகத்தில் கிடைக்கும் ரோமானிய காசுகள் எல்லாமே எத்தியோப்பியாவில்/எகிப்தில் இருந்து வந்தவையே. சங்க இலக்கியங்களில் வரும் யவனர் எத்தியோப்பியரே..பண்டைய ரோமானிய பேரரசு எகிப்து, எத்தியோப்பியா வரை பரவி இருந்தது. ரோமானிய/தமிழக வணிக உறவு என்றவுடன் பலரும் இத்தாலிக்கும், தமிழ்நாட்டுக்கும் வணிக உறவு இருந்ததாக நினைப்பார்கள். அது உண்மை அல்ல..இத்தாலிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே கடல்வழி தொடர்பு ஏற்பட வாஸ்கடோகாம காலம் வரை வழியில்லை
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
///எத்தியோப்பிய விமானப் பணிப் பெண்களும் ஆண்களும் தமிழர்களை ஒத்த முகச்சாயலிலும் உடல் சாயலிலுமே தென்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள். இவர்களுக்கு இந்திய ஆடைகளை உடுத்தி சாலையில் நடக்கச் சொன்னால் தமிழ் பெண்கள் என்றே எல்லோரும் ஒத்துக் கொள்வர். தலைமுடி வகையில் மட்டும் ஒரு சிறு வித்தியாசத்தைக் காண்கின்றேன்.///ஆமாம் சுபா, நீங்கள் குறிப்பிடுவதை நானும் கவனித்துள்ளேன். தமிழர் சாயல் எத்தியோப்பியரிடம் அதிகம்.கேரளாவில் இருப்பவர்கள் கூட தமிழக மக்களைவிடக் கொஞ்சம் வேறுபட்டிருப்பதாகத் தெரியும்...ஆனால் .. எதியோப்பியர்கள் நமது பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றத்தில் இருப்பார்கள் .பேராசிரியர் பெர்ஹானு மென்ஞ்ட்சு என்ற எங்கள் ஆசிரியர் நம் ஊர்காரர் போலவே இருப்பார். அவர் பேசும் ஆங்கிலம் கொஞ்சம் ராகம் போட்டுப் பாடுவது போல இருக்கும்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.






--






--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.













பகுதி 7பட்டமளிப்பு விழா மதியம் ஒரு மணி வாக்கில் இனிதே முடிவடைந்தது. அதன் பின்னர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த எங்களை எம்டிஎஸ் மண்டபத்தின் முன் பக்கத்தில் இருக்கும் பிரமாண்டமான மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தமிழிசை பக்திப்பாடல்கள் முடிந்து தமிழ் சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர் இசைக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் பாடிய ஏ.ஆர். ரகுமானின் வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே என்ற பாடல் மிக இனிமையாக இருந்தது. பாடகர்கள் அனைவருமே தமிழ் பேசத்தெரியாத நிலையிலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு பாடுகின்றார்கள். ஆனாலும் உச்சரிப்பில் தவறுகளை அதிகமாகக் காணமுடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் இத்தகைய இசைக்கலை ஆர்வம் நிறைந்த இளைஞர்களைக் காண்பதில் மனதிற்கு உவப்பாகவே இருந்தது.
தென்னாபிரிக்காவுக்கு தமிழர் குடியேற்றம் நிற்காது தொடர்ந்து நிகழ்ந்திருந்தால் இவர்கள் தமிழ்மண்ணிலிருந்து இப்படி துண்டிக்காப்பட்டிருக்க மாட்டார்கள் என தோன்றுகிறது.
Eventually, Smuts oversaw the passage of the Indian Relief Act that was passed in 1914. This act withdrew the £3 tax that was imposed on ex-indentured Indians, customary marriages were recognised (a right for which Gandhi’s wife Kasturba had protested and been arrested), and Indians were allowed to move freely into the Transvaal.
On 30 June 1914, the two men signed a pact bringing to an end the satyagraha campaign in South Africa.
Having achieved a major victory, Gandhi decided to return to India (by way of the United Kingdom). There he was to ultimately lead his home country to independence from British rule using the political experience he had gained in South Africa.
customary marriages were recognised (a right for which Gandhi’s wife Kasturba had protested and been arrested),

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Tue, Apr 28, 2015 at 7:50 AM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:customary marriages were recognised (a right for which Gandhi’s wife Kasturba had protested and been arrested),தில்லையாடி வளியம்மையும் அவரின் தாயும் மற்ற இரு பெண்கள் அந்தப்போராட்டத்தில் பங்குபெற்றவர்கள். ஆறுமாதம் சிறைக்குச் சென்ற வள்ளியம்மை நோயின் தாக்கத்தால் 16 வயதில் இறக்க நேரிடுகிறது.அவர்களை விட்டுவிட்டீர்களே ஐயா







பதிவு 9பட்டமளிப்பு விழா நடைபெற்ற நாளின் மாலை வேறு எந்த திட்டமும் எனக்கு இல்லை. மறுநாள் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் செயலவைக் கூட்டம் நடைபெற இருந்ததால் மாலை ஹோட்டலிலேயே இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்ததில் அன்றைய மாலைப் பொழுது இனிதே கழிந்தது.
இந்திய சமோசா போன்று உள்ளது சுபா.சுவை எப்படி யோ? மாறுபடலாம்.அரிசோனன் ஐயா! தவசிபிள்ளை _நெல்லைச்சீமை வழக்குச்சொல்தானே?
--
நெல்லைச்சீமை நான் வா (ழ்) க்கப்பட்டபூமி.ஆம்.அங்குதான் முதன்முதலில் "வீட்டுவிஷேசத்திற்குத் தவசிபிள்ளையக் கூப்புடுவோம் "என மாமனார் சொன்னபோது புரியாமல் கணவரை நோக்க அவர்தான் "சமையற்காரர் " என்றார்.
தங்களது பன்னி ரொட்டியைப் படித்தபோது எனக்கு பனீனி ரொட்டி நினைவுக்கு வந்தது. நான் மின்னியாபாலிஸ் நகருக்கு அலுவல் காரணமாகச் சென்றபோது, எனக்கு சைவ உணவு படிக்கவேண்டும் என்று நான் செல்லும் கம்பெனிக் காரர்கள் மிகவும் முனைவார்கள்.அப்பொழுது ஒரு இத்தாலிய உணவகத்திற்கு என்னை அழைத்துச் சென்று, என் நிலையை அங்கிருக்கும் தவசிப்பிள்ளையிடம் [chef] தெரிவித்தார்கள்.அவர் என்னைப் பரிவுடன் விசாரித்து, நான் என்ன சாப்பிடுவேன் என்று தெரிந்துகொண்டு, அந்த உணவகத்திலேயே செய்யப்படும் பனீனி ரொட்டியில் spice இட்ட காய்கறிகளை அடைத்துச் சுருட்டிக் கொடுத்தார். அதை நான் மிகவும் சுவைத்து உண்டேன் என்று என்னிடம் தெரிந்துகொண்டு, மிக மகிழ்ந்து , 'This is my special treat to you! Your lunch is on the house!" என்றபோ து நான் நன்றி உணர்ச்சியால் திக்குமுக்காடிப்போனேன்.அன்றிலிருந்து நான் எப்பொழுது மின்னியாபாலிஸ் சென்றாலும், அந்த இத்தாலிய உணவகத்திற்குச் சென்று அந்த தவசிப்பிள்ளை ஆன்ரேயின் பனீனி ரொட்டி சாப்பிடாமல் வரவேமாட்டேன்.
இந்திய சமோசா போன்று உள்ளது சுபா.சுவை எப்படி யோ? மாறுபடலாம்.
கண்டிப்பாக சுபா.மதுரையிலும் சிறந்த வடஇந்தியஉணவகங்கள் உள்ளன உங்களை அழைத்துச்செல்கிறேன்.
கண்டிப்பாக சுபா.மதுரையிலும் சிறந்த வடஇந்தியஉணவகங்கள் உள்ளன உங்களை அழைத்துச்செல்கிறேன்.
இவை அனைத்தையும் நானே அருமையாகச் செய்வேன் பரோட்டா உட்பட.என் கையால் நானே ருசியாக சமைத்துத் தருகிறேன்.நீங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருங்கள்.
அமெரிக்கா வந்தால், அரிசோனா வந்து எங்கள் செய்யுங்கள்.நீங்கள் குறிப்பிட்ட //எனக்கு ரொம்ப பிடித்தவை முருங்கைகீரை கூட்டு, கத்தரிக்காய் குழம்பு, வெண்டைக்காய் வருவல்.. தயிர்சாதம், தக்காளி சாதம்../// அத்தனை காய்கறிகள்,கீரை உள்பட -- எங்கள் வீட்டிலேயே விளைகின்றன. ஜமாய்த்துவிடலாம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இவை அனைத்தையும் நானே அருமையாகச் செய்வேன் பரோட்டா உட்பட.என் கையால் நானே ருசியாக சமைத்துத் தருகிறேன்.நீங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருங்கள்.
On 07-May-2015 11:02 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
சுபா அவர்களே,அமெரிக்கா வந்தால், அரிசோனா வந்து எங்கள் செய்யுங்கள்.நீங்கள் குறிப்பிட்ட //எனக்கு ரொம்ப பிடித்தவை முருங்கைகீரை கூட்டு, கத்தரிக்காய் குழம்பு, வெண்டைக்காய் வருவல்.. தயிர்சாதம், தக்காளி சாதம்../// அத்தனை காய்கறிகள்,கீரை உள்பட -- எங்கள் வீட்டிலேயே விளைகின்றன. ஜமாய்த்துவிடலாம்.
இதெல்லாம் சமைப்பது எளிதுநாங்க சல்சா தோட்டத்து தக்காளியை வைத்து செய்வோம். டாக்கோ மட்டும் வாங்கி வந்து ஸ்டஃபிங் வீட்டிலேயே செய்வோம். இங்கே நாங்க என்பது என்னையும் மகளையும் மட்டுமே குறிக்கும் :-) (மகளுக்கு நான் தான் மெக்ஸிகன் சமையல் கோச் )













பதிவு 13டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயம் மூன்று பகுதிகளாக அமைக்கப்படிருப்பதைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டேன். நடுப்பகுதியில் மிகப்பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் புற்றையே அம்மனாக வைத்து மக்கள் வழிபடும் இடம் இருக்கின்றது. இப்புற்றில் அம்மன் வடிவமாக அமைக்கப்பட்ட வடிவம் இந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் இருக்குமாறு செய்திருக்கின்றார்கள். நடுப்பகுதியில் அமைந்திருப்பதால் பக்தர்கள் அம்மன் வடிவத்தின் முன் நின்று தாமே தீபாராதனைக் காட்டி தாமே பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல இலகுவாக அமைந்துள்ளது. இக்கோயிலில் அர்ச்சனை செய்து வைக்க என்று தனியாக அர்ச்சகர்களோ குருக்கள்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் நிறைந்திருந்த அன்றும் கூட பொது மக்கள் வரிசையாக நின்று ஒவ்வொருவரும் யாரையும் இடித்து தள்ளிக் கொள்ளாமல் தங்கள் வழிபாட்டினைச் செய்து விட்டு சென்று கொண்டிருந்தனர்.புற்று வடிவத்தின் முன் பக்தர்கள் தாங்களே தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த வழிபாட்டு பொருட்களை வைத்து சூடம் ஏற்றி குடும்பத்தோடு நின்று வழிபட்டு பின்னர் தங்கள் பொருட்களைக் கையோடு எடுத்துக் கொண்டு ஆலயத்தைச் சுற்றி செல்கின்றனர். அப்படி செல்லும் போது முதலில் ஒரு பெண்மணியிடம் மங்கலப் பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
பின்னர் அங்கு நிற்கும் இரண்டு பெண்களிடம் வேப்பிலை போன்ற வடிவம் கொண்ட ஒரு இலையால் உடல் முழுவதும் படுவது போல செய்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்த இடம் செல்கின்றனர். இங்கே இருக்கும் ஒரு பெண்மனி அவர்களுக்கு புனித நீரை ஒரு பெரிய கரண்டியில் எடுத்துக் கொடுக்க அதனை பக்தர்கள் பருகிச் செல்கின்றனர்.
இந்த மையப்பகுதியை அடுத்தார் போல வலது புறத்தில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருக்கின்றது. இங்கேயும் மக்கள் வரிசையாக வருகின்றனர். முன்னால் நிற்கும் ஊழியர்கள் பக்தர்கள் கொண்டு வரும் தட்டில் சூடம் ஏற்றித் தர குடும்பத்தோடு மக்கள் விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். வெளியேறும் போது அங்கு நிற்கும் ஒருவர் விபூதியை அவரே தாமாக நமது நெற்றியில் இட்டு விடுகின்றார். ஆலயத்தின் எல்லா இடங்களிலும் அவசரம், தள்ளிப்பிடித்தல் என்ற வகையில் இல்லாமல் மிக ஒழுங்காக காரியங்கள் நடைபெறுகின்றன.
இங்குள்ள விநாயகர் சிலையின் வடிவம் நம் கண்கள் பார்த்து பழகியனவற்றிலிருந்து மாறுபட்டவை. ஒல்லியான உடம்புடன் தொந்தியில்லாத விநாயகர் நமக்கு வித்தியாசமாகவே படுகின்றார். ஆயினும் அலங்காரங்களுடனும் பக்தர் கூட்டத்துடனும் பார்க்கும் போது நம் மனதைக் கவரத் தவறவில்லை. நான் என் வழிபாட்டை முடித்துக் கொண்டு கோயில் இடப்புரம் கச்சேரி நடந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்றேன். அங்கே திரு.கார்த்திகேயன் இசைக்குழுவினர் தமிழிசை கச்சேரி செய்து கொண்டிருந்தனர்.இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன். அதற்கு பக்க வாத்தியம் மிக அருமையாக அமைந்திருந்தது. மத்தளம், ஹார்மோனியம் வயலின் இசை கலந்ததும் எனக்கு முன்னர் கச்சேரி செய்த நினைவுகள் மனதில் தோன்றின. ஆகையால் பாடலை சற்றே விரிவாக்கி பாடி முடித்து எழுந்த போது மீண்டும் ஒரு பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர் இசைக்குழுவினர். எனக்கு இது மேலும் ஆர்வத்தையும் மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன். பாடி முடித்து கீழே வரும்போது நண்பர்களின் புன்னகை கலந்த பாராட்டுதல்கள் எனக்கு நிறைந்த மன மகிழ்ச்சியை அளித்தன.
எதிர்பாராது நடந்த நிகழ்வு அது. மனதில் இன்னமும் நினைத்துப் பார்க்கும் போது அதே மகிழ்ச்சி மலர்கின்றது.தொடரும்..சுபா2015-05-13 8:36 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:பதிவு 12புற்று மாரியம்மன் கோயிலில் எடுக்கப்பட்ட படங்களில் சில புகைப்படங்களை மட்டும் இப்பதிவில் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.
--
ஆமாம் சுபா :-)) பார்க்கணுமே ..
உள்ளங்கவர் கள்வன் _இல்லை இல்லை கள்ளி ஆகிவிட்டீர்கள் சுபா! தமிழிசைப்பாடகி _சுடிதார் அணிந்த சுந்தரி.சர்வகலாவல்லிதான் போங்கள்! உண்மையில் மனம் மகிழ்கிறது சுபா.வாழ்க! வளர்க!





பதிவு 12புற்று மாரியம்மன் கோயிலில் எடுக்கப்பட்ட படங்களில் சில புகைப்படங்களை மட்டும் இப்பதிவில் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.
எதிர்பாராது நடந்த நிகழ்வு அது. மனதில் இன்னமும் நினைத்துப் பார்க்கும் போது அதே மகிழ்ச்சி மலர்கின்றது.
//எனக்கு இது மேலும் ஆர்வத்தையும் மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன்.//சுபா அவர்களே, தங்களது பாட்டைக் கேட்டு மகிழ ஆவலாக இருக்கிறது. தாங்கள் பாடிய அப்பாட்டைப் பதிவு செய்து வலையேற்றலாமே! தங்கள் மனதில் ஏற்பட்ட மகிழ்வை நாங்களும் பெறுகிறோமே!










பதிவு 15காலையில் புற்று மாரியம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்ததோடு கோயில் நிர்வாகத்தலைவர் திரு சீலன் ஆசாரியுடன் ஒரு பேட்டியையும் செய்து முடித்தேன். அத்தோடு, சாஸ்திரிய இசைபயின்று அதே வேளை தமிழிசை பாடி டர்பனில் இசைக் கச்சேரிகள் நடத்துபவரும் இசைப்பள்ளி நடத்தி வருபவருமான திரு.கதிரேசனையும் ஒரு பேட்டி கண்டேன். ஆலயத்தில், எனக்கும் என்னுடன் வந்திருந்த ஏனையோருக்கும் ஆலய நிர்வாகத்தினர் தேனீரும் பலகாரங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தனர்.
காந்தி வாழ்ந்த இடத்தில் .. ஷுலு இனக்குழு மக்களின் குழந்தைகளோடுஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்க கிளையின் தலைவர் திரு.மிக்கி செட்டி அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி வந்திருந்த பொழுதில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள தமிழாசிரியர் பட்டமளிப்பு விழாவிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள செயலவைக் குழு தேர்தல் நிகழ்விலும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அலுவலக பணிகளுக்கிடையேயும் எனது முனைவர் பட்ட ஆய்வுக்கிடையேயும் இதனை சாத்தியப்படுத்த முடியுமா என்ற ஒரு அய்யம் மனதில் இருந்து கொண்டிருந்தது. ஆயினும் இந்த இயக்கத்தின் செயலவைக் குழுவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பயணத்திற்கு திட்டமிட்டேன்.இந்த இயக்கத்தில் பல ஆண்டுகள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், நான் ஜொஹான்னஸ்பெர்க் நகருக்கு டிக்கட் போடவேண்டுமென்று தகவல் சொல்லிவிட்டார். ஆக அங்கு செல்ல விமானத்தை தேடிய போது எத்தியோப்பியன் விமானத்தில் குறைந்த நேர இடைவெளி. அத்தோடு பயணக்கட்டணமும் கணிசமான விலை என்ற வகையில் டிக்கட் அமைந்தது. நானும் தோழி இந்துவும் பயணத்திற்கு டிக்கட்டை பதிந்து கொண்டோம். இதைப் பற்றி அந்த பொறுப்பாளரிடம் குறிப்பிட்ட போது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில் சென்றால் இபோலா காய்ச்சல் வந்து இறந்து விடுவீர்கள் என்று கூடுதல் 'இன்மொழி' கூறினார்.என்ன செய்வது ..? இப்படியும் சில மனிதர்கள்!எத்தியோப்பியன் விமான பயண விபரங்களைப் பார்த்தபோது தினம் ஒரு விமானம் எத்தியோப்பியா செல்வதை அறிந்து கொண்டேன். ஜெர்மனியில் கணிசமான எண்ணிக்கையில் எத்தியோப்பியர்களும் ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகளைச் சேர்ந்தோரும் இருக்கின்றனர். விமானத்தில் பயணித்தாலே இபோலா நோய் வரும் என நினைப்போரை என்ன செய்வது? எல்லாம் அறியாமை தான் காரணம். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களே என வருந்திக் கொண்டதோடு மட்டுமல்லாது அந்த நபருக்கும் இபோலா பற்றியும் அனைத்துலக விமானப்பயணத்தில் கடைபிடிக்கப்படும் சுகாதார முறைகள் பற்றியும் சற்று விளக்கியும் கூறினேன்.
விமானப் பயணத் தகவல்ஆனால் பின்னர் டர்பனில் தான் நிகழ்வு என்று உறுதியானதும் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு ஒரு பயண டிக்கட் கூடுதலாக பதிவு செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. குலுலா விமான சேவையகத்தில் இதற்கான டிக்கட்டை எனக்கும் இந்துவிற்கும் பதிந்து கொண்டேன்.எங்களின் பயணம் 4 விமான நிலையங்களில் உலாவும் வகையில் 3 விமானங்களில் பயணம் என்ற வகையில் அமைந்தது. இப்படி ஒரு பயணத்தை இது நாள் வரை நான் என் வாழ் நாளில் செய்த்தில்லை. எல்லாம் புது அனுபவம் என நினைத்து பயண ஏற்பாட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டேன்.
- ஃப்ராங்பர்ட் நகரிலிருந்து எத்தியோப்பிய விமானத்தின் வழி முதலில் அதன் தலைநகரான அடிஸ் அபாபாவிற்குப் பயணம்
- அடிஸ் அபாபாவிலிருந்து ஜொஹான்ன்ஸ்பெர்க்
- பின்னர் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு
என பயணம் இருந்தது.
ஃப்ராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எஹ்ட்தியோப்பிய விமானம்எனது வாகனத்தில் ஃப்ராங்பர்ட் விமான நிலையம் வரை பயணம் செய்து அங்கு விமான நிலைய கார் பார்க்கில் வாகனத்தை விட்டு விட்டு எத்தியோப்பிய விமானத்தில் நானும் இந்துவும் அடிஸ் அபாபா நோக்கி புறப்பட்டோம்.தொடர்வோம் நம் பயணத்தை டர்பனுக்கு....சுபா
தலைப்பைத் தவிர மற்றெல்லாம் நன்றாக இருக்கின்றன. மூடிய மனதோடு புது இடங்களைப்பார்க்க பயணம் செய்வார்களா? என்ற கேள்வியை தலைப்பு எழுப்புகிறது.
முதலில் போட்ட ஃபோட்டோ வெகு சிறப்பு. காலோரத்தில் அமர்ந்திருக்கும் அந்தச் சின்னப்பையன் தன் வாய் திறந்த சிரிப்பால் உங்கள் பயணக்கட்டுரைக்கு சிறப்பு சேர்க்கிறான்.



பதிவு 16டர்பன் நகர் தமிழ் மக்கள் பெரும்பாண்மையினர் வாழும் ஒரு பகுதி. இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, ஒப்பந்த தொழிலாலர்களாக தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதிக்கு வந்து சேர்ந்த தமிழர்களில் பலர் மீண்டும் அவர்களது தாயகமான தமிழகத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ சுபா டர்பனில் உங்களோடு நாங்களும் உடன் வருவதுபோலவே உணர்கிறொம்.ஏன் சுபா இப்படிச் செய்தால் என்ன? மின்தமிழ் உறுப்பினர் எல்லாம் வருடம்
ஒருமுறை ஒருநாட்டில் கூடுவது.கண்ணன் ஐயாவிடம்
கோரிக்கை யாக உங்களுடைய. இழையிலேயே
இக்கருத்தையிடுகிறேன்.
இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன்.
நான் பலர் ஒன்றுகூடும் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் பாடும் பரவசப் பொழுதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்.ஒருதலைராகம் /முகாரி பாடுவதையல்ல.வேண்டுமானால் உங்களுடைய. தனிஆவர்த்தணத்திற்கு கண்ணன் ஐயாவிடம்
நாங்கள் ஏகமனதாக எல்லாரும் பரிந்துரைக்கிறோம்.
O.K.Deal?!
சுபா டர்பனில் உங்களோடு நாங்களும் உடன் வருவதுபோலவே உணர்கிறொம்.ஏன் சுபா இப்படிச் செய்தால் என்ன? மின்தமிழ் உறுப்பினர் எல்லாம் வருடம்
ஒருமுறை ஒருநாட்டில் கூடுவது.கண்ணன் ஐயாவிடம்
கோரிக்கை யாக உங்களுடைய. இழையிலேயே
இக்கருத்தையிடுகிறேன்.
நான் பலர் ஒன்றுகூடும் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் பாடும் பரவசப் பொழுதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்.ஒருதலைராகம் /முகாரி பாடுவதையல்ல.வேண்டுமானால் உங்களுடைய. தனிஆவர்த்தணத்திற்கு கண்ணன் ஐயாவிடம்
நாங்கள் ஏகமனதாக எல்லாரும் பரிந்துரைக்கிறோம்.
O.K.Deal?!
உங்கள் வெற்றியின் இரகசியம் இதுவே! பலநேரங்களில் கூச்சம் காரணமாகவும், தவறு நேர்ந்துவிடுமோ என்ற எண்ணம் காரணமாகவும், புறக்கணிப்புக்கு அஞ்சியும் முன்வரத் தயங்குகிறோம். அத்தடையினை உடைப்பவர் வெற்றி பெறுகிறார். சிறப்புப்பெறுகிறார். வாழ்த்துக்கள்.
இதெல்லாம் ஒரு தலை ராகம் என்போன்ற தள்ளாதவர்களைத் தள்ளிவிட்டு ஒரு பயணமா? மெய்நிகர் பயணம் எனக்கு நான் போன டர்பன் போகாமலே தெரிகிறதேநவகேடி
விரும்பாமல் சென்று விரும்பிய கோவை என்று நானும் எழுதவேண்டும். இன்றுவரை என் விமானப்பயணத் தொகை எனக்குக் கிடைக்கவில்லை. கேட்டால் யார் போகச் சொன்னாரோ அவரைக் கேளுங்கள் என்கிறார்கள் நடக்குற வேலையா என்ன?
என்னால் மின்தமிழுக்குக் கிடைக்கும் ஒரே நன்மை என்னை நினைத்தாலே தங்களுக்குள் சிரிப்பதாகப் பலர் சொல்லுகிறார்கள். எப்படியோ என்னால் ஒரு நன்மையாவது நடக்கிறதே
கோவைக்கு நான் வரவுமில்லை கூடஇருந்து பார்க்கவும் இல்லை.ஆனாலும் நா.வ ஐயாவும் நீங்களும் எழுதியதை
அடுத்தடுத்து படித்து நானும் வாய்விட்டுச்சிரித்து விட்டேன்
சுபாம்மா.பேசாமல் "பயணங்களும் பரவசங்களும் "என இழை தொடங்கி இருவரும் பகிருங்கள்.நாங்கள் கேட்டு /
பார்த்து முக்தியடைய முயலுகிறோம்.
--
கோவைக்கு நான் வரவுமில்லை கூடஇருந்து பார்க்கவும் இல்லை.ஆனாலும் நா.வ ஐயாவும் நீங்களும் எழுதியதை
அடுத்தடுத்து படித்து நானும் வாய்விட்டுச்சிரித்து விட்டேன்
சுபாம்மா.பேசாமல் "பயணங்களும் பரவசங்களும் "என இழை தொடங்கி இருவரும் பகிருங்கள்.நாங்கள் கேட்டு /
பார்த்து முக்தியடைய முயலுகிறோம்.
மகிழ்ச்சி சுபா.இருவரும் தமிழால் இணைந்து தமிழுக்காகப் பணியாற்றும் தகைசால் களப்பணி
திலகங்கள்.Hat's of to boath of you.
2015-05-22 0:47 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன்.
உங்கள் வெற்றியின் இரகசியம் இதுவே! பலநேரங்களில் கூச்சம் காரணமாகவும், தவறு நேர்ந்துவிடுமோ என்ற எண்ணம் காரணமாகவும், புறக்கணிப்புக்கு அஞ்சியும் முன்வரத் தயங்குகிறோம். அத்தடையினை உடைப்பவர் வெற்றி பெறுகிறார். சிறப்புப்பெறுகிறார். வாழ்த்துக்கள்.




பதிவு 17டர்பன் நகர் வந்த நாள் முதல் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தங்கும் விடுதியிலேயே உணவு சாப்பிட எல்லா ஏற்பாடுகளும் ஆகியிருந்தமையினால் வெளியே சென்று உணவகங்களில் சாப்பிடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. தென்னாப்பிரிக்க தமிழ் மக்கள் வீட்டு சமையல் எப்படி இருக்கின்றது என்று அ



பதிவு 18இந்த கேளிக்கை விடுதி டர்பன் நகரின் மையப் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இருப்பது. இதன் உள்ளே சில திரையரங்குகள், கேசினோ, ரெஸ்டாரண்டுகள், விளையாட்டு பகுதிகள் என பல்தரப்பட்ட கேளிக்கை அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.












பதிவு 19மறு நாள் காலையில் தங்கும் விடுதியில் நண்பர்கள் அனைவரும் காலை உணவு வேளையில் சந்தித்துக் கொண்டோம். நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் அன்று வரை எங்கள் தங்கும் விடுதியிலேயே குடும்பத்தாருடன் மிக்கி செட்டியும் அவர் துணைவியாரும் தங்கி இருந்தனர். காலையில் உணவு வேளையின் போது குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.ஜொஹான்னஸ்பெர்க் நகரில் வசிப்பவர்கள் மிக்கி செட்டி குடும்பத்தினர். காலை உணவு முடித்து அனைவருமாக ஜொஹான்னஸ்பர்க் திரும்பிச் செல்ல ஆயத்தமாகி இருந்தார்கள். டர்பனிலிருந்து ஜொஹான்னஸ்பெர்க் ஏறக்குறைய வடக்கு நோக்கி 600 கிமீ தூரம்.
--
எங்களை உங்களுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துச்சென்று அங்கு வராத குறையைத் தீர்த்துவருகிறீர்கள் . நானும் உங்களிடமிருந்து இதைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
--
படங்களும், விவரிப்புகளும் நன்கு இசைந்து செல்கின்றன.
சூலு இன குழந்தைகளுடன்
.... தேமொழி--