தமிழ்மணி - தமிழைப் பிழையின்றி பேசுவோம், எழுதுவோம்!

5,396 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jul 31, 2010, 7:58:36 PM7/31/10
to Min Thamizh
செம்மொழித் தமிழ் என்பதன் அனைத்து விளக்கங்களும் செந்தமிழ் என்னும் சொல்லுள் அடக்கம்.

"தன்னேரிலாத தமிழ்" என்னும் நம் தாய்மொழி, இந்நாளில் செந்தமிழாக இல்லாமல் சிதைந்த தமிழாக மாறி வருகிறது.

நம் மக்கள் பேச்சு வழக்குகளிலும், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், திரைப்படம் முதலிய ஊடகங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் தமிழ் சிதைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்மொழி தமிழாசிரியர்களுக்கு மட்டுமோ, தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிக்காரர்களுக்கு மட்டுமோ சொந்தமன்று; தமிழர் அனைவர்க்கும் உரிமையுடைய அரிய கருவூலம் அது.

தமிழில் பேசுவதைத் தாழ்வாகக் கருதும் பெருமக்கள் (?) இன்றும் இருக்கிறார்கள்.

தமிழ்தானே எப்படிப் பேசினால் என்ன?

எழுதினால் என்ன?

என்று ஏளனப் பார்வையுடன் அக்கறையற்று இருப்போரும் உள்ளனர்.

நல்ல தமிழை - பிழையற்ற தமிழைப் பேசவும் எழுதவும் வழிகாட்டக் கூடிய அறிஞர்களும் அருகிவிட்டனர்.

"தமிழ் படிக்க வேண்டும் - தமிழின்பம் பருக வேண்டும்" என்ற ஆர்வத்தைப் பிள்ளையர்க்கு வளர்க்கக்கூடிய கல்விமுறையும் ஆசிரியர்களும் குறைந்து வருதல் பார்க்கிறோம்.

ஆசிரியர்தம் தமிழறிவே ஐயத்திற்கிடமாகிப் போயிற்று.

இந்நிலையில் என்ன செய்யலாம்?

நாளை வரப்போகும் தமிழ்ச் சமுதாய மக்கள் தமிழையே மறந்தவர்களாய் - அறியாதவர்களாய் ஆகிவிடக் கூடாதே என்னும் அக்கறையில் தமிழைப் பிழையின்றி பேசவும் எழுதவும் எடுத்துக்காட்டுகளுடன் வழிகாட்ட "கவிக்கோ" ஞானச்செல்வன் வாரம்தோறும் "தினமணி கதிரில்" தொடர் குறிப்புகளைத் தர இருக்கிறார்.

அடுத்த வாரம் முதல் "தினமணி கதிரில்" கவிக்கோ ஞானச்செல்வன் எழுதும் "தமிழைப் பிழையின்றி - பேசுவோம், எழுதுவோம்" தொடர் தொடங்குகிறது.

தினமணி ஆசிரியர்.

நன்றி:- தினமணி

N. Kannan

unread,
Jul 31, 2010, 11:28:40 PM7/31/10
to mint...@googlegroups.com
2010/8/1 Kannan Natarajan <thar...@gmail.com>:

> அடுத்த வாரம் முதல் "தினமணி கதிரில்" கவிக்கோ ஞானச்செல்வன் எழுதும் "தமிழைப்
> பிழையின்றி - பேசுவோம், எழுதுவோம்" தொடர் தொடங்குகிறது.
>

அதைத் தொடர்ந்து வெளியிட வேண்டுகோள். எல்லோருக்கும் பயன்படும்.

க.>

venkatachalam Dotthathri

unread,
Aug 1, 2010, 1:49:36 AM8/1/10
to mint...@googlegroups.com
ஓம்.
அவசியம் அனைவரும் தொடர்ந்து பயன்பெறுவோம்
வெ.சுப்பிரமணியன்

2010/7/31 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

பழமைபேசி

unread,
Aug 1, 2010, 11:06:05 PM8/1/10
to மின்தமிழ்
வழிமொழிகிறோம்.... கோயமுத்தூர் அரசு அதிகாரிகளும் வாசிக்க வேண்டுகிறேன்.

On Jul 31, 11:28 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/8/1 Kannan Natarajan <thara...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Aug 12, 2010, 6:22:06 AM8/12/10
to Min Thamizh
ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை.

அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள்.

இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக...

அச்சுறுத்த வேண்டா:
-

"தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா.

தமிழில்,

"எழுத்தெனப் படுவ
 அகரமுதல் னகர இறுவாய்
 முப்பஃது என்ப...''


என்றார் தொல்காப்பியர்.

ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள.

கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கி அச்சுறுத்தல் ஏனோ?

ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை.

அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே உச்சரிக்க வேண்டும். சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை.

என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.

தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை.

தமிழ் இயற்கை மொழி:
-

மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை - எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி - இயற்கைமொழி தமிழேயாகும்.

எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து "என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?''  என்போமன்றோ?  வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி "அ". சற்று அதிகம் திறந்தால்  "ஆ" தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே - இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.

ஒலிப்பு - உச்சரிப்பு:
-

இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும்.

நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை.

தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர்.

தமிழ் என்னும் சொல்லில், த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம்.

தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள்.

தமிளா... தமிலா... என்று அழைக்கிறார்கள்.

"தமிழ்மொழி என் தாய்மொழி" என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும்.

"என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா... உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்'' என்று ல, ழ, ள மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர்.

நிகழ்ச்சி என்னும் சொல்லில் "ச்"சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும்.

இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?

நுண்ணொலி வேறுபாடுகள்:
-

தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள்.

அதனால், "சார் இங்கே என்ன "ல"னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர்.

பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள்.

மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் "ல"கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் "ள"கரம்.

இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி "ழ"கரம்.

இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும்.

இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.

எடுத்துக்காட்டுகள்:
-

தால் - நாக்கு, தாள் - எழுதும் தாள், பாதம் (அடி);
தாழ் - தாழ்ப்பாள், பணி(ந்து);
வால் - தூய்மை (வெண்மை)
வாலறிவன், வாலெயிறு;
வாள் - வெட்டும் கருவி,
வாழ் - வாழ்வாயாக

இப்படிப்பல காட்டலாம்.

(தமிழ் வளரும்)


கவிக்கோ.ஞானச்செல்வன்  ( www.dinamani.com/Images/article/2010/8/8/8kdr10.jpg )

நன்றி:- தினமணி கதிர்

விஜயராகவன்

unread,
Aug 12, 2010, 7:05:58 AM8/12/10
to மின்தமிழ்
On 12 Aug, 11:22, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *ஆங்கில *மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே

> தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை.
>
> அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள்.
>
> இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி
> உங்களுக்காக...*
>
> அச்சுறுத்த வேண்டா:*-

>
> "தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள்,
> கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா.
>
> தமிழில்,*

>
> "எழுத்தெனப் படுவ
>  அகரமுதல் னகர இறுவாய்
>  முப்பஃது என்ப...''*

>
> என்றார் தொல்காப்பியர்.
>
> ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள.

இது உண்மைக்கு புறம்பானது.

பல நாடுகளில் சேல்ஸ்மேன் அல்லது விளம்பரம் தப்பு தகவல்களைக் கொடுத்தால்
அது சட்டரீதியாக தண்டனைக்கு உரியதாகும்.

தமிழ்நாட்டில் தமிழப் பற்றி இவ்வளவு பெரிய பொய் சொல்கின்றனர்.

மெய் எழுத்துகளைகளில் ஷ, ஹ, ஜ, ஸ, ஸ்ரீ ஆகியவற்றை எப்படி மறக்க
முடியும். ?

உயிர்மெய் எழுத்துகளை எழுத/படிக்க கற்றுக் கொள்ளாமல் எப்படி எழுத்து
தமிழை புரியமுடியும்.?

தமிழை கற்றுக்கொளவதற்க்கு தொல்காப்பியரை இழுப்பது கார் ஓட்ட கற்றுக்
கொள்வதற்க்கு மோட்டார் பைக்கை பார்ப்பதற்க்கு சமமாகும்.

சேல்ஸ் பேச்சில் அப்பட்டமான பொய்களை சொல்லக் கூடாது


விஜயராகவன்

Jagannathan Narayanasamy

unread,
Aug 12, 2010, 8:55:59 AM8/12/10
to mint...@googlegroups.com, raju.ra...@gmail.com
நண்பரின் அறியாமைக்கு வருந்துகிறேன்.

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
 எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"
  தொல்காப்பிய நூற்பா:401 ( செல்லதிகாரம் - எச்சவியல் -பாடல் 5)

பொருள் விளக்கம்: வடவெழுத்துகளை நீக்கி, வடமொழிச் சொற்களைத் தமிழ் இலக்கண, ஓசை மரபுகளுக்கேற்ப மாற்றியாமைத்து எழுத வேண்டும்.
(இயேசு, யோவான், மத்தேயு, சேவியர்,  சீனம், பக(ல)வன் போன்று); 'சேன் ஜோஸ்' என்பது ஐரோப்பியர்களாலும் அமெரிக்கர்களாலும, இசுபானியர்களாலும், ஏன் அங்குள்ள இந்தியர் அனைவராலும் கூட 'சேனோசே' என்றுதான் ஓசை பெறுகிறது. 'ஜே' என்ற ஒலி ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இல்லை. இந்த மொழி உணர்வு நமக்கு வேண்டாமா?

தொல்காப்பியம் 2720 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்க நூல். மற்ற எல்லா மொழிகளின் இலக்கணங்களுக்கும் முந்தியது, முதன்மையானது, வழிகாட்டியது. அதன் தொன்ம்மையையும் சிறப்பையும் அறியாது பிதற்றுவது பேதைமை.

ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்றீ என்பன வடமொழிகளில் வழங்கும் கிரந்த எழுத்துகள்; அவை தமிழ் எழுத்துகள் அல்ல.  அவற்றைப் பயன்படுத்தாமலே தமிழில் எழுத வேண்டும், எழுத முடியும் என்பதே தொல்காப்பியம்.

ஆங்கிலேயர்கள் இலத்தீன் கிரேக்கம் போன்ற பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்ப்போது, 26 ஆங்கில எழுத்துகள் தவிர வேற்று மொழி எழுத்துகளைப் பயன்படுத்துவதில்லை என்பதை நண்பர் நினைவு கொள்ள வேண்டும்.  கணித, இயற்பியல், வேதியியல் போன்றவற்றில்  மட்டுமே பிறெமொழி எழுத்துகள்   பயன்படுகின்றன.

தமிழில் உயிர்மெய் எழுத்துகள, உயிர்+மெய்யின் கூட்டேழுத்துகளே அன்றி தனி ஏழுத்துகள் ஆகா.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களின் தேவை மேற்கொண்டு செல்லும்போது, ஐ (அய்) ஒள (அவ்) என்ற உயிரெழுத்துகள் குறையும். 'கை'  என்பதைக் 'கய்' என எழுதினால் ஒரு கொம்பை நீக்கலாம்.

 எம்மொழியினராயினும், தமிழ் நாட்டில் பிறந்தோ, பிழைப்பை நாடியோ் வாழ்பவர்களுக்குத் தமிழ் மொழி, பண்பாட்டு  உணர்வு வேண்டும.

அன்புடன் செ.நாராயணசாமி.

--- On Thu, 12/8/10, விஜயராகவன் <vij...@gmail.com> wrote:

srirangammohanarangan v

unread,
Aug 12, 2010, 11:28:14 AM8/12/10
to mint...@googlegroups.com
திரு ஜகந்நாதன் நாராயணசாமி,
 
தங்களின் மேலான கவனத்திற்கு. தொல்காப்பியர் கூறுவது
வடவெழுத்து ஒரீஇ என்றுதான் கூறுகிறார்.  வட ஒலி ஒரீஇ என்று கூறவில்லை.
 
எனவேதான் வடமொழி, பிற திசை மொழிகள் ஆகியவற்றிலிருந்து
பெறும் ஒலிகளைக் குறிக்க தமிழ் மற்ற மொழிகளின் எழுத்துகளைச் சார்ந்திருக்காமல்
தானாகவே தமிழ் எழுத்துக்களை அந்த ஒலிகளுக்கு ஏற்படுத்திக்கொண்டது.
அந்த எழுத்துக்கள்தான் கிரந்த எழுத்துக்கள்.
கிரந்த எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்கள் என்றுதான் பண்டைய காலத்தில்
குறித்தனர்.
கிரந்த எழுத்துக்களை வடமொழி எழுத்துக்களாக நினைத்து மயங்குதல் பிழை.

 

srirangammohanarangan v

unread,
Aug 13, 2010, 3:33:33 PM8/13/10
to mint...@googlegroups.com
தமிழில் வடமொழிக்கே தனிப்பட்ட ஒலிகள் போல் நினைத்து
நாம் மயங்கும் ஒலி வகைகளான வர்க்க ஒலிகளை முற்றிலும் தமிழ் மொழியிலிருந்து நீக்கிவிட்டுத் தமிழைப் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவேண்டும்.
 
’எங்கள் தமிழ் சங்கத் தமிழ்’ --- இதில் எங்களில் இருக்கும் க வடமொழி வர்க்க க ஒலியாக இருக்கிறது. எனவே தூக்கு. அந்த ஒலி வேண்டாம். அதே போல் சங்க என்பதில் இருக்கும் க வடமொழி வர்க்க க ஒலி. வேண்டாம். பின் எப்படி ஒலிப்பது?
enkal thamizh sankat thamizh
 
மங்காப் புகழ் கொண்ட தமிழ் --- mankaap pukazh konta thamizh
 
கொண்ட -- இதில் ட என்பது வடமொழி வர்க்க ட ஒலி.
 
இந்த உதாரணங்களே போதும் என்று நினைக்கிறேன் ஒலிகளை எந்த மொழிக்கும் பிரத்யேகமான ஒலிகளாய் நினைத்து மயங்குவதில் இருக்கும் பிழையை உணர. 
 
முஸ்லீம் மக்கள் அரபி மொழியில் இருக்கும் ஒலிகளைத் தமிழில் குறிப்பிடும் போது ஹ என்பதும் ஸ என்னும் எழுத்தும், வேறுபல கிரந்த எழுத்துகளும் எவ்வளவு பயன்படுத்தப் படுகின்றன என்ற விஷயம் முன்னரே தேவ் அவர்களால் ‘ஆரியமும் தமிழும்’ என்ற இழையில் கவனத்திற்குக் கொண்டுவரப் பட்டிருக்கிறது.
 
இனியாவது கிரந்த எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்று நினைக்கும் மயக்கம் நீங்கி, தமிழில் முற்காலத்தில் செய்துதரப்பட்ட வசதி என்பதை உணர்ந்து, பயனுள்ள விதங்களில் நம் ஊக்கமும், ஆய்வும் முனைந்தால் நலமே.

 

செல்வன்

unread,
Aug 13, 2010, 3:38:25 PM8/13/10
to mint...@googlegroups.com
எதுக்கு இத்தனை அடிதடி? இது ஜனநாயக நாடு. அவரவருக்கு பிடித்த மாதிரி எழுதி படித்து கொள்ளுங்கள். இப்ப அதனால என்ன நஷ்டம்? செயலலிதா, ஜெயலலிதான்னு அவரவர் கொள்கைக்கு ஏற்ப எழுதி படிச்சுகுங்க..ரெண்டுல எப்படி எழுதினாலும் அடுத்தவருக்கு புரியும்...இல்லை புரியலைன்னா தான் இப்ப என்ன நஷ்டம் ஆகபோகுது?


--
செல்வன்

www.holyox.blogspot.com


"ஒரு பணக்காரனையும், அவனது வசதியான வாழ்வையும் காணும் கம்யூனிஸ்ட் "எந்த மனிதனுக்கும் இத்தனை வசதி இருக்க கூடாது" என நினைப்பான்.இதையே ஒரு முதலாளித்துவவாதி பார்த்தால் "எல்லா மனிதருக்கும் இதே போன்ற வசதியான வாழ்க்கை வேண்டும்" என நினைப்பான் " - பிலிப்ஸ் ஆடம்ஸ்

Tthamizth Tthenee

unread,
Aug 13, 2010, 4:20:18 PM8/13/10
to mint...@googlegroups.com
ராஜா  என்று அழைப்பதில் உள்ள  மிடுக்கும் அழகும் ஒலி நயமும் ராசா  என்பதில் இல்லையே
 
வேண்டுமானால் கொஞ்சுவதற்கு மட்டும்  ராசா என்று வைத்துக்கொள்ளலாம்
 
ஜகன்நாதன்  என்று அழைத்தால் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது
 
சகன்நாதன்   என்று அழைத்தால்  சரி வரவில்லையே  ஹூம்  யோசிப்போம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Innamburan Innamburan

unread,
Aug 13, 2010, 5:53:14 PM8/13/10
to mint...@googlegroups.com
'சன்தானம்'
விளக்குக.
இன்னம்பூரான்

2010/8/14 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Aug 13, 2010, 6:18:39 PM8/13/10
to mint...@googlegroups.com
The whole problem is some people confuse sounds with other languages' letters.
 
Sounds are common to the human tongue. Of course some sounds are favoured over some other sounds due to climate, culture and physiology.
But the sophistication of a language is enhanced more by having sufficient written forms to accomodate as many sounds as possible. That language which exhausts the available sounds of the human tongue by sufficient corresponding written forms is an ideal condition, which no language has reached. Sanskrit is no exception in this.
 
Tolkaappiyar says 'The Sanskrit word becomes fit for prosadic usage by replacing the Sanskrit letters with matching Tamil letters'.
 
There Senavaraiyar analyses certain aspects.
 
Some have explained that Vadasol is not a Sanskrit word, but only a Tamil word. It cannot be. Two resons are shown by Senaavaraiyar.
 
1)It is the standard practice between the regional languages and the Sanskrit, that always no word from the regional language is used in Sanskrit whereas Sanskrit is common and universal to regional languages.
So the sanskrit word, viz, the Vadasol is not a Tamil word.
 
1)தமிழ்ச்சொல் வடபாடைக்கண் செல்லாமையானும் வடசொல் எல்லா தேயத்திற்கும் பொதுவாகலானும் இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டனவெனல் வேண்டும்..
 
2).....அல்லதூஉம் அவை தமிழ்ச்சொல்லாயின் வடவெழுத்தொரீஇ என்றல் பொருந்தாமையானும், வடசொல்லாதல் அறிக.
 
2)If it is not a Sanskrit word then the clause 'by removing the sanskrit word' carries no meaning Therefore vadasol is Sanskrit word.
 
The persons who designed the Grantha alphabet as supplimentary to Tamil, did so in their earnestness to facilitate Tamil in representing as many sounds as possible.

 

N. Ganesan

unread,
Aug 13, 2010, 9:47:49 PM8/13/10
to மின்தமிழ்

On Aug 12, 7:55 am, Jagannathan Narayanasamy <janak...@yahoo.co.in>
wrote:


> நண்பரின் அறியாமைக்கு வருந்துகிறேன்.
>
> "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
>  எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"
>   தொல்காப்பிய நூற்பா:401 ( செல்லதிகாரம் - எச்சவியல் -பாடல் 5)
>
> பொருள் விளக்கம்: வடவெழுத்துகளை நீக்கி, வடமொழிச் சொற்களைத் தமிழ் இலக்கண, ஓசை மரபுகளுக்கேற்ப மாற்றியாமைத்து எழுத வேண்டும்.
> (இயேசு, யோவான், மத்தேயு, சேவியர்,  சீனம், பக(ல)வன் போன்று); 'சேன் ஜோஸ்' என்பது ஐரோப்பியர்களாலும் அமெரிக்கர்களாலும, இசுபானியர்களாலும், ஏன் அங்குள்ள இந்தியர் அனைவராலும் கூட 'சேனோசே' என்றுதான் ஓசை பெறுகிறது. 'ஜே' என்ற ஒலி ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இல்லை. இந்த மொழி உணர்வு நமக்கு வேண்டாமா?
>
> தொல்காப்பியம் 2720 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்க நூல். மற்ற எல்லா மொழிகளின் இலக்கணங்களுக்கும் முந்தியது, முதன்மையானது, வழிகாட்டியது. அதன் தொன்ம்மையையும் சிறப்பையும் அறியாது பிதற்றுவது பேதைமை.
>
> ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்றீ என்பன வடமொழிகளில் வழங்கும் கிரந்த எழுத்துகள்; அவை தமிழ் எழுத்துகள் அல்ல.  அவற்றைப் பயன்படுத்தாமலே தமிழில் எழுத வேண்டும், எழுத முடியும் என்பதே தொல்காப்பியம்.
>

அன்பின் செகநாதன்,

வடமொழி எழுத்துக்கள் இல்லாமல், அந்த ஒலிப்புகளைக்
குறிக்க எளியமுறை இருக்கிறது. ஆங்கிலத்தில்
எல்லா மொழி எழுத்துக்களையும் குறிக்க மீக்குறிகள்
(டையாகிரிட்டிக்ஸ்) பயன்படுத்துகின்றனர்.
அதுபோல, தமிழ் 30 எழுத்திலும் செய்ய முடியும்.

நா. கணேசன்

> ஆங்கிலேயர்கள் இலத்தீன் கிரேக்கம் போன்ற பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்ப்போது, 26 ஆங்கில எழுத்துகள் தவிர வேற்று மொழி எழுத்துகளைப் பயன்படுத்துவதில்லை என்பதை நண்பர் நினைவு கொள்ள வேண்டும்.  கணித, இயற்பியல், வேதியியல் போன்றவற்றில்  மட்டுமே பிறெமொழி எழுத்துகள்   பயன்படுகின்றன.
>
> தமிழில் உயிர்மெய் எழுத்துகள, உயிர்+மெய்யின் கூட்டேழுத்துகளே அன்றி தனி ஏழுத்துகள் ஆகா.
>
> தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களின் தேவை மேற்கொண்டு செல்லும்போது, ஐ (அய்) ஒள (அவ்) என்ற உயிரெழுத்துகள் குறையும். 'கை'  என்பதைக் 'கய்' என எழுதினால் ஒரு கொம்பை நீக்கலாம்.
>
>  எம்மொழியினராயினும், தமிழ் நாட்டில் பிறந்தோ, பிழைப்பை நாடியோ் வாழ்பவர்களுக்குத் தமிழ் மொழி, பண்பாட்டு  உணர்வு வேண்டும.
>
> அன்புடன் செ.நாராயணசாமி.
>

> --- On Thu, 12/8/10, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Aug 13, 2010, 10:13:24 PM8/13/10
to மின்தமிழ், tamizh...@googlegroups.com

On Aug 13, 2:38 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> எதுக்கு இத்தனை அடிதடி? இது ஜனநாயக நாடு. அவரவருக்கு பிடித்த மாதிரி எழுதி
> படித்து கொள்ளுங்கள். இப்ப அதனால என்ன நஷ்டம்? செயலலிதா, ஜெயலலிதான்னு அவரவர்
> கொள்கைக்கு ஏற்ப எழுதி படிச்சுகுங்க..ரெண்டுல எப்படி எழுதினாலும் அடுத்தவருக்கு
> புரியும்...இல்லை புரியலைன்னா தான் இப்ப என்ன நஷ்டம் ஆகபோகுது?
>
> --
> செல்வன்


அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள், செல்வன்!
தமிழ்ப் புத்தாண்டு என்று இரண்டு தமிழ்நாட்டில்
நடைமுறையில் உள்ளது.
தமிழின் 30 எழுத்தல்லாதிருந்தால்
டையாக்கிரிடிக்ஸ் கொண்டோ, வடமொழி எழுத்துக்களாகிய
கிரந்தம் கொண்டோ எழுதமுடியும்.

உ, ஊ உயிர்மெய்களுக்கும் பெரியார் பரிந்துரைத்த
பிரித்து எழுதும் முறை அரசாணை தரலாம்.
பலர் என்ன சின்னம் உ,ஊ உயிர்மெய்களுக்கு
என்று எழுதுகிறார்கள். சிறந்த வடிவை எடுக்க
அரசு கமிட்டி அமைக்கலாம்.

தமிழ் புத்தாண்டு, உ/ஊ உயிர்மெய், வடஎழுத்துக்களுக்கு
மீக்குறிகள் (அ) கிரந்தம் - நடைமுறைப் படுத்த வேண்டும்.

நா. கணேசன்

karthi

unread,
Aug 13, 2010, 11:07:03 PM8/13/10
to mint...@googlegroups.com, tamizh...@googlegroups.com
செல்வன்,

பொதுச் சிந்தனையில் நீங்கள் ஒரு fresh breath of air!
இந்தச் செம்மொழி பெருமிதம் பலரைத் தமிழ் மொழியை
ஒற்றைப்படையாகப் பார்க்க வைக்கிறது. தமிழில்
பல பரிமாணங்கள் உள்ளன என்பது பல்ருக்குப் புரிய
மாட்டேன் என்கிறது.

என்னைப் பொறுத்தவரை:

செந்தமிழ்,
தூய தமிழ்
கலப்புத் தமிழ்
FM தமிழ்
சென்னைத் தமிழ்
மலாய் கலந்த தமிழ்,
இலங்கைத் தமிழ்
டிவி காம்பியர் தமிழ்
விளம்பரத் தமிழ்

"எனப் பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்"
இருக்கிறது. எல்லாவற்றுக்கும் இடம் உண்டு.
ஒருவர் இடத்தை மற்றவர் பிடிக்கப் போவதில்லை.

இதுவும் தமிழின் வளர்ச்சிக்கு ஒரு வழியே.

ரெ.கா.


----- Original Message -----
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Cc: <tamizh...@googlegroups.com>
Sent: Saturday, August 14, 2010 10:13 AM
Subject: [MinTamil] Re: தமிழ்மணி - தமிழைப் பிழையின்றி பேசுவோம், எழுதுவோம்!


>

S.Krishnamoorthy

unread,
Aug 13, 2010, 11:11:54 PM8/13/10
to mint...@googlegroups.com
இன்று ஒரு விளம்பரம் செய்திப் பத்திரிகைகளில் - தி ஹிந்து உள்பட - வெளியாகி உள்ளது. ஒரு ஆன்மீகக் குரு பற்றியது.
“பத்ம பூஷண்” என்ற விருதினை “பத்மபூசன்” என்று தனித்தமிழில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒலிச்சிறப்பைக் குன்றவைக்கும் இந்த மொழித்துப்புரவுப் பணி தேவைதானா?
வழிப்போக்கன்

2010/8/14 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S. Krishnamoorthy

srirangammohanarangan v

unread,
Aug 13, 2010, 11:26:49 PM8/13/10
to mint...@googlegroups.com
அதுதான் சொல்கிறேன். இந்த ஷ தமிழ் ஒலியன்று என்று கருதினால், அதற்குப் பதிலாக
ச என்பதுதான் தமிழ் ஒலி என்று போட்டால்,
அப்பொழுது பத்ம என்பதில் இருக்கும் த் தமிழ் ஒலி அல்லவே! அங்கு த் என்பது dh என்று வடமொழி மூன்றாவது த வின் ஒலியல்லவா?
தமிழில் ஒலி வர்க்கங்கள் கிடையாதே. எனவே தமிழில் patma poochan  என்றுதான் சொல்வேன் என்றால் எவ்வளவு பேதைமை:--)))

 

செல்வன்

unread,
Aug 13, 2010, 11:48:21 PM8/13/10
to mint...@googlegroups.com
இப்படி எழுது, இப்படி எழுதாதே என யாரும், யாரையும் வலியுறுத்த முடியாது. அனைத்து மாற்றங்களும் மக்கள் மன்றத்தின் முன் வைக்கப்படும்.மக்கள் தமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என தீர்மானிப்பார்கள்.நாம் அவசர படவேண்டியதே இல்லை.தக்கது தப்பி பிழைக்கும் என்பது டார்வினிய விதி


கூகிளீல் செயலலிதா என தேடியதில் வந்த ஹிட்டுகள் 10,600

ஜெயலலிதா என தேடியதில் வந்த ஹிட்டுகள் 1,650,000

பத்மபூசண் = 191

பத்மபூஷண் = 9480

விஜயராகவன்

unread,
Aug 14, 2010, 12:06:43 AM8/14/10
to மின்தமிழ்
On 14 Aug, 04:07, "karthi" <karthige...@gmail.com> wrote:

> என்னைப் பொறுத்தவரை:
>
> செந்தமிழ்,
> தூய தமிழ்
> கலப்புத் தமிழ்
> FM தமிழ்
> சென்னைத் தமிழ்
> மலாய் கலந்த தமிழ்,
> இலங்கைத் தமிழ்
> டிவி காம்பியர் தமிழ்
> விளம்பரத் தமிழ்
>
> "எனப் பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்"
> இருக்கிறது. எல்லாவற்றுக்கும் இடம் உண்டு.
> ஒருவர் இடத்தை மற்றவர் பிடிக்கப் போவதில்லை.
>
> இதுவும் தமிழின் வளர்ச்சிக்கு ஒரு வழியே.
>
> ரெ.கா.

ரெ.கா.

நீங்கள் சொல்வது சரி. அதனால் , `தமிழ்` என்பது மேற்சொன்ன எல்லா
தமிழ்களையும் சேர்த்துக் கொண்டது. கற்பிக்கப்படும் தமிழ் மேலுள்ள எல்லா
சூழல்களையும் சமாளித்து, புரிகிறார்போல் இருக்க் வேண்டும். ஒருவர்
சமூகத்தில் படிக்கப்படும், கிடைக்கும், பார்க்கும் கேட்கும் தமிழை
புரிந்து கொண்டு ஆக்கபூர்வமமாக செயல்படுவதற்க்கு உபயோகமாக
இருக்காவிட்டால், மற்றவர்களுக்க்கு “பிழையின்றி பேசுவோம், எழுதுவோம்”
என்ற உபதேசங்கள் வீண்.


ஊருக்கு உபதேசம் செய்வது தமிழர்களின் இரண்டாவது குணம் போல் உள்ளது.

எது தமிழ் என்ற அடிப்படையிலேயே இவ்வளவு முரண்பாடுகள் இருப்பது, தமிழின்
வளர்ச்சிக்கு பாதகமாகும்.

There is massive identity confusion and it does not bode well for the
future. Under slightly different political setup, the present day
"Tamil" can easily breakup into few languages. This article, so
eagarly quoted by Kannan Natarajan is a good example of that
confusion.

விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Aug 14, 2010, 1:10:18 AM8/14/10
to மின்தமிழ்
செல்வன்

”தக்கது தப்பி பிழைக்கும்” என்பது ஒரு டாடாலஜி. வட்ட வாதம். எப்படி ஒன்று
`தக்கது` என சொல்வீர்கள் - அது பிழைப்பதனால். அதனால் பிழைப்பதெல்லாம்
தக்கது என ஆகி விடுகிறது.

உயி இனங்கள் பிழைப்புகளில் பாரசைட்டுகள் - புல்லுருவிகள் - என ஒரு வகை.

http://en.wikipedia.org/wiki/Parasite

பாரசைட்டுகள் மற்ற உயிர் இனங்களை சுரண்டிதான் உயிவாழ்கின்றனர்
("parasite, benefits at the expense of the host.") . “தனித்தமிழ்” ஒரு
கலாசார பாரசைட். அது பிழை , இது பிழை , தொல்காப்பியர் வட எழுத்து ஒருஇ என
சொல்லிட்டாரு, தமிழில் 30 எழுத்துகள்தான், கிரந்த எழுத்துகள் தமிழ்
இல்லை என பெரிய பெரிய லெக்சர்கள் கிடைக்கும். அதே சமயம் ”பிழைகள்”
நிறைந்த தமிழ்தான் படித்து, பேசி , கற்று பிழைப்பர். இந்த இழையின்
ஆரம்பமான கட்டுரையை நிஜமாகவே நம்பினால் 99% தற்கால தமிழ் இலக்கியத்தை
படிக்கக்கூடாது, 99% தமிழ் பத்திரிக்கைகளை வாங்கக் கூடாது.

ஆனால் பாரசைட்டுகள் “பிழைகள்” உள்ள இலக்கியத்தை படிப்பர், பேசுவர்,
பத்திரிக்கைகளை வாங்குவர். தனித்தமிழ் பாரசைட்டுகள் நான் ஜெயகாந்தன்
அல்ல்து பாரதியாரை தமிழ் இலக்கியம் என கருதமாட்டேன், தமிழ் இலக்கியம் என
படிக்க மட்டேன் என சொல்வதற்க்கு துணிவு இல்லை. தினமணி, தினத்தந்தி போன்ற
பத்திரிக்கைகள் தமிழ் ஏடுகள் அல்ல, அவற்றை வாங்க மாட்டேன் என
சொல்லமாட்டார்கள். தனிழ்த்தமிழ் என்று நம்பிக்கை துணிவு (courage of
conviction) இல்லை.

“தனிழ்த்தமிழ்” வெறியர் மறைமலை அடிகள் தன் அந்தரங்கத்தை - அதாவது
டைரிகளை - ஆங்கிலத்தில்தான் எழுதினார்


“தனிழ்த்தமிழ்” என்பதின் உள்ளூர நோக்கம் ஆங்கிலத்திற்க்கு சாஷ்டாங்க
சரணாகதி அடைவதுதான்.


விஜயராகவன்


On 14 Aug, 04:48, செல்வன் <holy...@gmail.com> wrote:
> இப்படி எழுது, இப்படி எழுதாதே என யாரும், யாரையும் வலியுறுத்த முடியாது.
> அனைத்து மாற்றங்களும் மக்கள் மன்றத்தின் முன் வைக்கப்படும்.மக்கள் தமக்கு எது
> வேண்டும், எது வேண்டாம் என தீர்மானிப்பார்கள்.நாம் அவசர படவேண்டியதே
> இல்லை.தக்கது தப்பி பிழைக்கும் என்பது டார்வினிய விதி
>

> கூகிளீல் செயலலிதா<http://www.google.com/#hl=en&source=hp&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%...>என


> தேடியதில் வந்த ஹிட்டுகள் 10,600
>

> ஜெயலலிதா<http://www.google.com/#hl=en&source=hp&q=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%...>என


> தேடியதில் வந்த ஹிட்டுகள் 1,650,000
>

> பத்மபூசண்<http://www.google.com/#hl=en&q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E...>=
> 191
>
> பத்மபூஷண்<http://www.google.com/#hl=en&q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E...>=

devoo

unread,
Aug 14, 2010, 1:23:38 AM8/14/10
to மின்தமிழ்
தமிழ் இணயத்தின் இரட்டை நிலைப்பாடு பிடிபடாத ஒன்றாக உள்ளது.
வடசொற்களின் கிரந்த எழுத்தால் தூய்மை கெடுகிறது, அதை நீக்க வேண்டும்
என்போருக்கு அரபுச் சொற்களில் உள்ள கிரந்தம் கண்ணில் படுவதில்லை.

எ.கா -
சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற
வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்'
என்பதாகும். இவர்பெயர் 'ஷெய்க் அப்துல் காதர்' என்றும் அழைக்கப்பெறும்.

மன்னருக்குச் 'சுண்டைக்காய்ப் பருமனுள்ள முத்துக்களால்ஆன செபமாலை
('தஸ்பீஹ்மணி') ஒன்றை அனுப்பினார்;
முகம்மது ஹுசைன் நயினார்,சீதக்காதி வரலாறு, மதராஸ்:சுல்தானா அப்துல்லாஹ்
வெளியீடு

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF#cite_ref-0

ஜபமாலையைச் செபமாலை என்று கவனமாக எழுதியவருக்கு ‘தஸ்பீஹ்’ க்கு தமிழ்
வடிவம் தேவையற்றதாகத் தெரிகிறது.

இணையத்தில் தென்படும் கிரந்தம் கலந்த எண்ணற்ற அரபுச் சொற்களை ‘ஆரியமும்
ஆன்மிகமும்’ இழையில் சுட்டிக்காட்டினேன். அது இன்னும் மிகுந்துள்ளது.
செல்வன் அவர்கள் கனவுகாணும் சனநாயகம் தழைத்தால் சரி . சனநாயகத்தை
வேண்டாம் என்பார்களா?

இது குறித்துப் பேச்சு ஏற்பட்டதால் எழுதினேன்; நோக்கம் திசை
திரும்புவதாக இழையின் நாயகர் கருதினால் அவரிடம் மன்னிப்புக் கோருகிறேன்


தேவ்

Hari Krishnan

unread,
Aug 14, 2010, 1:26:50 AM8/14/10
to mint...@googlegroups.com


2010/8/14 devoo <rde...@gmail.com>

ஜபமாலையைச் செபமாலை என்று கவனமாக எழுதியவருக்கு ‘தஸ்பீஹ்’ க்கு தமிழ்
வடிவம் தேவையற்றதாகத் தெரிகிறது.


தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று அன்னார் எப்படி பிப்பார்?  ஒருவேளை சபிப்பாரோ?
--
அன்புடன்,
ஹரிகி.

karthi

unread,
Aug 14, 2010, 1:48:20 AM8/14/10
to mint...@googlegroups.com
பள்ளிக்கூடங்களில் ஒரு தகுதர (standard) எழுத்துத் தமிழ்க் கற்றுத்தரப்பட
வேண்டும்.
ஆனால் பழைய இலக்கணங்களை மேலும் எளிமைப் படுத்திக் கற்றுத் தர

வேண்டும்.

பள்ளிப்பாடத்தின் ஒரு பகுதியாக பேச்சுத் தமிழும் இருக்க வேண்டும்.
அதிலும் ஒரு தகுதரப் பேச்சுத் தமிழ் கற்றுத் தரப்படலாம்.

பிள்ளைகளின் வீட்டுப் பேச்சு மொழி வெவேவேறாக இருக்கலாம்.
அதைத் திருத்திப் பிரயோஜனமில்லை. ஆனால் தகுதரப்
பேச்சுத் தமிழை அவர்கள் கற்றுக்கொண்டால் பிற குழுப்
பிள்ளைகளோடு அவர்கள் பேச வாகாக இருக்கும்.

மற்றபடி ஆங்கிலம் கலந்த தமிழ், எஃப் எம் தமிழ், டிவி காம்பியர் தமிழ்
என்பதெல்லாம் வசதிக்கேற்ப இயற்கையாக உருவாகிவிடும். அவற்றை
ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஊடாடு மொழியாக வளர்ந்ததன் ஒரு
காரணம் அங்குள்ள குடும்பத் தமிழ் வெவ்வெறு வகையாக இருப்பதுதான்
என எண்ணுகிறேன். பிராமணத் தமிழ் பேசும் குடும்பத்துப் பிள்ளையும்
சென்னைத் தமிழ்க் குடும்பத்துப் பிள்ளையும் வளர்ந்து வேலைக் களத்தில்
சந்திக்கும் போது ஊடாட விரும்பினால் அவர்களுக்கு வாகான மொழி
ஆங்கிலமே!

ரெ.கா.

----- Original Message -----
From: "விஜயராகவன்" <vij...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>

karthi

unread,
Aug 14, 2010, 1:51:07 AM8/14/10
to mint...@googlegroups.com
ஹரி!
 
Touche!
 
எப்படி இப்படியெல்லாம் கண்ணி வைத்து ஆட்களைப் பிடிக்கிறீர்கள்?
 
ரெ.கா.
--

வினோத்-VINOTH

unread,
Aug 14, 2010, 1:55:12 AM8/14/10
to mint...@googlegroups.com


14 ஆகஸ்ட், 2010 10:56 am அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

:))))

--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


செல்வன்

unread,
Aug 14, 2010, 1:57:47 AM8/14/10
to mint...@googlegroups.com
விஜயராகவன்,

பிழைப்புக்கு உதவாத தன்மை எதுவும் தக்கது அல்ல. ஒரு உயிரினம் எத்தனை தூரம் சர்வைவ் ஆகிறது, எத்தனை காலம் சர்வைவ் ஆகிறது என்பதுதான் அது தக்கதா இல்லையா என தீர்மானிக்கிறது.பாரசைட்டுகளுக்கும் பரினாம வளர்ச்சியில் ஒரு பங்கு இருக்கதான் செய்கிறது.அதனால் தான் அது தப்பி பிழைத்திருக்கிறது.

ஜோதி என்பதை சோதி என தான் எழுதுவேன் என்பவரை யார் என்ன செய்யமுடியும்?முடியாது..நீ ஜோதி என தான் எழுதவேண்டும் என சொல்லமுடியுமா? பேனாவை கையில் பிடித்தவர்கள் எல்லோரும் மனதில் நினைப்பதை எழுதிதான் தீர்வார்கள். டையாட்ரிக்ஸ், புதிய எழுத்துமுறை, மணிபிரவாளம், தனித்தமிழ், சென்னைதமிழ், தமிங்கிலம் என எக்ஸ்பெரிமெண்டுகள் ஒவ்வொரு காலத்திலும் ஒரு மொழியில் எழுந்தவண்ணம் தான் இருக்கும்.காலபோக்கில் மக்கள் அதில் பயனுள்ளதை ஏற்பார்கள், பயனற்றதை ஒதுக்குவார்கள்.இது ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சியில் இன்றியமையாத பகுதி.

அவரவர் மனமகிழ்ச்சிக்கு எதை செய்தாலும் அதை நாம் தவறு காணகூடாது.ஜார் புஷ்ஷை சியார்சு பிய்ச்சு என எழுதி படித்தால் அவர்களுக்கு ஏதோ மன அமைதி கிடைக்கிறதென்றால் அதை தடுக்க நான் யார்?எனக்கு நடை புரிந்தால் பதிவை படிப்பேன்.இல்லையெனில் கணிணியின் வலது மூலையில் கடைசியாக இருக்கும் சிகப்பு எக்ஸ் குறியை அமுக்கினால் வேலை முடிந்தது."நீ இப்படி எழுது" என என்னை யார் சொன்னாலும் கேட்கபோவதில்லை.அப்புறம் நான் ஏன் இன்னொருவரை இப்படி எழுதாதே அப்படி எழுது என சொல்லவேண்டும்?


--
செல்வன்

www.holyox.blogspot.com


"ஒரு பணக்காரனையும், அவனது வசதியான வாழ்வையும் காணும் கம்யூனிஸ்ட் "எந்த மனிதனுக்கும் இத்தனை வசதி இருக்க கூடாது" என நினைப்பான்.இதையே ஒரு முதலாளித்துவவாதி பார்த்தால் "எல்லா மனிதருக்கும் இதே போன்ற வசதியான வாழ்க்கை வேண்டும்" என நினைப்பான் " - பிலிப்ஸ் ஆடம்ஸ்

srirangammohanarangan v

unread,
Aug 14, 2010, 1:59:13 AM8/14/10
to mint...@googlegroups.com
திரு கார்த்தி
 
2010/8/14 devoo <rde...@gmail.com>
ஜபமாலையைச் செபமாலை என்று கவனமாக எழுதியவருக்கு ‘தஸ்பீஹ்’ க்கு தமிழ்
வடிவம் தேவையற்றதாகத் தெரிகிறது.


திரு தேவ் எடுத்துக் காட்டியிருப்பதில் பல விஷயங்கள் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. தங்களுக்கு என்ன படுகிறது?
:--))

 

வினோத்-VINOTH

unread,
Aug 14, 2010, 2:00:59 AM8/14/10
to mint...@googlegroups.com


14 ஆகஸ்ட், 2010 11:29 am அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதியது:

திரு கார்த்தி
 
2010/8/14 devoo <rde...@gmail.com>
ஜபமாலையைச் செபமாலை என்று கவனமாக எழுதியவருக்கு ‘தஸ்பீஹ்’ க்கு தமிழ்
வடிவம் தேவையற்றதாகத் தெரிகிறது.


திரு தேவ் எடுத்துக் காட்டியிருப்பதில் பல விஷயங்கள் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. தங்களுக்கு என்ன படுகிறது?
:--))


தமிழி்ற்குப்பதிலாக மதம் வெளிப்படையாகத்தெரிகிறது  :(
 

--

செல்வன்

unread,
Aug 14, 2010, 2:06:36 AM8/14/10
to mint...@googlegroups.com


2010/8/14 devoo <rde...@gmail.com>

தமிழ் இணயத்தின் இரட்டை நிலைப்பாடு பிடிபடாத ஒன்றாக உள்ளது.
வடசொற்களின் கிரந்த எழுத்தால் தூய்மை கெடுகிறது, அதை நீக்க வேண்டும்
என்போருக்கு அரபுச் சொற்களில் உள்ள கிரந்தம் கண்ணில் படுவதில்லை.

தேவ் ஐயா

முந்தி ஒரு குழுமத்தில் கிரந்தம் கூடாது என்றால் ஹாஜியார் என்பதை எப்படி எழுதுவீர்கள் என கேட்டேன்.காய்ச்சியார் என எழுதுவோம் என்றார்கள்.அதே இழையில் பங்கெடுத்த இஸ்லாமிய அன்பர் ஒருவர் "ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல இருக்கு" என கோபித்துகொண்டார்:-)




--
செல்வன்

www.holyox.blogspot.com


"ஒரு பணக்காரனையும், அவனது வசதியான வாழ்வையும் காணும் கம்யூனிஸ்ட் "எந்த மனிதனுக்கும் இத்தனை வசதி இருக்க கூடாது" என நினைப்பான்.இதையே ஒரு முதலாளித்துவவாதி பார்த்தால் "எல்லா மனிதருக்கும் இதே போன்ற வசதியான வாழ்க்கை வேண்டும்" என நினைப்பான் " - பிலிப்ஸ் ஆடம்ஸ்

srirangammohanarangan v

unread,
Aug 14, 2010, 2:08:50 AM8/14/10
to mint...@googlegroups.com
நாம் உயர்வாக நினைக்கும் விஷயங்களை அவற்றின் ஒலிகள் கூட மாறாமல்
உச்சரிக்கப் படவேண்டும் என்று கருதுகிறோம்
அவ்வாறேதான் மற்றவரும் கருதுவர் என்பதை ஒப்புவதில்லை.

 

Tthamizth Tthenee

unread,
Aug 14, 2010, 2:12:18 AM8/14/10
to mint...@googlegroups.com
  முதலில்  வடமொழி வாயில் நுழையவில்லை  என்று வெறுக்கத்தொடங்கினர்
 
மிகத்திறமையாக  வாயில் நுழையாத சொற்களையெல்லாம்  வடமொழியாக்கி விட்டனர் இப்போது
 
 தமிழில் சரியாக உச்சரிக்க  முடியாத   எழுத்துக்களையும் வட மொழி என்கிறார்கள்
 
ழா வை  ள ஆக்கினர்
 
வாழைப்பழம்   வாளைப்பளம் ஆனது
 
தமிழை  தமில் ஆக்கினர்
 
தமிழ்   தாமில்  என்றாகிவிட்டது
 
ஆங்கிலத்தை      ஆங்கிலேயர்களுக்கு   உச்சரிப்புக்கு ஈடாக  உச்சரிக்க கற்றுக்கொண்ட  நம்மால் நம் மொழியை  உச்சரிக்க கற்றுக்கொள்ள முடியாதா  அதை விடுத்து    தங்களுக்கு  தேவையான விதத்திலெல்லாம்  மொழியை மாற்றுவது  மிகக் கொடுமையானது
 
அம்மாவை      மம்மி  ஆக்கி   கர்பக்ருஹத்தை   சமாதி ஆக்கிவிட்டனர்
 
நாம் முயன்று மொழியைக் கற்க வேண்டுமே தவிர  நம் வசதிக்காக மொழியை மாற்றுவது  நியாயம் இல்லாத செயல்
 
அம்மாவை  மாற்றலாமோ?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
On 8/14/10, வினோத்-VINOTH <vino...@gmail.com> wrote:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

விஜயராகவன்

unread,
Aug 14, 2010, 2:25:29 AM8/14/10
to மின்தமிழ்
On 14 Aug, 06:57, செல்வன் <holy...@gmail.com> wrote:
>
> ஜோதி என்பதை சோதி என தான் எழுதுவேன் என்பவரை யார் என்ன
> செய்யமுடியும்?முடியாது..நீ ஜோதி என தான் எழுதவேண்டும் என சொல்லமுடியுமா?


ஜோதியா, சோதியா என்பது பிரச்சினை இல்லை. உங்கள் “உள் ஜோதி”ப்படி
எழுதுங்கள். ஆனால் “தூயதமிழ்” வழியாக பிழைகள் பார்க்கும் மனப்பான்மை -
செயல்முறையில் வடஎழுத்து ஒரீஇ மனப்பான்மை- இந்த இழையின் கதாநாயகன்
“கட்டுரை”, மற்றும் தொல்காப்பியர் துதி மனப்பான்மை - புல்லுருவித்தனம்.


> பேனாவை கையில் பிடித்தவர்கள் எல்லோரும் மனதில் நினைப்பதை எழுதிதான்
> தீர்வார்கள். டையாட்ரிக்ஸ், புதிய எழுத்துமுறை, மணிபிரவாளம், தனித்தமிழ்,
> சென்னைதமிழ், தமிங்கிலம் என எக்ஸ்பெரிமெண்டுகள் ஒவ்வொரு காலத்திலும் ஒரு
> மொழியில் எழுந்தவண்ணம் தான் இருக்கும்.காலபோக்கில் மக்கள் அதில் பயனுள்ளதை
> ஏற்பார்கள், பயனற்றதை ஒதுக்குவார்கள்.இது ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சியில்
> இன்றியமையாத பகுதி.


அதுசரி, அதே சமயம் நாம் ஏன் தூயதமிழ்வாதிகளிலிருந்து பிழைகளைப்பற்றி
லெக்சர் கேட்க வேண்டும். அது ஒரு வித “ஓ பாவிகளே” பிரச்சாரம்

>
> அவரவர் மனமகிழ்ச்சிக்கு எதை செய்தாலும் அதை நாம் தவறு காணகூடாது.

ஒருவர் மனமகிழ்ச்சிக்கு 99% தமிழை தவறு காண்பது ஒரு பெர்வர்ஷன்,
கண்டிக்கத்தக்க பெர்வர்ஷன்.


ஒருவர் தன் மனமகிழ்ச்சிக்கு மற்றவர்களை தாழ்த்த வேண்டும் என்பதை ஒப்புக்
கொள்ள முடியாது.

ஜார் புஷ்ஷை
> சியார்சு பிய்ச்சு என எழுதி படித்தால் அவர்களுக்கு ஏதோ மன அமைதி
> கிடைக்கிறதென்றால் அதை தடுக்க நான் யார்?எனக்கு நடை புரிந்தால் பதிவை
> படிப்பேன்.இல்லையெனில் கணிணியின் வலது மூலையில் கடைசியாக இருக்கும் சிகப்பு
> எக்ஸ் குறியை அமுக்கினால் வேலை முடிந்தது."நீ இப்படி எழுது" என என்னை யார்
> சொன்னாலும் கேட்கபோவதில்லை.அப்புறம் நான் ஏன் இன்னொருவரை இப்படி எழுதாதே அப்படி
> எழுது என சொல்லவேண்டும்?

இப்படி சொல்கிறீர்கள். தமிழ் விக்கி போன்ற பொதுத்தளங்களில் பாருங்கள் -
தலிபான்களின் பித்தலாட்டம், சர்வாதிகாரம்.


விஜயராகவன்

Sri Sritharan

unread,
Aug 14, 2010, 5:44:23 AM8/14/10
to மின்தமிழ்

>
> இப்படி சொல்கிறீர்கள். தமிழ் விக்கி போன்ற பொதுத்தளங்களில் பாருங்கள் -
> தலிபான்களின் பித்தலாட்டம், சர்வாதிகாரம்.
>
>
> விஜயராகவன்

விசயராகவன், சுத்திச் சுத்திச் சுப்பற்றை கொல்லையில் தான் நிக்கிறியள்:)

அன்புடன்
சிறீதரன்

devoo

unread,
Aug 14, 2010, 7:45:02 AM8/14/10
to மின்தமிழ்
>> ஹாஜியார் என்பதை எப்படி எழுதுவீர்கள் என கேட்டேன்.காய்ச்சியார் என
எழுதுவோம் என்றார்கள். <<

கிரந்தத்தை நீக்கினால் ’ஹஜ்’ அச்சு என வடிவம் பெறும்; 'ஹாஜி' ஆசி,
காசி என்றாகும், இவை ஹிந்துக்களிடையே புழங்கும் பெயர்கள்.

’ஜூலை வந்து விட்டது’ என்பதை ’சூலை வந்து விட்டது’ என்று எழுதவேண்டும்;
யாருக்குச் சூலை நோய் ? என்னும் வினா எழும் என்று கூறினேன். சூலைத்
திங்கள் என எழுதலாம் என்று அறிவுரை கூறப்பட்டது.

கிரந்த எழுத்துக்கள் தோன்றக்காரணம் :
-------------------------------------------------------------------

வடமொழியில் ’ஸநக:’ , ’ஜநக: ’ என்று இரு பெயர்கள் ; ’ஸநகர்’
நான்முகனாரின் குமாரர். ஸநகாதியர் ஆலமர் கடவுளிடம் உபதேசம் பெறுகின்றனர்.
’ஜநகர்’ சீதாபிராட்டியாரின் தகப்பனார். தமிழில் இரு பெயரையும் ’சனகர்’
என்று மட்டுமே எழுத முடியும். கிரந்த எழுத்துக்கள் பெயர் மயக்கத்தை
நீக்கும்.

மேலும் வடசொற்கள் தமிழில் இந்த வகையில் மட்டுமே வடிவம் பெற வேண்டும்
என்னும் வரையறையும் இல்லை.
எ கா : அட்ட வீரட்டானம் , இது அஷ்ட வீரஸ்தாநம் என்பதன் தமிழ் வடிவம்.
அட்ட வீரத்தானம் என்றுதான் அமைவது முறை. ஏன் ’வீரட்டானம்’ ஆனது என்று
புரியவில்லை. ‘தர்ம தர்சநம்’ மற்றொன்று.

கிரந்த எழுத்தை எதிர்ப்போர் பிறமொழிகளின் அமைப்பையும், நுட்பத்தையும்
புரிந்து கொள்ள வேண்டும்


தேவ்

Subashini Tremmel

unread,
Aug 14, 2010, 8:05:44 AM8/14/10
to mint...@googlegroups.com


2010/8/14 Sri Sritharan <ksth...@hotmail.com>
திரு.சிறீதரன்,
 
அவர் தனது பெயரை விஜயராகவன் என கையெழுத்திட்டிருக்கின்றார். அதற்குக் கீழேயே நீங்கள் அவரது பெயரை மாற்றி எழுதுகின்றீர்கள். ஒருவரது பெயரை மாற்றும் உரிமை பிறருக்கு இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. 
 
-சுபா
 
அன்புடன்
சிறீதரன்

விஜயராகவன்

unread,
Aug 14, 2010, 8:11:40 AM8/14/10
to மின்தமிழ்
நான் சொல்ல வந்ததை உடனே, முதல் சொல்லிலேயே, சிறீதரன் நிரூபித்து
விட்டார்.


மேலும் சுபாஷிணி, இதில் என்ன `தாழ்மையான கருத்து` என ஒரு அபாலஜி போட


வேண்டும்?


விஜயராகவன்


On 14 Aug, 13:05, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> 2010/8/14 Sri Sritharan <ksthar...@hotmail.com>

Subashini Tremmel

unread,
Aug 14, 2010, 8:40:54 AM8/14/10
to mint...@googlegroups.com


2010/8/14 விஜயராகவன் <vij...@gmail.com>

நான் சொல்ல வந்ததை உடனே, முதல் சொல்லிலேயே,  சிறீதரன் நிரூபித்து
விட்டார்.


மேலும் சுபாஷிணி, இதில் என்ன `தாழ்மையான கருத்து` என ஒரு அபாலஜி போட
வேண்டும்?
 
அபாலஜி கிடையாது. இதுவே காரணமாகக் கொண்டு மேலும் சில விவாதங்கள் வேண்டாம் என்பதற்குத்தான்.
-சுபா
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Message has been deleted

N. Ganesan

unread,
Aug 14, 2010, 8:56:13 AM8/14/10
to மின்தமிழ்

On 14 Aug, 00:55, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:

> 14 ஆகஸ்ட், 2010 10:56 am அன்று, Hari Krishnan

> <hari.harikrish...@gmail.com>எழுதியது:

> > 2010/8/14 devoo <rde...@gmail.com>

> > ஜபமாலையைச் செபமாலை என்று கவனமாக எழுதியவருக்கு ‘தஸ்பீஹ்’ க்கு தமிழ்
> >> வடிவம் தேவையற்றதாகத் தெரிகிறது.

> > தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று அன்னார் எப்படி *ஜ*பிப்பார்?  ஒருவேளை


> > சபிப்பாரோ?

> :))))

அன்னார் செபிப்பார்.

தஸ்பீஹ் என்றால் என்ன? தமிழில் - உ-ம்: கம்பனை அடியொற்றிய
உமறு தசுபீகு என்று எழுதுவார்.

பழமைபேசி ஹிஹிஹி - ஃகிஃகிஃகி என்று எழுதுகிறார். படிக்காமலா இருக்கிறோம்?

g - ’க், j - ’ச், dh - ’த், b - ’ப், h - ஃக், s - ஃச், sh - ^ச்
- ஒரு எளிய டையாகிரிட்டிக்சு முறை.

யுனிகோடில் இன்னும் நுட்பமாக, சரியாக அமைக்க இயலும்.
எல்லோரும் சேர்ந்து செய்யமுடியும்.
தமிழ் 30 எழுத்தில் மீக்குறிகள் கொண்டுவந்தால் எல்லா ஒலிகளையும்
குறிக்கலாம்.  ஐரோப்பாவில் இருந்து பங்ச்சுஏசன் மார்க்குகளைக்
கொண்டுவந்தாற்போல், இதையும் செய்யலாம்.

ஜெபிப்பார் - ‘செபிப்பார்
ஜபிப்பார் - ‘சபிப்பார்
தஸ்பீஹ் - தஃச்பீஃக்

(jean-luc-ல் உள்ள "z" ஒலிக்கு ஃழா).

டையாக்கிரிட்டிக்சால் தமிழ் 30 எழுத்துடன் கூட்டி
எந்த ஒலியையும் சொல்லலாம்.

நா. கணேசன்

> --
> *வினோத் கன்னியாகுமரி*
> *http://tamil2friends.com/friends/vinoth*

Sri Sritharan

unread,
Aug 14, 2010, 8:56:21 AM8/14/10
to மின்தமிழ்

>
> அவர் தனது பெயரை விஜயராகவன் என கையெழுத்திட்டிருக்கின்றார். அதற்குக்
> கீழேயே நீங்கள் அவரது பெயரை மாற்றி எழுதுகின்றீர்கள். ஒருவரது பெயரை
> மாற்றும் உரிமை பிறருக்கு இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
>
> -சுபா

உங்களுக்கு ன/ண குழப்பம் வருவது போலவே எனக்கும் ஜ/ச, ஷ/ச குழப்பம் வருகிறது:) இயல்பாக எழுதப்போனால் இப்படித் தடுமாறுவது இயல்பு தானே. என்றாலும், இனிமேல் கவனித்து எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி

N. Ganesan

unread,
Aug 14, 2010, 9:04:33 AM8/14/10
to மின்தமிழ்

On Aug 13, 2:33 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> தமிழில் வடமொழிக்கே தனிப்பட்ட ஒலிகள் போல் நினைத்து
> நாம் மயங்கும் ஒலி வகைகளான வர்க்க ஒலிகளை முற்றிலும் தமிழ் மொழியிலிருந்து
> நீக்கிவிட்டுத் தமிழைப் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்
> பார்க்கவேண்டும்....
>

பேசுவதைப் பற்றியதில்லை தினமணிக் கட்டுரை.

தமிழ் 30 எழுத்தில் எழுதுவதைக் குறிப்பிட்டுள்ளனர்.

சரியான ஒலிப்பு வேண்டுமானால், எல்லா கிரந்த எழுத்தையும்
(40-50 இருக்கும்) பயன்படுத்துவது ஒருமுறை.

தமிழின் 30 எழுத்தின் மேல் மீக்குறிகள் இட்டு எழுதுவது
இன்னொரு முறை.

அன்புடன்,
நா. கணேசன்

விஜயராகவன்

unread,
Aug 14, 2010, 9:06:13 AM8/14/10
to மின்தமிழ்

சந்தோசம் , உங்கள் கவனத்திற்க்கு, அல்லது கவன முயற்ச்சிகளுக்கு. பெயர்கள்
மூளையின் வேலை அல்ல, விரல்களின் வேலை காபி-பேஸ்ட்.

விஜயராகவன்

devoo

unread,
Aug 14, 2010, 10:23:24 AM8/14/10
to மின்தமிழ்
>> தஸ்பீஹ் என்றால் என்ன? <<

தஸ்பீஹ் - तसबीह - rosary


தேவ்

devoo

unread,
Aug 14, 2010, 12:05:49 PM8/14/10
to மின்தமிழ்
கணேசர் ஐயா,

தஸ்பீஹ் என்றால் என்ன? தமிழில் என்று கேட்கிறீர்கள்; சபித்தல் தவறு,
செபித்தல் சரி என்கிறீர்கள்; மீக்குறிகளைப்பற்றிச் சொல்கிறீர்கள்,
எல்லாம் சரிதான்.

இழையின் இதயப்பகுதியான

1) தமிழ்ச்சொல் வடபாடைக்கண் செல்லாமையானும் வடசொல் எல்லா தேயத்திற்கும்
பொதுவாகலானும் இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டனவெனல் வேண்டும்.
2) .....அல்லதூஉம் அவை தமிழ்ச்சொல்லாயின் வடவெழுத்தொரீஇ என்றல்
பொருந்தாமையானும், வடசொல்லாதல் அறிக.

என்னும் வரிகளைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே , ஏன் ?


தேவ்

On Aug 14, 7:56 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Aug 14, 2010, 1:17:38 PM8/14/10
to மின்தமிழ்

On Aug 14, 11:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> கணேசர் ஐயா,
>
> தஸ்பீஹ் என்றால் என்ன? தமிழில் என்று கேட்கிறீர்கள்;  சபித்தல் தவறு,
> செபித்தல் சரி என்கிறீர்கள்;  மீக்குறிகளைப்பற்றிச் சொல்கிறீர்கள்,
> எல்லாம் சரிதான்.
>

நன்றி.

> இழையின் இதயப்பகுதியான
>
> 1) தமிழ்ச்சொல் வடபாடைக்கண் செல்லாமையானும் வடசொல் எல்லா தேயத்திற்கும்
> பொதுவாகலானும் இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டனவெனல் வேண்டும்.
> 2) .....அல்லதூஉம் அவை தமிழ்ச்சொல்லாயின் வடவெழுத்தொரீஇ என்றல்
> பொருந்தாமையானும், வடசொல்லாதல் அறிக.
>
> என்னும்  வரிகளைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே , ஏன் ?
>

நீங்கள் சொல்லுங்கள்.

அன்புடன்,
நா. கணேசன்

> தேவ்

> > > *http://tamil2friends.com/friends/vinoth*- Hide quoted text -

devoo

unread,
Aug 14, 2010, 2:35:48 PM8/14/10
to மின்தமிழ்
*தமிழ்ச்சொல் வடபாடைக்கண் செல்லாமையானும்*

தமிழ்ச் சொற்கள் வடமொழியில் புகவில்லை.

ஆரியச் சிறப்பெழுத்தானும், பொதுவும் சிறப்புமாகிய இரண்டெழுத்தானும்
தமிழில் சிதைந்து வரும் தற்பவச் சொற்களை இங்கு சொல்கிறார். தமிழ்ச்
சொற்கள் இங்கிருந்து அங்கு போயின என்பது உறுதியாக மறுக்கப்படுகிறது.

உழை உஷா ஆனது, ஏழை ஏஷா ஆனது, சிகைமா சீயமாக உருவெடுத்துப் பின்
சிம்மமானது என்பன போன்ற வாதங்கள் இங்கு மறுக்கப்படுகின்றன. ஸிம்ஹ:
‘ஹிம்ஸ்’ வேரின் அடிப்படையில் தோன்றுவது. ஸிம்ஹம் சிம்மம், சிங்கம்
என்றாகிறது.

அவை தமிழ்ச்சொற்கள் என்று வாதம் செய்தால் ’வடவெழுத்தொரீஇ ’ என்பது
பொருளற்றதாகும்

தேவ்


geeyes

unread,
Aug 14, 2010, 2:51:01 PM8/14/10
to மின்தமிழ்
>
> தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று அன்னார் எப்படி *ஜ*பிப்பார்?  ஒருவேளை

> சபிப்பாரோ?
> --
> அன்புடன்,
> ஹரிகி.


'ஜபி' க்கலையேல்
'சபி' ... ஹ ஹ ஹா

Kannan Natarajan

unread,
Aug 20, 2010, 2:17:25 AM8/20/10
to Min Thamizh
மொழிப் பயிற்சி- 2:- பிழையின்றித் தமிழ்- பேசுவோம், எழுதுவோம்!
 
இடையின ரகரம், வல்லின றகரம்:-

இவற்றைச் சின்ன "ர" பெரிய "ற" என்று சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது.
 
பெரியவருக்குச் சின்ன "ர" போடவேண்டும்; சிறியவருக்குப் பெரிய "ற" போடவேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வர்.

ய,ர,ல,வ,ழ,ள என்னும் இடையின எழுத்துகளுள் ஒன்று "ர".
 
க,ச,ட,த,ப,ற என்னும் வல்லின எழுத்துகளுள் ஒன்று "ற".
 
தகராறு எனும் சொல்லில் (தகர் + ஆறு) "ர்" இடையினம்; "று" - வல்லினம்.
 
சுவர் என்னும் சொல்லுடன் "இல்" உருபு சேர்த்தால் சுவர் + இல் = சுவரில் என்றுதான் ஆகும்.
 
ஆனால் பலரும் சுவற்றில் எழுதாதே என்று (சுவறு + இல் = சுவற்றில்) தவறாக எழுதுகிறார்கள்.
 
சோறு + இல் = சோற்றில் என்பது சரி. (வல்லொற்று இரட்டித்தல் என்பது இலக்கணம்)
 
கயிறு என்று எழுதவேண்டிய சொல்லைக் கயர் எனத் தவறாக எழுதுவோர் உளர் (கயர் வியாபாரம்).

"ண"கர, "ந"கர, "ன"கரங்கள்:-

மூன்று சுழி "ண"னா, இரண்டு சுழி "ன"னா, காக்கா மூக்கு "ந"னா என்றெல்லாம் சொல்லுவதை விட்டு விடுவோம்.
 
தமிழ் எழுத்துகளின் வரிசையில் "ட" பின் வருவது டண்ணகரம்; "த"பின் வருவது தந்நகரம்; "ற"பின் வருவது றன்னகரம் என்று சுட்டப்படுதல் வேண்டும்.
 
இந்த மூன்றும் இடம்மாறி - எழுத்துமாறி போடப்பட்டால் பெரும் குழப்பமாகிவிடும்.
 
பொருள் வேறுபட்டுச் சிதைவு ஏற்படும்.
 
ஆதலின் கவனமாக இவ்வெழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

பனி - குளிர்ச்சியானது

பணி - பணிந்து போ, தொண்டு

பதநி - (பதநீர்) இளநி (இளநீர்) - பருகுபவை

அன்னை - தாய்; அண்ணன் - தமையன்; அந்நாள் - அந்த நாள்.
 
எந்த இடத்தில் எந்த எழுத்தைப் போடவேண்டும் என்று அறிதல் அவசியம்.
 
இன்றைய தமிழில் நேர்ந்துவிட்ட சிதைவுகள் - பிழைகள் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

சரியெனக் கருதும் பிழையானச் சொற்கள்:-

1. கோர்வை, கோர்த்து:-

அவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும் சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம். கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு "ர்" சேர்ப்பது தவறு.
 
சான்று:- நான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. "எடுக்கவோ கோக்கவோ என்றான்'' (வில்லி).

2. முகர்ந்து:-

மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான் என்று கதையில் எழுதுகிறார்கள். முகர்ந்து என ஒரு சொல் தமிழில் இல்லை. நுகர்ந்து என ஒரு சொல், அனுபவித்து எனும் பொருள் கொண்டது.
 
முகந்து என ஒரு சொல், (நீரை முகந்து) அள்ளி எனும் பொருள் கொண்டது.
 
மோந்து எனும் சொல்லே முகர்ந்து என மாறிவிட்டது.
 
மோந்து பார்த்தல் என்று சொல்லுவதில்லையா?
 
மோப்பநாய், "மோப்பக்குழையும் அனிச்சம்" என்பன காண்க.

3. முயற்சிக்கிறேன்:-

"உனக்காக நான் முயற்சிக்கிறேன்" என்று பேசுகிறார்கள்.
 
உனக்காக நான் முயல்கிறேன் என்றோ, முயற்சி செய்கிறேன் என்றோ சொல்ல வேண்டும்.
 
முயற்சிக்கிறேன் என்பது பிழை.
 
முயற்சி ஒரு தொழில்பெயர். முயல் என்பது வினைப் பகுதியாயினும் முயற்சி எனும் சொல் (தொழில்) பெயர்ச்சொல் ஆகிவிடுவதால் முயற்சிக்கிறேன் பிழையாகிறது.
 
ஆடுதல், பாடுதல் என்பனவும் தொழில் பெயர்களே.
 
ஆடுதலிக்கிறேன், பாடுதலிக்கிறேன் என்பதுண்டோ?

4. அருகாமையில்:-

என் வீடு அருகாமையில் உள்ளது என்று சொல்லுகிறோம்.
 
அருகில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
 
அருகாமை எனில் அருகில் இல்லாமை (அருகு+ஆ+மை) - சேய்மை எனும் பொருள் உண்டாகும்.
 
இல்லாமை, கல்லாமை, நில்லாமை, செல்லாமை என்பனவற்றுள் "ஆ" எதிர்மறை இடைநிலை இருப்பதுபோலவே, அருகாமையிலும் உள்ளது.

5. முன்னூறு:-

"நான் உனக்கு முன்னூறு ரூபா கொடுத்தேன்" என்றால், முன்-நூறு ரூபா கொடுத்தேன் என்று பொருளாகும்.
 
முந்நூறு கொடுத்தேன் என்றால், மூன்று நூறு ரூபாய் கொடுத்தேன் என்று பொருளாகும்.
 
மூன்று எனும் சொல்லில் றன்னகரம் வரினும் மூன்று + நூறு சேரும்போது, மூன்றில் உள்ள இரண்டு எழுத்தும் கெட்டு (நீங்கி) "மூ" எனும் நெடில் "மு" எனக் குறுகி மு + நூறு = முந்நூறு ஆகும்.
 
இலக்கியச்சான்று:- "பாரியின் பறம்பு முந்நூறு ஊர் உடைத்தே".
 
(தமிழ் வளரும்)

கவிக்கோ.ஞானச்செல்வன்  ( www.dinamani.com/Images/article/2010/8/8/8kdr10.jpg )

நன்றி:- தினமணி கதிர்

Dhivakar

unread,
Aug 20, 2010, 3:03:55 AM8/20/10
to mint...@googlegroups.com
றொம்ப னள்ளாதான் இறுக்கு இந்த கட்டுறை.. (:-

ஆனால், கையால் எழுதும்போதுதான் இவை எளிதான முறையில் பயில முடியும் என நினைக்கிறேன்..

கணினி காலத்தில் கணினியை உபயோகப்படுத்தும்போது வரும் தமிழில் வரும் இத்தகைய பிழைகள் - ஒவ்வொருமுறை தமிழா.. வேண்டாமே..- என்றுதான் சொல்லத் தோன்றும்.

2010/8/20 Kannan Natarajan <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Geetha Sambasivam

unread,
Aug 20, 2010, 4:14:46 AM8/20/10
to mint...@googlegroups.com
நல்லதொரு விவாதத்தின் மூலம் பல விஷயங்கள் புரிந்தன. நன்றி.

2010/8/20 Dhivakar <venkdh...@gmail.com>

devoo

unread,
Aug 20, 2010, 5:15:59 AM8/20/10
to மின்தமிழ்
>> தகராறு எனும் சொல்லில் (தகர் + ஆறு) "ர்" இடையினம்; "று" - வல்லினம்.<<

தகராறு திசைச் சொல்; तकरार - தக்ரார் என்பதிலிருந்து தோன்றியது,
அதைத் ‘தகர்’ ’ஆறு’ என்றெல்லாம் பிரிக்க முடியுமா ?


தேவ்


On Aug 20, 1:17 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *மொழிப் பயிற்சி- 2:- பிழையின்றித் தமிழ்- பேசுவோம், எழுதுவோம்!*
> **
> *இடையின ரகரம், வல்லின றகரம்:-*


>
>  இவற்றைச் சின்ன "ர" பெரிய "ற" என்று சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது.
>
> பெரியவருக்குச் சின்ன "ர" போடவேண்டும்; சிறியவருக்குப் பெரிய "ற" போடவேண்டும்
> என்று வேடிக்கையாகச் சொல்வர்.
>
> ய,ர,ல,வ,ழ,ள என்னும் இடையின எழுத்துகளுள் ஒன்று "ர".
>
> க,ச,ட,த,ப,ற என்னும் வல்லின எழுத்துகளுள் ஒன்று "ற".
>
> தகராறு எனும் சொல்லில் (தகர் + ஆறு) "ர்" இடையினம்; "று" - வல்லினம்.
>
> சுவர் என்னும் சொல்லுடன் "இல்" உருபு சேர்த்தால் சுவர் + இல் = சுவரில்
> என்றுதான் ஆகும்.
>
> ஆனால் பலரும் சுவற்றில் எழுதாதே என்று (சுவறு + இல் = சுவற்றில்) தவறாக
> எழுதுகிறார்கள்.
>
> சோறு + இல் = சோற்றில் என்பது சரி. (வல்லொற்று இரட்டித்தல் என்பது இலக்கணம்)
>
> கயிறு என்று எழுதவேண்டிய சொல்லைக் கயர் எனத் தவறாக எழுதுவோர் உளர் (கயர்
> வியாபாரம்).
>

> *
>
> "ண"கர, "ந"கர, "ன"கரங்கள்:-*


>
>  மூன்று சுழி "ண"னா, இரண்டு சுழி "ன"னா, காக்கா மூக்கு "ந"னா என்றெல்லாம்
> சொல்லுவதை விட்டு விடுவோம்.
>
> தமிழ் எழுத்துகளின் வரிசையில் "ட" பின் வருவது டண்ணகரம்; "த"பின் வருவது
> தந்நகரம்; "ற"பின் வருவது றன்னகரம் என்று சுட்டப்படுதல் வேண்டும்.
>
> இந்த மூன்றும் இடம்மாறி - எழுத்துமாறி போடப்பட்டால் பெரும் குழப்பமாகிவிடும்.
>
> பொருள் வேறுபட்டுச் சிதைவு ஏற்படும்.
>
> ஆதலின் கவனமாக இவ்வெழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
>
>  பனி - குளிர்ச்சியானது
>
> பணி - பணிந்து போ, தொண்டு
>
> பதநி - (பதநீர்) இளநி (இளநீர்) - பருகுபவை
>
> அன்னை - தாய்; அண்ணன் - தமையன்; அந்நாள் - அந்த நாள்.
>
> எந்த இடத்தில் எந்த எழுத்தைப் போடவேண்டும் என்று அறிதல் அவசியம்.
>
> இன்றைய தமிழில் நேர்ந்துவிட்ட சிதைவுகள் - பிழைகள் பற்றி இனி விரிவாகக்
> காண்போம்.
>

>  *சரியெனக் கருதும் பிழையானச் சொற்கள்:-*
>
>  *1. கோர்வை, கோர்த்து:-*


>
>  அவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும்
> சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம்.
> கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு
> "ர்" சேர்ப்பது தவறு.
>
> சான்று:- நான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. "எடுக்கவோ கோக்கவோ என்றான்'' (வில்லி).
>

>  *2. முகர்ந்து:-*


>
>  மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான் என்று கதையில் எழுதுகிறார்கள். முகர்ந்து
> என ஒரு சொல் தமிழில் இல்லை. நுகர்ந்து என ஒரு சொல், அனுபவித்து எனும் பொருள்
> கொண்டது.
>
> முகந்து என ஒரு சொல், (நீரை முகந்து) அள்ளி எனும் பொருள் கொண்டது.
>
> மோந்து எனும் சொல்லே முகர்ந்து என மாறிவிட்டது.
>
> மோந்து பார்த்தல் என்று சொல்லுவதில்லையா?
>
> மோப்பநாய், "மோப்பக்குழையும் அனிச்சம்" என்பன காண்க.
>

>  *3. முயற்சிக்கிறேன்:-*


>
>  "உனக்காக நான் முயற்சிக்கிறேன்" என்று பேசுகிறார்கள்.
>
> உனக்காக நான் முயல்கிறேன் என்றோ, முயற்சி செய்கிறேன் என்றோ சொல்ல வேண்டும்.
>
> முயற்சிக்கிறேன் என்பது பிழை.
>
> முயற்சி ஒரு தொழில்பெயர். முயல் என்பது வினைப் பகுதியாயினும் முயற்சி எனும்
> சொல் (தொழில்) பெயர்ச்சொல் ஆகிவிடுவதால் முயற்சிக்கிறேன் பிழையாகிறது.
>
> ஆடுதல், பாடுதல் என்பனவும் தொழில் பெயர்களே.
>
> ஆடுதலிக்கிறேன், பாடுதலிக்கிறேன் என்பதுண்டோ?
>

>  *4. அருகாமையில்:-*


>
>  என் வீடு அருகாமையில் உள்ளது என்று சொல்லுகிறோம்.
>
> அருகில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
>
> அருகாமை எனில் அருகில் இல்லாமை (அருகு+ஆ+மை) - சேய்மை எனும் பொருள் உண்டாகும்.
>
> இல்லாமை, கல்லாமை, நில்லாமை, செல்லாமை என்பனவற்றுள் "ஆ" எதிர்மறை இடைநிலை
> இருப்பதுபோலவே, அருகாமையிலும் உள்ளது.
>

>  *5. முன்னூறு:-*

ஆராதி

unread,
Aug 20, 2010, 7:45:57 PM8/20/10
to mintamil
திரு தேவ் எழுப்பிய வினா சரியானது

ஆராதி

N. Kannan

unread,
Aug 20, 2010, 9:56:21 PM8/20/10
to mint...@googlegroups.com
நல்ல கட்டுரை. முந்நூறு/முன்னூறு அழகு! இதை வைத்து பார்த்திபன் எப்படி
இன்னும் காட்சி அமைக்காமல் இருக்கார்? (பார்த்திபன் வடிவேலு காமெடி)

2010/8/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

venkatachalam Dotthathri

unread,
Aug 21, 2010, 12:04:32 AM8/21/10
to mint...@googlegroups.com
ஓம்
புலவர் ஒருவர் பேரம் செய்தார். ஒரு பொருளின் விலை ரூபாய் 100/- க்கு கேட்டார். வியாபாரி ஏற்கவில்லை.
புலவர் கூறினார்,” இருநூறு தருகிறேன்”, “முன்னூறு தருகிறேன் ”,”நானூறு தருகிறேன்”, ”ஐனூறு தருகிறேன் ‘’, “அறுனூறு தருகிறேன்,”,”எழுநூறு தருகிறேன்”, “எண்ணூறு தருகிறேன்” என்று உயர்த்தியது போல் விலை பேசினார். அவன் இறுதிச் சொல்லை ஏற்று பொருளைப் புலவரிஅம் தந்தான். புலவர் ஒரு நூறு ரூபாய் மட்டும் கொடுத்த்து விட்டு, “நான் உன்னிடம் பேசியவாறு ரூபாய் நூறு தந்துள்ளேன். ” என்றார்.

”புலவரே பொய்சொல்கிறீர்! எண்ணூறுக்குப் பேசி நூறுமட்டும் தருவது என்பது இழுக்கு. நான் விற்கமாட்டேன்” என்றான் வியாபாரி.

புலவர் தன் வாக்கின் விளக்கம் தந்தார்,” இரு- சற்று இரு ரூபாய் நூறு தருகிறேன்” என்றும் “ முன்-நூறு, முந்திப் பேசிய நூறு என்றும் ”, “நான் நூறு தருகிறேன்” என்றும், “ஐ- நீ பேச்சை மாற்றாதே என்பதை ஐநூறு தருகிறேன்”என்றும், “பேச்சினை அறு- நூறுதருகிறேன்” என்றும், “எழு- எழுந்துவிடு நூறு தருகிறேன்” என்றும். ”எண்ணிக்கொள் நூறு தருகிறேன்”  என்றும் தான் சொன்னேன் ” என்றார்.
வியாபாரி கூசும் மொழிபேசிவிட்டுத் தன்பொருளை எடுத்துக்கொண்டு மறைந்தான்.
ஓம்.வெ.சுப்பிரமணியன்

2010/8/21 N. Kannan <navan...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 21, 2010, 1:53:58 AM8/21/10
to mint...@googlegroups.com
அட??? இது ரொம்ப நல்லா இருக்கே?? நல்லவேளையாப் புலவரிடம் சண்டை போடலை வியாபாரி! பிழைச்சார்!

2010/8/21 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>
360.gif

MANICKAM POOPATHI

unread,
Aug 21, 2010, 2:06:41 AM8/21/10
to mint...@googlegroups.com
வணக்கம்:

1. தகரால் = தகர் (வினைச்சொல்) + ஆல் (கருவி/வேற்றுமை உருபு)
தகர்ச்சி/தகர்வு/இடிவு . . .

2. தகராறு = வாய்க்கால் வரப்புத் தகராறு
கரை யுடைத்து ஆற்றின் போக்கினை மாற்றும் போர் குற்றம்

3. தகரும் கொத்தளம் = தகராரு (சிதரடித்தல்) பங்குத் தகரார் (தகல்?)


தீர்த்தகர் = தீரா தகராற்றினையும் தீர்த்து வைப்போர்..?


தகறார் என்பது ஆர்மீனியன் மற்றும் வேறு சில மேற்காசிய
இந்தோ ஈரானிய மொழிகளிலும் வழங்கி வருவதாகவும் தெரிகிறது..!?

சமஸ்கிருதம் போல்.. ஹிந்தி ஒரு இயற்கை மொழி ஆகாது
என்பது மொழிவரலாற்றறிஞர் (Rajaram MohanRoy et al.) சிலரது வாதம் ஆகும்...


மிகவும் நன்றி..!


அன்புடன்.../ பூபதி
____________________

2010/8/20 devoo <rde...@gmail.com>:


>>> தகராறு எனும் சொல்லில் (தகர் + ஆறு) "ர்" இடையினம்; "று" - வல்லினம்.<<
>
>  தகராறு  திசைச் சொல்; तकरार - தக்ரார்  என்பதிலிருந்து  தோன்றியது,
> அதைத் ‘தகர்’ ’ஆறு’  என்றெல்லாம் பிரிக்க முடியுமா ?
>
>
> தேவ்
>

[சுறுக்கம் பெற்றது]

Kannan Natarajan

unread,
Sep 2, 2010, 3:30:13 PM9/2/10
to Min Thamizh
மொழிப்பயிற்சி - 4:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

13.பண்டகசாலை:-

பண்டங்கள் உடைய இடம் பண்டகம் அல்லது பண்டசாலை எனல் போதுமானது.

ஆனால் கூட்டுறவுப் பண்டக சாலை என்னும் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது.

அகம் எனின் மனம், வீடு, இடம் எனப் பலபொருள் உண்டெனினும் ஈண்டு இடம் எனப் பொருள் கொள்க.

நூல்கள் உடைய இடம் நூலகம்; பண்டங்கள் உடைய இடம் பண்டகம்.

பின் ஏன் சாலை என்று ஒரு சொல்.

உணவுச்சாலை என்பது போல் பண்ட சாலை எனலும் சரியாம்.

14.பதட்டம்
:-

நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப் பயன்பாட்டில் உள்ளது.

இச்சொல்லுக்குப் பொருள் இல்லை.

இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும்.

பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை.

இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம்.

15.கண்றாவி
:-

இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா?

இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை.

ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கிறோம். கேட்கிறோம்.

மிகக் கொடிய காண்பதற்குக் கூடாத காட்சியை இப்படிச் சொல்லி வருகிறோம்.

இது கண் அராவும் காட்சி.

ஆதலின் இச்சொல் கண்ணராவி என்றிருத்தல் வேண்டும். (அராவுதல்- இரும்பால் தேய்த்தல், அறுத்தல்)

ஊர்ப் பெயர்த் திரிபுகள்
:-

பயன்பாட்டில் உள்ள பல சொற்கள் எப்படிப் பிழையானவை என்பது பற்றி எடுத்துக் காட்டுகள் வழியாகப் படித்தீர்கள்.

இவ்வாறே பல  ஊர்களின் பெயர்கள் சிதைந்து பொருள் திரிந்து வழங்கப்பட்டு வருகின்றன.

ஆறுகளால் பெயரமைந்த ஊர்கள் உண்டு.

எடுத்துக்காட்டாக, அடையாறு, செய்யாறு, திருவையாறு எனும் பெயர்கள் காண்க.

அடையாறு என்பதை அடையார் என்று எழுதுகிறார்கள்.

பேருந்துகளிலும், பெயர்ப் பலகைகளிலும் காண்கிறோம்.

அடையார் என்றால் அடையமாட்டார் என்று பொருள்.

இனிப்பகம் ஒன்று அடையார் எனும் சொல்லோடு பயன்பாட்டில் உள்ளது.

அந்த இனிப்பகத்தை யாரும் சென்றடையமாட்டார்களா?

எவ்வளவு பெரிய தவறு இது?

செய்ய நீர் (சிவந்தநீர் - புதுவெள்ளம்) ஓடிய ஆறு செய்யாறு.

அந்த ஆற்றின் பெயரமைந்த ஊரைச் செய்யார் என்று எழுதியுள்ளார்கள்.

செய்யமாட்டார் என்ற பொருள் இதற்குண்டு.

என்ன செய்யமாட்டார்? ஏன் செய்யமாட்டார்? இப்படிச் சிதைக்கலாமா?

தஞ்சை அருகே திருவையாறு எனும் திருத்தலம் ஒன்றுள்ளது.

ஐந்து ஆறுகள் அருகருகே ஓடிச் செழித்த மண் இது.

இந்தத் திருவையாற்றைத் திருவையார் என்றெழுதுகிறார்கள்.

திருவையுடையவர் இவர் என்று பொருள் சொல்லலாமா?

அல்லது திரிகை (மாவு அரைக்கும் சிறு கருவி) எனும் சொல்லை "திருவை" என்று பாமரர் சொல்லுவர்.

இவர் திருவையார் என்பதா? என்ன கொடுமை இது?

ஆறுகளின் பெயர்களும் இப்படி ஆர் விகுதியோடு வழங்கப்பட்டு வருகின்றன.

காட்டாறு என்பதைக் காட்டார் (காட்டமாட்டார்) என்றும், புது ஆறு புத்தாறு என்பதைப் புதார் என்றும் குடமுருட்டியாறு என்பதைக் குடமுருட்டியார் (குடத்தை உருட்டியவர்) என்றும் ஓடம்போக்கியாறு என்பதை ஓடம் போக்கியார் (ஓடத்தைப் போக்கியவர்) என்றும் வழங்குதல் பிழையன்றோ?

வேறு சில ஊர்ப் பெயர்கள் வெவ்வேறு வகையில் சிதைந்து பிழையுறப் பயன்பாட்டில் உள்ளன.

(பழைய) சோழநாட்டின் கோடியில் (கடைசியில்) இருந்த கடற்கரை ஊரைக் கோடிக் கரை என்றனர்.

இப்போதும் தமிழ்நாட்டின் வரைபடத்தைப் பார்த்தால் கிழக்குக் கோடியில் ஒரு புள்ளியாக அவ்வூர் அமைந்துள்ள இடத்தைக் காணலாம்.

அதனை இன்று கோடியக்கரை என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்.

ஒருகால் வளைந்த கரை என்னும் பொருளுடையது என்றால் கோடிய கரை என்று "க்" போடாமல் எழுத வேண்டும்.

(கோடுதல் - வளைதல்; கோட்டம் - வளைவு)

ஆனால் இந்த ஊர்க் கடற்கரையில் கோட்டம் (வளைவு) எதுவும் இல்லை.

"ட" எனும் எழுத்தை இடம் வலமாக மாற்றிப் போட்டதுபோல் இரண்டு நேர்க்கோடுகளின் சந்திப்பாக அவ்விடம் இருப்பதைப் படத்தில் காணலாம். ஆதலின் கோடிக்கரை என்றே குறித்தல் பிழையற்றது.

தமிழ் வளரும்

விஜயராகவன்

unread,
Sep 2, 2010, 4:39:45 PM9/2/10
to மின்தமிழ்
On 2 Sep, 20:30, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
>
> 14.பதட்டம்*:-

>
> நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப்
> பயன்பாட்டில் உள்ளது.
>
> இச்சொல்லுக்குப் பொருள் இல்லை.
>
> இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும்.
>
> பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை.
>
> இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம்.*

மொழியின் மாத்தங்களை புரிந்து கொள்ளாதவர்கள் பதட்டம் அடைகின்றனர்.

ற்ற > த்த , ட்ட என மாறிவிட்டது

> 15.கண்றாவி*:-


>
> இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா?
>
> இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை.

சொல் இல்லாமலேயே அது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது?


கவிக்கோ.ஞானச்செல்வன்  (www.dinamani.com/Images/article/
2010/8/8/8kdr10.jpg)
>
> நன்றி:- தினமணி கதிர்


கவி, கோ என்று பட்டம் போட்டுக்கொண்டால், என்னவென்றாலும் உளரலாமா ?


விஜயராகவன்

செல்வன்

unread,
Sep 2, 2010, 5:29:22 PM9/2/10
to mint...@googlegroups.com

அடையார் ஆனந்த பவனில் வரும் அடையார் என்பது பெயர் சொல்

பெயர் சொற்களை பிரித்து பொருள் காண்பது விபரீத முயற்சி

John Burns (பெயர்ச்சொல்) என்பதை "ஜான் எரிகிறான்" என பொருள் காண்பது சரியா?

சொற்கள் காலபோக்கில் திரிவதும் இயற்கை.சென்னபட்டினம் என்பது இன்று சென்னையாகிவிட்டது. சென்னை என்ற சொல்லே அகராதியில் கிடையாது என கூறுதல் முறையா?



--
செல்வன்

www.holyox.blogspot.com

As a seventeen-year-old student at Rabbinical college, a riddle was put to me. A beggar is invited to a billionaire's home for dinner. The homeless man has never had such scrumptious food. He throws his entire being into slopping down his soup and devouring his chicken. Meanwhile, the rich man puts a napkin on his lap, sticks out a pinky, and eats with meticulous etiquette. The question, which of the two men is more attached to the food? I answered, 'Why, the poor man, of course. He's wolfing the stuff down as if it's his last meal.' 'Wrong,' my teacher told me. 'The rich man is much more attached. Want proof? Try taking the food away from each. For the poor man its easy-come-easy-go. He ate on the street yesterday, he'll find a way to make do today. But the rich man? Just try taking away his meal. His butler will assault you, the police will be called, his lawyer will sue...'-Rabbi Boteach



Innamburan Innamburan

unread,
Sep 2, 2010, 7:18:05 PM9/2/10
to mint...@googlegroups.com
அருமையான மேற்கோள், செல்வன். அவர் சொன்ன மற்றொன்று, "Because my
criticism is real, the church knows my friendship is real."
Innamburan

On 9/3/10, செல்வன் <hol...@gmail.com> wrote:
> அடையார் ஆனந்த பவனில் வரும் அடையார் என்பது பெயர் சொல்
>
> பெயர் சொற்களை பிரித்து பொருள் காண்பது விபரீத முயற்சி
>
> John Burns (பெயர்ச்சொல்) என்பதை "ஜான் எரிகிறான்" என பொருள் காண்பது சரியா?
>
> சொற்கள் காலபோக்கில் திரிவதும் இயற்கை.சென்னபட்டினம் என்பது இன்று
> சென்னையாகிவிட்டது. சென்னை என்ற சொல்லே அகராதியில் கிடையாது என கூறுதல் முறையா?
>
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com

> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>


> As a seventeen-year-old student at Rabbinical college, a riddle was put to
> me. A beggar is invited to a billionaire's home for dinner. The homeless man
> has never had such scrumptious food. He throws his entire being into
> slopping down his soup and devouring his chicken. Meanwhile, the rich man
> puts a napkin on his lap, sticks out a pinky, and eats with meticulous
> etiquette. The question, which of the two men is more attached to the food?
> I answered, 'Why, the poor man, of course. He's wolfing the stuff down as if
> it's his last meal.' 'Wrong,' my teacher told me. 'The rich man is much more
> attached. Want proof? Try taking the food away from each. For the poor man
> its easy-come-easy-go. He ate on the street yesterday, he'll find a way to
> make do today. But the rich man? Just try taking away his meal. His butler
> will assault you, the police will be called, his lawyer will sue...'-Rabbi
> Boteach
>

Kannan Natarajan

unread,
Sep 7, 2010, 5:27:12 AM9/7/10
to Min Thamizh
மொழிப்பயிற்சி - 5:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!


தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் (அமிர்தம்) தோன்றியதன்றோ?

அந்த அமிர்தத்தைக் குடத்தில் கொண்டு வந்து திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யப் பெற்ற ஈசன் பெயர் அமிர்தகடேசுவரர்.(கடம் - குடம்).

அந்தப் பெருமான் அருள்பாலிக்கும் ஊர் திருக்கடவூர்.

"திரு" எனும் அடைமொழி, தலங்களைச் சார்ந்து வருதல் அறிவோம்.

(அமிர்த) கடம் கொண்டு பூசிக்கப்பெற்ற ஊர் கடவூர்.

இந்த அழகான பெயர் இன்று என்ன ஆயிற்று?

திருக்கடையூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.

  • அறுபது அகவை நிறைவு (சஷ்டியப்த பூர்த்தி)
  • எண்பதகவை நிறைவு (சதாபிஷேகம்)
விழாக்கள் செய்திட மிகச் சிறந்த புனிதத் திருத்தலம் - மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வரம் தந்த சீர்த்தலம், கடையூரா? கடைப்பட்ட ஊரா?

சிந்தியுங்கள்; பிழையைத் திருத்துங்கள்.

சோலை ஒன்றில் ஒரு சிலந்தியும், ஆனையும் (யானையும்) சிவனை வழிபட்டு முத்தி பெற்ற திருத்தலம் திருவானைக்கா.

திருச்சிராப்பள்ளி நகரில் திருவரங்கம் செல்லும் வழியில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலம் இது.

ஆனையொன்று தான் தோன்றியாய் (சுயம்புவாக) எழுந்த சிவனை வழிபட்ட சோலை, ஆனைக்கா எனப் பெயர் பெற்றது. (கா - சோலை)

"திரு" என்னும் அடைமொழியோடு திருவானைக்கா ஆயிற்று.

இந்நாளில் இத்தலத்தின் பெயரைத் திருவானைக்கோவில் என்றும் திருவானைக் காவல் என்றும் எழுதுகிறார்கள்.

எழுத்தாளர்களும் தவறான பெயருக்கு விளக்கம் வேறு தருகிறார்கள்.

இது சரிதானா?

திருத்தப்பட வேண்டாவா?

நல்லவேளை; மயிலாடுதுறை இன்று தப்பித்துக் கொண்டது.

மயில்கள் ஆடுகின்ற வளமார்ந்த காவிரித்துறையுடைய ஊர் மயிலாடுதுறை என்று சொல்லப் பெற்றது.

இதனை மாயூரம் என்று பின்னாளில் வடமொழியால் குறித்தனர். (மயூரம் - மயில்).

இந்த மயூரத்தை மக்கள் மாயவரம் ஆக்கிவிட்டார்கள்.

இன்றைக்கும் இந்தப் பெயரைப் பலரும் சொல்கிறார்கள்.

மாய்வதற்கு (சாவதற்கு ) வரம் தரும் ஊரா இது?

ஒப்பார் இல் அப்பன் - ஒப்பிலியப்பன் என்று பெருமாளுக்குப் பெயர் சூட்டிப் பாடிப் பரவினர் அடியார்கள்.

பரம்பொருள், ஒப்பு - நிகர் அற்றது அன்றோ?

இப்பெருமான் எழுந்தருளியுள்ள ஊரின் பெயர் என்ன தெரியுமா?

உப்பிலியப்பன்கோவில்.

ஒப்பு இலி என்பதைப் பேச்சு வழக்கில் உப்பு இலி - உப்பிலி என்று ஆக்கி, அந்தப் பெருமாளுக்கே உப்பில்லாத திருவமுது படைத்து வழிபடுகிறார்கள்.

கடவுளுக்கே உப்பில்லாப் பத்தியமா?

தமிழை அறியாத கொடுமையல்லவா இது?

ஒற்று மிகுதலும் மிகாமையும்,ஒற்று மிகுதலை வலி மிகுதல் என்று இலக்கண நூலார் சொல்வர்.

வல்லெழுத்து ஆறனுள் க,ச,த,ப என்னும் நான்கு மட்டுமே மொழி முதல் எழுத்தாக வரும்.

ஒரு சொல்லிருக்க (நிலை மொழி) மற்றொரு சொல் வந்து சேரும்போது சில இடங்களில் இந்த க,ச,த,ப - என்பவை மிகும்.

சில இடங்களில் மிகா.

சிறந்த தமிழறிஞர்களின் நூல்களைப் படித்தாலே, மிகுதல், மிகாமைப் பற்றி இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும்.

எதற்கையா இந்த வம்பு?

க்,ச், த்,ப் எதுவும் போடாமல் இரண்டு சொற்களை அப்படியே எழுதிவிட்டால் என்ன என்று கருதுபவர் இருக்கிறார்கள்.

வாழை பழம், கீரை கறி - படித்துப் பாருங்கள், இயல்பாக உச்சரிக்க முடிகிறதா?

வாழைப்பழம், கீரைக்கறி என்று சொன்னால்தான் நிறைவாக உணர்கிறோம்.

இந்த ஒற்றெழுத்து மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய பொருள் வேறுபாடு உண்டு என்பதைத் தமிழர் அறிய வேண்டும்.

பல எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.

மருந்து கடை - மருந்தைக் கடை
மருந்துக்கடை - மருந்து விற்கும் கடை
ஏழை சொல்  - ஏழையின் வார்த்தை
ஏழைச்சொல்  - ஏழு எண்ணிக்கையைச் சொல்
வேலை தேடு - ஒரு வேலையைத் தேடிக் கொள்
வேலைத் தேடு - வேல் என்னும் ஆயுதத்தைத் தேடு
நடுகல் - செத்தார்க்கு நடப்படுவது
நடுக்கல் - நடுவில் உள்ள கல்;  உடம்பு நடுக்கல் (நடுக்குதல்)
சாகாடு - வண்டி
சாக்காடு - சாவு, மரணம்
கைமாறு - ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாறுவது
கைம்மாறு - நன்றிக்கடன்
பொய் சொல் - பொய் சொல்வாயாக
பொய்ச்சொல் - பொய்யான சொல்

தமிழ் வளரும்...

Innamburan Innamburan

unread,
Sep 7, 2010, 5:32:34 AM9/7/10
to mint...@googlegroups.com
நல்வரவு.


2010/9/7 Kannan Natarajan <thar...@gmail.com>

Dhivakar

unread,
Sep 7, 2010, 6:08:40 AM9/7/10
to mint...@googlegroups.com
நல்வரவு.
> இ

நல் வரவு

தி

2010/9/7 Innamburan Innamburan <innam...@googlemail.com>:


>
>
> 2010/9/7 Kannan Natarajan <thar...@gmail.com>
>>
>> மொழிப்பயிற்சி - 5:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!
>>
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Jana Iyengar

unread,
Sep 9, 2010, 7:50:34 AM9/9/10
to mint...@googlegroups.com
Unfortunately cannot write in Tamil as facilities for the same are not
available to adiyen.
Talking about proper pronunciation of Tamizh language I have to offer
the following thoughts:
1. There are two 'ra's in tamil. Ra and ra. Most of the scholars,
including the so called custodians of the language, cannot pronounce
and bring out the distinct diffrerence between these two letters,
typical of our language. aRam and aram are entirely different from
each other and this difference is lost while talking.
2. Tamizh language does not have Sa in it. When the name of the
capital city is Chennai, many Dravidan leaders pronounce it as Sennai.
Reverred pravachakas in Tamizh pronouce cha as Sha.
Who will check them and correct them?
Jana Iyengar

2010/8/1 N. Kannan <navan...@gmail.com>:
> 2010/8/1 Kannan Natarajan <thar...@gmail.com>:
>> அடுத்த வாரம் முதல் "தினமணி கதிரில்" கவிக்கோ ஞானச்செல்வன் எழுதும் "தமிழைப்
>> பிழையின்றி - பேசுவோம், எழுதுவோம்" தொடர் தொடங்குகிறது.
>>
>
> அதைத் தொடர்ந்து வெளியிட வேண்டுகோள். எல்லோருக்கும் பயன்படும்.
>
> க.>


>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Jana

geeyes

unread,
Sep 9, 2010, 1:30:08 PM9/9/10
to மின்தமிழ்
பல ஊர்களைப் பற்றி இங்கு பேச்சு வந்தது. ஒரு புகழ்பெற்ற பதிப்பக த்தைப்
பற்றி -
'திருவரசு' பதிப்பகம் : திருவரசு என்றால் என்ன பொருள். என் நண்பர் கூறிய
செய்தி இது.

geeyes

unread,
Sep 9, 2010, 2:07:17 PM9/9/10
to மின்தமிழ்
அதே மாதிரி எது சரி-
'பழமைபேசி' யா ?
'பழைமை'பேசி யா ?

geeyes

unread,
Sep 9, 2010, 2:11:06 PM9/9/10
to மின்தமிழ்
இந்த முயற்சி எல்லாம் ஒருபுறமிருக்க, வரப்போகிற 'செல்போன் தமிழ்'
களத்தில் என்னவெல்லாம் ஆகப்போகின்றனவோ ? மிஞ்சியிருக்கப் போகின்றனவோ.

Kannan Natarajan

unread,
Sep 16, 2010, 2:16:53 PM9/16/10
to Min Thamizh
மொழிப்பயிற்சி - 6:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

அண்ணாமலை பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன.

சட்ட படிப்பு, கல்வி துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது.

அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது.

அச்சொல்:- சின்னத்திரை என்பதாம்.

வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான் இப்படிச் சுட்டுகிறோம்.

திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை.

ஆதலின் இது சிறிய திரை.

சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது.

சிறிய திரை, சின்ன திரை, பெரிய தம்பி, சின்ன கடை, பெரிய பையன் என்று இயல்பாக எழுதிட வேண்டும்.

சின்னத் திரை என்றால் சின்னம் + திரை - ஏதோ ஒரு சின்னம் வரையப்பட்ட திரை என்று பொருளாகும்.

சிறிய கொடியை சின்ன கொடி என்றுதான் சொல்ல வேண்டும். சின்னக்கொடி என்றால் ஒரு சின்னம் (எழுகதிர், இரட்டை இலை, கதிர் அரிவாள், தாமரை) பொறித்த கொடி என்று பொருளாகும்.

தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று ஏன் பிழையாகச் சொல்லிப் பழகிவிட்டோம் என்பது தெரியவில்லை.

பேசியைத் தொலைத்துவிடு என்றன்றோ பொருள்தரும்.

தொலைவிலிருந்தும் காணக் கூடியது தொலைக்காட்சி எனில் தொலைவிலிருந்து பேசக் கூடியது தொலைப்பேசிதானே?

கை என்றால் உடம்பின் ஓர் உறுப்பு என்பதன்றிச் சிறியது என்னும் பொருளும் உண்டு.

கைக்குட்டை, கைப்பை, கைக் குழந்தை, கைப்பெட்டி எனச் சொல்லுகிறோம்.

கையில் வைத்துப் பேசுகின்ற (சிறிய) பேசியும் கைப்பேசிதானே?

ஏன் இதனை மட்டும் கைபேசி என்கிறார்கள்? பிழையன்றோ?

கைக்கடிகாரம் எவ்வளவு காலமாக வழங்கப்பட்டு வரும்  சொல்.

எப்படி இந்தக் கைபேசி வந்ததோ?

இப்படியே நீளச் சொன்னால் முடிவே இல்லை.

ஆதலின் வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள் பற்றி ஒரு சுருக்கமான பட்டியல் தருகிறோம்.

வல்லெழுத்து மிகும் இடங்கள்:

1. அ, இ, எ இம்மூன்று எழுத்தின் முன்னும், அந்த, இந்த, எந்த என்பவற்றின் முன்னும் மிகும்.

(எ-டு) அப்பையன், இப்பையன், எக்குழந்தை?

அந்தப் பையன், இந்தத் தாத்தா, எந்தச் சாத்தன்?

2.ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.

(எ-டு) பூப் பறித்தான், கைக் குழந்தை

3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.

(எ-டு) அறியாப் பிள்ளை, தீராத் துன்பம்

4.அகர, இகர ஈற்று முன் மிகும்.

(எ-டு) வரச் சொன்னான், ஓடிப் போனான்

5.வன்தொடர்க் குற்றுகரம் முன் மிகும்.
(எ-டு)எட்டுத் தொகை, கற்றுக் கொடுத்தான்

6. திரு, நடு, முழு, பொது என்னும் சொற்கள் முன் மிகும்.

(எ-டு) திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி,

7.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.

(எ-டு) பூனையைப் பார்த்தான், கடைக்குப் போனான்.

 8.பண்புத் தொகையில் மிகும்.

(எ-டு) வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்.

 9.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் மிகும்.

(எ-டு) தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம்

10. உவமைத் தொகையில் மிகும்.

(எ-டு) முத்துப்பல், கமலச் செங்கண்.

(தமிழ் வளரும்)

வினோத் ராஜன்

unread,
Sep 16, 2010, 2:43:22 PM9/16/10
to மின்தமிழ்
Obsolete Grammar rules...

Seems like people are struck in a Time Warp, unable to come out of the
past.

All these strict grammatical rules may be useful in study of Classical
Old Tamil, I have no idea how they could be useful for Modern Tamil.

Someone, needs to write an Updated Grammar for Modern Tamil sans all
archaisms like oRRus. !!

There is no point reiterating obsolete rules in the name of
puritanism.

V

On Sep 16, 11:16 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *மொழிப்பயிற்சி - 6:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!*

> *வல்லெழுத்து மிகும் இடங்கள்:*

MANICKAM POOPATHI

unread,
Sep 16, 2010, 4:13:45 PM9/16/10
to mint...@googlegroups.com
வணக்கம்:

இது.. காலக் கிரமத்தில் எழுதப் பட்டாலும்
ஏனோ கிடப்பில் கிடத்தப்பட்டுக் கிடந்தது ..  (கிடங்கு...?)
இப்போதுதான் கண்ணில் பட்டது..  மன்னிக்கவும்...!

பண்டகம் என்பது ஒன்று..
பண்டகச்  சாலை என்பது பிரிதொன்று
என எடுத்துக் கொள்ளலாமா..?
(சத்திரம் வேறு..  சத்திர சிகிச்சைச் சாலை வேறு...)

அகம் என்பது...
வீடு/வாசல்/இல்லம்/உள்ளம்/மனை/அடுப்பு
என்ற பொருள்படவும்  வருவதுண்டு..?

சாலை என்பது.. 
வசிப்பு தவிர்த்த ஏனைய எல்லாக்  கூடங்கள் சார்ந்த
சமூக ஒருங்கு கூடுமிடம்  என்பது பேச்சு வழக்கு..?

குறிப்பாக தொண்டுப் பட்டியினை...
"சாளை" என்பது குறிஞ்சி நாட்டு வழக்கு (கழுநீர்  சால்கள் இருக்குமிடம்)

பதட்டம்  என்பது படபடப்பால்  விளைவது.
(பதர்/பதடி வேறு..  பதறுதல் என்பது வேறு..?)
பதஷ்டம் என்பது அதன்  பிராகிருதம். (?)

குட்டம் => குஷ்டம் (குற்றம் என்று வராது.. இல்லீங்களா..?

கண்றாவி என்பது கூட  இரு வகை என்பார்கள்..?

கண்ணறை (குடை வரை கோயில்)
புகை எழும்ப  ஒழுகும் தற்புழை.. ஒன்று..?

கண்றாத்தான் குளம்(கன்றாப்பூர்)
என்பது இன்றளவும் வழக்கில் இருப்பதை..
ஈரோட்டுக்கு அருகாண்மையில் அமைந்திருப்பதை
நண்பர்கள் அறிந்திருக்கலாம்..!?

மற்றது.. 
அரைக் கந்தை அணியும் (skirt பாவாடை /முண்டு 'Hun' ) :-|
அன்றைய மிலேச்சர் (அரையர்..?) குறித்தான..
மேற்படி சொல்லின் மீதே ஏறின வழு.. அதுவே
கந்தரைக் (கந்தை +அரை)  கோலம்.. கண்றாவி....
என்று பொருள் கொள்வாரும்  உண்டு...?

பயனளிக்கும்  விளக்கம்... மிக்க நன்றி..!
அருள் கூர்ந்து தொடர்ந்து எழுதி உதவுங்கள்..
 

அன்புடன்.../ பூபதி செ. மாணிக்கம்
__________________________

பின்குறிப்பு:

பண்டம் பாடிகளைக்  கட்டி வைக்குமிடம் தொண்டுப் பட்டி..
யானைகளைக்  கட்டி வைக்குமிடம் 'தமுக்கம்' (யானைத் தாவளம்....) :-)
___________________




ஆராதி

unread,
Sep 17, 2010, 1:45:09 AM9/17/10
to mint...@googlegroups.com
திரு மாணிக்கம் பூபதி
 
1. பண்டம் + அகம் (உள்இடம்) = பண்ட + அகம் = பண்டகம். (உயிரின் முன் அதே உயிர் வரும்போது முன் உயிர் கெடுவதுண்டு)
சாலை = வரிசை எனப் பொருள்படும். தென்னஞ்சாலை, பனஞ்சாலை. இங்குத் தென்னை அல்லது பனை வரிசையாக நடப்பட்டள்ளதைக் குறிப்பிடுகிறது.
 
பண்டகச் சாலை என்பது. பொருள்களைப் பாதுகாக்கும் பண்டகங்கள், வரிசையாக அமைந்துள்ள இடம் எனப் பொருள்படும்.
அங்காடிச் (= கடை) சாலை என்றால், கடைகள் இரு மருங்கிலும் வரிசையாக அமைந்துள்ள இடம் எனப் பொருள்படும.
எனவே, பண்டகம், என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் காப்பகத்தைக் குறிக்கும். பண்டகசாலை என்பது, பல பொருள் காப்பகங்கள் உள்ள இடத்தைக் குறிக்கும். சாளை என்பதை இதனோடு பொருத்திப் பார்க்கமுடியுமா என்பது தெரியவில்லை.

2. சத்திரம்/சத்திர சிகிச்சை = ஆய்தச் சிகிச்சை
சத்திரம் என்பது இங்கு இரண்டு வெவ்வேறு பொருள் உடையது. இதனை அகராதியியலார் ஒப்புருச்சொல் என்பர். அதாவது வடிவத்தால் ஒத்துப் பொருளால் வேறுபட்டவை இத்தகைய சொற்கள். சத்திரம் = என்பதற்கு மக்கள் வெளியூருக்குப் போகிற வழியில் தங்குமிடம், என்றும் ஆயுதம் என்றும் இரு வேறு பொருள்படும்.
 
குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும் தெளிவாகலாம்.
 
அன்புடன்
ஆராதி
 
2010/9/17 MANICKAM POOPATHI <poop...@gmail.com>

flowergowtham

unread,
Sep 18, 2010, 11:35:22 AM9/18/10
to mint...@googlegroups.com

DEAR ALL,

 

I LIKE UNSUBSCRIBE PLS DON’T SEND ME MESSAGE

 

GOWTHAM

N. Ganesan

unread,
Sep 18, 2010, 11:51:04 AM9/18/10
to மின்தமிழ்

On Sep 17, 12:45 am, ஆராதி <aaraa...@gmail.com> wrote:
> குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும்
> தெளிவாகலாம்.
>

சத்திரம் - இருபொருள்கள் வருகை - இரண்டு வெவ்வேறான வடசொற்கள்
மூலத்திலிருந்து.

குட்டம் - தொழுநோயால் விரல்கள் போன்றவை அழுகிக்
குறுகுதலான். குட்டம் > குஷ்ட, விண்ணு > விஷ்ணு,
விட்டம் > விஷ்ட, அம்பட்டன் > அம்பஷ்ட, முட்டி > முஷ்டி, ...

கண்ணறை/கண்ணறவு (தொந்தரை/தொந்தரவு) > கண்றாவி.

நா. கணேசன்

> அன்புடன்
> ஆராதி
>

> 2010/9/17 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

devoo

unread,
Sep 18, 2010, 12:47:48 PM9/18/10
to மின்தமிழ்
திரு மாணிக்கம் பூபதி ‘பதஷ்டம்’ என்னும் புதிய சொல்லை உருவாக்குகிறார்;
விட்டத்திலிருந்து விஷ்டம் என்று விடாமல் கூறிவருகிறார் வக்ரதுண்டர்.
விட்டத்துக்கான வடசொல் வ்யாஸம்

ஆஷ்டு குஷ்டி முஷ்ட வரும்


தேவ்

> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our


> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at

> > >http://groups.google.com/group/minTamil-Hide quoted text -

Geetha Sambasivam

unread,
Sep 18, 2010, 8:34:21 PM9/18/10
to mint...@googlegroups.com
ஆஷ்டு குஷ்டி முஷ்ட  வரும்//




2010/9/18 devoo <rde...@gmail.com>
திரு மாணிக்கம் பூபதி  ‘பதஷ்டம்’ என்னும் புதிய சொல்லை உருவாக்குகிறார்;
விட்டத்திலிருந்து விஷ்டம் என்று விடாமல் கூறிவருகிறார்  வக்ரதுண்டர்.
விட்டத்துக்கான வடசொல்  வ்யாஸம்

ஆஷ்டு குஷ்டி முஷ்ட  வரும்


தேவ்



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
360.gif

ஆராதி

unread,
Sep 18, 2010, 9:07:12 PM9/18/10
to mintamil
திரு ஞானச் செல்வன், தினமணிச் சுடரில் ‘பிழையின்றி தமிழ் பேசுவோம், எழுதுவோம்‘. என்னும் தொடர் எழுதிவருவதைப் பார்த்து வருகிறேன். அதனை மின்தமிழில் இழைஇடும் திரு கண்ணன் நடராஜனுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

திரு ஞானச் செல்வன் முயற்சி பாராட்டுக் குறியது என்றாலும் மறுபடியும் பழைய முறையிலேயே செலவதாக உள்ளதே என்னும் எண்ணம்தான் ஏற்படுகிறது. இவ்வாறு எத்தனையோ இலக்கண நூல்கள் எழுதியாகிவிட்டது. தமிழ் கற்போரிடம் எழுத்துப் பிழை நீங்கக் காணோம். காரணத்தை விளக்காமலேயே விதிகளைச் சொல்வதால் இந்தக் குறை நீங்கப் போவதில்லை.

திரு ஞானச் செல்வன் குறிப்பிடுவதிலும் சில விவாதத்திற்கு உரியன.

இந்த மடலில் உள்ள ‘அண்ணாமலை பல்கலைக் கழகம்‘ என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் ஒற்று மிக வேண்டும் என்பது கட்டுரையாளர் கருத்து. ஏன் மிக வேண்டும் என்பதற்கு விளக்கம் இருக்கிறதா? அடுத்து, இவர் கருத்துச் சரிதானா எனப் பார்ப்போம்.

இங்குக் குறிப்பிடப்படும் அண்ணாமலை என்பது ஆள் பெயரா? இடப் பெயரா?
அனைவருக்கும் தெரிந்தவரை இது செட்டிநாட்டு அரசர் சர் அண்ணாமலையார் உருவாக்கிய, அவர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம். இங்கு அண்ணாமலை என்பது உயர்திணைப்  பெயர். உயர்திணைப் பெயரை அடுத்துவரும் வல்லெழுத்து மிகாது என்பது விதி. எனவே இங்கு ஒற்று மிகாமல் எழுவதே சிறப்பு.
அதுவே அண்ணாமலை என்பது இடத்தைக் குறிப்பிடும் அஃறிணைப் பெயரானால், அஃறிணைப் பெயரை அடையாக உடைய இருபெயரொட்டுப் பண்புத் தொகை என்பதால் அல்லது அண்ணமலை என்னும் பெயருடைய இடத்தின் கண் உள்ள பல்கலைக் கழகம் என ஏழாம் வேற்றுமைத் தொகை நிலைத் தொடராக இருக்குமானால் ஒற்று மிகும்.

இவ்வாறு ஒவ்வொன்றின் எழுத்துப் புணர்ச்சி சொற்புணர்ச்சி ஆகியவற்றையும் வழக்காற்றையும் பார்த்து அதற்கான காரண காரிய விளக்கங்களுடன் எழுதினால் படிப்பவர் தெளிவடைவர்.

அடுத்துச் சின்னத் திரை என்பதைக் காணலாம்.
சின்னத் திரை என்பது பெயரெச்சத் தொடர். பெயரெச்சத் தொடரில் வல்லெழுத்து மிகாது என்பது சரி. ஆனால் சிறிய என்னும் சொல் சின்ன எனத் திரிந்தது என்பதைக் காட்டுவதற்காக இங்க ஒற்று மிகுந்து சின்னத் திரை என  ஆயிற்று. இவ்வாறு சொற்கள் திரிபடையும் போது  அல்லது வேறு பொருளில் பயன்படும் போது அதனைக் காட்டப்  பொது விதியைப் பின்பற்றுவதைத் தவிர்ப்பர் இலக்கண நூலார். தொல்காப்பிய உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் முதலியவை எல்லாம் விதிவிலக்குகளுக்கு விதி கூறுபவைதாம். அவற்றை ஊன்றிப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும்.


அன்புடன்
ஆராதி

2010/9/16 Kannan Natarajan <thar...@gmail.com>

--

aruran visu

unread,
Sep 18, 2010, 9:41:13 PM9/18/10
to mint...@googlegroups.com
//கண்றாத்தான் குளம்(கன்றாப்பூர்)

> > என்பது இன்றளவும் வழக்கில் இருப்பதை..
> > ஈரோட்டுக்கு அருகாண்மையில் அமைந்திருப்பதை
> > நண்பர்கள் அறிந்திருக்கலாம்..!?//


அன்பிற்குரிய ஐயா,

நீங்கள் சொல்வது வேறு. இது வேறு.  ஈரோடு நகரவையின் தலைவராக இருந்த கனி ராவுத்தர் என்பவரின் இடத்தில் இருந்த மழைநீர் தேங்கும் குளமாக இருந்தது, கன்றாத்தான் குளமாக புழக்கத்தில் வந்துவிட்டது.  அது கனிராவுத்தர் குளமே தவிர கண்றாத்தான் குளமல்ல.

அன்புடன்
ஆரூரன்


>

18 செப்டெம்ப்ர், 2010 9:21 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

devoo

unread,
Sep 18, 2010, 11:51:51 PM9/18/10
to மின்தமிழ்
ஆராதி அவர்களுக்கு நன்றி

நாலு, அஞ்சு, கண்ணாலம் போன்ற பேச்சுவழக்குச் சொற்கள் பக்தி
இலக்கியத்திலும் இடம் பெறுகின்றன -

*நாலும்* கலந்துனக்கு நான் தருவேன்

*அஞ்சுமுகம்* தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்

இதற்கு இலக்கண அனுமதி உண்டா ? எதுகை, மோனைக்குப் பொருத்தமான
விதித் தளர்வு என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா ?


தேவ்

> அடுத்துச் *சின்னத் திரை* என்பதைக் காணலாம்.
> *சின்னத் திரை* என்பது பெயரெச்சத் தொடர். பெயரெச்சத் தொடரில் வல்லெழுத்து


> மிகாது என்பது சரி. ஆனால் சிறிய என்னும் சொல் சின்ன எனத் திரிந்தது என்பதைக்

> காட்டுவதற்காக இங்க ஒற்று மிகுந்து *சின்னத் திரை *என  ஆயிற்று. இவ்வாறு


> சொற்கள் திரிபடையும் போது  அல்லது வேறு பொருளில் பயன்படும் போது அதனைக்
> காட்டப்  பொது விதியைப் பின்பற்றுவதைத் தவிர்ப்பர் இலக்கண நூலார். தொல்காப்பிய
> உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் முதலியவை எல்லாம்
> விதிவிலக்குகளுக்கு விதி கூறுபவைதாம். அவற்றை ஊன்றிப் பார்த்தால் இந்த உண்மை
> புலப்படும்.
>
> அன்புடன்
> ஆராதி
>

> 2010/9/16 Kannan Natarajan <thara...@gmail.com>
>
> > *மொழிப்பயிற்சி - 6:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!*

> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Sep 19, 2010, 12:35:48 AM9/19/10
to mint...@googlegroups.com


2010/9/19 devoo <rde...@gmail.com>

இதற்கு இலக்கண அனுமதி உண்டா ? எதுகை, மோனைக்குப் பொருத்தமான
விதித் தளர்வு என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா ?

அம்மாவின் வசீகரமான எழுத்துப் பிழைகளோடு கூடிய கடிதம்..... என்று ஒருமுறை சுஜாதா தன் பழைய நினைவுகளில் எழுதியிருந்தார்.  எழுத்துப் பிழையேயானாலும், அம்மாவின் கடிதத்தில் இருந்தால் அதுக்கு மதிப்பு தனிதான்.  (திருமணத்துக்கு முன்னால் தமிழில் எழுத்துப் பயிற்சி அதிகமில்லாத அம்மையார் அப்பல்லாம் குட்ரம், மட்ரும் என்றெல்லாம் எழுதுவார்கள்....அதெல்லாம் ஸ்பெஷலுங்ணோவ்!)  

அப்படித்தான் கவிதைக்குள்ளும்.  சில இடங்களில் பேச்சு நடை, கொச்சை வழக்கு, உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தும்.  எழுத்தை இதயத்துக்கு உள்ளே, மிக உள்ள்ள்ளே எடுத்துச் செல்லும்.  கம்பனும் பாரதியும் இடமறிந்து இந்த வித்தையைக் கையாண்டவர்களில் முன்வரிசை.  ம்கூம்.  அதுகூடத் தப்பு.  அவங்க கையாளவில்லை.  அவங்க எழுத்தில் இருந்த சத்தியம் அப்படித் தானாக வெளிப்பட்டுக்கொண்டது.  

தெரிந்தே மீறப்படும் விதி.  போன மாத தென்றல் கட்டுரையில் சொல்லியிருந்தேனே,அடியில் சுழித்தோடும் நதிக்குமேலே
 மலைச் சிகரங்களுக்கு இடையே கயிறுகட்டி, அதன்மேல் நடக்கப் பழகியவன் செய்யவேண்டிய காரியம் என்று, அது இதற்கும் ஓரளவு பொருந்தும்.  (ஒருவேளை அந்தக் கட்டுரையைப் படிக்கணும்னா இங்க: 


அதற்கு அடுத்தது இங்கே: 


தேவ் மேற்கோள் காட்டியுள்ள இடங்கள் அப்படிப்பட்டவை.  இங்க என்பதைத் தஞ்சைப் பேச்சு வழக்கில் இஞ்ச என்பார்கள்.  இதைக் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான்.  ‘இஞ்சு இரும்’ என்று சீதையிடத்தில் சொல்லிவிட்டு, மாரீச மான் பின்னால் போன ராமனுக்குத் துணையாகச் செல்லும்படி நிர்பந்தப்படுத்தப்பட்டபோது.  பாரதியிலிருந்து இப்படிப்பட்ட பிரயோகங்களை நிறைய காட்ட முடியும்.  

--
அன்புடன்,
ஹரிகி.

aruran visu

unread,
Sep 19, 2010, 2:36:59 AM9/19/10
to mint...@googlegroups.com
அன்பிற்கினியீர்,
இன்று காலை தினமலர் ஈரோடு பதிப்பில் வந்த மற்றொரு தகவலையும் பகிர்ந்து கொள்கிறேன்.

16ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டிராத வளத்தான் ஆன நலக்கோடி நாராயணன் என்பவரால் வெட்டப்பட்ட இந்த குளம் ”கண்டிராத வளத்தான் குளம்” பின்னால் கனிராவுத்தர் குளமாகி, கன்றாத்தான் குளமாக ஆக்கப்பட்டுவிட்டது. இக்குளம் தான் செயமுறி நாடு என்று அழைக்கப்பட்டு தற்போது சேமூராகி விட்டது.



19 செப்டெம்ப்ர், 2010 7:11 am அன்று, aruran visu <visua...@gmail.com> எழுதியது:

Kannan Natarajan

unread,
Sep 19, 2010, 3:22:35 AM9/19/10
to Min Thamizh
மொழிப்பயிற்சி - 7:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!



வல்லெழுத்து மிகா இடங்கள்

1.​ அது,​​ இது,​​ எது ​ முன் மிகாது.

(எ-டு)​ அது பெரிது,​​ இது சிறிது,​​ எது கரும்பு?

2.​ அவை,​​ இவை,​​ எவை ​ முன் மிகாது.

(எ-டு) அவை சென்றன,​​ இவை கண்டன,​​ எவை தின்றன?

3.​ அவ்வாறு,​​ இவ்வாறு,​​ எவ்வாறு?

(எ-டு)​ அவ்வாறு சொன்னார்,​​ இவ்வாறு செப்பினார்,​​ எவ்வாறு கண்டார்?

4.​ ஒரு,​​ இரு,​​ அறு,​​ எழு என்னும் எண்களின் முன் மிகாது.

(எ-டு)​ ஒரு கோடி,​​ இரு தாமரை,​​ அறுபதம்,​​ எழுசிறப்பு.

5.​ பல,​​ சில முன் மிகாது.

(எ-டு)​ பல சொற்கள்,​​ சில பதர்கள்,​​ பல தடைகள்,​​ சில கனவுகள்.

6.​ உகர ஈற்று ​ வினையெச்சங்கள் முன் மிகாது.

(எ-டு)​ வந்து சென்றான்,​​ நின்று கண்டான்.

7.​ அத்தனை,​​ இத்தனை முன் மிகாது.

(எ-டு)​ அத்தனை குரங்குகள்,​​ இத்தனை பசுக்களா?

குறிப்பு:​- அத்துணை முன் மிகும்.

(எ-டு)​ அத்துணைப் பெயர்களா?​ இத்துணைச் சிறப்பா?

8.​ பெயரெச்சம் முன் மிகாது.

(எ-டு)​ ஓடாத குதிரை,​​ வந்த பையன்,​​ பறந்த புறா

குறிப்பு:​- ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.

(எ-டு)​ ஓடாக் குதிரை,​​ பாடாத் தேனீ

9.​ என்று,​​ வந்து,​​ கண்டு முன் மிகாது.

(எ-டு)​ என்று சொன்னார்,​​ வந்து சென்றார்,​​ கண்டு பேசினார்.

வல்லொற்று மிகுமிடங்கள்,​​ மிகாவிடங்கள் அனைத்தும் ஈண்டு உரைக்கப்படவில்லை.​

சுருக்கமான பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது.​

இதனில் வரும் சில இலக்கணச் செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

வேற்றுமை உருபுகள் ​(2 முதல் 7 முடிய)​ விரிந்து ​(வெளிப்படையாக)​ இருப்பின் வேற்றுமை விரி எனப்படும்.​

நூலைக் கற்றான் -​ இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பாடாக உள்ளது.​

உருபு மறைந்துவரின் வேற்றுமைத் தொகை எனப்படும்.​

பால் பருகினான் -​ இதில் பாலைப் பருகினான் எனும் பொருள் புலப்பட்டாலும் ஐ என்னும் உருபு மறைந்துள்ளது.

ஒரு வினைச் சொல் நிற்க,​​ ​ அது பொருள் நிறைவு பெறாமல் இருந்து,வேறொரு வினைச் சொல் கொண்டு நிறைவுற்றால் அது வினையெச்சம்.​ ​

(எ-டு)​ வந்து ​(முற்றுப் ​ பெறாத வினை)​ நின்றான் என்ற வினைமுற்றைக் கொண்டு நிறைவு பெறும்.​

இதுபோல் முற்றுப் பெறாத வினை,​​ ஒரு பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும்.​

வந்த ​(முற்றுப் பெறாத வினை)​ பையன் என்னும் பெயரைக் கொண்டு முடிந்தது.​

இந்த வகையான பெயரெச்சத்தில் ஈற்றெழுத்து ​(வினையின் கடைசி எழுத்து)​ இல்லாமற் போயிருந்தால் ​(கெட்டிருந்தால்)​ அது ஈறு கெட்ட பெயரெச்சம்;​ அதுவே எதிர்மறைப் பொருளும் ​(இல்லை என்பது)​ தருமானால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

(எ-டு)​ உலவாத் தென்றல் -​ உலவாத தென்றல் என்பதில் "த்" என்னும் ஈற்றெழுத்துக் கெட்டு ​(இல்லாமற் போய்)​ உலவா என நின்று "த்" வல்லொற்றுடன் கூடி உலவாத் தென்றல் ஆயிற்று.​

தென்றல் உலவும் ​(அசையும்)​ இது உலவாத ​(அசையாத)​ என்னும் எதிர்மறைப் பொருள் தருதல் காண்க.

ஆறு தொகையுள் ஒன்று பண்புத் தொகை.​

பண்பு உருபு ஆகி மறைந்து கெட்டிருக்கும்.​

"மை" விகுதியும் கெட்டிருக்கும்.​ ​

(எ-டு)​ செந்தாமரை -​ இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும்.​

இருபெயர் ஒட்டிப் பண்புத் தொகையாக வரின் அது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.​

​(எ-டு)​ வட்டக்கல் -​ வட்டமாகிய கல்.​ கல்லே வட்டம்.​ வட்டமே கல்.

தமிழ் வளரும்
.....

janakiraja

unread,
Sep 18, 2010, 10:04:59 PM9/18/10
to mint...@googlegroups.com
ஞானச்செல்வனின் கட்டுரையினை மின்னேற்றம் செய்திருக்கும் நண்பரின் பணி பாராட்டிற்குரியது.

2010/9/19 aruran visu <visua...@gmail.com>

கா. சேது | K. Sethu

unread,
Sep 19, 2010, 9:22:26 AM9/19/10
to மின்தமிழ்
On Aug 14, 10:48 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> பள்ளிக்கூடங்களில் ஒரு தகுதர (standard) எழுத்துத் தமிழ்க் கற்றுத்தரப்பட

> வேண்டும்.

standard சொல்லை "தகுதர" என உரிச் சொல்லாகவோ "தகுதரம்" என பெயர்ச்
சொல்லாகவோ தமிழாக்கம் காட்டும் அகராதி எதுவும் இதுவரை நான் கண்டதில்லை.
மாறாக தர/தரம், சீர்தர/சீர்தரம், செந்தர/செந்தரம், நியம/நியமம்/நியதி
எனவாறு உள்ளன.

"தகுதரம்" எனவுள்ள சொல்லாக்கம் கொணர்ந்தது கணினிப் பயன்பாட்டுக்கு தஸ்கி
(TSCII) எனப்படும் குறியேற்றக் கட்டகம் ஆக்கியவர்கள். அது தஸ்கியின்
தமிழ்ப் பெயரான "தமிழ் குறியீட்டுத் தரம்" எனவுள்ளதில் முதல் இரு
சொற்களின் முதன் எழுத்துகளான "த", "கு" ஆகியன உள்ளடக்கிய "தகுதரம்" எனச்
சுருக்கப் பெயராகும். காலப் போக்கில் வலையுலகில் standards க்கும்
தமிழாக்கமாக "தகுதரம்" எனப் பலரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்தில் Photcopying எனக் கூறுவதை பலர் "ஜெராக்ஸ்" எடுத்தல் எனக்
கூறுவது போல.

எவ்வாறாயினும் தமிழில் Standards மற்றும் Quality ஆகியனவற்றை ஓரளவேனும்
தன்னியக்கமாக வேறுபடுத்திக்காட்டும் அளவிற்கு சொல்லாக்கங்கள் இல்லை
எனவும் நான் கருதுகிறேன்.

~சேது

N. Ganesan

unread,
Sep 19, 2010, 6:57:24 PM9/19/10
to மின்தமிழ்

On Sep 18, 11:47 am, devoo <rde...@gmail.com> wrote:
> திரு மாணிக்கம் பூபதி  ‘பதஷ்டம்’ என்னும் புதிய சொல்லை உருவாக்குகிறார்;
> விட்டத்திலிருந்து விஷ்டம் என்று விடாமல் கூறிவருகிறார்  வக்ரதுண்டர்.
> விட்டத்துக்கான வடசொல்  வ்யாஸம்
>

மதறாஸ் லெக்ஸிகன் எதிலிருந்து எடுக்கிறது
என்று பார்க்கணும்.

விட்டம்¹ viṭṭam
, n. < viṣṭa (= விஷ்ட) . 1. Cross beam; உத்திரம். இட்டிகை நெடுஞ்சுவர்
விட்டம் வீழ்ந்தென (அகநா. 167). 2. Diameter; வட்டத்தின் குறுக்களவு. 3.
Anything put across; குறுக்காக இடப்பட்டது. (W.) 4. Body; தேகம்.
விட்டத்தி னுள்ளே விளங்க வல்லார் (திருமந். 2904).

ஆனந்த குமாரசாமி போன்றோர் கட்டிட சாஸ்திரங்களில்
இருந்து எழுதியிருக்கலாம்.

அன்புடன்,
நா. கணேசன்


உவேசா வைணீக வித்வமணி என்று எழுதியுள்ளார்கள்.
சைத்ரீக சிரோமணி, வைணீக வித்வமணி,

சைத்ரீக வித்தை, வைணீக வித்தை தெரிந்தோரை
சைத்ரீகர், வைணிகர் என்றும் எழுதலாம் போலும்.

N. Kannan

unread,
Sep 19, 2010, 8:15:23 PM9/19/10
to mint...@googlegroups.com

ஏன்? செந்தரம் எனும் வார்த்தை புழக்கத்தில் இருக்கிறதே! உத்தமத்தின் முக்கிய நோக்கங்களிலொன்று செந்தரமாக்கல்.

க‌.>

2010/9/19 கா. சேது | K. Sethu <skh...@gmail.com>

ஆராதி

unread,
Sep 19, 2010, 8:15:36 PM9/19/10
to mintamil
திரு தேவ்

தொல்காப்பியப் பாயிரம் “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்“
என மக்கள் வழக்கிற்குச் சிறப்பிடம் கொடுத்தே இலக்கணங்கள் உருவாக்கப்பட்டன என்பதை வழக்கு என்பதை முதலில் வைத்துச் சுட்டிக் காட்டுகிறது. இங்கு வழக்கு என்பது பேச்சு நடையையும், செய்யுள் என்பது எழுத்து நடையையும் குறிப்பிடுகின்றன.


இதன் பின்னணியிலேயே செய்யுள் ஈட்டச் சொற்கள் என்னும் இலக்கண முறைமை உருவானது. இதில் திசைச் சொல், திரிசொல் என்பன ஏற்கப்பட்டன.

இலக்கண முடையது, இலக்கணப் போலி என்னும் இலக்கணப் பிரிப்புப் பின்னணியில் மக்கள் வழக்கிற்குக் கொடுக்கப்பட்ட முதன்மையைக் காணலாம்.

மங்கலமொழி, இடக்கர் அடக்கல், குழூஉக் குறி என்பனவற்றையும் இவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். 

வழுவும் வழுவமைதியும் என்னும் பகுதியும் மக்கள் வழக்கில் இருப்பதை இலக்கணம் ஏற்றதற்கான சான்று.

பிசி, பண்ணத்தி முதலிய இலக்கிய வகைகளைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இவை பாமர மக்கள் வழங்கிய வாய்மொழி இலக்கியங்கள் என்பர் ஆய்வாளர்.

பிற்காலத்தில் 96வகை (?) பிரபந்தங்களில் பள்ளு, குறவஞ்சி முதலியவற்றில் ஏராளமான பேச்சுவழக்குச் சொற்களையும் எழுத்தறியா மக்களின் வாழ்க்கை முறைகளையும் காணலாம்.
கம்பன், மக்கள் வழக்கில் பயன்படுத்திய ‘துமி’ என்னும் சொல்லைக் கையாண்டார் என்பதை மெய்ப்பிப்பதற்காக் கல்விக் கடவுள் சரஸ்வதி தயிர்விற்கும் பெண்ணாக வந்தாள் என்பது மக்கள் வழக்கை அன்றைய புலவர்கள் செய்யுளில் ஏற்றமையைச் சுட்டிக் காட்டும் கதை.

மொத்தத்தில் இலக்கணம் என்பது பாமர மக்கள் வழக்காற்றையும், கற்றோர் செய்யுளையும் (செய்தல் = படைத்தல்)  ஒப்பக் காணும் ஓர் அமைப்பு.

மெத்தப் படித்தவர்கள், இன்று தங்களை படிக்காதவர்களைவிட உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ள இன்று ஆங்கிலம் போன்ற அயல் மொழிகளில் தங்களுக்குள் உரையாடுதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்.  அன்று தங்களை வேறுபடுத்திக் கொள்ளப் பண்டித நடையைத் தம் படைப்புக்களில் கையாண்டதோடு அதுதான் சரியானது என்றும் கூறிக் கொண்டனர். மக்களும் அதனை ஏற்று அறிவு மயங்கினர்.

மக்கள் பயன்பாடே உண்மையான மொழி வளர்ச்சி. அதனை பதிவு செய்வதே உண்மையான இலக்கியம்.

அன்புடன்
ஆராதி


2010/9/19 devoo <rde...@gmail.com>

ariudainambi

unread,
Sep 19, 2010, 9:26:17 PM9/19/10
to மின்தமிழ்
அன்புடையீர்,
ஒரு பொருளைக்குறிக்கப் பல சொற்களும் (ஒருபொருட்பன்மொழி), ஒரு சொல் பல
பொருளைத் தரும் சொல்வழக்கும் தமிழில் உண்டல்லவா?.
எ.கா.:
மடி - தொடை
மடி - மடித்தல்
மடி - சோம்பல்
மடி - மீன்பிடித்தல், மீன்வலை
மேற்கண்ட சொல் பயன்படுத்தும் இடம்பற்றி பொருள்கொள்ளப்படும். இது போல்
தகுதரம் standard, qualityஆகிய இருசொற்களுக்கும் இடம்பற்றி
பொருள்கொள்ளலாம். தன்னியக்கமாக வேறுபடுத்திக் காட்டத் தனித்தனிச்
சொல்லாக்கம் தேவை இல்லை என்பது என் கருத்து.
தகுதரம் ஓர் இனிமையான சொல்லாக்கம்.
அன்பன்,
மீ.கணேசன்.

Hari Krishnan

unread,
Sep 19, 2010, 9:49:28 PM9/19/10
to mint...@googlegroups.com


2010/9/19 கா. சேது | K. Sethu <skh...@gmail.com>

standard சொல்லை "தகுதர" என உரிச் சொல்லாகவோ "தகுதரம்" என பெயர்ச்
சொல்லாகவோ  தமிழாக்கம் காட்டும் அகராதி  எதுவும் இதுவரை நான் கண்டதில்லை.
மாறாக தர/தரம், சீர்தர/சீர்தரம், செந்தர/செந்தரம், நியம/நியமம்/நியதி
எனவாறு உள்ளன.

ஐயா,

தகுதர எழுத்துவரிசையின் முக்கியப் பொறுப்பாளர் இருக்கும் குழு இது.  அதன் பெயர்க்காரணம் என்ன என்று அவரே வந்து விளக்குவார்.  எனக்குத் தெரிந்தவரையில் ASCII American Standard Code for Information Interchange என்பதைப் போன்ற அக்ரோநிம் (Acronym) தான் திஸ்கி அல்லது TSCII  - Tamil Standard Code for Information Interchange.  

அதைப்போலவே தகுதரம் என்பது ஒரு வசதிக்காக எழுதப்படும் விதம்.  அதை எழுதச் சரியான விதம் த.கு.தரம்.  தமிழ்க் குறியீட்டுத் தரம்.  

புதிய சொல்லாக்கங்கள், அகராதியில் காணப்படா என்பதனைத் தாங்கள் அறிவீர்கள்.  புதிய சொல்லாக்க முயற்சிகளில் இப்படிப்பட்ட தலைமொழிப் பெயர் அல்லது தலைப்பெயர் (அக்ரோநிம்முக்கு என் மொழிபெயர்ப்பு என்று வைத்துக்கொள்ளுங்களேன்) ஆக்கங்களும் வரவேற்கப்படவேண்டியவைதானே?

நாம சரியாப் புரிஞ்சுகிட்டோமா என்று புரிஞ்சகொண்டபிறகு கண்டனம் புரிஞ்சா, நல்லது.  மின்புரியின் சொல்லாக்கங்கள் எல்லாமே தற்போக்கில் ஏற்பட்டவை அன்று.  

devoo

unread,
Sep 19, 2010, 10:14:33 PM9/19/10
to மின்தமிழ்
>> மொத்தத்தில் இலக்கணம் என்பது பாமர மக்கள் வழக்காற்றையும், கற்றோர் செய்யுளையும் (செய்தல் = படைத்தல்) ஒப்பக் காணும் ஓர் அமைப்பு. <<

ஆ ரா தி ஐயா,

அரிய கருத்தை அறியத் தந்தமைக்கு நன்றி. இலக்கணம் என்பது பாமர
வழக்காற்றின் குறைபாடுகளை நீக்குவதற்காகத் தோன்றியது என்றே எண்ணி
வந்தேன். மிக்க நன்றி


தேவ்

> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Sep 19, 2010, 10:22:54 PM9/19/10
to mint...@googlegroups.com
2010/9/19 கா. சேது | K. Sethu <skh...@gmail.com>
"தகுதரம்" எனவுள்ள சொல்லாக்கம் கொணர்ந்தது கணினிப் பயன்பாட்டுக்கு தஸ்கி

(TSCII) எனப்படும் குறியேற்றக் கட்டகம் ஆக்கியவர்கள். அது தஸ்கியின்
தமிழ்ப் பெயரான  "தமிழ் குறியீட்டுத் தரம்" எனவுள்ளதில் முதல் இரு
சொற்களின் முதன் எழுத்துகளான "த", "கு" ஆகியன உள்ளடக்கிய "தகுதரம்" எனச்
சுருக்கப் பெயராகும். காலப் போக்கில் வலையுலகில் standards  க்கும்
தமிழாக்கமாக "தகுதரம்" எனப் பலரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்தில் Photcopying எனக் கூறுவதை பலர் "ஜெராக்ஸ்" எடுத்தல் எனக்
கூறுவது போல.


மன்னிக்கவும்.  உங்களுடைய இந்தப் பத்தியைப் பார்ப்பதற்கு முன்னால் பதிலைத் தட்டத் தொடங்கிவிட்டேன்.   முதல் பத்தியைப் பார்த்ததும் பதில் எழுதுவதைப் பொதுவாக நான் செய்வதில்லை.  முதல் பத்தியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இங்கே வேறுசில வேலைகள்.  மனம் மட்டும் முதல் பத்தியிலேயே நின்றுவிட்டிருந்தது.  திரும்ப வந்தவுடன் பதிலெழுதத் தொடங்கிவிட்டேன்.  முழுவதையும் படிக்காமல் விடை எழுதியது என் தவறுதான்.  

போட்டோ காப்பியிங்கை ஜெராக்ஸ் என்று சொல்வதைப் பற்றி.  இது தொன்று தொட்டு இருந்துவரும் பழக்கம்.  இப்படித்தான் மக்கள் மத்தியில் எது பிரபலமாக விளங்குகிறதோ, அந்த ப்ராண்ட் நேம், அந்தப் பொருளின் பெயராக மாறிவிடுவது எப்போதுமே நடந்துகொண்டுதான் இருக்கிறது.  நகல்பெருக்கம், நகல்பெருக்கி என்று பின்னாளில் அறியப்பட்ட Duplicator இயந்திரத்தைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர் ரோனியோ.  இத ரோனியோ போடுப்பா என்று முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் சொல்வது மிகச் சாதாரணம்.  டால்டா என்பது வனஸ்பதியை உற்பத்தியாக்கி விற்று வந்த நிறுவனத்தின் பெயர்.  வனஸ்பதி என்ற பெயரே நாளடைவில் மாறிப்போய், அந்தப் பொருளுக்கே டால்டா என்று பெயர் வந்துவிட்டது.  எனக்குத் தெரிந்து, காமதேனு டால்டா கொடுங்க, போஸ்ட்மேன் டால்டா கொடுங்க என்று கேட்ட எனக்கு முந்தைய தலைமுறையினர் பல ஆயிரக்கணக்கானவர்கள்.

உங்களுக்குக் கல்சட்டி தெரிந்திருக்கும்.  கல்லால் ஆன சட்டி.  மாவுக்கல்லால் செய்திருப்பார்கள்.  கல்சட்டி, கல்சட்டி என்று சொல்லிச்சொல்லி அந்தப் பெயர் கச்சிட்டி ஆகிவிட்டது.  கல்லால் ஆன அந்தச் சட்டியின் வடிவத்தில் பின்னாளில் வெண்கலத்தில் செய்யத்தொடங்கினார்கள்.  மக்கள் அதனை வெங்கலக் கச்சிட்டி ஆக்கினார்கள்.  அதன் பிறகு இரும்புக் கச்சிட்டியும் வந்தது.  எவர்சில்வர் கச்சிட்டியும் வந்தது.  

இரும்பால் ஆன சட்டி இருப்புச்சுட்டி.  இலுப்பச்சட்டி.  எவர்சில்வர் இலுப்பச்சட்டி முதல் அலுமினியம் இலுப்பச்சட்டி வரையில் எல்லாத்திலயும் இரும்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

நெய் என்றால் ghee என்ற பொருளில் பயன்படுத்துகிறோம்.  தொடக்க நாளில் நெய் என்றால் oil.  பிறகு எள்நெய் எண்ணெய் ஆனது.  இன்னிக்கு அது தேங்காயெண்ணை தொடங்கி, கடலெண்ணெய், மண்ணெண்ணெய்..... எல்லாவற்றுக்குள்ளும் ஒரு எள் அகப்பட்டுக்கொண்டு திருதிரு என்று விழித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமலேயே நெய்யை எண்ணெயாக மாற்றிவிட்டோம்.  போதாதற்கு எண்ணை என்று வேற ஸ்பெல்லிங் வேற.  

இப்படிப்பட்ட வழக்குகள் எல்லா மொழிகளிலும் உண்டு.  மக்கள் பேசும், பயன்படுத்தும் சொற்களுக்கு விளக்கமளிப்பதுதான் அகராதிகளின் வேலை.  அகராதிகளில் உள்ள சொற்களை மட்டுமே மக்கள் பேசவேண்டும் என்று கருத முடியாது.  அகராதிகள்தாம் விரிவடைய வேண்டும்.  ஆனாலும்.  அததற்குத் தரம் உண்டு.  அகராதிக்குள் நுழைதரம் உள்ள சொல்லைத் தேர்வதில் அறிஞர்களுக்குப் பங்கிருக்கிறது.  

எவ்வாறாயினும் தமிழில் Standards மற்றும் Quality ஆகியனவற்றை ஓரளவேனும்
தன்னியக்கமாக வேறுபடுத்திக்காட்டும் அளவிற்கு சொல்லாக்கங்கள் இல்லை
எனவும் நான் கருதுகிறேன்.

தமிழில் மட்டுமி்ல்லை, ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா மொழிகளுக்கும் இது பொருந்தும்.  என்ன ஒண்ணு.  தமிழை ரின் போட்டும் ஸர்ஃப் எக்செல் போட்டும் துவைத்து, அடித்து, குமுக்கிக் காயப்போட்டுத் தூய்மையாக்கிவிட வேண்டும் என்று துடியாய் மற்ற மொழிக்காரர்கள் துடிப்பதில்லை.  ஜன்வரி, ஃபர்வரி என்று ஹிந்தியில் அப்படியே தன்வயமாக்கிக் கொண்டுவிட்டார்கள்.  நமக்கு, நாரதருக்குப் பிறந்ததாகச் சொல்லப்படும் ஆண்டுகளின் பெயர்களின்மேல் ஹோமோசெக்சுவாலிடியைப் பூசி, ஒவ்வாமையை உண்டுபண்ணும் வித்தை நன்றாகவே தெரிகிறது.  என்ன செய்ய!  தமிழுக்கு உள்ள தனிச்சிறுப்பு!  தனி syrupபு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.  

எந்த மொழியும் தனித்து இயங்க முடியாது.  ஏனென்றால், மொழி, மனிதனின் பயன்பாட்டுக்கானது.  எந்த மனிதனாவது அல்லது நாடாவது தனித்து இயங்க முடியும் என்றால் அன்று மொழியும் தனித்து இயங்க முடியும்.  ஒரு மனிதன் ஒரு கூட்டத்தையும், ஒரு கூட்டம், மற்ற கூட்டங்களையும், மற்ற கூட்டங்கள் ஒரு நாட்டையும், ஒரு நாடு பிற நாடுகளையும் சார்ந்திருக்கும் வரையில்,

மொழிகளும் அந்த வழியில்தான் இயங்க முடியும்.  இயங்கும்.  இதை எந்த மடை வந்து குறுக்கே நின்று மாற்ற முயன்றாலும் மாற்ற முடியாது.  (நான் சொல்லும் இந்தக் கருத்து வேறு; இலக்கணக் கொலையைக் கண்டிப்பது வேறு.  ‘நான் சொல்றேன், நீ இங்க வா’; ‘எனக்கு மட்டும் ஏன் இல்ல இவ்ளோ நீளமுடி’ ‘அப்ப நீயும் போகாத ஆஃபீஸ்’போன்ற விளம்பரத் தமிழ்க் கொலைகள், ஆபரணநகைகள் என்பன போன்ற இரட்டிப்புச் சொல்லாக்கங்கள் எல்லாவற்றையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.  தீவிரமான முனைப்பும் உண்டு.)  

Hari Krishnan

unread,
Sep 19, 2010, 10:28:08 PM9/19/10
to mint...@googlegroups.com


2010/9/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

தமிழில் மட்டுமி்ல்லை, ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா மொழிகளுக்கும் இது பொருந்தும்.  என்ன ஒண்ணு.  தமிழை ரின் போட்டும் ஸர்ஃப் எக்செல் போட்டும் துவைத்து, அடித்து, குமுக்கிக் காயப்போட்டுத் தூய்மையாக்கிவிட வேண்டும் என்று துடியாய் மற்ற மொழிக்காரர்கள் துடிப்பதில்லை.  


என்ன ஒண்ணு.  தமிழை ரின் போட்டும் ஸர்ஃப் எக்செல் போட்டும் துவைத்து, அடித்து, குமுக்கிக் காயப்போட்டுத் தூய்மையாக்கிவிட வேண்டும் என்று துடியாய் மற்ற மொழிக்காரர்கள் துடிப்பதில்லை.  

இந்த இடத்தை.

என்ன ஒண்ணு.  தமிழை ரின் போட்டும் ஸர்ஃப் எக்செல் போட்டும் துவைத்து, அடித்து, குமுக்கிக் காயப்போட்டுத் தூய்மையாக்கிவிட வேண்டும் என்று நாம் துடியாய்த் துடிப்பதைப்போல் மற்ற மொழிக்காரர்கள் துடிப்பதில்லை.  

என்று திருத்தி வாசித்துக்கொள்ளவும்.  

Mohanarangan V Srirangam

unread,
Sep 19, 2010, 10:33:03 PM9/19/10
to mint...@googlegroups.com
தொல்காப்பியத்தின்படி வழக்கு என்பது பாமர மக்களின் வழக்காற்றைக் குறிக்காது. 

ஒப்பிட்டுக் கொள்க தொல்காப்பிய சூத்திரம் -- 

வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே 
நிகழ்ச்சி அவர்கட் டாக லான. -- 

இதன்பொருள் -- வழக்கென்று சொல்லப்பட்டது உயர்ந்தோர் மேலது; நூலின் நிகழ்ச்சி அவர்மாட்டாதலான் என்றவாறு. 

மேலும் விளக்கம் இளம்பூரணம் காண்க. 
***

2010/9/20 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Sep 19, 2010, 10:59:08 PM9/19/10
to மின்தமிழ்
வழக்காறு

இதற்கும் இடம் உண்டு என்றாலும் ஹரிகி அவர்கள் சொல்வதுபோல் கவிதாயினி,
பெண் ரசிகை, ஆபரண நகை, நிப்பாட்டினான், சைவ நாயன்மார், வைணவ ஆழ்வார்
போன்ற சொற்களைப் படிக்க நேரும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

பல நாளிதழ்கள் ஒற்றுப் பயன்பாட்டை முற்றிலும் ஒதுக்கி விட்டன


தேவ்

> ...
>
> read more »

MANICKAM POOPATHI

unread,
Sep 20, 2010, 3:56:05 PM9/20/10
to mint...@googlegroups.com
திரு. ஆராதி:

கனி இராவுத்தர் குளம்தான்
கன்றாத்தான் குளம் என்றான செய்தி
கிடைக்கப் பெற்றேன்.. !?

விளக்கத்தினுக்கு  நன்றி.!

தாங்கள்  அறியாதது அல்ல..

இதுதான் மயில். இதுதான் மயில் என்று..
தமிழில் இருந்து... ஒவ்வொரு வார்த்தையாக
பிடுங்கிக் கொண்டே போனோமேயானால்
மயில் மயிலாக இராது.. தமிழும்  வளராது... :-)

அந்த அளவில்தான்...
இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கும்
கன்றாவி/கண்றாவி என்ற வார்த்தையின்
வழக்காற்றினை.. எழுத வேண்டி இருந்தது..

உள்ளபடியே
மாவுத்தன் என்பது போல் (யானைப் பாகன்)
இராவுத்தன் என்பதுவும் தமிழ் சொல் என்பதே 
அடியேனது நிலைபாடு ஆகும்.

அதுவும்  ஒரு தொழிலின் பாற்பட்ட  பெயரே தவிர ..
ஜாதிப் பெயர் ஆகாது...? ஆகவும் முடியாது.

வேங்கடத்திற்கு மேலே
பெரியளவில் யானைகளும்  கிடையாது...
ஆதலால்..  மாவுத்தன் என்பது வடமொழியும்  ஆகாது..

பட்டுப் பாட்டை 'பரி' வர்த்தனைக்குப்   (Trade Routes of the Silk road)
பிறகுதான் அரபு நாட்டில் குதிரைகளே அறிமுகம்... (Mongolian/Andalusian)
அதற்கு முன்பு ஒட்டகங்கள் தான் என்பதுதானே  உண்மை...?

அரபிகளுக்கு முன்பே மங்கோலியருக்கு 
உப்புத் தடம் போட்டு வைத்தவன்   தமிழன்
என்பதனையும் நண்பர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

சத்திரம் என்பது தமிழ்..
சத்ரா என்றால்தான்  அது சமஷ்கிருதம்...?
(சித்திரம் தமிழ்... சைத்ரா சங்கதம்....)

செவிடன் காதில் ஊதிய சங்கானாலும்
மீண்டும் ஒரு முறை  ஊதி வைப்பது  அவசியமாகிறது.

தமிழின் ஒரு முகம் தான்  ச ங் க த ம் "."

மற்றபடி...

ஆற்று நீரில்..  கண்ணறை தோறும் நுழைந்து
குதித்து  விளையாடி குதூகளிதத நண்பர்கள் 
(கண்களில் புகை மூட்டம் காணும்  வரை...)
யாரும் இருந்தால்.. சொல்வது புரிய வரும்... :-)

கன்னான் (காப்பு)  வேறு கண்ணன் வேறு... (எ.கா: கண்ணப்ப நாயனார்)
கண் புறை வேறு..  கண்ணறை (கண் புரை) வேறு...
(cell/granite vessel/Culvert : ancient hydraulic systems....)

நன்றி... வணக்கம்...!



அன்புடன்.../ பூபதி செ. மாணிக்கம்
____________________________

2010/9/16 ஆராதி <aara...@gmail.com>
>ancient

ஆராதி

unread,
Sep 20, 2010, 8:14:25 PM9/20/10
to mintamil
திரு மாணிக்கம் பூபதி

உங்கள் கருத்தை மறுத்ததாக நினைவில்லை.
///குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும் தெளிவாகலாம்.///
என்று மேலும் சான்று கிடைக்குமா எனப் பார்க்கக் குறிப்பிட்டடேன். ஏனெனின்ல குட்டம் என்னும் சொல்லை மின் அகராதியில் தேடினால், குஷ்டம் என்னும் பொருளில் அது பொருள் தரவில்லை என்பதைக் காணலாம். இதை முன்வைத்தே இக்கருத்துக் கூறப்பட்டது.


அன்புடன்
ஆராதி

2010/9/21 MANICKAM POOPATHI <poop...@gmail.com>

devoo

unread,
Sep 21, 2010, 5:48:35 AM9/21/10
to மின்தமிழ்
> குட்டம் என்னும் சொல்லை .....<


முட்டாமுது கரியின்னின முதுவேய்களை முனிந்து
*குட்டாச்சுனை* யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனே
பிட்டானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே.
- சம்பந்தர்
தேவாரம்

குட்டாச்சுனை - செயற்கையாக அகழப்படாமல் இயற்கையாகவே ஆழமாய் அமைந்த சுனை

குட்டுதல் - > அகழ்தல்

குட்ட நாடு என்றால் ஆழ்ந்த நீர்நிலைகள் அமைந்த நாடு என்று
பொருள்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

குட்டு குஷ்டு ஆகுமா என்றும் தெரியவில்லை ?

தேவ்


On Sep 20, 7:14 pm, ஆராதி <aaraa...@gmail.com> wrote:
> திரு மாணிக்கம் பூபதி
>
> உங்கள் கருத்தை மறுத்ததாக நினைவில்லை.
> ///குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும்
> தெளிவாகலாம்.///
> என்று மேலும் சான்று கிடைக்குமா எனப் பார்க்கக் குறிப்பிட்டடேன். ஏனெனின்ல

மின் அகராதியில் தேடினால், குஷ்டம் என்னும் பொருளில்
> அது பொருள் தரவில்லை என்பதைக் காணலாம். இதை முன்வைத்தே இக்கருத்துக்
> கூறப்பட்டது.
>
> அன்புடன்
> ஆராதி
>

> 2010/9/21 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>

> > தமிழின் ஒரு முகம் தான்*  ச ங் க த ம்* "."


>
> > மற்றபடி...
>
> > ஆற்று நீரில்..  கண்ணறை தோறும் நுழைந்து
> > குதித்து  விளையாடி குதூகளிதத நண்பர்கள்
> > (கண்களில் புகை மூட்டம் காணும்  வரை...)
> > யாரும் இருந்தால்.. சொல்வது புரிய வரும்... :-)
>
> > கன்னான் (காப்பு)  வேறு கண்ணன் வேறு... (எ.கா: கண்ணப்ப நாயனார்)
> > கண் புறை வேறு..  கண்ணறை (கண் புரை) வேறு...
> > (cell/granite vessel/Culvert : ancient hydraulic systems....)
>
> > நன்றி... வணக்கம்...!
>
> > அன்புடன்.../ பூபதி செ. மாணிக்கம்
> > ____________________________
>

> > 2010/9/16 ஆராதி <aaraa...@gmail.com>


> > >ancient
>
> > > திரு மாணிக்கம் பூபதி
>
> > > 1. பண்டம் + அகம் (உள்இடம்) = பண்ட + அகம் = பண்டகம். (உயிரின் முன் அதே
> > உயிர் வரும்போது முன் உயிர் கெடுவதுண்டு)
> > > சாலை = வரிசை எனப் பொருள்படும். தென்னஞ்சாலை, பனஞ்சாலை. இங்குத் தென்னை
> > அல்லது பனை வரிசையாக நடப்பட்டள்ளதைக் குறிப்பிடுகிறது.
>
> > > பண்டகச் சாலை என்பது. பொருள்களைப் பாதுகாக்கும் பண்டகங்கள், வரிசையாக
> > அமைந்துள்ள இடம் எனப் பொருள்படும்.
> > > அங்காடிச் (= கடை) சாலை என்றால், கடைகள் இரு மருங்கிலும் வரிசையாக
> > அமைந்துள்ள இடம் எனப் பொருள்படும.
> > > எனவே, பண்டகம், என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் காப்பகத்தைக் குறிக்கும்.
> > பண்டகசாலை என்பது, பல பொருள் காப்பகங்கள் உள்ள இடத்தைக் குறிக்கும். சாளை
> > என்பதை இதனோடு பொருத்திப் பார்க்கமுடியுமா என்பது தெரியவில்லை.
> > > 2. சத்திரம்/சத்திர சிகிச்சை = ஆய்தச் சிகிச்சை
> > > சத்திரம் என்பது இங்கு இரண்டு வெவ்வேறு பொருள் உடையது. இதனை அகராதியியலார்
> > ஒப்புருச்சொல் என்பர். அதாவது வடிவத்தால் ஒத்துப் பொருளால் வேறுபட்டவை இத்தகைய
> > சொற்கள். சத்திரம் = என்பதற்கு மக்கள் வெளியூருக்குப் போகிற வழியில்
> > தங்குமிடம், என்றும் ஆயுதம் என்றும் இரு வேறு பொருள்படும்.
>
> > > குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும்
> > தெளிவாகலாம்.
>
> > > அன்புடன்
> > > ஆராதி
>

> > > 2010/9/17 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>


>
> > >> வணக்கம்:
>
> > >> இது.. காலக் கிரமத்தில் எழுதப் பட்டாலும்
> > >> ஏனோ கிடப்பில் கிடத்தப்பட்டுக் கிடந்தது ..  (கிடங்கு...?)
> > >> இப்போதுதான் கண்ணில் பட்டது..  மன்னிக்கவும்...!
>
> > >> பண்டகம் என்பது ஒன்று..
> > >> பண்டகச்  சாலை என்பது பிரிதொன்று
> > >> என எடுத்துக் கொள்ளலாமா..?
> > >> (சத்திரம் வேறு..  சத்திர சிகிச்சைச் சாலை வேறு...)
>
> > >> அகம் என்பது...
> > >> வீடு/வாசல்/இல்லம்/உள்ளம்/மனை/அடுப்பு
> > >> என்ற பொருள்படவும்  வருவதுண்டு..?
>
> > >> சாலை என்பது..
> > >> வசிப்பு தவிர்த்த ஏனைய எல்லாக்  கூடங்கள் சார்ந்த
> > >> சமூக ஒருங்கு கூடுமிடம்  என்பது பேச்சு வழக்கு..?
>
> > >> குறிப்பாக தொண்டுப் பட்டியினை...
> > >> "சாளை" என்பது குறிஞ்சி நாட்டு வழக்கு (கழுநீர்  சால்கள் இருக்குமிடம்)
>
> > >> பதட்டம்
>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Sep 21, 2010, 7:04:21 AM9/21/10
to மின்தமிழ்

On Sep 20, 7:14 pm, ஆராதி <aaraa...@gmail.com> wrote:

> திரு மாணிக்கம் பூபதி...
>
> read more »


>
> உங்கள் கருத்தை மறுத்ததாக நினைவில்லை.
> ///குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும்
> தெளிவாகலாம்.///
> என்று மேலும் சான்று கிடைக்குமா எனப் பார்க்கக் குறிப்பிட்டடேன். ஏனெனின்ல
> குட்டம் என்னும் சொல்லை மின் அகராதியில் தேடினால், குஷ்டம் என்னும் பொருளில்
> அது பொருள் தரவில்லை என்பதைக் காணலாம். இதை முன்வைத்தே இக்கருத்துக்
> கூறப்பட்டது.
>

குட்டம் தொழுநோய் என்று சீவக சிந்தாமணியில் இருக்கிறது (லெக்சிகனில்
பாடல் எண் உண்டு).

குட்ட நாடு:

விள்- என்னும் வேர்: விண்டு, விண்ணு, விட்டு, என்று ஆகும். விண்ணு >
விஷ்ணு.
அள்- எண்னும் வேர்: அண்டு, அண்ணு, அட்டை என்று ஆகும்.
வள்- (வளை): வண்டு/வண்டி, வடம்/வட்டம் என்று வரும்.
முள்- என்னும் வேர்: முண்டம்/மண்டை, முட்டை முதலியன.

அதுபோல், குள்- என்னும் வேர்: குண்டு (யாக குண்டம்), குள்ளம்/குளம்,
குட்டை என்றாகும்.

குட்ட நாடு - குளங்கள் நிறைந்த நாடு.

1930களில், ஜ்யான் ப்ர்ஃசூல்சுகி (Przyluski) என்னும் வடமொழி அறிஞர்
(பாலி, ...) விஷ்ணு என்னும் பதத்தை திராவிடச் சொல் என்பதை ஏற்பவர்.
ஆனால், தமிழ் என்ற சொல் த்ர-வி(ட்)ட- என்னும் முண்டர்களின் (கம்போதியா
போன்ற நாடுகளில் இருக்கும் பாஷைகளொடு தொடர்புடைய இந்திய
ஆதிவாசிகள் பாஷை) சொல்லில் இருந்து வந்தது என்று எழுதியுள்ளார்.

தமிழ் மொழியியலாளர்கள் முண்டா என்று அறிஞர்கள் கொடுக்கும்
சொற்களை ஆழமாக ஆய்தல் வேண்டும். அப்படிச் செய்தால்
பல சொற்களை திராவிடச் சொற்கள் என்று காட்டமுடியும் என்று
நம்புகிறேன்.

நா. கணேசன்


நா. கணேசன்


> அன்புடன்
> ஆராதி
>

> 2010/9/21 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>

> > தமிழின் ஒரு முகம் தான்*  ச ங் க த ம்* "."


>
> > மற்றபடி...
>
> > ஆற்று நீரில்..  கண்ணறை தோறும் நுழைந்து
> > குதித்து  விளையாடி குதூகளிதத நண்பர்கள்
> > (கண்களில் புகை மூட்டம் காணும்  வரை...)
> > யாரும் இருந்தால்.. சொல்வது புரிய வரும்... :-)
>
> > கன்னான் (காப்பு)  வேறு கண்ணன் வேறு... (எ.கா: கண்ணப்ப நாயனார்)
> > கண் புறை வேறு..  கண்ணறை (கண் புரை) வேறு...
> > (cell/granite vessel/Culvert : ancient hydraulic systems....)
>
> > நன்றி... வணக்கம்...!
>
> > அன்புடன்.../ பூபதி செ. மாணிக்கம்
> > ____________________________
>

> > 2010/9/16 ஆராதி <aaraa...@gmail.com>


> > >ancient
>
> > > திரு மாணிக்கம் பூபதி
>
> > > 1. பண்டம் + அகம் (உள்இடம்) = பண்ட + அகம் = பண்டகம். (உயிரின் முன் அதே
> > உயிர் வரும்போது முன் உயிர் கெடுவதுண்டு)
> > > சாலை = வரிசை எனப் பொருள்படும். தென்னஞ்சாலை, பனஞ்சாலை. இங்குத் தென்னை
> > அல்லது பனை வரிசையாக நடப்பட்டள்ளதைக் குறிப்பிடுகிறது.
>
> > > பண்டகச் சாலை என்பது. பொருள்களைப் பாதுகாக்கும் பண்டகங்கள், வரிசையாக
> > அமைந்துள்ள இடம் எனப் பொருள்படும்.
> > > அங்காடிச் (= கடை) சாலை என்றால், கடைகள் இரு மருங்கிலும் வரிசையாக
> > அமைந்துள்ள இடம் எனப் பொருள்படும.
> > > எனவே, பண்டகம், என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் காப்பகத்தைக் குறிக்கும்.
> > பண்டகசாலை என்பது, பல பொருள் காப்பகங்கள் உள்ள இடத்தைக் குறிக்கும். சாளை
> > என்பதை இதனோடு பொருத்திப் பார்க்கமுடியுமா என்பது தெரியவில்லை.
> > > 2. சத்திரம்/சத்திர சிகிச்சை = ஆய்தச் சிகிச்சை
> > > சத்திரம் என்பது இங்கு இரண்டு வெவ்வேறு பொருள் உடையது. இதனை அகராதியியலார்
> > ஒப்புருச்சொல் என்பர். அதாவது வடிவத்தால் ஒத்துப் பொருளால் வேறுபட்டவை இத்தகைய
> > சொற்கள். சத்திரம் = என்பதற்கு மக்கள் வெளியூருக்குப் போகிற வழியில்
> > தங்குமிடம், என்றும் ஆயுதம் என்றும் இரு வேறு பொருள்படும்.
>
> > > குட்டம், கண்றாவி என்பனவற்றின் பண்டைய வழக்காறுகளைத் தேடினால் இன்னும்
> > தெளிவாகலாம்.
>
> > > அன்புடன்
> > > ஆராதி
>

> > > 2010/9/17 MANICKAM POOPATHI <poopa...@gmail.com>


>
> > >> வணக்கம்:
>
> > >> இது.. காலக் கிரமத்தில் எழுதப் பட்டாலும்
> > >> ஏனோ கிடப்பில் கிடத்தப்பட்டுக் கிடந்தது ..  (கிடங்கு...?)
> > >> இப்போதுதான் கண்ணில் பட்டது..  மன்னிக்கவும்...!
>
> > >> பண்டகம் என்பது ஒன்று..
> > >> பண்டகச்  சாலை என்பது பிரிதொன்று
> > >> என எடுத்துக் கொள்ளலாமா..?
> > >> (சத்திரம் வேறு..  சத்திர சிகிச்சைச் சாலை வேறு...)
>
> > >> அகம் என்பது...
> > >> வீடு/வாசல்/இல்லம்/உள்ளம்/மனை/அடுப்பு
> > >> என்ற பொருள்படவும்  வருவதுண்டு..?
>
> > >> சாலை என்பது..
> > >> வசிப்பு தவிர்த்த ஏனைய எல்லாக்  கூடங்கள் சார்ந்த
> > >> சமூக ஒருங்கு கூடுமிடம்  என்பது பேச்சு வழக்கு..?
>
> > >> குறிப்பாக தொண்டுப் பட்டியினை...
> > >> "சாளை" என்பது குறிஞ்சி நாட்டு வழக்கு (கழுநீர்  சால்கள் இருக்குமிடம்)
>

> > >> பதட்டம்- Hide quoted text -

devoo

unread,
Sep 21, 2010, 7:29:32 AM9/21/10
to மின்தமிழ்
//// விள்- என்னும் வேர்: விண்டு, விண்ணு, விட்டு, என்று ஆகும்.

விண்ணு > விஷ்ணு.
அள்- எண்னும் வேர்: அண்டு, அண்ணு, அட்டை ////


விள் - > விண்டு, விண்ணு - > விஷ்ணு.
அள் - > அண்டு, அண்ணு - > ?

தேவ்

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Sep 21, 2010, 8:09:44 AM9/21/10
to மின்தமிழ்

On Sep 21, 6:29 am, devoo <rde...@gmail.com> wrote:
> //// விள்- என்னும் வேர்: விண்டு, விண்ணு, விட்டு, என்று ஆகும்.
> விண்ணு >  விஷ்ணு.
> அள்- எண்னும் வேர்: அண்டு, அண்ணு, அட்டை ////
>
> விள்  - >    விண்டு, விண்ணு   - >  விஷ்ணு.
> அள்   - >   அண்டு,    அண்ணு    - >         ?
>
> தேவ்
>

பார்க்கணும். எல்லாச் சொல்லும் மாறணுமா என்ன?
அடிக்கடி சொல்லி வருகிறீர்கள். எனக்கு விளங்கவில்லை.

---------------

விஷ்ணு பற்றி அழகாகச் சொல்லலாம்.

விண்ணு/விட்டு/விண்டு ( <விள்-)

அதே போல் மா + அல் (மால்), மா + அன் (மாயன்).
மா- என்ற வேருக்கு மாயம் செய்தல் என்ற பொருளும்
இருக்கிறது, கருமை என்றும் இருக்கிறது.
மாய்மாலம், மாய் ‘நரி’ (cf.
பேய்/பேழ் ( < பே- ‘அஞ்சுதல்’), சீய்/சீழ் (< சீ- ‘palm மரவகை’,
ஈழம் < சீழம்), மாய்-/மாழ்- ‘மயங்குதல்’ (< மா-).

நா. கணேசன்

It is loading more messages.
0 new messages