வணக்கம்!

0 views
Skip to first unread message

kumutha.s...@googlemail.com

unread,
Nov 25, 2008, 5:08:19 PM11/25/08
to மின்தமிழ்

வணக்கம்!

நீண்ட காலம் கழித்து வருகின்றேன்!

எனது "கவிதை" ஒன்றை இங்கு எழுதுகின்றேன்.
உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறினால் நன்று!

மிக்க நன்றி.
அன்புடன் சு.குமுதா

பூம்பனி.....

வீட்டிலிருந்து பார்க்கையிலே
வீதியை நோக்கையிலே
விழியினைக் கிள்ளியது
வீதியின் வெள்ளைக் கோலம்

வானமகள் தூவிடும்
வெள்ளைப் பூக்களை
அள்ளி எடுத்து
எறிந்து விளையாடும்
பிள்ளைகளைப் பார்க்கையிலே
கொள்ளை இன்பம் கூடுதே

பச்சைவர்ண பட்டு தனை
பசுமையாய் கட்டியவள்
வெள்ளைநிறச் சேலைதனை
விருப்புடனே கட்டியதேன்?

பாரினில் நிலவிடும்
போரினைத் தடுக்கவே
ஒற்றுமையின் சின்னத்தை
உடலிலே உடுத்தாளோ?

புனிதத்தின் சேலைதனில்
மனிதக்கால் பட்டதுமே
மங்கியது புனிதம்
மாறியது தேசம்

விண்ணவளும் மண்ணவளும்
விரும்பிடும் ஒற்றுமையை
மறுக்கின்றான் வெறுக்கின்றான்
மதிகெட்ட மனிதனவன்!

நன்றி.
அன்புடன்
சு.குமுதா


chitha...@yahoo.co.in

unread,
Nov 26, 2008, 2:09:18 AM11/26/08
to மின்தமிழ்
வணக்கம். எடுத்துக்கொண்ட கருப்பொருள் வெளிப்பட்டுள்ளது. ஆயின் நடை சற்றே
முந்தைய தலைமுரை நடை. நிறைய வாசியுங்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.- சித்தன்

On 11월26일, 오전3시08분, "kumutha.subraman...@googlemail.com"

Narayanan Kannan

unread,
Nov 26, 2008, 2:14:51 AM11/26/08
to minT...@googlegroups.com
குமுதா! ஒரு கவிதாயினியா!!

யுகமாயினி ஆசிரியர் சொல்லறார் கேட்டுக்கங்க :-)

உங்கள் வெண்பனி பூசல் வெள்ளைக்கொடியாக, வெண்புறாவாக சிங்களவர்க்குப்
படட்டும். அவதி குறைந்தால் சரி.

ரொம்ம்ப நீண்டுவிட்டது..போர்சூழல் அங்கு! ஐரோப்பாவில் மூன்று தலைமுறை
வந்தாயிற்று. இலங்கையில் இருப்போரில் பாதியை அழித்தாயிற்று. இது என்ன
அவதி? எப்படி இதை முதலில் அனுமதித்தோம்? ம்ம்ம்ம்

கண்ணன்

2008/11/26 <chitha...@yahoo.co.in>:

Tthamizth Tthenee

unread,
Nov 26, 2008, 2:18:33 AM11/26/08
to minT...@googlegroups.com

பச்சைவர்ண பட்டு தனை
பசுமையாய் கட்டியவள்
வெள்ளைநிறச் சேலைதனை
விருப்புடனே கட்டியதேன்?

பாரினில் நிலவிடும்
போரினைத் தடுக்கவே
ஒற்றுமையின் சின்னத்தை
உடலிலே உடுத்தாளோ
 
நல்ல கருத்து
வார்த்தைக் கோர்வைகளில் இன்னும்  கொஞ்சம்
கவனம் செலுத்தலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2008 நவம்பர் 26 12:39 அன்று, <chitha...@yahoo.co.in> எழுதியது:

kamaladevi aravind

unread,
Nov 26, 2008, 8:58:05 AM11/26/08
to minT...@googlegroups.com
குமுதம்,
கவிதை இலக்கணம் பிழையே இல்லை.
இன்னும் கொஞ்சம் கூட முயன்று பாருங்கள்,
நம் குழுமத்திலேயே, ஹரிகிருஷ்ணன், முனைவர் கண்ணன், போன்றோரை படியுங்கள், வாழ்த்துக்கள்
கமலம்
Reply all
Reply to author
Forward
0 new messages